Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

கௌதமிராஜா

Active member
Vannangal Writer
Messages
70
Reaction score
36
Points
33
கதையை படித்துவிட்டு மனம் கணத்து நீண்டநேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். மாணிக்கம் செய்த அநியாயத்துக்கு தகுந்த தண்டனைதான் என்றாலும் மனம் ஏனோ அவரது பிள்ளைகளை நினைத்து கஷ்ட படுகிறது!

'காலம் கடந்த ஞானம்'
யாருக்கென்ன லாபம்? என்று ஆசிரியர், கேள்வி கேட்பதன் மூலமாக சமூகத்துக்கு அறிவுரை கூறுவதை பாராட்ட வேண்டும். 'காலத்தே விழித்துக் கொள்க' என்று அற்புதமாய் அறிவுறுத்துகிறார்.

சமூகத்தின் அடித்தள மக்களின் உள்மன உணர்வுகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை, குப்புசாமியின் அழுகையும், பாரதிராஜாவின் உருவ பிரமையும் வெளிப்படுத்துவது போன்ற ஓர் புரட்சிகர செய்தியை கதாசிரியர் அற்புதமாக சமூகத்தின் பார்வைக்கு வைக்கிறார். வாழ்க அவரது சீரிய சமூகத் தொண்டு! -வாழ்த்துக்களுடன் தங்களது எழுத்தை மிகவும் விரும்பி படிக்கும் வாசகர் இரா. சந்திரசேகர், 20/09/2021.
மிக்க மிக்க நன்றி ...😍😍😍...தொடர்ந்து படித்து விமர்சனம் அளிப்பதற்கு நன்றி...😍😍
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
முதல் பாதில சுகுமாரன் பேசுனதெல்லாம் ரசிச்சு படிச்சேன்..செமையா கேலி பண்ணான் தயாவையும் உத்தமனையும்..உத்தமன்ட சுடரை கல்யாணம் செய்யச்சொல்லி பேசியதும் அருமை.....பாரதிராஜா காதல் செய்ததை தவிர எதுவும் செய்யவில்லையே..மாணிக்கம் செய்த பிழை இப்போ ஸ்ட்ரோக் வந்து கஷ்டப்படுறாங்க..சுகர்ணன் மூலமா அவருக்கு தண்டனை கிடைச்சிருக்கு..கவிதை வரிகள் அருமை சிஸ்
 

கௌதமிராஜா

Active member
Vannangal Writer
Messages
70
Reaction score
36
Points
33
முதல் பாதில சுகுமாரன் பேசுனதெல்லாம் ரசிச்சு படிச்சேன்..செமையா கேலி பண்ணான் தயாவையும் உத்தமனையும்..உத்தமன்ட சுடரை கல்யாணம் செய்யச்சொல்லி பேசியதும் அருமை.....பாரதிராஜா காதல் செய்ததை தவிர எதுவும் செய்யவில்லையே..மாணிக்கம் செய்த பிழை இப்போ ஸ்ட்ரோக் வந்து கஷ்டப்படுறாங்க..சுகர்ணன் மூலமா அவருக்கு தண்டனை கிடைச்சிருக்கு..கவிதை வரிகள் அருமை சிஸ்
மிக்க நன்றி மா... உங்களின் தொடர் விமர்சனத்திற்கு..😍😍🌹🌹
 
Messages
24
Reaction score
26
Points
13
மிக அற்புதமான வார்த்தைகளால் கதை கட்டமைக்கப் படுவது என்பது எளிதில் எல்லோருக்கும் வராது. இதன் ஆசிரியர் கிராமத்து வார்த்தைகளை பிசிரில்லாமல் கூறுவது கிராமத்து மன உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறது! இது உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது. உதாரணத்திற்கு சில வாசகங்கள் கீழே....

"உனக்கும்தான் வாய் வண்டலூர் வரை போகுது, உன்னை வைத்து தாத்தா குடும்பம் நடத்தல?..." என்று ஆசிரியர் எழுதுகிறார்.
இது கிராத்துக்கே உரிய மிகவும் ரசிக்கத் தக்க உரையாடல்!

"அந்த மொரட்டு உருவத்துக்குள்ளே கொழந்த மனசு இருக்கு தெரியுமா?" என்று இளம் பெண் தன்னம்பிக்கை கொள்வதும், அதே பெண், "நிம்மதியா இருக்குற இடத்துல போயி குடும்பம் நடத்துறது பெரிய விஷயம் இல்லை, சிதைந்து கடக்கும் குடும்பத்தை தூக்கி நிமித்துவதே பெரிது" என்று தன் தந்தை கூறியதை அந்த பெண் உள்வாங்கி அதை அந்த இளம் பெண் துணிவோடு ஏற்றுக் கொள்வதும் பாராட்டபட வேண்டியதாகும். இதன்மூலம் ஆசிரியர் தந்தைகளுக்கான மிகவும் அற்புதமான அறிவுரையையும் வழங்குகிறார்.

அதே தந்தை, பழைய சம்பவத்தில் தனக்கு உதவிய ஒரு நிகழ்வுக்காக பெண் குடுக்க முன்வருவது என்பது நன்றியறிதல் ஆகும். இது இன்றும் கிராமங்களில் மட்டும் உயிர்ப்போடு இருக்கும் கலாச்சாரம் ஆகும்!

மொத்தத்தில் இக்கதையின் மூலம் கிராம கலாச்சாரத்தை உலகறிய செய்யும் கால கண்ணாடியாக இந்த கதை இருந்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
 

கௌதமிராஜா

Active member
Vannangal Writer
Messages
70
Reaction score
36
Points
33
மிக அற்புதமான வார்த்தைகளால் கதை கட்டமைக்கப் படுவது என்பது எளிதில் எல்லோருக்கும் வராது. இதன் ஆசிரியர் கிராமத்து வார்த்தைகளை பிசிரில்லாமல் கூறுவது கிராமத்து மன உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறது! இது உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது. உதாரணத்திற்கு சில வாசகங்கள் கீழே....

"உனக்கும்தான் வாய் வண்டலூர் வரை போகுது, உன்னை வைத்து தாத்தா குடும்பம் நடத்தல?..." என்று ஆசிரியர் எழுதுகிறார்.
இது கிராத்துக்கே உரிய மிகவும் ரசிக்கத் தக்க உரையாடல்!

"அந்த மொரட்டு உருவத்துக்குள்ளே கொழந்த மனசு இருக்கு தெரியுமா?" என்று இளம் பெண் தன்னம்பிக்கை கொள்வதும், அதே பெண், "நிம்மதியா இருக்குற இடத்துல போயி குடும்பம் நடத்துறது பெரிய விஷயம் இல்லை, சிதைந்து கடக்கும் குடும்பத்தை தூக்கி நிமித்துவதே பெரிது" என்று தன் தந்தை கூறியதை அந்த பெண் உள்வாங்கி அதை அந்த இளம் பெண் துணிவோடு ஏற்றுக் கொள்வதும் பாராட்டபட வேண்டியதாகும். இதன்மூலம் ஆசிரியர் தந்தைகளுக்கான மிகவும் அற்புதமான அறிவுரையையும் வழங்குகிறார்.

அதே தந்தை, பழைய சம்பவத்தில் தனக்கு உதவிய ஒரு நிகழ்வுக்காக பெண் குடுக்க முன்வருவது என்பது நன்றியறிதல் ஆகும். இது இன்றும் கிராமங்களில் மட்டும் உயிர்ப்போடு இருக்கும் கலாச்சாரம் ஆகும்!

மொத்தத்தில் இக்கதையின் மூலம் கிராம கலாச்சாரத்தை உலகறிய செய்யும் கால கண்ணாடியாக இந்த கதை இருந்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
மிக்க மிக்க நன்றி...தங்களின் பாராட்டு எனக்கு மிகவும் ஊக்கமாக அமைகிறது..நன்றி நன்றி 😍😍
 

Leellaa

Member
Messages
44
Reaction score
21
Points
18
Nice story ......village subjecta nalla eludhi irukeenga.
Character all are good.
..seidha paavatha enni varundhuvadhu maanikam, singaaram nandraaga irundhuchu....
sudar urudhyaaga nindradhu pin uthamanai etru kondadhu good
Iyalbaana village manidhargalin unarvugalai nandraaga padaithu irukeenga..
Happy ending,,romba sandhosham......positive vibration

ALL THE BEST
 

கௌதமிராஜா

Active member
Vannangal Writer
Messages
70
Reaction score
36
Points
33
Nice story ......village subjecta nalla eludhi irukeenga.
Character all are good.
..seidha paavatha enni varundhuvadhu maanikam, singaaram nandraaga irundhuchu....
sudar urudhyaaga nindradhu pin uthamanai etru kondadhu good
Iyalbaana village manidhargalin unarvugalai nandraaga padaithu irukeenga..
Happy ending,,romba sandhosham......positive vibration

ALL THE BEST
Thank u so much for ur valuable comments 😍😍😍
 
Messages
24
Reaction score
26
Points
13
கதை ஒரு வழியாக முடிந்துவிட்டது. மிகவும் உணர்வு பூர்வமான கதை. அதுமட்டுமல்ல, கிராம கலாச்சாரத்தை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டும் சிறப்புக்கு உரிய கதை. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.

உத்தமன் சுடருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் உணர்வு பூர்வமாக காட்சியமைக்கப் பட்டிருப்பது மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

ஆனால் இருவரையும் ஜோடி சேர்ப்பதில் ஆசிரியருக்கு என்ன தயக்கம்? கலாச்சாரத்தில் கை வைக்கக்கூடாது என்ற தயக்கம் எதுவும் ஆசிரியருக்கு இருக்குமோ என்று தெரியவில்லை!

பொது புத்தியை, தேவைப்பட்டால், மீறும் அளவுக்கு ஒரு ஆசிரியருக்கு நேர்மறையிலான துணிவு இருக்க வேண்டும்! அதிலும் பெண் படைப்பாளிக்கு அவசியம் இருக்க வேணடும்.
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
கதை ஒரு வழியாக முடிந்துவிட்டது. மிகவும் உணர்வு பூர்வமான கதை. அதுமட்டுமல்ல, கிராம கலாச்சாரத்தை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டும் சிறப்புக்கு உரிய கதை. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.

உத்தமன் சுடருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் உணர்வு பூர்வமாக காட்சியமைக்கப் பட்டிருப்பது மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

ஆனால் இருவரையும் ஜோடி சேர்ப்பதில் ஆசிரியருக்கு என்ன தயக்கம்? கலாச்சாரத்தில் கை வைக்கக்கூடாது என்ற தயக்கம் எதுவும் ஆசிரியருக்கு இருக்குமோ என்று தெரியவில்லை!

பொது புத்தியை, தேவைப்பட்டால், மீறும் அளவுக்கு ஒரு ஆசிரியருக்கு நேர்மறையிலான துணிவு இருக்க வேண்டும்! அதிலும் பெண் படைப்பாளிக்கு அவசியம் இருக்க வேணடும்.
அக்கா எனக்கு தெரிந்து உத்தமன் சுடர் இருவரையும் இணைத்து விட்டதாக தான் படுகிறது... இருவரும் திருமணம் செய்து சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளை பெற்று இருக்க வேண்டும் அப்படி காட்சி அமைக்க வேண்டும் என்பது இல்லை... உத்தமன் அவளை விரும்புகிறான் அவளும் அவனை வெகு முன்பே காதலித்து வந்தாள் அதனால் அவளுக்கு சிறிய இடைவெளியை அளித்து உள்ளதாகவே தான் படுகிறது...
 
Messages
24
Reaction score
26
Points
13
அக்கா எனக்கு தெரிந்து உத்தமன் சுடர் இருவரையும் இணைத்து விட்டதாக தான் படுகிறது... இருவரும் திருமணம் செய்து சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளை பெற்று இருக்க வேண்டும் அப்படி காட்சி அமைக்க வேண்டும் என்பது இல்லை... உத்தமன் அவளை விரும்புகிறான் அவளும் அவனை வெகு முன்பே காதலித்து வந்தாள் அதனால் அவளுக்கு சிறிய இடைவெளியை அளித்து உள்ளதாகவே தான் படுகிறது...
உண்மைதான். ஆனால், அந்த இணைப்பை காலம் நிகழ்த்த வேண்டும் என்று விடுவது ஏன்? தவிர்க்க முடியாத ஒரு துரதிஷ்ட நிகழ்வுக்கு பரிகாரத்தை நாம்தான் தேட வேண்டும். காலம் செய்யும் வரை காத்திருப்பது ஞாயமல்ல!
 
Top Bottom