Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 21
துயில் எழுந்த கருணாகரன் ஆதித்தன் சொன்னதை போலவே பாதையில் கடந்து போன குதிரைகளின் குளம்படி ஆழத்தை வைத்து சகோதரர்கள் இருவரும் தன்னை கடந்து பயணித்து விட்டதாக தப்பாக கணித்தான்.இரண்டிரண்டாக பிரிந்து செல்லும் பாதையில் தன்னைத் தவிர வேறு யாராலும் சரியான பாதையை கண்டு பிடிக்க முடியாதென்னும் போது இவர்கள் எந்த நம்பிக்கையில் சரியான பாதையில் பயணிக்க முடியுமென்று நினைத்தார்கள் என்று உள்ளூர கருணாகரன் ஆச்சரியப்பட்டான்.பிறகு குதிரைகளின் குளம்படி சுவட்டை பின்பற்றி வெகு கவனமாகவும் மெதுவாகவும் முன்னேற தொடங்கினான்.அதே நேரம் கருணாகரனுக்கு பின் புறமிருந்த பாதையில் ஒரு காத தூரத்திற்கு பின்னால் இருந்த சகோதரர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள்.
“அண்ணா! கருணாகரன் மெதுவாகவே பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பான்.நாம் அவனுக்கு முன்னதாக பயணித்து கொண்டிருப்பதாக அவன் நினைத்து கொண்டிருக்கிறான்.நாம் அவன் பின்னால் வருவதை எதிர்பார்த்திருக்க மாட்டான்.இரண்டாக பாதை பிரியுமிடத்தில் வெற்று குதிரைகளை பார்த்தவுடன் நம்மை காணாமல் குழம்ப ஆரம்பிப்பான்.அந்த நேரத்தில் மின்னலாக அவனை பின் தொடரும் நாம் தாக்குதலால் அவனை வீழ்த்த வேண்டும்.நான் கட்டாரியை பயன்படுத்த போகிறேன்! நீ? “
“என் தேர்வு வில்லும் அம்பும்! “
“எனக்கு வலது பக்கம்! உனக்கு இடது பக்கம்! சரியா? “
“சம்மதம்! நம் குறி பார்க்கும் திறமைக்கு கருணாகரன் சிக்கினான்! “
“முதலில் குதிரைகளின் குளம்படி சத்தம் கேட்காமலிருக்க அவற்றின் குளம்பை சுற்றி துணிகளை இறுக கட்டுவோம்! அப்போதுதான் குளம்படி ஓசை கேட்காது! “
இளையவனின் யோசனை உடனே செயல்படுத்தப்பட்டது.இருவரும் சத்தமின்றி கருணாகரனை நெருங்கி கொண்டிருந்த போது கருணாகரன் வெகு கவனமாக பாதையை கவனித்தபடி பயணித்து கொண்டிருந்தான்.முன் சென்ற குதிரைகளின் குளம்படிகளை பார்த்த படி சென்றவனின் முகம் மாறியது.முன் சென்ற குதிரைகளின் குளம்படிகளில் காணப்பட்ட வித்தியாசம் கருணாகரனின் மூளையை குழப்பியது.சட்டென்று குதிரையிலிருந்து இறங்கியவன் அதில் ஒரு குதிரையின் குளம்படிகளை கூர்ந்து கவனித்து விட்டு அதை மட்டும் பின் தொடர ஆரம்பித்தான்.குதிரையின் குளம்பு சுவடுகள் அழுத்தமாக இல்லாமல் மேலோட்டமாக இருந்ததால் கருணாகரனுக்கு குழப்பம் ஏற்பட்டது.அழுத்தம் குறைவான இடத்தில் தேடியவனின் கண்களில் ஆதித்தன் உருவாக்கி குதிரையின் முதுகில் கட்டி அனுப்பிய போலி படுக்கை தென்பட்டது.ஷண நேரத்தில் கருணாகரனுக்கு ஆதித்தனின் தந்திரம் முழுதாக புரிந்தது.போலி படுக்கைகளில் ஒன்று சரியாக கட்டப்படாததால் நழுவி கீழே விழுந்து விட்டதையும் அதனாலேயே குளம்படிகள் மேலோட்டமாக இருப்பதையும் கருணாகரன் தெள்ள தெளிவாக தெரிந்து கொண்டு விட்டான்.தான் வசமாக சிக்கி கொண்டு விட்டதை அறிந்த கருணாகரன் மின்னலென ஒரு முடிவெடுத்தான்்.எப்படியாவது சரியான வழியில் புகுந்து விட்டால் இருவரிடமிருந்து தப்பி விடலாம் என்று நினைத்த கருணாகரனின் நினைப்பு பொய்த்து போனது.எதிரே நாற்காற் பாய்ச்சலில் வந்த புரவிகளின் மேலிருந்த சகோதரர்களின் அரவமற்ற வரவை எதிர்பார்க்காத கருணாகரன் தன் வாளை உருவ எத்தனித்தான்.அரிஞ்சயனிடமிருந்த வில்லிலிருந்து அம்பும், ஆதித்தனின் கையிலிருந்த கட்டாரியும் கருணாகரனை நோக்கி குறி வைத்து பாய்ந்தன.”தொலைந்தேன்! “என்றான் கருணாகரன்.கருணாகரனின் இருபுறமும் சரமாரியாக பாய்ந்த கட்டாரிகளும், அம்புகளும் அவன் உடையை மரத்தோடு சேர்த்து தைத்தன.”மன்னித்து விடுங்கள் தளபதியாரே! உங்களின் புது உடையை சேதப்படுத்தியதற்கு! “என்றான் ஆதித்தன்.மரத்தோடு பிணைக்கப்பட்ட கருணாகரன் எந்த பதட்டமுமின்றி நின்றதோடு “என்னை உன்னால் கொல்ல முடியாது ஆதித்தா! என்னை கொன்றால் வெளியேறும் வழிஉனக்கு தெரியாது“என்றான் இகழ்ச்சி சிரிப்புடன்.
“உன்னை கொன்று விட்டு இங்கிருந்து வெளியேறும் வழியை நான் அறிவேன் கருணாகரா! “என்றான் ஆதித்தன்.
கருணாகரனுக்கு ஏனோ பைராகியின் நினைவு வந்து போனது.
“அப்படியானால் பைராகியை உனக்கு தெரியுமா? “என்றான் கருணாகரன்.
யார் அந்த பைராகி என்று சகோதரர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொள்ள தொடங்கினர்.
துயில் எழுந்த கருணாகரன் ஆதித்தன் சொன்னதை போலவே பாதையில் கடந்து போன குதிரைகளின் குளம்படி ஆழத்தை வைத்து சகோதரர்கள் இருவரும் தன்னை கடந்து பயணித்து விட்டதாக தப்பாக கணித்தான்.இரண்டிரண்டாக பிரிந்து செல்லும் பாதையில் தன்னைத் தவிர வேறு யாராலும் சரியான பாதையை கண்டு பிடிக்க முடியாதென்னும் போது இவர்கள் எந்த நம்பிக்கையில் சரியான பாதையில் பயணிக்க முடியுமென்று நினைத்தார்கள் என்று உள்ளூர கருணாகரன் ஆச்சரியப்பட்டான்.பிறகு குதிரைகளின் குளம்படி சுவட்டை பின்பற்றி வெகு கவனமாகவும் மெதுவாகவும் முன்னேற தொடங்கினான்.அதே நேரம் கருணாகரனுக்கு பின் புறமிருந்த பாதையில் ஒரு காத தூரத்திற்கு பின்னால் இருந்த சகோதரர்கள் கிளம்ப ஆயத்தமானார்கள்.
“அண்ணா! கருணாகரன் மெதுவாகவே பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பான்.நாம் அவனுக்கு முன்னதாக பயணித்து கொண்டிருப்பதாக அவன் நினைத்து கொண்டிருக்கிறான்.நாம் அவன் பின்னால் வருவதை எதிர்பார்த்திருக்க மாட்டான்.இரண்டாக பாதை பிரியுமிடத்தில் வெற்று குதிரைகளை பார்த்தவுடன் நம்மை காணாமல் குழம்ப ஆரம்பிப்பான்.அந்த நேரத்தில் மின்னலாக அவனை பின் தொடரும் நாம் தாக்குதலால் அவனை வீழ்த்த வேண்டும்.நான் கட்டாரியை பயன்படுத்த போகிறேன்! நீ? “
“என் தேர்வு வில்லும் அம்பும்! “
“எனக்கு வலது பக்கம்! உனக்கு இடது பக்கம்! சரியா? “
“சம்மதம்! நம் குறி பார்க்கும் திறமைக்கு கருணாகரன் சிக்கினான்! “
“முதலில் குதிரைகளின் குளம்படி சத்தம் கேட்காமலிருக்க அவற்றின் குளம்பை சுற்றி துணிகளை இறுக கட்டுவோம்! அப்போதுதான் குளம்படி ஓசை கேட்காது! “
இளையவனின் யோசனை உடனே செயல்படுத்தப்பட்டது.இருவரும் சத்தமின்றி கருணாகரனை நெருங்கி கொண்டிருந்த போது கருணாகரன் வெகு கவனமாக பாதையை கவனித்தபடி பயணித்து கொண்டிருந்தான்.முன் சென்ற குதிரைகளின் குளம்படிகளை பார்த்த படி சென்றவனின் முகம் மாறியது.முன் சென்ற குதிரைகளின் குளம்படிகளில் காணப்பட்ட வித்தியாசம் கருணாகரனின் மூளையை குழப்பியது.சட்டென்று குதிரையிலிருந்து இறங்கியவன் அதில் ஒரு குதிரையின் குளம்படிகளை கூர்ந்து கவனித்து விட்டு அதை மட்டும் பின் தொடர ஆரம்பித்தான்.குதிரையின் குளம்பு சுவடுகள் அழுத்தமாக இல்லாமல் மேலோட்டமாக இருந்ததால் கருணாகரனுக்கு குழப்பம் ஏற்பட்டது.அழுத்தம் குறைவான இடத்தில் தேடியவனின் கண்களில் ஆதித்தன் உருவாக்கி குதிரையின் முதுகில் கட்டி அனுப்பிய போலி படுக்கை தென்பட்டது.ஷண நேரத்தில் கருணாகரனுக்கு ஆதித்தனின் தந்திரம் முழுதாக புரிந்தது.போலி படுக்கைகளில் ஒன்று சரியாக கட்டப்படாததால் நழுவி கீழே விழுந்து விட்டதையும் அதனாலேயே குளம்படிகள் மேலோட்டமாக இருப்பதையும் கருணாகரன் தெள்ள தெளிவாக தெரிந்து கொண்டு விட்டான்.தான் வசமாக சிக்கி கொண்டு விட்டதை அறிந்த கருணாகரன் மின்னலென ஒரு முடிவெடுத்தான்்.எப்படியாவது சரியான வழியில் புகுந்து விட்டால் இருவரிடமிருந்து தப்பி விடலாம் என்று நினைத்த கருணாகரனின் நினைப்பு பொய்த்து போனது.எதிரே நாற்காற் பாய்ச்சலில் வந்த புரவிகளின் மேலிருந்த சகோதரர்களின் அரவமற்ற வரவை எதிர்பார்க்காத கருணாகரன் தன் வாளை உருவ எத்தனித்தான்.அரிஞ்சயனிடமிருந்த வில்லிலிருந்து அம்பும், ஆதித்தனின் கையிலிருந்த கட்டாரியும் கருணாகரனை நோக்கி குறி வைத்து பாய்ந்தன.”தொலைந்தேன்! “என்றான் கருணாகரன்.கருணாகரனின் இருபுறமும் சரமாரியாக பாய்ந்த கட்டாரிகளும், அம்புகளும் அவன் உடையை மரத்தோடு சேர்த்து தைத்தன.”மன்னித்து விடுங்கள் தளபதியாரே! உங்களின் புது உடையை சேதப்படுத்தியதற்கு! “என்றான் ஆதித்தன்.மரத்தோடு பிணைக்கப்பட்ட கருணாகரன் எந்த பதட்டமுமின்றி நின்றதோடு “என்னை உன்னால் கொல்ல முடியாது ஆதித்தா! என்னை கொன்றால் வெளியேறும் வழிஉனக்கு தெரியாது“என்றான் இகழ்ச்சி சிரிப்புடன்.
“உன்னை கொன்று விட்டு இங்கிருந்து வெளியேறும் வழியை நான் அறிவேன் கருணாகரா! “என்றான் ஆதித்தன்.
கருணாகரனுக்கு ஏனோ பைராகியின் நினைவு வந்து போனது.
“அப்படியானால் பைராகியை உனக்கு தெரியுமா? “என்றான் கருணாகரன்.
யார் அந்த பைராகி என்று சகோதரர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொள்ள தொடங்கினர்.