Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 11
மதிவாணரின் “கருணாகரனை கொன்றால் அவர்கள் இருவரும் மரணமடைவதை தவிர வேறு வழியில்லை! “என்ற வார்த்தைகளை கேட்ட கந்தமாறனும், பூபதியும் அதிர்ச்சியடைந்தனர்.”மந்திரியாரே! என்ன சொல்கிறீர்கள்? “என்றான் கந்தமாறன் பதட்டத்துடன்.
“நான் சொல்வது உண்மை கந்தமாறா! அவர்கள் இருவரின் உயிர் கருணாகரனிடம் இருக்கிறது.நான் யூகிப்பது சரியாக இருந்தால் மூன்றாவதாக இன்னொரு நபரின் உயிரும் கருணாகரனின் கையில்தான் இருக்கிறது.!”
“யார் அந்த மூன்றாவது ஆசாமி! “
“நம் இளவரசன்தான் அந்த மூன்றாவது நபர்! “
“நீங்கள் சொல்வது விளங்கவில்லை.உங்களின் யூகத்தை கூறுங்கள்! “
“என் யூகத்தை சொல்கிறேன் கந்தமாறா! கவனமாக கேள்.இன்று மகேந்திரபுரியின் மன்னனாக இருக்கும் மகேந்திரனுக்கு முன் அரசனாக இருந்தவர் வீர சேனன்.வீர சேனனின் மனைவியின் தம்பிதான் மகேந்திரன்.வீர சேனனின் மகன்தான் நம் இளவரசர் மாறவர்மன்.மாற வர்மன் சிறு பிள்ளையாக இருந்த போதே வஞ்சகமாக தன் தங்கையையும், மாமா வீரசேனனையும் கொன்று அதை விபத்தாக மாற்றி அரியணை ஏறியவன் மகேந்திரன்.சிறு பிள்ளையாக இருந்த மாற வர்மனை கொல்ல பலமுறை முயன்றான் மகேந்திரன்.ராஜவிசுவாசிகளான என் போன்றவர்கள் அவன் திட்டத்தை குலைத்து இளவரசரை காப்பாற்றினோம்.எப்படியோ இளவரசர் வளர்ந்து வாலிப வயதையடைந்தார்.அந்த நேரத்தில் மகேந்திரனுக்கு எதிரி ஒருவன் உள் நாட்டில் உருவானான்.அவன் தன்னை கரிகாலன் என்று அழைத்து கொண்டான்.சிவப்பு நிற துணியால் முகத்தை மறைத்தபடி காணப்படும் அவன் நாட்டின் பல பாகங்களில் திடீர் திடீரென தோன்றி காவலர்களிடமிருந்து ஆயுதத்தை கைப்பற்றுவான்.இருப்பவர்களிடமிருந்து கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு கொடுத்து வந்ததால் நாட்டு மக்களிடம் அவனுக்கு ஆதரவு பெருகியது.அவனது புரட்சி படையில் நிறைய பேர் இருந்தனர்.அவனை பயன்படுத்தி இளவரசருக்கு ஆதரவாக அவனை திருப்பி மகேந்திரனை ஒழிக்க நினைத்தேன்.நான் பெரு வணிகனாக வேடமிட்டு வலிய சென்று கரிகாலனிடம் அகப்பட்டேன்.ஆனால் கரிகாலன் புத்திசாலி.நான் அமைச்சர் என்பதை கண்டு கொண்டு விட்டான்.இருவருக்குமான உரையாடலில் என் திட்டத்திற்கு ஒப்பு கொண்டுவிட்டான்.மகேந்திரனுக்கு எதிராக இளவரசனுக்கு ஆதரவாக செயல்பட ஒப்பு கொண்டவனால் ஆட்சி மாற்றத்தை உண்டாக்க முடியும் என்று நம்பினேன்.நள்ளிரவு நேரத்தில் அரண்மனையிலிருந்து தனித்து வெளியேறும் இளவரசர் கரிகாலனை சந்திப்பதும் ஆலோசனைகள் செய்வதும் வழக்கமானது.அப்படி கடைசியாக கரிகாலனை சந்திக்க சென்ற இளவரசரை காணவில்லை.கரிகாலன் கொல்லப்பட்டு விட்டான்.கரிகாலனை கொன்றது கருணாகரன் என்பது இன்று அரசவையில் தெரிந்து விட்டது.!”
“இது தெரிந்த கதைதானே அமைச்சரே? “
“கரிகாலனை சந்திக்க சென்ற இளவரசரின் கதி என்னவாகி இருக்கும் என்று யோசித்தாயா கந்தமாறா? “
“துறவியாக போய் விட்டதாக மகேந்திரன் சொல்கிறான்.!”
“அதற்கான தேடல் இளவரசருக்கு இல்லை! “
“இளவரசர் கொல்லப்பட்டிருப்பாரோ?”
“இல்லை என்கிறார்கள் ஒற்றர்கள்.கடைசியாக இளவரசரை கைது செய்து கருணாகரன்தான் அழைத்து சென்றிருக்கிறான்.!”
“அப்படியானால்? “
“பொய்மான் கரடின் புதிர் வழியை முழுதாக அறிந்தவன் கருணாகரன்.இளவரசரை அதன் வழியே அழைத்து சென்று கொல்ல முயற்சி செய்திருக்கிறான்.கொன்று விட்டதாக நினைத்து கருணாகரன் புதிர் பாதையிலிருந்து வெளியேறி விட்டான்.குற்றுயிராக இருந்த இளவரசரை மலைவாழ் பளியர்கள் காப்பாற்றி ஆதரித்துள்ளனர்.அவர்களின் உதவியோடு வெளியேற முயன்ற இளவரசர் அதில் தோற்று போய் அவர்களின் தலைவனாக மாறி வாழ ஆரம்பித்து விட்டார்.நான் அனுப்பிய தூது புறா ஒன்று வல்லூரால் தாக்கப்பட்டு பொய்மான் கரட்டு வனத்தில் விழுந்து விட்டது.அதை கண்டெடுத்த இளவரசர் தான் உயிரோடு இருப்பதை எனக்கு தெரியப்படுத்தி விட்டார்.ஆனால் அவராலும் வெளியேறி வர முடியாது.நானும் காப்பாற்ற இயலாது.சரியான நேரத்திற்காக நான் காத்திருந்தேன்.இது சரியான நேரம்! “
“இளவரசர் உயிரோடு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.ஆனால் அவரை எப்படி மீட்பது? “
“அவரை மீட்க கருணாகரன் உயிரோடு வெளி வர வேண்டும்.அந்த கள்வர்கள் அவனை கொன்றாலும் அவர்களும் புதிர் பாதையிலிருந்து வெளியேற முடியாமல் இறக்க நேரிடும்.ஆக மூவரின் உயிரும் கருணாகரனின் கையில் இருக்கிறது.”
நிலைமையின் விபரீதம் மூவருக்கும் தெள்ள தெளிவாக புரிந்தது.அதே நேரம் பொய் மான் கரட்டின் புதிர் பாதையில்?
மதிவாணரின் “கருணாகரனை கொன்றால் அவர்கள் இருவரும் மரணமடைவதை தவிர வேறு வழியில்லை! “என்ற வார்த்தைகளை கேட்ட கந்தமாறனும், பூபதியும் அதிர்ச்சியடைந்தனர்.”மந்திரியாரே! என்ன சொல்கிறீர்கள்? “என்றான் கந்தமாறன் பதட்டத்துடன்.
“நான் சொல்வது உண்மை கந்தமாறா! அவர்கள் இருவரின் உயிர் கருணாகரனிடம் இருக்கிறது.நான் யூகிப்பது சரியாக இருந்தால் மூன்றாவதாக இன்னொரு நபரின் உயிரும் கருணாகரனின் கையில்தான் இருக்கிறது.!”
“யார் அந்த மூன்றாவது ஆசாமி! “
“நம் இளவரசன்தான் அந்த மூன்றாவது நபர்! “
“நீங்கள் சொல்வது விளங்கவில்லை.உங்களின் யூகத்தை கூறுங்கள்! “
“என் யூகத்தை சொல்கிறேன் கந்தமாறா! கவனமாக கேள்.இன்று மகேந்திரபுரியின் மன்னனாக இருக்கும் மகேந்திரனுக்கு முன் அரசனாக இருந்தவர் வீர சேனன்.வீர சேனனின் மனைவியின் தம்பிதான் மகேந்திரன்.வீர சேனனின் மகன்தான் நம் இளவரசர் மாறவர்மன்.மாற வர்மன் சிறு பிள்ளையாக இருந்த போதே வஞ்சகமாக தன் தங்கையையும், மாமா வீரசேனனையும் கொன்று அதை விபத்தாக மாற்றி அரியணை ஏறியவன் மகேந்திரன்.சிறு பிள்ளையாக இருந்த மாற வர்மனை கொல்ல பலமுறை முயன்றான் மகேந்திரன்.ராஜவிசுவாசிகளான என் போன்றவர்கள் அவன் திட்டத்தை குலைத்து இளவரசரை காப்பாற்றினோம்.எப்படியோ இளவரசர் வளர்ந்து வாலிப வயதையடைந்தார்.அந்த நேரத்தில் மகேந்திரனுக்கு எதிரி ஒருவன் உள் நாட்டில் உருவானான்.அவன் தன்னை கரிகாலன் என்று அழைத்து கொண்டான்.சிவப்பு நிற துணியால் முகத்தை மறைத்தபடி காணப்படும் அவன் நாட்டின் பல பாகங்களில் திடீர் திடீரென தோன்றி காவலர்களிடமிருந்து ஆயுதத்தை கைப்பற்றுவான்.இருப்பவர்களிடமிருந்து கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு கொடுத்து வந்ததால் நாட்டு மக்களிடம் அவனுக்கு ஆதரவு பெருகியது.அவனது புரட்சி படையில் நிறைய பேர் இருந்தனர்.அவனை பயன்படுத்தி இளவரசருக்கு ஆதரவாக அவனை திருப்பி மகேந்திரனை ஒழிக்க நினைத்தேன்.நான் பெரு வணிகனாக வேடமிட்டு வலிய சென்று கரிகாலனிடம் அகப்பட்டேன்.ஆனால் கரிகாலன் புத்திசாலி.நான் அமைச்சர் என்பதை கண்டு கொண்டு விட்டான்.இருவருக்குமான உரையாடலில் என் திட்டத்திற்கு ஒப்பு கொண்டுவிட்டான்.மகேந்திரனுக்கு எதிராக இளவரசனுக்கு ஆதரவாக செயல்பட ஒப்பு கொண்டவனால் ஆட்சி மாற்றத்தை உண்டாக்க முடியும் என்று நம்பினேன்.நள்ளிரவு நேரத்தில் அரண்மனையிலிருந்து தனித்து வெளியேறும் இளவரசர் கரிகாலனை சந்திப்பதும் ஆலோசனைகள் செய்வதும் வழக்கமானது.அப்படி கடைசியாக கரிகாலனை சந்திக்க சென்ற இளவரசரை காணவில்லை.கரிகாலன் கொல்லப்பட்டு விட்டான்.கரிகாலனை கொன்றது கருணாகரன் என்பது இன்று அரசவையில் தெரிந்து விட்டது.!”
“இது தெரிந்த கதைதானே அமைச்சரே? “
“கரிகாலனை சந்திக்க சென்ற இளவரசரின் கதி என்னவாகி இருக்கும் என்று யோசித்தாயா கந்தமாறா? “
“துறவியாக போய் விட்டதாக மகேந்திரன் சொல்கிறான்.!”
“அதற்கான தேடல் இளவரசருக்கு இல்லை! “
“இளவரசர் கொல்லப்பட்டிருப்பாரோ?”
“இல்லை என்கிறார்கள் ஒற்றர்கள்.கடைசியாக இளவரசரை கைது செய்து கருணாகரன்தான் அழைத்து சென்றிருக்கிறான்.!”
“அப்படியானால்? “
“பொய்மான் கரடின் புதிர் வழியை முழுதாக அறிந்தவன் கருணாகரன்.இளவரசரை அதன் வழியே அழைத்து சென்று கொல்ல முயற்சி செய்திருக்கிறான்.கொன்று விட்டதாக நினைத்து கருணாகரன் புதிர் பாதையிலிருந்து வெளியேறி விட்டான்.குற்றுயிராக இருந்த இளவரசரை மலைவாழ் பளியர்கள் காப்பாற்றி ஆதரித்துள்ளனர்.அவர்களின் உதவியோடு வெளியேற முயன்ற இளவரசர் அதில் தோற்று போய் அவர்களின் தலைவனாக மாறி வாழ ஆரம்பித்து விட்டார்.நான் அனுப்பிய தூது புறா ஒன்று வல்லூரால் தாக்கப்பட்டு பொய்மான் கரட்டு வனத்தில் விழுந்து விட்டது.அதை கண்டெடுத்த இளவரசர் தான் உயிரோடு இருப்பதை எனக்கு தெரியப்படுத்தி விட்டார்.ஆனால் அவராலும் வெளியேறி வர முடியாது.நானும் காப்பாற்ற இயலாது.சரியான நேரத்திற்காக நான் காத்திருந்தேன்.இது சரியான நேரம்! “
“இளவரசர் உயிரோடு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.ஆனால் அவரை எப்படி மீட்பது? “
“அவரை மீட்க கருணாகரன் உயிரோடு வெளி வர வேண்டும்.அந்த கள்வர்கள் அவனை கொன்றாலும் அவர்களும் புதிர் பாதையிலிருந்து வெளியேற முடியாமல் இறக்க நேரிடும்.ஆக மூவரின் உயிரும் கருணாகரனின் கையில் இருக்கிறது.”
நிலைமையின் விபரீதம் மூவருக்கும் தெள்ள தெளிவாக புரிந்தது.அதே நேரம் பொய் மான் கரட்டின் புதிர் பாதையில்?