- Messages
- 175
- Reaction score
- 169
- Points
- 43
ராட்சஷன் 33
இரு தினங்களும் அதீத காய்ச்சலால் தன்னை மறந்த நிலையில் நிதா இருந்து இன்று காலையில் தான் சற்று தெளிந்து கண் விழித்தாள்.
அவள் கண் விழித்ததும் அவளை பார்வையால் அளவிட்ட யட்சன் "ஆர் யூ ஒகே மனுமா?" என்று கேட்டபடி நிதாவின் கைகளை பிடித்து கொண்டு அவளை அணைத்தபடியே டைனிங் டேபிளிற்கு அழைத்துச் சென்றான்.
அங்கு பல வித உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் அவளுக்கு பிடித்த உணவுகளாக இருந்தன. அதை பார்த்த நிதா ஆராய்ச்சியாக யட்சனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்னை எதுக்கு பார்த்துட்டு இருக்க பேபி! சாப்பிடு! நீ வர வர சரியாகவே சாப்பிட மாட்ற! அதனால் தான் நீ இப்படி இளைச்சு போயிட்ட" என்று யட்சன் கூறியபடியே அவளுக்கு பிடித்த உணவான ரவா லட்டை அவள் வாயின் அருகில் கொண்டு செல்ல நிதா உணவையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
"என்ன நிதாம்மா! சாப்பிடாமல் தம்பியவே பார்த்துட்டு இருக்க! எவ்ளோ ஆசையா தம்பி ஊட்டிவிடுது!" என்று லமியின் பேச்சு அருகில் கேட்டதும் வேகமாக திரும்பிய நிதா லமியின் அருகில் விரைந்தாள்.
லமியின் பின்னால் வெங்கியும், சாமும் நின்று இருந்தனர். அவர்களை கண்டதும் கண்களில் நீர் வடிய வேகமாக அவரைப் போய் கட்டிக் கொண்டாள் நிதா.
நிதாவின் அழுகையை கண்ட சாம் அவளை மாற்றும் விதமாக “ ஏன் பேப்ஸ் உன் கல்யாணத்திற்கு என்னை கூப்பிடல?”
அதற்கு நிதா எதோ சொல்ல வர யட்சன் தங்கள் அருகில் வருவதை பார்த்ததும் வேகமாக "சாரி சாம்! திடீர்னு மேரேஜ் பண்ணிக்கிட்டனால யாரையும் கூப்பிட முடியல! ஆமா நீ எப்ப ரஷ்யா ல இருந்து வந்த சாம்" – நிதா.
"நேற்று தான் வந்தேன்! பேப்ஸ் வந்ததும் உனக்கு மேரேஜ் ஆகிடுச்சுனு கேள்விப்பட்டு உன்னை பார்க்க வந்துட்டேன்" என்று சாம் சொல்ல
"நீ மட்டும் இருந்து இருந்தா இந்த கல்யாணத்தை நடக்கவிட்ருக்க மாட்ட சாம்!" என்று தனக்குள் நிதா சொல்லிக் கொள்ள அவளது முகத்தை படித்தவன் போல் சாம் பேசினான்.
"என்னாச்சு பேப்ஸ் ! ஏன் இந்த திடீர் கல்யாணம்? வினய் எதாவது..." என்று ஆரம்பித்தவன் நிதா யட்சனை பார்வையால் காட்டவும் வேகமாக வாயை மூடிக் கொண்டான்.
சாமும் நிதாவும் பேசிக் கொள்வதை கவனித்த யட்சன் அருகில் வரவும் வேகமாக தன் முகத்தை மாற்றிக் கொண்டாள் நிதா.
அவளது முக மாற்றத்தை அளவிட்ட சாம் வேகமாக பேச்சை மாற்றினான்.
"எங்க ஆண்டிக்கு உன்னை பார்க்கணுமாம் நிதா! எப்ப கூட்டிட்டு வரது" – சாம்.
அதை கேட்ட யட்சன், அவள் பதில் சொல்வதற்குள் யட்சன் சாமிடம் திரும்பி "எனி டைம் சாம் ! ஆனா அந்த நேரம் நான் வீட்டில் இருக்கும் நேரமாக மட்டும் இருக்குற மாதிரி பண்ணிட்டீங்கனா நல்லா இருக்கும்" – யட்சன்.
அதை கேட்ட சாம் யோசனையாக யட்சனை பார்த்தான். நிதாவின் தயக்கமும், யட்சன் நிதாவை தனித்துவிடாமல் தொடர்வதும் அவனுக்கு சூழ்நிலையை பறைசாற்ற சாம் அந்த இடத்தில் இருந்து நகன்று லமி, வெங்கியுடன் சேர்ந்து கொண்டான்.
அவன் சென்றதும் நிதாவிடம் திரும்பிய யட்சன் "என்ன என்னைப்பற்றி அவனுக்கு தெரிவிக்கலாம்னு பார்க்குறியா!" – யட்சன்.
"அப்படியெல்லாம் இல்லை" – நிதா.
"ரியலி! மனு டார்லிங் உனக்கு பொய் பேச வரலை! வீணா முயற்சி பண்ணாத! உன் முகம் உன்னை எனக்கு காட்டி கொடுத்திடும் என்று சொல்லிவிட்டு அவர்களிடம் விரைந்த யட்சன், "வாங்க! எல்லாரும் சாப்பிடலாம்!" என்று அனைவரையும் வரவேற்றான் அவன் அப்படி அழைத்ததும் அனைவரும் டைனிங் டேபிள் நோக்கிச் சென்றனர்.
சாப்பிட்டு முடித்த சாம் கை கழுவ செல்லும் முன் நிதாவை பார்க்க அவனின் பார்வையின் பொருளை கண்டு கொண்ட நிதா யட்சனை திரும்பிப் பார்த்தாள். அவன் லமியுடன் ஏதோ சுவாரசியமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள் சாமின் பின்னால் கை கழுவது போல் சென்றாள். அங்கு சென்றதும் வேகமாக சாமிடம் திரும்பியவள்
"சாம் ஐ அம் இன் டிரேப்! என்னை காப்பாத்து! அவன்...." என்று அடுத்து எதோ நிதா சொல்ல வர "என்ன மனுமா! எவ்வளவு நேரம் தான் கை கழுவ! சீக்கிரம் வெளியே வா! பாரு! சாமும் கை கழுவாம உன்னை பார்த்துட்டு நிக்கிறார். நீங்க எப்ப கை கழுவி நாங்க எப்ப கை கழுவுறது டார்லிங்" என்று பின்னால் இருந்து யட்சன் சொல்ல அரண்டபடி திரும்பினாள் நிதா.
அங்கு யட்சனின் பின்னால் லமியும் , வெங்கியும் நின்று இருந்தனர். வேகமாக கை கழுவிய நிதா அங்கிருந்து வெளியேற அவளை தொடர்ந்து போக எத்தனித்த சாமை தடுத்தான் யட்சன்.
"ஹாய் சாம்! எங்க போறீங்க? உங்க பிரண்ட் நிதா கூட மட்டும் தான் பேசுவீங்களா? எங்க கூடலாம் பேச மாட்டீங்களா! உங்க வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு" – யட்சன்.
"ம்ம்ம் குட்... என்று அவன் கேட்ட கேள்விக்கு சாம் பதில் சொல்ல யட்சன் வீட்டில் இருக்கும் வரை சாமை நிதாவுடன் பேச விடாமல் செய்தான் யட்சன்.
காரில் செல்லும் போது லமியும், வெங்கியும் யட்சனின் புராணத்தை பாடிக் கொண்டே வர சாம் அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு தன் வீட்டிற்கு சென்றான். செல்லும் வழியெல்லாம் நிதா கை கழுவும் இடத்தில் சொன்ன வார்த்தைகளை கோர்த்து அர்த்தம் கண்டு பிடித்துக் கொண்டிருந்தான்.
யட்சனின் செயல்களையும் , ஏற்கனவே நிதா யட்சனை பற்றி சொன்ன செய்திகளையும் இன்று வீட்டில் நிதாவின் நடவடிக்கைகளையும் கோர்த்து பார்த்த சாம் ஒரு முடிவோடு காலை விடியலுக்காக காத்திருந்தான்.
*******
லமியும், வெங்கியும் வீட்டிற்கு வரவும் அவர்களின் முன் வந்து நின்றார் வைத்தி.
"நான் போகாதீங்கனு சொன்னேனா இல்லயா?. என் பேச்சை கேட்காம போனீங்க? நல்லா அசிங்கப்படுத்தி அனுப்பினானா அவன்" – வைத்தி.
"அப்படிலாம் இல்லைடா அந்த தம்பி எங்களை நல்லா கவனிச்சி தான் அனுப்புச்சு!" - வெங்கி.
"நீ நினைக்கிற மாதிரி இல்லைடா அந்த தம்பி ரொம்ப நல்ல குணம்! நிதாவை நல்லா பார்த்துக்கிடுது" – லமி.
"என்னனு தெரியல டா அந்த தம்பி உன்கிட்ட மட்டும் தான் அப்படி நடந்துக்குது" என்று வெங்கி சொல்லிவிட்டு செல்ல வைத்தி யோசனையுடன் நின்றார்.
*******
காலையில் நடந்தேறிய சம்பவத்தை அசைபோட்ட படியே நிதா இரவு தனக்கான உணவை சமைத்துக் கொண்டிருக்க அவளது கவனம் சிதறியது. ஏதோ நினைவில் வேகமாக நிதா திரும்ப அவளின் காலின் பெருவிரல் மேஜை நுனியில் இடித்துக் கொண்டது.
காலைப் பார்த்தவள் காலில் சிறியதாக ரத்தக் கசிவு இருக்க அவற்றை துடைத்துக் கொண்டிருந்த நிதா ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தாள். அங்கு யட்சன் தன் கைகளை கட்டியபடி தன் ஒரு காலை சாய்வாக வைத்து கிட்சனின் வாசல் கதவில் முட்டு கொடுத்து நின்றிருந்தான். அவனை பார்த்த நிதா எச்சில் விழுங்க யட்சன் அவளை பார்த்தபடியே அருகில் வர நிதா பின்வாங்கினாள். ஆனால் யட்சன் அவளை நகரவிடாமல் பிடித்து நிறுத்தி அவள் காலை பார்த்தான்.
"ச்ச்ச்சுசுசு இவ்ளோ ரத்தம் வேஸ்ட் பண்ணிட்டியே நிதா பேபி! ரத்ததோட மதிப்பு தெரியுதா உனக்கு?" என்று கூறியபடியே யட்சன் அவள் கால்களை அவன் மூக்கின் அருகில் கொண்டு சென்று மோர்ந்து பார்க்க வேகமாக தன் கால்களை எடுத்துக் கொண்டாள் நிதா.
தன் காலை எடுத்துக் கொண்டவள் இரண்டடி பின்னால் சென்று கிட்சன் மேடையில் மோதி நிற்க,
அவள் காலைவிட்டு எழுந்த யட்சன் "சீக்கிரம் ரூமிற்கு வா!" என்று கூறிவிட்டு யட்சன் திரும்பிப் போக முனைய நிதா நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
ஆனால் சற்று தூரம் சென்ற யட்சன் திரும்பவும் அவள் அருகில் வந்து நின்று அவளை ஏற இறங்க பார்த்தான் .பின்பு நிதாவிடம் "என்னாச்சு பேபி! உன் முகத்தில் எதோ புதுசா தோணுதே! ம்ம்ம்" என்று சொல்லியபடி சற்று நேரம் யோசித்தவன்"ம்ம்ம் ஐ காட் ஐட்! இன்னைக்கு உன் முகத்தில் நிம்மதி தெரியுது! காரணம் என்ன பேபி! உன் பிரண்ட்கிட்ட பேசின சந்தோசமா? இல்லை அவன் உன்னை என்கிட்ட இருந்து உன்னை காப்பாற்றி கூட்டிட்டு போயிடுவானோன்ற அதீத நம்பிக்கையா! டெல் மீ மனுமா".
"அது... அது வந்து.... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" – நிதா.
"ஓ!..." என்று கூறியவன் அவள் அருகில் வந்து அவள் கைகளை பிடித்து முறுக்கினான்.
"ம்ம்ம்... என்ன என்கிட்ட இருந்து தப்பிச்சு போக முயற்சி பண்றியா? முடியுமா உன்னால! நானா உன்னை விட்டால் ஒழிய நீ என்னிடம் இருந்து போக முடியாது." என்று அவளிடம் கத்தியவன்
"என் மேல இருக்கிற பயம் விட்டு போச்சு உனக்கு! அம் ஐ கரெக்ட் நிதா! அப்படி நீ இருக்கக் கூடாதே" என்று கூறியபடியே அவள் அருகில் யட்சன் வர பயத்தில் தள்ளிச் சென்ற நிதா ஒரு இடத்தில் சென்று நின்றாள்.
அவள் நின்றதும் வேகமாக தன் கைகளை நிதா முகத்திற்கு நேராக யட்சன் கொண்டு வர தன் கண்களை பயத்தில் மூடிக் கொண்டாள் நிதா.
வருவான்....
இரு தினங்களும் அதீத காய்ச்சலால் தன்னை மறந்த நிலையில் நிதா இருந்து இன்று காலையில் தான் சற்று தெளிந்து கண் விழித்தாள்.
அவள் கண் விழித்ததும் அவளை பார்வையால் அளவிட்ட யட்சன் "ஆர் யூ ஒகே மனுமா?" என்று கேட்டபடி நிதாவின் கைகளை பிடித்து கொண்டு அவளை அணைத்தபடியே டைனிங் டேபிளிற்கு அழைத்துச் சென்றான்.
அங்கு பல வித உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் அவளுக்கு பிடித்த உணவுகளாக இருந்தன. அதை பார்த்த நிதா ஆராய்ச்சியாக யட்சனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்னை எதுக்கு பார்த்துட்டு இருக்க பேபி! சாப்பிடு! நீ வர வர சரியாகவே சாப்பிட மாட்ற! அதனால் தான் நீ இப்படி இளைச்சு போயிட்ட" என்று யட்சன் கூறியபடியே அவளுக்கு பிடித்த உணவான ரவா லட்டை அவள் வாயின் அருகில் கொண்டு செல்ல நிதா உணவையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
"என்ன நிதாம்மா! சாப்பிடாமல் தம்பியவே பார்த்துட்டு இருக்க! எவ்ளோ ஆசையா தம்பி ஊட்டிவிடுது!" என்று லமியின் பேச்சு அருகில் கேட்டதும் வேகமாக திரும்பிய நிதா லமியின் அருகில் விரைந்தாள்.
லமியின் பின்னால் வெங்கியும், சாமும் நின்று இருந்தனர். அவர்களை கண்டதும் கண்களில் நீர் வடிய வேகமாக அவரைப் போய் கட்டிக் கொண்டாள் நிதா.
நிதாவின் அழுகையை கண்ட சாம் அவளை மாற்றும் விதமாக “ ஏன் பேப்ஸ் உன் கல்யாணத்திற்கு என்னை கூப்பிடல?”
அதற்கு நிதா எதோ சொல்ல வர யட்சன் தங்கள் அருகில் வருவதை பார்த்ததும் வேகமாக "சாரி சாம்! திடீர்னு மேரேஜ் பண்ணிக்கிட்டனால யாரையும் கூப்பிட முடியல! ஆமா நீ எப்ப ரஷ்யா ல இருந்து வந்த சாம்" – நிதா.
"நேற்று தான் வந்தேன்! பேப்ஸ் வந்ததும் உனக்கு மேரேஜ் ஆகிடுச்சுனு கேள்விப்பட்டு உன்னை பார்க்க வந்துட்டேன்" என்று சாம் சொல்ல
"நீ மட்டும் இருந்து இருந்தா இந்த கல்யாணத்தை நடக்கவிட்ருக்க மாட்ட சாம்!" என்று தனக்குள் நிதா சொல்லிக் கொள்ள அவளது முகத்தை படித்தவன் போல் சாம் பேசினான்.
"என்னாச்சு பேப்ஸ் ! ஏன் இந்த திடீர் கல்யாணம்? வினய் எதாவது..." என்று ஆரம்பித்தவன் நிதா யட்சனை பார்வையால் காட்டவும் வேகமாக வாயை மூடிக் கொண்டான்.
சாமும் நிதாவும் பேசிக் கொள்வதை கவனித்த யட்சன் அருகில் வரவும் வேகமாக தன் முகத்தை மாற்றிக் கொண்டாள் நிதா.
அவளது முக மாற்றத்தை அளவிட்ட சாம் வேகமாக பேச்சை மாற்றினான்.
"எங்க ஆண்டிக்கு உன்னை பார்க்கணுமாம் நிதா! எப்ப கூட்டிட்டு வரது" – சாம்.
அதை கேட்ட யட்சன், அவள் பதில் சொல்வதற்குள் யட்சன் சாமிடம் திரும்பி "எனி டைம் சாம் ! ஆனா அந்த நேரம் நான் வீட்டில் இருக்கும் நேரமாக மட்டும் இருக்குற மாதிரி பண்ணிட்டீங்கனா நல்லா இருக்கும்" – யட்சன்.
அதை கேட்ட சாம் யோசனையாக யட்சனை பார்த்தான். நிதாவின் தயக்கமும், யட்சன் நிதாவை தனித்துவிடாமல் தொடர்வதும் அவனுக்கு சூழ்நிலையை பறைசாற்ற சாம் அந்த இடத்தில் இருந்து நகன்று லமி, வெங்கியுடன் சேர்ந்து கொண்டான்.
அவன் சென்றதும் நிதாவிடம் திரும்பிய யட்சன் "என்ன என்னைப்பற்றி அவனுக்கு தெரிவிக்கலாம்னு பார்க்குறியா!" – யட்சன்.
"அப்படியெல்லாம் இல்லை" – நிதா.
"ரியலி! மனு டார்லிங் உனக்கு பொய் பேச வரலை! வீணா முயற்சி பண்ணாத! உன் முகம் உன்னை எனக்கு காட்டி கொடுத்திடும் என்று சொல்லிவிட்டு அவர்களிடம் விரைந்த யட்சன், "வாங்க! எல்லாரும் சாப்பிடலாம்!" என்று அனைவரையும் வரவேற்றான் அவன் அப்படி அழைத்ததும் அனைவரும் டைனிங் டேபிள் நோக்கிச் சென்றனர்.
சாப்பிட்டு முடித்த சாம் கை கழுவ செல்லும் முன் நிதாவை பார்க்க அவனின் பார்வையின் பொருளை கண்டு கொண்ட நிதா யட்சனை திரும்பிப் பார்த்தாள். அவன் லமியுடன் ஏதோ சுவாரசியமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவள் சாமின் பின்னால் கை கழுவது போல் சென்றாள். அங்கு சென்றதும் வேகமாக சாமிடம் திரும்பியவள்
"சாம் ஐ அம் இன் டிரேப்! என்னை காப்பாத்து! அவன்...." என்று அடுத்து எதோ நிதா சொல்ல வர "என்ன மனுமா! எவ்வளவு நேரம் தான் கை கழுவ! சீக்கிரம் வெளியே வா! பாரு! சாமும் கை கழுவாம உன்னை பார்த்துட்டு நிக்கிறார். நீங்க எப்ப கை கழுவி நாங்க எப்ப கை கழுவுறது டார்லிங்" என்று பின்னால் இருந்து யட்சன் சொல்ல அரண்டபடி திரும்பினாள் நிதா.
அங்கு யட்சனின் பின்னால் லமியும் , வெங்கியும் நின்று இருந்தனர். வேகமாக கை கழுவிய நிதா அங்கிருந்து வெளியேற அவளை தொடர்ந்து போக எத்தனித்த சாமை தடுத்தான் யட்சன்.
"ஹாய் சாம்! எங்க போறீங்க? உங்க பிரண்ட் நிதா கூட மட்டும் தான் பேசுவீங்களா? எங்க கூடலாம் பேச மாட்டீங்களா! உங்க வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு" – யட்சன்.
"ம்ம்ம் குட்... என்று அவன் கேட்ட கேள்விக்கு சாம் பதில் சொல்ல யட்சன் வீட்டில் இருக்கும் வரை சாமை நிதாவுடன் பேச விடாமல் செய்தான் யட்சன்.
காரில் செல்லும் போது லமியும், வெங்கியும் யட்சனின் புராணத்தை பாடிக் கொண்டே வர சாம் அவர்களை வீட்டில் இறக்கிவிட்டு தன் வீட்டிற்கு சென்றான். செல்லும் வழியெல்லாம் நிதா கை கழுவும் இடத்தில் சொன்ன வார்த்தைகளை கோர்த்து அர்த்தம் கண்டு பிடித்துக் கொண்டிருந்தான்.
யட்சனின் செயல்களையும் , ஏற்கனவே நிதா யட்சனை பற்றி சொன்ன செய்திகளையும் இன்று வீட்டில் நிதாவின் நடவடிக்கைகளையும் கோர்த்து பார்த்த சாம் ஒரு முடிவோடு காலை விடியலுக்காக காத்திருந்தான்.
*******
லமியும், வெங்கியும் வீட்டிற்கு வரவும் அவர்களின் முன் வந்து நின்றார் வைத்தி.
"நான் போகாதீங்கனு சொன்னேனா இல்லயா?. என் பேச்சை கேட்காம போனீங்க? நல்லா அசிங்கப்படுத்தி அனுப்பினானா அவன்" – வைத்தி.
"அப்படிலாம் இல்லைடா அந்த தம்பி எங்களை நல்லா கவனிச்சி தான் அனுப்புச்சு!" - வெங்கி.
"நீ நினைக்கிற மாதிரி இல்லைடா அந்த தம்பி ரொம்ப நல்ல குணம்! நிதாவை நல்லா பார்த்துக்கிடுது" – லமி.
"என்னனு தெரியல டா அந்த தம்பி உன்கிட்ட மட்டும் தான் அப்படி நடந்துக்குது" என்று வெங்கி சொல்லிவிட்டு செல்ல வைத்தி யோசனையுடன் நின்றார்.
*******
காலையில் நடந்தேறிய சம்பவத்தை அசைபோட்ட படியே நிதா இரவு தனக்கான உணவை சமைத்துக் கொண்டிருக்க அவளது கவனம் சிதறியது. ஏதோ நினைவில் வேகமாக நிதா திரும்ப அவளின் காலின் பெருவிரல் மேஜை நுனியில் இடித்துக் கொண்டது.
காலைப் பார்த்தவள் காலில் சிறியதாக ரத்தக் கசிவு இருக்க அவற்றை துடைத்துக் கொண்டிருந்த நிதா ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தாள். அங்கு யட்சன் தன் கைகளை கட்டியபடி தன் ஒரு காலை சாய்வாக வைத்து கிட்சனின் வாசல் கதவில் முட்டு கொடுத்து நின்றிருந்தான். அவனை பார்த்த நிதா எச்சில் விழுங்க யட்சன் அவளை பார்த்தபடியே அருகில் வர நிதா பின்வாங்கினாள். ஆனால் யட்சன் அவளை நகரவிடாமல் பிடித்து நிறுத்தி அவள் காலை பார்த்தான்.
"ச்ச்ச்சுசுசு இவ்ளோ ரத்தம் வேஸ்ட் பண்ணிட்டியே நிதா பேபி! ரத்ததோட மதிப்பு தெரியுதா உனக்கு?" என்று கூறியபடியே யட்சன் அவள் கால்களை அவன் மூக்கின் அருகில் கொண்டு சென்று மோர்ந்து பார்க்க வேகமாக தன் கால்களை எடுத்துக் கொண்டாள் நிதா.
தன் காலை எடுத்துக் கொண்டவள் இரண்டடி பின்னால் சென்று கிட்சன் மேடையில் மோதி நிற்க,
அவள் காலைவிட்டு எழுந்த யட்சன் "சீக்கிரம் ரூமிற்கு வா!" என்று கூறிவிட்டு யட்சன் திரும்பிப் போக முனைய நிதா நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
ஆனால் சற்று தூரம் சென்ற யட்சன் திரும்பவும் அவள் அருகில் வந்து நின்று அவளை ஏற இறங்க பார்த்தான் .பின்பு நிதாவிடம் "என்னாச்சு பேபி! உன் முகத்தில் எதோ புதுசா தோணுதே! ம்ம்ம்" என்று சொல்லியபடி சற்று நேரம் யோசித்தவன்"ம்ம்ம் ஐ காட் ஐட்! இன்னைக்கு உன் முகத்தில் நிம்மதி தெரியுது! காரணம் என்ன பேபி! உன் பிரண்ட்கிட்ட பேசின சந்தோசமா? இல்லை அவன் உன்னை என்கிட்ட இருந்து உன்னை காப்பாற்றி கூட்டிட்டு போயிடுவானோன்ற அதீத நம்பிக்கையா! டெல் மீ மனுமா".
"அது... அது வந்து.... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" – நிதா.
"ஓ!..." என்று கூறியவன் அவள் அருகில் வந்து அவள் கைகளை பிடித்து முறுக்கினான்.
"ம்ம்ம்... என்ன என்கிட்ட இருந்து தப்பிச்சு போக முயற்சி பண்றியா? முடியுமா உன்னால! நானா உன்னை விட்டால் ஒழிய நீ என்னிடம் இருந்து போக முடியாது." என்று அவளிடம் கத்தியவன்
"என் மேல இருக்கிற பயம் விட்டு போச்சு உனக்கு! அம் ஐ கரெக்ட் நிதா! அப்படி நீ இருக்கக் கூடாதே" என்று கூறியபடியே அவள் அருகில் யட்சன் வர பயத்தில் தள்ளிச் சென்ற நிதா ஒரு இடத்தில் சென்று நின்றாள்.
அவள் நின்றதும் வேகமாக தன் கைகளை நிதா முகத்திற்கு நேராக யட்சன் கொண்டு வர தன் கண்களை பயத்தில் மூடிக் கொண்டாள் நிதா.
வருவான்....