அத்தியாயம்:2
டேய் அமுதா, இப்போ எதுக்குடா அவள அடிச்ச" என்றான் ராக்ஸ் சற்று கோபமாய்.அஜித்ரோவோ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
அமுதன் எதுவும் கூறாமல் அமைதியாய் நிற்க,
"உங்கிட்ட தான் கேக்குறேன் பதில் சொல்லு'...
என்னடா சொல்லனும்.முன்னபின்ன பழக்கமே இல்லாத ஒரு பையன் கையை பிடிச்சிட்டு நிற்கிறா..அத பாத்துட்டு நான் சும்மா இருக்கனுமா என்றான் கோபமாய்…
அவ என் கையை பிடிச்சிட்டு நிக்கிறதுல உனக்கு என்னடா பிரச்சனை என்றான் சட்டென..
ஹே...எனக்கு என்ன பிரச்சினை.. நீங்க கையை பிடிச்சிட்டு நில்லுங்கள்.கட்டிபிடிச்சிட்டு நில்லுங்க..என்ன எழவோ பண்ணுங்க..ஆனா ஏன் வீட்ல நின்று பண்ணாதீங்க..இது அந்த மாதிரி இடம் இல்ல என்று வார்த்தையை எக்குதப்பாய் விட,
டேய் இதுக்கு மேல ஒருவார்த்தை பேசுன நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது என்று கூற, சட்டென போதும் நிறுத்துங்க..என்னால் உங்களுக்குள்ள சண்டை வேண்டாம்.நான் கிளம்புறேன் என்று கூறியவள் அந்த இடத்தை விட்டு கிளம்பினாள்..அமுதனும் ஒன்றும் நடக்காதது போல் அங்கிருந்து கிளம்ப,ராக்ஸ் மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே நின்றிருந்தான்…
ப்பாஆஆஆ... என்று அழைத்தபடியே உள்ளே நுழைந்தவளை,எதுக்குடி இப்படி கத்துற....நாங்க இங்க தான் இருக்கோம் என்று கடிந்து கொண்டார் சுந்தரி..
ஏம்மா,என்னாச்சு எதுக்கு இப்படி கத்துற என்று கேட்ட கிருஷ்ணனிடம்,ப்பா அந்த சிடுமூஞ்சி அடிச்சிட்... என்று கூற வந்தவள்,சுந்தரி அவளை முறைத்து முறைபில்,
"அவரு என்ன அடிச்சிட்டாரு ப்பாஆ"என்றாள் முகத்தை சுளித்து கொண்டே..,
என்னது மாப்பிள்ளை உன்ன அடிச்சிட்டாரா,ஏன்மா நீ என்ன பண்ண,நீ யாருனு தெரிஞ்சி போச்சா என்று அடுக்கடுக்காக கேள்விகளை தொடுக்க,
ய்யோஓ,ப்பாஆஆ கொஞ்சம் அமைதியா இருங்க,அந்த சிடுமூஞ்சிக்கு நான் யாருனு தெரியாது..நம்ப ராக்ஸ் கிட்ட கொஞ்சம் குளோஸா பேசிட்டேன்..அது அந்த பக்கி பாத்துட்டு வந்து ஒரே அறை..என்றவள் சுந்தரியை பார்க்க,
"உன்ன திருத்தவே முடியாது"என்பது போல் ஒரு பார்வை பார்த்து விட்டு,
ஏன்டி அவருக்கு சந்தேகம் வர மாதிரியா நடந்துப்ப.கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாமே..!!
இருந்திருக்கலாம் தான்..இப்படி அறை விழும்னு நான் கனவா கண்டேன் என்று புலம்ப,
ஹாஹாஹா சரி வா..உன்ன அடிச்சதுக்கு ஒரு நாள் அவன பழி வாங்கிடலாம்..இப்போ வந்து சாப்பிடு என்றவர்,சுந்தரி வா வந்து சாப்பாடு எடுத்து வை என்றார்..
நீங்க போய் உக்காருங்க.நான் இதோ வரேன் என்றவர் கிச்சனுக்குள் நுழைய போக,
வீட்ல யாருங்க என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் ராக்ஸ்.."வா தம்பி நல்ல நேரத்துக்கு தான் வந்திருக்க"நீயும் வந்து சாப்பிடு என்ற சுந்தரியை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ராக்ஸ்..
ஹே 'ரா அதான் அம்மா சொல்றாங்கள,வா வந்து சாப்பிடு என்று அழைத்தவளிடம்.,ஆமா நீங்க எல்லாம் யாரு.. உங்களுக்கு எப்படி என்ன தெரியும்..என்ன கடத்திட்டு போக குடும்பத்தோட ஃப்ளான் பண்ணி வந்திருக்கீங்களா..!
அவன் கூறியதை கேட்டு மூவரும் சிரிக்க,
அஜித்ராவோ,எப்படி கரக்டா கண்டுபிடிச்ச,ஆமா நாங்க உன்ன கடந்த தான் வந்தோம்..உன்ன மட்டுமில்ல உன் கூட இருக்கவனையும் சேர்த்து கடத்துவோம்,உங்கள கடத்திட்டு போய் உங்க கண்ணு,காது,கிட்னி எல்லாத்தையும் எடுத்துட்டு உங்கள காட்டுல தூக்கி போட்டுடுவோம்..அப்பறம் உங்கள் உடல காக்க ,கழுகு எல்லாம் திண்னுடும் என்று அங்கிருந்த கத்தியை எடுத்து அவனது முகத்திற்கு நேரே ஆட்டி ஆட்டி கூற,
ராக்ஸ்க்கு வியர்த்து கொட்டியது.கால்கள் தடதடவென ஆட ஆரம்பித்தன..
அதனை பார்த்த மூவரும் வாய்விட்டு சிரித்தனர்..
அடியேய் சும்மா இருக்க மாட்டியா..அவனே குழப்பத்துல இருக்கான்.நீ வேற அவன பயமுறுத்துற என்ற சுந்தரி, அவ சும்மா சொல்றா தம்பி நீ வா உட்கார்ந்து சாப்பிடு என்று அவனை அழைத்து ஒரு தட்டு வைத்து உணவு பறிமாறினார்..
கிருஷ்ணனோ,பயப்படமா சாப்பிடுப்பா..உனக்கு எல்லாம் தெளிவா சொல்றோம் என்றவர் சாப்பிட ஆரம்பித்தார்..
ப்பாஆஆ..டிபன் செமையா இருக்கு..நான் இதுவரைக்கும் இப்படி சாப்பிடதே இல்ல..ம்மா கொஞ்சம் சாம்பார் ஊத்துங்க..அப்படியே இரண்டு இட்லி வைங்க என்றவன் சற்று முன் இருந்த பயம் நீங்கி இட்லி சாம்பாரை ஒரு கட்டு கட்டினான்.பிறகு கையை கழுவி விட்டு இப்போ சொல்லுங்க.யாரு நீங்க..எங்கள உங்களுக்கு எப்படி தெரியும்.நீங்க எங்கிருந்து வரீங்க..சொல்லுங்க..சொல்லுங்க என்று பாட்ஷா பட ஸ்டைலில் கேட்டுக் கொண்டிருந்தான்…
அவன் உட்கார்ந்து கேட்ட விதத்தில் மூவருமே சிரித்து விட்டனர்…
ஹலோ என்னா சிரிப்பு..நான் யாரு தெரியுமா..?என் பேக் ரவுண்ட் தெரியுமா..?என்று வில்லன் மாதிரி வசனம் பேச…
தெரியுமே என்றார் கிருஷ்ணன் பொறுமையாய்..!
எ..என்..என்ன தெரியும் என்றான் சற்று மெதுவாய்..
உன் பேரு ராக்ஸ்..நீ ஸ்கூல் படிக்கும் போது உன்னோட அப்பா அம்மா ஒரு ஆக்ஸிடன்ட்ல இறந்து போட்டாங்க..நீ ஆசிரமத்துல தான் வளர்ந்த..உன்ன படிக்க வச்சது எல்லாமே யாரோ முகம் தெரியாத ஒருத்தர்..அவர் பாக்கனும்னு ரொம்ப நாளாக ஆசை..ஆனா உன்னால பாக்க முடியல.அவர் சொல்லி தான் நீ இங்க அமுதன் கூட இருக்க..என்று முடித்தவர்,இது போதுமா இல்ல…அ என்று கூறி சிரிக்க..
போதும் சார்.இதுக்கு மேல் என்னால் சஸ்பென்ஸ் தாங்க முடியாது.தயவு செய்து நீங்க எல்லாம் யாருனு சொல்லிடுங்க என்று காலில் விழாத குறையாக கெஞ்ச ஆரம்பித்து விட்டான்..
கிருஷ்ணனோ,"ஒரு நிமிஷம் என்று கூறிவிட்டு அவரது போனை எடுத்து எதோ ஒரு நம்பருக்கு அழைக்க,ராக்ஸின் பாக்கெட்டில் இருந்த போன் "க்ளிங் க்ளிங்" என்று சப்தம் எழுப்பியது..ஒன்றும் புரியாமல் எடுத்தவன் அதில் "அப்பா" என்று சேவ் செய்திருந்த நம்பரை பார்த்து,
ச்சூஊஊ..கொஞ்சம் அமைதியா இருங்க என்றவன் போனை எடுத்து "ஹலோ சார்"என்றான்..
அடுத்த நிமிடம் என்னப்பா "ரா நல்லா இருக்கியா" என்று கேட்டவரை பார்த்து,அவனுடைய கையில் இருந்த போன் நழுவி கீழே விழுந்தது..
ச..ச..சார்..நீ..நீங்களா..என்றான் நம்ப முடியாத ஆச்சரியத்துடன்..
என்னப்பா இப்போதாவது சந்தேகம் தீந்துச்சா..இல்ல...
இனிமே நீங்க எதுவும் சொல்ல வேணாம்..நீங்க யாருனு தெரிஞ்சி போச்சு என்றவன் சட்டென அவரை கட்டிபிடித்து கொண்டான்…
சார்... உங்களால தான் நான் இன்னைக்கு ஒரு நல்ல நிலைமையில் இருக்கேன்..எத்தனையோ முறை உங்கள பாக்க நெனச்சிருக்கேன்..ஆனா முடியல..என்றவன் விம்மி அவ ஆரம்பித்தான்..
ஹே அழாத ரா என்றவர், அவர்கள் எதற்காக இங்கு வந்தனர் என்பதையும் கூறினார்..,
சார் உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசு..என்றவன் நீங்க கவலை படாதீங்க..கூடிய சீக்கிரம் அவன் மனச மாத்தி அவனுக்கும் நம்ம அஜிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்பு என்றான்…
இவன் இங்கே சபதம் எடுக்க,அலுவலகத்தில் அமுதனோ ஒரு பெண்ணை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான்..
நீங்க எல்லாம் எதுக்கு வேலைக்கு வரீங்க..பேசாம வீட்ல போய் இருங்க..ஒரு வேலை உருப்படியா செய்றது இல்ல..என்று திட்டிக் கொண்டிருந்தான்..
சாரி சார்….
ஆனா ஊனா சாரி சொல்லிடுங்க..முதல்ல கிளம்புங்க.என் கண்ணு முன்னாடி நிக்காதீங்க என்று கோபமாய் கூற அந்த பெண் அங்கிருந்து சென்றாள்..
அப்போது உள்ளே வந்த அவனது நண்பன் விக்னேஷ், "ஹாய் அமுதா உனக்கு ஒரு "குட் நீயூஸ்" இருக்கு என்றான்..
யாருக்கு "குட் நீயூஸ்"என்றான் முகத்தை விரைப்பாக வைத்துக் கொண்டு..
எங்களுக்கு குட் நீயூஸ்..உனக்கு பேட் நீயூஸ் என்றவனை புரியாது பார்க்க,
எஸ், நம்ப ஆபீஸ்ல புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணிருக்கா..பாக்க செம செக்ஸியா இருக்கா..நம்ம பசங்க எல்லாம் அவள பார்த்து ஜொள்ளு விடுறாங்க..அவள கட்டிக்க போறவன் குடுத்து வச்சவன்.. அவளோட வளைவு,நெளிவு சான்ஸ்சே இல்ல போ.. எவனுக்கு அதிஷ்டம் இருக்கோ..நானும் ஒரு அப்ளிகேஷன் போட்டு வச்சிருக்கேன்.என்று கூற..,
ஒ...அப்படியா...என்று முடித்துக் கொண்டான்.."டேய் நான் எவ்ளோ பெரிய விசயம் சொல்லிருக்கேன்.நீ அப்படியானு சாதாரணமா கேட்குற…
வேற என்ன பண்ணனும்…
நீ கிளம்பு..முதல்ல என்கூட வா..நீ வந்து அவள பார்த்த நீயும் ஒரு அப்ளிகேஷன் போடுவ... என்றவன் அவனை வழுகட்டாயமாக இழுத்துச் சென்றான்…
அங்கே முட்டிக்கு மேல் வரை குட்டியாய் ஒரு ஸ்கர்ட் அணிந்து மேலே ஒரு வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தாள் ஒருத்தி..
அவளின் அருகே சென்றவன் "ஹாய் சஞ்சனா"என்று கூற..
சட்டென திரும்பியவள்..அங்கு நின்றிருந்த அமுதனை பார்த்து சற்று தடுமாறினாள்..
ஹாய் சஞ்சு..ஹீ ஈஸ் அமுதன்.கனியமுதன்..என்று அறிமுகப்படுத்த.., "ஹேய் கனியா நீயா"என்று ஆச்சரியத்துடன் கையை நீட்ட,அதுவரை அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அவனை விக்கி உசுப்ப,சட்டென சுயநினைவுக்கு வந்தான்.
இவன் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா..?என்ற விக்கி, "டேய்"கையை குடுடா என்று அவனது கையை பிடித்து இழுக்க,அடுத்த நிமிடம் "பளார்"
என்ற சத்தம் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது…
விக்கி கண்களில் பூச்சி பறந்தது.. எதற்காக அடித்தான் என்று தெரியாமல் கன்னத்தை தடவிக் கொண்டே அவனை முறைக்க.. சுற்றியிருந்த அனைவரும் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தனர்..
சஞ்சனா நடப்பது ஒன்றும் புரியாமல் நின்றிருக்க,அமுதன்
"ஏன்டா பொய் சொன்ன"என்றான்..
"நான் என்ன பொய்டா சொன்னேன்"..என்றான் கன்னத்தை தடவியபடி..
பாக்க செம்ம அழகா இருப்பா.இவள கட்டிக்க போறவன் குடுத்து வச்சவன் ப்ளா ப்ளானு ஏதேதோ சொன்ன..நம்பி வந்து பார்த்தா அட்டு பிகரா இருக்கு..இதுக்கு தான் இவ்வளோ பில்டப்பா,"போடா டேய்..போய் வேலைய பாருடா"என்று கூறிவிட்டு,அந்த இடத்தை விட்டு நகர்ந்து எதுவும் நடக்காதது போல் தன் அறையில் சென்று விட்ட பணியை தொடர்ந்தார்..நடப்பது ஒன்றும் புரியாமல் நின்றிருந்த சஞ்சனாவிற்கு அங்கு இருந்த அனைவரும் அவளை பார்த்து சிரித்தது அவளை கொதிநிலைக்கே கொண்டு சென்றது..
சிறிது நேரத்தில் அவனது அறை கதவை 'படார் என்று திறந்த கொண்டு உள்ளே வந்தாள் சஞ்சனா..அவள் வந்தது தெரிந்தும் அவளை ஏறெடுத்தும் பார்க்காது கடமையே கண்ணாய் இருந்தான்..அது அவளை மேலும் எரிச்சல் படுத்தியது..
அவன் முகத்திற்கு அருகே சொடுக்கிட்டு அழைக்க,"என்ன" என்பது போல் அவளை பார்த்தான்..
உனக்கு என்ன பிரச்சனை.எதுக்காக அவனை அடிச்ச..உன்ன இங்க பார்த்ததும் எவ்ளோ சந்தோச பட்டேன்..நீ இன்னும் மாறல..அப்படியே தான் இருக்க.அதே முரட்டு தனம்.."நீ திருத்தவே மாட்டியா" என்று அவள் கோபமாய் கத்த..,
அதுவரை பொறுமையாய் அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்,சட்டென எழுந்து அவளது கழுத்தை பிடித்தான்..இதனை சற்றும் எதிர்பார்க்காதவள் அவனிடம் இருந்து விடுபட முயன்றும் அவளால் முடியவில்லை..
"என்னடி"விட்டா ரொம்ப பேசுற..நான் பழைய அமுதன் கிடையாது..நீ என்ன பேசினாலும் வாங்கிட்டு போக.. ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து போய்டு.இல்ல எனக்கு இருக்குற ஆத்திரத்துக்கு உன்ன இங்கையே புதச்சிடுவேன் என்று கண்கள் சிவக்க கூறினான்..
அவனை இப்படி ஒரு நிலையில் இதுவரை பார்த்திராத அவளுக்கு சற்று பயமாகவே இருந்தது..இருந்தும் தைரியத்தை வரவழைத்து கொண்டு,
இதோ பாரு இப்ப நானும் நீ நினைக்கிற சஞ்சனா இல்ல...நான் நினைச்சா இப்போ இந்த நிமிடமே உன்னை வேலையை விட்டு தூக்க முடியும்.. ஆனா நான் அதை செய்ய மாட்டேன்..இங்க எல்லார் முன்னாடியும் என்ன அசிங்க படுத்துன உன்ன என் பின்னாடி சுத்த வைக்கல நான் சஞ்சனா இல்ல.. ஆவேசமாய் கூறினாள்..
அதுவரை அவள் கூறியதைக் பொறுமையாய் கேட்டவன் ஹாஹாஹா என்று சிரித்தான்..
அவன் சிரிப்பது புரியாமல் அவள் கோவமாய் பார்க்க,"உன் பின்னாடி,ஹாஹா..நான்,செம்ம காமெடி என்று சிரித்தான்,உன்னால் முடிஞ்சத செய் என்று கூறிவிட்டு தன் பணியை தொடர்ந்தான்..
அவனின் நக்கல் பேச்சு அவளை மேலும் வெறுப்பேத்த அந்த அறையை விட்டு வெளியேறினாள்..