Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவை களவாடிய அனேகனே

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 21

அம்ரிதா வீட்டிற்கு வருவதற்குள்ளாக, தான் போயாகவேண்டும் எனும் அவசரத்தில் மூச்சு வாங்க ஓடி வந்த ஆஷ்ரிதாவின் முயற்சி வீணாகவில்லை. வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த ஆஷ்ரிதா ஒரு குளியலைப் போட்டுக்கொண்டு தேனீர் கலக்கி எடுத்தவள் பொன்னம்மாவின் அறைக்குள் சென்று அவரது கட்டிலில் அமர்ந்தபடி குடித்துக்கொண்டிருந்தாள். பொன்னம்மா இறந்ததில் இருந்து அவளது மாலை நேரங்கள் தேனீரோடு அப்படித்தான் கழிந்துக்கொண்டிருந்தது. சில வினாடிகளில் அம்ரிதாவும் வந்துவிட, அவளும் ஆஷ்ரிதாவோடு இணைந்துக்கொண்டாள்.

“பெயிண்டிங் வாங்கிட்டியா டி?” – ஆஷ்ரிதா.

“ஆமா அச்சு. அப்படியே ரியலிஸ்ட்க் –ஆ இருக்கு டி பாரு” என்றவாறு ஆர்டிஸ்ட் கிருஷ்ணாவிடம் இருந்து வாங்கி வந்த கலை ஓவியத்தை ஆஷ்ரிதாவிடம் காட்டினாள் அம்ரிதா.

இரட்டை சகோதரிகளின் ஒற்றுமையான முகத்தைக் கொண்ட ஒரு பெண் சிவப்பு நிற பாவாடை தாவணி அணிந்துக்கொண்டு கோவிலில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு ஓவியத்தை தத்ரூபமாய் தீட்டியிருந்தார் ஆர்டிஸ்ட் கிருஷ்ணா.

“பாரு டி. எவ்வளவு ரியலிஸ்டிக் –ஆ இருக்கு?” ஆச்சரியத்துடன் பேசினாள் அம்ரிதா.

“நான் சொல்லும்போது இங்க இல்லாத ஆர்டிஸ்ட் –ஆ அப்ப்டீன்னு என்கிட்ட கேட்டியே. இப்ப தெரியுதா எதுக்கு தேடி கண்டுப்பிடிச்சு அவர பிடிச்சேன் –னு?” என இல்லாத காலரைத் தூக்கிவிட்டபடி கேட்டாள் ஆஷ்ரிதா.

“ம்ம்ம்… என் அக்காவுக்கும் கொஞ்சம் மூளை இருக்கு. அவருக்கு ரொம்பவே இருக்கு டி. நாம ரெண்டுபேரையும் காட்சிப்படுத்துற மாதிரி ஒரே பெயிண்டிங் –ஆ வேணும்னு நான் சொன்னேன். நம்ம ரெண்டு பேருக்கும் என்ன பிடிக்கும் பிடிக்காதுனு எல்லாம் என்கிட்ட கேட்டிருந்தாரு. எதுக்கு இது எல்லாம் கேட்கிறாருனு அப்ப யோசிச்சேன். இப்ப தான் புரியுது” என்றாள் அம்ரிதா.

“ஆனா எனக்கு இன்னும் புரியல டி” என்றாள் ஆஷ்ரிதா.

“ப்சே… இங்க பாரு டி. இந்த பெயிண்டிங்க் –ல இருக்கறது நம்ம ஃபேஸ் இருக்கற ஒரே ஒரு பொண்ணு தான். நாம ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான முகம். சோ இத அச்சுனும் எடுத்துக்கலாம், அம்முனும் எடுத்துக்கலாம்” – அம்ரிதா.

“அது எனக்கு தெரியாதா? முகத்தை தவிர வேற எதுல இந்த பெயிண்டிங்க் நம்ம ரெண்டிபேரையும் ஒன்னா விஷுவலைஸ் பண்ணுது?” – ஆஷ்ரிதா.

“ஏன் டி அவசரப்படுற. சொல்லிட்டுத்தானே இருக்கேன். இதுல பாரு. அந்த பொண்ணு தாவணி போட்டுருக்கா உன்ன மாதிரி. அப்பறம் கோவில் –ல உட்கார்ந்திருக்கா என்ன மாதிரி. நான் என்னைக்கு தாவணி போட்டேன், நீ என்னைக்கு கோவிலுக்கு வந்திருக்க? நம்ம ரெண்டு பேரையும் ஒரே பிக் –ல கொண்டு வந்துட்டாரு –ல?” என அம்ரிதா சொல்ல,

“அட ஆமா டி… நிஜமா கிருஷ்ணா சார் க்ரேட் தான்” பூரித்தாள் ஆஷ்ரிதா.

புன்னகை மலர்ந்த முகமாய் தன்னுடைய அடுத்த கோரிக்கையையும் அப்பொழுதே வைக்க எண்ணி “ஹேய் அச்சு. இந்த பெயிண்டிங்க் –அ நாம உண்மையாக்கலாமா?” என கேட்டாள் அம்ரிதா.

“என்ன டி சொல்லுற? புரியல” – ஆஷ்ரிதா.

“நாளைக்கு நாம ரெண்டு பேரும் கோவில் போலாமா? ப்ளீஸ் டி. வரமாட்டேன் –னு சொல்லாத. ஒருமுறை வா. உனக்கே பிடிக்கும்” – குழந்தைப்போல் கெஞ்சினாள் அம்ரிதா.

ஏற்கனவே அனேகனுடன் கோவிலுக்கு சென்றுள்ள ஆஷ்ரிதாவுக்கு கோவிலின் சுவாசம் விருப்பப்பட்டதாய் தான் அமைந்திருந்தது. எனவே அவளிடம் மறுக்காமல் சம்மதம் தெரிவித்தவள் மறக்காமல் அதே கோவிலுக்குத்தான் செல்ல வேண்டுமெனவும் தீர்க்கமானாள்.

மறுநாள் காலை பொழுது விடிந்ததும் சகோதரிகள் கிளம்பி கோவிலுக்கு புறப்பட, அம்ரிதாவிடம் ஏதேதோ சொல்லி, அன்று அனேகனுடன் சென்ற கோவிலுக்கு அழைத்து வந்தாள் ஆஷ்ரிதா.

வாசலில் தங்கள் காலணிகளை கழட்டிவிட்டு உள்ளே சென்ற சகோதரிகளை முதலில் வரவேற்றது எப்பொழுதும் போல் அந்த பெரிய அரசமரம் தான்.

“ஹேய் அச்சு… ரொம்ப அழகா இருக்கு டி இந்த அட்மாஸ்ஃபியர். கோவிலுக்கே போகதா உனக்கு எப்படி இப்படியொரு கோவில் தெரிஞ்சிது?” பிரம்மிப்புடன் கேட்டாள் அம்ரிதா.

“எப்படியோ தெரிஞ்சுது… வா… சாமி கும்பிடலாம்” என பேச்சைத் தவிர்த்து உள்ளே அழைத்துச் சென்றாள் ஆஷ்ரிதா.

அந்த சிறிய கோவிலின் சிறு கருவறைக்குள் பச்சை பட்டுடுத்தி, அணிந்திருக்கும் மூக்குத்தியை விடவும் பிரகாசமான கண்களுடன் காட்சியளித்தாள் அம்பாள்.

பூசாரி காட்டிய தீப ஆராதணையை தன் கண்களில் நிரப்பி தங்கள் வேண்டுதல்களை அம்பாளிடம் சமர்ப்பித்துவிட்டு மண் தரையில் வந்து அமர்ந்தனர் சகோதரிகள் இருவரும்.

“அச்சு… ரொம்ப அழகா இருக்கு டி இந்த இடம். சின்னதா இருந்தாலும் ஏதோ ஒன்னு இந்த கோவில் –ல என்ன அட்ராக்ட் பண்ணுது. மனசுக்கு ரொம்ப அமைதியா ஃபீல் ஆகுது” என்றாள் அம்ரிதா.

“உனக்கு பிடிச்சிருக்குனா எனக்கு ரொம்ப சந்தோஷம் டி” என ஆஷ்ரிதா பதில் கூறவும் அவள் கையில் வைத்திருந்த அலைபேசி தொடர் அதிர்வுகளை அவளுக்கு உணர்த்தியது.

“ஃபோன் வைப்ரேட் ஆகுது அம்மு. இரு யாருனு பார்க்குறேன்” என்று எடுத்தவளுக்கு அவர்களது பள்ளியில் இருந்து அழைப்பு வந்திருப்பது தெரிந்தது.

“ஸ்கூல் –ல இருந்து கால் டி” என கூறிக்கொண்டே அழைப்பை ஏற்று காதில் வைத்த ஆஷ்ரிதா,

“ஹலோ லதா டீச்சர். சொல்லுங்க” என்றாள்.

அந்த நேரம் அங்கு வந்த பூசாரி ஒருவர்,

“தாயி. கோவிலுக்கு உள்ள போன் பேசக்கூடாது மா. வாசலுக்கு அந்த பக்கம் போய் பேசிட்டு வாங்க” என்றார்.

“சரிங்க அய்யா. மன்னிச்சிருங்க” என அவரிடம் சொல்லிவிட்டு “அம்மு… இரு இதோ வர்றேன்” என வெளியே வீதிக்கு வந்தாள் ஆஷ்ரிதா.

தனியாய் அமர்ந்திருக்க வேசடைப்பட்ட அம்ரிதா கோவிலை ஒரு சுற்று சுற்றி வரலாம் என எண்ணி, எழுந்து நடக்கத் தொடங்கினாள்.

அந்த கோவிலின் சுற்றுச்சுவரை ஒட்டியபடி அமைந்திருக்கும் பூச்செடிகளை கண்டு ரசித்துக்கொண்டே வந்தவள், தன் பார்வையை அதில் இருந்து பிரித்து பாதையில் திருப்பிய சமயம், ஒரு கம்பூன்றிய பாட்டி அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவள் தனக்கு பின் திரும்பி பார்த்துவிட்டு ‘இந்த பாட்டி நம்மள தான் பார்க்குறாங்களா?’ என எண்ணியவள் அவரை பார்த்து ‘என்ன பாட்டி?’ என்று தலையாட்டிக் கேட்டாள்.

அவர் பதில் எதுவும் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பிச் சென்றுவிட “என்ன பதில் எதும் சொல்லாம போறாங்க?” என்று தன்னிடமே கேட்டுக்கொண்டவள் மீண்டும் கோவிலை சுற்றிவரும் வேலையில் ஈடுபட்டாள்.

அம்ரிதாவை கடந்து வந்த அந்த கம்பூன்றிய பாட்டி அடுத்ததாக வாசலில் இருந்து அலைபேசியில் பேசி முடித்துவிட்டு உள்ளே வரும் ஆஷ்ரிதாவை நோட்டமிடலானார்.

அலைபேசியை அணைத்தபடி உள்ளே வந்துக்கொண்டிருந்த ஆஷ்ரிதா, தன் எதிரே மிக அருகில் நின்றிருந்த அந்த பாட்டியைக் கண்டு ஒரு நொடி திடுக்கிட்டு பின் சாந்தமானாள்.

‘இது அனேகன் அன்னைக்கு சொன்ன பாட்டி தானே’ என அவள் மனதினுள் யோசிக்க, அவர் தான் இது என அவள் மனமும் உறுதிசெய்தது.

அவரை நோக்கி “வணக்கம் மா” என்றாள் ஆஷ்ரிதா.

அவளிடமும் எந்த பாவணையும் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டார் அந்த பாட்டி.

அவர் வெள்ளிக்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் பேச மாட்டார் என அனேகன் முன்பே கூறியிருந்ததாள் அந்த பாட்டி பதிலளிக்காமல் சென்றது ஆஷ்ரிதாவுக்கு வித்தியாசமாய் தோன்றவில்லை. சிரித்துக்கொண்டு அம்ரிதாவுடன் அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தாள். அங்கு அவளை காணாது சுற்றிலும் பார்வையை சுழலவிட்டவளை சிறிய தொலைவில் இருந்து கை ஆட்டி தன்னை நோக்கச்செய்தாள் அம்ரிதா.

அம்ரிதாவை கண்டுக்கொண்டதும் அவளுடன் இணைந்து தானும் கோவிலைச் சுற்றி வலம் வந்தாள் ஆஷ்ரிதா. பின் இருவரும் தரிசனத்தின் மகிழ்ச்சியை மனபூர்வமாய் அனுபவித்தவாறு வீடு திரும்பினர்.

வீட்டிற்கு வந்ததும்,

“அச்சு… அந்த கோவில் –ல ஒரு பாட்டி என்னையே பார்த்துட்டு இருந்தாங்க டி. நான் என்ன –னு கேட்டதும் ஒன்னும் சொல்லாம போய்ட்டாங்க” என்றாள் அம்ரிதா.

“என்ன உன்னையுமா?” என அதிர்ச்சித்தாள் ஆஷ்ரிதா.

“உன்னையுமாவா? அப்படின்னா உன்னையும் பார்த்தாங்களா?” – அம்ரிதா.

“ஆ…ஆம்… இல்ல டி… உன்னையானு கேட்க வந்தேன். டன்க் ஸ்லிப் ஆகிட்டு” என்று சமாளித்தவளின் மனதில் நல்லதோ கெட்டதோ இல்லை என்று சொல்லி வைப்போம் என்றே தோன்றியது.

“ஓ… சரி சரி… ஆனா நான் ஏற்கனவே இந்த பாட்டியை பார்த்திருக்கேன் –னு தோணுது டி” – அம்ரிதா.

அம்ரிதா கூறியதில் மீண்டும் அதிர்ச்சியடைந்த ஆஷ்ரிதா அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “பார்த்திருக்கியா எங்கே?” என்றாள்.

“எங்கே –னு நியாபகம் இல்ல. ஆனா இதே மாதிரிதான் நான் கோவில் –ல இருக்கறப்பதான் பார்த்திருக்கேன். அப்படிதான் நியாபகம் இருக்கு” – அம்ரிதா.

தான் காணும் கனவுகள் எல்லாவற்றையும் மறந்துவிடும் அம்ரிதா தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் சுயம் அறிந்து வர, அவள் கனவில் பார்த்த இப்பாட்டியின் நினைவு முதன் முதலாக அவள் நினைவை எட்டியது. அவள் காணும் பல கனவுகளில் அடிக்கடி சந்திப்பவரே இந்த பாட்டி. தன் அம்மாவுடன் கோவிலுக்கு செல்வது போலவும், அங்கு இந்த பாட்டி இவளை கண்ணிமைக்காது பார்ப்பது போலவும் பல நாட்கள் அவள் மனது பதித்துவந்த காட்சி இப்பொழுது அம்ரிதாவின் கண்களில் விரிந்தது.

“உனக்கு தேஜாவு –வா இருக்கு டி அம்மு” என்றாள் ஆஷ்ரிதா.

“என்ன தேஜாவு –வா?” – அம்ரிதா.

“ஆமா. தேஜாவு –னா என்னனு உனக்கு தெரியும். ஆனா சைண்டிஃபிக் –ஆ அதோட ரீசன் உனக்கு தெரியுமா?” – ஆஷ்ரிதா.

“என்ன ரீசன்?” – அம்ரிதா.

“அதாவது நாம ஒரு விஷயத்த கண்ணால பார்க்குறப்ப நம்மளோட வலது கண்ணும் இடது கண்ணும் ஒன்னா சிக்னல் –அ மூளைக்கு அனுப்பும். சில நேரம் ரெண்டு கண்ணுல ஏதாவது ஒரு கண்ணு அதிகமா ப்ராசஸ் ஆகிடுச்சுனா இந்த மாதிரி நடக்கும். தேட் மீன்ஸ், இப்ப நீ முதல் முறையா ஒரு பொம்மைய பார்க்குறனு வச்சிக்க, உன் ரெண்டு கண்ணும் ஒன்னா ப்ராசஸ் பண்ணுச்சின்னா உனக்கு அந்த பொம்மை புதுசா தான் தெரியும். சப்போஸ் உன்னோட வலது கண்ணு முதல அந்த பொம்மையோட உருவத்த சிக்னல் ஆக்கி உன் மூளைக்கு கொண்டு போய்டுச்சுனா இரண்டாவதா இடது கண்ணு கொண்டு போகும் பொழுது, ஏற்கனவே உன் வலது கண் கிரகிச்சு வச்சிருக்க அந்த பொம்மையோட உருவத்த பார்த்துட்டு இத ஏற்கனவே பார்த்திருக்கோமே அப்படினு யோசிக்கும். அதனால தான் நமக்கு புதுசா பார்க்குற பல பலவிஷயங்கள் ஏற்கனவே பார்த்த மாதிரியான ஃபீல் கொடுக்குது” என்றாள் ஆஷ்ரிதா.

“அப்போ இது தேஜாவு தானா?” கேள்வியாய் கேட்டாள் அம்ரிதா.

“அப்படிதான் இருக்கும் டி” என மீண்டும் ஆஷ்ரிதா சொல்ல, அம்ரிதாவும் ஏற்றுக்கொண்டாள்.

அப்போதைக்கு அம்ரிதாவை நம்பவைத்துவிட்டாலும் இந்த விஷயத்தை அனேகனிடம் கண்டிப்பாக கூறியாக வேண்டும் என ஆஷ்ரிதாவின் மனம் துடித்துக்கொண்டிருந்தது. உடனடியாக அனேகனுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்ப எண்ணி அலைபேசியை எடுத்தவளுக்கு திரையில் காத்துக்கொண்டிருந்தது திரவியத்தின் குறுஞ்செய்தி.

வழக்கம்போல திரவியத்தின் செய்தியை படிக்காமலேயே அழித்துவிட்டவள் அனேகனுக்கு இன்று நடந்த கோவில் விஷயத்தை குறுஞ்செய்தியாய் தட்டினாள். பதிலுக்கு அவனோ, இன்னும் சற்று நேரத்தில் அவர்களது வீட்டிற்கு வருவதாய் கூறினான் அனேகன்.

அவன் கூறியபடியே சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தான் அனேகன். வந்தவனை வரவேற்ற ஆஷ்ரிதா அவன் காதருகே சென்று “அம்மு வீட்டுல தான் இருக்கா. தெரியாம எதுவும் பேசிடாதீங்க” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அனேகனின் பின்புறத்தில் இருந்து வந்தான் திரவியம். அவனைக் கண்டது சட்டென்று வாயடைத்துப் போன ஆஷ்ரிதா அனேகனை பார்த்து முறைத்தாள்.

தற்பொழுது ஆஷ்ரிதாவின் காதருகே சென்ற அனேகன், அவளை போலவே மென் குரலில், பின்னாடி திருவோட அம்மா வந்துட்டு இருக்காங்க. தெரியாம ஏதாவது பேசிடாத” என்றுவிட்டு சிரித்தான்.

அதில் கூடுதல் கடுப்பான ஆஷ்ரிதா “ப்சே” என்றபடி தன் கையில் இருந்த ரப்பர் பேண்டை தூக்கி எறிந்துவிட்டு அவளது அறைக்குள் சென்று டமார் என கதவை அடைத்துக்கொண்டாள்.

அடுப்பங்கறையில் சமையல் வேலையை கவனித்துக்கொண்டிருந்த அம்ரிதா, கதவு வேகமாக அடைக்கப்படும் சத்தம் கேட்டு “ஏய்… கதவ ஏன் டி இப்படி உடைக்கற?” என்றபடி கரண்டியோடு வெளியே வந்தாள்.

“வாவ்… இன்னைக்கு அம்மு சமையலா?” என்றான் திரவியம்.

“ஹே… நீங்க எப்ப பா வந்தீங்க??” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் அம்ரிதா.

“இப்பதான்… ஜஸ்ட் நவ்” என்றான் அனேகன்.

“ஓ… மேடம் அதனாலதான் கதவ ஒடைக்கிறாங்களா?” என கரண்டியை பிடித்திருந்த கைகளைக் கட்டிக்கொண்டே சிரித்தபடி கேட்டாள் அம்ரிதா.

“திருவோட அம்மாவும் வந்துட்டு இருக்காங்க அம்மு பின்னடி” – அனேகன்.

“அட பாவிகளா… அம்மாவ வாசல் –ல இருந்து கைப்பிடிச்சி கூப்பிட்டு வராம உள்ள வந்து நின்னு என்ன பண்ணுறீங்க ரெண்டு பேரும்?” – அம்ரிதா.

“உன் அக்கா எப்படி எக்ஸ்ப்ரெஷன் கொடுப்பானு தெரிய வேணாமா? அதான் வேகமா முன்னாடி ஓடி வந்தோம். இரு நான் போய் கூட்டிட்டு வர்றேன்” என வாசலுக்கு ஓடினான் திரவியம்.

சிரித்துக்கொண்ட அம்ரிதா அனேகனை பார்த்து “உட்காரலாமே அனேகா” என்றாள்.

“திருவோட அம்மாகிட்ட நம்ம கல்யாணத்த பத்தி பேசப்போறோம் அம்மு. அதுக்குத்தான் வந்திருக்கோம்” என்று கூறியபடியே அமர்ந்தான் அனேகன்.

அவன் கூறிய ‘நம்ம கல்யாணம்’ எனும் வார்த்தையை தன் மனதினுள் அடிக்கோடிட்டுக்கொண்ட அம்ரிதா, “என்ன நம்ம கல்யாணமா?” என்று வாய்ப்பிளந்துக் கேட்டாள்.

சற்றுநேரம் புரியாமல் முழித்த அனேகன், தான் சொன்ன வாக்கியத்தை தனக்குள் மீண்டும் சொல்லிப்பார்த்துவிட்டு, சிரித்துக்கொண்டே “ஹாஹா… வேகமா சொல்லிட்டேனா?” என்றான்.

“என்ன வேகமா சொன்னீங்க?” - பதட்டம் குறையா குரலில் அம்ரிதா.

“திருவோட அம்மாகிட்ட நாம ரெண்டு பேரும் சேர்ந்து திரு - ஆஷ்ரிதாவோட கல்யாணத்தை பத்தி பேசப்போறோம் –னு சொன்னேன்” – அனேகன்.

அதைக் கேட்டவள் ஒரு பெருமூச்சை வெளியே விட்டவாறு வெட்கம் கலந்து சிரித்தாள். அதை கவனித்தவனாய்,

“ஏன், நம்ம கல்யாணத்த பேசக்கூடாதா அம்மு?” என விஷமப் புன்னகையோடு கேட்டான் அனேகன்.

அதில் கன்னியவளது கன்னம் மேலும் சிவந்துப்போக, தன் கண்கள் வழியே அவனுக்கு காதல் தூது அனுப்பினாள்.

‘எத்தனை நாள் நான் இந்த பார்வைய மட்டும் பார்க்குறது அம்மு? உன் வாய் திறந்து உன்னோட காதல, எனக்கான காதல எப்ப சொல்லுவ?’ என எண்ணினான் அனேகன்.

இருவரும் தனித்து விடப்பட்ட அந்த வரவேற்ப்பு அறையில் காதல் புறாக்களாய் இருவரும் தங்கள் கண்களால் கவிப்பாடிக் கொண்டிருக்க, இருவருள்ளும் ஏதோ ஓர் ரம்மியமான உணர்வு பரவி அவர்களது ஆன்மாவை ஆட்கொண்டது.

சிவ பூஜையில் கரடியாம்; இவர்களது காதல் பூஜையில் கரடியானான் திரவியம்.

“அம்மா வந்துட்டாங்க அம்மு” என்று திடுமென வாசலைத்தாண்டி திரவியம் உள்ளே குதிக்க, மனதிற்குள் தான் பிரயாணப்பட்டுக்கொண்டிருந்த பவித்ரமான நிலையை சட்டென கைவிட்டு பதறியபடி நிஜத்திற்கு வந்தாள் அம்ரிதா.

அனேகன் எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் பூமிக்குத் திரும்பினான்.

அம்ரிதா திடுக்கிட்டதில் திரவியத்திற்கு ஏதோ அரைகுறையாய் புரிந்துவிட, “நான் எதும் டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ அம்மு?” என்றான் நக்கல் தொனியில்.

அதைக் கேட்டதும் வேகமாய் துடிக்கத் தொடங்கிய அவளது இதயத்தை அடக்கியபடி “ச்சே… ச்சே… அதெல்லாம் ஒன்னுமில்ல திரு” என்று அவனிடம் கூறிவிட்டு “வாங்க அம்மா” என ஓடிச்சென்று அவனது அம்மாவை வரவேற்று அமரவைத்தாள் அம்ரிதா.

எல்லாம் அறிந்த அனேகனும் திரவியமும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள, “வந்து உட்காரு திரு” என அவனை அழைத்தான் அனேகன்.

அனேகன் அழைப்பிற்கிணங்க அவனது அருகிலேயே சென்று அமர்ந்த திரவியம் அனேகனிடம் “ப்ரோ… அடுத்தது இதே மாதிரி உட்கார்ந்து உங்களுக்கும் அம்முவுக்கும் கல்யாணம் பேசனும் நாங்க. என்ன ஓகே வா?” என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான்.

“இதே மாதிரி முடியாதே திரு” – அனேகன்.

“ஏன் ப்ரோ? என்ன மாதிரி இல்லையே உங்க பிரச்சனை. ஆல் சைட் ஓகே தானே?” – திரவியம்.

“அது இல்ல திரு. இப்ப மாதிரி இல்லாம நீங்களும் அச்சுவும் ஜோடியா உட்கார்ந்து எங்க கல்யாணத்த பேசுவீங்கனு சொன்னேன்” என அனேகன் சொல்லியதுதான் தாமதம், திரவியத்தின் முகத்தில் எத்தனை வாட்ஸ் பல்ப் எரிந்தது என சொல்ல முடியாது. அத்தனை பிரகாசம்.

(களவாடுவான்)
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 22

திரவியத்தின் தாயை அழைத்து அமரவைத்த அம்ரிதா “அம்மா இருங்க. நான் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என சமையல் அறைக்குள் சென்றாள். அந்த நேரம் திரவியம் எழுந்து தன் அம்மாவிடம்,

“அம்மா… வாங்களேன், அம்மு காஃபி போடுற வர நீங்க வீட்ட சுத்திப்போருங்களேன்” என அழைத்தான்.

அந்த சத்தம் கேட்ட அம்ரிதாவும், “ஆமா மா… சுத்தி பார்த்துட்டு வாங்க. நான் காஃபியோட வர்றேன்” என்கவும் வரவேற்பறையில் அமர்ந்திருந்த மூவரும் முதலில் இயற்கையை வளம் வர எண்ணி, கட்டிடத்தை விட்டு வெளியேறி தோட்டப்பகுதிக்கு சென்றனர்.

காஃபியை தயார் செய்த அம்ரிதா, ஆஷ்ரிதாவை அழைக்க எண்ணிர் அவர்களது அறைக்குச் செல்ல, கதவின் உட்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருப்பது தெரிந்தது.

“அச்சு… அச்சு… கதவ திற” கதவை தட்டியபடியே கூறினாள் அம்ரிதா.

கதவு திறக்கப்பட்டது. வேகமாக அறையின் உள்ளே சென்று தாழிட்ட அம்ரிதா,

“என்ன அச்சு பண்ற நீ? நீ நடந்துக்கறது உனக்கே நல்லா இருக்கா?” – அம்ரிதா.

“அப்போ இங்க நடக்கறது எல்லாம் நல்லா நடக்குதா?” – ஆஷ்ரிதா.

“அப்படி என்ன நடந்தது இப்போ? ஏன் திரு நம்ம வீட்டுக்கு வரக்கூடாதா?” – அம்ரிதா.

“தயவுசெய்து தெரியாத மாதிரி பேசதா அம்மு” – கைக்கூப்பி கும்பிட்டாள் ஆஷ்ரிதா.

“ஏய் அம்மு… ஏன் டி இப்படி எல்லாம் பேசுற? உன் நல்லதுக்காக தான டி சொல்லுறோம். திரு உன்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காரு தெரியுமா? அவனோட அம்மா உன்கிட்ட பேச வீடு தேடி வந்துருக்காங்க! இதுக்குமேல என்ன டி வேணும் உனக்கு?” – சாந்தமாய் கேட்டாள் அம்ரிதா.

பதில் ஏதும் சொல்லாமல் சிவந்த கண்களோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“ஒன்னுமில்ல அச்சு” என அவளது கண்களை துடைத்துவிட்ட அம்ரிதா, “அவங்க எல்லாரும் தோட்டத்துக்கு போய்ருக்காங்க. நீ முகத்த கழுவிட்டு வா. வந்து வாங்கனு ஒரு வார்த்த கேளு. வீடு தேடி வந்திருக்குற பெரியவங்கள மதிக்கணும்ல?” - அம்ரிதா.

அம்ரிதா பணிவாய் சொன்ன வார்த்தைகளை காதில் போட்டுக்கொண்ட ஆஷ்ரிதா, எழுந்து தன் முகத்தை கழுவி கருமை நிறத்தில் பொட்டு ஒன்றை வைத்துக்கொண்டாள்.

“வெரி குட். இப்பதான் நல்லா இருக்க. வா” என அவளை அழைத்துக்கொண்டு, தயாரித்து வைத்திருந்த காஃபியினை அனைவருக்கும் கோப்பையில் ஊற்றி தோட்டத்திற்கு எடுத்துச் வந்தாள் அம்ரிதா.

அம்ரிதா காப்பி கோப்பைகள் அடுக்கப்பட்ட ட்ரேயை தூக்கிக்கொண்டுவர, தூரத்தில் தன் அம்மாவுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த திரவியத்தை பார்த்தபடியே அவளுடன் நடந்து வந்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

அவ்வளவு நேரம் தனது வாயில் இருக்கும் பற்கள் அனைத்தும் தெரியும் வண்ணம் சிரித்துக்கொண்டிருந்த திரவியம், ஆஷ்ரிதாவின் வரவை கண்டதும், திடுமென அதரத்தை மூடி நிதானமாய் சிரித்தான்.

சகோதரிகள் இருவரும், முக்கோணமாய் நின்று பேசிக்கொண்டிருப்பவர்களை அடைந்ததும், “காஃபி வந்தாச்சு” என்றாள் அம்ரிதா.

ஆஷ்ரிதா திரவியத்தின் அம்மாவுக்கு வணக்கம் வைத்தாள்.

அவரோ “எப்படி மா இருக்க?” என கேட்டவாறு அவளது தலையை வாஞ்சையாக தடவினார்.

அதற்கு பதிலாக “ம்ம்ம்” என அவள் தலையாட்டிட, அவளது கண்களில் இருந்து வடிந்தது ஒரு சொட்டு கண்ணீர்.

அவளது தலையசைப்பிற்கும், வடியும் கண்ணீருக்கும் அர்த்தம் என்ன எனும் யோசனையில் திரவியத்தின் அம்மா செல்ல யத்தனித்த சமயம், அம்ரிதா பேச்சை திசைத்திருப்பும் பொருட்டு, “வாங்க எல்லாரும் அங்க உட்கார்ந்து பேசலாம். ரொம்ப நேரம் ட்ரே –ய தூக்கிட்டே நிக்குறேன். கை வலிக்குது” என்றாள்.

“ஹாஹா… கொடு அம்மு” என அவளிடம் இருந்த ட்ரே –யை அனேகன் வாங்கிக்கொள்ள, அனைவரும் அந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த வட்ட மேஜையை சுற்றியிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தனர்.

தோட்டத்தை பற்றியும் அந்த வீட்டை பற்றியும் பேசியவாறு அனைவரும் காஃபியினை குடித்து முடிக்க, திரவியத்தின் தாய் தான் வந்த விஷயத்தை பேசத் தொடங்கினார்.

“சரி மா. நான் எதுக்காக வந்தேன் –னு உனக்கு சொல்லி தெரியவேண்டியது இல்ல அச்சு. உன்ன என் மருமகளா கூட்டிட்டு போக நான் அசைப்படுறேன். ஏற்கனவே எனக்கு உடம்புல ஆயிரத்தெட்டு பிரச்சனை. ஏதோ மாத்திரை மருந்துனு வண்டி ஓடிகிட்டு இருக்கு. என் கண்ண மூடுறதுக்குள்ள உன்ன அவன் கையில புடிச்சு கொடுத்துட்டா நீ அவன பார்த்துப்பங்கற நினைப்புலயே என் கட்ட நிம்மதியா வேகும்” என்று ஒரே போடாக போட்டார்.

அவர் இந்த விஷயம் பேசத்தான் வந்திருக்கிறார் என்பது சகோதரிகளுக்கு தெரிந்திருந்த போதிலும், எடுத்ததும் நேரடியாக மருமகள், கல்யாணம் என்று அவர் பேசவும் ஆஷ்ரிதாவுக்கு சிறிது பதட்டமாய் தான் இருந்தது. மிகுந்த சிரமத்துடன் பேச திராணியை திரட்டியவள்,

“அம்மா… நீங்க தெரிஞ்சிதான் பேசுறீங்களா? எந்த ஒரு அம்மாவும் தன்னோட புள்ளைக்கு என்ன மாதிரி ஒரு பொண்ண கட்டித்தர நினைக்க மாட்டாங்க. ஆனா நீங்க எப்படி மா?” – கண்களில் கண்ணீர் வடியக்கேட்டாள் ஆஷ்ரிதா.

“இதோ இப்படி நெஞ்சில நேர்மையும் கண்ணுல பாசத்தையும் வச்சி பேசுறியே இத விட வேற என்ன தங்கம் வேணும்? புள்ள பெத்துக்கிட்டா மட்டும் போதுமா? என் பையன காலம் முழுக்க நேசத்தோட அரவணைச்சு நிக்க வேணாமா?” என கேட்டார் திரவியத்தின் அம்மா.

அவர் பேசிய வார்த்தையின் ஆழத்தை உணர்ந்தவள் எழுத்த வேகத்தில் திரவியத்தின் அம்மாவுடைய பாதங்களை சரணடைந்தாள்.

“அம்மா… உங்களுக்கு பெரிய மனசு. ஆனா தயவு செய்து நான் சொல்லுறத கேளுங்க. நான் உங்களுக்கு வேணாம் மா!” என கதறினாள்.

தன் அக்கா அழுவதைக் கண்ட அம்ரிதாவுக்கு மனம் தாங்கவில்லை. நெற்றியை சுருக்கிப்பார்த்துக் கொண்டிருந்தவளது கையை பிடித்த அனேகன், “எவ்ரிதிங்க் வில் பீ ஆல்ரைட் பேபி” என்றான்.

தனது காலில் விழுந்து அழுதுக்கொண்டிருக்கும் ஆஷ்ரிதாவை பதறியபடி தூக்கிய திரவியத்தின் அம்மா,

“ஏன் மா இப்படி எல்லாம் நடந்துக்கற? ஒருவேள நாங்க உங்களவிட வசதி கம்மினு நீ நினைச்சா நீ தாராளமா சொல்லலாம் மா” என்றார்.

“அய்யோ… அம்மா. என்ன வார்த்தை கேட்குறீங்க? அக்கா அப்படி நினைக்கறவ இல்ல” – பொங்கிய அம்ரிதாவை மீண்டும் கைப்பிடித்து சட்டென அடக்கினான் அனேகன்.

“இல்ல அனேகா… அவங்க” என்ற அம்ரிதாவை அடுத்துப் பேச விடாமல் கண்களால் அமைதியாய் இருக்குமாறு கூறினான் அனேகன்.

அதனால் அம்ரிதா தன் வாதத்தை தொடராமல் நிறுத்த, தற்போது ஆஷ்ரிதா பேசினாள், “அப்படியெல்லாம் இல்ல மா. திருவுக்கு ஒரு நல்ல ப்ரெண்டா நான் சொல்லுறேன். நான் அவனுக்கு வேண்டாம்” என்று.

“நீ ஏன் மா வேண்டாம் –னு சொல்லுற? குழந்தை விஷயத்தை தவிர வேறு எதும் காரணம் இருந்தா சொல்லு. குழந்தை ஒரு விஷயமே இல்ல. உனக்கு திரு –வ பிடிக்கும்னு எனக்கு தெரியும். அவனும், நீங்க நட்பான காலத்துல இருந்து உனக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கான் –னு எனக்கு தெரியும். அப்பவே திருகிட்ட உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன். அவன் நாங்க ப்ரெண்ட்ஸ் தான் –னு சொல்லி மறுத்துட்டான். ஆனா அவனுக்கு உன்ன பிடிக்கும்னு எனக்கு தெரியும்” – திரவியத்தின் அம்மா.

இப்பொழுது ஆஷ்ரிதா முகத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்தவளாய் “அவனுக்கு வேற நல்ல பொண்ணா பார்க்கலாம். நீங்களும் பேரக்குழந்தைகளோட ரொம்ப சந்தோஷமா இருக்கலாம். அவனோட அனுதாப காதல் எனக்கு வேண்டாம்” என்றாள்.

அவள் கடைசியாய் கூறிய அனுதாப காதல் எனும் வார்த்தை திரவியத்திற்கு தேள் கொட்டியது போல இருந்தது. தான் அமர்ந்திருந்த நாற்காலியை தடார் என தட்டிவிட்டவாறு எழுந்தவன் ஆஷ்ரிதாவை நோக்கி, “என்ன சொன்ன? அனுதாப காதலா? இதுக்கு நான் வந்தப்பவே வெளிய போடா நாயா –னு சொல்லி என்ன துரத்தியிருக்கலாம் நீ” என்றான்.

திரவியத்தின் திடீர் சீற்றத்தை கண்டு திகைத்த அம்ரிதாவும் அனேகனும் பதறிப்போய் தங்கள் நாற்காலிகளில் இருந்து எழுந்துக்கொள்ள, திரவியத்தின் அருகே சென்ற அனேகன் அவனது தோள்களை பற்றி “ரிலக்ஸ் திரு… டோன்ட் பீ எமோஷ்னல்” என்றான்.

ஆஷ்ரிதாவோ உணர்ச்சிகள் துடைத்த முகமாக கற்சிலையென அமர்ந்திருந்தாள்.

“பின்ன என்ன அனேகன். பாருங்க அவ என்ன பேசுறானு?” என்று கோபக்கனல் தெரிக்க பேசினான் திரவியம்.

“என்ன அச்சு நீ? இப்படியா பேசுவ?” என்றாள் அம்ரிதா. அப்பொழுதும் அவள் அசைதாளில்லை.

“என்னையும் என் அம்மாவையும் அசிங்கப்படுத்தனும்னு இப்படியெல்லாம் பேசுறியா அச்சு?” – திரவியம்.

“ஓ… நீங்க சொல்லுறத எல்லாம் கேட்டா நல்லவ. இல்லைனா கெட்டவ. அதுதான உங்க கோட்?” என கேட்டாள் ஆஷ்ரிதா.

“உன்ன கெட்டவனு இப்ப யாரு சொன்னா அச்சு. எதுக்கு சம்பந்தமே இல்லாம பேசிட்டு இருக்குற?” – அனேகன்.

“சாரி அனேகன். எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அவ்வளவுதான்” என எழுந்து வீட்டிற்குள் சென்றாள் ஆஷ்ரிதா.

“யேய்… நில்லு டி…” என அவள் பின்னே ஓடினான் திரவியம்.

அவர்கள் இருவரும் பேசி தீர்க்கட்டும் என எண்ணிய மூவரும் தாங்கள் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை. திரவியத்தின் அம்மாவை நோக்கி “அவன் அச்சுகிட்ட பேசிட்டு வரட்டும் மா. நீங்க வருத்தப்படாதீங்க. பார்த்துகலாம்” என்றான் அனேகன்.

தோட்டத்தை தாண்டி செல்லும் ஆஷ்ரிதாவை வழிமறித்த திரவியத்திடம் திமிறியபடி வீட்டிற்குள் சென்றிருந்தாள் அவள். விடாப்பிடியாக அவளை துரத்தி வீட்டின் வரவேற்பறையில் தன் கைகளின் பிடியால் ஆஷ்ரிதாவை சிறைப்பிடித்திருந்தான் திரவியம்.

“வாட் இஸ் திஸ் திரு? கை – அ விடு. என்ன அம்மாவும் புள்ளையும் வீட்டுக்கு வந்து கல்யாணம் பண்ணிக்க சொல்லி அராஜகம் பண்ணுறீங்களா? – ஆஷ்ரிதா.

“என்னது? அராஜகம் பண்ணுறோமா? எங்கள பாத்தா எப்படி தெரியுது அச்சு உனக்கு? உன்ன காதலிச்ச பாவத்துக்கு நான் தான் உன்ன கெஞ்சிகிட்டு இருக்கேன் –னா, என் அம்மாவும் வந்து உன் காலுல விழனுமா?” – பற்களை கடித்தபடி கேட்டான் திரவியம்.

“ஜஸ்ட் ஸ்டாப் இட் திரு” என ஒரே உதறலில் தன் கையினை அவன் பிடியில் இருந்து விடுவித்துக்கொண்ட ஆஷ்ரிதாவின் கண்கள் ருத்ர தாண்டவம் ஆடியது.

“என்ன டி முறைக்குற? நான் சொல்லுறதுல என்ன தப்பு சொல்லு? நான் உன்ன ப்ரொப்போஸ் பண்ணதுக்கு அப்பறம் என்னை எல்லா இடத்துலயும் நீ இக்னோர் பண்ண, அவாய்ட் பண்ண. நான் என்னைக்காவது உன்ன டிஸ்டர்ப் பண்ணியிருக்கேனா? நீயா என்ன புரிஞ்சிட்டு வருவனு தான டி வெயிட் பண்ணேன். இன்னைக்கு அம்மாவ தான கூட்டிட்டு வந்து பேசுனேன்? நாலு ரெளடிகள கூட்டிட்டு வந்து மிரட்டவா செஞ்சேன். அந்த ரேன்ஜ்க்கு தான் பேசிட்டு இருக்குற நீ” – ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தான் திரவியம்.

“முடியாதுனு சொன்னா விடவேண்டியது தானே” – கத்தினாள் ஆஷ்ரிதா.

“முடியாதுனு தான சொன்ன? பிடிக்காதுனு சொல்லு அச்சு. அப்ப நான் போறேன். எனக்கு உன்ன பிடிக்கல, அதனால உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் –னு சொல்லு. அப்ப நான் போறேன். சும்மா சும்மா உன்னோட நல்லதுக்குதான் சொல்லுறேன். நல்லா பொண்ணா கல்யாணம் பண்ணிக்கோ, குழந்த பெத்துக்கோ இப்படியெல்லாம் டயலாக் பேசாத” – திரவியம்.

“ஆமா, எனக்கு உன்ன பிடிக்கல. போதுமா? போ” – காதைப் பொத்திக்கொண்டு சீறினாள் ஆஷ்ரிதா.

ஒரு நிமிடம் அதிர்ந்து நின்ற திரவியம் “ஓ… ஓகே ஃபைன். தேங்க்ஸ் ஆச்சு. சாரி, இனி உன்ன அப்படி கூப்பிட மாட்டேன் மிஸ். ஆஷ்ரிதா. உன்னவிட செம அழகா ஒரு பார்த்து கல்யாணம் பண்ணுறேன். நிச்சயமா கல்யாணத்துக்கு வந்துரு. இனி உன்ன…. சாரி, உங்கள நான் தொந்தரவு பண்ண மாட்டேன். குட் பை” என்று சல்யூட் செய்வது போல சைகை செய்தவன் அங்கிருந்து கிளம்பினான்.

பேதை அவள் உள்ளமும் உடலும் நடுங்க, கதறியபடி சுவற்றில் சாய்ந்தவள் அப்படியே தரையில் அமர்ந்து அழுத்தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் வீட்டிற்குள் ஓடி வந்த அம்ரிதா, “அச்சு… என்ன டி ஆச்சு? திரு அவனோட அம்மாவ கூட்டிட்டு கோவமா கிளம்புறான். என்ன நடந்துது?” என கேட்க, அவளது அழுகை ஓலம் மட்டுமே பதிலாக இருந்தது.

அம்ரிதாவின் பின்னோடு மெல்லமாய் நடந்து வந்த அனேகன், ஆஷ்ரிதாவின் அருகே அமர்ந்து “அச்சு… ச்சில்… எதுக்கு இவ்வளவு அழனும்? அவன வேணாம் –னு சொன்ன. அவன் சரி –னு அவன் இப்போ ஒதுங்கிட்டான். நீ கேட்டத தான் உனக்கு செஞ்சிருக்கான். பிறகு எதுக்கு இப்படி அழுற. விடு” என்றான்.

“என்ன பார்த்து என்ன வார்த்தை கேட்டான் தெரியுமா அனேகன்?” என்று அழு குரலிலேயே கேட்டாள் ஆஷ்ரிதா.

“தெரியும்… அவன் சத்தம் கார்டன் வர கேட்டுச்சு” என்றான் அனேகன்.

“அவ்வளவு தான் அவன் என்ன புரிஞ்சிகிட்டதா அனேகன்? என்ன பார்த்து எப்படி அப்படி எல்லாம் பேச முடிஞ்சிது அவனால?” – ஆஷ்ரிதா.

“அவன் உங்கள புரிஞ்சிகிட்டவனா இருந்துருந்தா நீங்க வேணாம்னு சொன்ன உடனே உங்கள விட்டு போய்ருக்கனுமே! ஏன் இவ்வளவு நாள் வெயிட் பண்ணனும்?” – திரவியத்தின் மேல் அவளுக்கு இருக்கும் பாசத்தை வெளியே கொண்டுவர எண்ணி அவனை பழியாக்கிப் பேசினான் அனேகன்.

“அவனுக்கு என் மேல அக்கறை உண்டு அனேகன். உங்க விஷயத்துல நான் எவ்வளவோ அடம் பிடிச்சேன். அப்போ எல்லாம் அவன் என்னை விடவே இல்ல. இன்னைக்கு என்ன அப்படி பேசிட்டு கல்யாணத்துக்கு வந்திருனு சொல்லிட்டு போய்ட்டான்” எனறு முகத்தை மூடி அழுதாள் ஆஷ்ரிதா.

“நீ தான அச்சு அவன ஃப்ரெண்டா மட்டும் இருக்க சொன்ன. ஒரு ஃப்ரெண்டா அன்னைக்கு என் விஷயத்துல நீ கேட்காமலே எல்லாம் செஞ்சான். இன்னைக்கு நீ வேண்டாம் –னு இவ்வளவு உறுதியா இருக்கறதால சரி –னு டீசண்ட் –ஆ ஒதுங்கிக்கறான்” – அனேகன்.

“இருக்கட்டும் அனேகன். அதுக்காக இத்தனை நாள் என்ன அக்கறையா பார்த்துக்கிட்டவன் இப்படி பேசிட்டு போவானா?” – ஆஷ்ரிதா.

இதைக் கேட்டு சிரித்த அனேகன், “வாட் சைல்டிஸ் அச்சு? அவன பிடிக்காதுனு சொல்லுறீங்க. அப்பறம் எதுக்கு அவன் உங்க மேல அக்கறை எடுத்துக்கனும்னு இவ்வளவு துடிக்கிறீங்க?” – பொட்டில் அடித்தாற் போல கேட்டான் அனேகன்.

அவன் கேள்வியில் திணறி நின்ற ஆஷ்ரிதா உண்மையை சொல்லிவிட முடிவு செய்தாள். தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டவள்,

“என்ன காதலிக்கற அவன் நல்லா இருக்கனும்னு நான் நினைக்க மாட்டேனா அனேகன்?” என கேட்டாள் ஆஷ்ரிதா.

‘அப்படி வா வழிக்கு’ என நினைத்துக் கொண்ட அனேகன், “கரெக்ட் அச்சு. ஆனா அது ஒரு பொதுவான நல்லெண்ணம் தானே. நீங்க நினைச்ச மாதிரி அவன் வேற பொண்ண கல்யாண்ம் பண்ணி சந்தோஷமா இருக்குறதா சொல்லிட்டான். இனி எதுக்கு நீங்க வருத்தப்படனும்?” – அனேகன்.

“எனக்கு வருத்தம் இருக்கும் அனேகன். பிறந்ததுல இருந்து இப்ப வர ஆச பட்ட வாழ்க்கைய வாழ முடியாம தவிக்கிற எனக்கு வருத்தம் இருக்க தான் செய்யும். இன்னைக்கு நான் இப்படி கடுமையா பேசுறேன்னா அதுக்கு காரணம் நான் அனுபவிச்ச வலிகள். விதி தான் என்ன இன்னைக்கு இப்படி மாத்திருக்கு” – ஆஷ்ரிதா.

“புரியல அச்சு. உனக்கு திரு விஷயத்துல என்ன வலி இருக்க போகுது? அவனுக்கு வேணும்னா காதல் தோல்வினு வலி இருக்கலாம். நீங்க தான் அவன காதலிக்கவே இல்லையே. அப்புறம் எதுக்கு வலிக்கனும் உங்களுக்கு?” – அனேகன்.

தன் தலையைப் பிடித்துக் கொண்டு பல்லைக் கடித்தவள்,
“எனக்கு வலிக்கவே இல்ல சாமி… விட்டுடுங்க!” என்று கூறினாள்.

“நீ நடந்துக்கறத பார்த்தா என் லைஃப் நினைச்சு எனக்கு பயமா இருக்கு அச்சு. உனக்கு அப்பறம் தானே அம்முக்கு கல்யாணம் ஆகும். நீ கல்யாணம் பண்ணலனா எப்படி?” – அனேகன்.

“ஓ… இப்ப அதுதான் உங்க பிரச்சனையா?” என்று கேட்டவள், தன் அருகில் நின்றிருக்கும் அம்ரிதாவை பிடித்து அனேகனை நோக்கி தள்ளிவிட்டு,

“இப்பவே வேணும்னாலும் கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் யார் வாழ்க்கையிலயும் தடையா இருக்க மாட்டேன்!” என்றாள்.

(களவாடுவான்)​
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 22

திரவியத்தின் தாயை அழைத்து அமரவைத்த அம்ரிதா “அம்மா இருங்க. நான் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என சமையல் அறைக்குள் சென்றாள். அந்த நேரம் திரவியம் எழுந்து தன் அம்மாவிடம்,

“அம்மா… வாங்களேன், அம்மு காஃபி போடுற வர நீங்க வீட்ட சுத்திப்போருங்களேன்” என அழைத்தான்.

அந்த சத்தம் கேட்ட அம்ரிதாவும், “ஆமா மா… சுத்தி பார்த்துட்டு வாங்க. நான் காஃபியோட வர்றேன்” என்கவும் வரவேற்பறையில் அமர்ந்திருந்த மூவரும் முதலில் இயற்கையை வளம் வர எண்ணி, கட்டிடத்தை விட்டு வெளியேறி தோட்டப்பகுதிக்கு சென்றனர்.

காஃபியை தயார் செய்த அம்ரிதா, ஆஷ்ரிதாவை அழைக்க எண்ணிர் அவர்களது அறைக்குச் செல்ல, கதவின் உட்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருப்பது தெரிந்தது.

“அச்சு… அச்சு… கதவ திற” கதவை தட்டியபடியே கூறினாள் அம்ரிதா.

கதவு திறக்கப்பட்டது. வேகமாக அறையின் உள்ளே சென்று தாழிட்ட அம்ரிதா,

“என்ன அச்சு பண்ற நீ? நீ நடந்துக்கறது உனக்கே நல்லா இருக்கா?” – அம்ரிதா.

“அப்போ இங்க நடக்கறது எல்லாம் நல்லா நடக்குதா?” – ஆஷ்ரிதா.

“அப்படி என்ன நடந்தது இப்போ? ஏன் திரு நம்ம வீட்டுக்கு வரக்கூடாதா?” – அம்ரிதா.

“தயவுசெய்து தெரியாத மாதிரி பேசதா அம்மு” – கைக்கூப்பி கும்பிட்டாள் ஆஷ்ரிதா.

“ஏய் அம்மு… ஏன் டி இப்படி எல்லாம் பேசுற? உன் நல்லதுக்காக தான டி சொல்லுறோம். திரு உன்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காரு தெரியுமா? அவனோட அம்மா உன்கிட்ட பேச வீடு தேடி வந்துருக்காங்க! இதுக்குமேல என்ன டி வேணும் உனக்கு?” – சாந்தமாய் கேட்டாள் அம்ரிதா.

பதில் ஏதும் சொல்லாமல் சிவந்த கண்களோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“ஒன்னுமில்ல அச்சு” என அவளது கண்களை துடைத்துவிட்ட அம்ரிதா, “அவங்க எல்லாரும் தோட்டத்துக்கு போய்ருக்காங்க. நீ முகத்த கழுவிட்டு வா. வந்து வாங்கனு ஒரு வார்த்த கேளு. வீடு தேடி வந்திருக்குற பெரியவங்கள மதிக்கணும்ல?” - அம்ரிதா.

அம்ரிதா பணிவாய் சொன்ன வார்த்தைகளை காதில் போட்டுக்கொண்ட ஆஷ்ரிதா, எழுந்து தன் முகத்தை கழுவி கருமை நிறத்தில் பொட்டு ஒன்றை வைத்துக்கொண்டாள்.

“வெரி குட். இப்பதான் நல்லா இருக்க. வா” என அவளை அழைத்துக்கொண்டு, தயாரித்து வைத்திருந்த காஃபியினை அனைவருக்கும் கோப்பையில் ஊற்றி தோட்டத்திற்கு எடுத்துச் வந்தாள் அம்ரிதா.

அம்ரிதா காப்பி கோப்பைகள் அடுக்கப்பட்ட ட்ரேயை தூக்கிக்கொண்டுவர, தூரத்தில் தன் அம்மாவுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த திரவியத்தை பார்த்தபடியே அவளுடன் நடந்து வந்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

அவ்வளவு நேரம் தனது வாயில் இருக்கும் பற்கள் அனைத்தும் தெரியும் வண்ணம் சிரித்துக்கொண்டிருந்த திரவியம், ஆஷ்ரிதாவின் வரவை கண்டதும், திடுமென அதரத்தை மூடி நிதானமாய் சிரித்தான்.

சகோதரிகள் இருவரும், முக்கோணமாய் நின்று பேசிக்கொண்டிருப்பவர்களை அடைந்ததும், “காஃபி வந்தாச்சு” என்றாள் அம்ரிதா.

ஆஷ்ரிதா திரவியத்தின் அம்மாவுக்கு வணக்கம் வைத்தாள்.

அவரோ “எப்படி மா இருக்க?” என கேட்டவாறு அவளது தலையை வாஞ்சையாக தடவினார்.

அதற்கு பதிலாக “ம்ம்ம்” என அவள் தலையாட்டிட, அவளது கண்களில் இருந்து வடிந்தது ஒரு சொட்டு கண்ணீர்.

அவளது தலையசைப்பிற்கும், வடியும் கண்ணீருக்கும் அர்த்தம் என்ன எனும் யோசனையில் திரவியத்தின் அம்மா செல்ல யத்தனித்த சமயம், அம்ரிதா பேச்சை திசைத்திருப்பும் பொருட்டு, “வாங்க எல்லாரும் அங்க உட்கார்ந்து பேசலாம். ரொம்ப நேரம் ட்ரே –ய தூக்கிட்டே நிக்குறேன். கை வலிக்குது” என்றாள்.

“ஹாஹா… கொடு அம்மு” என அவளிடம் இருந்த ட்ரே –யை அனேகன் வாங்கிக்கொள்ள, அனைவரும் அந்த தோட்டத்தில் போடப்பட்டிருந்த வட்ட மேஜையை சுற்றியிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தனர்.

தோட்டத்தை பற்றியும் அந்த வீட்டை பற்றியும் பேசியவாறு அனைவரும் காஃபியினை குடித்து முடிக்க, திரவியத்தின் தாய் தான் வந்த விஷயத்தை பேசத் தொடங்கினார்.

“சரி மா. நான் எதுக்காக வந்தேன் –னு உனக்கு சொல்லி தெரியவேண்டியது இல்ல அச்சு. உன்ன என் மருமகளா கூட்டிட்டு போக நான் அசைப்படுறேன். ஏற்கனவே எனக்கு உடம்புல ஆயிரத்தெட்டு பிரச்சனை. ஏதோ மாத்திரை மருந்துனு வண்டி ஓடிகிட்டு இருக்கு. என் கண்ண மூடுறதுக்குள்ள உன்ன அவன் கையில புடிச்சு கொடுத்துட்டா நீ அவன பார்த்துப்பங்கற நினைப்புலயே என் கட்ட நிம்மதியா வேகும்” என்று ஒரே போடாக போட்டார்.

அவர் இந்த விஷயம் பேசத்தான் வந்திருக்கிறார் என்பது சகோதரிகளுக்கு தெரிந்திருந்த போதிலும், எடுத்ததும் நேரடியாக மருமகள், கல்யாணம் என்று அவர் பேசவும் ஆஷ்ரிதாவுக்கு சிறிது பதட்டமாய் தான் இருந்தது. மிகுந்த சிரமத்துடன் பேச திராணியை திரட்டியவள்,

“அம்மா… நீங்க தெரிஞ்சிதான் பேசுறீங்களா? எந்த ஒரு அம்மாவும் தன்னோட புள்ளைக்கு என்ன மாதிரி ஒரு பொண்ண கட்டித்தர நினைக்க மாட்டாங்க. ஆனா நீங்க எப்படி மா?” – கண்களில் கண்ணீர் வடியக்கேட்டாள் ஆஷ்ரிதா.

“இதோ இப்படி நெஞ்சில நேர்மையும் கண்ணுல பாசத்தையும் வச்சி பேசுறியே இத விட வேற என்ன தங்கம் வேணும்? புள்ள பெத்துக்கிட்டா மட்டும் போதுமா? என் பையன காலம் முழுக்க நேசத்தோட அரவணைச்சு நிக்க வேணாமா?” என கேட்டார் திரவியத்தின் அம்மா.

அவர் பேசிய வார்த்தையின் ஆழத்தை உணர்ந்தவள் எழுத்த வேகத்தில் திரவியத்தின் அம்மாவுடைய பாதங்களை சரணடைந்தாள்.

“அம்மா… உங்களுக்கு பெரிய மனசு. ஆனா தயவு செய்து நான் சொல்லுறத கேளுங்க. நான் உங்களுக்கு வேணாம் மா!” என கதறினாள்.

தன் அக்கா அழுவதைக் கண்ட அம்ரிதாவுக்கு மனம் தாங்கவில்லை. நெற்றியை சுருக்கிப்பார்த்துக் கொண்டிருந்தவளது கையை பிடித்த அனேகன், “எவ்ரிதிங்க் வில் பீ ஆல்ரைட் பேபி” என்றான்.

தனது காலில் விழுந்து அழுதுக்கொண்டிருக்கும் ஆஷ்ரிதாவை பதறியபடி தூக்கிய திரவியத்தின் அம்மா,

“ஏன் மா இப்படி எல்லாம் நடந்துக்கற? ஒருவேள நாங்க உங்களவிட வசதி கம்மினு நீ நினைச்சா நீ தாராளமா சொல்லலாம் மா” என்றார்.

“அய்யோ… அம்மா. என்ன வார்த்தை கேட்குறீங்க? அக்கா அப்படி நினைக்கறவ இல்ல” – பொங்கிய அம்ரிதாவை மீண்டும் கைப்பிடித்து சட்டென அடக்கினான் அனேகன்.

“இல்ல அனேகா… அவங்க” என்ற அம்ரிதாவை அடுத்துப் பேச விடாமல் கண்களால் அமைதியாய் இருக்குமாறு கூறினான் அனேகன்.

அதனால் அம்ரிதா தன் வாதத்தை தொடராமல் நிறுத்த, தற்போது ஆஷ்ரிதா பேசினாள், “அப்படியெல்லாம் இல்ல மா. திருவுக்கு ஒரு நல்ல ப்ரெண்டா நான் சொல்லுறேன். நான் அவனுக்கு வேண்டாம்” என்று.

“நீ ஏன் மா வேண்டாம் –னு சொல்லுற? குழந்தை விஷயத்தை தவிர வேறு எதும் காரணம் இருந்தா சொல்லு. குழந்தை ஒரு விஷயமே இல்ல. உனக்கு திரு –வ பிடிக்கும்னு எனக்கு தெரியும். அவனும், நீங்க நட்பான காலத்துல இருந்து உனக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கான் –னு எனக்கு தெரியும். அப்பவே திருகிட்ட உன்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன். அவன் நாங்க ப்ரெண்ட்ஸ் தான் –னு சொல்லி மறுத்துட்டான். ஆனா அவனுக்கு உன்ன பிடிக்கும்னு எனக்கு தெரியும்” – திரவியத்தின் அம்மா.

இப்பொழுது ஆஷ்ரிதா முகத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்தவளாய் “அவனுக்கு வேற நல்ல பொண்ணா பார்க்கலாம். நீங்களும் பேரக்குழந்தைகளோட ரொம்ப சந்தோஷமா இருக்கலாம். அவனோட அனுதாப காதல் எனக்கு வேண்டாம்” என்றாள்.

அவள் கடைசியாய் கூறிய அனுதாப காதல் எனும் வார்த்தை திரவியத்திற்கு தேள் கொட்டியது போல இருந்தது. தான் அமர்ந்திருந்த நாற்காலியை தடார் என தட்டிவிட்டவாறு எழுந்தவன் ஆஷ்ரிதாவை நோக்கி, “என்ன சொன்ன? அனுதாப காதலா? இதுக்கு நான் வந்தப்பவே வெளிய போடா நாயா –னு சொல்லி என்ன துரத்தியிருக்கலாம் நீ” என்றான்.

திரவியத்தின் திடீர் சீற்றத்தை கண்டு திகைத்த அம்ரிதாவும் அனேகனும் பதறிப்போய் தங்கள் நாற்காலிகளில் இருந்து எழுந்துக்கொள்ள, திரவியத்தின் அருகே சென்ற அனேகன் அவனது தோள்களை பற்றி “ரிலக்ஸ் திரு… டோன்ட் பீ எமோஷ்னல்” என்றான்.

ஆஷ்ரிதாவோ உணர்ச்சிகள் துடைத்த முகமாக கற்சிலையென அமர்ந்திருந்தாள்.

“பின்ன என்ன அனேகன். பாருங்க அவ என்ன பேசுறானு?” என்று கோபக்கனல் தெரிக்க பேசினான் திரவியம்.

“என்ன அச்சு நீ? இப்படியா பேசுவ?” என்றாள் அம்ரிதா. அப்பொழுதும் அவள் அசைதாளில்லை.

“என்னையும் என் அம்மாவையும் அசிங்கப்படுத்தனும்னு இப்படியெல்லாம் பேசுறியா அச்சு?” – திரவியம்.

“ஓ… நீங்க சொல்லுறத எல்லாம் கேட்டா நல்லவ. இல்லைனா கெட்டவ. அதுதான உங்க கோட்?” என கேட்டாள் ஆஷ்ரிதா.

“உன்ன கெட்டவனு இப்ப யாரு சொன்னா அச்சு. எதுக்கு சம்பந்தமே இல்லாம பேசிட்டு இருக்குற?” – அனேகன்.

“சாரி அனேகன். எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க. அவ்வளவுதான்” என எழுந்து வீட்டிற்குள் சென்றாள் ஆஷ்ரிதா.

“யேய்… நில்லு டி…” என அவள் பின்னே ஓடினான் திரவியம்.

அவர்கள் இருவரும் பேசி தீர்க்கட்டும் என எண்ணிய மூவரும் தாங்கள் நின்ற இடத்தை விட்டு நகரவில்லை. திரவியத்தின் அம்மாவை நோக்கி “அவன் அச்சுகிட்ட பேசிட்டு வரட்டும் மா. நீங்க வருத்தப்படாதீங்க. பார்த்துகலாம்” என்றான் அனேகன்.

தோட்டத்தை தாண்டி செல்லும் ஆஷ்ரிதாவை வழிமறித்த திரவியத்திடம் திமிறியபடி வீட்டிற்குள் சென்றிருந்தாள் அவள். விடாப்பிடியாக அவளை துரத்தி வீட்டின் வரவேற்பறையில் தன் கைகளின் பிடியால் ஆஷ்ரிதாவை சிறைப்பிடித்திருந்தான் திரவியம்.

“வாட் இஸ் திஸ் திரு? கை – அ விடு. என்ன அம்மாவும் புள்ளையும் வீட்டுக்கு வந்து கல்யாணம் பண்ணிக்க சொல்லி அராஜகம் பண்ணுறீங்களா? – ஆஷ்ரிதா.

“என்னது? அராஜகம் பண்ணுறோமா? எங்கள பாத்தா எப்படி தெரியுது அச்சு உனக்கு? உன்ன காதலிச்ச பாவத்துக்கு நான் தான் உன்ன கெஞ்சிகிட்டு இருக்கேன் –னா, என் அம்மாவும் வந்து உன் காலுல விழனுமா?” – பற்களை கடித்தபடி கேட்டான் திரவியம்.

“ஜஸ்ட் ஸ்டாப் இட் திரு” என ஒரே உதறலில் தன் கையினை அவன் பிடியில் இருந்து விடுவித்துக்கொண்ட ஆஷ்ரிதாவின் கண்கள் ருத்ர தாண்டவம் ஆடியது.

“என்ன டி முறைக்குற? நான் சொல்லுறதுல என்ன தப்பு சொல்லு? நான் உன்ன ப்ரொப்போஸ் பண்ணதுக்கு அப்பறம் என்னை எல்லா இடத்துலயும் நீ இக்னோர் பண்ண, அவாய்ட் பண்ண. நான் என்னைக்காவது உன்ன டிஸ்டர்ப் பண்ணியிருக்கேனா? நீயா என்ன புரிஞ்சிட்டு வருவனு தான டி வெயிட் பண்ணேன். இன்னைக்கு அம்மாவ தான கூட்டிட்டு வந்து பேசுனேன்? நாலு ரெளடிகள கூட்டிட்டு வந்து மிரட்டவா செஞ்சேன். அந்த ரேன்ஜ்க்கு தான் பேசிட்டு இருக்குற நீ” – ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தான் திரவியம்.

“முடியாதுனு சொன்னா விடவேண்டியது தானே” – கத்தினாள் ஆஷ்ரிதா.

“முடியாதுனு தான சொன்ன? பிடிக்காதுனு சொல்லு அச்சு. அப்ப நான் போறேன். எனக்கு உன்ன பிடிக்கல, அதனால உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் –னு சொல்லு. அப்ப நான் போறேன். சும்மா சும்மா உன்னோட நல்லதுக்குதான் சொல்லுறேன். நல்லா பொண்ணா கல்யாணம் பண்ணிக்கோ, குழந்த பெத்துக்கோ இப்படியெல்லாம் டயலாக் பேசாத” – திரவியம்.

“ஆமா, எனக்கு உன்ன பிடிக்கல. போதுமா? போ” – காதைப் பொத்திக்கொண்டு சீறினாள் ஆஷ்ரிதா.

ஒரு நிமிடம் அதிர்ந்து நின்ற திரவியம் “ஓ… ஓகே ஃபைன். தேங்க்ஸ் ஆச்சு. சாரி, இனி உன்ன அப்படி கூப்பிட மாட்டேன் மிஸ். ஆஷ்ரிதா. உன்னவிட செம அழகா ஒரு பார்த்து கல்யாணம் பண்ணுறேன். நிச்சயமா கல்யாணத்துக்கு வந்துரு. இனி உன்ன…. சாரி, உங்கள நான் தொந்தரவு பண்ண மாட்டேன். குட் பை” என்று சல்யூட் செய்வது போல சைகை செய்தவன் அங்கிருந்து கிளம்பினான்.

பேதை அவள் உள்ளமும் உடலும் நடுங்க, கதறியபடி சுவற்றில் சாய்ந்தவள் அப்படியே தரையில் அமர்ந்து அழுத்தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் வீட்டிற்குள் ஓடி வந்த அம்ரிதா, “அச்சு… என்ன டி ஆச்சு? திரு அவனோட அம்மாவ கூட்டிட்டு கோவமா கிளம்புறான். என்ன நடந்துது?” என கேட்க, அவளது அழுகை ஓலம் மட்டுமே பதிலாக இருந்தது.

அம்ரிதாவின் பின்னோடு மெல்லமாய் நடந்து வந்த அனேகன், ஆஷ்ரிதாவின் அருகே அமர்ந்து “அச்சு… ச்சில்… எதுக்கு இவ்வளவு அழனும்? அவன வேணாம் –னு சொன்ன. அவன் சரி –னு அவன் இப்போ ஒதுங்கிட்டான். நீ கேட்டத தான் உனக்கு செஞ்சிருக்கான். பிறகு எதுக்கு இப்படி அழுற. விடு” என்றான்.

“என்ன பார்த்து என்ன வார்த்தை கேட்டான் தெரியுமா அனேகன்?” என்று அழு குரலிலேயே கேட்டாள் ஆஷ்ரிதா.

“தெரியும்… அவன் சத்தம் கார்டன் வர கேட்டுச்சு” என்றான் அனேகன்.

“அவ்வளவு தான் அவன் என்ன புரிஞ்சிகிட்டதா அனேகன்? என்ன பார்த்து எப்படி அப்படி எல்லாம் பேச முடிஞ்சிது அவனால?” – ஆஷ்ரிதா.

“அவன் உங்கள புரிஞ்சிகிட்டவனா இருந்துருந்தா நீங்க வேணாம்னு சொன்ன உடனே உங்கள விட்டு போய்ருக்கனுமே! ஏன் இவ்வளவு நாள் வெயிட் பண்ணனும்?” – திரவியத்தின் மேல் அவளுக்கு இருக்கும் பாசத்தை வெளியே கொண்டுவர எண்ணி அவனை பழியாக்கிப் பேசினான் அனேகன்.

“அவனுக்கு என் மேல அக்கறை உண்டு அனேகன். உங்க விஷயத்துல நான் எவ்வளவோ அடம் பிடிச்சேன். அப்போ எல்லாம் அவன் என்னை விடவே இல்ல. இன்னைக்கு என்ன அப்படி பேசிட்டு கல்யாணத்துக்கு வந்திருனு சொல்லிட்டு போய்ட்டான்” எனறு முகத்தை மூடி அழுதாள் ஆஷ்ரிதா.

“நீ தான அச்சு அவன ஃப்ரெண்டா மட்டும் இருக்க சொன்ன. ஒரு ஃப்ரெண்டா அன்னைக்கு என் விஷயத்துல நீ கேட்காமலே எல்லாம் செஞ்சான். இன்னைக்கு நீ வேண்டாம் –னு இவ்வளவு உறுதியா இருக்கறதால சரி –னு டீசண்ட் –ஆ ஒதுங்கிக்கறான்” – அனேகன்.

“இருக்கட்டும் அனேகன். அதுக்காக இத்தனை நாள் என்ன அக்கறையா பார்த்துக்கிட்டவன் இப்படி பேசிட்டு போவானா?” – ஆஷ்ரிதா.

இதைக் கேட்டு சிரித்த அனேகன், “வாட் சைல்டிஸ் அச்சு? அவன பிடிக்காதுனு சொல்லுறீங்க. அப்பறம் எதுக்கு அவன் உங்க மேல அக்கறை எடுத்துக்கனும்னு இவ்வளவு துடிக்கிறீங்க?” – பொட்டில் அடித்தாற் போல கேட்டான் அனேகன்.

அவன் கேள்வியில் திணறி நின்ற ஆஷ்ரிதா உண்மையை சொல்லிவிட முடிவு செய்தாள். தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டவள்,

“என்ன காதலிக்கற அவன் நல்லா இருக்கனும்னு நான் நினைக்க மாட்டேனா அனேகன்?” என கேட்டாள் ஆஷ்ரிதா.

‘அப்படி வா வழிக்கு’ என நினைத்துக் கொண்ட அனேகன், “கரெக்ட் அச்சு. ஆனா அது ஒரு பொதுவான நல்லெண்ணம் தானே. நீங்க நினைச்ச மாதிரி அவன் வேற பொண்ண கல்யாண்ம் பண்ணி சந்தோஷமா இருக்குறதா சொல்லிட்டான். இனி எதுக்கு நீங்க வருத்தப்படனும்?” – அனேகன்.

“எனக்கு வருத்தம் இருக்கும் அனேகன். பிறந்ததுல இருந்து இப்ப வர ஆச பட்ட வாழ்க்கைய வாழ முடியாம தவிக்கிற எனக்கு வருத்தம் இருக்க தான் செய்யும். இன்னைக்கு நான் இப்படி கடுமையா பேசுறேன்னா அதுக்கு காரணம் நான் அனுபவிச்ச வலிகள். விதி தான் என்ன இன்னைக்கு இப்படி மாத்திருக்கு” – ஆஷ்ரிதா.

“புரியல அச்சு. உனக்கு திரு விஷயத்துல என்ன வலி இருக்க போகுது? அவனுக்கு வேணும்னா காதல் தோல்வினு வலி இருக்கலாம். நீங்க தான் அவன காதலிக்கவே இல்லையே. அப்புறம் எதுக்கு வலிக்கனும் உங்களுக்கு?” – அனேகன்.

தன் தலையைப் பிடித்துக் கொண்டு பல்லைக் கடித்தவள்,
“எனக்கு வலிக்கவே இல்ல சாமி… விட்டுடுங்க!” என்று கூறினாள்.

“நீ நடந்துக்கறத பார்த்தா என் லைஃப் நினைச்சு எனக்கு பயமா இருக்கு அச்சு. உனக்கு அப்பறம் தானே அம்முக்கு கல்யாணம் ஆகும். நீ கல்யாணம் பண்ணலனா எப்படி?” – அனேகன்.

“ஓ… இப்ப அதுதான் உங்க பிரச்சனையா?” என்று கேட்டவள், தன் அருகில் நின்றிருக்கும் அம்ரிதாவை பிடித்து அனேகனை நோக்கி தள்ளிவிட்டு,

“இப்பவே வேணும்னாலும் கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் யார் வாழ்க்கையிலயும் தடையா இருக்க மாட்டேன்!” என்றாள்.

(களவாடுவான்)
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 23

அனேகன் அவ்வாறு பேசியதிலும், ஆஷ்ரிதா தன்னை அவனிடத்தில் தள்ளி விட்டதிலும் அதிர்ச்சியடைந்த அம்ரிதா ‘என்னதான் நடக்குது இங்க’ என விழித்துக் கொண்டிருந்தாள்.

“போ டி… போ… அவன கல்யாணம் பண்ணிட்டு நீயாவது சந்தோஷமா இரு. என் கூட இருந்தா என்ன மாதிரி உனக்கும் பைத்தியம் பிடிச்சிரும்னு அனேகன் பயப்படுறாரு போல” – ஆஷ்ரிதா.

இதை கேட்டு அனேகன் விரைப்பாய் நின்றிருக்க, அம்ரிதாவோ “அச்சு… என்ன பேசிட்டு இருக்குற நீ?” என கேட்டாள்.

“நீ லவ் பண்ணுற விஷயம் எனக்கு தெரியும் அம்மு. உங்க வாழ்க்கைக்கு நான் தடையா இருக்க மாட்டேன். அக்காவுக்கு கல்யாணம் பண்ணிட்டுதான் தங்கச்சி செஞ்சிக்கணும்னு எந்த ரூல்ஸ் –ம் இல்ல. எப்படியும் நாம் ட்வின்ஸ் தானே” – ஆஷ்ரிதா.

“அச்சு… பைத்தியம் மாதிரி பேசாத” – அம்ரிதா.

“நான் ஒன்னும் பைத்தியம் போல பேசல! நீ வார்த்தைக்கு வார்த்தை அனேகா அனேகா –னு கூப்பிடுற, நீ சோகமா இருக்கும்போது எல்லாம் அவரு உன்ன பேபி –னு கூப்பிடுறாரு. எனக்கு தெரியாதா அம்மு இது எல்லாம்” என கூறிக்கொண்ட ஆஷ்ரிதா, அம்ரிதாவின் முன்ஜென்ம விஷயங்களை தான் அவளிடம் உளரவில்லை என்று காட்டும்படியே அனேகனிடம் ஒரு பார்வையையும் செலுத்தினாள்.

ஆஷ்ரிதா இவ்வாறு பேசிய பின்பு தான் தன்னை மறந்து அனேகனை அவள் ‘அனேகா’ என அழைத்ததில் உள்ள உரிமை அம்ரிதாவுக்கு உறைக்கத் தொடங்கியது. அனேகன் ‘பேபி’ என்று கூறும் வேளைகளில் எல்லாம், அந்த வார்த்தையில் தன் இன்னல்களை மறந்தாலே ஒழிய அவனது காதல் வெளிப்படுத்தும் அச்சாணி அது என உணராது இருந்தாள். அனேகனும் அம்ரிதாவும் மானசீகமாக காதலிக்கும் விஷயம் அவர்கள் இருவரை தவிர யாருக்கும் தெரியாது என்று எண்ணியிருந்த அம்ரிதாவின் எண்ணம் அப்பொழுது தவிடுப்பொடியானது. தன் காதலை தன்னவனிடம் தான் சொல்லும் முன்னே அது அம்பலமாக்கப்பட்டதையும், தன் அக்காவிடம் தான் எடுத்துக்கூறினோம் என்பது இல்லாமல் அவளே கண்டுக்கொண்டாள் என்பதையும் எண்ணும் பொழுது சங்கடமாய் போனது அம்ரிதாவுக்கு. இருந்தும்,

“அச்சு… நீ நினைக்கற மாதிரி எல்லாம்…” என ஏதோ அவள் கூற வர,

“என்கிட்ட சொல்ல என்ன பயம் அம்மு. எனக்கு இதுல சந்தோஷம் தான். விடு. என் வாழ்க்கை தான் மண்ணா போச்சு. நீயாவது சந்தோஷமா இரு” என்று கூறிவிட்டு அவர்களது அறைக்குள் புகுந்துக் கொண்டாள் ஆஷ்ரிதா.

அனேகனுக்கோ அம்ரிதாவின் முகத்தை பார்க்கவே சங்கடமாய் போனது.

“என்ன இப்படி பேசிட்டீங்க?” என அம்ரிதா அனேகனை நோக்கிக் கேட்டாள்.

“இல்ல அம்மு. நான் ஏதோ சொல்ல வந்து அது வேற மாதிரி மாறிடுச்சு. ஐ டிட்டின்ட் மீன் தாட்” என்றான் அனேகன்.

“அக்காவுக்கும் திரவியத்துக்கும் கல்யாணம் நடக்கணும் அனேகா” பாவமாய் கூறினாள் அம்ரிதா.

அவள் கண்ணில் சிறு நீர் துளி வெளியே எட்டிப்பார்க்க, அதை தாங்காத அனேகன் அவளை நெருங்கி அவளது முகத்தை தன் இரு கைகளுக்குள் ஏந்தினான்.

அவளோ தன் விழிகளை உயர்த்திஅவனை ஏறெடுத்துப் பார்க்க, எட்டிப்பார்த்துக் கொண்டிருந்த கண்ணீர் துளி அவளது மேடான பஞ்சு கன்னத்தில் கட கடவென பயணம் செய்தது. அதை தன் கட்டை விரலால் துடைத்தவன் “தெயர் மேரேஜ் இஸ் மை ரெஸ்பான்சிபிலிட்டி பேபி. அச்சு அவ வாயாலையே திரவியத்தை லவ் பண்ணுறதா சொல்லுவா. நான் சொல்ல வைப்பேன். நீ கவல படாத சரியா?” என்றான்.

சரி என்பது போல அம்ரிதா தலையை ஆட்டவும் அவள் நெற்றியில் ஆறுதலாய் முத்தம் ஒன்றை பதித்தவன் ஐ லவ் யூ அம்மு. இப்படி ஒரு சிட்டிவேஷன் –ல இத சொல்ல வேண்டியது வரும் –னு நான் நினைக்கல. ஆஷ்ரிதா இவ்வளவு பேசின பிறகு நான் எப்படி சொல்லாம இருக்குறது. ஐ ரியலி ரியலி லவ் யூ” என்றான் அனேகன்.

“யஸ். ஐ க்னோ. லவ் யூ டூ அனேகா” என்று அம்ரிதாவும் சொல்ல, அவளது நெருக்கத்தில் இருந்து விலகியவன், நீ எத நினைச்சும் ஃபீல் பண்ணாத, நான் அச்சுகிட்ட நாளைக்கு பேசுறேன்” என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி தன் வீட்டை அடைந்தான் அனேகன்.

வீட்டிற்குள் நுழைந்ததும் முதல் வேலையாக திரவியத்திற்கு அழைப்புக் கொடுத்தான்.

“ஹலோ… சொல்லுங்க அனேகன்” வாடிய குரலோடு கேட்டான் திரவியம்.

“என்ன திரு. நான் சொல்ல சொல்ல கேட்காம இப்படி கிளம்பி போய்ட்டீங்க?” – ஆற்றாமையாய் அனேகன்.

“வேற என்ன செய்ய சொல்லுறீங்க அனேகன். எனக்காக என் அம்மாவும் அங்க இருந்து அவமானப்படனுமா?” – திரவியத்தின் கேள்வியில் கொப்பளித்தது அத்தனை வலிகள்.

“நான் அப்படி சொல்லல திரு. எல்லாரும் போபப்பட்டா என்ன பண்ண முடியும். அவ விரக்தியில பேசுற. நாம தானே எடுத்து சொல்லனும்?” கூறினான் அனேகன்.

“சரி. நீங்க இருந்து பேசுறேன் –னு சொன்னீங்களே, பேசுனீங்களா? அவ புரிஞ்சிக்கிட்டாளா?” – ஆஷ்ரிதாவை முற்றிலும் அறிந்து வைத்திருக்கும் தெணாவட்டு தெரிந்தது திரவியத்தின் தொனியில்.

“…..” – மெளனாமாய் இருந்தான் அனேகன்.

“என்ன அனேகன்? சத்தத்த காணோம்? நீங்க நினைச்சது நடக்கலதானே?! அவ புரிஞ்சிருக்க மாட்டா. நான் தான் அப்பவே சொன்னனே?” – வேண்டா வெறுப்பாய் சிரித்துக்கொண்டான் திரவியம்.

“சரி திரு. நீங்க சொன்னது சரிதான். ஆனா அச்சு –வ விட்டுட்டு இப்படியே இருந்துருவீங்களா நீங்க? இல்ல இன்னொரு கல்யாணம் பண்ணிப்பீங்களா?” – தற்பொழுது திரவியத்தை அறிந்தவனாய் அனேகன் கேட்டான்.

“நெவர் அனேகன். எனக்கு கல்யாணம் –னு ஒன்னு நடந்தா அது அச்சுவோட மட்டும்தான். அவகிட்ட ஒரு பேச்சுக்கு வேற பொண்ண கல்யாணம் பண்ணுறேன், கல்யாணத்துக்கு வந்துருனு சொல்லிட்டு வந்ததே மனசுக்கு என்னவோ போல இருக்கு” – காதலின் தாக்கம் அப்பட்டமாய் தெரிந்தது திரவியத்திடம்.

மெலிதாக சிரித்தான் அனேகன்.

“சிரிக்காதீங்க ப்ரோ. ஏற்கனவே நெஞ்சில ஆணி அடிச்சா மாதிரி இருக்கு” – திரவியம்.

“ஹப்பா… இப்பதான் வழக்கம் போல ப்ரோ வந்திருக்கு. கூல் திரு. எல்லாம் சரியாகிடும். அச்சு போல ஒரு தங்கமான பொண்ணு கிடைக்கிறதுக்கு இவ்வளவு கூட கஷ்ட படல –னா எப்படி?” – அனேகன்.

“ம்ம்ம்… பேசுவீங்க ப்ரோ. ஏன் பேச மாட்டீங்க? உங்க ரூட் ரொம்ப க்ளியர் –ஆ இருக்குற ஆனவத்துல ஆடாதிங்க ப்ரோ” என விளையாட்டாய் கூறினான் திரவியம்.

“அட ஆமா திரு. சொல்ல மறந்துட்டேன். இன்னைகு நீங்க போன பிறகு வாக்குவாதத்துல எங்க லவ் மேட்டர் –அ அச்சுவே போட்டு உடச்சிட்டா” என்று நடந்தவற்றை திரவியத்திடம் கூறினான் அனேகன்.

“அட பாவிகளா!! எங்க கல்யாணத்த பேசுறதா கூட்டிட்டு போய்ட்டு உங்க லவ் – அ ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்துட்டீங்களா?” – திரவியம்.

“வெரி குட் திரு… தேட்ஸ் தி ஸ்பிரிட். இப்படி ஜாலியாவே பேசிட்டு இருங்க. எல்லா பிரச்சனையும் சீக்கிரம் சரியாகிடும். இப்ப கொஞ்சம் வேலை இருக்கு. கால் யூ பேக்” என அழைப்பை துண்டித்தான் அனேகன்.

தன் காதில் இருந்து பிரித்த அலைபேசியை பார்த்த திரவியம், “என்னது ஜாலியா பேசுறேனா? என் சோகம் உங்களுக்கு ஜாலியா தெரியுதா?” என சிரித்துக் கொண்டு, அலைபேசியில் சில தட்டுகள் தட்டி ஆஷ்ரிதாவின் புகைப்படத்தை திரையில் விரியச்செய்தான்.

அதை பார்த்தவாறு “மத்தவங்க லவ் –க்கு எல்லாம் நல்லது பண்ணு. நம்ம லவ் –க்கு ஆப்பு வை” என்றுவிட்டு அடுத்த வேலையை பார்க்கலானான்.

ஆடவர்கள் இருவரும் இப்படி இருக்க, அங்கு அம்ரிதாவுக்கு ஏதோ இனம் புரியாத இன்னல் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. ஆஷ்ரிதாவிடம் அந்த நேரம் பேசவும் பயமாக இருந்தது அவளுக்கு. ஆதலால் அன்று ஆஷ்ரிதாவிடம் அவள் எதுவும் பேசாமலேயே இருந்துவிட, நன்னாளாக தொடங்கிய அத்தினம் வருத்தத்திற்குரிய நாளாய் முடிந்தது.

மறுநாள் பொழுது விடிந்து ஆஷ்ரிதா எழுகையில் அருகே அம்ரிதா இல்லை. கண்களை கசக்கியபடி தன் அறையை விட்டு வெளியே வந்த ஆஷ்ரிதா குளியலறையில் இருந்து வரும் தண்ணீர் சத்தத்தை கேட்டு அம்ரிதா உள்ளே தான் இருக்கிறாள் எனும் அனுமானத்தோடு பற்களை துலக்கச் சென்றாள்.

ஆஷ்ரிதா பற்களை சுத்தம் செய்துவிட்டு தேனீர் கோப்பையை எடுத்துக்கொண்டு வரவும் அம்ரிதா குளியலறையில் இருந்து வெளியே வருவதற்கும் சரியாக இருக்க,

“என்ன டி? இவ்வளவு சீக்கிரம் குளிச்சிட்ட? ஆஃபிஸ் போகலனு தானே சொன்ன நேத்து. வெளிய எங்கேயும் போறியா?” என கேட்டாள் ஆஷ்ரிதா.

“இல்லயே டி! மணி பத்தாகுது –ல. நீ தான் ரொம்ப நேரம் தூங்கிட்ட” என்றாள் அம்ரிதா.

“ஓ… நான் தான் லேட்டா?” என்றவள் அமைதியாக சோஃபாவில் சென்று அமர்ந்து தேனீரை குடித்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் வாடியிருப்பதை கண்ட அம்ரிதா “முகம் ஏன் டி இவ்வளவு வாட்டமா இருக்கு?” என கேட்டாள்.

“ஏன்? இப்ப நான் நல்லா இருந்து என்ன பண்ண போறேன். கட்டிக்க மாப்பிள்ளை என்ன லைன் கட்டி வரப்போறாங்களா?” – ஆஷ்ரிதா.

இதை கேட்ட அம்ரிதாவின் மனம் எண்ணெயில் விட்ட கடுகென உணர்ந்தது. ‘இவளிடம் வாயை கொடுக்காமலே இருப்போம்’ என எண்ணியவள், தன் மனதை சமன்படுத்த மொட்டை மாடிக்கு சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அங்கு பக்கத்து வீட்டு மாடியில் தடுப்பு சுவரின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த வெண்சாதத்தை ஒரு அணில் தன் இரு கைகளால் அள்ளி அழகாய் உண்ணும் காட்சியை ரசித்தபடி நின்றவள், அந்த அணில் ஓடிச் சென்றதும் தன் பார்வையை வீதிக்கு திருப்பினாள்.

அப்பொழுது அவள் கோவிலில் பார்த்த அதே கம்பூன்றிய பாட்டி தன் கழுத்தை நிமிர்த்தி அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அம்ரிதாவின் உள்ளுணர்வு அவர் தம்மை பின் தொடர்வதாகவே கூறியது அப்பொழுது. அவளும் சிறிது நேரம் அவரையே நோக்க, அப்பாட்டி சற்று நேரத்தில் அவளிடம் இருந்து பார்வையை எடுத்துவிட்டு தனது வலது திசை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

இன்று எப்படியாவது அந்த பாட்டியிடம் பேசி என்னவென்று கேட்டுவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் கீழே இறங்கி ஓடினாள் அம்ரிதா. ஆஷ்ரிதா எங்கே என்று வீடு முழுக்கத் தேடிட, அவளோ தோட்டத்திற்கு சென்றிருப்பாள் போலும், வீட்டிற்குள் தேடிய அம்ரிதாவின் கண்களுக்கு அவள் அகப்படவில்லை. தாமதித்தால் அந்த பாட்டியை விட்டுவிடுவோமே என்ற எண்ணத்தில் ஆஷ்ரிதாவிடம் கூறிக்கொள்ளாமல் வெளியே வீதிக்கு ஓடினாள் அம்ரிதா.

ஓடி வந்தவள் பாட்டியை தேட, அவரோ தெரு முனையை தாண்டிக் கொண்டிருந்தார். தன் கால்களில் கூடுதல் வேகத்தை சேர்த்து தற்பொழுது அசுர வேகத்தில் தான் பறந்தாள் அம்ரிதா.

ஒருவழியாக அவள் அந்த பாட்டியை நெருங்கிவிட, அவரோ அங்கிருந்த சிறு கோவில் போன்ற அமைப்புக்கொண்ட கட்டிட்த்திற்குள் நுழைந்தார். அங்கு அப்பாட்டியிடம் சீதா என்ற பெண் அழுதுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தாள்.

“கல்யாணம் ஆகி நீங்க சொன்ன 5 வருஷம் முடியப்போகுது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. எனக்கு எப்ப மா குழந்தை பிறக்கும்?” என்று அந்த பெண் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள்.

அதைக் கண்ட அம்ரிதாவின் மனதில் தாங்க முடியாத இறுக்கம்.

‘அந்த பொண்ணு அழுகுறத பாத்தா ஏன் என் மனசு இவ்வளவு வலிக்குது? கடவுளே! என்னால இந்த வலிய பொறுக்க முடியல. இப்பவே ஓடி போய் நான் இருக்க மா உனக்குனு சொல்லனும் போல தோணுது. ஆனா யாரு அவங்க? யாருனே தெரியாத ஒருத்தர் கிட்ட போய் நாம எப்படி அப்படி பேச முடியும். ஏன் எனக்கு இப்படி இருக்கு..?’ என தன் மனதினுள் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தாள் அம்ரிதா.

அம்ரிதா தன் மனதில் இவ்வாறு கேட்கும் கேள்விகள் அனேகனது மனோசக்தியின் உதவியால் அவனை அடைந்திட, வீட்டில் அலுவலக வேலை பார்த்துக்கொண்டிருந்த அனேகனோ,

“சகி நோ!” என்று கத்தியவாறு தன் இருக்கையை விட்டு எழுந்துக்கொண்டான். அவன் மடியில் இருந்த மடிகணினி தரையில் விழுந்து அதன் திரையில் கீறல்கள் ஏற்பட்டது.

அதை சற்றும் கவனிக்காத அனேகன், விரைந்தோடி தன் அலைபேசியை எடுத்து ஆஷ்ரிதாவிற்கு அழைப்புக் கொடுத்தான். தோட்டத்தில் இருந்தவள் அப்பொழுதுதான் வீட்டிற்குள் நுழைய, மெல்லமாக நடந்துச் சென்று அலைபேசியை கையில் எடுத்தாள்.

“கம் ஆன் அச்சு. சீக்கிரம் எடு கம் ஆன்” என்று பதறியபடி இங்கே நின்றிருந்தான் அனேகன்.

அனேகன் அழைப்பில் வருவதைக் கண்ட ஆஷ்ரிதா, ‘மறுபடியும் திரவியத்தை பத்தி பேச கூப்பிடுறாரோ?’ என ஒரு நிமிடம் யோசித்து பின் அழைப்பை ஏற்க முற்படுகையில் அழைப்பு நின்றுப்போயிருந்தது.

“ஓ ஷிட்! என்று அவர்களது வீட்டு லேண்ட்லைன் –க்கு அழைத்தான். அந்நேரம் ஆஷ்ரிதா மீண்டும் அனேகனுக்கு அழைக்க, அதில் பிஸி என்று வந்திடவே அலைபேசியை கீழே வைத்தவளின் காதில் விழுந்தது அவர்கள் வீட்டின் லேண்ட்லைன் –ன் மணியோசை.

அந்த அழைப்பை ஏற்ற ஆஷ்ரிதா “ஹலோ” என்றாள்.

“ஹலோ அச்சு. நான் அனேகன். அம்மு எங்க?” என்றான் பதட்டமான குரலில்.

இதுவரை எந்த ஒரு சூழ்நிலையிலும் அனேகன் பதட்டப்பட்டு யாரும் கண்டதில்லை. இன்று அவன் இத்தனை பதட்டத்தில் பேசுவது ஆஷ்ரிதாவுக்கு புதிராகவே இருந்தது.

இந்த யோசனையில் ஆழ்ந்திருந்த ஆஷ்ரிதாவிடம் மீண்டும் கேட்டான் அனேகன், “அச்சு… ஆர் யூ தேர்? அம்மு எங்க? இட்ஸ் எமர்ஜென்சி. ப்ளீஸ் பேசு” என்றான்.

அவன் கடுமையும் அழுத்தமுமாய் பேசியதில் ஆஷ்ரிதாவின் உடலில் நடுக்கம் ஏற்பட, “ஆ… ஆமா இருக்கேன் அனேகன். அச்சு இங்க தான் இருக்கா. அச்சு…” என்று அவர்களது அறை நோக்கி அழைத்துப்பார்த்தாள் ஆஷ்ரிதா.

“நோ… ஷி இஸ் நாட் இன் தி ஹோம்… உன் வீட்டுக்கு வெளில வா. வலது பக்கம் ரோட்டுல நடந்து போ. அங்க தெரு முனையில் சின்னதா ஒரு கட்டிடம் இருக்கும். அங்க போ. சீக்கிரம் போ. க்விவ். அம்முவோட உயிருக்கு ஆபத்து” என்று கத்தினான் அனேகன்.

“அனேகன். வாட் ஹப்பன்ட். அம்மு வீட்டுல தான் இருக்கா. நான் இப்பதான் பார்த்தேன். கனவு எதும் கண்டீங்களா?” என்று அவனிடம் கூறிவிட்டு “அம்மு… கொஞ்சம் இங்க வாயேன். அனேகன் கால் பண்ணியிருக்காரு. உன்கிட்ட பேசனுமாம்” என மீண்டும் கத்தினாள் ஆஷ்ரிதா.

“ஆர் யூ மேட்? நான் தான் சொல்லுறேன் –ல? அவ வீட்டுல இல்ல! நான் சொன்னத செய். இல்லைனா உன் தங்கச்சி உனக்கு இல்ல, என் சகி எனக்கு இல்ல. மூ ஃபாஸ்ட்” என்று அவன் உச்சரித்த தீர்க்கம் ஆஷ்ரிதாவுக்கு கிலியை ஏற்படுத்தியது.

“வாட்?! என்ன சொல்றீங்க அனேகன்? இதோ... இதோ போறேன் அனேகன்” என்றாள் தீவிரம் நிறைந்த குரலோடு.

“குட். சீக்கிரம் போய் அவள பத்திரமா கூட்டிட்டு வா. நான் அங்கதான் வர்றேன் இப்ப. ஃபாஸ்ட்” என்று அழைப்பை துண்டித்தவன் தன் அம்மாவிடம் சென்றான்.

“அம்மா… நான் இதோ வந்திடுறேன். ஒரு எமெர்ஜென்சி” என்றுவிட்டு கார் சாவியை எடுத்தவன் வேகமாக காரை நோக்கி ஓடினான்.

“என்ன பா ஆச்சு?” என்று அவனது அம்மா அனேகனின் பின்னோடு ஓடி வர, காரில் ஏறி அமர்ந்திருந்த அனேகன்,

“அம்மா… உன் மருமகள உன்கிட்ட அறிமுகப்படுத்த போறனா இல்ல அந்த மோகன் கிட்ட அறிமுகப்படுத்த போறேனா –னு தெரியல. உன் மகன் ஜெயிக்கனும்னு அந்த ஆண்டவன வேண்டிக்கோ” என்று மட்டும் கூறிவிட்டு காரை கிளப்பிக்கொண்டு காற்றாய் பறந்தான்.

வீட்டில் அம்ரிதா இருக்கிறாளா என ஒருமுறை தேடிவிட்டு அவள் இங்கு இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட ஆஷ்ரிதா, அனேகன் சொன்னது போல தெரு முனைக்கு ஓடிச்செல்லும் பொழுது தூரத்திலேயே அம்ரிதா அங்கு நிற்பதைக் கண்டுக்கொண்டாள். அவளுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று எண்ணி மனதில் நிம்மதிக் கொண்ட ஆஷ்ரிதா, அந்த தொலைவில் இருந்தே அம்மு என கத்த, அங்கிருந்த சீதாவை எண்ணி மனம் கலங்கிக் கொண்டிருந்த அம்ரிதா திரும்பிப் பார்த்தாள். அங்கே ஆஷ்ரிதா வருவதைக் கண்டு புன்னகைத்தவள்,

“என்னை காணோம் –னு தேடி ஓடி வந்துட்டாளா?” என்று தன் தலையில் அடித்து சிரித்துக்கொண்டவள் ஆஷ்ரிதாவை நோக்கி “இங்க வா” என்று கை அசைத்த வண்ணம் நடக்கத் தொடங்கினாள்.

அப்பொழுது அவளுக்கு பின்புறம் வேகமாக வந்த லாரி தன் கட்டுப்பாட்டை இழந்தவாறு தாறுமாறாய் வளைந்து வளைந்து தனது சக்கரத்தை உருட்டி, முதுகைக் காட்டிக்கொண்டு நடக்கும் அம்ரிதாவை நோக்கி அதீத வேகத்தில் வந்துக்கொண்டிருப்பதை கண்டுக்கொண்ட ஆஷ்ரிதா, பயத்தில் விழி விரிய “அம்மு மூவ்” என்று தொண்டை கிழிய கத்தியும் அதற்கு பலனின்றி அந்த லாரி அம்ரிதாவின் மீதி சரமாறியாக மோதி அந்த கட்டிட்த்தின் சுவற்றில் அவளை தூக்கி எறிந்துவிட்ட பின்புதான் நிதானமடைந்தது.

தன் தங்கையை அந்த லாரி வாரி அடித்ததை தன் கண்களால் கண்ட ஆஷ்ரிதா “அம்மு……” என வீரிட்டு அழுத சத்தத்தை அவ்வளவு எளிதாக மறைத்திருந்தது அந்த லாரி எழுப்பிய கீர் என்னும் சத்தம்.

திடீரென ஏற்பட்ட சத்தத்தில் அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரும் ஓடிவர, அம்ரிதா இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தாள் வீதியில்.

(களவாடுவான்)​
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 24

சத்தம் கேட்டு பொதுமக்கள் அனைவரும் ஓடிவர, சீதாவும் எழுந்து ஓட யத்தனித்தாள். அவள் கைகளை பிடித்துத் தடுத்த அந்த பாட்டி,

“உன் குழந்தை உன்னிடம் வருவதற்கான பயணத்தை தொடங்கிவிட்டது. நேராக வீட்டிற்கு செல். பத்திரமாக இரு” என கூறினார்.

அவர் கூறிய வார்த்தையில் உள்ளம் மகிழ்ந்து, அந்த பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு விடை பெற்று வீடு திரும்பினாள் சீதா.

வீதியில் இரத்த வெள்ளத்தில் கிடந்த அம்ரிதாவை தூக்கி தன் மடியில் போட்டு அழுதுக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“அம்மு… எழுந்திரு டி… ப்ளீஸ் டி! எழுந்திரு. நீயும் என்னை விட்டுட்டு போய்ட்டா எனக்குனு யாரு டி இருக்கா? கண்ண திற அம்மு… என்ன கொஞ்சம் பாரு ப்ளீஸ் பயமா இருக்கு டி” – ஆஷ்ரிதாவின் ராகம் சுற்றியிருந்தவரையும் கண்ணீர் கடலில் தள்ளியது.

அப்பொழுது அந்த சிறிய கட்டிடத்தின் முன் காற்றைக் கிழித்துக்கொண்டு வந்து நின்றது அனேகனின் கார். காரை விட்டு இறங்கியவன் நெற்றியின் வியர்வை துளிகள் புருவ முடிச்சுகளில் சிக்கி சிதைந்து அரைகுறையாய் வெளியே தெறிக்க, அதை துடைத்தபடி கூட்டத்தை நோக்கி ஓடி வந்துக்கொண்டிருந்தான். அவன் கால்களோடு சேர்ந்து மனதின் யோசனைகளும் கட்டுக்கடங்காமல் ஓட்டம் பிடித்தது.

‘ஓ மை காட். லாரி சகி –அ இவ்வளவு தூரம் அடிச்சித் தூக்கி எறிஞ்சிருக்கா? அவளுக்கு எவ்வளவு அடி பட்டுருக்கோ தெரியலையே! ரொம்ப வலியில துடிச்சிருப்பாளே!’ என்று அவனது எண்ணங்கள் அவனுக்கு துணையாய் ஓடிக்கொண்டிருக்க, “அம்மு………” என பெரும் குரலெடுத்து தொண்டையை காட்டினாள் ஆஷ்ரிதா.

அங்கு பதறியபடி ஓடிவந்துக் கொண்டிருக்கும் அனேகன், இரண்டடியில் கூட்டத்தை நெருங்கும் முன் ஆஷ்ரிதாவின் இந்த அதீத சத்ததில் திடுக்கிட்டவனாய் கால் தடுமாறி கீழே விழுந்தான்.

தரையில் குப்புற விழுந்தவன், கூடியிருந்த மக்களின் கால் இடுக்குகளுக்கு இடையே மண்ணிற்கு குருதி கொடையளித்த வண்ணம் கிடக்கும் அம்ரிதாவை கண்டான்.

தரையில் கிடந்தபடியே “சகி…….” என்று உணர்வுச் சீற்றத்தால் அவன் வாய் விட்டு கத்த, தற்பொழுது அந்த கூட்டத்தில் சிலர் அனேகனைத் திரும்பிப் பார்த்து ஓடி வந்து அவனை தூக்கி நிறுத்தினர்.

அவர்களது உதவியோடு அம்ரிதாவை அவனது காரின் பின்புறம் கிடத்திவிட்டு, அனேகனும் ஆஷ்ரிதாவும் முன்புறம் ஏறிய பின்னர் கார் சீறிப்பாய்ந்து அருகில் உள்ள மருத்துவமணையை வந்தடைந்தது.

மருத்துவமணையின் வாசலில் காரை நிறுத்தியவன் ஆஷ்ரிதாவிடம் “அச்சு, நான் போய் ஸ்ட்ரெச்சர் கொண்டுவர சொல்லுறேன்” என்று கூறிவிட்டு உள்ளே ஓடினாள்.

தன் கண்களில் வடியும் கண்ணீரை துடைக்கக் கூட நேரமில்லாதவளாய் வேகமாய் காரை விட்டு வெளியேறி பின்பக்க கதவை திறந்து “அம்மு… அம்மு” என அவளை அழைத்தவாறே நின்றிருந்தாள் ஆஷ்ரிதா.

உள்ளே சென்ற அனேகன் அங்கிருந்த ரிஷப்ஷனிற்கு சென்று, “சிஸ்டர், என் சகிக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சு. வெளியில கார் –ல இருக்கா. வாங்க க்விக்” என்று கால் பரபரக்க கூறினான்.

“சார் வெயிட். ஆக்சிடென்ட் கேஸ் –னா முதல்ல போலீஸ் –க்கு சொல்லணும்” என்றாள் ரிஷப்ஷனிஸ்ட்.

“வாட் நான்சென்ஸ்… ப்ளெட் அதிகமா போய்ருக்கு. முதல்ல ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க. நான் டாக்டர் பிரபாகரனோட ஃபேமிலி ஃரெண்ட். ஐ அம் அ சைக்கியார்ட்டிஸ்ட்” என்றவன் தன் பர்சில் இருந்து தனது ஐ.டி. கார்டை எடுத்து நீட்டினான்.

அதை பார்த்தவள் “ஓ… ஓகே சார். ஆனா போலீஸ்…” என்று இழுத்தவளிடம் “வெயிட்” என்ற அனேகன் தனது கைபேசியை எடுத்து கமிஷ்னர் லேகாவுக்கு அழைத்து விஷயத்தை கூறினான்.

சற்று நேரத்தில் அந்த ரிஷப்ஷனில் இருந்த லேண்ட்லைன் ஒலிக்க, ரிஷப்ஷனிஸ்ட் அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ…”
…..
“எஸ் டாக்டர்”
…..
“சாரி டாக்டர்”
…..
“ஓகே டாக்டர் ஷ்யூர்”
…..
“ஓகே டாக்டர்”

என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவள், அம்ரிதாவை தூக்கிவருவதற்கு ஸ்ட்ரெச்சரை அனுப்பி வைத்தாள். உள்ளே தூக்கிவரப்பட்ட அம்ரிதாவை நேராக அவசர சிகிச்சை பிரிவுக்குள் எடுத்துச்சென்றனர். ஐ.சி.யூ. –வின் வாசல் வரை சென்ற அனேகனை ஒரு நர்ஸ் அங்கேயே தடுத்து நிறுத்திவிட, அப்போது அங்கு வந்தார் டாக்டர் சுந்தர்.

“ஹாய் மிஸ்டர் அனேகன்” என்று அவனிடம் கைக்குழுக்கிய டாக்டரிடம்,

“டாக்டர் நானும் உள்ள வர்றேன்” என்றான் அனேகன்.

“கம் அனேகன்” என்று டாக்டர் சொல்லவும் இருவரையும் வியப்பாய் பார்த்தாள் வாசலில் நின்றிருந்த நர்ஸ்.

“அச்சு… நீ பயப்படாத. அம்முவுக்கு எதுவும் ஆகாது” என்ற அனேகன் உள்ளே சென்றுவிட, வெளியே அழுதுக் கொண்டே நின்றிருந்த ஆஷ்ரிதா திரவியத்திற்கு அழைப்புக் கொடுக்க எண்ணினாள். ஆனால் அவளின் துரதிர்ஷ்டம் அவள் கைபேசி வீட்டில் இருந்தது. நேரத்திற்கு திரவியத்தின் தொடர்பு எண்ணும் நியாபத்திற்கு வரவில்லை.

“கடவுளே! என்னை ஏன் இப்படி சோதிக்கற?” என்று வாய்விட்டு கூறியே அழுதாள் ஆஷ்ரிதா.

அவள் வேதனையைக் கண்டு கடவுள் மனம் இறங்கினார் போலும், ஐ.சி.யூ. –வின் உள்ளே சென்றிருந்த அனேகன் வேகமாக வெளியே வந்து,

“அச்சு… இந்தா என் ஃபோனை வச்சிரு. உள்ளே கொண்டுப்போகக் கூடாது” என்று அவளிடம் கொடுத்துவிட்டு மின்னல் வேகத்தில் மீண்டும் உள்ளே சென்றுவிட்டான்.

“தேங்க் காட்” என்றவள் அனேகனது கைபேசியை இயக்க முயல, அவனோ லாக் போட்டு வைத்திருந்தான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல ஆனது ஆஷ்ரிதாவுக்கு. ஆத்திரத்தில் அருகில் இருந்த இரும்பு நாற்காலியை நோக்கி “ஷிட்” என்றவாறு அனேகனது அலைபேசியை தூக்கி எறிந்தாள் ஆஷ்ரிதா.

அப்பொழுது அங்கு அருகே நின்றிருந்த நர்ஸ் ஒருவர் ஓடி வந்து “மெம்… அமைதியா இருங்க. இது ஹாஸ்பிடல்” என்றாள்.

அவளது அதட்டலில் தன் இயலா நிலையை அடக்கிக் கொண்டவள் உதட்டைக் கடித்தவாறு நின்றிருந்தாள். கோபத்தில் தூக்கி எறிந்த அனேகனது அலைபேசியை பார்த்தவள் ஒரு பெருமூச்செடுத்துக் கொண்டு அதனை கையில் எடுத்தாள்.

அலைபேசிக்கு பெரிதாய் எதுவும் சேதாரம் இருக்கவில்லை. டெம்பர் மட்டும் தன் மேனியில் பல கீறல்களை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது. அதை பார்த்தபடியே அந்த நாற்காலியில் அமர்ந்த ஆஷ்ரிதா,

“உன்ன போல தான் நானும், மனசுல பல கீறல வச்சிட்டு இருக்கேன். நீ வெளியில காமிக்கற, நான் காமிக்கல… அவ்வளவு தான் வித்தியாசம்” என்று அதனோடு பேசிக்கொண்டிருந்தாள்.

நேரம் கடந்தது. நொடிகள் நிமிடங்கள் ஆகி, நிமிடங்கள் மணிநேரங்கள் ஆனது. அவ்வப்போது அங்கும் இங்கும் சில நர்ஸ்கள் நடந்துக் கொண்டிருந்தார்களே ஒழிய அனேகனோ, டாக்டர் சுந்தரோ அல்லது அம்ரிதாவை குறித்த செய்தி எதுவுமோ வரவில்லை.

ஆஷ்ரிதாவின் மனம் உலைகனலாக கொதித்துக் கொண்டிருந்தது. ‘திரவியத்திடம் எவ்வாறு விஷயத்தைக் கொண்டு சேர்ப்பது, நேற்று அவ்வளவு பேசிவிட்டு எந்த முகத்தைக் கொண்டு அவனிடம் பேசுவது, நாம் பேசாவிட்டாலும் நேற்று நடந்த சம்பவத்திற்கு இனி அவனாக என்னை தேடமாட்டான்’ என்று அவளது மனம் ஏதேதோ புலம்பிக் கொண்டிருக்க, அது தவறு என விதி நிரூபித்தது.

முந்தைய தினம் கோபமாக ஆஷ்ரிதாவின் வீட்டில் இருந்து கிளம்பிய திரவியம், அனேகனிடம் பேசியதில் இருந்து “கொஞ்சம் பொறுமையாய் பேசியிருக்கலாமோ” என்று எண்ணி தன் தூக்கத்தை தொலைத்திருந்தான். ஆகையால் அந்த காலை பொழுதிலேயே ஆஷ்ரிதாவை தேடி அவள் வீட்டிற்கு தான் வந்திருந்தான் திரவியம்.

அவர்களது வீடு திறந்திருக்க, தயங்கியபடியே உள்ளே நுழைந்த திரவியம், ஆஷ்ரிதாவின் பெயரை சொல்லி அழைக்கும் தைரியம் இல்லாமல் “அம்மு” என்றழைத்தான். வீட்டின் உபகரணங்கள் கூட அவனுக்கு பதில் தரவில்லை. அத்தனை அமைதியாய் இருந்தது அவ்வீடு.

‘என்ன இது சத்தமே காணோம்?’ என யோசித்த திரவியம் முன்னேறி உள்ளே செல்லாமல் தன் அலைபேசியை எடுத்து அம்ரிதாவுக்கு அழைப்பு கொடுத்தான். அவளது அலைபேசி ஒலிக்கும் சத்தம் அவர்களது அறையில் இருந்து கேட்டது. அந்த சத்தத்தை கேட்டதும் யாராவது வருவார்கள் என்று காத்திருந்தான் திரவியம். யாரும் தம் குரலை கேட்கவில்லை என வருந்திய அலைபேசியின் மணியோசையோ தன் வாயை மூடிக்கொண்டது.

மீண்டும் அம்ரிதாவுக்கே முயற்சி செய்தான் திரவியம். தற்பொழுதும் தோல்வியே கிட்டியது. பிறகு இல்லாத தைரியத்தை திரட்டி ஆஷ்ரிதாவுக்கு அழைத்தான். தற்பொழுது அவன் அருகில் இருக்கும் சோஃபாவில் இருந்து எழுந்தது ஓசை.

“ச்சே… ரெண்டு பேரும் எங்க போய்ட்டாங்க?” என எண்ணியவன் தோட்டத்திற்கு சென்றான். அங்கும் யாரும் இல்லை என்றதும் சந்தெகம் கொண்டவனாய் அனேகனுக்கு அழைத்தான்.

அவ்வளவு நேரம் தன் உணர்வு போராட்டங்களை தன்னுள் அடக்கியபடி அனேகனது அலைபேசியிடம் பேசிக்கொண்டிருந்த ஆஷ்ரிதாவிடம் பதில் பேசியது அந்த அலைபேசி.

திரையில் “மிஸ்டர் காலிங்” என்று எழுத்து திரவியத்தின் புகைப்படத்தோடு ஒளிர, கண்கள் விரிய ஒருவித சந்தோஷமும் தைரியமும் பிறந்தவளாய் அழைப்பை ஏற்று,

“ஹலோ… திரு… திரு” என்று வரண்ட தொண்டையில் எச்சில் முழுங்கிக் கொண்டே பேசினாள் ஆஷ்ரிதா.

எதிரே அழைப்பில் இருந்த திரவியம் ஒரு நிமிடம் குழம்பி தெளிந்தவனாய்,

“ப்ரோ… எனக்கு உங்க வாய்ஸ் கூட என் அச்சு வாய்ஸ் போலவே கேட்குது ப்ரோ” என்றான்.

அழுகையை அடக்கமுடியாமல் “திரு… நான் அச்சு தான் பேசுறேன்… அம்முவுக்கு” என்று கதறினாள் ஆஷ்ரிதா.

“என்ன… அச்சு? அச்சு… நீ எப்படி அனேகன் ஃபோன் –ல? உன்ன தேடிதான் உன் வீட்டுக்கு வந்திருக்கேன். எங்க இருக்க?” – அவளது அழுகுரலில் அவனது பயம் காணாமல் போய் தன் தேவதையை காக்கும் தேவையறிய கேட்டான்.

“அம்முவுக்கு ஆக்சிபென்ட் ஆகிடுச்சு திரு” என்று கூப்பாடு போட்டவள் அவர்கள் வந்திருக்கும் மருத்துவமணையின் பெயரை சொல்ல, காலம் கடத்தாமல் அங்கு வந்திருந்தான் திரவியம்.

அவனை கண்டதும் ஓடிச் சென்று கட்டிக்கொண்ட ஆஷ்ரிதா, “அம்மு எனக்கு வேணும் திரு” என்று அவன் மார்பில் அடித்தபடி அழுதுக் கொண்டிருந்தாள்.

“ஒன்னுமில்ல டா… அம்முவுக்கு ஒன்னும் ஆகாது. கவல படாத. இப்ப எங்க இருக்கா அம்மு?” என ஆஷ்ரிதாவின் தலையை தடவிக்கொடுத்தபடி கேட்டான் திரவியம். எப்படி விபத்து நடந்தது என கேட்க தோன்றினாலும் தற்பொழுது நிலைமை சரியில்லை என எண்ணியவன் அவள் இருக்கும் அறையை மட்டும் கேட்டான்.

“ஐ.சி.யூ –ல” என்று அழுகை மாறாமல் கூறினாள் ஆஷ்ரிதா.

“அனேகன் வந்திருக்காரா?” என்று திரவியம் கேட்டதும்

“ஆமா… அவரோட கார் –ல தான் அம்மு –வ கூட்டிட்டு வந்தோம்” என ஆஷ்ரிதா கூறிட, திரவியத்தின் மனதில் முள்ளை வைத்து தைத்தாற் போல இருந்தது.

‘இப்பொழுதும் பிரச்சனை என்றதும் அவனை தானே அழைத்திருக்கிறாள். தன்னிடம் கூற வேண்டுமென அவளுக்கு தோன்றவில்லை தானே? அவளை தேடி இப்பொழுது தான் வரவில்லை என்றாள் நம்மை தேடியிருக்கவே மாட்டாள்’ என்று எண்ணி வருந்தினான் திரவியம்.

பாவம், நங்கை அவள் அவனுக்காய் தவிக்கும் தவிப்பை எப்பொழுதுமே அவனால் காணமுடிந்ததில்லை. ஆகையால் அவனுக்கான அவள் பாசத்தை அவனால் உணரவும் முடியவில்லை. எல்லாம் விதியின் விளையாட்டு வேறென்ன?!

“அனேகன் எங்க?” என்று ஆஷ்ரிதாவை தன்னிடம் இருந்து பிரித்தவாறு கேட்டான் திரவியம்.

“ஐ.சி.யூ –ல இருக்காரு. போய் ரொம்ப நேரம் ஆகுது. யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க” என்று உதடுகளை பிதுக்கினாள் ஆஷ்ரிதா.

“சரி வெயிட் பண்ணலாம். பயப்படாத. வா… வந்து உட்காரு” என்ரு ஆஷ்ரிதாவை கைத்தாங்கலாக அழைத்து வந்தவன் அங்கிருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்திவிட்டு தானும் அமர்ந்தான்.

இரண்டரை மணிநேரம் கழிந்த பிறகு டாக்டர் சுந்தரும் அனேகனும் ஏதோ பேசியபடியே வெளியே வர, அவர்களைத் தொடர்ந்து நான்கு நர்ஸ்களும் வந்தனர். அவர்களை கண்டதும் எழுந்து ஓடிய ஆஷ்ரிதா,

“எப்படி இருக்கா என் அம்மு? கண்ணு முழிச்சிட்டாளா? பேசினாளா? வலிக்குதுனு சொன்னாளா?” என இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்க, அவளிடம் “வெயிட் அச்சு” என்ற அனேகன் டாக்டர் சுந்தரோடு அவரது அறையினுள் புகுந்துக் கொண்டான். பின்னால் வந்த நர்ஸ் ஒருவரிடம் ஆஷ்ரிதா விசரித்த பொழுது “டாக்டர் வந்து சொல்லுவார்” என கூறிவிட்டு தங்களது அடுத்த வேலையை கவனிச் சென்றுவிட்டார்.

வேறு வழியின்றி அமைதியாய் காத்துக்கொண்டிருந்த ஆஷ்ரிதாவை அதிக நேரம் காக்க வைக்காமல் அங்கே வந்தான் அனேகன்.

“என்ன ஆச்சு அனேகன்? அம்மு எப்படி இருக்கா?” – ஆஷ்ரிதா.

“ஒரு ஆப்ரேஷன் பண்ணியிருக்காங்க. நிறைய ப்ளெட் போயிருக்கு. இன்னும் ரெண்டு ஆப்ரேஷன் செய்யணும்னு சொல்லியிருக்காங்க. நாளைக்கு காலையில அம்மு கண்ணு முழிக்கல –னா…” என்று எச்சில் விழுங்கினான் அனேகன்.

“சொல்லுங்க அனேகன்” பதபதைத்தாள் ஆஷ்ரிதா.

“நாளைக்கும் அம்மு கண்ணு முழிக்கலைனா நம்ம அம்மு நமக்கு கிடைக்கறது கஷ்டம் தான்” – அனேகன்.

“நோ…” என கத்தியவாறு தன் காதுகளை மூடிக்கொண்ட ஆஷ்ரிதா, “என்ன சொல்லுறீங்க அனேகன்? எனக்கு என் தங்கச்சி வேணும். அவள எப்படியாவது காப்பாத்த சொல்லுங்க! அவ இல்லனா நானும் என் உயிர விட்டுடுவேன். எனக்கு என் தங்கச்சி வேணும்!!” என்று கீழே அமர்ந்தவள் தரையில் அடித்து அடித்து அழுதாள்.

அவளிடம் ஓடிச் சென்ற திரவியம் “அச்சு… ப்ளீஸ் ரிலக்ஸ். அம்முவுக்கு ஒன்னும் ஆகாது” என்று ஆறுதல் சொல்ல, ஏதோ யோசனையில் நின்றிருந்தான் அனேகன்.

“ப்ரோ. நான் அச்சு –வ வீட்டுல விட்டுட்டு வர்றேன். என் அம்மா அவளுக்கு துணைக்கு வந்து இருப்பாங்க. நாம இங்க இருந்து அம்முவ பார்த்துக்கலாம்” என்றான் திரவியம்.

“இல்ல… நான் எங்கேயும் வரமாட்டேன். அம்முவோட தான் நான் வீட்டுக்கு வருவேன்” என பதறினாள் ஆஷ்ரிதா.

“அடம் பிடிக்காத அச்சு. சொல்லுறத கேளு” – கெஞ்சினான் திரவியம்.

“நோ திரு! அச்சு இல்லாம என்னால அந்த வீட்டுல இருக்க முடியாது… ப்ளீஸ் திரு. அம்மு –வ காப்பாத்தித் தர சொல்லு” என்று மீண்டும் அழுகுரல் எடுத்தாள்.

யோசனை தெளிந்த அனேகன், “வாங்க. நாம மூணு பேருமே கிளம்பலாம்” என்றான்.

“வாட்?? என்ன ப்ரோ சொல்லுறீங்க?” – திரவியம்.

“இப்ப எமோஷ்னல் –ஆ யோசிக்கிறத விட ஸ்மார்ட் –ஆ யோசிக்கிறது தான் முக்கியம் திரு. அது மட்டும்தான் நம்ம அம்மு –வ நம்மகிட்ட திருப்பிக் கொடுக்கும்!” – அனேகன்.

அனேகன் என்ன சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்று முழுதாய் நம்பும் ஆஷ்ரிதா, தன் கண்களை துடைத்துக் கொண்டு “என்ன செய்யணும் அனேகன். அம்மு திரும்ப கிடைக்க நான் என்ன வேணும்னாலும் செய்யறேன்” என்றாள்.

“முதல் விஷயம் நீ அழக் கூடாது” என்றான் அனேகன்.

“சரி அழமாட்டேன். சொல்லுங்க!” – ஆஷ்ரிதா.

“இங்க பேச முடியாது. வாங்க வெளியில போகலாம்” என்று அனேகன் கூற, மூவரும் அந்த மருத்துவமணையின் வெளி வளாகத்தில் ஒரு ஓரமாக நின்று பேசத் தொடங்கினர்.

“எனக்கு ஒரு விஷயம் சொல்லு அச்சு. மோகன் இறந்ததுக்கு அப்பறமா அம்மு தூக்கத்துல முன்ன போல பேசுறது, இல்லனா பகல் –லயே அவளோட அம்மா –வ கேட்குறது, ஆளில்லாம யார்கிட்டயாவது பேசுறது இதுபோல எதுவும் செஞ்சாளா?” என கேட்டான் அனேகன்.

சற்று சிந்தித்தவள், “இல்ல அனேகன். முன்னாடி இருந்த அளவு இல்ல. அர்ஜுன் –னு சொல்லி ஒரு தடவ தூக்கத்துல பேசினா. அவ்வளவுதான்” – ஆஷ்ரிதா.

“குட். அதுக்கு காரணம் இரண்டு விஷயம். அவளோட பெரிய ஸ்ட்ரெஸ் –ஆ இருந்தது மோகன். அவன் செத்ததும் அவளோட பாதி ப்ரெஷர் குறைஞ்சாச்சு. அடுத்து பொன்னம்மா இறந்ததும் உன்ன கவனிச்சிக்கறத அவளோட பெரிய பொறுப்பா எடுத்துக்கிட்டா. இந்த ரெஸ்பான்சிபிலிட்டி –அ அவளோட பேச்சுலயே அன்னைக்கு நீ கண்டுப்பிடிச்சிருக்கலாம்” – அனேகன்.

“ஆமா அனேகன். நான் கவனிச்சேன். இதபத்தி உங்ககிட்ட சொல்லணும்னு தான் நினைச்சேன். பொன்னம்மா இறந்த அப்பறம் இன்னைக்கு வர, அவ முழுக்க முழுக்க என்னோட அம்முவா தான் இருந்தா” – ஆஷ்ரிதா.

“யஸ். அவளோட கான்செண்ட்ரேஷன் எல்லாம் உன்ன பாத்துக்கறதுல திரும்பிடுச்சு. அதனால அவளோட கடந்த காலத்தினாலேயோ எதிர் காலத்தினாலேயோ அவள சீண்ட முடியல” – அனேகன்.

“அப்படீன்னா அம்முவுக்கு இருந்த பிரச்சனை சரியாகிடுச்சா அனேகன்?” – மலர்ந்த முகத்தோடு கேட்டான் திரவியம்.

“நோ. இப்பதான் மிகப் பெரிய பிரச்சனை வந்திருக்கு” என இடியை தூக்கிப்போட்டான் அனேகன்.

“என்ன சொல்லுறீங்க? இப்பதான் எந்த ஓரு டிஸ்ட்ராக்‌ஷனும் இல்லையே அவளுக்கு?” – ஆஷ்ரிதா.

“அம்முவோட அடுத்த ஜென்ம பயணத்துக்கு தடையா இருந்தது அவளோட இந்த ஜென்மத்துக்கான தேடல். அதாவது மோகனோட மரணம். அது பூர்த்தியானதால அவளோட மைன்ட் பீஸ்ஃபுல் –ஆ இருந்தது. அந்த பீஸ் அடுத்த ஜென்மத்துக்கான பயணத்தத் தொடங்க வழிவகுத்துருச்சு” என்று அனேகன் கூற பேரதிர்ச்சியில் உறைந்தாள் ஆஷ்ரிதா.




(களவாடுவான்)
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 25

“அனேகன்! ப்ளீஸ் புரியுற மாதிரி சொல்லுங்க” – ஆஷ்ரிதா.

“நாம வீட்டுக்கு போய் பேசலாம். நான் டாக்டர் சுந்தர்கிட்ட சொல்லியிருக்கேன். அவங்க அம்முவ பார்த்துப்பாங்க. வாங்க” – அனேகன்.

“ப்ரோ… ஆக்சிடென்ட் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம்??” – திரவியம் கேட்டன்.

“எல்லாம் லேகா பார்த்துப்பாங்க. வாங்க நாம போகலாம்” என்று அனேகன் அழைக்க, அடுத்த அரைமணி நேரத்தில் ஆஷ்ரிதாவின் வீட்டில் கூடியிருந்தனர் மூவரும்.

“அச்சு, அம்மு இன்னைக்கு அந்த சின்ன கட்டிடத்துக்கு அவளோட அம்மாவ பார்க்கதான் போனாள்” – அனேகன்.

“அம்மா –வா? அதுவும் இங்கயா?” – ஆஷ்ரிதாவுக்கு அதிர்ச்சி.

“யஸ். நான் ஒருநாள் உன்ன ஒரு சின்ன கோவிலுக்கு கூட்டிட்டு போனேன். நியாபகம் இருக்கா அச்சு?” – அனேகன்.

“ஆமா அனேகன். நான் கூட அம்முவ அங்க கூட்டிட்டு போனேன். அந்த பாட்டி என்னையும் அம்முவையும் ஏதோ மாதிரி பார்த்துட்டே இருந்தாங்க” – ஆஷ்ரிதா.

“ம்ம்ம்… அந்த பாட்டிக்கிட்ட குழந்தை பாக்கியம் வேணும்னு வேண்டிக்கிட்டு வந்திருந்தவங்க தான் சீதா. அம்முவுக்கு ஆக்சிடன்ட் ஆனா அன்னைக்கு எல்லாரும் பரபரப்பா இருக்க, அந்த பாட்டி சீதாவுக்கு அட்வைஸ் பண்ணி அங்க இருந்து அனுப்பி வச்சத நான் பார்த்தேன். அப்ப அவங்கள பத்தி மைண்ட் ஸ்டடி பண்ணும்பொழுது சில விஷயங்கள் தெரிஞ்சிது. சீதா தனக்கு குழந்தை பாக்கியம் கேட்டு முதல் முதலா அந்த பாட்டிய பார்க்கும்போது, ஐந்து வருஷத்துக்கு அப்பறம் குழந்தை கிடைக்கும்னு சொல்லியிருந்தாங்க. அதுல இருந்து தன்னோட குழந்தை கூட எப்படியெல்லாம் இருக்கனும்னு நினைச்சு, அவங்களுக்கான தனி கனவு உலகத்துல கற்பனையா ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருந்தாங்க சீதா. அவங்களோட எண்ணங்கள் தான் அம்ரிதாவ அவளோட அம்மாவ தேடி இத்தனை நாள் ஓட வச்சது” – அசாதாரணமான உண்மையை சாதாரணமாக கூறினான் அனேகன்.

அனேகன் கூறிய செய்தியில் திகைத்துப்போன ஆஷ்ரிதா, இத்தனை நாள் அம்ரிதா அவளது முன் ஜென்ம அம்மாவோடுதான் தூக்கத்தில் பேசுகிறாள் என்று தான் எண்ணியது தவறோ எனும் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளும் பொருட்டு, “இப்படியெல்லாம் கூட நடக்குமா அனேகன்? அப்படீன்னா அவ அம்மாகிட்ட தூக்கத்துல பேசினது எல்லாம் முன்ஜென்ம அம்மா இல்லையா?” என கேட்டாள்.

“இல்ல அம்மு. ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு ஜென்மத்துக்கான தேடலா ஒரே ஒரு விஷயம் தான் இருக்கும். ஆசைகள் நிறைய இருக்கலாம், ஆனால் பிறப்பின் பயன், அதாவது அந்த ஆன்மாவின் இந்த பிறவிக்கான பயணம் ஒரே ஒரு இலக்கை நோக்கிதான் நகரும். அம்முவோட போன ஜென்மத்து நோக்கம் நான், இந்த ஜென்மத்து நோக்கம் மோகன், அடுத்த ஜென்மத்து நோக்கத்தை தீர்மானித்திருப்பது சீதா” – அனேகன்.

“அது எப்படி அனேகன் அம்ரிதாவோட பிறவி நோக்கத்த சீதாவால தீர்மானிக்க முடியும்?” – திரவியம்.

“அம்ரிதா இன்னும் அடுத்த பிறவிக்குள் நுழையவில்லையே! அவள் ஜனித்த பிறகுதான் அந்த ஜென்மத்தின் வாசனை அவளைத் தொடும். அப்போது தான் அவள் எதையும் தீர்மானிக்க முடியும்!” – அனேகன்.

“அப்படீன்னா, அம்மு இத்தனை நாளா அம்மா அம்மானு தூக்கத்துல உளரினது…” – ஆஷ்ரிதா இழுக்க,

“சீதா” – அனேகன் முடித்தான்.

இதுவே நிதர்சனம் என்று அறிந்த போதிலும் அதிர்ந்துதான் போனாள் ஆஷ்ரிதா.

“அந்த சீதா எந்நேரமும் தன் குழந்தைய நினைச்சிட்டு இருக்கறதால, அவங்களோட கனவுல அடிக்கடி தன் குழந்தைய பார்த்திருக்காங்க. அந்த சமயம் தான் அம்ரிதா தூக்கத்துல தன்னோட அம்மாவான சீதாகிட்ட பேசிருக்கா” – அனேகன்.

“நோ. என் தங்கச்சிய நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். அவங்களுக்கு குழந்தை வேணும் அப்படீங்கறதுக்காக என் தங்கச்சி உயிரோட இருக்கும்போதே அவள பலியாக்கி என்கிட்ட இருந்து பிரிச்சி எடுத்துகிட்டு போவாங்களா? விடமாட்டேன். இப்பவே அந்த சீதாவ போய் பார்க்குறேன். நானா அவளானு பார்த்திடலாம்” என ஆத்திரத்தில் கொதித்தெழுந்தாள் ஆஷ்ரிதா.

“அச்சு. ஸ்டாப். டோன்ட் கெட் எமோஷ்னல். நான் உன்கிட்ட என்ன சொன்னேன்?” – அனேகன்.

“எப்படி அனேகன் சும்மா இருக்க முடியும்? இது தப்பு இல்லையா? அவங்க எப்படி அப்படி பண்ண முடியும்?” – ஆஷ்ரிதா.

“அவங்க எதுவுமே செய்யலையே அச்சு! அவங்களுக்கு நீ யாருனு தெரியாது, அம்ரிதா யாருனும் தெரியாது. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் அவங்களுக்கு பிறக்கப் போற குழந்தை தான்” – அனேகன்.

“என்னால முடியல அனேகன். எனக்கு என் தங்கச்சி வேணும். அவள நான் யாருக்கும் விட்டு தரமாட்டேன். ஒருவேளை அம்மு என்னவிட்டு போறானா நான் நிச்சயமா என் உயிர மாய்ச்சிப்பேன்” என அழுதாள் ஆஷ்ரிதா.

“அச்சு என்ன வார்த்த பேசுற? நான் இருக்கேன் உன…” – சொல்ல வந்த திரவியம் தன் வார்த்தையை பாதியிலேயே விழுங்கினான்.

அவன் என்ன கூற வந்தான் என்பது அனேகனுக்கும் புரிந்தது, ஆஷ்ரிதாவுக்கும் புரிந்தது. இருவரும் ஒருவித பாவனையோடு திரவியத்தை காண, தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவனாய் “நான் கொஞ்சம் நேரம் கார்டன் –ல இருக்கேன்” என்றுவிட்டு நகர்ந்தான்.

பேச்சை தொடர்ந்தாள் ஆஷ்ரிதா, “அனேகன்! என் தங்கச்சிய எப்படியாவது என்கிட்ட திருப்பி கொடுங்க ப்ளீஸ்” என்றாள்.

“எனக்கும் என் சகி வேணும் அச்சு” – தற்போது அனேகனும் கலங்கினான்.

“அதுக்கு வழியே இல்லையா?” – ஆஷ்ரிதா.

“இருக்கு. ஒரே இரு வழி இருக்கு” – அனேகன்.

“என்ன வழி அனேகன். சொல்லுங்க. எதுவா இருந்தாலும் நான் செய்ய தயாரா இருக்கேன்” – ஆஷ்ரிதா தீவிரமாய் கேட்டாள்.

“அர்ஜுன்” என்றான் அனேகன்.

“என்ன அர்ஜுன் –ஆ?” – ஆஷ்ரிதா.

“ஆமா. அர்ஜுன் நினைச்சா அம்முவ நமக்கு திருப்பி தர முடியும்” – அனேகன்.

“ஆனா அர்ஜுன் தான் உயிரோட இல்லையே! எப்படி அனேகன்??” – ஆஷ்ரிதா.

“கரெக்ட். அவன் ஆத்மா –வா தான் இருக்கான். நீங்க கனவுல பார்த்தது, கனவுல பேசினது எல்லாமே அர்ஜுன் ஆத்மா தான். போன ஜென்மத்துல உன்கிட்ட சகிய சேர விடமாட்டான். சகி உன்கூட விளையாட வரும் சமயத்துல எல்லாம் அவன் கூட்டிட்டு போய்டுவான். ஹிப்னாட்டிஷம் செய்த பொழுது இத நீயே சொன்ன நியாபகம் இருக்கா?” – அனேகன்.

“ஆமா. வீடியோ –ல பார்த்தேன்” – ஆஷ்ரிதா.

“யஸ். போன ஜென்மத்துல சகியோட இருக்கனும்னு நீ ஆசப்பட்ட. அது நடக்கல. நிறைவேறாத ஆசையோட துர்மரணம் அடைஞ்ச நீ, இந்த ஜென்மத்துல சகி கூடவே இருக்குற வரத்தோட வந்திருக்க. அதுவும் கருவுல இருந்தே நீ அவளோட இருக்குற. நானும் அவளும் கல்யாணம் பண்ணிக்க இருந்தோம். ஒருத்தருக்கு ஒருத்தர் உயிரா இருக்கும் போதுதான் அர்ஜுனோட பொசசிவ்னஸ் என்னையும் சகியையும் கொன்னுடுச்சு” – அனேகன்.

“என்ன சொல்லுறீங்க? அவனோட பொச்சிவ்னஸ் எப்படி?” – ஆஷ்ரிதா.

“அம்மா அப்பா இல்லாம வளர்ந்ததால அர்ஜுன் –க்கு அவனோட அக்கா சகி மேல பாசம் அதிகம். அவளுக்கு என் மேல அளவுக்கடந்த காதல் இருந்தத அந்த சின்ன பையனால தாங்கிக்க முடியல. தம்பி மேல இருக்கற பாசம் வேற, கட்டிக்கப்போறவன் மேல இருக்கற காதல் வேற –னு புரிஞ்சிக்கிற பக்குவம் அப்ப அர்ஜுனுக்கு இல்ல. போன ஜென்மத்துல என்னோட பில்டிங் கன்ஸ்ட்ரெக்‌ஷன் வர்க் ஒன்னு சகியோட வீட்டுக்கு பக்கத்துல தான் நடந்தது. அதனால சகி- அ அடிக்கடி போய் பார்ப்பேன். அப்படி போயிருக்கும் போது ஒருநாள், என்னோட டூ-வீலர் ப்ரேக் –அ அர்ஜுன் ஃபெயில் பண்ணிட்டு ஸ்கூலுக்கு போய்ட்டான். நானும் சகியும் சாகும்போதும் ஒன்னா சாகணும்னு எழுதியிருந்துருக்கு போல, அன்னைக்கு என்கூட சைட்டுக்கு வர்றேன் –னு சகி சொல்ல, அர்ஜுன் ப்ரேக் ஃபெயில் பண்ண வண்டில தான் நானும் சகியும் சைட் –க்கு போனோம். ஆள் இல்லாத இடத்துல தனியா நின்னு பேசலாம் –னு சைட் –ல ஒரு ஓரமா வண்டிய நிறுத்த போக, ப்ரேக் பிடிக்காம அங்க வெட்டி வச்சிருந்த குழியில நாங்க வண்டியோட விழுந்துட்டோம். நாலு ஆட்கள் நிக்கற உயரம் இருக்கும் அந்த குழி. நாங்க உள்ள விழுந்தது தெரியாம ட்ராக்டர் எங்க மேல மண் –அ கொட்ட, மூச்சுமுட்டி மண்ணுக்குள்ள உன்னாவே இறந்துட்டோம். மூனு நாள் கழிச்சு தான் எங்கள பிணமா கண்டுப்பிடிச்சாங்க. அது வேற கதை. சகி –அ இழந்த துக்கத்துல விஷத்த குடிச்சி அர்ஜுன் தற்கொலை பண்ணிக்கிட்டான். ஆனா அவனோட ஆத்மா அமைதி கிடைக்காம அலையுது. நாங்க சாகப்போறதா எனக்கு தெரிஞ்ச கடைசி மூச்சில நான் சத்தியம் பண்ணேன், திரும்ப பிறப்பெடுத்து சகியோட சேருவேன் –னு. அதனால எனக்கு கிடைச்ச வரம் தான் இந்த சைக்யார்டிஸ்ட் படிப்பும், பூர்வ ஜென்ம நினைவுகளும்” – அனேகன்.

அவ்வளவு நேரம் அனேகன் சொல்வதை வாய்பிளந்துக் கேட்டுக்கொண்டிருந்த ஆஷ்ரிதா, “அர்ஜுன் எப்படி நமக்கு ஹெல்ப் பண்ணுவான்? நீங்க சொல்லுறதுபடி பார்த்தா நம்ம ரெண்டு பேரையுமே அவனுக்கு பிடிக்காதே!” – ஆஷ்ரிதா.

“வி கேன் ட்ரை அச்சு. நாம அர்ஜுன் கிட்ட பேசிப்பார்க்கலாம்” – அனேகன்.

“என்னது பேசிப்பார்க்கலாமா? ஆவிகிட்டயா? அதுவும் நம்மள பிடிக்காத ஆவிகிட்ட! எனக்கு பயமா இருக்கு. நான் வரமாட்டேன் பா” – அலறியே போனாள் ஆஷ்ரிதா.

“அச்சு. நான் தான் கூட இருக்குறேனே! என்ன பயம் உனக்கு?” – அனேகன்.

“எனக்கு பயமா இருக்கு அனேகன். என்ன –னு பேசுவீங்க அவன்கிட்ட? அம்மு –வ காப்பாத்திக் கொடுனு கேட்கப் போறீங்களா? அப்படி கேட்டா அவன் உதவி செய்வானா?” – ஆஷ்ரிதா.

“அம்மு –வ காப்பாத்துறதுக்கு மட்டும் அவன கேட்கப் போறது இல்ல அச்சு. அவனோட ஆத்மா அமைதி இல்லாம இருக்கற இந்த நிலைய மாத்தி அவனுக்கு ஒரு பிறப்ப ஏற்படுத்த முடியும்” – அனேகன்.

“எனக்கு சத்தியமா புரியல அனேகன்” – ஆஷ்ரிதா.

“அம்மு –வ நாம காப்பாத்தியாகனும் –னா சீதாவுக்கு குழந்தையா அம்முவோட ஆத்மா போக கூடாது. நாம கஷ்டப்பட்டு அம்முவ நம்மளோட தக்க வச்சிக்கறோம்னே வச்சிக்க, அப்படி செஞ்சா சீதாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லாம போகும். அது பாவம் இல்லையா?” – அனேகன்.

“பிறப்பு இறப்ப தீர்மானிக்கறது நம்ம கையில இல்லையே அனேகன்” – ஆஷ்ரிதா.

“நம்மாள முடியாது. ஆனா அர்ஜுன் நினைச்சா முடியும். அதனாலதான் அவன்கிட்ட உதவி கேட்கலாம் –னு சொல்லுறேன். அவன்கிட்ட அம்முவ காப்பாத்தி தர சொல்லிக் கேட்போம். அம்முவுக்கு பதிலா அர்ஜுன் சீதாவுக்கு குழந்தையா பிறந்தா எல்லாருக்கும் ரூட் க்ளியர் தானே?!” – அனேகன்.

“இது எல்லாம் சாத்தியமே இல்ல அனேகன். அர்ஜுன் நமக்காக அம்முவ காப்பாத்தி தர்றது கூட ஓகே. ஆனா அம்முவுக்கு பதிலா அர்ஜுன் எப்படி போய் பிறக்க முடியும்? இது என்ன பிஸினஸ் மீட்டிங் –ஆ, எனக்கு பதிலா நீ அட்டண்ட் பண்ணுனு சொல்லுறதுக்கு?” – ஆஷ்ரிதா.

“ஹாஹா… கிட்டதட்ட பிஸ்னஸ் டீலிங் போலதான் அச்சு. எந்த ஒரு ஆத்மாவும் சாந்தி அடையுறதுக்கு முன்ன ஒன்னொரு பிறப்பு எடுக்கறது இல்ல!” – அனேகன்.

“நீங்க என்னவெல்லாமோ படிச்சிருக்கீங்க அதனால ஈசியா பேசுறீங்க. ஆனா நான் சாதாரண பொண்ணு அனேகன். எனக்கு பயமா இருக்கு” விட்டால் அழுதுவிடுவாள் போல கூறினாள் ஆஷ்ரிதா.

“நம்ம அம்மு நமக்கு வேணாமா அச்சு? அம்முவுக்காக எதையும் செய்யுறேன் –னு சொன்ன தானே!” – அனேகன்.

சற்று உடல் நடுங்கியபடி இருந்த ஆஷ்ரிதாவுக்கு அர்ஜுனிடம் பேசுவது போல எண்ணிப்பார்க்கும் பொழுதே அதிகமாய் உதறல் எடுத்தது. சாதாரணமாக சொல்லியிருந்தாலே அவள் பயந்திருப்பாள், இதில் முன்ஜென்மத்து விரோதியாய் காட்சிப்படுத்திய ஆத்மாவிடம் பேச வேண்டும் என்கையில் அவளது உடல் முழுவது வியர்வை பூக்கத் தொடங்கியது.

“பயப்படாத அச்சு. நான் இருக்கேன் கூட. ஒன்னும் ஆகாது. நமக்கு நேரம் இல்ல. நாம வேஸ்ட் பண்ணுற ஒவ்வொரு நொடியும் அம்மு நம்மள விட்டு போய்ட்டே இருப்பா” என்று அனேகன் கூறவும் விஷயத்தின் வீரியம் ஆஷ்ரிதாவின் பிடரியில் அடிக்க வேகமாக தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

பெருமூச்சுடன் அவளுக்கு நன்றி சொன்ன அனேகன், தோட்டத்தில் நின்றுக்கொண்டிருக்கும் திரவியத்தை அழைத்து விஷயத்தை கூறினான். அவனுக்கும் அதிர்ச்சிதான். ஆனால் அனைத்தையும் புரியவைத்துவிட்டான் அனேகன். காலம் கடத்தாமல் செயலில் ஈடுபட்டனர் மூவரும்.

“ஆவிகளோட பேசுறதுக்கு நிறைய வழிமுறைகள் இருக்கு. லைக் ஒய்ஜா போர்ட், கேன்டில், ஆட்டோ ரைட்டிங், சவுண்ட் ப்ராக்டிஸ் இந்த மாதிரி. நான் தனியா செஞ்சா ரிஸ்க் எடுக்கலாம். அனுபவம் இல்லாத நீங்க ரெண்டுபேரும் என்கூட சேர்ந்து பண்ணப்போறீங்க இன்னைக்கு. அதனால லெஸ் ரிஸ்க் இருக்கற ஒய்ஜா போர்ட் மெத்தேட் –அ நாம ஃபாலோ பண்ணலாம்” – அனேகன்.

அனேகன் சொல்ல சொல்ல ஆஷ்ரிதாவுக்கு பயம் கூடிக்கொண்டே போனது. இருந்தும், தன் தங்கைக்காக இதை செய்யத் துணிந்தாள் அந்த அன்பு சகோதரி.

“என் வீட்டுல ஒய்ஜா போர்ட் இருக்கு. நாம என் வீட்டுக்கு போய்டலாம். அதுக்கு முன்னாடி உங்க ரெண்டு பேருக்கும் நான் காப்பு மந்திரம், உடற்கட்டு, திசை கட்டு எல்லாம் சொல்லி தர்றேன். எல்லாம் முடிச்சிட்டு இன்னைக்கு நைட் சரியா பன்னிரெண்டு மணிக்கு நாம அர்ஜுன் கூட பேசலாம்” – அனேகன்.

“எல்லாம் ஓகே ப்ரோ. ஆனா அர்ஜுன் ஃபோட்டோ வேணும் தானே?” – திரவியம்.

“வாவ். உங்களுக்கு தெரியுமா திரு?” – அனேகன்.

“ம்ம்ம். நிறைய யூ ட்யூப், டிவி ஷ்சோஸ் –ல எல்லாம் பார்த்திருக்கேன்” – திரவியம்.

“நாட் பேட். அன்னைக்கு அச்சு என்கிட்ட அர்ஜுன் பத்தி சொல்லும்போதே இப்படி ஒரு நிலைமை வரும்னு யோசிச்சு அவனோட ஃபோட்டோ ரெடி பண்ணிட்டேன். என் வீட்டுல இருக்கு” – அனேகன்.

ஆஷ்ரிதாவுக்கு நடப்பவை எல்லாம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாய் இருந்தது. அவளது பயத்தை மெல்ல மெல்ல போக்க அனேகனும் திரவியமும் பெரும்பாடு பட, ஒருவழியாக மணி பன்னிரெண்டை அடைந்தது.

எவ்வாறு நாம் இதை செயல்படுத்தப் போகிறோம் என்பதை அனேகன், ஆஷ்ரிதா மற்றும் திரவியத்திற்கு விளக்கி கூறிய பின், எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்க்கொண்டுவிட்டு, அனேகனது அம்மாவின் சம்மதத்தை வாங்கிய அனேகன், ஆஷ்ரிதா மற்றும் திரவியத்தை அழைத்துக்கொண்டு தன் வீட்டின் ஒரு அறையினுள் சென்று கதவை தாழிட்டான்.

மெயின் மீடியமான அனேகன் வடக்கு திசை நோக்கியும், சப் மீடியமான திரவியம் தெற்கு திசை நோக்கியும் அமர்ந்துக்கொண்டனர். அவர்கள் அருகில் பேனா மற்றும் பேப்பரோடு அமர்ந்த ஆஷ்ரிதா ஒரு வித பயத்தோடு ஒய்ஜா போர்ட் –ல் தெரியப்பட்டுத்தப்படும் வார்த்தைகளை பேப்பரில் குறித்துக் கொள்ள தயாராய் இருந்தாள்.

மூவருக்கும் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒய்ஜா போர்ட் –ல் ஆங்கில ஆல்ஃப்பெட் ஏ முதல் ஸ்ஸட் வரை, எண்கள் பூஜ்ஜியம் முதல் ஒன்பது வரை, யஸ், நோ மற்றும் குட் பை ஆகியவை எழுதப்பட்டிருந்தது. அந்த போர்ட் –ஐ சுற்றி மூன்று வெள்ளை மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்தது.

நள்ளிரவு பன்னிரெண்டு மணியளவில் மூடப்பட்ட அந்த அறை, மூன்று மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்க, அங்கு கரையும் நிசப்த நிமிடங்கள் எல்லாம் ஆஷ்ரிதாவினுள் திக் திக் என்றே இருந்தது.

முதலில் அனேகனும் திரவியமும் கண்களை மூடிக் கொண்டு தங்கள் எண்ண ஓட்டங்களை அமைதியாக்கினர். பிறகு தங்கள் இருகைகளையும் ஒரு பத்தை பிடித்திருப்பது போல அருகருகே ஒரு உள்ளங்கை இன்னொன்றை நோக்கியபடி சிறு இடைவெளி விட்டு வைத்திருந்தவர்கள், தங்கள் உடம்பில் உள்ள காந்த சக்திகள் மொத்தத்தையும் திரட்டி, தங்கள் கைகளுக்கு இடையில் ஒரு பத்தை போல இருப்பதாய் பாவித்தனர்.

பின் அந்த காந்த பந்தை தங்கள் தலையில் வைப்பது போல, தங்கள் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, அந்த காந்த சக்தியை தங்கள் உடலில் முழுவதுமாய் பரவச்செய்து தங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

அவர்களுக்கு விருப்பமான தெய்வத்தை தங்கள் மனதில் நினைத்து வேண்டிக்கொண்டவர்கள் கண்களைத் திறந்து ஒய்ஜா போர்டின் அருகே வைக்கப்பட்டிருக்கும் அர்ஜுனின் புகைப்படத்தை பார்த்தனர். அவனை தங்கள் மனக்கண்ணில் பதித்தவர்கள் அந்த போர்ட் மேல் இருக்கும் ஸ்ட்ரைக்கரில் தங்கள் ஆட்காட்டி விரலை வைத்தனர். பிறகு இருவரும் கண்களை மூடிக்கொள்ள, அனேகன் பேசத்தொடங்கினான்.

“குழந்தை ஆத்மாவான அர்ஜுனுக்கு நன்றி. என்னோட இந்த அழைப்பை ஏற்று இங்க வருவீங்க –னு நம்புறேன். ப்ளீஸ் வாங்க” என்றான்.

அப்பொழுதே ஆஷ்ரிதாவின் உடலில் நடக்கம் தன் வேகத்தை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. பேனாவை எடுத்து குறிப்பெடுக்க தயாராய் இருந்தவளின் கைகள் நடுக்கத்தால் பேப்பரில் கோலம் போட, தன்னால் முடிந்தமட்டும் கைகளை இறுக மூடி தன் பயத்தை கட்டுப்படுத்தினாள் ஆஷ்ரிதா.

அத்மாக்களுடன் பேசும் பொழுது மிகுந்த மரியாதையோடு பேச வேண்டும். மேலும் அவர்கள் வருவதற்கு வெகு நேரம் எடுக்கலாம். அதனால் அவர்களுக்காய் காத்திருக்க மிகுந்த பொறுமை நம்மிடம் இருப்பது மிக மிக அவசியம். இவற்றை அறிந்திருந்த அனேகனும் திரவியமும் தங்கள் முயற்சியை கைவிடாது, அர்ஜுனை அழைத்த வண்ணம் அவனது வரவுக்காக காத்திருந்தனர்.

(களவாடுவான்)
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 26 Pre Final

இவ்வாறே சில மணித்துளிகள் கடந்திருக்க, அவர்கள் மூவரும் ஒருவித வித்தியாசமான அதிர்வுகளை உணர்ந்தனர். அனேகனுக்கு தெரிந்துவிட்டது அர்ஜுன் வந்துவிட்டான் என்று. ஆனால் இதில் பரிட்சையம் இல்லாத திரவியம், தான் படித்த புத்தகங்களில் கூறியிருக்கும் விதிமுறைகளை பின்பற்றுபவனாய்,

“யாராவது வந்திருக்கீங்களா?” என்றான்.

அங்கு நடப்பவை அனைத்தையும் ஒருவித திகிலோடுதான் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா. அங்கு நிலவும் மயான அமைதியும், இருள் சூழ்ந்த அமைப்பும் அவளுக்கு அசவுகரியமான உணர்வை தந்தது. அந்த உணர்வு அவள் மனம் முதல் உடல் வரை ஏதேதோ செய்தது. நாவோடு சேர்ந்து தொண்டையும் வறண்டு போனது. வயிறு பிசைவது போல இருந்தது. கண்களை திறந்துவைக்க முடியாமல் சிரமப்பட்டவளுக்கு ஏனோ தலையும் சுற்றிக்கொண்டு வந்தது.

அப்பொழுது தன் தங்கையை மனதில் நினைத்துக்கொண்டவள், தன்னை தானே நிதானப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தாள். பெண் அவள் படும் அவஸ்தையை கண்டும் வேறு வழியின்றி வந்த வேலையை நடந்திக் கொண்டிருந்தனர் ஆடவர்கள்.

“யாராவது வந்திருக்கீங்கன்னா எங்களுக்கு உங்க வரவை தெரியப்படுத்துங்க ப்ளீஸ்” என மிகவும் பணிவாக கேட்டான் திரவியம்.

அவன் கேட்ட சில வினாடிகளில் அவர்கள் விரல் வைத்திருக்கும் ஒய்ஜா போர்டில் இருந்த ஸ்ட்ரைக்கர் மெதுவாக நகரத் தொடங்கியது. அதனை கூர்ந்து கவனித்தனர் மூவரும்.

நகர்ந்த அந்த ஸ்ட்ரைக்கர் ‘யஸ்’ என்னும் எழுத்தில் போய் நின்றது. அதை கண்ட ஆஷ்ரிதா தன் நடுங்கும் கைகளை பேப்பரில் வைத்து குறிப்பெடுக்க தயாரானாள்.

ஸ்ட்ரைக்கர் நகர்ந்ததும் எதையோ சாதித்துவிட்ட புன்னகையை வெளிப்படுத்திய திரவியம், திரும்பி அனேகனைப் பார்த்தான். மெல்லிய புன்னகையோடு அனேகன் ஆம் என்பது போல தலையாட்டினான்.

“வந்திருக்கிறது யாரு? உங்க பெயர் என்ன?” என திரவியம் கேட்கவும்,

“வாங்க அர்ஜுன்” என்றான் அனேகன்.

அவனை திடுமென திரும்பிப்பார்த்த திரவியம், ‘தலை இருக்கும்போது வால் ஆடுறது தப்போ? ஒரு ஆர்வத்துல நானே பேசிட்டு இருந்துட்டேன். அவரே பேசட்டும். அவருக்குதான் எக்ஸ்பீரியன்ஸ் உண்டு இதுல’ என நினைத்துக்கொண்டு அமைதிக்காத்தான்.

“அர்ஜுன். உங்களுக்கு எங்க கூட பேச விருப்பமா?” என அனேகன் கேட்க, அவர்கள் கைவைத்திருந்த ஸ்ட்ரைக்கர் மீண்டும் தானே நகர்ந்து ‘யஸ்’ எனும் வார்த்தையில் போய் நின்றது.

அர்ஜுன் தங்கள் மீது கோபத்தில் இருப்பான் என எண்ணியிருந்த ஆஷ்ரிதாவுக்கு, அவன் பேச சம்மதம் தெரிவித்தது ஆச்சரியாமாகவே இருந்தது.

அர்ஜுனுக்கு தன் நன்றியை ஒருமுறை சொல்லிக்கொண்ட அனேகன், “எனக்கு உதவி செய்ய உங்களுக்கு விருப்பமா?” என கேட்டான்.

தற்பொழுது அந்த ஸ்ட்ரைக்கர் நகரவில்லை. பதிலுக்காக பொறுமையுடன் மூவரும் காத்திருந்தனர். நேரம் கடந்த பொழுதிலும் ஸ்ட்ரைக்கரில் அசைவேதும் இல்லை என்பதால் திரவியம் அனேகனை நோக்கி,

“இருக்காங்களா ப்ரோ?” என கேட்டான்.

ஆம் என தலையசைத்த அனேகன்,

“என்ன அர்ஜுன் எங்க மேல கோபம் போகலையா?” என கேட்டான்.

அனேகன் இந்த கேள்வியை கேட்ட மூன்றாவது நிமிடம், ஸ்ட்ரைக்கர் நகரத்தொடங்கியது. ஆஷ்ரிதாவின் கண்கள் படபடத்துக் கொண்டிருந்தது. பதிலை நெருங்கிக்கொண்டிருந்த அந்த சில வினாடிகளுக்குள்ளேயே ‘ஆத்மாக்களின் கோபத்தை தாங்கும் தைரியமோ சக்தியோ என்னிடம் இல்லை கடவுளே’ என நினைத்துக்கொண்டே ஸ்ட்ரைக்கருடன் பயணித்தாள். அவள் பெருமூச்சு விடுவதற்காக வழி பிறந்து, ஸ்ட்ரைக்கர் நோ எனும் வாக்கியத்தில் போய் நின்றது.

பயம் தாக்கிய இதயத்தில் வலியை உணர்ந்துக் கொண்டிருந்தாலும், அர்ஜுனுக்கு தங்கள் மீது கோபம் இல்லை என உணர்ந்த ஆஷ்ரிதாவுக்கு ஒருவித ஆறுதல் கிடைத்தது.

“கோபம் இல்லைனா எங்களுக்கு உதவலாம் இல்லையா? சகியோட நாங்க வாழ ஆசைப்படுறோம். அதுக்காக எங்களுக்கு உன்னோட உதவி வேணும்” என தொடர்ந்தான் அனேகன்.

அப்பொழுதும் அந்த ஸ்ட்ரைக்கர் அசையவில்லை. ஆழ்ந்து ஒரு மூச்சை வெளியே விட்ட அனேகன், “உங்களுக்கு மீடியம் வேணுமா அர்ஜுன்?” என கேட்டான்.

“மீடியமா?? ப்ரோ!!” அதிர்ந்தான் திரவியம்.

“தெர் இஸ் நோ ஆப்ஷன் திரு!” – அனேகன்.

“ப்ரோ! மீடியம் வேணுமான என்ன அர்த்தம்? அர்ஜுன் பேசுறதுக்கு யார் உடம்பாவது வேணுமானு தானே கேட்குறீங்க?” – எப்படியும் அர்ஜுன் சம்மதம் தெரிவித்தால் அனேகன் தன் உடம்பில் தான் ஏற்றுக்கொள்வான். அப்படியானால் தானும் ஆஷ்ரிதாவும் தனியே அர்ஜுனோடு எவ்வாறு பேசுவது என்ற பயத்தோடு கேட்டான் திரவியம்.

“ஆமா திரு. லெட்ஸ் சீ” என்று அனேகன் கூறவும் ஸ்ட்ரைக்கர் நகர்ந்து நோ என காட்டியது.

சற்று சிந்தித்த அனேகன், “என்னோட தனியா பேசிறீங்களா?” என கேட்க, ஸ்ட்ரைக்கரின் உதவியால் ஆம் என்றான் அர்ஜுன்.

அதனை ஏற்று ஆஷ்ரிதாவும் அம்ரிதாவும் வெளியேறிட, அனேகன் மட்டும் தனித்து விடப்பட்டான் அந்த அறையில்.

“எனக்கு பயமா இருக்கு திரு!” கலங்கிப்போய் கூறினாள் ஆஷ்ரிதா.

“அனேகன் எல்லாத்தையும் பார்த்துப்பாரு. கவலப்படாத!” – திரவியம்.

“அனேகன் வெளியில வர்ற வரை எனக்கு நிம்மதி இருக்காது” என்ற கண்களில் கண்ணீர் வடிய பேசிய ஆஷ்ரிதாவை தன் கரம் கொண்டு அனைத்து பாதுகாப்பை உணர்த்த எண்ணியவ திரவியம் அச்சமயம் கையாளாகதவனாய் உணர்ந்தான் தன்னை.

அந்த திக் திக் நிமிடங்கள் திரவமாய் விரைந்தோட, கதவை திறந்துக்கொண்டு அனேகன் வெளியே வந்தான். அவனது முகம் ஏதோ செய்தியை உணர்த்த, அதனை தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தை விடவும், அர்ஜுனிடம் பேச சென்றதுபோல நன்முறையில் அனேகன் வந்துவிட்டானா என்பதையே கேட்க விளைந்தாள் பெண் அவள்.

“அனேகன்! உங்களுக்கு ஒன்னுமில்ல தானே. எதுவும் பிரச்சனை இல்லையே?” – ஆஷ்ரிதா.

“எனக்கு என்ன ஆகப்போகுது அச்சு?” சிரித்தபடியே கேட்டான் அனேகன்.

“அர்ஜுன் என்ன சொன்னான் ப்ரோ?” – திரவியம்.

“ஹாஸ்பிடல் போய் அம்முவ பார்த்துக்க சொன்னான். வாங்க போகலாம்” – அனேகன்.

“அப்படீன்னா, என் அம்முவுக்கு எதுவும் ஆகாது தானே?” – ஆஷ்ரிதா.

“ஆக கூடாது. கம் ஆன். லெட்ஸ் கோ” என்று அனேகன் கூற, மூவரும் மருத்துவமணைக்கு விரைந்தனர்.

டாக்டர் சுந்தரின் அனுமதியை பெற்ற பின்னர், ஐ.சி.யூ. –விற்கு வெளியே ஆஷ்ரிதாவும் திரவியமும் காத்திருக்க, அனேகன் உள்ளே சென்றான். காதலை கண்ணில் நிறைத்து காரிகை அவளை கண்ட நாட்கள் மறைந்து தற்போது அவள் கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கும் காட்சி, கல்லென இருந்தவனது கண்களிலும் கண்ணீரை சொறியச்செய்தது.

மெல்லமாக அவளை நெருங்கி அவளது கரத்தை பற்றியவன்,

“சகி! ஜென்ம ஜென்மமா உனக்காக காத்துட்டு இருக்கேன். என்ன ஏமாத்திறாத ப்ளீஸ். உன் அக்கா வெளியில உனக்காக துடிச்சிட்டு இருக்கா. உன்ன தக்க வச்சிக்க அவளும் பல போராட்டம் பண்ணிருக்கா. எங்களை விட்டுட்டு போக உனக்கு அனுமதி கிடையாது சகி. எங்க போராட்டத்துக்கு நீ கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும். எழுந்து வா. என்னோட சகி –யா, அச்சுவோட அம்மு –வா எழுந்து வா! நாங்க காத்துட்டு இருக்கோம் உனக்காக” என்றவன் அவளது கைகளில் முத்தமிட்டு எழுந்துக்கொள்ள, அவளது கைகளின் வழியே ஏதோ மின்சாரம் பாய்ந்ததை போல உணர்ந்தான் அனேகன். சட்டென அவள் முகத்தை கூர்ந்து கவனிக்க, முகத்தை சலனமின்றி வைத்திருந்தாள் சிலையானவள்.

“விளையாட்டு காட்டுறியா சகி? எழுந்து வா! இந்த கை –அ இப்ப விடுறேன். ஆனா வாழ்க்க முழுக்க விடமாட்டேன்!” என்று கூறிவிட்டு தன் கண்களின் ஓரம் பூத்திருந்த விழிநீரைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தான் அனேகன்.

“விசிட்டர்ஸ் ரூம் –ல போய் தூங்க சொல்லுறேன், கேட்கமாட்டேங்கறா ப்ரோ” – திரவியம் ஆஷ்ரிதாவை குறித்து அனேகனிடம் கூறினான்.

“கொஞ்சம் ரெஸ்ட் எடு அச்சு” – அனேகன்.

“அம்மு கண் முழிக்கற வரைக்கும் நான் தூங்க மாட்டேன் அனேகன்” – ஆஷ்ரிதா.

“உங்க ஃபீலிங்க்ஸ் –க்கு மரியாதை கொடுத்துதான் நான் அம்மு விஷயமா செய்யற எல்லா முயர்சியிலையும் உங்கள கூடவே வச்சிருந்தேன். இப்ப தூங்க தானே சொல்லுறேன். விடியறதுக்கு கொஞ்சம் நேரம்தான் இருக்கு. என் வார்த்தைக்கு நீங்க மதிப்புக் கொடுத்து கொஞ்சம் நேரம் தூங்குங்க. அப்பதானே அம்மு முழிச்சதும் நீங்க பேச முடியும்?” – அனேகன்.

“அப்ப அம்மு காலையில கண் முழிச்சிருவாளா?” – மலர்ந்த முகமாய் கேட்டாள் ஆஷ்ரிதா.

“நீங்க இப்ப தூங்கினாதான் அவ கண் முழிப்பா” – அனேகன்.

“அப்படியா?! அப்ப சரி. நான் போய் தூங்குறேன்” என விசிட்டர்ஸ் அறைக்கு சென்றாள் ஆஷ்ரிதா.

அவள் பிம்பம் மறையும்வரை வெறித்துக்கொண்டிருந்த திரவியத்தை கண்ட அனேகன், அவள் தோளில் கைவைத்து,

“இன்னும் குழந்தையாவே இருக்கா இல்ல?” என கேட்டான்.

“அதனால தான் ப்ரோ நான் அவள் இவ்வளவு லவ் பண்ணுறேன்” – கண்கள் கலங்க கூறினான் திரவியம்.

“சீக்கிரமே உங்கள புரிஞ்சிப்பா திரு. நான் புரிய வைப்பேன். இது என்னோட ப்ராமிஸ். வருத்தப்படாதீங்க!” – அனேகன்.

பொழுது விடிந்தது. ஐ.சி.யூ. வாசலிலேயே காத்துக்கொண்டிருந்த அனேகனும் திரவியமும் நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தனர்.

“அந்த பொண்ணு ஷ்யாம் ஷ்யாம் –னு யாரையோ கேட்குது சிஸ்டர். அவங்கள கூட்டிட்டு வந்தவர் பேரு அனேகன். கூட ரெண்டு பேரு இருந்தாங்க. ஒருத்தர் திரவியம் இன்னொருத்தர் அவங்க அக்கானு நினைக்கிறேன். பேரு ஆஷ்ரிதா” என அனேகனது காதுகளில் விழ, திடுக்கிட்டு விழித்தான்.

அவனை தாண்டி இரண்டு நர்ஸ் சென்றுக்கொண்டிருக்க, அவர்களருகே ஓடிச்சென்ற அனேகன்,

“சிஸ்டர் எக்ஸ்க்யூஸ் மீ. என்ன சொன்னீங்க இப்போ? அம்மு கண்ணு முழிச்சிட்டாளா?” என கேட்டான்.

“ஆமா சார்! ஏதோ ஷ்யாம் –னு கேக்குறாங்க. உங்க பேரு அனேகன் தானே? அவங்களுக்கு ஷ்யாம் –னு யாரையாவது தெரியுமா?” என கேட்டார் அந்த நர்ஸ்.

“வாவ். தேங்க் யூ சிஸ்டர். தேங்க் யூ சோ மச். இட்ஸ் மீ. இதோ இப்பவே போய் பார்க்கிறேன்” என மீண்டும் ஐ.சி.யூ. –வை நோக்கி அனேகன் ஓட,

“ஹலோ ஹலோ சார். அப்படியெல்லாம் நீங்க உள்ள போகக்கூடாது. நான் முதல்ல இந்த விஷயத்தை டாக்டர்கிட்ட சொல்லணும். முன்னாடியே உங்ககிட்ட சொன்னது தெரிஞ்சா டாக்டர் திட்டுவாங்க” என அந்த நர்ஸ் அனேகனது பின்னோடு ஓடிக்கொண்டுவர, அதை காதில் வாங்காமல் ஓடிய அனேகன், தூங்கிக்கொண்டிருந்த திரவியத்தின் காலை நன்கு மிதித்துவிட்டு ஐ.சி.யூ. –வினுள் நுழைந்தான்.

கால் மிதிக்கப்பட்ட வலியில் “ஸ்ஸ்ஸ்…ஆஆஆ…” என கண் விழித்த திரவியம், பார்வை தெளிவாய் இல்லாததால் மீண்டும் தன் இமைகளை மூடி கசக்கிக் கொண்டிருக்க, ஓடி வந்த அந்த நர்ஸ் –ன் காலும் இடறப்பட்டது.

“சார். காலை மடக்கி வைக்க மாட்டீங்களா?” என அந்த நர்ஸ் கடிந்துக் கொண்டாள் திரவியத்திடம்.

“சாரி. சாரி. சாரி சிஸ்டர். தூங்கிட்டு இருந்தேன்” என எழுந்து நின்றான் திரவியம்.

இதற்குள் டாக்டர் சுந்தர் அங்கே வந்துவிட, “வாட் ஹேப்பன்ட்? வய் ஆர் யூ ஷெளட்டிங் அட் ஹிம்?” என கேட்டார் டாக்டர் சுந்தர்.

“டாக்டர். அந்த பேஷண்ட் முழிச்சிட்டாங்க. யாரோ ஷ்யாம் –னு கேட்டாங்க. உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ண வந்தேன். அதுக்குள்ள இவரோட ஃப்ரெண்ட் சொல்ல சொல்ல கேட்காம உள்ள போய்ட்டாரு” என பயத்தில் வத்தி வைத்தாள் அந்த நர்ஸ்.

“என்ன அம்மு முழிச்சிட்டாளா?” என சந்தோஷமாய் கேட்ட திரவியம், ஆஷ்ரிதாவை அழைத்துவர விரைந்தான்.

“நோ இஸ்யூஸ்” என்ற டாக்டர் சுந்தர் ஐ.சி.யூ. –விற்குள் நுழைந்தார்.

“என்ன டி நடக்குது இங்க? இந்த டாக்டர் திட்டுவாருனு பார்த்தா ஒன்னுமே சொல்லல? அந்த ஆளு பேரு அனேகன் தானே? அப்பறம் என்ன ஷ்யாம் நான்தான்னு சொல்லுறான்? அந்த பொண்ண நேத்து அட்மிட் பண்ணிட்டு, ஈவ்னிங் ஒருத்தர் கூட இல்லாம கிளம்பிப் போய்ட்டாங்க, தீடீர்னு நடுச்சாமத்துல மூனு பேரும் வர்றாங்க. என்னதான் நடக்குதோ?” என அந்த நர்ஸ் தன் அருகில் இருந்த இன்னொரு நர்ஸிடம் கூற,

“ஆமா டி. நானும் கவனிச்சிட்டுதான் இருக்கேன். ஆனா டாக்டர் –க்கு க்ளோஸ் –னு நினைக்குறேன். அட்மிட் பண்ணும்போது நான் ஐ.சி.யூ. –க்கு உள்ள அவர விடல. டாக்டர் வந்ததும் உள்ள கூட்டிட்டு வந்துட்டாரு. சைக்கியார்ட்டிஸ்ட்டாம்” என்றார் இன்னொரு நர்ஸ்.

“நமக்கு என்ன! நாம திட்டுவாங்கல! அதுவரை நல்லது. வா உள்ளே போகலாம்” என இரண்டு நர்ஸும் ஐ.சி.யூ. –விற்குள் சென்றனர்.

அந்த நர்ஸ்கள் பேசி முடித்து உள்ளே செல்லவும் திரவியம் ஆஷ்ரிதாவை அழைத்து வரவும் நேரம் சரியாக இருந்தது. தன் தங்கை கண் விழித்துக்கொண்டாள் எனும் சந்தோஷத்தில் ஓடோடிவந்தாள் ஆஷ்ரிதா. அங்கே,

“சகி! ஷ்யாம்… ஷ்யாம் வந்திருக்கேன் சகி. என்னை தெரியுதா?” என அம்ரிதாவின் கைப்பற்றி அனேகன் கேட்டுக்கொண்டிருக்க, தன் விழிகள் திறக்காமல் கண்ணின் ஓரமாய் கண்ணீர் வடிய உதட்டில் சிரிப்பை நிறைத்திருந்தாள் அம்ரிதா.

அதை கண்ட அனேகனின் இன்பத்தை அளவிட இயலாது. டாக்டர் சுந்தரை நோக்கி,

“டாக்டர், சகி சிரிக்கிறா! சிரிக்கிறா டாக்டர்” என்றான்.

அத்தனை நேரம் இவன் அனேகனா ஷ்யாமா எனும் சந்தேகத்தில் இருந்த இரண்டு நர்ஸ்களும் அவன் அம்ரிதாவை சகி என்று அழைப்பதில் குழம்பிப்போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பாவம் அவர்களது சந்தேகத்தை தீர்க்கும் ஆளோ நேரமோ இருக்கவில்லை.

“யஸ் அனேகன். யஸ்” என நிதானமாக அனேகனது தோளை தடவிக் கூறிய டாக்டர் சுந்தர் அம்ரிதாவின் அருகே வந்து அவளது உடல் நிலையை பரிசோதித்தார்.

“ஷீ இஸ் கெட்டிங் வெல் அனேகன். நோ வரீஸ். நர்ஸ், இவங்கள நார்மல் வார்ட் –க்கு ஷிப்ட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க” என கூறினார்.

“ஓகே டாக்டர்” என்ற இரண்டு நர்ஸ்களும் அங்கிருந்து வெளியேற யத்தனிக்கும் பொழுது உள்ளே நிற்கும் திரவியத்தையும் ஆஷ்ரிதாவையும் கண்டனர்.

“சார். என்ன இது? இப்படியெல்லாம் உள்ள வரக்கூடாது. அவங்கள இன்னும் கொஞ்சம் நேரத்துல ஷிப்ட் பண்ணிருவோம். அப்பறமா பாருங்க. இப்ப வெளியில வாங்க” என கூறி கையோடு இருவரையும் வெளியே அழைத்துவந்தனர்.

வெளியே வந்த ஆஷ்ரிதா திரவியத்திடம்,

“திரு! அம்மு எப்போ எழுந்தா? என்ன சொன்னா திரு? என்ன கேட்டாலா? நம்ம எல்லாரையும் அவளுக்கு தெரியுதுல? எதுவும் பிரச்சனை இல்லையே? வலிக்குதுனு சொன்னாளா எதுவும்?” என கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக்கொண்டே போனாள் ஆஷ்ரிதா.

“சில் அச்சு. சில். தெரியல. நானும் அம்முவ பார்க்கல. அந்த நர்ஸ் சொன்னத கேட்டதும் உன்ன கூட்டிட்டு போக வந்துட்டேன். அம்மு கண்ணு முழிச்சிட்டா. அவளுக்கு இனி ஒன்னும் ஆகாது. பயப்படாம இரு” – திரவியம்.

“ஆமா அவளுக்கு ஒன்னும் ஆகாது. என்ன விட்டுட்டு எப்படி அவ போவா? அதெல்லாம் போமாட்டா. நான் தூங்கமாட்டேன் –னு சொன்னேன். கேட்டீங்களா? இப்ப பாருங்க, அவ கண்ணு முழிக்கறப்ப என்னால அவ கூட இருக்க முடியாம போய்டுச்சு” என சிறு பிள்ளை போல கடிந்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.

“நீ முழிச்சிருந்தாலும் உன்ன உள்ள அலோ பண்ணியிருக்க மாட்டாங்க அச்சு. இன்னும் கொஞ்சம் நேரத்துல நார்மல் வார்ட் –க்கு வந்துடுவா. கொஞ்சம் பொறுமையா இரு” – திரவியம்.

“சரி சரி. நார்மல் வார்ட் –க்கு அவ வந்த்தும் சாப்பிட எதாவது கொடுக்கலாமா? பாவம் பசிக்கும்ல. நான் எதாவது வாங்கிட்டு வரட்டுமா? என்ன வாங்குறது?” கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு கேட்டாள் ஆஷ்ரிதா.

“இரு அச்சு. முதல்ல வார்ட் சேன்ஜ் பண்ணட்டும். டாக்டர்ஸ் சொல்லுவாங்க. க்கூல் மா” என அவளை நிதானப்படுத்திக் கொண்டிருந்தான் திரவியம்.

ஐ.சி.யூ.-வின் உள்ளே,

“டேக் கேர் அனேகன்” என கூறிவிட்டு டாக்டர் சுந்தர் வெளியேற, அம்ரிதாவின் தலையை வருடியபடி “என்னை பாரு சகி!” என்றான்.

காற்றில் மிதக்கும் பூவிதழ் போல அம்ரிதாவின் இமைகள் மெதுவாக ஆடி ஆடி திறந்தது. அனேகனது கண்ணீர் அவன் கன்னம் கடந்து அம்ரிதாவின் கன்னத்தில் வழியும் அவளது கண்ணீரில் விழுந்து சங்கமித்தது.

சங்கமித்தது அவர்களது கண்ணீர் மட்டுமல்ல. அவர்களது கண்களில் கலந்துள்ள இப்பிறவியின் காதலும், ஆழ்மனதில் நிறைந்துள்ள பூர்வ ஜென்ம பந்தமும் தான்.



(களவாடுவான்)
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 27 Final

பல தடைகளையும் தளர்வுகளையும் தாண்டி புத்துயிர் பெற்று நிற்கும் தங்கள் காதலை கண்ணீரால் பூஜித்துக் கொண்டிருந்தனர் அனேகனும் அம்ரிதாவும்.

“அ... அன்... அனேகா!” மென்மையான குரலில் அழைத்தாள் அம்ரிதா.

நீண்ட போராட்டங்களுக்கு பின் அவள் குரலில் தன் பெயரை கேட்ட அனேகனுக்கு உள்ளம் பனியை போல குளிர்ந்தது. புன்னகை மன்ன்னாய் சிரித்துக்கொண்டவன் தன் கண்களை துடைத்துக்கொண்டு,

“என் சகி எங்கே?” என கேட்டான்.

முத்து பல் தெரிய சிரித்த நங்கையோ “ஷ்யாம்!” என்றாள்.

இதை கேட்ட அனேகனுக்கு உலகையே வென்றுவிட்டதைப் போன்றதோர் சந்தோஷம். பூலோகம் கடந்து, மேலோகம் கடந்து, அண்டத்தை தாண்டி தன் சகியோடு தங்கள் காதலுக்கே உரிய தனி லோகத்தில் பிரவேசிக்க அவனது உள்ளம் துடித்தது.

“நாம ஜெயிச்சிட்டோன் சகி! உனக்கு ஒன்னுமில்ல. சந்தோஷமா வாழப்போறோம். வாழ்க்கை முழுக்க உன்ன என் கையில வச்சி தாங்கணும். எப்படி எப்படியெல்லாம் வாழணும்னு ஆசைப்பட்டோமோ அதவிட பல மடங்கு அதிக காதலோடு வாழப்போறோம்!” என்றான் அனேகன்.

அப்போது உள்ளே வந்த மூன்று நர்ஸ்களில் ஒருவர்,

“சார் கொஞ்சம் நேரம் வெளியில இருங்க ப்ளீஸ். அவங்கள் இப்ப ஷிஃப்ட் பண்ணிருவோம்” என்றார்.

அவரிடம் சரியென கூறிவிட்டு வெளியே வந்த அனேகன் கண்ணில் முதலில் பட்டது திரவியம் தான்.

“அச்சு எங்கே திரு?” என அவனிடம் கேட்டான் அனேகன்.

“அம்மு முழிச்சிட்டா –ல. மேடம் -க்கு கால் தரையில இல்ல. அவளுக்கு அத வாங்கவா இத வாங்கவானு பறந்துட்டு இருந்தா. வீட்டுக்கு போய் குளிச்சி ரெடி ஆகிட்டு அம்முவுக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வர சொல்லியிருக்கேன்” – திரவியம்.

“குட் திரு. நீங்க ஏதாவது சாப்பிடுறீங்களா? காஃபி?” – அனேகன்.

“இட்ஸ் ஓகே ப்ரோ. ஆமா ஏதோ முகத்துல ஒரு வித்தியாசம் தெரியுதே?” – அனேகனின் முகத்தை ஆராய்ந்தபடி கேட்டான் திரவியம்.

“சகி வந்துட்டால்ல! அதான்” – சிரித்தபடியே சொன்னான் அனேகன்.

“அம்மு கண்ணு முழிச்சப்ப தான் நான் உங்கள பார்த்தனே ப்ரோ. அதோட சேர்த்து இன்னும் ஏதோ ஒன்னு தெரியுதே!” – திரவியம்.

“அதான் சொன்னனே! சகி வந்துட்டானு!” – மந்திர புன்னகை சிந்தினான் அனேகன்.

“ப்ரோ!!! யூ மீன்…..” – ஊர்ஜிதப்படுத்த முனைந்தான் திரவியம்.

“யஸ் திரு! அம்ரிதாவுக்கு முழுசா குணமாகிடுச்சு. ஷ்யாம் யாருனு கேட்டது மட்டும் இல்ல. அவதான் சகினும் அவளுக்கு புரிஞ்சிடுச்சு. எங்களோட முன் ஜென்ம பந்தம் கூட!!” - புதுப்பொழிவுடன் இருந்த்து அனேகனின் முகம் மட்டுமல்ல மனமும்தான்.

“வாவ்… சூப்பர் ப்ரோ! அவங்க ஷ்யாம்னு கூப்பிடும்போது கூட நான் தூக்கத்துல தான் சொல்லிருப்பாங்கனு நினைச்சேன் ப்ரோ! ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!” – திரவியம்.

“ஒரு ஆக்சிடண்ட் –ல ஆரம்பிச்ச பிரச்சனை, ஒரு ஆக்சிடெண்ட்னாலையே முடிஞ்சிருக்கு. கெட்டதுலையும் ஒரு நல்லது” – அனேகன்.

“ஒய்ஜா போர்ட் –க்கு இவ்வளவு பவரா ப்ரோ?” – திரவியம் ஆச்சரியத்தோடு கேட்டான்.

“வாட்? ஹாஹா! ஒய்ஜா போர்ட் பவர் –ஆ?” – அனேகன்.

“என்ன ப்ரோ சிரிக்கிறீங்க? நேத்து நாம அவ்வளவு ரிஸ்க் எடுத்ததுனால தானே அம்மு சரியாகிருக்கா? ஐ மீன் ஒய்ஜா போர்ட் மூலமா தானே அர்ஜுன் –அ டீல் பண்ணோம்?” – திரவியம்.

“யூ ஆர் கரெக்ட் திரு! ஒய்ஜா போர்ட் வச்சி நாம ரிஸ்க் எடுத்ததுனாலதான் சரியாகிருக்கா! ஆனா சரியானது அம்மு இல்ல. அச்சு!” – அனேகன்.

“என்ன?? அச்சு –வா?” – திரவியம் அதிர்ச்சியடைந்தான்.

“ஆமா ப்ரோ! அர்ஜுன் –அ என்னால தனியா டீல் பண்ண முடியாதா? நான் முன்னாடியே அர்ஜுன்கிட்ட பேசி மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் –அ க்ளியர் பண்ணிட்டேன். ஒய்ஜா போர்ட் யூஸ் பண்ணது முழுக்க முழுக்க அச்சுவோட மனசுல அர்ஜுன் பத்தி இருக்கற பயத்த க்ளியர் பண்ணதான். அன்னைக்கு அர்ஜின்கிட்ட பேசப்போறதா நான் சும்மாதான் சொன்னேன். அர்ஜுன் வருவான்னு நான் நினைக்கல. நம்மளோட எண்ண அலைகள் பவர்ஃபுல் –ஆ இருந்ததாலதான் அன்னைக்கு அர்ஜுன் அங்க வந்தான். ஸ்ப்ரிட் கூட பேசுறதுல எவ்வளவு ரிஸ்க் இருக்கு தெரியுமா திரு? உயிருக்கே கூட ஆபத்தா முடியும். எல்லாம் தெரிஞ்சும், அச்சு அவ்வளவு பயந்தபோதும் நான் எதுக்கு அவள கம்பல் பண்ணி நேத்து உட்கார வைக்கணும்? எதுக்கு எக்ஸ்பீரியஸ் இல்லாத உங்கள கூப்பிட்டு வச்சு நான் அர்ஜுன் –அ கான்டேக்ட் பண்ணப்போறேன்?” – அனேகன்.

“என்ன ப்ரோ சொல்லுறீங்க? அப்படீன்னா நீங்க செஞ்சதுக்கு ரீசன் என்ன?” – திரவியம்.

“அம்முவுக்கு ஃபிசிக்கலாதான் ட்ரீட்மெண்ட் தேவைப்பட்டுச்சு. ஆனா அச்சுவுக்கு தான் மெண்டலி நிறைய ஸ்ட்ரென்த் தேவை இருந்தது. பேசிக்கலி அச்சு ரொம்ப பயந்த பொண்ணு. இருந்தும் அம்முவுக்காக அவ எவ்வளவோ கஷ்டங்கள் ஃபேஸ் பண்ணியிருக்கா. இதுக்கு அடுத்து பொன்னம்மாவோட இறப்பு, அச்சுவோட உடல்நல பிரச்சனை. எல்லாம் அடுத்து அடுத்து வெளியில வந்தது உனக்கே தெரியும் திரு. இதுல அர்ஜுன் அவளோட சப் கான்ஷியஸ் மைண்ட் –ல டேரக்ட் –ஆ வந்து காண்டேக்ட் பண்ணியிருக்கான். அவளுக்கு ஹிப்னாட்டிஷம் பண்ணும் பொழுது அவ மனசுல எவ்வளவு ஸ்ட்ரெஸ் வச்சிருக்கானு தெரிஞ்சது. அத எல்லாம் சரி பண்ண நான் யூஸ் பண்ண விஷயம் தான் அந்த ஒய்ஜா போர்ட். அர்ஜுன் மேல இருந்த பயம் இப்ப அவளுக்கு போய்டுச்சு தானே?” – அனேகன்.

“ஆமா ப்ரோ!” – திரவியம்.

“தேட்ஸ் வொய்! அவ கண்ணால பார்க்கலைனா கண்டிப்பா நம்பியிருக்க மாட்டா. கரெக்ட் –ஆ?” – அனேகன்.

பதில் சொல்லாமல் யோசித்தான் திரவியம்.

“என்ன திரு யோசிக்கிறீங்க? அச்சுகிட்ட போய், அர்ஜுனுக்கு நம்ம மேல கோவம் இல்ல. அவன்தான் அம்முவ காப்பாத்தி தரப்போறான். அடுத்த பிறவில வரப்போறான், இப்படியெல்லாம் சொன்னா அவ நம்புவாளா?” – அனேகன்.

“நம்ப மாட்டா ப்ரோ. ஆனா, அவ அவ்வளவு பயந்தாளே ப்ரோ. பயத்துல அவளுக்கு ஏதாவது ஆகிருந்தா?” – திரவியம்.

“ஹாஹா… என்ன ஆகும் திரு? எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். அம்முவுக்கு மூத்தவளா இருந்தாலும் பிறந்ததுல இருந்தே பயந்த பொண்ணா, அம்முவோட அரவணைப்பை சார்ந்தே இருந்த அச்சு, அம்முவுக்காக தனி ஆளா நின்னு என்னவெல்லாம் செஞ்சா? ஒய்ஜா போர்ட் ப்ராக்டிஸ் பண்ணும்போது பயந்தாள் தான். ஆனா எழுந்து ஓடலையே! அவளால எல்லாம் முடியும் திரு!” – அனேகன்.

“யூ ஆர் க்ரேட் அனேகன். எப்படி இந்தமாதிரி ஒரு ஷிட்டிவேஷன்லயும் பக்காவா யோசிக்கறீங்க? நான் கூட ஒரு நிமிஷம் யோசிச்சேன். அச்சு இவ்வளவு பயப்படுறாளே, இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா அப்படீன்னு. அன்னைக்கு என் கண்ணுக்கு நீங்க அம்முவ பத்தி மட்டும் யோசிக்கறதாதான் தோணுச்சு. ஆனா, அம்முவ இப்படி ஒரு நிலைமையில வச்சிட்டு நீங்க அச்சுக்காகதான் எல்லாம் பண்ணியிருக்கீங்கனு இப்பதான் புரியுது ப்ரோ!” – திரவியம்.

“காதல் வந்துட்டா அப்படிதான் ப்ரோ! தன் துணை -அ கஷ்டப்படுத்தற எல்லாரையும் எதிரியா பார்க்கத்தான் தோணும்!” – சிரித்துக்கொண்டான் அனேகன்.

“அய்யோ ப்ரோ!!” - திரவியம் ஸ்ருதியை கூட்ட,

“ஜஸ்ட் ஃபார் கிட்டிங் திரு! கம். காஃபி சாப்பிடலாம்” என அவனது தோள்களில் கைப்போட்டு கேண்டீனுக்கு அழைத்து வந்தான் அனேகன்.

இருவரும் காஃபி அருந்திக்கொண்டிருந்த பொழுது,

“ப்ரோ! நான் ஒன்னு கேட்டா பதில் சொல்லுவீங்களா?” – திரவியம்.

“கேளுங்க திரு!” – அனேகன்.

“அம்மு சரியாகிட்டா. அப்படீன்னா சீதாவோட குழந்தையா பிறக்கப்போறது….” – திரவியம்.

“அஃப் கோர்ஸ் அர்ஜுன்” – அனேகன்.

“அது எப்படி சாத்தியம் ப்ரோ!” – திரவியம்.

“க்யூரியாசிட்டியா திரு!” – அனேகன்.

“லைட் –ஆ!!” என சிரித்த திரவியம் மீண்டும் கேட்டான் “ப்ளீஸ் ப்ரோ! அத மட்டும் சொல்லுங்க! ஒய்ஜா போர்ட் யூஸ் பண்ண அன்னைக்கு நிஜமா அர்ஜுன் வந்ததும் எங்கள வெளிய அனுப்பிட்டீங்க. அவன்கிட்ட என்ன பேசினீங்க? என்ன நடந்தது?” என்று.

“சொன்னா புரியற விஷயம் இல்ல திரு! கண்ணால பார்த்து தெரிஞ்சிக்கோங்க!” – அனேகன்.

“வாவ்… ரியலி? சொல்ல மாட்டீங்கனு நினைச்சேன் ப்ரோ! எங்க காமிங்க எனக்கு!” – திரவியம் துள்ளி குதித்தான்.

“இப்பவே –வா?? அதுக்கான நேரம் வரும்போது நிச்சயம் காட்டுறேன்” – மர்ம புன்னகையோடு தன் காற்சாட்டையில் இருந்து கைபேசியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் அனேகன்.

“நேரம் வரும்போதா? அது எப்ப வந்து நான் எப்ப தெரிஞ்சிக்கறது!” – ரகசியத்தை அறியும் ஆர்வத்தில் இருந்தான் திரவியம்.

கைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே வந்த அனேகன் டாக்டர் பிரபாகரனுக்கு கால் செய்தான்.

“ஹலோ அனேகன். இஸ் தேர் எவ்ரிதிங் ஓகே? அம்ரிதா கண் முழிச்சிட்டாங்கனு டாக்டர் சுந்தர் சொன்னாரு” – டாக்டர் பிரபாகரன்.

“ஆமா டாக்டர். இன்னுமொரு ஹேப்பி நியூஸ். அம்ரிதா என்னோட சகியா மாறிட்டா” – புன்னகையோடு கூறினான் அனேகன்.

“ஓ… தேங்க் காட். தாட்ஸ் ரியலி அ க்ரேட் நியூஸ். காட் ப்ளெஸ் யூ அனேகன். உங்க சகி –ய ரொம்ப நல்லா பார்த்துக்கோங்க” – டாக்டர் பிரபாகரன்.

“உங்க ஹெல்ப் இல்லைனா எதுவுமே சாத்தியமில்ல டாக்டர். உங்களுக்கு எப்பவும் நான் தேங்க்ஃபுல் –ஆ இருப்பேன். பை டாக்டர்” என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் அனேகன்.

பேசிமுடித்துவிட்டு அனேகன் உள்ளே வரவும் அவனை தேடி எதிரே வந்துக் கொண்டிருந்தான் திரவியம்.

“ப்ரோ! டாக்டர் கூப்பிடுறாங்க” என்றான்.

“இதோ வர்றேன் திரு!” – அனேகன்.

அனேகன், திரவியம் இருவரும் டாக்டர் சுந்தரின் அறையை அடைந்தனர்.

“எக்ஸ்க்யூஸ் மீ டாக்டர்?” – அனேகன்.

“வாங்க அனேகன். உட்காருங்க!” – டாக்டர் சுந்தர்.

இருவரும் அமர்ந்ததும், வாசலை ஒருமுறை எட்டிப் பார்த்த டாக்டர் சுந்தர்,

“எங்கே ஆஷ்ரிதாவ காணோம். ஒரு நிமிஷம் கூட தங்கைய பிரிஞ்சி இருக்க மாட்டாங்களே!” என சிரித்துக் கொண்டே கேட்டார்.

“அம்முவுக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வர வீட்டுக்கு போய்ருக்கா டாக்டர்” என்றான் திரவியம்.

“ஓ… ஃபைன். அம்ரிதாவ ஷிஃப்ட் பண்ணியாச்சி அனேகன். நான் சொன்ன மாதிரி இன்னும் த்ரீ டேஸ்க்கு அப்பறம் அவங்க கால் –ல மைனர் ஆப்ரேஷன் இரண்டு பண்ணனும். அப்பறம் இங்கையே வச்சி பார்த்துக்கணும்னாலும் ஓகே, இல்ல வீட்டுக்கு கூட்டிட்டு போய் பார்த்துக்கறீங்கனாலும் ஓகே” – டாக்டர் சுந்தர்.

“ஷ்யூர் டாக்டர். தேங்க் யூ சோ மச். நாங்க இப்ப அம்மு –வ பார்க்கலாமா?” – அனேகன்.

“தாராளமா! எங்க மெடிசின் –அ விட உங்க காதலும், உங்க பேச்சும் தான் அம்ரிதா குணமடைய ரொம்ப வேலை செஞ்சிருக்கு” – டாக்டர் சுந்தர்.

“சைக்கியார்டிஸ்ட் ஆச்சே டாக்டர்” என கூறி அனேகனது தோளை தட்டி சிரித்துக்கொண்டான் திரவியம்.

அவனோடு டாக்டர் சுந்தரும் அனேகனும் சிரித்துக்கொள்ள, அவரிடமிருந்து விடைப்பெற்று அம்ரிதாவை காண வந்தனர் அனேகனும் திரவியமும்.

“இப்ப ஓகே –வா இருக்கியா பேபி?” – அனேகன்.

ஆம் என தலையசைத்துக்கொண்ட அம்ரிதா, அருகே இருந்த நாற்காலியை கைக்காட்டி இருவரையும் அமர சொன்னாள். பின்,

“அச்சு எங்கே?” என கேட்டாள்.

“உனக்கு ட்ரெஸ் எடுக்கதான் வீட்டுக்கு போய்ருக்கா!” என்று அனேகன் பதில் கூறவும் வாசல் வரை வந்துவிட்ட ஆஷ்ரிதா ‘நான் வந்துட்டேன்’ என சுட்டியாய் கூறி உள்ளே நுழைய எண்ணிய தருணம் அவள் காதுகளில் விழுந்தது அம்ரிதாவின் குரல்.

“அச்சு கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்லிட்டாளா?” – அம்ரிதா.

அம்ரிதா கேட்ட கேள்வியில், ஆஷ்ரிதா முகத்தில் இருந்த சுட்டித்தனமும் மகிழ்ச்சியும் காணாமல் போயிருந்தது. அனேகன் மற்றும் அம்ரிதாவின் குரல் மட்டுமே மாறி மாறி ஒளித்துக் கொண்டிருக்க, அவர்கள் இருவர் மட்டும்தான் அறைக்குள் இருக்கிறார்கள் என எண்ணி அமைதியாய் நின்று அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“அம்மு. இப்ப இது தேவையா? முதல்ல நீ குணமாகி வீட்டுக்கு வா. அப்பறம் பார்த்துக்கலாம் எல்லாம்” – அனேகன்.

“இதுவும் முக்கியம் தான் அனேகா. சொல்லு” – தன் உடல் வலியையும் பொருட்படுத்தாமல் முக்கி முணங்கி பேசிக்கொண்டிருந்தாள் அம்ரிதா.

எதர்ச்சையாக வாசலை திரும்பிப்பார்த்த அனேகன், அங்கு ஆஷ்ரிதாவின் துப்பட்டாவையும், தரையில் தெரியும் அவளது நிழலையும் கண்டுக்கொண்டான். அதை இவர்கள் இருவரிடமும் காட்டிய அனேகன், தற்பொழுது தான் மட்டும் பேசுவதாய் சைகை மூலமே தெரிவித்தான். எப்படியும் இதுவரை திரவியம் வாய் திறக்காததால் அவள் உள்ளே இருப்பதை ஆஷ்ரிதா யூகித்திருக்கமாட்டாள் என எண்ணிய அனேகன், திரவியத்தை அங்கிருக்கும் ஸ்க்ரீன்னின் பின்னால் மறைவாய் நிறுத்திவைத்துவிட்டு பேச்சைத் தொடர்ந்தான்.

“உன் அக்காவுக்கு அவன் மேல லவ் இருந்தாதானே! திரு எப்ப பார்த்தாலும் அச்சு அச்சுனு சொல்லிட்டு இருக்கான். அவ எவ்வளவோ எறிஞ்சி விழுந்தும் இந்த நிமிஷம் வரை அவள நினைச்சு தான் துடிக்கிறான். இதுல கொஞ்சம் துடிப்பாவது அவளுக்கு இருக்கா?” – அனேகன்.

அனேகன் பேசும் விதத்தில் அதிர்ந்த அம்ரிதா, “அனேகா! என்ன பேசுற!” என்றாள்.

“கீப் சைலன்ஸ் பேபி. நான் சொல்லுறதுதான் உண்மை. இல்லைனா இத்தனை நாள் அவன கஷ்டப்படுத்துவாளா? சரியான சேடிஸ்ட்!” என்று அனேகன் சொல்ல,

“ஆமா! நான் சேடிஸ்ட் தான்!” என ஆத்திரம் பொங்க உள்ளே வந்து நின்றாள் ஆஷ்ரிதா.

“அச்சு! நீ எப்போ வந்த?” – அம்ரிதா.

“எல்லாம் வர வேண்டிய நேரம் தான் வந்தேன். உங்கள நான் என்னவோனு நினைச்சிருந்தேன் அனேகன். என்ன நீங்க புரிஞ்சிக்கிட்டது இவ்வளவு தானா? உங்களுக்கு என்ன தெரியும் நான் திரு மேல வச்சிருக்கற லவ் பத்தி? அம்முவ ஹாஸ்பிடல் –ல அட்மிட் பண்ண உடனேயே நான் தேடினது அவனதான். எப்படி கால் பண்ணுறதுனு துடிச்சேன். உங்க ஃபோன் –ல லாக் எடுக்க முடியலைனும் தூக்கிப்போட்டு உடைச்சேன். ஒரு நர்ஸ் வந்து என்ன திட்டிட்டு கூட போனாங்க! அவன பார்க்காம அவன்கிட்ட சொல்ல முடியாம பைத்தியம் மாதிரி நடந்துக்கிட்டேன். என்ன பார்த்தா சேடிஸ்ட் மாதிரி தெரியுதா உங்களுக்கு?” – ஆஷ்ரிதா.

“அவன லவ் பண்ணுறன்னா எதுக்கு அச்சு இவ்வளவு கஷ்டப்படுத்துற அவன?” – அனேகன்.

“காலம் முழுக்க அவன் கஷ்டப்படக் கூடாதுனு தான் நான் வேணாம்னு சொன்னனே தவிர வேற எந்த காரணமும் கிடையாது. அவன் ஹாஸ்பிடல்க்கு வந்ததும் அவன ஓடி போய் அணைச்சிக்கிட்டேன். அதுக்கு அப்பறம் தான் எனக்கு புது தைரியமே வந்தது. நான் அவன அந்த அளவுக்கு லவ் பண்ணுறேன் அனேகன். அவன் வேற பொண்ண கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கட்டும். நான் காலம் முழுக்க அவன நினைச்சிட்டே வாழ்ந்திடுவேன்” – ஆஷ்ரிதா.

“உண்மையா லவ் பண்ணுற எந்த ஒரு பொண்ணாலையும் தான் ஆசைப்பட்டவன இன்னொருத்திக்கு விட்டு தர முடியாதே அச்சு” – அனேகன்.

“அனேகன் ப்ளீஸ்… என்ன கொல்லாதீங்க. என் காதல் உண்மை. ஐ லவ் திரு. நான் அவன கல்யாணம் பண்ணிக்க தான் ஆசைப்பட்டேன். என் காதல் உண்மை. ஐ லவ் திரு! ஐ ரியலி லவ் மை திரு” என காதை மூடிக்கொண்டு கத்தினாள் ஆஷ்ரிதா.

அவள் பேசியதை கேட்டு வெற்றி மகுடம் சூடியபடி நின்றிருந்த அனேகன் தனது கைகளை இருமுறை தட்டிவிட்டு “என்ன திரு? சந்தோஷமா?” என்கவும் திரையின் பின்னால் இருந்து இன்முகத்தோடு வெளியே வந்தான் திரவியம்.

திரவியத்தை அங்கு சற்றும் எதிர்பார்க்காத ஆஷ்ரிதா திடுக்கிட்டாள். அனேகனது திட்டம் வெற்றிக்கண்டதை எண்ணி, அம்ரிதா ஒரு சிரிப்பினை மட்டும் சிந்திவிட்டு அனேகனை நோக்கி சூப்பர் என சைகை காட்டினாள்.

கண்ணீரால் நிரம்பியிருந்த திரவியத்தின் கண்கள் தற்பொழுது தெளிவையும் சேர்த்திருப்பது தெரிந்தது ஆஷ்ரிதாவுக்கு. அவளை நோக்கி மெதுவாக நடந்துவந்த திரவியத்தை காண இயலாமல் தன் இமையோடு சேர்த்து தலையினையும் குடை சாய்த்தாள் ஆஷ்ரிதா.

அவளை நெருங்கியவன், அவளது வலது தோளை அழுந்தப் பற்றிக்கொண்டு தன் வலது கையால் அவள் தாடையை தொட்டு நிமிர்த்தினான்.

அழுகையை பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்த அவளது சிவந்த கண்களை தன் இதழ்களால் ஒற்றி எடுத்தவன் “இனி இந்த கண்ணு எதுக்காகவும் அழக்கூடாது அச்சு” என்றான்.

“நான் உனக்கு வேண்டாம் திரு” - மீண்டும் கூறினாள் ஆஷ்ரிதா.

இதை கேட்டதும் இளகி இருந்த திரவியத்தின் முகத்தில் இறுக்கம் கூடியது. கடுத்த பாவம் கொண்டு ஏதோ சொல்ல வந்தவன் சற்று நிதானித்து “உனக்கு என்ன தான் பிரச்சனை அச்சு?” என்றான்.

“என்னால… குழ…” சொல்ல வந்தவளை “ஷட் அப் அச்சு” என்று அதட்டி அமைதியாக்கிய திரவியம்,

“இது ஒரு மேட்டரே இல்லனு தான் நானும் அம்மாவும் மாறி மாறி சொல்லிட்டு இருக்கோம்” என்றான்.

கன்னியவளுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

“நான் உன் கண்ணுல பார்த்திருக்கேன் அச்சு. இன்னைக்கு இல்ல நேத்து இல்ல. அம்மு விஷயத்த நீ என்கிட்ட சொல்லுறதுக்கு முன்னாடியே. அந்த உரிமையில தான் நான் உனக்காக அவ்வளவு ஓடினேன். நீ சும்மா வாய் வார்த்தையில அன்னைக்கு கேட்ட, நான் இதெல்லாம் பண்ணுறதுக்கு என்ன உரிமை இருக்குனு. என்ன உரிமையில நான் செஞ்சேன்னு உன் மனசுக்கு தெரியும் தானே அச்சு? நாம ஒருத்தருக்கு ஒருத்தர் காதல சொல்லிக்கலைனா அது இல்லனு ஆகிடுமா? என்ன உரிமைனு ஒரு நிமிஷத்துல நீ எடுத்தெறிஞ்சு பேசும்போது எவ்வளவு வலிச்சுது தெரியுமா?” – உருக்கமாக கேட்டான் திரவியம்.

“எனக்கும் வலிச்சுது திரு. உன் அம்மா சொன்னாங்களே, என்ன கல்யாணம் பண்ணிக்கனு சொல்லும்போது ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் –னு நீ சொன்னதா. அது எனக்கு வலிச்சுது. அன்னைக்கு எல்லாம் சொல்லாத காதல், இன்னைக்கு எனக்கு இப்படி ஒரு குறை –னு தெரிஞ்சதும் சொன்னா அது அனுதாபம் தானே” – ஆஷ்ரிதா.

“அச்சு ப்ளீஸ்… மறுபடியும் அந்த வார்த்தைய சொல்லி என்ன கொல்லாத. முன்னாடி எனக்கான காதல நான் உன் கண்ணுல பார்த்திருக்கேன். அஃப்கோர்ஸ் நானும் உன்ன லவ் பண்ணேன். ஆனா நாம ரெண்டு பேரும் ஒருத்தர்க்கு ஒருத்தர் இத பத்தி பேசினதில்ல. பேசுற நிலைமையிலும் நீ இல்ல. என் அம்மா கேட்டப்ப நான் ஆமா –னு சொல்லியிருந்தா அம்முவோட பிரச்சனை எல்லாம் சொல்லவேண்டி வரும். அதனால தான் அன்னைக்கு அப்படி சொன்னேன். அப்பறம் ஒன்னு கேட்டியே, அன்னைக்கு எல்லாம் சொல்லாத காதல இன்னைக்கு எதுக்கு சொன்னேன் –னு? இத கேட்குறப்ப உனக்கே சிரிப்பு வரலையா அச்சு?” – திரவியம்.

அவன் என்ன கேட்கிறான் என்று புரியாமல் விழித்தாள் ஆஷ்ரிதா.

“என்ன முழிக்கற? கெட்டவனா இருந்தா உனக்கு உடம்புல இப்படி ஒரு பிரச்சனைனு தெரிஞ்சதும் நல்லவேளை முன்னாடியே லவ் –அ சொல்லல –னு கடவுளுக்கு கோடி குப்பிடு போட்டுட்டு ஓடிருப்பான் அச்சு. ஆனா நான் அப்படி பண்ணலையே. உன்ன பத்தின உண்மை தெரிஞ்சதுமே இனியும் நாட்கள கடத்தக்கூடாதுனு யோசிச்சி, நான் உன்னதான் கல்யாணம் பண்ண நினைச்சேன் –னு தானே சொன்னேன்?” என திரவியம் கேட்கவும் தான் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்கும் பொருட்டு சட்டென அவனது மார்பில் ஒட்டிக்கொண்டாள் பெண் அவள்.

அவளை தன் கைக்கொண்டு அணைத்தவன்,

“இதெல்லாம் நீயா புரிஞ்சிக்கணும் அச்சு. நானே என்ன பத்தி சொல்லுறதுலாம் நல்லாவா இருக்கு? இனி இப்படி ஒரு தர்ம சங்கடத்துக்கு என்ன ஆளாக்காத ப்ளீஸ். இந்த ஜென்மத்துல உன்ன தவிர வேற எந்த பொண்ணையும் நான் நினைச்சு கூட பார்க்க மாட்டேன்” என்றான்.

“சாரி” என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்துவிட்டு அணைப்பை இன்னும் இறுக்கினாள் ஆஷ்ரிதா.

“பொண்ணு சம்மதிச்சாச்சு போல” என்று கேட்டவாறு கலகலவென சிரித்தாள் அம்ரிதா.

அவளின் குரலில் சட்டென பிரிந்து நின்றனர் ஆஷ்ரிதாவும் திரவியமும். திரவியம் அசடு வழிய நின்றிருந்தான். ஆஷ்ரிதாவின் முகத்தை வெக்கம் சூழ்ந்துக்கொண்டது.

“அய்யோ… அக்கா… உன்ன இப்படி சிரிச்சிட்டே பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஓடி வா இங்க, எனக்கு ஒரு ஹக் கொடு” – தன் இரு கைகளையும் நீட்டி கேட்டாள் அம்ரிதா.

நின்ற இடத்தைவிட்டு அசையாமல் சிரித்தபடியே இருந்தாள் ஆஷ்ரிதா.

“அடி பாவி! என்ன அசையாம நிக்கற? அப்போ இனி திரு மாமாவுக்கு மட்டும்தான் ஹக் –ஆ? எனக்கு கிடையாதா?” – வேடிக்கையாய் அம்ரிதா கேட்க,

“அடியே வாலு” என ஓடி வந்து அம்ரிதாவை அணைத்து அவளது கன்னத்தில் அன்பின் சின்னமாய் ஒரு முத்தம் பதித்தாள் ஆஷ்ரிதா.

அனேகனை கட்டிக்கொண்ட திரவியம் “தேங்க்ஸ் ப்ரோ! சொன்னமாதிரியே செஞ்சிட்டீங்க” என்றான்.

“தேங்க்ஸ் –ஆ? நான் உனக்காக செஞ்சேன் –னு நினைச்சியா திரு. சீக்கிரம் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்பதான் நான் என் பேபி கூட டூயட் ஆட முடியும். அதுக்குதான் இவ்வளவும் பண்ணேன்” என சிரித்துக்கொண்டான் அனேகன்.

“கொஞ்சம் லேட் பண்ணிருந்தா அம்மு –வ கடத்திட்டே போய்ருப்பீங்க போலையே” – திரவியம்.

“அதுவும் நல்லாதான் இருந்துருக்கும். நீங்கதான் அந்த சீன் –க்கு இடம் தரலையே” என்று அனேகன் கூற நால்வரும் கட்டிடமே அதிரும் வண்ணம் சிரித்தனர்.

அந்நேரம் ஐ.சி.யூ. வார்டில் அம்ரிதாவை பார்த்துக்கொண்ட அதே நர்ஸ் உள்ளே வந்து,

“என்ன இப்படி சத்தம் போட்டுட்டு இருக்கீங்க. அமைதியா இருங்க. இது ஹாஸ்பிடல். இப்பதான் ஐ.சி.யூ. –ல இருந்து ஷிஃப்ட் பண்ணீயிருக்கோம் அவங்கள. நியாபகம் இருக்கட்டும்” என கடிந்துவிட்டு செல்ல, அந்த சில வினாடிகள் அவர்கள் அடக்கி வைத்திருந்த சிரிப்பு மீண்டும் பொத்துக்கொண்டு வந்தது அனைவருக்கும்.

“கருமம்… கருமம்… சரியான லூசு கூட்டமா இருக்கும் போல” என தன்னிடமே பேசியபடி வெளியே சென்றுவிட்டார் அந்த நர்ஸ்.

__________________________________
திரவியம் தெரிஞ்சிக்க ஆசப்படுற விஷயத்தை நீங்களும் தெரிஞ்சிக்க வேணாமா? எபிலாக் வரை காத்திருங்க நட்பூஸ்.
இந்த கதைக்கு தொடர்ந்து கமெண்ட் செஞ்சு என்ன உயிர்ப்பா வச்சிருந்த உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு எபிலாக் –ல… அதுக்காகவும் காத்திருங்க

 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்..

இதோ எபிலாக் வந்தாச்சு😍

நிறைய பேர் கதையை படிச்சிட்டு மட்டும் போய்டுறீங்க பா. உங்கள் கருத்துக்கள் என்னவோ அதை என்கிட்ட பகிர்ந்துக்கிட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும். நிறை குறை எதுவாக இருந்தாலும் சொல்லுங்க. அது என்னை மெருகேற்றிக்க உதவியா இருக்கும் மக்களே!



நான் சொன்னதுபோல இந்த கதைல ஆரம்பத்துல இருந்து இப்ப வரை என்னோட பயணிச்சு கருத்து சொல்லி என்னை உயிர்ப்பா வச்சிருந்தவங்களுக்கான சர்ப்ரைஸ் இருக்கு😍 என்ன சர்ப்ரைஸ்னு பார்க்குறீங்களா? நம்ம ஹீரோ ஹீரஃயினோட நீங்க எல்லாரும் பேசப்போறீங்க. உங்கள் எல்லோரையும் ஒரு கதாப்பாத்திரமாக்கி எபிலாக் -ல் இணைத்திருக்கிறேன். இந்த கதையை நான் எழுத உறுதுணையாய் இருந்த உங்கள் பெயர்கள் என்னாலும் இக்கதையோடு இருக்கவேண்டும் என்ற என் ஆசையில் செய்தது 😍 உங்களுக்கும் மகிழ்ச்சி தரும் என நம்புகிறேன். இனி அனேகன் இருக்கும் இடத்தில் நீங்களும் இருப்பீர்கள். சந்தோஷமா நட்பூஸ்..😍😍😍



கனவு – 28 எபிலாக்

ஆறு வருடங்களுக்கு பிறகு,

பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் காலை வேளையில் பறந்துக்கொண்டிருக்கும் வாகனங்களோடு வாகனமாய் வந்த வெள்ளை நிற டேக்சி ஒன்று டாக்டர் ரிச்சர்ட் –ன் வீட்டின் முன்னே நின்றது. அதில் இருந்து திமுக் என குதித்தாள் குட்டி தேவதை ஜஸ்வந்திகா.

காலை கதிரவன் தன் வேலையை முடித்து வீட்டிற்கு செல்லும் பொழுது இதமாய் பரப்பும் அந்த ரம்மியமான இருள் சூழும் நிறத்தை தன் மேனியில் அடர்த்தியாய் கொண்ட அந்த ஐந்து வயது தேவதைக்கு தங்க நிறத்தில் பட்டுப்பாவாடை உடுத்தியிருந்ததில் கோவில் கருவறையில் இருக்கும் தெய்வ சிலையை ஒத்திருந்தாள்.

“ஜஸ்வா குட்டி. மெதுவா இறங்கு டா!” என சொல்லிக்கொண்டே பின்னால் இறங்கினார் அவளது அப்பா.

தன் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டவர், வண்டியில் அம்ர்ந்திருந்த தன் மனைவியை மெதுவாக இறங்குமாறு கூறி கையை நீட்டினார். நிறைமாத கர்ப்பிணியான அப்பெண் தனது கணவனது கையை கெட்டியாய் பிடித்துக்கொண்டே இறங்கிட, மூவரும் வீட்டிற்குள் சென்றனர்.

“ஹலோ மிஸ்டர் துருவன். வெல்கம் வெல்கம். உங்களுக்காக தான் வெயிட்டிங்” என வரவேற்றார் டாக்டர் ரச்சர்ட்.

“சாரி சார். வைஃப் கிளம்ப கொஞ்சம் லேட் ஆகிருச்சு” – துருவன் மன்னிப்பு வேண்ட,

“ஒன்னும் பிரச்சனை இல்ல மிஸ்டர் துருவன். தங்கச்சி நீங்க உட்காருங்க. இதோ இந்த டிவி –ல உங்களுக்கு எல்லாமே தெரியும் சரிங்களா?” என்று அவளை அங்கிருந்த சோஃபாவில் அமரவைத்தவன் துருவனையும் அவளோடு அமர வைத்துவிட்டு,

“வாங்க ஜஸ்வா குட்டி!” என குட்டி பெண்ணை பார்த்து அழைத்தார்.

அவளோ,

“நான் வரமாட்டேன் போங்க! எனக்கு ஹாய் சொல்லவே இல்ல” என்று தன் மழலை மொழியில் அழகாய் சினந்துக்கொண்டாள்.

“அடடே… என் பட்டுக்குட்டிக்கு கோவமா? அங்கிள் சாரி! ப்ளீஸ்!” என தன் இருகாதுகளையும் பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்டார் டாக்டர் ரிச்சர்ட்.

“அவங்க அப்பா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டதால உங்கள அவகிட்ட மன்னிப்பு கேட்க வச்சிட்டாளே சுட்டி!” என ரிச்சர்ட் –ன் மனைவி ப்ளெஸ்ஸியும் அவர்களோடு இணைந்துக்கொண்டார்.

கோபித்துக்கொண்ட ஜஸ்வந்திகாவை சமாதானப்படுத்த ஒரு சாக்லேட்டும் முத்தமும் பரிசளித்த டாக்டர் ரிச்சர்ட், அவளை அழைத்துக்கொண்டு அந்த தனியறைக்கு சென்றார்.

அவர்கள் உள்ளே சென்ற சில நிமிடங்களில் வெளியறையில் இருந்த தொலைக்காட்சி செயலானது. அதில் வரும் காட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர் ஜஸ்வந்திகாவின் பெற்றோரும், ரிச்சர்ட் -ன் மனைவியும்.

“இப்ப உங்க மனசு ரொம்ப அமைதியா இருக்கு. ரிலக்ஸ். ரிலக்ஸ். இப்ப நீங்க என்ன பார்க்குறீங்க? அப்படியே சொல்லிட்டு வாங்க பார்ப்போம்” என ரிச்சர்ட் கேட்க, அவனுக்கு எதிரே அந்த சாய்வான நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஐந்து வயது குழந்தையோ அவனுக்கு பதில் கூறிக்கொண்டிருந்தது.

“நான்… நான் அம்மா கையில இருக்கேன்” – ஜஸ்வந்திகா.

“வெரி குட். உங்க பேரு என்ன மா? என்ன சொல்லி கூப்பிடுறாங்க?” – ரிச்சர்ட்.

“ஜஸ்வந்திகா”

“வெரி குட். இப்ப நீங்க ஜஸ்வந்திகா –வா இருக்கீங்க. அம்மா கையில குட்டி குழந்தையா இருக்கீங்க. இதுக்கு முன்னாடி என்னவா இருந்தீங்க? அது தெரியுதா உங்களுக்கு? எங்க என்கிட்ட சொல்லுங்க பார்ப்போம்” – ரிச்சர்ட்.

“உடம்பு கிடைக்கல எனக்கு!” – ஜஸ்வந்திகா.

“அப்படியா? அப்ப உடல் இல்லாம சுத்திட்டு இருக்கீங்களா? உங்களால் எல்லாரையும் பார்க்க முடியுதா?” – ரிச்சர்ட்.

“ம்ம்ம்… முடியுது. எனக்கு என்னோட அக்கா –வ ரொம்ப பிடிக்கும். அவ அடுத்த பிறவி எடுத்துட்டா. என்னால பிறக்க முடியல” – ஜஸ்வந்திகா.

“ஓ… அக்கா –னா ரொம்ப பிடிக்குமா? ஏன் மா உங்களால பிறக்க முடியல?” – ரிச்சர்ட்.

“நான் விஷம் குடிச்சி தற்கொலை பண்ணிக்கிட்டேன்” – ஜஸ்வந்திகா.

“சரி சரி… அதனால பிறக்க முடியாம இருந்தீங்களா?” – ரிச்சர்ட்.

“ஆமா!” – ஜஸ்வந்திகா.

“அப்ப உங்க பெயர் என்ன?” – ரிச்சர்ட்.

“அர்ஜுன்” – ஜஸ்வந்திகா.

“வெரி குட். அர்ஜுன் –ஆ உடம்பு இல்லாம அலைஞ்ச பிறகு எப்படி மா ஜஸ்வந்திகா –வா பிறந்தீங்க” – ரிச்சர்ட்.

“எனக்கு கட்டளை வந்துச்சு” – ஜஸ்வந்திகா.

“என்ன கட்டளை மா?” – ரிச்சர்ட்.

“என்னால என் அக்காவும் அவ கட்டிக்கப்போறவரும் இறந்துட்டாங்க. நான் செஞ்ச தப்ப புரிஞ்சிக்கிட்டேன். அதனால அவங்களோட கட்டளைய ஏற்றுதான் என் பிறப்பு இருக்கணும்னு நினைச்சிருந்தேன். செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தம் செய்ய நினைச்சேன்” – ஜஸ்வந்திகா.

“வெரி குட். கட்டளை கிடைச்சிதா மா?” – ரிச்சர்ட்.

“ஆமா. என்னால பிரிஞ்ச என் அக்காவும் மாமாவும் என்னோட அடுத்த பிறவில என்னாலையே சேருவாங்க. அதுக்கான கட்டளை தான் அது” – ஜஸ்வந்திகா.

“என்ன கட்டளை மா? கட்டளை யாரு கொடுத்தாங்க?” – ரிச்சர்ட்.

“என் அக்காவுக்கு பதிலா நான் போய் பிறக்கணும். அதுதான் அனேகனோட கட்டளை” – ஜஸ்வந்திகா.

“அனேகன் யாரு மா? அவருக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்?” – ரிச்சர்ட்.

“அனேகன் தான் ஷ்யாம். என் அக்கா சகிய கட்டிக்க இருந்தவர்” – ஜஸ்வந்திகா.

“ஓ… சரி மா. இப்ப அப்படியே மறுபடியும் ஜஸ்வந்திகா –வா நீங்க வர்றீங்க. இப்ப உள்ள நினைவுகள் எல்லாம் வந்துக்கிட்டே இருக்கட்டும். அர்ஜுன் நினைவுகள் எல்லாம் அப்படியே மறந்துருச்சு. ஜஸ்வந்திகா வாங்க. வாங்க. வெரி குட்” என கூறி ஹிப்னாட்டிசத்தில் இருந்து அவளை விழிக்க வைத்தார் டாக்டர் ரிச்சர்ட்.

இதை தொலைக்காட்சி திரையில் பார்த்துக்கொண்டிருந்த துருவனும் அவனது மனைவி சீதாவும் கண்கள் விரிந்தபடி அமர்ந்திருந்தனர்.

அவர்களது ஆச்சரியத்திற்கு சிறிதும் குறைவின்றி தனது கண்களும் விரிய அந்த கல்யாண மண்டபத்தின் மணமகன் அறையில் அமர்ந்திருந்தான் திரவியம்.

அப்பொழுது மடிகணினியை அணைத்த அனேகன், “என்ன திரு? ரகசியம் தெரிஞ்சதா?” என கேட்டான்.

“என்ன ப்ரோ பண்ணி வச்சிருக்கீங்க? நிஜமாவே நீங்க மனுஷன் தானா?” – திரவியம்.

“ஹாஹாஹா” – அனேகன்.

“அட சிரிக்காதீங்க ப்ரோ. மரியாதையா தெளிவா சொல்லுங்க சொல்லிட்டேன். அவன் அவன் பீதியில இருக்கான். சிரிச்சு சிரிச்சு கடுப்பேத்திக்கிட்டு” – திரவியம்.

“க்கூல் மேன். சில ஆத்மாக்களுக்கு பிறக்க விருப்பம் இல்லைனாலும் கட்டளையின் பெயருல பூமியில ஜனனம் ஆகும். அந்த ஃபார்முலா யூஸ் பண்ணிதான் அர்ஜுன்கிட்ட ரெக்வஸ்ட் கொடுத்தேன். அர்ஜுன் தன்னோட ஜனன விவரத்தை, அதாவது எந்த மாதம் சீதாவோட கருவுக்குள்ள அவன் வரப்போறான்னு தான் ஒய்ஜா போர்ட் ப்ராக்டீஸ் பண்ண அன்னைக்கு என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டு போனான்.” – அனேகன்.

“ஏதோ ஃபேஸ் புக் –ல ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்த மாதிரில சொல்லுறீங்க! இது பேய் லுக்கு ப்ரோ!!” – என விழிகளை உருட்டினான் திரவியம்.

மீண்டும் வயிறு குழுங்க சிரித்தான் அனேகன். அப்பொழுது கதவு உடையும்படி திறந்துக்கொண்டு வந்த அம்ரிதா,

“ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணுறீங்க? இன்னும் நீ வேஷ்டி மாத்தலையா அனேகா!” என கேட்டாள்.

“ஹேய் அம்மு. நீ கல்யாண பொண்ணு. இப்படியெல்லாம் அங்கேயும் இங்கேயும் ஓடக்கூடாது” – திரவியம்.

“என்ன ஓட வைக்க கூடாதுனு மாப்பிள்ளை சார்கிட்ட சொல்லுங்க” – அம்ரிதா.

“சாரி பேபி. நான் மறந்தே போய்ட்டேன். உன்னோட ப்ரெண்ட்ஸ் –க்கு இண்ட்ரோ கொடுக்கறதா சொல்லியிருந்தே இல்லயா?! இரு இரு வேஷ்டி மாத்திட்டு வர்றேன்” – அனேகன்.

“ம்ம்ம்… வெயிட் பண்ணுறேன். சீக்கிரம்” என தன் கைகளை கட்டிக்கொண்டு அங்கேயே நின்றாள் அம்ரிதா.

“சரி பேபி! நீ போ. நான் மாத்திட்டு வர்றேன்!” – அனேகன்.

“இல்ல இல்ல. நான் போனா மறுபடியும் தோஸ்த் ரெண்டுபேரும் டாக்டைம் –அ ஸ்டார்ட் பண்ணிடுவீங்க! கையோட உன்ன கூட்டிட்டுதான் போவேன். வா” – அம்ரிதா.

“அம்மு!” – அதிர்ந்தான் திரவியம்.

“என்ன திரு? பயப்படாத உன்ன மாத்த சொல்லமாட்டேன். ம்ம்.. சீக்கிரம் அனேகா! எல்லாரும் வெயிட் பண்ணுறாங்க!” – அவசரித்தாள் அம்ரிதா.

“ஹேய் என்ன டி! அடெம் டீசிங் –ஆ?! நீ இங்க நின்னா நான் எப்படி மாத்துவேன். நீ போ நான் உடனே வர்றேன்” – அனேகன்.

“அதெல்லாம் முடியாது. நீ மாத்து” – பற்கள் தெரியாமல் அடக்கி சிரித்தாள் அம்ரிதா. அவளது சிரிப்பில் திரவியமும் இணைந்துக்கொள்ள,

“திரு! நீங்க ஏன் சிரிக்கிறீங்க?” – பாவமாய் கேட்டான் அனேகன்.

“இல்ல ப்ரோ… நீங்கதான் எங்க எல்லாரையும் மண்டைய பிச்சிக்க வைப்பீங்க. உங்களையும் மண்டைய பிச்சிக்க வைக்க ஒரு ஆளு இருக்குனு நினைக்கறப்ப,அந்த கண்கொள்ளா காட்சியை என் கண்ணு முன்ன பாக்குறப்ப….. அப்பப்பா… பேரானந்தமா இருக்கு ப்ரோ!” – வாய்விட்டு சிரித்து ஹய் ஃபை அடித்துக்கொண்டனர் திரவியமும் அம்ரிதாவும்.

“படுபாவிகளா?! பலி வாங்குற நேரமா இது?” – அனேகன்.

“அட சீக்கிரம் ப்ரோ! அம்மு எம்புட்டு நேரமா காத்திருக்கு?!” என திரவியம் கூற,

“திரு! இங்கதான் இருக்கீங்களா! இந்தாங்க உங்க பையன். கொஞ்சம் நேரம் சமாளிங்க. என்ன வேலை செய்யவே விடமாட்டேங்கறான்” என அழுதுக்கொண்டிருக்கும் குழந்தையை அவன் கையில் கொடுத்துவிட்டு சென்றாள் ஆஷ்ரிதா.

தத்துப்பிள்ளையாயினும் பெற்றப்பிள்ளையாகவே பாராட்டி சீராட்டி வளர்க்கும் தன் மகனிற்கு அர்ஜுன் என பெயரிட்டிருந்தனர் திரவியம் தம்பதியினர். அவனது அழுகையை அடக்கி சமாதானப்படுத்திக் கொண்டே வெளியே வந்தான் திரவியம். திரவியத்தின் தந்தையுள்ளத்தை ரசித்தபடியே நின்றிருந்த அம்ரிதாவிடம்,

“அடுத்த வருஷம் நானும் இப்படிதானே நம்ம குழந்தைய சமாதானப்படுத்திட்டு இருப்பேன்?” என கேட்டான் அனேகன்.

இதை கேட்டு புதுப்பெண் அவளுக்கு வெட்கம் பூத்திட, சிவந்துபோய் நின்றிருந்தாள் அம்ரிதா.

“அதோ! அச்சு உன்ன கூப்பிடுறா பாரு!” என அனேகன் கூற,

“அப்படியா?” என அறையின் வெளியே வந்து பார்த்துவிட்டு “இல்லையே அனேகா” என்றாள் பெண்.

வேகமாக ஓடிவந்த அனேகன், தன் அறைகதைவை பூட்டி உள்ளே தாழிட்டுக் கொண்டவன், “இதோ ஐந்து நிமிஷத்துல வேஷ்டி மாத்திட்டு வந்திடுறேன் பேபி” என உள்ளிருந்து கூவினான்.

அவன் கதவை மூடுகையில் “டேய் டேய்…” என கதவை தட்டிய அம்ரிதா, “கிள்ளாடி டா நீ!” என சிரித்துக்கொண்டு வாசலிலேயே அவனுக்காக காத்திருந்தாள்.

கதவை மூடியவன் டாக்டர் முதல் வேலையாக டாக்டர் ரிச்சட் –க்கு அழைப்பு கொடுத்தான்.

“ஹலோ அனேகன். நாங்க கிளம்பிட்டோம். அங்க தான் வந்துட்டு இருக்கோம்” – ரிச்சர்ட்.

“சீக்கிரம் வாங்க ரிச்சர்ட். துருவன் ஃபேமிலி ஓகே தானே?” – அனேகன்.

“தே ஆர் ரியலிங் ஃபீலிங் தேங்க்ஃபுல் ஃபார் யூ! உங்க சுயநலத்துக்காக மட்டும் யோசிக்காம, சீதாவுக்கு கிடைக்க இருக்கற குழந்தை பாக்கியம் இல்லாம போய்டக்கூடாதுனு நீங்க யோசிச்ச அந்த ஒரு நொடிக்காகவே உங்களுக்கு கோடானு கோடி நன்றி சொல்லணும்னு துருவன் சொன்னாரு. அவங்க ஃபேமிலியும் என்னோடதான் உங்க கல்யாணத்துக்கு வர்றாங்க. ரொம்ப சந்தோஷமா வர்றாங்க!” – ரிச்சர்ட்.

முறுவலித்த அனேகன், “தேங்கஸ் ரிச்சர்ட். என் கல்யாணத்துக்காக அமெரிக்காவுல இருந்து வந்த உங்களுக்கு வேலை கொடுத்துட்டேன்” – அனேகன்.

“ஹே மேன்! இதுல என்ன இருக்கு. இருங்க ப்ளெஸ்ஸி உங்ககிட்ட பேசணுமாம்” என அலைபேசியை தன் மனைவியிடம் கொடுத்தார் ரிச்சர்ட்.

“ட்யூட்… உங்கள பார்க்க வந்துட்டே இருக்கோம். நேர்ல விடிய விடிய பேசலாம். இப்ப போய் ரெடி ஆகுங்க. ஏற்கனவே அம்முவோட ஆப்ரேஷன் காரணமா கல்யாணம் ஒரு வருஷம் தள்ளி போச்சு. அடுத்து அச்சுவுக்குதான் முதல்ல கல்யாணம் பண்ணணும்னு ரெண்டு வருஷம் போச்சு. அப்பறம் கொஞ்சம் நாள் ஜாலியா லவ் பண்ணி லவ்வர்ஸ் எக்ஸ்பீரியஸ் –அ அனுபவிச்சிக்கிறோம்னு மூனு வருஷத்த கடத்தி அம்மு மேடம் எக்ஸ்ட்ரா ஒரு டிகிரியும் வாங்கிட்டாங்க. இப்படியே ஆறு வருஷம் கடந்து இன்னைக்கு கல்யாணத்துல வந்து நிக்குறீங்க. இப்பவும் இப்படி ஃபோன் பேசிட்டே இருந்தீங்க அம்மு கடுப்பாகிறப்போறா” – ப்ளெஸ்ஸி.

“அய்யய்யோ! ஆமா ட்யூட். அவ வெளியில தான் நிக்கறா. ஐந்து நிமிஷத்துல வர்றேன் –னு சொன்னேன். நீங்க வாங்க. நேர்ல பேசிக்கலாம்” என வேகமாய் அழைப்பை துண்டித்த அனேகன் தான் கூறியதுபோல ஐந்து நிமிடத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை தோரணையில் வெளியே வந்தான். அவனை பார்த்து,

“செமயா இருக்க அனேகா!” என்ற அம்ரிதா, அவனது கைக்குள் தன் கையை வளைத்து பிடித்துக்கொண்டு தனது நண்பர்களிடத்தில் அழைத்துச் சென்றாள்.

இருவரும் ஜோடியாக வருவதைக் கண்ட ஸ்ரீதேவி (Sri Navee),

“அடடே! அருமையான ஜோடி பொருத்தம்” என கூறி தூரத்தில் இருந்தே சொடுக்கிட்டு திருஷ்டி கழித்தார்.

அவர்களது அருகில் வந்ததும், “என்ன ஸ்ரீ அக்கா, என் அனேகன் எப்படி இருக்கான்?” என கேட்டாள் அம்ரிதா.

“வாண்டு… புருஷன பேரு சொல்லுற” என அம்ரிதாவின் தலையில் கொட்டு வைக்க செல்வதுபோல அவளது தலையை வருடிவிட்டு “சந்தோஷமா இரு செல்லம்” என்றார் ஸ்ரீதேவி.

அதற்கு சிரித்துக்கொண்டே “ஹேப்பி ஸ்ரீ அக்கா” என்று கூறிய அம்ரிதா, அனேகனை நோக்கி,

“அனேகா! இதுதான் ஸ்ரீ அக்கா. உன்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கேனே?” என கூற அனேகனோ அவருக்கு தன் வணக்கத்தை புன்னகையோடு தெரிவித்தான்.

“இது பானுமதி அம்மா (Banumathi Jeyaraman). எப்பவும் என்னை டியர்னு தான் கூப்பிடுவாங்க” என்று அம்ரிதா கூற அவருக்கும் இன்முகமாய் வணக்கம் கூறினான் அனேகன்.

“இது கலை விஷ்வா ப்ரோ! (Kalai Vishwa) என்னோட காலேஜ் டேஸ் –ல எனக்கு ரொம்ப சப்போர்ட் –ஆ இருந்த என்னோட சீனியர்” என அவரை அறிமுகப்படுத்தினாள் அம்ரிதா.

“கங்ராட்ஸ் ப்ரோ! என் தங்கச்சிய நல்லா பார்த்துக்கோங்க!” என அனேகனுக்கு கைக்கொடுத்தான் கலை விஷ்வா.

“கண்டிப்பா ப்ரோ!” என்ற அனேகன், அவருக்கு அடுத்து நிற்கும் ஷக்தியை பார்த்து,

“இவங்க ஷக்தி (Shakthi) தானே?!” என யூகிக்க

“அட என்ன உங்களுக்கு தெரியுமா அண்ணா?” என தன்னை ஊர்ஜிதப்படுத்தினாள் ஷக்தி.

“ஓ… நல்லா தெரியுமே! அம்முவோட மொபைல் –ல உங்க போட்டோ பார்த்தேன்! அச்சுவோட பெஸ்ட் ப்ரெண்டாமே நீங்க. அச்சு திருவ கல்யாணம் பண்ண மாட்டேங்கறனு சொல்லவும் அவளுக்கு மிரட்டல் எல்லாம் கொடுத்ததா கேள்வி பட்டேன்!?” என கண்ணடித்தான் அனேகன்.

“இப்ப என்னை பார்த்து நீங்க கண் அடிக்கறத கூட அம்முகிட்ட போட்டுக் கொடுப்பேன் ப்ரோ” என கூறி கல கலவென சிரித்தாள் ஷக்தி.

“ஆஹா!!! ஒன்னுகூடிட்டாங்கயா!!” என அனேகன் இழுக்க,

“ஹாய் டாக்டர், நான் ஷானிஃப் (shaniff). ஹேப்பி மேரிட் லைஃப்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஷானிஃபிடம் கைக்குழுக்கி”பேர் சொல்லியே கூப்பிடுங்க. வீ ஆர் ப்ரெண்ட்ஸ் க்னோ” என்றான் அனேகன்.

“இதுதான் அனேகன்! எந்த ஈகோவும் கிடையாது. எப்படி நம்மாளு?” என்ற அம்ரிதா, தன் தோழி சசியை (Sasi) நோக்கி,

“சசி… சப்பைர் (Sapphire) எங்கே?” என கேட்டகவும்,

“இதோ வந்துட்டேன் –ல” என்று கூறி ஒரு பூங்கொத்தை அனேகனது கையில் கொடுத்துவிட்டு “இதுதான நம்ம ஹீரோ சார்? யூ ஆர் க்ரேட்டு –ங்க… அம்மு உங்கள பத்தி நிறைய சொல்லியிருக்கா” என்றார்.

பூங்கொத்தை வாங்கிக்கொண்ட அனேகன், “தேங்க் யூ சோ மச் யா” என்றான்.

“ப்ரோ! நாம எல்லாரும் உட்கார்ந்து பேசலாமா? மத்த ப்ரெண்ட்ஸ் வர்றதுக்கு எப்படியும் ஒரு பதினைந்து நிமிஷம் ஆகும்” என்றான் கலை விஷ்வா.

“அடேங்கப்பா! பேபி இன்னும் உன் லிஸ்ட் முடியலையா? குட்டி குட்டி வாண்டுகள் –ல ஆரம்பிச்சு, உன் வயசு பசங்க, அம்மா வயசுல இருக்கறவங்கனு தொடர்ந்து வயசுல மூத்த பாட்டிவரை ப்ரெண்ட்ஸ் பிடிச்சிருக்க?!” என அம்ரிதாவை ஆச்சரியமாய் பார்த்தான் அனேகன்.

“இந்த தேவதைய பிடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா?” என கேட்டவாறு அங்கு வந்த சுகா அம்மா (Suga Librarian) அங்கு இருந்த அனைவருக்கும் பழரசம் கொடுத்தார்.

“இது சுகா அம்மா. நாங்க ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் –காக ஃப்ரீ லைப்பர்ரி ஒன்னு எங்க வீட்டு காம்ப்பவுண்ட்லையே வச்சிருக்கோம். அதுல சுகா அம்மா தான் லைப்ரரியன்” என அனேகன் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான்.

அவருக்கு அருகே இருந்த சித்ரா (Chitra Balaji), நான் சித்ரா. அனேகன் எனக்கு தம்பி மாதிரி. குழந்தைகளோட குழந்தைகளா நானும் தினமும் லைப்ரரில புக்ஸ் படிப்பேன். புக்ஸ் இல்லைனா என் உலகமே நின்னுடும்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அப்போது அங்கே வந்த கவிதா (கவிதா சுப்பரமணி) “கண்ணுகளா, அய்யர் இப்ப வந்திடுவாரு. தயாராகுங்க பா. அப்பறமா உட்கார்ந்து பேசலாம். சரியா” என கல்யாண தம்பதிகளான அனேகனிடமும் அச்சுவிடமும் கூறிவிட்டு செல்பேசியில் பேசியவாரே அடுத்த வேலையை கவனிக்க சென்றுக்கொண்டிருந்தார்.

அவரது வார்த்தைக்கு பணிந்த அனேகனும் அம்ரிதாவும் தன் நண்பர்களிடம் சிறு புன்னகையை சிந்திவிட்டு, மங்கல சடங்குகளுக்கு தயாராக புறப்பட்டனர்.

அந்த நட்பு கூட்டத்தில் இருந்து அலைபேசியில் பேசியவாரே வெளியே வந்துக்கொண்டிருந்த கவிதா, அவருக்கு எதிரே வந்துக்கொண்டிருந்த பத்மா மோகன்(Padma Mohan) மற்றும் செல்வி ஈசன்(Selviesan) ஆகியோரோடு நேருக்கு நேர் மோதிக்கொண்டார். அதில் பத்மாவின் கையில் இருந்த பூங்கொத்து காற்றில் பறந்து சென்று தம்பதிகளின் மீது விழுந்து அவர்களை ஆசிர்வதித்தது.

எதிரே வந்தவரை முட்டிக்கொண்ட கவிதா பதறிப்போய் “அடடே! சாரி மா. சாரி மா. வலிக்குதா. பூங்கொத்த தட்டிவிட்டுடேனா?” என கேட்க, அவரது முதுகில் கைவைத்த கலை (Art Pearl) “அது சரியான இடத்துக்கு தான் போய் சேர்ந்திருக்கு கவிதா அம்மா. கொஞ்சம் அங்க பாருங்க” என பூக்களின் அபிஷேகத்தில் மூழ்கி நிற்கும் அனேகனையும் அம்ரிதாவையும் காட்டி சிரித்தாள்.

இவ்வாறு திரும்பும் இடமெல்லாம் புன்னகை வண்ணமையாய் உணர்வுகளின் சின்னமாய் காட்சியளித்தது அந்த திருமண மண்டபம்.

நல்ல நேரத்தோடு அய்யரும் வந்துவிட, திருமணத்திற்கு முன்பான சடங்குகள் அனைத்தும் நடந்தேறியதும், அக்னிக்கு முன்பாக அம்ர்ந்திருக்கும் அனேகனுக்கு அருகே அம்ரிதாவை அமர வைத்தாள் ஆஷ்ரிதா.

“அச்சு. இந்திரா எங்கே?” – அம்ரிதா.

“இங்க தானே இருந்தா??” என தேடிய ஆஷ்ரிதா, முன்வரிசையில் அவளைக் கண்டுக்கொண்டு “ஆங்… அதோ அங்க இருக்கா பாரு!” என கூறினாள்.

மணமேடையில் இருந்த அம்ரிதா கை சைகை காட்டி இந்திராவை மேடைக்கு அழைக்க, அனேகனது அம்மாவோ “ அச்சு. யாரு மா அந்த பொண்ணு?” என கேட்டார்.

“அவங்க எங்க ஸ்கூல் –ல வர்க் பண்ணுறாங்க மா. நானும் அச்சுவும் ப்ரொஃபெஷ்னலா எந்த ஒரு விஷயத்தையும் அவங்கிட்ட டிஸ்கஸ் பண்ணிதான் செய்வோம். ரொம்ப நல்ல கேரக்டர். எங்களுக்கு க்ளோஸ் டு ஹார்ட் –னு சொல்லலாம்” என்றாள் ஆஷ்ரிதா.

தன் இன்முகம் காட்டி மேடையேறிய இந்திராவை தன் அக்காவிற்கு அருகேயே நிற்கவேண்டுமென பணித்தாள் அம்ரிதா. அவளின் அன்பை மெய்ச்சும் பார்வை ஒன்றை பரிமாறிய இந்திராவின் முன் ஒரு தாம்புலம் நீட்டப்பட்டது.

அதில் மஞ்சள் பூசிய முழு தேங்காயின் மேல் மங்களாமாய் வீற்றிருந்த்து தங்க மாங்கள்யம். அதன் அருகே இருந்த பூவிதழ்களை எடுத்துக்கொண்டவள் அய்யரின் “கெட்டி மேளம் கெட்டி மேளம்” எனும் சத்ததிற்காக காத்திருக்க, அந்த ஒளியும் கிடைக்கப்பெற்றது.

அந்நேரம் சரியாக உள்ளே நுழைந்த ரிச்சர்ட் மற்றும் துருவனின் குடும்பத்தினர் மண்டபத்தில் கூடியிருந்த அனைவருடனும் சேர்ந்து தங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் அந்த அர்ச்சதை பூதவிதழ்கள் மூலம் மணமக்களிடம் அனுப்பி வைக்க, முன்ஜென்மத்தில் தவறவிட்ட பந்தத்தை அந்த மஞ்சள் கயிற்றினால் இறுக பிணைத்துக் கட்டினான் அனேகன்.

தனது கழுத்தில் தன்னவனுக்கான பெண் எனும் சாட்சியை கண்டு பூரித்து கண்ணீர் சிந்திய அம்ரிதா, நிமிர்ந்து அனேகனை காண, அவனோ அவளை கண்களாலே காதல் புறட்டியடிக்க அணைத்துக் கொண்டான்.

ஜென்மங்கள் கடந்து இன்னல்கள் களைந்து வென்ற அவர்களது புன்னிய காதலால் தங்கள் பிறவிப்பயனை அடைந்தனர் அனேகனும் அம்ரிதாவும். இனி அவர்களது வாழ்வில் எல்லாம் சுவர்க்கமே!

சுபம்
 

Priyamurali

New member
Messages
9
Reaction score
7
Points
3
கதை ரொம்ப அருமை. ஆரம்பத்தில் இருந்தே தேடல் இருந்தது அது இனிதே முடிவடைந்தது. முன்ஜென்ம ஞாபகம் பின் ஜென்ம ஞாபகம் நம்பலாமா?
 
Top Bottom