Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


On Hold நவயுகம் - Novel

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
849
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
849
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Harini

Member
Messages
41
Reaction score
43
Points
18
175345018_10222253027813449_7792527512632797225_n.jpg




இது என் முதல் கதை.... வாய்ப்பளித்த சகாப்தத்திற்கும், எழுத ஊக்குவிக்கும் நித்யா அக்காவிற்கும் நன்றி...

நான் வியந்த எழுத்தாளர் - நம்மை போல் ஒரு சக தோழி (அக்கா) "இருள் மறைத்த நிழல்" எழுதிய அக்கா தேனுவிடம் இந்த கதை சென்று அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பது என் ஆசை.

திங்கள் மற்றும் வெள்ளி நவயுகம் உங்களைத் தேடி வரும்...

கொலை கொஞ்சம் வன்முறை கொஞ்சம் மனதை கனக்க வைக்கும் சில சம்பவங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் / திரில்லர் நாவல் இந்த நவயுகம்...

உங்கள் பின்னூட்டங்களே என்னை மேலும் எழுதவைக்கும் தூண்டுகோல்... என் எழுத்து நடையை மெருகூட்ட உங்கள் கருத்துக்களை - கருத்துக்கள் திரியில் பதிவிடுங்கள். நன்றி...
 

Harini

Member
Messages
41
Reaction score
43
Points
18
அத்தியாயம் ஒன்று

சிவப்பு

எங்கோ நாய் ஒன்று அழுது ஊளையிடும் ஒலி மட்டும் அந்த நிசப்தமான இரவின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தது.

அந்த கட்டிடம் என்றோ தீ கைகளுக்கு இரையானது போலும், முற்றிலும் சிதிலமடைந்து பாழடைந்த பேய் பங்களா போன்ற தோற்றத்தைத் தந்தது.
மினுக் மினுக் என்று ஒளி குறைந்து எறிந்த அந்த சிவப்பு விளக்கு, இன்றோ நாளையோ உயிரை விடப்போகிறது என்று சொல்லாமல் சொல்லியது. அந்த நிலவொளியும் இந்த விளக்கொளியும் ஓர் சொல்லொன்னா திகில் கிளப்பியது.

தங்கதுரைக்கு லேசாக விழிப்புத் தட்டியது. ஒரு நிமிடம் எங்கு இருக்கிறோம் என்ன ஆயிற்று என்று பிடிபடவில்லை. எங்குப் பார்த்தாலும் இருள். உடம்பு முழுவதும் வலி, தாங்க முடியாத வலி. கை கால் மரத்துப் போய் அசைக்கக்கூட முடியாமல் பிணைக்கப்பட்டிருந்தது. கத்துவதற்கும் கதறுவதற்கும் வழி இல்லாமல் அவரது வாயில் துணி கொண்டு அடைத்திருந்தனர். அல்லது அடைத்திருந்தானோ ? அவருக்குப் பல பேர் தன்னை கடத்தியது போல நினைவில் இல்லை. அவர் காலை உடற்பயிற்சிக்குக் கடற்கரையில் காலாற நடந்தது தான் நினைவிலிருந்து.

தங்கதுரையின் அசைவு தெரிந்ததும், அந்த சிகப்பு முகமூடி, சிகப்பு அங்கி , சிகப்பு கால் சட்டை அணிந்த அந்த உருவம், உடல்மொழியில் அலட்சியம் காட்டி எழுந்து நின்றது!

இருளைக் கிழித்து வரும் அந்த உருவத்தின் உடல்மொழியே தங்கதுரைக்கு அவரது இறுதியை நிதர்சனப்படுத்தியது! இருந்தும் உம் உம் என்று முனகி அவரது சினத்தைக்காட்ட நினைத்தார்.

“ப்ச்.. இரு என்ன அவசரம்.. பொறுமை.. துணிய எடுக்கிறேன், நீ பேச வேண்டியதை எல்லாம் பேசு.. அப்புறம் உன் உயிரை எடுக்குறேன்” என்றான். அவன் குரலில் அப்படி ஒரு எள்ளல்.

முகம் முழுவதும் அவன் மூடியிருந்தாலும் அவருக்கு அவன் தன்னை துச்சமாக நினைப்பது நன்றாகவே தெரிந்தது. வேண்டும் என்றே அவருக்கு வலிக்கும் படி கழுத்தை இழுத்து அவர் வாயில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தான்.

இழுத்த வேகத்தில் அவருக்கு இருமல் வந்தது. அவரை பிடித்துச் சாய்வாக உட்கார வைத்தான்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவர், அந்த நிலையிலும் கர்ச்சித்தார்.

“டேய் என்ன யாருன்னு நெனச்ச? தங்கதுரை டா! மினிஸ்டர் தங்கதுரை!” இந்நேரம் உன்னைப் பிடிக்க தனிப்படை வச்சிருப்பாங்க!”

“தங்கதுரையாம் தங்கதுரை! கடையில இருக்குற பொம்மையைக் கூட பாத்து பல் இளிக்கிற பித்தளை! துருப்பிடிச்ச நாய்,” அவன் கத்தியதில் அந்த பாழடைந்த சுவர்கள் கிடுகிடுத்தது!

“நீ யாரு? யார் அனுப்பிச்ச ஆளு? எதிர்க்கட்சியா? எதுக்காக என்ன கடத்தி வச்சிருக்க…?”

“தங்கம் தங்கம்.. நான் பேசியதை ஒழுங்கா கேக்கலையா நீ? உன்ன போட்டுத் தள்ள தான் தூக்கிட்டு வந்திருக்கேன்…”
“எதுக்காக என்னை கொல்லத் துடிக்கிற? சொல்லு எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்... “ அவனிடம் வளவளத்தால் எப்படியும் காவல்துறை அவரை காப்பாற்ற வந்துவிடும் என்று நம்பிக்கை வைத்தார்.

அவனோ எம்டனுக்கு எம்டனாக, “ ஐ..நல்ல இருக்கே நான் கதை சொல்லுவேனாம், நேரம் ஆகுமாம்.. போலீஸ் வந்து என்ன புடிச்சிட்டு போகுமாம்…. இவரு தப்பிச்சிருலாமாம்! மினிஸ்டர் டேய்….உன்ன மாதிரி இருக்குற எல்லா களைகளை புடுங்கிட்டு மொத்தமா நான் யாரு.. என்னனு உலகத்துக்கு சொல்லிக்கிறேன்..” என்று கூறி, ஏற்கனவே எரிந்து கருகிய அந்த இடத்தையே தங்கதுரைக்குச் சிதையாக மாற்றி அவரை உயிருடன் எரித்தான்.

அவரின் மரண ஓலம் அவன் செவியில் இனிமையான சங்கீதமாக ஒலித்தது. அங்கு எரியும் ஜ்வாலை அவன் கண்களில் எதிரொலித்து, அவன் மனதில் எரியும் நெருப்புக்குப் போட்டியாக இருந்தது!

மிகுந்த மனநிறைவுடன், அங்கிருந்து நகர்ந்தான் அவன்!

------------------------------------------------------------------

அஞ்சலி அஞ்சலி எங்க போன.. குழந்தை அழறா பாரு என்று கத்தினான் ரகுநந்தன். அவர்கள் வீட்டு நாய் சோகமாகப் படுத்திருந்தது. வெளியே வந்து அந்த மேஜை மேல் சட்டமாகச் சட்டத்தினுள் இருக்கும் அஞ்சலியின் புகைப்படம் அவனுக்கு அவனது இன்றைய நிலையை எடுத்துக் காட்டியது!

ஆயிற்று! இன்றோடு ஒரு மாதம். அவனையும் அவன் பெண் அதிராவையும் விட்டுப் போய்விட்டாள். கூட்டி வர முடியாத தூரத்திற்குச் சென்று விட்டாள். அன்று அவள் இருந்த கோலம் நினைத்தால்... இன்றும் அவனுக்குத் தூக்கிப் போட்டது. எப்படி முடிந்தது அவளால்? என்னையும், எட்டு மாதமே ஆன குழந்தை அதிராவையும் நினைத்துப் பார்க்காமல் இப்படி ஒரு முடிவை எடுக்க? சக்தி மட்டும் இல்லை என்றால் அவர்களின் நிலை என்னவாகி இருக்கும்.

சக்தி பெயருக்கு ஏற்றார் போல் அவனுக்கு சக்தி அளித்து இந்த ஒரு மாதம் அவன் பித்தனாகாமல் காப்பவள்.

ரகு சொந்தமாக ஒரு கன்சல்டிங் நிறுவனம் வைத்திருந்தான். முக்கால்வாசி நேரம் ரகுவிற்கு வேலை வீட்டிலேயே முடிந்து விடும். அந்த கருப்பு தினத்தன்று அவனுக்கு வெளியே வேலை இருந்தது... அவனுக்குக் கையசைத்து விடை கொடுத்த மனைவி அவன் திரும்பி வந்த பொழுது அசைவில்லாமல் தூக்கில் தொங்கி இருந்தாள். அம்மா விட்டுச் சென்றது தெரியாமல் தரையில் அதிரா விளையாடிக் கொண்டிருந்தாள். வீட்டிற்கு வந்தவனுக்கு பெரும் அதிர்ச்சி… அவள் மரணத்தைப் புரிந்து கொள்ள அவகாசமின்றி, என்ன செய்வது என்று யோசிக்கும் முன்னர் அஞ்சலியின் மரணத்திற்குக் காரண கர்த்தா என்று காவல்துறை அவனைக் கைது செய்துவிட்டது! அதிராவையும் பார்த்துக் கொண்டு, அவனை நிரபராதி என நிரூபித்து, வெளிக்கொணர்ந்தது சக்தி தான்!

குழந்தை அழுவது நிற்காமல் இருக்க மாடியிலிருந்து இறங்கினான் ஷிவநந்தன். ரகுவின் தம்பி!
வந்தவன் வேகமாக அதிரா பாப்பாவைத் தூக்கி வந்து, “ அண்ணா... என்ன அண்ணா பாப்பாவை பாக்காம நீ பாட்டுக்கு மறுபடியும் உனக்குள்ள தன்னால யோசிச்சிட்டு இருக்க?”

“தேங்க்ஸ் ஷிவா” என்று சொல்லி அதிராவை வாங்கியவன், “என் அஞ்சலியைத் தான் டா நெனச்சிட்டு இருந்தேன்” என்றான். அவன் குரலிலிருந்த வலி ஷிவாவை அசைத்துப் பார்த்தது.

“அண்ணா உன் வலி எனக்கு புரியுது... என்ன பண்ணாலும் மாண்டோர் மீண்டு வருவதில்லை.. உனக்குத் தெரியாததில்லை.. அதிரா உன்ன நம்பி தான் இருக்கா..பேசாம நீ நம்ம சைக்காட்ரிஸ்ட் சக்தியை உனக்கும் கவுன்சிலிங் கொடுக்க சொல்லேன்?” என்று பாசமிகு தம்பியாக இலவச ஆலோசனை கொடுத்தான்.

ஷிவா இங்கு வந்து ஒரு வருடமே ஆகிறது..அதற்கு முன் படிப்பு ட்ரைனிங் என்று எல்லாமும் விடுதியில் கழித்தான். இந்த ஒரு வருடத்தில் அவன் அண்ணன் அண்ணி காதலைக் கண்ணால் பார்த்தவன். அவன் ஒரு வழக்கு சம்பந்தமாக டெல்லி சென்று திரும்பி வருவதற்குள் அவன் அண்ணி மரணம், அண்ணன் கைது என அனைத்தும் நடந்து முடிந்திருந்தது. தன் அண்ணி தற்கொலை செய்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“இல்ல ஷிவா. சக்தியும் ரொம்ப ஒடைஞ்சி போயிருக்கா. அவளுக்கு அஞ்சலி தான் எல்லாம்.. அஞ்சலிய விட்டா அவளுக்கு யாரும் இல்லை…” என்றான் ரகு.

“அவளுக்கு எல்லாமாக இருக்க நான் இருக்கேன், அவ தான் என்ன தள்ளியே வைக்குறா.” ஷிவா வெளியே சொல்லவில்லை. மனதில் தான் நினைத்தான். அவனுமே அவன் அண்ணி மூலம் தான் சக்தியை அணுக நினைத்தான். இப்பொழுது என்ன செய்வது என்று அவனுக்கும் புரியாத நிலை.

துப்பாக்கி மற்றும் தோட்டா வைத்தான் காதலித்தான்

என்றாலும் காக்கிச் சட்டையைத் தான் கைப்பிடித்தான்
தன் சாவைச் சட்டைப்பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்…

ஷிவாவின் செல்பேசி அழைத்தது.

ஷிவா ஒரு சப்-இன்ஸ்பெக்டர்! போலீசுக்கே உரித்தான தோற்றம். ஆறடியில் கட்டுக்கோப்பானவன். அவனுக்குப் பெரிய காவல் உயரதிகாரி ஆக வேண்டும் என்று கனவு. வேட்டையாடு விளையாடு ராகவன் போல் கெத்தாக இருக்க நினைப்பவன். சினிமாவும் நிஜமும் ஒன்றல்லவே!

அவனுக்குப் பிடித்த அந்த பாடல் வரிகள் முடியும் வரை காத்திருந்து செல்பேசியை இயக்கினான். அவன் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் முத்தண்ணன் தான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க முத்தண்ணா…. எப்ப? ஐயோ அப்படியா… இப்பவே வரேன்..” என்றான்.

“என்ன ஷிவா என்ன ஆச்சு?” என்று ரகு கேட்க…

“நேத்து ராத்திரி ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு எடத்துல தீ விபத்து. மாட்டினது யாரோ பெரிய ஆள் போல… மீடியா போறதுக்கு முன்னாடி போகணும்.. நான் வரேன் அண்ணா” என்று அவன் ராயல் என்ஃபீல்ட் வண்டியை இயக்கினான்.

அவன் வெளியேறவும் சக்தி அவளது வண்டியில் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

சக்தி எல்லா பெண்களை விடச் சற்று உயரம் அதிகம். பேரழகி என்று எதை வைத்து வரையறை செய்வது? அவள் கண்களில் போட்டிப் போடும் கருணையும் சோகமும் தைரியமும், நேர்படப் பேசும் சுபாவமும், அனைவருக்கும் உதவும் பண்பு என அவளைப் பற்றிய அனைத்தும்…. அவள் மீதுள்ள காதலால் ஷிவாவின் கண்களுக்கு அவளைப் பேரழகியாகக் காட்டியது.

தன்னைப் பார்த்தால் என்றும் நின்று கனிவோடு பேசும் ஷிவாவை ஒரு நல்ல நண்பனாக சக்திக்குப் பிடிக்கும். அவன் அதற்கு மேலும் தன்னிடம் உரிமை எதிர்பார்ப்பதும் தெரியும். இருந்தும் அவள் நிலை எண்ணி அவள் அதைக் கண்டுகொள்ளாதது போல விட்டுவிடுவாள். எங்கோ அனைவராலும் பழிக்கப்பட்டு அனாதையாக நின்றிருக்க வேண்டிய அவளை தன்னுடன் அழைத்து டாக்டருக்குப் படிக்க வைத்து, இன்று சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையில் அவள் இருப்பதற்கு அஞ்சலி மட்டுமே காரணம். ரகுவும் அவளைப் பிரியமாக ஒரு தங்கை போல நினைத்தான் என்றாலும், ரகு - அஞ்சலி திருமணத்திற்குப் பின் அவர்களுடன் சேர்ந்து இருக்காமல், அவள் தனியாகப் பக்கத்துத் தெருவில் குடிபெயர்ந்தாள். ஷிவா அவர்கள் வீட்டில் விடுமுறை பொழுது வந்து தங்குவான் என்பதும் அவள் தனியே செல்ல ஒரு காரணம். கண்ணில் படாதது கருத்தில் இருக்காது என்பதை நம்பி அவனை முடிந்த அளவு தவிர்த்தாள்.

ஒரு வேளை தனியே செல்லாமல் இருந்திருந்தால் அஞ்சலி இன்றும் உயிருடன் இருந்திருப்பாளோ என்று அவள் நினைக்காத நாள் இல்லை..

ஷிவாவில் ஆரம்பித்து அஞ்சலியில் நின்றது அவள் எண்ணங்கள். இப்போதெல்லாம் அவள் மனம் எதை நினைத்தாலும் அஞ்சலியின் நினைவில் முடிகிறது.

“என்ன ரகு மச்சான் உங்க தம்பி நிக்காம ஓடுறாரு... “ என்று சக்தி கேட்டாள். அந்த ஒரு வாக்கியம் முடியும் முன் அவள் பல முறை இருமிவிட்டாள்.

“மொத தண்ணிய குடி சக்தி.. என்ன உடம்பு சரி இல்லையா?” என்று கேட்ட படி அவளுக்கு அருந்த, தன் பக்கம் இருந்த தண்ணீர் குவளையை அவள் புறம் நகர்த்தினான்.

அதை வாங்கிக் குடித்தவள், அதிராவைத் தன்னிடம் வரும்படி கை நீட்டினாள். என்றும் போல் தன் பாசமிகு சித்தியிடம் தாவினாள் குழந்தை! குழந்தையின் சிரிப்பு அவள் வாடிய முகத்திலும் சிரிப்பை வர செய்தது.

“டாக்டர் தானே நீ.. மருந்து சாப்பிடக்கூடாதா ? என்று உரிமையாகக் கோபித்தவன், அவளிடம் பதில் எதிர்பார்க்காமல், “அவனுக்கு ஏதோ அவசர கேஸ் போல.. ஏதோ தீ விபத்து... அதான் காலுல சுடு தண்ணிய விட்டுட்டு போறான்…” என்று அவளிடம் விளக்கம் தந்தான் ரகு.

அவனுக்குத் தெரியும் அவள் இப்போது அவளாக இல்லை. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அஞ்சலி இறந்ததிலிருந்து அவள் தன்னைப் பற்றிச் சிந்திப்பதில்லை. பேசுவதைக் குறைத்து விட்டாள். எல்லாவற்றையும் கருத்தோடு செய்தாலும், எந்நேரமும் இலக்கற்ற சிந்தனையிலிருந்தவள் இவ்வளவு மாறியதே பெரிதாக இருந்தது.

“அப்படியா, டிவி போடுங்க மச்சான்… நியூஸ் பாப்போம்” என்றாள் சக்தி.

“மீடியா வர முன்னாடி போகணும்னு சொன்னான்… அதுக்குள்ள நியூஸ்ல வராது சக்திமா” என்றான் ரகு.

“முக்கிய செய்தி.. அமைச்சர் தங்கதுரை கடத்தப்பட்டார். இன்று காலை எட்டு மணி அளவில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் போது கடத்தப்பட்டார். சென்ற மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் முருகேசனை விட ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் இந்த தேர்தலே அவர் எம்.எல்.ஏ வேட்பாளராக முதல் முறை நின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது!”

“நாடு எங்க போகுதுனு தெரியல... அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை... நாமெல்லாம் என்ன பண்றது….?” என்று ரகு அங்கலாய்க்க..

“போதும் அமைச்சர் என்ன அமைச்சர்.. அப்படி ஒன்னும் அவன் உத்தமன் இல்ல மச்சான்.. ப்ச்.. நமக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை… இதெல்லாம் எதுக்கு.. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று சக்தி பேச்சை மாற்றினாள்.

“நான் எப்படி மா அஞ்சலி இல்லாம நல்லா இருக்க முடியும்? இருக்குற வரப் பொண்டாட்டி அருமை தெரியாதுன்னு சரியா தான் சொல்லியிருக்காங்க….. எப்படி தான் எல்லாத்தையும் சமாளிச்சாளோ தெரியல…அவளை இன்னும் நல்லா கவனிச்சிருக்கலாமோனு மனசு கடந்து துடிக்குது… அப்போ அப்போ அவ இல்லைன்றது மறந்து போயிடுது….”

“எனக்கும் அப்படி தான் மச்சான் இருக்கு. நான் யாருக்காக இருந்தேனோ அவ இப்போ இல்லை.. அதுக்காக அவளை மாதிரி நான் கோழை மாதிரி முடிவெடுக்க மாட்டேன்.. எங்க நான் தவறினேன்னு தெரியல… அவளை ஒழுங்கா கவனிக்கலையோன்னு குற்ற உணர்ச்சி என்ன கொல்லுது..” என்று சக்தி சொல்லும் போதே அவள் கண்ணில் நீர் நிறைந்தது… அவள் முகம் மாற்றம் பார்த்து அதுவரை சும்மா சித்தியிடம் உட்கார்ந்திருந்த அதிரா அழ ஆரம்பித்தாள்.

குழந்தையை வாங்கிய ரகு, அவளுக்குப் பிடித்த பொம்மையை காட்டியபடியே, “ஏன் சக்தி, நீ கவுன்சிலிங் கொடுத்ததும் அஞ்சலி தற்கொலை பண்ணிகிட்டான்னு தான் நீ இப்போ உன்னோட கிளினிக்கு போறதிலயா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் இல்ல மச்சான்… எனக்கு ஒரு பிரேக் தேவைப் பட்டது. அதனால்…” அவள் வாக்கியம் முடிப்பதற்குள்… தொலைக்காட்சி அவர்களைத் திசை திருப்பியது…

“மிக முக்கிய அறிவிப்பு.. காணாமல் போன அமைச்சர் தங்கதுரை ஒரு பாழடைந்த பங்களாவில் பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தீயணைப்புத் துறை வீரர்கள் அவரை கண்டுபிடிக்கும் முன் இறந்து விட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் இது திட்டமிட்ட கொலை என்பதை நிரூபிக்கும் வண்ணம், சம்பவ இடத்தில் உள்ள சுவரில் கரி கொண்டு எழுதிய கவிதையைக் கொலைகாரன் விட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அந்த சுவரின் புகைப்படத்தை இப்போது காணலாம் ...”

அந்த இடத்தின் வெளிப்புற சுவரில் மிகவும் மோசமான கிறுக்கலாக இந்த கவிதை எழுதப்பட்டிருந்தது.

“தாய்வீடு தனக்கில்லையெனத்

தீயில் விழுந்து செந்தணலாய் நிற்க….
செந்தணலில் தள்ளப்பட்ட அக்கினி குஞ்சிற்காக

எரிக்கப்பட்ட எச்சம் இவன்.”

தொலைக்காட்சி மூலம் பார்க்கும் போதே ஏதோ அமானுஷ்யமாய் தோன்றியது ரகுவிற்கு. அதைப் பார்த்த நிமிடம் அவன் உடல் சிலிர்த்தது.

“போயட்டிக் ஜஸ்டிஸ்” என்று மென்னகைப் புரிந்தாள் சக்தி.
“ சக்தி மா என்ன சொல்ற?” என்று ரகு கேட்க..
“ போயட்டிக் ஜஸ்டிஸ்னு சொல்லுவாங்களே அதுக்காக கவிதை எழுதிருக்காங்க போலன்னு சொன்னேன்…” என்றாள் சக்தி, அவள் குரலில் வருத்தம் இல்லை.
“செம்ம கொடூரமா இருக்கு நீ சிரிக்கிற? என்ன தான் அவரு மோசமான ஆளா இருந்தாலும், ஒரு உயிர் பாவம் தானே? என்று ரகு கடிந்தான்.
“சாரி மச்சான்.. ஒரு உணர்ச்சி வேகத்துல சிரிச்சிட்டேன்.” என்று வருந்தினாள் சக்தி.
என்றும் போல் இன்றும் அவள் முகம் வாடுவது பிடிக்காமல் ரகு, “ பரவாயில்ல, அதை விடு சக்திமா.. நம்ம ஷிவா கேஸ் போல…அங்க பாரு டிவில..” என்று திசை திருப்பினான்... அங்கே தொலைக்காட்சியில் திரு திரு என்று விழித்துக் கொண்டிருந்தான் அவர்களின் ஷிவநந்தன்.
 
Last edited:

ஆனந்த ஜோதி

Well-known member
Messages
853
Reaction score
308
Points
93
மிகவும் அருமையான ஆரம்பம்.
தொடர்கதையின் முதல் அத்தியாயமே ரொம்ப அருமையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

ஷிவா, ரகு, சக்தி, அஞ்சலி கதாபாத்திரங்கள் நினைவில் நிற்பவை

வாழ்த்துகள் சகோதரி💐💐💐

அப்படியே கருத்து திரியை உன்னுடைய யூ டியின் கீழ் பகுதியில் பேஸ்ட் பண்ணி விடு . படிப்பவர்கள் உன்னுடைய கதை திரியில் கமெண்டை போட்டு விடுவார்கள். புரிந்ததா...
 
Last edited:

Harini

Member
Messages
41
Reaction score
43
Points
18
மிகவும் அருமையான ஆரம்பம்.
தொடர்கதையின் முதல் அத்தியாயமே ரொம்ப அருமையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

ஷிவா, ரகு, சக்தி, அஞ்சலி கதாபாத்திரங்கள் நினைவில் நிற்பவை

வாழ்த்துகள் சகோதரி💐💐💐

அப்படியே கருத்து திரியை உன்னுடைய யூ டியின் கீழ் பகுதியில் பேஸ்ட் பண்ணி விடு . படிப்பவர்கள் உன்னுடைய கதை திரியில் கமெண்டை போட்டு விடுவார்கள். புரிந்ததா...


நன்றி அக்கா..

Signature add pananum, Nithya akka kita soliruken...
 

தர்ஷினி

Well-known member
Messages
862
Reaction score
750
Points
113
Super sis...Nice start..All the best.....அஞ்சலி ஏன் இப்படி பண்ணா??சக்திக்கு குற்ற உணர்ச்சி எதனால்...ரகு மனைவியை நினைத்து ரொம்ப ஃபீல் பண்றான்...சிவா இப்படி திருதிருனு முழிச்சா எப்படி வேட்டையாடு விளையாடு ராகவன் மாறி ஆக முடியும்..அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 

Harini

Member
Messages
41
Reaction score
43
Points
18
Super sis...Nice start..All the best.....அஞ்சலி ஏன் இப்படி பண்ணா??சக்திக்கு குற்ற உணர்ச்சி எதனால்...ரகு மனைவியை நினைத்து ரொம்ப ஃபீல் பண்றான்...சிவா இப்படி திருதிருனு முழிச்சா எப்படி வேட்டையாடு விளையாடு ராகவன் மாறி ஆக முடியும்..அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
Sakthi than ma anjali ku counselling kodukura.. Ava problem ku.. she is a psychiatrist.. still anjali tharkolai panathala avaluku kutra unarchi... anjali ku ena problem nu seekaram solren... nama siva dummy piece ma 😜

thank you for commenting :)
 

Latest posts

New Threads

Top Bottom