Rishi 24
Member
- Messages
- 54
- Reaction score
- 33
- Points
- 18
ஹாய் நட்பூஸ்....
என்னோட முதல் கதை.... முதன் முதலா இந்த சைட்டில் அப்டேட் பண்ணி இருக்கேன்...
அதுக்கு முதல்ல சகாப்தம் டீம்... உங்களுக்கு நன்றி.... கேட்டது எல்லாதையும் கோபப்படாம சொல்லி கொடுத்தீங்க... நன்றி நன்றி....
இந்த கதை உங்களுக்கு புடிக்கும்னு நம்பறேன்... வாசிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க நண்பா.... பை...
.....................................................................
அத்தியாயம் 01 ❤️
அந்தக் கும்மிருட்டு நடு நிசியிலும் அவர் அழுகுரல் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது.
தன் முன் முகத்தை மூடி கையில் அரிவாளுடன் நின்று இருந்தவனை பார்த்து வேர்த்து விறுவிறுக்க அவனைப் பார்த்து கண்கள் திறந்தபடியே கீழே அமர்ந்திருந்தார் அவர்..........
அவன் யாரென்று தெரியாது இப்பொழுது எதற்கு தன் நெஞ்சில் வெட்டினான் என்றும் தெரியாது ஆனால் அவன் உருவம் மட்டும் நெஞ்சில் ஆணித்தரமாக பதிந்து போனதுதான் விந்தை...
நீண்ட நெடுநெடுவென்ற உடல்வாகு....... அவனுக்கே அடங்காமல் அவனைப் போலவே வந்து விழும் அடங்காச் சிகை....இத்தனைக்கும் அவன் யார் என்று அவருக்கு தெரியாது மறுபடியும் தன் மேல் வெட்டு விழ அவன் காலை பிடித்து கதற துவங்கினார் அவர்
" சார் ப்ளீஸ் என்னை விட்டுடுங்க......"
"இத நீ இன்னைக்கு டிரன்டர் எனக்கு எதிரா கேக்குறதுக்கு முன்னுக்கு யோசிச்சு இருக்கணும்"
" சார் இது அநியாயம்.. நீங்களும் கேட்டீங்க நானும் கேட்டேன் எனக்கு கிடைச்சுது... உங்களுக்கு எதிராக கேட்டதுனால என்ன கொல்லப் போறீங்க இது அநியாயம் இல்லையா சார்?"
"ஆமால்ல... ஆமா அது தான் எனக்கு ரொம்ப புடிச்சது"
" பாக்க ரொம்ப நல்லவர் மாதிரி இருக்கீங்க சார்... ப்ளீஸ் பண்ணி என்ன விட்டுடுங்க சார்"
" நான் நல்லவனா? என்ன பாத்து நல்லவன்னு சொன்ன முதல் ஆள் நீதான் அதுக்காக உனக்கு என் முகத்தைக் காட்டிடட்டுமா?"
என்றவன் தன் முகத்தில் கட்டியிருந்த அந்த துணியை அவிழ்க்க அவரின் வாய் "ஆர்.கே" என்று முணுமுணுத்தது அதிர்ச்சியுடன்.......
தன் கையை ஓங்கிய அருவாளால் அவரை வெட்ட இரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார் அவர்.....
காலை மணி 10
தன் முதல் கேஸை வெற்றிகரமாக முடித்த வெற்றிக் களிப்பு முகத்தில் தெரிய கோட்டை கழற்றி கையில் வைத்தவாறு மிடுக்கோடு வெள்ளை சாரியில் சிலையென நடந்து வந்தாள் "அஷ்வினி ரிக்ஷிதா"
தன் காரில் ஏறி அமர்ந்து டிரைவரிடம் இராமநாதபுரம் செல்லுமாறு கூறிவிட்டு தன் டேப்பைக் கையில் எடுத்து ஆன் செய்ய அதில் நேற்று நடந்த மர்ம கொலை பற்றிய செய்திகள் யூடியூபிலும் மற்ற சமூக வலைத்தளங்களிலும் குவிந்த வண்ணம் இருக்க அதில் ஒன்றை தட்டி பார்க்க தொடங்கினாள்.
கொலைகள் நடப்பது சகஜம்தான் எனினும் அண்மைக்காலமாக இந்த மர்ம நபரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் கொல்லப்படுபவர்கள் அனைவரும் நேர்மையாக உழைத்து வாழும் பணக்கார வர்க்கங்கள்!!!
காரிலிருந்து இறங்கியவள் வந்ததும் வராததுமாக "அம்மா"....... என கத்திக்கொண்டே பட்டு சேலை உடுத்தி முகத்தில் தவழும் புன்னகை யுடன் சாந்தமான நடையுடன் வந்த விஜயலக்ஷ்மியை கட்டியணைத்தவள்
"நான் ஜெயிச்சுட்டேன்மா......"
என அவரை பிடித்து சுற்றிக் கொண்டிருக்க அவளை பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் "ராமநாதன்"-அவளுடைய அப்பா
அம்மாவை சுற்றுவதை நிறுத்திவிட்டு எழுந்து தன் அன்பு அப்பாவின் கைகள் புகுந்து கொள்ள அவர் அவள் தலையை அன்பாக வருடிக் கொடுத்தார்.
"என்ன நாட்டாமை சார் ஊர் மக்கள அரவணச்சி முடிஞ்சதோட இப்ப உங்க அன்பு மகளுக்கு ஆரம்பிச்சிட்டிங்க போலவே" என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தான் "அஜய்"-
அவளின் குறும்பு அண்ணன் .
அவனை திரும்பி முறைத்துவிட்டு போலிக் கோபத்துடன்
"போடா உனக்கு பொறுத்துக்காதே"
என பழிப்பு காட்ட அவளுக்கு செல்லமாக குட்டிவிட்டு ஓட அவனைத் துரத்திக்கொண்டு ஓடினாள் ரிக்ஷிதா....
அந்த மூன்று மாடி அடுக்கு பங்களாவின் இரண்டாம் மாடியின் அறைக்கு பயந்து பயந்து கையில் டீ கோப்பையுடன் வந்து கொண்டிருந்த வேலையாள் கந்தையாவை சிரித்தவாறே எதிர் கொண்டான் "ஆரவ்"
"என்னண்ணே! என் அண்ணாக்கா டீ கொண்டு போறீங்க?"
"ஆமாங்கய்யா இன்னுமே மாறன் ஐயா எந்திரிகலயா அதான்"
"சரி என்கிட்ட கொடுங்க நான் கொடுத்து விட்றேன்" என்றவன் அவரிடமிருந்து டீ கோப்பையை வாங்கி தன் அண்ணனின் அறைக்கு படி ஏறினான்.
டீ கோப்பையை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு தலைவரை போர்த்தி படுத்து இருந்த ஷீட்டை உருவி எடுக்க கோபத்தில் முகத்தை சுளித்தவாறே எழுந்து எழுந்து அமர்ந்தான்
"தேவமாறுதன்"-
ஆரவ்வின் அண்ணன்
"அண்ணா கோவப்படாத நா லேட் ஆகிருச்சே ஆபீஸ் போக வேணாமான்னு தான் எழுப்பி விட்டேன் டிஸ்டர்ப் பண்ணி இருந்தா சாரிணா"
எனவும் அவனை இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தவன்
"டேய் உனக்கு எத்தனை தடவ சொல்லி இருக்கேன் என்ன பார்த்து பயப்படாதன்னு..... உனக்கு என்னை எழுப்ப எல்லா உரிமையும் இருக்கு டா"
"இல்ல தேவாண்ணா நீ கோபப்பட்ருவியோன்னு பயம் அதான்"
"சரி நீ கிளம்பி ரெடியா இரு நான் பிரஷ்ஷப்பாகிட்டு வந்தர்றேன்"
என்றவன் டியை பருகிவிட்டு குளியலறை செல்ல கீழே இறங்கி சென்றான் ஆரவ்.
"சார் நாம நேத்து ராத்திரி பன்ன கொலை பத்தின நியூஸ் அடிக்கடி அப்டேட் ஆகிட்டிருக்கு சார்" என்ற "கதிர்" எனும் கதிரவனின் குரலில் சுழலும் நாற்காலியில் மறுபக்கம் திரும்பியிருந்த "ஆர்.கே" ஒரு நக்கல் சிரிப்போடு திரும்பியவன் தன் முன் "ரிஷிகுமார்" என பொறிக்கப்பட்ட அந்த பலகையை சுழற்றிக் எதிர்ப்பக்கமாக வைத்தவாறு
"ஹூ ஏம் ஐ" என அவன் வழமையாக கேட்கும் கேள்வியை கேட்ட மாத்திரத்தில் கதிரின் உடல் விரைத்து உடல் பயத்தில் நடுங்கியது.
" யூ ஆர் அ கிரிமினல் பேட் பாய் சார்" என்றுவிட்டு அவனை பார்க்க அவனோ ஏதோ பட்டம் கிடைத்தது போல் வாய் விட்டு சிரித்தான்.
" எஸ் ஐ அம் கிரிமினல் பேட் பாய்....அப்போ கிரிமினல் வேல பன்னவன் தான் பன்ன கொலைக்கு எதுக்கு கவலை படனும் கதிர்?"
" அது இல்ல சார்..........முன்னைய கொலைகள விட இந்த கொலை ரொம்ப தீவிரமா பேசப்படுதேன்னுதான் சொன்னேன் சார்"
" இட்ஸ் ஓகே கதிர்.... இந்த மனுஷங்க நல்லது செய்றவன விட என்ன மாதிரி கெட்டது செய்றவன பத்திதான் ரொம்ப பேசுறாங்கல்ல?"
தான் செய்த கொலைகளுக்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமுமே இல்லாதது போல கேட்க கதிருக்குத்தான் அவனுடைய "பீ.ஏ" போஸ்டே வெறுத்துப் போனது.
இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ என நினைத்துக்கொண்டே அவனை பார்க்க அவன் மனநிலையை படித்தவன் போல
"என்ன கதிர்...இவன் இன்னும் என்னென்னெல்லாம் செய்ய போறானோன்னு யோசிக்கிறியா?"
"அது... வந்து... இல்ல சார்.... இல்ல..." பதறினான் பீ. ஏ...
"நீ நெணக்கிறதுல தப்பே இல்ல கதிர்....யேன்னா நாம இன்னைக்கு ஒரு பொண்ண கொலை பண்ண போறோம்" எனவும் அவன் பதிலில் விக்கித்து நின்றுவிட்டான் கதிரவன்.
"மா.... கயல் எங்கம்மா போனா நான் வந்ததிலிருந்து காணவே இல்ல..." சமையலறை மேடையில் கரட் சாப்பிட்டவாறே கேட்டுக்கொண்டிருந்தாள் அஷ்வி...
"அவ நாளைக்கு காலேஜ் சேருரதால அவ பிரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் போயிட்டா"
அவள் கேட்ட கேள்விக்கு அவள் அண்ணி "ஈஸ்வரி" பதில் சொல்லவும் அவளைப் பார்த்து முறுவலித்தவள்
"என்னண்ணி....என்ன விஷயம்? அம்மா கிட்ட கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்றீங்கன்னா இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கும் போலவே" எனவும் சிரித்து மழுப்பியவரை கண்களால் ஜாடை காட்டி அடக்கிய அம்மாவை கண்டு கொண்டாள் அஷ்வி
"ம்மா..இப்ப எதுக்கு அண்ணியோட வாய கட்டி போடுறீங்க?"
"நான் என்னடி பன்னேன்"
" நீங்க நல்லவ பாருங்க... அண்ணிக்கு எதுக்கு இப்போ ஜாடை காட்டினிங்க"
"நான் எங்கடி அவளுக்கு ஜாடை காட்டினேன் நான் என் கண்ணுல தூசி விழுந்திருச்சேன்னு கண்ண சிமிட்டினேன்"
"விஜி.....நான் இன்னும் சின்ன பப்பி கிடையாது நான் நா ஒரு லாயருங்குறத மறந்துடாத சொல்லிட்டேன் அவ்வளவுதான்"
"அதயேதான் நாங்களும் சொல்ல வர்றோம் அஷ்வி.... நீ இன்னும் சின்னப் பப்பி கிடையாது உனக்கு கல்யாண வயசாகுது..."
அவளுடைய அண்ணி பாயின்டை போடவும் கட்டிலிலிருந்து இறங்கியவள்
"ஏன்மா நான் உன் கூட இருக்கிறது பிடிக்கலையா? எப்ப பாரு வீட்ட விட்டு தொரத்துறதுலேயே குறியாய் இருக்க?" வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நைஸாக சமையல் அறையிலிருந்து வெளியேறியவளை பெருமூச்சுடன் பார்த்தார் விஜயலட்சுமி........
"எப்ப கேட்டாலும் இதையே கேட்டுட்டு போயிட்றா அத்த... இவள எப்படி சம்மதிக்க வைக்கிறது?"
"அஜய்......." என பதிலளித்தவர் சமையல் பார்க்க ஆரம்பித்தார்.
"ஆரவ்.........." என்றபடியே கதவைத்திறந்து கொண்டு வந்த தன் அண்ணனின் கம்பீரத்தில் ஒரு தம்பியாக பெருமை கொண்டான் ஆரவ்.
சிவப்பு கலர் ஷர்ட்டுக்கு மேலால் வெள்ளை கோட்டுடன் அதே கலரில் டிரௌஸரும் அணிந்து இடது கையில் வெள்ளி வாட்ச் அணிந்திருந்தான்.
"என்னடா நான் கூப்டுடே இருக்கேன்... என்ன எதுக்கு பாத்துட்ருக்க?" என்ற குரலில் கலைந்தவன்
"இல்லண்ணா.......இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க"
"டேய் டேய் "
"நிஜமாத்தாண்ணா"
"கிளம்புடா ஏற்கனவே லேட்டாயிடுச்சு இப்போ போனாத்தான் கரெக்ட்டா இருக்கும்"
"நான் ரெடிணா...வா போலாம்"
என்றவாறு அவனுடன் இணைந்து நடந்தான் ஆரவ்.
ஒரு பெரிய பங்களாவுக்குள் காரை நுழைத்தவன்
"ஆரவ்.....நீ இங்க வெயிட் பண்ணு நான் பார்க் பண்ணிட்டு வந்திடுறேன்" அவனை இறக்கிவிட்டு காரை பார்க் பண்ணிவிட்டு வந்தவன் ஆரவ்வுடன் உள்ளே நுழைவதை கண்ட பெண் ஒருத்தி ஓடி வந்து தேவாவை கட்டிக் கொள்ள அவளுடைய நவநாகரீக ஆடையில் ஆரவ் முகத்தை சுளிக்க....தேவோ ஒருபடி மேலே சென்று அவளுக்கு அறைந்தே விட்டான்.
"ஏய்...யார் நீ?" எனும் கேள்வியில் உள்ளுக்குள் புகைந்தாளும் நீ கேட்ட கேள்வி என்னை ஒன்றுமே செய்யவில்லை எனும் ரீதியில் அவனைப் பார்த்து வைக்க
"என்ன தெரியலையா டார்லிங் நான் தான் "ஆத்மிகா" எனும் பதிலில் மேலும் கடுப்பானான் காளை...
" ஒன்ன தெரியாததுனால தான் ஒன் பேரும் தெரியல.... ஒனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?..... இடியட்......." என கடைசி வார்த்தையை முணுமுணுக்கும் போதுதான் அங்கு வந்து சேர்ந்தார் அவளுடைய அப்பா "ராஜன்"
"ஹலோ மிஸ்டர் மாறன்..... இவ தான் என்னோட ஒரே பொண்ணு... நான் உங்கள பத்தி நிறைய சொல்லியிருக்கிறதுனால உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டா அவக்காக நா மன்னிப்பு கேட்டுக்குறேன்."
"இதோ பாருங்க ராஜன்.... உங்க குடும்ப விஷயங்களை என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்காதீங்க.. நமக்குள்ள தொடர்பு தொழில்ல மட்டுமே தவிர அததாண்டி வர ட்ரை பண்ணாதீங்க"
பேச்சை கத்தரித்துவிட்டு தன் தம்பியை கூட்டிக்கொண்டு பார்ட்டி ஹாலுக்குள் நுழைய அதுவரை அமைதியாக இருந்த ஆரவ்
" அண்ணா...ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே!?"
"இப்ப என்ன...... நீங்க அவங்க கிட்ட அப்பிடி நடந்துகிட்டது சரி இல்ல.... கொஞ்சம் தன்மையா பேசியிருக்கலாம்னு சொல்ல போற அப்படித்தானே?"
"அதான் நீங்களே சொல்லிட்டீங்களே அப்படித்தானேன்னு மட்டும் எதுக்கு கேக்குறீங்க?" என்றவனை பார்த்து கண்களை சிமிட்டியபடி திரும்பியவன் தன் பக்கத்தில் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆத்மியின் முகத்துக்கு சொடக்கு போட திடுக்கிட்டு அவனை பார்த்தாள் பெண்....
"என்ன?.....என் முகம் என்ன உனக்கு கண்ணாடியா? இப்படி பார்த்துட்ருக்க?"
"நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருக்க தேவா அதான்...."
"சீ...... தள்ளிப் போ" என்றவன் ஆரவ்வை இழுத்துக் கொண்டு வெளியேயே வந்து விட்டான்.
"கதிர்...." எனும் சிம்மக் குரலில் அவன் முன் வந்து நின்றான் கதிரவன்.
"சார் இப்போ 9:30..... 10 மணிக்கு அந்த பொண்ணு வேலையை விட்டுவிட்டு கிளம்புவா..... ஒரு 15 நிமிஷம் நடந்ததுக்கு அப்பறம் அவ வீட்டுக்கு போற ரோட்ல தனியா தான் போவா... நாங்க அப்போ அந்த பொண்ண போட்ரலாம் சார்"
"போட்ரலாம்" எனும் போது அவனது குரல் நடுங்குவதை கவனித்துக் கொண்டு இருந்தாலும் அவளை விட்டு விட அவன் என்ன நல்லவனா?
தான் செய்த கொலையை அவள் எவ்வாறு புகைப்படம் பிடித்தாள் என்பது அவனுக்கு தெரியவில்லை ஆயினும் அந்த நினைப்பே அவளை கொல்ல தூண்டிக்கொண்டிருந்தது அவனுக்கு.....கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தவன் கதிரை பார்த்து
" கிளம்பலாம்" என்ற ஒற்றை சொல்லோடு முன்னே நடக்க எதுவுமே பேசாமல் அமைதியாக அவன் பின்னே நடந்தான் கதிரவன்.
இரவு 10.00
அந்த தனி இருட்டு சாலையில் அவள் வழமை போல அந்த வீதியில் வந்து கொண்டிருந்தாலும் மனதில் ஒன்றிக்கொண்டிருக்கும் பயத்தை மட்டும் ஏனோ அவள் கண்டு கொள்ளவில்லை...
எப்பொழுதும் இப்படி பயம் இருந்தது இல்லை ஆதலால் அதை அவள் பொருட்படுத்தவில்லை என்பது தான் பொருத்தம்.
நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தன் முன் சூழ்ந்து கொண்ட அந்த ரவுடி கும்பலை பார்த்து உண்மையில் அவளது இதயம் திடுக்கிட்டாலும் தன் கேமராவை ஆன் செய்து வீடியோ செய்ய கையில் எடுத்த வேளை திடீரென அவள் முன் வந்து நின்ற ஆர்.கே.... சிறிதும் தாமதிக்காமல் தன் கையிலிருந்த கத்தியால் அவள் வயிற்றில் குத் எதிர்பாராவிதமாக நடந்த தாக்குதலில் நிலைகுலைந்தவள் தன் பலத்தையெல்லாம் திரட்டி அவன் கட்டி இருந்த அந்த சிவப்பு துணியை அகற்ற அவன் முகத்தை கண்டு அதிர்ச்சியில் "ஆர்.கே" என கண்களை விரிக்கவும் மறுபடி அந்த கத்தியை எடுத்து குத்த அப்படியே மயங்கி சரிந்தாள்.
அவளுடைய கையிலிருந்த கேமிராவை எடுத்து துண்டு துண்டாக உடைத்துவிட்டு அவள் பேகையும் தடயமில்லாமல் எரித்தவன் நிம்மதியாக வீட்டுக்குச் சென்றான்.
.....................................................................
இரவு 10 மணியாகியும் வீட்டுக்கு வந்து சேராத தன் தங்கை கயல்விழியை எதிர்பார்த்து காத்திருந்தாள் அஷ்வினி.
தொடரும்...................
29-03-2021.
என்னோட முதல் கதை.... முதன் முதலா இந்த சைட்டில் அப்டேட் பண்ணி இருக்கேன்...
அதுக்கு முதல்ல சகாப்தம் டீம்... உங்களுக்கு நன்றி.... கேட்டது எல்லாதையும் கோபப்படாம சொல்லி கொடுத்தீங்க... நன்றி நன்றி....
இந்த கதை உங்களுக்கு புடிக்கும்னு நம்பறேன்... வாசிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க நண்பா.... பை...
.....................................................................
அத்தியாயம் 01 ❤️
அந்தக் கும்மிருட்டு நடு நிசியிலும் அவர் அழுகுரல் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது.
தன் முன் முகத்தை மூடி கையில் அரிவாளுடன் நின்று இருந்தவனை பார்த்து வேர்த்து விறுவிறுக்க அவனைப் பார்த்து கண்கள் திறந்தபடியே கீழே அமர்ந்திருந்தார் அவர்..........
அவன் யாரென்று தெரியாது இப்பொழுது எதற்கு தன் நெஞ்சில் வெட்டினான் என்றும் தெரியாது ஆனால் அவன் உருவம் மட்டும் நெஞ்சில் ஆணித்தரமாக பதிந்து போனதுதான் விந்தை...
நீண்ட நெடுநெடுவென்ற உடல்வாகு....... அவனுக்கே அடங்காமல் அவனைப் போலவே வந்து விழும் அடங்காச் சிகை....இத்தனைக்கும் அவன் யார் என்று அவருக்கு தெரியாது மறுபடியும் தன் மேல் வெட்டு விழ அவன் காலை பிடித்து கதற துவங்கினார் அவர்
" சார் ப்ளீஸ் என்னை விட்டுடுங்க......"
"இத நீ இன்னைக்கு டிரன்டர் எனக்கு எதிரா கேக்குறதுக்கு முன்னுக்கு யோசிச்சு இருக்கணும்"
" சார் இது அநியாயம்.. நீங்களும் கேட்டீங்க நானும் கேட்டேன் எனக்கு கிடைச்சுது... உங்களுக்கு எதிராக கேட்டதுனால என்ன கொல்லப் போறீங்க இது அநியாயம் இல்லையா சார்?"
"ஆமால்ல... ஆமா அது தான் எனக்கு ரொம்ப புடிச்சது"
" பாக்க ரொம்ப நல்லவர் மாதிரி இருக்கீங்க சார்... ப்ளீஸ் பண்ணி என்ன விட்டுடுங்க சார்"
" நான் நல்லவனா? என்ன பாத்து நல்லவன்னு சொன்ன முதல் ஆள் நீதான் அதுக்காக உனக்கு என் முகத்தைக் காட்டிடட்டுமா?"
என்றவன் தன் முகத்தில் கட்டியிருந்த அந்த துணியை அவிழ்க்க அவரின் வாய் "ஆர்.கே" என்று முணுமுணுத்தது அதிர்ச்சியுடன்.......
தன் கையை ஓங்கிய அருவாளால் அவரை வெட்ட இரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார் அவர்.....
காலை மணி 10
தன் முதல் கேஸை வெற்றிகரமாக முடித்த வெற்றிக் களிப்பு முகத்தில் தெரிய கோட்டை கழற்றி கையில் வைத்தவாறு மிடுக்கோடு வெள்ளை சாரியில் சிலையென நடந்து வந்தாள் "அஷ்வினி ரிக்ஷிதா"
தன் காரில் ஏறி அமர்ந்து டிரைவரிடம் இராமநாதபுரம் செல்லுமாறு கூறிவிட்டு தன் டேப்பைக் கையில் எடுத்து ஆன் செய்ய அதில் நேற்று நடந்த மர்ம கொலை பற்றிய செய்திகள் யூடியூபிலும் மற்ற சமூக வலைத்தளங்களிலும் குவிந்த வண்ணம் இருக்க அதில் ஒன்றை தட்டி பார்க்க தொடங்கினாள்.
கொலைகள் நடப்பது சகஜம்தான் எனினும் அண்மைக்காலமாக இந்த மர்ம நபரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் கொல்லப்படுபவர்கள் அனைவரும் நேர்மையாக உழைத்து வாழும் பணக்கார வர்க்கங்கள்!!!
காரிலிருந்து இறங்கியவள் வந்ததும் வராததுமாக "அம்மா"....... என கத்திக்கொண்டே பட்டு சேலை உடுத்தி முகத்தில் தவழும் புன்னகை யுடன் சாந்தமான நடையுடன் வந்த விஜயலக்ஷ்மியை கட்டியணைத்தவள்
"நான் ஜெயிச்சுட்டேன்மா......"
என அவரை பிடித்து சுற்றிக் கொண்டிருக்க அவளை பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் "ராமநாதன்"-அவளுடைய அப்பா
அம்மாவை சுற்றுவதை நிறுத்திவிட்டு எழுந்து தன் அன்பு அப்பாவின் கைகள் புகுந்து கொள்ள அவர் அவள் தலையை அன்பாக வருடிக் கொடுத்தார்.
"என்ன நாட்டாமை சார் ஊர் மக்கள அரவணச்சி முடிஞ்சதோட இப்ப உங்க அன்பு மகளுக்கு ஆரம்பிச்சிட்டிங்க போலவே" என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தான் "அஜய்"-
அவளின் குறும்பு அண்ணன் .
அவனை திரும்பி முறைத்துவிட்டு போலிக் கோபத்துடன்
"போடா உனக்கு பொறுத்துக்காதே"
என பழிப்பு காட்ட அவளுக்கு செல்லமாக குட்டிவிட்டு ஓட அவனைத் துரத்திக்கொண்டு ஓடினாள் ரிக்ஷிதா....
அந்த மூன்று மாடி அடுக்கு பங்களாவின் இரண்டாம் மாடியின் அறைக்கு பயந்து பயந்து கையில் டீ கோப்பையுடன் வந்து கொண்டிருந்த வேலையாள் கந்தையாவை சிரித்தவாறே எதிர் கொண்டான் "ஆரவ்"
"என்னண்ணே! என் அண்ணாக்கா டீ கொண்டு போறீங்க?"
"ஆமாங்கய்யா இன்னுமே மாறன் ஐயா எந்திரிகலயா அதான்"
"சரி என்கிட்ட கொடுங்க நான் கொடுத்து விட்றேன்" என்றவன் அவரிடமிருந்து டீ கோப்பையை வாங்கி தன் அண்ணனின் அறைக்கு படி ஏறினான்.
டீ கோப்பையை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு தலைவரை போர்த்தி படுத்து இருந்த ஷீட்டை உருவி எடுக்க கோபத்தில் முகத்தை சுளித்தவாறே எழுந்து எழுந்து அமர்ந்தான்
"தேவமாறுதன்"-
ஆரவ்வின் அண்ணன்
"அண்ணா கோவப்படாத நா லேட் ஆகிருச்சே ஆபீஸ் போக வேணாமான்னு தான் எழுப்பி விட்டேன் டிஸ்டர்ப் பண்ணி இருந்தா சாரிணா"
எனவும் அவனை இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தவன்
"டேய் உனக்கு எத்தனை தடவ சொல்லி இருக்கேன் என்ன பார்த்து பயப்படாதன்னு..... உனக்கு என்னை எழுப்ப எல்லா உரிமையும் இருக்கு டா"
"இல்ல தேவாண்ணா நீ கோபப்பட்ருவியோன்னு பயம் அதான்"
"சரி நீ கிளம்பி ரெடியா இரு நான் பிரஷ்ஷப்பாகிட்டு வந்தர்றேன்"
என்றவன் டியை பருகிவிட்டு குளியலறை செல்ல கீழே இறங்கி சென்றான் ஆரவ்.
"சார் நாம நேத்து ராத்திரி பன்ன கொலை பத்தின நியூஸ் அடிக்கடி அப்டேட் ஆகிட்டிருக்கு சார்" என்ற "கதிர்" எனும் கதிரவனின் குரலில் சுழலும் நாற்காலியில் மறுபக்கம் திரும்பியிருந்த "ஆர்.கே" ஒரு நக்கல் சிரிப்போடு திரும்பியவன் தன் முன் "ரிஷிகுமார்" என பொறிக்கப்பட்ட அந்த பலகையை சுழற்றிக் எதிர்ப்பக்கமாக வைத்தவாறு
"ஹூ ஏம் ஐ" என அவன் வழமையாக கேட்கும் கேள்வியை கேட்ட மாத்திரத்தில் கதிரின் உடல் விரைத்து உடல் பயத்தில் நடுங்கியது.
" யூ ஆர் அ கிரிமினல் பேட் பாய் சார்" என்றுவிட்டு அவனை பார்க்க அவனோ ஏதோ பட்டம் கிடைத்தது போல் வாய் விட்டு சிரித்தான்.
" எஸ் ஐ அம் கிரிமினல் பேட் பாய்....அப்போ கிரிமினல் வேல பன்னவன் தான் பன்ன கொலைக்கு எதுக்கு கவலை படனும் கதிர்?"
" அது இல்ல சார்..........முன்னைய கொலைகள விட இந்த கொலை ரொம்ப தீவிரமா பேசப்படுதேன்னுதான் சொன்னேன் சார்"
" இட்ஸ் ஓகே கதிர்.... இந்த மனுஷங்க நல்லது செய்றவன விட என்ன மாதிரி கெட்டது செய்றவன பத்திதான் ரொம்ப பேசுறாங்கல்ல?"
தான் செய்த கொலைகளுக்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமுமே இல்லாதது போல கேட்க கதிருக்குத்தான் அவனுடைய "பீ.ஏ" போஸ்டே வெறுத்துப் போனது.
இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ என நினைத்துக்கொண்டே அவனை பார்க்க அவன் மனநிலையை படித்தவன் போல
"என்ன கதிர்...இவன் இன்னும் என்னென்னெல்லாம் செய்ய போறானோன்னு யோசிக்கிறியா?"
"அது... வந்து... இல்ல சார்.... இல்ல..." பதறினான் பீ. ஏ...
"நீ நெணக்கிறதுல தப்பே இல்ல கதிர்....யேன்னா நாம இன்னைக்கு ஒரு பொண்ண கொலை பண்ண போறோம்" எனவும் அவன் பதிலில் விக்கித்து நின்றுவிட்டான் கதிரவன்.
"மா.... கயல் எங்கம்மா போனா நான் வந்ததிலிருந்து காணவே இல்ல..." சமையலறை மேடையில் கரட் சாப்பிட்டவாறே கேட்டுக்கொண்டிருந்தாள் அஷ்வி...
"அவ நாளைக்கு காலேஜ் சேருரதால அவ பிரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் போயிட்டா"
அவள் கேட்ட கேள்விக்கு அவள் அண்ணி "ஈஸ்வரி" பதில் சொல்லவும் அவளைப் பார்த்து முறுவலித்தவள்
"என்னண்ணி....என்ன விஷயம்? அம்மா கிட்ட கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்றீங்கன்னா இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கும் போலவே" எனவும் சிரித்து மழுப்பியவரை கண்களால் ஜாடை காட்டி அடக்கிய அம்மாவை கண்டு கொண்டாள் அஷ்வி
"ம்மா..இப்ப எதுக்கு அண்ணியோட வாய கட்டி போடுறீங்க?"
"நான் என்னடி பன்னேன்"
" நீங்க நல்லவ பாருங்க... அண்ணிக்கு எதுக்கு இப்போ ஜாடை காட்டினிங்க"
"நான் எங்கடி அவளுக்கு ஜாடை காட்டினேன் நான் என் கண்ணுல தூசி விழுந்திருச்சேன்னு கண்ண சிமிட்டினேன்"
"விஜி.....நான் இன்னும் சின்ன பப்பி கிடையாது நான் நா ஒரு லாயருங்குறத மறந்துடாத சொல்லிட்டேன் அவ்வளவுதான்"
"அதயேதான் நாங்களும் சொல்ல வர்றோம் அஷ்வி.... நீ இன்னும் சின்னப் பப்பி கிடையாது உனக்கு கல்யாண வயசாகுது..."
அவளுடைய அண்ணி பாயின்டை போடவும் கட்டிலிலிருந்து இறங்கியவள்
"ஏன்மா நான் உன் கூட இருக்கிறது பிடிக்கலையா? எப்ப பாரு வீட்ட விட்டு தொரத்துறதுலேயே குறியாய் இருக்க?" வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நைஸாக சமையல் அறையிலிருந்து வெளியேறியவளை பெருமூச்சுடன் பார்த்தார் விஜயலட்சுமி........
"எப்ப கேட்டாலும் இதையே கேட்டுட்டு போயிட்றா அத்த... இவள எப்படி சம்மதிக்க வைக்கிறது?"
"அஜய்......." என பதிலளித்தவர் சமையல் பார்க்க ஆரம்பித்தார்.
"ஆரவ்.........." என்றபடியே கதவைத்திறந்து கொண்டு வந்த தன் அண்ணனின் கம்பீரத்தில் ஒரு தம்பியாக பெருமை கொண்டான் ஆரவ்.
சிவப்பு கலர் ஷர்ட்டுக்கு மேலால் வெள்ளை கோட்டுடன் அதே கலரில் டிரௌஸரும் அணிந்து இடது கையில் வெள்ளி வாட்ச் அணிந்திருந்தான்.
"என்னடா நான் கூப்டுடே இருக்கேன்... என்ன எதுக்கு பாத்துட்ருக்க?" என்ற குரலில் கலைந்தவன்
"இல்லண்ணா.......இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க"
"டேய் டேய் "
"நிஜமாத்தாண்ணா"
"கிளம்புடா ஏற்கனவே லேட்டாயிடுச்சு இப்போ போனாத்தான் கரெக்ட்டா இருக்கும்"
"நான் ரெடிணா...வா போலாம்"
என்றவாறு அவனுடன் இணைந்து நடந்தான் ஆரவ்.
ஒரு பெரிய பங்களாவுக்குள் காரை நுழைத்தவன்
"ஆரவ்.....நீ இங்க வெயிட் பண்ணு நான் பார்க் பண்ணிட்டு வந்திடுறேன்" அவனை இறக்கிவிட்டு காரை பார்க் பண்ணிவிட்டு வந்தவன் ஆரவ்வுடன் உள்ளே நுழைவதை கண்ட பெண் ஒருத்தி ஓடி வந்து தேவாவை கட்டிக் கொள்ள அவளுடைய நவநாகரீக ஆடையில் ஆரவ் முகத்தை சுளிக்க....தேவோ ஒருபடி மேலே சென்று அவளுக்கு அறைந்தே விட்டான்.
"ஏய்...யார் நீ?" எனும் கேள்வியில் உள்ளுக்குள் புகைந்தாளும் நீ கேட்ட கேள்வி என்னை ஒன்றுமே செய்யவில்லை எனும் ரீதியில் அவனைப் பார்த்து வைக்க
"என்ன தெரியலையா டார்லிங் நான் தான் "ஆத்மிகா" எனும் பதிலில் மேலும் கடுப்பானான் காளை...
" ஒன்ன தெரியாததுனால தான் ஒன் பேரும் தெரியல.... ஒனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?..... இடியட்......." என கடைசி வார்த்தையை முணுமுணுக்கும் போதுதான் அங்கு வந்து சேர்ந்தார் அவளுடைய அப்பா "ராஜன்"
"ஹலோ மிஸ்டர் மாறன்..... இவ தான் என்னோட ஒரே பொண்ணு... நான் உங்கள பத்தி நிறைய சொல்லியிருக்கிறதுனால உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டா அவக்காக நா மன்னிப்பு கேட்டுக்குறேன்."
"இதோ பாருங்க ராஜன்.... உங்க குடும்ப விஷயங்களை என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்காதீங்க.. நமக்குள்ள தொடர்பு தொழில்ல மட்டுமே தவிர அததாண்டி வர ட்ரை பண்ணாதீங்க"
பேச்சை கத்தரித்துவிட்டு தன் தம்பியை கூட்டிக்கொண்டு பார்ட்டி ஹாலுக்குள் நுழைய அதுவரை அமைதியாக இருந்த ஆரவ்
" அண்ணா...ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே!?"
"இப்ப என்ன...... நீங்க அவங்க கிட்ட அப்பிடி நடந்துகிட்டது சரி இல்ல.... கொஞ்சம் தன்மையா பேசியிருக்கலாம்னு சொல்ல போற அப்படித்தானே?"
"அதான் நீங்களே சொல்லிட்டீங்களே அப்படித்தானேன்னு மட்டும் எதுக்கு கேக்குறீங்க?" என்றவனை பார்த்து கண்களை சிமிட்டியபடி திரும்பியவன் தன் பக்கத்தில் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆத்மியின் முகத்துக்கு சொடக்கு போட திடுக்கிட்டு அவனை பார்த்தாள் பெண்....
"என்ன?.....என் முகம் என்ன உனக்கு கண்ணாடியா? இப்படி பார்த்துட்ருக்க?"
"நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருக்க தேவா அதான்...."
"சீ...... தள்ளிப் போ" என்றவன் ஆரவ்வை இழுத்துக் கொண்டு வெளியேயே வந்து விட்டான்.
"கதிர்...." எனும் சிம்மக் குரலில் அவன் முன் வந்து நின்றான் கதிரவன்.
"சார் இப்போ 9:30..... 10 மணிக்கு அந்த பொண்ணு வேலையை விட்டுவிட்டு கிளம்புவா..... ஒரு 15 நிமிஷம் நடந்ததுக்கு அப்பறம் அவ வீட்டுக்கு போற ரோட்ல தனியா தான் போவா... நாங்க அப்போ அந்த பொண்ண போட்ரலாம் சார்"
"போட்ரலாம்" எனும் போது அவனது குரல் நடுங்குவதை கவனித்துக் கொண்டு இருந்தாலும் அவளை விட்டு விட அவன் என்ன நல்லவனா?
தான் செய்த கொலையை அவள் எவ்வாறு புகைப்படம் பிடித்தாள் என்பது அவனுக்கு தெரியவில்லை ஆயினும் அந்த நினைப்பே அவளை கொல்ல தூண்டிக்கொண்டிருந்தது அவனுக்கு.....கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தவன் கதிரை பார்த்து
" கிளம்பலாம்" என்ற ஒற்றை சொல்லோடு முன்னே நடக்க எதுவுமே பேசாமல் அமைதியாக அவன் பின்னே நடந்தான் கதிரவன்.
இரவு 10.00
அந்த தனி இருட்டு சாலையில் அவள் வழமை போல அந்த வீதியில் வந்து கொண்டிருந்தாலும் மனதில் ஒன்றிக்கொண்டிருக்கும் பயத்தை மட்டும் ஏனோ அவள் கண்டு கொள்ளவில்லை...
எப்பொழுதும் இப்படி பயம் இருந்தது இல்லை ஆதலால் அதை அவள் பொருட்படுத்தவில்லை என்பது தான் பொருத்தம்.
நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தன் முன் சூழ்ந்து கொண்ட அந்த ரவுடி கும்பலை பார்த்து உண்மையில் அவளது இதயம் திடுக்கிட்டாலும் தன் கேமராவை ஆன் செய்து வீடியோ செய்ய கையில் எடுத்த வேளை திடீரென அவள் முன் வந்து நின்ற ஆர்.கே.... சிறிதும் தாமதிக்காமல் தன் கையிலிருந்த கத்தியால் அவள் வயிற்றில் குத் எதிர்பாராவிதமாக நடந்த தாக்குதலில் நிலைகுலைந்தவள் தன் பலத்தையெல்லாம் திரட்டி அவன் கட்டி இருந்த அந்த சிவப்பு துணியை அகற்ற அவன் முகத்தை கண்டு அதிர்ச்சியில் "ஆர்.கே" என கண்களை விரிக்கவும் மறுபடி அந்த கத்தியை எடுத்து குத்த அப்படியே மயங்கி சரிந்தாள்.
அவளுடைய கையிலிருந்த கேமிராவை எடுத்து துண்டு துண்டாக உடைத்துவிட்டு அவள் பேகையும் தடயமில்லாமல் எரித்தவன் நிம்மதியாக வீட்டுக்குச் சென்றான்.
.....................................................................
இரவு 10 மணியாகியும் வீட்டுக்கு வந்து சேராத தன் தங்கை கயல்விழியை எதிர்பார்த்து காத்திருந்தாள் அஷ்வினி.
தொடரும்...................
29-03-2021.