- Messages
- 77
- Reaction score
- 57
- Points
- 18
அன்பு தோழமைகளே.....
என் இதயம் நடிப்பதில்லை —-கதையோடு வந்திருக்கிறேன். இதுவும் மல்லிச்சரம் போல மறுபதிப்புதான்.
2013ஆம் வருடம் மதுமிதா மகளிர் நாவல் என்கின்ற மாதஇதழில் பிரிசுரமானது....
அதனை படிக்காதவர்களுக்கு இதோ நமது சகாப்தம் தளத்தில் .
நாயகன்: கிருஷ்ணகாந்த்
நாயகி:ரக்ஷிதா
இதோ முதல் பதிவு படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
சகாப்தம் லைக்ஸ் 👍👍👍மறந்துடாதீங்க.
நன்றி.
அன்புடன்
இந்திரா செல்வம்
என் இதயம் நடிப்பதில்லை - 1
அந்த வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ கார் சத்தமில்லாமல் பக்கத்து வீட்டு வாசலில் வந்து நிற்பதை மாடியில் துணி காயவைத்துக்கொண்டிருந்த ரக்ஷிதா எட்டிப்பார்த்தாள்.
"இந்த அதிகாலை நேரத்தில் இந்த வீட்டைப் பார்க்க யார் வந்திருப்பார்கள்? இதோடு இருபது பேருக்கு மேல் இந்த வீட்டை ... இல்லை, இல்லை இந்த பங்களாவை பார்க்க வந்துவிட்டனர். ஆனால் ஒருவரும் குடிபுகுந்த வழியைத் தான் காணோம் பார்ப்போம். இந்த பார்ட்டியாவது வாங்குகிறதா என்று "யோசனை ஓடிய போதும் கைகள் தாமாக துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தன.
கார் கதவுகள் திறந்தன, எப்போதும் பி.எம்.டபிள்யூ கார் என்றால் ரக்ஷிதா ஒரு தனி ஈர்ப்பு இதில் அப்படி என்னதான் இருக்கிறதோ? இதன் விலை கோடியை தொடும் அளவிற்கு! என்று பலமுறை வியந்திருக்கிறாள். அதனால் இந்த கோடிக்கு சொந்தக்காரனை பார்க்கும் ஆவல் தானாக அவளுள் எழுந்தது. கைவேலையை நிறுத்திவிட்டு கண்களை கூர்மைப்படுத்தினாள். வானின் நீல வண்ண டீ சர்ட்டும் அடர் நீல வண்ண ஜீன்சும் அணிந்த ஒருவன் கீழே இறங்கினான். அவன் முகத்தை கூர்ந்து பார்த்த ரக்ஷிதா கலவரமானாள்.
"இ... இவனா?... இவனை எங்கோ ... பார்த்தது போல் ...ம்... அங்... அவனே தான். இவன் பெயர் கிருஷ்ணகாந்த்! பெரிய நடிகன். அட அவனேதான் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. இது மட்டும் சதீஷிற்கு தெரிந்தால் சந்தோஷத்தில் கூச்சலிடுவான். அவனது ஃபேவரட் ஹீரோ வாயிற்றே" என்று சிந்தித்தவள் உடனே அதை செயலாக்கினாள்.
"என்ன !!! கிருஷ்ணகாந்தா? நம் பக்கத்து வீட்டிற்கா? அய்யோ அக்கா சத்தியமாக நம்பமுடியவில்லை. நீ பார்த்தாயா? நிஜமாகவா?" தூக்கக் கலக்கத்திலும் அவன் கேள்விகளை அடுக்கினான்.
“அட! ஆமாண்டா, நீ சீக்கிரம் ஃபிரெஷ் ஆகு, அப்புறம் நீயே போய்ப் பார், வீட்டைபச் சுற்றிப் பார்க்க எப்படியும் அரை மணி நேரமாவது ஆகும்" முடித்தவன் தன் வேலைய தொடர மாடிக்கு விரைந்தாள்.
ஐந்து நிமிடத்தில் ரெடியாகி மாடிக்கே வந்துவிட்டான் சதீஷ்
ஒரு முறை பக்கத்து வீட்டு பால்கனியை எட்டிப் பார்த்தவன் வாசலில் நின்ற காரை பார்த்து சந்தோஷ கூச்சலிட்டான்." அக்கா பி.எம்.டபிள்யூ கார் சூப்பரா இருக்குல்ல நமக்கெல்லாம் இது கனவாகவே தான் இருக்கிறது.”
“ஏன் சதீஷ் நெகடிவ்வா பேசனும் இப்போ தான் உனக்கு வேலை கிடைத்திருக்கிறது, முயற்சி செய்தால் நாமும் கண்டிப்பாக வாங்கிடலாம்.”
"என்னமோ போ... சரி அதை விடு கிருஷ்ணகாந்த் எப்படியும் பால்கனியை சுற்றிப் பார்க்க வருவார் இல்லையா அப்போ எப்படியாவது அவரை பார்த்து விடலாம்" என்று கூறியவன் மாடியின் கைப்பிடி சுவரில் தாவி அமர்ந்தான்.
ஏனோ ரக்ஷிதாற்கும் கிருஷ்ணகாந்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே இருந்தது. சதீஷைப் போல் தம்பட்டம் அடிக்காவிட்டாலும் கிருஷ்ணகாந்தின் தீவிர ரசிகை அவள். அதனால் துணி உலர்த்துவதை மெதுவாகவே செய்தாள்.
மூன்று நிமிட காத்திருப்பிற்குப் பிறகு பால்கனியில் பிரவேசித்தான் கிருஷ்ணகாந்த். கூடவே ஒரு ஐம்பது வயதை தொட்டவர்
கிருஷ்ணகாந்தை பார்த்த சதீஷ் சந்தோஷ உந்துதலில் "ஹாய்! சார் எப்படி இருக்கீங்க?" என்று சத்தமாய் கேட்டே விட்டான்.
அந்த குரலுக்கு இவன் புறம் திரும்பிய கிருஷ்ணகாந்த் தன் பிராண்டட் கண்ணாடியை கழட்டினான். அவன் பேச வாய் திறக்கும் முன் அந்த வயதானவர் பேச ஆரம்பித்தார்.
"அடடா இதற்கு தான் கிரிஷ் பால்கனிக்கு வரவேண்டாம் என்று படித்து படித்து சொன்னேன். இப்போ பார் நாட்டுபுறத்தான் மிட்டாய் கடையை பார்ப்பது போல் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நடிகன் என்றாலே வாயை பிளந்து கொண்டு வந்து விட வேண்டியது தான். என்ன பிறவிகளோ ?" அவர் அடுக்கிக்கொண்டே போக ரக்ஷிதாவிற்கு கோவம் தலைக்கு மேல் ஏறியது.
"ஹலோ! இங்க யாரும் மிட்டாய் கடையை பார்க்க வரலை சினிமாகாரங்கன்னா தனியா இரண்டு கொம்பு முளைச்சிருக்கும்னு பேப்பர்ல போடுறாங்களே. அதான் படிச்சது உண்மைதானான்னு பார்த்தோம். நாம எதிர்பார்த்தது போல் பெரிசா கொம்பு ஒன்றும் இல்லடா சதீஷ். இவங்களும் ரெண்டு கை ரெண்டு கால் வைச்ச நம்மளை மாதிரி சாதாரண மனுஷங்கதான். இவர்களுடன் நமக்கென்ன பேச்சு, மேக்கப் போடாவிட்டால் இவர்கள் முகத்தை பார்க்க பயமாக இருக்கிறது. வா சீக்கிரம்" சத்தமாக பேசிக் கொண்டே சதீஷை தரதரவென்று இழுத்துச் சென்று விட்டாள்.
வாயடைத்துப் போனார் அந்த வயதானவர் கழற்றிய கூலரை வாயில் வைத்து கடித்த கிருஷ்ணகாந்தத்தின் இதழோரம் புன்னகை படர்ந்தது.
"பார்த்தாயா கிரிஷ், இப்படிப்பட்டவர்கள் இருக்கும் இடத்திலா நீ ஓய்வெடுக்கப் போகிறாய்? வேண்டாம் கிரிஷ். ஓ. எம். ஆர். ரோட்டில் ஒரு பங்களா விலைக்கு வருகிறது. ஓய்வெடுக்க அதுதான் சிறந்த இடம். இந்த வீட்டை பிடிக்கவில்லை என்று புரோக்கரிடம் சொல்லி விடு, சரிதானா?"
ஏதோ யோசனையில் இருந்த கிருஷ்ணகாந்த்தை பெரியவரின் சரிதானா? என்ற கேள்வியும், தொடுகையும் எழுப்பியது.
"நீங்கள் ஏன் மாமா வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்கிறீர்கள். ஆசையாக தானே ஹாய் என்றார்கள். சிரித்து கொண்டே ஒரு ஹாய் சொல்லி இருந்தால் எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கும். இப்போது பாருங்கள் தேவையில்லாத விரோதம். சரி பரவாயில்லை வாருங்கள் கீழே போகலாம்" படிகளில் . இறங்கினான் கிருஷ்ணகாந்த்.
வேறு வழியின்றி அவனை பின் தொடர்ந்தார் பெரியவர் பெருமாள்சாமி.
ரூமில் குறுக்கும் நெருக்கும் கோபமாக நடத்து கொண்டிருத்தான் சதீஷ்.
“உனக்கு என்ன பைத்தியமா? எவ்வளவு பெரிய ஆள் அவர், அவர்கிட்டயே உன் வாய்க்கொழுப்பை காட்டுகிறாயா?"
"பின்ன என்னடா என்னவோ அவர்கள் பெரிய இவர்கள் மாதிரி..." முடிக்கும் முன் இடைபுகுந்தான் சதீஷ்.
"நீ சொன்னாலும் சொல்லைன்னாலும் அவர் பெரிய இவர் தான். அதில் உனக்கு சந்தேகம் வேறா?" அவன் பேச்சில் கோபம் தெரிந்ததில் இவள் சற்று பின் வாங்கினாள்.
"ம்..ச்... அதுக்காக நாட்டுப்புறத்தான் என்றெல்லாமா பேசுவது ?"
"அவர் பேசினாரா? இல்லையே? அந்த நாட்டுப்புறத்தான் தானே பேசினான். அதற்காக அவரை திட்டுவாயா? சரி திட்டி விட்டால் நாளை அவர் இந்த பங்களாவில் குடிபுகுந்தால் அவர் முகத்தில் நாம் எப்படி விழிப்பது ? அக்கம் பக்கத்தில் சிநேகமாய் இருப்பது தானே நம் பண்பு .”
“தவறை உள்ளூர உணர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல் "அட போடா சினிமாக்காரங்க சிநேகிதம் எல்லாம் எனக்கு வேண்டாம். நீ வேண்டுமானால் போய் இழை" பேசியவள் கோபமாக வெளியேறி விட்டாள்.
என் இதயம் நடிப்பதில்லை —-கதையோடு வந்திருக்கிறேன். இதுவும் மல்லிச்சரம் போல மறுபதிப்புதான்.
2013ஆம் வருடம் மதுமிதா மகளிர் நாவல் என்கின்ற மாதஇதழில் பிரிசுரமானது....
அதனை படிக்காதவர்களுக்கு இதோ நமது சகாப்தம் தளத்தில் .
நாயகன்: கிருஷ்ணகாந்த்
நாயகி:ரக்ஷிதா
இதோ முதல் பதிவு படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
சகாப்தம் லைக்ஸ் 👍👍👍மறந்துடாதீங்க.
நன்றி.
அன்புடன்
இந்திரா செல்வம்
என் இதயம் நடிப்பதில்லை - 1
அந்த வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ கார் சத்தமில்லாமல் பக்கத்து வீட்டு வாசலில் வந்து நிற்பதை மாடியில் துணி காயவைத்துக்கொண்டிருந்த ரக்ஷிதா எட்டிப்பார்த்தாள்.
"இந்த அதிகாலை நேரத்தில் இந்த வீட்டைப் பார்க்க யார் வந்திருப்பார்கள்? இதோடு இருபது பேருக்கு மேல் இந்த வீட்டை ... இல்லை, இல்லை இந்த பங்களாவை பார்க்க வந்துவிட்டனர். ஆனால் ஒருவரும் குடிபுகுந்த வழியைத் தான் காணோம் பார்ப்போம். இந்த பார்ட்டியாவது வாங்குகிறதா என்று "யோசனை ஓடிய போதும் கைகள் தாமாக துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தன.
கார் கதவுகள் திறந்தன, எப்போதும் பி.எம்.டபிள்யூ கார் என்றால் ரக்ஷிதா ஒரு தனி ஈர்ப்பு இதில் அப்படி என்னதான் இருக்கிறதோ? இதன் விலை கோடியை தொடும் அளவிற்கு! என்று பலமுறை வியந்திருக்கிறாள். அதனால் இந்த கோடிக்கு சொந்தக்காரனை பார்க்கும் ஆவல் தானாக அவளுள் எழுந்தது. கைவேலையை நிறுத்திவிட்டு கண்களை கூர்மைப்படுத்தினாள். வானின் நீல வண்ண டீ சர்ட்டும் அடர் நீல வண்ண ஜீன்சும் அணிந்த ஒருவன் கீழே இறங்கினான். அவன் முகத்தை கூர்ந்து பார்த்த ரக்ஷிதா கலவரமானாள்.
"இ... இவனா?... இவனை எங்கோ ... பார்த்தது போல் ...ம்... அங்... அவனே தான். இவன் பெயர் கிருஷ்ணகாந்த்! பெரிய நடிகன். அட அவனேதான் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. இது மட்டும் சதீஷிற்கு தெரிந்தால் சந்தோஷத்தில் கூச்சலிடுவான். அவனது ஃபேவரட் ஹீரோ வாயிற்றே" என்று சிந்தித்தவள் உடனே அதை செயலாக்கினாள்.
"என்ன !!! கிருஷ்ணகாந்தா? நம் பக்கத்து வீட்டிற்கா? அய்யோ அக்கா சத்தியமாக நம்பமுடியவில்லை. நீ பார்த்தாயா? நிஜமாகவா?" தூக்கக் கலக்கத்திலும் அவன் கேள்விகளை அடுக்கினான்.
“அட! ஆமாண்டா, நீ சீக்கிரம் ஃபிரெஷ் ஆகு, அப்புறம் நீயே போய்ப் பார், வீட்டைபச் சுற்றிப் பார்க்க எப்படியும் அரை மணி நேரமாவது ஆகும்" முடித்தவன் தன் வேலைய தொடர மாடிக்கு விரைந்தாள்.
ஐந்து நிமிடத்தில் ரெடியாகி மாடிக்கே வந்துவிட்டான் சதீஷ்
ஒரு முறை பக்கத்து வீட்டு பால்கனியை எட்டிப் பார்த்தவன் வாசலில் நின்ற காரை பார்த்து சந்தோஷ கூச்சலிட்டான்." அக்கா பி.எம்.டபிள்யூ கார் சூப்பரா இருக்குல்ல நமக்கெல்லாம் இது கனவாகவே தான் இருக்கிறது.”
“ஏன் சதீஷ் நெகடிவ்வா பேசனும் இப்போ தான் உனக்கு வேலை கிடைத்திருக்கிறது, முயற்சி செய்தால் நாமும் கண்டிப்பாக வாங்கிடலாம்.”
"என்னமோ போ... சரி அதை விடு கிருஷ்ணகாந்த் எப்படியும் பால்கனியை சுற்றிப் பார்க்க வருவார் இல்லையா அப்போ எப்படியாவது அவரை பார்த்து விடலாம்" என்று கூறியவன் மாடியின் கைப்பிடி சுவரில் தாவி அமர்ந்தான்.
ஏனோ ரக்ஷிதாற்கும் கிருஷ்ணகாந்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே இருந்தது. சதீஷைப் போல் தம்பட்டம் அடிக்காவிட்டாலும் கிருஷ்ணகாந்தின் தீவிர ரசிகை அவள். அதனால் துணி உலர்த்துவதை மெதுவாகவே செய்தாள்.
மூன்று நிமிட காத்திருப்பிற்குப் பிறகு பால்கனியில் பிரவேசித்தான் கிருஷ்ணகாந்த். கூடவே ஒரு ஐம்பது வயதை தொட்டவர்
கிருஷ்ணகாந்தை பார்த்த சதீஷ் சந்தோஷ உந்துதலில் "ஹாய்! சார் எப்படி இருக்கீங்க?" என்று சத்தமாய் கேட்டே விட்டான்.
அந்த குரலுக்கு இவன் புறம் திரும்பிய கிருஷ்ணகாந்த் தன் பிராண்டட் கண்ணாடியை கழட்டினான். அவன் பேச வாய் திறக்கும் முன் அந்த வயதானவர் பேச ஆரம்பித்தார்.
"அடடா இதற்கு தான் கிரிஷ் பால்கனிக்கு வரவேண்டாம் என்று படித்து படித்து சொன்னேன். இப்போ பார் நாட்டுபுறத்தான் மிட்டாய் கடையை பார்ப்பது போல் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நடிகன் என்றாலே வாயை பிளந்து கொண்டு வந்து விட வேண்டியது தான். என்ன பிறவிகளோ ?" அவர் அடுக்கிக்கொண்டே போக ரக்ஷிதாவிற்கு கோவம் தலைக்கு மேல் ஏறியது.
"ஹலோ! இங்க யாரும் மிட்டாய் கடையை பார்க்க வரலை சினிமாகாரங்கன்னா தனியா இரண்டு கொம்பு முளைச்சிருக்கும்னு பேப்பர்ல போடுறாங்களே. அதான் படிச்சது உண்மைதானான்னு பார்த்தோம். நாம எதிர்பார்த்தது போல் பெரிசா கொம்பு ஒன்றும் இல்லடா சதீஷ். இவங்களும் ரெண்டு கை ரெண்டு கால் வைச்ச நம்மளை மாதிரி சாதாரண மனுஷங்கதான். இவர்களுடன் நமக்கென்ன பேச்சு, மேக்கப் போடாவிட்டால் இவர்கள் முகத்தை பார்க்க பயமாக இருக்கிறது. வா சீக்கிரம்" சத்தமாக பேசிக் கொண்டே சதீஷை தரதரவென்று இழுத்துச் சென்று விட்டாள்.
வாயடைத்துப் போனார் அந்த வயதானவர் கழற்றிய கூலரை வாயில் வைத்து கடித்த கிருஷ்ணகாந்தத்தின் இதழோரம் புன்னகை படர்ந்தது.
"பார்த்தாயா கிரிஷ், இப்படிப்பட்டவர்கள் இருக்கும் இடத்திலா நீ ஓய்வெடுக்கப் போகிறாய்? வேண்டாம் கிரிஷ். ஓ. எம். ஆர். ரோட்டில் ஒரு பங்களா விலைக்கு வருகிறது. ஓய்வெடுக்க அதுதான் சிறந்த இடம். இந்த வீட்டை பிடிக்கவில்லை என்று புரோக்கரிடம் சொல்லி விடு, சரிதானா?"
ஏதோ யோசனையில் இருந்த கிருஷ்ணகாந்த்தை பெரியவரின் சரிதானா? என்ற கேள்வியும், தொடுகையும் எழுப்பியது.
"நீங்கள் ஏன் மாமா வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்கிறீர்கள். ஆசையாக தானே ஹாய் என்றார்கள். சிரித்து கொண்டே ஒரு ஹாய் சொல்லி இருந்தால் எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கும். இப்போது பாருங்கள் தேவையில்லாத விரோதம். சரி பரவாயில்லை வாருங்கள் கீழே போகலாம்" படிகளில் . இறங்கினான் கிருஷ்ணகாந்த்.
வேறு வழியின்றி அவனை பின் தொடர்ந்தார் பெரியவர் பெருமாள்சாமி.
ரூமில் குறுக்கும் நெருக்கும் கோபமாக நடத்து கொண்டிருத்தான் சதீஷ்.
“உனக்கு என்ன பைத்தியமா? எவ்வளவு பெரிய ஆள் அவர், அவர்கிட்டயே உன் வாய்க்கொழுப்பை காட்டுகிறாயா?"
"பின்ன என்னடா என்னவோ அவர்கள் பெரிய இவர்கள் மாதிரி..." முடிக்கும் முன் இடைபுகுந்தான் சதீஷ்.
"நீ சொன்னாலும் சொல்லைன்னாலும் அவர் பெரிய இவர் தான். அதில் உனக்கு சந்தேகம் வேறா?" அவன் பேச்சில் கோபம் தெரிந்ததில் இவள் சற்று பின் வாங்கினாள்.
"ம்..ச்... அதுக்காக நாட்டுப்புறத்தான் என்றெல்லாமா பேசுவது ?"
"அவர் பேசினாரா? இல்லையே? அந்த நாட்டுப்புறத்தான் தானே பேசினான். அதற்காக அவரை திட்டுவாயா? சரி திட்டி விட்டால் நாளை அவர் இந்த பங்களாவில் குடிபுகுந்தால் அவர் முகத்தில் நாம் எப்படி விழிப்பது ? அக்கம் பக்கத்தில் சிநேகமாய் இருப்பது தானே நம் பண்பு .”
“தவறை உள்ளூர உணர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல் "அட போடா சினிமாக்காரங்க சிநேகிதம் எல்லாம் எனக்கு வேண்டாம். நீ வேண்டுமானால் போய் இழை" பேசியவள் கோபமாக வெளியேறி விட்டாள்.