- Messages
- 980
- Reaction score
- 1,132
- Points
- 93
"மனசளவுல நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்கனு இப்போ தான் எனக்கு புரியுது மாமூ. உங்க மனசுல இருக்கறதை என்கிட்ட சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம, பாவம் மாமூ நீங்க. இவ்வளவு நாள் எப்படி தான் உங்களை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருந்தீங்களோ? எனக்கெல்லாம் உடனே எல்லாத்தையும் வெளிய கொட்டிடனும்" என அவன் நெஞ்சிலிருந்து நிமிர்ந்து பார்த்தே பேசியவளுக்கு, சற்று கழுத்து வலிப்பது போல் இருக்க, அதனை அவனிடம் கூறினாள்.
தன் அணைப்பிலிருந்து அவளை விடுவித்தவன் அவள் கழுத்தை சுற்றி முத்தமிட்டு, தன் முத்தத்தால் கழுத்தாரம் ஒன்றை உருவாக்கினான்.
பின், நிமிர்ந்து அவள் உதட்டின் மேல் முத்தம் பதித்தவன், பிரம்மனின் படைப்பு சரியா என கண்களால் ஆராய்ந்தபடியே கைகளாலும் ஆராயத் துவங்க அழகிய சங்கமம் நிகழ்ந்தது அங்கே.
சங்கமத்தின் முடிவில் தன் புகலிடம் சேர்ந்த பறவையாய் அவள் அவன் மார்புக்கூட்டில் தஞ்சமடைந்தாள்.
மறுநாள் விடியல் வந்தது. அனைவருக்கும் தான்.
நாச்சியம்மை குடும்பத்துடன் எவ்வித சங்கடமுமின்றி சங்கரப்பாண்டியனின் இல்லம் நோக்கிப் புறப்பட்டார்.
வாசலில் நின்ற அனைவரையும், "வாங்க! வாங்க!" என கைகளைக்கூப்பி வரவேற்றார் சங்கரப்பாண்டியன்.
அவரின் தமிழர் பண்பாடு மட்டும் அவரை விட்டு போகவில்லை.
எடுத்த எடுப்பிலேயே, "என்னை மன்னிச்சிடுங்கய்யா" என்று அவரை கையெடுத்துக் கும்பிட்டார் நாச்சியம்மை.
முதலில் திடீரென அனைவரும் வந்திருப்பதைக் கண்டு திகைத்துப் போயிருந்த சங்கரப்பாண்டியனுக்கு, இப்போது நாச்சியம்மை மன்னிப்பு கேட்பதையும் பார்த்து குழப்பமாயிருந்தது.
"அதெல்லாம் எதுக்குமா? உன்னைத் தப்பா பேசினதுக்கு நீ தான்மா என்னை மன்னிக்கனும்" என்று உளமார மன்னிப்புக் கேட்டார்.
"சரி, சரி, நீங்க ரெண்டுபேரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டது போதும். நகருங்க" என கையில் ஆரத்தி தட்டுடன் முன் வந்த அங்காளப் பரமேஸ்வரி, "எல்லாரும் உள்ள வாங்க" என இன்முகத்துடன் வரவேற்றார்.
அனைவரும் உட்புகப்போகும் சமயத்தில் அதிதியை மட்டும் தடுத்து நிறுத்தியவர், "பேராண்டி கூட சேர்ந்து நில்லு" எனச் சொல்லி விக்ரமன், அதிதி, அம்முலு ஆகிய மூவருக்கும் ஒரு சேர ஆரத்தி சுற்றி உள்ளே வரவேற்றார்.
விக்ரமனும் முதன்முதலாக மருமகனாக தன் காலடியை அவ்வீட்டிற்குள் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தான்.
நடந்த அனைத்தையும் சங்கரப்பாண்டியனிடம் நாச்சியம்மை ஒன்றுவிடாமல் கூற, அங்கிருந்த அனைவருக்கும் ஒருபுறம் அதிர்ச்சியாகவும், மறுபுறம் தற்போது ஹரி உயிருடன் இல்லையென்று நிம்மதியாகவும் இருந்தது.
முதல்முறை அவர்கள் அவ்வீட்டிற்கு வந்திருப்பதால், விக்ரமன்-அதிதியின் மறுவீட்டு விருந்தையும் நினைவு கூர்ந்து, அதிரடியாக அறுசுவை உணவு செய்து பரிமாறினர்.
அங்கே விருந்து சாப்பிட்டவர்களின் வயிறும் மனமும் ஒரு சேர நிறைந்திருந்தது.
அவ்வருகைக்குப் பின், வாரம் ஒருமுறை தன் கணவனுடன் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டாள் அதிதி.
தன் அணைப்பிலிருந்து அவளை விடுவித்தவன் அவள் கழுத்தை சுற்றி முத்தமிட்டு, தன் முத்தத்தால் கழுத்தாரம் ஒன்றை உருவாக்கினான்.
பின், நிமிர்ந்து அவள் உதட்டின் மேல் முத்தம் பதித்தவன், பிரம்மனின் படைப்பு சரியா என கண்களால் ஆராய்ந்தபடியே கைகளாலும் ஆராயத் துவங்க அழகிய சங்கமம் நிகழ்ந்தது அங்கே.
சங்கமத்தின் முடிவில் தன் புகலிடம் சேர்ந்த பறவையாய் அவள் அவன் மார்புக்கூட்டில் தஞ்சமடைந்தாள்.
மறுநாள் விடியல் வந்தது. அனைவருக்கும் தான்.
நாச்சியம்மை குடும்பத்துடன் எவ்வித சங்கடமுமின்றி சங்கரப்பாண்டியனின் இல்லம் நோக்கிப் புறப்பட்டார்.
வாசலில் நின்ற அனைவரையும், "வாங்க! வாங்க!" என கைகளைக்கூப்பி வரவேற்றார் சங்கரப்பாண்டியன்.
அவரின் தமிழர் பண்பாடு மட்டும் அவரை விட்டு போகவில்லை.
எடுத்த எடுப்பிலேயே, "என்னை மன்னிச்சிடுங்கய்யா" என்று அவரை கையெடுத்துக் கும்பிட்டார் நாச்சியம்மை.
முதலில் திடீரென அனைவரும் வந்திருப்பதைக் கண்டு திகைத்துப் போயிருந்த சங்கரப்பாண்டியனுக்கு, இப்போது நாச்சியம்மை மன்னிப்பு கேட்பதையும் பார்த்து குழப்பமாயிருந்தது.
"அதெல்லாம் எதுக்குமா? உன்னைத் தப்பா பேசினதுக்கு நீ தான்மா என்னை மன்னிக்கனும்" என்று உளமார மன்னிப்புக் கேட்டார்.
"சரி, சரி, நீங்க ரெண்டுபேரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டது போதும். நகருங்க" என கையில் ஆரத்தி தட்டுடன் முன் வந்த அங்காளப் பரமேஸ்வரி, "எல்லாரும் உள்ள வாங்க" என இன்முகத்துடன் வரவேற்றார்.
அனைவரும் உட்புகப்போகும் சமயத்தில் அதிதியை மட்டும் தடுத்து நிறுத்தியவர், "பேராண்டி கூட சேர்ந்து நில்லு" எனச் சொல்லி விக்ரமன், அதிதி, அம்முலு ஆகிய மூவருக்கும் ஒரு சேர ஆரத்தி சுற்றி உள்ளே வரவேற்றார்.
விக்ரமனும் முதன்முதலாக மருமகனாக தன் காலடியை அவ்வீட்டிற்குள் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தான்.
நடந்த அனைத்தையும் சங்கரப்பாண்டியனிடம் நாச்சியம்மை ஒன்றுவிடாமல் கூற, அங்கிருந்த அனைவருக்கும் ஒருபுறம் அதிர்ச்சியாகவும், மறுபுறம் தற்போது ஹரி உயிருடன் இல்லையென்று நிம்மதியாகவும் இருந்தது.
முதல்முறை அவர்கள் அவ்வீட்டிற்கு வந்திருப்பதால், விக்ரமன்-அதிதியின் மறுவீட்டு விருந்தையும் நினைவு கூர்ந்து, அதிரடியாக அறுசுவை உணவு செய்து பரிமாறினர்.
அங்கே விருந்து சாப்பிட்டவர்களின் வயிறும் மனமும் ஒரு சேர நிறைந்திருந்தது.
அவ்வருகைக்குப் பின், வாரம் ஒருமுறை தன் கணவனுடன் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டாள் அதிதி.