HoneyGeethan
Active member
- Messages
- 175
- Reaction score
- 169
- Points
- 43
ராட்சஷன் 23
தேவ்வின் எதிரில் அமர்ந்து இருந்தான் மைக்கேல்சன். அவன் முன் பணக்கட்டுகளை அள்ளி வீசினார் தேவ்ஆனந்த் .
அதை எடுத்து ஒவ்வொன்றாக தன் கைகளில் எடுத்து அடுக்கியபடியே மைக்கேல்சன் தேவ்வை பார்த்து பேச ஆரம்பித்தான்.
"ஓ.. வாவ்! தேவ் சார்! வேலை முடிஞ்சும் பாதி பணம் தான் கொடுத்தார் மிஸ்டர் ப்ரசாத்! ஆனா நீங்க வேலை என்னனு சொல்லாமலேயே பணத்தை வாரி இறைக்கிறீங்க? ம்ம்ம் ... வேலை பெரிசா இருக்கும் போலயே சார்! அப்படி நீங்க என்ன வேலை என்கிட்ட எதிர்பார்க்குறீங்க?" – மைக்கேல்சன்
"வேலை எல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை மைக்கேல்! எனக்கு உன் மூளை தான் தேவை!" – தேவ்
"என் மூளையா? " என்று சற்று நேரம் யோசித்த மைக்கேல்சன்
"என் மூளை அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு சொந்தமாகாது தேவ் சார்! அதுக்கு இன்னும் பல ரூபாய் கட்டுகளை நீங்கள் அள்ளி வீசனும்!" – மைக்கேல்சன்
"பணம் நோட்டுகளை நான் அள்ளி வீசுறேன்! அதுக்கு பதிலா நீ எனக்கு ஒன்று செஞ்சாகணுமே!" – தேவ்
"புரியலையே சார்! சொல்ல வர விசயத்தை கொஞ்சம் தெளிவா சொல்லுங்க! நமக்கு இந்த சுற்றி வளைச்சு பேசுறது லா புரியாது?" – மைக்கேல்சன்
அதை கேட்டு சிரித்த தேவ் நேரடியாக விசயத்திற்கு வந்தார்
"நீ ப்ரசாத்க்கு செஞ்ச வேலை தான் எனக்கும் செய்யணும்! ஆனா கொஞ்சம் வித்தியாசமா?" – தேவ்
"நீங்க என்ன சொல்றீங்க தேவ் சார்! ப்ரசாத் சார்க்கு நான் அப்படி எதுவும் செய்யலையே!" – மைக்கேல்சன்
"ம்ம்ம் உன் நடிப்பு பிரமாதம் மைக்கேல்! ஆனால் பாரு உன்னை பற்றி எனக்கு எல்லாம் தெரியும்! ப்ரசாத்திற்கு நீ எவ்வளவு பெரிய வேலை செஞ்சு கொடுத்துட்டு வந்துருக்கேன்னும் தெரியும்! அதே தான் எனக்கும் செய்யணும்" என்று அவர் கூற மைக்கேல்சன் அவரை திகைப்பாக பார்த்தான்.
"உன் வேலை என்னனு நான் இன்னும் சொல்லலையே மைக்கேல்! வா.. என் கூட" என்று கூறிய தேவ் மைக்கேல்சன்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு வினய் சடலம் வைக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்த மைக்கேல் தேவ்வை குழப்பமாக பார்த்தபடி "சார்! இது..." - என்று மைக்கேல்சன் இழுக்க
"நீ நினைக்குறது சரிதான் மைக்கேல்! இது தான் வினய்யின் உண்மையான சடலம்" – தேவ்.
"ஓ! நோ! அப்ப அங்க இருக்குறது யாருடைய சடலம்?" – மைக்கேல்சன்.
"அது வினய் காரில் ஏற்றி கொலை செய்யப்பட்ட ஒருவனுடைய சடலம்!" – தேவ்.
"ஓ! காட்! இது எப்படி சாத்தியம்? பாடி எப்படி மாறிடுச்சு? இந்த விசயத்தை ப்ரசாத்திற்கு உடனடியா சொல்லியே ஆகணும்" என்று கூறியபடியே மைக்கேல்சன் ப்ரசாத்திற்கு வினய்யை பற்றிய விசயத்தை சொல்ல போனை எடுக்க தேவ் அவனை தடுத்தார்.
"அவசரப்படாதீங்க மைக்கேல்! ப்ரசாத்திற்கு சடலம் மாறுனது தெரியத்தான் போகுது!ஆனால் அது இப்ப இல்லை! நான் சொல்ற நேரத்தில்!" – தேவ்.
"ஏன் தேவ்? ஏன் அப்படி சொல்றீங்க?" - மைக்கேல்சன்.
அதற்கு பதிலாக சிறிது நேரம் சிரித்த தேவ் "சடலத்தை மாற்றச் சொன்னதே நான் தான் மைக்கேல்" என்று சொல்ல
மைக்கேல்சன் "சார்!..." என்று கூறியபடியே தன் உச்சக்கட்ட அதிர்ச்சியை வெளிபடுத்தினான்.
"நீங்க ஏன் இப்படி செய்யணும்? எப்படி இதை செய்தீங்க தேவ் சார்? - மைக்கேல்சன்
மைக்கேல்சன் அப்படி கேள்வி கேட்டதும் சடலத்தை மாற்றிய கதையை விளக்க ஆரம்பித்தார் தேவ்.
வினய் இறந்ததை அறிந்து கொண்ட தேவ் ப்ரசாத்தின் அழுகையை , ப்ரசாத் மகனை பிரிந்த வலியை தான் கண் குளிர காண வேண்டும் என்பதற்காக தன் செக்ரட்ரி அஜய்க்கு தொடர்பு கொண்டு கேட்க
அவன் அவரிடம் வினய்யை உயிரோட மாற்ற ப்ரசாத் மைக்கேல் உதவியால் முயன்று கொன்று இருப்பதாக தகவல் தெரிவித்தான். அதை கேள்விப்பட்ட தேவ் சற்று நேரம் யோசித்துவிட்டு அஜய்யிடம் பேசினார்
"அஜய் நான் சொல்றத கவனி.. எக்காரணம் கொண்டும் ப்ரசாத்திற்கு வினய்யின் சடலம் கிடைக்க கூடாது! நீ என்ன செய்ற வினய் பாடியை ப்ரசாத்திற்கு தெரியாமல் இங்க கொண்டு வர முயற்சி செய்ற. அதுக்கு பதிலா அவனை மாதிரியே ரிசம்பிள் ஆகுற மாதிரி எதாவது சடலம் கிடைக்குதா பாரு, சடலம் கிடைச்ச உடனே எனக்கு தெரிவிக்கணும்! கிடைச்சதும் ஜஸ்ட் வினய் பாடியை இடம் மாற்றி வச்சிடு" என்று தேவ் அஜய்யிடம் சொல்லிவிட்டு போனை வைக்க சற்று நேரத்தில் மறுபடியும் கால் செய்தான் அஜய்
"சார்! நம்ம வேலை ஈஸியா முடிஞ்சிரும் போல இருக்கு சார்! வினய் கார் ஏற்றி கொன்றவனும் வினய்யும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருக்காங்க! இரண்டு பேர் முகமும் சிதைஞ்சு போயிருக்கு! உற்று பார்த்தால் ஒழிய அவங்க இரண்டு பேரும் வேறு வேறுன்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. அவன் பேர் யவன் ன்னு சொன்னாங்க" என்று அவன் சொல்ல தேவ் அவனை பாராட்டினார்.
"வெல்டன் மைபாய்! அப்ப வேலை சுலபமாகிடுச்சு! வேகமாக யவன் சடலத்தையும் வினய் சடலத்தையும் மாற்றி வச்சுட்டு வினய் சடலத்தை இங்க கொண்டு வா! குயிக்!" என்று தேவ் சொல்ல அஜய் அவர் சொன்னதை செய்யச் சென்றான்.
பூங்குன்றன் யவன் பாடியை வாங்க போலீஸிடம் பார்மாலிட்டிஸ் பேசிக் கொண்டிருக்க அவருக்கு தெரியாமல் இங்கு பாடி மாற்றப்பட்டது.
இதை அறியாத பூங்குன்றன் யவனுக்கு பதில் வினய்யின் சடலத்தை மாற்றி வாங்கிக் கொண்டு சென்று வினய்க்கு இறுதி காரியங்களை செய்து அவனை புதைத்துவிட்டு வந்தார்.
அவர் சென்றதும் வினய்யை புதைத்த இடத்தை தோண்டி வினய்யின் சடலத்தை வெளியே எடுத்து தேவ்வின் இடத்திற்கு அதை கொண்டு வந்தனர் தேவ்வின் ஆட்கள்.
இதை தேவ் சொல்லி முடிக்க மைக்கேல்சன் அதை கேட்டு எச்சில் விழுங்கினான்.
அதை பார்த்த தேவ் சிரித்தபடி மேலே தொடர்ந்தார்.
"எதற்காக இது எல்லாம் செய்றேன்னு கேட்டலே!" - தேவ்.
அதற்கு மைக்கேல்சன் 'ஆம்' என்று தலையசைக்க தேவ் பழிவெறியோடு பேசினார் "எனக்கு ப்ரசாத் உயிரோட தினம் தினம் சாகணும்! தன் மகனை நினைச்சு அவன் தினமும் நரக வேதனை அனுபவிக்கணும்!" தேவ் மேலும் தொடர்ந்து பேசினார் "ப்ரசாத்தின் மகன் சாத்தானா மாறணும்! மனிதர்களை கொல்லும் அரக்கனா மாறணும்! அதை பார்த்து ப்ரசாத் தினமும் கண்ணீர் வடிக்கணும்".
அதற்கு மைக்கேல்சன் புரியாமல் அவரை பார்க்க "ஓ! அதற்கு நான் என்ன செய்ய முடியும் தேவ் சார்!" – மைக்கேல்சன்.
"நீ தான் எனக்கு வினய்யை அரக்கனா மாற்ற உதவி செய்யப் போற.." என்று கூறிய தேவ் வெளியே சென்று விட்டு உள்ளே வர அவரது கைகளில் ஒரு கவர் இருந்தது. அதை மைக்கேலிடம் கொடுத்தவர்.
"பிரிச்சு பார்! நீ என்ன செய்யணும்னு உனக்கே புரியும்!" என்று தேவ் சொல்ல அந்த கவரை பிரித்த மைக்கேல் அதில் இருந்ததை பார்த்து அதிர்ந்தான்.
"ஓ! நோ தேவ்! பகைக்காக இது எல்லாம் செய்றது பாவம்! வேண்டாம் தேவ் சார்!" – மைக்கேல்சன்.
"பணத்துக்காக எதுவா இருந்தாலும் செய்ய ரெடியாக இருக்கும் உன் வாயில் இருந்து பாவம்! புண்ணியம் ன்ற வார்த்தை எல்லாம் வருது மைக்கேல்! ஆச்சரியமா இருக்கு!" – தேவ்.
"நான் பணத்துக்காக எதுவேனா செய்றவன் தான் சார்! ஆனா ஒருவனை ஓநாய் மனிதனா மாற்றுவது பெரிய பாவம்! அவன் மனிதர்களை வேட்டை ஆடுறவன்! அவன் எழுந்தா உலகம் தாங்காது!" – மைக்கேல்சன்.
"உன் கிட்ட உலகத்தை பற்றிய லெட்சர் கேட்க வரவில்லை நான்! நீ இப்ப நான் சொல்றத செய்ற! இல்லை உன்னையும் வினய்க்கு ஜோடியா மாற்ற வேறு ஒரு ஆளை நான் பிடிக்க வேண்டி இருக்கும் மைக்கேல்!" என்று தேவ் கத்த மைக்கேல்சன் பயத்தில் அவர் சொல்வதை செய்ய துணிந்தான்.
"ம்ம்ம்... சீக்கிரம் வேலையை ஆரம்பி மைக்கேல்! ப்ரசாத்திற்கு சடலம் மாறிய விசயம் தெரியுறதுக்கு முன்னாடி வினய்யின் உடல் ஓநாய் மனிதனா மாறுவதற்கு வழி செய்யணும்! ப்ரசாத் வினய் பாடியை தேடி வரதுக்கு முன்னாடி எல்லாம் முடிஞ்சிருக்கணும்! பூங்குன்றன் கிட்ட ப்ரசாத் போய் பேசி அவன் வினய்யை பாக்குறதுக்குள்ள நம்ம வேலை பக்காவா முடிஞ்சிருக்கணும்" என்று தேவ் கூற மைக்கேல் அதன் படி செய்ய தன் கைகளில் உரையை மாற்றிவிட்டு அந்த கவரை பிரித்து அதில் இருந்த ஓநாயின் தோலை வெளியே எடுத்தான்.
அதை வினய்யின் மேல் போர்த்தப்பட அதை அடுத்து தேவ்வும் மைக்கேலும் ரூமை விட்டு வெளியே வந்தனர்.
"மைக்கேல்! வினய் மேல் போர்த்தப்பட்ட அந்த ஓநாய்யின் தோல் அவன் உடம்பில் ரியாக்ட் பண்ணி அவன் ஓநாய் மனிதனா மாற எவ்வளவு நாள் ஆகும்!" – தேவ்.
"எப்படியும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகும் சார்! உறுதியா சொல்ல முடியாது! வெம்பையர் பற்றி தான் ஆராய்ச்சி பண்ணி இருக்கேன்! ஓநாய் மனிதன் பற்றி தெரியாது! வெம்பையருக்கு பிடிக்காத எதிரி தான் ஓநாய் மனிதன்! ஓநாய்யின் தோள் போர்த்தபட்ட ஒரு மனிதன் கொஞ்சம் கொஞ்சமா ஓநாய்யாக மாறுவான்னு தெரியும்! ஆனால் இப்ப தான் நேரடியாக பார்க்கப் போறேன்! ஆனா சார்! இது ரொம்ப பாவம் சார்!" – மைக்கேல்சன்.
"அப்படியா! இருந்துட்டு போகட்டும்! என் பையனை கொன்னவன் நிம்மதியா வாழக் கூடாது! இந்த தேவ்வை பகைச்சிக்கிட்டா என்ன நடக்கும்னு அந்த ப்ரசாத்திற்கு புரியட்டும்!" – தேவ்.
அதற்கு மைக்கேல்சன் ஏதோ சொல்ல வர தேவ் அவனை இடைமறித்தார்.
"மைக்கேல் தேவை இல்லாத பேச்சு எதற்கு விசயத்திற்கு வா! அவன் ஓநாய் மனிதனா மாறிட்டான்னு நாம் எப்படி தெரிஞ்சுக்குறது! – தேவ்
"சார்! அவன் ஓநாய் மனிதனா மாறிட்டா அவன் உடம்பு முழுவதும் முடிகள் முளைக்கும். அந்த முடிகள் அவன் புதைத்த இடத்தில் பரவலா கிடைக்கும் . அவன் காலடி தடம் ஒரு ஓநாய்யை ஒத்து இருக்கும்! அதுமட்டுமல்ல அவன் சாதாரண மனிதர்களோட சாதாரண மனிதனா இருந்தாலும் ஒவ்வொரு பெளர்ணமி இரவிலும் அவன் ஓநாய் மனிதனா உருமாறுவான். அப்படி உருமாறிட்டா அவன் அந்த இரவுகளில் அவன் கண்களில் படுற ஜந்துகளில் இருந்து மனிதர்களை வரை வேட்டையாடுவான்." – மைக்கேல்சன்.
ம்ம்ம் குட் இன்டிரஸ்டிங் மைக்கேல்! வினய் வேட்டை ஆடப்போறத பார்க்க நான் ஆவலா இருக்கேன் மைக்கேல் – தேவ்.
சார்! உங்களுக்கு விசயத்தோட சீரியஸ்னஸ் புரியல! அவன் உங்களை கூட வேட்டை யாட தயங்க மாட்டான்! – மைக்கேல்சன்.
"அதை நான் பார்த்துக்குறேன் மைக்கேல்! பணம் தேவையானதை எடுத்துக்கோங்க! இந்த விசயம் யாருக்கும் தெரிய வேண்டாம்! யாருக்காவது தெரிஞ்சது நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்று தேவ் மைக்கேல்சன்னை மிரட்டி அனுப்பி வைத்தார்.
*******
இங்கு விஜயனிடம் ப்ரசாத் பேசிக் கொண்டிருந்தார்
"விஜயன் இது என் பையன் கிடையாது!"– ப்ரசாத்.
"என்ன சொல்றீங்க ப்ரசாத்!" – விஜயன்.
"ஆமா விஜயன்! எங்கேயோ தப்பு நடந்து இருக்கு!" என்று கூறியபடி வெளியே வந்த ப்ரசாத் தன் ஆட்களை அழைத்தார்.
அவர்கள் வந்தவுடன் கோபமாக அவர்களிடம் பேச ஆரம்பித்தார் ப்ரசாத் "வினய் சடலத்தை கொண்டு வரச் சொன்னா? என்னடா பண்ணி வச்சி இருக்கீங்க? இது வினய் இல்லைடா! வேறு ஒருவனுடைய சடலம்? இவன் எப்படி இங்கே வந்தான்.?" – ப்ரசாத்.
"நாங்க வினய் சடலம் கேட்ட போது இத தான் சார் கொடுத்தாங்க? எங்களுக்கு எப்படி இவன் இங்க வந்தான்னு தெரியாது சார்!" – அடியாள்.
அதை கேட்டு கோபம் கொண்ட ப்ரசாத் "யூ ராஸ்கல்!" என்று அவனை அறைந்தார்.
"என்னடா பேசிட்டு இருக்க! என் மகன் சடலத்தை உடனே தேடி கோண்டு வாங்கடா!" என்று கூறி அவர்களை அனுப்பி வைத்த ப்ரசாத் தன் தலையில் கை வைத்தபடியே அமர்ந்துவிட்டார்.
அந்த அடியாள் மேலும் எதோ சொல்ல வர அவர்கள் நிற்பதை பார்த்த ப்ரசாத் "நீங்கள் இன்னும் போகலயாடா!" என்று அந்த அடியாட்களை பார்த்து கத்த , அவர்கள் பயத்தில் அங்கிருந்து சென்றனர்.
அவர்கள் சென்றதும் "வினய்! மை சன்!" என்று தரையில் அமர்ந்து அழுதார் ப்ரசாத்.
அவர் அழுவதை பார்த்த விஜயன் அவர் அருகில் வந்தார்.
"மிஸ்டர். ப்ரசாத்! நடப்பதெல்லாம் நன்மைக்கே! ஜஸ்ட் லெட் யூவர் சன் இன் பீஸ்! அவனுக்கு இந்த நரக வாழ்க்கை வேண்டாம் ப்ரசாத்" – விஜயன்.
"அப்ப இவனை என்ன பண்றது விஜயன்! வெம்பையர் ரத்தம் அவனோட உடம்பில் இந்நேரம் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கும்! அவன் கொஞ்சம் கொஞ்சமா வெம்பையராக ஆக மாறிட்டு இருப்பான்" – ப்ரசாத்.
"ம்ம்ம்... எனக்கு உங்க நிலைமை புரியுது ப்ரசாத்! ஆனால் நடந்து முடிந்த விசயங்களை பேசி என்ன ஆகப் போகுது! நடந்து முடிந்த விசயத்தை நம்மால் மாற்ற முடியாது! இனி நடக்கப் போறதை பற்றி யோசிங்க ப்ரசாத்! சில விசயங்களை ஏற்க நம்மளை நாம் தயார் படுத்தி தான் ஆகணும்! இப்ப நம்மகிட்ட ஒரே வழி உங்க சன்னை புதைச்சிட்டு அவன் சாவை நீங்க ஏத்துக்குறதுதான்! இவனையும் மனிதனா மாற்ற வழி பாருங்க ப்ரசாத்! உலக நியதியை மாற்ற முயற்சி செய்தால் நாம் தான் அதன் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்!" – விஜயன்
"இவனை மனிதனாக மாற்ற என்ன பண்ணனும்! இவன் எழுந்தா இவன் என்கிட்ட கேட்குற கேள்விக்கு இவனுக்கு நான் என்ன பதில் சொல்றது விஜயன்!" - ப்ரசாத்!
"இந்த பிரச்சனைக்கு நான் ஒரு நல்ல தீர்வோட வர்றேன் ப்ரசாத்! இவனை மனிதனா மாற்ற நான் எதாவது வழி கிடைக்குமான்னு முயற்சி செய்றேன்! எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க ப்ரசாத்!" என்று விஜயன் கூறி அவரை சமாதானப்படுத்திவிட்டுச் செல்ல
இங்கு ப்ரசாத்தும் தன்னை தேற்றிக் கொண்டு யவன் விழிப்பதற்காக காத்திருந்தார். இடையில் வினய்யின் சடலத்தை தேட முயற்சியும் செய்து கொண்டிருந்தார்.
*******
அந்த ரூமின் உள்ளே இருட்டாக இருக்க தன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடியே உள்ளே சென்ற மைக்கேல்சன் வினய்யின் சடலத்தின் மேல் அவன் உடம்பு கெடாமல் இருக்க சில திரவங்களை தெளித்தான். பின் உடலின் மேல் இரத்த துளிகளை தெளித்தான்.
அதன் பின் அவன் சடலத்தை ஓநாய்யின் தோல் கொண்டு போர்த்திவிட்டு, அதை தொடர்ந்து அவன் சடலத்தின் மேல் சில செடிகளை வைத்து அவன் முகத்தை மூடினான் மைக்கேல்சன்.
சற்று முன்னர் வினய்யின் சடலத்தின் அருகில் மைக்கேல்சன் செய்த விசயங்கள் ஒவ்வொன்றையும் தன் ரூமில் உள்ள கேமிரா மூலம் ரெக்காட் செய்து அதை பார்த்து ரசித்து கொண்டிருந்தார் தேவ்!
'ப்ரசாத் என் வேலையை வெற்றிகரமா முடிச்சிட்டேன்' என்று தனக்குள் கூறியவர் தன் செக்ரட்ரி அஜய்யை போனில் அழைத்தார்.
"என்ன அஜய்! ப்ரசாத்திற்கு பாடி மாறிய விசயம் தெரிய ஆரம்பிச்சிருச்சா!" – தேவ்
"ஆமா! சார்! அவங்க அடியாட்கள் வினய் சடலத்தை தேடிட்டு இருக்காங்க" – அஜய்
"குட்! நீ இப்ப என்ன பண்ற வினய்யின் சடலத்தை பூங்குன்றன் புதைத்த இடத்திலேயே சவப்பெட்டியோட புதைச்சிடுற! அதுமட்டுமில்ல அங்க என்ன நடக்குதுனு எனக்கு தகவல் சொல்லிட்டே இருக்க" என்று தேவ் சொல்ல அஜய் தேவ் சொல்லியபடியே வினய்யின் சடலத்தை புதைத்துவிட்டு வந்தான்.
அங்கு ப்ரசாத்தின் ஆட்கள் மருத்துவமனையில் விசாரித்து பின் அங்கங்கே விசாரித்து வினய்யின் சடலம் பூங்குன்றனிடம் இருக்கலாம் என ப்ரசாத்திற்கு தகவல் கொடுக்க ப்ரசாத் அங்கு விரைந்தார்.
திடீரென்று ப்ரசாத்தை தன் வீட்டில் பார்த்த பூங்குன்றன் திகைத்தார் .
ஆனால் ப்ரசாத் அதை கண்டுகொள்ளாமல் சாதாரணமாக உள்ளே வந்து அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடியே பூங்குன்றனிடம் பேச ஆரம்பித்தார்.
"என்ன பூங்குன்றன்! வீட்டிற்கு வந்தவங்களை வாங்கனு கேட்காம திகைச்சு போய் நிக்குறீங்க?" – ப்ரசாத்
ப்ரசாத் அப்படி கேட்டதும் திகைத்த பூங்குன்றன் "வா...ங்க சார்!" என்று தடுமாற்றத்தோடு சொல்ல அதை கவனித்த ப்ரசாத் மேலே தொடர்ந்தார்.
"ஓகே பூங்குன்றன்! சுற்றி வளைக்காம நேரா விசயத்திற்கு வரேன்!" என்று ஆரம்பித்த ப்ரசாத் வினய் மற்றும் யவனின் சடலம் மாறியது அதனை அடுத்து தான் யவனை வெம்பையராக மாற்றியது. அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்ல அதை கேட்ட பூங்குன்றனுக்கு மூச்சு வாங்கியது.
"சார்! என் பையனுக்கு நீங்க பெரிய துரோகம் பண்ணிட்டீங்க" – பூங்குன்றன்
"யா! ஐ நோ! ஆனால் எதுவும் நான் தெரிஞ்சு செய்யல! என்னை அறியாம நடந்தது" என்று மேற்கொண்டு பேச முயன்ற ப்ரசாத் தன் பேச்சை நிறுத்திக் கொண்டு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு தன்னை சமன் செய்து கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்
"பழசை பற்றி பேசி என்ன ஆகப் போகுது பூங்குன்றன். நான் வந்த விசயத்தை உங்களுக்கு சொல்லாம வேற விசயங்களை பேசிட்டு இருக்கேன் பாருங்க
நான் இங்க வந்ததே உங்களை உங்க மகன் கிட்ட கூட்டிட்டு போகத்தான்! அதுமட்டுமில்லை நான் என் பையனின் சடலத்திற்கு இறுதி மரியாதை செலுத்தனும்" என்று ப்ரசாத் கூற
பூங்குன்றன் அவரை வினய் புதைத்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு யாருமற்ற இடத்தில் தன் மகன் சாதாரணமாக புதைக்கப்பட்டிருக்க அதை பார்த்த ப்ரசாத் கண்ணீர் வடித்தபடியே பேசினார் "உன் சடலத்தை கூட நான் என் கையால் புதைக்க முடியாத பாவி ஆகிட்டேன்டா நான்!" என்று கூறி தன் கையில் இருந்த பூச்சண்டை அவன் கல்லறையில் வைத்துவிட்டு சென்றார்.
அப்போது பூங்குன்றன் அருகில் வர அவரை பார்த்த ப்ரசாத் "யவன் சடலத்தையும் அடக்கம் செய்ய நான் ஏற்பாடு செய்றேன் பூங்குன்றன்" என்று கூறிய ப்ரசாத் இங்கு பேசிக் கொண்டிருக்க விஜயன் போன் செய்தார். அதை எடுத்து பேசிய ப்ரசாத் சந்தோசத்தில் மிதந்தார்
"ஓ! குட் விஜயன்! நான் அதற்கு ஏற்பாடு பண்றேன்!" என்று அவரிடம் கூறிய ப்ரசாத் பூங்குன்றனிடம் திரும்பினார் .
"ஓகே பூங்குன்றன்! என் சன் புதைச்சது புதைச்சதாகவே இருக்கட்டும்! நான் யவன் சடலத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு பண்றேன்! வெளியில் இருந்து பாக்குறவங்களுக்கு அவன் வினய்யாகவே இருக்கட்டும்" என்று கூறிய ப்ரசாத் அபேய்யை அழைத்தார்
"அபேய்! வினய் இறந்து போனதை தெரிவிக்க ஏற்பாடு பண்ணு! அவன் இறுதி சடங்குகள் முடிஞ்சதும் எல்லார்க்கும் நாம தெரியப்படுத்தலாம்" என்று ப்ரசாத் கூற அதற்கு அபேய் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
விஜயன் சொன்னதை அடுத்து யவனின் ரூமின் உள்ளே ஒரு சில்வர்சிலுவையை ஏந்திச் சென்ற ப்ரசாத் அவன் சவப்பெட்டியின் மேல் சிலுவையை வைத்துவிட்டு தன் ஆட்கள் கொண்டு அந்த பெட்டியை தூக்கிச் சென்றார்.
அந்த சவப்பெட்டியை ஒரு இடத்தில் புதைத்து, அவன் கல்லரையின் மேல் வினய் ப்ரசாத் என்ற பெயர் பொறிக்கப்பட்டது. மேலும் அந்த இடத்தில் புனித நீர் தெளிக்கப்பட இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் பூங்குன்றன்.
யவனை புதைத்துவிட்டு வந்த ப்ரசாத் தன்னை தேற்றிக் கொண்டு பூங்குன்றனிடம் திரும்பினார்.
"ஓகே பூங்குன்றன்! என்னால் உங்க பையனுக்கு இது மட்டும் தான் செய்ய முடிந்தது! இந்த ஏற்பாடுகளுக்கு மேல் அவன் வெம்பையரா மாறி வெளி வர முடியாது!" – ப்ரசாத்
அதை கேட்ட பூங்குன்றன் அதை ஏற்று தன் வீட்டிற்குச் சென்றார்.
இங்கு அபேய்க்கு போன் செய்தார் ப்ரசாத் "அபேய்! நான் சொன்ன மாதிரி பிரஸ் மீட்டிங்கு நாளை ஏற்பாடு செய்! நம்ம வினய் இறந்த விசயங்களை சொல்லியாகணும்" என்று அவனிடம் பேசிவிட்டு திரும்பிய ப்ரசாத் நாட்காட்டியை பார்க்க அதிர்ந்தார்.
மைக்கேல்சன் கூறிய ஒரு மாத காலம் முடிந்திருந்தது. அதை கண்ட ப்ரசாத்திற்கு பயத்தில் முகம் வேர்த்தது.
வினய்யின் இறப்பு! அதை தொடர்ந்து சடலம் மாற்றப்பட்டது! வினய்யின் சடலம் தேடியது என்று சுமார் ஒரு மாத காலம் நிறைவு பெற்று இருப்பதை அப்போது தான் உணர்ந்தார் ப்ரசாத் வினய்யின் சடலத்தை தேடி அலைஞ்சதில் யவனை பற்றி மறந்து போயிட்டேன்! விஜயன் சொன்ன மாதிரி செஞ்சதால் அவன் அந்த சிலுவையையும், நீரையும் தாண்டி வர முடியாது என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு படுக்கைக்கு சென்ற ப்ரசாத் தூங்க முயற்சிக்க மணி 12 ஆனதை பறைசாற்றும் விதமாக கடிகாரத்தில் மணியடிக்க திடீரென்று எழுந்த ப்ரசாத் தண்ணீர் குடிக்க அருகில் கை வைக்க அவர் எதிரில் இருட்டில் ஒரு உருவம் மங்கலாக தெரிந்தது.
அதனை அடுத்து தன் அருகில் இருந்த லைட்டை ப்ரசாத் போட அவர் எதிரில் நின்றது அது. அதை பார்த்த ப்ரசாத் "நோ!" என்று கத்தினார்.
தேவ்வின் எதிரில் அமர்ந்து இருந்தான் மைக்கேல்சன். அவன் முன் பணக்கட்டுகளை அள்ளி வீசினார் தேவ்ஆனந்த் .
அதை எடுத்து ஒவ்வொன்றாக தன் கைகளில் எடுத்து அடுக்கியபடியே மைக்கேல்சன் தேவ்வை பார்த்து பேச ஆரம்பித்தான்.
"ஓ.. வாவ்! தேவ் சார்! வேலை முடிஞ்சும் பாதி பணம் தான் கொடுத்தார் மிஸ்டர் ப்ரசாத்! ஆனா நீங்க வேலை என்னனு சொல்லாமலேயே பணத்தை வாரி இறைக்கிறீங்க? ம்ம்ம் ... வேலை பெரிசா இருக்கும் போலயே சார்! அப்படி நீங்க என்ன வேலை என்கிட்ட எதிர்பார்க்குறீங்க?" – மைக்கேல்சன்
"வேலை எல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை மைக்கேல்! எனக்கு உன் மூளை தான் தேவை!" – தேவ்
"என் மூளையா? " என்று சற்று நேரம் யோசித்த மைக்கேல்சன்
"என் மூளை அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு சொந்தமாகாது தேவ் சார்! அதுக்கு இன்னும் பல ரூபாய் கட்டுகளை நீங்கள் அள்ளி வீசனும்!" – மைக்கேல்சன்
"பணம் நோட்டுகளை நான் அள்ளி வீசுறேன்! அதுக்கு பதிலா நீ எனக்கு ஒன்று செஞ்சாகணுமே!" – தேவ்
"புரியலையே சார்! சொல்ல வர விசயத்தை கொஞ்சம் தெளிவா சொல்லுங்க! நமக்கு இந்த சுற்றி வளைச்சு பேசுறது லா புரியாது?" – மைக்கேல்சன்
அதை கேட்டு சிரித்த தேவ் நேரடியாக விசயத்திற்கு வந்தார்
"நீ ப்ரசாத்க்கு செஞ்ச வேலை தான் எனக்கும் செய்யணும்! ஆனா கொஞ்சம் வித்தியாசமா?" – தேவ்
"நீங்க என்ன சொல்றீங்க தேவ் சார்! ப்ரசாத் சார்க்கு நான் அப்படி எதுவும் செய்யலையே!" – மைக்கேல்சன்
"ம்ம்ம் உன் நடிப்பு பிரமாதம் மைக்கேல்! ஆனால் பாரு உன்னை பற்றி எனக்கு எல்லாம் தெரியும்! ப்ரசாத்திற்கு நீ எவ்வளவு பெரிய வேலை செஞ்சு கொடுத்துட்டு வந்துருக்கேன்னும் தெரியும்! அதே தான் எனக்கும் செய்யணும்" என்று அவர் கூற மைக்கேல்சன் அவரை திகைப்பாக பார்த்தான்.
"உன் வேலை என்னனு நான் இன்னும் சொல்லலையே மைக்கேல்! வா.. என் கூட" என்று கூறிய தேவ் மைக்கேல்சன்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு வினய் சடலம் வைக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்த மைக்கேல் தேவ்வை குழப்பமாக பார்த்தபடி "சார்! இது..." - என்று மைக்கேல்சன் இழுக்க
"நீ நினைக்குறது சரிதான் மைக்கேல்! இது தான் வினய்யின் உண்மையான சடலம்" – தேவ்.
"ஓ! நோ! அப்ப அங்க இருக்குறது யாருடைய சடலம்?" – மைக்கேல்சன்.
"அது வினய் காரில் ஏற்றி கொலை செய்யப்பட்ட ஒருவனுடைய சடலம்!" – தேவ்.
"ஓ! காட்! இது எப்படி சாத்தியம்? பாடி எப்படி மாறிடுச்சு? இந்த விசயத்தை ப்ரசாத்திற்கு உடனடியா சொல்லியே ஆகணும்" என்று கூறியபடியே மைக்கேல்சன் ப்ரசாத்திற்கு வினய்யை பற்றிய விசயத்தை சொல்ல போனை எடுக்க தேவ் அவனை தடுத்தார்.
"அவசரப்படாதீங்க மைக்கேல்! ப்ரசாத்திற்கு சடலம் மாறுனது தெரியத்தான் போகுது!ஆனால் அது இப்ப இல்லை! நான் சொல்ற நேரத்தில்!" – தேவ்.
"ஏன் தேவ்? ஏன் அப்படி சொல்றீங்க?" - மைக்கேல்சன்.
அதற்கு பதிலாக சிறிது நேரம் சிரித்த தேவ் "சடலத்தை மாற்றச் சொன்னதே நான் தான் மைக்கேல்" என்று சொல்ல
மைக்கேல்சன் "சார்!..." என்று கூறியபடியே தன் உச்சக்கட்ட அதிர்ச்சியை வெளிபடுத்தினான்.
"நீங்க ஏன் இப்படி செய்யணும்? எப்படி இதை செய்தீங்க தேவ் சார்? - மைக்கேல்சன்
மைக்கேல்சன் அப்படி கேள்வி கேட்டதும் சடலத்தை மாற்றிய கதையை விளக்க ஆரம்பித்தார் தேவ்.
வினய் இறந்ததை அறிந்து கொண்ட தேவ் ப்ரசாத்தின் அழுகையை , ப்ரசாத் மகனை பிரிந்த வலியை தான் கண் குளிர காண வேண்டும் என்பதற்காக தன் செக்ரட்ரி அஜய்க்கு தொடர்பு கொண்டு கேட்க
அவன் அவரிடம் வினய்யை உயிரோட மாற்ற ப்ரசாத் மைக்கேல் உதவியால் முயன்று கொன்று இருப்பதாக தகவல் தெரிவித்தான். அதை கேள்விப்பட்ட தேவ் சற்று நேரம் யோசித்துவிட்டு அஜய்யிடம் பேசினார்
"அஜய் நான் சொல்றத கவனி.. எக்காரணம் கொண்டும் ப்ரசாத்திற்கு வினய்யின் சடலம் கிடைக்க கூடாது! நீ என்ன செய்ற வினய் பாடியை ப்ரசாத்திற்கு தெரியாமல் இங்க கொண்டு வர முயற்சி செய்ற. அதுக்கு பதிலா அவனை மாதிரியே ரிசம்பிள் ஆகுற மாதிரி எதாவது சடலம் கிடைக்குதா பாரு, சடலம் கிடைச்ச உடனே எனக்கு தெரிவிக்கணும்! கிடைச்சதும் ஜஸ்ட் வினய் பாடியை இடம் மாற்றி வச்சிடு" என்று தேவ் அஜய்யிடம் சொல்லிவிட்டு போனை வைக்க சற்று நேரத்தில் மறுபடியும் கால் செய்தான் அஜய்
"சார்! நம்ம வேலை ஈஸியா முடிஞ்சிரும் போல இருக்கு சார்! வினய் கார் ஏற்றி கொன்றவனும் வினய்யும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருக்காங்க! இரண்டு பேர் முகமும் சிதைஞ்சு போயிருக்கு! உற்று பார்த்தால் ஒழிய அவங்க இரண்டு பேரும் வேறு வேறுன்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. அவன் பேர் யவன் ன்னு சொன்னாங்க" என்று அவன் சொல்ல தேவ் அவனை பாராட்டினார்.
"வெல்டன் மைபாய்! அப்ப வேலை சுலபமாகிடுச்சு! வேகமாக யவன் சடலத்தையும் வினய் சடலத்தையும் மாற்றி வச்சுட்டு வினய் சடலத்தை இங்க கொண்டு வா! குயிக்!" என்று தேவ் சொல்ல அஜய் அவர் சொன்னதை செய்யச் சென்றான்.
பூங்குன்றன் யவன் பாடியை வாங்க போலீஸிடம் பார்மாலிட்டிஸ் பேசிக் கொண்டிருக்க அவருக்கு தெரியாமல் இங்கு பாடி மாற்றப்பட்டது.
இதை அறியாத பூங்குன்றன் யவனுக்கு பதில் வினய்யின் சடலத்தை மாற்றி வாங்கிக் கொண்டு சென்று வினய்க்கு இறுதி காரியங்களை செய்து அவனை புதைத்துவிட்டு வந்தார்.
அவர் சென்றதும் வினய்யை புதைத்த இடத்தை தோண்டி வினய்யின் சடலத்தை வெளியே எடுத்து தேவ்வின் இடத்திற்கு அதை கொண்டு வந்தனர் தேவ்வின் ஆட்கள்.
இதை தேவ் சொல்லி முடிக்க மைக்கேல்சன் அதை கேட்டு எச்சில் விழுங்கினான்.
அதை பார்த்த தேவ் சிரித்தபடி மேலே தொடர்ந்தார்.
"எதற்காக இது எல்லாம் செய்றேன்னு கேட்டலே!" - தேவ்.
அதற்கு மைக்கேல்சன் 'ஆம்' என்று தலையசைக்க தேவ் பழிவெறியோடு பேசினார் "எனக்கு ப்ரசாத் உயிரோட தினம் தினம் சாகணும்! தன் மகனை நினைச்சு அவன் தினமும் நரக வேதனை அனுபவிக்கணும்!" தேவ் மேலும் தொடர்ந்து பேசினார் "ப்ரசாத்தின் மகன் சாத்தானா மாறணும்! மனிதர்களை கொல்லும் அரக்கனா மாறணும்! அதை பார்த்து ப்ரசாத் தினமும் கண்ணீர் வடிக்கணும்".
அதற்கு மைக்கேல்சன் புரியாமல் அவரை பார்க்க "ஓ! அதற்கு நான் என்ன செய்ய முடியும் தேவ் சார்!" – மைக்கேல்சன்.
"நீ தான் எனக்கு வினய்யை அரக்கனா மாற்ற உதவி செய்யப் போற.." என்று கூறிய தேவ் வெளியே சென்று விட்டு உள்ளே வர அவரது கைகளில் ஒரு கவர் இருந்தது. அதை மைக்கேலிடம் கொடுத்தவர்.
"பிரிச்சு பார்! நீ என்ன செய்யணும்னு உனக்கே புரியும்!" என்று தேவ் சொல்ல அந்த கவரை பிரித்த மைக்கேல் அதில் இருந்ததை பார்த்து அதிர்ந்தான்.
"ஓ! நோ தேவ்! பகைக்காக இது எல்லாம் செய்றது பாவம்! வேண்டாம் தேவ் சார்!" – மைக்கேல்சன்.
"பணத்துக்காக எதுவா இருந்தாலும் செய்ய ரெடியாக இருக்கும் உன் வாயில் இருந்து பாவம்! புண்ணியம் ன்ற வார்த்தை எல்லாம் வருது மைக்கேல்! ஆச்சரியமா இருக்கு!" – தேவ்.
"நான் பணத்துக்காக எதுவேனா செய்றவன் தான் சார்! ஆனா ஒருவனை ஓநாய் மனிதனா மாற்றுவது பெரிய பாவம்! அவன் மனிதர்களை வேட்டை ஆடுறவன்! அவன் எழுந்தா உலகம் தாங்காது!" – மைக்கேல்சன்.
"உன் கிட்ட உலகத்தை பற்றிய லெட்சர் கேட்க வரவில்லை நான்! நீ இப்ப நான் சொல்றத செய்ற! இல்லை உன்னையும் வினய்க்கு ஜோடியா மாற்ற வேறு ஒரு ஆளை நான் பிடிக்க வேண்டி இருக்கும் மைக்கேல்!" என்று தேவ் கத்த மைக்கேல்சன் பயத்தில் அவர் சொல்வதை செய்ய துணிந்தான்.
"ம்ம்ம்... சீக்கிரம் வேலையை ஆரம்பி மைக்கேல்! ப்ரசாத்திற்கு சடலம் மாறிய விசயம் தெரியுறதுக்கு முன்னாடி வினய்யின் உடல் ஓநாய் மனிதனா மாறுவதற்கு வழி செய்யணும்! ப்ரசாத் வினய் பாடியை தேடி வரதுக்கு முன்னாடி எல்லாம் முடிஞ்சிருக்கணும்! பூங்குன்றன் கிட்ட ப்ரசாத் போய் பேசி அவன் வினய்யை பாக்குறதுக்குள்ள நம்ம வேலை பக்காவா முடிஞ்சிருக்கணும்" என்று தேவ் கூற மைக்கேல் அதன் படி செய்ய தன் கைகளில் உரையை மாற்றிவிட்டு அந்த கவரை பிரித்து அதில் இருந்த ஓநாயின் தோலை வெளியே எடுத்தான்.
அதை வினய்யின் மேல் போர்த்தப்பட அதை அடுத்து தேவ்வும் மைக்கேலும் ரூமை விட்டு வெளியே வந்தனர்.
"மைக்கேல்! வினய் மேல் போர்த்தப்பட்ட அந்த ஓநாய்யின் தோல் அவன் உடம்பில் ரியாக்ட் பண்ணி அவன் ஓநாய் மனிதனா மாற எவ்வளவு நாள் ஆகும்!" – தேவ்.
"எப்படியும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகும் சார்! உறுதியா சொல்ல முடியாது! வெம்பையர் பற்றி தான் ஆராய்ச்சி பண்ணி இருக்கேன்! ஓநாய் மனிதன் பற்றி தெரியாது! வெம்பையருக்கு பிடிக்காத எதிரி தான் ஓநாய் மனிதன்! ஓநாய்யின் தோள் போர்த்தபட்ட ஒரு மனிதன் கொஞ்சம் கொஞ்சமா ஓநாய்யாக மாறுவான்னு தெரியும்! ஆனால் இப்ப தான் நேரடியாக பார்க்கப் போறேன்! ஆனா சார்! இது ரொம்ப பாவம் சார்!" – மைக்கேல்சன்.
"அப்படியா! இருந்துட்டு போகட்டும்! என் பையனை கொன்னவன் நிம்மதியா வாழக் கூடாது! இந்த தேவ்வை பகைச்சிக்கிட்டா என்ன நடக்கும்னு அந்த ப்ரசாத்திற்கு புரியட்டும்!" – தேவ்.
அதற்கு மைக்கேல்சன் ஏதோ சொல்ல வர தேவ் அவனை இடைமறித்தார்.
"மைக்கேல் தேவை இல்லாத பேச்சு எதற்கு விசயத்திற்கு வா! அவன் ஓநாய் மனிதனா மாறிட்டான்னு நாம் எப்படி தெரிஞ்சுக்குறது! – தேவ்
"சார்! அவன் ஓநாய் மனிதனா மாறிட்டா அவன் உடம்பு முழுவதும் முடிகள் முளைக்கும். அந்த முடிகள் அவன் புதைத்த இடத்தில் பரவலா கிடைக்கும் . அவன் காலடி தடம் ஒரு ஓநாய்யை ஒத்து இருக்கும்! அதுமட்டுமல்ல அவன் சாதாரண மனிதர்களோட சாதாரண மனிதனா இருந்தாலும் ஒவ்வொரு பெளர்ணமி இரவிலும் அவன் ஓநாய் மனிதனா உருமாறுவான். அப்படி உருமாறிட்டா அவன் அந்த இரவுகளில் அவன் கண்களில் படுற ஜந்துகளில் இருந்து மனிதர்களை வரை வேட்டையாடுவான்." – மைக்கேல்சன்.
ம்ம்ம் குட் இன்டிரஸ்டிங் மைக்கேல்! வினய் வேட்டை ஆடப்போறத பார்க்க நான் ஆவலா இருக்கேன் மைக்கேல் – தேவ்.
சார்! உங்களுக்கு விசயத்தோட சீரியஸ்னஸ் புரியல! அவன் உங்களை கூட வேட்டை யாட தயங்க மாட்டான்! – மைக்கேல்சன்.
"அதை நான் பார்த்துக்குறேன் மைக்கேல்! பணம் தேவையானதை எடுத்துக்கோங்க! இந்த விசயம் யாருக்கும் தெரிய வேண்டாம்! யாருக்காவது தெரிஞ்சது நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்று தேவ் மைக்கேல்சன்னை மிரட்டி அனுப்பி வைத்தார்.
*******
இங்கு விஜயனிடம் ப்ரசாத் பேசிக் கொண்டிருந்தார்
"விஜயன் இது என் பையன் கிடையாது!"– ப்ரசாத்.
"என்ன சொல்றீங்க ப்ரசாத்!" – விஜயன்.
"ஆமா விஜயன்! எங்கேயோ தப்பு நடந்து இருக்கு!" என்று கூறியபடி வெளியே வந்த ப்ரசாத் தன் ஆட்களை அழைத்தார்.
அவர்கள் வந்தவுடன் கோபமாக அவர்களிடம் பேச ஆரம்பித்தார் ப்ரசாத் "வினய் சடலத்தை கொண்டு வரச் சொன்னா? என்னடா பண்ணி வச்சி இருக்கீங்க? இது வினய் இல்லைடா! வேறு ஒருவனுடைய சடலம்? இவன் எப்படி இங்கே வந்தான்.?" – ப்ரசாத்.
"நாங்க வினய் சடலம் கேட்ட போது இத தான் சார் கொடுத்தாங்க? எங்களுக்கு எப்படி இவன் இங்க வந்தான்னு தெரியாது சார்!" – அடியாள்.
அதை கேட்டு கோபம் கொண்ட ப்ரசாத் "யூ ராஸ்கல்!" என்று அவனை அறைந்தார்.
"என்னடா பேசிட்டு இருக்க! என் மகன் சடலத்தை உடனே தேடி கோண்டு வாங்கடா!" என்று கூறி அவர்களை அனுப்பி வைத்த ப்ரசாத் தன் தலையில் கை வைத்தபடியே அமர்ந்துவிட்டார்.
அந்த அடியாள் மேலும் எதோ சொல்ல வர அவர்கள் நிற்பதை பார்த்த ப்ரசாத் "நீங்கள் இன்னும் போகலயாடா!" என்று அந்த அடியாட்களை பார்த்து கத்த , அவர்கள் பயத்தில் அங்கிருந்து சென்றனர்.
அவர்கள் சென்றதும் "வினய்! மை சன்!" என்று தரையில் அமர்ந்து அழுதார் ப்ரசாத்.
அவர் அழுவதை பார்த்த விஜயன் அவர் அருகில் வந்தார்.
"மிஸ்டர். ப்ரசாத்! நடப்பதெல்லாம் நன்மைக்கே! ஜஸ்ட் லெட் யூவர் சன் இன் பீஸ்! அவனுக்கு இந்த நரக வாழ்க்கை வேண்டாம் ப்ரசாத்" – விஜயன்.
"அப்ப இவனை என்ன பண்றது விஜயன்! வெம்பையர் ரத்தம் அவனோட உடம்பில் இந்நேரம் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கும்! அவன் கொஞ்சம் கொஞ்சமா வெம்பையராக ஆக மாறிட்டு இருப்பான்" – ப்ரசாத்.
"ம்ம்ம்... எனக்கு உங்க நிலைமை புரியுது ப்ரசாத்! ஆனால் நடந்து முடிந்த விசயங்களை பேசி என்ன ஆகப் போகுது! நடந்து முடிந்த விசயத்தை நம்மால் மாற்ற முடியாது! இனி நடக்கப் போறதை பற்றி யோசிங்க ப்ரசாத்! சில விசயங்களை ஏற்க நம்மளை நாம் தயார் படுத்தி தான் ஆகணும்! இப்ப நம்மகிட்ட ஒரே வழி உங்க சன்னை புதைச்சிட்டு அவன் சாவை நீங்க ஏத்துக்குறதுதான்! இவனையும் மனிதனா மாற்ற வழி பாருங்க ப்ரசாத்! உலக நியதியை மாற்ற முயற்சி செய்தால் நாம் தான் அதன் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்!" – விஜயன்
"இவனை மனிதனாக மாற்ற என்ன பண்ணனும்! இவன் எழுந்தா இவன் என்கிட்ட கேட்குற கேள்விக்கு இவனுக்கு நான் என்ன பதில் சொல்றது விஜயன்!" - ப்ரசாத்!
"இந்த பிரச்சனைக்கு நான் ஒரு நல்ல தீர்வோட வர்றேன் ப்ரசாத்! இவனை மனிதனா மாற்ற நான் எதாவது வழி கிடைக்குமான்னு முயற்சி செய்றேன்! எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க ப்ரசாத்!" என்று விஜயன் கூறி அவரை சமாதானப்படுத்திவிட்டுச் செல்ல
இங்கு ப்ரசாத்தும் தன்னை தேற்றிக் கொண்டு யவன் விழிப்பதற்காக காத்திருந்தார். இடையில் வினய்யின் சடலத்தை தேட முயற்சியும் செய்து கொண்டிருந்தார்.
*******
அந்த ரூமின் உள்ளே இருட்டாக இருக்க தன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடியே உள்ளே சென்ற மைக்கேல்சன் வினய்யின் சடலத்தின் மேல் அவன் உடம்பு கெடாமல் இருக்க சில திரவங்களை தெளித்தான். பின் உடலின் மேல் இரத்த துளிகளை தெளித்தான்.
அதன் பின் அவன் சடலத்தை ஓநாய்யின் தோல் கொண்டு போர்த்திவிட்டு, அதை தொடர்ந்து அவன் சடலத்தின் மேல் சில செடிகளை வைத்து அவன் முகத்தை மூடினான் மைக்கேல்சன்.
சற்று முன்னர் வினய்யின் சடலத்தின் அருகில் மைக்கேல்சன் செய்த விசயங்கள் ஒவ்வொன்றையும் தன் ரூமில் உள்ள கேமிரா மூலம் ரெக்காட் செய்து அதை பார்த்து ரசித்து கொண்டிருந்தார் தேவ்!
'ப்ரசாத் என் வேலையை வெற்றிகரமா முடிச்சிட்டேன்' என்று தனக்குள் கூறியவர் தன் செக்ரட்ரி அஜய்யை போனில் அழைத்தார்.
"என்ன அஜய்! ப்ரசாத்திற்கு பாடி மாறிய விசயம் தெரிய ஆரம்பிச்சிருச்சா!" – தேவ்
"ஆமா! சார்! அவங்க அடியாட்கள் வினய் சடலத்தை தேடிட்டு இருக்காங்க" – அஜய்
"குட்! நீ இப்ப என்ன பண்ற வினய்யின் சடலத்தை பூங்குன்றன் புதைத்த இடத்திலேயே சவப்பெட்டியோட புதைச்சிடுற! அதுமட்டுமில்ல அங்க என்ன நடக்குதுனு எனக்கு தகவல் சொல்லிட்டே இருக்க" என்று தேவ் சொல்ல அஜய் தேவ் சொல்லியபடியே வினய்யின் சடலத்தை புதைத்துவிட்டு வந்தான்.
அங்கு ப்ரசாத்தின் ஆட்கள் மருத்துவமனையில் விசாரித்து பின் அங்கங்கே விசாரித்து வினய்யின் சடலம் பூங்குன்றனிடம் இருக்கலாம் என ப்ரசாத்திற்கு தகவல் கொடுக்க ப்ரசாத் அங்கு விரைந்தார்.
திடீரென்று ப்ரசாத்தை தன் வீட்டில் பார்த்த பூங்குன்றன் திகைத்தார் .
ஆனால் ப்ரசாத் அதை கண்டுகொள்ளாமல் சாதாரணமாக உள்ளே வந்து அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடியே பூங்குன்றனிடம் பேச ஆரம்பித்தார்.
"என்ன பூங்குன்றன்! வீட்டிற்கு வந்தவங்களை வாங்கனு கேட்காம திகைச்சு போய் நிக்குறீங்க?" – ப்ரசாத்
ப்ரசாத் அப்படி கேட்டதும் திகைத்த பூங்குன்றன் "வா...ங்க சார்!" என்று தடுமாற்றத்தோடு சொல்ல அதை கவனித்த ப்ரசாத் மேலே தொடர்ந்தார்.
"ஓகே பூங்குன்றன்! சுற்றி வளைக்காம நேரா விசயத்திற்கு வரேன்!" என்று ஆரம்பித்த ப்ரசாத் வினய் மற்றும் யவனின் சடலம் மாறியது அதனை அடுத்து தான் யவனை வெம்பையராக மாற்றியது. அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்ல அதை கேட்ட பூங்குன்றனுக்கு மூச்சு வாங்கியது.
"சார்! என் பையனுக்கு நீங்க பெரிய துரோகம் பண்ணிட்டீங்க" – பூங்குன்றன்
"யா! ஐ நோ! ஆனால் எதுவும் நான் தெரிஞ்சு செய்யல! என்னை அறியாம நடந்தது" என்று மேற்கொண்டு பேச முயன்ற ப்ரசாத் தன் பேச்சை நிறுத்திக் கொண்டு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு தன்னை சமன் செய்து கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்
"பழசை பற்றி பேசி என்ன ஆகப் போகுது பூங்குன்றன். நான் வந்த விசயத்தை உங்களுக்கு சொல்லாம வேற விசயங்களை பேசிட்டு இருக்கேன் பாருங்க
நான் இங்க வந்ததே உங்களை உங்க மகன் கிட்ட கூட்டிட்டு போகத்தான்! அதுமட்டுமில்லை நான் என் பையனின் சடலத்திற்கு இறுதி மரியாதை செலுத்தனும்" என்று ப்ரசாத் கூற
பூங்குன்றன் அவரை வினய் புதைத்த இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு யாருமற்ற இடத்தில் தன் மகன் சாதாரணமாக புதைக்கப்பட்டிருக்க அதை பார்த்த ப்ரசாத் கண்ணீர் வடித்தபடியே பேசினார் "உன் சடலத்தை கூட நான் என் கையால் புதைக்க முடியாத பாவி ஆகிட்டேன்டா நான்!" என்று கூறி தன் கையில் இருந்த பூச்சண்டை அவன் கல்லறையில் வைத்துவிட்டு சென்றார்.
அப்போது பூங்குன்றன் அருகில் வர அவரை பார்த்த ப்ரசாத் "யவன் சடலத்தையும் அடக்கம் செய்ய நான் ஏற்பாடு செய்றேன் பூங்குன்றன்" என்று கூறிய ப்ரசாத் இங்கு பேசிக் கொண்டிருக்க விஜயன் போன் செய்தார். அதை எடுத்து பேசிய ப்ரசாத் சந்தோசத்தில் மிதந்தார்
"ஓ! குட் விஜயன்! நான் அதற்கு ஏற்பாடு பண்றேன்!" என்று அவரிடம் கூறிய ப்ரசாத் பூங்குன்றனிடம் திரும்பினார் .
"ஓகே பூங்குன்றன்! என் சன் புதைச்சது புதைச்சதாகவே இருக்கட்டும்! நான் யவன் சடலத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு பண்றேன்! வெளியில் இருந்து பாக்குறவங்களுக்கு அவன் வினய்யாகவே இருக்கட்டும்" என்று கூறிய ப்ரசாத் அபேய்யை அழைத்தார்
"அபேய்! வினய் இறந்து போனதை தெரிவிக்க ஏற்பாடு பண்ணு! அவன் இறுதி சடங்குகள் முடிஞ்சதும் எல்லார்க்கும் நாம தெரியப்படுத்தலாம்" என்று ப்ரசாத் கூற அதற்கு அபேய் சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.
விஜயன் சொன்னதை அடுத்து யவனின் ரூமின் உள்ளே ஒரு சில்வர்சிலுவையை ஏந்திச் சென்ற ப்ரசாத் அவன் சவப்பெட்டியின் மேல் சிலுவையை வைத்துவிட்டு தன் ஆட்கள் கொண்டு அந்த பெட்டியை தூக்கிச் சென்றார்.
அந்த சவப்பெட்டியை ஒரு இடத்தில் புதைத்து, அவன் கல்லரையின் மேல் வினய் ப்ரசாத் என்ற பெயர் பொறிக்கப்பட்டது. மேலும் அந்த இடத்தில் புனித நீர் தெளிக்கப்பட இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் பூங்குன்றன்.
யவனை புதைத்துவிட்டு வந்த ப்ரசாத் தன்னை தேற்றிக் கொண்டு பூங்குன்றனிடம் திரும்பினார்.
"ஓகே பூங்குன்றன்! என்னால் உங்க பையனுக்கு இது மட்டும் தான் செய்ய முடிந்தது! இந்த ஏற்பாடுகளுக்கு மேல் அவன் வெம்பையரா மாறி வெளி வர முடியாது!" – ப்ரசாத்
அதை கேட்ட பூங்குன்றன் அதை ஏற்று தன் வீட்டிற்குச் சென்றார்.
இங்கு அபேய்க்கு போன் செய்தார் ப்ரசாத் "அபேய்! நான் சொன்ன மாதிரி பிரஸ் மீட்டிங்கு நாளை ஏற்பாடு செய்! நம்ம வினய் இறந்த விசயங்களை சொல்லியாகணும்" என்று அவனிடம் பேசிவிட்டு திரும்பிய ப்ரசாத் நாட்காட்டியை பார்க்க அதிர்ந்தார்.
மைக்கேல்சன் கூறிய ஒரு மாத காலம் முடிந்திருந்தது. அதை கண்ட ப்ரசாத்திற்கு பயத்தில் முகம் வேர்த்தது.
வினய்யின் இறப்பு! அதை தொடர்ந்து சடலம் மாற்றப்பட்டது! வினய்யின் சடலம் தேடியது என்று சுமார் ஒரு மாத காலம் நிறைவு பெற்று இருப்பதை அப்போது தான் உணர்ந்தார் ப்ரசாத் வினய்யின் சடலத்தை தேடி அலைஞ்சதில் யவனை பற்றி மறந்து போயிட்டேன்! விஜயன் சொன்ன மாதிரி செஞ்சதால் அவன் அந்த சிலுவையையும், நீரையும் தாண்டி வர முடியாது என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு படுக்கைக்கு சென்ற ப்ரசாத் தூங்க முயற்சிக்க மணி 12 ஆனதை பறைசாற்றும் விதமாக கடிகாரத்தில் மணியடிக்க திடீரென்று எழுந்த ப்ரசாத் தண்ணீர் குடிக்க அருகில் கை வைக்க அவர் எதிரில் இருட்டில் ஒரு உருவம் மங்கலாக தெரிந்தது.
அதனை அடுத்து தன் அருகில் இருந்த லைட்டை ப்ரசாத் போட அவர் எதிரில் நின்றது அது. அதை பார்த்த ப்ரசாத் "நோ!" என்று கத்தினார்.