Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 21
லிக்யூட் ரிபிள் காலியாக இருப்பதை பார்த்து விட்டு வெளியே வந்த விக்னேஷ் தன் செல்போனை எடுத்து இன்ஸ்பெக்டர் பொன்ராஜை அழைத்தான்.
இரவு ரோந்து பணியில் பிசியாக இருந்த பொன்ராஜ் போனை எடுத்து " என்ன இந்த நேரத்துல கூப்பிடறீங்க?" என்றார் குழப்பத்துடன் .
"ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?" என்றான் விக்னேஷ்.
"சொல்லுங்கள். அவசரமான விசயம்னு தானே அர்த்த ராத்திரில கூப்பிட்டு இருக்கீங்க?”
" செத்துப் போன ராஜே சோட வீட்டுல கொசு ரீபிள் காலியா இருக்கான்னு பாத்து சொல்ல முடியுமா?”
" பிரச்சனையில்லை. பக்கத்து தெரு தான். பாத்துட்டு உடனே கூப்பிடுறேன்.”
"தாங்க்ஸ் " என்று போனை அணைத்து விட்டு விக்னேஷ் வெளியே வந்த போது அருண் கையில் ஒரு செல் போனுடன் நின்று கொண்டிருந்தான்.
" உங்கிட்ட ஏது டா போனு!” என்றான் விக்னேஷ்
" என்னுது இல்ல பாஸ்.தலைவரோடது. நீங்க உள்ளே போனதும் இவரு கிட்ட பேசினேன். மெசேஜ் வருகிற சத்தம் கேட்டுச்சு. டவுட்டோ ட பாக்கெட்ட செக் பண்ணா உள்ளே செல்போன் .”
"பைத்தியக்காரன் பாக்கெட்டுல செல்போன் . ரொம்ப வித்தியாசமா இருக்கு." என்ற விக்னேஸ் அந்த செல்போனை வாங்கி கால் லிஸ்டை செக் செய்தான்.
ஒரு குறிப்பிட்ட நம்பரில் அதிக முறை பேசப்பட்டிருப்பதை கவனித்த வனுக்கு அந்த எண் பரிச்சயமானது போல் தோன்றியது.
" இந்த நெம்பரை தெரியுதா அருண்.? எங்கியோ பார்த்த மாதிரி தோணுது”
"பாஸ்’ இது தமிழ்செல்வனோட நம்பர். பசுமை உலகத்தோட தொடர்பு எண் “
அதே நேரம் விக்னேசின் போன் அடித்தது. எடுத்து பேசிவிட்டு போனை வைத்த விக்னேஷ் "இன்ஸ்பெக்டர் பொன்ராஜ். நான்கிராஸ் செக் பண்ணியது உண்மைதான்னு சொல்றார்.ராஜே சோட வீட்டுல கொசுரீபிள் காலியாத்தான் இருக்கு.”
"ஓகே.மிஸ்டர் பைத்தியக்காரன் இப்பவாவது வாய்த் திறக்கலாமே!" என்றான் அருண்.
"ஓரு போன் பண்ணிக்கிறேன்." என்று போனை வாங்கியவன் தம்ழ்செல்வனின் எண்ணிற்கு அழைத்தான். மறுமுனையில் தூக்க கலக்கத்தில் எழுந்த தமிழ் செல்வன் "ஹலோ" என்றான்.
"தமிழ்’ நான் அர்த்தநாரி பேசறேன். உடனே புறப்பட்டு வெளியூர் விருந்தாளிகளோட வீட்டுக்கு வா’ அவங்க பாதிய கண்டுபிடிச்சுட்டாங்க" என்றான்.
" நீ அர்த்தநாரி? மாயாவோட அண்ணன். நீ சாகலயா?" என்றான் விக்னேஷ்.
"இல்லை" என்று புன்னகைத்தான் அர்த்தநாரி.
லிக்யூட் ரிபிள் காலியாக இருப்பதை பார்த்து விட்டு வெளியே வந்த விக்னேஷ் தன் செல்போனை எடுத்து இன்ஸ்பெக்டர் பொன்ராஜை அழைத்தான்.
இரவு ரோந்து பணியில் பிசியாக இருந்த பொன்ராஜ் போனை எடுத்து " என்ன இந்த நேரத்துல கூப்பிடறீங்க?" என்றார் குழப்பத்துடன் .
"ஒரு சின்ன உதவி செய்ய முடியுமா?" என்றான் விக்னேஷ்.
"சொல்லுங்கள். அவசரமான விசயம்னு தானே அர்த்த ராத்திரில கூப்பிட்டு இருக்கீங்க?”
" செத்துப் போன ராஜே சோட வீட்டுல கொசு ரீபிள் காலியா இருக்கான்னு பாத்து சொல்ல முடியுமா?”
" பிரச்சனையில்லை. பக்கத்து தெரு தான். பாத்துட்டு உடனே கூப்பிடுறேன்.”
"தாங்க்ஸ் " என்று போனை அணைத்து விட்டு விக்னேஷ் வெளியே வந்த போது அருண் கையில் ஒரு செல் போனுடன் நின்று கொண்டிருந்தான்.
" உங்கிட்ட ஏது டா போனு!” என்றான் விக்னேஷ்
" என்னுது இல்ல பாஸ்.தலைவரோடது. நீங்க உள்ளே போனதும் இவரு கிட்ட பேசினேன். மெசேஜ் வருகிற சத்தம் கேட்டுச்சு. டவுட்டோ ட பாக்கெட்ட செக் பண்ணா உள்ளே செல்போன் .”
"பைத்தியக்காரன் பாக்கெட்டுல செல்போன் . ரொம்ப வித்தியாசமா இருக்கு." என்ற விக்னேஸ் அந்த செல்போனை வாங்கி கால் லிஸ்டை செக் செய்தான்.
ஒரு குறிப்பிட்ட நம்பரில் அதிக முறை பேசப்பட்டிருப்பதை கவனித்த வனுக்கு அந்த எண் பரிச்சயமானது போல் தோன்றியது.
" இந்த நெம்பரை தெரியுதா அருண்.? எங்கியோ பார்த்த மாதிரி தோணுது”
"பாஸ்’ இது தமிழ்செல்வனோட நம்பர். பசுமை உலகத்தோட தொடர்பு எண் “
அதே நேரம் விக்னேசின் போன் அடித்தது. எடுத்து பேசிவிட்டு போனை வைத்த விக்னேஷ் "இன்ஸ்பெக்டர் பொன்ராஜ். நான்கிராஸ் செக் பண்ணியது உண்மைதான்னு சொல்றார்.ராஜே சோட வீட்டுல கொசுரீபிள் காலியாத்தான் இருக்கு.”
"ஓகே.மிஸ்டர் பைத்தியக்காரன் இப்பவாவது வாய்த் திறக்கலாமே!" என்றான் அருண்.
"ஓரு போன் பண்ணிக்கிறேன்." என்று போனை வாங்கியவன் தம்ழ்செல்வனின் எண்ணிற்கு அழைத்தான். மறுமுனையில் தூக்க கலக்கத்தில் எழுந்த தமிழ் செல்வன் "ஹலோ" என்றான்.
"தமிழ்’ நான் அர்த்தநாரி பேசறேன். உடனே புறப்பட்டு வெளியூர் விருந்தாளிகளோட வீட்டுக்கு வா’ அவங்க பாதிய கண்டுபிடிச்சுட்டாங்க" என்றான்.
" நீ அர்த்தநாரி? மாயாவோட அண்ணன். நீ சாகலயா?" என்றான் விக்னேஷ்.
"இல்லை" என்று புன்னகைத்தான் அர்த்தநாரி.