Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நினைவலைகள்

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
கவிதை 11:

"ஆசை"

"தாலி கட்டினாலும் அழற??
வளைகாப்பு பண்ணாலும் அழற??
என்ன தான் சொல்ல வர??
ஏன்டா இவன நம்பி வந்தோம்னு அழறியா??" நான் கேட்க...

கண்ணீரோடு சிரித்து கொண்டே என் தலையில் செல்லமாய் ஒரு குட்டு வைத்து,

"ஏன்டா கடவுளே! இவ்ளோ கியூட்டா ஒரு புருஷனை கொடுத்துருக்கியே? நான் என்ன புண்ணியம் பண்ணேனோ தெரியலையேன்னு?? நன்றி சொல்றேன்ன்னு" சொல்லும் அவள்.

"நான் கியூட் இல்லடி ஸ்மார்ட்" நான்.
"நீ ஓவர் கியூட் தான்" சிரிப்பினூடே அவள்.

விழிகள் விரிய வயிற்றை தொட்டு பார்க்க, "என்ன?" என்றேன் பதட்டமாய்.

"உனக்கு தான் சப்போர்ட் பண்றா உன் பொண்ணு. எட்டி உதைக்கிறா" என்று கன்னத்தில் சந்தனத்தோடு சிணுங்கும் அவள்.
கடவுள் எனக்களித்த வரம்.

எங்களின் இறுதிவரை இதே புரிதலோடு பயணிக்க ஆசை
:love::love::love::love:😘😘😘
 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
கவிதை 20:

"தனி அழகு"

"ஒளிரும் போது தீபம் அழகு!
விரியும் போது மலர் அழகு!

நீந்தும் போது மீன் அழகு!
ஏந்தும் போது விரல் அழகு!

ஈர்க்கும் போது விழி அழகு!
பார்க்கும் போது பசுமை அழகு!

சுரக்கும் போது ஊற்று அழகு!
மறக்கும் போது பகை அழகு!

கேட்கும் போது இசை அழகு!
மட்கும் போது உரம் அழகு!

கோர்க்கும் போது மணி அழகு!
சேர்க்கும் போது மாலை அழகு!

உழைக்கும் போது வியர்வை அழகு!
தழைக்கும் போது வாழை அழகு!

வடிக்கும் போது சிலை அழகு!
துடிக்கும் போது இதயம் அழகு!

ரசிக்கும் போது இயற்கை அழகு!
பசிக்கும் போது உணவு அழகு!

காயும் போது சருகு அழகு!
சாயும் போது தோள் அழகு!

சிந்திக்கும் போது சிந்தனை அழகு!
சந்திக்கும் போது சோதனை அழகு!

தோன்றும் போது வானவில் அழகு!
ஊன்றும் போது கோல் அழகு!

நினைக்கும் போது நினைவுகள் அழகு!
புன்னகைக்கும் போது இதழ்கள் அழகு!

சேர்ந்திருக்கும் போது திருமணம் அழகு!
காத்திருக்கும் போது காதல் அழகு!

எளியோர் கற்கும்போது தமிழ் அழகு!
பெற்றோர் ஏற்கும்போது காதல் அழகு!

சோதிக்கும் போது இறைவன் அழகு!
சாதிக்கும் போது பெண் அழகு! "

- தர்ஷினிசிம்பா
:love::love::love::love::love::love::love:wow wonderful lines sis very nice🥰🥰🥰🥰🥰🥰
 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
கவிதை 16:

"போராடுவேன்"

"கண்னே!

நீ

கடைசிவரை

வருவாய் என்றால்

கலைப்பில்லாமல்

காதலுக்காக போராடுவேன் !

மறுப்பு தெரிவித்தால்

மரணத்தையும்

மெளனமாக

ஏற்பேன்!"

-தர்ஷினிசிதம்பரம்
💕💕💕💕💕💕💕
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கவிதை 21: அன்பு

"அன்பின் ஆழம் பேசும்

வார்த்தைகளில்தான் உணரமுடியும்

என்றால்.......

தாயின் கருவறையில்

மௌனமாய் கிடைக்கும்

அன்பு பொய்யாகுமா?

உண்மையான அன்பு

உள்ளத்தின் நினைவுகளில்கூட

ஊமையாய் புதைந்திருக்கம்!"

-தர்ஷினிசிதம்பரம்.
 
Top Bottom