- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 11
இன்ஸ்பெக்டர் சிங் சுவற்றின் ஓரமாக கிடந்த செருப்பு குவியல்களிலிருந்து அந்த இரண்டு வித்தியாசமான ஹை ஹீல்ஸ் செருப்புகளை எடுத்தார். அந்த இரண்டு செருப்புகளையும் சிங் பேசன் ஷோ நிகழ்வுகளில் பெண் மாடல்கள் அணிந்து நடப்பதை டிவிக்களில் பார்த்திருக்கிறார். இந்த மாதிரியான செருப்புகளை குடும்ப பெண்களோ இல்லை உடனுக்குடன் பேசன் என்ற பெயரில் நவநாகரீக உடைகளை அணியும் காலேஜ் பெண்களோ இம்மாதிரியான செருப்புகளை அணிந்து சிங் பார்த்ததில்லை. அதனால் காரின் டிக்கியில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பார்ட்டை மாகவோ இல்லை முழு நேரமாகவோ மாடலிங் துறையில் இருக்க வேண்டும் என்று சிங் அனுமானித்தார். அவரது கணிப்புகள் பெரும்பாலும் பொய்த்ததில்லை.
சிங் அந்த செருப்புகளை எடுத்து கொண்டு திரும்பிய போது கதவு திறந்தது. எதிரே நின்ற டாக்டர் அருளானந்தம்" என்ன சிங்? புதிதாக செருப்பு வியாபாரம் ஏதாவது துவங்க போகிறீர்களா? போலீஸ் வேலையில் கிடைக்கும் வருமானம் போதவில்லையா?" என்றார்.
" வாங்க டாக்டர் .உங்களுக்காகத் தான் காத்து கொண்டிருக்கிறேன்" என்ற சிங் அந்த ஹை ஹீல் ஸை கீழே வைத்தார்.
"தேவையில்லாமல் அதை தேடி எடுத்திருக்க மாட்டீர்கள். அதை எடுத்து கொண்டு என் அலுவலகத்திற்கு வாருங்கள். இதைப் பற்றி உங்களிடம் பேச வேண்டியதிருக்கிறது" என்ற டாக்டர் அருளானந்தம் தன் அலுவலகத்தை நோக்கி நடந்தார்.சிங் செருப்புகளுடன் அவரை பின்தொடர்ந்தார்.
இதற்கு முன்பு நடந்த எட்டு கொலைகளுக்கும் போஸ்ட் மார்டம் செய்து ரிப்போர்ட் தந்தவர் டாக்டர் அருளானந்தம். இன்ஸ்பெக்டர் சிங் அந்த கொலைகாரனை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பதற்காக தன்னுடைய பணிக்கு வெளியேயும் பல உதவிகளை டாக்டர் செய்து கொன்டிருந்தார். அருளானந்தம் கொடுக்கும் பல தகவல்கள் சிங்கிடம் சேர்ந்து கொண்டே போனதே தவிர கொலைகாரனை பிடிக்கவோ அல்லது இனம் காணவோ அவை உதவவில்லை.
லொட லொடவென சப்தம் எழுப்பிய பேனை போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்த அருளானந்தம்" உட்காருங்கள் சிங்" என்று எதிர் நாற்காலியை காட்டினார்.
நாற்காலியில் சரிந்த சிங் "சொல்லுங்கள் டாக்டர் " என்றார்.
"நீங்கள் தான் நடந்தவற்றை சொல்ல வேண்டும்" என்றார் அருளானந்தம்.
சிங் சுருக்கமாக நடந்த கார் விபத்தையும் அதில் கிடைத்த பெண் பிணத்தை பற்றியும் கூறினார்.
"சிங் .அந்த கொலைகாரன் முதலில் பெண்களை கடத்துகிறான். எந்த நோக்கம் அல்லது என்ன காரணத்திற்காக குறிப்பிட்ட பெண்களை தேர்ந்தெடுத்து கடத்துகிறான் என்பது தான் புரியாத புதிர். அதற்கு பிறகு அவர்களை சித்ரவதை செய்து கொன்று விடுகிறான். அவர்களை அவன் கற்பழிப்பதில்லை. நடந்த ஓன்பது கொலைகளிலும் கற்பழிப்புக்கான தடயங்களோ செமனோ கிடைக்கவில்லை. ஓன்று அவன் பெண்களால் அதிகம் பாதிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். அதனால் பெண்களை அதீதமாக வெறுப்பவனாக இருக்க வேண்டும். இரண்டாவது அவனால் ஒரு பெண்ணை உடல் ரீதியாக திருப்திபடுத்த முடியாத ஆண்மை குறைவு ெகாண்டவனாக இருக்க வேண்டும்"
" இதெல்லாம் நாம் முதலிலேயே பேசியது தானே டாக்டர்?"
"ஆமாம்! ஆனால் அப்படி சந்தேகப்படும் படி ஒரு நபர் கூட நம சந்தேக வளைத்திற்குள் வரவில்லையே?"
"ஆசாமி எங்கே இருக்கின்றான் என்பது கூட நமக்கு தெரியவில்லை. இந்த கேசைப் பொறுத்தவரை நான் நிழலோடுதான் போராடி கொண்டிருக்கிறேன்."
" ஆனால் சிங் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது."
"என்ன அது?"
" அவன் கடத்தப்பட்ட பெண்களை ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து தான் கொல்கின்றான். அப்படியானால் கொலைகாரனுக்கு வீட்டை தவிர வேறு ஒரு மறைவிடம் இந்த நகரத்தில் இருக்கிறது"
சிங் அருளானந்தம் சொல்வதை யோசித்தார். கொலைகாரனின் வீடு தனிமையான இடத்தில் இருக்கலாம். இல்லைடாக்டர் சொல்வதை போல் அவனுக்கென்று தனியாக ஒரு மறைவிடம் இருக்க வேண்டும்.
"நீங்கள் சொல்வதும் சரிதான் டாக்டர் " என்றார் சிங் .
" பாருங்கள் சிங் .இதற்கு முன்னால் நடந்த எட்டு கொலைகளுக்கும் இப்போது நடந்திருக்கும் ஒன்பதாவது கொலைக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது" என்றார் அருளானந்தம்.
சிங் தடக்கென்று நிமிர்ந்தார்.
" என்ன டாக்டர் சொல்கிறீர்கள்?" என்றார் சிங் .
"கவனியுங்கள் சிங் .இதற்கு முன்பு நடந்த எட்டு கொலைகளிலும் கொலைகாரன் தன்னிடம் பிடிபட்டவர்களின் சித்ரவதையை ரசித்து பொறுமையாக செய்திருக்கிறான். அவர்களின் உடைகள் செருப்புகள் அணிகலன்கள் கூட கிடைக்காமல் முழு நிர்வாணமாகத்தான் பாடிகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்த ஓன்பதாவது கொலையில் அப்படியே தலைகீழாக நடந்திருக்கிறது. ஏதோ ஒரு இடையூறினால் கொலைகாரன் தன்னுடைய சித்ரவதை ஸ்டைலை செய்ய வே இல்லை. நேரடியாக கொலையில் இறங்கி விட்டான்."
" எதை வைத்து இதை சொல்கிறீர்கள்?" என்றார் சிங் படபடப்புடன்.
"பாடியில் கத்திகுத்து காயத்தை தவிர வேறு சித்ரவதை செய்த தடயங்கள் இல்லை. அதே நேரம் இதற்கு முன்பு கிடைத்த பாடிகள் முழு நிர்வாணமாக கிடைத்தன. இந்த முறை வித்தியாசமாக நிர்வாண உடம்பில் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இருக்கின்றன. விசயம் தெரியுமா சிங்? போர்ன் இண்டஸ்ட்ரியின் சட்ட திட்டங்களில் பெண்கள்முழு நிர்வாணமாக நடிக்க கூடாது என்பதும் ஒன்று. அதனாலேயே அதில் நடிக்கும் பெண்கள் ஷி அணிந்து நடிப்பது வழக்கம். ஷுவும் பூட்சும் ஆடைக்கு சமமானது என்று சொல்லி சட்டத்தை ஏமாற்றுகின்றனர். இந்த கேசில்ஷு அணிந்த நிலையில் பெண் பிணம் கிடைத்திருப்பதால் இதை கூறுகிறேன்."
"அப்படியானால் கொலைகாரன் ஷி லே சை அவிழ்க்க முடியாமல் அதை உடலில் விட்டு வைக்க வில்லையா?"
"இல்லை.லே சைகத்தியை வைத்து கூட கட் பண்ணி விடலாமே? ஆனால் அவன் அதை செய்யவில்லை"
" ஏன்?"
" அவனுக்கு நேரம் கிடைக்காமல் கூட இருந்திருக்கலாம். காரில் வந்தவன் கில்லர் என்றால் அவன் கடத்தியது இரண்டு பெண்களை .ஒருத்தியை அவசர அவசரமாக கொன்று டிக்கியில் ஓளித்து வைத்திருக்கிறான். இன்னொரு பெண்ணை கொல்லவில்லை"
"ஏன்?" என்றார் சிங் ஆவலுடன் .
" மில்லியன் டாலர் கேள்வி சிங்" என்றார் அருளானந்தம்
சிங் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
இன்ஸ்பெக்டர் சிங் சுவற்றின் ஓரமாக கிடந்த செருப்பு குவியல்களிலிருந்து அந்த இரண்டு வித்தியாசமான ஹை ஹீல்ஸ் செருப்புகளை எடுத்தார். அந்த இரண்டு செருப்புகளையும் சிங் பேசன் ஷோ நிகழ்வுகளில் பெண் மாடல்கள் அணிந்து நடப்பதை டிவிக்களில் பார்த்திருக்கிறார். இந்த மாதிரியான செருப்புகளை குடும்ப பெண்களோ இல்லை உடனுக்குடன் பேசன் என்ற பெயரில் நவநாகரீக உடைகளை அணியும் காலேஜ் பெண்களோ இம்மாதிரியான செருப்புகளை அணிந்து சிங் பார்த்ததில்லை. அதனால் காரின் டிக்கியில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பார்ட்டை மாகவோ இல்லை முழு நேரமாகவோ மாடலிங் துறையில் இருக்க வேண்டும் என்று சிங் அனுமானித்தார். அவரது கணிப்புகள் பெரும்பாலும் பொய்த்ததில்லை.
சிங் அந்த செருப்புகளை எடுத்து கொண்டு திரும்பிய போது கதவு திறந்தது. எதிரே நின்ற டாக்டர் அருளானந்தம்" என்ன சிங்? புதிதாக செருப்பு வியாபாரம் ஏதாவது துவங்க போகிறீர்களா? போலீஸ் வேலையில் கிடைக்கும் வருமானம் போதவில்லையா?" என்றார்.
" வாங்க டாக்டர் .உங்களுக்காகத் தான் காத்து கொண்டிருக்கிறேன்" என்ற சிங் அந்த ஹை ஹீல் ஸை கீழே வைத்தார்.
"தேவையில்லாமல் அதை தேடி எடுத்திருக்க மாட்டீர்கள். அதை எடுத்து கொண்டு என் அலுவலகத்திற்கு வாருங்கள். இதைப் பற்றி உங்களிடம் பேச வேண்டியதிருக்கிறது" என்ற டாக்டர் அருளானந்தம் தன் அலுவலகத்தை நோக்கி நடந்தார்.சிங் செருப்புகளுடன் அவரை பின்தொடர்ந்தார்.
இதற்கு முன்பு நடந்த எட்டு கொலைகளுக்கும் போஸ்ட் மார்டம் செய்து ரிப்போர்ட் தந்தவர் டாக்டர் அருளானந்தம். இன்ஸ்பெக்டர் சிங் அந்த கொலைகாரனை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பதற்காக தன்னுடைய பணிக்கு வெளியேயும் பல உதவிகளை டாக்டர் செய்து கொன்டிருந்தார். அருளானந்தம் கொடுக்கும் பல தகவல்கள் சிங்கிடம் சேர்ந்து கொண்டே போனதே தவிர கொலைகாரனை பிடிக்கவோ அல்லது இனம் காணவோ அவை உதவவில்லை.
லொட லொடவென சப்தம் எழுப்பிய பேனை போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்த அருளானந்தம்" உட்காருங்கள் சிங்" என்று எதிர் நாற்காலியை காட்டினார்.
நாற்காலியில் சரிந்த சிங் "சொல்லுங்கள் டாக்டர் " என்றார்.
"நீங்கள் தான் நடந்தவற்றை சொல்ல வேண்டும்" என்றார் அருளானந்தம்.
சிங் சுருக்கமாக நடந்த கார் விபத்தையும் அதில் கிடைத்த பெண் பிணத்தை பற்றியும் கூறினார்.
"சிங் .அந்த கொலைகாரன் முதலில் பெண்களை கடத்துகிறான். எந்த நோக்கம் அல்லது என்ன காரணத்திற்காக குறிப்பிட்ட பெண்களை தேர்ந்தெடுத்து கடத்துகிறான் என்பது தான் புரியாத புதிர். அதற்கு பிறகு அவர்களை சித்ரவதை செய்து கொன்று விடுகிறான். அவர்களை அவன் கற்பழிப்பதில்லை. நடந்த ஓன்பது கொலைகளிலும் கற்பழிப்புக்கான தடயங்களோ செமனோ கிடைக்கவில்லை. ஓன்று அவன் பெண்களால் அதிகம் பாதிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். அதனால் பெண்களை அதீதமாக வெறுப்பவனாக இருக்க வேண்டும். இரண்டாவது அவனால் ஒரு பெண்ணை உடல் ரீதியாக திருப்திபடுத்த முடியாத ஆண்மை குறைவு ெகாண்டவனாக இருக்க வேண்டும்"
" இதெல்லாம் நாம் முதலிலேயே பேசியது தானே டாக்டர்?"
"ஆமாம்! ஆனால் அப்படி சந்தேகப்படும் படி ஒரு நபர் கூட நம சந்தேக வளைத்திற்குள் வரவில்லையே?"
"ஆசாமி எங்கே இருக்கின்றான் என்பது கூட நமக்கு தெரியவில்லை. இந்த கேசைப் பொறுத்தவரை நான் நிழலோடுதான் போராடி கொண்டிருக்கிறேன்."
" ஆனால் சிங் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது."
"என்ன அது?"
" அவன் கடத்தப்பட்ட பெண்களை ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து தான் கொல்கின்றான். அப்படியானால் கொலைகாரனுக்கு வீட்டை தவிர வேறு ஒரு மறைவிடம் இந்த நகரத்தில் இருக்கிறது"
சிங் அருளானந்தம் சொல்வதை யோசித்தார். கொலைகாரனின் வீடு தனிமையான இடத்தில் இருக்கலாம். இல்லைடாக்டர் சொல்வதை போல் அவனுக்கென்று தனியாக ஒரு மறைவிடம் இருக்க வேண்டும்.
"நீங்கள் சொல்வதும் சரிதான் டாக்டர் " என்றார் சிங் .
" பாருங்கள் சிங் .இதற்கு முன்னால் நடந்த எட்டு கொலைகளுக்கும் இப்போது நடந்திருக்கும் ஒன்பதாவது கொலைக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது" என்றார் அருளானந்தம்.
சிங் தடக்கென்று நிமிர்ந்தார்.
" என்ன டாக்டர் சொல்கிறீர்கள்?" என்றார் சிங் .
"கவனியுங்கள் சிங் .இதற்கு முன்பு நடந்த எட்டு கொலைகளிலும் கொலைகாரன் தன்னிடம் பிடிபட்டவர்களின் சித்ரவதையை ரசித்து பொறுமையாக செய்திருக்கிறான். அவர்களின் உடைகள் செருப்புகள் அணிகலன்கள் கூட கிடைக்காமல் முழு நிர்வாணமாகத்தான் பாடிகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்த ஓன்பதாவது கொலையில் அப்படியே தலைகீழாக நடந்திருக்கிறது. ஏதோ ஒரு இடையூறினால் கொலைகாரன் தன்னுடைய சித்ரவதை ஸ்டைலை செய்ய வே இல்லை. நேரடியாக கொலையில் இறங்கி விட்டான்."
" எதை வைத்து இதை சொல்கிறீர்கள்?" என்றார் சிங் படபடப்புடன்.
"பாடியில் கத்திகுத்து காயத்தை தவிர வேறு சித்ரவதை செய்த தடயங்கள் இல்லை. அதே நேரம் இதற்கு முன்பு கிடைத்த பாடிகள் முழு நிர்வாணமாக கிடைத்தன. இந்த முறை வித்தியாசமாக நிர்வாண உடம்பில் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இருக்கின்றன. விசயம் தெரியுமா சிங்? போர்ன் இண்டஸ்ட்ரியின் சட்ட திட்டங்களில் பெண்கள்முழு நிர்வாணமாக நடிக்க கூடாது என்பதும் ஒன்று. அதனாலேயே அதில் நடிக்கும் பெண்கள் ஷி அணிந்து நடிப்பது வழக்கம். ஷுவும் பூட்சும் ஆடைக்கு சமமானது என்று சொல்லி சட்டத்தை ஏமாற்றுகின்றனர். இந்த கேசில்ஷு அணிந்த நிலையில் பெண் பிணம் கிடைத்திருப்பதால் இதை கூறுகிறேன்."
"அப்படியானால் கொலைகாரன் ஷி லே சை அவிழ்க்க முடியாமல் அதை உடலில் விட்டு வைக்க வில்லையா?"
"இல்லை.லே சைகத்தியை வைத்து கூட கட் பண்ணி விடலாமே? ஆனால் அவன் அதை செய்யவில்லை"
" ஏன்?"
" அவனுக்கு நேரம் கிடைக்காமல் கூட இருந்திருக்கலாம். காரில் வந்தவன் கில்லர் என்றால் அவன் கடத்தியது இரண்டு பெண்களை .ஒருத்தியை அவசர அவசரமாக கொன்று டிக்கியில் ஓளித்து வைத்திருக்கிறான். இன்னொரு பெண்ணை கொல்லவில்லை"
"ஏன்?" என்றார் சிங் ஆவலுடன் .
" மில்லியன் டாலர் கேள்வி சிங்" என்றார் அருளானந்தம்
சிங் குழப்பத்தில் ஆழ்ந்தார்.