- Messages
- 938
- Reaction score
- 1,132
- Points
- 93
"இதைக் குடிச்சா முகம் நல்லா பளபளன்னு இருக்கும்னு சொன்னாங்க. அதான் வாங்கினேன். நான் இதை குடிக்கிறது குழந்தைக்கு எவ்வளவு கெடுதலோ அவ்வளவு கெடுதல் நீங்க சிகரெட் ஸ்மோக் பண்றது. ஆமா, நிஜமாத்தான் சொல்றேன். சில நேரம் ஃப்ரெஷ் ஏர் நல்லதுனு நான் அம்முலுவை இங்க தான் தூக்கிட்டு வருவேன். அம்முலு தவக்க ஆரம்பிக்கும் போது இந்த சிகரெட் சாம்பலை வாயில வைக்க வாய்ப்பிருக்கு. அக்கார்டிங் டூ த எபெக்ட் ஆப் நிகோடின்…" என்று கண்களை உருட்டி ஆரம்பித்தவளை பெரிய கும்பிடாகப் போட்டு,
"அம்மாத்தாயே! இனி நான் சிகரெட்டே குடிக்கல. போதுமா? ஒழுங்கா இந்தப் பாட்டிலைத் தூக்கி குப்பையில போடு" என்று சரணடைந்தான் விக்ரமன்.
"சரி, ஆனா இனி நீங்க சிகரெட் ஸ்மோக் பண்றதைப் பார்த்தா நான் என்ன செய்வேனு எனக்கேத் தெரியாது. ஜாக்கிரதை" என்று எச்சரித்துச் சென்றாள்.
"சரியான இம்சைடி நீ" என விக்ரமன் தன் தலையில் அடித்துக் கொள்ள உள்ளே சென்ற அதிதியின் இதழ்களில் வெற்றிப் புன்னகை தவழ்ந்தது.
அதீத காதல் அதட்டவும் செய்யும் என்பதை அக்கணம் தான் உணர்ந்தான் விக்ரமன்.
ஆனால், அவனுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. கடந்த இரண்டு மாத காலமாக தன்னை கண்டு கொள்ளாமல் விலகியே இருந்தவள், இன்று மட்டும் தன்னை அதிகப்படியாய் நெருங்குவது ஏன்? என்று குழம்பினான்.
மறுநாள் காலையில் குளியலறையிலிருந்து வெளியேறி ஜிம்மிற்குள் நுழையப் போனவனை வழிமறித்து தடுத்தாள் அதிதி.
"மாமூ நில்லுங்க" என்றாள்.
நேற்று வாங்கிய உடைகளிலிருந்து கையில்லாத பனியனும், ட்ராக் பேண்ட்டும் அணிந்து கொண்டு நின்றவளைக் கண்டு கண்ணிமைக்க மறந்தான் விக்ரமன். அவனுக்கு உள்ளுக்குள் புது ரத்தம் பாய்வது போல இருந்தது.
அவன் வழிசலை கண்டுகொண்டவள் மனதில் கொண்டாட்டத்துடன் வெளியே ஏதுமறியாதவள் போல் மிரட்டினாள்.
"இங்கப் பாருங்க மாமூ, இனிமே நீங்க எக்ஸர்சைஸ் பண்ணணும்னா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே எழுந்து எல்லாம் முடிச்சிடுங்க. இனிமே நான் மட்டும் தனியா அம்முலுவுக்கு மசாஜ் செய்ய முடியாது. நீங்களும் என்கூட சேர்ந்து அவளுக்கு மசாஜ் செய்யணும். இவ்வளவு நாள் உங்களை பாவம் பார்த்து விட்டு வச்சதே தப்பு." என்று தன்போக்கில் பேசிக்கொண்டே குழந்தையை தரையில் ஒரு துண்டில் படுக்க வைத்து, அவனை தன்னருகில் அமரச்சொல்லி உத்தரவிட்டாள்.
பின், குழந்தையை நோக்கி குனிந்து, "அம்முலுமா, நம்ம மசாஜ் பண்ணப் போறோமா? சைக்கிள் ஓட்டப் போறோமா?" என குழந்தையின் இரு கைகளையும் பிடித்து ஆட்டிக் கேட்க, அதுக்கு என்ன புரிந்ததோ தன் அன்னையை நோக்கி கிளுக்கிச் சிரித்து ஆமாம் என்றது.
நின்று வேடிக்கைப் பார்த்தவனை அதட்டினாள் அதிதி.
"என்ன இன்னும் உட்காரலையா?" என்றாள்.
தலையை உதறி தன்னிலைக்கு வந்தவன் மறுக்க மனமில்லாமல் அவள் கூறியவற்றிற்கு அடி பணிந்து, அவளை விட்டு சற்றுத் தள்ளியமர்ந்தான்.
ஆம், மோகத்தீ பற்றிக் கொள்ளுமோ எனப் பயந்தான்.
ஆனால், பற்ற வைத்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு தன் கண் முன்னேயே ஒருவள் அமர்ந்திருந்திருப்பதை பாவம் அப்போது அவன் அறியவில்லை.
"அதிதி எனக்கு இந்த மசாஜ்லாம் பண்ணத் தெரியாதுடி. பேசாம நீயே பண்ணிடுறியா ப்ளீஸ்?"
"ப்ச்! உங்கப்பொண்ணு நடக்கணுமா? வேணாமா? ஆமா இன்னும் ஒரு கிலோ மீட்டர் தள்ளி உட்காருங்க. ஏங்க இப்படி கிறுக்குத்தனம் பண்றீங்க? படுத்தாதீங்க ப்ளீஸ்" என்றாள்.
"அம்மாத்தாயே! இனி நான் சிகரெட்டே குடிக்கல. போதுமா? ஒழுங்கா இந்தப் பாட்டிலைத் தூக்கி குப்பையில போடு" என்று சரணடைந்தான் விக்ரமன்.
"சரி, ஆனா இனி நீங்க சிகரெட் ஸ்மோக் பண்றதைப் பார்த்தா நான் என்ன செய்வேனு எனக்கேத் தெரியாது. ஜாக்கிரதை" என்று எச்சரித்துச் சென்றாள்.
"சரியான இம்சைடி நீ" என விக்ரமன் தன் தலையில் அடித்துக் கொள்ள உள்ளே சென்ற அதிதியின் இதழ்களில் வெற்றிப் புன்னகை தவழ்ந்தது.
அதீத காதல் அதட்டவும் செய்யும் என்பதை அக்கணம் தான் உணர்ந்தான் விக்ரமன்.
ஆனால், அவனுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை. கடந்த இரண்டு மாத காலமாக தன்னை கண்டு கொள்ளாமல் விலகியே இருந்தவள், இன்று மட்டும் தன்னை அதிகப்படியாய் நெருங்குவது ஏன்? என்று குழம்பினான்.
மறுநாள் காலையில் குளியலறையிலிருந்து வெளியேறி ஜிம்மிற்குள் நுழையப் போனவனை வழிமறித்து தடுத்தாள் அதிதி.
"மாமூ நில்லுங்க" என்றாள்.
நேற்று வாங்கிய உடைகளிலிருந்து கையில்லாத பனியனும், ட்ராக் பேண்ட்டும் அணிந்து கொண்டு நின்றவளைக் கண்டு கண்ணிமைக்க மறந்தான் விக்ரமன். அவனுக்கு உள்ளுக்குள் புது ரத்தம் பாய்வது போல இருந்தது.
அவன் வழிசலை கண்டுகொண்டவள் மனதில் கொண்டாட்டத்துடன் வெளியே ஏதுமறியாதவள் போல் மிரட்டினாள்.
"இங்கப் பாருங்க மாமூ, இனிமே நீங்க எக்ஸர்சைஸ் பண்ணணும்னா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே எழுந்து எல்லாம் முடிச்சிடுங்க. இனிமே நான் மட்டும் தனியா அம்முலுவுக்கு மசாஜ் செய்ய முடியாது. நீங்களும் என்கூட சேர்ந்து அவளுக்கு மசாஜ் செய்யணும். இவ்வளவு நாள் உங்களை பாவம் பார்த்து விட்டு வச்சதே தப்பு." என்று தன்போக்கில் பேசிக்கொண்டே குழந்தையை தரையில் ஒரு துண்டில் படுக்க வைத்து, அவனை தன்னருகில் அமரச்சொல்லி உத்தரவிட்டாள்.
பின், குழந்தையை நோக்கி குனிந்து, "அம்முலுமா, நம்ம மசாஜ் பண்ணப் போறோமா? சைக்கிள் ஓட்டப் போறோமா?" என குழந்தையின் இரு கைகளையும் பிடித்து ஆட்டிக் கேட்க, அதுக்கு என்ன புரிந்ததோ தன் அன்னையை நோக்கி கிளுக்கிச் சிரித்து ஆமாம் என்றது.
நின்று வேடிக்கைப் பார்த்தவனை அதட்டினாள் அதிதி.
"என்ன இன்னும் உட்காரலையா?" என்றாள்.
தலையை உதறி தன்னிலைக்கு வந்தவன் மறுக்க மனமில்லாமல் அவள் கூறியவற்றிற்கு அடி பணிந்து, அவளை விட்டு சற்றுத் தள்ளியமர்ந்தான்.
ஆம், மோகத்தீ பற்றிக் கொள்ளுமோ எனப் பயந்தான்.
ஆனால், பற்ற வைத்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு தன் கண் முன்னேயே ஒருவள் அமர்ந்திருந்திருப்பதை பாவம் அப்போது அவன் அறியவில்லை.
"அதிதி எனக்கு இந்த மசாஜ்லாம் பண்ணத் தெரியாதுடி. பேசாம நீயே பண்ணிடுறியா ப்ளீஸ்?"
"ப்ச்! உங்கப்பொண்ணு நடக்கணுமா? வேணாமா? ஆமா இன்னும் ஒரு கிலோ மீட்டர் தள்ளி உட்காருங்க. ஏங்க இப்படி கிறுக்குத்தனம் பண்றீங்க? படுத்தாதீங்க ப்ளீஸ்" என்றாள்.