anuchandran
New member
- Messages
- 17
- Reaction score
- 18
- Points
- 3
தாரகை 9
வஞ்சங்கள்
தீர்த்திட
கடமைகள்
நிறைவேற்றிட
பொறுப்புகள்
தாங்கிட
காலம் தாழ்த்துவதில்
நன்மைகள்
மறுக்கப்படுகிறது.
நந்தவனத்திலிருந்து வெளியே வந்த நர்த்தகி நவநீதன் கூறிய மற்றைய இடத்தினை பார்க்கச்சென்றாள்.
அது ரத்ன மாளிகையின் பூஜையறை.
அவ்வறை மாளிகையின் மற்றைய இடங்களை விட சற்று பெரியது. அவ்விடத்தின் கட்டமைப்பே அங்கு வருபவர்களுக்கு மன அமைதியை கொடுத்திடும். அறையின் நடுவே எம்பெருமானின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க அச்சிலையை சுற்றி ஐம்பொன் விளக்குகளும் மணம் வீசும் மலர்மாலைகளும் சூழ்ந்திருந்தது.
ஒற்றைத்திரி தீபம், மூன்று திரி தீபம், ஐந்து திரி தீபம், ஒன்பது திரி தீபமென்று அனைத்து ரக தீபங்களும் அவ்வறையை அழகுபடுத்தியிருந்தன. மணம் பரப்பும் புஷ்பங்களும் வாசனைப்புகைகளும் அவ்விடத்தின் தெய்வீகத்தன்மையை மேலும் அதிகப்படுத்தியிருந்தது.
பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த எம்பெருமானை சுற்றி ஒரு செயற்கை தடாகம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் மீது ஆம்பல் மலர்கள் மிதந்தபடியிருக்க அது பார்ப்பவர்களுக்கு கண்ணுக்கினிய காட்சியாகியது. அத்தனை மலர்களிருந்த போதிலும் வில்வம் பச்சிலைகளுக்கே எம்பெருமானின் கழுத்தினினை அலங்கரிக்கும் வரம் கிட்டியிருந்தது.
பூஜையறையினுள் வந்த நர்த்தகி சாந்தமாய் வீற்றிருந்த எம்பெருமானின் திருவுருவத்தின் முன் கைகூப்பி நின்று அவரின் திருவுருவத்தை மனதினுள் நிறைத்துக்கொண்டாள்.
இந்த மாளிகையிலேயே அவள் மனம் அமைதியடையும் ஒரே இடம் இதுமட்டுமே.
முழுதாய் அமைதியை மட்டுமே தன்வசப்படுத்திய இவ்விடம் எத்தனை வேதனைகளையும் துளி கணத்தில் மறக்கடித்துவிட்டு மனதை தெளிவடையச்செய்யும்.
இன்றும் அவ்வமைதியை எதிர்பார்த்து கைகூப்பி நின்றவளின் மனதில் பல எண்ணங்கள்.
"ஆதிசங்கரரே யான் செய்யும் காரியங்கள் சரியா தவறாக என்ற குழப்பம் என் எண்ணங்களை உழற்றிக்கொண்டே இருக்கின்றது. மொத்த பிரபஞ்சத்தின் நன்மைக்காக என் உலகத்தாரை எதிர்க்கத்துணிந்துவிட்டேன். என்னை நம்பியவர்களுக்கு தீங்கு இழைத்திடும் துரோகச்செயலை செய்ய முன் வந்துவிட்டேன். இது சரியா தவறா என்ற குழப்பத்திற்கான பதிலை அறியாமல் என் மனம் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. என் குழப்பங்களுக்கு தம்மால் மட்டுமே விடைகொடுத்திட முடியும். சர்வ காலமும் அறிந்த தம்மால் மட்டுமே என் மனக்குழப்பத்தை நீக்கிட முடியும். என் வஞ்சத்தை தீர்க்கும் சந்தர்ப்பமாகவே இந்த செயலை செய்திட முன்வந்தேன். ஆனால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை தம் உடன்பிறவா சகோதரியாக நடத்தும் தேவியும் எனது இந்த செயலால் பாதிக்கப்பட்டு விடுவாரோ என்ற பயம் என்னை ஆட்டிப்படைக்கிறது. அவரின் நலம் பற்றிய எண்ணம் என்னுள் தயக்கத்தை ஏற்படுத்துகிறது. உலக நலனா தேவியின் நலனா என்று யோசிக்கும் சந்தர்ப்பத்தில் என் மனம் குழம்பி தவிக்கிறது. இந்த பேதையின் மனக்குழப்பங்களை தெளிவியுங்கள் நேசனே. தம் ஒருவரால் மட்டுமே என் மனக்குழப்பங்களுக்கு தீர்வளிக்க முடியும். எனக்கு சரியாதனொரு வழியை காட்டி அருள் புரிந்திடுங்கள்." என்று மனதினுள் வேண்டிக்கொண்டவள் தட்டிலிருந்த புஷ்பங்களை இருகைகளிலும் ஏந்தி அதனை எம்பெருமான் மீது தூவி வழிபட்டாள்.
தன் சிறு வழிபாட்டை முடித்துக்கொண்டவள் அவ்வுருவச்சிலையை கடந்து அதன் பின்புறம் சென்றாள்.
அங்கொரு இயற்கை தடாகமிருக்க அதனுள் வண்ண வண்ண மீனினங்கள் அங்குமிங்கும் நீந்தித்திரிந்தபடியிருந்தது. இயற்கையாய் அமைந்த தடாகத்தினை இறைவனின் தீர்த்தநீராக மாற்ற எண்ணிய அனாகதய வம்சத்தவர்கள் அத்தடகத்திற்கருகே எம்பெருமானின் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்ததை தொடர்ந்து அதனை பூஜையறையாக மாற்றியிருந்தனர்.
அது அறை என்றபோதிலும் அதன் கட்டமைப்பு திறந்தவெளி நந்தவனம் போலவே இருந்தது. இறைவனின் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடம் முழுதும் கூரை கொண்டு மூடப்பட்டிருக்க மீதியிடம் திறந்த வெளியாயிருந்தது.
திறந்தவெளியாயிருந்த காரணத்தினால் அந்த தடாகத்தின் மேற்பரப்பில் ஆதவனின் பொற்கிரகணங்களின் ஆதிக்கம் அதிகமாயிருந்தது.
அவ்விடத்தின் நளினத்தை மேலும் அதிகப்படுத்துவதற்காக அந்த தடாகத்தினை சுற்றி சற்று இடைவெளி விட்டு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த தடாகத்தினருகே செல்வதற்கு சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு. மற்றவர்கள் அந்த படிக்கட்டுக்களில் நின்றவாறு தான் பார்த்திட முடியும்.
அந்த தடாகத்தினை பார்த்தபடியே அதன் படிக்கட்டில் அமர்ந்த நர்த்தகி அந்த தடாகத்தின் ராஜகுமாரியாய் நடுவில் வீற்றிருந்த அந்த பெரிய ஆம்பல் மலரையும் அதனருகே மொட்டுவிடத்தொடங்கியிருந்த மற்றைய ஆம்பல் மொட்டுக்களையும் பார்த்தாள்.
சூரியனின் பொற்கிரணங்கள் அவற்றின் நளினத்தை ஓவியமாய் உணரச்செய்திட மிதந்தபடியே தண்ணீருடன் ஒன்றாது விலகி நிற்க நினைத்த அதன் இலைகளை பார்த்தவளுக்கு அவற்றின் இயல்பு விசித்திரமாக தான் இருந்தது.
முழுநேரமும் தண்ணீரின் மேற்பரப்பிலேயே மிதந்திருக்கும் ஆம்பல் இலையிற்கு தண்ணீரின் தீண்டலில் விருப்பமில்லை. ஆம்பலுடன் இருப்பதால் அதனால் தண்ணீரின் தீண்டலை தவிர்த்திட முடியவில்லை.
இதை யோசித்தவளுக்கு அப்போது தான் ஒரு விடயம் புரிந்தது. அவளுக்கும் மன்னர் அதுராதகனின் செயல்களில் உடன்பாடில்லை. ஆனால் தேவி மகதாயினிக்காக அவரின் நலன் பற்றி எண்ணுகிறாள். ஆனால் இதில் யாருக்கு பலன்? ஆம்பல் இலையின் பொறுமை ஆம்பல் மலர் இறைவனின் திருவடியை அடைய உதவுகிறது. ஆனால் நான் மன்னர் அதுராதகனின் நலன் பற்றி எண்ணுவது இந்த பிரபஞ்சத்திற்கு தீங்கினை மட்டுமே விளைவிக்கும். ஒருவரின் மகிழ்ச்சிக்காக மொத்த உலகினையும் துயரத்தில் ஆழ்த்திட வேண்டுமா?
"இல்லை... அது நான் என்னை சிருஷ்டித்தவருக்கு செய்யும் துரோகம். என் முடிவுகள் சரிதான். நான் நிகனியிற்கு உதவவேண்டும். மேற் பிரபஞ்சத்தை காத்திட என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்திட வேண்டும். இனி எந்த சந்தர்ப்பத்திலும் என் முடிவிலிருந்து பின்னடையக்கூடாது. என்னை மன்னித்து விடுங்கள் தேவி. அனைவரின் நன்மைக்காகவும் நான் இதை செய்துதான் ஆகவேண்டும். என்னை மன்னித்திடுங்கள் தேவி" என்று மனதினுள் நினைத்து கொண்டவள் அங்கிருந்து எழுந்து செல்ல நினைத்தாள்.
அப்போது நவநீதன் கூறியது நினைவு வர உடனேயே சுற்றும் முற்றும் ஆராய்ந்தாள்.
அங்கிருந்த ஒவ்வொரு மூலையையும் ஆராய்ந்தவளது கண்களுக்கு எதுவும் தென்படவில்லை.
அதனால் அவ்விடங்களை அணுகி ஆராய முடிவு செய்தாள். ஒவ்வொரு இடமாய் மிக கவனமாய் ஆராய்ந்தபடியே சுற்றி வந்தவளுக்கு எதுவும் புலப்படவில்லை.
அப்போது அவள் காலினை ஏதோ இடறிட அது என்னவென்று குனிந்து பார்த்தாள் நர்த்தகி. அது ஏதோ கல்லென்று நினைத்தவள் அதை பாதையிலிருந்து அகற்ற முயல அதுவோ அசைய மறுத்தது.
துணுக்குற்றவள் குனிந்து அது என்னவென்று ஆராய்ந்தாள். அது ஏதோ பொத்தான் போலிருக்க அதை அழுத்த முயன்ற அவளது முயற்சி தோல்வியில் முடிந்தது.
அவளால் அதனை எதுவும் செய்யமுடியாமலிருக்க அதன் அமைப்பை நன்றாக உற்று கவனித்தாள். ஆனால் அவளுக்கு என்ன செய்வதென்று புலப்படவில்லை.
இதை பற்றி நவநீதனுக்கு தெரியப்படுத்துவதென்று முடிவெடுத்தவள் அங்கிருந்து விரைந்து கிளம்பினாள்.
நேராக தன் இல்லத்திற்கு வந்தவள் தாமதியாது கீழ் தளத்திற்கு சென்றாள்.
அவளை எதிர்பார்த்திருந்த நவநீதன் அவளிடம்
"ஏதாவது தெரிஞ்சிதுங்களா?" என்று கேட்க
"என்னவானது நர்த்தி ஏதாவது அறிந்துகொண்டாயா?" என்று நிகனிகா கேட்க அவளை தொடர்ந்து பவித்ராவும் அதையே கேட்டாள்.
"சரியாக அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் நான் பார்த்தவற்றை அவ்வாறே கூறுகிறேன். தங்களுக்கு அதில் உபயோகமானதை குறித்துக் கொள்ளுங்கள்." என்று கூறிய நர்த்தகி தான் பார்த்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினாள்.
அவள் கூறிய அனைத்தையும் கவனமாக கேட்டு நவநீதனும் பவித்ராவும் குறித்துக்கொண்டனர்.
"அந்த நந்தவனம்?" என்று பவித்ரா கேட்க
"இன்றிரவு யாருமறியாமல் அதை பற்றி அறிந்து வருகிறேன்."என்று நர்த்தகி உறுதியளிக்க அப்போது நவநீதன்
"எனக்கு அந்த தடாகம் பக்கத்தில் நீங்க பார்த்தாக சொன்னது எப்படி இருந்ததுனு அங்க அடையாளத்தோடு தெளிவாக சொல்லமுடியுமா?" என்று நவநீதன் கேட்க நர்த்தகியும் தான் பார்த்த அனைத்தையும் தெளிவாக கூறினாள்.
அவள் கூறிய அனைத்தையும் குறித்து கொண்ட நவநீதன்
"நானும் பவியும் இதை பத்தி ஏதும் கண்டுபிடிக்க முடியிதானு பார்க்கிறோம். நீங்க அந்த நந்தவனத்துல உள்ள அந்த தடுக்கப்பட்ட பகுதியில் என்ன இருக்குனு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க." என்று கூற அதை ஏற்றுக்கொண்டாள் நர்த்தகி.
பின் நிகனிகாவிடம்
"நிகனி நான் இன்று மாளிகையில் தங்கிட வேண்டும். நீ இவர்களுக்கு தேவையானவற்றை கவனித்துக்கொண்டு கவனமாக இரு. யாரும் கதவை தட்டினால் திறந்துவிடாதே. கவனமாயிரு." என்றுவிட்டு நர்த்தகி அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து மாளிகைக்கு கிளம்பினாள்.
நர்த்தகி சென்றதும் நிகனிகா நவநீதனிடம்
"இந்த ரகசியபாதை தெரிந்து கொள்வதில் தாம் இத்தனை தீவிரம் காட்டுவது மாளிகையை உலவு பார்ப்பதற்காக மட்டுமல்ல என்று எனக்கு தோன்றுகிறது." என்று நிகனிகா நவநீதனின் எண்ணங்களை தெரிந்துகொண்டது போல் கேட்க திடுக்கிட்ட நவநீதன் அவளையே கூர்ந்து பார்த்தான்.
தன் எண்ணங்களை அவள் படித்துவிட்டாளா என்று சந்தேகித்தவன்
"நீங்க என்ன சொல்றீங்க?"
"தமக்கு ஆரிமாவின் திட்டங்களில் அத்தனை பிடிமானமில்லையென எண்ணுகிறேன். அதனால் தாம் புதுத்திட்டம் வகுக்க முற்படுகின்றீர்களென யான் எண்ணுகிறேன்." என்று கூற இப்போது நிஜமாகவே அதிர்ந்து போனான் நவநீதன்.
பவித்ராவும் நிகனிகா இதை இத்தனை விரைவில் கண்டறிவாளென்று நினைக்கவில்லை.
"இல்ல.. நீங்க ஏதோ தப்பாக.." என்று நவநீதன் ஏதோ விளக்கிட முயல மெலிதாய் புன்னகைத்த நிகனிகா
"தாம் பதட்டமடையவேண்டிய அவசியமில்லை. யான் ஆரிமாவை நம்புமளவிற்கு தங்களையும் நம்புகிறேன். தம்மை பாதுகாக்கும் பொறுப்பு என் வசமுள்ளது. தம் திட்டங்களுக்கு நான் என்னாலான உதவிகள் அனைத்தையும் செய்திடுவேன். அதனால் அடுத்து என்ன செய்வதென்று கூறிடுங்கள்." என்று கூற நவநீதன் சற்று தயங்கியபடியே
"நான் சில உண்மைகளை உங்ககிட்ட சொல்லனும். ஆனா நீங்க அதை எப்படி எடுத்துப்பீங்கனு தெரியல. எனக்கு ஆரிமா சொன்ன எந்த விஷயத்துலயும் நம்பிக்கை வரல. ஏதோ தப்பு இருக்கிறதாக மனசுல உறுத்திட்டே இருக்கு. அதனால் அவங்க சொன்னபடி மாளிகைக்கு போகக்கூடாதுனு முடிவு பண்ணேன். அதுக்காக தான் ஏதேதோ காரணம் சொல்லி வெளியே தங்கலாம்னு சொன்னேன். நீங்களும் ஒத்துக்கிட்டீங்க. புது திட்டத்தை வகுக்கிறதுக்கு முதல்ல மாளிகையை பத்தி தெரிஞ்சிக்கனும்னு நினைச்சேன். அதை பத்தி தெரிஞ்சிக்கிட்டா புது திட்டம் வகுக்க இலகுவாக இருக்கும்னு நினைச்சேன். மாளிகைக்குள்ள போனா அந்த கல்லோட இருப்பிடம் பற்றி தெரியவரும்னு சொன்னாங்க. ஆனா அது எவ்வளவு தூரத்துக்கு நடைமுறைக்கு சாத்தியம்னு தெரியலை. இப்படி ஆரிமா சொன்ன எந்த திட்டத்திலும் ஒரு தெளிவு இல்லை. அதனால் தான் நாங்க ஒரு புது திட்டம் போடனும்னு நினைச்சேன். ப்ரவீன் ஆகாஷிடம் கூட பார்த்து நிதானமாக நடந்துக்க சொன்னேன். அவங்க அந்த மாமுனிகளிடம் சீடர்களாக சேர்ந்தா மற்றைய கல்லோட இருப்பிடம் பற்றி தெரிஞ்சிக்கலாம்னு சொன்னாங்க. இத்தனை முக்கியமான இந்த இரண்டு கற்களை பற்றி ரொம்ப சீக்கிரம் தெரிஞ்சிக்கிறது அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஆரிமா நாங்க என்ன செய்யனும்னு சொன்னாங்களே தவிர முழு திட்டத்தையும் எங்களுக்கு தெரியப்படுத்தல." என்று நவநீதன் நிதர்சனத்தை கூற நிகனிகாவிற்கும் அவன் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்துதானிருந்தது.
அவள் மனதிலும் இந்த எண்ணங்களிருந்ததை அவளால் மறுக்கமுடியாது.
இத்தனை சிரமப்பட்டு நவநீதனையும் அவனது நட்புக்களையும் அழைத்து வந்த நிகனிகாவிடம் கூட ஆரிமா எதையும் விளக்கமாய் கூறிடவில்லை.
அவ்விரண்டு கற்களை தேடிக்கண்டுபிடித்தால் நெருப்புவளையத்தின் சக்தியை அதிகப்படுத்திலாமென்றும் அது மத்யுக உலகின் இரண்டு துருவங்களில் இருப்பதாகவும் அதை தேடிக் கண்டுபிடித்து நெருப்பு வளையத்தின் சக்தியை உடைப்பதற்காக நடாத்தப்படும் யாகதீயில் சமர்ப்பித்துவிட்டால் அனைத்தும் சரியாகிவிடுமென்று மட்டுமே கூறியிருந்தார்.
அந்த கற்களின் இருப்பிடம் அவையே வெளிப்படுத்திட வேண்டும். அவற்றின் வரவினை தூண்டிடவேண்டுமாயின் அவற்றிற்கான தேடுதல் ஆரம்பித்திருக்க வேண்டும். இறை தூதர்களால் உருவாக்கப்பட்ட அந்த கற்களை இறைதூதர் வம்சாவளியினரால் மட்டுமே நெருங்கிட முடியும். அவர்களை அக்கற்கள் உணரும் பட்சத்தில் அவை வெளிப்பட்டு அவர்கள் வசமாகுமென்று கூறியிருந்தார்.
அவரின் யாக பலத்தின் உதவியால் ஒரு கல் மகாமுனி ஒருவரின் வழிகாட்டுதலினூடாக அடையப்படுமென்றும் மற்றொன்று மாளிகையில் வீற்றிருக்கும் எம்பெருமானின் ஆசியால் வெளிப்படுமென்றும் அறிந்துகொண்டதாக கூறினார்.
அதனாலேயே ஒரு குழுவை யாகம் நடைபெறும் இடத்திற்கும் மற்றைய குழுவை மாளிகைக்கும் செல்லுமாறு கூறினார்.
இதையெல்லாம் யோசித்து பார்த்த நிகனிகாவிற்கும் ஆரிமா எதையோ மறைக்கிறாறென்றே தோன்றியது.
ஆனால் இந்த திட்டத்திற்கு அடித்தளமிட்டவர் அவரே என்பதால் அவளால் அவரை சந்தேகிக்கமுடியவில்லை.
"தம் எண்ணங்கள் எனக்கு புரிகிறது. தங்களுக்கு எது உசிதமென்று படுகின்றதோ அதன் படியே செய்யலாம். யான் அறிந்தவற்றை பற்றி தங்களுக்கு தெரிவிக்கிறேன். ஆரிமாவிற்கு புதுத்திட்டங்கள் பற்றி எதுவும் தெரியவேண்டாம். ஆரிமாவை நான் சமாளித்துக்கொள்கிறேன். தாங்கள் அடுத்து என்ன செய்திட வேண்டுமென்பதை கூறிடுங்கள்."
"ரொம்ப நன்றிங்க. மாளிகையோட உள்ளமைப்பை பற்றி தெரிஞ்சிக்க தான் அதை பற்றிய குறிப்புகளை சேகரிச்சேன். இத்தனை நேரம் சேகரித்த விஷயங்களில் மாளிகையோட எல்லா இடங்களையும் தெரிஞ்சிக்கிட்டோம். இப்போ உள்ள நுழையனும். ஆனா அந்த கல் கைவசம் வந்ததும் நாம அங்கேயிருந்து ரகசிய பாதையினூடாக வெளியே வரனும். அந்த கல்லை பற்றி ஆரிமாவுக்கு தெரிஞ்சிருக்குனா நிச்சயம் அதை பற்றி அதுராதகனுக்கும் தெரிஞ்சிருக்கனும். இவ்வளவு பெரிய யாகத்தை நடத்தனும்னு முடிவு பண்ணவரு அதுக்கு வரக்கூடிய தடைகள் என்னனு நிச்சயம் தெரிஞ்சு வச்சிருப்பாரு. என்னோட யூகம் சரினா அவருக்கும் இது பற்றி தெரிஞ்சிருக்கனும். அதனால் அரண்மனையில் உள் பாதுகாப்பு ரொம்ப அதிகமா இருக்கனும்." என்று நவநீதன் கூற பவித்ராவும்
"ஆமாங்க நிச்சயம் உங்க மன்னருக்கு இது பற்றி தெரிஞ்சிருக்கும். அந்த கல் இருக்கும் வரைக்கும் அந்த யாகத்துக்கு ஆபத்து வருவதற்கான வாய்ப்பு இருக்கு. அதனால் அதை அவரு தேடுறதுக்கான வாய்ப்புகள் ரொம்ப அதிகம். அதனால் நாம அரண்மனைக்குள்ள போய் யாருக்கும் தெரியாமல் வெளியே வருகிற மாதிரி இருக்குனும். அதோடு இதில் வேறு ஏதோ மறைமுக திட்டம் இருக்குமோங்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கு. அதனால் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கனும்னு நினைக்கிறேன்."
"ம்ம்ம்.. யான் இத்தனை தூரத்திற்கு யோசித்திடவில்லை. மன்னர் அதுராதகனை எதிர்க்கவேண்டுமென திட்டத்தை தொடங்கியதே ஆரிமா தான். அவரின் வழிகாட்டுதலின் பெயரில் தான் யான் அனைத்தையும் செய்தோம். ஆனால் தாங்கள் கூறிய பின்பு தான் இதில் இத்தனை சிக்கல்கள் இருப்பது புரிகிறது. ஆரிமா அனைத்து காரியங்களையும் கூறத் தவறிவிட்டார். இனி கேட்பதில் அவருக்கு ஐயம் மட்டுமே எழும். அதனால் இதனை பற்றி தெரிந்துகொள்ள வேறு யாரையேனும் நாடிட வேண்டும். ஆனால் இவ்வுலகில் அதற்கான வழியேதுமில்லை." என்று நிகனிகா சற்று கலவையாய் கூற அப்போது பவித்ரா
"நாம் கொள்ளித்தாய் கிட்ட உதவி கேட்கலாமா?" என்று கேட்க அப்போது நிகனிகாவின் முகம் பிரகாசமானது.
"ஆம். அவரால் மட்டுமே இதற்கு தீர்வு வழங்கிட முடியும். நான் மேற்பிரபஞ்சம் சென்று அவரை சந்தித்துவிட்டு வருகிறேன்." என்றவள் தன் நீண்ட ஜடையை பிரித்து அதில் மறைந்திருந்த அந்த நிஷாகாந்தி மலரை கையிலெடுத்தாள்.
நிஷா காந்தி மலரினை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டவள் கண்களை மூடிக்கொண்டு ஏதோ வாயில் முணுமுணுத்திட அப்போது அங்கொரு புகை தோன்றியது.
அதனுள் ஒரு வழி தென்பட நவநீதனிடம் மற்றும் விடைபெற்றுக்கொண்டு அதனுள்ளே நுழைந்தாள் நிகனிகா.
நிகனிகா உள்ளே சென்றதும் அந்த புகை மண்டலம் மறைந்தது.
அவள் சென்று சற்று நேரத்தில் திடீரென்று சிலர் வீட்டிற்குள் புகுந்து பவித்ராவையும் நவநீதனையும் கண்களையும் கைகளையும் கட்டி வெளியே இழுத்து சென்றனர்.
வஞ்சங்கள்
தீர்த்திட
கடமைகள்
நிறைவேற்றிட
பொறுப்புகள்
தாங்கிட
காலம் தாழ்த்துவதில்
நன்மைகள்
மறுக்கப்படுகிறது.
நந்தவனத்திலிருந்து வெளியே வந்த நர்த்தகி நவநீதன் கூறிய மற்றைய இடத்தினை பார்க்கச்சென்றாள்.
அது ரத்ன மாளிகையின் பூஜையறை.
அவ்வறை மாளிகையின் மற்றைய இடங்களை விட சற்று பெரியது. அவ்விடத்தின் கட்டமைப்பே அங்கு வருபவர்களுக்கு மன அமைதியை கொடுத்திடும். அறையின் நடுவே எம்பெருமானின் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க அச்சிலையை சுற்றி ஐம்பொன் விளக்குகளும் மணம் வீசும் மலர்மாலைகளும் சூழ்ந்திருந்தது.
ஒற்றைத்திரி தீபம், மூன்று திரி தீபம், ஐந்து திரி தீபம், ஒன்பது திரி தீபமென்று அனைத்து ரக தீபங்களும் அவ்வறையை அழகுபடுத்தியிருந்தன. மணம் பரப்பும் புஷ்பங்களும் வாசனைப்புகைகளும் அவ்விடத்தின் தெய்வீகத்தன்மையை மேலும் அதிகப்படுத்தியிருந்தது.
பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த எம்பெருமானை சுற்றி ஒரு செயற்கை தடாகம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் மீது ஆம்பல் மலர்கள் மிதந்தபடியிருக்க அது பார்ப்பவர்களுக்கு கண்ணுக்கினிய காட்சியாகியது. அத்தனை மலர்களிருந்த போதிலும் வில்வம் பச்சிலைகளுக்கே எம்பெருமானின் கழுத்தினினை அலங்கரிக்கும் வரம் கிட்டியிருந்தது.
பூஜையறையினுள் வந்த நர்த்தகி சாந்தமாய் வீற்றிருந்த எம்பெருமானின் திருவுருவத்தின் முன் கைகூப்பி நின்று அவரின் திருவுருவத்தை மனதினுள் நிறைத்துக்கொண்டாள்.
இந்த மாளிகையிலேயே அவள் மனம் அமைதியடையும் ஒரே இடம் இதுமட்டுமே.
முழுதாய் அமைதியை மட்டுமே தன்வசப்படுத்திய இவ்விடம் எத்தனை வேதனைகளையும் துளி கணத்தில் மறக்கடித்துவிட்டு மனதை தெளிவடையச்செய்யும்.
இன்றும் அவ்வமைதியை எதிர்பார்த்து கைகூப்பி நின்றவளின் மனதில் பல எண்ணங்கள்.
"ஆதிசங்கரரே யான் செய்யும் காரியங்கள் சரியா தவறாக என்ற குழப்பம் என் எண்ணங்களை உழற்றிக்கொண்டே இருக்கின்றது. மொத்த பிரபஞ்சத்தின் நன்மைக்காக என் உலகத்தாரை எதிர்க்கத்துணிந்துவிட்டேன். என்னை நம்பியவர்களுக்கு தீங்கு இழைத்திடும் துரோகச்செயலை செய்ய முன் வந்துவிட்டேன். இது சரியா தவறா என்ற குழப்பத்திற்கான பதிலை அறியாமல் என் மனம் நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. என் குழப்பங்களுக்கு தம்மால் மட்டுமே விடைகொடுத்திட முடியும். சர்வ காலமும் அறிந்த தம்மால் மட்டுமே என் மனக்குழப்பத்தை நீக்கிட முடியும். என் வஞ்சத்தை தீர்க்கும் சந்தர்ப்பமாகவே இந்த செயலை செய்திட முன்வந்தேன். ஆனால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை தம் உடன்பிறவா சகோதரியாக நடத்தும் தேவியும் எனது இந்த செயலால் பாதிக்கப்பட்டு விடுவாரோ என்ற பயம் என்னை ஆட்டிப்படைக்கிறது. அவரின் நலம் பற்றிய எண்ணம் என்னுள் தயக்கத்தை ஏற்படுத்துகிறது. உலக நலனா தேவியின் நலனா என்று யோசிக்கும் சந்தர்ப்பத்தில் என் மனம் குழம்பி தவிக்கிறது. இந்த பேதையின் மனக்குழப்பங்களை தெளிவியுங்கள் நேசனே. தம் ஒருவரால் மட்டுமே என் மனக்குழப்பங்களுக்கு தீர்வளிக்க முடியும். எனக்கு சரியாதனொரு வழியை காட்டி அருள் புரிந்திடுங்கள்." என்று மனதினுள் வேண்டிக்கொண்டவள் தட்டிலிருந்த புஷ்பங்களை இருகைகளிலும் ஏந்தி அதனை எம்பெருமான் மீது தூவி வழிபட்டாள்.
தன் சிறு வழிபாட்டை முடித்துக்கொண்டவள் அவ்வுருவச்சிலையை கடந்து அதன் பின்புறம் சென்றாள்.
அங்கொரு இயற்கை தடாகமிருக்க அதனுள் வண்ண வண்ண மீனினங்கள் அங்குமிங்கும் நீந்தித்திரிந்தபடியிருந்தது. இயற்கையாய் அமைந்த தடாகத்தினை இறைவனின் தீர்த்தநீராக மாற்ற எண்ணிய அனாகதய வம்சத்தவர்கள் அத்தடகத்திற்கருகே எம்பெருமானின் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்ததை தொடர்ந்து அதனை பூஜையறையாக மாற்றியிருந்தனர்.
அது அறை என்றபோதிலும் அதன் கட்டமைப்பு திறந்தவெளி நந்தவனம் போலவே இருந்தது. இறைவனின் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடம் முழுதும் கூரை கொண்டு மூடப்பட்டிருக்க மீதியிடம் திறந்த வெளியாயிருந்தது.
திறந்தவெளியாயிருந்த காரணத்தினால் அந்த தடாகத்தின் மேற்பரப்பில் ஆதவனின் பொற்கிரகணங்களின் ஆதிக்கம் அதிகமாயிருந்தது.
அவ்விடத்தின் நளினத்தை மேலும் அதிகப்படுத்துவதற்காக அந்த தடாகத்தினை சுற்றி சற்று இடைவெளி விட்டு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த தடாகத்தினருகே செல்வதற்கு சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு. மற்றவர்கள் அந்த படிக்கட்டுக்களில் நின்றவாறு தான் பார்த்திட முடியும்.
அந்த தடாகத்தினை பார்த்தபடியே அதன் படிக்கட்டில் அமர்ந்த நர்த்தகி அந்த தடாகத்தின் ராஜகுமாரியாய் நடுவில் வீற்றிருந்த அந்த பெரிய ஆம்பல் மலரையும் அதனருகே மொட்டுவிடத்தொடங்கியிருந்த மற்றைய ஆம்பல் மொட்டுக்களையும் பார்த்தாள்.
சூரியனின் பொற்கிரணங்கள் அவற்றின் நளினத்தை ஓவியமாய் உணரச்செய்திட மிதந்தபடியே தண்ணீருடன் ஒன்றாது விலகி நிற்க நினைத்த அதன் இலைகளை பார்த்தவளுக்கு அவற்றின் இயல்பு விசித்திரமாக தான் இருந்தது.
முழுநேரமும் தண்ணீரின் மேற்பரப்பிலேயே மிதந்திருக்கும் ஆம்பல் இலையிற்கு தண்ணீரின் தீண்டலில் விருப்பமில்லை. ஆம்பலுடன் இருப்பதால் அதனால் தண்ணீரின் தீண்டலை தவிர்த்திட முடியவில்லை.
இதை யோசித்தவளுக்கு அப்போது தான் ஒரு விடயம் புரிந்தது. அவளுக்கும் மன்னர் அதுராதகனின் செயல்களில் உடன்பாடில்லை. ஆனால் தேவி மகதாயினிக்காக அவரின் நலன் பற்றி எண்ணுகிறாள். ஆனால் இதில் யாருக்கு பலன்? ஆம்பல் இலையின் பொறுமை ஆம்பல் மலர் இறைவனின் திருவடியை அடைய உதவுகிறது. ஆனால் நான் மன்னர் அதுராதகனின் நலன் பற்றி எண்ணுவது இந்த பிரபஞ்சத்திற்கு தீங்கினை மட்டுமே விளைவிக்கும். ஒருவரின் மகிழ்ச்சிக்காக மொத்த உலகினையும் துயரத்தில் ஆழ்த்திட வேண்டுமா?
"இல்லை... அது நான் என்னை சிருஷ்டித்தவருக்கு செய்யும் துரோகம். என் முடிவுகள் சரிதான். நான் நிகனியிற்கு உதவவேண்டும். மேற் பிரபஞ்சத்தை காத்திட என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் செய்திட வேண்டும். இனி எந்த சந்தர்ப்பத்திலும் என் முடிவிலிருந்து பின்னடையக்கூடாது. என்னை மன்னித்து விடுங்கள் தேவி. அனைவரின் நன்மைக்காகவும் நான் இதை செய்துதான் ஆகவேண்டும். என்னை மன்னித்திடுங்கள் தேவி" என்று மனதினுள் நினைத்து கொண்டவள் அங்கிருந்து எழுந்து செல்ல நினைத்தாள்.
அப்போது நவநீதன் கூறியது நினைவு வர உடனேயே சுற்றும் முற்றும் ஆராய்ந்தாள்.
அங்கிருந்த ஒவ்வொரு மூலையையும் ஆராய்ந்தவளது கண்களுக்கு எதுவும் தென்படவில்லை.
அதனால் அவ்விடங்களை அணுகி ஆராய முடிவு செய்தாள். ஒவ்வொரு இடமாய் மிக கவனமாய் ஆராய்ந்தபடியே சுற்றி வந்தவளுக்கு எதுவும் புலப்படவில்லை.
அப்போது அவள் காலினை ஏதோ இடறிட அது என்னவென்று குனிந்து பார்த்தாள் நர்த்தகி. அது ஏதோ கல்லென்று நினைத்தவள் அதை பாதையிலிருந்து அகற்ற முயல அதுவோ அசைய மறுத்தது.
துணுக்குற்றவள் குனிந்து அது என்னவென்று ஆராய்ந்தாள். அது ஏதோ பொத்தான் போலிருக்க அதை அழுத்த முயன்ற அவளது முயற்சி தோல்வியில் முடிந்தது.
அவளால் அதனை எதுவும் செய்யமுடியாமலிருக்க அதன் அமைப்பை நன்றாக உற்று கவனித்தாள். ஆனால் அவளுக்கு என்ன செய்வதென்று புலப்படவில்லை.
இதை பற்றி நவநீதனுக்கு தெரியப்படுத்துவதென்று முடிவெடுத்தவள் அங்கிருந்து விரைந்து கிளம்பினாள்.
நேராக தன் இல்லத்திற்கு வந்தவள் தாமதியாது கீழ் தளத்திற்கு சென்றாள்.
அவளை எதிர்பார்த்திருந்த நவநீதன் அவளிடம்
"ஏதாவது தெரிஞ்சிதுங்களா?" என்று கேட்க
"என்னவானது நர்த்தி ஏதாவது அறிந்துகொண்டாயா?" என்று நிகனிகா கேட்க அவளை தொடர்ந்து பவித்ராவும் அதையே கேட்டாள்.
"சரியாக அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் நான் பார்த்தவற்றை அவ்வாறே கூறுகிறேன். தங்களுக்கு அதில் உபயோகமானதை குறித்துக் கொள்ளுங்கள்." என்று கூறிய நர்த்தகி தான் பார்த்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினாள்.
அவள் கூறிய அனைத்தையும் கவனமாக கேட்டு நவநீதனும் பவித்ராவும் குறித்துக்கொண்டனர்.
"அந்த நந்தவனம்?" என்று பவித்ரா கேட்க
"இன்றிரவு யாருமறியாமல் அதை பற்றி அறிந்து வருகிறேன்."என்று நர்த்தகி உறுதியளிக்க அப்போது நவநீதன்
"எனக்கு அந்த தடாகம் பக்கத்தில் நீங்க பார்த்தாக சொன்னது எப்படி இருந்ததுனு அங்க அடையாளத்தோடு தெளிவாக சொல்லமுடியுமா?" என்று நவநீதன் கேட்க நர்த்தகியும் தான் பார்த்த அனைத்தையும் தெளிவாக கூறினாள்.
அவள் கூறிய அனைத்தையும் குறித்து கொண்ட நவநீதன்
"நானும் பவியும் இதை பத்தி ஏதும் கண்டுபிடிக்க முடியிதானு பார்க்கிறோம். நீங்க அந்த நந்தவனத்துல உள்ள அந்த தடுக்கப்பட்ட பகுதியில் என்ன இருக்குனு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க." என்று கூற அதை ஏற்றுக்கொண்டாள் நர்த்தகி.
பின் நிகனிகாவிடம்
"நிகனி நான் இன்று மாளிகையில் தங்கிட வேண்டும். நீ இவர்களுக்கு தேவையானவற்றை கவனித்துக்கொண்டு கவனமாக இரு. யாரும் கதவை தட்டினால் திறந்துவிடாதே. கவனமாயிரு." என்றுவிட்டு நர்த்தகி அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து மாளிகைக்கு கிளம்பினாள்.
நர்த்தகி சென்றதும் நிகனிகா நவநீதனிடம்
"இந்த ரகசியபாதை தெரிந்து கொள்வதில் தாம் இத்தனை தீவிரம் காட்டுவது மாளிகையை உலவு பார்ப்பதற்காக மட்டுமல்ல என்று எனக்கு தோன்றுகிறது." என்று நிகனிகா நவநீதனின் எண்ணங்களை தெரிந்துகொண்டது போல் கேட்க திடுக்கிட்ட நவநீதன் அவளையே கூர்ந்து பார்த்தான்.
தன் எண்ணங்களை அவள் படித்துவிட்டாளா என்று சந்தேகித்தவன்
"நீங்க என்ன சொல்றீங்க?"
"தமக்கு ஆரிமாவின் திட்டங்களில் அத்தனை பிடிமானமில்லையென எண்ணுகிறேன். அதனால் தாம் புதுத்திட்டம் வகுக்க முற்படுகின்றீர்களென யான் எண்ணுகிறேன்." என்று கூற இப்போது நிஜமாகவே அதிர்ந்து போனான் நவநீதன்.
பவித்ராவும் நிகனிகா இதை இத்தனை விரைவில் கண்டறிவாளென்று நினைக்கவில்லை.
"இல்ல.. நீங்க ஏதோ தப்பாக.." என்று நவநீதன் ஏதோ விளக்கிட முயல மெலிதாய் புன்னகைத்த நிகனிகா
"தாம் பதட்டமடையவேண்டிய அவசியமில்லை. யான் ஆரிமாவை நம்புமளவிற்கு தங்களையும் நம்புகிறேன். தம்மை பாதுகாக்கும் பொறுப்பு என் வசமுள்ளது. தம் திட்டங்களுக்கு நான் என்னாலான உதவிகள் அனைத்தையும் செய்திடுவேன். அதனால் அடுத்து என்ன செய்வதென்று கூறிடுங்கள்." என்று கூற நவநீதன் சற்று தயங்கியபடியே
"நான் சில உண்மைகளை உங்ககிட்ட சொல்லனும். ஆனா நீங்க அதை எப்படி எடுத்துப்பீங்கனு தெரியல. எனக்கு ஆரிமா சொன்ன எந்த விஷயத்துலயும் நம்பிக்கை வரல. ஏதோ தப்பு இருக்கிறதாக மனசுல உறுத்திட்டே இருக்கு. அதனால் அவங்க சொன்னபடி மாளிகைக்கு போகக்கூடாதுனு முடிவு பண்ணேன். அதுக்காக தான் ஏதேதோ காரணம் சொல்லி வெளியே தங்கலாம்னு சொன்னேன். நீங்களும் ஒத்துக்கிட்டீங்க. புது திட்டத்தை வகுக்கிறதுக்கு முதல்ல மாளிகையை பத்தி தெரிஞ்சிக்கனும்னு நினைச்சேன். அதை பத்தி தெரிஞ்சிக்கிட்டா புது திட்டம் வகுக்க இலகுவாக இருக்கும்னு நினைச்சேன். மாளிகைக்குள்ள போனா அந்த கல்லோட இருப்பிடம் பற்றி தெரியவரும்னு சொன்னாங்க. ஆனா அது எவ்வளவு தூரத்துக்கு நடைமுறைக்கு சாத்தியம்னு தெரியலை. இப்படி ஆரிமா சொன்ன எந்த திட்டத்திலும் ஒரு தெளிவு இல்லை. அதனால் தான் நாங்க ஒரு புது திட்டம் போடனும்னு நினைச்சேன். ப்ரவீன் ஆகாஷிடம் கூட பார்த்து நிதானமாக நடந்துக்க சொன்னேன். அவங்க அந்த மாமுனிகளிடம் சீடர்களாக சேர்ந்தா மற்றைய கல்லோட இருப்பிடம் பற்றி தெரிஞ்சிக்கலாம்னு சொன்னாங்க. இத்தனை முக்கியமான இந்த இரண்டு கற்களை பற்றி ரொம்ப சீக்கிரம் தெரிஞ்சிக்கிறது அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஆரிமா நாங்க என்ன செய்யனும்னு சொன்னாங்களே தவிர முழு திட்டத்தையும் எங்களுக்கு தெரியப்படுத்தல." என்று நவநீதன் நிதர்சனத்தை கூற நிகனிகாவிற்கும் அவன் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்துதானிருந்தது.
அவள் மனதிலும் இந்த எண்ணங்களிருந்ததை அவளால் மறுக்கமுடியாது.
இத்தனை சிரமப்பட்டு நவநீதனையும் அவனது நட்புக்களையும் அழைத்து வந்த நிகனிகாவிடம் கூட ஆரிமா எதையும் விளக்கமாய் கூறிடவில்லை.
அவ்விரண்டு கற்களை தேடிக்கண்டுபிடித்தால் நெருப்புவளையத்தின் சக்தியை அதிகப்படுத்திலாமென்றும் அது மத்யுக உலகின் இரண்டு துருவங்களில் இருப்பதாகவும் அதை தேடிக் கண்டுபிடித்து நெருப்பு வளையத்தின் சக்தியை உடைப்பதற்காக நடாத்தப்படும் யாகதீயில் சமர்ப்பித்துவிட்டால் அனைத்தும் சரியாகிவிடுமென்று மட்டுமே கூறியிருந்தார்.
அந்த கற்களின் இருப்பிடம் அவையே வெளிப்படுத்திட வேண்டும். அவற்றின் வரவினை தூண்டிடவேண்டுமாயின் அவற்றிற்கான தேடுதல் ஆரம்பித்திருக்க வேண்டும். இறை தூதர்களால் உருவாக்கப்பட்ட அந்த கற்களை இறைதூதர் வம்சாவளியினரால் மட்டுமே நெருங்கிட முடியும். அவர்களை அக்கற்கள் உணரும் பட்சத்தில் அவை வெளிப்பட்டு அவர்கள் வசமாகுமென்று கூறியிருந்தார்.
அவரின் யாக பலத்தின் உதவியால் ஒரு கல் மகாமுனி ஒருவரின் வழிகாட்டுதலினூடாக அடையப்படுமென்றும் மற்றொன்று மாளிகையில் வீற்றிருக்கும் எம்பெருமானின் ஆசியால் வெளிப்படுமென்றும் அறிந்துகொண்டதாக கூறினார்.
அதனாலேயே ஒரு குழுவை யாகம் நடைபெறும் இடத்திற்கும் மற்றைய குழுவை மாளிகைக்கும் செல்லுமாறு கூறினார்.
இதையெல்லாம் யோசித்து பார்த்த நிகனிகாவிற்கும் ஆரிமா எதையோ மறைக்கிறாறென்றே தோன்றியது.
ஆனால் இந்த திட்டத்திற்கு அடித்தளமிட்டவர் அவரே என்பதால் அவளால் அவரை சந்தேகிக்கமுடியவில்லை.
"தம் எண்ணங்கள் எனக்கு புரிகிறது. தங்களுக்கு எது உசிதமென்று படுகின்றதோ அதன் படியே செய்யலாம். யான் அறிந்தவற்றை பற்றி தங்களுக்கு தெரிவிக்கிறேன். ஆரிமாவிற்கு புதுத்திட்டங்கள் பற்றி எதுவும் தெரியவேண்டாம். ஆரிமாவை நான் சமாளித்துக்கொள்கிறேன். தாங்கள் அடுத்து என்ன செய்திட வேண்டுமென்பதை கூறிடுங்கள்."
"ரொம்ப நன்றிங்க. மாளிகையோட உள்ளமைப்பை பற்றி தெரிஞ்சிக்க தான் அதை பற்றிய குறிப்புகளை சேகரிச்சேன். இத்தனை நேரம் சேகரித்த விஷயங்களில் மாளிகையோட எல்லா இடங்களையும் தெரிஞ்சிக்கிட்டோம். இப்போ உள்ள நுழையனும். ஆனா அந்த கல் கைவசம் வந்ததும் நாம அங்கேயிருந்து ரகசிய பாதையினூடாக வெளியே வரனும். அந்த கல்லை பற்றி ஆரிமாவுக்கு தெரிஞ்சிருக்குனா நிச்சயம் அதை பற்றி அதுராதகனுக்கும் தெரிஞ்சிருக்கனும். இவ்வளவு பெரிய யாகத்தை நடத்தனும்னு முடிவு பண்ணவரு அதுக்கு வரக்கூடிய தடைகள் என்னனு நிச்சயம் தெரிஞ்சு வச்சிருப்பாரு. என்னோட யூகம் சரினா அவருக்கும் இது பற்றி தெரிஞ்சிருக்கனும். அதனால் அரண்மனையில் உள் பாதுகாப்பு ரொம்ப அதிகமா இருக்கனும்." என்று நவநீதன் கூற பவித்ராவும்
"ஆமாங்க நிச்சயம் உங்க மன்னருக்கு இது பற்றி தெரிஞ்சிருக்கும். அந்த கல் இருக்கும் வரைக்கும் அந்த யாகத்துக்கு ஆபத்து வருவதற்கான வாய்ப்பு இருக்கு. அதனால் அதை அவரு தேடுறதுக்கான வாய்ப்புகள் ரொம்ப அதிகம். அதனால் நாம அரண்மனைக்குள்ள போய் யாருக்கும் தெரியாமல் வெளியே வருகிற மாதிரி இருக்குனும். அதோடு இதில் வேறு ஏதோ மறைமுக திட்டம் இருக்குமோங்கிற சந்தேகம் எங்களுக்கு இருக்கு. அதனால் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கனும்னு நினைக்கிறேன்."
"ம்ம்ம்.. யான் இத்தனை தூரத்திற்கு யோசித்திடவில்லை. மன்னர் அதுராதகனை எதிர்க்கவேண்டுமென திட்டத்தை தொடங்கியதே ஆரிமா தான். அவரின் வழிகாட்டுதலின் பெயரில் தான் யான் அனைத்தையும் செய்தோம். ஆனால் தாங்கள் கூறிய பின்பு தான் இதில் இத்தனை சிக்கல்கள் இருப்பது புரிகிறது. ஆரிமா அனைத்து காரியங்களையும் கூறத் தவறிவிட்டார். இனி கேட்பதில் அவருக்கு ஐயம் மட்டுமே எழும். அதனால் இதனை பற்றி தெரிந்துகொள்ள வேறு யாரையேனும் நாடிட வேண்டும். ஆனால் இவ்வுலகில் அதற்கான வழியேதுமில்லை." என்று நிகனிகா சற்று கலவையாய் கூற அப்போது பவித்ரா
"நாம் கொள்ளித்தாய் கிட்ட உதவி கேட்கலாமா?" என்று கேட்க அப்போது நிகனிகாவின் முகம் பிரகாசமானது.
"ஆம். அவரால் மட்டுமே இதற்கு தீர்வு வழங்கிட முடியும். நான் மேற்பிரபஞ்சம் சென்று அவரை சந்தித்துவிட்டு வருகிறேன்." என்றவள் தன் நீண்ட ஜடையை பிரித்து அதில் மறைந்திருந்த அந்த நிஷாகாந்தி மலரை கையிலெடுத்தாள்.
நிஷா காந்தி மலரினை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டவள் கண்களை மூடிக்கொண்டு ஏதோ வாயில் முணுமுணுத்திட அப்போது அங்கொரு புகை தோன்றியது.
அதனுள் ஒரு வழி தென்பட நவநீதனிடம் மற்றும் விடைபெற்றுக்கொண்டு அதனுள்ளே நுழைந்தாள் நிகனிகா.
நிகனிகா உள்ளே சென்றதும் அந்த புகை மண்டலம் மறைந்தது.
அவள் சென்று சற்று நேரத்தில் திடீரென்று சிலர் வீட்டிற்குள் புகுந்து பவித்ராவையும் நவநீதனையும் கண்களையும் கைகளையும் கட்டி வெளியே இழுத்து சென்றனர்.