Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நிலவுக்கு ஏன் கோபம்? - இந்திரா செல்வம்

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
1

தை திருநாள், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’, ‘பழையன கழிதலும் புதியன புகுதலுமாக’ விளங்கும் பொங்கல் திருநாளை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு நாளும் மறப்பதில்லை. என்ன! சில வேறுபாடுகளுடன். ஆனால் கொண்டாட்டத்திற்கு குறைவில்லாமல். மண்பானையில் வைக்கும் பொங்கலுக்கும் எவர் சில்வர் பாத்திரத்தில் வைக்கும் பொங்கலுக்கும் ருசி வேண்டுமானால் மாறலாம். ஆனால் அந்த பொங்கல் பொங்கி வரும் வேளையில் நம் மனதில் பொங்கி வழியும் இன்பம் என்றும் மாறுவதில்லை. நாம் இந்த இயற்கைக்கு எத்தனை கேடு விளைவித்தாலும் நம்மை இன்னமும் கைவிட்டு விடாத இயற்கைக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் விழாவான தை பொங்கலை இன்னமும் தமிழர்கள் கைவிடவில்லை.

இப்படிப்பட்ட திருநாளை பெரியவர்களை விட சிறியவர்களே அதிக ஆவலோடு எதிர்பார்த்தனர். புத்தாடைகளுக்கும், கரும்புக்கும் மயங்காத சிறுவர்கள் உண்டோ. ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் நிலைமைக்கேற்ப ஒரு பெரிய பட்டியலே போடப்பட்டது. இருக்கிறவர்கள் தாராளமாகவும் இல்லாதவர்கள் குழந்தைகளின் மனம் நோகாமல் இருக்க நூறு இருநூறு கடன் வாங்கியும் செலவு செய்வார்கள். என்ன செய்வது தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகை அல்லவா பொங்கல், உழவர்களின் திருநாள்.

பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே என்ற நிலையில் தி.நகரின் அத்தனை கடைகளும் நிரம்பி வழிந்தன. நெருக்கடியில் உயிர் இழப்பு ஏற்படுவது தான் பரிதாபமான விஷயம். இருப்பினும் கூட்டத்திற்கு குறைவில்லைதான். முக்கியமாக ஜவுளிக்கடைகளும், அதன் ஊழியர்களும் விழிபிதுங்க நின்றனர். அப்பப்பா எத்தனைக் கூட்டம், ஒரு இடத்தில் நிற்ககூட முடியாது போல் அத்தனை மக்கள். திருவிழாக் கூட்டமே தோற்றது. கோவிலுக்குப் போகிறார்களோ இல்லையோ, புடவை எடுக்க நிச்சயம் கிளம்புகிறார்கள். அன்று ஒரு நாளேனும் டிவி தொடர்களை பெரிய மனது வந்து தியாகம் செய்கிறார்களே. அதுவே பெரிய காரியம்தான். இருப்பினும் ஒரு மனம் துணியில் இருந்தாலும் மற்றொரு மனம் சீரியலில் இருந்தது. இவனை அவன் கெடுத்தானா? யார் அழுகிறார்கள். யார் அழ வைக்கிறார்கள். இதில் தான் மனம் உழன்று கொண்டிருந்தது. இப்படிப்பட்டவர்கள் நிறைந்து வழிந்த கடைகளில் ஒன்றுதான் ‘செல்வா அண்ட்கோ டெக்ஸ்டைல்ஸ்’

அது ஒரு நாலு மாடி கட்டிடம், முதல் தளத்தில் சுடிதாரும், இரண்டாம் தளத்தில் புடவையும், மூன்றாம் தளத்தில் குழந்தைகளுக்கான ரெடிமேடும், நான்காம் தளத்தில் பேன்சி பொருட்களும், தரை தளத்தில் மேட்சிங் பிளவுஸ் சகிதமான நல்ல கட்டிட அமைப்புடன் பிரம்மாண்டமாக விளங்கியது. முழு குளுகுளு வசதியுடன் குளிராகவும் இல்லாமல், வெப்பமாகவும் இல்லாமல் மிதமாக இயங்கியது.

நெற்றியில் துளிர்த்த வியர்வையை சேலைத் தலைப்பால் துடைத்தவாறு கடையினுள் நுழைந்தாள் ஓவியா. மனதில் கலவையாய் பல சிந்தனைகள். வருடத்தில் ஒரு முறைத்தான் பிரியாவுக்கு துணி எடுக்கிறோம். அதுவும் நல்லதாக எடுக்கணும். அவளின் ஆசைப்படியே கத்திரிப்பூ கலரில் ஒரு சுடிதார் கிடைக்கணும். இப்படி மனதால் கணக்கு போட்டப்படி சுடிதார் பகுதிக்கு வந்தாள் ஓவியா. அங்கும் ஒரே இடிதடிதான், நிற்க இடமில்லை. ஒரு பெரியவர் உள்ளே நுழைய முடியாமல் நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஓவியா,

‘என்ன தாத்தா வாங்கப் போறீங்க?’ என்றாள் முகமலர்ந்த புன்னகையை உதிர்த்து.

‘என் பேத்திக்கு ஒரு சுடிதார் வாங்கலாம்னு பார்த்தா இந்த கூட்டத்துல நுழைய முடியலைம்மா’ என்றார் பரிதாபமாக.

‘அப்படியா....! சரி தாத்தா நீங்க அந்தச் சேர்ல உட்காருங்க. இங்க கொஞ்சம் ஃப்ரீயா ஆனதும் கூப்பிடுறேன்!’ என்றாள் மென்மையாக.

அதற்காகவே காத்திருந்தவர் போல, ஓடிச்சென்று அமர்ந்து உடலை தளர்த்திக் கொண்டார்.

‘தாத்தா... தாத்தா இங்க வாங்களேன், வந்து சுடிதார் பாருங்களேன்’ என்றபடி ஓவியா குரல் கொடுத்தாள்.

பெரியவர் சில சுடிதார்களைப் பார்த்தார். அதில் ஒரு சுடிதார் பிடித்துப் போக, அதை பிரித்துப் பார்க்க முனைந்தவுடனே, ‘ யோவ்... அப்படியே பாருய்யா, எதுக்கு பிரிச்சுப் பார்க்கிற இப்படி, அப்படி பிரிச்சு பாத்துட்டு, ஒன்னும் வாங்காம போயிடுவீங்க, நாங்க உட்கார்ந்து மடிக்கனுமா?’ என்று சீறினான் அந்தப் பணியாளன், மிரண்டு போனார் பெரியவர்.

‘ஹலோ, என்ன ரொம்ப பேசுறீங்க, துணி வாங்கணும்னா பிரிச்சு பார்க்காம எப்படி வாங்குவது’ என்று வாதாடினாள் ஓவியா.

‘அதான் பார்க்கறீங்கள்ள, உள்ள மட்டும் வேற துணியா மாறப்போகுது, எல்லாம் ஒன்னுதான்மா’ என்றான் விடாது.

இது சரிப்படாது என்று எண்ணிய ஓவியா, சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒரு மூலையில் ‘மேனேஜர்’ என்ற பலகையை பார்த்தவள் அதனை நோக்கி விரைந்து சென்றாள்.

கதவை நெருங்கியவளை பியூன் தடுத்தான். அதைப் பொருட்படுத்தாது உள்ளே சென்றாள்.

‘எக்ஸ்கியுஸ் மீ சார்’ என்றாள் அழகான ஆங்கிலத்தில்.

‘எஸ்’ என்று சூழல் நாற்காலியில் அவளை நோக்கியவனைப் பார்த்து அதிர்ந்தாள்.

‘இவனா....? இவனா..’

மேனேஜர் என்றதும் அறுபதுகளில் ஒருவரைத்தான் அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அங்கு இருபத்தி ஐந்து அல்லது முப்பதுக்குள் ஒருவன், அதுவும் அவள் வாழ்வின் எதிரி என்று நினைத்திருந்த அவனேதான், சிறிதும் குழப்பமில்லை.

‘எஸ்’ என்றான் மீண்டும்.

இவனிடம் ஏன் தடுமாற வேண்டும் என்று எண்ணியவள். அவனது நேர் பார்வையை எதிர்கொண்டு பேசினாள்.

‘உங்க பணியாளர்களைப் பற்றிய ஒரு கம்ப்ளைண்டோட வந்திருக்கேன் சார்’

அவள் பேசுவது புரிந்ததும் புருவம் முடிச்சிட அவளை நன்றாக ஊன்றி பார்த்தான்.

‘அப்படியா.... உட்கார்ந்து பேசலாமே’ என்றான் எதிரிலிருந்த இருக்கையைக் காட்டி.

‘தேங்க்யூ’ என்றபடி அமர்ந்தாள்.

‘இப்ப சொல்லுங்க, என்ன பிராப்ளம்?’

‘அதோ அந்தப் பெரியவரைத் தெரியுதா? அந்த பெஞ்சில் உட்கார்ந்திருக்காரே’ என்றாள் விரலை அந்தப் பெரியவர் பக்கம் நீட்டி, கண்ணாடிக் கூண்டு என்பதால் நன்றாகவே பார்க்க முடிந்தது.

‘ஆமாம்.... சொல்லுங்க’

‘அந்த பெரியவர் தன் பேத்திக்கு ஒரு சுடிதார் மெட்டீரியல் வாங்க ஆசையா வந்திருக்காரு ஆனா உங்க ஊழியர் சரியா. டீரீட் பண்ணலை’

‘அவர் எடுக்கணும்னு ஆசைப்பட்ட துணியை பிரிச்சு பார்க்க விடலை. கேட்டா, நீங்க பிரிச்சு போட்டுடுவீங்க. நாங்க மடிக்கனுமான்னு கேட்கிறாரு. அதுக்கு தானே சார். நீங்க சம்பளம் கொடுக்குறீங்க, பணம் போட்டு துணி வாங்கிறது நாங்க. நாங்க போடுற பணத்துக்கு ஏத்த மாதிரி துணியைத் தானே எதிர்பார்ப்போம். அதனால தான் பிரிச்சு காட்ட சொல்றோம். சப்போஸ் ஒரு டேமேஜ் இருந்ததுன்னா, வீட்டுக்கு போய் பார்த்துட்டு, ரெண்டாவது தடவை இங்க வந்து மாத்திக்கிட்டு, நிக்கிறதா எங்க வேளை. அதுவும் அந்தப் பெரியவரை அலைய விடறது நியாயமா இருக்குமா?’ என்று பொரிந்து தள்ளிவிட்டாள்.

‘ஓகே மிஸ் ஓவியா, கூல் டவுன் எந்த செக்ஷன்ல பாத்திங்கன்னு சொல்லுங்க. நான் அங்க இருக்கிறவங்களை கூப்பிட்டு விசாரிக்கிறேன்’

‘உங்களுக்கு அவ்வளவு சிரமம் வேண்டாம், பேரு மிஸ்டர் பாண்டியன் ஐ.டி. கார்ட்ல பார்த்தேன். காட்டன் சுடிதார் மெட்டீரியல்ஸ் செக்ஷன்’

‘குட், புள்ளி விபரம் எல்லாம் தர்றீங்க, ஐ அப்பிரிஷியேட் யுவர் ஷார்ப்னஸ்’

‘தேங்க்யூ... பட் ஐ டோன்ட் வான்ட் யுவர் காம்ப்ளிமென்ட்ஸ்’ என்றவளை வியப்புடன் நோக்கினான். முகஸ்துதிக்கு மயங்காத பெண்ணா? தன்னிச்சையாக விரல்கள் இண்டர்காமிற்கு சென்று.

‘ராஜு தாத்தா, நம்ம பாண்டியனை, என்னோட கேபினுக்கு உடனே அனுப்புங்க; என்றான்.

சில வினாடிகள் அங்கு அமைதி நிலவியது.

பதறிய மனதுடன் பாண்டியன் உள்ளே வந்தான்.

‘குட்மார்னிங் சார்’ என்றான் பவ்யமாக.

‘இவங்க சொல்றது எல்லாம் நிஜமா பாண்டியா?’ என்றான் சற்று அதிர்வான குரலில்.

‘என்ன.. சார்?’.. என்றான் திணறியவாறு.

‘நீ.. அந்த பெரியவரை ஹார்ஷா டீல் பண்ணியாமே?’ என்றான் பெரியவரைக் காட்டி.

‘’சார்.. அது... வந்து, இருந்த டென்ஷன்ல தெரியாமச் சொல்லிட்டேன் சார். சார் சார், வெரி வெரி சாரி சார்’

‘உன் சாரியை இங்க சொல்லாத, இந்த மேடம்கிட்ட சொல்லு’ என்றான் ஓவியாவைக் காட்டி.

‘சாரி மேடம், வெரி சாரி’

‘என்கிட்டயும் நீங்க கேட்க வேண்டாம் மிஸ்டர் பாண்டியன். அந்தப் பெரியவர் கிட்ட கேளுங்க போதும்’ என்றது தான் தாமதம் உடனே கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி அந்தப் பெரியவரை நெருங்கினான். அவரை சமாதானப்படுத்த முயன்றான்.

அதற்குள் ஓவியா, ‘என்னோட கோரிக்கையை ஏத்துக்கிட்டதுக்கு நன்றி மிஸ்டர்...’ என்று தெரியாதவளைப் போல் இழுத்தாள்.

‘செல்வா’ என்றான் கம்பீரமாக.

‘ஓகே செல்வா தேங்க்ஸ் பார் யுவர் இம்மிடியட் ஆக்சன்’ என்றபடி எழுந்தாள் ஓவியா.

‘இது என்னோட கடமை. ஆனால் நான் உங்ககிட்ட இன்னொன்னும் சொல்லனும்னு ஆசைப்படறேன் மிஸ் ஓவியா’

கதவருகில் சென்றவள் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்.

‘எல்லா இடத்துலயும் வேலை செய்றவங்க ரோபர்ட் இல்லை. மனிதர்கள்னு நீங்க புரிஞ்சிக்கனும். அவங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும். எல்லா சராசரி மனுஷனுக்கும், குடும்பத்திலயும் சரி, வேலையிலையும் சரி நிறைய டென்ஷன் இருக்கத்தான் செய்யும். நீங்க இப்போ கம்ப்ளைன்ட் பண்ணீங்களே அவன் குடும்பம் எந்த நிலையில் இருக்கு தெரியுமா. மூணு தங்கச்சி, விதவை அம்மா, என்ஜினியரீங் படிக்கிற தம்பி, உயிரைக் கொடுத்து உழைக்கிறான். ஒரு நிமிஷம் கூட அவன் தூங்குவதில்லை தெரியுமா. அதான் ஏதோ டென்ஷன்ல சொல்லிட்டான். அதுக்காக அவன் செய்றது சரின்னு சொல்ல வரலை. எத்தனைத்தான் நாம ஒளிச்சி வெச்சாலும் சில சமயம் இப்படித்தான். தானா வெடிச்சி வெளியேவரும். அதுக்கு யார் பலியாகிறாங்கன்னு யோசிக்க தோணாது. சோ அவன் சார்பில் நான் உங்ககிட்ட மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கிறேன். இனி இந்த மாதிரி தப்பு நடக்காம பாத்துகிறேன் சாரி பார் த இன்கன்வீனியன்ஸ்’ என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காமல் ஏதோ கோப்புக்குள் தன் கவனத்தை திருப்பினான்.

கதவருகில் சென்று விட்ட ஓவியா வேறு ஏதும் சொல்லத் தோன்றாமல் வெளியே வந்தாள்.

வெளியே நின்றிருந்த பாண்டியன் பாதித் திறந்த கதவு வழியே அத்தனையும் கேட்டபடி நின்றான். இவள் வெளியே சென்றதுதான் தாமதம். உடனே உள்ளே ஓடி வந்து செல்வாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான்.

‘சாரி சார், தெரியாம செய்துட்டேன். இனிமே இது மாதிரி சத்தியமா நடக்காது. என் மேலே எவ்வளவு பாசம் வெச்சிருகீங்க. நான் பண்ணின தப்புக்கு. நீங்க சாரி கேட்டீங்களே. நீங்கதான் சார் தெய்வம்’ என்று புலம்பிய பாண்டியனை தூக்கி நிறுத்தி சமாதானம் செய்தான் செல்வா.

‘இதோ பாரு பாண்டியா எனக்கு ஊழியர்களும் முக்கியம், வாடிக்கையாளர்களும் முக்கியம். அதான் ரெண்டு பேருக்கும் சமமா பேசினேன் என்று மொழிந்து விட்டு தன் கோப்புக்குள் புகுந்தான்.

சட்டென்று ஏதோ தோன்ற தன அறையில் உள்ள கண்ணாடிச் சுவர் வழியாகக் கீழே பார்த்தான். ஓவியா தன் ஸ்கூட்டியில் பறந்தாள். அவளை பார்த்த படியே சிந்தனையை ஓட்டினான். ‘இவளை எங்கோ பார்த்தது போல் இருக்கே.. எங்கே’ அவளைப் பார்த்த சில நொடிகளிலேயே. அவளது தைரியம், சுறுசுறுப்பு, துடுக்குத்தனம் என்று அத்தனையும் கவனித்தான். பெண்களின் தைரியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செல்வாவுக்கு ஓவியாவை பிடித்திருந்தது. அவள் நினைவுகளை ஓரம் தள்ளிவிட்டு தன் வேலையில் ஆழ்ந்தான்.

ஸ்கூட்டி சைதாப்பேட்டை ரோட்டில் வேகமாக சென்றது. ஓவியாவின் மனதைப் போலவே நினைவுகள் செல்வாவையே சுற்றி சுற்றி வந்தது. ச்சே.. எந்த கொலைகாரனைப் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அவனை பார்த்து விட்டேனே. மூன்று வருடங்கள் ஆகிவிட்டது அந்தச் சமபவம் நடந்து. ஆனால் என் கோபம் துளியும் குறையவில்லை. மறக்கக் கூடிய செயலா அது. இவனால் என் குடும்பமே தலைகீழ் ஆகிவிட்டது.

இவன் எங்கே சென்னை வந்தான். இவனால்தானே நாங்கள் திருச்சியை விட்டு இங்கு வந்தோம். சொந்த பந்தம், சொந்த வீடு எல்லாவற்றையும் விட்டு இப்படி அனாதைகளாய் நிற்பது இவனால் தானே. எப்படிப்பட்ட ஒரு அநீதி எனக்கு செய்துவிட்டு முகத்தில் ஒரு சிறு மாறுதல் கூட காட்டாமல், எதுவுமே செய்யாதவன் போல் பேசுகிறான், நான் ஏன் தடுமாறினேன். தப்பு செய்தவன் சாதாரணமாக இருக்க எனக்கு மட்டும் ஏன் தடுமாற்றம் வந்தது. இது என்ன என் மனம் அவனையே நினைக்கிறது. ச்சே.. மறந்துவிடவேண்டும்... என்று மனம் நினைக்க. அவள் ஸ்கூட்டி தன்னிச்சையாக ஒரு கோவிலின் முன் நின்றது. மனசாந்திக்காக அந்தக் கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு எழுந்து நடந்தாள். இவள் செல்வாவை மறக்க நினைக்க, கடவுளின் நினைப்பு வேறாக இருந்தது
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
2

‘அம்மா.. டீ கொடும்மா தலை வலிக்குது’ என்றபடி வீட்டினுள் குரல் கொடுத்தாள்

‘இதோ தரேன்டி, முகம் கழுவிட்டு வா’ அடுக்களையினுள்ளிருந்து குரல் வந்தது.

முகம் கழுவி சோபாவில் அமர்ந்து டிவியை இயக்கினாள் எப்பவும் போல் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. டீ கொண்டு வந்த தாயின் முகத்தைப் பார்த்ததும் அழுகை வந்தது. அவளின் வெற்று நெற்றியைப் பார்த்ததும் செல்வாதான் நினைவில் வந்தான்.’ அடப்பாவி என் அம்மாவின் முகத்தைப் பாருடா. முகம் நிறைய குங்குமமும் கூந்தலில் பூவும் அப்படி ஒரு மங்களம் பொங்கும் முகத்தில். இப்போது வெறுமை தான் மிஞ்சியது. கண்கள் கலங்கிவிட்டது. உடனே அம்மாவுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டாள். கண்கள் சுவரில் மாட்டிய அப்பாவின் புகைப்படத்தை அடைந்தது.’அப்பா.. அப்பா ஏன்ப்பா எங்களை விட்டு போனீங்க’ உள்ளம் குமுறியது

‘என்னடி பொங்கலுக்கு டிரஸ் எடுக்கப் போறேன்னு தி.நகர் போன ஒரு பை கூட காணோம்’ என்ற அம்மாவின் குரல் அவள் நினைவுகளை கலைத்தது.

“ஓ.. அது.. வா.. ரொம்ப தலைவலிம்மா அதான் கூட்டத்துல முடியல வந்துட்டேன்’ என்றாள் தலையைப் பிடித்தபடி.

“போச்சு போ.. பிரியா உன்னை உண்டு இல்லைன்னு பண்ணப் போறா” என்றபடி சமையல் கட்டினுள் நுழைந்தார் கற்பகம்.

மாலை 6.00 மணி

‘அக்கா....’ என்றபடி வீட்டினுள் சிட்டாய் நுழைந்தாள் பிரியா. அழகான முகம். எந்த ஒரு மாசுமரு இல்லாமல் பளபளத்தது. அதிக நிறமில்லை என்றாலும் கொள்ளை கொள்ளும் அழகு. இந்த அழகைக் கண்டு பல நாள் கவலைப்பட்டிருக்கிறாள் ஓவியா. அழகு மிகவும் ஆபத்தானது என்று அவள் அடிக்கடி சொல்லுவாள். அதை பிரியா பொருட்படுத்தமாட்டாள். அவளை விரைவில் ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால், தன் கடமை முடிந்ததென்று பலமுறை நினைப்பாள். ஆனால் அவள் படிப்பு கெட்டுவிடக் கூடாதென்று ஒத்தி வைத்தாள். ஆம் பிரியா கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவி. நான்கு வருட என்ஜினியரீங் படிப்பு. முதலாண்டு திருச்சியில் படித்துவிட்டு மற்ற மூன்றாண்டுகளை சென்னையில் தொடர்ந்தாள் பிரியா. நல்லவேளை டிரான்ஸ்பர் கைகொடுத்தது. இல்லையென்றால் அவள் படிப்பு வீணாகியிருக்கும்.

“அக்கா...” என்று கூப்பிட்டுக் கொண்டு வந்தவள் படுக்கையில் படுத்திருந்த ஓவியாவின் மேல் விழுந்தாள். சட்டேன்று துயில் கலைந்தாள் ஓவியா.

‘என்னடி இப்படி வந்து விழுற?” என்றாள் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு.

“கோபமெல்லாம் அப்புறமா படு அக்கா... என்னோட சுடிதார் எங்க?” என்றாள் ரூமை கண்களால் ஆராய்ந்து கொண்டு.

முகம் பட்டென்று மாறியது ஓவியாவுக்கு. ‘இவளது சந்தோஷத்தை நான் சொல்லும் பதில் போக்கிவிடுமே. கடவுளே எப்படி சமாளிக்க போறேன்’ என்று யோசித்தவாறு பேச வாயெடுத்தாள்.

“சுடிதாரா.. பிரியா.. அது வந்து அக்கா போன கடையில் எந்த சுடிதாரும் நல்லாயில்லை. அதுவும் நீ ஆசைப்பட்ட கத்திரிப்பூ கலர்ல சுடிதாரே இல்லை அதான் வாங்காம வந்துட்டேன்’ எப்படியோ கூறிவிட்டாள்.

பிரியாவின் சிரித்த முகம் வாடியது.

“அப்படியா.. அக்கா.. பொங்கல் போனஸ் வந்துடுச்சில்ல..’ என்றாள் கேள்வியாய்.

“அடி அசடே, பணம் எல்லாம் இருக்கு. அங்கு சுடிதார் தான் நல்லாயில்லை. சரி நான் பணம் தரேன். நீ உன் பிரெண்ட்ஸ் கூட இந்த ஞாயிற்றுக்கிழமை போய் எடுத்துக்கிறியா?” என்றாள் ஓவியா.

முகம் பளபளத்தது பிரியாவிற்கு.

“சரி அக்கா..“ என்றாள் சந்தோஷமாய்.

உடனே பையிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து பிரியாவிடம் நீட்டினாள். ஆசையாக அதை வாங்கிக் கொண்டு சிட்டாய் பறந்தாள். அப்பாடா, ஒருவாறு சமாளித்துவிட்டோம் என்ற நிம்மதியுடன் எழுந்து குளியலறை நோக்கிசென்றாள். அந்த ஞாயிற்றுக்கிழமை பிரியா வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தப் போவது தெரியாமல்.

ஞாயிற்றுக்கிழமை, நீலநிற சுடிதாரில் ஒரு தேவதையாக வந்து நின்றாள் பிரியா. தலை குளித்து, ஒரு சிறு கிளிப்பை மட்டும் அணிந்து மீதமுள்ள கூந்தலை விரித்து விட்டிருந்தாள். காதுகளில் அழகான வளையம், புருவங்களின் இடையில் நான் இருக்கிறேன் என்றது சிறு பொட்டு, கழுத்தில் அந்த நீல சுடிதாரிலுள்ள வெள்ளைப் பூக்களுக்கு ஏற்றாற்போல் முத்து மாலை. அடடா அவளது அழகை பார்க்க இரு கண்கள் பத்தாது என்றுணர்ந்தாள் ஓவியா.

“நான் தி.நகர் போறேன்க்கா” என்றாள் குதுகலமாக.

“சரி பிரியா பத்திரமா போயிட்டுவா, சாயிந்திரம் சீக்கிரமா வந்துடனும் சரியா’ என்று அவளை தனியே அனுப்ப மனம் வராமல் அனுப்பி வைத்தாள் ஓவியா.

தி.நகர் ஓவியா சென்றது வெள்ளிகிழமையில். அப்போதே அப்படி அல்லோல கல்லோலப்பட்டுக் பட்டுக் கொண்டிருந்த தி.நகர். இன்று ஞாயிற்றுகிழமை சொல்லவும் வேண்டுமா, அப்பப்பா உலக மக்கள் அனைவரும் அந்தக் குறுகிய தெருவுக்குள் வந்து நுழைவது போல இருந்தது. செவ்வாய்கிழமை பொங்கலாக இருக்கையில் திநகர் இப்படி இருப்பதில் ஆச்சரியமில்லை தான்.

மிகுந்த இடிபாடுகளுக்கிடையில் எப்படியோ பிரியாவும் அவள் தோழிகளும் ‘செல்வா அண்ட் கோ’ வாசலை வந்தடைந்தார்கள். பிரியாவின் தோழி இந்தக் கடையில் எடுப்பதுதான் வழக்கமாம். அதனால் பிரியாவும் அங்கேயே எடுக்க இஷ்டப்பட்டாள். உள்ளே நுழைய கால் எடுத்து வைத்தவள் கீழே விழுந்தாள். காரணம், அவசர அவசரமாக வந்த ஒரு மனிதன் பிரியாவை இடித்துத் தள்ளிவிட்டு முன்னேறினான்.

தடுமாறி எழுந்தவள் ‘ஏய் மிஸ்டர் தள்ளி விட்டுட்டு நீ பாட்டுக்கு போற’ என்றாள் குரலை உயர்த்தி.

சற்று தூரம் சென்றவன் அப்போது தான் பிரியாவை பார்த்தான். கண்களால் அவளை ஆராய்ந்துவிட்டு ‘ சாரி மேடம்’ என்றபடி தன் நடையைக் கட்டினான்.

‘கண்ணு என்ன பின்னாலையா வெச்சுக்கிட்டு வருவீங்க. அறிவில்ல? மூஞ்சியப் பாரு என்று புலம்பிக் கொண்டே இருந்தாள். இரண்டு தடவைத் திரும்பிப் பார்த்துவிட்டு வேகமாக மறைந்தாள் அவன்

‘இன் டீசன்ட் பெல்லோஸ்’ என்று திட்டிவிட்டு கடையினுள் நுழைந்தாள்.

***********​

‘அக்கா இதோ பாரேன், உனக்கு ஒரு புடவை வாங்கியிருக்கேன், நல்லா இருக்கா’ என்றால் ஓவியாவிடம் நீட்டி.

அதைக் கைகளில் வாங்கி பார்த்துவிட்டு..

“உனக்கு ஏதுடி பணம். நான் ஆயிரம் ரூபாய் தானே கொடுத்தேன்’ என்ற கேள்வியோடு அவளை நோக்கினாள்.

‘அம்மாதான் அவங்க சேர்த்து வச்ச காசுலயிருந்து ஐநூறு ரூபாய் கொடுத்து அனுப்பினாங்க. மொத்தம் ஆயிரத்து ஐநூறு ரூபாய். நான் சேர்த்து வெச்ச ரூபாயும் எடுத்துக்கிட்டு போனேன். எனக்குச் சுடிதார் உனக்கும், அம்மாவுக்கும் புடவை வாங்கிட்டு வந்துட்டேன். எல்லாம் எப்படிக்கா இருக்கு. நாம உடனே இது எல்லாத்தையும் தைக்கக் கொடுக்கனும். நம்ம பரிமளா அக்காகிட்ட கொடு. அப்பத்தான் செவ்வாய்கிழமை காலைல கொடுத்துடுவாங்க நாம போட்டுக்கலாம்’ என்றாள் நிறுத்தாமல்.

‘சரி சரி போய் கொடுத்துட்டு வா’ என்றாள். அவள் சந்தோஷத்தில் மான் போல் துள்ளிக் குதித்து ஓடினாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
3​

பொங்கல் திருநாள். பொலிவுடன் விடிந்தது (கற்பகம் 7.30-க்கெல்லாம் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்துவிட்டார்)

காலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து, அம்மாவுக்கு உதவிய பிறகு சிறு தட்டில் நெய்வேத்தியம் செய்த சர்க்கரைப் பொங்கலுடன் டிவி முன் அமர்ந்தாள் பிரியா. அவளைத் தொடர்ந்து ஓவியாவும் வந்தமர்ந்தாள்.

‘அக்கா.. என்னோட செலக்ஷன் சூப்பர்க்கா. மூநூறு ரூபாயா இருந்தாலும் ராயல் லுக் இருக்குக்கா. அதுவும் உனக்கு இந்தப் புடவை எடுப்பா இருக்கு’ என்றாள் அக்காவை மேலும் கீழும் பார்த்தவாறு.

‘அப்புறமா புகழ்ந்துக்கலாம் சீக்கிரம் கிளம்பு’ என்றாள் ஓவியா.

‘எங்க...?” என்று இழுத்தாள் பிரியா.

‘கோவிலுக்குத்தான்’

“நான் வரலப்பா, என்னோட தலைவர் ப்ரோகிராம் வரப்போகுதுன்னு தானே, சீக்கிரமா அம்மாவை சாமி கும்பிட சொல்லி நச்சரிச்சு முடித்து விட்டு வந்து டிவி முன் உட்கார்ந்தேன்”

‘ஏய் டிவி பைத்தியம் முப்பது நிமிஷத்துல வந்துடலாம் வா அம்மாவுக்கு கால் வலிக்குதுதாம், நீயாவது வா’ என்று வற்புறுத்தினாள்.

“போக்கா நான் வரமாட்டேன்’ என்றாள் உறுதியாய்.

வேறு வழியில்லாமல் தனியே புறப்பட்டாள். பிரியா கூறுவது போல, அந்த பச்சை நிற புடவையில் மிகவும் அழகாகவே இருந்தாள் ஓவியா.

வேகமாக நடந்து பிரதான சாலையை அடைய திரும்பினாள். திரும்பிய வேகத்தில் ஒரு கறுப்பு நிற சான்ட்ரோ கார் இவள் வருவதைப் பாராமல் விரைந்தது. பக்கத்தில் தேங்கியிருந்த மழை நீரை வாரி இவள் மேல் தெளித்தது. தன் நிலையை அறிந்து, குனிந்து தன் புடவையை கையால் இழுத்துவிட்டு சேற்றை அகற்ற முயன்று கொண்டு இருந்த வேளையில், அந்தக் காரின் சொந்தக்காரன், காரை ஒரமாக நிறுத்திவிட்டு அவளின் அருகில் வந்து.

‘சாரி மேடம், நீங்க வந்ததை கவனிக்கவில்லை. என்னை மன்னிச்சிடுங்க’ என்றான்.

‘பரவாயில்லை...’ என்று கூறி அவளை ஏறிட்டவள் வாக்கியத்தை முடிக்காமல் விழித்தாள்.

செல்வா.. மறுபடியுமா? கடவுளே சிரித்த முகம் .சட்டென்று இறுகியது. புருவம் முடிச்சிட சீறினாள்.

‘உங்க பணக்காரத்தனத்தை எல்லாம் ரோட்டுல போறவங்க மேல தான் காட்டுவீங்களா, கண்ணு மண்ணு தெரியாம கார் ஓட்டுறீங்க, காருல போனா பிளைட்டுல போற மாதிரி நினைப்பா ச்சே..‘ பொரிந்து தள்ளினாள்.

அதுவரை அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான் செல்வா.

‘அதுதான் சாரின்னு சொல்லிட்டேனே..... நீங்க ஓவியாதானே?’ என்றான் கேள்வியாய்.

“இல்ல...’ என்று கூறி விடுவிடுவென்று திரும்பி வீட்டை நோக்கி நடந்தாள். மனதில் புகை மண்டலம்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றான் செல்வா. எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று அவனுக்கே தெரியாது. தன் கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தான். எவ்வளவு யோசித்தும் அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மலர்ந்த முகத்துடன் பரவாயில்லை என்று கூறியவள் என் முகத்தை பார்த்ததும் சீறினாள். சேறு அடித்ததால் வந்ததல்ல அவளின் கோபம். என்னை பார்த்ததனால் வந்த கோபம்தான். அவளுக்கு என் பேரில் அப்படி என்ன வெறுப்பு இருக்கக்கூடும். அன்று கடையில் வந்து அப்படி நியாயம் பேசியவள் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கு முன்பு நான் அவளை எங்கோ பார்த்தது போலவே தோன்றுகிறது. எங்கே பார்த்தேன் எப்போது பார்த்தேன்.. ச்சே.. எவ்வளவு யோசித்தாலும் ஒன்றும் விளங்கவில்லை. கடவுளே... இது என்ன குழப்பம்... என்றபடி சில சிந்தனைகள் அவன் உள்ளத்தில் ஒன்றாக எழுந்தன. எப்போது உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.

*****​

காரின் சாவியை கையில் எடுத்துக் கொண்டு படிகளில் கீழ் இறங்கினான் செல்வா.

‘டேய் டிபன் சாப்பிட்டு போடா.....” என்றார் தனலட்சுமி.

‘வேண்டாம்மா... நான் கடையில் பார்த்துக்கிறேன். டயம் ஆயிடுச்சி’ என்று குரல் கொடுத்தவன் நிற்காமல் முன்னேறினான்.

‘ஒரு நிமிஷம் இருடா’ என்றபடி ஓட்டமும், நடையுமாக அவனை நெருங்கினார்.

“என்னம்மா...” என்றான் அவஸ்தையாய்.

‘அப்பா உன்கிட்ட ஏதோ பேசனுமாம்பா’ இதைக் கேட்டதும் அவன் முகம் மேலும் சுருங்கியது.

‘என்ன புதுசா.. நான்தான் அவரோட பேசி ரொம்ப நாள் ஆகுதுல்ல’

‘எல்லாம் சரிடா.. உனக்கு பொண்ணு பார்க்கிற விஷயமா, நேத்து புரோக்கர் வந்திருக்காரு. அது விஷயமாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன் போய் என்னன்னு கேளேன்டா’

‘கல்யாணம் எல்லாம் இப்ப வேண்டாம். என் விஷயத்துல அவர தலையிட வேண்டாம்னு சொல்லி வை. எனக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுதோ, அப்போ பண்ணிக்கிறேன். தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ணாதீங்க, நான் கிளம்புறேன்’

அவரின் பதிலை எதிர்பார்க்காமல் விரைந்து சென்றான். ஒரு பெருமூச்சுடன் அம்மா உள்ளே சென்றார்.

கார் பல்லாவரத்தை நோக்கி வேகமாக சென்றது. ‘பாரதி ஏஜென்சீஸ்’ என்ற இரண்டு மாடிக் கட்டிடத்தின் முன் வண்டி நின்றது. காரிலிருந்து இறங்கி ரிஷப்ஷனை நோக்கி சென்றான் செல்வா. ரிசப்ஷனிஸ்டை நெருங்கி,

‘கேன் ஐ ஸி மிஸ்டர் குரு’ என்றான் பவ்யமாய்.

‘ஆர் யூ செல்வா’ என்றாள் கொஞ்சும் குரலில்.

‘எஸ்...’

‘சார் ஈஸ் வெயிட்டிங் பார் யூ. செகண்ட் ப்ளோர் ரெப்ர்ஸ்மென்ட் ரூம்’ என்றபடி படிகளை கை காட்டினான்.

‘தேங்க்யூ’ என்றபடி படிகளில் தாவினான்.

‘ரெப்ரஸ்மெண்ட்’ என்ற போர்டைப் பார்த்து, அம்புக்குறி காட்டிய திசையில் சென்றான். ஒரு சிறிய கதவு தென்பட்டது. திறந்தான் உள்ளே குரு கையில் டீ கப்புடன் நின்று கொண்டிருந்தான்.

செல்வாவைப் பார்த்ததும் முகம் மலர, ‘வாடா.. வா... வா.. “ என்றபடி அவனருகில் சென்று தோள்களைப் பற்றி அழைத்து வந்து அங்கிருந்த சேரில் அமர வைத்தான். அருகிலிருந்த காபி மிஷினைத் தட்டி ஒரு டம்ளரில் காபி பிடித்துக் கொண்டு வந்து அவன் எதிரில் வைத்தான்

‘எடுத்துக்கடா. செல்வா’ என்று கூறி, தானும் அவன் எதிரில் அமர்ந்து கொண்டான்.

‘சொல்லுடா, என்ன திடீர்னு என்னைப் பார்க்க விசிட்’ என்றபடி காப்பியை சுவைத்தான்.

‘மொதல்ல அப்பா எப்படி இருக்காருன்னு சொல்லு’

‘போன வாரம் நீ வந்து பார்த்தபோது எப்படி இருந்தாரோ அதே மாதிரித்தான் இருக்காரு.’

‘ம்.. ஆபீஸ் வொர்க் எப்படி இருக்கு, எல்லாம் ஓரளவுக்கு செட் ஆயிடுச்சா?”

“அதை ஏன் கேட்கிற, நான் பாட்டுக்கு சந்தோஷமா சுத்திக்கிட்டு இருந்தேன். அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போனாலும் போச்சு, எல்லாம் தன் தலையில, ஒரே டென்ஷன் லைப்டா’ என்று நொந்து கொண்டான்.

‘அப்புறம், சாருக்கு பொறுப்பு வரவேண்டாமா, ரெண்டு வாரத்துக்குள்ள, இவ்ளோ சலிப்பா, எல்லாம் போகப் போக சரியாகிவிடும்.’

‘நீ ஈஸியா சொல்லிட்ட. நான்தான் இங்கே கிடந்து அல்லாடுறேன். நல்லவேளை கடவுளாப் பார்த்து எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல பி.ஏ. கொடுத்துருக்காரு. அவங்கதான் எனக்கு ரொம்ப உதவியா இருக்காங்க. ரொம்ப பொறுப்பானவாங்க. எனக்கு ஏதாவது சந்தேகம்னா அவங்களை தான் கேட்பேன். இதுவரைக்கும் தப்பிச்சுகிட்டு இருக்கேன். இல்லைன்னா என் கதை அதோ கதிதான்’

‘அது சரி... சீக்கிரம் தொழிலை கத்துக்கோ..’ என்று காப்பியை குடித்து முடித்து பிளாஸ்டிக் கப்பை குப்பைக் கூடையில் போட்டான்.

‘என்னோட கதை இருக்கட்டும், சார் என்ன அதிசயமா ஆபீஸுக்கு...’ என்று அவன் முகத்தினை ஆராய்ந்தான்.

செல்வா தன் சிந்தனைகளை ஓடவிட்டு பின் நிதானமாக ஓவியாவை பற்றி கூறி முடித்தான்.

குரு முகத்தை பாவமாக வைத்துக் கொண்டான்.

‘டேய் செல்வா.. தயவு செய்து தப்பா நினைக்காதடா, நீ சொன்ன கதையில் தலையும் புரியல, வாலும் புரியல, நீ சொன்ன பொண்ணு. உன் மேல கோவமா இருக்கிறாங்க. ஆனா ஒன்னு, நீ அவங்களை பார்த்த ஞாபகம் லேசா இருக்குன்னு சொல்ற, கடைசில நீ என்னதான் சொல்ல வர்ற’ முடிகளில் விரல் வைத்து கலைத்துக் குழம்பினான்.

‘டேய் உன்னை விட அதிகமா குழம்பிப் போய் இருக்கேன்டா நான். உன் வீட்டுக்கு வந்தபோதே சொல்லலாம்னு நினைச்சேன். வீட்ல எல்லோரும் இருந்ததால சொல்ல முடியல. அப்புறம் கொஞ்சம் பிஸியாயிட்டேன். இப்பதான் டைம் கிடைச்சது. படுத்தா தூக்கம் கூட வரமாட்டேங்குதுடா, கண்ண மூடுனாலே அந்தப் பொண்ணோட சுருங்கின முகம் தான் கண் முன்னாடி வருது. என்ன பண்றதுன்னே தெரியல’ என்ற படி தன் ஆள்காட்டி விரலால் நெற்றியைத் தேய்த்தான்.

‘டக்..’ கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு இருவரும் கதவை நோக்கினார்கள். உள்ளே நுழைந்த பெண்ணைப் பார்த்த செல்வாவின் கண்கள் அகல விரிந்தன.

‘ஓ.. சாரி.. சார்..‘ என்று பதறினாள் ஓவியா. குருவைப் பார்த்து பிறகு கண்கள் அருகிலிருந்தவனை நோக்கியது. பதறிய கண்களில் தீப்பொறி பறந்தது.

‘பரவாயில்லை ஓவியா உள்ள வாங்க. காபி குடிக்கத்தானே வந்தீங்க கோஅகெட்’ என்றவன் செல்வாவைப் பார்த்து கிசுகிசுத்தான்.

‘ஏன்டா இப்படி வெறிச்சு பாத்து என் மானத்த வாங்கிற’

‘டேய் யாருடா இது’ ஆச்சர்யத்துடன் கேட்டான் செல்வா.

‘ஓ.. ஓவியா இது என் பிரெண்ட் செல்வா, டேய் இது என்னோட பி.ஏ ஓவியா சொன்னேனேடா‘ என்று அறிமுகப்படுத்தினான்.

சுதாரித்துக் கொண்ட செல்வா ‘ஹலோ..’ என்றபடி கை நீட்டினான்.

அவஸ்த்தையாய் சிரித்தபடி கடனே என்று கைகளை கொடுத்து ’ஹலோ’ என்றாள். இரண்டு தடவை குலுக்கிவிட்டு விடுவித்துக் கொண்டாள். அவள் தொட்டதும் செல்வாவுக்குத் தான் கரன்ட் அடித்தது போல் இருந்தது.

‘ஓகே சார் நான் கிளம்புறேன்’ கதவருகில் நெருங்கினாள்.

‘காபி குடிக்கலையா ஓவியா’ குறுக்கிட்டாள் குரு.

செல்வாவை ஒரு கணம் பார்த்தவள். ‘தலைவலிக்குதுன்னு தான் சார் காபி குடிக்க வந்தேன். இங்க இருந்து காபி குடிச்சா என் தலையே வெடிச்சிடும். தேங்க்ஸ் சார்’ என்றவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் விரைந்தாள். அவள் வெளியேறியதும் அவளின் கோபத்தை பிரதிபலிப்பது போல் கதவும் ‘படார்’ என்று அடித்துக் கொண்டது.

‘அய்யோ...!’ என்று தலையை பிய்த்து கொண்டான் குரு.

‘என்னடா ஆச்சு’

‘இன்னிக்கு யாரு முகத்துல முழிச்சேன். எல்லோரும் சம்மந்தா சம்மந்தமில்லாம பேசுறீங்க. என்னால முடியலைடா’ தலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

‘நான் தெளிய வைக்கிறேன்’ குருவின் முகத்தை கையினால் நிமிர்த்தினான்.

‘நான் சொன்ன அந்த பொண்ணு இந்த ஓவியாதான் போதுமா. என்ன பார்த்ததும் தான் இப்படி பேசிட்டுப் போறாங்க’

ஆமான்டா, எல்லாம் தெரிஞ்சிடுச்சு, கதையே புரியல அதுல யார் நடிச்சா என்னடா, மனுஷன கடுப்பேத்தாதடா, எப்படி பார்த்தாலும் ஒரு மண்ணும் புரியல, ஒன்னு மட்டும் உண்மை, நீ ஓவியாவை மறைமுகமா ஏதோ கடுமையா பாதிச்சிருக்க. அதோட தாக்கம் தான் அவங்க கண்ணுல தெரியுது’

‘நான் கனவுல கூட யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்க மாட்டேன்டா’

‘போதும்டா... இன்னும் எத்தனை ஜெனரேஷனுக்கு தான் இதே டயலாக்கை சொல்லுவீங்க. டயலாக்கை மாத்துங்கடா’ நக்கலடித்தான் குரு.

செல்வா கோபமானான்.

‘சரி, சரி கோபப்படாத கண்டு பிடிச்சிடுவோம். சியர் அப் மை மேன், கமான் வா வெளில போய் பேசுவோம்’ இருவரும் கிளம்பி வெளியே வந்தார்கள்.

‘நீ கீழே போ செல்வா, நான் அஞ்சு நிமிஷத்துல வரேன்’ என்றபடி தன் கேபினுக்குள் நுழைந்தான். போகும் வழியில் ஓவியாவின் இடத்தை எட்டிப் பார்த்தான். மானிடரை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள், சிந்தனை எதிலோ இருந்தது.

‘உனக்கும் செல்வாவுக்கும் என்ன பிரச்சனைன்னு கூடிய சீக்கிரத்துல கண்டுபிடிக்காம விடமாட்டேன்’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டான். தன்னுடைய சில வேலைகளை முடித்துக் கொண்டு, செல்வாவுடன் காரில் ஏறினான்.

*****​

‘போன் அலறியது. அதை எடுத்து காதுக்குக் கொடுத்தான் செல்வா’

‘டேய் மச்சான்’

‘சொல்லுடா குரு’

‘நீ உடனே சைதாப்பேட்டை பிரிஜ்கிட்டே வரியா’

‘என்னடா திடீர்னு’

‘ஓவியா பத்தி தெரிஞ்சிகனும்னா வாடா’ என்று கூறி தொடர்பைத் துண்டித்தான்.

வேகவேகமாக கிளம்பி காரினுள் ஏறி விரைந்தான் செல்வா.

‘என்ன குரு இப்படி திடீர்னு வரச் சொல்லிட்ட, நான் இன்னும் கடைக்கே போகல’ என்றபடி குருவை எதிர்கொண்டான்.

‘அந்த வேலையை பார்க்க நிறைய பேரு இருக்காங்க. ஆனா இந்த மாதிரி வேலையை நாம பர்சனலாதான் செய்யனும்’ என்று தோள்களை குலுக்கினான்.

‘சரி சொல்லு’

‘நான் ஓவியாவோட அட்ரசை ரெக்கார்ட்ல இருந்து எடுத்துட்டு வந்துட்டேன். இந்தா அட்ரஸ், வா வீட்டை போய் கண்டுபிடிப்போம்’ என்று ஒரு துண்டு சீட்டை நீட்டினான்.

‘என்னடா ஒரேடியாய் என்ன தர்ம அடி வாங்க வைக்க ஏற்பாடு பண்றியா. அவங்க வீட்டுக்கு மட்டும் நான் போனேன் அவ்ளோதான் கண்ணாலேயே எரிச்சிடுவா அந்த கண்ணகி’

‘சரி, அப்ப விடு, யார் நம்ம மேல கோபிச்சுகிட்டா நமக்கு என்ன. இந்த உலகத்துல இருக்கிற எல்லோர்கிட்டயும் நல்ல பேர் எடுக்க முடியாது. எப்படியும் நம்ம மேலே பத்து பேர் தப்பு சொல்லத்தான் போறான். கோவப்படத்தான் போறான். அதுல ஓவியாவையும் சேர்த்துடலாம். இதோட அந்த ஓவியா டாபிக்கை மறந்துடு’ என்றவன் செல்வாவின் கண்களை ஊடுருவினான்.

அவன் கண்களில் தயக்கம் தெரிந்தது. ஒருவித கலக்கமும் தெரிந்தது. மௌனமாக இருந்தான்.

சிறிதுநேரம் அவன் கண்கள் நிலையில்லாமல் அங்கும் இங்கும் அலை பாய்ந்தன. அவன் ஏதோ கூற வருகிறான். ஆனால் அவன் உதடுகள் அவனுக்கு உடன்பட மறுக்கின்றன.

‘அது.....அது..’ வார்த்தைகள் வரவில்லை.

‘சரி நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் கேட்கிற கேள்விக்கு ஆமாம் இல்லைன்னு பதில் சொன்னா போதும்’ என்ற குரு தன் நண்பனின் தவிப்பை உணர்ந்து உதவிக்கரம் நீட்டினான்.

என்ன என்பது போல குருவை ஏறிட்டான்.

‘நீ ஓவியாவை காதலிக்கிறியா?’ என்ற கேள்வியோடு செல்வாவை ஏறிட்டான்.

எங்கோ வெறித்து பார்த்தவன். ‘தெரியல குரு. அவள முதன்முதலில் பார்த்தப்போ, அவளோட தைரியம் பிடிச்சிருந்தது. அடுத்த முறை அவளை பார்த்தபோது அவளின் கோபம் என்னை சிந்திக்க வெச்சது. நான் என்ன தப்பு செய்தேன்னு என்னை யோசிக்க வெச்சா. ஒன்னு மட்டும்தான் புரியல. அவ யாருன்னே எனக்கு தெரியாது. ஆனால் அவளோட கோபம் ஏன் என்னை டிஸ்டர்ப் பண்ணுது. அவளோட கோபமான முகம் ஏன் என்ன வதைக்குது? இதுக்கெல்லாம் பதில் என்னைக்கு விடைக் கிடைக்குதோ, அன்னைக்கு நீ கேட்கிற கேள்விக்கு பதில் கிடைக்கும். இப்போதைக்கு என்னோட பதில் தெரியல, ஆமான்னு சொல்ற அளவுக்கு இன்னும் எதுவும் நடக்கல, இல்லேன்னும் என்னால சொல்லவும் முடியல. அவ என்னோட மனச பாதிச்சது நிஜம். இப்போதைக்கு நான் அவகிட்ட மனசு விட்டுப் பேசனும். அவ கோபத்துக்கு காரணம் தெரியனும் அவ்ளோதான்’ என்ற நண்பனை கட்டித் தழுவினான் குரு.

‘சாரிடா மச்சான், உன் மனசு இப்படி நொந்து கிடக்குன்னு தெரியாம, ரொம்ப விளையாட்டா பேசிட்டேன். ஐ அண்டர்ஸ்டாண்ட் யுவர் பீலிங்க்ஸ். ஐ கேன் பீல்யூ கவலைபடாதடா. உன் மனசை சீக்கிரம் தெளிய வெச்சுடலாம்’ என்று ஆறுதலாய் அவன் முதுகைத் தடவினான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
4

பிரியா தன் தோழிகளுடன் பேசி சிரித்துக் கொண்டு பஸ்சிலிருந்து இறங்கினாள். இறங்கியவளின் முகம் மாறியது காரணம் பஸ்ஸ்டாப்பில் நின்ற வாலிபன்.

‘ச்சே இவன் தொல்லை பெரிய தொல்லையாய் இருக்கு. எத்தனை தடவ சொன்னாலும் புரிய மாட்டேங்குதே’ என்று நினைத்தவள், அவனைக் கண்டு கொள்ளாமல் காலேஜை நோக்கி நடந்தாள்.

‘எக்ஸ்கியுஸ் மீ.. கொஞ்சம் நில்லுங்களேன்’ என்றான் அவன்.

என்ன என்பது போல திரும்பி அவன் முகத்தை பார்த்தாள்.

‘உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்’

‘புதுசா என்ன பேச போறீங்க’ என்றாள் சிடுசிடுப்புடன்.

‘ஒரு அஞ்சு நிமிஷமுங்க’ என்றான் கெஞ்சும் குரலில்.

‘சொல்லுங்க...’

“நான் முதன் முதலா உங்கள தி.நகர்ல தெரியாம இடிச்சப்பவே மனசை பறிகொடுத்துட்டேங்க. அன்னிக்கு எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்தது. வேகவேகமா நான் ஓடிவரப்போ தெரியாம உங்கள இடிச்சிட்டேன். படபடப்புல கண்ணு தெரியல. மனசு பூரா அப்பாதான் இருந்தாங்க. ஆனா உங்க முகத்த பார்த்தப்போ, உலகமே ஒரு நிமிஷம் நின்னுடுச்சு. எத்தனையோ ஜென்மம் உங்க கூட இருந்த மாதிரி ஒரு அட்ராக்ஷன், அப்படி ஒரு ஷாக் உடம்பு பூராவும், எனக்கு அதை சொல்லத் தெரியல. எனக்கே என் போக்கு ஆச்சர்யமா இருந்தது. இப்படியெல்லாம் எனக்கு நடந்ததே இல்லங்க. அப்புறம்தான் அப்பா ஞாபகம் வந்தது. உங்ககிட்ட சாரி கேட்டுட்டு ஓடிட்டேன். ஒரு நிமிஷம் ஸ்தம்பிக்க வெச்சிட்டீங்க’ பேசிக் கொண்டிருந்தவனை இடைமறித்தாள்.

‘என்ன லவ் அட் பர்ஸ்ட் சைட்டா...? இதெல்லாம் சினிமால தான் நடக்கும் மிஸ்டர் இது ரியாலிட்டி, தயவுசெய்து டிஸ்டர்ப் பண்ணாதீங்க’

‘நான் இன்னும் பேசி முடிக்கலையே’ என்று தோள்களை குலுக்கியவன்.

‘அந்த முதல் சந்திப்புக்கப்புறம் உங்களை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா. என் மனசு உங்க முகத்தை தேடிக்கிட்டே இருந்தது. அப்போதான் எதார்த்தமா இந்த காலேஜ் வாசல்ல பார்த்தேன். அப்படியே மனசு புல்லா பட்டாம்பூச்சி. உங்ககிட்ட வந்து நின்னப்ப, உங்களுக்கு என்ன அடையாளம் தெரிஞ்சு புருவத்தை சுருக்கி கோவப்பட்டீங்களே. அதுதான் என் முதல் வெற்றி. இத்தனை பேர் இருக்கிற நாட்டுல என்னை ஞாபகம் இருக்குன்னா நான் அதிர்ஷ்டக்காரன்தானே’

‘சார், ஒரு பொண்ணு எப்பவும் தனக்கு நல்லது பண்ணறவங்களையும் மறக்க மாட்டா, தப்புப் பண்றவங்களையும் மறக்க மாட்டா.. நீங்க என் மனசுல தப்பானவரா தெரிஞ்சதுனால ஞாபகம் இருந்தது அவளோ தான்’

‘அந்த தப்பானவன்கிற நினைப்பு தான் அன்னைக்கு நான் இருந்த சிச்சுவேஷனை எக்ஸ்பிளைன் பண்ணி போக்கிட்டேனே’

‘தப்பானவன் இல்லைன்னு ப்ரூவ் பண்ணிட்டா லவ் பண்ணனுமா, ஏன் எத்தனை தடவை சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க. நீங்க நினைக்கிற மாதிரி லட்சியம் இல்லாம சுத்திக்கிட்டு திரியற பொண்ணு நான் இல்லை. எனக்குன்னு சில லட்சியம் இருக்கு. இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் எனக்கு சரிவராது. அதுக்கு வேற ஆளப் பாருங்க’ என்று நடக்க முற்பட்டவளை கையமர்த்தி நிறுத்தினான்.

‘ஒரே நிமிஷம், செடிக்குச் செடி தாவுற பட்டாம்பூச்சி இல்ல நான். மரத்துல படருற கொடி. செழிச்சா மரத்தோட சேர்ந்து வளரனும் இல்லைன்னா பட்டுப் போகனும் அவ்ளோதான். எனக்கு உன்ன புடிச்சிருக்கு, எப்பவுமே’

‘என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும். என் பேரு தெரியுமா, என் குடும்பத்தைப் பத்தித் தெரியுமா, என் மனசப் பத்தி தெரியுமா? இப்படி எதுவுமே தெரியாம வர்றதுக்கு பேர் காதல் இல்ல. இனக் கவர்ச்சி. நான் உங்க கண்ணுக்கு அழகா தெரிஞ்சிருக்கலாம். இந்த அழகு ரொம்ப நாள் இருக்காது. அதுக்கப்புறம் என்ன செய்வீங்க. மனசப் பார்த்து வர்ற காதல்ல தான் எனக்கு நம்பிக்கை போதுமா?’

‘ஏன் இப்படி என் களங்கமில்லாத காதல உடம்போட சம்பந்தப்படுத்தி அசிங்கப்படுத்துற..... சரி நான் உன் வழிலயே வர்றேன், உன் மனசு உன் வலி, நான் என்ன செஞ்சா என்ன நீ புரிஞ்சிக்குவ...’ முகம் சுருங்கி இருந்தது. கோபத்தில் ஒருமை வார்த்தைகள் வந்தன.

தன் பேச்சு அவன் மனதை நோகடித்துவிட்டதை உணர்ந்த பிரியா லேசாக வருத்தப்பட்டாள். பிறகு சுதாரித்துக் கொண்டு.

‘எனக்கு காலேஜ் முடியா இன்னும் ஆறு மாசம் இருக்கு. மார்ச் இருபத்தி நாலாம் தேதி கடைசி பரிட்சை .அன்னைக்கு என்னை வந்து பாருங்க. அப்போ உங்கக் கிட்ட பேசுறேன்,பிரிவு உங்கள மாத்தும்னு நினைக்கிறேன். ஆறு மாசம் கழிச்சும் உங்க மனசுல நான் இருந்தா யோசிக்கிறேன்’

‘நிச்சயமா நான் வருவேன்’

‘நல்ல புரிஞ்சிக்கோங்க. ஆறு மாசம் கழிச்சு பேசுறேன் தான் சொன்னேன். ஒத்துக்கிறேன்னு சொல்லல’

அது புரியுது. எனக்கு கான்பிடன்ஸ் ஜாஸ்தி... என் காதல் உண்மைன்னா நிச்சயம் நீங்க எனக்கு கிடைப்பீங்க’ என்றவன்.

‘ஒரு சின்ன ரெக்வெஸ்ட்’

என்ன என்பது போல் பார்த்தாள்.

“இந்த ஆறு மாசத்த ஞாபகம் வெச்சுகிற மாதிரி...’ என்று இழுத்தவனை கலவரத்தோடு பார்த்தாள்.

அய்யோ, தப்பா நினைக்காதீங்க, உங்க பேர சொன்னீங்கன்னா சொல்லி சொல்லி பார்த்துப்பேன்’ என்றவனை பெருமூச்சோடு நிம்மதியாக நோக்கினாள். தன்னையும் மீறி சிரிப்பு வந்துவிட்டது.

‘பிரியா..’ என்றாள் மென்மையாக.

‘ரொம்ப நன்றீங்க. நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க. ஆறு மாசம் கழிச்சு பார்க்கலாம் பை’ வேகமாக ஓடி தன் வண்டியை அடைந்தான்.

அவன் சென்றதை பார்த்துக் கொண்டிருந்த பிரியாவுக்கு அப்போது தான் உரைத்தது.ச்சே இவன் பேரை கூட கேட்கலையே. சரி ஆறு மாசம் கழித்து வந்தா பார்த்துகலாம். இப்போதைக்கு மனசுல படிப்பு மட்டும்தான் இருக்கனும் என்றபடி காலேஜை நோக்கி நடந்தாள்.

*****​

செல்போன் பாக்கெட்டில் சிணுங்கியது. அதற்கு ஆதரவு கொடுத்தான் குரு. நமபரை பார்த்தவன்.

‘சொல்லுடா செல்வா’

‘ஏய் இப்போ ப்ரீயா இருக்கியாடா’

‘என்ன விஷயம்டா சொல்லு’

‘அம்மா நம்ம தி.நகர் பிள்ளையார் கோவிலில் ஒரு வேண்டுதல் இருக்குன்னு சொன்னாங்க. அதை நான் தான் செய்யனும்மாம். தனியா போக ஒரு மாதிரி இருக்கு நீயும் வாடா’

‘அவளோ தானே போயிட்டா போகுது எப்போடா பூஜை’

‘ஈவினிங்க 6.30க்கு தி.நகர் பிள்ளையார் கோயிலுக்கு வந்துரு. அங்க மீட் பண்ணலாம்’

‘ஓகே டன்’ போனை கட் செய்தான் குரு.

தி.நகர் பிள்ளையார் கோவிலில் காரை நிறுத்தியவன் சுற்றும் முற்றும் பார்த்தான். சிறிய கோவில் தான் என்றாலும் அம்சமாக இருந்தது. அருகில் கடைகள் இருந்தன. ஒவ்வொரு கடையிலும் ஜனக்கூட்டம் மொய்த்தது. ஒவ்வொரு கடையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா. அவனருகில் இருந்த பலூன் கடையில் சிறு குழந்தைகள் நிறைய நின்றன. அவைகளின் மழலை குரலை கேட்டு ரசித்தவாறு நண்பனுக்காக காத்திருந்தான்.

ஐந்து நிமிடம் கழிந்த பிறகு தூரத்தில் குருவின் கார் தெரிந்தது. அதிலிருந்து இறங்கி வேகமாக நடந்து வந்தான் குரு.

‘சாரிடா... கொஞ்சம் லேட்டாயிடுச்சு, ரொம்ப நேரம் வெயிட் பண்றியா’

‘இல்லடா இப்பத்தான் வந்தேன் வா போகலாம்’ இருவரும் கோவிலினுள் நுழைந்தனர்.

‘எல்லா ஏற்பாட்டையும் குருக்களே செய்துடுவார். நீ சும்மா போனாப் போதும்னு அம்மா சொல்லிடாங்கடா. வா போய் குருக்களைப் பார்க்கலாம்’ கர்ப்பகிரகத்தை நோக்கி நடந்தனர்.

‘வாப்பா செல்வா, அம்மா அப்பா வரலையா’ என்றபடி உள்ளிருந்து வந்தார் குருக்கள்.

‘அவர்கள் திருச்சியில் இருக்காங்க, எப்பவாவது தான் இங்கே வருவாங்க’ என்றான்.

‘அப்படியாப்பா... சரி.. பூஜையை ஆரம்பிக்கலாமா’ என்று தன் இடுப்பில் இருந்த காவி துண்டை இறுக்கிக் கட்டினார்.

‘ஆகட்டும் சாமி’ என்று பதிலளித்தான் செல்வா.

குருக்கள் பூ தட்டோடு உள்ளே நுழைந்தார், ’ஓம்..’ என்று மந்திரத்தை ஆரம்பித்தார். பதினைந்து நிமிடத்திற்கு பிறகு நிறுத்தினார். இடையில் நிறைய ஓம் கேட்டாலும் மற்ற எதுவும் இவர்களுக்கு கேட்கவும் இல்லை,புரியவும் இல்லை. இருவரும் கை கூப்பி கண்களை மூடி தங்களுக்கு வேண்டியதை சாமியிடம் அடுக்கினார்கள்.

செல்வாவின் இதயம் ’கடவுளே, எல்லோரும் நல்லா இருக்கனும், என் தொழிலில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது, நான் ஒரு வைராக்கியத்தோடு இருக்கேன்னு உனக்குத் தெரியும். அதில் நான் வெற்றியடைய வேண்டும். அம்மா அப்பா நல்லா இருக்கனும். என்ன தான் நான் அப்பாவை வெளிப்புறமா பேசாம தண்டிச்சாலும் உள்ளுர எனக்கு அவர் மேல அன்பு அதிகம். குருவும் அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ணோடு சீக்கிரம் சேரனும். அப்புறம்... ஓவியா, கடவுளே நான் எனக்காக எதுவும் அதிகமா உன்கிட்டே கேட்டு தொந்தரவு செய்வதில்லை. ஆனா அவள் விஷயத்துல ஏதோ ஒளிஞ்சிருக்கு அது என்னன்னு எனக்கு தெரியனும். தயவுசெய்து தெரியப்படுத்து. நான் உன்னைத்தான் நம்பறேன்’ என்று ஆழ்ந்த வேண்டுதலில் இருந்தவனை, குரு லேசாகத் தட்டினான். ‘டேய் தீபாராதனைடா’

‘ம்...’ விழித்துக் கொண்டான்.

தீபாராதனை முடிந்ததும் இருவரும் பிரகாரத்தை சுற்றி வந்து ஒரு ஒதுக்குப்புறத்தில் அமர்ந்தனர். அவரவர் சிந்தனையில் சிறிது நேரம் இருந்துவிட்டு எழுந்து காரின் அருகில் சென்றனர்.

‘டேய் மச்சான் நான் என் காரை எடுத்துட்டு வரேன்டா இங்கே ஹோட்டல் சரவணபவன், இருக்குல்ல அங்க வந்துடு. லைட்டா டிபன் சாப்பிட்டுட்டு கிளம்பலாம்’ என்றவனிடம்.

‘ஓகேடா’ என்று காரின் கதவை திறந்தபோது தான் அவள் கண்ணில் பட்டாள் தூரத்தில் ஓவியா. பூஜை கூடையுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அப்போதுதான் அவள் அருகில் வரும் அம்மாவை பார்த்தான் செல்வா. அவன் சிந்தனை தீவிரமானது. இவர்... கற்பகம் அம்மாள்தானே. ஆமாம் அவரேதான் மூன்று வருடத்திற்கு முன்பு பார்த்ததை விட இப்போது மெலிந்து போயிருந்தார். பாவம் கணவனை இழந்த சோகம் போலும். இப்போது செல்வாவிற்கு ஒரே குழப்பம்.கற்பகம் அம்மாக்கும் ஒவியாவிற்கும் என்ன சம்பந்தம்.... திருச்சியிலிருந்த கற்பகம் அம்மா வேறு ஊருக்கு மாறிவிட்டார் என்பது அவனுக்கு தெரியும். ஆனால் சென்னையில் தான் இருக்கிறார் என்று தெரியாது. குழப்பத்துடனே நின்றான்.

ஓவியா தன் அருகில் நெருங்கி வருவதை அறிந்தவன், உடனே காரினுள் புகுந்தான். இந்த அம்மா நம்மை பார்த்தால் வீண் கவலைதான். நான் அவருக்கு செய்த கொடுமை தான் ஞாபகம் வரும். இந்த சிந்தனைகளுக்கிடையே காரை சரவணபவனை நோக்கி செலுத்தினான். அவனுக்கு முன்னால் சென்ற குரு ஹோட்டலின் என்ட்ரன்ஸில் நின்று கொண்டிருந்தான். இருவரும் பேமிலி ரூம் சென்று அமர்ந்தனர். ரெண்டு செட் பரோட்டாவிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு செல்வாவை நோக்கியவன் அவனின் முக குழப்பத்தை கவனித்தான்.

‘டேய் கோவில்ல ஓவியாவை பாத்தியா?’

‘ம்.. தூரத்துல பார்த்தேன். உடனே கார்ல ஏறிட்டேன்’

‘நான் நின்னு பேசிட்டுதான் வந்தேன். நீ என் கூட வந்தேன்னு சொல்லல. அவங்க அம்மா கூட வந்துருக்காங்களா அதான் எதுவும் பிரச்சனை ஆகக்கூடாதுன்னு சொல்லல’

இதை குரு கூறியது தான் தாமதம் உடனே செல்வாவின் விழிகள் சிவந்தன. கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்து கவிழ்ந்தான். ஓவியாவோட அம்மா கற்பகமா, இப்பதான் எல்லாமே புரியது. அவங்க அப்பாவோட சாவுக்கு காரணமான என்னை பார்த்து கோபப்படுறது நியாயம் தான். ஒரு பெரிய பட்டியல் போட்டு காரணம் சொல்லலாமே அவங்க கல்யாணம் என்னால நின்னு போச்சு. அவங்க அப்பாவை கைது செய்ய வெச்சது நான்தான்னு நினைப்பாங்க. அதனால அதிர்ச்சி தாங்காம அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டார். அவங்க சொந்தக்காரங்க முன்னாடி அவமானம். அதனால ஊர் விட்டு ஊர் வந்து கஷ்டப்படறது. இப்படி நிறைய காரணங்கள் இருக்கு. போச்சு... எல்லாம் போச்சு.. நிச்சயமா என்னால அவங்க கோபத்தைப் போக்க முடியாது. குமுறியது செல்வாவின் இதயம். உடம்பில் உள்ள ரத்தம் சூடேறுவதை உணர்ந்தான்.

கதவைத் தட்டி விட்டு பேரர் பரோட்டா தட்டுகளுடன் நுழைந்தான். இவர்கள் டேபிளில் வைத்துவிட்டு.

‘வேறு ஏதாவது வேணுமா சார்’ என்றான் பவ்யமாக.

‘சாப்பிட்டதுக்கு அப்புறம் கூப்பிடுகிறோம்’ என்றான் குரு.

‘டேய் செல்வா எழுந்திருடா’ என்று தோள்களை தொட்டு அசைத்தான் குரு.

அவனை ஏறிட்ட செல்வாவின் முகம் பார்த்ததும் அதிர்ந்தான் குரு.

‘என்னடா ஆச்சு...?!’

‘எல்லாமே முடிஞ்சு போச்சுடா’ கண்கள் கலங்கியது கண்ணீர் வரக்கூடாது என்பதற்காக அங்கும் இங்கும் பார்த்தான்.

எதிரில் அமர்ந்திருந்த குரு அவன் அருகில் வந்தமர்ந்தான். செல்வாவின் தோள்களைத் தடவிக் கொடுத்தான்.

‘கூல் டவுன்டா செல்வா. என்னாச்சுன்னு விளக்கமா சொன்னாதான்டா தெரியும்’

‘இனி நான் ஓவியாவை பார்க்கக் கூட தகுதியில்லாதவன்டா. அவளுக்கு அவ்ளோ துரோகம் பண்ணியிருக்கேன். எனக்கு மன்னிப்பே கிடையாது’ அவனையும் மீறி கண்ணீர் வந்தது.

‘என்னாச்சுடா, அவளுக்கு நீ என்ன துரோகம் செஞ்சே...?’
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
5

திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் மிகவும் அழகாக இருந்தது. கூட்ட நெரிசல் இல்லாத காலை வேளை. கோவில் கடிகாரம் மணி ஏழைக் காட்டியது.

தேங்காய் மூடியை தறியில் வைத்து தன் உள்ளங்ககைகளால் அதை ஓங்கி அடித்தார் சுந்தரேசன். உடைந்த துகள்கள் சிதறியது.

‘இந்தாங்கம்மா உங்களுக்கு’ என்று இரண்டு துண்டுகளை கற்பகத்திடம் நீட்டினாள்.

‘இந்தாக்கா’ என்றவளிடம் இரு துண்டு தேங்காயைப் பெற்றுக் கொண்டாள் ஓவியா.

‘அப்பாக்கு வேண்டாம்ன்னு நினைக்கிறேன். சோ.. இதெல்லாம் எனக்கு’ என்றவள் மீதியுள்ள தேங்காய் துண்டுகளை தன் மடியில் வைத்தாள்.

‘எனக்கு வேண்டாம்ன்னு சொல்லவேயில்லையே’ பொய்யாக கோபப்பட்டார் சுந்தரேசன்.

‘பிரியா சாப்டா, அப்பா சாப்பிட்ட மாதிரி’ சாதுர்யமாய் மடக்கினாள்.

‘உன்னை’ காதுகளைப் பிடித்து செல்லமாய் திருகினார்.

‘ஸ்..’ வலிக்காத போதும் சிணுங்கினாள்.

‘கடைசி பொண்ணுன்னு ரொம்பதாங்க செல்லம் கொடுக்குறீங்க, கல்யாணம் பண்ணிப் போற வீட்டுல நம்ம தலைதான் உருளும்’

‘ஆரம்பிச்சிட்டியா’ தலையில் கை வைத்தாள் பிரியா.

‘விடும்மா இப்பத்தான் காலேஜ்ல சேர்ந்திருக்கா, சின்ன பொண்ணுதானே’ பிரியாவுக்கு பரிந்து பேசினார்.

‘சின்னப் பெண்ணா, தூக்கி இடுப்புல வெச்சிகோங்க ஊர் சிரிக்கட்டும்’

‘அம்மா ஏம்மா எப்பப் பார்த்தாலும் அவளை திட்டிக்கிட்டே இருக்க’ ஆதரித்தாள் ஓவியா.

‘அக்கான்னா அக்காதான்’ கழுத்தைப் பிடித்து கட்டிக் கொண்டாள்.

‘இரு, இரு உங்க அக்காவை சீக்கிரமா கல்யாணம் பண்ணி அனுப்பிட்டு உன்னை வெச்சுகிறேன்’ என்ற கற்பகம் கணவனிடம் திரும்பினார்.

‘இன்னைக்கு தரகர் வரேன்னு சொன்னாரு. அந்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை வீட்டுகாரங்க அவசரப்படுறாங்களாம். உங்ககிட்ட பேசனும்னு சொன்னாரு’

‘அவ்வளவுதானே பேசிட்டா போச்சு, நீ என்ன சொல்ற ஓவியா, அந்த பையனை பொண்ணு பார்க்க வரசொல்லட்டா..’ என்றவரை முறைத்தார் கற்பகம்.

‘இதெல்லாம் எதுக்கு அவகிட்ட கேட்டுட்டு நாம முடிவு பண்ணினா சரிதான்’

‘இல்ல கற்பகம் நம்ம பசங்க விருப்பம்தான் நம்ம விருப்பம். முக்கியமா திருமண விஷயத்துல’ என்றவர் ஓவியாவை ஏறிட்டார்.

‘எனக்கு எதுவும் தோணலைப்பா’ என்றவள் வெட்கத்தில் தரையைப் பார்த்தாள்.

‘இல்லம்மா உனக்குன்னு சில எதிர்பார்ப்பு இருக்கும்ல அதைக் கேட்டேன்’

‘எனக்குன்னு எந்த எதிர்பார்ப்பும் இல்லப்பா, வரதட்சணை அது இதுன்னு அதிக கஷ்டபடாம கல்யாணத்த முடிச்சா போதும்பா. அடுத்து பிரியா வேற இருக்காளே’

‘அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் மா, மாப்பிள்ளையைப் பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லு’ என்றவர் எழுந்து கொண்டார்.

வீட்டில் பஜ்ஜி வாசனை மூக்கை துளைக்க ஆர்வமாய் உள்ளே நுழைந்தாள் பிரியா, நேரே அடுக்களைக்கு சென்றவள். ‘என்னம்மா விசேஷம்’ என்று விளித்தபடி ஒரு பஜ்ஜியை எடுத்தாள், கைகழுவிட்டு வந்து அப்புறம் சாப்பிடு’ என்றார் கற்பகம்.

கோபமாய் முறைத்த பிரியா.

‘சரி என்ன விசேஷம்னு சொல்லுங்களேன்’ என்று கெஞ்சினாள்.

‘ஓவியாவை பொண்ணு பார்க்க வராங்க’

‘ஓ.. அப்படியா, அப்ப சீக்கிரம் என் ரூட் கிளியர்னு சொல்லு’

‘உனக்கு வாய் கொழுப்பு அதிகம்தான். இன்னும் ஏதாவது உளறிகிட்டு நின்ன, அவ்ளோதான், எண்ணெய் சூடா இருக்கு எடுத்து ஊத்திடுவேன்.

‘அய்யோ சாமி ஆளவிடு’ என்று வேகமாய் குதித்து அக்காவின் அறைக்கு சென்றாள்.

அழகாக புடவை கட்டி, தலை நிறைய பூ வைத்து நின்றவளை ஒரு நிமிடம் கண் கொட்டாமல் பார்த்தவள். ’சூப்பர்க்கா, வரப்போற மாப்பிள்ளை, இப்பவே தாலியக் கொடுங்கன்னு சொல்லப் போறார்’

அவள் கூறியதில் ஏற்கனவே சிவந்த கன்னங்கள் மேலும் சிவந்தது. ’வயசுக்கேத்த பேச்சு பேசுடி, போ போய் முகம் கழுவிட்டு ரெடியாகு’

‘நான் ரெடியாகல’ என்றவள் கட்டிலில் குப்புற படுத்து கால்களை ஆட்டினாள்.

‘ஏன்டி வர்றவங்க பொண்ணோட தங்கச்சி எங்கன்னு கேட்டா. இப்படி அழுது வடிஞ்சா வந்து நிக்கபோற’

‘ஆமாம்.. நான் அழகா ரெடியானா மாப்பிள்ளை உன்னை விட்டுட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டா? யூ நோ பேசிக்கலி ஐ அம் பியூட்டிஃபுல்’

அவள் பேசுவது புரிந்ததும், பொய்யான கோபத்தோடு ‘அடி கழுதை போ போய் முகம் கழுவு?’ என்றவளின் அடிக்கு பயப்படுவது போல குளியலறைப் பக்கம் சென்றாள் பிரியா.

சேரில் அமர்ந்திருந்த ரமேஷை கதவிடுக்கின் வழியே பார்த்தாள் ஓவியா.’இப்படி பார்த்தா எப்படிக்கா, வா நேராவே போய் பார்க்கலாம்’ என்றவளை தடுத்தாள். ‘இருடி, அவசரப்படாதே கூப்பிடுவாங்க’ என்றவள் கட்டிலில் அமர்ந்தாள்.

‘பொண்ணை கூப்பிடுங்க, தம்பி பார்க்கட்டும்’ என்று வெற்றிலை வாயோடு குழறியபடி பேசினார் தரகர்.

குனிந்த தலையுடன் கையில் காப்பியுடன் வந்தாள் ஓவியா. ரமேஷ் அவளையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். தரையில் பாயின் மீது ஒரு ஏழு பேர் அமர்ந்திருந்தார்கள்.

அதில் அதிக நகை அணிந்திருந்தவர்தான் மாமியார் தோரணையில் மிடுக்காக இருந்தாள். அவர் அருகில் அமைதியாக அமர்ந்திருந்தவர் மாமனார் போலும். மற்றவரகள் சொந்தபந்தங்கள் என்று மனதில்எண்ணியவள்.ஒரு வினாடி.. ஒரே வினாடி ரமேஷை பார்த்தாள், உடனே தலை குனிந்து கொண்டாள். காபியை கொடுத்து விட்டு வேகமாக சென்று விட்டாள்.

‘மத்த விஷயங்களை பத்தி இப்பவே பேசிடுவோம்’ என்று ஆரம்பித்தார்.

‘என்னடா பொண்ணை பிடிச்சிருக்கா’ என்ற தாய்க்கு ‘ம்...’ என்ற ஒற்றைக் குரல் தான் வந்தது. அவனின் நினைவுகள் ஓவியாவை சுற்றிக் கொண்டிருந்தன.

‘பொண்ணுக்கு புடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டுடுங்க’ என்றார் கம்மிய குரலில் அந்த அமைதியானவர்.

அதற்காக காத்திருந்தவர் போல் வேகமாக உள்ளே சென்றார் சுந்தரேசன்.

‘என்ன ஓவியா புடிச்சிருக்கா’ என்று கேட்ட தந்தையை கூட பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்தாள்.

‘சொல்லும்மா’

‘அப்பா, புரியலையா மௌனம் சம்மதம்’ என்று கூறினாள் பிரியா.

‘சும்மா இருடி’ என்று மேலும் சிவந்தாள் ஓவியா. மனம் நிறைந்து விட்டது சுந்தரேசனுக்கு.

எல்லோரும் சொஜ்ஜி, பஜ்ஜி சாப்பிட்டு விட்டு பேச ஆரம்பித்தனர். முதலில் பேசியவர் சுந்தரேசன் தான். நீங்க கேட்கிறத கேளுங்க, என் சக்திக்கு முடியுதான்னு பார்க்கிறேன்’

‘அதெல்லாம் எதுவும் வேணாங்க. பொண்ண மட்டும் அனுப்பி வெச்சா போதும்’ என்றார் அந்த அம்மாள்.

இதைக் கேட்டதும் ஓவியாவிற்கு மிக்க மகிழ்ச்சி.

‘பெருந்தன்மையா சொல்லிட்டீங்க. நான் உடைச்சி சொல்லிடறேன், அதான் நல்லது. பத்து பவுன் நகை போடறேன். வேண்டிய சாமான் எடுத்து வைக்கிறேன். ஒரு வண்டி வாங்கித் தரேன். கல்யாணச் செலவு என்னோடது அவ்ளோதான் என் சக்திக்கு முடியும் யோசிச்சிக்கோங்க. எனக்கு இன்னொரு பொண்ணு வேற இருக்கா’ என்று நிறுத்தினார்.

‘உங்க விருப்பம் எப்படியோ அப்படியே செய்யுங்க’ என்றவர் தரகரைப் பார்த்து ‘ஒரு நல்ல நாளா குறிச்சிடுவோம்’ என்றார்.

‘இதோ பாத்துடுறேன்மா, பஞ்சாங்கத்தினுள் புகுந்தார் தரகர்.

மூன்று நிமிடங்களுக்கு பிறகு ‘வர்ற சித்திரை மாதம் 4ந் தேதி நல்லா இருக்கு. வளர்பிறை முகூர்த்தம், இன்னும் ஆறு மாசம் இருக்கு. கல்யாண ஏற்பாடுகளை செய்ய சவுகரியமாக இருக்கும். என்ன சொல்றீங்க’ என்றவர் இரு வீட்டாரையும் மாறி மாறி பார்த்தார்.

நல்லபடியா முடிச்சிடலாம். அந்த நாளையே குறிங்க’ என்றார் மாப்பிள்ளையின் தாய். ‘இப்போ இந்தத் தட்டை வாங்கிக்கோங்க’ என்று ஒரு வெற்றிலை பாக்கு தட்டை நீட்டினார் மாப்பிள்ளையின் அப்பா.

அதை மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொண்டார் சுந்தரேசன்.

திருமண வேலைகள் ஆரம்பமானது. ஒரு மண்டபம் பார்த்து அட்வான்ஸை கொடுத்தார். சமையல்காரரை புக் செய்தார். நகைகள் வாங்கும் வேலையில்லை. படிப்பு முடிந்ததும் ஓவியா ஒரு சின்னக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள். இரண்டு வருடங்களாக அவள் சம்பளத்தை சேர்த்து வைத்து நகைகள் வாங்கி சேர்த்து விட்டார்.

இருபத்தி ஐந்து வருடங்களாக டிரைவர் வேலை செய்த சுந்தரத்தால் அதிகம் சேர்க்க முடியவில்லை.

பாரம்பரிய வீடு இருந்ததால் தப்பித்தார். அவருக்கு வரும் வருமானத்தில் வீட்டு செலவிற்கும், மகள்களின் உயர்தர படிப்புக்குமே செலவிட்டார். கல்வி இருந்தால் உலகத்தையே வாங்கலாம் என்ற கொள்கை சுந்தரேசனுக்கு சேமிப்பு எதுவும் இல்லை. தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியே திருமண வேலைகளை தொடர்ந்தார்.

*****​

கேபினில் அமர்ந்து கணினியை பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா. அவசரமாக உள்ளே நுழைந்த சுந்தரேசன் செல்வாவைப் பார்த்ததும் கதவருகே தயங்கி நின்றார்.

‘என்ன அங்கிள், அப்பாவ தேடுறீங்களா?’

‘ஆமாம் தம்பி, என்னை அவசரமா வரச் சொல்லி இருந்தாரு’

‘அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான் நான் வந்தேன். பாங்குல பணம் போடனும். அது விஷயமாத்தான் அப்பா உங்களை வரச் சொன்னார். இந்த பெட்டில நாலு லட்சம் பணம் இருக்கு, பாஸ்புக் எடுத்துக்கோங்க’ என்றபடி ஒரு கருப்பு சூட்கேசை மேஜை மீது வைத்தான்.

‘சரி தம்பி’ என்றவர் அந்தப் பெட்டியையும், பாஸ்புக்கையும் எடுத்துக் கொண்டார்.

‘எண்ணிக்கோங்க அங்கிள்’

வேண்டாம்பா, எனக்கு உங்க அப்பா மேலே நம்பிக்கை இருக்கு’

‘சரி நான் எடுத்து வெச்சுகிட்டு வெறும் பெட்டியைக் கொடுத்தா கூட எடுத்துட்டு போவீங்களா?’

லேசாக சிரித்தவர் ‘உங்க அப்பாவ விட அதிகமா உங்கள நம்புறேன் தம்பி. நான் பார்த்து வளர்ந்த பையன் நீங்க. உங்கள பத்தி எனக்கு நல்லாவே தெரியும். சரி தம்பி, நான் கிளம்புறேன். பேங்க் முடிடுவாங்க’ என்றபடி கதவருகில் சென்றவரை செல்வாவின் குரல் தடுத்தது.

‘உங்க பொண்ணுக்கு கல்யாணம் வெச்சிருக்கீங்க இல்ல அங்கிள்’

‘ஆமாம்பா, அடுத்த வாரம்’ ’

‘கல்யாண வேலையெல்லாம் முடிஞ்சிதா அங்கிள்’

‘போய்கிட்டே இருக்கு தம்பி. சும்மாவா சொன்னாங்க, வீட்டை கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்’ என்று அவ்வளவு வேலை இருக்கு.

‘பணம் ஏதாவது தேவைப்படுதா அங்கிள். வேணும்னா சொல்லுங்க அப்பாக்கிட்ட பேசி வாங்கித் தரேன்’

‘ரொம்ப நன்றி தம்பி, நீங்க சொன்னதே போதும். இப்போதைக்கு பணம் தேவைப்படல. அப்படி தேவைப்பட்டா, நான் அப்பாகிட்டயே கேட்டுக்கிறேன் தம்பி’

‘சரி அங்கிள் உங்க முதல் பொண்ண நான் பார்த்ததேயில்லையே, அவங்க என்ன பண்றாங்க?’

‘அவ ரொம்ப அமைதி,. சின்ன பொண்ணுதான் ரொம்ப துறுதுறு’

‘ம்.. பாத்துருக்கிறேனே, வீட்டுக்கு நிறைய தடவ கூட்டிட்டு வருவீங்களே...’

‘பெரியவ அவ்வளவா எங்கேயும் வரமாட்டா, பி.காம் முடிச்சிட்டு ஒரு தனியார் கம்பெனில வேலை பாக்கிறா. அப்படியே எம்.காம் பண்ணிக்கிட்டு இருக்கா, அவளுக்கு படிப்புல அதிக ஆர்வம் என்றவரின் முகம் பெருமிதத்தோடு காணப்பட்டது.

‘அதனாலதான் இத்தனை வருஷத்துல, எங்க வீட்டுக்குக் கூட வராம இருந்துருக்காங்க, சரி கல்யாணத்தன்னைக்கு பார்த்துட்டாப் போச்சு’

‘ஆமாம் தம்பி, கண்டிப்பா நீங்க வரனும். சரி தம்பி நான் கிளம்புறேன்’ கதவைத் திறந்து வெளியே சென்றுவிட்டார்.

சுந்தரேசன் அங்கிள் இருபத்தி ஐந்து வருடங்களாக தன் குடும்பத்துக்காக உழைப்பவர். அப்பாவின் இந்த துணிக்கடை சிறியதாக இருந்தபோதே வேலைக்கு சேர்ந்தவர். அப்பாவிடம் பேசியதை விட. இவரிடம் தான் அதிகமாகப் பேசியிருக்கிறான் செல்வா. சின்ன வயதில் ஸ்கூலுக்கு கூட்டிக் கொண்டு போய் விடுவார். போகும் வழியில் நிறையக் கதைகள் சொல்லுவார். நீதிக் கதைகளை சுவாரசியமாக சொல்லுவார். கைகளை பிடித்துக் கொண்டு வகுப்பறை வரை வந்துவிடுவார். சனி, ஞாயிறுகளில் பார்க், பீச் என்று அழைத்து செல்வார். அது அவரது வேலை என்றே ஒரு நாளும் உணர்ந்ததில்லை. அவரும் சரிசமமாக விளையாடுவார் தனக்கு எந்தக் குழப்பம் வந்தாலும் அங்கிளைத்தான் கேட்பான். தன் தந்தைக்கு கொடுக்கும் அதே மரியாதையை அவருக்கும் கொடுப்பான் செல்வா. அவரை நம்பி எந்த வேலையையும் தைரியமாகக் கொடுப்பார் செல்வாவின் தந்தை வேணுகோபால். இருபத்தி ஐந்து வருட நம்பிக்கை, மாதா மாதம் பாங்கில் பணம் போடுவது எடுப்பது எல்லாமே அவர்தான்.

*****​

போன் அலறியது அதை எடுத்த சுந்தரேசன் ‘ஹலோ’ என்றார்.

‘நான்தான் சம்பந்தி பேசறேன்’ என்றது ஒரு பெண்ணின் குரல்.

‘சொல்லுங்க சம்மந்தியம்மா’

‘கல்யாண வேலை எல்லாம் எப்படி நடக்குது சம்பந்தி’

‘நல்லாவே போகுதுங்க. அடுத்த வாரம் இந்நேரமெல்லாம் கல்யாணம் முடிஞ்சு. அப்பாடான்னு இருக்கும்’

‘ஆமாங்க’

‘சொல்லுங்க சம்பந்தி ஏதாவது சொல்லனுமா’

‘ஆங்.. அது...’

‘எதுவா இருந்தாலும் சொல்லுங்க சம்மந்தி’

‘கல்யாணத்துக்கு நகை, சீர் வரிசை, வண்டி எல்லாம் சரிதான் சம்மந்தி.. ரொக்கம் எவ்வளவு தருவீங்க?’

இதைக் கேட்ட சுந்தரேசன் தடுமாறினார்.

‘என்ன சம்மந்தி இப்படி பேசுறீங்க. இதெல்லாம் அன்னிக்கு சொல்லலையே’

‘நீங்களே சொல்லுவீங்கன்னு நினைச்சேன்’ என்று இழுத்தார்.

‘நான்தான் அன்னிக்கே உடைச்சு சொல்லிட்டேனே சம்மந்தி இவ்ளோதான் முடியும்னு’ என்றவரின் குரல் தழுதழுத்தது.

‘என் புள்ள மாதிரி ஒரு கவர்மென்ட் மாப்பிள்ளை கிடைக்கனும்னா இதுகூட செய்ய மாட்டீங்களா?’

‘எவ்வளவு சம்மந்தி எதிர்பார்க்கிறீங்க’ அதிகமா கூறிவிட மாட்டார் என்ற நம்பிக்கையில் கேட்டார்.

‘ஒரு இரண்டு லட்சம் கொடுத்துடுங்க’

நெஞ்சு அடைப்பது போல் இருந்தது சுந்தரேசனுக்கு.

‘என்ன பதிலையே காணும்?’ அதிகாரமாக வந்தது பெண் குரல்.

‘என்னால அவ்வளவு முடியாது சம்மந்தி ஒரு ஐம்பதாயிரம் வேணும்னா...’

இவர் முடிக்கும் முன்னே சீறினார் அவர்.

‘யாருக்கு வேணும் அந்த பிச்சைக்காசு. முடிஞ்சா இரண்டு லட்சம் ரெடி பண்ணுங்க. இல்லேன்னா இந்தக் கல்யாணம் நடக்காது’

டொக்.. போன் வைக்கப்பட்டது.

வியர்த்துக் கொட்டியது சுந்தரேசனுக்கு. மயங்கி சரிய இருந்தவரை பிடித்துவிட்டார் கற்பகம். உடனே ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டார்கள்.

‘மைல்ட் அட்டாக்’ என்று டாக்டர் கூறியபோது மூவரும் கலங்கினார்கள். ஒரு வாரத்தில் திருமணம் இருக்கும் போது இதை அவர்கள் அபசகுனமாகவே நினைத்தார்கள். கல்யாண வேலை செய்ததே அவரின் உடல்நிலை கெட்டதற்கு காரணம் என்று மொத்த குடும்பமும் முடிவு செய்தது. அவர் மீண்டும் சரியாகவே ஒரு நாள் ஆயிற்று.

மூன்றே நாட்களில் இரண்டு லட்சம் எப்படி புரட்டுவது. புரட்டித்தான் ஆக வேண்டும். மகளின் கனவு கலைந்துவிட கூடாது. வீட்டில் இருப்போர் யாரிடமும் மூச்சு விடக்கூடாது. அவர்கள் வீணாக மனத்தைக் குழப்பிக் கொள்வார்கள். யாரிடம் அவ்வளவு பணம் கேட்பது. எல்லோரிடமும் கூடுமானவரை கடன் பெற்றுவிட்டேன். முதலாளி கூட ஐம்பதாயிரம் கொடுத்தார். மேலும் அவரிடம் எப்படி கேட்பது. வேறு வழியில்லை. செல்வா தம்பிக்கு போன் போட்டுடலாம். இருபத்தி ஐந்து முறை தொடர்பு கொண்டும். தொடர்பு கிடைக்கவில்லை. செல்வா தொழில் விஷயமாக வெளிநாடு சென்றிருந்தான். வர இரண்டு நாட்கள் ஆகும் என்று சொல்லிவிட்டார் வேணுகோபால். வேறு வழியின்றி அவரிடமே கேட்டுவிட்டார்.

‘என்ன சுந்தரேசன் இப்படி திடும்னு வந்து கேட்கிற முன்னாடியே சொல்லியிருக்ககூடாதா, இப்போ பணம் இல்லையே, வேணும்னா இன்னும் ரெண்டு வாரம் பொறுத்துக்கோ தரேன்’ என்று மழுப்பினார்.

அவசரதேவைக்கு எங்கும் பணம் கிடைக்கவில்லை. இறுதியாக தன் வீட்டு பத்திரத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார். பணம் தருபவரின் வீடு பூட்டியிருந்தது. அவருக்கு தெரிந்தவர்கள் யாரிடமும் அவ்வளவு பணம் இருக்காது. தெரியாதவர்களிடம் வீடு பத்திரத்தை கொடுக்க அவர் விரும்பவில்லை.

போனை எடுத்து எண்களை அழுத்தினார். சிறிது நேரம் ரிங் சென்றபின் போன் எடுக்கப்பட்டது.

‘சொல்லு சுந்தரேசா’

‘தீனா.. எனக்கு அவசரமா இரண்டு லட்சம் பணம் வேணும். வீட்டுப்பத்திரத்தை அடமானம் வெச்சுக்கிட்டு தரியா?’

‘தாராளமா தரலாம். எப்போ வேணும்’

‘இப்போவே வேணும்.உங்க வீட்டு வாசல்லதான் பத்திரத்தோட நிக்கிறேன், வீடு பூட்டியிருக்கு’

‘அடடா.. மாமியாருக்கு உடம்பு சரியில்லைன்னு இன்னிக்குத்தான் மதுரை வந்தேன். வர்றதுக்கு ஒரு வாரம் ஆகுமே சுந்தரேசன். ஒரு வாரம் கழிச்சி வாங்க கண்டிப்பா கொடுக்கிறேன்’

‘இல்ல தீனா அவசரமா தேவைப்படுது.பொண்ணோட கல்யாணத்துக்கு அதான்’

‘இப்பத்தான் நான் மதுரை வந்து இறங்குறேன் சுந்தரேசன். எப்படி பணம் தர முடியும். அடுத்த வாரம் வாங்க தரேன், சரியா வெச்சிடுறேன்’ வைத்துவிட்டான்.

நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது சுந்தரேசனுக்கு திருமணம் நிக்கக் கூடாது. நின்னா பொண்ணோட வாழ்க்கை, குடும்ப மானம் எல்லாம் போயிடும். என்ன செய்வது, என்ன செய்வது எண்ணங்கள் மீளாமலே படுக்கையில் உறங்கிபோனார்.

*****​

போன் அலறியது கல்யாண வேலைகளில் மும்முரமாக இருந்த சுந்தரேசன் போனை எடுத்தார்.

‘அங்கிள் நான் செல்வா பேசுறேன்’

அதிர்ந்தவர் ‘சொல்லுங்க தம்பி’ தயங்கிய குரலில் கேட்டார்.

‘ஒரு அவசரமான விஷயம் கொஞ்சம் பேசணும்’

இதயத் துடிப்பு அதிகமாகியது அவருக்கு.

‘நாளைக்கு பொண்ணுக்கு கல்யாணம்; இழுத்தார்.

‘அப்படியா ! சரி நானே வரேன்’ போனை வைத்தான்.

இதயம் அதிவேகமாக துடித்தது அவருக்கு. மண்டபத்தின் வாசலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார். செல்வாவின் ஹோண்டா சிட்டியைப் பார்த்ததும் உதறல் எடுத்துவிட்டது அவருக்கு. செல்வா காரிலிருந்து இறங்கியதும், கையை பிடித்து ஒரு தனி அறைக்கு அழைத்துசென்றார்.

‘சொல்லுங்க தம்பி’ குரல் நடுங்கியது.

அதை கவனித்த செல்வா, ‘அப்பா நான்கு லட்சம் கொடுத்து பாங்குல போட சொன்னருல்ல, பாஸ்புக்ல ரெண்டு லட்சம்தான் டெபாசிட் பண்ணா மாதிரி எழுதியிருக்கு, மீதி ரெண்டு லட்சம் எங்க அங்கிள்’

துளியும் சந்தேகம் இல்லாமல் கேட்கும் அவனைப் பார்க்கவே அசிங்கமாக இருந்தது அவருக்கு.

‘என்னை மன்னிச்சிடுங்க தம்பி’ சாஷ்டாங்கமாக அவன் கால்களில் விழுந்தார்.

‘அய்யோ ... என்ன அங்கிள் இது எழுந்திருங்க’ பதறினான் செல்வா.

‘இல்ல தம்பி, மன்னிக்க முடியாத தப்பு பண்ணிட்டேன்’ கதறினார்.

‘அங்கிள் முதல்ல எழுந்திருங்க, தெளிவாச் சொல்லுங்க, என்ன நடந்தது’

சகலத்தையும் கூறினார் சுந்தரேசன்.

‘வேற வழி தெரியல தம்பி. நீங்க வேற ஊர்ல இல்ல, யார்கிட்ட கேக்கிறதுன்னு தெரியல அதான். இன்னும் நாலு நாள்ல வீட்ட அடகு வெச்சு. நானே அந்தப் பணத்தை எடுத்துட்டு போய் பேங்க்ல கட்டிடறேன் தம்பி என்னை நம்புங்க’ என்று கதறியவரை பார்க்க பாவமாக இருந்தது.

‘நான் மதியம் தான் அங்கிள் ஊர்ல இருந்து வந்தேன். அக்கௌண்ட்ஸ் பைலைப் பார்த்தேன். அதன் பாஸ்புக் என்ட்ரி நோட் பண்ணேன். அப்போது தான் கவனிச்சேன். இரண்டு லட்சம் குறஞ்சது. நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன். நீங்க போங்க, போய் வேலையைப் பாருங்க, ரிசப்ஷன் நடக்குதா?’

‘ரொம்ப நன்றி தம்பி, இந்த உதவியை என்னிக்குமே மறக்க மாட்டேன்’

‘அதெல்லாம் இருக்கட்டும் நான் கிளம்புறேன்’

‘உள்ள வாங்க தம்பி ரிசப்ஷனில் கலந்துகிட்டு, சாப்பிட்டுட்டு போங்க’

‘வேண்டாம் அங்கிள் ரொம்ப டயர்டா இருக்கு. போய் தூங்குறேன், நாளைக்கு வரேன்’ என்றவன் கிளம்பிவிட்டான்.

நன்றியோடு வழியனுப்பினார் சுந்தரேசன்.

*****​

‘கூப்பிட்டிங்களா அப்பா?’ கண்களைத் தேய்த்தவாறு வந்தான் செல்வா.

‘ஆமான்டா அக்கௌண்ட்ஸ் பார்த்துட்டியா?’

‘ம்..பார்த்துட்டேன் பா’

‘எல்லாம் டாலி ஆயிடுச்சா?’

‘ஆயிடுச்..சுப்பா’ குரல் கம்மியது.

அவனை இரண்டு வினாடி உற்றுப் பார்த்தவர்.

‘ஏன்டா பொய் சொல்ற?’

‘இல்..லப்பா..’

‘நான் கலைமகள் சூரிக்கு கொடுத்த நான்கு லட்ச ரூபாய் செக் இன்னிக்கு பவுன்ஸ் ஆயிடுச்சாம். இப்பத்தான் கால் பண்ணி சொல்றாங்க, அவமானமா இருக்கு, என் முப்பது வருட சர்வீஸ்ல இப்படி ஆனதே கிடையாது. என்னடா ஆச்சு இந்த சுந்தரேசனுக்கு கால் பண்ணினா லைனே கிடைக்கல?’

‘அது.. அது.. அங்கிள் கல்யாண செலவுக்காக...’ என்று இழுத்தான்.

‘ஒகோ... இப்போ எல்லாம் புரிஞ்சுப் போச்சு, அன்னிக்கு எங்கிட்ட கேட்டான். இல்லைன்னு சொன்னதும் திருடிட்டானாக்கும். முதல்ல போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணனும்’

‘அப்பா பாவம்பா சுந்தரேசன் அங்கிள், அவர் யாரு நம்ம பேமிலி பிரெண்ட்தானப்பா...’

‘வேலைக்காரனைப் போய் பேமிலி பிரெண்டுன்னு சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல’

‘அப்பா போதும், இன்னும் நாலு நாள்ல அங்கிள் அந்த இரண்டு லட்சத்தை கொடுத்துடுவார். இல்லன்னா நானே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்துடுறேன் சரியா?’

இவனின் மனநிலையை உணர்ந்தவர்.

‘இல்ல செல்வா, நாம ஒரு நேர்மையான தொழில் பண்றோம் .நமக்கு கீழே நிறைய பேர் இருக்காங்க. இந்த விஷயம் தெரிஞ்சா, எல்லோருமே இப்படிப் பண்ணமாட்டாங்களா. நமக்கு கீழே வேலை செய்றவங்க, நம்பிக்கையானவங்களா இருக்கனும். இப்போ இவரை மன்னிச்சா, நாளைக்கு இதையே சாக்கா வெச்சு எல்லோரும் தப்பு பண்ண ஆரம்பிச்சுடுவாங்க, நீ தொழிலுக்கு புதுசுப்பா, அதான் பாவபுண்ணியம் பார்க்கிற, இப்போ சுந்தரேசனை தண்டிச்சாதான் மத்தவங்களுக்கு பயம் இருக்கும். என்ன சொல்றே’

அப்பா சொல்வதில் நியாயம் இருந்தது. உடனே கம்பளைன்ட் கொடுக்க ஒத்துக் கொண்டான்.

*****​

காலையில் சுந்தேரசன் இறந்த சேதி கேட்டு ஓடிச் சென்று பார்த்தான்.

கற்பகம் ஒப்பாரி வைத்து கொண்டிருந்தார், கல்யாண வீடு கருமாதி வீடாக மாறியிருந்தது.

அய்யோ தம்பி, இப்படி பண்ணிட்டீங்களே, நேத்து நீங்க வந்துட்டு போனதுக்கப்புறம் தான் எனக்கு விஷயமே தெரியும். உங்களை மலை போல நம்பியிருந்தாரே. இப்படி மோசம் பண்ணிட்டீங்களே, ரெண்டு பொட்டப் புள்ளைங்களை வெச்சுக்கிட்டு நான் எங்கே போவேன். கல்யாணம் நின்னு போயி வாழ்க்கையை இழந்து நிற்கிறாளே என் பொண்ணு. அவளுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க. தலையில் அடித்துக் கொண்டு அழுதார் கற்பகம்.

அப்பாவின் தலைமாட்டில் அழுது கொண்டிருந்த ஓவியா அம்மாவின் புலம்பலைக் கேட்டு செல்வாவை பார்த்தாள். நன்றாக நாலு வார்த்தை கேட்க வேண்டும் போல் இருந்தது. அடக்கி கொண்டாள். வேகமாக சென்றுவிட்டான் செல்வா.

*****​

அத்தனையும் கேட்ட குரு ஸ்தம்பித்து அமர்ந்திருந்தான்.

இவ்ளோ நடந்திருக்கு ஒரு வார்த்தை கூட சொல்லல’- குரு

விரக்தியாக ஆறிப்போன பரோட்டாவை பிரித்து பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா.

சரி...விடுடா. அன்று நீ பண்ணதுதான் சரி, எந்த ஒரு முதலாளியா இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பான். இனிமே நீ ஓவியாவை பத்தின டாப்பிக்கை விடு. வா போகலாம்.... வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு, நான் உன்ன டிராப் பண்ணிட்டு போறேன். நாளைக்கு வந்து உன் காரை எடுத்துகலாம். இந்த மனநிலையில நீ டிரைவ் பண்ண வேண்டாம்.

‘இல்லடா நான் போயிக்கிறேன், நீ கவலைப்படாத, பில்ல கட்டிட்டு வந்துடு’ என்றவன் விறுவிறுவென்று தன் காரை அடைந்தான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
6

சான்ட்ரோ சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஆனால் செல்வாவின் மனம் சீராக இல்லை. எண்ணங்கள் சூழ்ந்து புகைந்து கொண்டிருந்தது. ‘ஏன் குருகிட்ட மறைக்கணும்’ செல்வாவின் உள்மனது கேட்டது’

‘எப்படி அப்பாவைப் பத்தி தப்பா சொல்ல முடியும். அதான் பழியை நான் ஏத்துகிட்டேன்’ வெளிமனம் சமாதனப்படுத்த முயன்றது.

உள்மனம் ’இதுல என்ன இருக்கு. அவன் உன் உயிர்த்தோழன் தானே?’

வெளிமனம் ‘எப்படி மறக்க முடியும். நான் நம்பி ஏமாந்த நாள். செல்வா சிந்திக்கலானான். குருவிடம் அவன் கூறியது பாதித்தான் உண்மை, மீதியை இப்போது அவன் மனம் அசைப் போட்டது’

அதிகாலையில் தந்தையிடம் வாக்குவாதம் செய்தது உண்மைதான். நான்கு நாளில் பணத்தை சுந்தரேசன் கொடுக்கவில்லை என்றால் தானே அவரைப் போலீஸிடம் பிடித்துக் கொடுப்பதாக செலவ சொன்னதும் வேணுகோபால்.’சரி என்னமோ செய், நான் தலையிடலை’ என்று விலகிக் கொண்டார்.

காலை 8.30 சுந்தரேசன் வீட்டு திருமணத்திற்கு ரெடியானான் செல்வா. தன் தாயிடம் கொடுத்து வைத்திருந்த மோதிரத்தை வாங்கிக் கொண்டான். அது அழகாக பேக் செய்யப்படிருந்தது. வெளியில் இறங்கி காரருகில் வந்தவனை வேணுகோபாலின் குரல் தடுத்தது.

‘கடையில் ஒரு சின்ன லேபர் பிரச்சனைப்பா.. கொஞ்சம் என்னன்னு பார்த்துட்டு வாயேன்’

‘அது..அப்பா அங்கிள் வீட்டு கல்யாணத்துக்கு போயிக்கிட்டு இருக்கேன்பா’

‘ஆபீஸ்லயிருந்து அப்படியே போயிட்டு வாடா’

‘இல்ல..9.௦௦-10.30 முகூர்த்தம்....’

’10.30க்குள் வந்துடலாம்டா. எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. உனக்கு ரொம்ப அவசரம்னா.. நானே போறேன்’ என்று தன் காரை நோக்கி நடந்தவரைத் தடுத்தான்.

‘இல்லப்பா... நானே போறேன்’

அவனை வழியனுப்பிவிட்டு வேணுகோபால் தொலைபேசியை எடுத்து 100 ஐ தட்டினார்.

*****​

டிராபிக் அதிகப்படியாக இருந்ததால் கார் ஊர்ந்து சென்று கடையை அடைந்தபோது 10.00 மணி. உள்ளே சென்ற செல்வா மணிவண்ணனை அழைத்து விசாரித்தான்.

எந்தப் பிரச்சனையும் இல்ல தம்பி’ என்றார் சர்வசாதாரணமாக, செல்வா குழம்பினான். ஏதோ உள்ளுக்குள் உறுத்த, வேகமாக காரை எடுத்தான். அவன் மண்டபத்திற்கு செல்லும் போது மணி 11.00 மண்டப்பத்தில் ஓரிரண்டு பேரே இருந்தனர். அந்த காட்சி, செல்வாவின் அடிமனதைப் பிசைந்தது. வாசலில் நின்ற ஒருவரிடம் விசாரித்தான். கல்யாணம் நின்னு போச்சு தம்பி, சுந்தரேசன் ஏதோ ஆபீஸ் பணத்தை கையாடி விட்டதாக. போலீஸ் வந்து கையில் விலங்கு மாட்டினாங்க. தன் பொண்ணு கல்யாணம் முடிந்த பிறகு வரேன்னு சொன்னாரு. அவனுங்க கேட்கவேயில்லை. உறவினர்கள் கூட்டத்துல தன் மானம் போய்விட்டதை நினைத்து நெஞ்சுவலி வந்ததா. இல்ல பொண்ணு கல்யாணம் நின்னு போச்சுன்னு வந்ததான்னு தெரியல. நெஞ்ச பிடிச்சிக்கிட்டு உட்கார்ந்தவர் தான். அப்படியே அதிர்ச்சியில் இறந்துவிட்டார். பாவம், இன்னும் மூணு மணி நேரம் கழிச்சு அந்த போலீஸ் வந்திருக்கக் கூடாதா...’ தன் பாட்டுக்கு புலம்பிக் கொண்டு போனார் அந்த பெரியவர்.

அதிர்ச்சியில் உறைந்தான் செல்வா, கண்கள் கலங்கின. அங்கிள் என்னை நம்பினீங்களே, உங்க நம்பிக்கையை என்னால காப்பாத்த முடியலையே. பதறிய உள்ளத்தோடு அவர் வீட்டை நோக்கி வண்டியை விட்டான்.

அவனைக் கண்டதும் கற்பகம் புலம்பியதும், அங்கு நடந்த அனைத்தும் செல்வா குருவிடம் கூறியதுதான் நடந்தது.

சுந்தரேசனின் உடல் அருகில் நின்று மனதார பேசினான். ‘அங்கிள் என்ன மன்னிச்சிடுங்க. உங்க முன்னாடி நம்பிக்கைத் துரோகியா நிக்கிறேன். உங்க குடும்பத்துக்கு நான் பொறுப்பேத்துகிறேன். இப்போ நான் எது சொன்னாலும் கேட்கக் கூடிய மனநிலைல இங்க யாரும் இல்ல. ஒரு வாரம் கழிச்சு வந்து பேசுறேன் அங்கிள். என் அப்பா ஸ்தானத்துல இருக்கிறவரு நீங்க, உங்க மானசீக மகனா நான் இருப்பேன். இதுக்கு மேல நான் இங்கே இருக்கிறத இங்க யாரும் விரும்ப மாட்டாங்க. நான் கிளம்புறேன் அங்கிள்’

விருட்டென்று சென்றுவிட்டான்.

அவன் கோபத்தைப் போலவே விர்ரென்று கார் வராண்டாவில் வந்து நின்றது. அவசரமாக இறங்கியவன், செருப்பை பறக்க விட்டுவிட்டு வீட்டினுள் நுழைந்தான்.

‘அப்பா!!!’ கிட்டத்தட்ட அலறினான்.

இரண்டு நிமிடத்தில் வேணுகோபால் செல்வாவின் முன் நின்றார்.

‘ஏம்பா இப்படி செஞ்சீங்க...’ அழுகை, கோபம் ,பதட்டம், ஏமாற்றம்.. இப்படி பற்பல உணர்ச்சிகள் அவன் முகத்தில் வினாடிக்கு ஒன்றாக மாறிக் கொண்டிருந்தது.

‘ஓ... சுந்தரேசன் விஷயத்தைப் பத்தி கேட்கறியா? தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கிறான்’

‘போதும்பா.. ப்ளீஸ்.. நேத்து எனக்கு வாக்கு கொடுத்துட்டு இப்படி செஞ்சிட்டீங்களேப்பா’

‘டேய்.. ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோ, வேலைக்காரனை எந்த இடத்துல வைக்கனுமோ அப்படித்தான் வைக்கனும்’

‘வேலைக்காரன் மாதிரியா அங்கிள் நம்ம பேமிலிக்கு உழைச்சார்... இது தப்புப்பா... நாலு நாள் பொருத்திருக்கலாமே’

‘உனக்கு விவரம் பத்தல செல்வா. பண விஷயத்துல கொஞ்சம் கவனமா இருக்கனும். இந்த எடுத்துக்காட்டே போதும். இனி நம்ம கடையில எல்லோரும் நாணயமாக நடந்துப்பாங்க’

‘அட்லீஸ்ட் ஒரு மூணு மணி நேரம் கழிச்சு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கக் கூடாதா. அந்த அப்பாவி பெண்ணோட கல்யாணம் நின்னதுக்கு என்ன நியாயம் சொல்லப் போறீங்க’

வேகமாக பொரிந்து தள்ளினான். இவர்கள் வாக்குவாதத்தை பயத்தோடு பார்த்துக் கொண்டு நின்றாள் செல்வாவின் தாய் தனலட்சுமி.

‘வேலைக்கார நாயோட குட்டியை பத்தி எனக்கென்ன கவலை. நாய் தப்பு செஞ்சது சாவடிச்சிட்டேன், குட்டியப் பத்தி எனக்கென்ன கவலை, குட்டிய வேணும்னா ஏதாவது வண்டில விழுந்து சாகச் சொல்லு’ கொடூரமாக வந்த வார்த்தைகளைக் கேட்டு அருவருத்துப் போனான் செல்வா.

‘ஸ்டாப் இட்.. இதுக்கு மேல பேசி என்ன கொலைகாரனா ஆக்கிடாதீங்க. நம்பிக்கைன்னா என்னன்னு தெரியாத உங்ககிட்ட, ஒரு உயிரை துச்சமாக மதிக்கிற உங்ககிட்ட என் உயிர் உள்ளவரை பேசமாட்டேன், இது சத்தியம்’

பேசியவன் விருட்டென்று அவன் அறையை நோக்கி நடந்தான். இதயம் கனப்பதைப் போல் இருந்தது. படுக்கையில் விழுந்தான். தன் படபடத்த இதயத்தை அடக்க முயன்றான். கண்களை மூடினான், சுந்தரேசன் கலங்கிய முகத்துடன் தெரிந்தார். உங்களை மலை போல நம்பினேனே தம்பி இப்படி செய்துட்டீங்களே. சட்டென்று கண்களை திறந்தான். அவரது ஆத்மா கூட என்னை மன்னிக்காது. கடவுளே! மறுபடியும் கண்களை மூடினான். ஒரு முகம் தெரியாத பெண் மணக்கோலத்தில் விசும்பி அழுது கொண்டிருந்தாள். ‘என் வாழ்க்கையை அழித்த பாவி நீ. எனக்கு என்ன பதில் சொல்லப் போற’ நீதி கோரி வாதாடினாள். மீண்டும் கண்களைத் திறந்தான். கடவுளே இனி என் வாழ்வில் நிம்மதியே கிடையாதா? எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. கனவுகள் பயங்கரமாக வந்தது. அலறி எழுந்து மணியைப் பார்த்தான். காலை 6.30 வேகமாக எழுந்து கிளம்பினான். தன் சர்டிபிகேட்ஸ் எடுத்துக் கொண்டு, காரை எடுக்காமல் நடந்தே சென்றான்.

பேங்க் பேங்காக ஏறி இறங்கினான். ஸ்சூரிட்டி போட யாராவது வேண்டும் என்றார்கள். யாரிடம் சென்று கேட்பான், பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு எதற்கு கடன் என்று யோசிக்க மாட்டாங்களா? இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டது.. சுந்தரேசன் வீட்டை நோக்கி நடந்தான் செல்வா. மனசு பதைபதைத்தது. அவர்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம். எப்படிப் பேசப் போகிறோம் என்று ஓர் குழப்பமாக நடந்தவனுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. வீட்டில் ஒரு பெரிய பூட்டு தொங்கியது.

பக்கத்தில் விசாரித்தான்.

‘நேத்து நைட்டோட நைட்டா காலி பண்ணிட்டு போயிட்டாங்க தம்பி. பாவம் அவங்களும் எவ்வளவு தான் மோசமான பேச்சைத் தாங்குவாங்க. ஊரே அவர்களைத் தப்பா பேசியது. அதான் யாரிடமும் சொல்லிக்காம கிளம்பி போயிட்டாங்க’

கனத்த மனதுடன் வீடு திரும்பினான். சோபாவில் சரிந்து அமர்ந்திருந்தவனை தனலட்சுமியின் குரல் எழுப்பியது.

‘காப்பி குடிக்கிறியாப்பா’

‘வேண்டாம்மா’

‘ஏன்பா ஒரு மாதிரியா இருக்க’

‘அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா...’ சிறிது யோசித்தவன் ஏதோ பொறிதட்ட அம்மாவை ஏறிட்டான்.

‘சுந்தரேசன் அங்கிள் வீட்டேலிருந்து யாராவது வந்தாங்களா?’

‘ம்.. ஆமாம்பா, நேத்து ஒரு பொண்ணு வந்துச்சு’

‘யாரும்மா பிரியாவா?’ கேட்டான்.

‘இல்லப்பா அந்தக் கல்யாணப் பொண்ணு ஓவியா. பொண்ணாப்பா அவ.. உங்க அப்பாகிட்ட எப்படி பேசுனா தெரியுமா? வயசுக்குக் கூட மரியாதை கொடுக்கலை’

‘இந்தாங்க உங்க ரெண்டு லட்சம். எங்க அப்பா சொன்ன வாக்கை நான் காப்பாத்திட்டேன். உங்கள மாதிரி நம்பிக்கைத் துரோகம் பண்றவங்க நாங்க இல்ல. உங்க மகன் கிட்ட சொல்லிவைங்க, நாங்க சொன்ன சொல்லை மீற மாட்டோம்னு. பணக்காரங்கன்னா, தலைல என்ன கொம்பா மொளச்சிருக்கு. மனசுன்னு ஒன்னு இருக்கா இல்லையா, இதயமே இல்லாத உங்க மகனை பார்க்க கூட எனக்கு விருப்பம் இல்லை. நீங்கல்லாம் பெரிய மனுசுங்க,ச்சே.. ‘ என்றவள் விருட்டென்று கிளம்பிவிட்டாள்.

முகம் கன்றிப் போயி அமர்ந்திருந்தான் செல்வா, நிறைய பேரிடம் சொல்லி வைத்தான். இருப்பினும் அவர்களைப் பற்றி ஒரு விபரமும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

அந்த ஊரில் இருக்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. உடனே குருவின் நினைவு வந்தது. புறப்பட்டான் சென்னைக்கு. குருவின் அப்பாவிடம் தான் அப்பா துணையின்றி தன் காலில் நிற்க ஆசைப்படுவதாக கூறி வங்கிகளில் லோன் வாங்க உதவி கேட்டான். செல்வாவின் தன்னம்பிக்கையும், சுயகவுரவத்தையும் பார்த்து வியந்தவர். அவனுக்கு ஸ்சூரிட்டி போட்டார். கிடைத்த லோனை வைத்துக் கொண்டு தி.நகரில் ஒரு கடையை லீசுக்கு வாங்கினான். அதில் துணிகளை வாங்கிப் போட குருவின் அப்பா பணம் கொடுத்து உதவினார். இந்த மூன்று வருடத்தில் அல்லும் பகலும் உழைத்து, கடையை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தான். இப்போது அவனது கடைக்கு என்று ஒரு நல்ல பெயர் எடுத்துவிட்டான். வங்கிக்கடனும் முடியப் போகிறது. குருவின் அப்பாவிடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டான். தனக்கென்று தனி வீடும், காரும் வாங்கிவிட்டான். இடையில் திருச்சியில் உள்ள நண்பர்களிடம் சுந்தரேசன் குடும்பத்தைப் பற்றி விசாரிக்காமல் இல்லை. எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
7

‘ஏய் பிரியா என்னடி பண்ற?’ அடுக்களையிலிருந்து குரல் கொடுத்தார் கற்பகம்.

‘என்னம்மா... பரீட்சைக்கு படிக்கிறேன்ல. என் இப்படி கத்தற’

‘கொஞ்சம் இங்க வர்றியா?

‘இரு வரேன்’ சலிப்போடு எழுந்தாள்.

‘நீ படி பிரியா நான் பார்க்கிறேன்’ குரல் கொடுத்த ஓவியா அடுக்களையை நோக்கி நடந்தாள்.

‘என்னம்மா ஏன் படிக்கிற பொண்ண டிஸ்டர்ப் பண்ற’

‘இல்லடி, இந்த ஹார்லிக்ஸ் கொடுக்கத்தான் வரச் சொன்னேன்’ இழுத்தார்

‘சரி,சரி கொடு நானே கொண்டு போய் கொடுக்கிறேன்’

ஹார்லிக்சை பிரியாவிடம் கொடுத்துவிட்டு, அம்மாவிடம் வந்தாள்.

‘நாளைக்கு அந்த கல்யாணத் தரகரை வரச் சொல்லும்மா ஜாதகமும்,போட்டோவும் தரனும்’

‘உன் போட்டோவையும், ஜாதகத்தையும் தான் ஏற்கனவே கொடுத்தாச்சேம்மா’

‘என்னோடது இல்லம்மா, நம்ம பிரியாவோடது’

ஒரு வினாடி அதிர்ந்தார் கற்பகம்.

‘என்னாடி உளர்ற, உனக்கு முதல்ல முடியட்டும் அப்புறம் பார்க்கலாம்.

‘இல்லம்மா அவ படிப்பு முடிஞ்சதும் அவளை சீக்கிரமா ஒரு நல்ல இடத்துல பேசி முடிக்கனும். அப்பத்தான் எனக்கு நிம்மதி’

‘உனக்கு சித்தம் கலங்கி போச்சா ஓவியா. அவளை விட மூணு வருஷம் மூத்தவடி நீ’

‘அம்மா ஏற்கனவே திருமணம் வரைக்கும் வந்து நின்னு போன வலியே எனக்கு ஆறலை. அதுவுமில்லாம கல்யாணம் நின்னு போன பொண்ணுன்னா அவ்வளவு சீக்கிரம் வரன் அமையாது. அப்பா ஸ்தானத்துல இருந்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தரனும்ன்னு ஆசைப்படுறேன். அதுக்கப்புறமா நிச்சயமா எனக்கும் ஒரு வாழ்க்கையை அமைச்சுப்பேன்மா. நீ கவலைப்படாதே. இப்போதைக்கு பிரியா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேட சம்மதம் சொல்லு’ என்று கெஞ்சியவளை பெருமையோடு பார்த்தார் கற்பகம்.

தன் வயிறு நிரம்பினால் போதுமென்று நினைக்கும் மனிதர்கள் மத்தியில் தன் மகள் தனித்து இருக்கிறாள் என்ற மகிழ்ச்சி.

‘என்னவோ.. உனக்கு நான் சொல்லித்தான் நல்லது கெட்டது தெரியனும்னு இல்ல. உன் இஷ்டம்’

‘அம்மான்னா அம்மாதான், அப்போ நாளைக்கே நாள் நல்லா இருக்கு. அந்த தரகர் கிட்ட பிரியாவோட ஜாதகமும், போட்டோவும் கொடுத்துடலாம். அவளுக்கு மாப்பிள்ளை எங்காவது நிச்சயம் பிறந்திருப்பாரு’ உற்சாகமாக கூறினாள்.

ஹார்லிக்ஸ் தம்ளரை வைக்க வந்த பிரியா அங்கு அக்கா கடைசியாக பேசியது காதில் விழுந்தது. நாணம் பற்றிக் கொண்டது. ஏனோ அந்த பெயர் தெரியாத மனிதனின் முகம் அவள் கண் முன் வந்து நின்றது. வேகமாக தன் அறைக்குள் ஓடி ஒளிந்தாள். கல்யாணப் பேச்சைக் கேட்டதும். ஏன் அவன் முகம் என் கண் முன் தோன்றியது. நான் அவனை காதலிக்கிறேனா? குழம்பினாள் பிரியா.

எவ்வளவுதான் குழப்பம் இருந்தாலும் பிரியா படிப்பில் வெகு சுட்டி நன்றாக பரிட்சை எழுதினாள். இறுதித் தேர்வை எழுதிவிட்டு, வெளியே வந்தவளுக்கு ஆச்சர்யம்! அவனேதான். இன்னும் தன்னை மறக்கவில்லை. இருப்பினும் அவனைக் கண்டு கொள்ளாதது போல், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டாள். அவள் அருகில் வந்தவன்.

‘எக்ஸாம்ஸ் எல்லாம் நல்லா எழுதினியா பிரியா’ உரிமையுடன் ஏதோ பல ஆண்டுகள் பழக்கம் உள்ளவன் போல் கேட்டான்.

ஏனோ வெட்கம் அவளைப் பற்றிக் கொண்டது. தரையைப் பார்த்தாள். ’ம்.. எழுதியிருக்கேன்’ சன்னமாக வந்தது குரல், கைகளில் வைத்திருந்த புத்தகத்தை இறுக அணைத்தாள். உள்ளம் படபடத்தது.

இவளின் உணர்வுகளை மென்மையாக ரசித்தவன் உதட்டோரம் தோன்றிய சிரிப்புடன்.

‘எப்பவுமே படபடன்னு கோபப்பட்டு பேசுவீங்க இன்னைக்கு என்ன பேச்சையே காணும்’ சீண்டினான்.

‘ம்... அதெல்லாம் ஒன்னுமில்ல அப்புறம்...’ புருவங்களை உயர்த்தி கேட்டாள்.

‘என்னங்க என்ன கேக்கறீங்க. நீங்கதான் பதில் சொல்லனும், ஆறு மாசம் கழிச்சு வரச் சொன்னீங்க. இதோ வந்துட்டேன், அதே காதலோட,

இந்த ஆறு மாசத்தில் ஒரு நாள் கூட வந்து அவளை தொந்தரவு செய்யாத கண்ணியம் அவளுக்கு பிடித்திருந்தது. இருப்பினும் அவனைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் எப்படி...? யோசித்தவள்.

‘உங்கள.. பத்தி..’ இழுத்தாள்.

‘நான் எம்.ஏ படிச்சிருக்கேன். சொந்தமா பிஸ்னஸ் பண்றேன். மாச சம்பளத்தை விட கண்டிப்பா அதிகம் வரும். சொந்த வீடு கிண்டில இருக்கு. எங்க அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே செல்லப் பிள்ளை. தம்.. அடிக்கிற பழக்கம் கிடையாது. தண்ணி மட்டும் என்னிக்காவது பார்ட்டின்னா குடிப்பேன். அதுவும் அளவோடதான். இதுவரைக்கும் எந்த பொண்ணு பின்னாடியும் போனதில்லை. முதல் முறையாக பிரியான்னு ஒரு தேவதைக்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன்..., போதுமா என்னைப் பத்தி இல்ல வேற ஏதாவது சொல்லனுமா?’ கைகளிக் கட்டிக் கொண்டு அவள் கண்களை ஊடுருவினான்.

அவன் பார்வையின் குறும்பு தாங்காமல் தலை கவிழ்ந்தாள். அவனின் வெளிப்படையான பேச்சு பிடித்திருந்தது. பிடித்திருக்கிறது என்று சொல்லி விடலாமா? யோசித்தாள். உள்மனம் எச்சரித்தது. உன் குடும்ப நிலை உனக்கு தெரியாதா? அக்கா இருக்கும் போது நீ திருமணத்திற்கு முந்தலாமா? அதுவுமில்லாமல் இவனைப் பார்த்தால் பணக்கார வீட்டுப் பையன் போல் இருக்கிறான். ஏற்கனவே அக்காவின் திருமணம் வரதட்சனையால் நின்றது. இவர்களுக்கு இணையாக அக்காவால் செய்ய முடியாது. என்ன செய்வது குழம்பினாள். இந்த விஷயத்தில் நான் முடிவெடுப்பது சரியல்ல. அக்காவிடமே விட்டுவிடலாம். ஒரு தீர்மானத்திற்கு வந்தவளை நிமிர வைத்தது அவனின் குரல்.

‘என்ன பயங்கிற யோசனை போல். வேணும்னா யோசிக்க கொஞ்ச நாள் எடுத்துக்கறீங்களா?’

இளமையின் கிறக்கத்தில் இருந்து மீண்டாள் பிரியா. தெளிவாக அவன் கண்களை பார்த்து பேச ஆரம்பித்தாள்.

‘இங்க பாருங்க நீங்க நினைக்கிற மாதிரி காதல் கத்திரிக்காய்னு திரிய எனக்கு இஷ்டமில்லை. எனக்கு அம்மா, அக்கான்னு ரெண்டு பெரியவங்க வீட்டுல இருக்காங்க. நீங்க, அவங்ககிட்ட வந்து பேசுங்க, ஏன்னா இது வாழ்க்கை விஷயம், எனக்கு அனுபவம் பத்தாது. பஸ் வந்துடுச்சி நான் கிளம்புறேன்’ வேகமாக நகர்ந்தவளின் கையிலிருந்து ஒரு சின்ன புக் விழுந்தது.

‘’உங்க புக் விழுந்துடுச்சி’ குனிந்து எடுத்தான்.

‘அது காலேஜ் டைரிதான் .இனி வேண்டாம். குப்பைல போட்டுடுங்க’ திரும்பாமலே பதிலளித்தாள்.

‘வீட்டு அட்ரஸ் தராம எப்படி வீட்டுக்கு வர்றது’ உரத்து கத்தினான். அது அந்த டைரியிலேயே இருக்கு’ ஓடிச்சென்று பஸ்சில் ஏறினாள்.

ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி வாசல் கதவுகளை தண்ணீர் தொட்டு துடைத்துக் கொண்டிருந்தாள் பிரியா. வாசலில் கார் சத்தம் கேட்க, எட்டிப் பார்த்தாள். காரிலிருந்து இரண்டு வாலிபர்கள் இறங்கினார்கள். அதில் ஒருவனை பார்த்ததும் பிரியாவுக்கு கைகால் உதறல் எடுத்துவிட்டது. அடப்பாவி சொல்லி மூணு நாள் கூட ஆகலையே அதுக்குள்ளே வந்து நிக்கிறான். கடவுளே! என்ன நடக்கப் போகுதோ... ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தவளை அவன் குரல் தான் கலைத்தது. கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன்.

‘டேய், நான் சொன்ன பொண்ணோட வீடு இதுதான்டா, நீதான்டா எப்படியாவது பேசி சம்மதிக்க வைக்கனும்’ வேண்டுமென்றே உரத்த குரலில் கூறினான்.

உடனே பிரியாவிடம்,

‘என்ன பிரியா, உள்ள வாங்கன்னு கூப்பிட மாட்டியா?’

‘ம்.. உள்ள வாங்க...’ தடுமாறினாள்.

அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

படபடத்த இதயத்துடன் அவர்கள் பின்னாலேயே நுழைந்தாள் பிரியா.

‘உட்கார சொல்ல மாட்டியா..ம்.. எல்லாமே நான் சொல்லித் தர வேண்டியதாய் இருக்கு. நீ உட்காருடா, அவங்க கொஞ்சம் ரிசர்வ் டைப்’ தன் நண்பனை அமர வைத்தான்.

ஆனால் அவன் நண்பன் உட்காரவில்லை. சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தை வெறிக்க பார்த்துக் கொண்டு அதனருகில் சென்றான். இருவருக்கும் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது கதவருகில் வந்த ஓவியா, அவனை பார்த்துவிட்டாள் செல்வா....

‘ஏய் பிரியா கண்டவங்களை ஏன்டி உள்ள விட்ட அறிவில்ல உனக்கு’ அலறினாள்.

அப்போதுதான் பிரியா செல்வாவை உற்றுப் பார்த்தாள், சகலமும் புரிந்தது அவளுக்கு.

ஓவியாவை ஏறிட்ட செல்வாவின் கண்கள் கசிந்திருந்தது. அதைப் பார்த்ததும் ஓவியா அதிகம் சூடானாள்.

‘நல்லா நடிக்கிறீங்க.. செய்றதையும் செஞ்சிட்டு ஏன் நல்லவன் மாதிரி வேஷம் போடுறீங்க.. ப்ளீஸ் கெட் அவுட்..’ கத்தினாள்.

வேகமாக வெளியேறினான் செல்வா. அப்போது தான் சோபாவில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள் ஓவியா

குரு நீங்க எப்போ வந்தீங்க.. நான்.. செல்வா..’ தடுமாறினாள்.

‘கூல் டவுன் ஓவியா.. வாங்க வந்து இந்த சோபாவில் உட்காருங்க, பிரியா போய் தண்ணீர் எடுத்துட்டு வா’

இயந்திரமாய் உள்ளே சென்றவள். வந்திருந்தவர் செல்வா தான் என்பது ஓவியா கத்தும்போது தான் தெரிந்தது. அதுவரை அவள் குருவைத்தான் கவனித்துக் கொண்டிருந்தாள். மனதில் பல கேள்விகள் எழுந்தன. இவரை அக்காவுக்கு முன்பே தெரியுமா? இவருக்கும் செல்வாவிற்கும் என்ன உறவு? குழம்பினாள்.

அவள் கொண்டு வந்த தண்ணீரை ஓவியா பருகினாள். இதயம் சீராக இயங்கியது. தன் முதலாளியின் முன் தான் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டதில் அவளுக்கு வெட்கமாக இருந்தது.

‘குரு அது.. செல்வாகிட்ட...’

‘ஒரு நிமிஷம் ஓவியா, அது உங்க சொந்த விஷயம் அதுல தலையிட நான் விரும்பலை.என் விஷயத்திற்கு வர்றேன்..’ இழுத்தான்.

‘சொல்லுங்க குரு என்ன விஷயம்?’

‘அது, அம்மா இல்லையா ஓவியா?’

‘பக்கத்து வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் குரு. அதான் திண்டுக்கல் வரைக்கும் போயிருக்காங்க. என்ன விஷயம். என்கிட்டயே சொல்லுங்க’

‘நான் வெளிப்படையா சொல்லிடறேன்’ நிறுத்தினான். பிரியாவைப் பார்த்தான். படபடத்த இதயத்துடன் நின்றிருந்தாள். பிரியா மனதிற்குள் பல தெய்வங்களை வேண்டிக் கொண்டிருந்தாள்.

தொடர்ந்தான் குரு.

‘நான் சொல்லும் போது குறுக்கிடாம கேளுங்க ஓவியா, நான் முடிச்சதுக்கப்புறம் நீங்க பேசலாம். நான் உங்க தங்கையை முதன் முதலா தி.நகர்ல பார்த்தேன். அப்போ நான் செல்வா கடையில் இருந்தேன். அப்பாவுக்கு உடம்பு சரியிலைன்னு போன் வந்தது வேகமா நடந்து வந்துக்கிட்டிருந்தபோது, தெரியாம அவங்க மேல மோதிட்டேன்.அப்போதான் அவங்கள முதன் முதலா பார்த்தேன். அப்பவே முடிவு பண்ணிட்டேன். இவங்க தான் என் மனைவின்னு அப்புறம் இவங்க காலேஜை கண்டுபிடிச்சு. இவங்களோட பேசினேன். உறுதியா சொல்லிட்டாங்க. காதல் வேண்டாம்ன்னு. அப்புறம் நான் தொடர்ந்து வர்றதை பார்த்துட்டு, ஆறு மாசம் கழிச்சு என் பரீட்சை முடியுது. அப்புறம் வாங்கன்னு தட்டிக் கழிச்சுட்டாங்க. அவங்க பரீட்சை முடிஞ்சு போய் நின்னா, எனக்கு அனுபவம் பத்தாது எதுவானாலும் என் அக்கா, அம்மாகிட்ட பேசுங்கன்னு சொல்லிட்டாங்க. அதான் செல்வாவை கூட்டிட்டு பேச வந்தேன். என்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்ச என் ஒரே நண்பன் அவன்தான். ஆனா இது உங்க வீடுன்னு நாக இருவரும் சத்தியமா எதிர்பார்க்கல. தெரிஞ்சிருந்தா செல்வா கண்டிப்பா வந்திருக்க மாட்டான்’ நண்பனை விட்டுக் கொடுக்காமல் பேசி முடித்தான் குரு.

அவன் பேசும் போது ஓவியாவின் முகத்தில் பற்பல உணர்ச்சிகள் தோன்றியது. அவ்வப்போது பிரியாவை பார்த்தாள். அவள் தரையைப் பார்த்துக் கொண்டு கண்கள் கசிய நின்றாள். பிரியாவின் மனம் அதிகமாக பாதித்திருந்தது. குருவை வரச் சொல்லிவிட்டாளே தவிர அவன் இவ்வளவு சீக்கிரம் வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அக்கா தன்னைப்பத்தி என்ன நினைப்பாள். அவள் இருக்கும் போது நமக்கு என்ன அவசரம் என்று நினைக்க மாட்டாளா? கடவுளே! மானமே போச்சு.

குரு கூறியதை முழுதாக கேட்டு முடித்த ஓவியாவுக்கு தங்கையைப் பற்றி பெருமையாக இருந்தது. தன்னையும் அம்மாவையும் நினைத்து பார்த்து பேசியிருக்கிறாள். தங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறாள். குரு மிகவும் நல்லவர் தான். அது ஓவியாவிற்கு நன்றாகவே தெரியும். எனவே சந்தோஷம் தான். ஆனால் பணக்காரர். அவருக்கு சமமாக தன் தங்கைக்கு செய்ய தன்னால் முடியுமா? மெல்ல பேச ஆரம்பித்தாள்.

‘குரு.. வீட்டுல...’ இழுத்தாள்.

‘எங்க வீட்டுல பேச வேண்டியது என் பொறுப்பு. உங்களுக்கு சம்மதமா?’ பேச்சை மேலும் வளர்ப்பதை தவிர்த்தான் குரு.

‘அது.. உங்களை பத்தி எனக்கு நல்லாத் தெரியும். எனக்கு சம்மதம்தான். ஆனா அம்மாகிட்ட ஒரு வார்த்தை கேட்கனுமே’

‘ஓ.. தாராளமாய் கேளுங்க. பெரியவங்களை கேட்கிறது நியாயம்தானே. அப்புறம் என்ன பிரியா. உங்க அக்காவே சொல்லிட்டாங்க. அப்போ நான் கிளம்பவா’ எழுந்தான் குரு.

‘குரு இருங்க. நல்ல விஷயமா வீடு தேடி வந்திருக்கீங்க..ஒரு கிளாஸ் ஜூஸாவது சாப்பிட்டு போங்க. அப்பத்தான் எனக்கு சந்தோஷம்’ என்றாள் ஓவியா.

‘குடிச்சிட்டா போச்சு..’ எழுந்தவன் மறுபடி அமர்ந்தான்.

ஓவியா வேகமாக சென்று எலுமிச்சம் பழம் பிழிந்து ஜூஸ் தயாரித்து எடுத்து வந்தாள். அவள் வரும் வரை பிரியாவையே பார்த்துக் கொண்டிருந்தான் குரு. அவளிடமிருந்து விம்மல் மட்டும் வந்தது.

ஜூஸை பெற்றுக் கொண்டு கதவு வழியே ரோட்டைப் பார்த்தான். அப்போது தான் ஓவியாவுக்கு செல்வாவின் நினைவு வந்தது.

‘நான் போய் கூட்டிட்டு வரேன் குரு. நீங்க உட்காருங்க..’’ என்றவள், வாசலை நோக்கி நடந்தாள். அவள் கதவைத் தாண்டி சென்றதும் பிரியாவிடம் வந்தான் குரு அவள் தரையையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் தாடையை தன் ஒற்றை விரலால் நிமிர்த்தினான். கண்கள் கலங்கி இருந்தன.

‘பிரியா..பிரியா.. எதுக்கு நீ இப்போ அழற..’

‘அழாம.. நீங்க செய்யறது உங்களுக்கே நல்லாயிருக்கா. அக்கா கல்யாணம் பண்ணிக்காம இருக்கும் போது இவளுக்கு என்ன அவசரம்னு, அக்காவும் அம்மாவும் என்னைப் பத்தி தப்பா நினைக்க மாட்டாங்களா, என் மானமே போச்சு’ வெடித்து அழுதாள்.

அவளின் தலையை மெல்ல வருடியவன்.

‘பிரியா ப்ளீஸ் அழாத.. இங்க பாரு, என் விருப்பத்தை உங்க வீட்டுல சொல்லி சம்மதம் வாங்கலாம்னு தான் வந்தேன். நம்ம கல்யாணம் உங்க அக்கா கல்யாணத்துக்கு அப்புறம் தான் சரியா?’

அவள் முகத்தை இருகைகளிலும் ஏந்திக் கொண்டு கேட்டான்.

‘நிஜமாதான், இப்ப நீ சொல்லவேண்டியது ஒன்னே ஒன்னுதான்’ என்ன என்று புருவம் உயர்த்தினாள்.

‘உனக்கு என்ன பிடிச்சிருக்கான்னு சொல்லவே இல்லையே பிரியா’ அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.

சிரித்துவிட்டாள் பிரியா.

‘ஏன், திருமணமாகி இரண்டு குழந்தை பிறந்தவுடன் கேளுங்களேன் இந்த கேள்வியை ஆளைப்பாரு. வீட்லயே சொல்லி சம்மதம் வாங்கியாச்சு அப்புறம்தான் கேட்கனும்னு தோணுச்சாக்கும்’

‘உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு, உன் கடைசி பரிட்சையப்பவே நான் தெரிஞ்சுகிட்டேன்’

‘எப்படி?’

‘எப்பவும் என்னைப் பார்த்தால் முகத்தை சுழிப்ப, ஆன அன்னைக்கு வெட்கப்பட்ட, அப்பவே தெரிஞ்சிடுச்சு உன் மனசுல நான் நுழைஞ்சிட்டேன்னு’

‘குறும்பு தான்’ அவன் காதை லேசாக பிடித்துத் திருகினாள்.

‘உங்க அக்கா பார்த்தா என்ன நினைப்பாங்க. நான் சோபால சமர்த்த உட்கார்ந்துக்கிறேன்’ சோபாவில் அமர்ந்து கொண்டான். காரின் ஸ்டியரிங்கில் கவிழ்ந்திருந்தான் செல்வா. கண்ணாடியை ஒற்றை விரலால் தட்டினாள். சத்தம் கேட்டு விழித்தவன். அவளைப் பார்த்து தயங்கினான். கண்கள் சிவந்திருந்தது. கோபம், துக்கம், அவமானம் இப்படி பல உணர்ச்சிகள் அவன் முகத்தில மாறி மாறி தெரிந்தது.

அவள் சன்னமான குரலில் ‘உள்ள வாங்க...’

‘இல்ல பரவாயில்லை, குருவை அனுப்பி வைங்க’

‘நல்ல விஷயம் பேச வந்திருக்கீங்க. அது தெரியாம நான்.. என்னை மன்னிச்சிடுங்க’

‘அய்யய்யோ.. மன்னிப்பு கேட்க வேண்டியது நான்தான். என்னால்தான்...’

‘இப்போ எதைப் பத்தியும் பேச வேண்டாமே நான் என் தங்கை விஷயமா ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீங்க உள்ள வந்து ஒரு வாய் ஜூஸ் சாப்பிட்டு போனீங்கன்னா சந்தோஷப்படுவேன்’ அவனைப் பேச விடாமல் பேசி முடித்தாள்.

அதற்கு மேல் தான் மறுத்தால் அசிங்கமாக இருக்கும் என்று எண்ணி உள்ளே சென்றான்.

இருவரும் ஜூஸ் குடித்துவிட்டு கிளம்பி விட்டார்கள். இரு பெண்களும் சந்தோஷமாய் வழியனுப்பி வைத்தார்கள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
8

‘என்னடா சொல்ற’ ஆச்சர்யமாக கேட்டான் குரு.

‘ஆமான்டா, நான் ஓவியாவை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். இந்த ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுலயிருந்து.. உன் கல்யாண விஷயமா பேசப் போறாங்கல்ல. அப்போ அப்படியே என்னைப் பத்தியும் பேசச் சொல்லுடா’

‘என்ன விளையாடுறியா?’

‘இல்லடா உண்மையைத்தான் சொல்றேன், சுந்தரேசன் அங்கிள் குடும்பத்துக்கு ஏதாவது செய்யனும்டா’

‘டேய், அனுதாபத்திலேயோ, இல்லை கைமாறாகவோ செய்ய கல்யாணம் ஒன்னும் விளையாட்டு இல்லடா’

‘இது அனுதாபத்துல வந்த முடிவு இல்லடா, எனக்கு ஓவியாவ பிடிச்சிருக்கு. அவ எப்பவோ என் மனசுல வந்துட்டா. அவ சுந்தரேசன் அங்கிளோட பொண்ணுன்னு தெரிஞ்சதும் அவதான் என் மனசு புல்லா நெறைஞ்சு இருக்க’

‘அவங்க உன்ன பார்த்தாலே பத்திரகாளியா மாறிடறாங்களேடா’

‘பேசிதான்டா புரிய வைக்கனும். அவங்க மனசு மாறுற வரைக்கும் நான் காத்திருப்பேன்டா’ குரல் தழுதழுத்தது.

‘ஏய் கவலைபடாதடா, எல்லாம் நல்லபடியா நடக்கும். நான் பேசறேன் ஓவியாகிட்ட, பொண்ணு பார்க்கும் போது சொன்னா. ஓவியா எல்லார் முன்னாடியும் வெச்சு உன்ன அசிங்கபடுத்திட்டா என்ன செய்யறது? என்னால் தாங்கிக்க முடியாது. நாளைக்கு ஆபீஸுக்கு வா. நான் அவங்கிட்ட பேசிடுறேன். நீயும் பேசு. முடிவு பாசிடிவ்னா அம்மாவ பேசச் சொல்றேன். ரெண்டு பேர் கல்யாணத்துக்கும் சீக்கிரம் நாள் குறிக்க சொல்லலாம். இல்லைன்னா அவங்க மனசு மாறும் வரைக்கும் வெய்ட் பண்ணலாம்’

*****​

ஓவியாவின் கண்கள் கணினியில் மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தன. சட்டென்று அவளது கண்கள் அகலமாக விரிந்தது. உடனே பேப்பர் பேனாவை எடுத்து குறிப்பு எழுத ஆரம்பித்தாள். எழுதி முடித்து உடனே குருவின் அறை நோக்கி விரைந்தாள்.

‘மே ஐ கமின் சார்’

‘வாங்க ஓவியா’

அவளின் முகத்தைப் பார்த்தவன்

‘என்ன ஓவியா ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க, ஏதாவது விஷேசமா’

‘ஆமாம் சார். விஷேசம்தான் . இங்க பாருங்க சார். கோவைல ஐம்பது ஏக்கர் நிலம் விலைக்கு வருதாம். அடுத்த மாசம் ஐந்து நாள் கான்பரன்ஸ் இருக்காம். கடைசி நாள் ஏலம் விடுறாங்களாம். நாம கண்டிப்பா போகணும் சார். இந்த மாதிரி ஆப்பர்சுனிட்டி கிடைக்கிறது கஷ்டம். அதுவுமில்லாம இப்போ ஐ.டி.டவுன்ல இருக்கிறதால நிலத்தோட விலை குறைஞ்சிடுச்சு. ஆனா இன்னும் ஒரு வருஷத்துல செமயா எகிறிடும். அப்புறம் பிளாட் போட்டு வித்தா செம பணம்’ கண்கள் பளபளக்க நிறுத்தாமல் பேசினாள். அவளின் ஆர்வத்தை அதிகமாக கவனித்தான் குரு.

‘கிரேட் ஓவியா. உங்களோட இன்வால்வ்மென்ட்டை பாராட்டுறேன். கண்டிப்பாக நாம் போகலாம்’

‘நாமளா’

‘ஆமாம் எனக்கு பர்சனல் அட்வைசர் நீங்கதானே.அப்புறம் நீங்க வராம?’

‘ம்.. சரி சார். அடுத்த மாசம் 10ம் தேதி மறந்துடாதீங்க சார், நான் சீட்டுக்கு போறேன்’

‘ஒரு நிமிஷம் ஓவியா இப்பவே கோவைக்கு ரெண்டு டிக்கெட் புக் பண்ணிடுங்க’

‘ஓகே சார்’

கடிகாரம் ஐந்து முறை அடித்தது. வீட்டிற்கு கிளம்ப தயார் செய்து கொண்டிருந்தாள் ஓவியா. போன் அலறியது எடுத்து காதுக்குக் கொடுத்தவள்.

‘சொல்லுங்க சார்’

‘ஓவியா ரெப்ரெஷ்மென்ட் ரூமுக்கு வர்றீங்களா, கொஞ்சம் பர்சனலா பேசனும்’

‘என்ன சார்,பிரியாவை பத்தியா?’

‘வாங்க சொல்றேன்’

போனை வைத்தவள் விரைவாக நடந்தாள். மனதில் குரு என்ன பேசப் போகிறான் என்ற கேள்வியோட அவசரமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளின் கண்களில் முதலில் பட்டது செல்வாதான். முகத்தை சுருக்கினாள். பின்பு குருவை நோக்கி நடந்தாள்.

‘வாங்க ஓவியா உட்காருங்க’ நாற்காலியை காட்டினான் குரு.

அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.

;’சொல்லுங்க குரு’

‘ஏய் செல்வா கொஞ்சம் வெளியே இருடா, பேசிவிட்டு கூப்பிடுறேன்’

‘இல்ல குரு, இது என் விஷயம். நான் தான் பேசனும்னு தோணுது’

‘அடப்பாவி இவ்வளவு நேரம் வராத தைரியம் இப்போ வந்துடுச்சா, சரிதான் போ, நீயாச்சு , ஓவியாவாச்சு, நடுவுல நான் யாரு. எனக்கு வேலை மிச்சம். நான் கிளம்புறேன்டா. கிளம்புறேன் ஓவியா’ கதவருகில் சென்றான் குரு.

‘சார் நானும் வரேன்...’ எழ முயன்ற ஓவியாவை.

‘ஐந்து நிமிஷம் ஓவியா ப்ளீஸ்’ என்ற செல்வாவின் குரல் நிறுத்தியது.

என்னதான் சொல்ல போறார்னு கேட்டுத்தான் வைப்போம் என்று அமர்ந்தாள்.

மேஜையைப் பார்த்தவன்.

‘நான் சொல்லப் போற விஷயத்தை நீங்க எப்படி எடுத்துக்கப் போறீங்கன்னு தெரியல ஓவியா. ஆனா சொல்லாம என்னால இருக்க முடியல’ நிறுத்தினான்.

பீடிகை எல்லாம் பலமா இருக்கே. என்னதான் சொல்ல வர்றார் இவர் என்று எண்ணியவள் அவன் கண்களை ஊடுருவினாள்.

அவள் கண்களை நேராகப் பார்த்தவன்.

,மூணு வருஷத்துக்கு முன்னாடியே முகம் தெரியாத உன்னை நேசிச்சிருக்கேன் ஓவியா’

ஏதோ பேச முயன்றவளை,

‘ப்ளீஸ் ஓவியா, நான் பேசிடறேன், நீ என் அப்பா மூஞ்சில பணத்தை வீசிட்டு போனதா அம்மா சொன்னப்பவே உன் தைரியம் எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா உன்ன சென்னையில பார்த்ததும். உன் கோபமான முகம் என்னை வாட்டி வதச்சது. அப்புறம்தான் நீ சுந்தரேசன் அங்கிளோட பொண்ணுன்னு தெரிஞ்சதும் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவே பண்ணிட்டேன்’

மறுபடியும் குறுக்கிட முயன்றாள். அப்போதும் விடவில்லை செல்வா.

‘செய்த தப்புக்கு இது பிராயச்சித்தமான்னு நீ நினைக்கலாம். ஆனா அதுக்கு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு அவசியமில்லை. சுந்தரேசன் அங்கிள் ஸ்தானத்துல இருந்து உங்க இரண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கையை அமைச்சுத் தந்தாலே போதுமே. ஆனா என் மனசுல நீ இருக்க மனசு முழுக்க காதல் இருக்கு. இதெல்லாம் எனக்கே தெரியாம எனக்குள்ள வந்துடுச்சு. அது சுகமாகவும் இருக்கு. சுமையாகவும் இருக்கு. நீ எனக்கு முழுசா கிடைச்சா வாழ்க்கை முழுதும் பொக்கிஷமா பாதுகாப்பேன். இப்பகூட நான் உன்னை என்னோட மனைவியாத்தான் பார்க்கிறேன். ஏதோ ரொம்ப நாள் தொடர்பு இருக்கிற மாதிரி இருக்கு. என் மனசுல இருந்த சுமையை இறக்கி வெச்சுட்டேன். இனி நீதான் சொல்லனும்’ பெருமூச்சோடு நிறுத்தினான்.

ஐந்து வினாடி மௌனம் நிலவியது.

நிமிர்ந்து அமர்ந்தவள், அவன் கண்களை நேருக்கு நேர் நோக்கினாள்.

‘நீங்க சொல்றதெல்லாம் புரியது செல்வா. ஆனா நம்ம கல்யாணம் நடக்கனும்னா உங்க காதல் மட்டும் போதுமா? எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கனும் தானே?’

‘கண்டிப்பா ஓவியா, அதுக்காகத்தானே இவ்வளவு தூரம் பேசறேன்’

‘ஆனா எனக்கு உங்கள பிடிக்கலை...’ முடித்துவிட்டாள்.

‘காரணம்?’

‘உங்களுக்கு தெரியாதா..?’ புருவத்தை உயர்த்தினாள்.

‘அது நான் விவரம் தெரியாத வயசுல செஞ்ச தப்பு ஓவியா.... தெரியாம நடந்துடுச்சு..’

‘ஆனா.. அதுக்கு பலி எங்க அப்பா’

‘ஓவியா.. இதைத்தவிர வேற காரணம் சொல்லு...’

‘இதுவே பெரிய காரணம். வாழ்க்கை முழுக்க உங்களைப் பார்த்தாலே வெறுப்புதான் வரும் எனக்கு. அப்புறம் எப்படி கல்யாணம் நெவர். எனக்கு டைம் ஆயிடுச்சு. மறுபடியும் இப்படி உளறாம இருந்தீங்கன்னா சந்தோஷம். தயவு செய்து என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க. நான் மூணு வருஷத்துக்கப்புறம் இப்பதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன். அதை கெடுத்துடாதீங்க குட் பை..’

இவன் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறிவிட்டவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா

அந்த ஞாயிறன்று பெண் பார்க்கும் படலம் முடிந்தது. இரு குடும்பத்தினருக்கும் பரம சந்தோஷம். ஆனால் ஓவியாவின் திருமணம் முடிந்தவுடன் தான் தன் திருமணம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள் பிரியா. அந்த நிகழ்ச்சி முழுவதும் செல்வாவின் கண்கள் ஓவியாவை வட்டமிட்டன. அவளின் அலட்சிய பார்வை மட்டுமே அவனுக்கு கிடைத்தது

*****​

இரவு 10.00 மணி, சென்ட்ரல் இரயில் நிலையம், பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. கடைசி நேரத்தில் இரயிலைப் பிடிக்க கூட்டம் மூட்டை முடிச்சுக்களுடன் ஓடிக்கொண்டிருந்தது. சலவை செய்து வெள்ளையுடையில் டியுட்டிக்கு வரும் இரயில் ஓட்டுனர்கள். இரயிலைக் கண்டுபிடிக்க அங்கும் இங்கும் படபடக்கும் பயணிகள். நடுஇரவு இரயிலுக்காக முன்னமே வந்து துணி விரித்துப் படுத்திருக்கும் பயணிகள், மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு ஓடும்போர்ட்டர்கள் ஆக இரயில் நிலையம் அல்லோலக்கல்லோலப் பட்டுக் கொண்டிருந்த்து.

குருவும், ஓவியாவும் பெட்டிகளுடன் நுழைந்தனர். அவர்களுக்கு பின்னால் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்தான் செல்வா. அவர்களின் கோச்சைக் கண்டுபிடித்து பெட்டிகளை வைத்துவிட்டு ஓவியா இருக்கையில் அமர்ந்து கொண்டாள். குரு வெளியில் செல்வாவிடம் பேசிக் கொண்டிருந்தான். குருவின் கைப்பேசி அலறியது. எடுத்துக் காதுக்கு கொடுத்தவனின் முகம் மாறிவிட்டது. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா.

போனை வைத்தவன் செல்வாவின் கையை பிடித்து இழுத்துச் சென்றான். ஓவியாவிடம் சென்றதும். ‘எங்கப்பாவிற்கு உடம்பு முடியலையாம். அதனால் நான் உடனே போகனும்’

‘சரி சார், நாம கிளம்பிடலாம்...’

‘நாம இல்ல ஓவியா, நான் மட்டும்தான் . செல்வாவை உன் கூட துணைக்கு அனுப்புறேன்...’

இதைக் கேட்டவள் பதறினாள்.

‘சார் வேண்டாம்.. சார்.. உங்களுக்குத்தான் தெரியுமே...’ இழுத்தாள்.

‘பர்சனல் விஷயத்தை பேச இது நேரமில்லை. இது நம்ம ஆபீஸ் விஷயம். நீங்கதான் என் சார்பா இருந்து அந்த ஏலத்துல கலந்துக்கனும். உங்க துணைக்கு செல்வாவை கூட்டிட்டு போங்க. அவன் ஒரு ஜென்டில்மேன். இந்தப் பயணத்துல உங்களுக்கு கண்டிப்பாக தொந்தரவு தரமாட்டான் போதுமா...’

‘டேய் நான் கிளம்புறேன்டா.. நீ ஓவியாவ பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வாடா....

‘டேய் நான் ட்ரெஸ் கூட எடுக்கலையேடா...’ மழுப்பினான் செல்வா.

‘என் ட்ரெஸ் எல்லாம் உனக்கு சரியாத்தான் இருக்கும். இதோ ரயில் புறப்படப்போகுது. நான் இறங்குறேன். ஹேப்பி ஜெர்னிடா...’ இறங்கிவிட்டான் குரு.

ஓவியா பேந்த பேந்த விழித்தாள். அவளுக்கும், அவனுக்கும் சம்மந்தம் இல்லாதது போல் தன் பர்த்தில் ஏறி படுத்துவிட்டான் செல்வா. ஓவியா தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.

இருவரும் அப்பர் பர்த் எதிரெதிரில், இவளை கவலைப்படுத்த வேண்டாம் என்று எண்ணினான் போலும். சுவற்றின் புறம் திரும்பிப் படுத்திருந்தான். இவள் புறம் திரும்பவேயில்லை. இரவில் குளிர் அதிகரித்தது. அவளால் உறங்கவே முடியவில்லை. சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்திப் பார்த்தாள். அப்போதும் குளிர் அடங்கவில்லை. மின் விசிறி வேறு ஓடிக்கொண்டிருந்தது. நிறுத்தவும் பயமாக இருந்தது. மற்றவர்களுக்கு காற்று தேவைப்பட்டால் என்ன செய்வது?

செல்வாவிற்கு விழிப்பு வந்துவிட்டது. இறங்கி கழிப்பறை நோக்கி சென்றவன், மூன்று நிமிடம் கழித்து திரும்பினான். தன் பர்த்திற்கு ஏற எத்தனித்தவன், அவளை ஒரு வினாடி பார்த்தான். அவளின் குறுக்கிய உடம்பையும், சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்திய விதத்தையும் கவனித்தவன். மினி விசிறியை நிறுத்தினான். வேகமாக தன் பர்த்தில் சென்று படுத்துவிட்டான். அவளுக்கு உயிர் வந்தது போல் இருந்தது.

மனித உடம்பின் அமைப்பு தான் விசித்திரம். அதிகமான வெப்பத்தையும் தாங்குவதில்லை. அதிகமான குளிரையும் தாங்குவதில்லை என்று எண்ணியவள் மனதிற்குள் செல்வாவிற்கு நன்றி சொன்னாள். சிறிது நேரத்தில் இரயிலின் கூச்சிக்..சிக்.. தடதட.. சத்தம்... எங்கோ பாதாளத்தில கேட்பது போல் இருந்தது. கண்ணயர்ந்தாள்.

மென்மையாக தன் கைகளை யாரோ தொடுவது போலிருந்தது. உறக்கம் கலைந்து விழித்தாள். செல்வாதான் நின்றிருந்தான்.

‘கோவை வரப்போகுது ஓவியா. போய் பேஸ்வாஷ் பண்ணிட்டு வந்துடுங்க...’ தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

முக்கால்வாசி பயணிகள் எழுந்துவிட்டனர். தங்கள் உடைமைகளை சரி பார்த்து எடுத்துக் கொண்டிருந்தனர். முகம் கழுவி வந்தவளை சூடான டீ கப்புடன் எதிர்கொண்டான் செல்வா. கப்பை அவள் புறம் நீட்டினான். மறுப்பு சொல்லாமல் பெற்றுக் கொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்த வண்ணம் டீயைப் பருகினாள். கோவையின் குளிர் காற்றில் தெரிந்தது.

பக்கத்து சீட்டிலிருந்த சிறுமியிடம் விளையாடிக் கொண்டிருந்தான் செல்வா. அந்த சிறுமியும் அவனுடன் ஒட்டிக் கொண்டாள்.

‘தனியாவா அங்கிள் வந்தீங்க...?’

‘இல்லம்மா.. அந்த ஆன்ட்டி என் கூட வந்தாங்க’ என்று ஓவியாவை சுட்டிக் காட்டினான்.

அது யாரு அங்கிள்...? உங்க ஆன்ட்டியா...’

உங்க மனைவியா என்று கேட்கத் தெரியாத குழந்தை அப்பாவியாய் கேட்டது.

‘இல்லம்மா.. எனக்குத் தெரிஞ்சவங்க..’சிறுமிக்கு தெரிந்த வகையில் பதிலளித்தான் செல்வா.

இவர்களின் உரையாடல் அவளின் செவிகளில் விழாமலில்லை. இருப்பினும் எந்தவொரு உணர்வையும் முகத்தில் காட்டாமல் வெளியில் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தாள்.

இரயில் நின்றது. குருவின் பெட்டியையும், ஓவியாவின் பெட்டியையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான் செல்வா. அவன் பின் இறங்கிய ஓவியா, ‘என் பெட்டியை நானே எடுத்துக்கிறேன்....’ என்றாள்.

அப்பா இப்போதாவது பேசினாளே.. என்ற நிம்மதி அவன் முகத்தில் தெரிந்தது. பெட்டியை அவள் புறம் நீட்டினான். ஒரு கால்டாக்ஸியை மறித்து ஒரு ஹோட்டலின் பேரைச் சொன்னான். அந்த வெள்ளை டாடா இண்டிகா இருவரையும் சுமந்து கொண்டு சத்தமில்லாமல் நகர்ந்தது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
9

கோவை.. அழகான ஊர். சென்னைக்கும், கோவைக்கும் அதிக வேறுபாடு இல்லை. முன் பின் தெரியாதவர்களையும் அன்பாக ‘கண்ணு’ என்று அழைக்கும் பெரியவர்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ங்க’ போட்டு பேசும் மரியாதை. அதிகமான கூட்டத்துடன் சென்றாலும் ஆண் பெண் பேருந்தின் சரிபாதியை எடுத்துக் கொண்டனர். முன்பாதியில் பெண்களும் பின்பாதியில் ஆண்களும் என்று கண்ணியமாக இருக்கும் பேருந்து பயணம். அதிக வெயில் இருந்தாலும் அது தெரியாத வண்ணம் காற்று அடித்துக் கொண்டேயிருக்கும்.

இப்படிப்பட்ட கோவையை மிகவும் ரசித்தாள் ஓவியா. முதல் நாள் கான்பரன்ஸுக்கு ரெடியாகி, இருவரும் டாக்ஸியில் பயணித்தனர். அந்த கான்பரன்ஸ் கோவையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஓர் ஊரில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ஊரிலிருந்து ஒரே பெரிய அடுக்கு மாடி வீட்டில்தான் நடைபெற்றது. அதில் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவில்லை. காரணம் இதற்கு அதிகம் விளம்பரமில்லை. இன்டர்நெட்டில் விளம்பரப்படுத்தியதோடு சரி.

முதலில் இவர்களுக்கு வெல்கம் டிரிங்கஸ் கொடுக்கப்பட்டது. பிறகு புரொஜெக்டரில் அவர்கள் விற்க விரும்பும் இடத்தின் வரலாறு. அதன் நிலவளம், நீர்வளம், காற்று வசதி, பசுமை என்று அனைத்தையும் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர். விளக்கம் முடிந்ததும், ஏதேனும் சந்தேகமிருந்தால் கேட்கலாம் என்றார் விளக்கமளித்தவர்.

எழுந்து நின்ற ஓவியா, ‘இந்த நிலத்தோட இ.சி. கொடுப்பீங்களா?’ என்றாள்.

‘கண்டிப்பா இப்போ லஞ்ச் முடிஞ்சதும் டாக்குமெண்ட்ஸ் வெரிபிகேஷன்தான். எல்லோருக்கும் டாக்குமெண்ட்ஸ் ஜெராக்ஸ் கொடுத்துடுவோம். நீங்க உங்க வெரிபிகேஷனை ஆரம்பிக்கலாம். உங்களுக்கு திருப்தியா இருந்தால் நாளைக் காலையில் இடத்தைப் பார்க்கலாம். மதியம் ஏலம் .நைட் பார்ட்டி இதுதான் பிளான் ஓகே...’

‘ஓகே தேங்க்ஸ்...’ என்று ஓவியா அமர்ந்தாள்.

மதிய உணவு பஃபே சிஸ்டத்தில் அமைக்கப்பட்டிருந்தது சைவம் அசைவம் என்று பிரித்து வைத்திருந்தார்கள். அவரவர்களுக்கு வேண்டிய உணவை பீங்கான் தட்டுகளில் நிரப்பிக் கொண்டு அங்கிருந்த சேர்களில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர். ஒரு சிலர் நின்றுக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர்.

‘ஹாய்.. என் பேரு சங்கர். ஊட்டிலயிருந்து வந்துருக்கேன்’ என்று செல்வாவின் முன் ஓர் இளைஞன் நின்றான்.

‘நான் செல்வா.. சென்னையிலிருந்து...’ என்றான் பதில் மரியாதைக்கு.

‘உங்க சொந்த யூஸிற்கு இந்த இடம் வாங்குறீங்களா, இல்லைன்னா விற்பனைக்கா...?’

‘எனக்கு அதைப்பத்தி எதுவும் தெரியாதுங்க.. அதோ அவங்கதான் வாங்கப் போறாங்க. நான் சும்மா துணைக்கு வந்தேன்’ என்றவன் ஓவியாவை சுட்டிக் காட்டினான்.

தன்னை சுட்டிக் காட்டித்தான் பேசுகிறான் என்று உணர்ந்த ஓவியா, அவர்கள் இருக்கும் இடம் நோக்கி விரைந்து வந்தாள்.

‘நீங்க சென்னைல என்ன சார் செய்றீங்க?’ ஒரு சிக்கன் 65ஐ கடித்தப்படி கேட்டான் சங்கர்.

பிஸ்னஸ் பண்றேன் சார்... தி.நகர்ல ஒரு துணிக்கடை வெச்சிருக்கேன்...’

‘ஓ.. நல்ல தொழில் சார்...’

‘இந்த சார் வேண்டாமே சங்கர், செல்வான்னு கூப்பிடுங்க..’

‘ஓகே செல்வா’

‘நீங்க என்ன பண்றீங்க சங்கர்?’

‘டீ எஸ்டேட் வச்சிருக்கேன் செல்வா...’

அதற்குள் ஓவியா இவர்கள் அருகில் வந்துவிட்டாள்’

‘இவங்கதான் ஓவியா.. இந்த இடத்தை வாங்க வந்திருக்காங்க..’

‘இவர் சங்கர். ஊட்டில டீ எஸ்டேட் வெச்சிருக்காரு.... பரஸ்பரம் அறிமுகப்படுத்தி வைத்தான் செல்வா.

இருவரும் சினேகமாய் புன்னகைத்து கொண்டனர்.

‘ஓவியா.. இவருக்கு நிலத்தைப் பத்தி உங்ககிட்டே ஏதோ பேசனுமாம்.. நீங்க பேசுங்க.. என்றவன் அவர்களை விட்டு நாசுக்காய் நகர்ந்தான்.

இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, கான்பரன்ஸ் ரூமிற்கு விரைந்தனர்.இப்போது ஓவியா செல்வாவின் அருகில் அமராமல், சங்கர் அருகில் அமர்ந்துக் கொண்டாள். மனதில் கவலையிருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான் செல்வா.

சிறிது நேரம் கழித்து ஓவியாவை கவனித்தவன் முகத்தில் குழப்பம். அவள் இருக்கைகளில் நெளிந்து கொண்டிருந்தாள். என்ன நினைத்தாளோ சட்டென்று எழுந்து வெளியில் சென்றாள். இருப்புக் கொள்ளவில்லை செல்வாவிற்கு. ஐந்து நிமிடம்... பத்து நிமிடமாகியும் ஓவியா உள்ளே வரவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாய் வெளியே சென்றான். வாசலிலேயே அவள் கையில் செல்போனுடன் தவிப்பாய் நின்று கொண்டிருந்தாள். அவளின் கலவரம் பார்த்தவன் அவளருகில் விரைந்தான்.

‘என்னாச்சு ஓவியா...?’

அவன் குரலில் பதட்டம் இருந்தது.

‘ரூமுக்கு போகணும், டிரைவர் போன் நம்பர் உங்ககிட்டதான் இருக்கு’

‘என்னாச்சு உடம்புக்கு ஏதாவது’ என்றவன் தன்னிச்சையாக அவள் நெற்றியில் கை வைத்தான். ஷாக்கடித்ததைப் போல் இருந்தது ஓவியாவிற்கு உடனே இரண்டடி பின்வாங்கினாள். தான் செய்தது அப்போதுதான் செல்வாவிற்கு புரிந்தது.

‘சாரி ஓவியா...’தலை கவிழ்ந்தான்.

‘ரூம்ல ஏதாவது விட்டுடீங்களா?’

‘இல்ல... அது.. வந்து.. வயித்து வலிதான்...’ மென்று விழுங்கினாள்.

உடனே டிரைவருக்கு போன் செய்து வரச் செய்தான்.

‘நானும் உங்க கூட வரட்டுமா ஓவியா?’ அக்கறையாய் கேட்டான்.

‘இல்ல... வேண்டாம், நீங்க இருந்து டாக்குமெண்ட் வாங்கிட்டு வந்துடுங்க. ஏதாவது சந்தேகமிருந்தால் நாளைக்கு கேட்டுக்கிறேன்...’

‘சரி ஓவியா..’ ’என்றவன் அவளை வழியனுப்பினான்.

‘என்ன மனிதன் இவன். இவனை புரிந்து கொள்ளவே முடியவில்லையே.. நான் பதற்றமாக இருந்ததும் அவன் முகத்தில் தெரிந்த கவலை பொய்யில்லையே.. பெண்களைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவன் போலும். இது என்ன மனம்? நேற்று வரை அவனைக் கண்டாலே கொதித்தது உள்ளம்.. இப்போது அவனுக்கு சிபாரிசு செய்கிறதே? ஒருவேளை அவன் என் இதயத்தில் நுழைகிறானோ? கூடாது.. அந்த நினைப்பை உடனே அழிக்க வேண்டும். என் தந்தையைக் கொன்றவன் மீது என்ன கரிசனம்?’

இப்படி பல எண்ணங்களில் உழன்று கொண்டிருந்தது ஓவியாவின் உள்ளம்.

ரூமிற்கு சென்று குளித்து முடித்தவளுக்கு உறக்கமும் வர மறுத்தது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,067
Reaction score
80
Points
48
10

இரவு 8.30 மணிக்குத்தான் செல்வா ரூமிற்குள் நுழைந்தான். அவனுடன் சங்கரும் இருந்தான். முதலில் பேசியவன் சங்கர் தான்.

‘என்ன ஓவியா ஃபீவர் இப்போ பரவாயில்லையா?’

செல்வாவைப் பார்த்துக் கொண்டே, ‘ம்..பரவாயில்லை..’என்று மழுப்பினாள்.

‘டின்னர் சாப்பிட்டாச்சா?’

‘இல்ல சங்கர்.. இனிமேதான். கீழே போய் சாப்பிடனும்...’

‘நாங்க அங்கேயே சாப்பிட்டோம் ஓவியா...’

‘அப்படியா... நீங்க போய் உங்க ரூம்ல படுத்துக்குங்க... நான் போய் சாப்பிட்டு வந்து படுத்துக்கிறேன்...’

‘செல்வா நீங்க சரியா சாப்பிடலையே... சும்மா ஓவியா கூட போய் ஒரு பால் குடிச்சிட்டு வந்து படுத்தாத்தான் தூக்கம் வரும். நான் கிளம்புறேன். குட் நைட்...’ சங்கர் சென்று விட்டான்.

டாக்குமெண்ட்ஸ் அவளிடம் கொடுத்தவன் ‘வாங்க ஓவியா சாப்பிட்டு வரலாம்’

அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே சென்றான்.

வேறு வழியின்றி அவனைப் பின் தொடர்ந்தாள்.

மிதமான குளிரிலும் சன்னமான வெளிச்சத்திலும் இருந்த அந்த உணவறையை, கண்களால் நோட்டமிட்ட செல்வா, ஒதுக்குப்புறமாக இருந்த இருக்கையில் அமர்ந்தான். அவளும் அவன் எதிரில் அமர்ந்தாள். பேரர் வந்து நின்றான்.

‘என்ன சாப்பிடறீங்க ஓவியா...’

ஒரு பிளேட் இட்லி போதும்...’

‘இங்க சுடற இட்லி ஒரு வாய்க்குகூட பத்தாது. இருங்க நானே ஆர்டர் பண்றேன்’

‘ரெண்டு செட் இட்லி, ஒரு பிளேட் பட்டர் நான். ஒரு பன்னீர் பட்டர் மசாலா, ஒரு பிளேட் சப்பாத்தி அவ்ளோதான். கொஞ்சம் சீக்கிரமா கொண்டு வாங்க...’

‘ஓகே சார்..’ பேரர் சென்றுவிட்டான்.

ஆர்டர் கொடுத்துவிட்டு, அங்குமிங்கும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்

‘ரொம்ப தேங்க்ஸ்..’ என்றவளின் குரல் அவனைக் கலைத்தது.

‘எதுக்கு இப்போ தேங்க்ஸ்...?’

‘சொல்லனும்னு தோணிச்சு..’

‘ஓகே..’ முடித்தவன் மறுபடியும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். செல்வா சொன்னதுபோல் அத்தனையும் சாப்பிட்டதும் தான் வயிறு நிரம்பியது.

ரூம் வாசலை அடைந்த இருவரும் ஒரே சமயத்தில் திரும்பி சினேகமாய் புன்னகைத்துவிட்டு அறைக்குள் சென்றனர்.

அறைக்குள் நுழைந்த செல்வாவிற்கு குத்தாட்டம் போடவேண்டும் போல் இருந்தது. இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமென்று கனவிலும் நினைக்கவில்லை. ஓவியாவுடன் மூன்று நாட்கள்.. அவன் வாழ்வின் பொன்னான நேரம். அதிலும் இப்போது அவளின் சினம் சற்று தணிந்திருப்பது போல்தான் தோன்றுகிறது. மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தான். எப்போது உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.

ஓவியாவின் மனமோ அவளைத் துளைத்தெடுத்துவிட்டது. மறக்க வேண்டுமென்று நினைக்கும் போதெல்லாம் அவன் முகமே மனதில் தோன்றியது. அவனின் கம்பீரத்தையும், பரந்த தோள்களையும், நேர் பார்வையையும் புகழ்ந்து தள்ளியது. இது என்ன அவஸ்த்தை என்று புரண்டு கொண்டிருந்தவளை உறக்கம் மெல்லத் தழுவியது.

காலிங் பெல் அலறியது. தூக்கிவாரிப் போட்டு எழுந்தான் செல்வா. கதவை திறந்தவன் புன்னகை முகத்துடன் நின்ற ஓவியாவைப் பார்த்ததும் கண்களை அகல விரித்தான். தலை குளித்து லூஸ்ஹேர் விட்டிருந்தாள். பச்சை நிறக் காட்டன் சில்க் சாரியில் அழகுப் பதுமையாக விளங்கினாள். ஒரு நிமிடம் கிறங்கினான்.

உடனே சுதாரித்தவன், ‘என்ன ஓவியா, டைம் ஆயிடுச்சா... இதோ குளிச்சிட்டு வந்துடறேன்...’

பதறிய செல்வாவை இடைமறித்தாள். ‘டைம் ஆகலை செல்வா. காலையில் சீக்கிரம் எழுந்து டாக்குமென்ட்ஸ் வெரிபை பண்ணினேன். ரொம்ப பசிக்குது. வாங்களேன் காபி குடிச்சிட்டு வரலாம்’

‘இதோ டூ மினிட்ஸ்..உள்ள வந்து உட்காருங்க. பிரஷ் பண்ணிட்டு வந்திடுறேன்..’ அவளை ஒரு சேரில் அமர வைத்துவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

அவன் அறையை மெல்ல ஆராய்ந்தாள். பெரிய கிங் சைஸ் கட்டில், அதில் வெள்ளை மெத்தை விரிப்பு. இரண்டு தலையணை இரண்டு போர்வைகள். ஒன்று மடிப்பு கலையாமலிருந்தது. இன்னொன்று சுருட்டிப் போடப்பட்டிருந்தது. அதை இரவு போத்தியிருப்பான் போலும், தலைமாட்டில் ஒரு புத்தகம் கண்ணில்பட்டது. அதனருகில் சென்று பார்த்தாள். ‘டாவின்சி கோட்’ என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது. ஆர்வத்தில் அதை கைகளில் எடுத்தாள். பாதி புக்கிற்குள் ஒரு புக்மார்க் இருந்தது. அந்தப் பக்கத்தைப் பிரித்தாள். கொட்டை, கொட்டையான எழுத்துகளில் ஓவியா என்று எழுதபட்டிருந்ததைப் பார்த்ததும் முதலில் வெட்கப்பட்டவளின் முகம், பின்பு மெல்ல இறுகியது. எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அமர்ந்து கொண்டாள். அதன் பிறகு மனம் எதிலும் அதிகமாக செல்லவில்லை.

பதினைந்து நிமிடத்தில் குளித்து முடித்து வெளியே வந்தான். ’ஒரு டூ மினிட்ஸ் ஓவியா’ என்றவனை ஏறிட்டவள். அவனின் கம்பீரத்தில் தடுமாறத்தான் செய்தாள். சட்டென்று எழுந்தவள் ‘நான் வெளில இருக்கேன் செல்வா. நீங்க ட்ரெஸ் பண்ணிட்டு வாங்க. அதுக்குள்ள முடிஞ்சா சங்கரையும் கூப்பிடறேன்...’ பேசிக் கொண்டே வெளியே சென்றுவிட்டாள்.

பெண்களின் முகமலர்ச்சிக்கும், முக சுருக்கத்திற்கும் காரணம் கூற நம்மை படைத்த கடவுளாலும் முடியாத காரியம்தான் எனும்போது. இந்த செல்வாவால் மட்டும் எப்படி முடியும்? பாவம் ஓவியாவின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாமல் அவஸ்த்தைப் பட்டான்.

ஓவியாவிற்கு அதிக வேலை வைக்காமல் எதிர்ப்பட்டான் சங்கர். அவளை ஒரு முறை பார்த்தவன். ‘ஹாய்.. ஓவியா.. யூ ஆர் லூகிங் சோ கிரேட்.. என்ன செல்வா எழுந்துட்டாரா?’

‘ம்.. ட்ரெஸ் பண்றார்..’

‘அதுக்குள்ள கிளம்பிட்டீங்க.. மணி 8 தானே ஆகுது. 10 மணிக்கு தானே கான்பிரன்ஸ்?’

‘இல்ல.. காபி குடிக்க கீழே போகலாம்னு.. அடுத்து உங்களைக் கூப்பிடத்தான் ரூமைத் தேடினேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க..’

‘ஓ .. போகலாமே..’ என்று சங்கர் கூறவும் செல்வா வெளியே வரவும் சரியாக இருந்தது. மூவரும் ரெஸ்டாரெண்டை நோக்கி நடந்தனர்.
 

Latest posts

New Threads

Top Bottom