Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மறையாதே என் கனவே

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-10

வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிய கௌசியின் கண்ணீர் நிற்கவே இல்லை.. வழி முழுதும் அழுதுகொண்டே வந்தவளை ரோட்டில் போகும் வண்டியின் பின் உட்கார்ந்திருக்கும் சிலர்
கவனித்துக்கொண்டு தான் சென்றனர்.
ஆனால் எதை உணரும் நிலையிலும்
அவள் இல்லை..

ஏனோ நான்சியின் மேல் கோபம்
வரவில்லை.. ஆனால் விக்னேஷிடம்
சொல்லவே முடியாமல் போயிற்றே என்றவேதனை மிகுதியாய்த் தெரிந்தது.
அதுவும் விக்னேஷ் நான்சியின் கையை
உரிமையாய்ப் பிடித்தது கண் முன்
நின்றது..

தன் சிந்தனைகளிலேயே உழன்று
கொண்டு வண்டியை ஓட்டியவள் ரோட்டில் இருந்த சிறு குழியைப் பார்க்கத் தவறிவிட்டாள். வண்டியை விட்ட வேகத்தில் ஸ்கிட் ஆக எப்படியோ
சமாளித்து பாலன்ஸ் செய்ய ஸ்கூட்டி ஆப் ஆகிவிட்டது. வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்து தோற்றவள்
தள்ளிக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

வழிமுழுதும் கண்ணீர் சிந்திக் கொண்டே வந்தவள் தன் வீட்டுத் தெருக்குள் நுழையும் போது பேய்மழை பெய்ய ஆரம்பித்தது. வீட்டிற்குள் நுழைந்து வண்டியை நிறுத்திக் கொண்டு இருந்தவளுக்கு சமையல் அறை ஜன்னலின் வழியாகத் தன் தந்தையின் குரல் கேட்டது.. கூடவே சுமதி ஜெயாவின் குரலும். பெய்யும் மழையில் அரைகுறையாகக் கேட்க ஜன்னலின் அருகில் சென்று நின்றாள் கௌசிகா.

"ஏன்ணா.. ஏன் இப்படி நினைக்கறீங்க?
நம்ம கௌசியோட குணத்துக்கும்
அழகுக்கும் அந்தக் குடும்பம் தான்
குடுத்து வச்சிருக்கணும்.. நகை எல்லாம்
நீங்க கவலைப்படாதீங்க.. நாங்க எல்லாம் இருக்கோம்ல" என்று ஜெயா ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.

"அதெல்லாம் வேண்டாம் ஜெயா.. என்
பொண்ணுக்கு நான் தான் எல்லாம்
செய்யணும்.. சேமிப்பு நிறையவே
இருக்கு.. கோமதியின் (கௌசியின்
அன்னை) நகையும் இருக்கு.. எப்படியும்
50 பவுனாவது போட்டு அனுப்ப
வேண்டாமா.. இப்போதைக்கு முதலில்
வாங்கிய ஒரு இடம் இருக்கு அதை
விற்கலாம் என்று இருக்கிறேன்" என்று
பேசிய தந்தையின் குரல் கேட்டு
கௌசிக்கு சரம் சரமாய் நீர்
வழிந்தோடியது.

கல்யாணமே இப்போது வேண்டாம் என்றுசொல்லி விடலாம் என்ற முடிவோடு வந்த கௌசி தன் தந்தையும் அத்தைகளும் நடத்திய உரையாடலைக் கேட்டு அதிர்ந்து நின்றாள். பேசாமல் உள்ளே சென்று நிறுத்தச் சொல்லலாமா என்று எழுந்த எண்ணத்தில் விழுந்த மணலாய் மேலும் சில உரையாடல்களைக் கேட்டாள்.

"அண்ணா.. இடமெல்லாம் எப்போதுமே
நமக்கு ஒரு காலத்துல யூஸ் ஆகும்..
அதைப் போய் விற்கணுமா.. அது
இல்லாம அண்ணி இருந்தப்போ நீங்க
இரண்டு பேரும் சேர்ந்து வாங்கியது..
அண்ணி நியாபகம் வரும் போதெல்லாம்
அங்க போயிட்டு வருவீங்க.. அதைப்
போய் விற்கணுமா அண்ணா?" என்று
சுமதியின் குரல் அங்கலாய்ப்பாய் கேட்டது. "நாங்க நம்ம கௌசிக்கு பண்ண மாட்டோமா அண்ணா?" என்றும் சுமதி கேள்வியை வீசினார்.

"சுமதி.. ஜெயா.. நீங்க இரண்டு பேரும்
பர்ஸ்ட் ஒன்னப் புரிஞ்சுக்கோங்க.. இடம்
இருந்தால் யூஸ் ஆகும் தான்
பிற்காலத்தில்.. ஆனால் என் பெண்ணை மிஞ்சியது எனக்கு எதுவும் இல்லை.. உன் அண்ணியே இருந்திருந்தாலும் இதைத் தான் சொல்லியிருப்பாள் சுமதி.." என்று
தெளிவானக் குரலில் தங்கைகளைப்
பார்த்துப் பேசியவர் "அதுவும் இல்லாமல்
சின்ன வயதில் இருந்து ஒருவர் முகம்
சுளிக்க நடக்காதவள் என் பொண்ணு.
எனக்கு உன் அண்ணிக்கு அப்புறம் ஒரே
நிம்மதி அவதான்.. என் மகாலட்சுமி கூட..
அப்படிப் பட்டவளை மனசு நிறைய
அனுப்பினால் தான் எனக்கு
உண்மையான நிம்மதி" என்று
அழுத்தமாகச் சொன்னார் வரதராஜன்.

"சரி அண்ணா.. அவள் தான் இரவு
முடிவைச் சொல்றேன்னு சொல்லி
இருக்காளே.. வந்து என்ன சொல்றான்னு பாப்போம்" என்று சுமதி சொன்னார்.

"என் பொண்ணு எனக்கு சாதகமான
முடிவைத் தான் எடுப்பாள்" என்று
வரதராஜனின் நம்பிக்கையான குரல்
ஒலிக்க வெளியே நின்றிருந்த கௌசி
வேரோடி நின்றாள்.

அழுகை தாங்கமாட்டாமல் வெளியே வர
வீட்டிற்குள் வேகமாக நுழைந்து தன்
அறைக்குள் ஓடினாள்.. அதற்குள்
கௌசியைப் பார்த்துவிட்ட ஜெயா அவள்
அழுதுகொண்டு போவதையும்
பார்த்துவிட்டார்.

"கௌசி நில்லு" என்று பின்னாடியே
ஜெயா போக அறைக்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டாள் கௌசிகா.

ஜெயாவின் குரலைக் கேட்டு கௌசி
வந்துவிட்டாள் போல என்று சமையல்
அறையில் இருந்து வெளியே வந்த
வரதராஜனும் சுமதியும் ஜெயா
சொன்னதைக் கேட்டுப் பதறிவிட்டனர்.
"கௌசிமா கதவைத் திற..." என்று
வரதராஜன் போய் கதவைத் தட்டினார்.

"அப்பா.. ப்ளீஸ் ப்பா.. நான் கொஞ்ச
நேரம் தனியாக இருக்கனும்.. யாரும்
பயப்படாதீங்க.. நானே கொஞ்ச நேரம்
கழித்து வெளில வந்திருவேன்" என்று
கௌசி அழுகுரலிலேயே பேச வரதராஜன் கலங்கினார்.

அங்கு அறையின் முன் நின்று எந்தப்
பயனும் இல்லை என்று எண்ணிய
மூவரும்.. வந்து சோபாவில் அமர்ந்தனர்.
கௌசி அழுது இதுவரை ஒருத்தருமே
பார்த்ததில்லை. சிணுங்குவாளே தவிர
அழுக மாட்டாள். அப்படி இருப்பவள்
இப்போது எதற்கு அழுகிறாள் என்று
வரதராஜன், ஜெயா, சுமதி ஆகியோரின்
எண்ணங்களில் எழுந்தது.

உள்ளே அழுதுகொண்டிருந்த
கௌசிக்கோ என்ன செய்வது என்றே
தெரியவில்லை.. அப்பாவிற்குத் தன்
மேல் நம்பிக்கை என்று தெரியும்..
ஆனால் எவ்வளவு நம்பிக்கை என்று
இன்று தான் தெரிந்துகொண்டாள்.
ஆனால் விக்னேஷை மறப்பது என்பது
அவளுக்கு சாத்தியமே இல்லாதக்
காரியம். மறுக்க முடியாத உண்மையும்
கூட. இரண்டிற்கும் இடையில் சிக்கித்
தவித்தாள் கௌசிகா..

தன்னையே நினைத்து தன்
சந்தோஷத்திற்காகவே வாழந்து
கொண்டிருக்கும் அப்பா முக்கியம் தான்.
ஆனால் அதற்காக விக்னேஷை
நினைத்துக் கொண்டு இன்னொருவனை எப்படி மணப்பது என்று நினைக்கும் போதே கௌசியின் உடல் கூசியது. தன் நினைவுகளிலேயே அழுதழுது கரைந்தாள். அதுவும் நான்சி தன்னைப் பார்த்த "பார்த்தாயா.. கடைசியில்" என்ற பார்வையில் கௌசியின் மனமும் முகமும்
சுருங்கிவிட்டது தான். இனி "விக்கா"
தனக்கில்லை என்பதை அவளால்
ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
அதை நினைக்க நினைக்க அழுகை
அதிகம் ஆனதே தவிர குறைந்தபாடில்லை.

பெசன்ட் நகரில் இருந்து அடையார் வந்து சேர்ந்த விக்னேஷ் நேராக வீட்டிற்குள் புகுந்தான்.. பைக்கில் வந்ததால் சீக்கிரமே ஜீவா மதியை விட முன்னால் வந்து சேர்ந்தான். வீட்டிற்குள் தொப்பலாக நனைந்து வந்தவனை ஹாலில் உட்கார்ந்திருந்த மூவரும் திடுக்கிட்டுப் பார்த்தனர்.

"கௌசி எங்க மாமா?" என்றுத் தன்
சட்டை ஸ்லீவ்சை மடித்தபடி கேட்டான்
விக்னேஷ்.

"ஏன் விக்கி.. உனக்கும் அவளுக்கும்
ஏதாவது பிரச்னையா?" என்று
வரதராஜன் எழுந்தபடிக் கேட்டார்.

"அதெல்லாம் இல்லை.. அவள் எங்கே
மாமா" என்று கண்கள் இடுங்கக்
கேட்டான்.

"விக்னேஷ் நாங்க கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லு முதலில்" என்று சுமதி
விக்னேஷை அதட்ட விக்னேஷ் முகம்
இறுகினான்.

"......" - விக்னேஷ்.

"என்ன ஆச்சு விக்னேஷ்.. அவ
அழுதுகிட்டே வந்தா" என்று ஜெயா
கௌசிகா வந்தது... கதவை சாத்தியது
என அனைத்தையும் சொல்லி முடித்தார்.

"உனக்கும் அவளுக்கும் ஏதாவது
பிரச்சினையா? அல்லது ஜீவா ஏதாவது
சொன்னானா?" என்று சுமதி விசாரித்தார்.

"அம்மா.. நாங்க என்ன சின்னக்
குழந்தையா? சண்டை போட்டுக்
கொண்டு அழ.. எப்போதுமே மூவரும்
உங்களிடம் சண்டை என்று வந்து
நின்றதில்லை.. இது..." என்று
தயங்கியவன் அப்படியே நிறுத்தினான்.
தான் காதல் என்று சொன்னால் தன்
அம்மா ஏற்றுக் கொள்வார்களா? என்று
நினைத்தான்.. ஜீவா சொன்னபோதே
முதலில் எதிர்த்தவர்கள் ஜீவாவின்
பிடிவாதத்திலும் மதியின் குணத்திலும்
தான் ஒப்புக் கொண்டதே.. என்றெல்லாம் நினைத்தவன் "ஒரு குட்டி மிஸ் அண்டர் ஸ்டான்டிங்" என்று முடித்தான்.

அவன் பேசவும் ட்ராபிக்கில் மாட்டியிருந்த ஜீவாவும் மதியும் காரில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.

"இன்று அவளிடம் கல்யாணத்தைப் பற்றி பேசினேன் விக்னேஷ்.. அவள் அழுது கொண்டு வந்ததும் காதல் என்று
இருக்குமோ என்று கற்பனை எல்லாம்
செய்துவிட்டேன்" என்று பெருமூச்சை
விட்டார் வரதராஜன்.

உள்ளே வந்த ஜீவாவும் மதியும் என்ன
நடந்தது என்று தெரியாமல் நாம் வாய்விட வேண்டாம் என்றபடி நின்றனர்.

"அவள் இன்னும் ரூமில் தான்
இருக்கிறாளா?" என்று கேட்டபடி
நகர்ந்தவன் கௌசியின் ரூம் முன்னால்
நின்று கதவைத் தட்டினான்.

"கௌசி கதவைத் திற" என்றான்
விக்னேஷ் அறைக் கதவைத் தட்டியபடியே. கௌசியிடம் பதிலே இல்லை..

"கௌசி" என்று மறுபடியும் கதவைத்
வேகமாகத் தட்ட சுவற்றில் மோதியது
போலத் தான் ஆகியது.

"கௌசி" என்று பொறுமை இழந்து
கதவை இடியெனத் தட்டியவன் "இப்போ
நீ கதவைத் திறக்கல-ன்னா நான்
உடைத்து விடுவேன்" என்று விக்னேஷ்
குரலை உயர்த்திச் சொன்னான்.

"கௌசி..." என்று கதவை இடிக்கத்
திரும்பியவன் கதவு திறக்கப்படும் ஓசை
கேட்டு நின்றுவிட்டான்.

விக்னேஷ் வந்ததில் இருந்து
ஒவ்வொன்றும் கௌசியின் காதில்
விழுந்து கொண்டுதான் இருந்தது. அழுது கொண்டே படுத்திருந்தவள் அவன் அப்பாவும் அத்தைகளையும் கேட்கும் கேள்விகளுக்கு நன்றாக சமாளிப்பதைக் கேட்டு இன்னும் கண்களில் இருந்து கண்ணீர் மணிகளை விட்டாள். ஜீவாவும் மதியும் வந்ததும் நன்றாகவே உணர்ந்தாள்.

விக்னேஷ் வந்து கதவைத் தட்ட
அவளுக்குத் திறக்கவே தோன்றவில்லை.. தன் பெட்டில் படுத்திருந்தவள் அவன் கதவைத் தட்டி தன் பெயர் சொல்லிக் கூப்பிடவும் தன் தலையணையில் புதைந்தபடி கண்ணீர் விட்டாள். அவன் மீண்டும் மீண்டும் கதவைத் தட்டவும் அவளுக்குக் கதவைத் திறக்கத் தோன்றினாலும் அவன் முகத்தை எதிர்கொள்ள முடியாது என்பதால் எழுந்து உட்கார்ந்து அப்படியே தன் அறைக் கதவை வெறித்தாள். இறுதியில் அவன் கதவை உடைப்பேன் என்று மிரட்டவே 'செய்தாலும் செய்துவிடுவான்' என்று கதவின் லாக்கை மட்டும் திறந்து தன் கட்டிலில் போய் அமர்ந்துவிட்டாள் கௌசிகா.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே
நுழைந்த விக்னேஷ் கதவை இழுத்து
சாத்தி மூடி லாக் செய்தான்.

"எதுக்குடி எந்திருச்சு வந்தே?" என்று
அழுத்தமானக் கேள்வியோடு கௌசியின் பக்கத்தில் சென்று நின்றான்.

அமைதியாக கண்ணீர் சிந்தியபடியே எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள்
கௌசிகா.. என்ன சொல்லுவது என்று
தெரியாமல் உட்கார்ந்திருந்தவளைக்
கண்டு எரிச்சல் உற்றவன் "இங்கே பார்"
என்றான்.

தலையைக் குனிந்தபடியே
உட்கார்ந்திருந்தவளின் கன்னத்தை
அழுத்தமாகப் பற்றித் தூக்கியவன்
"உனக்கு இப்போ என்ன பிரச்சனை
கௌசி சொல்லு" எனக் கேட்டான்.

அவனைக் கட்டிப்பிடித்து நான் உன்னைத் தான் காதலிக்கிறேன் என்று சொல்லு என்று கதறிய மனதை அடக்கியவளின் கண்களில் மனதின் வலி தாளாமல் கண்ணீர் வந்தது. கன்னங்களில் வழிந்த கண்ணீர் கௌசியைப் பற்றி இருந்த
விக்னேஷின் கையில் விழ விக்னேஷின் கைகள் தானாகக் அவளின் கையை விட்டது. அவள் அழுதே பார்க்காதவன் இன்று அவள் இப்படி கண்ணீர் விடுவதைப் பார்க்க அவனின் மனம் ஏனோ சோர்ந்தது உண்மைதான்.

அவள் அருகில் உட்கார்ந்த விக்னேஷ்
அவளின் கண்களை அழுத்தித்
துடைத்தான். அவளின் கைகளைப் பற்றி
"என்னாச்சு கௌசி.. ஏன் அழறே?.."
என்று கேட்டான் அவளின் கைகளை
பற்றியபடி.. ஏனோ அவன் நான்சியின்
கையைப் பற்றியது நினைவு வர கௌசி
அவன் கைகளில் இருந்து தன் கையைத்
தானாக விடுவித்தாள்.

"ஏன் விக்கா.. என்கிட்ட மறச்ச?" என்று
தன் மனதில் எழுந்த முதல் கேள்வியைக்
கேட்டாள்.

பதில் பேசாமல் இருந்தவனிடம் "நான்
ஸ்கூல்ல பண்ணின மாதிரி ஏதாவது
பண்ணி உங்களை பிரிச்சிடுவேன்-னு
நினைச்சையா? என்று தன் மனதில்
நினைத்தை விக்னேஷின் முகத்தைப்
பார்த்து நீர் தேங்கிய விழிகளுடன் கேட்க
விக்னேஷின் முகம் கறுத்துவிட்டது.

"சொல்லு விக்கா.. அதை நினைத்துத்
தானே என்னிடம் மறைத்தாய்?" என்று
அவன் தோளைப் பிடித்து இழுத்துக் கேட்கவிக்னேஷ் அவளையே பார்த்தபடி பதில் பேச முடியாமல் இருந்தான்.

"கௌசி ப்ளீஸ் அழறதை பர்ஸ்ட்
நிறுத்து.." என்று கண்களை இறுக மூடிச்
சொல்ல கௌசி எழுந்தாள்.

"அவ்வளவு கேவலமாக எல்லாம் நான்
நடந்துக்க மாட்டேன் விக்கா" என்று
எங்கோ பார்த்துச் சொல்ல விக்னேஷும்
எழுந்தான்.

"ஆமாம் கௌசி.. உன்கிட்ட மறைத்தேன்
தான்.. அதற்கு இரண்டு காரணங்கள்
இருக்கு.. பர்ஸ்ட் நீ என் மேல ரொம்ப
பொசஸிவ்.. நீ ஒத்துக்கொள்ளவில்லை
என்றாலும் அதுதான் உண்மை...
இரண்டாவது நான்சி வெளில தெரிய
வேண்டாம் என்றாள். அவள் வீட்டில்
தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும்
என்று.." விக்னேஷ் பேசிக்கொண்டிருக்க
கௌசிகா இடையில் புகுந்தாள்.

"இன்று நீ அவள் வீட்டுக்க போவதற்கு
மட்டும் சம்மதித்து விட்டாளாக்கும்" என்று
வெடுக்கெனக் கேட்டாள். அவளின்
மனதில் நான்சியின் மேல் இருந்த
வெறுப்பை அப்படியே வெளியே
காட்டினாள் தன்னையும் மீறி.

"கௌசி...." என்று விக்னேஷ் அதட்ட
"என்னிடம் எவ்வளவு பொய்.. இப்போது
கூட என்னிடம் சண்டைக்கு நிற்கிறாய்
இல்லை" என்று அழுதாள். அவளிற்காக
தன்னை அதட்டுகிறான் என்று அவளிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

"கௌசி.. இதே உன்னைப் பற்றி நான்சி
தப்பாக நினைத்துச் சொன்னாலும் நான்
அவளையும் அதட்டியிருப்பேன் டி..
ஆனால் நீ சொன்னாயே... உன்னை
கேவலமாக் நினைத்து என்று.. அப்படி
ஒரு நாள் கூட நினைத்தது இல்லை டி..
நான் முன்னாடி சொன்ன இரண்டு ரீசன்
தான்டி உண்மை" என்றவன் அவளின்
தோளைச் சுற்றிப் பிடித்தான்.

"என்னடி உன்னை நான் அப்படி
நினைப்பேனா? அவ்வளவு தான் நீ
என்னைப் பத்தி நினைச்சதா?" என்று
கேட்க அப்படியே நின்றாள்.

"அதுவும் இல்லாமல் எனக்கு நான்சியை
ரொம்ப பிடிச்சிருக்கு கௌசி.. அவளோட
ஹோம்லினெஸ்.. என்னைக் கேர் பண்ற
விதம்.. அடக்கமா அமைதியா
இருக்கிறது.." என்று விக்னேஷ் பேசப்பேச கௌசிக்கு மனம் விம்பியது. அவன் சொன்ன அனைத்து குணங்கலும் கௌசிக்கு எதிரானது. ஆனால் அவன் சொன்ன கேர் மட்டும் நான்சியை விட கௌசியிடம் அதிகமாகவே இருந்தது. அதை விக்னேஷ் தான் உணரவில்லை.

"நான் அப்படி அடக்கமாக இருந்திருந்தால் என்னையும் பிடித்திருக்குமா உனக்கு" என்று கேட்க என்னிய நாவை கட்டுப்படுத்த சிரமப்பட்டாள் கௌசிகா.

"சரி கௌசி... உன் கல்யாணத்தைப் பத்தி மாமாட்ட என்ன சொல்லப்போற?" என்று கேட்டான் விக்னேஷ்.

"எனக்கு கல்யாணம் வேண்டாம்
இப்போ?" என்றாள் கௌசிகா சுவற்றை
வெறித்தபடி.

"ஏன் வேண்டாம்... யாரையாவது லவ்
பண்றையா?" என்று அவளைக் கூர்ந்து
பார்த்துக் கேட்க கௌசிகா அவனை
முறைத்தாள். உன்கிட்டையே எப்படிடா
உன் பெயரை சொல்லுவேன் என்று
கௌசியின் மனம் ஊமையாய் அழுதது.

தன் மனதில் இருந்ததை மறைத்தவள்
"அப்படி இருந்திருந்தால் உன்னைப்
போல மறைத்திருக்க மாட்டேன்" என்று
முறைத்தபடியே கௌசிகா சொல்ல
விக்னேஷ் சிரித்தான்.

"என்ன குத்திக் காட்றியா? சரி உனக்கு
எப்போது எல்லாம் தோணுதோ பண்ணு..
நான் எதுவும் சொல்லலை..." என்றவன்
"கல்யாணம் ஏன் வேண்டாம்-ன்னு
சொல்லு" எனக் கேட்டான்.

"எ... என... எனக்கு" என்று யோசித்தவள்
"எனக்கு அப்பாவை விட்டுப் போக
மனசில்லை" என்றாள்.. சொன்னவளால்
அழுகையை அடக்க முடியவில்லை..
மூச்சை இழுத்து இழுத்து அழுதாள்.

"கௌசி என்னடி இது சின்னக் குழந்தை
மாதிரி அழுதிட்டு.. அதுவும் கௌசிக்-க்கு
அழுகத் தெரியும்-ன்னு இன்னிக்கு தான்
எனக்குத் தெரியுது..." என்று அவள்
நிலைமையை அறியாமல் அவளை
சிரிக்க வைக்க எண்ணி நக்கல்
செய்தவன் "இங்க பாரு கௌசி.. நான்
சொல்றதைக் கேளு.. பையன் சென்னை
தான்.. எனக்குத் தெரிந்தவனும் கூட..
என்கூட ஸ்கூல்ல +1,+2 படிச்சான்.. நல்ல
பையன் தான்.. நீயும் யாரையும் லவ்
பண்ணலன்னு சொல்ற.. நீ மட்டும் ஓகே
சொன்னா எவ்வளவு
சந்தோஷப்படுவோம் தெரியுமா?" என்று
நீளமாகப் பேசினான்.

அவன் பேசப் பேச கௌசிக்கு தான் ஏதோ உள்ளே குத்திக் காயப்படுத்துவது போல இருந்தது. அவனே இன்னொருவனை கல்யாணம் செய்துகொள் என்று கட்டாயப்படுத்துவது அவளை ஏதோ
நரகத்தில் தள்ளுவது போல இருந்தது.

"உனக்குப் பையனைப் பார்க்க
வேண்டுமா? அப்படி இருந்தாலும்
சொல்லு நான் அரேன்ஜ் பண்றேன்"
என்று விக்னேஷ் சொல்ல "வேண்டாம்"
என்று அவசரமாகத் தலை ஆட்டினாள்
கௌசிகா.

"அப்போ உனக்கு ஓகே வா?" என்று
விக்னேஷ் கேட்க அவன் கண்களை
நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில்
அத்தனை பயம்.. பதட்டம்.. வேதனையும்..

கௌசிக்கு ஏதோ தன்னை எல்லோரும்
அடைத்தது போல இருந்தது.. அப்பாவின்
நம்பிக்கையும் பாசமும் ஒரு பக்கம்..
விக்னேஷ் காதலிக்காமல்
இருந்திருந்தாவது அவனிடம்
சொல்லியிருக்கலாம்.. இவனுடன்
வாழ்க்கை முழுதும் சண்டைபோட்டு வாழ நினைத்தவளை அவனே
இன்னொருவனை மணக்கச் சொல்லிக்
கேட்பது ஏதோ உயிரையே பறிப்பது
போல இருந்தது.

"ஏன்டி பதட்டப்படறே.. ஒன்னும் இல்லை..
தலையை மட்டும் ஆட்டு போதும் என்று"
அவளின் கையைப் பிடிக்க வேண்டியவன் இன்னொருவனின் கையைப் பிடிக்க தைரியம் சொல்லிக் கொண்டு இருந்தான்.

ஏனோ எனக்கு விருப்பம் என்று சொல்ல
கௌசிக்கு வாய் வரவில்லை. "உங்க
எல்லோருக்கும் சம்மதம்னா.. உங்க
விருப்பப்படியே எல்லாம் நடக்கட்டும்"
என்று அவள் மனதை பாறையாக
வைத்துச் சொல்ல விக்னேஷ் அவளை
வெளியே அழைத்துச் சென்றான்..

வெளியே வர அனைவரும்
இருவருக்காகவே காத்திருந்தனர்..

"மாமா.. கௌசிக்கு கல்யாணத்தில்
சம்மதம்.. உங்களை பிரிந்து போக
எண்ணி தான் இவ்வளவு அழுகை" என்று விக்னேஷ் சொல்ல எல்லோரும்
கௌசியைக் கவனித்தனர்.

அழுது சிவந்திருந்த கண்களைப் பார்த்த
வரதராஜன் "கௌசிமா.. மாப்பிள்ளை
சென்னை தான்.. இதுக்கா இப்படி
அழுதாய். நான் என்னவோ ஏதோ என்று
பயந்துவிட்டேன்.." என்று கௌசியின்
அருகில் வந்தவர் அவளின் கண்களில்
இருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டார்.

கௌசி சம்மதம் சொன்னவுடன்
மாப்பிள்ளை வீட்டிற்கு போன் செய்து
சொன்னவர் மகிழ்ச்சியின் உச்சியில்
இருந்தார். சின்னப் பையன் போல நடந்து கொண்டிருந்தவரைப் பார்க்க
அனைவருக்கும் வியப்பாக இருந்தது.
தன் கல்யாணத்தில் இவ்வளவு
சந்தோஷமா இவருக்கு என்று யோசித்தக் கௌசி... அதுதான் அந்த ஆண்டவன் என் சந்தோஷத்தையும் இவருக்கே குடுத்திட்டான் போல விரக்திப் புன்னகை சிந்தினாள்.

எல்லோரும் இரவு அங்கேயே சாப்பிட
முடிவு செய்ய கௌசியின் அத்தையின்
கணவர்களும் சந்தியா என அனைவரும்
வந்தனர்.. எல்லோரும் சாப்பிட்டு விட்டுக்
கிளம்ப கௌசியின் அருகில் வந்த மதி
"உண்மையாகவே உனக்கு இதில்
சம்மதமா கௌசி?" என்று கௌசியிடம்
கேட்டாள் மதி.

"ம்ம்" - கௌசிகா வெறுமனே தலையை
ஆட்டினாள்.

"வாயைத் திறந்து பேசாமல் இருப்பவளா
நீ?" என்று நேராகப் பார்த்து மதி கேட்க
கௌசி தடுமாறினாள்.. யாருக்கு
உண்மை தெரிந்தாலும் பிரச்சினை
தானே..

"எனக்கு இன்னும் கல்யாணம்-ன்னு
மைன்ட் செட் ஆகலை.. அதான் திடீரென
இப்படி இருக்கு மதி." - என்று
சமாளித்தாள் கௌசிகா.

"சரி வரேன் கௌசி.. குட் நைட்" என்று
சொல்ல அனைவரும் கிளம்பினர்..
விக்னேஷும் பயங்கரக் குஷியாகக்
கிளம்புவதை இயலாமையுடன் பார்த்துக்
கொண்டு நின்றிருந்தவள் எல்லோரும்
சென்ற பின் தன் அறைக்குள் புகுந்தாள்.

அறைக்குள் புகுந்தவள் நள்ளிரவு வரை
ஜன்னலின் வெளியவே வெறித்துக்
கொண்டிருந்தாள். பிறகு திரும்பிப் படுக்க வந்து கட்டிலில் அமர்ந்தவளுக்கு
அவளுடைய டேபிளில் இருந்த டைரி
கண்ணில் பட்டது.. எடுத்து வந்து
உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தவள்
பாதியில் நிறுத்தி அதைக் நெச்சோடு
சேர்த்து வைத்து குலுங்கி குலுங்கி
அழுதாள்.

மீண்டும் டைரியைப் பிரித்தவள் தன்
மனதில் தோன்றிய ஒன்றை எழுத
ஆரம்பித்தாள்.

"பிடிக்கவில்லை
என்று உதிர்த்த வார்த்தையைத்
தாங்கியிருப்பேனோ?
அதை விட உன் காதலியோடு
பார்க்கும்போது உயிர் நின்றுவிட்டது.
வாழ்க்கையை ரசித்த எனக்கு
இப்போது அவளாகப் பிறந்திருந்தால்?
என்ற ஏக்கம் வதைக்கிறது..
அப்போது உன்னோடு வாழ்ந்திருப்பேனே.
உன்னுடன் கைகோர்க்க
நினைத்தவளுக்கு
நீ அடுத்தவருடன் கைகோர்க்க சொல்வது
நியாயமா?"

என்று எழுதியவள் அதன் மேலேயே
சாய்ந்து விட்டாள் அழுக
ஆரம்பித்துவிட்டாள்.

சம்மதம் சொன்ன அடுத்த வாரத்திலேயே நிச்சயதார்த்தத்தை வைக்க கௌசிகா கலங்கிப் போனாள். தன் முகத்தை மறைக்க மிகவும் சிரமப்பட்டாள். அப்போது தான் மாப்பிள்ளை பெயர் என்று அனைத்தையும் தெரியவந்தது
கௌசிகாவிற்கு.

மாப்பிள்ளை பெயர் குரு.. தன்
அப்பாவின் பிஸ்னஸைப் பார்ப்பவன்.
அப்பா அம்மா குரு அக்கா என்ற குடும்பம். குருவின் அக்கா வினித்ராவிற்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. பெரிய இடம் என்பதால் நிச்சியதார்த்தத்தையே தடபுடலாக நடத்தினர். தன் தந்தையை நினைத்த கௌசிக்குத் தான் கலக்கமாக இருந்தது.. இவர் எப்படி செலவுகளைத் தாங்கப் போகிறார் என்று.

குரு நிச்சியத்தின் போது பேச ஓரிரு
வார்த்தை பதில் பேசினாளே தவிர
எதுவும் தானாகப் பேசவில்லை..
விக்னேஷையே கண்கள் கட்டுப்படுத்த
முடியாமல் தேடின.. எப்போது இது முடியும் என்று இருந்தவள் எல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்தவுடன் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவர்கள் போட்ட நகை என்று
ஒவ்வொன்றையும் கழற்றி
வைத்தவளுக்கு அப்போது தான் மூச்சு
வந்தது.. ஏனோ ஒன்றுமே அவளுக்குப்
பிடிக்கவில்லை.. ட்ரெஸிங் டேபிள்
முன்னால் உட்கார்ந்து தன்னையே
வெறுத்த பார்வையில் நோக்கிக்
கொண்டு இருந்தாள் கௌசிகா.

காற்று வீசும் போது நகரும் மேகங்களைப் போல நாட்கள் நகர்ந்து கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் தான் கௌசி எது நடக்கக் கூடாது என்று எண்ணினாளோ அதுவும் நடந்தது.
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-11

நிச்சயம் முடிந்த ஒரு வாரத்தில் கௌசிகா தன் தந்தையிடம் பேசினாள். "அப்பா உண்மையாகத் தான் சொல்றேன்" என்றாள் கௌசி.

"இல்லைமா நான் இதற்கு ஒத்துக்க
மாட்டேன்" என்றார் வரதராஜன்
பிடிவாதமானக் குரலில்.

"ஏன் அப்பா.. நிச்சயம் ஆனவுடனே நான்
அடுத்தவள் என்ற நினைப்பு
வந்துவிட்டதா?" என்று வாடிய முகத்துடன் கௌசிகா கேட்க வரதராஜன் பதறினார்.

"என்ன பாப்பா நீ... உன் கல்யாணத்திற்கு உன்கிட்டையே பணமா.. முடியாது" என்றார்.

"அப்பா.. நான் சம்பாதித்து சேர்த்தியது
தானே.. வச்சுக்கங்கப்பா.. நீங்க நம்
இடத்தை எல்லாம் விற்க வேண்டாம்"
என்று அவரின் கையை ஆறுதலாகப்
பற்றி சொல்ல "உனக்கு எப்படித்
தெரியும்" என்று வரதராஜன் கேட்க
"அன்று நான் வரும்போது நீங்கள்
பேசியது என் காதில் விழுந்தது அப்பா"
என்றாள் கௌசிகா.

"அப்பா.. என் மேல உண்மையாவே பாசம்
இருந்தா இதை எடுத்துக்கங்க.. இல்லை
என்றால் வேண்டாம்" என்று மூன்று
லட்சத்தை டேபிளில் வேகமாக
வைத்தவள் எழுந்து சமையல் அறைக்குள் புகுந்துவிட்டாள்.

மகளின் பிடிவாதத்தை அறிந்தவர் அரை
மனதுடனே அதை எடுத்தார்.

கௌசி வேலைக்குச் செல்வதை
மாப்பிள்ளை வீட்டார் விரும்பவில்லை..
கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்
குருவின் தந்தை தேவராஜ் போன்
செய்திருந்தார்.

"எங்கள் வீட்டு மருமகள் வேலைக்கு
செல்வதா? அப்படியே வீட்டில் சும்மா
இருக்கப் பிடிக்கவில்லை என்றாலும்
குருவோடு சென்று பிஸ்னஸைப்
பார்க்கட்டும்" என்று போன் பண்ணி
சொன்னார் குருவின் தந்தை தேவராஜன்.

வரதராஜன் தான் தன் மகளின் புகுந்த
வீட்டை நினைத்துப் பெருமை கொண்டார்.பெண் அடுத்த இடத்தில் வேலைக்குப் போக வேண்டாம்.. வேண்டும் என்றால் மகனுடனே ஆபிஸிற்குச் செல்லட்டும் என்று எத்தனை வீட்டில் சொல்லுவார்கள்
என்று நினைத்தவரின் மனம் நிறைந்தது.

தேவராஜ் சொன்னதை வரதராஜன்
கௌசியிடம் எடுத்துச் சொல்ல "சரிப்பா"
என்று ஒற்றை வார்த்தையில் முடித்து
விட்டாள் கௌசி. கௌசி வாதம்
செய்வாள் என்று எண்ணியவருக்கு
ஆச்சரியமே..

"என்னடி எதற்கு எடுத்தாலும் ஏதாச்சும்
பேசுவ... இப்போ ஒரே வார்த்தையில சரி-
ன்னு சொல்ட" என்று முகவாயில் கை
வைத்துக் கேட்டார் ஜெயா.

அதற்கு ஒரு சின்ன புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு கௌசிகா நகர்ந்து விட்டாள். அவளே இதை எதிர்
பார்த்ததுதான். எப்படியும் இவ்வளவு
வசதியாக இருப்பவர்கள் வேலைக்கு
அனுப்ப மாட்டார்கள் என்று அவள்
நினைத்தது தான்.

அதுவும் இல்லாமல் கௌசியால்
வேலையில் முழுமையாக மூழ்க
முடியவில்லை.. மனம் விக்னேஷை
நினைத்தபடியே இருந்தது. "ச்சி இது தப்பு கௌசி.. இன்னொருவனுக்கு நீ நிச்சயம் ஆனவள்.. விக்னேஷை நினைக்காதே" என்று மூளை எச்சரிக்க "இவனை எப்படி நினைக்காமல் இருப்பது.. குழந்தையின் கையில் உள்ள பொம்மையைப் பிடுங்கியது போல இருக்கிறதே" என்று மனம் கிடந்து அடித்தது.

மேலும் நிச்சயம் ஆனதில் இருந்து ஜீவா..
மதி.. விக்னேஷ் மூவரும் அவளை
வெளியே கூப்பிடுவதே இல்லை.. அதற்கு அவர்களே ஒரு காரணம் கற்பித்தனர்..

"கௌசிக்கு நிச்சயம் ஆயிருச்சு..
எப்படியும் குருகிட்ட பேசிட்டு இருப்பா..
அவளும் கொஞ்சம் அவனைப் பற்றி
தெரிந்து கொள்ளட்டும்" என்று ஜீவா
அனைவரும் கூடியிருந்த போது தன்
அன்னையிடம் சொன்னான்.

விக்னேஷும் எப்போதாவது
கூப்பிடுவான்.. அதுவும் பக்கத்தில்
நான்சியை வைத்துக்கொண்டு.. அவன்
கேட்பதற்கு மட்டும் பதிலை சொல்லிவிட்டு வைத்து விடுவாள்.

நிச்சயம் ஆன ஒன்றரை மாதத்தில்
இருந்து கௌசியின் வழக்கம் இதுவே..
காலையில் வேலைக்கு செல்வது..
மாலை வந்து தன்னுடைய அறையை
சாத்திக் கொண்டு படுக்கையில் கிடந்து
எதையாவது வெறித்துக் கொண்டிருப்பது. இல்லையென்றால் ப்ரௌனியுடன் இருந்து, எங்கோ பார்வையைப் பதித்தபடி அதை நீவிக் கொண்டு இருப்பாள். இப்போது வேலை வேண்டாம் என்று சொல்லவே அதற்கும் சரி என்று விட்டாள். பட்டாம்பூச்சியாய் மூவருடன் சுற்றித் திரிந்தவளுக்கு அவர்களைப் பார்க்க முடியாமல் மனம் அழுதது.

"பாரு ஜெயா.. எம் பொண்ணுக்கு
பொறுப்பு நல்லாவே வந்திருச்சு.. எப்படி
மாறிவிட்டாள் பார்.. " என்று அவர்
பெருமையாகப் பேசிக்கொண்டு இருக்க
ஜெயாவிற்கு தான் உள்ளுக்குள் ஏதோ
நெருடலாய் இருந்தது. ஏனோ கல்யாணப் பெண்ணிற்கு உண்டான கலை கௌசியிடம் இல்லாததைக் கவனித்தார் ஜெயா. கேட்கலாமா என்று நினைத்தவர் "சரி பிறந்த வீட்டை விட்டுப் போகும் கவலையாக இருக்கும்" என்று நினைத்து அவளிடம் அப்புறம் இதைப் பற்றிப் பேசுவோம் என்று விட்டு விட்டார்.

கல்யாணத்திற்கு ஒருவாரம் முன்பே
எல்லோரும் கௌசியின் வீட்டில் தங்க
ஆரம்பித்திருந்தனர். அப்போதும் கௌசி
அறையிலேயே கிடந்தாள். யாரிடமும்
எதுவும் பேசாமல் அறைக்குள்ளேயே
நத்தையாய்ச் சுருங்கினாள். திருமண
நாளை எல்லோரும் ஆவலுடன்
எதிர்பார்க்க கௌசிகாவிற்கு "ஏதாவது
நடந்து கல்யாணம் தானாக
நின்றுவிடாதா" என்று இருந்தது. காரணம் குருவுடன் மனம் ஒன்றி வாழவே முடியாது என்று கௌசிகாவிற்கு நன்கு தெரிந்தது.

"அம்மா..." என்று கல்யாணத்திற்கு
வாங்கி வைத்த சீர்களை பார்த்துக்
கொண்டிருந்த ஜெயாவைக் கூப்பிட்டாள்
சந்தியா.

"என்னடி..." என்று கேட்டவரிடம்
"கல்யாண ப்ளவுஸ் மதி அண்ணி
குடுத்துவிட்டாங்க .. ஆனால் கௌசி
எங்கே.. அவளைக் காணோம்" என்று
கேட்டாள் சந்தியா.

"ஏன்டி.. நான் என்ன மடியிலா
வச்சிருக்கேன்... இங்க தான் இருப்பா..
போயிப் பாரு.." என்று வேலையில்
மூழ்கியிருந்தவர் எரிச்சல் பட "அம்மா..
நாளைக்கு எனக்கு டெஸ்ட் இருக்கு.. நான் போய் செமஸ்டர்க்கு படிக்கிறேன்.. நீங்க குடுத்திடுங்க" என்று அவள்
பறந்துவிட்டாள்.

கௌசியைத் தேடி கௌசியின்
அறைக்குச் சென்ற ஜெயா அவள் அங்கு
இல்லாது போகவே அந்த ப்ளவுஸை
கௌசியின் பெட்டில் வைத்துவிட்டுத்
திரும்பியவர் அப்படியே நின்றார்.

யாரோ விசும்பும் சத்தம் கேட்டவர்.. அது
பாத்ரூமிலிருந்து வர கௌசிதான்
அழுவது என்று கண்டுபிடித்தார்.

எதற்காகவும் இல்லை... அந்த
நான்சியால் தான்.. கௌசிக்கு போன்
செய்தவள் "ஹாய் கௌசி... நான் தான்
நான்சி பேசறேன்.. எப்படி இருக்க?
எப்படியும் கல்யாணப் பொண்ணு
ஜாலியாதான் இருப்ப..." என்று நான்சி
சிரிக்க கௌசி கண்களை எரிச்சலும்
கோபமுமாக இறுக மூடித் திறந்தாள்.

"சொல்ல வந்த விஷயத்தை
சொல்லிடறேன் கௌசிகா .. இன்னிக்கு
விக்னேஷ் என் வீட்டுக்கு வந்திருந்தார்..
இப்போதான் கிளம்பினார்.. ரொம்ப
டயர்டா இருக்க மாதிரி தெரியறார்..
கொஞ்சம் பாத்துக்கங்க.." என்று அவள்
அக்கறையைக் காட்ட அவள் பேச்சு
கௌசிக்கு நெஞ்சு வரை கசந்தது.
விக்காவிற்கு அவள் வீட்டில் என்ன
வேலை என்று நினைக்கவே கண்கள்
கரிக்க ஆரம்பித்தது கௌசிக்கு.

"கௌசி லைன்ல இருக்கியா?" என்று
கேட்க "ம்ம்" என்று மட்டும் பதில்
அளித்தாள் கௌசி.

"எல்லா வேலைகளையும் நல்லா
கத்துக்கோ யாராச்சும் கிட்ட கேட்டு..
இன்னும் மேரேஜ்-க்கு ஒரு வாரம் தான்
இருக்கு. உனக்கு அம்மா இருந்திருந்தால் இது எல்லாம் சொல்லிக் குடுத்திருப்பார்கள்.. அவங்க தான்" என்று அவள் பேசப் பேச கௌசிகா கட் செய்து விட்டாள்.

அவள் தெரிந்து பேசுகிறாளா இல்லை
தெரியாமல் பேசுகிறாளா என்று
கௌசிக்குப் புரியவில்லை.. ஆனால்
அவள் பேச்சு கௌசியை ரொம்பவுமே
பாதித்து விட்டது. பாத்ரூமிற்குள்
சென்றும் அழுகை அடங்கவில்லை
கௌசிக்கு. இன்னும் ஒருவாரம் என்று சொன்னதே காதில் ஒலித்தது.

கௌசிக்கு தன் வாழ்க்கையை நினைத்து மிகவும் பயமாக இருந்தது. அழுது முடித்தவள் தன் டி சர்ட்டால் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வர தன் மூத்த அத்தை ஜெயா பெட்டில் தன் டைரியுடன்
உட்கார்ந்திருப்பதைக் கண்டு
பேயறைந்தால் போல நின்று விட்டாள்.
அவள் அந்த டைரியைப் படித்துக்
கொண்டு இருந்த போது தான் நான்சி
கூப்பிட்டது. அவள் பேசிய பேச்சில் மறந்து பெட்டின் மீதே வைத்து விட்டுச்
சென்றிருந்தாள்.

"அ... த்... தை" என்று நடுங்கிய குரலுடன்
பக்கத்தில் போக ஜெயா அவளைக்
கேள்வியாய்ப் பார்த்தார்.

"யாருடி அந்தப் பையன்?" - ஜெயா
ஆதங்கமானக் குரலில்.

"....." - கையைப் பிசைந்து கொண்டே
பதில் பேசாமல் நின்றாள் கௌசி.

போய்க் கதவைச் சாத்தி தாழிட்டு விட்டு
வந்தவர் தன் அண்ணன் மகளை அருகில் இழுத்து "சொல்லுடி என்னத்த மனசுல வச்சிட்டு இப்படித் திரியற?" என்று கேட்ட அவரின் குரலே கரகரத்தது.

அத்தையின் குரலில் நிமிர்ந்தவள்
அவரின் கண்களில் கண்ணீர் கோட்டைக் கண்டாள்.. அவ்வளவு தான்.. தன்னைப் பாசமாய் வளர்த்தவரின் கண்ணில் கண்ணீரைக் கண்ட கௌசியும் அழுதுவிட்டாள்.

"அத்தைதைதைதை......" என்று அவரைக்
கட்டிக் கொண்டு அழுக ஆரம்பித்து
விட்டாள். கௌசியின் கண்ணீர் வந்து
அவரின் தோளை நனைக்க அவளை
விலக்கிப் பார்க்க கௌசி உடல் தளர்ந்து
போனவள் போல குறுகிக் கொண்டு
அழுக அவளைப் பார்க்கப் பார்க்கப்
அவருக்கு உள்ளுக்குள் வேதனை ஆனது.

"கௌசி...கண்ணு... இங்க பாரு.. எதுக்கு
அழற தங்கம்.. என்னடா ஆச்சு.. இந்த
டைரியில் இருப்பதற்கும் நீ அழுவதமும்
எனக்கு பயமா இருக்கு டா.. என்னன்னு
சொன்னாத் தானே தெரியும்" என்று
அவளின் கண்களைத் துடைத்து விட்டுக்
கேட்டார்.

"அத்தை...." என்று அழுகையில்
விக்கினாள்.

"சொல்லு கௌசி.. என்ன இதெல்லாம்"
என்று கேட்டவர் அவளை அழைத்துச்
சென்று படுக்கையில் உட்கார வைத்து
தானும் படுக்கையில் உடன் அமர்ந்தார்.

சிறிது நேரம் அழுதவள் "நான் ஒருத்தன
லவ் பண்ண அத்தை.. ரொம்ப நாளாவே..
ஆனா அது அவருக்குத் தெரியாது..
அப்பா கல்யாணத்தைப் பத்தி பேசுனாரு..அப்போ சொல்லலாம்-னு நினைச்சப்ப தான். அவன் இன்னொரு பொண்ணும் லவ் பண்ணிட்டு இருக்கிறது தெரிஞ்சுது. அப்பாக்காக மட்டும் தான் கல்யாணத்துக்கு சம்மதிச்ச அத்தை.. ஆ..னா.. ஆனா.. என்னால அவனை மறக்க முடியல அத்தை" என்று அவர் மடியில் விழுந்து கதறினாள்.

அவள் அழுதே பார்க்காத ஜெயா.. கௌசி அழுவதை.. அதுவும் ஒருவன் மேல் காதல் கொண்டு அழுவதைக் காண அவளுக்காக அவர் மனம் அடித்தது.

"கௌசி எந்திரி.." என்று அவளை
எழுப்பியவர் "இங்க பாரு கௌசி.. நான்
கேட்பதற்கு பதில்... இங்க பாரு என்னப்
பாரு.. நீ அவன காதலிச்சுட்ட.. ஆனா
அவன் இன்னொருத்திப் பின்னாடி
போயிட்டான்... விடு.. ஆனா அதுக்காக நீ
இந்தக் கல்யாணத்தில்
விளையாடணுமா" என்று கேட்டு அவளை அதிர வைத்தார்.

அத்தை என்று ஏதோ சொல்ல வந்தவளை தடுத்து தன் பேச்சைத் தொடர்ந்தார் ஜெயா. "இங்க பாரு.. இஷ்டம் இல்லாம நீ இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இப்படிக் கஷ்டப்படற.. இன்னும் கல்யாணத்துக்கு அப்புறம் நீ இதை விட அனுபவிப்ப.. அந்தப் பையன் குருவோட உன்னால வாழ முடியுமா.. நீ வேணும்னா சொல்லு நான் அண்ணன் கிட்ட பேசற" என்று அவர் சொல்ல கௌசி மறுப்பாகத்
தலை அசைத்தாள்.

அவரின் கையைப் பிடித்து யாசிப்பது
போல வைத்தவள் "அத்தை.. அப்பா
என்னால தான் இப்போ ரொம்ப
சந்தோஷமா இருக்காரு அத்தை..
நீங்களே பாக்குறீங்கள.. இப்போ எப்படி
துள்ளித் திரிஞ்சிட்டு இருக்காருன்னு..
அம்மா இல்லாம இவ்ளோ நாள்
கஷ்டப்பட்டு வளத்துட்டாரு அத்தை..
என்னால எதுமே அவருக்கு பண்ண
முடியல அத்தை.. இதையாவது நான்
அவருக்காக பண்றேன்.. அப்பாக்கிட்ட
மட்டும் சொல்லீறாதீங்க அத்தை" என்று
அவரின் கைகளின் மேலேயே
நெற்றியைச் சாய்த்து அழுதாள்.

"அதுக்காக... நீ பிடிக்காம அங்க எப்படி டி
போய் இருப்பே" என்று கேட்ட ஜெயாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

"நான் நினைச்சது தான் நடக்கல.. அவரு
நினைச்சதாது நடக்கட்டும்" என்று கௌசி முடிக்க ஜெயாவிற்கு மனசு இன்னும் கேட்கவில்லை.

"அத்தை என் மேல சத்தியமா
யாருகிட்டையும் சொல்லக் கூடாது" என்று ஜெயாவின் கையை எடுத்துத் தன் தலை வைத்துக் கேட்டாள்.

"ஏய்ய்... என்ன கௌசி இது... கையை
விடு" என்று அவர் உருவப் பார்க்க கௌசி அவரின் கையை உடும்பாகப் பற்றி இருந்தாள்.

"இல்ல அத்தை... என் மேல சத்தியம்
பண்ணுங்க" என்று பிடிவாதமாகக் கேட்க, "சரிடி.. சரி.. உன் மேல சத்தியமா
யாருக்கும் சொல்ல மாட்டேன்.. சரியா..
கையை விடு" என்று கையை உருவிக்
கொண்டவர் அழதேவிட்டார்.

சின்ன வயதில் இருந்து தான் தூக்கி
வளர்த்தவள்.. விளையாட்டுத் தனமாக
சுற்றி வந்தவள் இன்று இவ்வளவு
இப்படிப் பேசுவது அவருக்கு கண்களைக் கரித்து விட்டது.

"நீ இவ்வளவு மெட்சூர்ட்டுன்னு
நினைக்கல கௌசி" என்று கண்களைத்
தன் சேலைத் தலைப்பால் துடைத்தபடி
சொன்னார் ஜெயா.

"எனக்கு அப்பா சந்தோஷம் தான்
முக்கியம் அத்தை" என்று சொன்னாள்
எங்கோ வெறித்தபடி. ஆனால் அவளின்
மனதிற்கு மட்டுமே தெரியும் விக்காவின்
வார்த்தைக்காக என்றும். அவனை இந்த
ஜென்மத்தில் மரப்பதும் ஒன்று
மரணிப்பதும் ஒன்று என்பதை அவள்
நன்றாக உணர்ந்தாள்.

வெளியே சென்று வந்த வரதராஜனின்
குரல் கேட்க கண்களைத் துடைத்துக்
கொண்டு எழுந்த ஜெயா, கௌசியின்
தலையை வருடி "உனக்கு எல்லாமே
நல்லதா அமையும் டி" என்று அவளின்
என்று அவளின் கன்னத்தைப் பிடித்து
கண்களைத் துடைத்து விட்டார்.

"மூஞ்சியைக் கழுவிட்டு வா.. போய்
சாப்பிடலாம்" என்றுவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார்.

மூஞ்சியைக் கழுவித் துடைத்துவிட்டு
வெளியே வர விக்னேஷ், ஜீவா, மதி என
மூவரும் உள்ளே நுழைந்தனர்.
அவர்களைப் பார்த்து கஷ்டப்பட்டு
புன்னகையை வரவழைத்தவள்
விக்னேஷைக் காண முடியாது ஜெயா
அத்தையை நாடிச் சென்றாள். மதி தான்
கௌசியின் கருவலைத்தையும் ஓய்ந்த
தோற்றத்தையும் கவனித்தாள். ஆனால்
விக்னேஷும் ஜீவாவும் அதற்கு வேறு
மாதிரி காரணத்தைக் கற்பித்தனர்.

"என்னடி உன் ஆள் கூட செம கடலையா
டே அன்ட் நைட் ஃபுல்லா.. கண் எல்லாம்
சிவந்து டார்க் சர்கில்ஸ் வந்திருக்கு.."
என்று வம்பிழுத்தபடி விக்னேஷ் சென்று
அவளின் தோளைச் சுற்றி கை போட்டு
நின்று கேட்க.. எப்போது அவன்
வம்பிழுத்தாலும் இனிப்பவளுக்கு இன்று வேப்பங்கொழுந்தாய் கசந்தது. அதுவும் இன்னொருவனுடன்... அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப்
போகிறவன் என்றாலும் அவளால் ஏனோ மனதளவில் அதை ஏற்க முடியவில்லை.

ஒரு வெற்றுப் புன்னகையையே பதிலாய் அளித்தவள் தன் அத்தையிடம் சென்று நின்று கொண்டாள் உதவி செய்கிறேன் என்ற பெயரில்.

"பார்ராரா...... நம்ம கௌசி வேலை
எல்லாம் செய்யறா... கல்யாணத்துக்கு
அப்புறம் முழு நேரக் குடும்பத் தலைவி
ஆகப் போறாள்" என்று ஜீவா சிரிக்க
விக்னேஷும் ஜீவாவும் ஹைபை அடித்துக் கொண்டனர்.

"ஏய்ய்ய் எல்லாரும் ஹால்ல போய்
உக்காருங்கடா... சும்ம
தொணதொணன்னு" என்று கௌசியின்
நிலையை அறிந்த ஜெயா எரிச்சலைக்
காட்டினார் மகன்களிடம்.

"ஏன் பெரியம்மா.. அடுப்புல இருந்து
இறக்குன குக்கர் மாதிரி இருக்கீங்க.. சரி
விடுங்க.. ஏய் நீ வா உன்கிட்ட பேசி
எவ்வளவு நாள் ஆச்சு" என்று கௌசியின் கையைப் பிடித்து இழுக்க அவன் கையிலிருந்து தன் கையை கௌசி உருவிக் கொண்டாள்.

"நான் வரலை.. வேலை இருக்கு" என்று
முதுகைக் காண்பித்து திரும்பிக்
கொண்டாள்.

"அவதான் வேலை இருக்குன்னு
சொல்றாள்ல... அவ வருவா.. நீ மூனு
பேரும் போய் உட்காருங்க" என்று ஜெயா
சிடுசிடுத்தார்.

விக்னேஷிற்கு முதல்முதலாய் கௌசி
இப்படி விலகி நின்றது என்னவோ
செய்தது.. ஆனால் அது என்ன உணர்வு
என்று அவன் அறிய முற்படவில்லை..
கோபம் கொண்டவனாய் வந்து ஹாலில்
வந்து அமர்ந்து கொண்டான். அவன்
பக்கத்தில் வந்து எதுவும் பேசாமல்
அமைதியாய் அமர்ந்தனர் ஜீவாவும்
மதியும். மதிக்கு ஏதோ நெருடலாக
இருந்தது. கணவனிடம் தன்
எண்ணத்தைச் சொல்லி வாங்கிக் கட்டிக்
கொள்ளவும் அவள் தயாராக இல்லை.
தன்னை சிந்தனையிலேயே மூவரும்
அமர்ந்திருந்தனர்.

உள்ளே கௌசி தன் அத்தையின்
தோளில் நின்றபடி சாய்ந்து கண்ணீரை
உதிர்த்துக் கொண்டிருந்தாள். அவளின்
கண்ணீரை உணர்ந்தவர் விரலை
வைத்து பேசாதே என்று எச்சரித்தார்.
கண்களைத் துடைத்துவிட்டவருக்கும்
கண்ணீர் வழிந்தது. அதற்குள் மாடிக்கு
சென்றுவிட்டு கீழே வந்த வரதராஜன்
விக்னேஷ் ஜீவா மதி மூவரையும்
வரவேற்று விட்டு சமையல் அறைக்குள்
நுழைய அதற்குள் கௌசியும் ஜெயாவும்
கண்ணீரின் சுவடில்லாமல் நின்றனர்.

"என்னமா... சாப்பாடு ஆச்சா... பாருங்க
அவங்களும் வந்துட்டாங்க.. ஆச்சுன்னா
எடுத்து வைங்க" என்று வரதராஜன்
சொல்ல சாப்பட்டை எடுத்துப் பரிமாறினர்.

"நீயும் உட்காரு கௌசி..." என்று ஜெயா
சொல்ல விக்னேஷின் அருகில் மட்டும்
இருந்த இடத்தில் உட்கார்ந்தாள் கௌசி.
விக்னேஷ் இறுகின முகத்துடன்
உட்கார்ந்து சாப்பிட்டானே தவிர மறந்தும்
கௌசியின் பக்கம் திரும்பவில்லை.
அவன் கோபமாக இருக்கிறான் என்று
அவளுக்கு நன்கு புரிந்தது.

சாப்பிட்டுவிட்டு எழுந்தவனுடன் தானும்
அரை சாப்பாட்டிலேயே எழுந்து வந்து
கையை கழுவினாள். வெளியே
வந்தவனிடம் "விக்னேஷ்" என்று
அழைத்தாள்.

"என்ன சொன்ன?" என்று திரும்பியவன்
முறைப்பாக அவளிடம் கேட்டான்.

"விக்னேஷ்... ன்னு" என்றாள் கௌசிகா.

"ஓ... விக்கா இப்போ விக்னேஷ்
ஆயிட்டேன்ல..." என்று நக்கலும்
கோபமுமாகக் கேட்டவன் "புதுசா உனக்கு ஆள் வந்துட்டோனே எங்களை எல்லாம் தர்ட் பெர்சன் ஆக்கிட்டயாக்கும்" என்று கேட்டான்.

"ப்ளீஸ் டா.. இப்படி எல்லாம் பேசாத...
இப்போ எதுக்கு இந்தக் கோபம்" என்று
கேட்டவளுக்கு கண்ணீர் நான் வரவா
என்று கேட்க அதை அடக்கி உள்ளே
வைத்தாள்.

"இல்லை டி.. நான் என் லிமிட்லையே
இருந்துக்கிறேன்.. உனக்கு நான்
கையைப் பிடித்தால் கூடப் பிடிக்கவில்லை விடு.. உனக்கும் நிச்சயம் ஆயிருச்சு ஸோ அதுதான் கரெக்ட்.. இனிமேலும் பழைய மாதிரி இருந்தா குரு என்ன நினைப்பான்..
அவன் இடத்தில் நானே இருந்தாலும்
கோபம் தான் வரும்" என்றவன் வாய்
போனப் போக்கில் பேசிக் கொண்டு இருந்தான். ஆனால் கௌசி தான்
கண்ணீர் முத்துக்களை உதிர்த்துக்
கொண்டு இருந்தாள்.

அவளது கண்ணீரைக் கண்டு கைகளால் அதைத் துடைக்கச் சென்றவன் கையை மறுபடியும் கீழே இறக்கினான். "கௌசி.. இப்போ என்ன சொல்லிட்டன்னு அழுகற.. கண்ணைத் துட" என்று சொல்ல அவள் அப்படியே நின்றிருந்தாள்.

"சாரி டா... உன்ன ஹர்ட் பண்ணிருந்தா"
என்று விசும்பியபடி மறுபடியும் அழுதாள்.

"ஏய்... கண்ணைத் துடைக்கப் போறீயா
இல்லையா டி" என்று அவன் அடிக்
குரலில சீற அவளின் அழுகை அவன்
சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்றது.

"என்ன கௌசி.. இப்போதெல்லாம்
எப்போ பார்த்தாலும் அழறே.. கல்யாணப் பொண்ணுனா நல்ல கலகலன்னு இருக்க வேணாமா" என்றவன் கைகளைக் கட்டியபடி நின்றான். அவளின் கண்ணீரைத் துடை என்று அவன் மூளை உந்தியதே அதற்குக் காரணம்.

கண்களைத் துடைத்தவள் "என் மேல
கோபமா டா" என்று விவரிக்க முடியாத
சோகக் கண்களுடன் கேட்க விக்னேஷ்
அவளின் பார்வையில் அடிப்பட்டுப்
போனான்.

இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று சத்தியமாக அவனுக்கு புரியவில்லை.. ஆனால் அவளின் சோகம் அவனைத் தாக்கியது. அவனைப் பொருத்த வரை கௌசிகா குருவுடன் நன்றாகப் பேசி பழகி புரிந்துகொண்டு இருக்கிறாள். ஒருவேளை நாம பேசுனதுல இவ இப்படி
அழறாளோ என்று பலவாறு யோசித்தான். தலையைச் சிலுப்பி சுயநினைவிற்கு வந்தவன் "அதெல்லாம் இல்லைடி. உன்கிட்ட ஒரு குட் நியூஸ் சொல்லத் தான் வந்தோம்" என்று பேச்சின் திசையை மாற்றினான்.

அவன் குட் நியூஸ் என்றதும் கௌசி
அவனைப் புருவ முடிச்சுடன் பார்க்க.. மதி, ஜீவா, வரதராஜன், ஜெயா எல்லோரும் ஹாலிற்கு வந்தனர்.
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-12

"எனக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைத்திருக்கு
கௌசி.. அது விஷயமா கனடா
போறோம் நானும் என் டீம் மெம்பர்ஸ்
மூன்று பேரும்.." என்றான் விக்னேஷ்
குஷியாக.

"சூப்பர் டா.. கங்கிராட்ஸ்..." என்றாள்
கௌசி உண்மையான மகிழ்ச்சியோடு.
இந்த மாதிரிப் ப்ராஜெக்ட் அவனின் கனவு என்பது அவள் நன்கு அறிந்த விஷயமே. அதைப் பத்தி நிறைய நாட்கள் தூங்காமல்
உழைத்திருக்கிறான் என்று கௌசிக்குத் தெரியும். அவளுடன் சேர்ந்து வரதராஜனும் ஜெயாவும் வாழ்த்தினர்.

"எப்போப்பா விக்கி கிளம்பனும்?" எனக்
கேட்டார் வரதராஜன்.

"நம்ம கௌசி கல்யாணம் முடிஞ்ச
அன்றே.. மதியம் மாமா" என்று விக்னேஷ் சொல்ல எல்லோருமே வாயைப் பிளக்க கௌசி மட்டும் அமைதியாய் இருந்தாள்.

"என்ன விக்கி.. கல்யாணம் முடிஞ்சு ஒரு
வாரம் கழித்துப் போனா கிடக்கு" என்று
ஜெயா அங்கலாய்த்தார்.

"இல்லை பெரியம்மா.. நான் முன்னாடியே போக வேண்டியது.. இதோ இவளின் கல்யாணத்தை முடித்துக் கொண்டு தான் போக வேண்டும்ன்னு டைம் எக்ஸ்டன்ட் பண்ணிருக்கேன்" என்றான் அனைவரையும் பார்த்து.

"என்ன கௌசி விக்னேஷ் அன்னிக்கே
கிளம்பறேன்னு நிக்கறான்.. எதுவும்
சொல்லாம நிக்கற.. சண்டை போட்டு
இருக்க வை அவனை" என்று வரதராஜன் கௌசியிடம் சொல்ல.. கௌசியோ விக்னேஷிடம் என்ன சொல்லுவது என்று தெரியாமல் அவனைப் பார்த்தாள். அவளால் என்ன சொல்ல முடியும்.. என் கல்யாணத்தில் இருந்து என்னை வாழ்த்து என்றா..

"மாமா.. நானும் புதுசா கம்பெனி ஓனா
ஸ்டார்ட் பண்ணப் போறேன்..
கோயம்புத்தூர்ல கௌசி கல்யாணம்
முடிஞ்சு 2 வாரத்துல கிளம்பிருவவோம்
நானும் மதியும்" என்று ஜீவா சொன்னான்.

"ஆமாம் அண்ணா.. இவனுக்கு ரொம்ப
நாள் ஆசை.. அதான் நாங்களும் எதுவும்
சொல்லலை.. கோயம்புத்தூர் என்றால்
மதி அம்மா அப்பாவும் இருக்கிறார்கள்
இல்லையா.. நமக்கும் கொஞ்சம்
தைரியமாக இருக்கும்" என்றார் ஜெயா.

"ரொம்ப சந்தோஷம் ஜீவா... நல்லா
பண்ணு நீயும்.. எப்படியோ உங்க
எல்லாருக்கும் புடிச்ச மாதிரி வாழ்க்கை
அமைஞ்சிருச்சு.." என்று வரதராஜன்
சந்தோஷப்பட ஜெயாவின் பார்வையும்
கௌசியின் பார்வையும் சந்தித்து
மீண்டது.

கௌசிக்கு விக்னேஷ் தன்
கல்யாணத்தன்று போறதே சரியாகப்
பட்டது. அவளால் அவனை எதிர்கொள்ள
முடியாது என்று அவளுக்கு நன்றாகவே
தெரியும். ஆனால் ஜீவாவும் போகிறேன்
என்று சொல்லுவது அவளுக்கு வலித்தது. ஒரே சமயத்தில் இரண்டு பேரையும் பிரிய வேண்டுமே என்று மனம் சோர்ந்தது. மதியையும் இனி அவ்வளவாகப் பார்க்க முடியாது என்று எண்ணியவளுக்கு முகம் சுருங்கியது.

"சரி மாமா.. நான் கிளம்பறேன்" என்று
எழுந்தவன் "பெரியம்மா.. அம்மா ஏதோ
மண்டபத்துக்கு-ன்னு சொன்னதெல்லாம் வாங்கிட்டாங்கலாம்.. 7 மணிக்கு தான்
வந்தாங்களாம்.. நாளைக்கு வரேன்னு
சொன்னாங்க" என்ற விக்னேஷ் கௌசி
உட்பட அனைவரிடமும் சொல்லிவிட்டுக்
கிளம்பினான்.

"சரி ஜீவா.. நம்மளும் கிளம்பலாம்.. இரு
உன் அப்பாவுக்கும் டிபன் எடுத்துட்டு
வந்திடறேன்.." என்று சமையல்
அறைக்குள் புகுந்து விட்டார்.

ஜீவாவும் வரதராஜனும் ஏதோ பேசியபடி
மாடி ஏற மதி இடுங்கிய கண்களுடன்
கௌசியைப் பார்த்துக் கொண்டு
இருந்தாள் மதி. மதியின் பார்வை
தன்னைத் துளைப்பதைக் கண்ட கௌசி
எழுந்து தன் அறைக்குச் செல்ல மதியும்
அவள் பின்னே சென்றாள்.

தன் பின்னே நுழைந்தவளைக் கண்ட
கௌசி "மதி.. நீ குடுத்த ப்ளவுஸ் நல்லா
இருக்கு.. ஸ்டிச்சிங் எல்லாம் பர்பக்ட்"
என்று பேச்சின் திசையை வேறு பக்கம்
கொண்டு சொல்ல முயன்றாள் கௌசி.

"சரி கௌசி.. இதுல எது ரிசப்ஷன்
ப்ளவுஸ்.. எது முகூர்த்த ப்ளவுஸ்-ன்னு
சொல்லு" என்று கைகளை மார்பிற்குக்
குறுக்காகக் கட்டிக்கொண்டு கௌசியைப் பார்த்துக் கேட்டாள்.

"அ... அது..." என்று ப்ளவுஸைப்
பார்த்தவள் எதுவும் பேசவில்லை..
இஷ்டமான கல்யாணமாக
இருந்திருந்தால் எல்லாம் தெரிந்திருக்கும்.. ஆனால் எதுலையும்
நாட்டம் இல்லாமல் திரிபவளுக்கு எது
மேலேயும் நாட்டமும் செல்லவில்லை
கவனமும் இல்லை.

"கௌசி... உனக்கு கல்யாணத்துல
இஷ்டம் இல்லைன்னு நல்லாவே
தெரியுது" என்று பட்டென்று
சொல்லிவிட்டாள்.

"உன் இளைத்த உடம்பும்..
கருவலையமுமே சொல்லுது.. என்ன
கௌசி மறைக்கற நீ...?" -மதி

"ஆமாம் மதி... இஷ்டம் இல்லைதான்..
என்னப் பண்ண சொல்ற..
எல்லோருக்கும் புடிச்ச மாதிரி வாழ்க்கை
அமைஞ்சிருதா என்ன.. அது மாதிரி
நினைச்சுக்க வேண்டியது தான்" என்றாள் கௌசி இறுகிய முகத்துடன்.

"இது நம்ம விளையாடற பொருள் இல்லை கௌசி... லைஃப் புல்லா ஒருத்தர் கூட ட்ராவல் பண்ணப் போறோம் உனக்குப் புரியுதா.. நீ என்னடான்னா இப்படி அசால்ட்டா இருக்க" என்று கௌசியின் மீது கோபத்தைக் காட்டினாள் மதி. தன்
வாழ்க்கைக்கு அப்படித் தன் தந்தையிடம்
பேசியவள் இப்படித் தன் வாழ்க்கைக்கு
வாய் மூடிக்கொண்டு இருப்பது
அவளுக்கு ஆதங்கமாகவும் கோபமாகவும் இருந்தது.

"எல்லாம் சரி ஆகிவிடும் விடு மதி"
என்றாள் கௌசி வெற்றுக் குரலில்.

"நீ வேணும்னா சொல்லு.. நான் ஜீவா
கிட்ட சொல்லி பேசச் சொல்றேன்" என்று
மதி சொல்ல கௌசி அதிர்ந்தாள்.

"எனக்கு இந்தக் கல்யாணம் இஷ்டம்
தான்னு சொல்லிடுவேன் மதி" என்று
மனதைக் கல்லாக்கிக் கொண்டு கௌசி
சொல்ல மதிக்கு கோபம் வந்து விட்டது.

"கௌசி நீ தைரியமானவள்-னு
நினைச்சேன்.. இப்படி கோழை என்று
நினைக்கலை.. என்ன பிரச்சனை-ன்னு
சொல்ல மாட்ற.. வேண்டாம் விடு..
உனக்காக நான் யோசிக்கிறேன் பாரு..
என்ன சொல்லனும்.." என்று தன்னைத்
தானே திட்டியவள் "சரி கௌசி... உன்
வாழ்க்கை.. உன் இஷ்டம்" என்று
சொன்னவள் அறையை விட்டு வெளியே
வர வரதராஜனும் ஜீவாவும் கீழே வந்தனர்.

ஜெயா ஹாலில் தான் உட்கார்ந்திருந்தார். கௌசியும் மதியும் பேசியது அவருக்கு நன்றாகவே கேட்டது. ஆனால் மருமகளிடம் கேட்டது போலக் காட்டிக் கொள்ளவில்லை. பிறகு அவர்களும் கிளம்பிச் செல்ல கௌசி தான் தனக்குள் மருக ஆரம்பித்தாள்.

நாட்கள் முயல் வேகத்தில் நகர்ந்து குரு
கட்டியத் தாலியோடு அவனோடு
மணமேடையில் ஓமப் புகையின் முன்
அமர்ந்திருந்தாள் கௌசிகா. "முடிந்தது
இனி அவ்வளவுதான்" என்று
நினைத்தவளுக்குக் கண்ணில் நீர்
திரையிட்டது. நிமிர்ந்தவள் இடது பக்கம்
எதேச்சையாக நின்று கொண்டு இருந்த
விக்னேஷைப் பார்த்தாள். அவனும்
அவளையேதான் பார்த்துக் கொண்டு
இருந்தான். அவள் கண்களில்
கண்ணீரைப் பார்த்து புருவத்தைச்
சுருக்கியவன் பின் ஓமப் புகையில் என்று நினைத்துக் கொண்டான்.

கல்யாணத்திற்கு நான்சியும்
வந்திருந்தாள். "கௌசி நீ அவளைக்
கூப்பிட்டாயா?" என்று டச்சப் செய்வது
போல வந்து மதி கேட்க இல்லை என்று
தலை அசைத்தாள் கௌசி.

"இதைப் பார்த்தாலே எனக்குப் புடிக்கல..
கூப்பிடாமையே சிங்காரிச்சுட்டு
வந்துட்டா.. என்ன ஜென்மமோ" என்று எரிச்சல் பட்ட மதி.. தன் மாமியார் கூப்பிட
சென்று விட்டாள். கௌசியின் கண்கள்
விக்னேஷைக் கவனித்தது. அவள்
சென்று விக்னேஷின் முன் எப்படி
இருக்கேன் என்பது போல நின்றதும்.
விக்னேஷ் அவள் காதில் ஏதோ
சொன்னதும். அதற்கு அவள் சிரித்தும்
கௌசிக்கு எல்லா உணர்வுகளும்
வடிந்தது போல இருந்ததும்.

பின் விக்னேஷிடம் பேசிவிட்டு மேலே
வந்தக் நான்சி "கங்கிராட்ஸ் குரு" என்று
கையைக் கொடுக்க குருவும் "தேங்க்ஸ்
நான்சி" என்று கையைக் கொடுத்தான்
குரு.

"நான்சி.. என்னோட ஸ்கூல் பிரண்ட்.." என அறிமுகம் செய்ய "ம்ம்" என்று மட்டும்
தலையை ஆட்டினாள்.

"கௌசியை எனக்கு நல்லாத் தெரியுமே..
நம்ம ஜூனியர் தானே ஸ்கூல்ல.. செம
போல்ட் கேர்ள்" என்றவள் கடைசியாக
சொன்ன வார்த்தையில் அழுத்தம்
கொடுத்தாள். கௌசி அவளை முறைக்க
அதற்குள் மேலே வந்த விக்னேஷ் "ஹே..
வாங்க எல்லோரும் ஒரு போட்டோ
எடுத்துப்போம்" என்று சொல்ல அவனும்
நான்சியும் சேர்ந்து குருவின் பக்கத்தில்
நிற்க ஜீவாவும் மதியும் கௌசியின்
பக்கத்தில் நின்றனர்.

மேலே போட்டோவிற்கு நின்றிருந்த
கௌசியைப் பார்த்த ஜெயாவிற்கு
வயிற்றில் ஏதோ பிசைந்தது. காரணம்
அவளின் இறுகிய பாறை முகம்.
போட்டோ எடுத்த பின் "கிளம்பறேன்"
என்று சொன்ன நான்சியை உறுத்து
விழித்தாள் கௌசிகா. ஆனால்
நான்சியோ இளநகையுடன்
சென்றுவிட்டாள். அவள் போவதையே
வெறித்துப் பார்த்த கௌசியைக் கீழே
இருந்து கண்ட ஜெயாவிற்கு
உதறலெடுத்தது.

"கடவுளே... இவள் பிடிவாதம் பிடித்து
நிறுத்தியிருந்தால் கூட
பரவாயில்லையே.. இப்படி தானே சென்று விழுந்துவிட்டு இப்படி நிற்கிறாளே.. கடவுளே எந்தப் பிரச்சினையும் வராம நீதான் காப்பாத்தனும்" என்று கடவுளை
வேண்டிக் கொண்டு கனத்த மனதுடன்
யாரோ கூப்பிட அடுத்த வேலையைக்
கவனிக்கச் சென்றார்.

பின் எல்லாம் முடிந்து குருவையும்
கௌசியையும்.. பெண் வீட்டிற்கு
அழைத்துச் சென்று ஆரத்தி எடுத்து
வரவேற்று எல்லா சம்பிரதாயங்களையும் செய்தனர்.

"சரி நான் கிளம்பறேன்.. வரதுக்கு
எப்படியும் 2 மாசம் ஆயிரும்.. " என்று
மதியத்திற்கு மேல் வீட்டிற்கு வந்து சில
சம்பிரதாயங்களை முடித்துவிட்டு
உட்கார்ந்திருந்த கௌசியிடமும்
குருவிடமும் கூறினான் விக்னேஷ்.

"ம்ம்" என்று தலை ஆட்டியவளுக்கு
வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக்
கண்ணீர் மணிகள் உதிர்ந்தன. பழைய
கௌசியாக இருந்திருந்தால் அவனை
சந்தோஷமாக அனுப்பி வைத்திருப்பாள். ஆனால் இன்றோ அவன் பக்கத்தில் இருந்தும் அவளால் எதுவும் பேச முடியவில்லை. குருவின் அருகாமையில் உட்கார முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு விகனேஷ் வந்து கிளம்பறேன் என்று சொன்ன போது.. ஏதோ முன் பின் தெரியாத இருட்டில் யாரோ தன்னை குழியில் விட்டுவிட்டு செல்வதை உணர்ந்தவளுக்கு இயலாமையால் அழுகை வந்தது.

"ஏய்... என்னது இது.. இனி குரு தான்
உன்ன வச்சிட்டு அழணும்.. நீ ஏன் அழறே" என்று குரு ஏதாவது நினைப்பானோ என்று சூழ்நிலையைக் கொஞ்சம் கலகலப்பாக ஆக்க விரும்பி பேச்சை மாற்றினான் விக்னேஷ்.

"நோ வொரிஸ் விக்னேஷ்.. இனிமேல்
கௌசி என் பொறுப்பு.. என்னை மீறி
அவளிற்கு என்ன ஆகிவிடப் போது"
என்று கௌசியின் தோளில் கை போட்டு.. கையை அவளின் தோளில் அழுத்தினான்.

அவன் கை பட்டவுடன் விக்னேஷின்
பார்வையும் கௌசியின் பார்வையும்
அவன் கை இருந்த இடத்தைத் தான்
பார்த்தது. கௌசிக்கு குருவின் செயல்
சுத்தமாகப் பிடிக்கவில்லை. காரணம்
இல்லாமல் ச்சி என்று இருந்தது.

"சரி நான் கிளம்பறேன்.. ஒன்ஸ்
அகெயின்... ஹா.. ஹாப்பி மேரிட் லைஃப்" என்றவன் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான் விக்னேஷ்.

அடுத்து கிடைத்த தனிமையில் மதி
கௌசியிடம் பேசினாள். "கௌசி சாரி.
அன்னிக்கு கொஞ்சம் கோபமாக
பேசிட்டேன்" என்றாள் வருத்தமாக மதி.

"அதெல்லாம் எதுவும் சாரி வேண்டாம்
மதி.. என்மேல இருந்த அக்கறைல தானே பேசுனே" - கௌசி முயன்று வரவழழைத்த புன்னகையோடு.

"ஹம்.. கௌசி.. கொஞ்சம் மாற ட்ரை
பண்ணு.. என்ன ஆனாலும் காலம் பதில்
சொல்லும் கௌசி.. நமக்கு புடிச்ச மாதிரி
எல்லாம் மாறிவிடும்.. நீ சந்தோஷமா இரு கௌசி.. நாங்க கோயம்புத்தூர் இன்னும் ஒன் வீக்ல கிளம்பிருவோம்.. அடிக்கடி போன் பண்ணு.. நாங்க வந்தாலும் உன்ன பாக்க வறோம் " என்றாள் மதி.

"ம்ம்" என்று கௌசி சொன்னாலே தவிர
எதுவும் பேசவில்லை.. அவளால் பேச
முடியவில்லை. அதற்குள் அங்கு வந்த
சுமதி கௌசியை அழைத்து குரு வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியது பற்றி ஆரம்பித்தார்.

மாலை கௌசி குருவின் வீட்டிற்குக்
கிளம்ப வரதராஜன், சுமதி, ஜெயா, மதி,
ஜீவா எல்லோருக்குமே கண்களில்
கண்ணீர் கோர்த்ததே தவிர கௌசிக்கு
ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. ஏன் ஜெயாவின் கணவர் சதாசிவம் மற்றும் சுமதியின் கணவர்
செந்தில்நாதனிற்குமே மனம் கனத்தது.
ஆனால் கௌசியின் முகம் இறுகி
மனமோ எங்கோ இருந்தது. (அவள் மனம் கனடா சென்றவனுடன் பின்னேயே இருந்தது)

அங்கு அனைவரிடமும் சொல்லிவிட்டுக்
கிளம்ப நேராக குருவுடன் ஓ.எம்.ஆர் இல்
உள்ள வீட்டில் கார் வந்து நின்றது. வரும்
வழியில் தன் சிந்தனைகளிலேயே
இருந்தவள் குருவின் பார்வையை
உணரவில்லை. வீடு வந்து இறங்கியதும்
இயந்திரத் தன்மையுடன் நடக்க குருவின் அக்கா வினித்ரா ஆரத்தி எடுக்க அப்போது தான் கௌசிகா வீட்டைக் கவனித்தாள். அவ்வளவு பெரிய வீட்டைப் பார்த்தாள் எந்தப் பெண்ணுக்கும் மனம் துள்ளும்.. ஆனால் கௌசியின் மனமோ சுருங்கியது. அவள் மனமும் லயிக்கவில்லை. மாமியார்
நீலவேணியோ வேண்டா வெறுப்பாக
நின்றிருந்தார். அவரது முகத்தை
வைத்தே அவருக்கு இந்தத் திருமணத்தில் அவ்வளவு விருப்பம் இல்லை என்பதை கௌசி யூகித்து விட்டாள். இருக்கிற வேதனையில் இது வேறா என்று நினைத்தவளுக்கு தலை வேறு வலிக்க ஆரம்பித்தது.

வீட்டிற்குள் வந்தவுடன் சில உறவினர்கள்
தவிர யாருமே இல்லை.. அவர்களும் ஏழு
மணிக்கு மேல் கிளம்பிச் செல்ல
வினித்ரா "கௌசி.. வா ரெடி ஆக
வேண்டாமா?" என்றபடி வந்தாள்.

"எதுக்கு?" என்று கௌசி கேட்க
எல்லோரும் அவளை விசித்திரமாகப்
பார்த்தனர். அப்போது தான் அவளுக்கு
நியாபகம் வந்தது... எதற்கு வினித்ரா
அழைக்கிறாள் என்று.

"ஏம்மா உனக்கு சடங்கு சம்பிரதாயங்கள்
எல்லாம் தெரியுமா தெரியாதா" என்று
குருவின் தாயார் நீலவேணி கேட்க "இ..
இல்லை.. வந்து.. மறந்திட்டேன்" என்று
திணறினாள் கௌசிகா.

அமைதியாக எழுந்து வினித்ராவுடன் ஒரு அறைக்குச் சென்றாள். கௌசிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதை அவள் யோசிக்கவே இல்லையே..
இதற்குத் தான் அத்தை சொன்னாங்களா.. அய்யோ கடவுளே என்னக் காப்பாத்து.. என்று மனதிற்குள் புலம்புவதைத் தவர அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. வினித்ரா அவளின் தம்பியின் அருமை
பெருமைகளை சொல்லிக் கொண்டே
கௌசியைத் தயார் செய்ய அது எதுவும்
கௌசியின் காதில் விழவில்லை.
அவளுக்கு வியர்த்துக் கொண்டே
இருந்தது.

"ஏன் உங்களுக்கு இப்படி வியர்க்குது?"
என்று வினித்ரா கேட்க "அது.. வந்து.."
என்று திணறினாள் கௌசி.

"பயப்படாதே... என் தம்பி ரொம்ப
நல்லவன்" என்று தைரியம் மூட்டினாள். அவளை தயார் செய்து குருவின்
அறைக்குள் விட்டுவிட்டுத் தன்
கணவன் மற்றும் குழந்தையுடன்
வீட்டிற்குக் கிளம்பி விட்டாள் வினித்ரா.

அறைக்குள் இருந்த கௌசிக்கு மூச்சு
முட்டுவது போல ஆகியது. கால்கள்
எல்லாம் செயல் இழந்து நடக்கக் கூடத்
தோன்றாமல் அப்படியே நின்றவள்
அப்போது தான் அறையின்
அலங்காரத்தைக் கவனித்தாள். இதயம்
நின்று நின்றுத் துடிக்க தன் கைப்
பெருவிரல் நகத்தால் உள்ளங்கையை
அழுந்தியபடி நின்றிருந்தாள். அவள்
அழுத்திய அழுத்தில் அந்த இடம் கன்றி
ரத்தம் வரும் நிலைக்கு ஆனது.

எப்படியாவது குருவிடம் இதெல்லாம்
இப்போதைக்கு வேண்டாம் என்று
சொல்லிவிட வேண்டும் என்று அவனைப் பற்றி அறியாமல் யோசித்துக்
கொண்டிருந்தாள் கௌசிகா. வினித்ரா
சொன்னது அவளுக்குக் கொஞ்சம்
தைரியத்தைத் தர நின்றிருந்தாள்.

"எ...ன்ன யோசிச்சி...ட்டு இரு..க்க
கௌசிகா?" என்று தன் பின்னால்
அருகில் நின்றபடி அவள் காதின் அருகே
குருவின் குரல் கேட்க தூக்கிவாரிப்
போட்டபடி திரும்பிப் பார்த்தவள் அவனது தோற்றத்தில் தினைத்தாள்.

இது குருவா?

தலை கலைந்து.. கண்கள் சிவப்பேறி
நின்றிருந்தவனிடம் மது வாடை வர
கௌசிக்கு உமட்டல் எடுத்தது. ஐடி
வேலையில் இருந்தவளுக்கு ஏதாவது
பார்ட்டிக்கு போகும்போது பக்கத்தில்
இருப்பவரிடம் வரும் மதுவின் நெடி
சாதரணம் தான். ஆனால் அவளுக்குத்
தெரிந்த யாரும் இப்படி மொடாக்
குடிகாரர்கள் யாரையும் பார்த்தது
இல்லை.

அவன் பார்வை வேறு வித்தியாசத்தைத்
தர கௌசிக்கு அந்த ஏசி அறையிலும்
வேர்த்தது. அவளின் உடலை மேலிருந்து
கீழ் அளந்தவனைப் பார்க்க மனதின்
தைரியம் குறைந்து கொண்டே வந்தது.
அவன் அவள் அருகே வர.. அவன் தன்
நிலையில் இல்லை என்பதை உணர்ந்த
கௌசிகா பின்னே நகர்ந்தாள்.
அவளுக்கு உள்ளுக்குள் எச்சரிக்கை மணி அடிக்க வாயைத் திறந்து பேசினாள்.

"குரு நான் உங்ககிட்டப் பேசனும்.." -
கௌசியின் குரல் சொல்லும் போதே
நடுங்கியது.

"ஹம்ம்... ப்ளீஸ் டோன்ட் ஸ்பாயில் மை
மூட்" என்று அருகில் வர.. கௌசியின்
உடல் உதறல் எடுத்தது. உள்ளமும்
நடுங்கியது. கொஞ்சநஞ்சம் இருந்த
நம்பிக்கையும் குருவின் பார்வையில்
பறந்து கொண்டு இருந்தது.

அவன் கௌசியின் தோளில் கை வைக்க வர சடாரென விலகியவள் வெளியே செல்லப் பார்க்க.. அந்தப் போதையிலும் கௌசியை ஒரே எட்டில் வந்து பிடித்துவிட்டான். துள்ளித் திமிறி விலக முயன்றவளை அவன் கரம் உடும்பாய் பற்றி வலியைத் தந்தது.

அவன் கைகள் எல்லை மீற கோபம்
வந்தவளாய் தன் முழு பலத்தைக்
கொண்டு அவனைத் தள்ளி விட்டு
அவனை முறைத்தாள். "ச்சி மனுஷனா
நீங்க.. ஒரு பொண்ணோட விருப்பம்
இல்லாம இப்படி பிகேவ் பண்றீங்க.."
என்று பயத்தை வெளியே காட்டாமல்
மறைத்து கோபமாய் அவனிடம்
சொற்களை வீசினாள்.

கோபப்படுவான் அல்லது முகம்
கன்றுவான் என்று நினைத்தவளுக்கு
ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக அவன்
முகம் ஏளனத்தைத் தத்தெடுத்திருந்தது.

"ஏன் நான் உன் கணவன் தானே?"
என்றான் ஏளனச் சிரிப்போடு.

"ஓ.. அப்போ நீங்க எனக்கு தாலி கட்டிட்டா.. என்னை என்ன வேணாலும்
பண்ணலாமா?" என்று சீறினாள் கௌசி.

"ஸோ வேற என்ன நீ எதிர்பாக்கறே? இந்த சீரியல், சினிமால வர மாதிரி உனக்கு வெயிட் பண்ணச் சொல்றியா.. எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல.. வெயிட் பண்ண ரீசணும் இல்ல" என்றான் விட்டேற்றியாக.

"நீங்க எல்லாம் படிச்சு ஒரு பிரயோஜமும்
இல்ல.. காட்டான் மாதிரி நடந்துக்கறீங்க"
என்றாள் முகத்தில் வெறுப்புடன்.

"நீ என்ன வேணாலும் சொல்லிக்க.. நான்
அதை எல்லாம் கன்சிடர் பண்ண
மாட்டேன்.. இந்தக் காதுல வாங்கி இந்தக்
காதுல விட்டிடுவேன்" என்று
போதையிலும் அழுத்தமாகப் பேச
கௌசிக்கு பயம் எடுத்தது உண்மைதான்.

"ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டான்ட்... என்ன
ஒரு மனுஷியாக ஆவது நினைச்சா..
கொஞ்ச நாள் என்னை விட்டிடு" என்றாள்
எங்கோ பார்த்தபடி.

"ஏன்?" - குரு.

"...." - கௌசிகா.

அவள் அருகில் வந்தவன் "ஏன்னு
கேட்டேன்?" என்று அவளின் தோளில்
கையை வைத்தான். ஆனால் அவனின்
கேள்வி அவன் தெரியாததைக் கேட்பது
போல இல்லை.. ஏதோ உள்ளே வைத்துக்
கொண்டு வேண்டுமென்றே கௌசியைக் காயப்படுத்தும் நோக்கம் இருந்தது.

அவன் கையைத் தட்டிவிட்டவள் "ச்சி..
உனக்கு புரியுதா.. எனக்கு நீ தொட்டா
புடிக்கலை.. அருவெறுப்பா இருக்கு"
என்று முகத்தை சுழித்து அவனிடம்
வெளிப்படையாகச் சொல்லியே விட்டாள்.

ஆனால் அடுத்து அவன் கேட்ட
கேள்வியில் கௌசிகா ஆணி அடித்தாற்
போல அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.

"உன் அத்தை மகன் விக்னேஷ்
தொட்டிருந்தால் இப்படி சொல்லிருப்பியா டி?" என்று குரு ஆங்காரமாய்க் கத்த கௌசிக்கு உலகமே நின்றுவிட்டது.
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-13

குரு கேட்ட கேள்வியில் கௌசியின் மனம் அதிர்ந்து நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடி அறையில் இருந்த மெத்தையில் அப்படியே உட்கார்ந்தாள் கௌசிகா. அவன் கேட்ட வார்த்தைகள் அவள் காதில் நங்கூரம் போலக் கேட்டது.

திருமணத்திற்கு முன்பு விக்னேஷுடன்
பழகியது உண்டு.. அவன் அவள் தோளில் கை போட்டதும் உண்டு. சிறிய வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்ததால் அது இருவருக்குமே பெரிதாகத்
தெரியவில்லை. விக்னேஷும் தோளில்
கை போடுவானேத் தவிர எல்லை மீறியது இல்லை. அவனிடம் அப்படி எண்ணமும் கடுகு அளவிற்குக் கூட
இருந்ததில்லை.அப்படி இருக்க குரு
வக்கிரப் புத்தியுடன் கேட்டக் கேள்வி..
அவனின் மீதான வெருப்பைக் காட்டியது.

மனதில் தோன்றிய வெறுப்புடன் அதைக் கண்களால் காட்டி அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ சளைக்காமல் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான். "என்னப் பாக்கற அவன் உன் தோளில் கை போடுவது.. நீ அவனிடம் ஒட்டி உட்காருவது.. ஏன்... அவனின் தட்டில் இருந்து எடுத்து நீ சாப்பிடுவதுன்னு எல்லாத்தையும் பாத்திருக்கேன்.. அப்புறம் உன்னை ஒருத்தன் கையைப் பிடித்ததிற்கு ஹீரோவிற்கு கோபம் வந்தது பார்.. ப்பா.. " என்று சொல்லக் கௌசி அவனையே பார்த்திருந்தாள் அகல விரித்த பார்வையுடன்.

மின்னல் வேகத்தில் எழுந்தவள் "உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்" என்று ஆட்காட்டி விரலை நீட்டிக் கேட்டாள். அவளிடம் அவன் நடந்த விதமே அவளை மரியாதை இல்லாமல் ஒருமையில் அழைக்க வைத்தது.

"ஏய்ய்ய்... என்ன இதெல்லாம் கை
நீட்டிட்டு.. உன் வீட்டுல இப்படி எல்லாம்
பண்ணக் கூடாதுன்னு சொல்லித்
தரலையா" என்று கேட்டபடியே அவளின்
ஆட்காட்டி விரலைப் பிடித்தவன்.. விரலை அப்படியேத் திருகி அவளின் கையை கீழே இறக்கக் கௌசி வலி தாங்க முடியாமல் துடித்தாள். ஆனால் அவனிடம் பலவீனத்தைக் காட்டக் கூடாது என்று எண்ணி கண்ணை வலியால் இறுக மூடினாலே தவிர கண்ணீரை வெளியே விடவில்லை.

பின் அவள் கையை விட்டான். நான்
கேட்டக் கேள்விக்கு நீ பதில்
சொல்லலைனாலும் நீ கேட்டதுக்கு
சொல்லியே ஆகனுமே என்றவன்.. "ம்ம்..
என்னக் கேட்ட எனக்கு எப்படி எல்லாம்
தெரியும்ன்னு தானே" என்று கேட்டு
குரோதமாக வாய்விட்டுச் சிரித்தான்.

அவன் சிரிப்பதைப் பார்த்தே கௌசிக்கு
வயிறு பிசைந்தது. "எங்க இருந்து
சொல்லலாம் என்றவன்.. ஸ்கூல் படிக்கும் போதே நான் உன்னை
பார்த்திருக்கிறேன். உன் பேச்சும்
திமிரும்.." என்று கண்கள் இடுங்க
அவளைப் பார்த்தவன் "என்னைத்
திரும்பிப் பார்க்காத பெண்களே இல்லை டி.. ஆனால் உன் முன்னாடி நான் பலமுறை வந்தும் நீ என்னைப் பார்த்ததே இல்லை.. நல்லத் திமிர் தான்" என்றான். அவள் தன்னைக் கண்டு கொள்ளாமல் இருந்ததில் அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்குத் திமிராகத் தெரிந்தது. அவள் அடிக்கடி ஒரு புருவத்தைத் தூக்கிப் பேசுவது..
கண்களைச் சுருக்கி யாரையாவது
பார்ப்பது என்பதை அவன் திமிர் என்று
எண்ணிக் கொண்டு இருந்தான் அந்த
அடிமுட்டாள்.

"அப்புறம் நீ பேசினாயே.. நான்சியிடம்..
பேசினாயா.. இல்ல மிரட்டுனே.. அந்த
வயசிலேயே சீனியரை மிரட்டும்
அளவிற்குத் திமிர்.. அப்போதே எனக்கு
தெரிஞ்சிருச்சு உனக்கு விக்னேஷ் மேல
க்ரஷ்ன்னு.."

"அதுக்கு அப்புறம் நான் ஸ்கூல் முடிச்சுப்
காலேஜ் படிக்க யூ.எஸ் போயிட்டேன்..
உன்னப் பத்தியும் உன் மூஞ்சியைப்
பற்றியும் நான் மறக்கும் அளவிற்கு என்
அழகில் மயங்கிக் கிடந்த பெண்கள்
அதிகம்" என்று அவன் அழகைப் பற்றி
அவன் புராணம் அடித்துப் பேச கௌசிக்கு அவனை முறைத்தபடியே
உட்கார்ந்திருக்க.. அவன் அவளைக்
கண்டுகொள்ளவில்லை..

அவன் என்ன அழகு.. வெறும் வெள்ளை
நிறம்.. மற்றும் பணக்காரத் தோற்றம்
அவ்வளவே.. மற்றபடி விகானேஷின்
கம்பீரத்தின் கால் தூசிற்கு வரமாட்டான்.

"அப்புறம் உன்னை அடையார் தக்சினில்
தான் மறுபடியும் பார்த்தேன். பள்ளியில்
இருந்ததிற்கு ஆளையே அசரடிக்கும்
அழகுதான்.. உன்னைப் பார்த்துக்
கொண்டு தான் இருந்தேன். நீ உன்
அத்தை மகனோடு உட்கார்ந்து அடித்த
கூத்தை.."

"அப்போ கை கழுவ எந்திரிச்சு வந்த
போது தான்.. நீயும் அங்க வந்த.. நான்
லெஃப்ட் கார்னர்ல நின்னதால நீ
என்னை கவனிக்கல.. ஆனா நீ அந்தப்
பொண்ணுங்ககிட்ட பேசுனது அவங்களை பதற அடிச்சு ஓட வச்சதுன்னு எல்லாத்தையும் கவனிச்சேன்.. அப்பவும் உன் திமிர் அடங்கலை.. ஏனோ உன் அழகையும் திமிரையும் அடக்கி ஆள அன்னிக்கு தான் தோனுச்சு.. அதுக்கு அப்புறம் தான் உன்னை முழுசா ஃபாலோ
பண்ணேன். அப்பப்பா உன் அத்தை
மகனுடன் ரொம்ப நெருக்கம் தான்.
அப்போது தான் அவன் நான்சியை
காதலிச்சது தெரிஞ்சது.. உனக்கு ரொம்ப ஏமாற்றமா இருந்திருக்குமே டி... ச்சு ச்சு... பாவம் தான்ல நீ.. அதான் உனக்கு வாழ்க்கைத் தந்து அப்படியே என் எண்ணத்தை நிறைவேத்திக்கலாம்ன்னு நினைச்சேன்.. அப்புறம் உனக்கு போன் பண்ணி ஐ லவ் யூ சொன்னதும் நான்
தான்.. என்ன சொன்ன செருப்பால
அடிப்பியா? ஆனால் இப்போ என் ப்ளான்
தான் எல்லாமே சக்ஸஸ்" என்றபடி
அவளின் தோளைத் தொட
வந்தவனை விட்டு விலகி நகர்ந்தாள்.

"என் திமிரை அடக்க நீ யார்டா?" என்று
தாங்க முடியாத ஆத்திரத்தில் கத்தினாள் கௌசி. மற்ற வேளையாக
இருந்திருந்தால் அவளின் சத்தத்திற்கு
அனைவரும் முழித்திருப்பார்கள்.
கல்யாண அசதியில் தூங்கிக் கொண்டு
இருந்ததால் எவரும் அவள் சத்தத்தை
உணரவில்லை.

"நானா... உன் கழுத்தில் தொங்கறதே
சொல்லும் நான் யார்ன்னு" என்று பதில்
சொல்ல கௌசி அருவருப்பாக அவனைப் பார்த்தாள்.

"அந்தத் தகுதியும் உரிமையும் உனக்கு
இதைக் கட்டி விட்டால் வந்துவிடுமா? ச்சி
நீ பேசிய பேச்சிற்கு எப்போதோ அதை
இழந்துட்ட" என்று கோபமாகப்
பேசியவளின் கண்கள் தீப் பிளம்பாய்
ஜொலித்தது.

"நான் இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்கப் போவதில்லை..." என்று விறுவிறுவென்று நடந்து கதவைத் திறக்கப் போனவளை அவனின் சிரிப்பு தடுத்து நிறுத்தியது.

திரும்பி அவனை முறைக்க "இப்போ
போய் என்னன்னு சொல்லப் போற.. சரி
இப்போ நீ போனவுடனே என்னாகும்ன்னு சொல்லட்டா.. நீ மாலை வரும்போது எல்லார் கண்லையும் கண்ணீர் கட்டுச்சே.. அது இப்போ டேம் கணக்குள வரும்.. அப்புறம் உன் அப்பன் சுகர் பேஷன்ட்ல.. ச்சு ச்சு.. முக்கியமா இந்த விஷயம் தெரிஞ்சோன போன ப்ளைட்ளையே வேலையைத் தூக்கி எறிந்து விட்டுத் திரும்பி வந்திடுவான் உன் அருமை அத்தை மகன் விக்னேஷ்.." என்று சொல்லிச் சிரிக்க சற்று முன்பு தோன்றிய ஆத்திரம், தைரியம் எல்லாம் வடிந்து அப்பா.. விக்னேஷிடம் சென்றது.

அவளின் பலவீனத்தை நன்கு அறிந்து
வைத்திருந்தவன் மேலே பேசினான்.
"உன்னால போக முடியாது டி. என்ன
முறைக்கற.. ம்ம்.. கொஞ்ச நேரத்துக்கு
முன்னாடி என்ன சொன்னே.. தகுதி
இல்லை.. உரிமை இல்லைனா..
எல்லாத்தையும் இப்போ என்னன்னு
தெரிஞ்சிக்கப் போற" என்று மதுவின்
போதையோடு சேர்ந்து மாதுவின்
போதையும் அவனை ஆட்கொள்ள
அவளை வெறி பிடித்தவன் போலப்
பிடித்து அருகில் இழுத்தான்.

அவன் கை பட்டதில் துள்ளி விலகியவள்
தீச்சுட்டார் போல விலகி அறைக்குள் ஓட
அந்த வெறிபிடித்த நாயோ அவளை
பிடித்துவிட்டது. கத்தத் தொடங்கியவளின் வாயைப் பொத்தியவன் அவளை கட்டிலில் சாய்த்து தானும் கட்டிலில் ஏறினான். அதுவரை இருந்த சுயமரியாதையைக் கூட விட்டவள் "என்னை விட்டுவிடு ப்ளீஸ்..." என்று இருகைகளையும் கூப்பிக் கதறத் தொடங்க அவனுக்கு அவளின் பார்த்து மனம் இறங்கவில்லை.. மாறாக அவளின்
திமிர் அடங்கி தன்னிடம் கெஞ்சுகிறாள்
என்று எண்ணியவன் மேலும் அவளைத்
துன்புறுத்த எண்ணியவன் அவளின் மேல் படர அவளுக்கு உடல் எல்லாம் திகில் பரவியது.

அவனை எதிர்த்துத் திமிறிப்
போராடியவளை அவனின் செயல்கள்
தோற்கடிக்க அவளது அச்சம்.. அழுகை..
பயம்.. கதறல் என எல்லாம் அந்த
அறையில் எதிரொழித்தது. ஆனால்
அவளின் உணர்ச்சிகள் எதற்கும் செவி
சாய்க்காமல் அவனின் வெற்றியை நிலை நாட்டி... அவளை போதும் போதுமெனத் துன்புறுத்திவிட்டே அவளை விட்டான் அந்தக் காமூகன்.

அவனின் காரியத்தை முடித்துக் கொண்டு அவன் உறக்கத்திற்குச் செல்ல கௌசிகா தான் உணர்விருந்தும் ஜடமாய்க் கிடந்தாள். கண்ணீர் மட்டும் கண்களில் இருந்து வழிந்து தலையணையை நனைத்தது. போர்வையை எடுத்துத் தன் மேல் சுற்றியவள் குளியலறைக்குள் புகுந்தாள். சவரைத் திறந்து நின்றவளின் கண்ணீர் சவரின் தண்ணீரை மீறியும் பெரிய மணிகளாய் கன்னங்களில் வழிந்தோடியது. தன்னால் அவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையில் கையை சுவற்றில் நன்கு குத்திக் கோபத்தைக் காட்டினாள். உடல் வலித் தாக்க அப்படியே குளியல் அறையில் இருந்த ஸ்டூலில் உட்கார்ந்தவள் அழத் துடங்கினாள்.

கடவுளே முதல் நாளே இப்படி என்றால்?
வரப்போகிற நாட்கள் எப்படி இருக்கும்
என்று எண்ணியவளுக்கு அச்சம் வந்து
உடலைத் தின்றது. மனிதத்தன்மையே
இல்லாமல் இருப்பவனிடம் என்ன
சொல்லிப் புரிய வைக்க முடியும். இன்று
நடந்த பேச்சுவார்த்தைகளும் செயலுமே
போதும் அவனின் குணத்தைச் சொல்ல..
இனிக்க இனிக்கப் பேசி எல்லாரையும்
எப்படி நம்ப வைத்துவிட்டான் பாவி..
என்று மனதிற்குள் அவனை சாபமிடாமல் இருக்க முடியவில்லை அவளால்.

அழுதழுது இருந்தவளுக்கு உடல்
தண்ணீரில் நனைந்து இருந்ததால்
நடுக்கம் எடுக்க பாத்ரூமில் இருந்து
ட்ரெஸிங் ரூமிற்கு வந்தவள் ட்ரெஸிங்
ரூமிற்கும் பெட்ரூமிற்கும் இடையில்
இருந்த கதவைத் தாழிட்டாள். அப்போது
தான் கண்ணாடியைப் ஏதேச்சையாகப்
பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.
கன்றியிருந்த கன்னமும்.. சுற்றியிருந்த
போர்வைக்கு மேல் தெரிந்த வெற்றுத்
தோளிலும் கழுத்திலும் இருந்த ரத்தக்
காயங்களும் அவளை அதிர வைத்தது
கூடவே தன்னிரக்கத்தில் கண்ணீரும்
வழிய தன் பெண்மை இப்படி ஒரு நாயிடம் பறிபோனதை நினைத்து உதட்டைக் கடித்து அழுதாள். சிறிது நேரம் அழுதபடி நின்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு தன் தலை விதியை நொந்தபடியே அங்கிருந்த ட்ராலியில் இருந்த தன் துணி ஒன்றை எடுத்து உடுத்தினாள். ட்ராலியை மூடும் போது தான் தன் டைரியைப் பார்த்தாள்
கௌசிகா. கண்ணீருடன் அதை
எடுத்தவள் ட்ராலியின் அருகிலேயே
சம்மனமிட்டு அமர்ந்து டைரியை எடுத்து
மடியில் வைத்து அதைப் பார்த்து குமுறி
அழுதாள். திறந்து பார்க்க அதில் ஒரு
பேனா இருப்பதை கண்டவள் தன்
மனதில் தோன்றியதை எழுதினாள்.

மிருகமாய்ப் பிறந்திருந்தால்
காட்டில் என் இஷ்டத்திற்கு
வாழ்ந்திருப்பேன்..
ஆமையாய்ப் பிறந்திருந்தால்
என்னைக் காத்துக் கொண்டாவது
வாழ்ந்திருப்பேன்..
ஆணாகப் பிறந்திருந்தால்
வீட்டினரை அடக்கியாவது
வாழ்ந்திருப்பேன்..
பிறக்காமலே இருந்திருந்தால்
நிம்மதியான ஆன்மாவாகத்
திரிந்திருப்பேன்...
பெண்ணாய்ப் பிறந்ததால் தான்
என்னவோ
உரிமம் என்ற பெயரில்
பெரியவர்களின் ஆசியோடு
ஒருவனின் காமத்திற்கு கல்யாணம்
என்ற பெயரில்
இறையாகிக் கொண்டிருக்கிறேன்.
என்று மனம் உடைந்து கண்ணீர்கள் சிதற எழுதியவள் முதலில் எழுதியக்
கவிதையை திருப்பிப் பார்க்க எத்தனித்த மனதை அடக்கி டைரியை மூடி ட்ராலியில் வைத்தாள்.

பின் எழ நினைத்தவளுக்கு அப்போது
தான் உடம்பு வலி அவளுக்கு
மயக்கத்தைத் தருவது தெரிந்தது. செவி
எல்லாம் அடைப்பது போல உணர்ந்தவள் மெல்லமாகத் தள்ளாடியபடியே வந்து படுக்கையில் ஓரத்தில் படுத்தாள். அடுத்து அவளைச் சிந்திக்க விடாமல் ஆட்கொண்டது தூக்கமா மயக்கமா என்று
அவளுக்கேத் தெரியவில்லை.

அடுத்த நாள் காலை எழும்போதும்
கௌசிக்கு முடியவில்லை.. பயத்திலும்
உடல் வேதனையோடு சேர்ந்து மன
வேதனையிலும் காய்ச்சல் வந்து
அவளைப் பிடித்திருந்தது. எழுந்து
உட்கார்ந்தவள் குளியல் அறைக்குள்
புகுந்து முகத்தைக் கழுவி பல் துலக்கி
விட்டு வெளியே வர அப்போது தான் குரு
உள்ளே நுழைந்தான். காலை எழுந்தவள்
அவன் இருக்கிறானா இல்லையா என்று
கூடப் பார்க்கவில்லை.. பார்க்கவும் அவள் விரும்பவில்லை.

அவளைப் பார்த்தவன் ஒரு ஏளனப்
பார்வையோடு அவளைப் பார்த்துவிட்டு
குளியல் அறைக்குள் புகுந்து விட்டான்.
கௌசிக்குத் தான் காய்ச்சல் அதிகம்
போல இருந்தது. உடலில் காய்ச்சலின்
சூடு ஏறுவதை அவளால் உணர முடிந்தது.

ட்ரெஸிங் ரூமிலிருந்து வெளியே
வந்தவனிடம் வாய் விட்டுக்
கேட்டேவிட்டாள். "எனக்கு காய்ச்சல்
அடிக்குது.. என.." என்று அவள் சொல்லி
முடிப்பதற்குள் அவன் ஆரம்பித்தான்.

"அதுக்கு நான் என்ன பண்ணனும்" என்று இளக்காரமாகச் சிரித்தபடிக்
கேட்டவனிடம் அவள் பதில் பேசவில்லை.
மனதில் வந்த கெட்ட வார்த்தைகளால்
அவனை உள்ளேயே திட்டித் தீர்த்தவள்
குளியல் அறைக்குள் புகுந்து விட்டாள்.

குளித்து முடித்து அவள் ட்ரெஸிங்
ரூமிலிருந்து வெளியே வந்த போது
அவள் செல்போன் அடிக்க அதைச்
சென்று அவள் எடுப்பதற்குள் குரு
எடுத்துவிட்டான். எடுத்தவன் "ஆங்..
சொல்லுங்க பெரியம்மா" - குரு.

போனில் பேசிய ஜெயாவின் குரல் நன்கு கேட்டது கௌசிக்கு.. அத்தையின் குரல் கண்ணீரை வரவழைக்க அதை அடக்கியபடி நின்றவள் அவனிடம் இருந்து போனைப் பறிக்க முயற்சி செய்தாள். ஆனால் அவளை ஒரே பிடியில் அடக்கியவன் அவளைப் பேசாமல் நிற்க வைத்தான். காய்ச்சல் உடலில் அவளாலும் எதுவும் போராட
முடியவில்லை.

"கௌசி இருக்காளாபா" - போனின்
வழியாக ஜெயாவின் குரல்.

"அவள் குளிச்சிட்டு இருக்காளே
பெரியம்மா" என்று தேன் ஒழுகப்
பேசினான்.

"ஓ.... இல்லை நாங்க அங்க வரோம்..
அதான்.." என்று அவர் சொல்லி
முடிப்பதற்குள் அவன் பேசினான்..
"பெரியம்மா.. நாங்க வெளியில
போறோம் பெரியம்மா.. அப்புறம் பிசினஸ் சைட்ல விருந்து அதுஇதுன்னு நிறைய இருக்கு" என்றவன் "நீங்கள் இப்போது வந்தாலும் சரியா பேச முடியாது.. பேசாமல் ஒரு நான்கு நாள் கழித்து வாங்க" என்று சொல்ல ஜெயாவின் குரலே கம்மி ஆகிவிட்டது.

பிறகு என்னப் பேசினாரோ சிரித்தபடி
போனை வைத்தவன் அதைத் தன்
பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். போனைக் கௌசி கேட்கவும் இல்லை.
வீட்டினர் யாரிடமாவது பேசினால்
அல்லது யாராவது இங்கு வந்தால் தன்
நிலை அறிந்து கொள்வார்கள் என்று
எண்ணியவள் எதுவும் பேசவில்லை.
"கீழே போலாம்" என்றவன் அவள்
கையைப் பிடித்து தரதரவென்று
இழுத்துப் போகாத குறையாக இழுத்துக்
கொண்டு போனான்.

கீழே வந்தவர்களிடம் நீலவேணி "குரு
வாப்பா சாப்பிடலாம்" என்று அழைக்க
கௌசியை அவர் நிமிர்ந்தும்
பார்க்கவில்லை. குருவும் அவளின்
கையை விட்டுவிட்டு போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பாட்டை செய்து விட்டு ஓயாமல்
கூப்பிடும் அப்பா அத்தைகளின் முகம்
நியாபகம் வர உதடு துடித்தது கௌசிக்கு. கௌசி பசி தாங்க மாட்டாள் என்று சொல்லும் மாமாக்களின் முகமும்
நியாபகம் வந்தது. தன் சுயமரியாதையை அந்த அம்மாளிடம் விடவும் அவளுக்கு மனம் இல்லை.

பேசாமல் சென்று சோபாவில் அமர்ந்து
நியூஸ் பேப்பர் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டாள். ஆனால் ஒரு எழுத்தைக் கூடப் படிக்கவில்லை. கண்களில் நீர் திரையிட்டு பேப்பரில் இருந்த எழுத்துக்களை மறைத்தது.

"ஏம்மாமா... நீ சாப்பிடவில்லையா?"
என்றபடி பூஜை அறையில் இருந்து வந்த
குருவின் அப்பா தேவராஜ் கேட்டார்.

ஏதோ தனித்து விடப்பட்டது போல
இருந்தவளுக்கு அவரின் பரிவான குரல்
கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
"இல்லை அங்கிள்... நான்" என்று அவள்
சமாளித்து முடிப்பதற்குள் அவர்
முகத்தைக் கவனித்தவர் அவளிடம்
கேள்வியை தொடுத்தார்.

"ஏன் மா மூஞ்சி லாம் சிவந்திருக்கு?"
என்று வினவ குருவும் அவன்
அன்னையும் அப்போது தான் டைனிங்
ஹாலில் இருந்து அவளைத் திரும்பிப்
பார்த்தனர்.

"அது.. அதுவந்து அங்கிள் ரொம்ப
ஃபீவரிஸ்-அ இருக்கு" - கௌசி.

"சரி.. வாம்மா.. வந்து சாப்பிடு.. அப்புறம்
நான் மாத்திரை தரேன்.. சாப்பிட்டு ஓய்வு
எடுத்துக்கோ" என்று கூறியவர்
அவளையும் சாப்பிட அழைத்தார்.

"கௌசி இங்க உட்காரு" என்று உரிமை
நிலைநாட்ட வேண்டும் என்ற
எண்ணத்தில் அவள் கையைப் பற்றி குரு அவளை அவன் பக்கத்தில் உட்கார
வைத்தான். பெரியவர்கள் முன்னிலையில் எதுவும் காட்ட
மனமில்லாமல் உட்கார்ந்தாள். அவன்
சாப்பிட்டு விட்டு எழுந்து கை கழுவச்
செல்ல.. அப்போது தான் ஒரு வாயை
எடுத்து வாயில் வைத்தாள்.

திரும்பி வந்து அவள் பக்கத்திலேயே
உட்கார்ந்தவன் "ஹே.. இதையும் சாப்பிடு
உடம்புக்கு நல்லது" என்று அவுலை
எடுத்து அவள் தட்டில் வைத்தான். வந்தக்
கோபத்தைக் கட்டுப்படுத்தியவள் எதுவும் பேசாமல் உண்ண "இந்தா.. பாயில்ட் எக்.. இதையும் சாப்பிடு.. உடம்புக்கு நல்லது" என்று அவள் உடம்பையே அவன் குத்திக்காட்டிச் சொல்ல கௌசிக்குப் புரிந்துவிட்டது.

அவனை ஏறிட்டுப் பார்க்க "புரிந்ததா? நீ
சாப்பிட்டு நல்லா உடம்ப வச்சு இருந்தா
தானே எனக்கு நல்லது" என்று சொல்ல வாயில் போன அவன் வீட்டுச் சாப்பாடு
உமட்டலைத் தர எழப்போனவளை
கையால் பற்றி பார்வையாலேயே மிரட்டி
அமர வைத்துவிட்டான்.

ஒவ்வொரு வாயும் சாப்பிடும் போது
விஷத்தைப் போல இருந்தது அவளுக்கு.
அவள் அனைத்தையும் சாப்பிட்டு முடித்த
பின்னரே அவளை விட்டான் அவன்.
அவன் சென்ற பின் அறைக்கு வந்தவள்
ஓங்கரித்துக் கொண்டு பாத்ரூமை
நோக்கி ஓடினாள். சாப்பிட்டது எல்லாம்
வந்துவிட வலிமையில்லா உடலையும்
மனதையும் வைத்திருந்தவளுக்கு
கண்ணீர் வந்தது.

யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு
கண்களைத் துடைத்துக் கொண்டு
வெளியே வந்து கதவைத் திறந்தவள்
பணிப் பெண் நிற்பதைப் பார்த்து
"என்ன?" என்று வினவினாள்.

"பெரியய்யா உங்க கிட்ட இந்த
மாத்திரையைத் தர சொன்னாங்க" என்று காய்ச்சலுக்கு உண்டான மாத்திரையுடன் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வந்தாள்.

"ம்ம்" - என்ற தலை அசைப்போடு மட்டும்
வாங்கிக் கொண்டவள் அந்தப்
பெண்ணைத் திருப்பி அனுப்பிவிட்டு
கதவைச் சாத்திட்டு... மாத்திரையைப்
போட்டு தண்ணீரை ஊற்றி முழுங்கினாள்.

மாத்திரையைப் போட்டிவிட்டுப் படுத்தவள் மதியம் 3 மணிக்கே எந்திரித்தாள். பசி வயிற்றைக் கிள்ள போய் சாப்பிடவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.. இந்த வீடே மூச்சை முட்டுவது போல இருந்தது அவளுக்கு. தன்னுடைய லேப்டாப்பை எடுக்க நினைத்து ட்ரெஸிங் ரூமிற்குச்
சென்றவள்.. ட்ராலியில் இருந்த தன்
லேப்டாப்பை எடுத்தாள்.

எடுத்துவிட்டுத் திரும்ப எத்தனித்தவள்
ஏதோ நெருட திரும்பி குருவின் துணிகள் இருந்த வார்ட்ரோபைப் பார்த்தாள். அது திறந்து கிடக்க அங்கு வைக்க சம்மந்தமில்லாத டப்பாக்கள் மற்றும் சில பேப்பர்ஸைப் பார்த்தவள் லேப்டாப்பை ட்ராலியின் மேல் வைத்துவிட்டு அந்த வார்ட்ரோபைச் சோதித்தாள். அதில் இருந்த மாத்திரைகளைப் பார்த்தவளுக்கு
ஒன்றும் புரியவில்லை. ஆனால் அங்கு இருந்த சில ரிப்போர்ட்ஸை எடுத்துப்
பார்த்தவள் அதிர்ச்சியின் உச்சிக்கே
சென்று விட்டாள்.

ஆம் அது குருவின் ரிப்போர்ட் தான்.

அவன் சைக்காட்ரி டாக்டரிடம்
ஒருவருடமாக எடுத்து வரும்
சிகிச்சைக்கான ரிப்போர்ட். மாதாமாதம்
போய் வந்த ஒவ்வொரு
ரிப்போர்ட்ஸையும் பார்த்தவளுக்கு அவன் இன்னும் குணமாகவில்லை என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. தலையில் கை வைத்து நின்ற இடத்திலிருந்து அப்படியே மடங்கி உட்கார்ந்து விட்டாள்.

அவள் ஒன்றும் குருவைப் பற்றி
யோசிக்கவில்லை. சினிமாக்களில்
வருவது போல அவனைத் திருத்திவிடும்
எண்ணமும் அவளுக்கு இல்லை..
ஆசைப்பட்டு மணந்து வந்தவனாக
இருந்தாள் திருத்தலாம்.. அல்லது
அவளின் உணர்வுகளின் எண்ணத்தைப்
புரிந்து நடந்தவனாக இருந்திருந்தால்
உறுதுணையாக நிற்கலாம்.

ஆனால் இவனோ?

அவளின் உணர்வுகளைச் சாகடித்து
மிருகமாய் அல்லவா நேற்று நடந்து
கொண்டான். அவனிடம் எப்படி
அவளுக்குக் கழிவிரக்கம் தோன்றும். ஒரு வருடமாய் சிகிச்சை பெற்றும் இப்படி இருப்பவனை யார் திருத்த முடியும். இப்போது கௌசி யோசித்துக் கொண்டு இருந்தது அவள் வாழ்க்கையைப் பற்றி தான். இனி என்ன செய்வது என்பதை விட இனி என்ன செய்ய முடியும் என்று யோசித்தவளுக்கு தன் வாழ்க்கை இனி அவ்வளவு தான் என்று முடிவு செய்தாள்.

சைக்கோ என்று தெரிந்தும் அவனிற்குத்
திருமண ஏற்பாடு செய்த அவனின்
பெற்றோரின் மீது அவள் கோபம்
திரும்பியது. நேராக அதை எடுத்துக்
கொண்டு கீழே வந்தாள். குருவின் அப்பா மட்டுமே அங்கு இருக்க அவரின்
முன்னால் வந்து நின்றவள் அந்தப்
பேப்பர்ஸை அவரிடம் நீட்டி "என்ன
அங்கிள் இது?" என்று வினவினாள்.

அவளைப் பார்க்க முடியாமல் முகம்
அவமானத்தில் கன்றி தலைக்
குனிந்திருந்தவரிடம் "உங்க பெண்ணுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை
பாத்திருப்பீங்களா? இல்லை
தெரிந்திருந்தால் கட்டித் தான்
கொடுத்திருப்பீங்களா?" என்று அவரிடம்
கோபமாகக் கேட்டாள்.

"உங்கிட்ட கொஞ்சம் பேசணும்மா.. அந்த
ஆபிஸ் அறைக்கு வா" என்றுவிட்டுப்
போக கௌசி அவரின் பின் சென்றாள்.

உள்ளே சென்று அவருக்கு எதிராக
உட்கார்ந்தவள் "சொல்லுங்க அங்கிள்..
என்ன சொல்லி சமாளிக்கப் போறீங்க?"
என்று விரக்தியுடன் வந்த நக்கலில்
கேட்டாள்.

"அது பொய் என்று நான் சொல்ல
வரவில்லை. ஆனால் இது எனக்கே
கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன் தான்
தெரியும்.. நீ சந்தேகமாகப் பார்த்தாலும்
அது தான் உண்மை.. என் மனைவி மகள்
யாருக்குமே தெரியாது.. நான் சுயநலமாக நடந்து கொண்டேன் தான்.. ஆனால் நீ இதை திருத்திவிடுவாய் என
நினைத்தேன் மா" என்றவரின் குரல்
கரகரத்தது.

"உங்க மகன்.. குடிகாரனோ ஊதரியோ
இல்லை திருத்த.. ஹீ இஸ் எ பேஷன்ட்..
அதுவும் இன்னும் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு
குணமாகத பேஷன்ட்.. என்
வாழ்க்கையையே நீங்க அழிச்சுட்டீங்க"
என்று கோபமாகப் பேசியவளிடம் எழுந்து வந்தவர்.. அவள் எதிர்பாராத சமயம் காலில் விழுந்து விட்டார்.

இதை எதிர்ப்பார்க்காத கௌசியும்
எழுந்து பின்னால் நகர்ந்து விட்டாள்.
"உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்மா.
தயவு செய்து வெளியில் சொல்லி
விடாதே" என்று கெஞ்ச கௌசி
அவருக்கே திருப்பி அடித்தாள்.

"அதை நான் தான் சொல்ல வேண்டும்..
தயவு செய்து நீங்கள் இந்த உண்மை என் வீட்டில் தெரியாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.." என்றவள் கண்ணீரை
விட்டபடி அந்த அறையை விட்டு
வெறியேறி மேலே குருவின் அறைக்குள்
புகுந்துவிட்டாள்.

எவ்வளவு அதிர்ச்சியையும் வலிகளையும் தான் ஒருத்தி தாங்குவாள்?

அன்று வந்த இரவிலும் முந்தைய
இரவைப் போலத் தொடர கௌசி
கதிகலங்கிப் போனாள். ஒரு பெண்ணை எப்படி எல்லாம் உடலாலும் மனதாலும் நோகடிக்க வேண்டுமோ அதைச் செய்தான் குரு.. கிட்டத்தட்ட டார்ச்சர் செய்தான் அவளை.. மேலும் தொடர்ந்த இரண்டு நாட்களில் உடலும் மனமும் ஓய்ந்து சோர்ந்தது. ஒரு நாள் மாலை வந்தவனைப் பார்க்க அஞ்சி அவள் முகத்தைத் திருப்ப "நான் இரண்டு நாள் பிசினஸ் மீட்டா வெளில போறேன்.. பார்ராரா.. ரொம்ப சந்தோஷமா.. மூஞ்சியெல்லாம் ப்ரைட் ஆகிற மாதிரி இருக்கு.." என்றவன் ஒரு மர்மப் புன்னகையுடன் தொடர்ந்தான். "நான் இரண்டு நாள் அப்புறம் வந்திருவேன்.. நம்ம ஹனிமூன் போகப் போறோம்.. புதுசா கல்யாணம் ஆயிருக்குல" என்று சிரித்தவனைப் பார்க்கச் சகிக்கவில்லை கௌசிகாவிற்கு.

பிறகு கிளம்பிச் சென்று விட்டான்..
வீட்டினரின் நியாபகம் வந்து அவளின்
இதயத்தைத் துளைத்து எடுத்தது.
அப்பாவிடமே சென்று வாழ்நாள் முழுதும்
அவர் பாதுகாப்பிலேயே வாழ மனம்
துடித்தது. மேலும் இந்த மூன்று நாட்களில் குரு அவளின் உடம்பிற்கு அழைந்ததும் அவளின் அழகைப் பற்றி பேசிப்பேசி அவளை விக்னேஷுடன் சேர்த்தி வைத்து இழிவாகப் பேசியதும் காதைப் புளிக்க வைத்ததும் அவளால் வாழ்க்கையில் மறக்க முடியாத நரக வேதனை. கல்யாண வாழ்க்கையில் எவ்வளவு கனவுகளைச் சுமந்து கட்டியவளுக்கு இப்போது அந்த
வாழ்க்கையே கசந்தது. மேலும் அவன்
ஹனிமூன் என்று சொல்லிவிட்டுப் போக
அவளுக்கு உயிரையே மாய்த்துக்
கொள்ளலாம் என்று இருந்தது. போகிற
இடத்தில் பேசாமல் செத்துவிடலாம்
என்று எல்லாம் தோன்றியது.

யோசித்துக் கொண்டு இருந்தவள்
அப்போது தான் மணியைப் பார்த்தாள்..
நைட் பதினொன்றரை ஆகி இருந்தது.
படுத்தவளுக்கு வழக்கம் போலத் தூக்கம் வராமல் பல நியாபகங்கள் வந்து தொண்டையை அடைத்தது. தான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தன்
வாழ்வில் சுதந்திரமாய்த் திரிந்ததை
எண்ணியவளுக்கு கண்களில் இருந்துக்
கண்ணீர் வழிந்தது. யோசித்து
யோசித்தே காலை ஏழு மணி ஆகிவிட்டது அவள் தூங்கவும் இல்லை.

தன் சிந்தனைகளில் இருந்தவளை
ஓஓஓஓ வென்று நீலவேணி (குருவின்
அம்மா) கத்திய கதறல் பதறி அடித்து எழ
வைத்தது. பயந்து எழுந்தவளை மேலும்
அவர் கத்திய கத்தல்கள் காதில் விழ
அவசரமாக எழுந்து கீழே சென்றாள்.
கீழே அவசரமாக வந்தவள் தன்னை
நீலவேணி ஆத்திரமாக முறைப்பதைக்
கண்டு அப்படியே நின்றாள்.

எதற்கு இந்த முறைப்பு? இப்படி ஒரு
கோபம்?
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-14

நீலவேணியின் கோபம் சுத்தமாகப்
புரியவில்லை கௌசிகாவிற்கு.. அவர்
தன்னை ஆத்திரமாக முறைப்பது
அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது.
ஏற்கனவே பல அதிர்ச்சிகளைக் நான்கு
நாட்களில் கண்டவளுக்கு இனி என்ன
என்று நெஞ்சம் படபடத்தது.

ஆம் அவளின் தலையில் மட்டும் இல்லை.. எல்லோரின் தலையிலும் இடி தான் விழுந்தது.

"பாவி... நீ வந்த நேரம் எம் பையன் உயிரே போயிருச்சே டி" என்று கத்தி அழ
கௌசிகா அப்படியே இறங்கி வந்த
படியிலேயே உறைந்து நின்று விட்டாள்.

"ராசி கெட்டவளே... உன் ஒன்னுமில்லாதக் குடும்பத்திலிருந்து பெண் வேண்டாம் என்று சொன்னேன்.. கேட்டானா என் மகன்" என்று கௌசியைத் திட்டியபடி அழ
தேவராஜ் தான் மனைவியை அதட்டினார்.

"பார் வேணி.. குரு போய்ச் சேர்ந்ததுக்கு
அந்தப் பொண்ணு என்ன பண்ணும்.. நம்
பையன் விதி அவ்வளவு தான்.." என்று
அவரும் அழ குருவின் பெற்றோர்
இருவரும் அழுதனர்.

அப்படியே படியில் உட்கார்ந்த கௌசிகா
தலையில் ஒரு கையை தலையில்
வைத்தபடி அமைதியாகக் கண்ணீரை
உதிர்த்தாள். எதற்கு இந்த அழுகை என்று அவளுக்குச் சுத்தமாகப் புரியவில்லை.. ஆனால் குருவிற்காக மட்டும் அவள் கண்ணீர் இல்லை என்பது நிச்சயம்.. அதற்கென அவன் சாவட்டும் என்றும் அவள் நினைக்கவில்லை..

அவளின் மனதில் ஓடிக்கொண்டு
இருந்தது எல்லாம் அவளின் குடும்பம்..
இதை எப்படித் தாங்குவார்கள்.. சீரும்
சிறப்புமாக அனுப்பி வைத்தவர்களை
நினைக்கையில் நெஞ்சை யாரோ
அடிப்பது போல இருந்தது. இந்தம்மா சொன்ன மாதிரி அவள் ஒன்றும்
ஒன்றுமில்லாதவள் இல்லை. குரு
குடும்பத்தின் கோடிக்கணக்கான
சொத்திற்கு யாரைப் பார்த்தாலும்
அவருக்கு அப்படித்தான் தோன்றும்.
கௌசியின் தந்தை நடுத்தர
வர்க்கத்தினரின் செலவுகளை மீறி
சிறப்பாகவே மகளுக்குச் செய்து
அனுப்பினார். ஆனால் என்ன
ப்ரயோஜனம்? அவருக்காகத் தானே
குருவைப் பற்றித் தெரிந்தும்
எல்லாவற்றையும் மறைத்து அவள்
இருந்தது. அவளுக்கேத் தெரியும்
குருவின் டார்ச்சரில் தானாகவே சில
நாட்களில் செத்துவிடுவோம் என்று. அதற்கும் தயாராகவே இருந்தாள் அவள்.
அவன் தொடுவது கம்பளிபூச்சி மேலே
ஊருவதை விட அருவருப்பாக
உணர்ந்திருந்தாள் அவள். தன் குடும்பம்.. அப்பா.. விக்னேஷை நினைத்து விக்கியது அவள் மனம்.. தன் வாழ்க்கை கேள்விக்குறி ஆனதை மறந்து தன் குடும்பத்தாரைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டிருந்தாள்
சுயநலமற்ற அந்தப் பாவை.

விஷயம் அறிந்து வினித்ரா அவளது
கணவன் குழந்தையோடு முதலில் வந்து
சேர அவளும் அவள் அன்னையையும்
தந்தையையும் கட்டிக் கொண்டு அழுதாள். கௌசி இருந்ததை அவளும்
கவனிக்கவில்லை.. அன்னையோடு
சேர்ந்து அண்ணனின் பிரிவை எண்ணி
அழுது கரையவே அவளுக்கு நேரம்
சரியாக இருந்தது. உதய்குமார்
(வினித்ராவின் கணவன்) தான் மேலே
நடக்க வேண்டிய காரியங்களைப்
பார்க்க ஜீ.எச் - இற்கு கிளம்பினான்.
ஆக்ஸிடென்ட் கேஸ் என்பதால் அங்கு
கொண்டு சென்றனர் முதலில்.
மேற்கொண்டு நடந்த வேலையை
உதய்குமார் எடுத்து நடத்தினான்.

குருவின் மரணச் செய்தியை அறிந்த
கௌசியின் குடும்பமே ஆடிவிட்டது. முதலில் செய்தியை அறிந்தது ஜீவாதான். பெரியவர்களுக்கு முதலில் சொல்ல வேண்டாம் என்று நினைத்த உதய்குமார் முதலில் ஜீவாவிற்கு செய்தியைத் தெரிவிக்க ஜீவா அப்படியே உறைந்து விட்டான். அவன் புதியாய் திறக்கப் போகும் கம்பெனிக்காக கோயம்புத்தூர் கிளம்பிக் கொண்டிருந்தனர் ஜீவாவும் மதியும்.

அந்தச் சமயத்தில் உதய்குமார் போன்
செய்து செய்தியைத் தெரிவிக்க ஜீவா
பாறை போல அப்படியே நின்றுவிட்டான்.
அவனைப் பார்த்த மதி "ஏன் ஜீவா.. என்ன ஆச்சு" என்று சற்றுப் பதட்டத்தோடு வினவ"மதி.. குரு ஆக்ஸிடென்ட்டில்..." என்றவனுக்குத் துக்கம் தொண்டையை அடைக்க அதற்கு மேல் அவனால் எதுவும் பேச முடியாமல் கண்களில் நீர் கோர்த்தது.
சின்ன வயதில் இருந்து கூடவே
வளந்தவளுக்கு இப்படி ஒரு நிலையா
என்று மருகினான் அவன்.

மதி என்ன என்று ஜீவாவிடம் விசாரிக்கும் போதே சமையல் அறை கதவிற்குப் பக்கத்தில் உள்ள ப்ரிட்ஜில் மாவை எடுக்க வந்த ஜெயா... மருமகளின் குரல் கேட்டு என்ன என்று கவனித்தபடி மாவை எடுத்தார். ஜீவா சொன்ன செய்தியைக் கேட்டு மதி உறைய ஜெயா அப்படியே மாவு டப்பாவைத் தவரவிட்டார். டப்பா விழுந்த சத்தத்தில் ஜீவாவும் மதியும் சமையல் அறைக்கு விரைய தரையில் உட்கார்ந்த படி அழுக ஆரம்பித்து விட்டார் ஜெயா.

"அய்யோயோயோ.... என் தங்கத்துக்கு
இப்படி நடக்கவா கட்டிக் குடுத்தோம்...."
என்று அடித்துக் கொண்டு அழ... மதிக்கும் அடக்கமாட்டாமல் கண்களில் கரை புரண்டு வந்தது.

பத்து நிமிடம் அப்படியே நின்ற ஜீவா
அடுத்து ஆக வேண்டிய வேலைகளைப்
பார்த்தான். முதலில் தன் தந்தைக்கு சதாசிவத்திற்குப் போனைப் போட்டவன்
அவருக்கு விஷயத்தைத் தெரிவித்தான்.
அடுத்து தன் சித்தப்பா
செந்தில்நாதனிற்குத் (விக்னேஷின்
தந்தை) தெரிவித்தான்.

பதறிப் போனவரிடம் "சித்தப்பா.. இப்போ
எது பேசவும் டைம் இல்லை.. அங்கே
அவள் என்ன நிலைமைல இருக்காளோ..
நீங்க சித்தியைக் கூட்டிட்டு இங்க வாங்க
சித்தப்பா.. உங்க எல்லாருக்கும் கேப்
புக்கி பண்ணித் தரேன் போயிருங்க..
நான் மாமா கிட்ட எதாவது சொல்லிக்
கூட்டிட்டு வரேன்... வரும்போதே
சொன்னால் தாங்க மாட்டார்" என்ற
ஜீவாவின் குரல் கரகரத்தது.

அவன் பேசுவதிலும் சரிதான் என்று
ஒத்துக் கொண்ட செந்தில்நாதன்
மனைவியிடம் அப்படி இப்படி என்று
சொல்லி அவரின் அக்கா வீட்டிற்கு
அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்தவர் தன் அக்காவின் தோற்றத்தைக் கண்டு
அக்காவின் கணவருக்குத் தான்
என்னவோ என்று நினைக்க சதாசிவம்
சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார்.
சுமதிக்கு என்ன என்றே புரியவில்லை.

"ஏன்..." என்று கேட்டவருக்கு வார்த்தையே அதற்கு மேல் வரவில்லை.
தன் மனைவி சுமதியின் தோளைப்
பற்றிய செந்தில்நாதன் அனைத்தையும்
கூற சுமதியும் அழுக ஆரம்பிக்க.. ஜீவா
கேப் வந்தவுடன் அவர்களை ஏற்றிவிட்டு
தன் மாமா வரதராஜனைப் பார்க்கச்
சென்றான்.

"வா ஜீவா.. என்ன நீ மட்டும் வந்திருக்க
மதி வரலையா?" என்று கேட்டவரின்
குரலில் இருந்த சிறிய சோகத்தை அவன் அறிந்தான். ஆமாம் அவரும் அவரின் செல்லப் பெண்ணிடம் பேசி நான்கு நாட்கள் ஆன வருத்தத்தில் இருந்தார். ஆனால் மகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று.. குருவிடம் இரண்டு நாட்களுக்கு முன்னால் அவனுக்கு போன் செய்த போது அவன் சொன்னது அவருக்கு நிம்மதியாகவே இருந்தது.

"மாமா..." என்று ஜீவா ஆரம்பிக்க..
"இருப்பா சுகர் டேப்ளெட் மறந்திட்டேன்..
கௌசி பாப்பா இருந்திருந்தால் நியாபகப் படுத்தியிருப்பாள்" என்று பெருமூச்சு விட்டபடி அவர் எழுந்து சென்று மாத்திரையைப் போட ஜீவாவிற்கு மனதில் தோன்றிய வலியை பல்லைக் கடித்து கட்டுப்படுத்தினான்.

"இம்.. மதி வரலையா ஜீவா.. இரண்டு
பேரும் தானே வரதா சொன்னீங்க..
கிளம்பியாச்சா?" என்றபடி வந்து
ஜீவாவிற்கு எதிரில் உடகார்ந்தார்.

"இல்லை மாமா.. அடுத்த வாரம்
ஆயிருச்சு நாங்க கிளம்பற டேட்"
என்றவன் கரகரத்தத் தொண்டையை சரி செய்து கொண்டு "மாமா கௌசிக்கு
காய்ச்சலாம்.. உங்களைப் பார்க்கனுமாம்.. வாங்க நம்ம இரண்டு பேரும் போயிட்டு வந்திடலாம்" என்று தன்னால் முடிந்த அளவு குரலை நிதனமாக வைத்துப் பேசினான்.

"அச்சச்சோ... என்ன ஆச்சு.. யார்
சொன்னா?" என்று கேட்க ஜீவா தடுமாறிக் குரு சொன்னதாக சொல்லி அவரைக் கூட்டிக் கொண்டு கிளம்பினான்.

செல்லும் வழியில் கௌசியைப் பற்றியே பேசிக் கொண்டு வந்த வரதராஜனின் சொல் எதுவும் ஜீவாவின் செவியை எட்டவில்லை.. மாறாக கௌசியின் சிரித்த கபடமற்ற முகமே நியாபகம் வந்தது.

மதி, சுமதி, ஜெயா, சதாசிவம், செந்தில்
நாதன் சென்று பார்க்கையிலும் கௌசி
அதே படியில் தான் உடகார்ந்திருந்தாள்.
உள்ளே சென்று அத்தைகள் கட்டிக்
கொண்டு அழ அவளின் கண்களில்
கண்ணீரே இல்லை.. முகம் இறுகி
கண்ணில் கருவளையங்கள் வந்து
இருந்தவளைப் பார்க்க ஜெயா
தவறவில்லை. தலையில் கை வைத்து
இறுக அமர்ந்து இருந்தவளைப் பார்த்து
அனைவருக்கும் பயமாகி விட்டது. மதி,
அத்தை, மாமா என அனைவரும் அவளை உலுக்க அப்படியே அமர்ந்திருந்தாள். கடைசியில் குருவின் அப்பா தேவராஜ் வந்து அழைத்துப் பார்த்தும் வெறித்த பார்வையுடன் அப்படியே அமர்ந்திருந்தாள்.

"பாப்பா..." என்று கடைசியாக ஒலித்த
தந்தையின் குரல் அவளை
சுயநினைவிற்குத் திருப்பியது.
வீட்டிற்குள் நுழையும் போதே ஜீவா
விஷயத்தைச் சொல்ல தன் மகளை
நோக்கி விரைந்தார்.

தன் தந்தையைக் கண்டவள் அடக்கி
நான்கு நாட்களாக அடக்கக வைத்திருந்த மொத்தத்தையும் வெளிப்படுத்தினாள். "அப்பாபாபாபா..." என்று ஓவென பெருங்குரல் எடுத்து கதறியவள் தன் தந்தையைக் கட்டிக் கொண்டு அவரின் மார்பில் மேல் சாய்ந்து கட்டிக் கொண்டு அழ அங்கிருந்த அனைவருக்கும் கௌசியைப் பார்த்து நெஞ்சில் சொல்ல
முடியாத துயரம் எழுந்தது.

அழுதாள்.. அழுதாள்.. மூச்சை இழுத்து
இழுத்து தந்தையின் மார்பின் மீது
சாய்ந்து ஆக்ரோசத்துடன் அழுதவளைப்
பார்க்க அனைவரும் பயந்துவிட்டனர்.
அவளின் நிலையை உணர்ந்த
வரதராஜனும் "பாப்பா.. பாப்பா.." என்று
அழைத்து விலக்கப் பார்க்க அவள்
கையோ தந்தையின் சட்டையை இறுகப்
பற்றி இருந்தது.

"இங்க பாரு.. கௌசிமா" என்று அவளை
வழுக்கட்டாயமாகத் தன் மேல் இருந்து
விலக்கினார்.

"என்னால முடியலப்பா" என்று மூச்சை
இழுத்துக் தொய்ந்த குரலில் கூறியவள்
அப்படியே மயங்கிச் சரிந்தாள். மயங்கிச்
சரிந்து விழுகையில் அவளது
மாங்கல்யமும் வரதராஜன் சட்டை
பட்டனில் சிக்கித் தரையில் அறுந்து
விழந்தது.

"கௌசி....." என்று கூவி விட்டார்
வரதராஜன். ஜெயா மதியைத் தவிர
"என்னால முடியலப்பா" என்று கௌசி
சொன்ன வாக்கியத்தைக் குருவின்
மறைவில் என்று நினைத்தனர்.

அவள் மயங்கி விழுந்ததில் அனைவரும்
திடுக்கிட அதற்குள் குருவின் விஷயம்
கேள்விப்பட்டு துக்கம் தெரிவிக்க வந்த
அவனுடைய சைக்காட்ரி டாக்டர்
அனைவரையும் விலக்கி அவளைச்
சோதித்தார். நல்ல வேளை ஹாஸ்பிடலில் இருந்து அவர் வந்திருந்ததால் அவரிடம் சில தேவையான மருந்துகள் இருந்தது. பிறகு அவர் சொல்ல அங்கு பக்கத்தில்
இருந்த அறையில் அவளைக் கிடத்தினர்.

"அதிர்ச்சி தான்.. இன்ஜக்ஷன்
போட்டிருக்கேன்.. டோன்ட் டிஸ்டர்ப் ஹெர்.. அவங்களே எந்திருப்பாங்க" என்று விட்டு அவர் துக்கம் தெரிவித்து விட்டு சென்றுவிட்டார். சந்தியாவையும்
அழைத்து வந்தான் ஜீவா கல்லூரிக்குச்
சென்று.

கௌசி மறுபடியும் கண்களைத்
திறக்கையில் குருவின் உடல் வீட்டிற்கு
எடுத்து வரப்பட்டிருந்தது. கௌசிக்குச்
செய்தப் பாவத்திற்கு ஒரு பக்க உடல்
நசுங்கி இருந்தான். முகத்தைக் கூட உடல் கூறு செய்து தரும் போது மூடிவிட்டனர். ஆனால் எதை உணரும் நிலையில் அவள் இல்லை.. ஏதோ ஒரு வெற்றிடம் அவளின் மனதை ஆக்கிரமித்தது. எல்லா சடங்குகளும் முடிந்த பின்னர் அவனின் உடல் எடுத்துச் செல்லப்பட நாட்களும் இரண்டு நாட்கள் ஓடின.

கௌசி ஜெயாவின் மடியில் படுத்தபடி
இருந்தாள். நீலவேணி வந்து அவளின்
முன்னால் ஒரு ஜூஸ் டம்ளரை நங்கென
வைத்தார். வைத்ததில் கண்ணாடி
டம்ளராக இருந்திருந்தால் கண்டிப்பாக
உடைந்திருக்கும். தன் கணவரின்
வற்புறுத்தலில் தான் கொண்டு வந்தது
நீலவேணி.. இல்லையென்றால்
கௌசியை திரும்பிக் கூட பார்த்திருக்க
மாட்டார்.

"ஒன்னுமில்லாமல் வந்தவளுக்கு இனி
வாழ்வு தான்" என்று அனைவருக்கும்
கேட்கும்படியே முணுமுணுக்க
ஜெயாவிற்கு கோபம் வந்துவிட்டது.

"கொஞ்சம் நில்லுங்கமா.. இந்த மாதிரி
நீங்க எங்க பெண்ணை பேசற வேலை
எல்லாம் வச்சுக்காதீங்க" என்றார்
முறைப்பாக.

"அப்புறம் இந்த வீட்டைக் கெடுத்த
மூதேவியை ஆரத்தி எடுக்க முடியுமா?"
என்று சொல்ல சுமதியும் வெகுண்டு
எழுந்தார்.

"என்னமா பேசுற நீ.. கொஞ்சம்
வார்த்தையை அளந்து பேசு.. இல்லைனா நடக்கறதே வேற" - சுமதி.

"என்ன.. என் வீட்டுல இருந்துட்டு
என்னையே அதிகாரமா.. நான் என்ன
இல்லாததையா சொன்னேன்.. இவள்
ராசி கெட்டவ தான்.. இவ பொறந்த நேரம்
இவ அம்மாகாரியும் செத்துட்டா.. இவ
வந்த நேரம் தான் எம் புள்ள போயி
சேர்ந்துட்டான். இவள கூட்டிட்டுக்
கிளம்புங்க.. இங்கையே இருந்து சொத்த
அமுக்கலாம்னு பாக்கறீக்களா?" என்று
கத்த அதை விட ஆங்காரமும் ஆத்திரமாய் ஒலித்தது வரதராஜனின் குரல்.

"யாரைப் பாத்து ராசி கெட்டவன்னு
சொன்ன.. அவ எங்க வீட்டு மகாலட்சுமி..
அவ பொறந்த அன்றே என் மனைவி
போயிட்டாதான்.. உண்மை தான்..
இல்லைனு சொல்லல.. ஆனா அவ
கர்ப்பம் ஆன காலத்திலேயே மருத்துவர்
ஒரு எலும்பு இடுப்பில் அதிகப்படி
வளர்ந்ததாகவும்.. ஆபத்து தான் என்றும்
சொன்னார்.. அது அவள் விதி.. ஆனால்
அவள் போன பிறகும் என் மகள்
அனைவருக்கும் ராசி ஆகிப்போனாள்.
உம் புள்ள போனது அவன் விதி. இதே
நான் சொல்லட்டா உம் புள்ளைய
கட்டுனனால தான் எம் மகள் இப்போது
தாலி இல்லாம நிக்கறானு.." என்று
நீளமாகப் பேசி நீலவேணியின்
வாயை அடைத்தவர் "சொத்தா.. அது
யாருக்கு வேணும்.. தேவராஜ் அவர்
கேட்டுக் கொண்டதுக்கு ஆகத்தான் என்
பெண்ணை இங்கே இரண்டு நாள்
விட்டுவிட்டு சென்றேன். நீங்க தான் வந்து என் பொண்ணக் கேட்டிங்களே தவிர நாங்களா உங்களிடம் வந்து
நிற்கவில்லை.. என் மகள் இப்போதும்
என் மகள் தான்" என்றவர் தன் மகளிடம்
திரும்பினார்.

"கௌசி.. நீ போய் உன்னுடைய எல்லா
உடமைகளை எடுத்துட்டு வாம்மா.. நாம
கிளம்பலாம்" என்று வரதராஜன்
அழுத்தமாகச் சொல்ல தேவராஜ் அவரை
சமாதானம் செய்ய முயன்றார். ஆனால்
அவரின் மனைவி பேசியது தன் மகளை
அல்லவா.. அதனால் அவர் எதையும்
கேட்டவில்லை. அண்ணன் பேசிய பேச்சு
சரியென்று படவே ஜெயாவும் சுமதியும்
அமைதியாய் நின்றனர்.

வீட்டிற்கு அழைத்து வர மதி.. ஜீவா..
சதாசிவம்.. செந்தில்நாதன்.. எல்லோரும்
வரதராஜனின் வீட்டில் தான் இருந்தனர்.
கௌசியை வீட்டிற்கு கூட்டி வரும்போதே
போனில் விஷயத்தைத் தெரிவிக்க மதி ,
ஜீவா, செந்தில் நாதன், சதாசிவம்
ஏற்கனவே வரதராஜன் வீட்டிற்கு வந்தனர். போன வாரம் கல்யாணம் ஆகிச் சென்றவள் போன வேகத்திலேயே சுவற்றில் அடித்தப் பந்தைப் போல வீட்டிற்கு வந்தது எல்லோருக்கும் தாங்க முடியாத துயரத்தைத் தந்தது.

அவர்களைப் பொருத்த வரை குருவுடன்
அவள் காதல் மனைவியாக
வாழ்ந்திருக்கிறாள் இந்த நான்கு
நாட்களில் என்று நினைத்துக் கொண்டு
இருந்தனர். ஜெயா மதியைத் தவிர..
ஜெயாவிற்கு கௌசியின் தோற்றமே
எதையோ சொல்ல அவர் அவளிடம்
எதையும் கேட்க மனம் வராமல் இருந்தார். மதிக்கும் அவள் இஷடப்பட்ட கல்யாணம் இல்லை என்று தெரியும்.. இருந்தாலும் இந்த நிலைமை அவளை மிகவும் பாதித்திருக்கும் என்று
நினைத்திருந்தாள்.

ஒரு வாரம்.. இரண்டு வாரம்.. மூன்று
வாரம்.. என் நாட்கள் கடந்து குருவின்
இழப்பு முடிந்து ஒரு மாதம் ஆயிற்று.
தேவராஜ் கௌசியின் எதிர்காலத்திற்கு
குடுத்த அதாவது அவளுக்கு முறைப்படி
குடுத்தத் தொகைகளை வேண்டவே
வேண்டாம் என்று ஒன்றாகச் சொல்லி
விட்டனர் கௌசியும் வரதராஜனும்.

கௌசிக்கு கடந்த ஒரு மாத காலமாக
நாட்களைக் கடத்துவது அவளது
அறையில் மட்டும் தான். அந்த கொடூர
நினைவுகளிலேயே அவள் மனம் சிக்கித்
தவித்துக் கொண்டிருந்தது. கண்களை
மூடினால் கண் வரும் கோர
சம்பவங்களை அவளால் மறக்கவே
முடியவில்லை. அவளைக் கொஞ்சம்
கொஞ்சமாய் அரித்துக் கொண்டிருந்தது
எல்லா சம்பவங்களும். அவளை மாற்ற
எவ்வளவு முயற்சி செய்தும் தோற்றனர்
அனைவரும். ஜெயாவும் சுமதியும் மாறி
மாறி கௌசியுடன் இரவில் இருந்தனர்.

ஜீவாவிற்கும் தொழிலில் சில
குளறுபடிகள் ஏற்பட அவன் கோவை
செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால் மதி.. தான் கௌசியுடன் சில
நாட்கள் இருந்து வருவதாக சொல்லி
ஜீவாவை அனுப்பி வைத்தாள். தன்
மனைவிக்கு தன் குடும்பத்து மேல் உள்ள அக்கறையில் நெகிழ்ந்த ஜீவா.. அவளை முழு மனதுடன் சென்னையில்
விட்டுவிட்டு கோவை சென்றான்.

காலையில் சீக்கிரம் எழும் கௌசி
இப்போதெல்லாம் பதினொறு மணிக்கே
எழுந்தாள். கண்களைச் சுற்றிய
கருவலையமும் எப்போதும் பரட்டை
முடியுமாக பார்க்க எல்லோரும் அவளிடம்
பேச்சைக் கொடுத்து பேச முயன்றனர்.
எல்லாம் குளத்தில் இருந்த கல்லைப்
போல உள்ளே சென்றதே தவிர கௌசி
எதையும் வாயைத் திறந்து
சொல்லவில்லை. ப்ரௌனியுடன்
உட்கார்ந்து அதன் தலையை நீவி
விடுவாளே தவிர வேறு எதுவும் அவள்
செய்யவில்லை.

ஒருநாள் கோயிலிற்குச் சென்று தன்
பாரத்தையும் சோகத்தையும் கடவுளிடம்
வைத்து விட்டு வந்த ஜெயா அண்ணனின் வீட்டிற்குச் சென்றாள். அண்ணன் வீட்டிற்கு வந்தவர் அண்ணன்
இல்லாததைக் கண்டார். சரி எங்காவது
ஏதாவது வாங்கச் சென்றிருப்பார் என்று
நினைத்தவர் கௌசிக்கு விபூதியை
வைக்க எண்ணி அவளது அறைக்குள்
சென்றவர் அவள் நின்றிருந்தக்
காட்சியைக் கண்டு "கௌசிசி........." என்று அதிர்ச்சியில் கத்திவிட்டார்.

அத்தையைக் கண்டவள் கையில்
இருந்ததைப் பின்னால் மறைக்க கையில் சூடு தாங்காமல் எரிந்து கொண்டிருந்த நியூஸ் பேப்பரைக் கீழே விட்டார். அவள் பக்கத்தில் சென்ற ஜெயா 'பளார்' 'பளார்' என்று இரண்டு அறைகள் விட்டுத் தானும்
அழ ஆரம்பித்து விட்டார்.

"பாவி... இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு போகவா உன்னை எல்லோரும்
வளத்தோம்" என்று அவளைப் பிடித்து
உலுக்கி அழ கௌசி தந்த பதில் அவர்
இன்னும் அதிர்ந்தார்.

"நான் ஒன்னும் சாகறக்கு இதப் பத்தல
அத்தை.. எனக்கு இந்த மூஞ்சி வேண்டாம்-ன்னு தான் தீ வைக்கப் போனேன்" என்று அசராமல் சொன்னவளை ஜெயா ஆஆ'வெனப் பார்த்தார்.

"என்னடி.. என்னப் பேச்சு பேசறே நீ.. நீ
வாழ்ந்த அந்த நாலு நாள் வாழ்க்கைக்காக இப்படி எல்லாத்தையும் வெறுத்து ஒதுக்கனுமா.. நீ புடிக்காம கல்யாணம் பண்ணாலும் அந்தப் பையன் குரு இறந்தது உனக்கு கஷ்டமாகத் தான் இருக்கும்.. அதுக்குன்னு இப்படிப் பண்ணுவியா" என்று கண்ணீருடன் அதட்டினார்.

"என்ன அத்தை சொன்னீங்க.. நான்
வாழ்ந்த வாழ்க்கையா.. நான்
சந்தோஷமா இல்லைனாலும் நிம்மதியா
இருந்திருப்பேனு நினைச்சீங்களா.."
என்று ஏளனப் புன்னகை உதிர்த்தவள்
"இதான் அத்தை நான் வாழ்ந்த
வாழ்க்கை" என்று தன் நைட்டியின் மேல்
மூன்று பட்டனைக் கழட்டிச் சொல்ல
அவளின் கழுத்திலும் கழுத்திற்குக் கீழ்
இருந்த பகுதியையும் பார்த்தவர்
அப்படியே சிலையென நின்றுவிட்டார்.

அவர் கண்ட இடத்தில் இருந்த
காயங்களின் தடயத்தைக் கண்ட
ஜெயாவிற்கு அந்த வயதிலும் என்ன
நடந்திருக்கும் என்பதை ஊகித்து
உதறியது உடம்பு. இப்பவே இப்படி
என்றால் ஒரு மாதத்திற்கு முன்பு காயம்
எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தவருக்கு ஈரக்குலையே ஆடிவிட்டது.

"இது மட்டும் இல்லை அத்தை.. இன்னும்
உடம்பு பூராவும் இருக்கு.. அதை பாத்தா
தாங்க மாட்டிங்க" என்று நைட்டியை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்து அழுதாள்.

"அவன் ஏன்டி உன்னைய இப்படிப்
பண்ணினான்" என்று கேட்டவரிடம்
அனைத்தையும் கொட்டினாள் கௌசி.
ஸ்கூலில் அவன் தன்னை கவனித்தது..
மறுபடியும் ஹோட்டல் தக்சினில் பார்த்து.. அப்புறம் ஃபாலோ செய்தது..
கல்யாணத்தன்று இரவு நடந்த பேச்சு
வார்த்தைகள்.. அவளையும்
விக்னேஷையும் சேர்த்து வைத்துப்
பேசியது.. தொடர்ந்து மூன்று நாட்கள்
செய்த டார்ச்சர்கள் என்று ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்லியவள்
விக்காவைத் தான் காதலித்ததை மட்டும்
சொல்லவில்லை.

நிமிர்ந்து தன் அத்தையைப் பார்த்தவள்
"அத்தை.. அவன் என்னை... என்னை.."
என்று சொன்னவளுக்கு அதற்கு மேல்
சொல்ல வரவில்லை.. எப்படி சொல்ல
என்று தெரியவில்லை..

"அத்தை அவன் என்னை... செக்ஸ்
டார்ச்சர் பண்ணான் அத்தை.." என்று
அத்தையைக் கட்டிப்பிடித்தவள் கதறி
அழுக ஆரம்பித்தாள். "அவன் என் அழகு..
உடம்புன்னு.. காதுலையே கேக்க முடியாத வார்த்தைகள் எல்லாம் சொன்னான் அத்தை.. அதான் எனக்கே என் மூஞ்சியை இப்போதெல்லாம் பிடிக்கலை அத்தை.. பாக்கவே அருவருப்பா இருக்கு.. அதனால தான் மூஞ்சிக்குத் தீ வச்சிக்கலாம்ன்னு"
என்று சொல்ல வந்தவளை ஜெயா தன்
கை கொண்டு மூடினார்.

"வேணான்டி.. எதுவும் சொல்லாத இதுக்கு மேல.. கேக்கற எனக்கே உயிர் போற மாதிரி இருக்கு.. பாவி பைய.. நாசமா போறவன்.. உனக்கு பண்ணப்
பாவத்துக்குத் தான் நாய் சீக்கிரம் செத்து ஒழிஞ்சிட்டான்.." என்றவர் கௌசியின் அழுகை இன்னும் குறையாததைக் கண்டு அவளைச் சமாதானம் செய்தார்.

"நீ எதுக்கும் கவலைப்படாத தங்கம்..
நாங்க எல்லாம் இருக்கோம் உனக்கு"
என்று சமாதானம் செய்து அழுகையில்
அரற்றிக் கொண்டிருந்தவளைத் தூங்க
வைத்தார்.

இவள் இங்கு இப்படி என்றால் அங்கு
கனடாவில் ஒருத்தன் இவளை விட
இரண்டு மடங்குத் துன்பத்தில் இருந்தான். ஆனால் அதை யாரும் அறியவில்லை.
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-15

கௌசிகாவின் பிறந்தநாள் அடுத்து வந்த சில தினங்களில் தான் விக்னேஷ்
நான்சியைச் சந்தித்தது. முதலில்
ஹைதராபாத்தில் வேலையில்
இருந்தவள் சென்னைக்கு மாற்றல்
கிடைக்க இங்கு வந்து ஒரு ப்ளாட்
எடுத்துத் தங்கியிருந்தாள்.

வேலையில் சேர்ந்த அன்று தான் அவள்
விக்னேஷைப் பல வருடம் கழித்து
சந்தித்தது. முதலில் விக்னேஷிற்குமே
அவளை அடையாளம் தெரியவில்லை.
அவளாக வந்து பேசிய போது தான்
அவனுக்கு நினைவு எழுந்தது.

பிறகு வந்த நாட்களில் இருவரும் நட்பாக.. நான்சி அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றாள். ஒருநாள் இருவரும் கான்டினில் உட்கார்ந்திருக்கையில் தன் பேச்சை ஆரம்பித்தாள்.

"விக்னேஷ்..." - நான்சி.

"சொல்லு நான்சி..." - போனில்
கௌசிகாவிற்கு மெசேஜ் செய்தபடி.

"உன்கிட்ட ஒன்னு சொல்லனும்
விக்னேஷ்.. கொஞ்சம் போனைக் கீழே
வைக்கிறயா?" - அதிகாரக் குரலில்..
அந்தக் குரலில் அவனுக்கு எரிச்சல்
மண்டினாலும் எதுவும் காட்டிக்
கொள்ளாமல் போனை வைத்துக் கேட்டான். "சொல்லு கௌசி.." என்று
நாக்கைக் கடித்துக் கொண்டவன்.. "சாரி..
நான்சி சொல்லு.. கௌசிக்கு மெசேஜ்
பண்ணிட்டு இருந்தேனா அதான்"
என்றான் சாதாரணமாக.

கௌசியின் பேரைக் கேட்டதும் பொங்கி
வந்த ஆத்திரத்தை மறைத்தவள்
முகத்திலும் எளிதாக அதை மறைத்து
விக்னேஷிடம் சிரித்து வைத்தாள்.
"விக்னேஷ் ஐ ஸ்டில் லவ் யூ.." என்று
டேபிளின் மேல் இருந்த கையைப் பிடிக்க
விக்னேஷ் ஒரு நிமிடம் தடுமாறித் தான்
போனான். அவனும் நான்சியின் அழகில் விழுந்து கிடந்தது உண்மை தான்.

அழகு என்பதற்காக? கல்கி எழுதிய
பொன்னியின் செல்வனில் வர நந்தினி
கூடத்தான் அழகு.. ஆனால் அந்தப்
பாம்பின் விஷத் தன்மையை மறந்தப்
பெரிய பழுவேட்டரையர் அவள் அழகில்
மதியை இழந்த மாதிரி விக்னேஷின்
மதியும் அங்கு சற்று சறுக்கத் தான்
செய்தது.

அடுத்து...

அவள் காதலை ஏற்றுக் கொண்டான்
விக்னேஷ். ஆனால் கௌசியின் மேல்
கனன்று கொண்டிருந்த நெருப்போ
நான்சியைத் தூங்க விடாமல் செய்தது.
விக்னேஷைத் தன் பேச்சைக் கேட்கும்
பொம்மையாக ஆக்க நினைத்தாள் அவள். ஆனால் அதற்கெல்லாம் ஆடுபவன் அவனா? அவள் அழகில் மயங்கினானே தவிர அவன் மூளையை ஒன்றும் அவன் கழட்டி வைக்கவில்லை.

"கௌசி ஏன் உங்க கூடையே இருக்கா
விக்னேஷ்.. எப்போமே உங்களை ரிஸ்டர்ப் பண்ணிட்டு.. என்ன இது?" என்று ஒரு நாள் விடாமல் கௌசி அவனை போனில் கூப்பிட்ட போது தன் விஷத்தைக் கக்கினாள்.

"இங்க பாரு நான்சி.. உன்கிட்ட டைம்
ஸ்பென்ட் பண்ணலைனா ஏன்னு கேளு..
அதவிட்டுட்டு கௌசிகிட்ட பேசறது.. நான் வெளில போறத பத்தி பேசறது எல்லாம் வச்சுக்காதா.. என் கேர்ள் ப்ரண்டா இருந்தாலும் பீ இன் யுவர் லிமிட்ஸ்" என்று மூஞ்சியில் அடித்த மாதிரி அவன் பேச அதிலிருந்து அதைப் பற்றி வாயைத் திறக்கவில்லை அவள்.

அதற்கு என்று நான்சியும் தன்
எண்ணத்தைக் கை விடவில்லை. அவள்
கௌசியை எப்படியாவது அழ வைக்க
வேண்டும்.. அவளது சந்தோஷத்தைக்
குலைக்க வேண்டும் என்ற வில்லத்
தனத்தில் இருந்தாள். மொத்தத்தில்
அவள் விக்னேஷைக் காதலிப்பதை விட
அவளுக்கு கௌசியின் மேல் இருந்த
பழிவெறி அதிகமாக இருந்தது. அதனால் விக்னேஷிடம் தன்னிரக்கத்தைச் சம்பாரித்தாள் அவள்.

"ப்ளீஸ் விக்னேஷ்.. என்கூட டைம்
ஸ்பென்ட் பண்ணுங்க.. நானே அம்மா
அப்பாவை விட்டு இங்கே இருக்கேன்.. ஐ
ஃபீல் லோன்லி.. எனக்கு இங்க உங்களை விட்டா யார் இருக்கா.. ஐ லவ் யூ விக்னேஷ்.. ஐ மிஸ் யூ" என்று
பேசிப்பேசியே அவனைத் தன் பக்கம்
இழுத்தாள். அவ்வப்போது கண்ணீரையும் காட்டினாள். அதனால் தான் அவளோடு வீடு வரை சென்று அவளுடன் அவன் சில நேரம் பொழுதைக் கழித்தது. அதைத் தனக்கு சாதகமாக ஆக்கி விக்னேஷைத்
தன் மோகப்பிடியில் இழுக்க முயற்சிக்க..
அதில் அவன் நேர்மை தவறாமல்
இருந்தான். விக்னேஷ் இம் என்று
இருந்தால் அவனோடு எதற்கும்
துணிந்திருப்பாள் நான்சி. அவனின்
வளர்ப்பு முறையே அவனை
அவளிடத்தில் நெருங்க விடாமல்
வைத்தது. (உண்மையைச்
சொல்லப்போனால் அவளிடம் அவனிற்கு அப்படித் தோன்றவில்லை.. மாறாக அவள் அப்படித் தன்னிரகத்தைச் சம்பாதிக்கும் போதெல்லாம் ஒரு ஓரத்தில் அவனுக்கு எரிச்சலும் வெற்றிடமும் மண்டியது).

விக்னேஷும் முதலில் குடும்பத்திடம்
மறைக்க எண்ணியவன் முதலில்
ஜீவாவிடம் சொன்னான். "ஜீ.. ப்ளீஸ்
கௌசி கிட்ட நானே சொல்லிக்கிறேன்..
அவ அழுவா டா" என்று சொன்னான்
விக்னேஷ். அவள் அழுவாள் என்று
தெரிந்தவனுக்கு அவள் ஏன் அழுவாள்
என்றுத் தெரியவில்லை. அதற்கு
பொஸசிவ்நஸ் என்ற காரணத்தை
அவனே கற்பித்து வைத்தான்.

இதோ அவன் கௌசியிடமும் தன்
குடும்பத்திடமும் சொல்லிவிட்டு கனடா
கிளம்பியவன்.. நான்சியிடம்
சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று
அவளது ப்ளாட்டிற்குச் சென்றான். அங்கே தான் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நான்சியின் ப்ளாட்டிற்குச் சென்றவன்
நாலவது மாடியில் இருக்கும் அவளது
வீட்டிற்குள் செல்ல லிப்டில் இருந்து
வெளியே வரும்போதே நான்சியின்
குரலும் இன்னொருவனின் குரலும்
கேட்டது. ஆனால் இருவரும் கத்திக்
கொண்டு இருந்தனர்.

"இங்க பாரு.. ஹைதராபாத்தில் இருக்கும் போது உன்ன லவ் பண்ண.. இப்போ இல்ல போதுமா" என்று சொல்ல விக்னேஷ் முதலில் அவளின் கத்தில்
கேட்டு வாசலிற்கு ஓடி வந்தவன்
கடைசியில் அவள் சொன்ன
வாக்கியத்தில் அப்படியே நின்று விட்டான்.

"அப்போ நீ என்ன ஏமாத்திட்டேல" என்று
ஆதங்கமாய்க் கேட்டது அவன் குரல்.

"ஆமாம்" - இரக்கமே இல்லாமல் வந்தது
நான்சியின் குரல்.

"நீ இங்க யாரையோ லவ் பண்றேன்னு
கேள்விப்பட்டேன்.. அது உண்மையா..
அதுக்காகத் தான் என்ன அவாய்ட்
பண்றையா?" என்று அப்பாவியாய்க்
கேட்க முதலில் திணறியவள் அடுத்து
சொன்ன பதிலில் அவன் மட்டும் இல்லை விக்னேஷும் அதிரிந்தான்.

"இங்க பாரு.. எனக்கு அல்ரெடி மேரேஜ்
பிக்ஸ் ஆன மாதிரி தான்.. உனக்கே
தெரியும் என் மாமா பையன் திவாகர்..
சும்மா டேட் பண்றவனை எல்லாம்
கல்யாணம் பண்ண முடியாது" என்றவள்
"சும்மா பேசிப்பேசி டைம் வேஸ்ட்
பண்ணாத.. எனக்கு டென்ஷன் ஆகுது..
தயவு செய்து வெளில போ.." என்றவள்
உள்ளிருந்து கதவிடம் வந்து கைகாட்ட அப்படியே நின்றுவிட்டாள். காரணம்
வெறி கொண்ட வேங்கையாய் விக்னேஷ் கோபத்தில் கண்கள் சிவப்பேறி நின்றிருந்தான்.

அந்த நேரத்தில் விக்னேஷ் வருவான்
என்று தெரியும்.. ஆனால்
ஹைதராபாத்தில் இருந்த வந்தவனைப்
பார்த்து எரிச்சல் ஆகிப் போனவள்
அனைத்தையும் கொட்ட அப்போது வந்த
விக்னேஷிற்கு எல்லாம் விளங்கியது.
விக்னேஷ் இரண்டு மாதத்திற்குள்
வருவதற்குள் அப்பா அம்மா என்னை
நம்புகிறார்கள் என்று புலம்பி
விலகிவிடலாம் என்று நினைத்தவளுக்கு அவனை இங்கு இப்போது கண்டவுடன் தொண்டை எல்லாம் கவ்வியது பயத்தில். அவளைப் பொருத்த வரை கௌசியை பழி வாங்கி விட்ட மாதிரி தான் இஷ்டம் இல்லாத கல்யாணத்தில் தள்ளி விட்டு. இப்போது அவன் சென்ற சமயம் சுலபமாக விலகி விடலாம் என்று எண்ணியவள் கையும் களவுமாக மாட்டி விட்டாள்.

அவள் கையைக் காட்டிய பக்கம் வந்த
ஹைதராபாத்காரனும் விக்னேஷ்
நிற்பதைப் பார்த்தே விக்னேஷ் யார்
என்று புரிந்து கொண்டு.. இனி நீ
அவ்வளவு தான் என்ற பார்வையை
நான்சியிடம் வீசிவிட்டு சென்றுவிட்டான்.

ஒவ்வொரு அடியாய் விக்னேஷ்
அழுத்தமாய் எடுத்து வைத்து உள்ளே
செல்ல நான்சியின் கால்கள் தானாகப்
பின்னே நகர்ந்தது. கை முஷ்டிகள் இறுக
அவள் அருகில் சென்றவன் கையை
எடுத்து கழுத்தை நெறிக்கச்
சென்றுவிட்டான் கோபத்தில். பின் என்ன நினைத்தானோ கையை இறக்கி விட்டு "ச்சி.. உன்ன மாதிரிப் பழகுறவளுக்கு காசுக்கு வரவ எவ்வளவோ மேல்" தன் மனதில் எழுந்த வார்த்தையை அவளிடம் தீயாய் வீசிவிட்டு வெளியே விறுவிறுவென்று சென்று விட்டான்.

அவனுக்குக் கோபம் தலைக்கு ஏறியதே
தவிர வருத்தமோ மனதில் வலியோ
இல்லை.. ஆனால் கோபம் மிதமிஞ்சி
இருந்தது. அறிவிளந்து அவளிடம்
மயங்கிக் கிடந்த மூளையைச் சரி
செய்தவன் தான் வந்த கேப்பில் ஏறி
ஏர்போட்டிற்குச் சென்றான்.

ஏர்போட்டிற்கு வந்து தன் டீம் மேட்ஸுடன்
இணைந்தவனுக்கு ஒன்றும் பெரிதாய்
எதுவும் மனதை அலட்டவில்லை..
செக்கிங் எல்லாம் முடிந்து தன் போனை
ப்ளைட் மோடில் போட்டுவிட்டு ப்ளைட்டில்
உட்கார்ந்தவன் அப்போது தான் தன்
மொபைலை எடுத்தான். அவனுடன் வந்த டீம் மேட்ஸிற்கு முன்னால் சீட் கிடைக்க இவனுக்கு மட்டும் பின்னால் சீட் கிடைத்தது. அப்போது தான் தன்
மொபைலை எடுத்து அன்லாக் செய்தவன் உள்ளே இருந்த வால்பேப்பரைப் பார்த்தான். அவனும் கௌசியும் அவள் பிறந்தநாள் அன்று ரெஸ்டாரன்ட் முன் நின்று கடைசியாக எடுத்த செல்பி. பார்த்தவனுக்கு அடி மனதில் இருந்து துக்கம் தொண்டையை அடைக்க அவனுக்கு அது என்ன உணர்வு என்றே தெரியவில்லை.

"என்ன சார்.. கேர்ள் ப்ரண்ட் விட்டு பர்ஸ்ட்
டைம் அப்ராட்டா.. இப்போ எல்லாம்
வாட்ஸ் ஆப் வீடியோ கால்.. ஸ்கைப் ன்னு
இருக்கு.. 20 வருசத்துக்கு முன்னாடி
இதெல்லாம் இல்லாம என் வயசுல
இருக்கவங்க ரொம்ப சிரமப்பட்டோம்.
டோன்ட் வொர்ரி தம்பி.. எல்லாம் சரி
ஆயிரும்" என்றுப் பக்கத்தில் இருந்தவர்
பேச்சுக் கொடுக்க விக்னேஷிற்கு
உடம்பில் ஷாக் அடித்தது போல இருந்தது.

அவன் தனக்குள் கேட்ட கேள்விகள்
அனைத்திற்கும் விடைகள் கிடைத்தது.
அன்று விக்னேஷ் கல்யாணம்
செய்துகொள் என்று முழுமனதோடு
ஒன்றும் பேசவில்லை. மாமா
சொன்னதிற்காகத் தான். அன்று
நான்சியை விட கௌசி அழுது கொண்டே சென்றதில் நான்சியை அப்படியே விட்டுவிட்டு வந்தது ஏன் என்று இப்போது புரிந்தது. மற்றும் குரு கௌசியின் கழுத்தில் தாலி கட்டியபோது ஏன் அப்படி தான் வெறித்த நிலையில் இருந்தோம் என்று இப்போது அவனுக்குப் புரிந்தது. மேலும் தாலி கட்டியவுடன் கௌசி கண்ணீருடன் நிமிர்ந்ததில் அவன் அடிபட்டுத் தான் போனான். மற்றும் அவளின் தோளில் குரு இன்று கைபோட்ட போது அவனை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் தன்னை அறியாமல் ஏன் எழுந்தது என்பதை இப்போது தான் உணர்ந்தான்.

"அய்யோ...." என்று தலையைப் பிடித்து
உட்காரந்துவிட்டான் விக்னேஷ்.
கண்களில் கண்ணீர் வர அடக்க
முயன்றவன் தோற்றுப்போனான்.
இரண்டு சொட்டுக் கண்ணீர் தன் ஜீன்ஸ்
பேண்டை நனைக்க கண்ணை மறைத்து
வெளியே பார்த்த வண்ணம் தலையைத்
திருப்பிக் கொண்டான். சொல்ல முடியாத துயரம் நெஞ்சைத் தாக்க கண்ணீரை அடக்கியவனின் தலை நரம்புகள் எல்லாம் புடைத்தன. அவன் உட்கார்ந்திருந்தானே தவிர எங்கெங்கோ சென்று அவனின் ஜீவன் கௌசியின் இடத்தில் சென்று நின்றது.

'மடையன்' 'மடையன்'.. கூடவே இருந்த
தேவைதையை விட்டுவிட்டேனே.. என்று
தன்னைத்தானே திட்டி அதட்ட மட்டுமே
அவனால் முடிந்தது. ஆனால் இப்போது
என்ன செய்ய முடியும்.. அவள் தான்
இன்னொருவனின் மனைவி ஆயிற்றே
என்று நினைத்தவனுக்கு உடல் மரண
ஓலமிட்டது. அப்போதும் தன் காதலை
உணர்ந்தானே தவிர அவளின் காதலை
அவன் உணரவில்லை.

எழுந்து வாஷ்ரூமிற்குச் சென்றவன்
கண்களை அழுத்தமாகத் துடைத்தான்.
கண்கள் சிவப்பேறி தன்னைப்
பார்ப்பதற்கே அவனிற்கு முடியவில்லை.
அவனின் சப்தநாடியும் அடங்கியது அவள் இல்லாத வெறுமையை
உணர்ந்தவனுக்கு. அடுத்தவன்
மனைவியை நினைப்பது கூடப் பாவம்
என்று நினைத்தவன் மனதில் விழுந்த
அடியுடனே கனடா வந்தடைந்தான்.

அதற்குள் நான்சி விக்னேஷ் விஷயம்
ஆஃபீஸில் பரவி கனடாவில்
விக்னேஷுடன் இருந்த டீம் மேட்ஸ் வரை
வந்து சேர்ந்தது. எல்லோரும் அவனைப்
பார்க்கும் பார்வையில் எழுந்த
ஆத்திரத்தை அடக்கியபடி ப்ராஜெக்ட்டில்
கவனத்தைச் செலுத்தினான். கௌசிக்கு அழைக்கலாமா என்று நினைத்தவன் "வேண்டாம்.. கூப்பிட்டா அவளை மறப்பது கஷ்டம்" என்று நினைத்து அதைக் கை விட்டான்.

ஆனால் நான்கு நாட்களில் ஜீவா போன்
செய்து விஷயத்தைச் சொல்ல விக்னேஷ் மனதில் வெண்ணீரை யாரோ ஊற்றியது போல ஆகியது. முகம் எல்லாம் வெளுத்து வியர்த்து நின்றவனை பக்கத்தில் இருந்த
யாரோ நிதானத்திற்கு கொண்டு வர..
அவரிடம் இருந்து நழுவி யாருமில்லாத
ஒரு இடத்திற்கு வந்தான்.

"ஜீ... என்னடா சொல்ற" எனக்
கேட்டவனின் குரல் கரகரத்தது.

ஜீவா சொல்லி முடிக்க "நான் இப்போதே
கிளம்பி வருகிறேன் ஜீ.." என்று
சொல்லிவிட்டு விறுவிறுவென்று உள்ளே சென்று தன் கம்பெனியை கான்டாக்ட் செய்து கேட்டவனுக்கு.. அவர்களின் பதில் ஆத்திரத்தைக் கிளப்பியது. "நீங்க இப்போது வர முடியாது.. வேலை எல்லாம் முடிந்து தான் வர முடியும்.. நாங்கள் நீங்கள் வர அனுமதிக்க முடியாது" என்று அந்தக் காப்ரேட் விஷமிகள் சொல்ல
விக்னேஷ் அவர்களிடம் பாய்ந்தான்.

"எனக்கு இந்த வேலை வேண்டாம்.. நான்
இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து விலகறேன்" என்று சொல்ல மேலும் அவன் தலையில் இயலாமையை இறக்கியது அந்த நிறுவனம்.

"ஓகே.. பட்.. நீ இப்போதே ப்ராஜெக்ட்டை
முடிக்க வேண்டும்.. இல்லை என்றால்
அந்த நஷ்டத்திற்கான பணத்தை வந்து
தர வேண்டும்.. இல்லை என்றால் ஜெயில் தான்" என்று செக்கை வைத்தான் விக்னேஷிற்கு.

"முடியாது.. நான் கிளம்பி வரேன்..
உன்னால் ஆனதப் பாத்துக்க" என்று போனை வைத்தவன் தன் குடும்பத்திற்கு போனைப் போட்டு விஷயத்தைச் சொல்ல வரதராஜன் உட்பட எல்லோரும் அவன் வருவதை மறுத்தனர். அவன் எவ்வளவு ஆசையாக சென்றான் என்பது அவர்களுக்கே தெரியும். அதையும் மீறி கிளம்பி வருகிறேன் என்று ஆர்ப்பாட்டம் செய்தவனை வரதராஜன் சமாதானம்
செய்தார்.

"மாமா.. உங்களுக்கு புரியுதா.. அவ
உங்களுக்கு மட்டும் மகள் இல்லை.. என்
கூடையே வளர்ந்தவ.. அவளை இந்த
நிலையில் விட்டுட்டு என்னால இங்கக்
கிடக்க முடியாது" என்று கத்தியவனை
வரதராஜன் தன் பேச்சால் அடக்கினார்.

"வந்துரு விக்னேஷு.. வந்து இங்க
உட்கார்ந்து எங்களோட அழு.. உனக்கு
அந்தப் ப்ராஜெக்ட் கிடைச்சதுல உன்ன
விட எங்களை விட அதிகமாக சந்தோஷப்பட்டது கௌசி தான்.. நீ வந்தா அவ என்ன சந்தோஷப்படுவாளா? அவனால வந்துட்டன்னு இன்னும் அழுகதான் செய்வாள்.. நான் சொல்றத சொல்டேன் வரதா இருந்த வந்துரு விக்னேஷ்" என்று வரதராஜன் கோபத்தில் அவனிடம் இரைய போனை வைத்துவிட்டான்.

நாட்கள் சென்றது.. மதிக்குப்
போன்செய்து அவ்வப்போது கௌசியின் நிலையைக் கேட்டறிந்தான். அவன் எவ்வளவோ போன் செய்தும் அவள் எடுக்கவில்லை.. தினமும் 30 கால்ஸ்.. 50 மெசேஜ் என்று வழக்கம் தவறாமல் அனுப்பினான். வரதராஜன் மாமாவிற்கு போன் செய்து அவளிடம் குடுக்கச் சொல்ல அவள் பேச மறுத்தாள்.
ஒன்றுக்கும் அவள் ரெஸ்பான்ஸ்
செய்யாமல் போகவே சென்னையில்
இருக்கும் மதியை நாடினான் விக்னேஷ்.

கௌசியின் நிலையே வேறு.. நான்கு
நாட்களில் புருசனைக் கொன்று விட்டாள் என்று அக்கம் பக்கத்தின் இருந்தவர்கள் பேச்சில் நொந்தாள். "ராசி இல்லாதவள்", "அய்யோ காலையில் அவள் முகத்தைப் பார்த்துவிடக் கூடாது", "இவள் ஆடின ஆட்டம் என்ன" என்று சில கழிசடைகள் பேச்சு கௌசியை வெளியே போகவே அஞ்ச வைத்தது. அவளையே இன்பீரியர் காம்ப்ளக்ஸில் தள்ளியது. தனக்கு மெய்யாகவே ராசி இல்லையோ என்று எண்ணி மருகினாள்.

ஒருநாள் "மதி கருவுற்றிருக்கிறாள்..
வீட்டிற்கு வா கௌசி.." என்று ஜெயா
அத்தை அழைக்க.. தான் முதலே போக
வேண்டாம் என்று எண்ணியவள் "நான்
நாளை வரேன் அத்தை" என்று போனை
வைத்துவிட்டு.. மதிக்கும் ஜீவாவிற்கும்
"கங்கிராட்ஸ் ஃபார் தி நெக்ஸ்ட் லெவல்"
என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி
வைத்துப் படுத்துவிட்டாள். அடுத்த நாள்
தனக்குக் கிடைக்கப் போகும்
அவமானத்தை அறியாமல்.

அடுத்த நாள் காலை எழுந்து
குளித்துவிட்டு ஒரு லைட் கலர் சுடிதாரை
அணிந்து கொண்டு மதியைப் பார்க்கச்
சென்றாள் கௌசி. வரதராஜன் தான்
மாலை பார்க்க வருவதாகச் சொல்லவே
அவள் மட்டும் கிளம்பினாள். அத்தை
வீட்டிற்குள் அவள் நுழைய எதிரே
காலேஜிற்கு கிளம்பி வந்த சந்தியா
இவளைப் பார்த்து தலை குனிந்தாள்.

"காலேஜ் கிளம்பியாச்சா சந்தியா?" என்று கௌசி வினவ அவளின் பதிலின்
தொனியே வேறு மாதிரி இருந்தது.

"பாத்தா தெரியலை..." என்று வெறுப்புடன் கூறியவள் "காலங்காத்தால நேருல வந்துட்டு சை.." என்று முணுமுணுத்து விட்டுப் போக கௌசி அடிபட்ட பறவையாய் விக்கித்து நின்றாள். சந்தியா சொன்னது அவளுக்குக் கேட்காமல் இல்லை. கௌசிக்கு கேட்க வேண்டும் என்றுதான் சந்தியா அப்படிச் சொன்னது.

"அட. வா கௌசி" என்று ஜீவாவின் குரல்
கேட்க முகத்தைச் சமாளித்து ஜீவாவிடம்
புன்னகைத்தாள் கௌசி.
வாழ்த்துக்களைத் தெரிவித்தவள்
மதியிடமும் வாழ்த்தைத் தெரிவித்தாள்.

"நீ எப்போ வந்த ஜீ?" - கௌசிகா.

"நான் நேத்து மதி சொன்னோனே
கிளம்பிட்டே கௌசி.. மார்னிங் 6.40கே
வந்துட்ட.." என்றவன் "மாமா எங்கே..?"
எனக் கௌசியிடம் கேட்டான்.

"அப்பா... ஈவ்னிங் வரேன்னு சொல்டாரு
ஜீ" - என்றாள் கௌசி. அவளின் அமைதி
ஜீவாவையும் தாக்கியதும் ஏதோ
உண்மைதான்.

"வாடிம்மா.. எப்படி இருக்க?" என்று
நன்றாக இழுத்து ஸ்ருதியுடன் கேட்டபடி
வந்தார் மதியின் தாயார் பரமேஸ்வரி.
நேற்று ஜீவா கிளம்பிய போது அவனுடன் மதியின் குடும்பமும் கிளம்பி
வந்திருந்தது.

"நல்லா இருக்கேன் பெரிம்மா.. நீங்க
எப்படி இருக்கீங்க. பெரியப்பா
வரலையா?" - கௌசிகா.

"ம்ம் நல்லா இருக்கோம்.. மதி அப்பா கோயிலுக்குப் போயிருக்காரு"
என்றவரின் பார்வை கௌசியை மேல்
இருந்து கீழ் வரை இளக்காரமாய்
அளந்தது. அவரின் பார்வையில்
கௌசியின் மனம் நத்தயாய்ச்
சுருங்கியது. மேலும் மதியின் அண்ணன்
சுதாகரன் தன்னைப் பார்க்கும் பார்வை
அவளைக் கொன்றது. கல்யாணம் ஆகாத போது வேறு.. ஆனால் கல்யாணம் முடிந்து.. இப்படிப் பட்ட நிலையில் இருக்கும் தன்னை அவன் தப்பான பார்வையில் பார்ப்பது கௌசிக்கு அருவருப்பை மூட்டியது.

எல்லோரும் காலை சாப்பிட கௌசி தான் சாப்பிட்டுவிட்டுத் தான் வந்ததாகச்
சொல்ல அவளைத் தொந்திரவு
செய்யாமல் அனைவரும் சாப்பிட்டனர்.
சாப்பிட்டு விட்டு வந்த பரமேஸ்வரி
கௌசியிடம் "உன்கிட்ட பேசனும்" என்றார்.

"சொல்லுங்க பெரிம்மா"

"இங்க வேணாம்.. வா அங்க போவோம்"
என்று மாடிப் படி அருகில் கூப்பிட
கௌசியும் அவர் பின்னேயே சென்றாள்.

"ஏம்மா.. உனக்குக் கொஞ்சம் ஆச்சும்
இங்கிதம் இருக்கா.. நல்ல விஷயம்
சொல்லி எல்லோரும் இங்க
வந்திருக்கோம்.. இந்த நேரத்தில நீ இங்க வரலாமா.. சரி உன் அத்தை
கூப்பிட்டாலும் நீ இரண்டு நாள் கழிச்சு
வரலாம்ல.. அதுவும் இல்லாம புருசன்
பொண்டாட்டி ரொம்ப நாள் அப்புறம்
பாக்கறாங்க.. நீ இருந்தா நல்லா
இருக்குமா.. அதுவும் இந்த புருசனை
முழுங்கிட்டு....." என்று முடிப்பதற்குள்
ஆங்காரமாய் வந்தது சுமதியின் குரல்.

"போதும் நிறுத்துமா...." - கத்திய கத்தலில் அரண்டே விட்டார் பரமேஸ்வரி. மதி கருவுற்றிருக்கிறாள் என்ற விஷயம்
அறிந்து சுமதியும் அவர் வீட்டுக்காரர்
செந்தில்நாதனும் வருகை தந்தனர். வாசலில் செருப்பை விடும் போது தான்..
பரமேஸ்வரி கௌசியிடம் பேசுவது
சுமதிக்கும் செந்தில்நாதனிற்கும் கேட்டது. அவரது பேச்சை கேட்ட இருவருமே கொதித்து விட்டனர்.

சுமதியின் குரல் கேட்டு வெளியே வந்த
அனைவரும் அங்கு நின்றிருந்த
பரமேஸ்வரி, கௌசி, செந்தில்நாதன்,
சுமதியை மாறி மாறிப் பார்த்தனர்.

"இங்க பாரும்மா... இது என் அக்கா வீடு..
அத முதல்ல நியாபகம் வச்சிக்க..
என்னமோ உன் வீடு மாதிரி எங்க
புள்ளைய இப்படிப் பேசறே.. இதையே வேற எவளாவது பேசிருந்தான்னா
வாயைத் தச்சிருப்பேன்.."

"சுமதி என்ன ஆச்சு" - ஜெயா.

சுமதி நடந்ததைச் சொல்ல
எல்லோருக்குமே கோபம் வந்தது. "ஏம்மா.. உனக்கு அறிவே இல்லையா.. நீயும் ஒரு அம்மா தானே அவளுக்கு.. அவளை அப்படி சொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சு" என்று மதி தன் தாயிடம்
சீறினாள்.

"ப்ளீஸ் ஸ்டாப் இட்.." என்று கௌசி கத்த..
அனைவரும் அமைதி ஆயினர்.

பின் மதியிடம் திரும்பியவள் அமைதியாக "மதி.. அவங்க சொன்னதுல்ல என்ன தப்பிருக்கு.. அவங்க நிலைமைல இருந்து
பார்த்தா.. உன் மேல இருக்க அக்கறைல
தான் சொல்லிருக்காங்க.. அவங்களைத்
திட்டாதே.." என்றவள் "அம்மா
இருந்திருந்தா எனக்கு இதெல்லாம்
தெரிஞ்சிருக்கும்" என்ற கௌசி
பரமேஸ்வரியிடம் திரும்பி கைகளைக்
கூப்பி "சாரி பெரிம்மா" என்றவள்...
அங்கிருந்து இரண்டு நிமிடத்தில் கிளம்பி விட்டாள்.

முருகானந்தம் வந்தவுடன் தன் தாய் செயத்தைத் தன் தந்தையிடம் மதி
சொல்ல மனைவியை அவர்
கடித்தெறிந்து விட்டார் வார்த்தைகளால்.
பின் அவர் அனைவரிடமும் மன்னிப்பைத் தெரிவித்துவிட்டு மனைவியையும் மகனையும் கூட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.

"அம்மா..." என்ற வீட்டு வேளையாளின்
குரலில் ஜீவா.. சதாசிவம்.. ஜெயா.. மதி..
செந்தில்நாதன்.. சுமதி.. அனைவரும்
திரும்பினர்.

"மனசு கேக்கல.. அதான் சொல்றேனுங்க.. தப்பா நினைக்காதிங்க.. கௌசி பாப்பா
அதுக்காக மட்டும் போலைங்க.. வந்து..
காத்தால பாப்பா வந்தப்போ.. நம்ம
சந்தியா பாப்பா.." என்று தொடங்கியவர்
சந்தியா காலையில் கௌசியை
இகழ்ந்துரைத்ததைப் போட்டு உடைத்தார்.

அவ்வளவு தான் மாலை வீடு திரும்பிய
தங்கையை ஜீவாவின் கரம் பதம்
பார்த்தது.. சந்தியா என்ன என்று
சுதாரிப்பதற்குள் ஜெயா அவளை
வார்த்தைகளால் வெளு வெளு என்று
வெளுத்து விட்டார். "ஏன்டி.. மதி அடுத்த
வீட்டுப் பொண்ணு தானே.. அவளுக்கு
இருக்கிற அக்கறை உன்கிட்ட கொஞ்சம்
இருந்திருந்தா.. கௌசியை அப்படிப்
பேசிருப்பையா.. ச்சி.. இந்த புத்தி எங்க
இருந்துடி வந்துச்சு உனக்கு.." என்று
கௌசியின் நிலையை முழுதாக அறிந்து குமுறிய ஜெயா.. 18 வயது மகள் என்றும் பாராமல் அவளை அடித்து விட்டார்.

மாலையில் மதியைப் பார்க்க வந்த
வரதராஜன் உள்ளே நடந்த
அனைத்தையும் கேட்டுவிட்டார். அவர்
வந்ததைக் கண்ட ஜீவா தலையைப்
பிடித்துக் கொள்ள சதாசிவம் தான்
"உள்ளே வாங்க மச்சான்" என்று
அழைத்தது.

உள்ளே வந்து உடகார்ந்தவர்
"வாழ்த்துக்கள்.. ஜீவா.. மதி.." என்று
முயன்று தன் குரலை மகிழ்ச்சியாக
வைத்துச் சொன்னார்.

"வந்து.. நம்ம முறைப்படி.. அதான் வாங்கி வந்தேன்" என்று ஒரு பவுன் தங்கக் காசை மதியின் கையிலும் ஜீவாவின் கையிவும் வைத்துத் தர எல்லோருக்கும் அந்த வீட்டில் கூசி விட்டது. அவர் நினைத்திருந்தால் தங்கைகளை எப்படியோ என்று விட்டிருக்கலாம். ஆனால் இன்று வரை முறை அதுஇது என்று எல்லாவற்றையும் செய்யும் மனிதனிடம் அவர்களால் மூஞ்சியைக் கூட சரியாகப் பார்க்க முடியவில்லை. அதுவும் இந்த நிலைமையில் அவர் இருக்கும் கஷ்டத்திற்கு இது அதிகம் தான்.

"சரிப்பா.. நான் கிளம்பறேன்" என்று
வரதராஜன் எந்தரிக்க எல்லோருக்கும்
மிகவும் தர்ம சங்கடமான நிலை ஆனது.
சமாதானத்திறகாகக் கூட யாராலும்
எதுவும் பேச முடியவில்லை.

"சந்தோஷமா சந்தியா.. ஆனா நீ இந்த
அளவுக்கு பிகேவ் பண்ணுவன்னு
நினைக்கல.. படிச்ச பொண்ணு தானே நீ..பாத்தீல.. நீ இப்படி பண்ணியும் உன் மாமா எதுவும் பேசாமல் அவரோட முறைய பண்ணிட்டு போயிட்டாரு.. அதுதான் அவர்.. கௌசியும் வேற எதுவும் பேசாமல் போயிட்டா.. இப்போதாவது புரிஞ்சுக்க" என்று சதாசிவம் மகளை அதட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்தனர்.

வீடு வந்த வரதராஜன் உள்ளே நுழைய
செந்தில்நாதன் முன் அறையில்
உடகார்ந்திருந்தார். சுமதி சமையல்
அறையில் இருந்தார்.. கௌசி வழக்கம்
போல் அவள் அறையில் அடைந்து
கிடந்தாள். கௌசி காலை ஜெயா வீட்டில்
இருந்து கிளம்பிய கால் மணி நேரத்தில்
அவர்களும் மனம் கேட்காமல் இங்கேயே
வந்தனர். உள்ளே வந்து சட்டையின்
மேல் இரண்டு பட்டன்களைக் கழட்டியபடி
உட்கார்ந்தவர் செந்தில்நாதன் பக்கத்தில் அப்படியே கண்மூடி அமர்ந்தார். அவருக்கு மனம் எல்லாம் தொய்ந்தது போல இருந்தது. தன்னை யார் என்ன சொன்னாலும் தாங்கிக் கொள்வார்.. ஆனால் தன் மகளை... என்று நினைக்கும் போதே தன் இயலாமையால் அவரின் மனம் வலித்தது.

மூடிய கண்களில் இருந்து கண்ணீர்
எட்டிப் பார்க்க "மச்சான்.." என்ற
செந்தில்நாதனின் அழைப்பில்
கண்ணைத் திறந்தார்.

"சொல்லுங்க மாப்பிள்ளை" என்றார்
வரதராஜன் கண்களை மூடியபடியே.

"நம்ம கௌசியை எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க" என்றார் செந்தில்நாதன்.

"அவ வந்தானா கூட்டிட்டு போங்க
மாப்பிள்ளை.. எப்போமே அந்த
அறைக்குள்ள தான் அடஞ்சு கிடக்கா"
என்றார் கண்களைத் திறந்து
செந்தில்நாதனைப் பார்த்துத் தொய்ந்த
குரலில்.

"இல்லை மச்சான்.. நான் அவள
மருமகளா என் வீட்டுக்கு அனுப்பி
வைங்கன்னு கேக்கறேன்" என்று கேட்க
வரதராஜனுக்கு நா எழவில்லை.

"நீங்க..." என வரதராஜன் இழுக்க "ஆமாம் மச்சான் நம்ம விக்னேஷிற்குத் தான் கேட்கிறேன்" என்று செந்தில்நாதன் சொல்ல அவரின் கையைப் பிடித்துக் கொண்டார் வரதராஜன்.

"ஆமாண்ணே... அந்தப் பொம்பளை
என்னப் பேச்சு பேசுனா தெரியுமா..
அப்புறம் அந்த சந்தியா கழுதை.. என்ன
வாயி அதுக்கு இப்பவே.. அதுவும்
இல்லாம எனக்கு அவ எங்க கூட வரது
நல்லதுன்னு தோணுது.." என்றார் சுமதி.

"எந்தப் பொம்பளை? என்ன ஆச்சு?" என்று பரமேஸ்வரி பேசியதை அறியாத
வரதராஜன் கேட்க சுமதி அனைத்தையும்
கூறினார். வரதராஜனிற்கு இப்போது
கோபம் வந்தது. அந்தப் பொம்பளை யார்
என் மகளைப் பேச என்று குமுறினார்.

"சுமதி.. விக்னேஷ்கிட்ட கேட்டிங்களா?
அவனைக் கேட்காம.." என்று வரதராஜன்
கேட்க சுமதி குறுக்கிட்டார்.

"அண்ணா.. அவனுக்கு எந்தப்
பிரச்னையும் இல்லை.. அவன் தான்
அடுத்த வாரம் வரான்ல" என்று பேச்சை
முடித்தார் சுமதி. ஊருக்கும் வரும்
எண்ணத்தில் சீக்கிரமே வேலையை
முடித்திருந்தான் விக்னேஷ்.

அந்த நேரம் மனம் கேட்காமல் அண்ணன்
வீட்டிற்கு வந்தனர் ஜெயாவும்
சதாசிவமும்.. பின்னாடியே ஜீவாவும்
மதியும் வந்தனர். ஜெயா தன்
அண்ணனிடம் நடந்ததிற்கு மன்னிப்புக்
கேட்க வரதராஜனோ "விடுமா.. நீ என்ன
பண்ணுவே" என்று முடித்துக் கொண்டார்.

பின் விஷயத்தை அறிந்த
அனைவருக்கும் மகிழ்ச்சி தான். ஆனால்
விக்னேஷும் சம்மதம் தெரிவித்து
விட்டான் என்று சுமதி சொல்லிய போது
ஜீவாவும் மதியும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். "நான்சியிடம் என்ன சொல்லுவான்" என்று இருவர் மனதிலும் எழுந்தது.

பின் அவன் வந்த பின் பார்த்துக்
கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.
அப்போது தான் அறையைத் திறந்து
வெளியே வந்த கௌசி அனைவரையும்
கவனித்தாள். காய்ச்சல் வேறு
வந்திருந்தது அவளுக்கு காலையில்
நடந்ததை மனதில் போட்டு அறற்றி. முகம் எல்லாம் காய்ச்சலால் வீங்கி இருக்க அனைவரும் அவளை பரிதாபமாகப் பார்ப்பது வேறு அவளை வாட்டியது. வந்து அவர்களுடன் எதுவும் பேசாமல் அமர்ந்தவள் தன் பக்கத்தில் இருந்த சுமதியின் தோளில் காய்ச்சல் தாங்காமல் கண் மூடி அமர்ந்தாள்.

"கௌசி" - மெதுவாக அழைத்தார்
வரதராஜன்.. அவள் ஒரு மாதமாக எந்தச்
சத்தத்துக்கும் பயப்பதே அதற்கு காரணம்.

"சொல்லுங்கப்பா" என்றாள் முடியாதக்
குரலில்.

"ரொம்ப முடியலையா பாப்பா..
ஹாஸ்பிடல் போகலாமா"
"இல்லப்பா.. சாப்பிட்டு டாப்ளட்ஸ் போட்ட
சரி ஆகிரும்பா.." என்று காய்ச்சல் குரலில் சொன்னாள்.

"ம்ம்.. பாப்பா.. அடுத்த வாரம் உனக்குக்
கல்யாணம்.. விக்னேஷ் கூட" என்று
வரதராஜன் சொல்ல கௌசி
காய்ச்சலையும் மறந்து அதிர்ச்சியில்
எழுந்து நின்றாள்.
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-16

"முடியாதுப்பா.. முடியவே முடியாது" என்று கத்தினாள் கௌசி கண்ணீருடன்.

"இல்லம்மா.. நீ ஒத்துக்கிட்டு தான்
ஆகணும்.. குருவை மறந்து புது
வாழ்க்கையை ஆரம்பி" என்று அவர்
சொல்ல கௌசிக்கு காது எல்லாம்
ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போல
இருந்தது.

"அப்பா... என்னால... வேண்டாம் அப்பா..
விக்னேஷ் இதுக்கு சம்மதிக்க மாட்டான்"
என்றாள் கௌசி. அவன் நான்சியைக்
காதலிப்பதாக அல்லவா நினைத்துக்
கொண்டிருக்கிறாள் கௌசி. மதியும்
ஜீவாவும் கூட.

"விக்கி-க்கு சம்மதம் தான்.. அடுத்த வாரம் வரான் கௌசி" என்று சுமதி சொல்ல கௌசிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. தனக்காகத் தான் ஒத்துக்
கொண்டிருப்பான். மற்றபடி அவனுடைய
காதலை மறந்து எப்படி.. ச்சி என்று
நினைத்தவள் தன் அப்பாவிடம் பேச்சை
வளர்த்தாள்.

"அப்பா... யார் ஒத்துக்கிட்டா என்ன.. நான் ஒத்துக்க மாட்டேன்.. இந்தக்
கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேன்." என்று பைத்தியம் பிடித்தவள் போலக் கத்த.. ஜீவா எழுந்து அருகில் வந்து கௌசியை நிலைக்குக் கொண்டு
வந்தான். இல்லை கொண்டு வர முயற்சி
செய்தான். மதி கௌசியையும் அவள்
அழுகையையும் பார்த்து அப்படியே விக்கித்து நின்றாள். கௌசிக்கு இப்படிக் கோபப்படத் தெரியுமா என்று.

"கௌசி இங்க பாரு.. கன்ட்ரோல் யுவர்
செல்ப்" என்று ஜீவா கத்தி அதட்ட கௌசி
அப்படியே நின்றாள்.

"ஜீ.. என்னால முடியாது ஜீ.. ப்ளீஸ்..
நீயாது சொல்லேன்" என்று
இருகைகளையும் கூப்பியபடிச் சொல்ல..
அவளது கையைப் பிடித்துக் கீழே
இறக்கியவன் "எஎ.. என்ன கௌசி
கையெல்லாம் எடுத்துக் கும்படறே.. ப்ளீஸ் கௌசி.. உன் நல்லதுக்கு தான்
சொல்றாங்க புரிஞ்சிக்கோ.. எல்லார் முடிவுக்கும் ஒத்துக்க.. இந்த ஒரு டைம்
கௌசி" என்று ஜீவாவும் பெரியவர்கள்
பக்கம் இருந்து சொல்ல கௌசி
ஜீவாவின் கையை உதறித் தள்ளினாள்.
விக்னேஷை உள்ளே இழுக்கவும்
அவளுக்கு விருப்பம் இல்லை. அடுத்த
கல்யாணம் என்ற வார்த்தையே
அவளிற்குக் கசந்தது.

"என் வாழ்க்கையைக் கையில் எடுக்க
உங்கள் எல்லோருக்கும் யார் ரைட்ஸ்
தந்தது" என்று இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது என்ற ஆத்திரத்தில் கௌசிகா வார்த்தைகளை விட வரதராஜனின் கரம் கௌசியின் கன்னத்தில் இறங்கியது. ஏற்கனவே காய்ச்சலில் இருந்தவள் இப்போது தன் தந்தை அறைந்த அறையில் கீழே விழுந்தாள். தன் தந்தையா தன்னை அடித்தார் என்பதை உணர்ந்தவள் ஏறிட்டு அவளைப் பார்க்க தன் தந்தை கோபத்தில் நிற்பதைப் பார்க்க அப்படியே நடுங்கி விட்டாள்.

"இவங்களுக்கு உரிமை இல்லையா..
யாரைப் பார்த்து என்ன கேள்வி
கேக்கறே.." என்று கர்ஜித்தவர் "உன்னை
சின்ன வயதில் தூக்கி இருந்து
வளர்த்தவர்கள்.. இவர்களைப் பார்த்து
இப்படிப் பேச உனக்கு வெட்கமாக
இல்லை.. சொல்ற பேச்சைக் கேட்டு
இருக்கிறதுனா இரு.. இல்லைனா என்
கண் முன்னாடி நிக்காதே.. எவ்வளவு நாள் தான் நானும் எவ்வளவு கஷ்டத்தைத் தாங்குவது. நானும் சாதாரண மனிதன் தான்" என்று என்னப் பேசுகிறோம் என்றே தெரியாமல் வரதராஜன் கோபத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

தந்தையின் கோபமும் வார்த்தைகளும்
உடலை நடுங்கச் செய்ய நடுங்கி கீழே
கிடந்தவளை ஜெயா சென்று
அணைத்துக் கொண்டார். "என்னண்ணா நீங்க.. இப்படியா அடிப்பீங்க புள்ளைய.. உங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை எங்களுக்கும் இருக்குண்ணே.. நீங்க இவளை கை வைக்காதீங்க" என்று நடுங்கிக் கொண்டிருந்த கௌசியை தன் தோளோடு அணைத்துச் சொன்னவர் அழுதே விட்டார்.

கௌசியின் வார்த்தைகள் அங்கு
யாரிடமும் செல்லவில்லை.. இப்படியே
அவளை விட முடியாது என்று
எண்ணியவர்கள் நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டனர். ஜெயாவிற்கும் விக்னேஷ் அவளை மாற்றுவான் என்ற நம்பிக்கையில் கௌசியைத் தேற்ற முயன்றார். ஆனால் விரக்தியில் இருந்த கௌசியின் மனமோ எதையும் ஏற்கவில்லை. எல்லாரிடமும் பேசுவதை நிறுத்தினாள். தன் அன்னையை நினைத்து ஊமையாய் மனம் அழுதது. அவர் இருந்திருந்தால் இந்நேரம் என் மனதைப் புரிந்திருப்பார் இல்லையா
என்று தன்னைத் தானே கேட்டுக்
கொண்டாள். பிறந்ததில் இருந்து
அன்னையை நினைத்து அழாதவள்
"அம்மா" "அம்மா" என்றே கிடந்தாள்..
"பேசாமல் என்னையும் உன்கூட கூடிட்டு
போயிருக்கலாம்ல மா" என்று வந்த
இரவுகளில் அழுதழுது தலையணையை
நனைத்தாள்.

"டேய் விக்னேஷ்..." என்று ஓடிச் சென்று
ஒன்றரை மாதம் கழித்து பார்த்த
விக்னேஷைக் கட்டிக் கொண்டான் ஜீவா.
கௌசியைத் தவிர எல்லோரும்
ஏர்போட்டிற்குச் சென்றிருந்தனர்.
குடும்பத்தினரை பார்த்தவன் முகத்தில்
சுரத்தே இல்லை.. அவன் கண்கள்
இன்னொருத்தியைத் தேடி ஏமாந்தது.

எல்லோரும் நேராக வரதராஜனின் வீட்டிற்கு வர வீடு திறந்து கிடக்க
ப்ரௌனி கட்டிய இடத்தில் இருந்து
அதுக்கும் இதுக்கும் ஓடி கழுத்தில்
கட்டியச் சங்கிலி அத்துப்போகும்
அளவிற்கு குரைத்துக் கொண்டிருந்தது.
எல்லோரும் உள்ளே சென்று கௌசியைத் தேட அவளின் சுவடே இல்லை. ஒரு வெள்ளைக் காகிதம் மட்டும் இருந்தது அவளின் பெட்டின் மேல்.

எடுத்துப் படித்த விக்னேஷின் முகம்
இறுகியது. ஜீவாவின் கையில்
குடுத்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்து விட்டான். அதில் இருந்தது இதுதான் "ஸாரிப்பா.. நீங்கள் இனி என் கஷ்டத்தைத் தாங்க வேண்டாம் அப்பா..
என்னால முடியலப்பா.. என்னை யாரும்
தேடி வராதீங்க.. வந்தால் உயிரை விடவும் யோசிக்க மாட்டேன்" என்று எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தாள் கௌசி.

எழுதி வைத்துவிட்டு கௌசி சென்ற இடம் கம்பம். எங்கே போகலாம் என்று
யோசித்துக் கொண்டிருந்தவள்
சங்கரலிங்கம் ஐயா நியூஸ் பேப்பரில்
குடுத்த செய்தி மூளையில் மின்னல்
அடிக்க நேராக கம்பம் சென்றாள்.
அவளைப் பொருத்த வரை விக்னேஷை
இக்கட்டில் இருந்து தப்பிக்க வைத்து
விட்டாள். அவளால் விக்னேஷ்
நான்சியுடன் கல்யாணம் பண்ணி
வாழ்வதை அவளால் பார்க்க முடியாது.
மேலும் தன் தந்தைக்கு இனி தன்னால்
எந்த பாரமும் வேண்டாம் என்று தான்
கிளம்பினாள்.

அவள் கிளம்பி விட்டாள். ஆனால் அதற்கு மேல் தான் அங்கு யாராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. விக்னேஷ் இந்த வேலையால் தான் எல்லாம். அந்தப் பேயைச் சந்தித்தது. கனடா சென்றும் கௌசிக்காக வர முடியாமல் இருந்து. மறுபடியும் இழந்தது என்று வேலையையே விட்டுவிட்டான். அவனிடம் எல்லோரும் கேட்டும் அவன் யாரிடமும் எதுவும் மூச்சு விடவில்லை. ஜீவாவிடம் மட்டும் நான்சியின் விஷயத்தைச் சொல்லி இருந்தான். மதியின் காதிற்கும் அது சென்றது. "அப்போ அவளை லவ் பண்ணியிருந்தா.. கௌசியைக்
கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுக்க
மாட்டாருல.." என்று மதி குத்திய போது
ஜீவா "மதி... கௌசி போன கோபத்துல
அவனை குறை சொல்லாதே.." என்று
அதட்டினான்.

"எப்படி ஜீவா.. உன்னாலையும்
விக்னேஷ்னாலையும் இப்படி இருக்க முடியுது.. நம்ம கல்யாணத்திற்கு எப்படி
என் அப்பா கிட்ட பேசினா.. அப்புறம்
நம்மள விட சந்தோஷமா இருந்தது
அவதான்.. அன்னைக்கு வரதராஜன்
சித்தப்பா அவளை அடிச்சு அவ அழுது
நடுங்குனது என் கண்ணு முன்னாடியே
இருக்கு ஜீவா.. எனக்கு இந்த டைம்
அவளை ரொம்ப மிஸ் பண்ற மாதிரி
இருக்கு.. ஸீ இஸ் எ வெரி குட் ப்ரண்ட்
அன்ட் சிஸ்டர் டூ மீ.. என்னால உங்கள
மாதிரியும் விக்னேஷ் மாதிரியும்
சுயநலமா இருக்க முடியல" என்று
நான்கு மாதமான மகவோடு அழுத
மனைவியைப் பார்க்க பாவமாக
இருந்தது. ஜீவாவும் விக்னேஷும் மதி
சொன்னது போல இருக்கவில்லை.
யாருக்கும் தெரியாமல் கௌசியைத் தேட முயற்சி செய்து கொண்டு இருந்தனர்.

அடுத்து வந்த மாதத்தில் செந்தில்நாதன்
மாரடைப்பால் இறந்துவிட மேலும்
குடும்பமே கலங்கியது. விக்னேஷும்
இனி அடுத்து என்ன என்று பார்த்தான்.
அவனால் சென்னையிலேயே இருக்க
முடியவில்லை.. முதலில் அந்த இடத்தில்
இருந்து நகர நினைத்தவன் எல்லோரின்
முன்னிலையில் தன் அன்னையிடம் அது
பற்றிப் பேசினான்.

"அம்மா.. இந்த ஊரே எனக்குப்
பிடிக்கவில்லை.. நம்ம வேற ஊருக்குப்
போனா என்ன?" என்று கேட்டான்.

"ஆமா விக்கி.. என்னால இங்க இருக்க
முடியலை.. உங்கப்பா நியாபகமாகவே
இருக்கு.. வேற எங்காவது போய்
விடலாம்" என்று அழுக "பேசாமல்
கோயம்புத்தூரே வந்திருங்க" என்று
ஜீவா சொல்ல விக்னேஷும் சம்தித்தான்.

"மாமா.. நீங்களும் தான்" என்று
விக்னேஷ் வரதராஜனைப் பார்த்துச்
சொல்ல அவர் மறுத்தார். "இங்கையே
இருந்து என்ன பண்றதா உத்தேசம் மாமா உங்களுக்கு... உங்களை விட்டுட்டு போற அளவுக்கு என்னை என்ன
சுயநலவாதின்னு நினைச்சீங்களா.. என்
மேல் நம்பிக்கை இருந்தால் என் கூட வாங்க மாமா" என்று சொல்ல அவரால்
மறுக்க முடியவில்லை.

எதுவும் சென்னை நியாபகம் வேண்டாம்
என்று நினைத்த விக்னேஷ் தன்
அன்னையின் சம்மதத்துடன்
அனைத்தையும் விற்றான். வரதராஜனும் வீட்டை விற்றார். ஆனால் விற்ற பணத்தில் எதையும் விக்னேஷ்
உபயோகிக்கவில்லை.. அதை அன்னை
பெயரிலும் மாமா பெயரிலும் டெபாஸிட்
செய்து விட்டான். அடுத்த இரண்டு
வாரத்தில் கோயம்புத்தூர் வந்து
சேர்ந்தவன் அங்கு இங்கு என அழைந்து
லோன் போட்டு.. கூடவே தான் நான்கு
வருடம் சம்பாதித்த சேவிங்ஸ்ஸில்
இருந்து தான் அந்த போட்டோகிராப்பி
ஸ்டியோவை ஆரம்பித்தது. கூடவே
நிறைய கடைகளுக்கு விளம்பரமும்
செய்து தந்தான். அதில் ஒரு ஜவுளிக்கடை விளம்பரம் ஹிட் ஆக அவனுக்கு நிறைய ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தது. பெரிய பெரிய கல்யாணத்திற்கும் வந்தது.

கோயம்புத்தூர் வந்து வீடு பார்த்தவன்
தன் சிட்டிக்குள் பார்க்காமல் சிட்டிக்கு
வெளியில் கிணத்துக்கடவில் வீடு
பார்த்தான். அப்போது தான் தன்
வீட்டிற்குப் பின்னால் இருந்த மகாலிங்கம் அய்யாவின் அறிமுகம் கிடைத்தது. வயது வித்தியாசம் பாராமல் இருவருக்கும் ஒரு நட்பு இழையோட.. கொஞ்ச நாளில் இயற்கை விவசாயம் பற்றி இருவரும் தங்கள் பேச்சைத் திருப்ப "உனக்கு அதில் விருப்பமாப்பா" என்று கேட்டார் மகாலிங்கம்.

"இருக்குத் தாத்தா.. அதைப் பத்தி
படிச்சிருக்கேன். ஆனா முழுசாத்
தெரியாது" என்று சொன்னான்.

"என் நிலத்தில் நான் சில தினங்களுக்கு
முன் இயற்கை விவசாயம் செய்ய..
எல்லாம் கெமிக்கல் இல்லாமல் இயற்கை முறைப்படி மாற்றினேன்.. ஒரு வருடம் ஆச்சு மாத்தி.. பேசாமல் நீ பண்ணேன் விக்கா.. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் எல்லாத்துலையும்" என்று சொல்ல "தாத்தா அது உங்க இடம்.. நான் எப்படி.." என்றான்.

"சரிப்பா.. இரண்டு பேரும் பண்ணலாம்..
வர வருமானத்தில் பாதி பாதி சரியா.. நீ
சும்மா என் நிலத்தில விவசாயம் பண்ண
வேண்டாம்" என்று சொல்ல சரி என்று
சம்மதித்து இருவரும் சம்மதித்து
இருவரும் இரண்டு வருடமாக சாதித்து
வருவது.

ஜீவாவும் ஒரு சிறிய நிறுவனத்தை நிறுவி முதலில் தடுமாறியவன் பின்பு கால் ஊன்றி நின்றான்.. இன்னும்
தளரவில்லை.

இன்று..

காலையில் கண் முழித்த கௌசி.. எழுந்து வெளியே வர ஜீவா தூங்கிக் கொண்டு இருக்க விக்னேஷைத் தேடிக் கொண்டு வெளியே வந்தாள். அவனைத் தேடி வெளியே வந்த கௌசிகா அவன் பல் விலக்கிக் கொண்டு இருப்பதைப்
பார்த்துவிட்டு அவளும் அவள்
வேலையைத் தொடங்கினாள்.

பின் வேலைகளை எல்லாம் முடித்து..
லக்கேஜ் எல்லாம் எடுத்து வைத்தவள்
வெளியே வர ஜீவா "ஏய் நீ இன்னும் ரெடி
ஆகலையா" என்று கேட்டான்.

"ரெடி ஆகிட்டேன் ஜீ.."

"என்ன இது.. எதுமே ரெடி ஆன மாதிரி
இல்லையே நீ" - ஜீவா. அவள் பழைய
கௌசி என்ற நினைவிலேயே அவன்
கேட்டான். ஏனெனில் அப்படி ஒப்பனை
செய்பவள் இப்படி ஒரு ஒப்பனையும்
இல்லாமல் நின்றது ஜீவாவை அப்படிக்
கேட்கச் செய்தது.

அவன் கேள்வியைப் புரிந்து கொண்டக்
கௌசி "இல்ல ஜீ.. இப்போ எல்லாம்
இப்படித் தான் ரெடி ஆவேன்.."
என்றுவிட்டு பெட்டிகளை எடுக்க
விக்னேஷும் ஜீவாவும் எல்லாப்
பைகளையும் தூக்க கௌசி அந்த மஞ்சள் நிற ட்ராலியை மட்டும் வைத்திருந்தாள் கையில்.

சங்கரலிங்கம் அய்யா வீட்டில் அவரிடமும் அவர் மனைவி மற்றும் பிரபுவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினர் மூவரும். கிளம்பும் போது கவிதாவிற்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னவள் சுரேஷையும் நேரில் வரச் சொல்லி சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

தேனி வந்து மதுரை பஸ் ஏற.. "ஏன் ஜீ..
மதுரைல என்ன வேலை" என்று கேட்டாள்.

"இல்ல கௌசி.. நாம ப்ளைட்ளயே
போயிரலாம்.. அப்பதான் சீக்கிரம்
போவோம்.. இல்லைனா பஸ் மாறி மாறி
நீ டையர்ட் ஆயிருவ" என்று சொல்ல
முன்னாடி சென்று கொண்டிருந்த
விக்னேஷ் இருவரையும் திரும்பி
முறைத்தான்.

"நீங்க இரண்டு பேரும் இப்படிக் கதை
பேசிட்டு வந்தா.. நாளைக்கு தான் கோயம்புத்தூர் போய் சேருவோம்"
என்றுத் திட்ட இருவரும் அவனுடன்
இணைந்து நடந்தனர்.

மதுரையை அடைந்து கோயம்புத்தூர்
ப்ளைட் ஏறி கோயம்பத்தூரை அடையும்
போது மணி இரண்டு ஆகி இருந்தது.
முதலில் கேப்பை புக் செய்து
வடகோவையில் உள்ள ஜீவாவின்
வீட்டிற்குச் சென்றனர். அவர்கள்
வீட்டிற்குள் நுழையும் போதே வெளிவந்த
மதி கௌசியைக் கட்டிக் கொண்டாள்.

"வா கௌசி.. வா.." என்று மதி வாய்
நிறைய அழைக்க கௌசியின் உள்ளம் அவளது அன்பில் உருக ஆரம்பித்தது
உண்மைதான்.

உள்ளே அழைத்துச் சென்ற மதி.. "நீ ப்ரஷ் ஆயிட்டு வா கௌசி... நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்" - மதி.

"இல்லை மதி.. எனக்குப் பசி இல்லை..
கொஞ்சம் தலை வலிக்கற மாதிரி
இருக்கு.. டீ வேணாப் போட்டுத் தா மதி"

சரி என்று மதி செல்ல.. உள்ளே சென்ற
கௌசி முகத்தைக் கழுவிக் கொண்டு
வெளியே வர.. "நீங்க தா.... சிட்டியா" என்ற கேள்வியில் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்த கௌசி யார் என்று பார்க்க பெட்டில் வியாஹா தூக்கக் கலக்கத்தில் கண்களைக் கசக்கியபடி அவளைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.

போட்டோவில் பார்த்த வியாஹா முகம்
நியாபகம் வர அவள் அருகில் சென்ற
கௌசி "என்ன கேட்டிங்க?" எனக்
கேட்டாள்.

"நீங்க தா சிட்டியா" என்று தன் அழகானச்
சிப்பி இமைகளை மூடித் திறந்து தூக்கக்
கலக்கத்தில் இருந்தபடியே கேட்க
அவளை அள்ளி வைத்துக் கொஞ்சத்
தோன்றிய மனதை அடக்கினாள்.

"ஆமா நான் தான் சித்தி.." என்று
வியாஹா நுனி மூக்கில் தன் ஆள்காட்டி
விரலை வைத்து அவளுக்கு வலிக்காத
வன்னம் நிமிண்டினாள்.

"நீங்க ஊருக்கு போயிட்டு
வந்துட்டீங்ங்களா.. பெர்யயயய ஸ்கூல்
முடிஞ்சா.." என்று கையை விரித்து
மழலையில் கேட்க... கௌசி விழித்தாள்.

"அதெல்லாம் சித்தி முடிச்சாச்சு.. நீ எந்திரி.. அப்பாவும் சித்தாவும் வந்தாச்சு" என்றபடி மதி உள்ளே வர... சித்தப்பா அப்பா என்றதும் வியாஹா கத்திக் கொண்டு வெளியே ஓடிவிட்டாள்.

"அவகிட்ட உன் போட்டோ காமிச்சு சின்ன
வயசுல இதான் சித்தின்னு சொல்லும்
போதெல்லாம்.. எப்போ வருவேன்னு
கேப்பா கௌசி.. நான் நீ பெரிய ஸ்கூல்
அதாவது காலேஜ் போயிருக்கன்னு
சொல்லி வச்சிருந்தேன்" - மதி புன்னகை
முகத்துடன்.

"தேங்க்ஸ் மதி"

"எதுக்கு தேங்க்ஸ் கௌசி... உன்னப் பத்தி மறக்காம சொன்னதுக்கா.. உன்ன
எங்கனாவேயே மறக்க முடியாது கௌசி.. அதான் இப்போ எல்லோரும் ஒன்னு ஆயிட்டோம்ல. ஃப்ரீயா இரு கௌசி" என்று சொல்லிவிட்டுப் போனாள்.

வெளியே வந்த கௌசிக்கு மதி டீயைத்
தர கௌசி கப்பை காலி செய்தாள்.
"கௌசி நீ விக்கி கூட ஹாஸ்பிடல் போ..
நான் ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு
வந்திடறேன்" என்று ஜீவா சொல்ல
தலையை ஆட்டிய கௌசி விக்னேஷைப்
பார்த்தாள். அவனோ அவனிற்கும்
பேச்சுக்கும் சம்மந்தம் இல்லை என்பது
போல இருந்தான்.

ஜீவா தன் காரில் கிளம்ப அப்போது தான் வெளியில் வந்த விக்னேஷிற்கு தான் ஹாஸ்பிடலிலேயே கடைசியாகத் தன் பைக்கை நிறுத்தியது நியாபகம் வந்தது. "நீங்க வேணும்னா.. என் ஸ்கூட்டிய எடுத்துட்டுப் போங்க விக்னேஷ்" என்று மதி புரிந்தவளாய்ச் சொல்ல "இல்லை மதி. பைக் ஹாஸ்பிடல்ல இருக்கு.. ஸோ ஆட்டோல போயிட்டு பைக் எடுத்திட்டு வந்திடறேன்" என்றான் விக்னேஷ்.

"ஒரு நிமிஷம் விக்னேஷ்.. நைட்
இங்கையே கௌசியைக் கூட்டிட்டு
வாங்க.. சாப்பிட்டு விட்டு அப்படியே அங்க யார் இருக்காங்களோ அங்களுக்கும் டிபன் எடுத்துட்டு போயிருங்க" என்று மதி சொல்ல தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

ஆட்டோப் பிடித்தவன் ஏறு என்றபடி
கையை கௌசியிடம் காட்ட கௌசி
எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்தாள். ஏறி
அமர்ந்தவளுக்கு அப்பாவின் எண்ணம்
ஆக்கிரமிக்க ஏனோ இதயம் படபடத்தது.
மூன்றரை வருடம் கழித்து பார்க்கப்
போகிறாள். அவரைத் தன்னால்
எதிர்கொள்ள முடியுமா என்று
நினைத்தவளுக்கு முகம் கன்றியது.
ஏனோ தோன்ற முகத்தைத் திருப்பியவள் விக்னேஷ் அவளைப் பார்ப்பதை உணர்ந்தாள். அவள் பார்ப்பது தெரிந்தும் அவளையே அவன் பார்க்க.. அந்தப் பார்வையின் அர்த்தத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனது விழி வீச்சைத் தாங்காது முகத்தை வெளியே திருப்பிக் கொண்டாள்.

ஹாஸ்பிடல் வந்து இறங்கும் போதே
கௌசிக்கு கால்கள் உடம்பெல்லாம்
ஏதோ செய்தது. அவர்களை எதிர்கொள்ள முடியுமா என்று தோன்றி கைகள் நடுங்கின.. உதட்டிற்கு மேல் வியர்த்தது. விக்னேஷைத் தொடர்ந்தவள் அவன் செல்லும் அறைக்குள் செல்ல.. ஒரு நிமிடம் தயங்கி நின்றவள்.. கால்களை நகர்த்தி முன் சென்றாள். அண்ணனுடன் பேசிக் கொண்டு ஜெயா மட்டும் இருந்தார்.

கௌசியைப் பார்த்த ஜெயா "கௌசி.."
என்று கண்கள் விரிய அழைக்க
வரதராஜனும் தங்கையிடம் இருந்து
பார்வையைத் திருப்பிப் மகளைப்
பார்த்தார். தந்தையும் மகளும் ஒருவரை
ஒருவர் பார்த்துக் கொண்டே நிற்க
விக்னேஷும் ஜெயாவும் அவர்களுக்கு
தனிமை தந்து வெளியே சென்றனர்.

கண்களில் இருந்து கண்ணீர் வழிய
உதட்டைக் கடித்துக் கொண்டு
தந்தையைப் பார்க்க அவரோ
வேதனையோடு மகளின் தோற்றத்தைப்
பார்த்தார். அவள் இருந்ததிற்கும்
இப்போது இருப்பதிற்கும்.. ஜீவாவின்
மனதில் எழுந்த அதே எண்ணம் மனதில்
எழுந்து தாக்கியது.

"கௌசிமா..." என்று அழைக்க.. அவ்வளவு தான்.. பெட்டில் இருந்த தன் அப்பாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் கௌசி. அறுவை சிகிச்சை செய்த உடம்பால் காலை டக்கென்றும் நகர்த்த முடியவில்லை. "மன்னிச்சிருங்கப்பா..." என்று நெற்றியை அவர் காலின் மேல் வைத்து அழுதவளை அவரால் பேசவே முடியவில்லை.

"கௌசிமா.. இங்க வா" என்று அவர்
கூப்பிட.. அவர் அருகில் செல்ல
கௌசியின் கையைப் பிடித்தவர்
"இனிமேல் அப்பாவை விட்டுப் போக
மாட்டீல" என்று வலமும் இடமும் தலையை ஆட்டினாள் கௌசி.

"ஸாரிப்பா.." என்று மறுபடியும் கேட்க..
"அப்பா கூட இனி இரு பாப்பா அதுவே
போதும்" என்றார்.

"சரி.. வெளியில் உன் அத்தையும்
விக்னேஷும் நிக்கறாங்க பாரு.. உள்ள
வர சொல்லு" என்று வரதராஜன் சொல்ல வெளியே வந்தவள் இருவரையும் அழைத்தாள்.

"பாப்பா"

"சொல்லுங்கப்பா"

"அப்பாவிற்கு ஒரு கடைசி ஆசைடா"

"அப்பா" "மாமா" "அண்ணா" என்று ஒரு
சேர கௌசி, விக்னேஷ், ஜெயா மூவரும்
அதட்டினர்.

"இல்லடா நான் சொல்லிடறேன்.. அப்பா
அன்னிக்கு உன்கிட்ட ரொம்ப கடுமையா
நடந்துகிட்ட.. ரொம்ப ஸாரி.. "

"அதெல்லாம் இல்லப்பா.. விடுங்க" -
கௌசி சங்கடமானக் குரலில்.

"இல்லடா.. நீ இல்லைன்னு
சொன்னாலும்.. அதுதான் உண்மை..
அந்த நிலையில் உன் மனசை
புரிஞ்சுக்கலையோ ன்னு தோணுது..
கொஞ்சம் உனக்கும் ஒரு இடைவெளி
தந்திருக்கனும். உன்ன அப்படியே விட
என்னால முடியாது பாப்பா.. நீ இல்லாம
இத்தனை நாள் நான் இருந்ததே பெரிசு..
இதோ இவன் மட்டும் இல்லை என்றால்
என்றோ சென்றிருப்பேன்" என்று
விக்னேஷைக் காட்டிப் பேசினார்.

"இங்க பாரு கௌசிமா.. நீ என் கூடையே
இருக்கறன்னு சொல்ற.. அப்பாக்கு
ரொம்ப சந்தோஷம் தான்.. நீ அதை
விக்னேஷைக் கல்யாணம் செய்து
கொண்டு என்னோடு இருந்தால் எனக்கு
இன்னும் நிம்மதி டா.." என்று சொல்ல
வரதராஜன் சொல்ல கௌசி தன்
கையைப் பிடித்திருந்தத் தன் கையைப்
பார்த்திருந்தாலே தவிர வேறு எதுவும்
பேசவில்லை.

"எனக்கு சம்மதம் மாமா.. நீங்க வீட்டிற்கு
வந்து பத்து நாட்களில் கல்யாணம்" என்று சொல்ல கௌசி உறைந்து நின்றாள். அவள் ஏதோ பேச வாயெடுக்க "கௌசி நீ வந்தோனே டாக்டர் பேசனும்ன்னு சொன்னாரு.. பர்ஸ்ட் என்கூட வா.." என்று விக்னேஷ் அழைக்க அவனுடன் வெளியில் வந்தாள். வெளியே வந்தவளிடம் "இங்க பாரு.. அவரு சொல்றதுக்கு தலைய ஆட்டு.. அவரு பாடி கண்டிஷன் அப்படி" என்றுடாக்டர் சொன்னதைச் சொல்லியவன் "மறுபடியும் சுயநலமா இருக்காதே" என்று வார்த்தைகளைக் கடித்துக் துப்பினான்.

பின் ஜெயா அன்று இரவு அண்ணனுடன்
இருப்பதாகச் சொல்லி.. பிடிவாதமாகத்
தான் தந்தையோடு இருப்பதாகச்
சொன்ன கௌசியை விக்னேஷுடன் அனுப்பி வைத்தார். பைக்கில் ஏறி ஒரு
பக்கமாக அமர்ந்தவள்
யோசனையிலேயே வந்தாள். ஜீவாவின்
வீடு வந்தவுடன் இறங்க ஜீவா வெளியே
வந்தான். "நான் இப்ப தான் வரலாம்ன்னு கிளம்பிட்டு இருந்தேன்.. நீங்களே வந்துட்டீங்க.. பாப்பாவைத் தூங்க வைக்க லேட் ஆயிருச்சு" என்றான் ஜீவா.

"இல்லடா பரவாயில்லை.. மாமா ரெஸ்ட்
எடுக்கறாரு.. நீ போக வேண்டாம்"
என்றுவிட்டான் விக்னேஷ்.

உள்ளே நுழைய மதி ரெடியாக டிபன்
எல்லாம் வைத்திருக்க நான்கு பேரும்
சாப்பிட்டனர். அப்போது தான் நியாபகம்
வந்தவளாக "சந்தியா எங்கே?" எனக்
கேட்டாள் கௌசிகா.

"அவளுக்கு கல்யாணம் முடிஞ்சு..
இன்னும் மூணு மாசத்துல குழந்தையே
பொறக்கப்போது" என்று மதி சிரித்துக்
கொண்டே சொல்ல.. கௌசிகா
புன்னகையை மட்டும் உதிர்த்தாள்.

"சதா மாமா எங்கே?" எனக் கேட்டாள்
மறுபடியும்.

"அவரு ஒரு முக்கியமானவங்க
கல்யாணத்திற்காக பழனி வரை
போயிருக்காரு.. நாளை வந்து விடுவார்"
என்று ஜீவா சொன்னான்.

பின் நால்வரும் வந்து ஹாலில் அமர
"ஜீவா மாமா வீட்டிற்கு வந்ததுக்கு
அப்புறம் எனக்கும் கௌசிக்கும்
கல்யாணம்.. சிம்பிளா நம்ம
மருதமலையிலேயே வச்சிக்கலாம்" என்று சொன்னான். ஏற்கனவே தன் அன்னை போன் பண்ணித் தெரிவித்துவிட்டதால் ஜீவாவும் மதியும் அவ்வளவு அதிர்ச்சி முகத்தில் காட்டவில்லை.

ஆனால் "யாரைக் கேட்டு நீ முடிவு பண்ண" என்று கௌசியின் குரல் ஆத்திரத்தில் ஒலித்தது.

"நீ வாயை மூடுனா நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.." - விக்னேஷ்.

"நான் ஏன் வாயை மூடனும்.. ஆளாளுக்கு என் வாழ்க்கையைக் கையில் எடுத்துட்டு ஆடுவீங்களா..." - கௌசி.

"ஆமா.. உனக்கு இஷ்டம் இருந்தாலும்
இல்லைனாலும் நீ இதுக்கு ஒத்துக்கிட்டு
தான் ஆகணும்"

"முடியாது"

"சுயநலவாதி" என்று பல்லைக் கடித்தான் விக்னேஷ்.

"யாரு நானா.. நீதான்டா சுயநலவாதி.."
என்றாள் ஆத்திரத்தில். பின் ஏதோ
நியாபகத்திற்கு வர "ஆமாம்... நான்சி.."
என்று இழுத்தாள் மூவரையும் பார்த்து.

"அதெல்லாம்.. முடிஞ்சு போச்சு எப்பவோ.. இப்போ அது இங்கத் தேவை இல்லாதது. நீ கல்யாணத்திற்கு ஒத்துக்கறே டாட்" என்றான்.

"வாய்ப்பே இல்லை.. என்னை ஏன்
எல்லோரும் டார்ச்சர் பண்றீங்க..
அடுத்தவங்களோட ஃபீலிங்ஸைக் கொஞ்சம் கூட புரிஞ்சிக்க முடியாதா"
என்று குரல் கரகரக்க சொன்னவளை மதி சமாதானம் செய்ய வர "இல்லை மதி.. அப்பாவும் ஹாஸ்பிடல்ல இப்படித்தான் பேசுனாரு.. எல்லோருக்கும் அவங்க அவங்க சந்தோஷம் தான் முக்கியமாத் தெரியுது.. என்னுடைய நிலையை
யாருமே புரிஞ்சிக்க மாட்டிறாங்க..
சுயநலவாதிகள்" என்று சொல்ல
அவளின் கையைப் பிடித்த விக்னேஷ்
தரதரவென்று பக்கத்தில் இருந்த
அறைக்கு இழுத்துச் சென்றான். அவன்
அவளை இழுத்துச் செல்வதில் கௌசி
மட்டுமல்ல ஜீவாவும் மதியுமே
திகைத்தனர்.
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-17

விக்னேஷ் இழுத்துச் சென்று கதவைப்
பூட்டும் சத்தம் கேட்டு மதி தினைத்து
கதவைத் தட்டச் செல்ல "மதி...." என்று
தன் கணவன் ஜீவாவின் குரலில்
திரும்பினாள்.. அவனோ வலமும் இடமும்
தலையை ஆட்டி "விடு.. அவன் பேசுனா
தான் இவ சரிப்பட்டு வருவா" என்று
அழுத்தமானக் குரலில் முடிக்க
கணவனின் பேச்சை மீறாமல் இருவரும்
ஹாலில் இருந்த சோபாவில்
உட்கார்ந்தனர்.

உள்ளே இழுத்துச் சென்றவன் அவளைத்
தள்ளி கதவைத் தாழிட்டுத் திரும்ப
"கதவைத் திற" என்று கௌசி கோபமாகச் சொன்னாள்... அவ்வளவு தான் அவனது கோபம் பொறுமை எல்லாம் பறந்தது. ஒரே அறையாக அறைந்து விட்டான்.

அவன் அறைந்த திகைப்பில் அவனைப்
அவள் ஏறிட்டுப் பார்க்க.. "ஏய்.. யாரடி
சுயநலவாதின்னு சொன்ன மாமாவையா.. அவரா சுயநலவாதி உன் மனசாட்சியத் தொட்டு சொல்லு" என்று உறுமியவனைப் பார்க்க கௌசிக்கு பயம் வந்தது உண்மைதான்.

பயத்தில் உறைந்து நின்றவளின்
தோளை அருகில் பற்றி இழுத்தவன் "உன்னப் போய் கேட்கிறேன் பார்.. அதுசரி உனக்குல்லாம் மனசாட்சி இருக்கும்ன்னு நினைச்ச நான் ஒரு மடையன்.. ஆனா சொல்றேன் கேட்குக்க.. மாமா ஒன்னும் சுயநலவாதி இல்ல.. நீதான் சுயநலவாதி.. நீதான் இந்த உலகத்திலேயே சுயநலவாதி" என்று கத்த கௌசிக்கும் கோபம் வந்தது.

"யாரு நானா? ஏன்டா ஓடினவ..
ஓடினவன்னு சொல்றியே.. உங்க
எல்லாரோட சுயநலம் தான்டா என்னைய
ஓட வச்சுது.. இப்போ கூட எல்லாரும்
சுயநலமா தான் பிகேவ் பண்றீங்க.. இதே
அந்த நான்சி இந்நேரம் உன்னுடன் இருந்திருந்தால் நீயெல்லாம் என்ன
மனுசியாவே மதிச்சிருக்க மாட்டே" என்று
பொறிந்து தள்ளினாள்.

"ஓஹோ... நீ நல்லா இருக்கனும்-ன்னு
நினைச்ச நாங்க எல்லாம்
சுயநலவாதியா.. ரைட்ரா.. அப்புறம் என்ன எல்லாம் வச்சிருக்க அதையும் சொல்லு" என்றான் நக்கலாக.

"உனக்கு எல்லாம் எகத்தாளமாகத் தான்
இருக்கம்.. அடுத்தவங்க சூழ்நிலைல
இருந்து பாத்தா உங்க எல்லாருக்குமே
புரியும்" என்றாள் எங்கோ பார்த்தபடி.

"மாமா இப்படி அவரு சூழ்நிலையை
மட்டும் உன்னை மாதிரி நினைச்சிருந்தா.. நீ இந்நேரம் இப்படி பேசியிருக்க மாட்டேடி" என்று அழுத்தமாகச் சொன்னவனைக் கௌசி பார்வையை விலக்காமல் நோக்க
அதுதான் சான்ஸ் என்று அவன் மடை
திறந்த வெள்ளமானான்.

"என்னப் பாக்கற.. எதையுமே யோசிக்க
மாட்டையா நீ எல்லாம்.. ஏன்டி.. அத்தை
இறந்த அப்புறம் நீ பச்சக் குழந்தை..
அவருக்கு அப்போ 33 வயசு.. அந்த
வயசுல தான் ஒரு ஆம்பிளைக்கு எல்லா
ஃபீலிங்சும் அதிகமா இருக்கும் தெரியுமா.. அவரு நினைச்சிருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்கலாம்.. இல்லைனா வேற மாதிரி பொம்பளைங்க கிட்ட போறானுகள அவங்ககிட்ட கூட
போயிருக்கலாம்.. அந்த வயசுல
தன்னோட எல்லா சந்தோஷத்தையும்
அடக்கிட்டு.. அத்தை போன
சோகத்தையும்.. உன்ன பாத்துக்க
தெரியாம தவிச்சு தவிப்பையும்
உனக்குலாம் தெரியுமா டி.. நாலு வயசுல
இருந்த எனக்கு இன்னும் அதெல்லாம்
கொஞ்சம் நியாபகம் இருக்கு.. எனக்கு
தெரிஞ்சு இப்போ வரைக்கும் அவரு
மனசுல இருக்கிறது அத்தையைத் தான்.
அவரு மனசாலையும் உடலாலையும்
தொட்ட முதல் பொண்ணும் கடைசி
பொண்ணு அத்தை தான்.. மனசாலயும்
உடலாலையும் சுமந்த பொண்ணு நீ தான். அவர உன்னால புரிஞ்சுக்க முடியலைல.. கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் என்ன சந்தோஷமாவே இருந்தாரு.. என் அம்மா பெரியம்மான்னு சந்தோஷமா சுத்தித் திரிய வேண்டிய வயசுலையும் எல்லா கஷ்டத்தையும் சுமந்து எல்லாத்தையும் கரை சேத்தி.. இதெல்லாம் நினைச்சு பாத்தா அந்த மனுஷனை நினைக்க எனக்கே பாவமா இருக்கு.. நான் புரிஞ்சுகிட்ட அளவுக்குக் கூட உன்னால புரிஞ்சிக்க முடியலையா கௌசி.." என்று நீளமாகப் பேசியவனைக் கண் இமைக்காமல் பார்த்தாள். அவன் பேசிய ஒவ்வொன்றும் உண்மைதான் என்று
அவளுக்கும் தெரியும்.

"இங்க பாரு கௌசி.. உனக்கும் எனக்கும்
கல்யாணம்.. நீ ஒத்துக்கிட்டு தான்
ஆகணும்" - விக்னேஷ் அழுத்தமாக.

"ச்சி அசிங்கமா பேசாதே..." படபடத்தவள்
"எ..என..எனக்கு.. கல்யாணம் ஒன்னு
தான் குறைச்சல்.." என்றாள்
முணுமுணுப்பாக.

"அசிங்கமா பேசறானா" என்று விழித்த
விக்னேஷ் "ஏய் நான் என்னடி அசிங்கமா
பேசறேன்" என்று சீறினான்.

"பின்ன.. நான் ஏற்கனவே கல்யாணம்
ஆனவ.. என்கிட்ட வந்து கல்யாணம்
பண்ணிக்கலாம்ன்னு சொல்ற.."

"ஆமா நீ கல்யாணம் பண்ணி வாழ்ந்தது
ஒரு வாழ்க்கையாடி.. நாலே நாள்
வாழ்ந்தது எல்லாம் கல்யாணமா டி..
கோவத்தக் கிளறாதே.."

"நாளு நாளோ.. நாலு வருசமோ..
என்னால எதையும் மறந்துட்டு நார்மலா
இருக்க முடியாதுடா..."

"குருவை நீ இன்னும் மறக்கலையா?"
என்ற விக்னேஷின் கேள்வியில்
கௌசிக்கு வாந்தி வராதா குறைதான்..
அவனை எப்போது அவள் நினைத்தால்
மறப்பதற்கு.. அவனை இன்னும்
நினைத்துக் கொண்டிருக்கிறாளோ என்று விக்னேஷின் மனம் சோர்ந்தது.

அவன் கேட்ட கேள்விக்கு பதில்
அளிக்காதவள் "இங்க பாரு... சில
விஷயத்தை நீயா தான் புரிஞ்சுக்கனும்.."
என்றாள் மறைமுகமாக.

"சொன்னாதானடி புரியும்"

தலையில் அடித்தவள் "பசங்களுக்குத்
தனக்கு வர பொண்டாட்டி.." என்று
நிறுத்தியவள் அவனிடம் எப்படி எந்த
வார்த்தைகளை பயன்படுத்தி புரிய
வைப்பது என்று யோசித்தாள்.

"ம்ம் தனக்கு வர பொண்டாட்டி?" -
விக்னேஷ் புருவ முடிச்சுடன்.

யோசித்தவள் பின் "தனக்கு வரப்
பொண்டாட்டி.. விர்ஜினா இருக்கனும்னு
நினைப்பாங்க.. அது எல்லாருக்கு
நேச்சரும் கூட.. சோ அதான் சொல்றேன்"
என்றாள்.

அமைதியாக இருந்தவனை ஏறிட்டுப்
பார்க்க விக்னேஷின் கண்களோ
கோபத்தில் பளபளத்தது. "ஏய் என்னை
என்ன அவ்வளவு சீப்பானவன்னு
நினைச்சிட்டயா டி.. ஏன்டி நான் என்ன 15
வயது பையனா இது எதுவும் தெரியாமல் நிற்க.. இங்க பாரு இதெல்லாம் நான் எதுவும் நினைச்சு யோசிச்சுக் கூடப் பாக்கல டி.. நீயா சொன்னதுக்கு அப்புறம் தான் இதெல்லாம் என் மைன்ட்ல வருது.."

"இல்லடா.. நான் உன் வாழ்க்கையில்
வந்தால்.. நான் உன்கூட சந்தோஷமா
வாழ முடியாது.. நீயும் சந்தோஷமா
இருக்க முடியாது.. சொல்றத
புரிஞ்சிக்கோ.. ஏன்டா என்ன ஓப்பனா
எல்லாம் சொல்ல வெக்கற" என்று
முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

"முடியாதுன்னு மனசுல வச்சிட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கீல நீ" விக்னேஷ் கோபமாக.

"இல்லடா.. நீ வேற நல்ல பொண்ணா
பாத்து கல்யாணம் பண்ணிக்க"

"எனக்கு என் மாமன் பொண்ணு தான்
நல்ல பொண்ணு.. அதுவும் இல்லாம என்
வாழ்க்கையில அடுத்தவள சொருகுற
வேலை எல்லாம் பாக்காத நீ"
குறுஞ்சிரிப்புடன்.

"டேய் மரமண்ட.. உனக்கு சொல்றது
புரியுதா இல்லையா.. எந்த ஒரு
ஆம்பிளையும் தன் பொண்டாட்டிக்கு
அவன் தான் எல்லாம் சொல்லித்
தரனும்னு நினைப்பான்" என்று கத்த
விக்னேஷ் சாதரணமாக அதே சிரிப்புடன் நின்றிருந்தான்.. காரணம் மறுத்தாலே தவிர குருவை நான் மறக்கவில்லை என்று அவள் சொல்லவே இல்லை. ஏன் குருவை நியாபகப்படுத்திய போது கூட அவள் அழவில்லை. அவன் கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்பதற்காகவே
அழுகிறாள். அவன் காதல் கொண்ட
மனது அவளை இந்த முறை இழக்க
விரும்பவில்லை.. அவள் சொன்னக்
காரணத்தை அவன் கடுகு அளவிற்கும்
பொருட்படுத்தவில்லை. அவளை ஒரு
தடவை பிரிந்து அனுபவித்த
வேதனைகளே போதும் என்று
நினைத்தான்.

அவள் காதின் அருகில் குனிந்தவன் "ஓ..
நீ அப்படி சொல்ல வரீயா... பரவால
கௌசி.. எனக்கு எதுவும் தெரியாது.. நீ
எனக்கு சொல்லித்தா..." என்று ஹஸ்கி
வாய்சில் சொல்ல.. திகைத்து நின்றவள்
அருகில் இருந்த அவனைப் பிடித்துத்
தள்ளி விட்டாள்.

"ச்சை... கருமம்.. நான் என்ன சொல்றேன்
நீ என்ன பேசறே" என்று முறைத்தவள்
"ஆமாம் +2 படிக்கும் போதே லேப்டாப்ல
அந்த மாதிரி படம் வச்சிருந்தவனுக்கு
நான் சொல்லித் தரனுமாம்.. ஹேர்ருரு.."
என்று முணுமுணுத்தாள்.

"ஏய்.. உனக்கு எப்படித் தெரியும் என்
லேப்ல இருந்தது. அப்போ நீ பாத்திருக்க? ஹம்" என்று கையைக் கட்டிக் கொண்டு விசாரணை செய்ய கௌசிக்கு முகம் எல்லாம் சிவந்து விட்டது. அதை மறைக்க முயற்சிக்க விக்னேஷ் அதைக் கண்டும் கொண்டான்.

"விளையாடுனது போதும் விக்கி...
உனக்குப் புரியதா.. இல்ல புரியாத மாதிரி நடிக்கிறயா.. என்னால முடியாதுடா"

"போதும் நிறுத்து கௌசி... நான் இதுக்கு
மேலேயும் எதுவும் பேச விரும்பல.. நான்
ஒன்னும் எடுத்தோன குடும்பம் நடத்தக்
கூப்பிடுல உன்ன.. என்னால உன்ன
மாத்த முடியும்னு நம்பிக்கை இருக்கு..
நீயும் சீக்கிரம் மனசை மாத்திட்டு
என்னோட குடும்பம் நடத்தற வழியைப்
பார்.. அதே மாதிரி எஸ்கேப் ஆகலாம்ன்னு நினைக்காத.. உன்னக் கண்டுபிடிக்கிறது அவ்வளவு கஷ்டம் இல்ல இந்த உலகத்துல" என்று திட்டவட்டமாகச் சொன்னவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றான். கௌசி தான் அப்படியே நின்றுவிட்டாள். அவளின் பிரச்சினையை அவனிடம் சொல்லவே அவளிற்கு குன்றலாக இருந்தது.

வெளியே வந்த விக்னேஷைப் பார்க்க
ஜீவாவிற்கும் மதிக்கும் அதிசயமாக
இருந்தது. காரணம் அவன் முகத்தில்
தெரிந்த பிரகாசம் தான். மற்றும் அவன்
உதட்டில் உறைந்திருந்த புன்னகை.

"என்னடா.. ஒளிவட்டமா இருக்கு" என்று
ஜீவா கேட்க விக்னேஷ் சிரித்தான்.
"ஆமாடா.. எப்படியோ கல்யாணத்திற்கு
ஒத்துக்கிட்டா" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

கண்கள் விரிய விக்னேஷைப் பார்த்த
மதியிடம் "என்ன மதி.. இப்போதும்
என்னைப் பார்த்து மனதில் திட்டுவையா" என்று விக்னேஷ் கேட்க மதி திடுக்கிட்டாள். "இல்லையே... நான்.."
என்றவளின் பேச்சில் இடை புகுந்தான்
விக்னேஷ்.

"போதும் போதும்.. கௌசி மேல இருக்க
ப்ரண்ட்ஷிப்ல என்னைய நீ வறுத்து
எடுக்கிறது உன் பார்வையிலேயே மூன்று வருஷமாத் தெரியும்" என்றான் விக்னேஷ்.

"திடீர்னு ஏன் இந்த மாற்றம் விக்னேஷ்" -
மதி.

"ஏன் மாற்றம் கூடாதா மதி.." - விக்னேஷ்.

"இல்லை.. இத்தனை நாள் நாங்க
சொன்னபோது எல்லாம் கல்யாணமே
வேண்டாம்-ன்னு சொல்லிட்டு இப்போ
திடீர்னு சொல்றீங்களே அதான்
கேக்கறேன்" - மதி.

"ஓ... அதுவா.. இதோ இங்க நிக்கறான்ல
இவன்..என் அண்ணன்" என்று ஜீவாவைச் சுட்டிக் காட்டியவன் "இவன மாதிரி கல்யாணம் பண்ணி பொண்டாட்டிக்கு பயந்து கொஞ்சம் நடுங்கலாம்ன்னு ஆசையா இருக்கு அதான் அண்ணி" என்றான் விக்னேஷ் பவ்யமாக. அவனுக்கு ஜீவா-மதி காதலிக்க ஆரம்பத்திலிருந்தே அதான் வேலை.. பெயரைச் சொல்லிக் கூப்பிடுபவன் அவ்வப்போது வேண்டுமென்றே நக்கலாக அண்ணா அண்ணி என்பான்.

"ஆங்ங்ங்" என்று விக்னேஷை
முறைத்தவள் ஜீவாவிடம் திரும்பி "என்ன
நான் உங்களை பயப்படுத்தி
வச்சிருக்கேனா.. நீங்க அண்ணன் தம்பி
எல்லாம் எல்லோரையும் அதிகாரத்துல
வச்சிட்டு எங்களை சொல்றீங்களா" என்று பொரிந்த மதி "சரி சரி நான் கௌசியிடம் பேச வேண்டும்" என்று அறைக்குள் சென்றுவிட்டாள்.

மதி சென்றபின் விக்னேஷிடம் ஜீவா
"டேய் என்ன திடீர்னு.. எனக்கு உன்
பிகேவியர் எங்கையோ ஏதோ இடிக்குதே" என்று யோசிக்க..

"அய்யோ... அப்படி எல்லாம் இல்லிங்க
அண்ணா.. நீங்க உங்க மூளையை
எப்போதும் போல ஃபெரஷா வச்சிருங்க"
என்று மரியாதைத் தந்து கிண்டலடித்தான். பின் இருவரும் ஏதோ பேசியபடி வெளியே வராண்டாவில் வந்து நின்றனர்.

"கௌசி ஐம் ஸோ ஹாப்பி" என்று உள்ளே நுழைந்த மதி கௌசியைக் கட்டிப் பிடித்தாள். கௌசியின் உடம்பு
விறைப்பாகவே இருந்ததை உணர்ந்த
மதி.. மேலும் அவள் எதுவும் பேசவில்லை
என்பதை உணர்ந்து அவளிடம் இருந்து
விலகி முகத்தைப் பார்த்தாள்.
கௌசியின் முகத்தில் ஏராளமான குழப்ப ரேகைகள்.

"ஏன் கௌசி ஒரு மாதிரி இருக்க?" என்று
மதி கேட்டாள். ஏதோ யோசனையிலேயே
இருந்தவள் மதியின் கேள்வியில் விழித்து."ஒன்றுமில்லை மதி" என்று மறைத்தாள்.

"என்ன ஆச்சு கௌசி.. நீ ஒன்னு
இல்லைன்னு சொல்லும்போதே ஏதோ
இருக்குன்னு தெரியுது"

"நீங்களாவது விக்னேஷ் கிட்ட இந்தக்
கல்யாணம் வேண்டாம்ன்னு
சொல்லுங்களேன் மதி.. அவன் பாட்டுக்கு முடிவு பண்றான்" - கௌசி

"ஏன் கௌசி இதுல என்ன இருக்கு" - மதி
சாதரணமாக.

"மதி.. என்ன பேசறே நீ.. நான் அல்ரெடி
கல்யாணம் ஆகி.." என்று ஆரம்பிக்க மதி
இடை புகுந்தாள். "அதனால் என்ன
கௌசி.. குரு விதி அவ்வளவு தான்
போய் சேர்ந்திட்டான். அதற்காக நீ
வாழ்க்கை ஃபுல்லா தனி மரமா
உட்காரணும்மா.." என்று நியாயமான
கேள்வியை முன் வைத்தாள்.

"எனக்கு ராசி இல்லை மதி.. என்னால
விக்னேஷிற்கு ஏதாவது ஆயிடப்போகுது" என்று கண் கலங்கினாள் கௌசி. அவள் பழசை எதுவும் மறக்கவில்லை.. சந்தியா
பேசியது தன் அன்னை பேசியது
எவ்வளவு பாதித்திருக்கு என்பதை மதி
உணர்ந்தாள்.

"ஏய்ய்... கௌசி.. நீ எல்லாம் ஐடி
வேலையில் இருந்தாய் என்று வெளில
சொல்லிடாதே.. இந்தக் காலத்தில வந்து
ராசி அதுஇதுன்னு" என்று மதி அதட்டி
சமாதானம் செய்ய முயற்சிக்க கௌசி
மேலே பேசினாள்.

"அது இருக்கோ இல்லையோ.. ஆனா
என்னாலன்னு பயந்து பயந்தே நான்
செத்திருவேன் மதி.. அதுவும் இல்லாமல்
அவன் நான்சியைத் தானே காதலித்தான்.. எனக்காக ஏதோ சொல்ற மாதிரி இருக்கு அவன் பிரிஞ்சிட்டன்னு சொல்றது" என்றாள் கௌசிகா.

"உனக்கு நடந்தது எதுவுமே தெரியாதா?"
எனக் கேட்டாள் மதி புருவ முடிச்சுடன்.

"ஏன்.. அப்படி என்ன ஆச்சு மதி.." என்று
கேட்ட போதே ஏதோ அடைப்பது போல
இருந்தது கௌசிகாவிற்கு.

நான்சியை ஏர்போட்டிற்குச் செல்லும் முன் விக்னேஷ் அவளைப் பார்க்கச்
சென்றபோது அங்கு நடந்த சம்பவங்கள்..
பின் கனடா போனபின் வர முடியாமல்
சிக்கியது.. இங்கு வந்த அப்புறம்
நீயில்லாத அதிர்ச்சி.. அப்புறம்
செந்தில்நாதன் அவரின் இறப்பு.. பின்
சென்னையை விட்டு வந்தது.. என்று
ஒன்றுவிடாமல் மதி சொல்லி முடித்தாள்.

"செந்தில் மாமா... இறந்துட்டாரா?" என்று
கேட்க கௌசியின் கண்களில் கண்ணீர்
உருண்டோடியது.

"ஆமாம் கௌசி" - மதி கௌசியின்
தோளை ஆறுதலாகப் பற்றிய படி.

சிறிய வயதில் இருந்து தந்தைக்கு
நிகராகத் தன்னைத் தூக்கி வளத்தவரின் இழப்பில் கூட இருக்க முடியவில்லையே என்று தன்மேலே கோபம் கொண்டவளுக்கு கண்கள் கரித்தது.

"விக்னேஷை நாங்க கல்யாணம் பண்ண சொல்லி எவ்வளவோ அதுக்கு அப்புறம் கம்பெல் பண்ணோம் கௌசி.. விக்னேஷ் தான் அந்தப் பேச்சை எடுத்தாலே எரிஞ்சு எரிஞ்சு விழுந்தாரு.. ஆனா நீ வந்த அப்புறம் தான் எல்லாமே ஓகே ஆயிருக்கு மதி.. நீ வீட்டை விட்டுப் போன அப்புறம் போன சந்தோஷம் இப்போ அப்படியே திரும்பி வருது.. நீயா கௌசி ராசி இல்லாதவ.. எனக்கு தெரிஞ்சு வரதராஜன் சித்தப்பா சொன்ன மாதிரி நீ மகாலட்சுமி கௌசி" என்றாள் மதி.

ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தாளே தவிர எதுவும் பேசவில்லை.. ஆனால்
அவள் மனதில் ஒன்று ஓடிக்கொண்டு
இருந்தது. விக்னேஷ் குடும்பத்திற்கும்
தன் தந்தைக்காக மட்டும் தான்
கல்யாணம் செய்கிறான் என்று.

"இங்கேயே கௌசி இன்னிக்கு
இருக்கட்டுமே" என்று வெளியே வந்து
பேசிக்கொண்டிருந்த விக்னேஷிடம்
கேட்க "இல்லை மதி.. அவ வரட்டும்.. அங்க அம்மா இவளை இன்னிக்கே பாத்து ஆகனும்-ன்னு உட்கார்ந்திருக்காங்க" -விக்னேஷ்.

"சரி லக்கேஜ் எல்லாம் இருக்கு பாரு.. பேசாமல் காரை எடுத்திட்டுப் போ.." -
ஜீவா.

"அப்புறம் உனக்கு" - விக்னேஷ்.

"நாளைக்கு காலையில் நான் லேட்டா
தான் போவேன் டா.. நீ 9.30க்கு வந்து
காரை விட்டுட்டு அப்புறம் பைக்கை
எடுத்திக்கோ" - ஜீவா.

"சரி ஜீ" - விக்னேஷ். பின் விக்னேஷும்
ஜீவாவும் லக்கேஜை காரில் எடுத்து
வைக்க கௌசியும் மதியும் பேசிக்
கொண்டு நின்றிருந்தனர்.

"கௌசி போகலாம்" என்று விக்னேஷ்
சொல்ல கௌசி அவனுடன் புறப்பட்டாள்.

இருவரையும் அனுப்பிவிட்டு வந்த மதி
உள்ளே நுழைந்து கதவைச் சாத்திவிட்டு
திரும்ப ஜீவா அவளை அணைத்தான்.
கணவனின் திடீர் அணைப்பை
எதிர்பாராதவள் அவனின் அணைப்பில்
அப்படியே நின்றாள். "ஐம் ஸோ ஹாப்பி
மதி" என்றான் அவளின் காதில்
அணைத்தபடியே.

"என்னன்னு கேக்க மாட்டியா?" - ஜீவா.

கணவனைத் தானும் அணைத்தவள் "விக்னேஷ் கௌசி கல்யாணம் தானே"
என்று கேட்டாள்.

"அதுவும் ஒன்னுதான்" என்று அவளை
விலக்கியவன் "நீ நம்ம பேமிலி மேல
வச்சிருக்கு அக்கறை மதி.. கௌசி இங்க
வந்த அப்புறம் நீ கடமையாவே எதுவும்
செய்யலையே.. எல்லாம் பாத்து பாத்து
செஞ்ச.. நம்ம வியா குட்டிக்கு செய்யற
மாதிரி" என்றவன் அவளின் கன்னத்தில்
ஒரு முத்திரையைப் பதித்து "தேங்க்ஸ்
மதி" என்றான்.

"இல்ல ஜீவா... கௌசி எப்போதுமே"
என்று மதி ஆரம்பிக்க "அய்யோ.. ஏய் ப்ளீஸ்.. மறுபடியும் கௌசி புராணம்
பாடுவே.. நீங்க இரண்டு பேரும் அப்படி
இப்படின்னு.. போதும் டி.. மூணு வருஷமா கேட்டுட்டே இருக்கேன்.. அதான் அவ வந்துட்டால போதும்" என்று
இருகைகளையும் காதில் வைத்தபடி
கிண்டலடிக்க மதி அவனைச் செல்லமாக
அடித்தாள்.

"சரி.. நாளைக்கு ஏன் லேட்டா போறீங்க..
ஏதாவது நைட் வொர்க் இருக்கா முடிக்க?"
என்று வினவினாள்.

"ஆமாம்"

"சரி முடிச்சிட்டு வந்து படுங்க.. நான்
போய் தூங்கறேன்" - மதி.

"வொர்க் என் பொண்டாட்டியோட தான்.."
என்று அவளைத் தன் அருகில்
இழுத்தவன் இதழ் நோக்கி குனிய "ஓ...
இதுதான் சார் வொர்க்-ன்னு
சொன்னிங்களோ" என்று கேட்டாள் மதி.

"ஆமா.. பட் இப்போ நீ கொஞ்சம் பேசாமல் இருந்தால் நல்லா இருக்கும்" என்றவன் அவளின் இதழில் தஞ்சம் புகுந்தான். தன்னையும் தன் குடும்பத்தையும் அளவில்லாமல் நேசிக்கும் மனைவியை காதலால் மூழ்கடிக்க ஆரம்பித்தான்.

"என்ன நீயும் மதியும் லவ்வர்ஸ் மாதிரி
பேசிட்டே இருக்கீங்க" என்று காரின் தன்
அருகில் உள்ள சீட்டில்
அமர்ந்திருப்பவளிடம் பேச்சுக்
கொடுத்தான் விக்னேஷ். அவள் பதில்
சொல்லவில்லை.. தலையைக் குனிந்த
படியே வந்தாள்.

"என்னடி.. பேசவே மாட்டிறே" என்று காரை ஓட்டியபடி அவன் வினவ.. "எனக்கு என்னமோ மாதிரி இருக்குடா" என்றாள் கௌசி.

"என்ன மாதிரி" என்று வினவினான்.

"அதான் தெரியல.. ஏதோ குழப்பமா..
கஷ்டமா" என்று விழித்தாள் கௌசி.

வலது கையால் காரை ஓட்டியவன் தன்
இடது கரத்தால் அவள் வலது கரத்தைப்
பற்றி "எதையும் யோசித்துக் குழப்பிக்காத கௌசி.. தைரியமா இரு.. நான் இருக்கேன்" என்று அவள் கரத்தை
வலுவாகப் பிடித்தான். அவன் தன்
கையை அழுத்தமாகப் பற்றியதே
அவளுக்கு சற்றுத் தெளிவாக இருந்தது.

கிணத்துக்கடவு வந்தவுடன் அவன் காரை நிறுத்த நீ உள்ளே போ நான் வரேன் என்றான்.. வெளிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல எங்கிருந்தோ ஓடி வந்த ப்ரௌனி அவளைத் தாவிப் பிடித்தது. ஒரு நிமிடம் தடுமாறியவள் பின் சமாளித்து நின்று ப்ரௌனியைக் கொஞ்சினாள். கௌசி அவள் குடும்பத்தை எவ்வளவு மிஸ் செய்தாளோ அதே அளவிற்கு ப்ரௌனியையும் மிஸ் செய்தாள். அதன் தலையை நீவி கௌசி முத்தமிட ப்ரௌனி தலையைத் தூக்கியது.. முதலில் புரியாமல் விழித்தவள் பின் சிரித்துக் கொண்டே "சாரிடா மறந்துட்டே" என்று அதன் கழுத்தில் தன் கைகளை வைத்து கொஞ்சி தேய்த்துவிட்டாள். "ங்ங்ங்ங்" என்று சத்தத்தை எழுப்பியது அவளைச் சுற்றி சுற்றி சந்தோஷத்தில் அங்கும் இங்கும் ஓடியது.

"வா கௌசி" என்ற தன் சின்ன அத்தை
சுமதியின் குரலில் நிமிர்ந்தாள்.
அத்தையைப் பார்த்தவுடன்
செந்தில்நாதன் நியாபகம் வர சுமதியிடம் சென்று அவரைக் கட்டிக் கொண்டாள் கௌசி. பின் விக்னேஷ் அவளின் லக்கேஜ் எல்லாம் எடுத்து வந்து உள்ளே வைக்க.. அத்தையுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தாள் கௌசி.

"விக்னேஷ்.. ஜீவா போன் பண்ணி
சொன்னார் டா.. கல்யாணத்தப் பத்தி.
எப்போ என்னன்னு நாளைக்கு நாள்
பாத்திடலாம்" என்று சொல்ல தலையை
ஆட்டியவன் உடை மாற்ற தன் அறைக்கு
எழுந்து சென்று விட்டான்.

அவன் போன பின் "அத்தை.. உங்களுக்கு இதுல சம்மதமா?" என்று கேட்டாள் கௌசி.

"எதில்" - சுமதி.

"அதான்.. இந்தக் கல்யாணத்தில்" - என்று இழுத்தாள் கௌசி.

"ஏன்... என் கௌசியிடம் தான் என் மகன்
சிடு மூஞ்சியைக் கட்டிக் கொள்ள
சம்மதமான்னு கேக்கணும்.. நீ எதையும்
கேக்கவே அவசியம் இல்லை.." என்றார்
அவளின் தாடையை பிடித்து ஆட்டியபடி.

அவரின் சம்மதத்தையும் தெரிந்து
இறுதியில் தெரிந்து கொண்டாள். "என்ன சிடுமூஞ்சியா" என்று விழித்தாள்.

"அவன் அப்படித் தான் இருக்கான்.. அந்த
போட்டோ ஸ்டுடியோ ஆரம்பிச்சதுல
இருந்து" என்று சலித்துக் கொண்டார்
சுமதி. நான்சியைப் துரோகத்தால்
இருக்கும் என்று நினைத்தாள் கௌசிகா.பின் விக்னேஷ் வர சிறிது நேரம் பேசிவிட்டு தன் அத்தையுடனே அவரதுரூமிற்குள் உறங்கச் சென்றாள் கௌசிகா.

விக்னேஷைப் பொருத்த வரை
"கௌசிகா குருவுடன் வாழ்ந்த காதல்
வாழ்க்கையை முழுதாக மறக்கடித்து..
தன்னைக் காதலிக்க வைத்து.. தன்
காதலை அவளிடம் உணர்த்த வேண்டும்"
என்று எண்ணினான்

கௌசிகாவைப் பொருத்த வரை
"நான்சியுடன் ஆன காதல் விக்னேஷை
பாதித்து விட்டது.. அதனால் தான் பாரா
முகம் காட்டி இருக்கிறான்.. இப்போது
குடும்பத்தினருக்காகவே தன்னைக்
கல்யாணம் செய்கிறான்.." என்ற
எண்ணம்.

இருவருமே சரியாகத்.. தவறான
எண்ணத்திலும் கனிப்பிலும் இருந்தனர்.

அடுத்து என்ன?
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-18

அடுத்த நாள் காலை வழக்கம் போல
விடிந்தது. எப்போதும் போல காலை
ஐந்தரை மணிக்கே எழுந்த கௌசி என்ன செய்வது என்று தெரியாமல் மாடிக்கு போய் நின்றாள். அருகருகே வீடுகளும் அவ்வளாக இல்லை.. தள்ளித் தள்ளியே இருந்தது. யாரும் இல்லை என்பதை அறிந்தவள் தன் யோகா பயிற்சியை ஆரம்பித்தாள். சிறிது நேரம் செய்தவள் பயிற்சியை முடித்துக்கொண்டு அருகில் இருந்த இடங்களை ரசிக்கத் துவங்கினாள். சும்மாவே சில்லென்ற கோயம்பத்தூர் தான். அதுவும் கிணத்துக்கடவு சொல்லவே தேவை இல்லை.. சிட்டிக்கு வெளியே தோட்டங்களுடன் அழகாகக்
காட்சியளித்தது.

யோகாவை முடித்துக் கொண்டு 6.10 க்கு
கீழே வர சுமதியும் சரியாக தூக்கத்தில்
இருந்து விழித்தார். "என்ன கௌசி..
சீக்கரமே எந்திரிச்சிட்டயா?" என்று
கேட்டார்.

"ஆமா அத்தை.. ஐந்து மணிக்கே
எந்திருச்சுருவேன்.. யோகா பண்ணிட்டு
வந்தேன் மேலே"

"சரி... நான் போய் காஃபி போடறேன்
கௌசி.. நீ டீயா இல்லை காஃபியா?"
என்று முந்தானையைச் சொறுகிய படியே வினவினார்.

"இல்லை அத்தை.. நீங்க இருங்க நானே
போய் போடறேன்" என்றவள் அவரிடம்
டீயா காஃபியா என்று கேட்டுவிட்டு
சமையல் அறைக்குள் புகுந்தாள்.

தனக்கும் தன் அத்தைக்கும் காஃபியைப்
போட்டு எடுத்துக் கொண்டு வந்தவள்
அவரிடம் ஒரு கப்பை தந்துவிட்டு
தனக்கும் எடுத்துக் கொண்டு உட்கார..
விக்னேஷ் ஜாக்கிங்கை முடித்துக்
கொண்டு வந்தான்.

உள்ளே வரவர "அம்மா காஃபிமா" என்று
வந்து உட்கார கௌசி மறுபடியும் சென்று
அவனுக்கு ஒரு காஃபி கப்பை எடுத்து
வந்தாள்.

காஃபியைக் குடித்தவள் "அத்தை நான்.. அப்பா கூட போய் இருக்கேன் இன்னிக்கு" என்று சொன்னாள் சுமதியிடம்.

"தாராளமாகப் போ.. விக்னேஷ்
கௌசியை போற வழியில
இறக்கிவிட்டுட்டு நீ போ" - சுமதி.

சரி என்பது போல தலையை ஆட்டியவன்
"சீக்கிரம் ரெடி ஆயிடு" என்று
கௌசியிடம் சொல்லிவிட்டுப் போனான்.

இருவரும் கிளம்பி காரில் ஏறி ஜீவாவின்
வீட்டில் வண்டியை நிறுத்திவிட்டு
உள்ளே சென்றனர். "சித்தாதா.." என்று
வழக்கம் போல அவன் காலை வந்து
கட்டிக் கொண்டாள் வியாஹா. பின்
கௌசியைப் பார்த்தவள் "ஹை..
சித்தியும் வந்திருக்காங்க" என்று
குஷியானாள்.

வியாவின் குரல் கேட்டு வந்த மதியும்
ஜீவாவும் இருவரையும் சாப்பிட அழைக்க
"இல்ல ஜீவா நாங்க சாப்பிட்டு விட்டு தான் வரோம்.. இந்தா கார் சாவி.. நான்
அப்படியே கௌசியை ஹாஸ்பிடல்ல
விட்டுட்டு ஸ்டுடியோ போகனும்" என்றான்.

"நான் கௌசியை ஹாஸ்பிடல்ல
விடறேன். அதான் என் ஸ்கூட்டி
இருக்குல்ல. நீங்க கிளம்புங்க
விக்னேஷ்.." என்று மதி சொன்னாள்.

ஒரு நிமிடம் யோசித்தவன் "சரி.. நான்
மாமாவை ஈவ்னிங் பாக்க வருவேன்.
அப்போ பிக் அப் பண்ணிக்கறேன்
கௌசி" என்றவன் அனைவரிடமும்
சொல்லிவிட்டு வியாவையும் கொஞ்சி
விட்டுக் கிளம்பினான் விக்னேஷ்.

அவன் கிளம்பிய பின் ஜீவாவும்
அனைவரிடமும் சொல்லிவிட்டு விடை
பெற்றான். "நீங்க தான் சித்தாதாதா-வ
பாத்துக்கப் போறீங்களா" என்று
கௌசியிடம் அவள் கையைத் தன்
கைகளால் பிடித்த படிக் கேட்டாள்.

அந்த பிஞ்சுக் கைகள் தந்த மென்மையை ரசித்தவள் பின் "ஆமாம்" என்றாள் கௌசிகா. ஏனோ ஆமாம் என்று நேற்று விக்னேஷிடமும் மதியிடமும் சொல்லாதவள் இந்தப் பிஞ்சிடம் ஆமாம் சொன்னாள். கௌசிக்கே ஆச்சரியம் தான் எப்படி நாம் ஆமாம் என்று சொன்னோம்? எப்படி? எப்படி? என்று யோசித்தாள். விடை தான் அவளுக்குத் தெரியவில்லை.

ஆனால் தன் உள் மனதில் இருந்த
காதலால் தன்னையும் மீறி சொன்னதை
அவள் உணரவில்லை. அவள் உணர
முடியா வண்ணம் அவளை சில கெட்ட
நிகழ்வுகள் ஆட்கொண்டு இருந்தது.

"ஐ.. நீங்க தான்.. சித்தி.." என்று அவளின்
மடியில் ஏறி உட்கார்ந்த வியாஹா
கௌசியின் கன்னத்தில் முத்தத்தைத் தர கௌசி தன் சிந்தனையில் இருந்து
வெளியே வந்தாள்.

கௌசி வியாஹாவைப் பார்க்க "சித்தி..
நீங்க அழழகா இக்கீங்க" என்றது.

"ஏன்டி... அப்போ அம்மா.." என்று
வேண்டுமென்றே வியாஹாவை
வம்பிற்கு இழுக்க குட்டிப் பாப்பாவோ
க்ளுக் எனச் சிரித்தது.

"நீ இல்ல போ.. நீ இன்னிக்கு காலைல எனக்கு கிஸ்ஸி குடுக்கவே இல்லை..
அப்பாக்கு தான் கிஸ்ஸி தந்த.. நான்
பாத்தேன்" - வியாஹா.. வியாஹா
தூங்கிக் கொண்டிருந்ததாக நினைத்து
மதி கணவனுக்குத் தந்த முத்தத்தை
வாண்டு பாத்துவிட்டது போல.. அதை
இப்போது சொல்ல கௌசியும் சிரித்து
விட்டாள். இதே பழையக் கௌசியாக
இருந்திருந்தால் மதியைக் கலாய்த்தே
தள்ளி இருப்பாள். ஏனோ இப்போது வாய் எழவில்லை கௌசிக்கு.

"ஆமா சித்தி.. காலைல அம்மா.." என்று
கௌசியிடம் ஆரம்பிக்க எழுந்து மகளிடம் வந்த மதி.. மகளின் வாயை அடைத்தாள்.

"பாப்பா.. அம்மா மானத்தை வாங்கறே நீ.." என்று மிரட்ட கௌசியின் மடியில் இருந்து இறங்கிய வியா... தன் அன்னையை நோக்கி கோபமாகக் கையைக் கட்டி நின்றாள்.. "இப்போ என்ன உனக்கு கிஸ்ஸி வேணுமா" என்று மதி குனிய வியாஹா சிலுப்பிக் கொண்டாள்.

"ஹும்.. நீங்க ஒன்னும் தர வேண்டாம்..
நான் என் சித்தி கிட்ட வாங்கிக்கறேன்.."
என்று கௌசியிடம் சென்று கன்னத்தைக் காட்டினாள் கௌசிகா. ஏற்கனவே அவள் செய்கையை ரசித்துக் கொண்டு இருந்தவள் உரிமையாய் என் சித்தி என்று சொல்லி கன்னத்தைக் காட்டவும் அதில் நெகிழ்ந்தவளாய்.. வியாஹாவைத் தூக்கி வைத்து கொஞ்சு கொஞ்சு என்று கொஞ்சி விட்டாள்.

பிறகு மூவரும் கிளம்பி ஹாஸ்பிடல்
செல்ல ஸ்கூட்டியை ஓட்டிய மதி
வியாஹாவிடம் அட்வைஸ் பண்ணிக்
கொண்டே வந்தாள் "பாரு பாப்பு... அங்க
வந்து சத்தம் போடக் கூடாது.. வரது
தாத்தாவப் பாத்தா நல்லா இருக்கீங்களா கேக்கனும்" என்று பேச வியாஹா "ம்ம்" "ம்ம்" என்றே வந்தாள்.

மறுபடியும் மதி ஏதோ ஆரம்பிக்க
"அய்யோ அம்மா.. எவ்வளவு தடவ
சொல்லுவீங்க" என்று சிணுங்கினாள்.
பின்னால் உட்கார்ந்து கொண்டு இதை
எல்லாம் கவனித்த படி வந்தக் கௌசி
சிரித்துவிட்டாள்.

பின் ஹாஸ்பிடலை அடைய வியாஹா
கௌசியிடம் வந்து "சித்தி தூக்குங்க"
என்று கையைத் தூக்கிக் காட்ட
கௌசியும் அவளை ஆசையாக எடுத்துக் கொண்டாள். ஏனோ கௌசியை வியாஹாவிற்கு பிடித்து விட்டது. அதனால் அவளுடனே இருக்க ஆவலாக இருந்தாள்.

பின் தந்தையைப் பார்த்து விட்டு சிறிது
நேரம் நின்றவள் "அத்தை நீங்க
வேணும்னா போயிட்டு ஈவ்னிங் வாங்க.
நான் அது வரைக்கும் அப்பாவைப்
பாத்துக்கறேன்" என்று சொல்ல
ஜெயாவும் "நேற்று அப்பாவும் மகளும்
அவ்வளவாகப் பேசவில்லை.. இன்றாவது பேசட்டும்" என்று எண்ணித் தலையை ஆட்டினார்.

"வரது தாத்தா.. நல்லா இருக்கீங்களா"
என்று தன்னால் எவ்வளவு முடியுமோ
அவ்வளவு தாழ்ந்த குரலில் கேட்டாள்
வியாஹா. அவளிற்கு பதில் அளித்தவர்
"பாப்பா.. இது யாருன்னு தெரியுமா?" என்று கௌசியைக் காட்டிக் கேட்டார்.

"ஓஓ.. தெரியுமே.. இது சித்தி.. சித்தாவை
கல்யாணம் பண்ணப் போறாங்க" என்று
கருமணிகளை விரித்துச் சொல்ல
வரதராஜன் புன்னகைத்தார். "சித்தியோட அப்பா யாருன்னு தெரியுமா?" என்று கேட்டார்.

தன் ஆள்காட்டி விரலை தாடையில்
வைத்து யோசித்த வியாஹா "சித்தி உங்க அப்பா பேரு என்ன?" என்று கேட்டாள்.

"இதோ உன் தாத்தா தான்.. சித்தியோட
அப்பா" என்று வியாஹாவிற்கு வலிக்காத வன்னம் மூக்கைப் பிடித்து நிமிண்டினாள் கௌசி. "அப்போ சித்தா கூட இருக்க சித்தி தான் உங்கப் பொண்ணா தாத்தா" என்று அறியா சிறுமியாய்க் கேட்டாள்.

சிரித்த வரதராஜன் "ஆமாம் பாப்பா"
என்றார் வியாஹாவின் தலையை
வருடியபடி. விட்டால் தன் மகள் கேள்விக்
கேட்டே எல்லோரையும் ஒரு வழி பண்ணி விடுவாள் என்று நினைத்த மதி
வியாஹாவைத் தன் பக்கம் இழுத்தாள்.

பின் மதி.. வியாஹா.. ஜெயா என
அனைவரும் கிளம்பினர். தன்
தந்தையிடம் உட்கார்ந்தவள் பேச்சை ஆரம்பித்தாள் "அப்பா.." - கௌசி.

"உன்ன அப்பா ரொம்ப
கஷ்டப்படுத்தறேனா மா" - வரதராஜன்
வாடியக் குரலில்.

"அதெல்லாம் ஒன்றும் இல்லைபா.. நீங்க
அப்படி நினைக்கவே நினைக்காதீங்க" -
கௌசி.

"விக்னேஷ் உன்ன நல்லாப்
பாத்துப்பான்மா.. நீ கவலையே படாதே
எல்லாம் சரி ஆகிவிடும்" என்று சொல்லத் தலையை மட்டும் ஆட்டினாள்.

"நீ ஏதோ சொல்ல வந்தியே மா?" என்று
நியாபகம் வந்தவராய்க் கேட்டார்
வரதராஜன்.

"இல்லப்பா... அது வந்து நான்
வேலைக்குப் போகட்டா" என்றுக் கேட்டாள்.

"இப்போ அதுக்கு என்னமா அவசியம்..
கொஞ்ச நாள் போகட்டும்" - வரதராஜன்.

"இப்படியே இருந்தா எனக்குப்
பழகிவிடும்பா.. அதான்.. இப்போதே
வேண்டாம் பா.. ஒரு மாசம் அப்பறம் தான் கேட்கிறேன்" என்று தன் தந்தையை இந்த நேரத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கூறினாள்.

"சரிடா.. சாய்ந்திரம் விக்னேஷ் வரட்டும்..
சொல்றேன்" - வரதராஜன்.

"ம்ம்" - கௌசி..

பின் மாலை விக்னேஷ் வந்த பின்
வரதராஜன் கௌசியின் விருப்பத்தைச்
சொல்ல "சரி மாமா.. ஆனால் நம்ம
ஸ்டியோக்கே வரச் சொல்லுங்க..
ஏற்கனவே நான் இன்சார்ஜ்க்கு ஒரு
பொண்ண தேடிட்டு இருந்தது தான்"
என்றான்.

சிறிது நேரத்தில் சுமதி வர "அம்மா நீங்க
எங்க இங்க? எப்படி வந்தீங்க?" என்று
வினவினான்.

"டேய் நான் தான் காலையிலேயே
சொன்னேன்ல மறந்துட்டையா.. நாளை
சந்தியாக்கு வளைகாப்பு.. ஜெயா
பெரியம்மா எல்லாம் அந்த வேலையில
பிசியா இருக்காங்க" என்றவர் "அதான்
இன்னிக்கு நைட் நான் இங்க
தங்கிக்கலாம்னு வந்தேன்" என்று
சொன்னார்.

"நான் இருக்கேனே அத்தை.. நீங்க ஏன்
சிரமப்படறீங்க" - கௌசி.

"நீ நேற்றும் புது இடம்னால தூங்கலே..
நான் நைட் டிபன் எல்லாம் செஞ்சு
வச்சிட்டு வந்துட்டே.. நீ போய் சாப்பிட்டு
விட்டு நல்லா ரெஸ்ட் எடு" என்று
கௌசியை மேலே பேச விடாமல்
செய்தார்.

"சரி நாங்க கிளம்பறோம்" என்று
விக்னேஷ் சொல்ல கௌசியும் எழுந்தாள்.

விக்னேஷும் கௌசிகாவும் வெளியில்
வந்து புறப்பட்டனர். வீடு வந்து சேரும்
வரை இருவரும் எதுவும் பேசவில்லை.
வீடு வந்தவுடன் இருவரும் இறங்க
விக்னேஷ் சென்று கதவைத் திறந்தான்.
அதற்குள் ப்ரௌனி வந்து கௌசியின்
காலைச் சுற்றி செல்லம் கொஞ்ச "நன்றி
கெட்டது.. இத்தனை நாள் வளர்த்த
என்னைய கண்டுக்கறானா பாரு.. நாயி
நாயி" என்று மனதிற்குள் திட்டினான்.

பின் இருவரும் உள்ளே நுழைய "கௌசி
உன்கிட்ட ஒண்ணு பேசணும்" என்று
விக்னேஷ் சொல்ல கௌசி என்ன
என்பது போலத் திரும்பினாள்.

"இங்க பாரு கௌசி.. உனக்கு ஏதாச்சும்
வேணும்னா என்கிட்ட கேளு.. அதை
விட்டுட்டு காலைல அம்மா கிட்ட சொன்ன பாத்தியா அப்பாவ பாக்கணும். அப்புறம் அம்மா என்கிட்ட சொல்றாங்க கூட்டிட்டு போன்னு.. அப்புறம் வேலை விஷயமாக மாமா கிட்ட பேசுனது எல்லாம் நீ என்கிட்டயே கேளு சரியா" என்று சற்று அதட்டினாற் போலப் பேசினான்.

அவன் அப்படிப் பேச கௌசியின் முகம்
கூம்பியது. அவள் அவனிடம் வேண்டுமென்றே சொல்லாமல்
இருக்கவில்லை. ஏனோ அவன் கம்பத்தில் தன்னைக் காயப்படுத்திய வார்த்தைகள் மற்றும் ஜீவா வீட்டில் நடந்தது என அனைத்திற்கும் பிறகு அவளால் அவனிடம் பேச முடியவில்லை. பயம் என்று இல்லை.. அவனிடம் தேவை
இல்லாமல் வாயைக் குடுத்து தானே
வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்
என்று எண்ணினாள். ஆனால் அதற்கும்
அவன் இப்படித் திட்டுவான் என்று அவள்
நினைக்கவில்லை.

ஆனால் விக்னேஷிற்கு அவள் தன்னிடம்
முதல் மாதிரி உரிமையாக இல்லாதது
இப்படிப் பேசச் செய்தது. அவனுமே
அவளிற்கு கொஞ்சம் டைம் குடுக்க
வேண்டும் என்றே எண்ணினான்.
ஆனால் அவன் மனதில் இருந்த ஏக்கம்
அவளிடம் அப்படி பேச வைத்தது.

"ம்ம்" என்றுவிட்டு உடையை மாற்றச்
செல்ல விக்னேஷும் உடையை
மாற்றிவிட்டு வந்தான்.

சாப்பிடும் போது பரிமாற வந்தவளை
"நீயும் உட்கார்.. நாம இரண்டு பேர் தானே.. நம்ம எடுத்துப் போட்டு சாப்பிடுவோம்" என்று அவளையும் எதிரில் உட்காரச் சொல்ல இருவரும் சாப்பிட்டனர்.

இடையில் விக்னேஷின் போன் அடிக்க
எழுந்து சென்று எடுத்தவன் "சொல்லு ஜீ"
என்றான்.

"வந்திடறேன் ஜீ.." என்றவன் "இந்தா ஜீ
பேசனுமாம்" என்று கௌசியிடம்
போனைத் தந்தான்.

போனை வாங்கியவர் "சொல்லு ஜீ"
என்றாள் டிபனை விழுங்கியபடியே.

"நாளை சந்தியாக்கு வளைகாப்பு கௌசி.. காலைல வந்திரு" என்று ஜீவா சொல்ல கௌசி எதுவும் பேசாமல்
அமர்ந்திருந்தாள்.

"கௌசி.. லைன்ல இருக்கியா.. ஹலோ"
என்று ஜீவா அழைக்க கௌசி
யோசனையில் இருந்து வெளியே
வந்தான்.

"இல்ல ஜீ.. நான் வரல.. ப்ளீஸ்" என்று
கௌசி உள்வாங்கிய குரலில் சொல்ல "நீ அவ சொன்னதை மறக்கலையா கௌசி" என்று வருத்தமானக் குரலில் கேட்டான்.

"....." - பதிலில்லை கௌசியிடம். எப்படி
மறப்பாள் அவள்.. பரமேஸ்வரி கூட
அடுத்த வீட்டுப் பெண்மணி.. ஆனால்
சந்தியா? கூடவே சகோதரியாய்
வளர்ந்தவள் பேசியதை கௌசியால்
மறக்கவே முடியாத ஒன்று.

"சரி கௌசி.. பரவாயில்லை விடு"
என்றான் ஜீவா அவளை நோகடிக்காதக்
குரலில்.

"ம்ம்" என்றவள் போனை விக்னேஷிடம்
தந்து விட்டாள்.

போனை வாங்கியவன் ஜீவாவிடம்
சொல்லிவிட்டு வைத்துவிட்டு.. மறுபடியும் வந்து உட்கார கௌசி தட்டையே அளந்து கொண்டு இருப்பதைக் கவனித்தான். "நீயே வரன்னு சொல்லி இருந்தாலும்
நான் வேண்டாம் என்று தான் சொல்லி
இருப்பேன் கௌசி.. அவள் பேசிய
வார்த்தைகளுக்காக அல்ல.. நீ அடுத்து
அவள் முன் நின்றால் தாலியோடு தான்
நிற்க வேண்டும் என்று.. எதையும்
யோசிக்காம சாப்பிடு" என்று
சொன்னவன் அவள் உண்ணத்
துவங்கியதும் தானும் உண்டான்.

பின் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.
ஷோபாவில் உட்கார்ந்து ஃபுட் பால் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷ் "க்கும்" என்ற கௌசியின் செறுமலில் திரும்பினான்.

அவன் திரும்ப "உன் ரூம் எது?" என்று
கேட்டாள் கௌசி.

"என் ரூம் அதுதான்" என்றவன் "ஏன்
கேட்கிறே" என வினவினான்.

"எனக்குத் தனியா இருந்தா நிறைய
கனவு வரும்.. பேசாம.." என்றுத்
தயங்கியவள் "பேசாமல் நீ ஷோபால
படுத்துக்கோ நான் இங்க ஹால்லயே
கீழே படுத்துக்கறேன்" என்றாள்.

"சரி" என்றவன் உள்ளே சென்று ஒரு
பாயை எடுத்து வந்தான். பின் மறுபடியும்
சேன்று ஒரு பெட்டை எடுத்து வந்தவன்
"பெட்ல படுத்துக்கோ கௌசி.. தரைல
சில்னெஸ் இருக்கும்.. அப்புறம் சளி
புடிச்சிக்கும்" என்று சொல்லித் தலையை
ஆட்டினாள். பின் தேவையானத்
தலையணை போர்வை எடுத்து வர..
விக்னேஷ் ஹாலின் ஷோபாவிலும்..
கௌசி ஹாலின் தரையிலும்
ஒருவருக்கொருவர் முதுகைக் காட்டிப்
படுத்திருந்தனர். அவன் அருகில் இருக்க
தாயின் கருவறையில் இருப்பதைப் போல ஏதோ சிறு தைரியம் மற்றும் தெம்பு வர கௌசி கண்களை மூடினாள்.

ஆனால் விக்னேஷிற்குத் தான் தூக்கம்
வரவில்லை.. தலையை மட்டும் திருப்பி
அவளைப் பார்க்க அவளின் முதுகு தான்
அவளிற்குத் தெரிந்தது. அவளிடம் பழைய மாதிரி இருக்க மனம் ஏங்கித் தவித்தது. பழைய குறும்புத்தனமானக் கௌசியைக் காண விக்னேஷின் மனம் அலைந்தது.

அவளிடம் பேச வேண்டும் என்று தோன்ற "கௌசி" என்று அழைத்துப் பார்த்தான்.பதிலில்லாமல் போகவே அவள் தூங்கிவிட்டாள்.. டிஸ்டர்ப் செய்ய
வேண்டாம் என்று விட்டுவிட்டான்.
அவளை சீக்கிரமே பழையக் கௌசியாய் மாற்ற கங்கணம் கட்டினான்.
 

writer

Saha Writer
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-19

அடுத்த நாள் காலை கௌசி எழ...
விக்னேஷ் ஷோபாவில் இல்லாததைக்
கவனித்தாள். பிறகு மணியைப்
பார்த்தவள் அது ஆறரையைக் காண்பிக்க வேகவேகமாக எழுந்து படுக்கையை ஒதுக்கி காலைக் கடன்களை எல்லாம் விக்னேஷ் வருவதற்குள் முடித்தாள்.

பின் விக்னேஷ் வர அவனிற்குக்
காஃபியைக் கொடுத்து விட்டுத் தனக்கும் எடுத்துக் கொண்டு உட்காரந்தாள். "காலைல என்ன செய்யனும்?" என்று கௌசி கேட்க "டிபனே ஏதாவது செய்.. மாமாவுக்கும் அம்மாவுக்கும் செஞ்சிறு.. நான் எப்படியும் ஹாஸ்பிடல் போயிட்டு
அப்புறம் தான் வளைகாப்பிற்குப்
போவோன்" என்றான்.

"சரி" என்றவள் வேலைகளை
ஆரம்பித்தாள்.

பின் அவன் ரெடியாகச் செல்ல வெளியே
யாரோ கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. யாரென்று சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்தவள் தன் தந்தையை விட வயதில் மூத்தவர் உள்ளே வருவதைப் பார்த்தாள். அவர் உரிமையாய் உள்ளே வர யாரோ தெரிந்தவர் தான் போல என்று நினைத்தவள் "வாங்க" என்று அழைத்து உட்கார வைத்தாள்.

"காஃபியா டீயா?" - கௌசி.

"இல்லமா.. எதுவும் வேண்டாம்.. விக்கா
எங்கே? ரெடி ஆயிட்டானா? என்று வினவ.. அவரின் விக்கா என்ற அழைப்பு அவளை ஏதோ செய்தது.

"இருங்க கூப்பிடறேன்" என்றவள்
விக்னேஷின் அறை முன் நின்று
கதவைத் தட்டினாள்.

கதவை அவன் திறக்க "உன்னைப் பார்க்க ஒரு தாத்தா வந்திருக்கிறார்" என்று சொல்ல "மகாலிங்கம் தாத்தா கௌசி" என்று அவளை அழைத்து வந்தவன் இருவருக்கும் இருவரையும் அறிமுகம் செய்தான்.

"வாங்க டிபன் ஆச்சு சாப்பிடலாம்" என்று
இருவரையும் கௌசி அழைக்க..
சாப்பிட்டு விட்டு தான் வந்தேன் என்ற
மகாலிங்கம் அய்யாவை வற்புறுத்தி ஒரு
இட்லியாவது என்று இருவரும் அழைத்து சாப்பிட வைத்தனர்.

சாப்பிட்ட பின் நியாபகம் வந்தவனாக
விக்னேஷ் "கௌசி சொல்ல மறந்துட்டேன் பார். வியா குட்டிக்குக் காய்ச்சலாம்.. ஜீவா உன்ன அங்கே வீட்டுக்கு வரச் சொல்றான். ஹாஸ்பிடல் போயிட்டு வந்துட்டாங்க. பட் நாங்க போயிட்டு வர வரைக்கும் நீ குட்டி
கூட இருந்து அவள பாத்துக்க" என்று
சொல்ல சரி என்றாள். பின் இருவரும்
சாப்பிட்டு முடித்த பின் கௌசி கிளம்பச்
சென்று இருபது நிமிடந்தில் தயாராகி
வந்தாள்.

"கிளம்பலாம்" என்று வந்து நிற்க
விக்னேஷ் காரை எடுத்தான். மகாலிங்கம் ஐயா ஏதோ பேசப்பேச அவரோடு இயல்பாகவே வந்தாள்.

பின் ஜீவா வீடு வந்ததும் மூவரும் இறங்க ஜீவா வெளியே வந்து மகாலிங்கம் ஐயாவை வரவேற்றான். மகாலிங்கம் ஐயா நல்ல பழக்கமே.. அதனால் அவருக்கும் சந்தியா வளைகாப்பிற்கு அழைப்பு இருந்தது.

உள்ளே மதியும் ஜீவாவும் தயாராக
இருந்தனர். "அத்தை எங்கே?" -கௌசி.

"அவங்க காலைல சீக்கரமே
கிளம்பிட்டாங்க.. நாங்க தான் பாப்பாக்கு
காய்ச்சல்ன்னு போக முடியல" என்று மதி
பதில் அளித்தாள்.

"நீங்க போயிட்டு வாங்க மதி.. நான்
பாத்துக்கறேன்.." என்றவள் "மெடிசன்
ஏதாவது இடையில குடுக்கணும்மா"
என்று கேட்டாள் கௌசி.

கௌசி கேட்க மதி டாக்டர் குடுத்த
மருந்தில் எதைக் குடுக்க வேண்டும்
என்று கௌசிக்குச் சொன்னாள்.
எல்லாவற்றையும் சரியாகக் கேட்டுக்
கொண்டவள் அனைவரையும் வழி
அனுப்பி வைத்தாள்.

மூவரையும் அனுப்பி விட்டு வந்த கௌசி
உள்ளே வியாஹா தூங்கிக்
கொண்டிருந்த அறைக்குச் சென்றாள்.
சுட்டியாய் இருப்பவள் இன்று காய்ச்சலில் அயர்ந்து படுத்திருப்பது கௌசிக்கு சற்று கனமாகத் தான் இருந்தது.

மெதுவாக அருகில் சென்று பெட்டின்
நுனியில் அமர்ந்தவள் அவளின் பாப் கட்
முடியைக் கோதி நெற்றியில் முத்தம்
இட்டாள். தூக்கத்தில் விலகி இருந்த
வியாஹாவின் போர்வையை நன்கு
இழுத்துப் போர்த்தி விட்டவள் அந்த
அறையிலேயே ஒரு சேரை எடுத்துப்
போட்டு உட்கார்ந்து போனை
நோண்டினாள்.

திடீரென போன் அடிக்க.. கட் செய்தவள்
வெளியே ஹாலிற்கு வந்து கவிதாவிற்கு கூப்பிட்டாள். ஆம் கவிதா தான்
கூப்பிட்டது. திரும்பி தோழிக்கு போனைப் போட்டாள்.

"ஹலோ கௌசி" - கவிதா.

"கவிதா" என்றவள் "சாரி கவி.. நான்
உனக்கு காலே பண்ணல.. தப்பா
நினைச்சுக்காதே" என்று மன்னிப்பைக்
கோரினாள்.

"அதெல்லாம் ஒன்னும் நான் நினைக்கல
கௌசி.. அப்பா எப்படி இருக்காரு?" என்று கேட்டாள்.

"இப்போ பரவாலையா இருக்காரு கவி..
ஆனா நல்ல இருந்தவர தான் நான் படுக்க வச்சிட்டேன்" என்ற கௌசியின் குரல் தழுதழுத்தது.

"கௌசி அழுகாத.. எல்லாமே விதி..
அப்பாக்கு நடந்ததுக்கு நீ காரணம்ன்னா
அப்போ உனக்கு நடந்ததுக்கு யார்
காரணம் சொல்லு.. எல்லாமே
சூழ்நிலைநால நடந்தது.. கூல் கௌசி"
என்று தோழியாய் கௌசியை சமாதானம் செய்தாள்.

"சரி எல்லோரும் என்ன சொல்றாங்க..
எல்லோரும் ஓகே தான உன்கிட்ட.. நல்லா பேசறாங்களா எப்பவும் போல" - கவிதா.

"எல்லாரும் நல்லா பேசறாங்க கவி..
ஆனா என்னால தான் பழைய மாதிரி ஆக முடியலை.. எல்லார் கிட்டையும் பேச ஒரு மாதிரி தயக்கமா இருக்கு.. ஏதோ என் உரிமையை இழந்த மாதிரி" என்று
தவிப்புடன் சொன்னாள் கௌசி.

"அதெல்லாம் போகப்போக சரி ஆயிரும்
கௌசி.. நீ உன் பேமிலி கூட சேந்ததே
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..
ஃப்ரீயா விடு" என்று கவி சொல்ல "ம்ம்"
என்று மட்டும் சொன்னாள் கௌசி.

திடீரென நியாபகம் வந்தவளாக "வீட்டுல
சொல்லிட்டியா கவிதா" என்றுக் கேட்டாள்.

"ம்ம்" - கவிதாவின் குரல் குழைந்தது.

"ஹே.. என்ன வெட்கப் படறிய கவிதா"
என்று கேட்டாள் கௌசி சிரிப்புடனே.

"வந்த சொன்னப்போ.. அம்மா
அடிச்சிட்டாங்க கௌசி.. அப்பா பேசவே
இல்லை.. அப்புறம் ஒருவழியா பேசி
ஒத்துக்க வச்சிட்டேன்.. இன்னும்
மூணு மாசத்துல கல்யாணம் " என்று
நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

"வாவ்.. சூப்பர்.. கங்கிராட்ஸ் கவி" என்று
கௌசி தன் சந்தோஷத்தைத் தெரிவிக்க
கவியோ "நான் எப்போ உனக்கு
சொல்றது கங்கிராட்ஸ்?" என்று கேட்க
முதலில் புரியாத கௌசிக்கு பின்
புரிந்தது.

"எனக்கு விக்னேஷிற்கு கல்யாணம் கவி" என்று வெற்றுக் குரலில் சொன்னாள்.

"அப்போ இன்னும் விக்னேஷிற்கு
கல்யாணம் ஆகலையா?" என்று அதிர்ச்சி மாறாமல் கேட்டாள் கவிதா.

"இல்லை" என்ற கௌசி.. நான்சியின் வேலை.. செந்தில் நாதன் மாமா இறப்பு..
விக்னேஷ் வேலையை விட்டது என
அனைத்தையும் கூறி முடித்தாள்.

"ஓ... சரி" என்ற கவிதா "பீ ஹாப்பி
கௌசி" என்றாள்.

"இல்ல கவி.. ஐம் நாட் அட் ஆல் ஹாப்பி..
குழப்பம் தான் அதிகம் ஆயிருக்கு"
என்றவள் "நம்ம ஒரு காலத்துல அழுது
ஏங்குன விஷயம்.. நாம் வாழ்க்கையவே
வெறுத்த பிறகு கிடைக்கும் போது
குழப்பம் தான் வருது.. சந்தோஷம்
வரதில்லை" என்றாள்.

"இல்ல கௌசி... நீயா வாழ்க்கைய
வெறுக்கல.. உன்ன அந்த குருங்கற
அரக்கன் வெறுக்க வச்சிட்டான்.. அவனே
போய் சேர்ந்திட்டான்.. நீ அவன மறந்திட்டு மாற ட்ரைப் பண்ணு" என்று அறிவுரை வழங்கினாள் கவிதா.

"சரி கௌசி... பிரபு சார் ரௌண்ட்ஸ்
வருகிறார்.. நான் வைக்கிறேன்"
என்றவள் போனை வைத்துவிட்டாள்
கவிதா.

போனை வைத்தவள் உள்ளே சொல்ல
வியாஹா நன்றாகத் தூங்கிக்
கொண்டிருந்தாள்.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் என்று எண்ணியவள்
சமையல் அறையில் கிடந்த சில
பாத்திரத்தை எடுத்துப் போட்டு கழுவ
ஆரம்பித்தாள். கவிதாவுடன் பேசியதை
நினைத்துக் கொண்டிருந்தாள். என்ன
தான் எடுத்துச் சொன்னாலும் அவள்
மனம் அதை ஏற்க மறுத்தது. இந்த நான்சி மட்டும் சரியாக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? என்று அவளை
சரமாரியாக மனதில் திட்டிக் கொண்டு
இருந்தாள் கௌசி.

அதற்குள் "சித்திதி..." என்ற குரலில்
திரும்பியவள் வியாஹா கண்ணைத்
துடைத்தபடி நின்றிருப்பதைக் கண்டாள்.

கையைக் கழுவிக் கொண்டு அருகில்
செல்ல வியாஹாவோ தன் இரு
கைகளைத் தூக்கி 'தூக்கு' என்றபடி
நின்றாள். அவளின் செயலை ரசித்தபடி
அவளைத் தூக்கிய கௌசி அவளின்
கழுத்தையும் நெற்றியையும் தொட்டுப்
பார்த்தாள். "வியா பாப்பாக்குக் காய்ச்சல் குறஞ்சிருச்சு கொஞ்சம்" என்று குழந்தையின் தலையில் லேசாக
முட்டினாள்.

"ஆனா.. இப்போ கொஞ்சம் சாப்பிட்டுட்டு
மருந்து குடிச்சா.. ஃபுல்லா சரி அயிரும்"
என்றாள் கௌசி அவளை இடுப்பில் வைத்தபடியே.

"சித்தி மருந்து கசக்கும்" - என்று
சிணுங்கினாள் வியாஹா.

"இல்லை சித்தி நீங்க மருந்து குடிச்சா
கொஞ்சம் சக்கரை தரேன்.. கசக்காது
ஓகேவா?" என்று வினவ "ம்அம்" என்று
மீண்டும் சிணுங்கியவள் தலையை
ஆட்டினாள்.

பின் வியாஹாவை உள்ளே கொண்டு
சென்று டைனிங் டேபிள் மேல்
குழந்தையை உட்கார வைத்தவள் மதி
சொல்லிய படி ரசம் சாதத்தை ஒரு கப்பில்தேவையான அளவு போட்டு ஸ்பூனுடன் வியாஹா அருகில் வந்தாள்.

பிறகு சித்தியும் மகளும் ஏதேதோ
கதைகள் பேச ரசம் சாதம் தன்னால்
உள்ளே சென்றது. சாப்பாட்டை ஊட்டி
விட்டபின் வியாஹாவின் வாயைத்
துடைத்து விட்டவள்.. மருந்தையும்
சக்கரை டப்பாவையும் எடுத்து வந்தாள்.
மதி சொன்ன அளவு டானிக்கை ஊற்றி
வியாஹா வாயில் ஊற்ற கசப்புத்
தாங்காதவள் அப்படியே துப்ப அது
அவளின் உடையிலும் கௌசி கையிலும்
விழுந்தது. மருந்தைத் தன் சித்தி மேல்
துப்பியதில் அரண்டு போய் கௌசியை
வியாஹா பார்க்க கௌசியோ முகம்
சுழிக்காமல் பக்கத்தில இருந்த டவலை
எடுத்து மருந்து சிந்திய இடத்தை எல்லாம் சுத்தம் செய்தாள். தன் அன்னையிடம் ஒரு தடவை இதே மாதிரி செய்து திட்டு வாங்கிய நினைவு வர.. பக்கத்தில வந்த கௌசியைத் தாவிக் கட்டி முத்தத்தைத் தந்தாள் வியாஹா.

"சித்தி.. நீங்க என்ன திட்டவே
மாட்டிங்களா.. நீங்க ரொம்ப குட் கேர்ள்"
என்று அவள் கன்னத்தோடு கன்னம்
வைத்துக் கொஞ்ச.. கௌசி அந்த
அன்பில் கரைந்தாள்.

"சரி.. நீங்களும் இப்போ சித்தி மருந்து
தருவேன் குடிக்கணும் சரியா" என்று
கேட்க அழகாய் தலையை ஆட்டினாள்
வியாஹா. இந்த முறை மருந்தைக்
குடித்துவிட்டு சிறிய அளவு சர்க்கரையை
அமைதியாக வாங்கிக் கொண்டாள்.

பின் சித்தியும் மகளும் ஹாலிற்கு வர
காலிங் பெல் அடித்தது. வியாவை
ஷோபாவில் உட்கார வைத்தவள் போய்க் கதவைத் திறந்தாள். கதவைத் திறந்த கௌசி அப்படியே நின்றுவிட்டாள். காரணம் நின்றிருந்தது மதியின் அண்ணன் சுதாகரன். வளைகாப்பில் யாருடனோ ஜீவா பேசிய போது குழந்தையை கௌசியிடம் விட்டுவிட்டு வந்திருப்பதைத் தெரிந்து கொண்டவன் அங்கே வீட்டிற்குக் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு இங்கே வந்திருக்கிறான்.

இவன் எதற்கு இங்கே வந்தான்? என்று
யோசித்த கௌசி.. சரி பாப்பாவைப்
பாக்க இருக்கும் என்று நினைத்தாள்.
"வாங்க" என்று வழியை விட்டு உள்ளே
விட்டாள் அவனை. வந்து உட்கார்ந்தவன்
கௌசியை மேல் இருந்து கீழ் வரை
அளக்க கௌசிக்கு ஆத்திரத்தைக் கிளப்பியது.

"காஃபியா டீயா? " என்று முடிந்த அளவு
பொறுமையை இழுத்து வைத்துக்
கேட்டாள்.

"என்ன கேட்டாலும் கிடைக்குமோ?" என்று அவன் இரட்டை வசனத்தில் குழந்தை முன்னாலேயேக் கேட்க கௌசி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சமையல் அறைக்குள் புகுந்து விட்டாள்.

"அறிவு கெட்ட ஜென்மம்.. பொண்ணுங்க
கிட்டயும் எப்படி பேசணும்ன்னு தெரியாது.. குழந்தை முன்னாடியும் எப்படி பேசுது பாரு.. தறுதலை.. ஆகாவலி.." என்றுத் திட்டிக் கொண்டே கடனே என்று ஒரு டீயைப் போட்டாள்.

பின் அவள் ட்ரெஸை யாரோ இழுப்பது
போலப் பதறித் திரும்ப வியாஹாதான்
அவள் சுடிதார் டாப்பை பிடித்திருந்தாள்.
அவளைத் தூக்கியவள் "தூக்கம் வருதா?" என்று கேட்க அவள் இல்லை எனத் தலை ஆட்டினாள்.

"சித்தி மாமாவை ஏன் உள்ளே விட்டீங்க..
எனக்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது..
அவரு என்னைத் திட்டிக்கிட்டே இருப்பாரு.. லூசு மாதிரி" என்று வியாஹா சொல்ல பொங்கி வந்த சிரிப்பை அடக்கினாள்.

"ஷ்ஷ்.. மெல்ல பேசு.. மாமாக்கு கேட்கும்"
என்று கௌசி எச்சரிக்க.. அவள் இடுப்பில் இருந்து கீழ் இறங்கி ஹாலிற்குச் சென்றது.

மீண்டும் இரண்டு நிமிடத்தில் தன்
துப்பட்டாவை இழுக்க "என்ன வியாக்குட்டி வேணும்.." என்று திரும்ப அவளின் துப்பட்டா சுதாகரன் கையில் இருந்தது.

"ஏய்.. என்னது இது.. மரியாதையா
துப்பட்டாவை விடு" என்று எச்சரித்து
துப்பட்டாவை இழுக்கப் பார்த்தாள் கௌசி. ஆனால் அவனின் பிடியோ இரும்பாய் அவளின் துப்பட்டாவை பற்றி இழுத்தது. கௌசி தயங்கவே இல்லை.. அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த டீயை கைப்பிடியில் எடுத்து அவன் மேல்
வீசிவிட்டாள்.

சுடசுட டீ தன் மேல் விழ அலறியவன்
அவளின் துப்பட்டாவில் இருந்து தன்னால் கையை எடுத்தான். அதற்குள் அவனின் சத்தத்தில் ஹாலில் டி.வி யில் மூழ்கி இருந்த வியாஹா உள்ளே ஓடி வந்தாள். டீயை மேலே ஊற்றிய கோபத்தில் அவன் கௌசியைப் பிடிக்க வர டீப் பாத்திரத்திலேயே கையை ஓங்கினாள் கௌசி.. ஆனால் அவள் முயற்சியை அவன் கையை வைத்துத் தடுத்து கௌசியின் கையில் இருந்த
பாத்திரத்தைப் பிடிங்கி தூக்கி எறிந்தான்.

பாத்திரத்தை எரிந்துவிட்டு கௌசியின்
தோளை அவன் முரட்டுத்தனமாகப் பற்ற
கௌசி தீச்சுட்டார் போல அவனிடம்
இருந்து விலகித் திமிறினாள். பின்
கையைப் பிடித்து இழுக்க கௌசி
சமையல் அறையின் ஜன்னலை
அழுத்தமாகப் பிடிக்க அவனின் பிடியும்
விடவில்லை.. கௌசியின் பிடியும்
ஜன்னல் கம்பியில் இருந்து தளரவில்லை.

இதை எல்லாம் பார்த்த வியாஹா
சுதாகரிடம் ஓடி வந்து அவனின் காலைச்
சுற்றிப் பிடித்து இழுக்க.. குழந்தையால்
அவனை அசைக்கக் கூட முடியவில்லை.
பின் வியாஹா அவன் காலைப் பிடித்து
நறநறவெனக் கடிக்க ஆரம்பிக்க அந்த
உசிப் பற்களின் கூர்மையில் வலி எடுக்க அப்படியே காலோடு குழந்தையை உதறித் தள்ளினான்.

வியாஹா சென்று கீழே விழ பதறிய
கௌசி "அய்யோ..." என்று அவளிடம்
செல்ல அதுதான் சமயம் என்று
கௌசியை இழுத்தான். "விடுடா.. கையை விடுடா" என்று கத்திய கௌசியின் கண்களில் கீழே விழுந்து வலியுடன் அழுத வியாஹாவே தெரிந்தாள். கடைசியில் தானும் அவனின் கையைப் பிடித்துக கடிக்க அவன் அவளை விட்டான்.
வியாஹாவிடம் ஓடிச் சென்று அவளைச்
சமாதானம் செய்ய வெறி வந்தவனாய்
சுதாகரன் கௌசியின் முடியைப் பிடிக்கப் போனான்.

வியாஹாவைத் தூக்கிய கௌசி
சுதாகரைக் கவனிக்கவில்லை. ஆனால்
திடீரென்று சுதாகரின் கத்தலில் கௌசி
திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க
விக்னேஷின் அடியில் அவன்
விழுந்திருந்தான். அவனின் சட்டைக் காலரை பிடித்துத் தூக்கிய விக்னேஷ்
அவனை சுவற்றில் தள்ளிக் காட்டுத்
தனமாய் அடிக்க கௌசி பயந்து போய்
விக்னேஷைத் தடுத்தாள்.

சீறிப் பாய்ந்து வரும் வெள்ளத்தை
மடையோ எதுவும் செய்ய முடியாது.
அதுபோல கௌசியால் விக்னேஷை
தடுக்க முடியவில்லை. விக்னேஷ் அடித்த
அடியில் அவன் முன் பல் உடைந்து ரத்தம் கசிய... "விக்னேஷ்..." என்று கௌசி கத்த அதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆனது.

கடைசியில் அவன் சட்டைக் காலரை
இழுத்து தரதரவென்று வெளியே
இழுத்துச் சென்ற விக்னேஷ்.. அவனை
வெளியே தள்ளி "இனிமேல் என்
கண்ணுல உன்ன பாத்த..
கொன்னுருவேன் டா பொறுக்கி நாயே..
பாஸ்டார்ட்" என்று கோபத்தின் உச்சியில்
கர்ஜிக்க அவன் பயந்து போனது
உண்மைதான்.

"நிறுத்துடா" - என்று பரமேஸ்வரியின்
குரல் ஆங்காரத்தில் கத்தியது
விக்னேஷைப் பார்த்து.

வியாஹாவின் உடல் நலத்தைக் காரணம் கொண்டே மதியும் ஜீவாவும் எல்லா முறைகளையும் முடித்து விட்டுக்
மகாலிங்கம் அய்யாவைக் கூட்டிக்
கொண்டு கிளம்பினர். கூடவே அங்கு
விஷேசத்திற்கு வந்த பரமேஸ்வரியும்
முருகானந்தமும் பேத்தியைப் பார்க்க
மகள் மருமகனோடு கிளம்பிவிட்டனர்.
வீட்டிற்கு அவர்கள் வந்து இறங்கவும்
விக்னேஷ் சுதாகரனை வெளியே
தரதரவென்று இழுத்து வந்து வெளியே
தள்ளவும் சரியாக இருந்தது.

எல்லாரும் இறங்க விக்னேஷ் கர்ஜித்த
வார்த்தை அனைவரின் காதுகளிலும்
விழுந்தது. அந்தக் காலத்து டிகிரி
என்பதால் பரமேஸ்வரிக்கு விக்னேஷ்
சொன்ன ஆங்கில கெட்ட வார்த்தைகள் புரியாமல் இல்லை. அந்தக் கோபத்தில்
"நிறுத்துடா" என்று கத்தினார். அதற்கு
மதி "அம்மா" என்று கூப்பிடதையும் அவள் கவனிக்கவில்லை.

அவர் கத்தியதில் கௌசியும் வியாஹைத் தூக்கிக் கொண்டு அவசரமாக வெளியே வந்தாள். விக்னேஷ் ஏற்கனவே பரமேஸ்வரி மீது ஒரு ஓரத்தில் கோபத்தில் இருந்தான் கௌசியைப் பேசியதற்கு (சந்தியாவின் மீதும் கோபம் தான்.. வளைகாப்பை சீக்கிரம் முடித்துக் கொண்டு அவன் வந்ததிற்கு அதுவும் ஒரு காரணம்). அந்தக் கோபம் இப்போது மதியின் அம்மா மேல் இப்போது வெளியே வந்தது.

"இவனை இப்போதே கூட்டிட்டு
போயிருங்க.. இன்னும் கொஞ்சம் நேரம்
இவன் இங்க இருந்தா அவன அடிச்சே
கொன்றுவேன்" என்று ஆத்திரமாய் அதே சமயம் அழுத்தமாய் பரமேஸ்வரியைப் பார்த்துச் சொன்னான்.

"நான் ஏன்டா என் மகனைக் கூட்டிட்டு
போகணும்.. இது என் பொண்ணு வீடு"
என்று அவர் ஒருமையில் பேச
விக்னேஷிற்கு அடக்க முடியாத ஆத்திரம் வந்தது.

விஷயம் பெரிசா போவதை உணர்ந்த
கௌசி விக்னேஷிடம் வந்து "விக்னேஷ்..
போகலாம்" என்று சொல்ல கௌசியின்
கையில் இருந்த வியாஹா இறங்கி தன்
அப்பாவான ஜீவாவிடம் சென்று
ஒன்றினாள்.

"எல்லாம் இவ வந்துட்டால அதான் இப்படி மறுபடியும் கேடா இருக்கு" என்று
கௌசியின் பக்கம் பரமேஸ்வரி
விஷத்தைக் கக்கினார்.

அதுவரை மதிக்காகவும்
ஜீவாவிற்காகவும் பிடித்த பொறுமையை
பறக்க விட்டான் விக்னேஷ். "நிறுத்துங்க.. பொம்பளைன்னு பாத்தா சும்மா பேசிட்டே போறீங்க.. இதே வேற எவனாவது பேசியிருந்தா இன்னேரம் கழுத்தில் காலை வச்சிருப்பேன்.. ஏதோ மதியோட அம்மாங்கறனால தான் உங்களுக்கு மரியாதை தரேன்" என்று தன் ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்தான்.

"என்னடா என்ன அடக்கறே.. இவளை
சொன்னோனே உனக்கு ரோஷம் வருதா. இவ ராசி கெட்டவ தான்.. கல்யாணம் ஆன நாலு நாள்ல புருசன முழுங்குனவ" என்று கௌசியை பரமேஸ்வரி வார்த்தைகளால் கொட்டினார்.

"அம்மா" "பரமேஸ்வரி" என்று
பரமேஸ்வரியின் மகள் மதியும் கணவர்
முருகானந்தமும் ஒருசேர அதட்டினர்.

"ஆமா இவள சொன்னா எனக்கு ரோஷம்
தான் வரும். சின்ன வயசில இருந்து என்
கூட வளந்தவ.. நாளைல இருந்து என்
பொண்டாட்டி" என்று கௌசியின்
தோளில் கையைப் போட்டு கம்பீரமாய்ச்
சொன்னவன் "அப்புறம் என்ன
சொன்னீங்க ராசி கெட்டவளா.. இவ என்
மாமா சொலற் மாதிரி எங்க வீட்டு
மகாலட்சுமி.. இவ வந்த நேரம் எனக்கு
நிறைய ஆர்டர்ஸ்.. அப்புறம் இயற்கை
விவசாயம் பற்றிய கேஸ் எல்லாம்
முடிஞ்சிருச்சு.." என்று அவரின் வாயை
மூட வைத்தான்.

"அப்புச்சி" என்று முருகானந்தத்தை
வியாஹா அழைக்க எல்லோரும் அவளின் பக்கம் திரும்பினர்.

"அப்புச்சி.. மாமா வந்து சித்திய கையைப் பிடிச்சு இழுத்தாங்க.. சித்தி
அடிச்சிட்டாங்க.. என்னையும் உதச்சுடாங்க அப்புச்சி.. அதான் சித்தா மாமாவை அடிச்சாரு" என்ற வியாஹா "இங்க வலிக்கிது" என்று தன் கையின்
முட்டியைக் காட்டி அழுதது அந்தப் பிஞ்சு.

முருகானந்தம் தன் மகனிடம்
திரும்புவதற்குள் மதியின் கரம் தன்
அண்ணனின் கன்னத்தைப் பதம்
பார்த்தது. "ச்சி நீயெல்லாம் ஒரு
அண்ணனா.. நான் உனக்கு தங்கச்சினா.. கௌசியும் உனக்குத் தங்கச்சி முறைதான் தெரியுமா.. ஒரு
பொண்ணுகிட்ட எப்படி நடந்திருக்க பாரு
நீ.. அதுவும் கொழந்த முன்னாடி.. என்
கண்ணு முன்னாடி நிக்காதே.. வெளிய
போடா" என்று மதி சத்தம் போட்டாள்.

"மதிக் கண்ணு.. நீ குழந்தையைத்
தூக்கிட்டு உள்ள போ" என்று மகாலிங்கம் அய்யா அப்போது தான் வாயைத் திறந்தார். குழந்தையை அந்த இடத்தில் இருக்க வேண்டாம் என்று எண்ணிய மதி வியாஹாவைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

"நாங்க கிளம்பறோம்" என்ற
முருகானந்தம் மனைவியை மட்டும்
கையைப் பிடித்து இழுக்க சுதாகரனும்
வருவதைக் கண்டவர் "பரமேஸ்வரி நீ
மட்டும் வா" என்றார்.

"ஏங்க அவன்..." என்று மனைவி ஏதோ
ஆரம்பிக்க "இவன் உண்மையாவே
எனக்கு தான் பிறந்தானா பரமேஸ்வரி" என்று கேட்க "என்ன வார்த்தை
கேக்கறீங்க" என்ற பரமேஸ்வரி
கண்ணீரைச் சிந்தினார். "அவன் எனக்கு
பொறந்தவனா இருந்தா.. அவன
இங்கேயே விட்டுட்டு வா.. என் ரத்தம்
கொஞ்சம் ஆவது உடம்பில் ஓடினால்
திருந்தி என் காசில் திங்காமல் வாழட்டும்" என்று அவர் சொல்ல பரமேஸ்வரி வாயை மூடிக் கொண்டார்.

அவர் முன்னால் நடக்க பரமேஸ்வரி
கணவனின் பின்னாலேயே சென்றார்.
கொஞ்ச தூரம் தான் இருக்கும்
விக்னேஷின்அழைப்பில் திரும்பினார்
முருகானந்தம். "நாளைக்கு மருதமலைல கல்யாணம்.. கண்டிப்பா வந்திருங்க
மாமா" என்று விக்னேஷ் சொல்ல
தலையசைப்புடன் அவர் சென்றார்.
 

New Threads

Top Bottom