Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யட்சகன் ராட்சனாக

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் ராட்சஸனாக
ராட்சஸன் : 1
திரவங்கள் பல சூழ்ந்து இருக்க , குடுவைகள் பல அடுக்கிவைக்கப்பட்டிருக்க மேலே வெள்ளை கோட் மற்றும் கண்ணாடி அணிந்து கொண்டு அந்த மனிதர் எதையோ ஆராய்ந்து கொண்டிருக்க அவரை தேடி ஒருவன் வந்தான். வந்தவன் அவரிடம் ஏதோ சொல்ல அவர் முடியாது என்று மறுத்துக் கொண்டிருக்க அதன்பின் இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்தேறியது .இறுதியில் அவன் சொன்னதற்கு அவர் அரைமனத்துடன் சம்மதித்து ,ஒரு அறைக்குள் சென்று மறைந்தார்.
****************************************************
எங்கும் தூய்மையாக எதிலும் நேர்த்தியாக அந்த நகரமே விழா கோலம் பூண்டிருந்தது . கிருஸ்துமஸ் நாளை முன்னிட்டு வீதிகள் மற்றும் வீடுகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு லண்டன் நகரமே கோலாகலமாக இருக்க அந்த ஒரு வீடு மட்டும் இருள் சூழ்ந்திருந்தது.அந்த வீட்டின் உள்ளே ஒருவன் மட்டும் தனியாக அமர்ந்தபடி கைகளில் இருந்த கோப்பையில் உள்ள திரவத்தை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.
அவன் குடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்தார் .
யட்சா போதும் இன்னைக்கு குடிக்க வேண்டிய அளவு தாண்டிருச்சு .இன்னும் அதிகமா குடிச்சா விபரிதமாகிடும் .
போ ! போய் படு ! என்று அவர் கூற கோபத்தோடு கைகளில் இருந்த கோப்பையை தரையில் எறிந்தான் யட்சா என்று அவரால் அழைக்கப்படும் வினய்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அதே நேரம் லண்டனில் மற்றுமொரு வீட்டில் காதில் ஹேட் போனை மாட்டியபடி முட்டிவரை தொல தொலவென கால்சட்டையும் , மேலே ஒரு லூசான சட்டையும் அணிந்து கொண்டு ஹேட் போனில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலுக்கு ஏற்ப தலையை ஆட்டியபடியே ட்ரெயை கைகளில் ஏந்திக் கொண்டு ஒரு ரூமை நோக்கிச் சென்றார் லமி என அழைக்கப்படும் லஷ்மி வெங்கடாசலம். அது என்ன லமி ? அவங்களே சொல்வாங்க கேளுங்கமா .
அவர் ரூமில் நுழைய அங்கே படுக்கையில் குறுக்கும் நெடுக்குமாக படுத்துக் கிடந்தாள் ஒரு யுவதி . அவள் படுக்கையில் துயில் கொள்ளும் அழகு இருக்கே அப்பப்பா பூவில் வண்டு நுழைய பூ தன் இதழ்களை திறந்து வைத்து காத்திருப்பது போல் இருந்தது.
பொறுங்க ! நீங்க பாட்டுக்கு ஏதாவது கற்பனைக்கு போயிராதீங்க ! பக்கி வாய பிளந்துகிட்டு வாயில ஜொல்லுவிட்டுட்டு பேனு தூங்குதுங்க அத தான் நான் அப்டி சொன்னேன். கையில் துப்பரியும் புத்தகம் வேற .அநேகமா அம்மணி பெரிய துப்பரியும் நிபுணியா இருப்பாளோ ? வாங்க அவகிட்டயே கேட்போம் .
கையில் ட்ரெயுடன் வந்த லமி ட்ரெயை டேபிளில் வைத்துவிட்டு அதில் இருந்த செல்லை எடுத்து பாப் பாடலை ஒலிக்க விட்டு அவள் காதருகில் வைக்க அலறிக் கொண்டு எழுந்தாள் மனுநிதா.
எழுந்தவள் லமியை முறைத்தாள் .
” ஒப்வோ லமி இப்டி எழுப்பாதனு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன், பாரு என் இதய துடிப்பு துடிக்கிறது எனக்கே கேட்குது “ என்று கண்களை மூடியபடியே பேசியவள் தன் படுக்கைக்கு பக்கத்தில் இருந்த டேபிளில் இருந்த ஒரு டாலரை எடுத்து அதை திறக்க உள்ளே ஒரு சிறுவன் சிரித்துக் கொண்டிருந்தான். அதை தன் அருகில் வைத்து கண்களை திறந்த நிதா அவனை கண்டதும்
“குட் மார்னிங் டோலு '' என்று கூறிச் சிரிக்க ,
**********************************************************************
அதே நேரம் இங்கு கைகளில் ஒரு பொம்மை கைக்கடிகாரத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன் . அவன் கண்களில் வேட்டையாடத் துடிக்கும் வெறியிருந்தது. அந்த கடிகாரத்தை பார்த்ததும் அவன் உதடுகள் வார்த்தையை உதிர்த்தது .
“ உன்னை பார்த்த அடுத்த நொடி உன் வாழ்வு என் கைகளில் தான்டி டாலி “ என்று கூறியவன் கைகள் அந்த கடிகாரத்தை தன் கைக்களுக்குள் அடக்கியது .
கடிகாரம் அந்த கைகளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தது .கடிகாரத்திற்கே இந்த கதினா அப்ப டாலி என்ன கதியாவாளோ ???
யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன்: 2
லமி நிதா செயலை புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார் .
நிதா டோலுவிடம் பேசிவிட்டு லமியிடம் திரும்பினாள்.


“ஒஃப்வோ லமி !என் உடைகளை போடாதேனு! உனக்கு எத்தனை தடவை சொல்றது ,பாரு சோளக்காட்டு பொம்மை போல இருக்க . எல்லாம் வெங்கி குடுக்குற இடம் நீ இப்டி ஆடுற. இரு உன்ன வந்து வச்சுக்குறேன் என்று அவளை கத்திவிட்டு பாத்ரூமில் புகுந்து கொண்டாள் நிதா.

அவள் வரதுக்குள்ள இவங்க அறிமுகத்தை நாம பார்த்துடலாம்.

நிதா லண்டனில் வாழும் இந்தியர். அப்பா பிரபல லண்டன் கம்பெனியில் வேலை பார்க்கிறார் . தாய் நாட்டை விட்டு சம்பாதிக்க வந்தவர் அப்டியே இங்கேயே செட்டில் ஆகிட்டார் .

இவள் தாய் பெயர் பவ்யா அதுவும் இவள் தன் துப்பறியும் மூலையால கண்டுபிடிச்சது தான். மத்த தகவல்கள் அவளுக்கு கிடைக்கல.

அம்மா பத்தி அப்பாகிட்ட அவள் கேட்டதுக்கு மனுசன் பார்த்த பார்வையில அவளுக்கு இப்ப வரை அது பற்றி கேட்க தைரியம் வரல.

அப்புறம் லமி , வெங்கி இது தான் இவள் வீட்டு உறுப்பினர்கள்.

லமி மற்றும் வெங்கி இருவரும் நிதாவின் தந்தை வைத்தியனோட தந்தை , தாயார். இருவரும் 60 வயதை தாண்டி வாழ்க்கை ஓட்டும் இள மனதுடையவர்கள்.

அதிலும் நம்ப லமிக்கு யூத்துனு நினைப்பு அது பண்ணுற அட்டூழியம் இருக்கே . அப்பப்பா ! கதைல போக போக தெரிஞ்சுக்குவீங்க. .

ஆமா இவங்கள ஏன் லமினு எல்லாரும் கூப்பிடுறாங்க வாங்க தெரிஞ்சுக்கலாம்.

நிதாவை எழுப்பிவிட்டு வெளியில் வந்த லமியை வெங்கி அழைத்தார்.

“ அம்மா லட்சுமி டீ குடுமா !''என்று அவர் கேட்க கொதித்துவிட்டார் லமி
லட்சுமினு கூப்பிடாதீங்கனு உங்ககிட்ட எத்தனை தடவை சொல்றது என்று அவர் வெங்கியிடம் கத்த


“ ஏன்டி உன் பெயர் அதுதான !அப்ப அப்டி தான கூப்பிட முடியும் !

லட்சுமின்ற பெயரே சிறுசு அதையும் நீ பெயரோட முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எடுத்து சுருக்கி லமினு வச்சுக்கிட்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்டி '' – வெங்கி

“ சே ! ஞான சூனியம் ! எனக்கு இருக்குற அழகுக்கு என்னை கட்டிக்க நிறைய பேர் வந்தாங்க எல்லாம் என் அப்பா பண்ண வேலை .

போயும் போயும் சொட்ட தலை உங்ககிட்ட போய் என்னை கல்யாணம் பண்ணி குடுத்துட்டார். சரியான கிழம் . பார்க்கத்தான் ஆள் அப்டினா சிந்தனை கூட மிடில் கிளாஸ் ஆ இருக்கு '' –லமி

“ ஓ! அழக பத்தி நீ பேசுற! கல்யாணத்துக்கு முன்னாடி ஒல்லிகுச்சி உடம்போட, தேவாங்கு மாதிரி நீ இருந்த !

உன் அப்பன் என் கால விழுந்து கெஞ்சி கேட்டதனால, அத்தை பொண்ணாச்சேனு போனா போகுதுதேனு வாழ்க்கை குடுத்தா ரொம்பத்தான் பேசுறடி .

என்னை பார்த்தா கிழம்னு சொன்ன ? இவ பெரிய அழகி பல்லு போன வயசுல பேத்தியோட உடுப்ப போட்டு லூட்டி அடிச்சுட்டு திரியுற ,நீயேல்லாம் அழக பத்தி பேசுற !

பாப்பம்பட்டி கிராமத்துல வளர்ந்துட்டு கிளாஸ் பத்தி பேச வந்துட்டா ! என்று அவர் திட்ட லமி பேசுவதற்குள் நிதா ரூமில் இருந்து வந்தாள் .

“ஒஃப்வோ தாத்தா ! பாட்டிய காலையிலேயே அர்ச்சனை பண்ண ஆரம்பிச்சாச்சா! என்று அவள் கூற லட்சுமி அவளை முறைத்துப் பார்த்தார்.

அவர் அப்படி பார்த்ததும்
ஓ! சாரி லமி ! இனி பாட்டினு சொல்ல மாட்டேன் என்று லமியிடம் மன்னிப்பு வேண்டினாள் நிதா .


அதன்பின் இருவர் மேலும் சாய்ந்து கொண்டு கொஞ்சிக் கொண்டு இருந்தவள் வீட்டின் வெளியே கார் வரும் அரவம் கேட்கவும் அதன்தொடர்ச்சியாக ஹாரன் சத்தம் கேட்டதும் தான் தாமதம் மூவரும் மூன்று திசைகளுக்கு ஓடினர்.

அனைவரையும் கலவரப்படுத்திவிட்டு காரில் இருந்து இறங்கினார் வைத்தியன் நிதாவின் தந்தை.
**********************************************************************************************************
வினய்யின் முன்னே வந்து நின்றார் அவர் vp என்று தொழில் வட்டத்தில் அனைவராலும் அழைக்கப்படும் விக்ன பிரசாத். அவர் வந்ததும் கோபத்தோடு வினய் செல்ல முயல


“ யட்சா இன்னைக்கு நைட் பார்ட்டி இருக்கு நீ வரலேனா எல்லாருக்கும் சந்தேகம் வந்துரும். வந்து கொஞ்ச நேரம் தலைகாட்டிட்டு போ’’ என்று அவர் கூற

முடியாதுனா? – வினய்

“ உன்னை உருவாக்கியவன் நான் . என்னால தான் நீ இப்டி என் முன்னாடி பேசிட்டு இருக்க . அத மறந்துட்டு இப்ப நீ என்கிட்ட பேசிட்டு இருக்க யட்சா ''என்று அவர் கூற கோபத்தோடு திரும்பினான் வினய் .

“ ஏன் ஞாபகம் இல்லாம ! எனக்கு இப்டி ஒரு இருள் வாழ்க்கைய கொடுத்ததே நீங்க தான !

அத நான் எப்படி மறக்க முடியும் . இப்டி வாழ்றதுக்கு நான் செத்துப் போயிருக்கலாம் .இப்டி தினமும் நான் நரக வாழ்க்கை வாழ தேவையில்லை’’ – வினய்

“ என்னை யாரும் ஜெய்க்க விட மாட்டேன்! . எதிரிகளா இருந்தாலும் சரி ! அது நீயா இருந்தாலும் சரி! என் மகன் நீதான்றதுல யாருக்காவது சந்தேகம் வந்தது , உன்னை படைச்ச நானே, உன்னை அழிக்கவும் தயங்க மாட்டேன்..

என் பையன் லண்டன் வந்ததேயில்லே, ஒரு தடவை மட்டும் என்னை பார்க்க வந்தான் அது அவன் .... என்று அவர் ஏதோ சொல்ல வர

அவர் சொல்ல வருவதை புரிந்து கொண்ட வினய்யின் முகம் இறுகியது

சொல்ல வந்ததை பாதியில் நிறுத்திவிட்டு அவர் மேலே தொடர்ந்தார்.

என் பையனை இங்கு யாரும் பார்த்ததில்லை அதனால எந்த பிரச்சனையும் வராது. நீ நான் சொன்னபடி கரெக்டா நடப்பேனு நினைக்கிறேன் என்று அவர் கூறிவிட்டு செல்ல

அவன் பச்சை நிற ஹசல் கண்கள் இரத்த நிறமாக மாறியது . தன் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அவனுள் மாற்றம் ஏற்படத் தொடங்க வேகமாக ரூமில் சென்று மறைந்தான் வினய்.

அவன் ரூமிற்குள் சென்ற சற்று நேரத்தில் பயங்கரமாக சத்தம் கேட்க இதை தன் படுக்கையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தார் விக்ன பிரசாத்

“ சாரி யட்சா உன் நிலைமைக்கு நான் தான் காரணம் என்னை மன்னிச்சுடுப்பா '' என்று அவர் வருத்தத்தோடு தனக்குள் சொல்லிக் கொண்டார்.

யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன்: 3
வீட்டின் உள்ளே நுழைந்த வைத்தி சுற்றும் முற்றும் பார்க்க டீபாயின் அருகில் சேரில் அமர்ந்த வண்ணம் மும்முரமாக பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் , சாரி ! தப்பா சொல்லிட்டேன் படிப்பது போல் நடித்தார் வெங்கி .
அப்போது தான் கிட்சனில் இருந்து வருவது போல் வந்தார் லமி , அதுவும் புடவையை சுற்றிக் கொண்டு , கையில் காபி ட்ரெயோடு.
வைத்தியை பார்த்ததும் “ வாப்பா இப்போது தான் வந்தீயா எனக்கு தெரியல பாரேன் . வயசாகிடுச்சுல அதனால வர வர காது சரியா கேட்கமாட்டீங்கிது பா '' – லமி
ஓ ! அப்ப யாருக்குமா காபி ரெடியா எடுத்துட்டு வர? – வைத்தி
‘ மாட்டீனியா நல்லா வாங்கி கட்டுடி கிழவி! நீயா வாய கொடுத்து மாட்டிக்கிட்டியா ?. என்னாமா நடிக்கிறா கிழவி ? இது நம்ப வெங்கி mindvoice
அவர் சிரித்துக் கொண்டே லமியை பார்க்க லமி அவர் mindvoice ஐ கண்டு கொண்டார் . இப்போது சிரிப்பது லமி முறையாயிற்று.
“ என்ன இவ நம்மள பார்த்து சிரிக்கிறா! கிழவி ஒருவேல நம்மள கோர்த்துவிட போறாளோ ? அலர்ட் ஆகிக்க வெங்கி!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார்.
லமி பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு
''உன் அப்பாவுக்கு தான்டா கொண்டு வந்தேன்” என்று அவர் கூற வெங்கி இப்போது மாட்டிக் கொண்டு முழித்தார்.
“ அப்பா எத்தனை தடவை டீ குடிப்பீங்க ? டீ அதிகமா குடிக்கக் கூடாதுனு உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது ? வயது ஏறுதுல கொஞ்சம் நாவ அடக்க பழகிக் கோங்க '' என்று வைத்தி கத்தத் தொடங்க , அப்போது வெங்கியின் பார்வை மாடியில் இருந்து இறங்கி வந்த நிதாவிடம் திரும்பியது .
அவர் பார்வையும் அதன் பொருளையும் புரிந்து கொண்ட நிதா கண்களால் வேண்டாம் என்றால் , ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.
'' மகனே என் பேத்திக்கு தான்டா கேட்டேன் !உன் அம்மாவுக்குத் தான் வர வர காது சரியா கேட்கமாட்டிங்கிது . அவ தப்பா புரிஞ்சிக்கிட்டா அதுக்கு நான் என்ன பண்ண ?''என்று நிதா பக்கம் பேச்சை திருப்பிவிட்டார் வெங்கி.
இவர் காது கேட்கவில்லை என்றதும் வெங்கியை முறைத்தார் லமி.
வைத்தி இப்போது நிதாவிடம் திரும்பினார்.
“ என்ன இவ்வளவு நேரம் ஆகிருச்சு? நீ கீழே வர ! இந்நேரம் நீ காலை சாப்பாடு சாப்டிருக்கனுமே! இப்ப தான் டீயே குடிக்கிற . இப்டியே போனா வேலை கிடைச்சதும் கரெக்ட் டைம்க்கு ஆபிஸ் கிளம்பி போகனுமே ?எப்டி டைம் கிப்பப் பண்ணுவ ? இண்டர்வியூக்கு ரெடியாகிட்டியா?''
எனக்கு தெரிஞ்சவங்க கம்பெனி வேற போய் ஏதும் சொதப்பி வச்சுறாத, அப்புறம் என் மானம் போயிரும் , நான் சொல்றது புரியுதா ? இல்லையா? அப்புறம் என்று அவர் ஏதோ சொல்ல வர ,
“ அப்பா நைட் இண்டர்வியூக்கு படிச்சுட்டு படுக்க லேட் ஆகிருச்சு, பாட்டிய சீக்கிரம் எழுப்பிவிடச் சொன்னேன் .பாட்டி தான் லேட்டா எழுப்பிவிட்டாங்க என்று பாட்டியை கோர்த்துவிட்டாள் பேத்தி.
‘ அய்யோ இப்ப நானா என்று லமி பயப்பட ஆரம்பிக்க
அவர் பக்கம் திரும்பிய வைத்தி ஏதோ சொல்வதற்குள் போன் கால் வர அவர் கவனம் அதில் சென்றது. போனை எடுத்து பேசிக் கொண்டே அவர் ரூமிற்குள் சென்று மறைய அவர் தலை மறையும் வரை பொறுத்தவர்கள் அவர் உள்ளே சென்றதும் .
ச்ச்ச்ச் அப்ப்பபா! என்று .மூவரும் பெருமூச்சுவிட்டுக் கொண்டே சோபாவில் அமர்ந்தார்கள் . .
அய்யோ! அம்மா !ஒரு காபிக்கு இவ்வளவு அக்கப்போரா ? ச்சு அம்மா !இந்த போதாத வயசுல இவனுக்கு பதில் சொல்லியே நான் ஓஞ்சு போயிருவேன் போலயே! – லமி
அப்பாடா இப்பவாவது ஒத்துக்குறியே உனக்கு வயசு ஆகிடுச்சுன்னு – வெங்கி
உங்களுக்கு வயசு ரொம்ப கம்மியோ – லமி
அதை கேட்டு வெங்கி ஏதோ சொல்ல வர கொஞ்சம் உங்க சண்டைய நிறுத்துறீங்களா! நானே இண்டர்வியூ போறதுல இருந்து எப்படிடா தப்பிக்கலாம்னு யோசனை பண்ணிட்டு இருக்கேன். நீங்க என்னை டிஸ்டப் பண்றீங்க .
நான் புகழ்பெற்ற ரிப்போட்டர் ஆகனும் . அப்பா சொன்ன வேலைக்கு நான் போகக் கூடாது. அதனால நீங்க இரண்டு பேரும் நான் இண்டர்வியூ போகாம இருக்க ஏதாவது ஐடியா கொடுங்க ..என்று நிதா கத்த
“ பேசாம உன் பாட்டிக்கு முடியலனு சொல்லுடா’’ – வெங்கி
“ நான் குத்துக்கல்லாட்ட இருக்கேன் எனக்கு முடியலயா? உங்க தாத்தாவ பார்த்தா இப்பவோ !அப்பவோனு ! இருக்காரு அதனால அவர சொல்லு முடியலனு ! அப்ப தான் கரெக்டா இருக்கும்’’ – லமி
“ இது என்ன சின்னபிள்ளைதனமா இருக்கு இப்டிலாம் சொன்னா நம்பமாட்டாங்க. வேற ஏதாவது நம்பும் படியா சொல்லுங்க’’ என்று நிதா கூற, இருவரும் யோசித்துக் கொண்டிருக்க
“ நிதா நீ இன்னும் கிளம்பலையா ?’’ என்று வைத்தி மேலிருந்து குரல் கொடுக்க நிதா அலறியடித்தபடி வாசல் பக்கம் ஓடினாள் .
வெங்கியும் , லமியும் தம் ரூமில் சென்று மறைந்தனர்
******************************************************************************
கருப்பு சட்டை ,கருப்பு பேண்ட் , கருப்பு கோட் அணிந்து கைகளில் சிகரெட்டோடு ராட்சஸ தோரணையில் ஆபிசிற்கு கிளம்பி நின்றான் யட்சன்.
அப்போது பிரசாத் உள்ளே நுழைந்தார் .
நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்குல யட்சா ?
ஆபிஸ்க்கு போற வரைக்கும் வழில எங்கேயும் இறங்காத. ஆபிசில் உனக்கு தேவையான பொருள் உன் இடத்துக்கே வந்து சேரும் . யார்கிட்டேயும் அதிகமா பேச வேண்டாம் .
அபேய் உன் கூடவே இருப்பான் . அவன் எல்லாத்தையும் பார்த்துக்குவான் என்று அவர் சொல்ல அதற்கு யட்சன் பதில் ஏதும் சொல்லாமல் காரில் சென்று அமர , கார் வேகம் எடுத்தது.
அவன் சென்ற சற்று நேரத்தில் அவருக்கு போன் கால் வந்தது . எதிர்பக்கம் சொன்ன செய்தியை கேட்டு அவர் போனை கோபத்தோடு அணைத்தார் .
யட்சா! நான் சொன்னத கேட்காம வெளியில போயிட்டியா? என்று கத்தியவர் காரை நோக்கி விரைந்தார்.
யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன்: 4

நிதா வேண்டா வெறுப்பாக எப்படி இண்டர்வியூக்கு போகாமல் தப்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே நடைபாதையில் சென்று கொண்டிருக்க அவள் எதிரே எல் போர்டு போட்டு வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது அதை பார்த்ததும் அவள் மனதில் யோசனை தோன்ற வேகமாக வண்டியின் குறுக்கே பாய்ந்தாள் நிதா.

அவள் திடீரென்று பாய்ந்ததும் வண்டியின் உள்ளே இருந்தவன் திணறிய படி கடைசி நேரத்தில் சுதாரித்து நிதாவிற்கு முன் 1 அடி இடைவெளியில் வண்டியை நிறுத்தினான். அவன் அப்படி செய்வான் என்று எதிர்பார்க்காத நிதா தரையில் அமர்ந்தபடி 'அய்யோ வண்டிய முன்னாடியே நிப்பாட்டிட்டானே!! இப்ப என்ன செய்றது?' என்று முழித்துக் கொண்டிருக்க..

வண்டியில் இருந்து வேகமாக பதட்டத்தோடு இறங்கினான் - அவன் சாமா. அவன் பதட்டத்தை கண்டு கொண்ட நிதா ஒரு அடிமை சிக்கிருச்சு விடாத நிதா என்று மனதுக்குள் சொல்லியவள் “ அய்யோ அம்மா என் கால் போச்சே ! என்னால எழுந்திருக்கக் கூட முடியலயே “ என்று அவள் கால்களை பிடித்து கத்த சாமா பதறினான்.

“ அய்யோ சிஸ்டர் கத்தாதீங்க போலிஸ் வந்தா பிரச்சனை ஆயிரும். இங்க சட்டம்லா ரொம்ப கெடுபிடியா இருக்கும் பிளீஸ் யா... உங்கள ஆஸ்பிட்டல்ல சேர்த்து பார்க்க வேண்டியது என்னோட பொறுப்பு.. பிலீவ் மீ என்று அவன் கெஞ்ச நிதா மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

'ஓ!... வாவ்... நிதா ஒரு கேணபய மாட்டிக்கிட்டான் விடாத இவன வச்சு நீ நினைச்சத நிறைவேத்திக்க' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

இவள் இங்கு யோசித்துக் கொண்டிருக்க அவள் சிந்தனையில் இடையிட்டான் சாமா .

“ ஆமா சிஸ்டர் நான் கார 1 அடி முன்னாடியே நிப்பாட்டிட்டேனே அப்புறம் எப்படி உங்களுக்கு அடிபடும் என்று அவன் யோசனையோடு கேட்க...

“ அய்யோ நிதா அவன் யோசிக்க ஆரம்பிக்கிறான் விடாத ஏதாவது பண்ணு என்று சிந்தித்தவள் மறுபடியும் காலை பிடித்துக் கொண்டு கத்தினாள்.

நோ சிஸ்டர் ஸ்டாப் கத்தாதீங்க போலிஸ் எதும் வந்துரப்போறாங்க. அப்புறம் நான் மாட்டிக்குவேன்.

"நான் உங்கள வீட்டுலயே இறக்கி விடுறேன்... பிளீஸ்! கத்தாம வழி சொல்லுங்க..." என்று கூறி அவளை தூக்கிக் கொண்டு சென்று காரில் அமர வைத்தான்.

'அப்படி வாடா வழிக்கு' என்று மனதில் சிரித்துக் கொண்டே வெளியில் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு வீட்டிற்கு வழி சொன்னாள் நிதா.

வீட்டின் உள்ளே நுழைந்ததும் கால்களை நொண்டியபடியே வரவேற்பரைக்கு வந்த நிதா கத்தி அழுதாள். அவள் அழும் சத்தம் கேட்டு லமியும் , வெங்கியும் ஓடி வந்தனர். வைத்தியும் பதட்டமாக இறங்கி வந்தார் .

"என்னாச்சு நிதா ? ஏன் நொண்டுற ? யார் இருவர் ? " என்று வைத்தி கேட்க நிதா அழுது கொண்டே இருந்தாளே தவிர எதுவும் பேசவில்லை.

அதை பார்த்த சாமா - " சார் தெரியாம என் கார் முன்னாடி வந்து விழுந்துட்டாங்க. கால்ல அடி" என்று அவன் கூறியது தான் தாமதம் லமி ஆரம்பித்துவிட்டார்

“ அய்யோ என் கண்ண கலங்கவச்சு என் பொண்ண பொலம்ப வச்சு

மாமன் சீர் கொண்டு யானையில பவனி வர

தாரை வார்த்து கொடுக்க தயாரா இருக்கும் என் செல்ல கண்ணு மணிய

இப்டி கால நொண்ட வச்சுவன் கட்டையில போவானே"

என்று ஒப்பாரி பாட ஆரம்பித்துவிட்டார் லமி. இதில் இடையில மூக்க உறிஞ்சி சாமா சட்டையில வேற அதை தேய்ச்சு ஒரே ரகளை லமி பண்ண...

பாட்டியின் செயலை பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் சாமா

இதனை பார்த்து கொண்ட வெங்கி தலையில் அடித்துக் கொண்டார்

நிதா "ஓ! வாவ்!!! லமி சூப்பர்" என்று தனக்குள் அவரை பாராட்டிக் கொண்டிருந்தாள்

இப்படி ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நிலையில் இருக்க இதனை களைத்தார் வைத்தி.

“ அம்மா உன் ஒப்பாரிய கொஞ்சம் நிப்பாட்டுறீயா இது ஒண்ணும் பாப்பம்பட்டி இல்லை லண்டன் வாய மூடிட்டு கம்முனு இரு" என்று அவர் கத்த அமைதியாகிவிட்டார் லமி.

லமியிடம் கத்திவிட்டு சாமாவிடம் திரும்பிய வைத்தி "என் பொண்ணு மேலே கார் ஏத்திட்டு வீட்டுல வேற வந்து விடுறீயா உன்னை" என்று சாமாவிடம் அவர் கத்த ஆரம்பிக்க

“ சார் ! அது வந்து என்ன நடந்துச்சுன்னா என்று சாமா ஏதோ சொல்ல வர ,

நிதாவிற்கு பயம்பிடித்துக் கொண்டது. 'அய்யோ இவன் ஏதாவது உளர போறான் அப்புறம் நீ மாட்டிக்குவ நிதா ஏதாவது செய்' என்று தனக்குள் யோசித்தவள் அவர்கள் பேச்சில் இடைபுகுந்தாள்.

“ அம்மா கால் வலிக்குதே ! என்று வலியில் கத்த வைத்தி வேகமாக அவளிடம் சென்றார் . நிதா இரு டாக்டருக்கு போன் பண்ணுறேன் என்று அவர் கூற

"அய்யோ!!! டாக்டரா... ஒப்வோ" - நிதா சமாளி

“ வேண்டாம் பா பாட்டி நீவி விட்டா சரியாகிடும். அய்யோ!!! இந்த நிலைமையில நான் எப்படி இண்டர்வியூ போவேன்?" என்று நிதா வலியில் கத்திக் கொண்டே கூற

"ஓ ! இது தான் விசயமா நீ நடத்து மா" என்று வெங்கி தனக்குள் சொல்லிக் கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

நிதா அப்படி கூறியதும்.. வைத்தி வேகமாக “ கால் இப்படி இருக்கு அதெல்லாம் நீ எங்கேயும் போக வேண்டாம் ரெஸ்ட் எடு. சரியா போனதும் நாம வேற கம்பெனிய பார்த்துக்கலாம்" என்று கூறியவர் சாமாவிடம் திரும்பி கத்த ஆரம்பிக்க அவருக்கு போன் கால் வந்தது. அதனை எடுத்து காதில் வைத்துக் கொண்டு பேசியபடியே அவனை முறைத்தபடி அங்கிருந்து சென்றார் வைத்தி

அவர் சென்றதும் “ ஹேய் லமி இண்டர்வியூக்கு போறதுல இருந்து தப்பிச்சுட்டேன் என்று குதித்துக் கொண்டே நிதா கூற..

இதனை கண்ட சாமா அதிர்ச்சியில் நின்றான்.

***************

ஒரு தனித் தீவு போன்று, மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் , மரங்கள் சூழ்ந்து இருக்க பகலிலும் சூரிய வெளிச்சம் படாத அந்த இடத்தில் ஒரு கல்லறையின் முன் சென்று நின்றான் யட்சன். மலர் கொத்தை அதில் வைத்தவன் அதில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை அவன் கண்கள் வெறித்துக் கொண்டிருந்தது அதில் வினய் பிரகாஷ் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.



யட்சகனாக மாறுவான்...
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன்: 5

நிதா எழுந்து குதித்துக் கொண்டிருக்க அதனை கண்ட சாமா அதிர்ச்சியாக நின்றான்.

நிதா குதித்ததும்...

லமி அவளை தலை முதல் கால் வரை பார்வையால் வருடியபடி “ கண்ணு உனக்கு ஒண்ணும் இல்லையே கொஞ்ச நேரத்துல என்னை பயமுறித்திட்ட மா! " என்று கண்கள் கலங்கியபடி அவர் கூற

ஒப்வோ லமி ! பயப்படாத நான் நல்லா தான் இருக்கேன். இண்டர்வியூக்கு போகாம தப்பிக்க இப்படி பண்ணேன். ரொம்ப பயந்துட்டியா ? – நிதா

அவ ஒரு முட்டா சிறுக்கிமா அதான் உன் நடிப்ப நம்பி பயந்துட்டா! ஆனா நான் அப்படியில்லம்மா உன் நடிப்ப முதலயே கண்டுபிடிச்சுட்டேன் அதான் ஒதுங்கி நின்னு வேடிக்கை பார்த்தேன். இருந்தாலும் இப்படி உயிரோட விளையாடாத மா! – என்று வெங்கியும் சிறுவருத்ததோடு கூற

தாத்தா! நீங்களுமா! என்று அவரை சமாதானப்படுத்த நிதா முயல, லமி இடையிட்டார்.

என்ன சொன்னீங்க! நான் முட்டா சிறுக்கியா! நான் ஒண்ணும் முட்டாள் கிடையாது நானும் முதலயே கண்டுபிடிச்சுட்டேன். நீங்களே கண்டுபிடிக்கும் போது நான் கண்டுபிடிக்க மாட்டேனா . நான் இவ்வளவு நேரம் தெரியாத மாதிரி நடிச்சேன் – லமி

நிதா நம்பாத கிழவி பொய் சொல்றா – வெங்கி

நான் ஒண்ணும் கிழவி கிடையாது நீங்க தான் கிழவன் – லமி

இப்படி இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்க நிதா அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க நடுவில் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான் சாமா

ஹேய் நான் ஒரு ஆள் இங்க தனியா நின்னுட்டு இருக்கேன் எனக்கு இங்க நடக்குறத கொஞ்சம் சொல்லிட்டு நீங்க உங்க சண்டைய போடுறீங்களா ? – சாமா

அவன் அப்படி கூறியதும் தான் அவர்களுக்கு அவன் நினைவே வந்தது .

லமி வேகமாக “என் பேத்தி மேல கார் ஏத்தி கொலை செய்ய பார்த்தவன் நீ தானா! கட்டைல போக என்று லமி கையின் விரல்களை மடக்கிக் கொண்டே கூற

பாட்டி அப்படி தான் நானும் இவ்வளவு நேரம் நினைச்சேன் ஆனா பார்த்தா அப்படி தெரியல. எல்லாம் வெறும் நடிப்பு. என்னை ஏமாத்திட்டாங்க உங்க பேத்தி –சாமா

ஏய்!! என்ன பார்த்தா பாட்டினு சொல்ற... உன்ன... என்று பாட்டி கத்தத் தொடங்க

லமி.. ஸ்டாப் இட்! நான் அவருக்கு புரிய வைக்கிறேன் கொஞ்சம் அமைதியா இரு என்று அவரை சமாதானப்படுத்திவிட்டு சாமாவிடம் திரும்பினாள் நிதா.

சாரி!! சார்!! லமிக்கு பாட்டின்னு சொன்னா பிடிக்காது அதான் கத்திட்டாங்க... இண்டர்வியூல இருந்து தப்பிக்க தான், சார் நான் உங்கள பயன்படுத்திக்கிட்டேன்.. பிளீஸ் என்னை மன்னிச்சுடுங்க.. என்று அவள் சாமாவிடம் மன்னிப்பு வேண்ட

நீ என்னம்மா அவன்கிட்ட போய் மன்னிப்பு கேட்டுக்கிட்டு அவன் ஒழுங்கா பார்த்து வந்திருக்கனும்மா இல்லையா – வெங்கி

தாத்தா நீங்க பேசாம இருங்க தப்பு நம்ம மேலதான் நம்மதான் சாரி கேட்கனும் .

சாரி! சார் நான் நிதா நீங்க ? இந்த கலவரத்துல இத மறந்துட்டேன் பாருங்களேன் தமிழா ? – நிதா

நிதா இப்படி பேசியதும் சாமாவும் தன் கோபத்தை துறந்தான்

பரவாயில்லை நிதா. நான் சாமா, தமிழ்நாடு...

என்னது சாமாவா ? வெங்கல சாமாவா ? இல்லை மளிகை சாமாவா ? – லமி

அவர் அப்படி கூறியதும் அவரை முறைத்தான் சாமா.

லமி ! என்று நிதா அவரை கூப்பிட்டு முறைக்க

சாரி! சார் அவங்களுக்கு என் மேல் கொள்ளை பிரியம் நீங்க என் மேல கார ஏத்திட்டீங்கனு அவங்களுக்கு உங்க மேல கோபம், வேற ஒண்ணும் இல்லை என்று அவள் கூற

சாமா வேகமாக இட்ஸ் ஓகே நிதா பழச எதுக்கு பேசிட்டு பிரண்ட்ஸ் என்று அவன் கை நீட்ட

நிதாவும் சிநேகமாக அவனுக்கு கை குலுக்கினாள் .

அவள் கை குலுக்கியதும் சாமா அவளிடம் எதுக்கு இண்டர்வியூ போக மாட்ற நிதா ?

“ அவ பெரிய ரிப்போட்டர் ஆகனுமா தம்பி அதான் " – வெங்கி

ஓ ! உனக்கு இண்டர்வியூ போக விருப்பம் இல்லை பெரிய ரிப்போட்டராத்தான் ஆகனும்ன்னு உன் அப்பாகிட்ட நீ சொல்லியிருக்கலாமே எதுக்கு இந்த தேவையில்லாத வேலையெல்லாம் செய்ற நிதா – சாமா

அது முடிஞ்சா நான் செய்ய மாட்டேனா சாம். எங்க அப்பாவுக்கு அவர் பேசி தான் பழக்கம் மத்தவங்க பேச்ச கேட்டு பழக்கமில்லை – என்று நிதா வருத்தத்தோடு சொல்ல

ஓ! அப்படியா? ஓகே நிதா.. நான் எனக்கு தெரிஞ்சவங்க மூலமா உனக்கு ரிப்போட்டர் வேலைக்கு try பண்ணி பார்க்குறேன் என்று சாமா கூற

ஓ தேங்க்ஸ் சாம்! என்று நிதா மகிழ்ச்சியோடு கூற சற்று தள்ளி நின்று சாமாவை முறைத்துக் கொண்டிருந்த லமியையும்,வெங்கியையும் அறிமுகப்படுத்திவிட்டு அவர்க்ளையும் பேச்சில் இழுத்து நட்புப் பாராட்டிவிட்டு விடைபெற்றான் சாமா.

************

கல்லறையின் முன் வினய் நின்று இருக்க அவனை ஒரு மரத்தின் மறைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.

பார்த்துக் கொண்டிருந்தவன் சற்று நேரத்தில் யாருக்கோ போன் கால் செய்ய எதிர்முனையில் ஏதோ சொல்லப்பட சரியென்று தலையசைத்தவன் கத்தியை எடுத்துக் கொண்டு அவனை நோக்கிச் செல்ல அவன் வரவை தூரத்திலே புரிந்து கொண்ட வினய் அவனை தாக்குதலுக்கு தயாராக புயல் வேகத்தில் கார் ஒன்று வந்து நின்றது வினய்யின் முன்னால் .

அதனை தொடர்ந்து ஒரு புல்லட்டின் சத்தம் கேட்க கத்தியோடு விழுந்தான் வினய்யை தாக்க முயன்றவன்.





யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன்: 6

காரில் இருந்து இறங்கினார் விக்ன பிரசாத் . இறங்கியவர் அவனுக்கு காரின் கதவை திறந்து விட கோபத்தோடு அதில் ஏறி அமர்ந்தான் வினய்.

சற்று நேரத்தில் கார் வீட்டின் முன் நிற்க இறங்கிச் சென்றான் வினய் . அவனை தொடர்ந்து இறங்கிய பிரசாத் வினய் செல்லும் வரை பார்த்துவிட்டு அதன் பின் போனை கையில் எடுத்தார்.

அபேய் இன்னைக்கு வினய் ஆபிஸ் வர மாட்டான் அதனால நீ என்ன பண்ற அவன் schedule எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு . இன்னோரு நாள் அந்த புரோகிராம் வச்சிக்கலாம் என்று அவர் சொல்ல எதிர்முனையில் என்ன சொல்லப்பட்டதோ

வினய் இரவு நடக்குற ஆபிஸ் பார்ட்டிக்கு கண்டிப்பா வருவான் . நீ எல்லாத்தையும் ரெடி பண்ணி வை என்று அவனிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றார் பிரசாத்.

***********************

லமி இது ஓகேவானு பார்த்து சொல்லு என்று நிதா ஒரு டிரஸை எடுத்து தன் மேல் வைத்தபடி லமியிடம் காண்பிக்க அவர்

நிதா இது பழைய டிரண்ட் ஆ இருக்கு வேற எதாவது எடு என்று லமி சொல்ல நிதா மற்றொரு டிரஸை வைத்து காண்பிக்க இது நல்லா இருக்கு ஆனா ரிச் லுக் தரலையே என்று லமி சொல்ல

இருவரும் பிரபலமான அந்த துணி கடையையே ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தனர் .

லமி ஒரு உடையை எடுத்துக் கொடுக்க அதை பார்த்த நிதா

“ ஓப்வோ லமி இது 'வெட்டிங் ட்ரெஸ்' அதை அங்கேயே வை

ஏனா நான் பார்ட்டிக்கு தான் போறேன் என் கல்யாணம் ஒண்ணும் அங்க நடக்கல அதனால அத அப்படியே வச்சுட்டு இத பார்த்து சொல்லு என்று நிதா கூற லமி விடுவதாகயில்லை.

நிதா இது உனக்கு அழகா இருக்கும் இத போட்டுக்கடா என்று லமி கூற . முடியாது லமி இது பார்ட்டி டிரஸ் கிடையாது அதனால அத வச்சுறு அப்பா சொன்னாருன்ற ஒரே காரணத்துக்காக தான் நான் உன் கூட டிரஸ் எடுக்க வந்தேன் . இப்டிலாம் செஞ்சா அப்பா கூட அவர் கம்பெனி பார்ட்டிக்கு நான் போக மாட்டேன் என்று நிதா கூற லமி வேண்டா வெறுப்பாக அதை வைத்தார்.

அதன் பின் இருவரும் ஒரு டிரஸ்சை எடுத்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றனர்.

************************

வினய் முன் வந்து நின்ற பிரசாத் “ யட்சா ! நீ இன்னும் பார்ட்டிக்கு தயாராகலையா என்று கேட்க அவன் அவரை கண்டுகொள்ளாமல் கோப்பையில் உள்ள திரவத்தை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.

நீ இப்ப என்கூட வரலைனா இது தான் நடக்கும் என்று அவர் ஒரு வீடியோவை போட்டு காண்பிக்க அதை பார்த்த யட்சன் கோபமாக கோப்பையை தரையில் வீட்டெறிந்தான் அது உடைந்து சிதற அதன் உடைந்த பாகத்தில் ஒன்றை எடுத்து பிரசாத்தின் தொண்டை குழியின் அருகில் வைத்தான் யட்சன். அவருக்கு பயத்தில் வேர்த்து கொட்டி தொண்டை குழி ஏறி இறங்கியது..

யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன்: 7

இதை உங்க தொண்டையில் இறக்க எனக்கு ஒரு நிமிசம் கூட ஆகாது. ஆனா எனக்கு நீங்க தெரிந்தோ? தெரியாமலோ உதவி செஞ்சுட்டீங்க அதனால உங்கள சும்மா விடுறேன்.

அவர்க்கு ஏதாவது ஆச்சு நான் மனுசனா இருக்க மாட்டேன். என்னை பத்தி உங்களுக்கு நல்லா தெரியும்னு நினைக்கிறேன் என்று கூறியவன் கண்ணாடி துண்டினை விட்டெறிந்துவிட்டு ரூமின் வாசல் வரை சென்றவன் திரும்பி நான் கொஞ்ச நேரம் மட்டும்தான் பார்ட்டியில இருப்பேன் நான் வரது உங்களுக்கு பயந்து இல்லை நான் எதுக்கு வரேன்னு உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டு கதவை அறைந்து சாத்தினான் வினய்.

அவன் சென்றதும் தன் கழுத்தை தேய்த்துவிட்டுக் கொண்டே பேசினார் பிரசாத்.

உன்ன லாக் பண்ண எனக்கு ஒரு சாய்ஸ் கிடைக்காமலா போகும் அப்ப வச்சுக்குறேன்டா உன்னை என்று முணங்கிக் கொண்டே தன் ரூமை நோக்கி சென்றார் அவர்.

************************

தன்னை அலங்கரித்துக் கொண்ட நிதா கண்ணாடியில் தன்னை பார்க்க அவள் வியப்பில் அயர்ந்து நின்றாள்.

"ஓ வாவ் லமி ! நீ சொன்ன மாதிரி இந்த டிரஸ் எனக்கு ரொம்ப நல்லா இருக்கு .ஆனா லமி எனக்கு ஏதோ படபடப்பா இருக்கு நீயும் என் கூட வாயேன், அப்பா கூட நான் மட்டும் எப்படி தனியா பார்ட்டிக்கு போகுறது" என்று அவள் கூற,

"அவன் கூட போறதும் ஆப்ப நானே விலை கொடுத்து வாங்குறதும் ஒண்ணு தான் என்னால் முடியாதுமா வேணா உன் தாத்தாவ கூட்டிட்டு போ அவர் தான் உன் அப்பனுக்கு கரெக்டா செட் ஆவாரு" – லமி

அப்போது அங்கே வந்த வெங்கி, "என்ன விசயம்? எதுக்கு கிழவி என்ன இழுக்குறா?"

"தாத்தா என் கூட பார்ட்டிக்கு வாங்க" – நிதா

"பார்ட்டிக்கு வரத பத்தி ஒண்ணும் இல்லம்மா இவள தனியா விட்டுட்டு வரனுமேனு தான் யோசிக்கிறேன்." - வெங்கி

"ஏன் தாத்தா பாட்டி மேல அவ்வளவு பாசமா. தனியா விட்டுட்டு வர மாட்டிங்களா. அங்க நிறைய பொண்ணுக வருவாங்க அதனால நீங்க சைட் அடிக்கலாம் வாங்க தாத்தா பிளிஸ்?" - நிதா

"யாரு இவரு? சைட் அடிக்கப் போறாரா !. நீ வேற! இவருக்கு என்னை கட்டி காப்பாத்தவே முடியல இதுல இன்னோன்றா! ம்ம்ம்... காமெடி பண்ணாதமா" – லமி

"லமி... தாத்தா நீ தனியா இருப்பேன்னு உனக்காக வீட்டுல இருக்கேன்னு சொல்றாரு அவர போய் நீ கிண்டல் பண்ற" - நிதா

"அட போமா ! இவள தனியா விட்டா வீட்டையே இரண்டா ஆக்கிருவா பிரிஜ் ல ஒரு பொருள் இருக்காது எல்லாத்தையும் திண்ணே காலி பண்ணிடுவா அதனால நான் இவளுக்கு காவல் இருக்கேன்" - வெங்கி

"அதான பார்த்தேன் திடீர்னு பாசம் பொத்துட்டு வந்துருச்சேன்னு, உங்கள பத்தி எனக்கு தெரியாதா? " என்று லமி ஏதோ கூற முயல

அப்போது மேலிருந்து வைத்தி இறங்கி வரவும் அந்த இடமே அமைதியானது . நிதாவை கூட்டிக் கொண்டு பார்ட்டிக்கு விறைந்தார் வைத்தி. நிதா வேண்டா வெறுப்பாக அவருடன் சென்றாள்.

**************************

என்றும் போல் அன்றும் கருப்பு பேண்ட் , சர்ட் மற்றும் கோட்டோடு இறங்கி வந்தான் வினய் . அவன் காரில் ஏறி அமர்ந்ததும் கார் விறைந்தது பார்ட்டி நடக்கும் இடத்திற்கு. அவன் காரில் இருந்து இறங்க அனைவரும் அவனை ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்றான் வினய். பிரசாத் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்க அவன் முகத்தில் ஒரு அறிமுகச் சிரிப்பு கூட இல்லை.

இங்கு நிதா பார்ட்டி நடக்கும் இடத்தை சுற்றி பார்த்து கொண்டே வர எதிரில் வந்தவனை கவனிக்காமல் அவன் மேல் மோதினாள் . மோதிய வேகத்தில் அவள் விழ முயல தாங்கி பிடித்தான் அவன். அவன் ஹசல் கண்கள் அவள் எதிரே பக்கத்தில் இருக்க அதனை பார்த்தவள் மெய் மறந்து நின்றாள்.

அவள் பார்த்து கொண்டிருக்க ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்தவள் திரும்பிப் பார்க்க அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது. அவள் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தாள் . தான் பார்த்தது கனவா? நனவா ? என்று புரியாமல் குழம்பி நின்றாள் நிதா.

*****************************

மரங்கள் நிறைந்த அந்த இடத்தில் இலக்கற்று ஓடிக் கொண்டிருந்தான் அவன். புலியின் வேகத்தோடு வேட்டையாடத் துடிக்கும் கண்களோடு ஓடிக் கொண்டிருந்தான் அவன். அவன் பார்வையில் விழுந்தது அந்த இடம். அதை கண்டவன் வேகமாக அருகில் செல்ல செல்ல அவன் கண்கள் பளபளத்தது. உள்ளே சென்றவன் சற்று நேரத்தில் அந்த இடத்தில் இருந்து வேகமாக கிளம்பினான்.

அவன் கிளம்பிய சற்று நேரத்தில் அந்த இடமே ரணகளமானது

யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன்: 8

வைத்தி தன் நண்பர்களோடு சென்று விட நிதா தனித்து விடப் பட்டாள் . அறிமுகமற்றவர்கள் மத்தியில் என்ன செய்வதென்றே தெரியாமல் நிதா சுற்றிக் கொண்டிருக்க எதிரில் வந்து நின்றான் சாமா. அவனை இங்கு சற்றும் எதிர்பார்க்காத நிதா சந்தோசத்தில் குதித்தாள்

"வாவ் சாமா நீ எப்படி இங்க ! தேங்க் காட் நீயாவது வந்தியே ரொம்ப போர் அடிக்குது சாமா" – நிதா

"இவங்க கம்பெனியில தான் நான் வேலை பார்க்குறேன்" – சாமா

"ஒ!! அப்ப எங்க அப்பாவ உனக்கு தெரிஞ்சுருக்கனுமே. எங்க அப்பாவும் இங்க தான் வேலை பார்க்குறார்"- நிதா

"அப்படியா ! ஆனா VP ன்றது பெரிய கம்பெனி . அவங்க நிறைய products export பண்றாங்க அதனால உன் அப்பா வேற கிளையில் வேலை பார்ப்பாரா இருக்கும் நான் பெர்ப்யூம் manufacturing டிபார்மண்ட் ல இருக்கேன்" என்று அவன் கூற

"ஒ!" - நிதா

"ஆமா உன் வேலை என்னாச்சு?" – சாமா

"அதை ஏன் கேட்குற சாம் அப்பா வேற கம்பெனிக்கு இண்டர்வியூக்கு போகச் சொல்லி சொல்றாரு" – நிதா

"நிதா பேசாம உன் அப்பா மாதிரி வேலைக்கு போனா என்ன?" – சாமா

"அப்ப என் கனவு!!!" – நிதா

"இங்க பாரு நிதா அப்பாக்காக வேலைக்கு போ!!! ஆனா உன் கனவும் நிறைவேறும்..." – சாமா

"நீ என்ன சொல்ற எனக்கு புரியல?" – நிதா

"என் நண்பன் ஒரு டிடெக்டிவ் கம்பெனி வச்சுருக்கான் அவன் கிட்ட உன்ன நான் சேர்த்துவிடுறேன் பார்ட் டைம்மா உன் அப்பாவுக்கு தெரியாம இத நீ செஞ்சுக்கலாம் ஆனா அவன் உன்ன சேர்க்கனும்னா நீ எதாவது ஹாட் டாபிக் எதாவது கண்டுபிடிச்சு உன்னை ட்ரெயினிங் பண்ணிக்கோ . அப்ப தான் அவன் கிட்ட உன்ன நான் ரெக்கமண்ட் பண்ண முடியும்" – சாமா

"சாமா தேங்க்ஸ் நீ சொன்னபடியே செய்றேன் ஒரு கேஸ் அ சால்வ் பண்ணிட்டு வரேன்" – நிதா

இருவரும் இங்கு பேசிக் கொண்டிருக்க,

********************************************************************************

பிரசாத் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அபேயை கண்களால் அழைத்தார்.

"வினய் எங்க காணோம் அவன பார்த்துட்டே இருக்க சொன்னேன்னா இல்லையா!" – பிரசாத்

"சார் ! இங்க தான் இருந்தாரு அதுக்குள்ள எங்க போனாருனு தெரில" என்று அவன் கூற

"யூ இடியட் !" என்று அவனை கத்திவிட்டு பிரசாத் வினய் ஐ தேடத் தொடங்க தூரத்தில் ஒரு மனிதருடன் பேசிக் கொண்டிருந்தான் வினய்

அவர் அவனை தொட்டு ரசித்துப் பேசிக் கொண்டிருக்க அவரிடம் விரைந்தார் பிரசாத்

"வாங்க ! பூங்குன்றன் சார் ! எப்படி இருக்கீங்க ?" என்று பிரசாத் கேட்க

அவரை பார்த்ததும் பயந்தார் அந்த மனிதர் .

வினய் அவர் அருகில் சென்று அவர் கைகளை பிடித்துக்கொண்டான்

பிரசாத் தொடர்ந்தார்.

"இப்படி தனியா நின்னு பேசணும்னு என்ன கட்டாயம் பூங்குன்றன் சார். வாங்க வந்து இங்க உட்கார்ந்து பேசுங்க" என்று அவரை அழைத்துக் கொண்டு வந்து ஒரு இடத்தில் அமர வைத்தவர் பேரரை அழைத்து.

"பேரர் ! இவருக்கு குடிக்க எதாவது கொடுங்க" என்று சொல்லிவிட்டு வினய்யிடம் திரும்பியவர் .

"வினய் ! வாப்பா ! உன்ன என் பிரண்டுக்கு அறிமுகப்படுத்தனும்! பிறகு வந்து சார் கூட பேசிக்கலாம் . என்ன பூங்குன்றன் சார் நான் சொல்வது சரிதான என்று பிரசாத் கூற அவர் தலை பயத்தில் சம்மதமாக ஆடியது வினய் பிரசாத்தை முறைத்துக் கொண்டே அவர் பின் சென்றான்.

ஆட்கள் யாருமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வினய்யிடம் திரும்பினார்.

"ஆமா ! கொஞ்ச நேரம் நீ இங்கு இல்லையே? எங்க போன? என்ன பண்ணிட்டு வந்தே என்று அவர் கேள்வி கேட்க வினய் அதற்கு பதில் எதும் சொல்லாமல் அவரை ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருக்க

வாயிலில் வந்து நின்றது ஒரு கார். காரில் இருந்து இறங்கினார் தேவ் ஆனந்த் பிரசாத்தின் தொழில் எதிரி.

அவரை பார்த்த பிரசாத் வினய்யை விட்டு அவரிடம் சென்றார்.

"வாங்க தேவ் ! வெல்கம் !" – பிரசாத்

"யெஸ் Mr. பிரசாத் ! உங்கள சந்திக்க காத்துட்டு இருந்தேன் இப்ப தான் நேரம் கிடைச்சது . உங்கள மட்டும் இல்லை உங்க பையன்ன சந்திக்க ஆவலுடன் காத்துட்டு இருக்கேன். Where is he?" – தேவ் சிரித்துக் கொண்டே கேட்க

"நானும் உங்கள சந்திக்க காத்துட்டு இருக்கேன். குறிப்பா என் பையன முழுசா உங்க கிட்ட காண்பிக்க காத்துட்டு இருக்கேன் தேவ்" - பிரசாத்

பிரசாத் அப்படி கூறியதும் தேவ் உரக்க சிரித்தார்.

"ஓ! ஓகே பிரசாத் ! அப்புறம் தொழில் எல்லாம் எப்பிடி போயிட்டு இருக்கு." – தேவ்

"ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு" – பிரசாத்

"இனி அப்படி நல்லா போகாது. தொழிலும் சரி ! வாழ்க்கையும் சரி ! என்று தேவ் கூறிச் சிரிக்க

"அப்படியா தேவ் ! பார்க்கலாம் யார் வாழ்க்கை யும் , தொழிலும் நல்லா போகாதுனு பொறுத்து இருந்து பார்க்கலாம்." என்று பிரசாத் கூற

இருவரும் மற்றவர்கள் பார்வைக்கு சிரித்துக் கொண்டு பேசினாலும் வேட்டையாடத் துடிக்கும் வெறி அவர்கள் கண்களில் தெரிந்தது



யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன்: 9
காலையில் கண் விழித்து எழுந்த நிதா வழக்கம் போல் டோலுவிடம் பேசிவிட்டு குளித்து கிளம்பி கீழே வர அவளை எதிர்கொண்டார் வைத்தி.
"நிதா இன்னைக்கு 10 மணிக்கு சார்ப்பா என் ஆபிஸ்க்கு வந்துரு graphic designing க்கு ஆள் எடுத்துட்டு இருக்காங்க நீ அதுல மாஸ்டர் டிகிரி வாங்கியிருக்கே அதனால வந்து இண்டர்வியூ அட்டன் பண்ற" என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.
நிதா சாமா சொல்வதற்கு இணங்க அவர் கம்பெனிக்கு சென்றாள்
இண்டர்வியூவில் இரண்டு , மூன்று ரவுண்ட் சென்றவள் இறுதியாக நேர்முகத் தேர்விற்காக ஒரு ரூமிற்குள் அனுப்பப் பட்டாள். அங்கு அவன் அமர்ந்திருந்தான் நடுவரில் ஒருவராக. அவனை பார்த்ததும் அவள் கண்கள் அவளை அறியாமல் ரசிக்க ஆரம்பித்தது .
வினய் எதிரில் அமர்ந்தவள் அவனை பார்த்துக் கொண்டே இருக்க,
"ப்ளீஸ்... பி சீட்டட்" என்று பிரசாத் கூறியவுடன் தான் அவளுக்கு நிகழ்காலம் உரைத்தது.
'நிதா அந்த கண்ண பார்க்காத! நீ நீயா இருக்க மாட்டே!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் அதன் பின் வினய் பக்கம் திரும்பவே யில்லை.
அவள் வந்ததில் இருந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த வினய் அவளை பார்வையால் ஆராய்ந்து கொண்டு இருந்தான்.
இறுதியில் நிதா தேர்ந்தேடுக்கப்பட பிரசாத் அவளிடம் திரும்பினார்
"மிஸ் நிதா!! இப்ப நாங்க புதுசா ஆரம்பிக்க போற boutique க்கு நீங்க டிசைனிங் பண்ணனும்... நீங்க தான் முதன்மை டிசைனர். "
"உங்களுக்கு ஹெட்டா என் மகன் இருப்பான் . பிளிஸ் செக்கவுட் வித் ஹிம் நாளையில் இருந்து உங்க வேலைய ஆரம்பிங்க" என்று கூறியவர் வினய்யிடம் திரும்பினார்
"ப்ளீஸ் கோ அஹேட் வித் ஹெர் வினய் என்று கூறிவிட்டு அவர் வெளியேற இவள் அவன் பக்கம் திரும்பினாள் .
அவள் திரும்பியதும் வினய் அவளை பார்த்தபடியே பேசினான்
"சீயூ டூமாரோ அட் 9 சார்ப்" என்று கூறியவன் வாசல் பக்கம் பார்க்க நிதா கால்கள் வேகமாக வாசல் பக்கம் விறைந்தது
"ச்ச்ச்... அப்ப்பபா.... கண்ணாலயே மிரட்டரானே!!" என்று கூறிய நிதா வேகமாக மூச்சினை வெளியே விட்டாள்.
*************
காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த பிரசாத் கண்களில் பட்டது அந்த செய்தி வேகமாக பேப்பரை எடுத்துக் கொண்டு வினய் அறைக்கு சென்றார் பிரசாத். அங்கே அவனும் அதை தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அதை வைத்து ஏதோ சிந்தனையில் இருந்தான். அவன் முன் நின்ற பிரசாத்
"என்ன இதெல்லாம் ? இதுல உன் பங்கு எதாவது இருக்கா ?" – பிரசாத்
"இல்லை ? " ஒன்றை வார்த்தையில் பதில் சொன்னான் அவன்.
"நோ ! நான் நம்ப மாட்டேன். நீ தான் இத பண்ணியிருக்க "– பிரசாத்
"ஓ ! டூ யூ ஹேவ் எனி எவிடன்ஸ்" – வினய்
"எவிடன்ஸ் ? யூ பிள... ... ! என் கிட்ட உன் விளையாட்ட காண்பிக்கிறியா ? அரை மணி நேரம் நீ பார்ட்டிலயே இல்லை .அதனால நீ அந்த நேரந்தான் இத பண்ணி இருக்க . உனக்கு தேவையானது தான் வீட்டுக்கே வருதே அப்புறம் நீ எதுக்கு அங்க போன, இது மட்டும் எதாவது பிரச்சனை ஆச்சு உன்ன கொன்றுவேன்டா" என்று பிரசாத் கூறிவிட்டு சென்று விட
வினய் இங்கு கோபத்தில் நின்று கொண்டிருந்தான்.
**********
இங்கு நிதாவும் அந்த செய்தியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே டிவியிலும் அந்த செய்தி ஒலிபரப்பானது.
அதில் காட்சிகள் காண்பிக்கப்பட்டது பிரபல பண்ணை ஒன்றில் பல ஆடுகள் கொடூரமான முறையில் செத்துக் கிடந்தன.
பண்ணை வீட்டின் உரிமையாளரை செய்தியாளர்
"என்ன நடந்ததுனு சொல்ல முடியுமா சார் ?" என்று கேட்க அவர் பின்வருமாறு கூறினார்.
"நான் பண்ணை வீட்டில் நல்லா தூங்கிட்டு இருந்தேன் சார் அப்ப . தீடீர்னு சத்தம் கேட்டது வந்து பார்த்தா இப்டி ஆடுகள் செத்துக் கிடந்தது."
"அங்க யாரையாவது பார்த்தீங்களா ?" – செய்தியாளர்
அவர் சற்று நேரம் யோசித்தார் . பின்பு "எதோ ஒரு கருப்பு உருவம் நிழலா தெரிஞ்சது ஆனால் என்னால சரியா பார்க்க முடியல ஒரே இருட்டா இருந்தது" என்று அவர் கூற
அத்துடன் அந்த செய்தி நிறைவு பெற்றது. இதை பார்த்துக் கொண்டிருந்த நிதா தன் மனதில் சொல்லிக் கொண்டாள்.
‘ நிதா அருமையான கேஸ் கிடைச்சுருக்கு விடாத இந்த கேஸ்அ மட்டும் நீ கண்டுபிடிச்சுட்டா பெரிய ரிப்போட்டர் ஆகலாம்' என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்
*************
பிரசாத் தன் ஆட்கள் கொண்டு இதனை செய்தவர் யார் என்று விசாரித்துக் கொண்டிருக்க அவருக்கு ஒரு போன் கால் வந்தது .
அவர் போனை காதுக்கு கொடுக்க எதிர்முனையில் சிரித்தார் தேவ் . அவர் சிரித்து முடித்ததும் ஒரு செய்தியை கூற பிரசாத் அதிர்ச்சி அடைந்தார் .
யட்சகனாக மாறுவான்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
ராட்சஸன்: 10
போனை வைத்த பிரசாத் டிரைவரை மறுத்துவிட்டு வேகமாக காரில் ஏறி அமர்ந்து. தானே காரை ஓட்டிச் சென்றவர் ஒரு இடத்தில் நிறுத்தினார். அங்கு கல்லறைகள் பல இருக்க அதில் ஒரு கல்லறையின் முன் நின்ற பிரசாத் அருகில் சுற்றிப் பார்க்க ஒரு மண்வெட்டி அவர் கண்களுக்குத் தெரிந்தது. அதை எடுத்து கொண்டு அந்த கல்லறையை தோண்டியவர் கண்களில் விழுந்தது அந்த சவப்பெட்டி.. சவப் பெட்டியை பார்த்தவர் பெட்டியின் மூடியை அருகில் இருந்த கல் கொண்டு அடித்து திறந்தார் .. திறந்தவர் அந்த பெட்டியை கண்டு சிலையாக நின்றார். அந்த பெட்டி வெறுமையாக காட்சி அளித்தது .
அப்போது போன் கால் வர பிரசாத் வேகமாக அதை எடுத்து காதிற்கு கொடுக்க எதிர்முனையில் சிரித்தார் தேவ் .
“என்ன பிரசாத் நீங்க ? நான் சொன்னதை நம்பாம திறந்து வேற பார்க்குறீங்க ?” – தேவ்
“தேவ் ! உன் எதிரி நான் தான எதுக்கு இப்ப அவன இதுக்குள்ள இழுக்குற? உன் ஆட்டத்த இதோட நிறுத்திக்க “
“பிரசாத் ! பிரசாத் ! என்ன பிரசாத் புரிஞ்சு தான் பேசுறீங்களா ? உங்களால எனக்கு தொழிலில் பல கோடி லாஸ் அத நான் சரி செய்ய வேண்டாமா ? இது நான் உங்களுக்கு வட்டியும் முதலுமா திருப்பி தரும் தருணம் . இப்ப தான என் ஆட்டத்தை ஆரம்பிச்சுருக்கேன் அதுக்குள்ள நிறுத்த சொன்னா எப்படி பிரசாத்? உங்க பலவீனம் என் பலம் பிரசாத். அத வச்சி இன்னும் நான் எவ்வளவு சாதிக்கணும் . மனிதனோட உணர்ச்சியில் விளையாடுற ஆட்டம் கூட நல்லாத் தான் இருக்கு பிரசாத்” என்று கூறி உரக்கச் சிரித்தார் தேவ்
“அப்ப அந்த நியூஸ் எல்லாம் உன் வேலை தானா” – பிரசாத்
“பரவாயில்லையே பிரசாத் கரெக்டா கண்டுபிடிச்சுட்ட . இதுமட்டுமில்ல பிரசாத் உனக்கு ஒரு குட் நியூஸ் வச்சிருக்கேன். அந்த செய்தி என்னனா ? ம்ம்ம் வெயிட் வெயிட் அந்த செய்தி சொல்லக் கூடாது கண்ணால காண்பிக்கனும் . அத நீ கண் கொண்டு பார்த்தா தான் எனக்கு கிக்கா இருக்கும். ஆனா ஒரே ஒரு குறை பிரசாத்! நீங்க அந்த வீடியோவை பார்த்ததும் எப்படி உணர்ச்சி வசப்படுறீங்கனு… என்னால நேரில் பார்க்க முடியாம போயிடுச்சு” என்று கூறி போனை வைத்த தேவ் ஒரு வீடியோவை அனுப்ப அதை பார்த்த பிரசாத்தின் கண்கள் கலங்கியது.
அதில் அமாவாசை இருட்டில் ஒரு உருவம் ஃபார்ம் ஹவுஸை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்க அந்த உருவத்தின் கையில் வி.பி என்ற எழுத்துகளை தாங்கிய பிரேஸ்லட் தெரிந்தது. அவன் ஃபார்ம் ஹவுஸில் உள்ளே நுழைந்து அங்கு இருந்த மாடுகளின் அருகில் சென்று ஏதோ செய்ய சற்று நேரத்தில் அவை ஒவ்வொன்றும் இறந்து விழுந்தன.
அதை பார்த்த பிரசாத் கல்லரையில் அருகே மடிந்து அமர்ந்தபடி
“வினய் ! மை சன் !” என்று ஓலமிட்டு கத்தினார் .
*******************************
நிதா இன்றோடு வேலைக்கு சேர்ந்து இரு வாரங்கள் சென்றுவிட்டன. அவன் ரூமிலேயே ஓரமாக அவளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அவள் அமர்ந்து டிசைன் பண்ணுவதும் அதை அவனிடம் காட்டி அப்ரூவல் வாங்கி மேற்கொண்டு அதை வடிவமைப்பதுமாக அவள் வேலை அவளுக்கு பழக்கமாகிவிட்டது .
ஆயினும் வினய்யை தான் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை . அவன் செயல்கள் அனைத்தும் அவளுக்கு வித்தியாசமாகபட்டது. அவன் செயல்கள் அதிவிரைவாகவும், முரண்பாடாகவும் அவளுக்குத் தெரிந்தது. அரைமணி நேரத்திற்கு ஒரு தடவை எதையோ குடிப்பதும் , கையில் ஏதோ ஒன்றை வைத்து அதை பார்த்து வெறிப்பதுமாக , அவன் அவளுக்கு ஒவ்வொரு நாளும் புதுமையாக தோன்றினான்
அன்றும் வழக்கம் போல கரெக்டான டைமில் ஆபிசிற்குள் நுழைந்து தன் கேபினுக்குள் நிதா நுழைய முற்பட சரியாக அதே நேரம் உள்ளே இருந்து வெளியே வந்தான் வினய்.
சரியாக அவன் மேல் மோதி நின்றாள் நிதா . மோதிய வேகத்தில் கீழே விழப் போனவளை பிடித்து நிறுத்திய வினய் அவளை பார்த்து முறைத்துக் கொண்டே
‘’ பார்த்து வர மாட்டியா ? எப்ப பாரு வந்து மோதிக்கிட்டு’’ என்று கத்திவிட்டு அவன் வெளியே சென்று விட நிதா அவன் சென்ற திசையையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் சட்டென்று தன்னை உலுக்கிக் கொண்டு
“நிதா நோ! டைவர்ட் ஆகாத ! அவன் கண்களை பார்க்காத !. பார்த்தா நீ நீயா இருக்க மாட்டே !” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட நிதா. அவளை அறியாமலேயே ராட்சஸன் என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
சற்று நேரத்தில் திரும்பி வந்தவன் தன் இருக்கையில் அமர அவன் முன் வந்து நின்றாள் நிதா
அவளை பார்த்ததும் எரிச்சல் அடைந்தவன்
“வாட் ?” என்று கத்த
பயத்தில் பற்கள் தந்தியடித்தபடியே அவனிடம் ஒரு பேப்பரை நீட்டினாள்
அவன் என்ன என்பது போல் பார்க்க
“சார் ! டிசைன்” - நிதா
“வச்சுட்டு போ !” என்று கூறியவன் வேறு பைலை பார்க்க முயல நிதா நின்று கொண்டே இருந்தாள்.
அவள் போகாமல் நிற்பதை கண்டு
“அதான் போக சொல்லிட்டேன்ல ! இப்ப என்ன ?” – வினய்
“சார் ! இந்த டிசைனை உடனை செக் பண்ணனும் இட்ஸ் அர்ஜெண்ட்” - நிதா
“வச்சுட்டு போ !” என்று குரலை உயர்த்தினான் வினய்
“சார் ! அது வந்து ... பிரசாத் சார் ! உடனே டிசைன் ரெடி பண்ணச் சொன்னாரு” - நிதா
பிரசாத் என்ற பெயரை கேட்டதும் அவன் முகம் கோபத்தில் சிவந்து அவன் பச்சை நிற ஹசல் கண்கள் இரத்த நிறமாக மாறத் தொடங்க அந்த கண்ணின் கருவிழிகள் வடிவம் மாறத் தொடங்க , தன் கைகளை மடக்கி தன்னை கட்டுக்குள் கொண்டு வர முயன்றவன் சட்டென்று வெளியேறினான் .
இதை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்த நிதாவிற்கு அவள் ரசித்த அவன் ஹசல் கண்கள் இப்போது அவளை பயமுறித்தியது. பயத்தில் முகம் வெளிறி நின்றாள் நிதா.
கல்லரையில் இருந்து நேராக தேவ்வின் இருப்பிடம் நோக்கிச் சென்றார் பிரசாத். தேவ் பிரசாத்தின் வரவை எதிர்நோக்கி காத்திருப்பது போல் வாயில் நின்று வரவேற்றார். தேவ்வை முறைத்துக் கொண்டே உள்ளே வந்த பிரசாத் தேவ்விடம் கத்துவதற்கு வாய் திறப்பதற்குள் தேவ் அவரை
“வாங்க பிரசாத்! உள்ளே போய் பேசலாம்…” என்று கூறியபடியே பிரசாத்தை ஒரு ரூமிற்குள் அழைத்துச் சென்றார் தேவ் .
உள்ளே சென்றது தான் தாமதம் பிரசாத் தேவ்விடம் கத்த ஆரம்பித்துவிட்டார்.
“தேவ் என்ன நினைச்சிட்டு இருக்க நீ ! அவன் இங்கே ?” – பிரசாத்
“என்ன பிரசாத் அவன பத்தி கேட்டா எனக்கு எப்படி தெரியும் ?” – தேவ்
“தேவ் டோன்ட் ஆக்ட் டூ ஸ்மார்ட்!!! ஐ வான்ட் டு டால்க் டு ஹிம் ரைட் நவ்... – பிரசாத்
இதை கேட்ட தேவ் சிரித்துக் கொண்டே
“என்ன பிரசாத் ஆர் யூ ஓகே ? மூலை ஏதும் குழம்பிப் போகலயே ? “– என்று தேவ் சொன்னது தான் தாமதம் தேவ்வின் சட்டையை பிடித்துவிட்டார் பிரசாத்.
“தேவ் நீ ரொம்ப பேசுற ? நான் ஏதும் உன்னை செய்றதுக்குள்ளே அவன் எங்கேனு சொல்லிடு” என்று பிரசாத் கூறிக் கொண்டிருக்க
“அவரை விடுங்க மிஸ்டர்.. விக்னபிரசாத்” என்ற குரல் பக்கவாட்டில் இருந்து கேட்க வேகமாக திரும்பினார் பிரசாத் . அங்கு முகமூடி அணிந்து ஒருவன் நின்று இருந்தான்.

யட்சகனாக மாறுவான்…
 

New Threads

Top Bottom