- Messages
- 36
- Reaction score
- 31
- Points
- 33
காதல் இல்லாம எந்த மனிதனும் இல்ல. அந்த காதல் ஒருத்தியை எப்படி எல்லாம் மாற்றும். எப்படி எல்லாம் பித்து பிடிக்க வைக்கும்.அவள் உயிரையே உருக வைக்குமா.. இதோ இந்த மீராவின் காதல் என்ன செய்கிறது பாருங்கள்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
************************
அவனது கையணைப்பிற்குள் அவனது மார்போடு ஒன்றியிருந்தவளை அவன் குரல் அழைத்தது.
"ஓய் கண்ணம்மா இங்க பாருடி..."
அவனை நிமிர்ந்தும் பார்க்க அவளால் இயலவில்லை. அவனது கைஅணைப்பிற்குள்ளேயே கரைந்துவிட மாட்டோமா என்பது போல் அவன் சட்டையை இன்னும் இறுக்கமாய் பற்றி மார்புக்குள் மேலும் ஒன்றினாள்.
அவளது அணைப்பு அவன் மீதுள்ள அவளின் அதீதகாதலை அப்பட்டமாய் வெளிப்படுத்தியது. அவள் உச்சஞ்சதையில் அழுந்த முத்தமிட்டவன் நெஞ்சோடு சேர்த்து ஒரு சிசுவை பொத்தி வைத்து காக்கும் தாயாய் அவளை தன் நெஞ்சுக்குள் பொத்தி புதைத்துக் கொண்டான் கிருஷ்ணா.
அவன் கைக்குள் இருந்தபடியே "கிருஷ்ணா.." என்றழைத்தாள்.
"ம்ம்..."
என்னை எப்பவும் இப்படியே பாத்துப்பியா கிருஷ்ணா...
அணைப்பு விலகாமலேயே ஒரு கையால் அவள் முகவாய் பற்றி நிமிர்த்தியவன்
"என்னடா..." என்றான் வாஞ்சையாய்
"உன்னை நான் ரொம்ப கஷ்டபடுத்துறேனா கிருஷ்ணா..."
ஏய்.. லூசா டி நீ... உன்னை நான் பாத்துக்காம வேற யார் பார்த்துப்பாங்க... என் செல்லத்த பாத்துக்கறதை விட வேறென்ன எனக்கு வேலை இருக்கு. இந்த மண்டைக்குள்ள இருக்க குட்டி மூளைய ரொம்ப கசக்காம ஒழுங்கா மேரி சிஸ்டர் பேச்சை கேட்டு மெடிசின் போட்டுக்கோ.. அடம் பிடிக்காதே டி.. என அவளை எட்டி நிறுத்தினான்.
அவன் கண்களை நேருக்கு நேராய் பார்த்தவள் கண்கள் கலங்கி இருந்தது. அதை பார்த்த கிருஷ்ணாவின் முகம் இறுகியது.
"பார்த்தியா கோவப்படுற..." என மீண்டும் அவனோட அவள் ஒன்ற
அவள் தோள் பற்றி அவளை விடுவித்து எட்டி நிறுத்தியவன்
இங்க பாரு மீரா. நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல. நான் இல்லேன்னாலும் நீ இருக்கனும். எல்லாத்துக்கும் என்னை எதிர்பார்க்க கூடாது. ஒரு சாதாரண விஷயத்துக்கு கூட இப்படி இருந்தா எப்படி டீ என சலித்துக் கொள்ள மீராவுக்கு அவன் வார்த்தைகள் வலியைக் கொடுத்தது.
****************************
நடக்கத் தொடங்கியவளின் நினைவு மீண்டும் கிருஷ்ணாவிடமே சென்றது. பெங்களுர் சாலைகளில் அதிகாலை காற்று முகத்தில் மோத இந்த நடைநயிற்ச்சியை கற்று கொடுத்தது அவன் தானே.
இப்படி ஏழரை வரை தூங்காத பேபி... நாளைலேர்ந்து என்னோட வாக்கிங் வா என்று சொன்னதோடு நில்லாமல்.. அதை மறந்துவிட்டு உறங்கிய அவளை அவளது விடுதிக்கு வெளியே இருந்து அலைபேசியில் எழுப்பி அழைத்துச் செல்வதை வழக்கமாக்கியவன்.
கீஈஈஈஈஈஈஈ... என ஹார்ன் அடித்தபடி அவளை கடந்த இருசக்கரவாகனத்தை கண்டு மிரட்சியோடு இவள் ஸ்தம்பித்து நிற்க..
'ஹேய் பேபி ரோட்ல பாத்து வாடி. அப்படி என்னதான் யோசிப்பயோ..' என அவன் கடிந்து கொள்ளும் வழக்கமான வசனமாய் அவனது குரல் அங்கேயும் அவள் காதுகளில் ஒலித்தது.
தலையைபிடித்தபடி சாலையோரமாய் அப்படியே நின்றாள்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இன்று முதல் வாரம் இருமுறை மீராவின் காதலோடு பயணிப்போம்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
************************
அவனது கையணைப்பிற்குள் அவனது மார்போடு ஒன்றியிருந்தவளை அவன் குரல் அழைத்தது.
"ஓய் கண்ணம்மா இங்க பாருடி..."
அவனை நிமிர்ந்தும் பார்க்க அவளால் இயலவில்லை. அவனது கைஅணைப்பிற்குள்ளேயே கரைந்துவிட மாட்டோமா என்பது போல் அவன் சட்டையை இன்னும் இறுக்கமாய் பற்றி மார்புக்குள் மேலும் ஒன்றினாள்.
அவளது அணைப்பு அவன் மீதுள்ள அவளின் அதீதகாதலை அப்பட்டமாய் வெளிப்படுத்தியது. அவள் உச்சஞ்சதையில் அழுந்த முத்தமிட்டவன் நெஞ்சோடு சேர்த்து ஒரு சிசுவை பொத்தி வைத்து காக்கும் தாயாய் அவளை தன் நெஞ்சுக்குள் பொத்தி புதைத்துக் கொண்டான் கிருஷ்ணா.
அவன் கைக்குள் இருந்தபடியே "கிருஷ்ணா.." என்றழைத்தாள்.
"ம்ம்..."
என்னை எப்பவும் இப்படியே பாத்துப்பியா கிருஷ்ணா...
அணைப்பு விலகாமலேயே ஒரு கையால் அவள் முகவாய் பற்றி நிமிர்த்தியவன்
"என்னடா..." என்றான் வாஞ்சையாய்
"உன்னை நான் ரொம்ப கஷ்டபடுத்துறேனா கிருஷ்ணா..."
ஏய்.. லூசா டி நீ... உன்னை நான் பாத்துக்காம வேற யார் பார்த்துப்பாங்க... என் செல்லத்த பாத்துக்கறதை விட வேறென்ன எனக்கு வேலை இருக்கு. இந்த மண்டைக்குள்ள இருக்க குட்டி மூளைய ரொம்ப கசக்காம ஒழுங்கா மேரி சிஸ்டர் பேச்சை கேட்டு மெடிசின் போட்டுக்கோ.. அடம் பிடிக்காதே டி.. என அவளை எட்டி நிறுத்தினான்.
அவன் கண்களை நேருக்கு நேராய் பார்த்தவள் கண்கள் கலங்கி இருந்தது. அதை பார்த்த கிருஷ்ணாவின் முகம் இறுகியது.
"பார்த்தியா கோவப்படுற..." என மீண்டும் அவனோட அவள் ஒன்ற
அவள் தோள் பற்றி அவளை விடுவித்து எட்டி நிறுத்தியவன்
இங்க பாரு மீரா. நீ ஒன்னும் சின்ன குழந்தை இல்ல. நான் இல்லேன்னாலும் நீ இருக்கனும். எல்லாத்துக்கும் என்னை எதிர்பார்க்க கூடாது. ஒரு சாதாரண விஷயத்துக்கு கூட இப்படி இருந்தா எப்படி டீ என சலித்துக் கொள்ள மீராவுக்கு அவன் வார்த்தைகள் வலியைக் கொடுத்தது.
****************************
நடக்கத் தொடங்கியவளின் நினைவு மீண்டும் கிருஷ்ணாவிடமே சென்றது. பெங்களுர் சாலைகளில் அதிகாலை காற்று முகத்தில் மோத இந்த நடைநயிற்ச்சியை கற்று கொடுத்தது அவன் தானே.
இப்படி ஏழரை வரை தூங்காத பேபி... நாளைலேர்ந்து என்னோட வாக்கிங் வா என்று சொன்னதோடு நில்லாமல்.. அதை மறந்துவிட்டு உறங்கிய அவளை அவளது விடுதிக்கு வெளியே இருந்து அலைபேசியில் எழுப்பி அழைத்துச் செல்வதை வழக்கமாக்கியவன்.
கீஈஈஈஈஈஈஈ... என ஹார்ன் அடித்தபடி அவளை கடந்த இருசக்கரவாகனத்தை கண்டு மிரட்சியோடு இவள் ஸ்தம்பித்து நிற்க..
'ஹேய் பேபி ரோட்ல பாத்து வாடி. அப்படி என்னதான் யோசிப்பயோ..' என அவன் கடிந்து கொள்ளும் வழக்கமான வசனமாய் அவனது குரல் அங்கேயும் அவள் காதுகளில் ஒலித்தது.
தலையைபிடித்தபடி சாலையோரமாய் அப்படியே நின்றாள்.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இன்று முதல் வாரம் இருமுறை மீராவின் காதலோடு பயணிப்போம்.