Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
தட்டிலிருந்த மெட்ஜூல் பேரீச்சம்பழம் அதிதியின் இதழாக மின்ன, சுவைத்துப் பார்த்தான். அவளின் இதழ்சுவைக்கு அணுவளவுக் கூட ஈடில்லை அது. நொந்தான்.


தனக்குத் தேவையான ஆதாரங்கள் அனைத்தையும் ஒரு வாரத்தில் திரட்டி முடித்தவன், தன் அம்முலுவுக்கும் அம்முக்குட்டிக்கும் கை நிறைய பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான்.


“என்கிட்ட கூட எதுவும் சொல்லாம எங்கப் போனான் இந்த விக்ரமன்?” என புலம்பிக் கொண்டிருந்த நாச்சியம்மை, அவனுடைய அலுவலகத்திற்குச் சென்று அவனின் காரியத்தரிசியிடம் அவனைப் பற்றி விசாரித்தார்.


பின், அவன் பிசினஸ் விஷயமாக ஒரு வாரம் ஃபாரின் ட்ரிப் சென்றிருப்பதாக அவள் கூறியதைக் கேட்டு அதிருப்தியடைந்தவர், அவன் வருகைக்காக காத்திருக்கலானார்.


அவன் வரும் நாளன்று அவனை எதிர்பார்த்து தோட்டத்தில் அமர்ந்திருந்தார் நாச்சியம்மை.


தன் பெட்டிகளை தூக்கிக்கொண்டு வீட்டினுள் விரைந்து கொண்டிருந்த விக்ரமனை ஆர்வமாக, "விக்ரமா!" என்றழைத்தார்.


அவன் அவரை கவனிக்கவில்லை எனவும் முகம் தொங்கிப்போனார்.


உண்மையில் அதிதியையும் அம்முலுவையும் காண வேண்டும் என்கிற பேராவலில் இருந்தவனுக்கு, அவரழைப்பு கேட்கவில்லை.


ஆனாலும் அவன் பின்னேயே வீட்டிற்குள் நுழைந்தார் நாச்சியம்மை.


பெட்டிகளை தூக்கிக்கொண்டு இரண்டு இரண்டு படிகளாக வேகமாகத் தாண்டி தன்னறையை அடைந்த விக்ரமன், கதவை வேகமாக திறக்க முயல, அது உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது.


தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு உள்ளே நுழைந்தவன் அவசரத்தில் கதவை சாற்ற மறந்தான்.


அசுர வேகத்தில் உள்ளே சென்றவன் கண்டது, தரையில் விளையாட்டுப் பொருட்களை பரப்பி வைத்து, ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்துக் கொண்டிருக்கும் தன் புதல்வி அம்முலுவை தான்.


தான் வாங்கி வந்த பொருட்களிலிருந்து அவளுக்கு வேண்டிய பொம்மைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவளருகில் சென்றவன் செல்லமாக, “அம்முலுமா” என பின்னிருந்து அழைத்தான்.


தன் தலையை மட்டும் இருபுறமும் திருப்பி திருப்பி பார்த்தவள், மீண்டும் தன் வேலையில் கவனமானாள்.


அதைப் பார்த்து சிரித்தவன் அவளின் முன்னே வந்து அமர்ந்து, "ஓய் அம்முலு" என கூப்பிட,


தன் தந்தையைக் கண்ட மகிழ்ச்சியில் உட்கார்ந்த இடத்திலிருந்தே, "ப்பா.. ப்பா.. ஆஉ. ங்கா.. ம்ம்ம்.. ப்பா" எனக் கத்திக்கொண்டே அவனிடம் தாவினாள் அம்முலு.


ஏழு மாதக் குழந்தையிடமிருந்து அப்பா என்ற அழைப்பை எதிர்பார்த்திராதவன், சந்தோஷ மிகுதியில் அந்தக் கவிதையை தன் கைகளில் அள்ளி முத்தமிட்டான்.


பின், பதிலுக்கு அவனும் தன் கன்னத்தைக் காட்ட, தன் உமிழ்நீர் நிறைந்த வாயை அவன் கன்னத்தில் ஒற்றி எடுத்தாள் அம்முலு.


அதையவன் உளமார ரசித்துக் கொண்டிருந்த சமயத்தில், குளியலறையிலிருந்து கேட்டது அந்த எடுப்புப் பிள்ளைக்காரியின் கனிவுக்குரல்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
"அம்முலுமா, என்ன பண்ற? அப்பா நாளைக்கு வருவாருடா. அம்மா குளிச்சிட்டேன். இப்போ வந்துருவேன் என்ன?" என சொன்னபடியே ரெண்டே நிமிடத்தில் மார்பில் முடிந்த பாவாடையுடன் வெளியே வந்தாள்.


அவளின் அக்கோலத்தைக் கண்ட விக்ரமனுக்கு தங்கள் திருமணம் முடிந்த மறுநாள் நடந்த நிகழ்வுகள் ஞாபகம் வர கிறங்கி நின்றான்.


துண்டிலிருந்து தப்பிய முடிக்கற்றைகள் கதோரத்தில் தவழ்ந்து நீர் சொட்ட, உடலில் அணிகலன்களாய் வெறும் தாலியும் மெட்டியும் மட்டுமே இருக்க, பித்தாகினான்.


வெளியே வந்தவளும் அவனைக் கண்டு ஒரு நிமிடம் திடுக்கிட்டு பின், அவனை சட்டை செய்யாதவளாய் அலமாரியை நோக்கி நகர்ந்தாள்.


தன் அன்னையைப் பார்த்த அம்முலு, தன் தந்தையை காட்டும் விதமாக, "ம்மா.. ங்க.. ம்ம்.. ப்ப்பா.. ம்மா" எனக் கத்த,

தன் உடையை எடுத்துக்கொண்டு அம்முலுவிடம் திரும்பியவள், "ஓ! இவரு தான் உங்க அப்பாவா அம்முலு? இது எனக்குத் தெரியாமப் போச்சே. இந்த ஒரு வாரமா நாமா இருக்கோமா இல்ல செத்தோமானு கூட பார்க்க ஒரு நாதியில்ல. இப்போ மட்டும் என்ன அப்பா நொப்பானு குதிக்கற நீ?" எனத் தன் மகளிடம் சாடிவிட்டு திரும்பி நின்று தலைவழியாக தன் நைட்டியை அணிந்தாள்.


அம்முலுவிடம் பொம்மையைக் கொடுத்து அவளை வேறுபுறம் திசை திருப்பி விட்டவன், பூனை அடியாக எடுத்து வைத்து மெதுவாக அவளை நெருங்கினான்.


பின், அவள் என்ன ஏதென்று உணரும் முன் பின்னிருந்து கட்டியணைத்தாள்.


முதலில் அவனின் எதிர்பாரா அணைப்பில் கட்டுண்டிருந்தவள் பின், இந்த ஒரு வார காலமாக அவனில்லாமல் தான் தனிமையில் பட்ட அவஸ்தையை நினைத்து, அழுகையுடன் அவனை தன்னிலிருந்து பிரித்து தள்ளிவிட்டாள்.


"இப்போ எதுக்கு என்னை கட்டிப் பிடிக்கிறீங்க? ஹான்? இந்த ஒரு வாரமா நான் இருக்கேனா இல்ல செத்தேனானு ஒரு வார்த்தை இல்ல. போகும் போதும் எங்கப் போறேனும் சொல்லிட்டுப் போகல. சரி, நான் தான் ஆகாதவ. இது உங்க ரத்தம் தானே? இது என்ன பாவம் பண்ணுச்சு? போன் போட்டு என் பொண்ணுக்கிட்ட கொடுடினு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல? அப்பானு கூப்பிட ஆரம்பிச்சதுலயிருந்து மூச்சுக்கு முன்னூறு தடவ அப்பா போட்டு, அவரு எங்கனு கேட்கறவக் கிட்ட நான் என்ன பதில் சொல்லட்டும்? ம்? இப்போ உங்க பாசம் கூட எனக்கு நடிப்பா தாங்க தெரியுது. உண்மையை சொல்லுங்க, உங்க நாச்சூம்மா அடுத்த நாடகத்துக்கு தயாராகிட்டாங்களா? அவக்கூடயிருந்து அவ கண்ணசருற நேரத்துல அவளைக் கொன்னுப் போட்டுட்டு, குழந்தையை தூக்கிட்டு வாடானு சொன்னாங்களா?" என கோபத்தில் கொந்தளிக்கவும், அவளின் கடைசி கேள்வியில் கண்கள் கோவம்பழமாக சிவந்தது விக்ரமனுக்கு.


"என்னடி சொன்ன?" என ஆத்திரத்தில் அவள் கழுத்தை நெரித்து, அலமாரிக் கதவில் சாய்த்துத் தூக்கினான்.


வலியில் கண்கள் கலங்கி, மூச்சுத்திணறி, அவன் கையை அகற்றப் போராடினாள் அதிதி.


கால்கள் காற்றில் ஆட, அவளின் கைவிரல் நகங்கள் அவன் முகத்தில் கோடு கிழித்தன.


அவளின் குரல் “க்க.. க்க” என முனங்கலாகக் கேட்ட நேரம் திரும்பி பார்த்த அம்முலு, தன் தாயின் நிலையைக் கண்டு அரண்டு, ஹை சுருதியில் கத்திக்கொண்டே அவளை நோக்கி கமாண்டோ போல் வேகமாய் தவழ்ந்து வந்தாள்.


ஏற்கனவே விக்ரமனிடம் எதையோ கூற வந்த நாச்சியம்மை, அவன் எப்படியும் கீழே வருவான் என்ற எதிர்பார்ப்பில் வரவேற்பறையில் காத்திருந்தார்.


ஆனால், அவரின் காத்திருப்பில் வந்தது என்னவோ அம்முலுவின் இடைவிடாத அழுகை குரல் தான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
இருவரும் குழந்தையை கவனிக்காமல் என்ன செய்கிறார்கள்? என கோபம் கொண்டவர், அவன் அறையை நோக்கி விரைய, நேற்றே மும்பையிலிருந்து வந்திருந்த கௌதமனும், வீட்டில் உள்ள மற்றையவர்களும் அவரைத் தொடர்ந்து விக்ரமனின் அறைக்குள் நுழைந்தனர்.


அம்முலுவின் அழுகை சத்தத்தில் அறையினுள்ளே நுழைந்த நாச்சியம்மைக்கு, கண்கள் மேலே சொருக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அதிதியைக் கண்டதும், ஒரு நொடி இதயம் நின்று துடித்தது.


"விக்ரமா!" என்றவர் உச்சஸ்தாயில் கத்த, ஏற்கனவே அம்முலுவின் அழுகையில் தன் பிடியை கொஞ்சம் தளர்த்தியிருந்தவன், நாச்சியம்மையின் குரலில் முழுமையாக விடுவிடுத்தான்.


கீழே பொத்தென்று தொய்ந்து விழுந்தாள் அதிதி. அழுதுகொண்டே தவழ்ந்து தன்னருகில் வந்த அம்முலுவை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு மூச்சுவிட சிரமப்பட்டாள்.


அவளின் நிலையுணர்ந்து அருகே மேசையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்டினார் நாச்சியம்மை.


தண்ணீரை வாங்கி வேக வேகமாக அருந்தியவள், குழந்தையை அணைத்துக்கொண்டே நாச்சியம்மையின் கால்களைப் பிடித்துக் கெஞ்சினாள்.


"தயவு செஞ்சு என்னையும் எம் பொண்ணையும் விட்டிருங்க. நாங்க எங்கயாவது கண் காணாத இடத்துக்குப் போய் பொழைச்சிக்கிறோம். ப்ளீஸ் எங்களை விட்டிருங்க" என்று கதறினாள்.


தான் நினைத்தது போலவே தன் காலில் வந்து விழுபவளைக் கண்டு, தற்போது நாச்சியம்மையால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை.


நிமிர்ந்து விக்ரமனைப் பார்த்தவர், "விக்ரமா என்ன காரியம் பண்ணயிருந்த நீ? ஒரு வாரமா யார்கிட்டயும் சொல்லாம எங்கேயோ போயிட்டு, இப்போ திடுதிப்புனு வந்து இவளை ஏன்டா கொல்லப் பார்க்கிற? மூளை எதுவும் குழம்பிப்போச்சா உனக்கு?" என மேலும் திட்ட வந்தவரை கையுயர்த்தி தடுத்தவன்,


"உங்களுக்குத் தேவை இவளை வச்சு இவ அப்பனும் தாத்தானும் கஷ்டப்படணும். அதானே நாச்சூம்மா? மத்தப்படி இவ இருந்தா, இறந்தா உங்களுக்கென்ன?" என உக்கிரமாகக் கேட்டான்.


அவன் கேள்வியில் ஒரு கணம் ஆடிப்போனார் நாச்சியம்மை.


பின்னே, அவரை மனிதாபிமானம் இல்லாத அரக்கியாய் அல்லவா அக்கேள்வி சித்தரிக்கிறது!


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
969
Reaction score
1,132
Points
93
இன்னும் இரண்டு அத்தியாயங்களில் நாவல் நிறைவு பெற இருக்கிறது மெலடீஸ். இந்நேரம் துரோகி யாருனு கெஸ் பண்ணியிருப்பீங்க. நாளைக்கு பார்க்கலாம்🙂 அப்பறம் அந்த லைக், கமெண்ட்ஸும்....
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom