பூவை 10
கண்மணி மிரண்டு போனாள். லதா அறைக்கு வெளியே நின்று நடக்கும் கூத்தை கண்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தாள். லதாவின் மனம் எதையோ அவளுக்கு சொல்லியது. என்ன நினைத்தாலோ சட்டென்று கண்மணியை வெளியே அழைத்தாள்.
“என்னம்மா?“
“நம்ப வீட்டுக்கு போவோம்?“ ஒற்றை பதில் மட்டுமே லதாவிடம் வந்தது. அவள் மிகவும் பயந்து போய் இருந்தாள். அது கண்மணிக்கு புரிந்தது. அவள் என்ன பதில் சொல்வது என்ற யோசனையில் இருந்தாள் அதற்குள் லதாவே மீண்டும் கணைகளை தொடுத்தாள்.
“என்னடி யோசிச்சிட்டு நிக்கிற? இந்த பைத்தியகார பயலோடோ இனியும் நீ வாழ போறியா? முடியாது? நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். நம்ப இங்க இருந்தோம், நம்ப உயிருக்கும் ஆபத்து. பைத்தியகார பய.. பைத்தியகார பய“, அவ்வளவு தான் லதா சொற்களை அடுக்கி கொண்டே போக போக கண்மணிக்கு கோப உஷ்ணம் தலைக்கு மேல் ஏறியது.
“போதும் நிறுத்து“ என்று கண்மணி சொன்ன அந்த சொல் எக்கோவே அடித்தது. “இதுக்கு மேல ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது, நீ உன் வீட்டுக்கு போ“ தன் அம்மாவே தன்னை புரிந்துகொள்ளாமல் பேசுகிறாளே என்ற ரணம் வார்த்தைகளாய் வெளியேற கண்களை கண்ணீரும் சூழ்கொண்டது. லதா விழிகள் திடீரென்று அகண்டது, கண்மணி தன் அம்மாவின் விழிகளையே கூர்ந்து பார்த்தாள். கண்மணியின் முதுகின் பின்னால் சத்தியேந்திரன் நின்று இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை இது நேரம் வரை கேட்டுக்கொண்டு இருந்தான். கண்மணி திரும்பி சத்தியேந்திரனை பார்த்தாள் அவன் முகம் முழுவதும் கலவரம். இவளுக்கு என்ன சொல்லி அவனை சமாதானம் செய்வது என்றும் புரியவில்லை அவன் தலையை தொட்டு தொட்டு பார்த்தான். அவன் முகத்தை கைகளால் துடைத்து துடைத்து விட்டான். கண்மணி அவன் அருகே நெருங்க ஒரு அடி எடுக்க, அவன் தன் வலது கையை உயர்த்தி முன்னேறாதே என்று தடை போட்டான்.
“சத்யா நான்? அம்மா?“ அவளுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. வார்த்தைகள் திக்கி திக்கி வெளியேறின. மீண்டும் அந்த கைகளை ‘நிறுத்து‘ என்பது போல் ஆட்டினான். அறையின் பின்பக்கம் திரும்பி இடுப்பில் கைவைத்து தன் உதட்டை கடித்துக்கொண்டு நின்றான். கண்ணீர் கசிந்தோடிக்கொண்டு இருந்தது. இத்தனையும் நடந்துக்கொண்டே இருக்க லதா ஒரு பக்கம் வீட்டின் உள் சென்று தான் கொண்டு வந்த பையை எடுத்துக்கொண்டு வந்தாள். ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் கணவன் இட, வலம் ஆடும் ஊஞ்சல் போல மனம் ஓயாது விசும்பி கொண்டு இருந்தது. லதா மற்றபடி எதுவும் சொல்லவில்லை கைபையுடன் வெளியேறினார். அவளை தடுக்கவும் முடியவில்லை, இவனை சமாதானம் செய்யவும் முடியவில்லை. சத்தியேந்திரன் படால் என்று அறைகதவை அடித்து சாத்தினான். கதவை தட்டு தட்டென்று தட்டினாள், அவன் உள்ளிருந்து “நீயும் போ..நீயும் போ..“ என்று கத்தினான்.
“நான் போக மாட்டேன். நான் போக மாட்டேன்.. உங்கள விட்டுட்டு நான் போகவே மாட்டேன். விட்டுட்டு போறதுக்காக உங்க கையபிடிச்சி இந்த வீட்டுக்குள்ள வரல உங்க கூடவே கடைசிவரைக்கும் இருக்க தான் இந்த வீட்டுக்குள்ள வந்தேன். எந்த சமயத்துலயும் நான் உங்கள விட்டு போகவே மாட்டேன் சத்யா. கதவ திறங்க சத்யா..“ கதவில் தலைமுட்டி கண்ணீர் வடித்தாள். அவன் அந்த பக்கம் கண்கள் கலங்கி நின்று கொண்டு இருந்தான்.
மெல்ல அந்தி வானம் மஞ்சளை பூச தொடங்கியது. மெர்ஸி வேலை முடிந்து ஹாஸ்பிட்டலை விட்டு வந்தாள். ஆட்டோவுக்கு நின்று கொண்டிருக்கும் போது பைக்கொன்று அவளை நெருங்கி வந்து நின்றது. அவள் கண்டுக்கொள்ளாதது போல் நின்றாள். விடாமல் ஹாரன் எழுப்பியது. மெர்ஸி திரும்பி அந்த பைக்கில் இருந்த ஆளை பார்த்தாள்.
“சங்கடம் கொடுக்க வேண்டியது அப்பறம் சமாதானமும் படுத்த வேண்டியது.“ பைக்கில் இருந்தவன் ஹெல்மெட்டை கழட்டினான். பெர்னட் தான் வந்திருந்தது.
“என்ன உனக்கு சங்கடம் கொடுத்தாங்க? அந்த காபி டம்ளர் எடுத்து கொடுக்கலையே அதுவா“
பைக்கை திருப்பி ஸ்டார்ட் செய்து உர்..உர்..என்று சத்தம் கொடுக்க ஆக்ஸிலேட்டரை விடாமல் திருவிக்கொண்டு இருந்தான். மெர்ஸி பைக்கில் ஏறி அமர்ந்தாள் அமரும் போதே “அந்த காபி டம்ளர் மட்டும் தான் என்னோட பிரச்சனையா?“ என்றாள். பைக்கை மெல்ல அவ்விடம் விட்டு கிளப்பினான்.
“உங்க அம்மா? நான் அவங்கள எப்படி பார்த்துக்குறேன் அவங்க என்ன எப்படி பார்த்துக்குறாங்க ஹீஉம் சொல்லு. நான் காலையிலயே எல்லா வேலையும் முடிச்சிட்டு வேலைக்கு போயிட்டு வந்து திரும்ப வீட்டுல இருக்க வேலையையும் பாக்கனும் அவங்க காபி குடிச்ச டம்ளர கூட சிங்குல போட மாட்டாங்க. எங்க அம்மா வீட்டுக்கு போய் முழுசா ஒரு வருஷம் ஆக போகுது உங்களுக்குள்ளயே என் வாழ்க்கை முடிஞ்சிடுமோன்னு பயமா இருக்கு. ஞாயிற்று கிழமை ஃபிரியா இருக்கும் போது வெளிய போகலாமான்னு நினைப்பேன் நீ உன் பிரண்ட்சோட கிரிக்கேட் ஆட போயிடுவ பெரிய கபில் தேவ்.“ வரும் வழி நெடுகிலும் பேசிக்கொண்டே வந்தாள். அவன் பூம்பூம் மாடு போல தலையை ஆட்டிக்கொண்டே வந்தான். அப்பார்ட்மென்ட் வாசலில் வந்து வண்டி நின்றது. மெர்ஸி இறங்கினாள் “ஒரு இருநூறுவா குடேன்.“ என்றான்.
“எதுக்கு?“
“அம்மாவுக்கு பழம் வாங்க?“
“டேய் முந்தாநாள் தானடா வாங்கிட்டு வந்து போட்ட“
“என்னடி திங்கிறதுக்கு எல்லாம் கணக்கு பண்ற?“ இருவரின் பேச்சுக்கு குறுக்காக அப்பார்ட்மெண்ட் பிள்ளைகள் பேட்டையும் ஸ்டெம்பையும் தூக்கி கொண்டு அங்கும் இங்கும் திரிந்து ஓ என்று சத்தம் எழுப்பி கிரிக்கெட் விளையாட இடம்பிடித்துக்கொண்டு இருந்தனர். காதுகளை பொத்திக்கொண்டு கத்தலாக சொன்னாள்.“நான் திங்கிறதுக்கு சொல்லல, அவங்களுக்கு ஏற்கனவே கிட்னில பிராப்ளம் இருக்கு. டாக்டர் நீர் பொருட்கள் அதிகமா எடுத்துக்க வேண்டாம்னு சொல்லிருக்காரு. ஆனா உங்க அம்மாவ பாரு பிரிட்ஜ்ல எந்நேரமும் கூல்டிரிங்ஸ் இருக்கனும் பழம் இருக்கனும். வயசாயிட்டா வாய கட்டுபடுத்தனும், நம்ப இப்போ இருக்க நிலைமைக்கு பெரிய செலவ இழுத்துவிட்டாங்கன்னா எங்க போறது.“
மெர்ஸி அடுக்கி கொண்டே போக பெர்னட் நெழிந்து கொண்டு நின்றான். அப்போது சிறுவன் ஒருவன் வந்து “அங்கிள் இது எங்க பிளேஸ் நகருங்க“என்றான்.
“இருடா இவன் வேற தலைவலி“ சலித்துக்கொண்டு சொன்னான்.
“நான் நல்லத சொன்னா உனக்கு தலைவலி தான், நீ அனுபவிக்கும் போது தான் தெரியும்“ கடுகடுவென பொரிந்துக்கொண்டே கைபையில் இருந்து இருநூறு ரூபாயை எடுத்து அவன் பைக் மீது வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் சென்றாள்.
“எவ்வளவு சொன்னாலும் சமாதானம் ஆக மாட்டா?“ என்று புலம்பிக்கொண்டே வண்டியை நகர்த்தினான். மெர்ஸி லிப்டை விட்டு இறங்கினாள். மேரியும் பக்கத்துவீட்டு பெண்ணும் ஏதோ தங்களை மறந்து கதைவைத்துக்கொண்டு இருந்தனர். மெர்ஸி சற்று நெருங்கியபோது அவர்கள் பேசுவது அறைகுறையாக காதில் ஏறியது.
“அவ தான் சரியான சோவை, நீர்கட்டி இருக்குன்னு சொன்னாங்க.“
மேரி பேசிக்கொண்டே போக, அவள் முகத்தின் முன் நின்ற பெண் கண்ணால் ஜாடைக்காட்டினாள். சற்று நேரத்தில் பிளேட்டையே மாற்றிப்போட்டால் மேரி, “என் மருமக காலையிலயே எல்லாம் செஞ்சிட்டு போயிடுவா. என் மேல பிரியம் தான்“, என்று அவள் வந்ததை அறியாதவள் போல அடுத்த கதையை விட்டுக்கொண்டு இருந்தாள். செருப்பை அவிழ்த்த போது சுவற்றில் அடித்து அங்கும் இங்கும் சிதறியது. விடுவிடுவென்று உள்ளே சென்று கிட்சனை பார்த்தாள், சிங் முழுவதும் சாமான் நிரம்பி போய் இருந்தது. திடுபுடுவென அதையும் இதையும் தூக்கி அடித்துவிட்டு அறைக்கு வந்து கதவை மூடினாள் கதே கிழியும் சத்தம் எழுப்பியது. கதவு இருக்கா இல்லை போயிட்டா என்று கூட மேரிக்கு தோன்றியது. சிறிது நேரம் கழித்து பெர்னட் வீடு வந்தான். கிட்சனில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள் மெர்ஸி அவள் அருகே வந்தான்.
“இந்த பாரு இந்த புரூட் சாப்பிட்ட கரு ஸ்டாங்காகுமா“ என்று பழத்தை எடுத்து கையில் வைத்து காட்டினான். காலையில் டீ போட்ட பாத்திரம் ஈரம் இல்லாமல் கிடந்ததால் நன்றாக காய்ந்து போய் இருந்தது. அழுத்தி பிடித்து தேய்த்துக்கொண்டு இருந்தாள்.
“என்னடி பேசமாட்டுற இந்த தடவை கன்பார்ம் ஆயிடும்ல“
பால் பாத்திரத்தை படீர் என்று கீழே ஒரே போடு தான். ஒரு நிமிடம் பெர்னட்டே பதறி போனான்.
“மெசினா, நான் மெசினா உனக்கு எப்படி இருந்தாலும் நான் புள்ள பெத்து கொடுத்துடனும். உங்க அம்மாவுக்கு ஊழியம் பண்ணனும், சம்பாதிக்கனும். ஆ…ஆ.. என்னால முடியல மெண்டல் டார்ச்சலா இருக்கு. நான் உங்களால பைத்தியம் ஆக போறேன்.“
தலையை பிடித்துக்கொண்டு காட்டு கத்தலாக கத்தினாள்.
“ஏன் இப்போ டென்சன் ஆகுற?“ பெர்னட் சமாதானம் செய்யும் நோக்கில் அமைதியாக பேசினான்.
“காலையில எழுந்தரிச்சா பீரியட் வந்துடுமாங்குற நைட் படுக்கும் போது பீரியட் வந்துடுமாங்குற. கேவலம் செக்சு கூட கால்கூலேசன் போட வேண்டியதா இருக்கு. உங்க அம்மா ஊரு பூரா எனக்கு வியாதி இருக்குன்னு கதை வேற வைக்கவேண்டியது? எனக்கா பிரச்சனை சொல்லு எனக்கா பிரச்சனை. கல்யாணம் ஆகி மூனு வருஷம் தான் ஆகுது அதுக்குள்ள நூறு ஹாஸ்பிட்டல் படுற பாடுபூரா நான் தானே. எவ்வளோ கஷ்டம் இருந்தாலும் நான் தாங்கிக்கிறேன் ஏன்னா நீ ஆம்பளன்னு நிரூபிக்கனுமே அதுக்கு உனக்கு புள்ள வேணும். டிரிட்மெண்ட் பண்ணிட்டு வந்தேனே எங்கயாவது எனக்கு ரெஸ்ட் கொடுத்திங்களா?“ இடைவெளி இல்லாமல் கத்தி கத்தி தன் கோபத்தை தீர்த்துக்கொண்டு இருந்தாள்.
“எல்லாத்துக்கும் எரிஞ்சி விழு அதனால தான் நமக்கு புள்ளையே பொறக்கல போல“ என்று கடுப்படித்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான். அப்படியே சரிந்து கிட்சனில் உட்கார்ந்தாள் மெர்ஸி.
இரவு உணவை தயார் செய்து வைத்து விட்டு தன் அறையில் வந்து படுத்து விட்டாள். அம்மாவும், பையனும் சாப்பிட்டு விட்டு பெர்னட் பெட்ரூமிற்கு வந்தான். மெர்ஸி படுத்து கண்களை மூடி இருந்தாள். அவன் மெர்ஸி தோள்களில் கைகளை வைத்தான். அவள் திரும்பவில்லை. “மெர்ஸி இன்னைக்கு நம்ப ஒன்னாயிருக்கனும் டாக்டர்...“ அவன் அந்த வாக்கியத்தை முடிப்பதற்குள் நேராக படுத்து “ஊம்.. வா...“ என்றாள். நடுநிசி மெர்ஸி உறக்கம் இன்றி பிரண்டு பிரண்டு படுத்துக்கொண்டு இருந்தாள். பெர்னட் நன்றாக உறங்கி கொண்டு இருந்தான். சாப்பிட்டியா என்று கூட யாரும் கேட்டவில்லையே என்று எண்ணினாள். கண்கள் முழுவதும் நீர் நிரம்பி கன்னங்களை தொட்டு ஓடிக்கொண்டு இருந்தது.
கண்மணி சோபாவில் சாய்ந்து உட்கார்ந்த படியே அமர்ந்திருந்தாள் விழிகளில் நீர் வடிந்தோடியது. இரவு இருவருக்கும் இதமானதாக இல்லை முள்ளை போல உடலெங்கும் குத்திக்கொண்டு இருந்தது. இருவரும் நித்திரை இன்றி ஆளுக்கொரு இடத்தில் இருந்தனர். பெண் மனம் எப்போதுமே பிரியபட்டவர்களுக்கே புரியபடாத விடுகதை தான்.
கண்மணி மிரண்டு போனாள். லதா அறைக்கு வெளியே நின்று நடக்கும் கூத்தை கண்கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தாள். லதாவின் மனம் எதையோ அவளுக்கு சொல்லியது. என்ன நினைத்தாலோ சட்டென்று கண்மணியை வெளியே அழைத்தாள்.
“என்னம்மா?“
“நம்ப வீட்டுக்கு போவோம்?“ ஒற்றை பதில் மட்டுமே லதாவிடம் வந்தது. அவள் மிகவும் பயந்து போய் இருந்தாள். அது கண்மணிக்கு புரிந்தது. அவள் என்ன பதில் சொல்வது என்ற யோசனையில் இருந்தாள் அதற்குள் லதாவே மீண்டும் கணைகளை தொடுத்தாள்.
“என்னடி யோசிச்சிட்டு நிக்கிற? இந்த பைத்தியகார பயலோடோ இனியும் நீ வாழ போறியா? முடியாது? நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். நம்ப இங்க இருந்தோம், நம்ப உயிருக்கும் ஆபத்து. பைத்தியகார பய.. பைத்தியகார பய“, அவ்வளவு தான் லதா சொற்களை அடுக்கி கொண்டே போக போக கண்மணிக்கு கோப உஷ்ணம் தலைக்கு மேல் ஏறியது.
“போதும் நிறுத்து“ என்று கண்மணி சொன்ன அந்த சொல் எக்கோவே அடித்தது. “இதுக்கு மேல ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது, நீ உன் வீட்டுக்கு போ“ தன் அம்மாவே தன்னை புரிந்துகொள்ளாமல் பேசுகிறாளே என்ற ரணம் வார்த்தைகளாய் வெளியேற கண்களை கண்ணீரும் சூழ்கொண்டது. லதா விழிகள் திடீரென்று அகண்டது, கண்மணி தன் அம்மாவின் விழிகளையே கூர்ந்து பார்த்தாள். கண்மணியின் முதுகின் பின்னால் சத்தியேந்திரன் நின்று இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை இது நேரம் வரை கேட்டுக்கொண்டு இருந்தான். கண்மணி திரும்பி சத்தியேந்திரனை பார்த்தாள் அவன் முகம் முழுவதும் கலவரம். இவளுக்கு என்ன சொல்லி அவனை சமாதானம் செய்வது என்றும் புரியவில்லை அவன் தலையை தொட்டு தொட்டு பார்த்தான். அவன் முகத்தை கைகளால் துடைத்து துடைத்து விட்டான். கண்மணி அவன் அருகே நெருங்க ஒரு அடி எடுக்க, அவன் தன் வலது கையை உயர்த்தி முன்னேறாதே என்று தடை போட்டான்.
“சத்யா நான்? அம்மா?“ அவளுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. வார்த்தைகள் திக்கி திக்கி வெளியேறின. மீண்டும் அந்த கைகளை ‘நிறுத்து‘ என்பது போல் ஆட்டினான். அறையின் பின்பக்கம் திரும்பி இடுப்பில் கைவைத்து தன் உதட்டை கடித்துக்கொண்டு நின்றான். கண்ணீர் கசிந்தோடிக்கொண்டு இருந்தது. இத்தனையும் நடந்துக்கொண்டே இருக்க லதா ஒரு பக்கம் வீட்டின் உள் சென்று தான் கொண்டு வந்த பையை எடுத்துக்கொண்டு வந்தாள். ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் கணவன் இட, வலம் ஆடும் ஊஞ்சல் போல மனம் ஓயாது விசும்பி கொண்டு இருந்தது. லதா மற்றபடி எதுவும் சொல்லவில்லை கைபையுடன் வெளியேறினார். அவளை தடுக்கவும் முடியவில்லை, இவனை சமாதானம் செய்யவும் முடியவில்லை. சத்தியேந்திரன் படால் என்று அறைகதவை அடித்து சாத்தினான். கதவை தட்டு தட்டென்று தட்டினாள், அவன் உள்ளிருந்து “நீயும் போ..நீயும் போ..“ என்று கத்தினான்.
“நான் போக மாட்டேன். நான் போக மாட்டேன்.. உங்கள விட்டுட்டு நான் போகவே மாட்டேன். விட்டுட்டு போறதுக்காக உங்க கையபிடிச்சி இந்த வீட்டுக்குள்ள வரல உங்க கூடவே கடைசிவரைக்கும் இருக்க தான் இந்த வீட்டுக்குள்ள வந்தேன். எந்த சமயத்துலயும் நான் உங்கள விட்டு போகவே மாட்டேன் சத்யா. கதவ திறங்க சத்யா..“ கதவில் தலைமுட்டி கண்ணீர் வடித்தாள். அவன் அந்த பக்கம் கண்கள் கலங்கி நின்று கொண்டு இருந்தான்.
மெல்ல அந்தி வானம் மஞ்சளை பூச தொடங்கியது. மெர்ஸி வேலை முடிந்து ஹாஸ்பிட்டலை விட்டு வந்தாள். ஆட்டோவுக்கு நின்று கொண்டிருக்கும் போது பைக்கொன்று அவளை நெருங்கி வந்து நின்றது. அவள் கண்டுக்கொள்ளாதது போல் நின்றாள். விடாமல் ஹாரன் எழுப்பியது. மெர்ஸி திரும்பி அந்த பைக்கில் இருந்த ஆளை பார்த்தாள்.
“சங்கடம் கொடுக்க வேண்டியது அப்பறம் சமாதானமும் படுத்த வேண்டியது.“ பைக்கில் இருந்தவன் ஹெல்மெட்டை கழட்டினான். பெர்னட் தான் வந்திருந்தது.
“என்ன உனக்கு சங்கடம் கொடுத்தாங்க? அந்த காபி டம்ளர் எடுத்து கொடுக்கலையே அதுவா“
பைக்கை திருப்பி ஸ்டார்ட் செய்து உர்..உர்..என்று சத்தம் கொடுக்க ஆக்ஸிலேட்டரை விடாமல் திருவிக்கொண்டு இருந்தான். மெர்ஸி பைக்கில் ஏறி அமர்ந்தாள் அமரும் போதே “அந்த காபி டம்ளர் மட்டும் தான் என்னோட பிரச்சனையா?“ என்றாள். பைக்கை மெல்ல அவ்விடம் விட்டு கிளப்பினான்.
“உங்க அம்மா? நான் அவங்கள எப்படி பார்த்துக்குறேன் அவங்க என்ன எப்படி பார்த்துக்குறாங்க ஹீஉம் சொல்லு. நான் காலையிலயே எல்லா வேலையும் முடிச்சிட்டு வேலைக்கு போயிட்டு வந்து திரும்ப வீட்டுல இருக்க வேலையையும் பாக்கனும் அவங்க காபி குடிச்ச டம்ளர கூட சிங்குல போட மாட்டாங்க. எங்க அம்மா வீட்டுக்கு போய் முழுசா ஒரு வருஷம் ஆக போகுது உங்களுக்குள்ளயே என் வாழ்க்கை முடிஞ்சிடுமோன்னு பயமா இருக்கு. ஞாயிற்று கிழமை ஃபிரியா இருக்கும் போது வெளிய போகலாமான்னு நினைப்பேன் நீ உன் பிரண்ட்சோட கிரிக்கேட் ஆட போயிடுவ பெரிய கபில் தேவ்.“ வரும் வழி நெடுகிலும் பேசிக்கொண்டே வந்தாள். அவன் பூம்பூம் மாடு போல தலையை ஆட்டிக்கொண்டே வந்தான். அப்பார்ட்மென்ட் வாசலில் வந்து வண்டி நின்றது. மெர்ஸி இறங்கினாள் “ஒரு இருநூறுவா குடேன்.“ என்றான்.
“எதுக்கு?“
“அம்மாவுக்கு பழம் வாங்க?“
“டேய் முந்தாநாள் தானடா வாங்கிட்டு வந்து போட்ட“
“என்னடி திங்கிறதுக்கு எல்லாம் கணக்கு பண்ற?“ இருவரின் பேச்சுக்கு குறுக்காக அப்பார்ட்மெண்ட் பிள்ளைகள் பேட்டையும் ஸ்டெம்பையும் தூக்கி கொண்டு அங்கும் இங்கும் திரிந்து ஓ என்று சத்தம் எழுப்பி கிரிக்கெட் விளையாட இடம்பிடித்துக்கொண்டு இருந்தனர். காதுகளை பொத்திக்கொண்டு கத்தலாக சொன்னாள்.“நான் திங்கிறதுக்கு சொல்லல, அவங்களுக்கு ஏற்கனவே கிட்னில பிராப்ளம் இருக்கு. டாக்டர் நீர் பொருட்கள் அதிகமா எடுத்துக்க வேண்டாம்னு சொல்லிருக்காரு. ஆனா உங்க அம்மாவ பாரு பிரிட்ஜ்ல எந்நேரமும் கூல்டிரிங்ஸ் இருக்கனும் பழம் இருக்கனும். வயசாயிட்டா வாய கட்டுபடுத்தனும், நம்ப இப்போ இருக்க நிலைமைக்கு பெரிய செலவ இழுத்துவிட்டாங்கன்னா எங்க போறது.“
மெர்ஸி அடுக்கி கொண்டே போக பெர்னட் நெழிந்து கொண்டு நின்றான். அப்போது சிறுவன் ஒருவன் வந்து “அங்கிள் இது எங்க பிளேஸ் நகருங்க“என்றான்.
“இருடா இவன் வேற தலைவலி“ சலித்துக்கொண்டு சொன்னான்.
“நான் நல்லத சொன்னா உனக்கு தலைவலி தான், நீ அனுபவிக்கும் போது தான் தெரியும்“ கடுகடுவென பொரிந்துக்கொண்டே கைபையில் இருந்து இருநூறு ரூபாயை எடுத்து அவன் பைக் மீது வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் சென்றாள்.
“எவ்வளவு சொன்னாலும் சமாதானம் ஆக மாட்டா?“ என்று புலம்பிக்கொண்டே வண்டியை நகர்த்தினான். மெர்ஸி லிப்டை விட்டு இறங்கினாள். மேரியும் பக்கத்துவீட்டு பெண்ணும் ஏதோ தங்களை மறந்து கதைவைத்துக்கொண்டு இருந்தனர். மெர்ஸி சற்று நெருங்கியபோது அவர்கள் பேசுவது அறைகுறையாக காதில் ஏறியது.
“அவ தான் சரியான சோவை, நீர்கட்டி இருக்குன்னு சொன்னாங்க.“
மேரி பேசிக்கொண்டே போக, அவள் முகத்தின் முன் நின்ற பெண் கண்ணால் ஜாடைக்காட்டினாள். சற்று நேரத்தில் பிளேட்டையே மாற்றிப்போட்டால் மேரி, “என் மருமக காலையிலயே எல்லாம் செஞ்சிட்டு போயிடுவா. என் மேல பிரியம் தான்“, என்று அவள் வந்ததை அறியாதவள் போல அடுத்த கதையை விட்டுக்கொண்டு இருந்தாள். செருப்பை அவிழ்த்த போது சுவற்றில் அடித்து அங்கும் இங்கும் சிதறியது. விடுவிடுவென்று உள்ளே சென்று கிட்சனை பார்த்தாள், சிங் முழுவதும் சாமான் நிரம்பி போய் இருந்தது. திடுபுடுவென அதையும் இதையும் தூக்கி அடித்துவிட்டு அறைக்கு வந்து கதவை மூடினாள் கதே கிழியும் சத்தம் எழுப்பியது. கதவு இருக்கா இல்லை போயிட்டா என்று கூட மேரிக்கு தோன்றியது. சிறிது நேரம் கழித்து பெர்னட் வீடு வந்தான். கிட்சனில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள் மெர்ஸி அவள் அருகே வந்தான்.
“இந்த பாரு இந்த புரூட் சாப்பிட்ட கரு ஸ்டாங்காகுமா“ என்று பழத்தை எடுத்து கையில் வைத்து காட்டினான். காலையில் டீ போட்ட பாத்திரம் ஈரம் இல்லாமல் கிடந்ததால் நன்றாக காய்ந்து போய் இருந்தது. அழுத்தி பிடித்து தேய்த்துக்கொண்டு இருந்தாள்.
“என்னடி பேசமாட்டுற இந்த தடவை கன்பார்ம் ஆயிடும்ல“
பால் பாத்திரத்தை படீர் என்று கீழே ஒரே போடு தான். ஒரு நிமிடம் பெர்னட்டே பதறி போனான்.
“மெசினா, நான் மெசினா உனக்கு எப்படி இருந்தாலும் நான் புள்ள பெத்து கொடுத்துடனும். உங்க அம்மாவுக்கு ஊழியம் பண்ணனும், சம்பாதிக்கனும். ஆ…ஆ.. என்னால முடியல மெண்டல் டார்ச்சலா இருக்கு. நான் உங்களால பைத்தியம் ஆக போறேன்.“
தலையை பிடித்துக்கொண்டு காட்டு கத்தலாக கத்தினாள்.
“ஏன் இப்போ டென்சன் ஆகுற?“ பெர்னட் சமாதானம் செய்யும் நோக்கில் அமைதியாக பேசினான்.
“காலையில எழுந்தரிச்சா பீரியட் வந்துடுமாங்குற நைட் படுக்கும் போது பீரியட் வந்துடுமாங்குற. கேவலம் செக்சு கூட கால்கூலேசன் போட வேண்டியதா இருக்கு. உங்க அம்மா ஊரு பூரா எனக்கு வியாதி இருக்குன்னு கதை வேற வைக்கவேண்டியது? எனக்கா பிரச்சனை சொல்லு எனக்கா பிரச்சனை. கல்யாணம் ஆகி மூனு வருஷம் தான் ஆகுது அதுக்குள்ள நூறு ஹாஸ்பிட்டல் படுற பாடுபூரா நான் தானே. எவ்வளோ கஷ்டம் இருந்தாலும் நான் தாங்கிக்கிறேன் ஏன்னா நீ ஆம்பளன்னு நிரூபிக்கனுமே அதுக்கு உனக்கு புள்ள வேணும். டிரிட்மெண்ட் பண்ணிட்டு வந்தேனே எங்கயாவது எனக்கு ரெஸ்ட் கொடுத்திங்களா?“ இடைவெளி இல்லாமல் கத்தி கத்தி தன் கோபத்தை தீர்த்துக்கொண்டு இருந்தாள்.
“எல்லாத்துக்கும் எரிஞ்சி விழு அதனால தான் நமக்கு புள்ளையே பொறக்கல போல“ என்று கடுப்படித்துவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான். அப்படியே சரிந்து கிட்சனில் உட்கார்ந்தாள் மெர்ஸி.
இரவு உணவை தயார் செய்து வைத்து விட்டு தன் அறையில் வந்து படுத்து விட்டாள். அம்மாவும், பையனும் சாப்பிட்டு விட்டு பெர்னட் பெட்ரூமிற்கு வந்தான். மெர்ஸி படுத்து கண்களை மூடி இருந்தாள். அவன் மெர்ஸி தோள்களில் கைகளை வைத்தான். அவள் திரும்பவில்லை. “மெர்ஸி இன்னைக்கு நம்ப ஒன்னாயிருக்கனும் டாக்டர்...“ அவன் அந்த வாக்கியத்தை முடிப்பதற்குள் நேராக படுத்து “ஊம்.. வா...“ என்றாள். நடுநிசி மெர்ஸி உறக்கம் இன்றி பிரண்டு பிரண்டு படுத்துக்கொண்டு இருந்தாள். பெர்னட் நன்றாக உறங்கி கொண்டு இருந்தான். சாப்பிட்டியா என்று கூட யாரும் கேட்டவில்லையே என்று எண்ணினாள். கண்கள் முழுவதும் நீர் நிரம்பி கன்னங்களை தொட்டு ஓடிக்கொண்டு இருந்தது.
கண்மணி சோபாவில் சாய்ந்து உட்கார்ந்த படியே அமர்ந்திருந்தாள் விழிகளில் நீர் வடிந்தோடியது. இரவு இருவருக்கும் இதமானதாக இல்லை முள்ளை போல உடலெங்கும் குத்திக்கொண்டு இருந்தது. இருவரும் நித்திரை இன்றி ஆளுக்கொரு இடத்தில் இருந்தனர். பெண் மனம் எப்போதுமே பிரியபட்டவர்களுக்கே புரியபடாத விடுகதை தான்.