HoneyGeethan
Active member
- Messages
- 175
- Reaction score
- 169
- Points
- 43
யட்சகன் ராட்சஸனாக
ராட்சஸன் : 1
திரவங்கள் பல சூழ்ந்து இருக்க , குடுவைகள் பல அடுக்கிவைக்கப்பட்டிருக்க மேலே வெள்ளை கோட் மற்றும் கண்ணாடி அணிந்து கொண்டு அந்த மனிதர் எதையோ ஆராய்ந்து கொண்டிருக்க அவரை தேடி ஒருவன் வந்தான். வந்தவன் அவரிடம் ஏதோ சொல்ல அவர் முடியாது என்று மறுத்துக் கொண்டிருக்க அதன்பின் இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்தேறியது .இறுதியில் அவன் சொன்னதற்கு அவர் அரைமனத்துடன் சம்மதித்து ,ஒரு அறைக்குள் சென்று மறைந்தார்.
****************************************************
எங்கும் தூய்மையாக எதிலும் நேர்த்தியாக அந்த நகரமே விழா கோலம் பூண்டிருந்தது . கிருஸ்துமஸ் நாளை முன்னிட்டு வீதிகள் மற்றும் வீடுகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு லண்டன் நகரமே கோலாகலமாக இருக்க அந்த ஒரு வீடு மட்டும் இருள் சூழ்ந்திருந்தது.அந்த வீட்டின் உள்ளே ஒருவன் மட்டும் தனியாக அமர்ந்தபடி கைகளில் இருந்த கோப்பையில் உள்ள திரவத்தை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.
அவன் குடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்தார் .
யட்சா போதும் இன்னைக்கு குடிக்க வேண்டிய அளவு தாண்டிருச்சு .இன்னும் அதிகமா குடிச்சா விபரிதமாகிடும் .
போ ! போய் படு ! என்று அவர் கூற கோபத்தோடு கைகளில் இருந்த கோப்பையை தரையில் எறிந்தான் யட்சா என்று அவரால் அழைக்கப்படும் வினய்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அதே நேரம் லண்டனில் மற்றுமொரு வீட்டில் காதில் ஹேட் போனை மாட்டியபடி முட்டிவரை தொல தொலவென கால்சட்டையும் , மேலே ஒரு லூசான சட்டையும் அணிந்து கொண்டு ஹேட் போனில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலுக்கு ஏற்ப தலையை ஆட்டியபடியே ட்ரெயை கைகளில் ஏந்திக் கொண்டு ஒரு ரூமை நோக்கிச் சென்றார் லமி என அழைக்கப்படும் லஷ்மி வெங்கடாசலம். அது என்ன லமி ? அவங்களே சொல்வாங்க கேளுங்கமா .
அவர் ரூமில் நுழைய அங்கே படுக்கையில் குறுக்கும் நெடுக்குமாக படுத்துக் கிடந்தாள் ஒரு யுவதி . அவள் படுக்கையில் துயில் கொள்ளும் அழகு இருக்கே அப்பப்பா பூவில் வண்டு நுழைய பூ தன் இதழ்களை திறந்து வைத்து காத்திருப்பது போல் இருந்தது.
பொறுங்க ! நீங்க பாட்டுக்கு ஏதாவது கற்பனைக்கு போயிராதீங்க ! பக்கி வாய பிளந்துகிட்டு வாயில ஜொல்லுவிட்டுட்டு பேனு தூங்குதுங்க அத தான் நான் அப்டி சொன்னேன். கையில் துப்பரியும் புத்தகம் வேற .அநேகமா அம்மணி பெரிய துப்பரியும் நிபுணியா இருப்பாளோ ? வாங்க அவகிட்டயே கேட்போம் .
கையில் ட்ரெயுடன் வந்த லமி ட்ரெயை டேபிளில் வைத்துவிட்டு அதில் இருந்த செல்லை எடுத்து பாப் பாடலை ஒலிக்க விட்டு அவள் காதருகில் வைக்க அலறிக் கொண்டு எழுந்தாள் மனுநிதா.
எழுந்தவள் லமியை முறைத்தாள் .
” ஒப்வோ லமி இப்டி எழுப்பாதனு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன், பாரு என் இதய துடிப்பு துடிக்கிறது எனக்கே கேட்குது “ என்று கண்களை மூடியபடியே பேசியவள் தன் படுக்கைக்கு பக்கத்தில் இருந்த டேபிளில் இருந்த ஒரு டாலரை எடுத்து அதை திறக்க உள்ளே ஒரு சிறுவன் சிரித்துக் கொண்டிருந்தான். அதை தன் அருகில் வைத்து கண்களை திறந்த நிதா அவனை கண்டதும்
“குட் மார்னிங் டோலு '' என்று கூறிச் சிரிக்க ,
**********************************************************************
அதே நேரம் இங்கு கைகளில் ஒரு பொம்மை கைக்கடிகாரத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன் . அவன் கண்களில் வேட்டையாடத் துடிக்கும் வெறியிருந்தது. அந்த கடிகாரத்தை பார்த்ததும் அவன் உதடுகள் வார்த்தையை உதிர்த்தது .
“ உன்னை பார்த்த அடுத்த நொடி உன் வாழ்வு என் கைகளில் தான்டி டாலி “ என்று கூறியவன் கைகள் அந்த கடிகாரத்தை தன் கைக்களுக்குள் அடக்கியது .
கடிகாரம் அந்த கைகளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தது .கடிகாரத்திற்கே இந்த கதினா அப்ப டாலி என்ன கதியாவாளோ ???
யட்சகனாக மாறுவான்
ராட்சஸன் : 1
திரவங்கள் பல சூழ்ந்து இருக்க , குடுவைகள் பல அடுக்கிவைக்கப்பட்டிருக்க மேலே வெள்ளை கோட் மற்றும் கண்ணாடி அணிந்து கொண்டு அந்த மனிதர் எதையோ ஆராய்ந்து கொண்டிருக்க அவரை தேடி ஒருவன் வந்தான். வந்தவன் அவரிடம் ஏதோ சொல்ல அவர் முடியாது என்று மறுத்துக் கொண்டிருக்க அதன்பின் இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்தேறியது .இறுதியில் அவன் சொன்னதற்கு அவர் அரைமனத்துடன் சம்மதித்து ,ஒரு அறைக்குள் சென்று மறைந்தார்.
****************************************************
எங்கும் தூய்மையாக எதிலும் நேர்த்தியாக அந்த நகரமே விழா கோலம் பூண்டிருந்தது . கிருஸ்துமஸ் நாளை முன்னிட்டு வீதிகள் மற்றும் வீடுகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு லண்டன் நகரமே கோலாகலமாக இருக்க அந்த ஒரு வீடு மட்டும் இருள் சூழ்ந்திருந்தது.அந்த வீட்டின் உள்ளே ஒருவன் மட்டும் தனியாக அமர்ந்தபடி கைகளில் இருந்த கோப்பையில் உள்ள திரவத்தை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.
அவன் குடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்தார் .
யட்சா போதும் இன்னைக்கு குடிக்க வேண்டிய அளவு தாண்டிருச்சு .இன்னும் அதிகமா குடிச்சா விபரிதமாகிடும் .
போ ! போய் படு ! என்று அவர் கூற கோபத்தோடு கைகளில் இருந்த கோப்பையை தரையில் எறிந்தான் யட்சா என்று அவரால் அழைக்கப்படும் வினய்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அதே நேரம் லண்டனில் மற்றுமொரு வீட்டில் காதில் ஹேட் போனை மாட்டியபடி முட்டிவரை தொல தொலவென கால்சட்டையும் , மேலே ஒரு லூசான சட்டையும் அணிந்து கொண்டு ஹேட் போனில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலுக்கு ஏற்ப தலையை ஆட்டியபடியே ட்ரெயை கைகளில் ஏந்திக் கொண்டு ஒரு ரூமை நோக்கிச் சென்றார் லமி என அழைக்கப்படும் லஷ்மி வெங்கடாசலம். அது என்ன லமி ? அவங்களே சொல்வாங்க கேளுங்கமா .
அவர் ரூமில் நுழைய அங்கே படுக்கையில் குறுக்கும் நெடுக்குமாக படுத்துக் கிடந்தாள் ஒரு யுவதி . அவள் படுக்கையில் துயில் கொள்ளும் அழகு இருக்கே அப்பப்பா பூவில் வண்டு நுழைய பூ தன் இதழ்களை திறந்து வைத்து காத்திருப்பது போல் இருந்தது.
பொறுங்க ! நீங்க பாட்டுக்கு ஏதாவது கற்பனைக்கு போயிராதீங்க ! பக்கி வாய பிளந்துகிட்டு வாயில ஜொல்லுவிட்டுட்டு பேனு தூங்குதுங்க அத தான் நான் அப்டி சொன்னேன். கையில் துப்பரியும் புத்தகம் வேற .அநேகமா அம்மணி பெரிய துப்பரியும் நிபுணியா இருப்பாளோ ? வாங்க அவகிட்டயே கேட்போம் .
கையில் ட்ரெயுடன் வந்த லமி ட்ரெயை டேபிளில் வைத்துவிட்டு அதில் இருந்த செல்லை எடுத்து பாப் பாடலை ஒலிக்க விட்டு அவள் காதருகில் வைக்க அலறிக் கொண்டு எழுந்தாள் மனுநிதா.
எழுந்தவள் லமியை முறைத்தாள் .
” ஒப்வோ லமி இப்டி எழுப்பாதனு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன், பாரு என் இதய துடிப்பு துடிக்கிறது எனக்கே கேட்குது “ என்று கண்களை மூடியபடியே பேசியவள் தன் படுக்கைக்கு பக்கத்தில் இருந்த டேபிளில் இருந்த ஒரு டாலரை எடுத்து அதை திறக்க உள்ளே ஒரு சிறுவன் சிரித்துக் கொண்டிருந்தான். அதை தன் அருகில் வைத்து கண்களை திறந்த நிதா அவனை கண்டதும்
“குட் மார்னிங் டோலு '' என்று கூறிச் சிரிக்க ,
**********************************************************************
அதே நேரம் இங்கு கைகளில் ஒரு பொம்மை கைக்கடிகாரத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன் . அவன் கண்களில் வேட்டையாடத் துடிக்கும் வெறியிருந்தது. அந்த கடிகாரத்தை பார்த்ததும் அவன் உதடுகள் வார்த்தையை உதிர்த்தது .
“ உன்னை பார்த்த அடுத்த நொடி உன் வாழ்வு என் கைகளில் தான்டி டாலி “ என்று கூறியவன் கைகள் அந்த கடிகாரத்தை தன் கைக்களுக்குள் அடக்கியது .
கடிகாரம் அந்த கைகளுக்குள் நொறுங்கிக் கொண்டிருந்தது .கடிகாரத்திற்கே இந்த கதினா அப்ப டாலி என்ன கதியாவாளோ ???
யட்சகனாக மாறுவான்