Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 21
சிங் ஹாஸ்பிடலில் செக்யூரிட்டி வேலையில் இருந்த காவலருக்கு போன் செய்தார்.
"சொல்லுங்கள் சார்"
"நான் சிங் பேசுகிறேன். அடிபட்ட ஆசாமி இப்போது எப்படி இருக்கிறார்.?"
"ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருக்கிேறாம் சார்"
"பலமான காயமா?"
"ஆமாம். அந்த பெண்ணை கத்தியால் குத்த முயன்றிருக்கிறான். நல்ல வேளையாக நம் ஆள் குறுக்கிட்டு தடுத்து அவனை பிடிக்க முயற்சி செய்தார். அதில் லேசான கத்திகுத்து காயம் "
"அந்த பெண் ?"
"அதிர்ச்சியிலும் பயத்திலும் இருக்கிறாள். "
"அந்த ஆளை அடையாளம் காண முடிந்ததா?"
"இல்லை சார். அவன் மாஸ்க் அணிந்திருந்தான். நான் பாத்ரூமிற்கு போயிருந்தேன். அந்த இடைவெளியில் தான் அவன் திடிரென உள்ளே நுழைந்து விட்டான்"
"இட்ஸ் ஓகே. டாக்டரை அவர்கள் இருவரையும் டிஸ்சார்ஜ் பண்ண சொல். இன்னும் சிறிது நேரத்தில் கோபி தன் காரோடு அங்கே வருவான். அதில் அனிதாவையும் நிர்மல்குமாரையும் ஏற்றி அனுப்புங்கள் நான் வேறு இடத்தில் அவர்களை பதுக்கி வைக்க நினைக்கிறேன். நீங்கள் காயம்பட்ட வரை கவனியுங்கள். பெண் காவலர்களை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். நான் மறுபடியும் உங்களை கூப்பிடுகிறேன்." என்றார் சிங் .
போன் இணைப்பை துண்டித்த சிங் சரவணனுக்கு மிஸ்டு கால் கொடுத்தார். சற்று நேரத்தில் அவரது செல்போன் இரண்டு முறை ரிங்காகி கட்டானது .சிங் தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்.
சற்று நேரத்திற்கு பின்னால்.சிங் தனது வண்டியை பிராமண பெரிய ஆக்ரஹாரத்தின் வழியே விரட்டி கொண்டிருந்தார். ஈரோட்டில் தோல் தொழிற்சாலை களுக்கு பெய பெற்ற இடம் இது.அய்யர்கள் மட்டுமே இருக்கும் இடங்கள் தான் அக்ரஹாரம் என்று அழைக்கப்படும். ஆனால் இங்கே பிராமணர்கள் யாரும் இல்லை. இந்த ஏரியா முழுவதும் முஸ்லீம்களால் நிறைந்து காணப்பட்டது. கோயிலுக்கு நேர் எதிராக மசூதி இருப்பதும் இரு பிரிவினருமே அடுத்தவர்விசயத்தில் தலையிடாமல் அமைதியாக அவரவர் வழிபாட்டை எசய்து கொண்டிருந்தனர். மகுதிகளில் இந்துக்கள் தாயத்து வாங்கி கட்டி கொள்வதும் பாடம் ஓதி கொள்வதும் எந்த வித்தியாசமும் இன்றி நடந்து கொண்டிருப்பதை சிங் பார்த்தி ருக்கிறார். கடவுள் இருக்கிறானோ இல்லையோ தெரியாது. ஆனால் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஏதாவது தவறாக நடந்து விட்டால் எந்த மதக் கடவுள் என்று கூட மக்கள் பேதம் பார்ப்பதில்லை. எப்படியாவது நல்லது நடந்தால் சரி என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு எத்தனை கடவுள்கள் இருந்தாலும் போதாது.
ஓருகாலத்தில் அய்யர்கள் வாழ்ந்த இந்த பகுதிகளில் இப்போது முஸ்லீம்கள் வாழ ஓரு வினோதமான காரணத்தை சிங் கேள்விப்பட்டிருந்தார். இந்த அக்ரஹாரத்தில் பெரியாருக்கு ஒரு கடை வாடகைக்கு இருந்ததாகவும் அதில் ஒரு மாட்டு கறி விற்கும் முஸ்லீம் க்கு வாடகைக்கு விட்டு விட்டதாகவும் மாட்டு கறி விற்கும் இடத்தில் இருக்க விரும்பாத அய்யர்கள் தங்கள் இடத்தை முஸ்லீம்களுக்கு விற்று விட்டு பவானி பக்கமாக ஓரு அக்ரஹாரத்தை ஏற்படுத்தி கொண்டு புலம் பெயர்ந்து விட்டதாகவும் அவர் கேள்விப்பட்டிருந்தார். அது உண்மையா அல்லது இட்டுகட்டப்பட்ட கதையா என்பது சிங்கிற்கு தெரியாது. ஆனால் அன்யூனிபார்மில் அந்த ஏரியாவிற்குள் அவர் சில நேரம் விசாரணைக்கு சென்ற போது அக்ரஹாரத்திற்கான இலக்கணத்ேதாடு வீடுகள் அமைந்திருப்பதை அவர் கவனித்திருக்கிறார். ஓரு சமூகத்தையே ஓரு ஓற்றை கிழவனால் இருந்த இடத்தை விட்டு விரட்டியடிக்க முடிந்திருக்கிறதே என்ற ஆச்சரியம் சிங்கிற்கு பெரியார் படத்தையோ சிலையையோ பார்க்கும் போது ஏற்படும்.கோட்டி கார கிழவன் என்று புன்னகைத்துக் கொண்டார் சிங் .
கைவிடப்பட்ட பாழடைந்த தோல் தொழிற்சாலைகளை வேடிக்கை பார்த்தபடி தனது வண்டியின் வேகத்தை குறைத்தார் சிங் .ஒரு திருப்பத்தில் புத்தம் புதிய தார்சாலை ஒன்று அவர் கண்களில் தென்பட்டது. இது தான் அவன் சொன்ன இடமாக இருக்க வேண்டும் என்று சிங்கிற்கு தோன்றியது.
சிங் வந்து கொண்டிருப்பதை சிம்னியின் பதினைந் தடி இரும்பு ஆங்கிளில் உட்கார்ந்தபடி அவன் பைனாக்குலரில் பார்த்து கொண்டிருந்தான்.." சொன்னபடி வந்து விட்டீர்களா சிங்" என்றவன் மாஸ்கிற்குள் புன்னகைத்தான். மடமடவென்று கீழே இறங்கி வந்தவன் பூட்டியிருந்த அறையை திறந்தான். உள்ளே அனிதாவும் நிர்மல்குமாரும் கை கால்கள் கட்டப்பட்டு கிடந்தனர். அவர்களின் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது.
"பொறுங்கள். இன்னும் கொஞ்ச நேரம் தான்" என்றான் அவன்.
சிங் அந்த நிறம் மங்கிய போர்டை பார்த்தார். அவன் சொன்னது இந்த இடம் தான். அந்த கம்பெனியின் கதவுகள் விரியத் திறந்து கிடந்தன. உள்ளே கார், பைக் ஏதாவது நிற்கும் என்று எதிர்பார்த்திருந்த சிங் அப்படி எதையும் காணாததால் நிம்மதி பெருமூச்சு விட்டார். வண்டியை ஓரமாக ஸ்டேண்ட் போட்டு நிறுத்தியவர் செம்மண் தரையில் காலடி வைத்து நடக்க தொடங்கினார்.
"வெல்கம் மிஸ்டர் சிங் " அவன் சுவற்றின் மறைவிலிருந்து வெளியே வந்தான். அவன் மாஸ்க் அணிந்து முகத்தை மறைத்திருந்தான். கையில் துப்பாக்கி வைத்திருந்தான்.
"உங்கள் ரிவால்வரையும், செல்போனையும் கீழே போடுங்கள்" என்றான் அவன்.
"போதும் விளையாட்டு. உன் மாஸ்க்கை கழட்டு. நீ யார் என்பது எனக்கு தெரியும் " என்ற சிங் தனது செல்போனின் பேஸ்புக் பக்கத்தினை திறந்தார்.
"நீ டேக்கை எடுத்து விட்டாலும் உன் சுவற்றில் அந்த போட்டோ இருக்கும் என்பதை மறந்து விட்டாய்" என்றார் சிங் .
"நீங்கள் அதை பார்த்து விட்டீர்களா?" என்றான் அவன் அதிர்ச்சியுடன் .
"எஸ்" என்ற சிங்கால் லிஸ்டில் கடைசியாக இருந்த சரவணனின் நம்பருக்கு கால் செய்து செல்லை அருகிலிருந்த மணல் பரப்பில் டிஸ்ப்ளே கீழே போகும் படி போட்டார்.
"துப்பாக்கி ?"
சிங் துப்பாக்கியைக் கீழே போட்ட போது சரவணன் காலை அட்டெண்ட் செய்தபடி காரில் அக்ரஹாரத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்.
"போதும். மாஸ்க்கை கழற்று" என்றார் சிங் .
கோபி தன் மாஸ்க்கை கழட்டினான்.
சிங் ஹாஸ்பிடலில் செக்யூரிட்டி வேலையில் இருந்த காவலருக்கு போன் செய்தார்.
"சொல்லுங்கள் சார்"
"நான் சிங் பேசுகிறேன். அடிபட்ட ஆசாமி இப்போது எப்படி இருக்கிறார்.?"
"ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருக்கிேறாம் சார்"
"பலமான காயமா?"
"ஆமாம். அந்த பெண்ணை கத்தியால் குத்த முயன்றிருக்கிறான். நல்ல வேளையாக நம் ஆள் குறுக்கிட்டு தடுத்து அவனை பிடிக்க முயற்சி செய்தார். அதில் லேசான கத்திகுத்து காயம் "
"அந்த பெண் ?"
"அதிர்ச்சியிலும் பயத்திலும் இருக்கிறாள். "
"அந்த ஆளை அடையாளம் காண முடிந்ததா?"
"இல்லை சார். அவன் மாஸ்க் அணிந்திருந்தான். நான் பாத்ரூமிற்கு போயிருந்தேன். அந்த இடைவெளியில் தான் அவன் திடிரென உள்ளே நுழைந்து விட்டான்"
"இட்ஸ் ஓகே. டாக்டரை அவர்கள் இருவரையும் டிஸ்சார்ஜ் பண்ண சொல். இன்னும் சிறிது நேரத்தில் கோபி தன் காரோடு அங்கே வருவான். அதில் அனிதாவையும் நிர்மல்குமாரையும் ஏற்றி அனுப்புங்கள் நான் வேறு இடத்தில் அவர்களை பதுக்கி வைக்க நினைக்கிறேன். நீங்கள் காயம்பட்ட வரை கவனியுங்கள். பெண் காவலர்களை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். நான் மறுபடியும் உங்களை கூப்பிடுகிறேன்." என்றார் சிங் .
போன் இணைப்பை துண்டித்த சிங் சரவணனுக்கு மிஸ்டு கால் கொடுத்தார். சற்று நேரத்தில் அவரது செல்போன் இரண்டு முறை ரிங்காகி கட்டானது .சிங் தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்.
சற்று நேரத்திற்கு பின்னால்.சிங் தனது வண்டியை பிராமண பெரிய ஆக்ரஹாரத்தின் வழியே விரட்டி கொண்டிருந்தார். ஈரோட்டில் தோல் தொழிற்சாலை களுக்கு பெய பெற்ற இடம் இது.அய்யர்கள் மட்டுமே இருக்கும் இடங்கள் தான் அக்ரஹாரம் என்று அழைக்கப்படும். ஆனால் இங்கே பிராமணர்கள் யாரும் இல்லை. இந்த ஏரியா முழுவதும் முஸ்லீம்களால் நிறைந்து காணப்பட்டது. கோயிலுக்கு நேர் எதிராக மசூதி இருப்பதும் இரு பிரிவினருமே அடுத்தவர்விசயத்தில் தலையிடாமல் அமைதியாக அவரவர் வழிபாட்டை எசய்து கொண்டிருந்தனர். மகுதிகளில் இந்துக்கள் தாயத்து வாங்கி கட்டி கொள்வதும் பாடம் ஓதி கொள்வதும் எந்த வித்தியாசமும் இன்றி நடந்து கொண்டிருப்பதை சிங் பார்த்தி ருக்கிறார். கடவுள் இருக்கிறானோ இல்லையோ தெரியாது. ஆனால் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஏதாவது தவறாக நடந்து விட்டால் எந்த மதக் கடவுள் என்று கூட மக்கள் பேதம் பார்ப்பதில்லை. எப்படியாவது நல்லது நடந்தால் சரி என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு எத்தனை கடவுள்கள் இருந்தாலும் போதாது.
ஓருகாலத்தில் அய்யர்கள் வாழ்ந்த இந்த பகுதிகளில் இப்போது முஸ்லீம்கள் வாழ ஓரு வினோதமான காரணத்தை சிங் கேள்விப்பட்டிருந்தார். இந்த அக்ரஹாரத்தில் பெரியாருக்கு ஒரு கடை வாடகைக்கு இருந்ததாகவும் அதில் ஒரு மாட்டு கறி விற்கும் முஸ்லீம் க்கு வாடகைக்கு விட்டு விட்டதாகவும் மாட்டு கறி விற்கும் இடத்தில் இருக்க விரும்பாத அய்யர்கள் தங்கள் இடத்தை முஸ்லீம்களுக்கு விற்று விட்டு பவானி பக்கமாக ஓரு அக்ரஹாரத்தை ஏற்படுத்தி கொண்டு புலம் பெயர்ந்து விட்டதாகவும் அவர் கேள்விப்பட்டிருந்தார். அது உண்மையா அல்லது இட்டுகட்டப்பட்ட கதையா என்பது சிங்கிற்கு தெரியாது. ஆனால் அன்யூனிபார்மில் அந்த ஏரியாவிற்குள் அவர் சில நேரம் விசாரணைக்கு சென்ற போது அக்ரஹாரத்திற்கான இலக்கணத்ேதாடு வீடுகள் அமைந்திருப்பதை அவர் கவனித்திருக்கிறார். ஓரு சமூகத்தையே ஓரு ஓற்றை கிழவனால் இருந்த இடத்தை விட்டு விரட்டியடிக்க முடிந்திருக்கிறதே என்ற ஆச்சரியம் சிங்கிற்கு பெரியார் படத்தையோ சிலையையோ பார்க்கும் போது ஏற்படும்.கோட்டி கார கிழவன் என்று புன்னகைத்துக் கொண்டார் சிங் .
கைவிடப்பட்ட பாழடைந்த தோல் தொழிற்சாலைகளை வேடிக்கை பார்த்தபடி தனது வண்டியின் வேகத்தை குறைத்தார் சிங் .ஒரு திருப்பத்தில் புத்தம் புதிய தார்சாலை ஒன்று அவர் கண்களில் தென்பட்டது. இது தான் அவன் சொன்ன இடமாக இருக்க வேண்டும் என்று சிங்கிற்கு தோன்றியது.
சிங் வந்து கொண்டிருப்பதை சிம்னியின் பதினைந் தடி இரும்பு ஆங்கிளில் உட்கார்ந்தபடி அவன் பைனாக்குலரில் பார்த்து கொண்டிருந்தான்.." சொன்னபடி வந்து விட்டீர்களா சிங்" என்றவன் மாஸ்கிற்குள் புன்னகைத்தான். மடமடவென்று கீழே இறங்கி வந்தவன் பூட்டியிருந்த அறையை திறந்தான். உள்ளே அனிதாவும் நிர்மல்குமாரும் கை கால்கள் கட்டப்பட்டு கிடந்தனர். அவர்களின் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது.
"பொறுங்கள். இன்னும் கொஞ்ச நேரம் தான்" என்றான் அவன்.
சிங் அந்த நிறம் மங்கிய போர்டை பார்த்தார். அவன் சொன்னது இந்த இடம் தான். அந்த கம்பெனியின் கதவுகள் விரியத் திறந்து கிடந்தன. உள்ளே கார், பைக் ஏதாவது நிற்கும் என்று எதிர்பார்த்திருந்த சிங் அப்படி எதையும் காணாததால் நிம்மதி பெருமூச்சு விட்டார். வண்டியை ஓரமாக ஸ்டேண்ட் போட்டு நிறுத்தியவர் செம்மண் தரையில் காலடி வைத்து நடக்க தொடங்கினார்.
"வெல்கம் மிஸ்டர் சிங் " அவன் சுவற்றின் மறைவிலிருந்து வெளியே வந்தான். அவன் மாஸ்க் அணிந்து முகத்தை மறைத்திருந்தான். கையில் துப்பாக்கி வைத்திருந்தான்.
"உங்கள் ரிவால்வரையும், செல்போனையும் கீழே போடுங்கள்" என்றான் அவன்.
"போதும் விளையாட்டு. உன் மாஸ்க்கை கழட்டு. நீ யார் என்பது எனக்கு தெரியும் " என்ற சிங் தனது செல்போனின் பேஸ்புக் பக்கத்தினை திறந்தார்.
"நீ டேக்கை எடுத்து விட்டாலும் உன் சுவற்றில் அந்த போட்டோ இருக்கும் என்பதை மறந்து விட்டாய்" என்றார் சிங் .
"நீங்கள் அதை பார்த்து விட்டீர்களா?" என்றான் அவன் அதிர்ச்சியுடன் .
"எஸ்" என்ற சிங்கால் லிஸ்டில் கடைசியாக இருந்த சரவணனின் நம்பருக்கு கால் செய்து செல்லை அருகிலிருந்த மணல் பரப்பில் டிஸ்ப்ளே கீழே போகும் படி போட்டார்.
"துப்பாக்கி ?"
சிங் துப்பாக்கியைக் கீழே போட்ட போது சரவணன் காலை அட்டெண்ட் செய்தபடி காரில் அக்ரஹாரத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்.
"போதும். மாஸ்க்கை கழற்று" என்றார் சிங் .
கோபி தன் மாஸ்க்கை கழட்டினான்.