Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பண்ணையார் தோட்டம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
பரந்தாமன் ஆவேச குரலில் அவளை கொன்று விடுங்கள் என்று தனது தம்பிகள் இடம் சொன்னான்.


ரேகா பரந்தாமனை பார்த்தாள் .... இதுவரைக்கும் அவள் பரந்தாமனை இப்படி வெறி பிடித்தவன் போல் அவள் பார்த்ததேயில்லை விழிப்போடு பார்த்தாள். அப்போது ரேகாவுக்கு பரந்தாமனின் சொல் அவள் மனதில் ஆழமாக பதிந்தது.

அப்படியென்றால் இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்மை சாகடிக்க போகிறார்கள் . ஐயையோ இனி நம்மால் இங்கிருந்து தப்பிக்க முடியாது என்று நினைத்து ரேகா சிலையாக நின்றாள்.

அண்ணன் இவளை பயமுறுத்தி மிரட்டிவிட்டு அனுப்பி விடுவார் என்று பார்த்தால் . கொன்று விடுங்கள் என்று சொல்கிறாரே என்று நினைத்து சந்திரனும் தீனாவும் சற்று பயத்தோடும் ரேகாவின் கைகளை பிடித்தபடி யோசித்தார்கள்.

உன் தங்கச்சி பத்தி மட்டும் விசாரிக்கிறியே.
உன் ஊரிலிருந்து இன்னொரு குடும்பமும் என் ஊரில் தான் இருக்கிறார்கள் .
அவர்களை பற்றி நீ கேட்கவே இல்லையே என்று அந்த தேன் வியாபாரி பெரியவர் சொன்னதை நினைத்து சங்கர் சந்தோஷப்பட்டான் .
இப்படி இரண்டு குடும்பமும் ஒரே சமயத்தில் கிடைப்பார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க வில்லையே .
கடவுள் நமக்கு பக்கபலமாக இருக்கிறார் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தான் சங்கர் ...

பரந்தாமன் கிணற்றுத் தடுப்பு சுவர் பக்கத்தில் நின்றுகொண்டு பார்த்தான் ரேகா பயத்தில் சிலையாக நின்றாள் . சந்திரனும் தீனாவும் குழப்பத்தோடு கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றிருப்பதை.

பிறகு பரந்தாமன் திரும்பி கிணற்றை பார்த்தபடியே யோசித்தான் . தம்பிகள் அவளை கொள்வதற்கு பயப்படுகிறார்கள் என்ன செய்யலாம் என்று யோசித்தான் . ரேகாவை விட்டுவிட்டால் அவள் சமயம் பார்த்து நம் ரகசியத்தை சங்கரிடம் சொல்லிவிடுவாள் அதனால் அவளை இன்று கொன்றுவிட்டால் நம் ரகசியங்கள் அவளோடு போய்விடும் வேறு யாருக்கும் தெரியாது . இவனை கொன்று நமது கரும்புத் தோட்டத்தில் புதைத்து விடலாம் . சங்கர் வந்து கேட்டாள் . உன் மனைவி காலையில் ஊருக்குள்ளே போனவள் இன்னும் வரவில்லை என்று சொல்லிவிடலாம் .
பிறகு சங்கரும் மனைவியை தேடுவான் . அதனால் அவன் காணாமல் போனவர்களை தேடுவதை நிறுத்தி விடுவான் மற்ற பிரச்சனையை சமாளித்துவடலாம் இல்லை என்றால் இனி நாம் போட்ட திட்டமெல்லாம் வீணாகப் போய்விடும் . இனி இவளை உயிரோடு விடக்கூடாது என்று முடிவு செய்தான் .
பிறகு ஆவேசமாக மீண்டும் அவர்களை பார்த்து .
தம்பி அவளை கொன்று விடுங்கள் வேறு வழியில்லை என்று கத்தினான் பரந்தாமன்.

பீதியில் நடுங்கினாள் ரேகா .....
நாம் இறந்து விட்டால் நம் கணவன் தனியாக எப்படி இருப்பாரோ என்று நினைத்து கவலைப்பட்டால் ரேகா ஒரு நாள் பிரிந்து இருந்தால்கூட அவரால் தாங்க முடியாது
இனி எப்படி இருக்கப் போகிறாரோ தெரியவில்லையே என்று நினைத்து கதறிக் கதறி அழுதாள் ரேகா. நம் அம்மா நம் தாத்தா எல்லோரும் கவலையில் நொந்து போவார்களே அவர்களால் இதை தாங்க முடியுமா என்று நினைத்து
அழுதாள்.

சந்திரனுக்கும் தீனாவுக்கும் ரேகாவை கொள்ளுவதற்கு மனமில்லை . அதேசமயம் அண்ணனின் வார்த்தையும் மீற முடியாமல் தவித்தார்கள் .
ரேகா கதறிக் கதறி அழுவதை பார்த்து மனம் நொந்து போனான் சந்திரனும் தீனாவும் .

அப்போது இருவரும் நினைத்துப் பார்த்தார்கள் ....
முதல் முதலில் அந்தப் பெரியவரின் மருமகளை கற்பழித்தது ....
அப்போது அவள் இதேபோல கெஞ்சிக் கொண்டு கதறிக் கதறி அழுதாள் .
அடுத்தபடியாக கனகா இதேபோல இரு கைகளால் கும்பிட்டு நம் காலில் விழுந்து அழுதாள் என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினாள். இப்போது ரேகா அதேபோல கெஞ்சுவதை பார்த்து சந்திரனுக்கும் தீனாவுக்கும் தர்மசங்கடமாக இருந்தது .
அந்த பெரியவரின் மருமகளை கெடுக்கும் பொழுதும் ....
கனகாவை கெடுக்கும்போதும் .... இருவரும் குடித்துவிட்டு போதையில் இருந்தார்கள் அப்போது அவர்கள் கெஞ்சி அழுததை அவர்கள் மனம் ஏற்கவில்லை .
காமம்தான் பெரியது என்று நினைத்து தவறு செய்து விட்டார்கள் ஆனால் இப்போது நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து . குடிப்பழக்கத்தை விட்டு விட்டார்கள் .
ஆனால் அண்ணன் ரேகாவை கொன்றுவிடுங்கள் என்று சொல்கிறாரே என்று நினைத்து இருவரும் தர்மசங்கடத்தில் தவித்தார்கள் .
இறக்கப் படுவதா இல்லை அண்ணனின் பேச்சைக் கேட்பத என்று தவித்தார்கள் இருவரும்.


ஐயா நான் என்ன தவறு செய்தேன் என்னை கொள்ளாதீங்க .
என்னை பிரிந்து என் மாமாவால் இருக்க முடியாது .
என்னை விட்டு விடுங்கள் ஐயா என்று அழுதபடியே பரந்தாமனிடம் கேட்டாள் ரேகா.


நாங்கள் பேச ஆரம்பிக்கும்போதே நீ உள்ளே இருப்பதை சொல்லியிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்து இருக்காது ஆனால் நீ வேண்டுமென்றே நாங்கள் பேசுவதை கேட்டு இருந்தாயே . அப்படியெனறால் எங்களை காட்டிக் கொடுப்பதற்கு தானே நீ அமைதியாக இருந்தாய் என்று ஆவேசமாக சொன்னான் பரந்தாமன்.

நான் செய்தது தவறுதான் என்னை விட்டு விடுங்கள் ஐயா .
அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா எனக்கு என்று கெஞ்சினாள் ரேகா.

அண்ணனின் ஆவேச குரலும் முரட்டுத்தனமான பார்வையும் பார்த்து . சந்திரனும் தீனாவும் அதிர்ந்து போனார்கள்.

தம்பி இன்னும் சிறிது நேரத்தில் சங்கர் வந்துவடுவான் அதனால் இவளை கொன்றுவிடுங்கள் என்று பரந்தாமன் சொன்னான்.

அண்ணா என்னை கொல்லாதீர்கள் நான் ஒரு பாவமும் செய்யவில்லை நீங்களாவது உங்கள் அண்ணனிடம் எடுத்துச் சொல்லுங்களேன் என்று கதறினாள் ரேகா.


ரேகாவை சாகடிப்பதற்கு மனமில்லை சந்திரனுக்கும் தீனாவுக்கும் தரையைப் பார்த்தபடியே ரேகாவின் கைகளை பிடித்து இருந்தார்கள் .
ரேகாவும் கைகளை விம்மிக் கொண்டே இருந்தாள்.

ரேகாவை சாகடிப்பதற்கு தம்பிகள் தயங்குகிறார்கள.
இல்லை பயப்படுகிறார்கள
என்று பரந்தாமன் யோசித்தான் தம்பிகள் சிலையாக நிற்பதைப் பார்த்து.


ஒரு முடிவுக்கு வந்தான் பரந்தாமன்....

நீங்கள் இந்த ரேகாவை சாகடிக்க வில்லை என்றால் .
உன் அண்ணனை நீங்கள் உயிரோடு பார்க்க முடியாது ஏனென்றால் இவளை உயிரோடு விட்டு விட்டால் .
அது நமக்குத்தான் பெரிய சிக்கல் ஒருவேளை அவள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்னை காட்டிக் கொடுத்துவிட்டாள் .
அன்று முதல் உன் அண்ணனை நீங்கள் உயிரோடு பார்க்க முடியாது அதனால் இப்போது இவளை கொன்றுவிடுங்கள் தம்பி
இல்லை என்றால் என் மரணத்தை நீங்கள் இருவரும் பார்க்க வேண்டியது இருக்கும் ..
என்று உருக்கமாக சொன்னான் பரந்தாமன்.

அண்ணனின் பேச்சைக் கேட்டதும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் என்ன செய்வது என்று தவித்தார்கள் ஒருபுறம் ரேகா கைகளை விம்பிகொண்டே அழுதபடி கெஞ்சினாள் .
மற்றொருபுறம்.. அண்ணன் இறந்து விடுவேன் என்று கூறுகிறாரே என்று நினைத்து.
இருவரும் என்ன செய்வது என்று தவித்தார்கள்.

அப்போது தீனா ரேகாவின் கைகளை விட்டுவிட்டான்.

உடனே சந்திரன் .... தீனா விட்ட கையை சந்திரன் பிடித்துக்கொண்டான்.

ரேகாவின் இரு கைகளையும் சந்திரன் பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான் ரேகாவின் முகம் பார்ப்பதற்கு அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது .
பாவம் இப்படி நம்மிடம் மாற்றிக் கொண்டாலே என்று நினைத்து வருத்தப்பட்டான் சந்திரன்.

தீனா ரேகாவின் கைகளை விட்டுவிட்டு மௌனமாக திரும்பிக்கொண்டு நின்றிருப்பதை பார்த்த பரந்தாமனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது
இவ்வளவு சொல்லியும் அவளை சாகடிப்பதற்கு தயங்குகிறார்கள் என்று நினைத்து யோசித்தான் பரந்தாமன்.

ரேகா சந்திரனின் முகத்தை பார்த்தபடியே அழுதுக்கொண்டே என்னை விட்டு விடு ஐயா என்று அழுதுகொண்டே கெஞ்சினாள் .... சந்திரனும் கண்களை மூடிக்கொண்டு என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தான் ...

பரந்தாமன் ...தம்பிகள் என்ன சொல்லியும் அவளை சாகடிக்க தயங்குகிறார்களே என்று நினைத்து தரையைப் பார்த்துக் கொண்டே யோசித்தான் .

அப்போது தீனா ஒரு முடிவுக்கு வந்தான் ..ரேகாவை நாம் கொன்று விடலாம் என்று .
உடனே அந்த ரூம்பில் சுற்றும் முற்றும் பார்த்தான் .
அவன் கண்களுக்கு ஒரு மண்வெட்டியும் ஒரு பெரிய ஐந்தடி கடப்பாரையும் அவன் கண்களுக்கு தென்பட்டது .உடனே சிறிதும் தயங்காமல் கடப்பாறையை எடுத்து ரேகாவுக்கு தெரியாமலே பின்பக்கமாக முதுகில் குத்தினான்...
கடப்பாரை முதுகில் குத்தி வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தது..

ரேகா அதிர்ந்து போனாள் அவள் மூச்சு விக்கியது அப்படியே தள்ளாடினாள் ரேகா.

ரேகாவின் மூச்சு விக்கியதை உணர்ந்த சந்திரன் .
உடனே கண் திறந்து பார்த்தான் ரேகாவின் வயிற்றை கடப்பாரை கிழித்துக் கொண்டு வெளியே வந்து இருப்பதை பார்த்து அதிர்ந்து போனான் சந்திரன் ..
ரேகாவின் பின்பக்கமாக கடப்பாறையை பிடித்தபடி கொடூரமானவன் போலவே தீனா நின்றிருப்பதை பார்த்து சந்திரன் அதிர்ந்து போனான் ..
உடனே பயத்தில் ரேகாவின் கைகளை விட்டுவிட்டு சிறிது விலகி நின்றான் சந்திரன்.

கடப்பாரை ரேகாவின் முதுகில் குத்தி வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்திருப்பதை பார்த்த பரந்தாமனுக்கு கை கால் நடுங்கியது ..
முதல் முறை கொலை செய்ததை பார்த்ததும்.

தீனா ரேகாவின் முதுகில் குத்திய கடப்பாறையை பிடுங்கினான்.

அப்போது ரேகாவின் கடைசி மூச்சு விக்கியது ..
அவள் கண்களில் சங்கர் தெரிந்தான்.
அப்போது ரேகாவின் உள்மனசு சொன்னது... மாமா என்னை மன்னித்துவிடு உன்னை விட்டு விட்டு போகிறேன் என்று கண்களை திறந்தபடி ..பனைமரம் சாய்வது போல
கீழே விழுந்தாள் ரேகா. அப்போது
சங்கருக்காக செய்து வைத்திருந்த நண்டு குழம்பு ..ரேகாவின் கை பட்டு கீழே கொட்டியது.

ரேகாவின் உயிர் துடித்தது கால்களை உதைத்தாள்.

ரேகா.. துடி துடிப்பதை பார்த்த சந்திரனுக்கும் தீனாவுக்கும் மனம் உடைந்து போனது
இருவரும் கட்டியணைத்துக் கொண்டு கதறிக் கதறி அழுக ஆரம்பித்து விட்டார்கள் இருவரும்.

அவசரப்பட்டு விட்டியே தம்பி என்று சந்திரன் அழுதுகொண்டே சொன்னான்..

என்னை மன்னித்துவிடு அண்ணா எனக்கு வேறு வழி தெரியவில்லை நீங்கள் இரண்டு பேரும் எனக்கு இரண்டு கண்கள் போல இதில் ஒரு கண் இல்லை என்றாலும் என்னால் வாழ முடியாது அண்ணா அதனால்தான் நான் ரேகாவை கொன்று விட்டேன் அண்ணா.
என்று சந்திரனை கட்டியணைத்தபடி அழுதுகொண்டே சொன்னான் தீனா.

பரந்தாமன் அதிர்ந்துபோய் நின்றிருந்தவன் ..
தம்பிகள் அழுவதைப் பார்த்து வருத்தப்பட்டான் ..
நம் செய்தது சரிதான என்று .
பிறகு அவனும் சந்திரனை தீனாவையும் கட்டி அணத்துக் கொண்டு அழுதான் .
என்னை மன்னித்து விடுங்கள் தம்பி என்று சொல்லிக்கொண்டே.

மூவரும் அழுதுகொண்டிருந்தார்கள் அப்போது துடிதுடித்து கொண்டிருந்த .
ரேகாவின் உயிர் ..ஒரு பெரிய விக்கலோடு நின்றுவிட்டது மூச்சு.

ரேகாவின் கடைசி விக்கல் ... மூவரின் காதில் விழுந்தது அழுதுகொண்டிருந்த மூவரும் ரேகாவை பார்த்தார்கள் ரேகா பிணமாக கிடந்தால் ரத்தவெள்ளத்தில்.

தம்பி ....நடந்தது நடந்து போச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல சங்கர் வந்துவிடுவான் .அதனால ரேகாவை நம்ம கரும்புத் தோட்டத்திலே . குழிதோண்டி
புதைச்சுடலாம் வாங்க என்று தம்பிகளிடம் சொன்னான் பரந்தாமன்...

கண்களை துடைத்துக்கொண்டு சந்திரனும் தீனாவும் ரேகாவை தூக்குவதற்காக பம்புசெட் உள்ளே சென்றார்கள் ..
அப்போது ரேகாவின் மீது நண்டு குழம்பு ஊற்றி அலங்கோலமாக இருந்தாள் பிணமாக .
வயிற்றில் இருந்து நிறைய ரத்தம் கீழே பாய்ந்தது .. இதை பார்த்ததும் மேலும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது ..
இப்படி தப்பு மேல .
தப்பு செய்கிறோம் கடவுள் நம்மை சும்மா விடமாட்டார் என்று நினைத்துக் கொண்டார்கள் இருவரும் ..

பிறகு தீனா ரேகாவை தூக்கி தனது தோள் மேலே போட்டுக்கொண்டான்.

ரேகாவை தோள் மேலே தூக்கிக்கொண்டு தீனா முன்னே செல்ல ..
பின்னால் சந்திரன் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு சென்றான் பரந்தாமன் தம்பிகள் பின்னாடியே சுற்றும் முற்றும் பார்த்தபடியே பயந்துகொண்டே சென்றான் கரும்புத் தோட்டத்தை நோக்கி.

அப்போது பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது எதிரே சங்கர் நடந்து வருவதை பார்த்து.


தம்பி நில்லுங்க..... சங்கர் எதிரே வருகிறான் என்று தம்பிகளிடம் பயத்தோடு சொன்னான் பரந்தாமன்.

தூரத்தில் சங்கர் வருவதை பார்த்த சந்திரனுக்கும் தீனாவுக்கும் பரந்தாமனுக்கும். தலை சுற்றியது வகையாக மாட்டிக்கொண்டோம் கடவுள் நமக்கு இன்றே தண்டனை கொடுத்து விட்டார் .
என்று நினைத்து பயத்தில் என்ன செய்வது என்று குழம்பினார்கள் மூவரும்.

பிணமாக ...ரேகாவை தோள் மேலே வைத்திருக்கும் தீனாவுக்கு என்ன செய்வது என்று முழித்தான் .
கீழே இறக்கி வைத்துவிட்டு .
ஓடி விடலாமா இல்லை என்ன செய்வது என்று தவித்தான் தீனா.

சங்கர் வேகமாக நடந்து வருவதை பார்த்த மூவரும் ..
பயத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்..


தொடரும்........
 
Top Bottom