Thanks sisமுதல் எபி சூப்பரா இருந்திச்சு சிஸ் பவி இவ்ளோ அழுறா... ரிஷி அவளை நக்கலாவும் பாக்குறான்... வேதனையாகவும் பாக்குறான்... இன்ட்ரெஸ்டிங்...
ஆல் தி பெஸ்ட் சிஸ்
Thanks paபவியாகவே முடிவு பண்ணிட்டா.. கேஸ்ல தோற்றிடுவேன்னு... அதேமாதிரி நடந்திச்சு.... ஆதிக்காக தான் இந்த கேஸா.... இவங்க பிரியுறஅளவுக்கு என்ன நடந்திருக்கும்
நன்றிகள் பல சிஸ்பவியாகவே முடிவு பண்ணிட்டா.. கேஸ்ல தோற்றிடுவேன்னு... அதேமாதிரி நடந்திச்சு.... ஆதிக்காக தான் இந்த கேஸா.... இவங்க பிரியுறஅளவுக்கு என்ன நடந்திருக்கும்
தேங்க்யூ சோ மச் டியர் தப்பா நினைக்க எதுமே இல்ல நேரம் ஒதிக்கு படிக்கற உங்களுக்கு இது கூட சொல்ல உரிமை இல்லையா...நிறையாவே இருக்கு சிஸ்...என்னோட பார்வையில பொண்ணு குணம் சரியில்லனா கூட சுத்தி இருக்கிற ஆண்கள் சரியா இருந்தா அவ வாழ்க்கை சொர்க்கம்..இதான் கருவா யோசிச்சேன்...நீங்க பவியை திட்டும் போது ஒரளவு ஒகேனு தோணுது நன்றி சிஸ்நான் என்பதே நீயல்லவா
இதில் எனக்கு ரிஷி ரொம்ப பிடித்தது, அவனுக்கு அடுத்து ராகவ் அண்ட் வெங்கட்..
ரிஷியின் காதல் எப்போவும் குறையவே இல்லை... பார்த்த முதல் நாளில் வந்தது கடைசி வரை அவள் விலகிய போது கூட அவன் சேர்ந்து கொள்ள தான் நினைச்சான்.. அதற்காக குழந்தை வச்சு எல்லாம் பண்ணுறான்... அவனுக்கு ராகவ் கூறும் அறிவுரை எல்லாம் அந்த வீட்டில் அவன் தப்பி பிழைத்த ஜீவன் போல இருக்குது... ரிஷி அவளை அடித்தது தப்பு என்று எனக்கு தோணலை... அவன் தம்பியை போய் அழைத்து வர சொன்னது வேண்டும் என்றால் தவறு மற்றபடி எனக்கு அவன் மேல வேற தப்பு சொல்ல முடியலை... அவளுக்காக மாமியார் வீட்டுக்கு கூட்டி போவது எல்லாம் ஒரு வார்த்தை சொல்லாது செய்யுரான்.. இவன் காதல் ரொம்ப பிடிச்சது..
வெங்கட் இவன் அக்காவிற்கு அவ்வளவு செய்த குடும்பம் இருந்தும் அந்த வீட்டு பெண்ணுக்கு ஒரு பிரச்சனை எனும் போது மனிதனாக நடந்துக்குறான்.. ராகவியின் காதலும் சூப்பர்.. அவனுக்காக அவள் மாறுவது, அன்பு இருந்தா போதுமே அந்த அன்புக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்.. அதை அவ சரியா செய்யுரா வெங்கட் அக்காவை கடிந்து ஒரு வார்த்தை சொல்லாது அவளுக்காக எவ்வளவு செய்யூரான்.. இவனை போல ஒரு தம்பி இருந்தால் அவங்க லக்கி தான்
ராகவ் அவன் எல்லா விசயத்திலும் சரியா இருக்கான்.. மேனகா அண்ட் ராதா ஒருவேளை பவித்ரா வீட்டில் கொஞ்சம் நிதானமாக பொறுமையாக பேசி இருந்தால் இந்த அளவுக்கு போய் இருக்க மாட்டாங்க நினைக்கிறேன்.. அவங்க கோபத்தை காட்டிய விதம் தவறு..
பவித்ரா எனக்கு இவள் செய்ததில் பல விஷயங்களில் உடன் பாடு இல்லை.. முதலில் கௌசிக் பிடிக்கவில்லை என்றதை வெளிப்படையாக கூறாது இருந்தது.. இவள் காதலை சொல்லி இருந்தால் அவன் விலகி இருப்பான், ஆனால் இவ முதலில் பெற்றோர் கிட்ட சொல்லி இருக்கணும்.. நிச்சயம் முடிந்தபின் நிறுத்துவதோ, இல்லை நிச்சயம் அன்று நிறுத்துவதோ சரி இல்லை.. ரொம்ப தப்பு.. அந்த ஹோட்டலில் கூட ஓவர் சீன் create பண்ணிட்டா... ரிஷி அம்மா அப்பாவிடம் யார் என்று தெரியாது பேசியது பெரிய தப்பு.. நீ ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்லமா யாரையும் அப்படி எடுத்து எரிந்து பேச, ரிஷி பெற்றோர் என்றதும் குற்ற உணர்வு பயம் வருது, வேற யாரும் என்றால் வந்து இருக்குமா சந்தேகம் தான்.. அடுத்து அம்மா அப்பாவிற்கு ஃபோன் செய்து பேசாதது அவங்களை குறை சொன்னது, பகல் முழுசும் மேடம் அப்படி என்ன வெட்டி முறிக்குறீங்க, காசு குடுக்குரேன் சொல்லி தம்பி கணவன் இருவரையும் கடுப்பு யேத்தியது, இது கூட சின்ன விசயம் புரியாமல் செஞ்சு இருக்கலாம்... ஆனால் குழந்தை நிலை தெரிந்தும் அவளின் தன்னிச்சையான முடிவு எனக்கு சுத்தமா பிடிக்கலை.. இதில் உரிமை பேச்சு வேற.. எதையும் முழுசா தெரிந்து கொள்ளாமல் அவ அம்மாகிட்ட சண்டை போட்டது, ரிஷி கிட்ட சண்டை போட்டது இப்படி எல்லாமே இவ தான் பண்ணி இருக்கா.. என்ன இவளோட காதல், அப்படி அவன் மேல நம்பிக்கை இல்லாமல், காதலையே அசிங்க படுத்திட்டு பெருசா தியாகி போல பேசுரா... தனக்கு வேணும் என்றால் இவ தான் வாய் திறந்து கேட்கணும்.. சும்மா எல்லாமே இவ மடியில வந்து கொட்டுமா என்ன! ரிஷி போல புரிஞ்சு ஒருந்தன் பாத்து பாத்து செஞ்சுமே இவ்வளவு பிரச்சனை என்றால், அப்படி இல்லாத ஆட்களிடம் இவள் எப்படி குப்பை கொட்டி இருப்பா.. இவளுக்கு எல்லாமே எதிர்பார்ப்பு தான்.. இவள் தப்பை உணர்ந்த போலவே இல்லை... ஏதோ ரிஷியின் காதல் இருந்ததோ பிழைச்சது வாழ்வு! குடும்பமே பேரன் அண்ட் மகனுக்காக வந்தது.. அந்த விசயத்தில் என்ன தான் தப்பு பண்ணி இருந்தாலும் அவங்க மனநிலையை அழகா சொல்லிட்டீங்க.. அவங்க இறங்கி வந்து மேல போயிட்டாங்க..
தப்பா எடுத்துக்காதீங்க சிஸ்டர் நான் இப்படி சொல்லிட்டேன் என.. எனக்கு ஏனோ பவி மேல பெரிய இம்பிரஷன்/பிடிப்பு இல்லை
ரொம்ப நன்றி மா எல்லா கதைகளிலும் ஆண்களைத்தான் குறை சொல்வோம் இந்த முறை ஒரு பெண்ணை கொஞ்சம் குறை சொல்லலாம்னு எடுத்தது தான் பவியோட கேரக்டர்.எதுமே பண்ணமாட்டாங்க எல்லாமே கைல கிடைக்கனும்னு நினைப்பாங்க அதை சொல்ல வந்தேன்...அப்பா கணவன் சகோதரன் இந்த மூன்று உறவும் நல்லதா அமைச்சா அந்த பொண்ணு எப்படி இருப்பா அதான் சொல்ல வந்தேன்...ஒரளவு சொன்ன திருப்தி இருக்கு இந்த விமர்சனம் மூலமா நன்றி சிஸ்நான் என்பதே நீயல்லவா
சூப்பர் கதை சிஸ்
ரொம்ப அழகா அருமையா இருந்திச்சு.... ஒருஆழமான காதலை ஆத்மார்த்தமா வெளிபடுத்திச்சு தலைப்புக்கு ஏற்ற மாதிரி ரிஷியோட காதலும் ஒவ்வொரு இடத்திலும் அழகா தெரிந்தது.
முதல் எபிசோட்ல பவியை பார்த்து ரிஷி நக்கலா சிரிச்சப்போ ஆண்டி ஹீரோவோனு கூட நினச்சேன். ஆனா முழுதும் படிச்சா தான் தெரியுது அவன் ஒரு வேற லெவல் ஹீரோனு.. ரியலி இம்ப்ரஸ்சிவ் கேரக்டர் தன்னோட காதல் சேரறதுக்காக அவன் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் காதலோட ஆழத்தை காட்டுது....
என்னென்னவோ பண்ண பிறகும் பவியை குழந்தைதனமா பண்றானு புரிஞ்சுகிட்டு அவளுக்காக யோசித்தது அங்க இருக்கிறமேன் நீ the real hero and good daddyv
ரிஷியை ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்திருச்சு அவளை கண்ட நொடி முதல் பிரிந்து சென்றாலும் துளி அளவு காதல் கூட குறையாமல் இருந்தது இந்த கதையில ரிஷியோட காதல் ஜெயிச்சிடுச்சு.... பவியோடது வேணும்னா வெளிபடுத்த தெரியா உள்ளத்தின் காதல்னு வச்சுக்கலாம்.
பவியை பத்தி சொல்லணும்னா எடுத்தோம் கவிழ்த்தோம் னு பண்ணிட்டு போயிட்டா.... எதையுமே ஒழுங்கா யோசிக்காம பண்ணியிருக்கா
ரிஷி நிறைய ஸ்பேஸ் குடுத்த அப்ரோவும் அதை ஏத்துக்காம இருந்தது.... தன் பையன் எனக்கு கிடைக்கணும் அப்படிங்கிறதை விட தான் தோத்திடகூடாது ரிஷி ஜெயிச்சிட கூடாது அது தான் அவளோட பாயின்டா இருந்திச்சு ரிஷி காதலை சேர்க்கிறதுக்காக ஆதி அவ கூட இருக்கணும்னு நினைச்சான். பட் இங்க இரண்டு பேருமே ஆதியை பற்றி ஒழுங்கா நினைக்கல... ஆதிக்கு இரண்டு பேரோட பாசமும் கிடைக்கலனு தான் சொல்வேன். ஏன்னா அப்படி நினைச்சிருந்தா நிறைய வழி இருக்கு (வாரத்தில நாலு நாள் ஒருத்தவங்க கூட.. மற்ற மூணு நாள் இன்னொருத்தங்க கூட....) அதுல எதிலயாச்சும் பேசி சரிபண்ணியிருக்கலாம் அதுஅவங்களை சீக்கிரமே சேர்த்து வச்ஙிருக்கும் பட் இரண்டு பேருமே அது பண்ணல இரண்டு பேருமே நிதானமா ஒரு தடவை பேசியிருந்தா நல்லா இருந்திருக்கும்... ஆனா என்ன கதை சீக்கிரம் முடிஞ்சிருக்கும் அப்படி இல்லாம
கடைசி வரைக்கும் திக் திக் லெவல்ல வச்சிருந்தீங்க ரைட்டர் எக்ஸ்
கௌசிக் முன்கோவம்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திட்டு போனான்.
ஹோட்டல்ல நடந்தது முன்கோவம் கிடையாது... அது நியாயமான கோவம்தான்... இது என்னோட கருத்து.... கௌசிக் ஜெம்.... அதனால தான் பவியையும் விட்டுகொடுக்காம் திரும்பவும் அவளை ஏத்துக்க முன்வந்தான்.
வெங்கட் அக்காவை விட்டும் கொடுக்காம அவளுக்கு துணையா தோழனா அவ வாழ்க்கைகாக ரிஸ்க் எடுத்தது சூப்பர் ராகவி விஷயத்தில் மனிதனா காதலனா ஜெயிச்சுட்டான் ராகவ் அந்த வீட்டில ரிஷிக்கு அடுத்து ரொம்ப பிடிச்சது ராகவ் தான் .. கடைசிவரைக்கும் அன்டர்ஸ்டேன்டிங் ஹீரோஸ்ஸாவே வந்துட்டாங்க வெங்கட் அன்ட் ராகவ் மேனகா ராதா மனமாற்றம் , மேகலா நாராயணன் தாழ்வுமனப்பாண்மை போனதுலாம் சூப்பர் இரண்டு வீடும் ஒரே குடும்பமா ஜாலியா இருந்தது சூப்பர் ரிஷி பவி காதல் நல்லவேளை சேர்த்து வச்சுட்டீங்க இல்லனா கஷ்டமா இருந்திருக்கும்........ ஏன்னா அவங்க காதல் கதை உள்ளுக்குள் அவ்ளோ தாக்கத்தை ஏற்படுத்திச்சு எல்லா கதையிலும் ஹீரோ தான் கொஞ்சம் முரணா இருப்பாங்க.... இந்த கதையில பவியை கொஞ்சம் வித்தியாசமாக காட்டியிருக்கீங்க.....அது நல்லாயிருக்கு
ரைட்டர் எக்ஸ்
உங்களோட தெளிவான எழுத்து நடை,
அழகான வர்ணிப்பு, உங்கள் எழுத்து ஏற்படுத்திய தாக்கம் எல்லாம் சொல்ல வார்த்தையே இல்லை அவ்ளோ அமேசிங்கா இருந்திச்சு .
ஆல் தி பெஸ்ட் சிஸ்