- Messages
- 402
- Reaction score
- 114
- Points
- 93
மாறாத நேசம்!
அத்தியாயம் 4
பொன்மணி மகனிடம் சொன்னது போல், அடுத்த நாள் சீர்மதியன் பண்ணைக்கு சென்று வந்த பின்னே, மகள் தூய முல்லையை பார்க்க கணவன் ,மகனுடன் சென்றார்.
அன்று காலை எழுந்ததிலிருந்தே தூயமுல்லை ஒரு துள்ளலுடனேயே வலம் வந்தாள்.அதைக் கண்ட கனியமுதன், "மேடம் என்ன இன்னைக்கு ரெக்கை இல்லாமலே பறக்கிறீங்க போல ..?" என்று கேட்டபடியே தடபுடலாக சமைத்துக் கொண்டிருந்த மனைவியின் அருகில் சென்று நின்றான்.
"அப்படியெல்லாம் இல்லையே!"
"எனக்கு தெரியாதா? என் பொண்டாட்டியைப் பத்தி..போன்ல பேசுனாலே முகம் ஜொலிக்கும்.இப்ப நேர்ல வாராங்கன்னா சொல்லவா வேணும்.." என்ற படி மனைவியின் தோள்களில் முகம் புதைத்தான்.
கணவனின் செய்கையில் முகம் சிவந்தாலும், ஒரு கையில் அவனின் கேசத்தை கோதியபடியே , "ம்.! மூன்று பேரும் சேர்ந்து வந்து ரொம்ப நாளாச்சா?அது தான் பால் பாயாசம் செஞ்சுட்டு இருக்கேன்.."
"ம்..! செய்..செய்..ஆனா,என்ன டீல்ல விட்டுறாதீங்க மேடம்.."
"உங்கள விடுவேனா? "என்றபடி கணவனின் புறம் திரும்பி,அவனின் கன்னத்தை கிள்ளினாள்.
இருவரின் மோனநிலையை கலைப்பது போல் தூங்கிக் கொண்டிருந்த மகளின் சினுங்கல் கேட்கவும், கணவனிடமிருந்து விலகி மகளிடம் சென்றாள்.
அதன் பிறகு நேரம் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. கணவனின் உதவியுடன், ஒரு வழியாக சமையல் வேலையை முடித்துவிட்டு, தன் பிறந்தவீட்டாருக்காக காத்திருந்தாள்.
கனியமுதனும் அன்று வேலைக்கு செல்லவில்லை. அவனுமே,தன் மாமனார் வீட்டினர் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தான்.
சொன்ன நேரத்திற்கு கோவழகன் குடும்பத்துடன் வந்ததும். மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நேரம் பறந்தது.
கனியமுதனுக்கு தாய் தந்தை இல்லாததால் , மனைவியின் குடும்பத்தை தன் குடும்பமாகவே பாவித்தான்.
பொன்மணி மகளுக்கு செய்து எடுத்து வந்த பலகாரங்களை கொடுத்துவிட்டு, மகளின் உடல்நிலையை பற்றி விசாரித்தவர் அவருக்கு தெரிந்த சில..பல ஆலோசனைகளை அன்னையாக கூறினார்.
பேத்தி ஏந்திழையை கோவழகன் மடியில் அமர்த்தி கதைச் சொல்ல.. கனியமுதனும்,சீர்மதியனும் வெளித் திண்ணையில் அமர்ந்து, மனம் விட்டு பேசிக் கொண்டு இருந்தார்கள்.
சீர்மதியனுக்கு எப்போதுமே கனியமுதன் என்றால் மிகவும் பிடிக்கும். அவன் மனம் குழம்பும் போதெல்லாம், அமுதனிடம் தான் மனம் விட்டு பேசுவான்.
அழுதனும் ,எந்த ஈகோவும் இல்லாமல் சீர்மதியனிடம் அக்கறையாக பேசுவான். அன்றும், சீர்மதியனின் முகத்தை பார்த்தே, ஏதோ குழப்பத்தில் இருப்பதை அறிந்து கொண்டவன், என்னவென்று கேட்டான்.
சீர்மதியனும் அதற்காகவே காத்திருந்தவன் போல..தன் மனதை அழுத்திய விசயத்தை தன் மாமனிடம் கொட்டி தீர்த்தான்.
சீர்மதியன் சொன்னதைக் கேட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தான் அமுதன்.
"ஏன் மாமா எதுவும் பேசமாட்டிறீங்க. நான் என்ன செய்யட்டும்?" என்று கலக்கமாக கேட்டான்.
"சீரா, நான் உங்கிட்ட கேட்கிற கேள்விக்கு உண்மையா பதில் சொல்லு. உனக்கு நிஜமாவே தண்மதியை பிடிக்குமா?இல்லை பழி வாங்கனும்ன்னு இப்படி யோசிக்கிறீயா?"
"மாமா நான் போய் பழி வாங்குவேனா? எனக்கு தண்மதியை ரொம்ப பிடிக்கும்.அவளை கல்யாணம் பண்ண இது ஒரு நல்ல வாய்ப்பு..பாட்டி வேறு குடும்பத்தை ஒண்ணு சேர்க்க இதை விட்டா வேறு வழியில்லைங்குறாங்க.."
"அதெல்லாம் சரி.. ஆனால் அவளுக்கு உன்னை பிடிக்குமா?இதில் ஒரு பெண்ணோட கவுரவம் இருக்கே அதை பற்றி யோசித்தையா?"
" மாமா தண்மதிக்கு என்னைப் பிடிக்காது.அது நன்றாக தெரியும்.ஆனால் அவளைத் தவிர என்னால் வேறு யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது.."
"சீரா ,தண்மதிக்கு உன்னை பிடிக்காதுன்னு தெரிந்தே உங்கள் இருவர் வாழ்க்கையையும் பணயம் வைக்க போறீயா..?"
"மாமா திருமணம் நடந்தால் போதும் .என் அன்பு அவளை மாற்றும்..அந்த நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு.."
"சீரா நான் திரும்பவும் சொல்றேன்.இதில் ஒரு பெண்ணோட கவுரவம் இருக்கே அதை பற்றி யோசிச்சையா?"
"நானும், அதை யோசிப்பதால் தான் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறேன்."
"சீரா..இதனால் நாளை கல்யாணத்துக்கு அப்புறம், உனக்கும் தண்மதிக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு தான் எனக்கும் பயமா இருக்கு.."
"மாமா, நானும் அதை யோசிச்சேன்..அதனால் தான், எனக்கும் தயக்கமா இருக்கு. தண்மதி பற்றி உங்களுக்கே தெரியும்.அவள் அப்படியே தாத்தா குணம். நல்லவிதமாக எதையும் புரிந்து கொள்ள மாட்டாள்."
"சீரா..தண்மதி மட்டுமில்லை எந்த பெண்ணுக்குமே இப்படி ஒரு சூழலில் திருமணம் நடந்தால், அதை ஏற்றுக் கொள்வது கஷ்டம் தான்.."
"மாமா, ஆனால், இதை தவிர எனக்கு வேறு வழி தெரியலை.. அம்மாவும்,அப்பாவும் செய்த தப்பை நான் ஒரு நாளும் செய்ய மாட்டேன். எனக்கு இருக்கும் ஒரே வழி இது தான்.."
"இதற்கு மட்டும் உன் தாத்தா எப்படி சம்மதிப்பாருன்னு நினைக்கிறே.."
"தெரியலை ..ஏதோ , ஒரு குருட்டு நம்பிக்கை! நல்லதே நினைப்போம். குடும்பம் ஒண்ணு சேரனும். எனக்கு தண்மதியும் வேண்டும். அதற்கு இது தான் ஒரே வழி.."என்று தீர்க்கமாக சொன்னவனிடம் மறுத்து எதுவும் சொல்லாமல்.. "சரி உனக்கு சரின்னு பட்டதை செய்.." என்றான் கனியமுதன்.
மாலை வரை மகளுடன் இருந்து விட்டு, பேத்தி ஏந்திழையை அழைத்துக் கொண்டு கோவழகன் குடும்பம் தங்கள் வீடு வந்து சேர்ந்தது.
முறை வழுதிக்கோ, சீர்மதியனிடம் சண்டை போட்டுக் கொண்டு வந்ததிலிருந்தே அவனின் மனம் நிலை இல்லாமல் தவித்தது. என்ன செய்வது என்று இரவும் பகலுமாக சிந்தித்தவன் ,ஒரு முடிவுடன் தாத்தாவிடம் தன் விருப்பத்தைச் சொன்னான்.
அருமைநாயகத்திற்கும், பேரன் சொன்னது மனதிற்கு சரி என்று படவும், மனைவியிடமும்,மகனிடமும் வழுதி சொன்னதைப் பற்றி பேசினார்.
ஆனால் தாய்,மகன் இருவருக்கும் அது பேரதிர்ச்சியாக இருந்தது. செம்பியனோ, தன் ஆசையை எப்படி தந்தையிடம் சொல்லுவது என்று தவித்தார்.
நாச்சியோ தன் ஆசையில் மண்ணள்ளிப் போட நினைக்கும் கணவனிடம் என்ன சொல்லி தடுப்பது என்று மனதிற்குள் குமறினார்.
மனைவி,மகன் ஆசையைப் பற்றி அறியாமல் தன் பெண்ணால் ஏற்பட்ட சங்கடத்தை தன் பேத்தியின் மூலம் ஈடுசெய்யலாம் என்று அருமைநாயகம் நினைத்து இது தான் சரி என்று நினைத்து தன் முடிவைச் சொன்னார்.
தன் கண்வனின் முடிவைக் கேட்டு தூயநாச்சி திகைத்தவர், மனதிற்குள் 'இந்த மனுசங்கிட்ட எப்படிச் சொல்லிப் புரிய வைத்து, இதை தடுப்பது..' என்று குழம்பினார்.
ஆனால் மருமகள் பூந்தாழையோ, மாமனார் சொன்ன விசயத்தை கேட்டு அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்தார்.
பூந்தாழை மகிழவில்லை என்றால் தான் ஆச்சரியம்.தன் அண்ணனே தனக்கு சம்பந்தியானால்? அதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப் போகுது அவளுக்கு!
அதுவும்,இந்த வீட்டு பெண்ணால் தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம்.அதே வீட்டு பெண்ணால் சரியாகப் போகிறது என்று நினைத்தாலே அவள் மனம் இனித்தது.
தன் அண்ணன் மகள், தனக்கு மருமகளாக வந்தால், நன்றாக இருக்குமென்று ரொம்ப நாளாக மனதிற்குள் ஆசைப்பட்டாள்.ஆனால், மாமனார் ஒத்துக் கொள்வாரா? என்று கவலைப் பட்டவளுக்கு, அவரே அவளை அழைத்து விசயத்தை சொன்னதும் மட்டில்லா மகிழ்ச்சியை கொடுத்தது.
அதுமட்டுமின்றி ,மகளுக்கும் தன் அண்ணனின் மகன் தான் சரியான பொருத்தமாக இருப்பான் என்று உறுதியாக நம்பினார்.
முடிவெடுத்தவுடன் அதை தள்ளிப்போடாமல் அருமை நாயகம் உடனே காரியத்தில் இறங்கினார்.
எல்லாம் நல்ல படியாக நடந்து கொண்டிருக்கும் போது.பூந்தாழையின் அண்ணன் மகன் சேரன் தனக்கு தண்மதியை மணந்து கொள்வதில் விருப்பமில்லை என்று கூறி அனைவரின் தலையிலும் இடியை இறக்கினான்.
ஏனென்று கேட்டதற்கு தனக்கு கிராமத்து பெண் சரியாக வராது என்று உறுதியாக மறுத்து விட்டான்.
ஆனால்,அவன் கூறியது எல்லாரையும் விட தண்மதிக்குத் தான் பேரதிர்ச்சியாகவும்,அவமானமாகவும் இருந்தது.
பூந்தாழையின் அண்ணன் குடும்பம் சென்னையில் வசித்து வந்தனர். நல்ல வசதியும் கூட..அதனால் அவர்களிடம் மேல் தட்டு மிடுக்கு அதிகமாகவே இருந்தது.
தங்கள் பிள்ளைகளையும் நன்கு படிக்கவும் வைத்திருந்தார் . அதுவும் மகனை வெளிநாடு அனுப்பி படிக்க வைத்தார்.அவன் தான் இப்போது அவர்களின் தொழிலை பார்த்துக் கொள்கிறான்.
தண்மதிக்கும் அவன் மீது கொஞ்சம் ஈடுபாடு இருந்தது.அதற்கு காரணம் அவர்களின் நாகரீக வாழ்க்கை தான்.
தாத்தா தன் திருமண பேச்சை அவனுடன் எடுத்ததுமே, தண்மதி மகிழ்ச்சியில் பூரித்துப் போனாள்.ஆனால், அவன் தன்னை நிராகாரித்ததும் மனதிற்குள் மிகவும் உடைந்து போனாள். வெளியில் காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளேயே மருகினாள்.
வழுதியோ, மனதிற்குள்' தங்கைக்காகத் தான் இந்த திருமண முடிவையே நாம் எடுத்தோம்.ஆனால் ,அவளை வேண்டாமென்று சொல்லிட்டானே..' என்று சேரன் மீது கடுங்கோபம் கொண்டான்.
அந்த கோபத்தில்,தன் தாத்தாவிடம் எனக்கும் அவன் தங்கை வேண்டாமென்று உறுதியாக சொல்லிவிட்டான்.
அருமைநாயகம் பெண் கொடுத்து பெண் எடுக்கலாம் என்று வழுதி சொன்னதை ஏற்றிருந்தார்.ஆனால் பேரன் இப்போது மறுக்கவும் இவன் பேச்சை கேட்டு முடிவெடுத்தது தப்போ? என்று நினைத்தவர் ,வழுதியிடம் காரணம் கேட்டார்.
வழுதி தன் மனதில் நினைத்ததை சொன்னான்.
பேரன் கூறியதைக் கேட்ட அருமைநாயகத்திற்கு, பேரனின் முடிவு பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழியில்லாமல் சிறிது நாள் கழித்து ,வழுதி திருமணத்தைப் பற்றி பேசிக் கொள்ளலாம். என்று பூந்தாழையின் அண்ணன் வீட்டாரிடம் கூறி விட்டார்.
நாச்சியும் , செம்பியன் மட்டுமே திருமண ஏற்பாடு நின்றதில் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பூந்தாழைக்கு தன் அண்ணன் மகன் மீது அளவு கடந்த கோபம் வந்தது. தன் மகளுக்கு என்ன குறைச்சல்! எப்படி இவன் தன் மகளை வேண்டாமென்று சொல்லாம் என்று மனதிற்குள் கருவினார்.
தண்மதி மனதிற்குள் மிகவும் நொருங்கி போனாள்.நிராகரிப்பு அவளை மிகவும் பாதித்தது. யாரையுமே பார்க்காமல் தனக்குள் ஒடுங்கினாள்.
அறைக்குள்ளே அடைந்து கிடந்த பேத்தியின் நிலையைக் கண்ட நாச்சி, "தணு இப்ப என்ன குடியா மூழ்கிருச்சு..? இதற்குப் போய் இப்படி கவலைப் படறே.. "என்று கடிந்து கொண்டார்.
பேத்தியை பழைய நிலைக்கு மீட்க்கும் பொருட்டு, "தணும்மா நான் வாழ்ந்தவ சொல்றேன் கேட்டுக்கோ..ஒண்ணு நம்மள விட்டு போதுனா? அதை விட நல்லதா நமக்கு வேறு கிடைக்க போகுதுன்னு அர்த்தம்.உன்னை, வேண்டாம்ன்னு சொன்னவன் முன்னாடி . நீ நல்லா வாழ்ந்து காட்டணும்.." என்றார்.
பாட்டியின் வார்த்தைகள் பேத்திக்கு கண்களில் நீர் கோர்க்க வைத்தது. அதைக் கண்ட நாச்சி துடித்துப் போனார்.எப்பொழுதும் வம்புக்கு நிற்கும் பேத்தியின் கண்ணீர் அவரையுமே பாதித்தது.
பேத்தியின் அருகில் சென்று அவளின் கண்களில் வடியத் துடித்துக் கொண்டிருந்த கண்ணீரை சுண்டி விட்டவர். "இந்த கண்ணீருக்கு, அவன் தகுதியே இல்லாதவன்.படிச்ச புள்ள செய்ற காரியாம இது? ஒருத்தன் நம்மளை வேண்டாம்னு சொன்னா? நம் வாழ்க்கையே முடிஞ்சு போச்சா?அவனே இந்த பொண்ணை கட்டலையேன்னு உணர வைக்கிற மாதிரி வாழனும் புரிஞ்சுச்சா.."என்றவர் பேத்தியின் முகத்தை கைகளில் ஏந்தி உச்சி முகர்ந்தார்.
தண்மதி அமைதியாகவே இருப்பதைக் கண்டு.. "தணு போய் குளிச்சு கிளம்பி வா..நாம அம்மன் கோவிலுக்கு போய்ட்டு வரலாம். வீட்டுக்குள்ளையே அடைஞ்சு கிடந்தா? தேவை இல்லாத நெனப்பு தான் வரும்." என்று பேத்தியை அதட்டி உருட்டி கிளம்பச் செய்தார்.
தண்மதியும் பாட்டியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கிளம்பினாள்.
சீர்மதியன் ஏழிசை வந்திருப்பதால் தன் வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து, தினமும் அக்கா மகளை வெளியில் அழைத்துச் செல்வதை ஒரு வேலையாகவே வைத்திருந்தான்.
அன்றும் அதே போல் வந்தவன்,தன் அம்மாவும் கிளம்பி இருப்பதை பார்த்து, " என்னம்மா ஏதாவது வாங்கனுமா? டவுனுக்கு போகுமா?" என்றான்.
"இல்ல சீரா பாப்பாவைக் கூட்டிட்டு அம்மன் கோவிலுக்கு போய், ஒரு அர்ச்சனை செய்துட்டு வரலாம்ன்னு கிளம்பினேன்ப்பா.."என்ற தாய்யிடம்,
"ஓ..! அப்படியா ,சரி வாங்க.. நானே கூட்டிட்டு போறேன்.. அப்பா வந்துட்டாரா? "
"இல்லப்பா தோட்டத்தில் ஏதோ வேலை இருக்கு. நேரமாகும்ன்னு சொல்லிட்டுத் தான் போனார் .."என்றார்.
" அப்படியா..? சரி.. இருங்கம்மா, நான் குளிச்சுட்டு வந்துறேன்.." என்றவன் தன் அறையை நோக்கி சொன்றான்.
பொன்மணி,மகன் குளித்து வருவதற்குள் சூடாக பாலை காய்ச்சி டம்ளரில் ஊற்றினார்.
சீர்மதியன் குளித்து முடித்து வேட்டி சட்டையில் தாயாராக வந்தான்.தாய் கொடுத்த பாலை வாங்கி குடித்துவிட்டு, காலி டம்ளரை தாயிடம் கொடுத்துவிட்டு,விளையாடிக் கொண்டிருந்த அக்கா மகளைத் தூக்கி, கொஞ்சியவாறு வண்டியில் அமர வைத்தவன், தன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
நேசம் தொடரும்..
Hi friends,
மாறாத நேசம்! அடுத்த அத்தியாயம் (4) போட்டு விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
விரைவில் அடுத்த அத்தியாத்துடன் வருகிறேன்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
அத்தியாயம் 4
பொன்மணி மகனிடம் சொன்னது போல், அடுத்த நாள் சீர்மதியன் பண்ணைக்கு சென்று வந்த பின்னே, மகள் தூய முல்லையை பார்க்க கணவன் ,மகனுடன் சென்றார்.
அன்று காலை எழுந்ததிலிருந்தே தூயமுல்லை ஒரு துள்ளலுடனேயே வலம் வந்தாள்.அதைக் கண்ட கனியமுதன், "மேடம் என்ன இன்னைக்கு ரெக்கை இல்லாமலே பறக்கிறீங்க போல ..?" என்று கேட்டபடியே தடபுடலாக சமைத்துக் கொண்டிருந்த மனைவியின் அருகில் சென்று நின்றான்.
"அப்படியெல்லாம் இல்லையே!"
"எனக்கு தெரியாதா? என் பொண்டாட்டியைப் பத்தி..போன்ல பேசுனாலே முகம் ஜொலிக்கும்.இப்ப நேர்ல வாராங்கன்னா சொல்லவா வேணும்.." என்ற படி மனைவியின் தோள்களில் முகம் புதைத்தான்.
கணவனின் செய்கையில் முகம் சிவந்தாலும், ஒரு கையில் அவனின் கேசத்தை கோதியபடியே , "ம்.! மூன்று பேரும் சேர்ந்து வந்து ரொம்ப நாளாச்சா?அது தான் பால் பாயாசம் செஞ்சுட்டு இருக்கேன்.."
"ம்..! செய்..செய்..ஆனா,என்ன டீல்ல விட்டுறாதீங்க மேடம்.."
"உங்கள விடுவேனா? "என்றபடி கணவனின் புறம் திரும்பி,அவனின் கன்னத்தை கிள்ளினாள்.
இருவரின் மோனநிலையை கலைப்பது போல் தூங்கிக் கொண்டிருந்த மகளின் சினுங்கல் கேட்கவும், கணவனிடமிருந்து விலகி மகளிடம் சென்றாள்.
அதன் பிறகு நேரம் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. கணவனின் உதவியுடன், ஒரு வழியாக சமையல் வேலையை முடித்துவிட்டு, தன் பிறந்தவீட்டாருக்காக காத்திருந்தாள்.
கனியமுதனும் அன்று வேலைக்கு செல்லவில்லை. அவனுமே,தன் மாமனார் வீட்டினர் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தான்.
சொன்ன நேரத்திற்கு கோவழகன் குடும்பத்துடன் வந்ததும். மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நேரம் பறந்தது.
கனியமுதனுக்கு தாய் தந்தை இல்லாததால் , மனைவியின் குடும்பத்தை தன் குடும்பமாகவே பாவித்தான்.
பொன்மணி மகளுக்கு செய்து எடுத்து வந்த பலகாரங்களை கொடுத்துவிட்டு, மகளின் உடல்நிலையை பற்றி விசாரித்தவர் அவருக்கு தெரிந்த சில..பல ஆலோசனைகளை அன்னையாக கூறினார்.
பேத்தி ஏந்திழையை கோவழகன் மடியில் அமர்த்தி கதைச் சொல்ல.. கனியமுதனும்,சீர்மதியனும் வெளித் திண்ணையில் அமர்ந்து, மனம் விட்டு பேசிக் கொண்டு இருந்தார்கள்.
சீர்மதியனுக்கு எப்போதுமே கனியமுதன் என்றால் மிகவும் பிடிக்கும். அவன் மனம் குழம்பும் போதெல்லாம், அமுதனிடம் தான் மனம் விட்டு பேசுவான்.
அழுதனும் ,எந்த ஈகோவும் இல்லாமல் சீர்மதியனிடம் அக்கறையாக பேசுவான். அன்றும், சீர்மதியனின் முகத்தை பார்த்தே, ஏதோ குழப்பத்தில் இருப்பதை அறிந்து கொண்டவன், என்னவென்று கேட்டான்.
சீர்மதியனும் அதற்காகவே காத்திருந்தவன் போல..தன் மனதை அழுத்திய விசயத்தை தன் மாமனிடம் கொட்டி தீர்த்தான்.
சீர்மதியன் சொன்னதைக் கேட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தான் அமுதன்.
"ஏன் மாமா எதுவும் பேசமாட்டிறீங்க. நான் என்ன செய்யட்டும்?" என்று கலக்கமாக கேட்டான்.
"சீரா, நான் உங்கிட்ட கேட்கிற கேள்விக்கு உண்மையா பதில் சொல்லு. உனக்கு நிஜமாவே தண்மதியை பிடிக்குமா?இல்லை பழி வாங்கனும்ன்னு இப்படி யோசிக்கிறீயா?"
"மாமா நான் போய் பழி வாங்குவேனா? எனக்கு தண்மதியை ரொம்ப பிடிக்கும்.அவளை கல்யாணம் பண்ண இது ஒரு நல்ல வாய்ப்பு..பாட்டி வேறு குடும்பத்தை ஒண்ணு சேர்க்க இதை விட்டா வேறு வழியில்லைங்குறாங்க.."
"அதெல்லாம் சரி.. ஆனால் அவளுக்கு உன்னை பிடிக்குமா?இதில் ஒரு பெண்ணோட கவுரவம் இருக்கே அதை பற்றி யோசித்தையா?"
" மாமா தண்மதிக்கு என்னைப் பிடிக்காது.அது நன்றாக தெரியும்.ஆனால் அவளைத் தவிர என்னால் வேறு யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது.."
"சீரா ,தண்மதிக்கு உன்னை பிடிக்காதுன்னு தெரிந்தே உங்கள் இருவர் வாழ்க்கையையும் பணயம் வைக்க போறீயா..?"
"மாமா திருமணம் நடந்தால் போதும் .என் அன்பு அவளை மாற்றும்..அந்த நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு.."
"சீரா நான் திரும்பவும் சொல்றேன்.இதில் ஒரு பெண்ணோட கவுரவம் இருக்கே அதை பற்றி யோசிச்சையா?"
"நானும், அதை யோசிப்பதால் தான் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறேன்."
"சீரா..இதனால் நாளை கல்யாணத்துக்கு அப்புறம், உனக்கும் தண்மதிக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு தான் எனக்கும் பயமா இருக்கு.."
"மாமா, நானும் அதை யோசிச்சேன்..அதனால் தான், எனக்கும் தயக்கமா இருக்கு. தண்மதி பற்றி உங்களுக்கே தெரியும்.அவள் அப்படியே தாத்தா குணம். நல்லவிதமாக எதையும் புரிந்து கொள்ள மாட்டாள்."
"சீரா..தண்மதி மட்டுமில்லை எந்த பெண்ணுக்குமே இப்படி ஒரு சூழலில் திருமணம் நடந்தால், அதை ஏற்றுக் கொள்வது கஷ்டம் தான்.."
"மாமா, ஆனால், இதை தவிர எனக்கு வேறு வழி தெரியலை.. அம்மாவும்,அப்பாவும் செய்த தப்பை நான் ஒரு நாளும் செய்ய மாட்டேன். எனக்கு இருக்கும் ஒரே வழி இது தான்.."
"இதற்கு மட்டும் உன் தாத்தா எப்படி சம்மதிப்பாருன்னு நினைக்கிறே.."
"தெரியலை ..ஏதோ , ஒரு குருட்டு நம்பிக்கை! நல்லதே நினைப்போம். குடும்பம் ஒண்ணு சேரனும். எனக்கு தண்மதியும் வேண்டும். அதற்கு இது தான் ஒரே வழி.."என்று தீர்க்கமாக சொன்னவனிடம் மறுத்து எதுவும் சொல்லாமல்.. "சரி உனக்கு சரின்னு பட்டதை செய்.." என்றான் கனியமுதன்.
மாலை வரை மகளுடன் இருந்து விட்டு, பேத்தி ஏந்திழையை அழைத்துக் கொண்டு கோவழகன் குடும்பம் தங்கள் வீடு வந்து சேர்ந்தது.
முறை வழுதிக்கோ, சீர்மதியனிடம் சண்டை போட்டுக் கொண்டு வந்ததிலிருந்தே அவனின் மனம் நிலை இல்லாமல் தவித்தது. என்ன செய்வது என்று இரவும் பகலுமாக சிந்தித்தவன் ,ஒரு முடிவுடன் தாத்தாவிடம் தன் விருப்பத்தைச் சொன்னான்.
அருமைநாயகத்திற்கும், பேரன் சொன்னது மனதிற்கு சரி என்று படவும், மனைவியிடமும்,மகனிடமும் வழுதி சொன்னதைப் பற்றி பேசினார்.
ஆனால் தாய்,மகன் இருவருக்கும் அது பேரதிர்ச்சியாக இருந்தது. செம்பியனோ, தன் ஆசையை எப்படி தந்தையிடம் சொல்லுவது என்று தவித்தார்.
நாச்சியோ தன் ஆசையில் மண்ணள்ளிப் போட நினைக்கும் கணவனிடம் என்ன சொல்லி தடுப்பது என்று மனதிற்குள் குமறினார்.
மனைவி,மகன் ஆசையைப் பற்றி அறியாமல் தன் பெண்ணால் ஏற்பட்ட சங்கடத்தை தன் பேத்தியின் மூலம் ஈடுசெய்யலாம் என்று அருமைநாயகம் நினைத்து இது தான் சரி என்று நினைத்து தன் முடிவைச் சொன்னார்.
தன் கண்வனின் முடிவைக் கேட்டு தூயநாச்சி திகைத்தவர், மனதிற்குள் 'இந்த மனுசங்கிட்ட எப்படிச் சொல்லிப் புரிய வைத்து, இதை தடுப்பது..' என்று குழம்பினார்.
ஆனால் மருமகள் பூந்தாழையோ, மாமனார் சொன்ன விசயத்தை கேட்டு அளவில்லா மகிழ்ச்சியில் திளைத்தார்.
பூந்தாழை மகிழவில்லை என்றால் தான் ஆச்சரியம்.தன் அண்ணனே தனக்கு சம்பந்தியானால்? அதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப் போகுது அவளுக்கு!
அதுவும்,இந்த வீட்டு பெண்ணால் தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம்.அதே வீட்டு பெண்ணால் சரியாகப் போகிறது என்று நினைத்தாலே அவள் மனம் இனித்தது.
தன் அண்ணன் மகள், தனக்கு மருமகளாக வந்தால், நன்றாக இருக்குமென்று ரொம்ப நாளாக மனதிற்குள் ஆசைப்பட்டாள்.ஆனால், மாமனார் ஒத்துக் கொள்வாரா? என்று கவலைப் பட்டவளுக்கு, அவரே அவளை அழைத்து விசயத்தை சொன்னதும் மட்டில்லா மகிழ்ச்சியை கொடுத்தது.
அதுமட்டுமின்றி ,மகளுக்கும் தன் அண்ணனின் மகன் தான் சரியான பொருத்தமாக இருப்பான் என்று உறுதியாக நம்பினார்.
முடிவெடுத்தவுடன் அதை தள்ளிப்போடாமல் அருமை நாயகம் உடனே காரியத்தில் இறங்கினார்.
எல்லாம் நல்ல படியாக நடந்து கொண்டிருக்கும் போது.பூந்தாழையின் அண்ணன் மகன் சேரன் தனக்கு தண்மதியை மணந்து கொள்வதில் விருப்பமில்லை என்று கூறி அனைவரின் தலையிலும் இடியை இறக்கினான்.
ஏனென்று கேட்டதற்கு தனக்கு கிராமத்து பெண் சரியாக வராது என்று உறுதியாக மறுத்து விட்டான்.
ஆனால்,அவன் கூறியது எல்லாரையும் விட தண்மதிக்குத் தான் பேரதிர்ச்சியாகவும்,அவமானமாகவும் இருந்தது.
பூந்தாழையின் அண்ணன் குடும்பம் சென்னையில் வசித்து வந்தனர். நல்ல வசதியும் கூட..அதனால் அவர்களிடம் மேல் தட்டு மிடுக்கு அதிகமாகவே இருந்தது.
தங்கள் பிள்ளைகளையும் நன்கு படிக்கவும் வைத்திருந்தார் . அதுவும் மகனை வெளிநாடு அனுப்பி படிக்க வைத்தார்.அவன் தான் இப்போது அவர்களின் தொழிலை பார்த்துக் கொள்கிறான்.
தண்மதிக்கும் அவன் மீது கொஞ்சம் ஈடுபாடு இருந்தது.அதற்கு காரணம் அவர்களின் நாகரீக வாழ்க்கை தான்.
தாத்தா தன் திருமண பேச்சை அவனுடன் எடுத்ததுமே, தண்மதி மகிழ்ச்சியில் பூரித்துப் போனாள்.ஆனால், அவன் தன்னை நிராகாரித்ததும் மனதிற்குள் மிகவும் உடைந்து போனாள். வெளியில் காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளேயே மருகினாள்.
வழுதியோ, மனதிற்குள்' தங்கைக்காகத் தான் இந்த திருமண முடிவையே நாம் எடுத்தோம்.ஆனால் ,அவளை வேண்டாமென்று சொல்லிட்டானே..' என்று சேரன் மீது கடுங்கோபம் கொண்டான்.
அந்த கோபத்தில்,தன் தாத்தாவிடம் எனக்கும் அவன் தங்கை வேண்டாமென்று உறுதியாக சொல்லிவிட்டான்.
அருமைநாயகம் பெண் கொடுத்து பெண் எடுக்கலாம் என்று வழுதி சொன்னதை ஏற்றிருந்தார்.ஆனால் பேரன் இப்போது மறுக்கவும் இவன் பேச்சை கேட்டு முடிவெடுத்தது தப்போ? என்று நினைத்தவர் ,வழுதியிடம் காரணம் கேட்டார்.
வழுதி தன் மனதில் நினைத்ததை சொன்னான்.
பேரன் கூறியதைக் கேட்ட அருமைநாயகத்திற்கு, பேரனின் முடிவு பிடிக்கவில்லை என்றாலும், வேறு வழியில்லாமல் சிறிது நாள் கழித்து ,வழுதி திருமணத்தைப் பற்றி பேசிக் கொள்ளலாம். என்று பூந்தாழையின் அண்ணன் வீட்டாரிடம் கூறி விட்டார்.
நாச்சியும் , செம்பியன் மட்டுமே திருமண ஏற்பாடு நின்றதில் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பூந்தாழைக்கு தன் அண்ணன் மகன் மீது அளவு கடந்த கோபம் வந்தது. தன் மகளுக்கு என்ன குறைச்சல்! எப்படி இவன் தன் மகளை வேண்டாமென்று சொல்லாம் என்று மனதிற்குள் கருவினார்.
தண்மதி மனதிற்குள் மிகவும் நொருங்கி போனாள்.நிராகரிப்பு அவளை மிகவும் பாதித்தது. யாரையுமே பார்க்காமல் தனக்குள் ஒடுங்கினாள்.
அறைக்குள்ளே அடைந்து கிடந்த பேத்தியின் நிலையைக் கண்ட நாச்சி, "தணு இப்ப என்ன குடியா மூழ்கிருச்சு..? இதற்குப் போய் இப்படி கவலைப் படறே.. "என்று கடிந்து கொண்டார்.
பேத்தியை பழைய நிலைக்கு மீட்க்கும் பொருட்டு, "தணும்மா நான் வாழ்ந்தவ சொல்றேன் கேட்டுக்கோ..ஒண்ணு நம்மள விட்டு போதுனா? அதை விட நல்லதா நமக்கு வேறு கிடைக்க போகுதுன்னு அர்த்தம்.உன்னை, வேண்டாம்ன்னு சொன்னவன் முன்னாடி . நீ நல்லா வாழ்ந்து காட்டணும்.." என்றார்.
பாட்டியின் வார்த்தைகள் பேத்திக்கு கண்களில் நீர் கோர்க்க வைத்தது. அதைக் கண்ட நாச்சி துடித்துப் போனார்.எப்பொழுதும் வம்புக்கு நிற்கும் பேத்தியின் கண்ணீர் அவரையுமே பாதித்தது.
பேத்தியின் அருகில் சென்று அவளின் கண்களில் வடியத் துடித்துக் கொண்டிருந்த கண்ணீரை சுண்டி விட்டவர். "இந்த கண்ணீருக்கு, அவன் தகுதியே இல்லாதவன்.படிச்ச புள்ள செய்ற காரியாம இது? ஒருத்தன் நம்மளை வேண்டாம்னு சொன்னா? நம் வாழ்க்கையே முடிஞ்சு போச்சா?அவனே இந்த பொண்ணை கட்டலையேன்னு உணர வைக்கிற மாதிரி வாழனும் புரிஞ்சுச்சா.."என்றவர் பேத்தியின் முகத்தை கைகளில் ஏந்தி உச்சி முகர்ந்தார்.
தண்மதி அமைதியாகவே இருப்பதைக் கண்டு.. "தணு போய் குளிச்சு கிளம்பி வா..நாம அம்மன் கோவிலுக்கு போய்ட்டு வரலாம். வீட்டுக்குள்ளையே அடைஞ்சு கிடந்தா? தேவை இல்லாத நெனப்பு தான் வரும்." என்று பேத்தியை அதட்டி உருட்டி கிளம்பச் செய்தார்.
தண்மதியும் பாட்டியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கிளம்பினாள்.
சீர்மதியன் ஏழிசை வந்திருப்பதால் தன் வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து, தினமும் அக்கா மகளை வெளியில் அழைத்துச் செல்வதை ஒரு வேலையாகவே வைத்திருந்தான்.
அன்றும் அதே போல் வந்தவன்,தன் அம்மாவும் கிளம்பி இருப்பதை பார்த்து, " என்னம்மா ஏதாவது வாங்கனுமா? டவுனுக்கு போகுமா?" என்றான்.
"இல்ல சீரா பாப்பாவைக் கூட்டிட்டு அம்மன் கோவிலுக்கு போய், ஒரு அர்ச்சனை செய்துட்டு வரலாம்ன்னு கிளம்பினேன்ப்பா.."என்ற தாய்யிடம்,
"ஓ..! அப்படியா ,சரி வாங்க.. நானே கூட்டிட்டு போறேன்.. அப்பா வந்துட்டாரா? "
"இல்லப்பா தோட்டத்தில் ஏதோ வேலை இருக்கு. நேரமாகும்ன்னு சொல்லிட்டுத் தான் போனார் .."என்றார்.
" அப்படியா..? சரி.. இருங்கம்மா, நான் குளிச்சுட்டு வந்துறேன்.." என்றவன் தன் அறையை நோக்கி சொன்றான்.
பொன்மணி,மகன் குளித்து வருவதற்குள் சூடாக பாலை காய்ச்சி டம்ளரில் ஊற்றினார்.
சீர்மதியன் குளித்து முடித்து வேட்டி சட்டையில் தாயாராக வந்தான்.தாய் கொடுத்த பாலை வாங்கி குடித்துவிட்டு, காலி டம்ளரை தாயிடம் கொடுத்துவிட்டு,விளையாடிக் கொண்டிருந்த அக்கா மகளைத் தூக்கி, கொஞ்சியவாறு வண்டியில் அமர வைத்தவன், தன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
நேசம் தொடரும்..
Hi friends,
மாறாத நேசம்! அடுத்த அத்தியாயம் (4) போட்டு விட்டேன்.படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
விரைவில் அடுத்த அத்தியாத்துடன் வருகிறேன்.
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்