சரண்யா வெங்கட் எழுத்து மாயா யட்சிணி
மாயம் 1
19 நூற்றாண்டு.....
மஹேந்திரபுரி.....
மஹிந்திரபுரி ஒரு புறம் கடலும் மறுபுறம் மலைகளாலும் சூழ்ந்து இருக்கும் ஒரு வணிக நகரம், அந்த நாட்டின் மன்னன் அனல் விழியன் சிறப்பான முறையில் அதனை ஆட்சி செய்து வந்தான்,
ஆனால் அவன் முன்னோர்கள் செய்த ஒரு பிழையால் அவனின் மொத்த சாம்ராச்சியமும்
கடந்த இரு நூறு ஆண்டுகளாக ஒரு பெண்ணினால் புற முதுகு இட்டு ஓட வேண்டிய நிலையில் இருந்தது அவனை பொறுத்த வரை வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.
இப்பொழுது அந்த ஆபத்து இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் தனது அரண்மனையின் அடி ஆழத்தில் பெண் உருவில் உறங்கும் பேராபத்து வெளியில் வந்தாள் அவனும் அவன் சாம்ராச்சியமும் ஒரே நொடியில் இடிந்து தரைமட்டம் ஆகிவிடும்.
அவனின் முன்னோர்கள் செய்த தவறு ஒன்று தான் தங்களின் இந்த நிலைக்கு காரணம் என்பதை அவன் மறக்கவும் வில்லை, அதற்காக தானே ஒரு ஒரு நூற்றாண்டின் பொழுதும் தங்களது குடும்பத்தில் ஒரு ஆண் மகனை பலி கொடுத்து வருவது, அவ்வாறு பலி கொடுக்க தேர்வு செய்ய பட்ட ஆண் மகன் குடும்ப வாழ்வில் ஈடுபடாமல், நாடு நகரம் முற்றும் துறந்து அரண்மனையில் இருந்தாலும் துறவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும், எந்த நேரத்திலும் தனது வம்சத்திற்கும் நாட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்படும் எனில் தனது உயிரனை துச்சமாக மதித்து உயிர் துறக்க ஆயுதமாக இருக்க வேண்டும்.
அனல் விழியனுக்கு இருக்கும் ஒரே கவலை தனது ஆட்சி காலத்திற்கு பிறகு யார் இந்த சாம்ராச்சியதையும் நாட்டையும் கட்டி ஆள்வது என்பது தான், அவரின் ஒரே மகன் கனல் விழியன் இருந்தாலும் அவனுக்கு பிறகு பலி கொண்டு வேண்டிய ஆண் மகவு யாரும் இல்லை என்பதே அவர் கவலை, தனது ஆட்சி காலத்தில் ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் உயிர் அளிக்க தனது தம்பி ஒளிர்மேனி இருக்கிறான், ஆனால் தன் மறைவிற்கு பிறகு யார் இந்த நாட்டை காப்பார்கள், தனது மகன் பலி ஆக நேர்ந்தால் அரசை ஏற்று நடத்த யார் உள்ளார்கள், தனது வம்சம், அரசும் தன்னுடன் முடிந்து விடுமா என்று உள்ளத்தில் கலக்கம் உற்றார் அனல் விழியன். ஆண்டவன் அவருக்கு ஒரே ஒரு மகனை பெற்று எடுக்கும் வரத்தை மட்டும் அளித்தார் போல கனல் விழியனுக்கு பிறகு எவ்வளவு முயன்றும், யாகங்கள், ஓமங்கள் செய்தும் அவர்களுக்கு மற்றொரு புத்திர பாக்கியம் கிட்டவில்லை.
நாளை தனது மகன் குருகுல கல்வி முடிந்து நாட்டிற்கு மீண்டும் வருவதால் அவனை வரவேற்க தேவையான ஏற்பாட்டை செய்ய தனது மனகலகத்தை, மூடி ராணியிடம் மறைத்து உள்ளத்தில் கலகத்தை முடிவைத்து புறப்பட்டார்.
அதிகாலை வேலை கான குயில்கள் நாதம் இசைக்க, புல் இனங்கள் இரையை தேடி வானுயர பறக்க, சூரியனின் கதிர்கள் புவியினை ஒரு புறகமாக தழுவியும் தழுவாத அந்த ஏகாந்த வேலைதனில் கனல் விழியனுக்கு புரவி மஹேந்திர புரியின் எல்லையினை வந்து அடைந்தது, அவன் வருகையை அனைவரும் தெரிவுக்கும் விதமாக மங்கள வாத்தியங்கள் முழங்க, நாட்டு மக்கள் அவர்களின் இல்லங்களில் இருத்து பூ மழை சொரிய வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு என, சீறி வரும் காளை என தனது புரவியில் வந்தான்.
6 ஆடியில், ஆண்மையின் மறு பதிப்பாய், ராஜகளையுடன், முகத்தில் மென் நகையுடன், உடலில் பொன் நகையினை தரித்து, தினவெடுத்த தோள்களுடன், எதிரிகளை வேட்டை அடியும் வெறியுடன், காணும் கன்னிகை எல்லாம் மயக்கும் காதலில் தள்ளும் பொன்னிற விழிகளுடன், கற்றை கூந்தல் தினவெடுத்த தோள்களில் புரள, ஒரு கையில் வாளுடன், மற்றொரு கையில் தனது அங்காவஸ்திரத்தை ஏந்தி அசரவையில் நுழையும் மகனை கண்ட அனல் விழியன் உவகை கொண்டார், அசரவையில் உள்ளே நுழைத்த கனல் விழியன் உலகை ஆளும் ஈசனை அடிபணிந்து வணங்கி, பின்பு தான் இந்த உலகிற்கு வர காரணமான, தன் உலகம் ஆன தாய் தந்தையின் பாதம் பணித்து தொழுத்தான்.
கனல் விழியன் நாட்டின் எல்லையில் உள்ளே நுழைந்த அதே வினாடி அந்த நாட்டின் அரசவை கட்டிடம் அட ஆரம்பித்தது, அரண்மனையின் அடி ஆழத்தில் இவர்களால் சிறைபிடிக்க பட்ட ஒரு உயிர் பழி வாங்க வழி தேடி, அவளை அடைத்த சிறையில் இருந்து வெளி வர துடித்து கொண்டு இருந்தது.
அவனை உச்சிமுகர்ந்த அனல் விழியான் மின்னொளி தேவியும் அவனின் நெற்றியில் முத்தம் அளித்த, பயண களைப்பு நீங்க ஒய்வு எடுக்கும் படி அனுப்பி வைத்தனர்.
இவர்களின் இந்த மகிழ்ச்சியின் ஆயிட்கலாம் எது வரை என்பது இந்த உலகை ஆளும் பரம்பொருள் மட்டுமே அறிவான்.....
யட்சினி வருவாள்.....
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
மாயம் 1
19 நூற்றாண்டு.....
மஹேந்திரபுரி.....
மஹிந்திரபுரி ஒரு புறம் கடலும் மறுபுறம் மலைகளாலும் சூழ்ந்து இருக்கும் ஒரு வணிக நகரம், அந்த நாட்டின் மன்னன் அனல் விழியன் சிறப்பான முறையில் அதனை ஆட்சி செய்து வந்தான்,
ஆனால் அவன் முன்னோர்கள் செய்த ஒரு பிழையால் அவனின் மொத்த சாம்ராச்சியமும்
கடந்த இரு நூறு ஆண்டுகளாக ஒரு பெண்ணினால் புற முதுகு இட்டு ஓட வேண்டிய நிலையில் இருந்தது அவனை பொறுத்த வரை வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.
இப்பொழுது அந்த ஆபத்து இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் தனது அரண்மனையின் அடி ஆழத்தில் பெண் உருவில் உறங்கும் பேராபத்து வெளியில் வந்தாள் அவனும் அவன் சாம்ராச்சியமும் ஒரே நொடியில் இடிந்து தரைமட்டம் ஆகிவிடும்.
அவனின் முன்னோர்கள் செய்த தவறு ஒன்று தான் தங்களின் இந்த நிலைக்கு காரணம் என்பதை அவன் மறக்கவும் வில்லை, அதற்காக தானே ஒரு ஒரு நூற்றாண்டின் பொழுதும் தங்களது குடும்பத்தில் ஒரு ஆண் மகனை பலி கொடுத்து வருவது, அவ்வாறு பலி கொடுக்க தேர்வு செய்ய பட்ட ஆண் மகன் குடும்ப வாழ்வில் ஈடுபடாமல், நாடு நகரம் முற்றும் துறந்து அரண்மனையில் இருந்தாலும் துறவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும், எந்த நேரத்திலும் தனது வம்சத்திற்கும் நாட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்படும் எனில் தனது உயிரனை துச்சமாக மதித்து உயிர் துறக்க ஆயுதமாக இருக்க வேண்டும்.
அனல் விழியனுக்கு இருக்கும் ஒரே கவலை தனது ஆட்சி காலத்திற்கு பிறகு யார் இந்த சாம்ராச்சியதையும் நாட்டையும் கட்டி ஆள்வது என்பது தான், அவரின் ஒரே மகன் கனல் விழியன் இருந்தாலும் அவனுக்கு பிறகு பலி கொண்டு வேண்டிய ஆண் மகவு யாரும் இல்லை என்பதே அவர் கவலை, தனது ஆட்சி காலத்தில் ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் உயிர் அளிக்க தனது தம்பி ஒளிர்மேனி இருக்கிறான், ஆனால் தன் மறைவிற்கு பிறகு யார் இந்த நாட்டை காப்பார்கள், தனது மகன் பலி ஆக நேர்ந்தால் அரசை ஏற்று நடத்த யார் உள்ளார்கள், தனது வம்சம், அரசும் தன்னுடன் முடிந்து விடுமா என்று உள்ளத்தில் கலக்கம் உற்றார் அனல் விழியன். ஆண்டவன் அவருக்கு ஒரே ஒரு மகனை பெற்று எடுக்கும் வரத்தை மட்டும் அளித்தார் போல கனல் விழியனுக்கு பிறகு எவ்வளவு முயன்றும், யாகங்கள், ஓமங்கள் செய்தும் அவர்களுக்கு மற்றொரு புத்திர பாக்கியம் கிட்டவில்லை.
நாளை தனது மகன் குருகுல கல்வி முடிந்து நாட்டிற்கு மீண்டும் வருவதால் அவனை வரவேற்க தேவையான ஏற்பாட்டை செய்ய தனது மனகலகத்தை, மூடி ராணியிடம் மறைத்து உள்ளத்தில் கலகத்தை முடிவைத்து புறப்பட்டார்.
அதிகாலை வேலை கான குயில்கள் நாதம் இசைக்க, புல் இனங்கள் இரையை தேடி வானுயர பறக்க, சூரியனின் கதிர்கள் புவியினை ஒரு புறகமாக தழுவியும் தழுவாத அந்த ஏகாந்த வேலைதனில் கனல் விழியனுக்கு புரவி மஹேந்திர புரியின் எல்லையினை வந்து அடைந்தது, அவன் வருகையை அனைவரும் தெரிவுக்கும் விதமாக மங்கள வாத்தியங்கள் முழங்க, நாட்டு மக்கள் அவர்களின் இல்லங்களில் இருத்து பூ மழை சொரிய வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு என, சீறி வரும் காளை என தனது புரவியில் வந்தான்.
6 ஆடியில், ஆண்மையின் மறு பதிப்பாய், ராஜகளையுடன், முகத்தில் மென் நகையுடன், உடலில் பொன் நகையினை தரித்து, தினவெடுத்த தோள்களுடன், எதிரிகளை வேட்டை அடியும் வெறியுடன், காணும் கன்னிகை எல்லாம் மயக்கும் காதலில் தள்ளும் பொன்னிற விழிகளுடன், கற்றை கூந்தல் தினவெடுத்த தோள்களில் புரள, ஒரு கையில் வாளுடன், மற்றொரு கையில் தனது அங்காவஸ்திரத்தை ஏந்தி அசரவையில் நுழையும் மகனை கண்ட அனல் விழியன் உவகை கொண்டார், அசரவையில் உள்ளே நுழைத்த கனல் விழியன் உலகை ஆளும் ஈசனை அடிபணிந்து வணங்கி, பின்பு தான் இந்த உலகிற்கு வர காரணமான, தன் உலகம் ஆன தாய் தந்தையின் பாதம் பணித்து தொழுத்தான்.
கனல் விழியன் நாட்டின் எல்லையில் உள்ளே நுழைந்த அதே வினாடி அந்த நாட்டின் அரசவை கட்டிடம் அட ஆரம்பித்தது, அரண்மனையின் அடி ஆழத்தில் இவர்களால் சிறைபிடிக்க பட்ட ஒரு உயிர் பழி வாங்க வழி தேடி, அவளை அடைத்த சிறையில் இருந்து வெளி வர துடித்து கொண்டு இருந்தது.
அவனை உச்சிமுகர்ந்த அனல் விழியான் மின்னொளி தேவியும் அவனின் நெற்றியில் முத்தம் அளித்த, பயண களைப்பு நீங்க ஒய்வு எடுக்கும் படி அனுப்பி வைத்தனர்.
இவர்களின் இந்த மகிழ்ச்சியின் ஆயிட்கலாம் எது வரை என்பது இந்த உலகை ஆளும் பரம்பொருள் மட்டுமே அறிவான்.....
யட்சினி வருவாள்.....
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்