Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நினைவலைகள்

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 14:

"ரசிக்கின்றேன்"

எந்தன்
உயிரினை
குடிக்கும் ஆயுதம்
உந்தன்
விழிகள் மட்டுமே!

பொருளென்றால்
நொறுகியிருப்பேன்...

என்னை
வருட வந்த
தென்றலாயிற்றே!
ரசிக்கின்றேன்
உந்தன் வரவை
என்
நெஞ்சுக்குள்!
 

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
கவிதை 9:

"தவமாய்"


"ஹலோ!" அவளின் குரல் தேனாய் என் செவிகளில்..

"எனக்கு பாப்பாகிட்ட பேச ஆசையா இருக்கு" கெஞ்சும் குரலில் நான்.

"ஹ்ம்ம். பேசு"

"ஹலோ! செல்லம். எப்படி இருக்கீங்க? சமத்தா இருக்கீங்களா? " நான்.

"எங்க? கொஞ்சம்கூட அடங்குறதே இல்ல. எந்த நேரமும் ஆட்டம் தான்" அவள்.

அப்படியாடா செல்லம்? அம்மாவ ரொம்ப தொந்தரவு பண்ணக்கூடாது. அப்பா சீக்கிரம் வந்துடுவேன். அதுவரைக்கும் நீ தான் அம்மாவை பார்த்துக்கணும்" நான்.

"அப்போ எப்போ வருவ மாமா?" என் நேசத்திற்கு ஏங்கியவளாய்.

"சீக்கிரமே வந்துடுவேன்" எப்பொழுது என்று தெரியாமல் நான்.

"எட்டு மாசம் ஆகுது உன்னை பார்த்து. உன்னை பார்க்கணும் போல இருக்கு" என்றாள் குரலில் தவிப்பை தேக்கி.

"எனக்கும் தான் உன் மடியில தலைவச்சி தூங்கனும்" நான்.

"எப்படியாவது குழந்தை பிறக்கிறதுக்குள்ளையாவது வந்துடவியா?" என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வில்.

"எனக்கு நீ ஒரு கண்ணுன்னா என் தாய்நாடும் ஒரு கண்ணு" நான்.

"அதனால தான் இன்னும் அதிகமா உன்னை விரும்புறேன்" சிரித்தாள் அவள்.

"ஹ்ம்ம் போதும் சிரிச்சே கொல்லாத. உன்னையும் குட்டிதேவதையும் பார்க்க ஓடி வரேன். " நான்.

"அதையும் பார்க்கிறோம் நாங்க" அவள் என்னை சீண்டி.

"போதும்டி ஏற்கனவே என் உடல் மட்டும்தான் இங்க இருக்கு உயிர் உங்ககிட்ட தான் இருக்கு" நான்.

"பட்டாளத்துக்கு போனாலும் உன் காதல் வசனம் குறையல." அவள்.

"என் தேசமே அன்பால் உருவானது தானே? அதனால அப்படியே தான் இருப்பேன். போகணும் வரேன்." வைக்க மனமில்லாமல் வைத்த நான்.

மீண்டும் என் குரல் கேட்க தவமாய் அவள்.
எனக்கு நீ ஒரு கண்ணுன என் தாய்நாடும் ஒரு கண்ணு..சூப்பர் சூப்பர் சிஸ்
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 15:

"நிழல்"

"நீ என்றும்

என்னவள் எனும்பொழுது...

உன் நிழல்கூட என்னைக்கேட்க

வேண்டுமடி உன்னோடு இருக்க.. "
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 16:

"போராடுவேன்"

"கண்னே!

நீ

கடைசிவரை

வருவாய் என்றால்

கலைப்பில்லாமல்

காதலுக்காக போராடுவேன் !

மறுப்பு தெரிவித்தால்

மரணத்தையும்

மெளனமாக

ஏற்பேன்!"

-தர்ஷினிசிதம்பரம்
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 17:

"நீ!"


"புத்தகத்தின் எழுதாத
வெள்ளை காகித
கோடுகளாய் நான் ...
என்னை
வரிகளால் நிரப்ப வந்த
எழுத்துக்கள் நீ... "
-தர்ஷினிசிதம்பரம்
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 18:

"உன்னோடு..."

தழுவிக்கொள்ள
உயிர்துடித்தாலும்...
தொட்டுவிடும் தூரத்தில்
நீ இருந்தாலும்...
நூலிழை கோடாய்
தடுக்கிறதடி உன் தயக்கம்...

வாய்ச்சொல்வேண்டாம்
உன் விழிஅசைவு
போதுமடி...
ஏழுஜென்மத்திலும்
மரணித்தும் பயணிப்பேன்
உன்னோடு...

-தர்ஷினிசிம்பா
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 19:

"உயிர்மெய்"


"உயிராக நீ......!
மெய்யாக நான்....!

நீயும் நானும் ..........
அன்பெனும் மொழியால்
ஒன்றாக.......

நம் அன்பின் கலவையில்
உருவானது.....
எல்லோருக்கும் கிடைக்காத
உயிர்மெய் எனும்
நம் குழந்தை செல்வம்.....! "

-தர்ஷினிசிதம்பரம்
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
கவிதை 20:

"தனி அழகு"

"ஒளிரும் போது தீபம் அழகு!
விரியும் போது மலர் அழகு!

நீந்தும் போது மீன் அழகு!
ஏந்தும் போது விரல் அழகு!

ஈர்க்கும் போது விழி அழகு!
பார்க்கும் போது பசுமை அழகு!

சுரக்கும் போது ஊற்று அழகு!
மறக்கும் போது பகை அழகு!

கேட்கும் போது இசை அழகு!
மட்கும் போது உரம் அழகு!

கோர்க்கும் போது மணி அழகு!
சேர்க்கும் போது மாலை அழகு!

உழைக்கும் போது வியர்வை அழகு!
தழைக்கும் போது வாழை அழகு!

வடிக்கும் போது சிலை அழகு!
துடிக்கும் போது இதயம் அழகு!

ரசிக்கும் போது இயற்கை அழகு!
பசிக்கும் போது உணவு அழகு!

காயும் போது சருகு அழகு!
சாயும் போது தோள் அழகு!

சிந்திக்கும் போது சிந்தனை அழகு!
சந்திக்கும் போது சோதனை அழகு!

தோன்றும் போது வானவில் அழகு!
ஊன்றும் போது கோல் அழகு!

நினைக்கும் போது நினைவுகள் அழகு!
புன்னகைக்கும் போது இதழ்கள் அழகு!

சேர்ந்திருக்கும் போது திருமணம் அழகு!
காத்திருக்கும் போது காதல் அழகு!

எளியோர் கற்கும்போது தமிழ் அழகு!
பெற்றோர் ஏற்கும்போது காதல் அழகு!

சோதிக்கும் போது இறைவன் அழகு!
சாதிக்கும் போது பெண் அழகு! "

- தர்ஷினிசிம்பா
 

vaishnaviselva@

Well-known member
Messages
311
Reaction score
248
Points
63
கவிதை 10:

"காதல் கணவா"


"காதலிப்பவர்களை பிடிக்கும்...

காதல் கூட பிடிக்கும்....

ஆனாலும் உறுதியோடு இருந்தேன்

பெற்றவர்களின் ஆசியோடு

கைப்பிடிப்பவரை

காதலிக்கவேண்டுமென்று!......



அதனால்தான்,

என் வாழ்வின் வரமாய்!

கடவுள் தந்த பரிசாய்...!

நீ கிடைத்தாய் !.....


வார்த்தைகள்

பேசாத மொழியாய்...!

என்றும் உன் விழிகளில்

என் மேல் காதலோடு

உலாவரும் என்னவனே...!



என் கண்ணிமை மூடி

நிரந்தரமாய் மண்ணுக்குள்

போகும் வரை !........

காதலித்து கொண்டிருப்பேன்

உயிரே உன்னை! ....."

-தர்ஷினிசிம்பா
semma ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 

New Threads

Top Bottom