Aara dilfar
Member
- Messages
- 46
- Reaction score
- 85
- Points
- 18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு-10
நாட்கள் அதன்பாட்டில் நகரத் தொடங்கியது. ராஜேஸ்வரி ஒரு குத்தல் கதையுடன்தான் அன்றைய பொழுதையே ஆரம்பிப்பார். விக்ஷனா வந்தாலோ அவரின் நடத்தை மொத்தமாக மாறிவிடும் சும்மாவே ஆடுகிற பேய்க்கு வேப்பிலைக் கொத்தையும் கொடுத்தது போல் ஆடத் தொடங்கிவிடுவார். அவளின் தூண்டலில் காயத்ரியின் மனதை உடைக்கத் தொடங்கினார். திருமணமானது முதல் மாமியாரின் குணங்குறைகள் எதையும் இதுவரை கணவனிடமோ பிள்ளைகளிடமோ பகிராதவர் இப்போதைய பிரச்சனையையும் அவர்களுக்குத் தெரியாமலே மறைத்து வைத்து தனியே நின்று அவர்களுடன் போராடத் தொடங்கினார். தினமும் ஒரு சண்டையாக வீட்டில் புயலடிக்க ஆரம்பித்தது. மாமியாரின் கொடும் வார்த்தைகளை தாங்க முடியாமல் தனக்குள்ளே வைத்து மருகத் தொடங்கினார் காயத்ரி. ஒருநாள் பிரச்சனை எல்லை கடக்க தாங்க முடியாதவர் மாமியாருடன் சண்டையிட்டார் இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று எண்ணங் கொண்டவராய் தன் தாயிடம் பேசி இதற்கொரு தீர்வு காண முடிவெடுத்தார். தன் அறையுள் புகுந்து கதவைத் தாளிட்டவர் தன் தாய்க்கு அழைத்து நடந்த அனைத்தையும் கூற கோபத்தில் கத்த ஆரம்பித்தார் தனலட்சுமி.
"இங்கப்பாரு அந்தப் ஷனாப் பேய் என் பேரனுக்கு பொண்டாட்டியாக வர நான் விட மாட்டேன். நானே என் பேரனோட கல்யாணத்தைப்பற்றி கதைக்கனுமென்று இருந்தேன் அவனுக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கேன். இப்போ அந்த பொண்ணப் பத்தி சொல்லுறேன். உனக்கு சம்மதமென்றால் உடனே பேசலாம்." தனலட்சுமி சொல்ல
"சொல்லுங்கம்மா யாரு?"
"நம்ம வீட்டுக்கு ரெண்டு தெருத் தள்ளி இருக்குற சரஸ்வதி மகனை உனக்கு தெரியுமில்லையா?."
"யாரு அம்மா? எனக்கு டக்கென்று ஞாபகம் வருதில்லை."
"ரஞ்சனியையாவது தெரியாதா?"
"ரஞ்சனியா.... எந்த ரஞ்சனி கமலாம்மாவோட மகள் ரஞ்சனியையா சொல்லுறீங்க? ஆ... அம்மா இப்போ ஞாபகம் வந்துடுச்சு. சரஸ்வதியம்மாவோட மகன் வாசுதேவன்தான் அவட வீட்டுக்காரவர் எனக்கு அவங்கள் எல்லோரையும் தெரியும்தான் ஆனால் இந்த நாளையில அவங்களைக் காணல்ல நான்?"
"ஓமோம். அவங்கதான் அவருக்கு நாலு பொண்ணுங்க. மூத்தவங்க அமுததாராவும் சித்ரதாராவும் கல்யாணம் கட்டிடுச்சுங்க. இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்குது. அதுல என் பேரனுக்கு நான் பார்த்த பொண்ணு நயனதாரா கடைசிப் பொண்ணு உதயதாரா அவ படிச்சிட்டிருக்கா. நயனா தேவத மாதிரி இருப்பா. நம்மளவு வசதியில்ல ஆனால் ஒரு காலத்துல வாழ்ந்து கெட்ட குடும்பம். வாசுவோட கூட பொறந்தவளே அவர ஏமாத்தி சொத்துக்கள அபகரிச்சுக்கிட்டா. வீடும் காணியும்தான் மிச்சம் இப்போதைக்கு அவ்வளவு வசதி இல்லை. ஆனால் நல்ல மனுஷனுங்க. பொண்ணுங்களையும் பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவங்களா ரொம்ப நல்லாவே வளர்த்திருக்காங்க நம்ம ஆதிக்கு அந்த பொண்ணு எல்லா வகையிலையும் பொருத்தமா இருப்பா நயனா நம்ம காவியா கூட படிச்சவதான். உனக்கு அவளைப் பார்க்கனுமென்றால் காவியாகிட்ட சொல்லி போட்டோ அனுப்ப சொல்லுறேன் பார்த்துட்டு சம்மதம் என்றால் பேசிடலாம். என்ன சொல்லுறாய்?"
"நீங்க அவங்களை பத்தி முழுசா விசாரிக்காம சொல்ல மாட்டீங்க. நீங்க சொன்னா அவங்க நல்ல குடும்பமாத் தான் இருப்பாங்க. எனக்கு இப்போவே அந்த பொண்ண பார்க்கனும் போல இருக்கு. காவியாகிட்ட சொல்லி சீக்கிரம் போட்டோவை அனுப்ப சொல்லுங்கம்மா. இப்போவே" என்றவர் அழைப்பைத் துண்டித்தார். காயத்ரியின் மொபைல் வாட்ஸ்ஆப் டோனை வெளியிட அவசரமாக அதனை திறந்து பார்த்தவர் இதழ்களில் மெல்லிய புன்னகை பரவியது. அந்த நயனதாராவின் தோற்றத்தை ஆராயத் தொடங்கினார். வெண்மை கலந்த ரோஜா வண்ணம், அழகிய பாதரச விழிகள், வில்லென வளைந்த இமைகள், பிறை நெற்றி, கொழு கொழு கன்னங்கள், சிவந்த அதரங்கள், கூந்தலை இன்றைய நாகரிகத்திற்கேற்ப அளவாக வெட்டியிருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடை அவள் நிறத்தை இன்னும் தூக்கலாக காட்டியது. மொத்தத்தில் அழகுப் பெட்டகமாக இருந்தாள். தன் மனக் கண்ணில் மகனை கொண்டு வந்தவர் அவள் பக்கத்தில் நிறுத்திப் பார்க்க ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. உடனே தாயை அழைத்து தனக்கு இந்த சம்மந்தத்தில் முழு சம்மதம் என தன் விருப்பத்தைக் கூறியவர்
"ஆனால் அம்மா ஆதிக்கிட்டேயும் போட்டோவைக் காட்டுறேன். அவனும் பார்த்துட்டு சம்மதம் என்றால் அதன்பிறகு மற்ற ஏற்பாடுகளை கவனிக்கலாம்"
"சரியம்மா இன்றைக்கே ஆதிகிட்ட கதைச்சுடு நாளப் போக்காட்டாதே" தனலட்சுமி கூற
"சரி அம்மா இப்பவே கதைச்சுடுறேன் அவன் வீட்டுல தான் இருக்கிறான்" எனத் தாயிடம் கூறிய அடுத்த நொடி ஆதித்யா முன்னால் வந்து நின்றார்.
"ஆதி உன் வாட்ஸ்ஆப்புக்கு பொண்ணோட போட்டோ அனுப்பியிருக்கேன் பாருடா. உனக்கு ஓகே என்றால் மேற்கொண்டு கதைக்கலாம்" அவசரப்படுத்த கணனியில் பார்வைப் பதிந்திருந்தவன் அவரைப் பார்க்காமலே
"அதுக்குள்ளேவா? என்ன ஒரு வேகமம்மா அதுதான் எல்லா முடிவும் நீங்கதானே எடுக்கீங்க போட்டோ எதுக்காக? உங்களுக்கு சம்மதம் என்றால் என் சம்மதம் எதுக்காக அம்மா? நீங்களே பார்த்து முடிவெடுத்துக்கோங்க." விட்டேறியாக பதில் கூறியவனை மீண்டும் வற்புறுத்தினார் காயத்ரி.
"இப்போதே பார்த்து சம்மதம் சொல்லு" என்று கூற வேலையாக இருப்பதாகவும் பிறகு பார்ப்பதாகவும் சற்றுக் கோபங் கலந்த குரலில் கூற இதற்கு மேல் வற்புறுத்த முடியாது என எண்ணியவர் அறையை விட்டுச் சென்றார். தன் வேலைகளை முடித்துவிட்டு வந்தவனுக்கு தாய் சொன்ன போட்டோ விசயம் மனதில் பட்டது தன் வாட்ஸ்ஆப்பை திறந்து அதில் பார்வையை பதிக்க அழகாகச் சிரித்தாள் அந்த அழகு மங்கை. அந்த விழிகளும் அந்த கொழு கொழு கன்னங்களும் அவனிடம் ஏதோ கதை பேசின. அவனுள் ஒரு சிறு குரல் ஒலித்தோய்ந்தது.
'அங்கிள் நானொன்னும் பேபியில்ல. அயிம் நயன் என் பந்தைக் கொடுங்க. இது எங்க சைட்டு. இங்கெல்லாம் போயிஸ் வரக் கூடாது நீங்க முதல்ல உங்க சைட்டைப் பார்த்துப் போங்க அங்கிள்' அந்தக் குரலின் நினைவில் அவன் இதழ்கள் தானாக விரிய அந்தக் குரலுக்கு சொந்தமான அந்தக் குட்டி தேவதையின் நினைவில் மூழ்கினான். அவன் கண் முன் விரிந்தாள் அந்தப் பாப்பா, இப்போ பார்க்க எப்படி இருப்பாள் ஏன் எனக்கு இவளைப் பார்த்ததும் அந்த தேவதையோட ஞாபகம் வருது. இவள் கண்களும் கன்னமும் அந்தப் பாப்பாவோடது போலவே இருக்கே இப்போ அந்தப் பாப்பாவும் வளர்ந்திருக்குமில்லை. இவ்வாறே அந்தக் குட்டி தேவதையின் நினைவில் லயித்திருக்க அதனை தொடர்ந்து வந்த சில நினைவுகளில் ஆதித்யனின் முகம் கல்லாய் இறுகியது. வேண்டாத அந்த நினைவுகளுடன் போராடியவன் ஒருவாறு அதிலிருந்து மீண்டு நேரங்கடந்தே தூங்கச் சென்றான். ஆனாலும் வழமை போல் அதிகாலையிலே அவனுக்கு விழிப்புத் தட்டியது. காலையில் எழுந்ததும் வழமை போல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனிடம் வந்த காயத்ரியை கேள்வியாய் நோக்கினான் மைந்தன்.
"என்னப்பா போட்டோ பார்த்துட்டாயா, அந்தப் பொண்ணைப் பார்க்க தேவதை மாதிரி அவ்வளவு அழகா இருக்கா இல்லையாப்பா, உனக்கு புடிச்சிருக்கா ஓகே சொல்லட்டா?" கேள்விகளை அடுக்க
"கொஞ்சம் இருங்கம்மா. ஒவ்வொன்றாக கேட்கலாமே. ஏற்கனவே சொன்னது தான் உங்களுக்கு சம்மதம் என்றால் என்கிட்ட கேட்க வேண்டிய அவசியமே இல்லை. சரி உங்க திருப்திக்காக சொல்லுறேன் எனக்கு சம்மதம். இப்போ சொல்லுங்கோ அந்த பொண்ணோட டீடைல்ஸை பெயரென்ன? ஊரென்ன? சொல்லுங்கம்மா." தன்னால் நிறுத்த முடியாத திருமணத்தை பெண் வீட்டார் மூலம் தடுக்க நினைக்கும் அவன் உள் எண்ணத்தை மகனின் முகத்திலிருந்த ஏதோ ஒன்று அந்தத் தாய்க்கு உறுதிப்படுத்த அவனைக் கூர்ந்து பார்த்தவாறே
"எதுக்குப்பா கல்யாணத்தை நிறுத்தவா? சரி பொண்ணு பெயரை மட்டும் சொல்லிடுறேன் அவ பெயர் நயனதாரா மத்ததை பொண்ணு பார்க்கும் போது தெரிஞ்சுக்கோ சரியா?" என்ற காயத்ரியை 'புத்திசாலி' என்பது போல் மகன் பார்க்க 'நான் உனக்கு அம்மாடா' என்பதாய் தாய் பார்த்தார். ஆதித்யவர்த்தன் திருமணத்திற்கு சம்மதித்ததும் தன் தாய்க்கு அழைத்து உடனே ஏற்பாடுகளை கவனிக்கச் சொன்னார் காயத்ரி. எங்கே மகன் மனது மாறி விடுமோ என்ற பயத்தில் எல்லாம் ஜட் வேகம்தான். இதனை தன் பாட்டி மூலம் கேள்வியுற்ற விக்ஷனா கோபங் கொண்டு புயலென காயத்ரியின் வீட்டினுள் நுழைந்தாள்.
"என்ன அத்தை அவ்வளவு சொல்லியும் நீங்க என் அத்தானுக்கு வேற பொண்ணு பார்த்திருக்கீங்க. நீங்க நினைக்குறது நடக்காது நான் நினைக்குறதுதான் நடக்கும். எஸ் கல்யாணம் என்னோடதான் நடக்கும். பொண்ணு வீடு பற்றி ரகசியமாவா வச்சிருக்கீங்க? அதை எப்படி கண்டு பிடிக்கனும் இதை எப்படி தடுக்கனும் என்று எனக்குத் தெரியும். இனி நீங்க உங்க வேலையைப் பாருங்கோ நான் என் வேலையைப் பார்க்குறேன்."
"இங்கப்பாரு ஷனா, அது உன்னால முடியாது இப்பவும் சொல்லுறேன் கண்ட கனவைக் காணாம உன் வாழ்க்கை நல்லா அமையுறதுக்கு வழியைப் பாரு.
"அதைத்தானே அத்தை பார்த்துட்டிருக்கேன். என் வாழ்க்கையே என் அத்தான்தான் அவரை அடையுறதுக்காக என்ன வேணுமென்றாலும் செய்வேன். எந்த எல்லை வரையும் போவேன்."
"ச்சீ... நிறுத்து. இதை அத்தை உனக்கும் ஆதிக்கும் கல்யாணம் செய்ய விருப்பப் பட்ட அன்றைக்கே சொல்லிருக்கனும் அப்போ விட்டுட்டேன் பரவாயில்லை இப்போ சொல்லுறேன். உன் ஆசை ஆதியை கல்யாணம் பண்ணிக்கனும் என்று இல்லை. அவனோட சொத்துக்கெல்லாம் நீ உரிமைக்காரி ஆகனும் என்றுதான். என்ன அப்படிப் பார்க்குற இது எப்படிடா இவளுக்கு தெரிஞ்சதென்றா? என் மகள் அஸ்வினியோட கல்யாணதப்போ நீ உன் அம்மா, பாட்டிக் கூட கதைச்ச எல்லாத்தையும் நான் கேட்டேன். உங்க எல்லோரோட குறிக்கோளும் இந்தக் காசுதான் ஆதி இல்லை. எல்லாம் தெரிஞ்சும் எதுவும் சொல்லாமல் தான் இந்த கல்யாணத்தை தடுக்க நினைச்சேன். அத்தையோட மனசை நோகடிக்க வேண்டாம் என்று நினைச்சேன். ஆனால் என் வாயால சொல்ல வச்சுட்ட இப்போ சொல்லு காசுக்காக அவனை கட்டிக்க நினைக்குற உன்னை எப்படி என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?"
"ஓ அப்போ எல்லாம் தெரியுமா? ஓம் சொத்துக்காகத் தான் ஆதியைக் கட்டிக்க நினைச்சேன். ஆனால் காலம் போகப் போக அத்தானோட அழகும், ஸ்டைலும் அவர் எனக்கு மட்டும்தான் என்று எண்ண வச்சிடுச்சு. அவரை உயிருக்கு உயிராக காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். அவர்தான் எனக்கு எல்லாமே எப்படி அத்தை என் ஆதியை என் அத்தானை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுப்பேன். மாட்டேன் அத்தை மாட்டேன் என் ஆதி எனக்கு மட்டும்தான். எவ்வளவு கஷ்டப்படு ஒன்றை பிரிச்சா நீங்க என் அத்தானுக்கு இன்னொன்னை கொண்டு வந்து நிறித்துவீங்களா?" அகங்காரமாக பதில் சொன்னவள் கடைசி வரிகளை தனக்குள் முணுமுணுக்க
"என்ன வாய்க்குள்ளே முணங்குற?"
"நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்தியே தீருவேன்."
"உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ" காயத்ரி அலட்சியமாக கூற ஆவேசங் கொண்டு பொண்ணு வீடு பற்றித் தேடத் தொடங்கினாள் விக்ஷனா ஆனால் அவளால் அதைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
ஒரு பக்கம் விக்ஷனாவின் தொல்லை என்றால் மறு பக்கம் ஆதியின் எண்ணத்தையும் அறிந்தவர் எந்தத் தடையுமின்றி திருமணத்தை முடிக்க வழி தேடிக் கொண்டிருந்தார். அதற்கேற்றாற் போல் இரண்டு நாளில் தொழில் விடயமாய் அவசரமாக ஆதித்யா வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது இதுதான் சந்தரப்பம் என்றெண்ணியவர் அந்த நேரத்தை பயன்படுத்தி நயனியை பெண் பார்க்க அவர்கள் ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்தார் காயத்ரி. ஆதித்யா தவிர்த்து குடும்பத்திலுள்ள மற்றயவர்கள் அனைவரும் நம் நாயகியைக் காண படையெடுத்தனர். தன்னால் கண்டு பிடிக்க முடியாதென்பதை உணர்ந்த ஷனாவும் அவர்களுடன் பெண் பார்க்க பிடிவாதம் பிடித்துச் சென்றாள். அங்கேயே தன் வேலையை ஆரம்பிக்கவும் நினைத்தாள். ஊருக்குச் சென்றவுடனே தன் தாயிடம் விக்ஷனாவின் எண்ணம் பற்றிக் கூற இனி தான் பார்த்துக் கொள்வதாக கூறினார் தனலட்சுமி.
நயனதாராவைப் பார்த்த அனைவருக்கும் அவளைப் பிடித்து விட தட்டு மாற்றி உறுதி செய்தனர். காயத்ரியோ மறுநாளே மணமகன் இல்லாது நிச்சயத்தை முடித்து உடனே திருமணத் தேதியையும் குறிக்கத் தொடங்கினார். எங்கே வேதளாம் முருங்கை மரம் ஏறிடுமோ என்ற பயத்துடன் இந்த விக்ஷனாவும் ஏதாவது செய்திடுவாளோ என்ற பயமும் சேர்ந்து கொண்டது. ஆனால் வாசுதேவன் குடும்பமோ உடன் திருமணத்தை நடத்தும் நிலையில் இல்லை. மணமகனில்லாது நிச்சயம் செய்வதிலும் அவர்களுக்கு உடன்பாடில்லை. அவர்கள் தடுமாற அவர்களுக்கு தெம்பூட்டி நிச்சயத்தை முடித்தவர்கள் இன்னும் இரு வாரத்தில் திருமணம் என தீர்மானித்தார்கள்.
ஊருக்கு வந்தது முதல் ராஜேஸ்வரியும் தன் அண்ணியின் பயத்தால் நேரடியாக ஷனாவுக்கு உதவாமல் இருந்தார். ஆனால் கல்யாணத்தை நிறுத்த குத்தல் பேச்சு, நக்கல் பேச்சு போன்றவ தன்னாலான சிறு சிறு உதவிகளை அவளுக்குச் செய்தார். ஷனாவும் எத்தனை வழிகளில் பெண்ணுடன் பேசி திருமணத்தை முறியடிக்க முயன்ற போதும் தனலட்சுமியும் காயத்ரியும் அதற்கான அத்தனை வழிகளையும் அடைத்துவிட்டனர் கடைசி வரை அவளால் நயனியை சந்திக்க முடியாமலே போய் விட்டது.
"என்ன அத்தை ஜெயிச்சிட்டோம் என்று நினைக்குறீங்களா? தாலி கட்டுற கடைசி நிமிஷம் வரை இருக்கு. இந்த கல்யாணம் நடக்க நான் விடமாட்டேன். இந்த ஊருல இருக்குறதுங்க எல்லாம் பட்டிக்காட்டு முட்டாளுங்க. எதைச் சொன்னா இதுங்களே இந்தக் கல்யாணத்தை நிறுத்துமென்று இந்த ஷனாக்கு நல்லாவே தெரியும். செஞ்சதை செய்யுறது ஒன்றும் பெரிசில்லை." அவளின் கடைசி வார்த்தை புரியாவிட்டாலும் அவளின் பேச்சில் கடுப்பான காயத்ரி
"இங்கப்பாரு நீ என்னமோ லண்டன்ல பொறந்து அமெரிக்காவில வளர்ந்த மாதிரி கதைச்சிட்டிருக்க. நீயும் இங்கதான் பொறந்த வளர்ந்த முதல்ல அதை ஞாபகம் வச்சுக்கோ. கொஞ்ச காலமாத்தானே நீங்களும் கொழும்பில இருக்கீங்க இங்கப்பாரு கொழும்பளவு இல்லை என்றாலும் ட்ரிங்கோவும் ஒரு நகரம்தான் இது ஒன்னும் பட்டிக்காடில்லை விளங்கிட்டா? அத்தோட இன்னொரு விஷயம் ஏற்கனவே உன்கிட்ட சொன்னதுதான் உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ." காயத்ரியின் அலட்சியமான பேச்சு ஷனாவிற்கு எல்லையில்லா கோபத்தை உண்டாக்கியது. அந்த நேரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாத தன்னிலையை எண்ணி கடுகடுத்தவளோ
'ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருந்த கொக்காய்' சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தாள்.
ஒருவாறு அத்தனை தடைகளையும் தாண்டி திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார் காயத்ரி. ஆனால் இந்த நிமிடம் அவர் உள்ளம் உலைக் களமாய் கொதித்துக் கொண்டிருந்தது.
'இதோ நாளை திருமணம் ஆனால் இந்த பையன் இப்போது திருமணம் வேண்டாம் என்றால் என்ன செய்வது. கடவுளே என் ஆயுத்ததைப் பயன்படுத்தி சம்மதிக்க வச்சுட்டேன். ஆனால் தாலி கட்டும் வரை எனக்கு நிம்மதியே இருக்காதே.' கடவுளிடம் பல மனுக்களைப் போட்டபடியே நேரத்தை பார்த்தவர் திடுக்கிட்டார் 'ஐயோ மூனாயிடுச்சே இன்னும் கொஞ்ச நேரத்துல எழும்ப வேணுமே' எண்ணியவராய் கண்களை மூட அவரை மெல்ல உறக்கம் தழுவிக் கொண்டது.
வளரும்.....
www.sahaptham.com
நிலவு-10
நாட்கள் அதன்பாட்டில் நகரத் தொடங்கியது. ராஜேஸ்வரி ஒரு குத்தல் கதையுடன்தான் அன்றைய பொழுதையே ஆரம்பிப்பார். விக்ஷனா வந்தாலோ அவரின் நடத்தை மொத்தமாக மாறிவிடும் சும்மாவே ஆடுகிற பேய்க்கு வேப்பிலைக் கொத்தையும் கொடுத்தது போல் ஆடத் தொடங்கிவிடுவார். அவளின் தூண்டலில் காயத்ரியின் மனதை உடைக்கத் தொடங்கினார். திருமணமானது முதல் மாமியாரின் குணங்குறைகள் எதையும் இதுவரை கணவனிடமோ பிள்ளைகளிடமோ பகிராதவர் இப்போதைய பிரச்சனையையும் அவர்களுக்குத் தெரியாமலே மறைத்து வைத்து தனியே நின்று அவர்களுடன் போராடத் தொடங்கினார். தினமும் ஒரு சண்டையாக வீட்டில் புயலடிக்க ஆரம்பித்தது. மாமியாரின் கொடும் வார்த்தைகளை தாங்க முடியாமல் தனக்குள்ளே வைத்து மருகத் தொடங்கினார் காயத்ரி. ஒருநாள் பிரச்சனை எல்லை கடக்க தாங்க முடியாதவர் மாமியாருடன் சண்டையிட்டார் இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று எண்ணங் கொண்டவராய் தன் தாயிடம் பேசி இதற்கொரு தீர்வு காண முடிவெடுத்தார். தன் அறையுள் புகுந்து கதவைத் தாளிட்டவர் தன் தாய்க்கு அழைத்து நடந்த அனைத்தையும் கூற கோபத்தில் கத்த ஆரம்பித்தார் தனலட்சுமி.
"இங்கப்பாரு அந்தப் ஷனாப் பேய் என் பேரனுக்கு பொண்டாட்டியாக வர நான் விட மாட்டேன். நானே என் பேரனோட கல்யாணத்தைப்பற்றி கதைக்கனுமென்று இருந்தேன் அவனுக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கேன். இப்போ அந்த பொண்ணப் பத்தி சொல்லுறேன். உனக்கு சம்மதமென்றால் உடனே பேசலாம்." தனலட்சுமி சொல்ல
"சொல்லுங்கம்மா யாரு?"
"நம்ம வீட்டுக்கு ரெண்டு தெருத் தள்ளி இருக்குற சரஸ்வதி மகனை உனக்கு தெரியுமில்லையா?."
"யாரு அம்மா? எனக்கு டக்கென்று ஞாபகம் வருதில்லை."
"ரஞ்சனியையாவது தெரியாதா?"
"ரஞ்சனியா.... எந்த ரஞ்சனி கமலாம்மாவோட மகள் ரஞ்சனியையா சொல்லுறீங்க? ஆ... அம்மா இப்போ ஞாபகம் வந்துடுச்சு. சரஸ்வதியம்மாவோட மகன் வாசுதேவன்தான் அவட வீட்டுக்காரவர் எனக்கு அவங்கள் எல்லோரையும் தெரியும்தான் ஆனால் இந்த நாளையில அவங்களைக் காணல்ல நான்?"
"ஓமோம். அவங்கதான் அவருக்கு நாலு பொண்ணுங்க. மூத்தவங்க அமுததாராவும் சித்ரதாராவும் கல்யாணம் கட்டிடுச்சுங்க. இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்குது. அதுல என் பேரனுக்கு நான் பார்த்த பொண்ணு நயனதாரா கடைசிப் பொண்ணு உதயதாரா அவ படிச்சிட்டிருக்கா. நயனா தேவத மாதிரி இருப்பா. நம்மளவு வசதியில்ல ஆனால் ஒரு காலத்துல வாழ்ந்து கெட்ட குடும்பம். வாசுவோட கூட பொறந்தவளே அவர ஏமாத்தி சொத்துக்கள அபகரிச்சுக்கிட்டா. வீடும் காணியும்தான் மிச்சம் இப்போதைக்கு அவ்வளவு வசதி இல்லை. ஆனால் நல்ல மனுஷனுங்க. பொண்ணுங்களையும் பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவங்களா ரொம்ப நல்லாவே வளர்த்திருக்காங்க நம்ம ஆதிக்கு அந்த பொண்ணு எல்லா வகையிலையும் பொருத்தமா இருப்பா நயனா நம்ம காவியா கூட படிச்சவதான். உனக்கு அவளைப் பார்க்கனுமென்றால் காவியாகிட்ட சொல்லி போட்டோ அனுப்ப சொல்லுறேன் பார்த்துட்டு சம்மதம் என்றால் பேசிடலாம். என்ன சொல்லுறாய்?"
"நீங்க அவங்களை பத்தி முழுசா விசாரிக்காம சொல்ல மாட்டீங்க. நீங்க சொன்னா அவங்க நல்ல குடும்பமாத் தான் இருப்பாங்க. எனக்கு இப்போவே அந்த பொண்ண பார்க்கனும் போல இருக்கு. காவியாகிட்ட சொல்லி சீக்கிரம் போட்டோவை அனுப்ப சொல்லுங்கம்மா. இப்போவே" என்றவர் அழைப்பைத் துண்டித்தார். காயத்ரியின் மொபைல் வாட்ஸ்ஆப் டோனை வெளியிட அவசரமாக அதனை திறந்து பார்த்தவர் இதழ்களில் மெல்லிய புன்னகை பரவியது. அந்த நயனதாராவின் தோற்றத்தை ஆராயத் தொடங்கினார். வெண்மை கலந்த ரோஜா வண்ணம், அழகிய பாதரச விழிகள், வில்லென வளைந்த இமைகள், பிறை நெற்றி, கொழு கொழு கன்னங்கள், சிவந்த அதரங்கள், கூந்தலை இன்றைய நாகரிகத்திற்கேற்ப அளவாக வெட்டியிருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடை அவள் நிறத்தை இன்னும் தூக்கலாக காட்டியது. மொத்தத்தில் அழகுப் பெட்டகமாக இருந்தாள். தன் மனக் கண்ணில் மகனை கொண்டு வந்தவர் அவள் பக்கத்தில் நிறுத்திப் பார்க்க ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. உடனே தாயை அழைத்து தனக்கு இந்த சம்மந்தத்தில் முழு சம்மதம் என தன் விருப்பத்தைக் கூறியவர்
"ஆனால் அம்மா ஆதிக்கிட்டேயும் போட்டோவைக் காட்டுறேன். அவனும் பார்த்துட்டு சம்மதம் என்றால் அதன்பிறகு மற்ற ஏற்பாடுகளை கவனிக்கலாம்"
"சரியம்மா இன்றைக்கே ஆதிகிட்ட கதைச்சுடு நாளப் போக்காட்டாதே" தனலட்சுமி கூற
"சரி அம்மா இப்பவே கதைச்சுடுறேன் அவன் வீட்டுல தான் இருக்கிறான்" எனத் தாயிடம் கூறிய அடுத்த நொடி ஆதித்யா முன்னால் வந்து நின்றார்.
"ஆதி உன் வாட்ஸ்ஆப்புக்கு பொண்ணோட போட்டோ அனுப்பியிருக்கேன் பாருடா. உனக்கு ஓகே என்றால் மேற்கொண்டு கதைக்கலாம்" அவசரப்படுத்த கணனியில் பார்வைப் பதிந்திருந்தவன் அவரைப் பார்க்காமலே
"அதுக்குள்ளேவா? என்ன ஒரு வேகமம்மா அதுதான் எல்லா முடிவும் நீங்கதானே எடுக்கீங்க போட்டோ எதுக்காக? உங்களுக்கு சம்மதம் என்றால் என் சம்மதம் எதுக்காக அம்மா? நீங்களே பார்த்து முடிவெடுத்துக்கோங்க." விட்டேறியாக பதில் கூறியவனை மீண்டும் வற்புறுத்தினார் காயத்ரி.
"இப்போதே பார்த்து சம்மதம் சொல்லு" என்று கூற வேலையாக இருப்பதாகவும் பிறகு பார்ப்பதாகவும் சற்றுக் கோபங் கலந்த குரலில் கூற இதற்கு மேல் வற்புறுத்த முடியாது என எண்ணியவர் அறையை விட்டுச் சென்றார். தன் வேலைகளை முடித்துவிட்டு வந்தவனுக்கு தாய் சொன்ன போட்டோ விசயம் மனதில் பட்டது தன் வாட்ஸ்ஆப்பை திறந்து அதில் பார்வையை பதிக்க அழகாகச் சிரித்தாள் அந்த அழகு மங்கை. அந்த விழிகளும் அந்த கொழு கொழு கன்னங்களும் அவனிடம் ஏதோ கதை பேசின. அவனுள் ஒரு சிறு குரல் ஒலித்தோய்ந்தது.
'அங்கிள் நானொன்னும் பேபியில்ல. அயிம் நயன் என் பந்தைக் கொடுங்க. இது எங்க சைட்டு. இங்கெல்லாம் போயிஸ் வரக் கூடாது நீங்க முதல்ல உங்க சைட்டைப் பார்த்துப் போங்க அங்கிள்' அந்தக் குரலின் நினைவில் அவன் இதழ்கள் தானாக விரிய அந்தக் குரலுக்கு சொந்தமான அந்தக் குட்டி தேவதையின் நினைவில் மூழ்கினான். அவன் கண் முன் விரிந்தாள் அந்தப் பாப்பா, இப்போ பார்க்க எப்படி இருப்பாள் ஏன் எனக்கு இவளைப் பார்த்ததும் அந்த தேவதையோட ஞாபகம் வருது. இவள் கண்களும் கன்னமும் அந்தப் பாப்பாவோடது போலவே இருக்கே இப்போ அந்தப் பாப்பாவும் வளர்ந்திருக்குமில்லை. இவ்வாறே அந்தக் குட்டி தேவதையின் நினைவில் லயித்திருக்க அதனை தொடர்ந்து வந்த சில நினைவுகளில் ஆதித்யனின் முகம் கல்லாய் இறுகியது. வேண்டாத அந்த நினைவுகளுடன் போராடியவன் ஒருவாறு அதிலிருந்து மீண்டு நேரங்கடந்தே தூங்கச் சென்றான். ஆனாலும் வழமை போல் அதிகாலையிலே அவனுக்கு விழிப்புத் தட்டியது. காலையில் எழுந்ததும் வழமை போல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனிடம் வந்த காயத்ரியை கேள்வியாய் நோக்கினான் மைந்தன்.
"என்னப்பா போட்டோ பார்த்துட்டாயா, அந்தப் பொண்ணைப் பார்க்க தேவதை மாதிரி அவ்வளவு அழகா இருக்கா இல்லையாப்பா, உனக்கு புடிச்சிருக்கா ஓகே சொல்லட்டா?" கேள்விகளை அடுக்க
"கொஞ்சம் இருங்கம்மா. ஒவ்வொன்றாக கேட்கலாமே. ஏற்கனவே சொன்னது தான் உங்களுக்கு சம்மதம் என்றால் என்கிட்ட கேட்க வேண்டிய அவசியமே இல்லை. சரி உங்க திருப்திக்காக சொல்லுறேன் எனக்கு சம்மதம். இப்போ சொல்லுங்கோ அந்த பொண்ணோட டீடைல்ஸை பெயரென்ன? ஊரென்ன? சொல்லுங்கம்மா." தன்னால் நிறுத்த முடியாத திருமணத்தை பெண் வீட்டார் மூலம் தடுக்க நினைக்கும் அவன் உள் எண்ணத்தை மகனின் முகத்திலிருந்த ஏதோ ஒன்று அந்தத் தாய்க்கு உறுதிப்படுத்த அவனைக் கூர்ந்து பார்த்தவாறே
"எதுக்குப்பா கல்யாணத்தை நிறுத்தவா? சரி பொண்ணு பெயரை மட்டும் சொல்லிடுறேன் அவ பெயர் நயனதாரா மத்ததை பொண்ணு பார்க்கும் போது தெரிஞ்சுக்கோ சரியா?" என்ற காயத்ரியை 'புத்திசாலி' என்பது போல் மகன் பார்க்க 'நான் உனக்கு அம்மாடா' என்பதாய் தாய் பார்த்தார். ஆதித்யவர்த்தன் திருமணத்திற்கு சம்மதித்ததும் தன் தாய்க்கு அழைத்து உடனே ஏற்பாடுகளை கவனிக்கச் சொன்னார் காயத்ரி. எங்கே மகன் மனது மாறி விடுமோ என்ற பயத்தில் எல்லாம் ஜட் வேகம்தான். இதனை தன் பாட்டி மூலம் கேள்வியுற்ற விக்ஷனா கோபங் கொண்டு புயலென காயத்ரியின் வீட்டினுள் நுழைந்தாள்.
"என்ன அத்தை அவ்வளவு சொல்லியும் நீங்க என் அத்தானுக்கு வேற பொண்ணு பார்த்திருக்கீங்க. நீங்க நினைக்குறது நடக்காது நான் நினைக்குறதுதான் நடக்கும். எஸ் கல்யாணம் என்னோடதான் நடக்கும். பொண்ணு வீடு பற்றி ரகசியமாவா வச்சிருக்கீங்க? அதை எப்படி கண்டு பிடிக்கனும் இதை எப்படி தடுக்கனும் என்று எனக்குத் தெரியும். இனி நீங்க உங்க வேலையைப் பாருங்கோ நான் என் வேலையைப் பார்க்குறேன்."
"இங்கப்பாரு ஷனா, அது உன்னால முடியாது இப்பவும் சொல்லுறேன் கண்ட கனவைக் காணாம உன் வாழ்க்கை நல்லா அமையுறதுக்கு வழியைப் பாரு.
"அதைத்தானே அத்தை பார்த்துட்டிருக்கேன். என் வாழ்க்கையே என் அத்தான்தான் அவரை அடையுறதுக்காக என்ன வேணுமென்றாலும் செய்வேன். எந்த எல்லை வரையும் போவேன்."
"ச்சீ... நிறுத்து. இதை அத்தை உனக்கும் ஆதிக்கும் கல்யாணம் செய்ய விருப்பப் பட்ட அன்றைக்கே சொல்லிருக்கனும் அப்போ விட்டுட்டேன் பரவாயில்லை இப்போ சொல்லுறேன். உன் ஆசை ஆதியை கல்யாணம் பண்ணிக்கனும் என்று இல்லை. அவனோட சொத்துக்கெல்லாம் நீ உரிமைக்காரி ஆகனும் என்றுதான். என்ன அப்படிப் பார்க்குற இது எப்படிடா இவளுக்கு தெரிஞ்சதென்றா? என் மகள் அஸ்வினியோட கல்யாணதப்போ நீ உன் அம்மா, பாட்டிக் கூட கதைச்ச எல்லாத்தையும் நான் கேட்டேன். உங்க எல்லோரோட குறிக்கோளும் இந்தக் காசுதான் ஆதி இல்லை. எல்லாம் தெரிஞ்சும் எதுவும் சொல்லாமல் தான் இந்த கல்யாணத்தை தடுக்க நினைச்சேன். அத்தையோட மனசை நோகடிக்க வேண்டாம் என்று நினைச்சேன். ஆனால் என் வாயால சொல்ல வச்சுட்ட இப்போ சொல்லு காசுக்காக அவனை கட்டிக்க நினைக்குற உன்னை எப்படி என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?"
"ஓ அப்போ எல்லாம் தெரியுமா? ஓம் சொத்துக்காகத் தான் ஆதியைக் கட்டிக்க நினைச்சேன். ஆனால் காலம் போகப் போக அத்தானோட அழகும், ஸ்டைலும் அவர் எனக்கு மட்டும்தான் என்று எண்ண வச்சிடுச்சு. அவரை உயிருக்கு உயிராக காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். அவர்தான் எனக்கு எல்லாமே எப்படி அத்தை என் ஆதியை என் அத்தானை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுப்பேன். மாட்டேன் அத்தை மாட்டேன் என் ஆதி எனக்கு மட்டும்தான். எவ்வளவு கஷ்டப்படு ஒன்றை பிரிச்சா நீங்க என் அத்தானுக்கு இன்னொன்னை கொண்டு வந்து நிறித்துவீங்களா?" அகங்காரமாக பதில் சொன்னவள் கடைசி வரிகளை தனக்குள் முணுமுணுக்க
"என்ன வாய்க்குள்ளே முணங்குற?"
"நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்தியே தீருவேன்."
"உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ" காயத்ரி அலட்சியமாக கூற ஆவேசங் கொண்டு பொண்ணு வீடு பற்றித் தேடத் தொடங்கினாள் விக்ஷனா ஆனால் அவளால் அதைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.
ஒரு பக்கம் விக்ஷனாவின் தொல்லை என்றால் மறு பக்கம் ஆதியின் எண்ணத்தையும் அறிந்தவர் எந்தத் தடையுமின்றி திருமணத்தை முடிக்க வழி தேடிக் கொண்டிருந்தார். அதற்கேற்றாற் போல் இரண்டு நாளில் தொழில் விடயமாய் அவசரமாக ஆதித்யா வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது இதுதான் சந்தரப்பம் என்றெண்ணியவர் அந்த நேரத்தை பயன்படுத்தி நயனியை பெண் பார்க்க அவர்கள் ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்தார் காயத்ரி. ஆதித்யா தவிர்த்து குடும்பத்திலுள்ள மற்றயவர்கள் அனைவரும் நம் நாயகியைக் காண படையெடுத்தனர். தன்னால் கண்டு பிடிக்க முடியாதென்பதை உணர்ந்த ஷனாவும் அவர்களுடன் பெண் பார்க்க பிடிவாதம் பிடித்துச் சென்றாள். அங்கேயே தன் வேலையை ஆரம்பிக்கவும் நினைத்தாள். ஊருக்குச் சென்றவுடனே தன் தாயிடம் விக்ஷனாவின் எண்ணம் பற்றிக் கூற இனி தான் பார்த்துக் கொள்வதாக கூறினார் தனலட்சுமி.
நயனதாராவைப் பார்த்த அனைவருக்கும் அவளைப் பிடித்து விட தட்டு மாற்றி உறுதி செய்தனர். காயத்ரியோ மறுநாளே மணமகன் இல்லாது நிச்சயத்தை முடித்து உடனே திருமணத் தேதியையும் குறிக்கத் தொடங்கினார். எங்கே வேதளாம் முருங்கை மரம் ஏறிடுமோ என்ற பயத்துடன் இந்த விக்ஷனாவும் ஏதாவது செய்திடுவாளோ என்ற பயமும் சேர்ந்து கொண்டது. ஆனால் வாசுதேவன் குடும்பமோ உடன் திருமணத்தை நடத்தும் நிலையில் இல்லை. மணமகனில்லாது நிச்சயம் செய்வதிலும் அவர்களுக்கு உடன்பாடில்லை. அவர்கள் தடுமாற அவர்களுக்கு தெம்பூட்டி நிச்சயத்தை முடித்தவர்கள் இன்னும் இரு வாரத்தில் திருமணம் என தீர்மானித்தார்கள்.
ஊருக்கு வந்தது முதல் ராஜேஸ்வரியும் தன் அண்ணியின் பயத்தால் நேரடியாக ஷனாவுக்கு உதவாமல் இருந்தார். ஆனால் கல்யாணத்தை நிறுத்த குத்தல் பேச்சு, நக்கல் பேச்சு போன்றவ தன்னாலான சிறு சிறு உதவிகளை அவளுக்குச் செய்தார். ஷனாவும் எத்தனை வழிகளில் பெண்ணுடன் பேசி திருமணத்தை முறியடிக்க முயன்ற போதும் தனலட்சுமியும் காயத்ரியும் அதற்கான அத்தனை வழிகளையும் அடைத்துவிட்டனர் கடைசி வரை அவளால் நயனியை சந்திக்க முடியாமலே போய் விட்டது.
"என்ன அத்தை ஜெயிச்சிட்டோம் என்று நினைக்குறீங்களா? தாலி கட்டுற கடைசி நிமிஷம் வரை இருக்கு. இந்த கல்யாணம் நடக்க நான் விடமாட்டேன். இந்த ஊருல இருக்குறதுங்க எல்லாம் பட்டிக்காட்டு முட்டாளுங்க. எதைச் சொன்னா இதுங்களே இந்தக் கல்யாணத்தை நிறுத்துமென்று இந்த ஷனாக்கு நல்லாவே தெரியும். செஞ்சதை செய்யுறது ஒன்றும் பெரிசில்லை." அவளின் கடைசி வார்த்தை புரியாவிட்டாலும் அவளின் பேச்சில் கடுப்பான காயத்ரி
"இங்கப்பாரு நீ என்னமோ லண்டன்ல பொறந்து அமெரிக்காவில வளர்ந்த மாதிரி கதைச்சிட்டிருக்க. நீயும் இங்கதான் பொறந்த வளர்ந்த முதல்ல அதை ஞாபகம் வச்சுக்கோ. கொஞ்ச காலமாத்தானே நீங்களும் கொழும்பில இருக்கீங்க இங்கப்பாரு கொழும்பளவு இல்லை என்றாலும் ட்ரிங்கோவும் ஒரு நகரம்தான் இது ஒன்னும் பட்டிக்காடில்லை விளங்கிட்டா? அத்தோட இன்னொரு விஷயம் ஏற்கனவே உன்கிட்ட சொன்னதுதான் உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ." காயத்ரியின் அலட்சியமான பேச்சு ஷனாவிற்கு எல்லையில்லா கோபத்தை உண்டாக்கியது. அந்த நேரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாத தன்னிலையை எண்ணி கடுகடுத்தவளோ
'ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருந்த கொக்காய்' சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தாள்.
ஒருவாறு அத்தனை தடைகளையும் தாண்டி திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார் காயத்ரி. ஆனால் இந்த நிமிடம் அவர் உள்ளம் உலைக் களமாய் கொதித்துக் கொண்டிருந்தது.
'இதோ நாளை திருமணம் ஆனால் இந்த பையன் இப்போது திருமணம் வேண்டாம் என்றால் என்ன செய்வது. கடவுளே என் ஆயுத்ததைப் பயன்படுத்தி சம்மதிக்க வச்சுட்டேன். ஆனால் தாலி கட்டும் வரை எனக்கு நிம்மதியே இருக்காதே.' கடவுளிடம் பல மனுக்களைப் போட்டபடியே நேரத்தை பார்த்தவர் திடுக்கிட்டார் 'ஐயோ மூனாயிடுச்சே இன்னும் கொஞ்ச நேரத்துல எழும்ப வேணுமே' எண்ணியவராய் கண்களை மூட அவரை மெல்ல உறக்கம் தழுவிக் கொண்டது.
வளரும்.....
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
