Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மிருதனின் அசுரம் - ரிலே ஸ்டோரி

Status
Not open for further replies.

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ச.சக்திஸ்ரீ


அத்தியாயம் - 9

பூம்பொழில் கிராமத்தை நெருங்க இன்னு சில வினாடிகளே இருந்தனர்.. அவர்கள் கார் பூம்பொழி எல்லையை நெருங்கவே பலமான சுறவெளி காற்று அடித்தது புழுதிகள் கண்ணாடியை மறைக்க அவ்வூர் எல்லையை தாண்டி கிராமத்திற்கு செல்ல முடியாமல் காரும் முன்னேற மாட்டேன் என்று அடம்பிடித்தது...

"நா போய் பாக்குறே நீங்க ரெண்டு பேரும் எக்காரணம் கொண்டும் கீழே இறங்காதீங்க" என்று கூறினான் மகேஷ்.... மகேஷ் காரின் முன் பகுதியை தூக்கி பழுது பார்க்க காற்று சூடான நெருப்பு போல் சூழல் போன்று அவனை நெருக்கியது.....

"மகேஷ் திரும்பி பாருஉஉஉஉஉ" என்று கத்தினாள் அனு.... "கனநிமிடத்தில் திரும்பி தாயத்து கட்டிய கையை முன்னாடி நீட்டினான் அதுலிருந்து வெளிப்பட சக்தி அந்த நெருப்பு சுழல் காற்றை ஒன்றுமில்லாமல் செய்து அழித்து விட்டது"... அதன் பிறகு மகேஷ் காரில் ஏறி அமர அனு அழுதுகொண்டே மகேஷின் கையை பிடித்து "உனக்கு ஒன்னு ஆகலலே" என்று கேட்டாள்...

"இல்ல டா எனக்கு ஒன்னு ஆகலலே, இன்னும் நிக்க....நிக்க ஆபத்து வந்துட்டே இருக்கும்" என்று கூறினான் மகேஷ்... கார் ஊருக்குள் செல்ல அவர்கள் மூவருக்கும் ஏனோ இனம் புரியாத உணர்வு தோன்றியது... பறவை தன் கூட்டை தேடி வந்த உணர்வு அவளுக்கு ஏற்பட்டது...

"எனக்கு இந்த ஊருக்குள்ள வந்ததும் ஏதோ இனம்புரியாத உணர்வு ஏற்படுது" என்று விக்ரம் கூறினான்...

"எனக்கு தா" என்று மற்ற இருவரும் இணைந்து கூறினார்...

மூன்று பேரும் காரை விட்டு இறங்கி வெளியில் வந்து நின்றனர் அந்த ஊர் பாதி சுடுகாடு போன்று காட்சி அளித்தது.... வயல்வெளிகள் அனைத்தும் வறண்டு போய் கிடந்தனர்... அந்த மக்கள் முகங்களில் புன்னகை இல்லை.... நாளை நான் உயிரோட இருப்பேனா என்று தெரியாது போல் பாதி உயிர் போன மாதிரியான உடல்கள் ஓட்டி பார்க்கவே பாவமாக இருந்தனர்...

ஓர் பஸ் ஊருக்குள் வந்தது அதிலிருந்து அமிர்தா இறங்க இங்கு இவர்கள் மூவரும் அவளை முறைப்பது போல் பார்த்தனர்.... அமிர்தா இவர்களை கண்டு சற்று பயந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் இவர்கள் அருகில் வந்தாள்...

"எதுக்கு அமிர்தா எங்க கிட்ட சொல்லாம நீ மட்டும் இங்க வந்த" என்று கோவமாக கேட்டாள் அனு..

"இது என்னோட பிரச்சனை, இத நா தான் தனியா பார்த்துக்கன்னும்.. என்னால தா நீங்களும் மாட்டிக்ககூடாதுன்னு தான் உங்க கிட்ட சொல்லாம வந்தே" என்று விளக்கம் கொடுத்தாள்...

"என்ன பேசுறேன்னு புரிஞ்சு தா பேசுறீயா, இது ஒன்னும் உன்னோட பிரச்சனை இல்ல இது நம்மளோட பிரச்சினை.. அதுனால தா கபீர்பாய் எங்களுக்கு தாயத்து தந்து அந்த பெட்டிய தேடி அனுப்புனாரு... அப்போறோம் எத வச்சு இது உன்னோட பிரச்சனைன்னு சொல்லுற" சற்று காட்டமாகவே கேட்டான் மகேஷ்..

"இது! என் பாட்டியோட ஊரு"என்று தயங்கி மெதுவாக கூறினாள்.. "என்ன" என்று ஆச்சரியமாக பார்த்தனர் மற்ற மூவரும்.. விக்ரம் "அதுக்கும் இதுக்கு இந்த பிரச்சினைக்கு என்ன சம்மந்தம்"

அமிர்தா"ஒரு முறை என்னை வளர்த்தவங்க சொல்லி இருந்தாங்க இது என் ஊருனு என் பாட்டியை தேடி வந்தேன். ஒரு பெரியவர்தான் சொன்னங்க என் பாட்டி ஊர் விட்டு ஊர் போயிட்டாங்கனு நானும் அவசர வேலைனால வந்துட்டேன்"

மகேஷ்"சரி விடு இது நம்ம உயிர் போராட்டம் அதனால, ஒன்னாதான் இருக்கணும் சரியா"

விக்ரம்"வாங்க காருல ஏறுங்க"

விக்ரம்"அந்த காட்டுக்கு எப்படி போறது அமிர்தா"

அமிர்தா''தெரியாது விக்ரம்
யாருகிட்டாவது கேட்போம்"

எதிரில் ஒரு பெரியவர் போகிறார்

மகேஷ் "ஹாய் ஹாலோ"

அமிர்தா"டேய் லூசு"

அனு"ஐயா "

பெரியவர்"சொல்லுங்க பா"

அனு"நாங்க இந்த ஊருக்கு புதுசு இங்க ஒரு காடு இருக்குல அங்க போக வழி சொல்லுறீங்களா."

பெரியவர்"அங்கே எதுக்கு பா" கேட்கும் போதே வேர்க்கிறது அவருக்கு

அமிர்தா"என் பாட்டி வீடு அங்க இருக்கு தாத்தா அதுக்கு தான்"

பெரியவர்"ஒ சரிபா அது ஒரு அமானுஷ்யம் நிறைஞ்ச காடு அங்க கெட்ட எண்ணத்தோட யாராவது போன யாரும் உயிரோட இருக்க மாட்டாங்க ஆம்பிளைங்க யாரும் போகக்கூடாது."

விக்ரம்"ஐயா பெரியவரே வழிய மட்டும் சொல்லுங்க "

வழி சொன்னதும்" நன்றி ஐயா" எனக் கூறி காரில் ஏறி காட்டை நோக்கி செல்கிறார்கள்

காரில் போகும் அவர்களை கண்டு பெரியவர் உருவில் இருந்த அகோரியின் இதழில் புன்னகை மலருகிறது. அப்புன்னகையின் அர்த்தம் அவருக்கே வெளிச்சம்

மகேஷ் "பாட்டிய விட முக்கியமான வேலையா?"

அமிர்தா "ஆமாடா"

மகேஷ்"ஏன் நீ போகலைன்னா காற்று கூட அசையாதோ"

விக்ரம்"டேய் எந்த நேரத்துல டா வாய வச்ச வெளில பாரு"

மகேஷ் எட்டி பார்க்கிறான்

ராட்சத மரங்கள். மரங்களிலிருந்து உதிரும் இலைகள் கூட அசையாமல் நிற்கிறது. அமைதியாக இருக்கிறது காடே திடீரென்று காடே அதிரும் படியாக காதைக் கிழிக்கக் கூடிய சத்தம் கேட்கிறது.

திடீரென்று வண்டி ஒரு குலுங்கு குலுங்கி ஒரு பெரும் சத்தத்தோடு நிற்கிறது.

கார் காட்டு பகுதியில் செல்லும் போது பாதியில் நின்று விட்டது.. "அட இந்த கார் எத்தனை வாட்டி தா நிக்கும்... ஏன் மகேஷ் இந்த ஓட்ட காரை எடுத்துட்டு வந்தே" என்று கேட்டான் விக்ரம்...

"அடிங்க! இது என் லக்கி கார் இத போய் குறை சொல்லுற"....... "ஏய் ரெண்டு பேரும் பேசி நேரம் வெஸ்ட் ஆக்காமல் ஒழுங்கா போய் காரை சரி பண்ணுங்க" என்று கூறினாள் அமிர்தா...

இருவரும் இறங்கி கார் பழுது பார்க்க மகேஷ் " விக்ரம் எனக்கு சூச்சு வருது" என்று சுண்டுவிரலை காட்டினான்.. விக்ரம் "ஒரு நேரம் காலம் பார்க்காமல வரும், நாம இருக்க பிரச்சினைக்கு" என்று அழுத்து கொண்டான்...

"ஏன்டா! அதுக்கு எப்படி தெரியும் இது நல்ல நேரம் கெட்ட நேரமன்னு"என்று திட்டி விட்டு ஒரு மரத்தின் அருகே செல்ல.. அப்போது தான் அவன் கனவு ஞாபகம் வந்தது அவனுக்கு.. "ஐயோ! என்று விக்ரம் கத்து முன்னாடி... மகேஷ் கத்த ஆரம்பித்தான்...

அவன் கத்தியதில் பயந்து மூன்று பேரும் அவனை நேக்கி ஓட அனு கடைசியாக வந்ததால் அவள் காலை நிலத்திற்கு அடியிலிருந்து ஒரு வேர் பிடித்து இழுத்து அவளை பூமிகுள் இழுத்து கொண்டே செல்ல... அனு பயத்தில் கத்துவற்குமுன் அந்த வேர் அவள் வாயை முடியது.... அனு தன் மொத்த சக்தியை கொண்டு "விக்...ரம்" என்று காடே அதிர கத்தினாள்...

விக்ரம் திரும்பி அனுவின் நிலையை பார்த்து அதிர்ந்து போய் அவள் அருகில் ஓடிவந்தான்... அவளை பூமிக்குள் இழுத்து செல்லும் வேரின் மேல் தன் தயத்து கட்டிய கயிறு படுமாறு வைக்க அது கரிந்து போனது அவ்வேர்கள்..... அதேபோல் அனுவும் செய்ய அதிலுருந்து தப்பித்து கொண்டாள்...

அங்கே மகேஷ் நிலைமையும் அதுவே அவனின் கால்களை ஒரு ராட்சச பூவின் வாய்க்குள் இருந்து ஒருவேர் வந்து அவனின் காலை இழுத்துக்கொண்டு சென்றது... அந்த பூவின் இதழ்களை பற்கள் போன்று அவனை கடித்து குத்துவதற்கு ஏதுவாக வாய்யை முழுவதுமா பிளந்து வைத்து இருந்தது... அமிர்தா வேகமா ஓடி வந்து தன் கையில் இருந்த தாயத்தை அந்த வேரின் மீதுபடுவது போல் வைக்க அவ்வேரின் அடிப்பகுதியிலிருந்து அப்பூ வரை எரிந்து பஸ்பமாகியது....

அதன் பிறகு நால்வரும் ஒரே இடத்தில் நின்று ... "இங்க பாருங்க இன்னும் நாம கவனமாக இருக்கனும் இன்னும் நமக்கு நிறைய ஆபத்து வந்துட்டே இருக்கும் கவனாமா இருங்க... யாரும் தனித்தனியா பிரிந்து போக கூடாது" என்று கூறினான் மகேஷ்...

நால்வரும் நடந்து ஒன்றாக சென்றனர்.. அமிர்தா "நாம அமானுஷ்ய காட்டுக்குள்ள வந்தாச்சு அடுத்தது மிருதன் ஆபத்துல இருந்து தப்புச்சாச்சு அடுத்து அந்த பாறைய தானே கண்டு பிடிக்கன்னும்"....

விக்ரம் "எனக்கு ஒன்னு நாம மிருதன் கிட்ட தப்பிக்கலன்னு தா தோன்னுது இன்னும் தா நமக்கு ஆபத்து நிறைய இருக்குன்னு தோன்னுது.... எல்லாரும் கவனமா இருங்க... அப்றோம் சீக்கிரம் அந்த பாறை இருக்க இடத்த கண்டுபிடிக்கன்னும்"

மகேஷ் "ஆமா! விக்ரம் சொல்லுறது தா எனக்கு தோன்னுது இது தா தொடக்கமா இருக்கன்னும்"

நால்வரும் சேர்ந்து நடக்க...அவர்களை நோக்கி ஏதோ மிருகம் வருவது போல் காலடி சத்தம் அவ்வளவு அழுத்தமாக இருந்தது... அனு பயத்தில் மகேஷ் கையை படிக்க அது விக்ரமிற்கு கோவம் வந்தது... அவள் கையை பிடித்து தன் அருகில் இழுத்தான்...

அவ்வேளையில் ஒரு கொடிய உருவம் கொண்ட விலங்கு வந்து நின்றது.. சிங்கத்தின் முகத்தையும் எருமையின் உடலமைப்பையும் கொண்ட ஒரு மூன்று தலைமிருகம் வந்து நின்றது...

அது இவர்கள் நால்வரையும் அசைய விடாமல் அந்த விலங்கு அவர்கள் நெருங்கி.... நெருங்கி வந்தது... என்ன செய்வது என்று தெரியாமல் பயத்துடன் நிற்க்க... அனு மயக்கம் போட்டு விழுந்து யாரும் அறியவில்லை.... அவள் உருவத்திற்கு ஒரு அகோரி உருவமாறி அவளை தன் மந்திர சக்தி கொண்டு மறைய வைத்தான்....

அனு ரூபத்தில் இருக்கும் அந்த அகோரி மற்ற மூவர்களையும் பார்த்து "நாம நாலும்பேரும் ஒரே நேரத்தில தாயத்து கட்டிய கையை அந்த விலங்கு முன் காட்டின்னாள்... அந்த விலங்க நாம சாகடிக்க முடியும்.. ஆனா, இதுல ஒரு நிமிஷம் யாராவது முந்துனாலும் சரி பிந்துனாலும் அது நமக்கே ஆபத்து ஆகிடும்.... அதுபோல் நம்ம கைல கட்டி இருக்க தாயத்தோட பலமும் குறைச்சுடும் கால்வாசி" என்று கூறினாள் அனு..

யாருக்குமே இது எப்படி அனுவுக்கு தெரியும் என்று யோசிக்கவில்லை இவர்கள் தப்பித்தால் போதுமென்றே நினைத்தனர்.. அவள் கூறியது போல் செய்ததும் அந்த தயத்தில் இருந்து ஒரே நேரத்தில் சக்தி வெளிப்படு அந்த விலங்கை அழித்தனர்...

அதன் பிறகு அங்கிருந்து கிளம்பி பாறை இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர்... அங்கே ஒற்றை கண் கொண்ட பெரிய உருவம் கொண்ட மனித உருவில் மிருகம் அந்த பாறையின் அருகில் நின்று இருந்தான்..


"இப்போ என்ன பண்றது இந்த ஒத்தை கண்ணனே எப்படி இங்கிருந்து விலக்க.... இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்ட வேற போகுது" என்று பயத்தை முகத்தில் காட்டாமல் கூறினாள் அமிர்தா..

அனு "இப்போ அவன திசை திருப்பன்னும் இது விட்ட வேற வழியில்ல... ஏன்னா! ஏற்கனவே நம்ம கைல இருக்க தயத்தோட சக்தி குறைச்சுடு"..... மகேஷ் "உனக்கு எப்படி தெரியும் அனு" என்று கேள்வியோடு பார்த்தான்....

அனு "அதுவா! நம்ம கைல கட்டி இருக்க தாயத்தோட நிறம் வெள்ளி நிறத்துல இருந்தது... ஆனா,இப்போ அது கருப்பு நிறத்துல மாறிட்டு வருது" என்று கூறினாள்...

அவள் கூறுவது உண்மை என்பதை உணர்ந்து கொண்டனர் மற்ற முவரும்... "இப்போ எப்படி அவன திசை திருப்ப" என்று கேட்டான் விக்ரம்..

அமிர்தா "ஒரு ஐடியா இருக்கு... ஆனா, அது வேலை செய்மான்னு தெரியல... ஆனா சொல்லுறே நாம நாலு பேருல ஒருத்தர் இல்ல ரெண்டு பேரு அவன் முன்னாடி போற மாதிரி போலாம்"...

மகேஷ் "அப்படியே அவன் கையால செத்துடலாம்" என்று நக்கலாக கூறினான்... "சொல்லுற பாரு ஐடியா"... என்று இளக்காரமாக நினைத்தான்...

அனு "எதுக்கு அவ சொல்லுறத நாம செயல் படுத்தி பார்க்கலாமே... " "இல்லைன்னா நீயே ஐடியா சொல்லு" என்று கூறினாள் அனு... மகேஷ் "அப்போ யாரு அந்த ஒத்த கண்ணனே திசை இருப்புவாங்க..."

அனுவும் விக்ரம் கையை தூக்க சரி என்று அமிர்தா கூறியது போல் செய்தனர்... அனு ரூபத்தில் இருக்கும் அகோரி தன் மந்திரசக்தியால் அருகில் ஒரு மய நெருப்பு ஏரியை உருவாக்கி அதில் அந்த ஒத்தகண்ணனை தள்ளி விட்டான்...ஆனால் விக்ரம் தான் தள்ளி விட்டது போல் அவனின் கையால் செய்ய வைத்தாள்...

அதன் பிறகு அங்கிருந்து பாறையின் அருகில் வந்தனர் இருவரும்.. "என்ன அந்த பெட்டியை எடுத்திட்டிங்களா" என்று கேட்க...

அமிர்தா "இம்மி அளவு கூட அந்தப் பாறை நகர மாட்டேங்குது என்று கூறினாள்... "அப்போ என்ன பண்றது" என்று கேட்டான் விக்ரம்..

"நம நாலு பேரும் சேர்ந்து ஒரு பாறையை தள்ளுவோம் ஒரு புறமாக தள்ளுவோம் அப்போ பாறை கொஞ்ச நகர்தான்னு பார்ப்போம்" என்றாள் அனு...

"சரி" என்று அனைவரும் தள்ள அனு தன் சக்தி கொண்டு பாறையை தள்ளினாள்.. அதன் பிறகு பெட்டியை எடுத்தனர்..

விக்ரம் "இப்போ பெட்டிய எப்படி திறப்பது" அமிர்தா "இந்த பெட்டிய ஏன் இத்தனை தாயத்தும் கொண்டு கட்டி வச்சு இருக்காங்க அதுக்கானதுன்னு வேல் வச்சு ஒருதலியை பெட்டியோடு கட்டி வச்சு இருக்காங்க.. அது எதுக்கு?" என்று கேட்டாள்...

அனு அந்த பெட்டியின் ரகசிய தெரியும் என்பதால் அதில் ஏதோ பார்ப்பது போல் பாவனை செய்து "எல்லாரும் இங்க பாருங்க! இந்த பெட்டி மேல ஏதோ எழுதி இருக்கு "இப்பெட்டி திறக்க வேண்டுமானால் ஒரு கன்னிப் பையனின் ரத்தம் இவ்வேல் மீது பட்டு அவனின் கன்னி கழியா மனைவியின் நெற்றியில் மீது வைத்து இருவரும் சேர்ந்து திறந்தால் மட்டுமே இப்படி திறக்கும்" என்று எழுதிருக்க....

மற்ற மூவரும் அதிர்ச்சியில் திருதிருவென முழித்தனர்.. "இப்போ கன்னிகழியாத பையனையும் பொண்ணையும் எங்கு போய் தேடுறது" என்று மகேஷ் கேட்டான்...

"இவ்வளவு நேரம் நாம கஷ்டப்பட்டது எல்லாமே வீணா" என்று கூறி காலை தரையில் உதைத்தான் விக்ரம்...

அனு "இல்லவேயில்ல"... "என்ன சொல்லுற அனு" என்று கேட்டான் மகேஷ்... "இங்க யாராவது ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும்"... "அப்போ நீயும் விக்ரம் கல்யாணம் பண்ணிக்கோ" என்று கூறினான் மகேஷ்..

அனு அதிர்ச்சி ஆகி "முடியவே... முடியாது" என்று கத்தினாள்....‌ மகேஷ் "ஏன், முடியாது நீங்க ஏற்கனவே லவ் பண்ணுங்களே, இப்பயே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்ற"...... அதான் நீயே சொல்லிட்டியே ஏற்கனவே லவ் பண்ணனோம்.... ஆனா, இப்ப லவ் பண்ணல" என்று அழுத்தமாக கூறினாள்....

விக்ரம்"அனு நம்ம சண்டைய அப்பறம் பாத்துக்கலாம் இப்போ நாம மேரேஜ் பண்ண தான் நம்ம உயிர காப்பாத்த முடியும்" என்று கூறினான்....

அனு "அப்படின்னா நா செத்து போறேன்... என்னாலே இவன கல்யாணம் பண்ண முடியாது மகேஷ்.. தயவு செய்து என்ன வற்புறுத்தாதே" என்று அழுத்தமாக கூறினாள்..

இப்போ என்ன பண்றதுன்னு தெரியாமல் நிற்க்க அமிர்தா மகேஷ் பார்த்து "என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று கேட்டாள்...

மகேஷ் அதிர்ச்சியாய் நின்றான்... "இப்போ இந்த ஒரு வழி மட்டும் தான் இருக்கு அதனால் தான் உன்கிட்ட நான் கேட்கிறேன் என்றாள்..

அவனுக்கு என்ன கசக்கவா செய்யும், ஆழ்மனதில் மறைந்திருந்த அவள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு மேலெழுந்து சரி என்று கூறினான்... அதில் எழுதி இருந்த முறையிலேயே வேல் மேலிருந்த தாலியை எடுத்து அமிர்தாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான்.. தன் கையை வேல் மீது குதித்தி ரத்தத்தை அமிர்தாவின் நெற்றியில் வைத்துவிட்டு இருவரும் சேர்ந்து பெட்டியைத் திறந்துறந்தனர்... பெட்டிக்குள் இன்னொரு பெட்டி இருந்தது..

அதை கண்டு கோவமான அமிர்தா "இதுக்காகவா இவனை நான் கல்யாணம் பண்ணே 'ச்சே' இத வச்சு என்ன பண்றது" என்றும் அழுத்து கொண்டாள்....

மகேஷ் "ஹலோ மேடம்! உன்ன நானா என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னே, நீயா தானே என் கிட்ட கேட்ட... ரொம்ப ஓவரா பேசுற" என்று கோபப்பட்டு இவனும் கத்தினான்...

அனு "போதும் நிறுத்துங்க உங்க சண்டைய.. ஏற்கனவே இருட்ட ஆரம்பித்து விட்டது... அந்தப் பெட்டியை எடுங்க நாம இங்கிருந்து கிளம்புவோம்... பாதுகாப்பான இடத்தில் தங்கிட்டு நாளைக்கு காலைல நம்ம இந்த காட்டை விட்டு வெளியில் போய் விடுவோம்"

"அனு சொல்லுறது சரி ஏற்கனவே ரொம்ப இருட்டிட்டு இதுக்கப்புறம் வெளியில் போக முடியாது.. நாம ஏதாவது ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கிப்போ" என்று மகேஷ் கூறினான்..

அனு முன்னாடி நடந்து செல்ல... மகேஷ்யும் அமிர்தாவும் பார்வையில் சண்டையிட்டு அவள் பின்னாடி சென்றனர்.. அவர்கள் பின்னாடி அனு பேசிய வார்த்தைகளில் வருத்தம் கொண்டு விக்ரம் நடந்து வந்தான்... அப்போ மரத்தின் பொந்திலிருந்து கால் ஒன்று வெளியில் தெரிந்தது அதை கவனிக்காமல் கடந்து சென்ற விக்ரம் விழ போனான்...

அது என்னவென்று பார்க்க அது ஏதோ கால் மாதிரி தெரிவது போல் இருக்க, அருகில் சென்று அந்த காலை இழுத்தான் அது அனுவென்று தெரிந்தது அவன் "அனு" என்று கத்தினான்...

விக்ரமு அமிர்தாவும் திரும்ப பார்த்தனர்... அங்கு விக்ரம் மடியில் இருப்பது அனு வென்றால் இது யாரென்று பயந்தனர் இருவரும்....

சடைமுடி காற்றில் பறக்க சூறாவளி காற்றோடு , எரிமலையின் வெப்ப காற்றை மூச்சு காற்றாய் விட்டு, அசுரத்தனத்தோடு கண்களில் மின்னும் கொலைவெறியோடு நடந்து வருகிறாள் மிருதன். காற்றினால் கண்ணை கசக்கிக்கொண்டே எதிரில் இருப்பவர்களை பார்க்கிறார்கள்.
பார்த்தவர்களின் கண்கள் வெளியில் தெறித்துவிடும் அளவு விரிந்து பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள விழிக்கிறார்கள்.

அங்கு மிருதனும் அனுரூபத்தில் இருந்த அகோரியும் நிற்கிறார்கள்.

மிருதன் "மகிழா ஏனடா! என்னை ஏமாற்றினாய்?"

அகோரி "நான் ஏமாற்றவில்லையடி கண்ணே. நீ மென்மேலும் தப்பு செய்யாதிருக்க தடுத்தேன்"

மிருதன்" எனக்கு இழைத்தது என்னடா?"

அகோரி "உனக்கு நடந்தது கொடுமை தான். அதற்கு அவர்களை பழிவாங்கிவிட்டாய். இந்த பிஞ்சுகள் எந்த தவறு செய்தது?"

மிருதன்" இவர்களை காப்பாற்ற நினைக்கிறாயா?"

அகோரி "என் உயிரானவள் தவறு செய்யாமல் தடுக்கிறேன்"

மிருதன் "இப்போது நீ இவர்களைக் காப்பாற்றலாம். இவர்களின் மரண ஓலை என் கையில் நினைவில் வைத்துக்கொள்."

அமைதி நிலமைக்கு திரும்பியது காடு

அகோரி "விரைவாக செல்லுங்கள். இவ்வூர் எல்லையை தாண்ட வேண்டும் சீக்கிரம் ."

விக்ரம் "ஐயா. தாங்கள் யார்? எதற்கு எங்களுக்கு உதவுகிறீர்கள்.? எங்களைச் சுற்றி என்ன தான் நடக்கிறது.?"

அகோரி"நடந்துக்கொண்டே பேசலாம் வாருங்கள்"

அதற்குள் அனுவும் மயக்கம் தெளிந்து நடக்கிறாள்.

சிவகாமி"விடுவ டீ விடுவ இன்னைக்கு உண் கால உடைக்கல "....

மயில் விழி"அய்யோ ஆத்தா "

சிவகாமி"இந்தாடி நில்லுடி எங்கேடி வீட்ட சுத்துற"

மயில் விழி"அப்பா பாருப்பா இந்த ஆத்தா என்னை அடிக்குது"...கண்ணை கசக்குகிறாள் மயில் விழி.

"இந்தா அம்மா ஏன் என் அடிக்க துரத்துற"....மயில் விழியின் தந்தை சிவராமன்

சிவகாமி"புள்ளையாட பெத்து வளர்த்து வச்சு இருக்கிற குரங்கு சேட்டை அம்புட்டும்"....

சிவராமன்"போ மா அங்குட்டு என் அழகு குழந்த மா"

சிவகாமி"ஆமாடா குழந்ததா இன்னொருத்தன் கையில் குடுக்குற வயசாச்சு இன்னும் குழந்தையாம் குழந்தை"

சிவராமன்"அப்படி என்னம்மா பண்ணுன இப்டி வையுர "

சிவகாமி"அவ பண்ணாத சேட்டையா ஊர்வாண்டுக கூட சேர்ந்த ஊர் சுத்துது... மரம் மரமா தாவுது... இவள் எல்லா பசங்க கிட்டேயும் வம்பு பண்ணுது இவள கொரங்குனு சொல்லாம என்ன பண்ணுறது"

மயில் விழி"அப்பா நா எதும் பண்ணல" அப்பா
முகத்தை சோகமா வைக்கிறாள்

சிவராமன்"அம்மா! ஊருல இல்லாத சேட்டை அஹ் என் மக பண்ணுற அங்குடு போ மா"

சிவகாமி"நீயாச்சு உன் மகளாச்சு"...

சிவராமன்"விழி மா எண்ட நம்ம கிட்ட அவ்ளோ தோப்பு இருக்கு நீ ஏண்டா மத்தவங்க தோப்புக்கு போற"

மயில் விழி"அப்பா உங்களுக்கு தெரியுமா"...கண்ணை சுருக்கி கொண்டே கேட்கிறாள்
அந்த அழகில் மயங்கி

சிவராமன்"தெரியும் தங்கம். சொல்லு மா நீ சொன்னா தோப்பையே உன் சிநேகிதர்களுக்கு சாப்ட தந்தருவேன்
நீ ஏண்டா மத்தவங்க தோப்புக்கு போற"

மயில் விழி"அப்பா திருடி சாப்டுருதுல ஒரு தனி கிக் பா உனக்கு புரியாது பா...கண்ணடித்து கொண்டே பதில் கூறுகிறாள். அவள் தலைய செல்லமாக கலைத்து கொண்டே "அம்மாடி உனக்கு வேற எதும் தொல்லை இருக்கா "...

மயில் விழி"என் பா அப்படி கேக்குறீங்க"....

சிவராமன்"இல்ல மா சும்மதா
செரித்தா.. போய் காலேசுக்கு கிளம்பு"

மயில் விழி" சரிப்பா"
தன் பூப்பாதங்கள் தரையில் படாமல் இரட்டை சடை முன்னும் பின்னும் அவளின் இடையினை தீண்டிக்கொண்டே மான்போல் துள்ளி குதித்து சென்றாள் பூங்காற்று அவள் மயில் விழி.... அவளின் கண்ணில் மயங்காதோர் யாரும் கிடையாது. சந்தனத்தை குலைத்து எடுத்த நிறம் தன் மகளின் அழகினை ரசித்துக்கொண்டு இருந்தார் சிவராமன்.

சிவராமன்-அழகாம்மாள் தம்பதிக்கு பிறந்த பூங்கோதை இவள். மகளை பெற்றெடுத்து தன் காதல் கணவனிடம் கொடுத்து விட்டு சிவனடியை சேர்த்துவிட்டார் அழகாம்மாள்.அன்றிலிருந்து இன்றுவரை தன் மகளை கையிலும் நெஞ்சிலும் சுமந்து அவளின் மகிழ்வே தன் மகிழ்வு என வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்.அவரின் மகிழ்வு காணாமல் போவது தெரியாமல் தன் மகள் கல்லூரிக்குச் செல்லும் அழகை ரசித்துக்கொண்டு இருந்தார்.

பேருந்தின் படியில் தன் சுருள் சிகை பறந்தாட ஒரு கையில் புத்தகமும் மற்றொரு கையில் கம்பியும் பிடித்து கண்களில் வழியும் காதலுடனும் இதழில் உறைந்த சிரிப்புடனும் தன்னவளை கண்களை உருட்டி பேசும் அழகை ரசித்துக்கொண்டும் பாதுகாத்துக்கொண்டும் இருந்தான். மகிழன்.

"டேய் மச்சா" என்ற தன் உயிர் நண்பன் ராமின் குரலில் கலைந்தான்

மகிழன்"சொல்லுடா மச்சா"

ராம்"டேய் இன்னும் எவ்ளோ நாள் தான்டா தூரத்துல இருந்து காதல வளர்ப்ப போய் சொல்லேண்டா"

மகிழன்"டேய் அங்க பாரேன் என் விழி எவ்ளோ அழகா சிரிச்சுட்டே இருக்கா நான் இத சொன்ன அவ சிரிப்பு போயிரும் டா"

ராம்" நீ அவள அவ்ளோ நல்லா பாத்து பேன்னு தெரியும் அப்புறம் ஏண்டா இப்டி சொல்லுறா?"

மகிழன்"உனக்கே தெரியும் என் அப்பா அம்மா என்னைவிட்டு போனதுக்கு அப்புறம் விழி அப்பாதான் இப்பவரை என்னை பாத்துக்குறாங்க. கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவட என் விழி அவள எப்படிடா நா கஷ்ட படுத்துவேன்.என் காதல் தெரிஞ்சா சிவராமன் ஐயா மூஞ்சில எப்படிடா முழிப்பேன் நான் "

ராம்" சரி விடுடா"

"மகிழா" எனக் கத்திக்கொண்டே வந்தாள்.. அவனின் காதலுக்கு சொந்தக்காரி மயில் விழி

மகிழன்" சொல்லு விழிமா"

மயில் விழி" டேய் டேய் இன்னிக்கு எனக்கு ஐஸ்கீரிம் வேணும்டா ப்ளீஸ் வாங்கித்தாடா"

மகிழன்" முடியாது விழிமா உனக்கு காய்ச்சல் வந்தரும் "

மயில் விழி" மகி இன்னிக்கு மட்டும் டா என் செல்லம்ல என் தங்கம் ல "என மகியின் தாடையைப் பிடிச்சு கொஞ்சுகிறாள்

அவளின் விழி அழகில் மயங்கி
மகிழன்" சரி பாப்பா ஒன்னு தான் சரியா?"

மயில் விழி"சூப்பரு நீ தான்டா என் மகி செல்லம்"

மகிழன்" விழி உனக்கு என்னை பிடிக்குமா?"

மயில் விழி சிரித்துக்கொண்டே "லூசு மகி பிறந்ததுல இருந்து உங்கூட தானே இருக்கேன் உனக்கு தெரியாதா. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டா"

மகிழனுக்கு உலகை கையில் அடக்கிய மகிழ்ச்சி.

இவ்வாறு இவர்கள் நாட்கள் செல்ல மகிழனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்றுவிட்டான்.

2 வருடங்களுங்கு பிறகு

மயில் விழியும் சாமிவேலும் காதல் கொள்கிறார்கள்.

சிவராமன்"அம்மாடி விழி"

மயில் விழி" சொல்லிங்கப்பா"

சிவகாமி "அம்மாடி உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்டா. மாப்பிள்ளை நம்ம மகி தான்டா.அவன் ஒரு வாரத்துலவரானாம் இன்னும் வெளியில் போகவேண்டாம்னு சொல்லிடலாம். இங்கே நாம் நிலம் தோப்ப பாத்துகிட்டா போதும். உன்னை நல்லா பாத்துப்பான். நீயும் என் கூட இருப்ப என்னம்மா சொல்லுற."

தன் தந்தையின் கண்ணில் மின்னும் மகிழ்வைக் கண்டு பேச்சு வர மறுத்தன.. சாமிவேலைத் தவிர வேற ஒருத்தன என்னால நினைச்சுக்கூடாப் பார்க்க முடியாது. நம்ம மகிதானே சொன்னாப் புரிஞ்சுக்குவான் என மனதில் நினைத்து "உங்க விருப்பம்" என்றாள் மயில் விழி.
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ஒரு வாரம் கழித்து அந்த கொடூர இரவும் வந்தது. தன் காதல் கைசேர்ந்த சந்தோஷத்தில் மிதந்து வந்து கொண்டு இருந்தான் மகிழன். அப்போது காட்டுக்குள் ஒரு கொடிய சத்தம்

மகிழன்"என்ன சத்தம் இது "

மயில் விழி"வரேன்டா உன்னைக் கொல்ல வரேன்டா"

மகிழன்"என் விழி குரல்போல் உள்ளதே "

சத்தம் கேட்கும் திசைக்கு ஓடுகிறான் .
அவன் கண்கள் பிளந்துவிடும் அளவிற்கு விரிகிறது. அவன் கண்டது ஒரு பெரிய மரத்தின் கீழ் உடைகள் அற்று, எங்கும் எலும்பும் மண்டை ஓடுகளுமாய் காட்சியளிக்க பலவித விலங்குகளின் தலையும் உடலும் தனிதனியாக கிடக்க இரத்தவாடை குலை குமட்ட வட்டமாக அகோரிகள் அமர்ந்து ஏதோ முனுமுனுக்கிறார்கள்.. அவர்களுக்கு நடுவே நெருப்பு வட்டத்தில் கண்களில் குரோதம் வழியே அமர்ந்து இருக்கிறான் அவள் மயில் விழி

மகிழன் "விழிஇ இ இ இ "

அவனின் திடீர் கத்தலில் எல்லாரும் திரும்பி பார்த்தனர்.

மயில் விழி" மகி எல்லாம் போச்சு மகி"

மகிழன்" என்னடி பண்ணுற "அதிர்ச்சி குறையாமல் கேட்டான...

"என்னையும் என் வாழ்க்கையும் இழந்துட்டே"

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியடைந்து இதெல்லாம் வேணா விழிமா நாம போலாம் வா. நான் உன்னை பார்த்துகிறேன் .நா உன்னை காதலிக்கிறேன் விழி மா எப்போ லவ் பண்ண ஆரம்பிச்சேன் தெரியல . ஆனா என் உயிரவிட அதிகமா நேசிக்கிறேன் டி உன்னை."

கண்களில் வழியும் நீரோடு முன்னாடியே ஏண்டா சொல்லல இந்த கெட்டுப்போனவ உனக்கு வேணா.நா அவங்கள பழிவாங்கியே தீருவேன்.

மகிழன்"அப்ப நானும் உன் கூட இருக்கேன்"

விழி" இல்ல மகி உனக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு போ"

மகிழன்" நீ தான் அது விழி இப்பவும் நீதான் எனக்கு முக்கியம் நான் எப்பவும் உன் கூட இருப்பேன் இது என் காதல் மேல் ஆணை."

"இதான் நடந்துச்சு அப்புறம் ஊர்ல மயில் விழி ஓடி போய்ட்டானு எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க அப்பா அவமானத்துல தற்கொலை பண்ணிட்டாங்க. தன்னோட மகன், பேத்தி போன துக்கத்துல பாட்டியும் செத்துட்டாங்க. நா வேலை பாக்குற இடத்துலயே இறந்துட்டேனு சொல்ல வச்சுட்டு என் விழிகூட அகோரியா மாறிட்டேன்."

நிமிர்ந்து பார்க்க ஊரின் எல்லை வந்துருச்சு "இனி நான் சொல்லுறத கேளுங்க.. நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... உங்க முடிவு இன்னும் இரண்டு நாளுல அதுவும் அந்த கோவில்ல தான் இருக்கு, உங்க விடையும் இருக்கு.. நா போறேன்" காத்தோடு காத்தா மறைஞ்சு போயிடாரு...

நால்வரும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதில் நாங்கள் எங்கு இருந்துவந்தோம் என புரியவில்லை அவர்களுக்கு. மகேஷ்" காதல்னா இப்டி இருக்கனும்." என்று கூறினான்..
அனைவரும் கோவிலுக்கு செல்ல புறப்பட்டனர்...

1. பெட்டியில் என்ன இருக்கிறது?

2. இரண்டு நாளில் என்ன நடக்கும்?

3. கோவிலில் உள்ள அம்மா யார்?

மிருதனா.....? மனிதர்களா.......?


Thread 'மிருதனின் அசுரம் - Comments' https://www.sahaptham.com/community/threads/மிருதனின்-அசுரம்-comments.998/
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
மீராஜோ



அத்தியாயம் -10.

மகேஷ், விக்ரம், அமிர்தா அனு கோவிலை நோக்கி இரண்டு அடிகூட எடுத்து வைத்திருக்கமாட்டார்கள்.

திடீரென்று சூறைக்காற்று பலமாக வீச,

கதிரவனோ, வேகமாகச் சென்று மேகத்தினுள் ஒழிந்து கொண்டான்.

அதனால் சட்டென்று இருள் சூழ்ந்ததும் நால்வருக்குமே, 'ஏதோ சரியில்லை' என்று தோன்றிய வினாடி அந்த ஊரே அதிரும் அளவிற்கு அகோரிப் பெண்ணின் சிரிப்புச் சப்தம் கேட்டது.

"அனு! அமிர்தா! விக்ரம்! என் பின்னாடி வாங்க.. நாம முதல்ல கோயிலுக்குப் போயிடுவோம.... சீக்கிரம் ." என்று கூறி அமிர்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு மகேஷ் வேகமாக கோயில் இருக்கும் திசையை நோக்கி ஓடினான்.

'அகோரியிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதே முதல் வேலை.' என்பதை உணர்ந்த விக்ரமும் அனுவின் கையை அனிச்சையாகப் பிடித்துக் கொண்டு மகேஷைப் பின்தொடர்ந்தான்.

சட்டென்று தன் கையை அனு விக்ரமின் பிடியிலிருந்து உதறினாள்.

எதிர்பாராமல் அனு இவ்வாறு செய்ததால் விக்ரமும் சில அடிகள் தடுமாறி, பிறகு தன்னை நிதானப் படுத்திக் கொண்டு, அனுவை முறைத்துப் பார்த்தான்.

"சரி! நீ என் முன்னாரடி ஓடு. நான் பின்னால் வருகிறேன்." என்று கூறினான்.

அதற்குள் அகோரி அனுவை நெருங்கி அவளின் துப்பட்டாவைத் தொட்டதும்,

'இவளோடு வழக்காட இது சமயமில்லை.' என்று உணர்ந்த விக்ரம், அனுவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினான்.

சுற்றிலும் சூழ்ந்துள்ள கரிய இருளால், அவர்களுக்கு முன்னால் ஓடிய மகேஷையும், அமிர்தாவையும் காணவில்லை.

"நீ என்ன செஞ்சுட்ட பாரு… அவங்க ரெண்டு பேரையும் காணேம்… இந்த இருட்டுல கோயில் எந்தப் பக்கம் இருக்குன்னு கூடத் தெரியாது எனக்கு." என்று அனுவைத் திட்டிக்கொண்டே விக்ரம் ஓட,

"எனக்குத் தெரியும் வா!" என்று கோபத்தைவிட உயிர் பிழைப்பதே முதல் காரியமென்று உணர்ந்த அனு விக்ரமின் கையைப் பற்றிக்கொண்டு ஓடினாள்.

சில நோடிகள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளான விக்ரம்,

தன் கையை இறுகப் பற்றியிருந்த அனுவின் கையைப் பார்த்தபடி அவளுடன் இணைந்து ஓடினான்.

விக்ரமிற்கு தற்போதைய நிலை மறந்து, இத்தனை வருடங்களாக தன்னிடம் கோபம் கொண்டு, இருந்தவள், இப்போது அவளாக வலிய தன் கையைப் பிடித்துக்கொண்டு ஓடவும்,

சுற்றிலுமிருந்த மையிருட்டு வேளையிலும், விக்ரமனின் மனதில் பூக்களின் கதம்ப நறுமணத்தைத் தாங்கி வரும் குளிர்ந்த தென்றல் வீசி, அதன் சுகந்தம் தேகமெங்கும் பரவ, வானத்துத் தேவதைகள் தங்கள்மேல் பூச்சொரிய, திடீரென்று தங்களுக்கும் இறக்கைகள் முளைத்து பறப்பது போல் தோன்ற...

"டேய் எரும… என்ன திடீர்னு எரும கணம் கனக்குற?" என்று கூறியபடி திரும்பிப் பார்த்த அனு,

வீல் என்று வீரிட்டு கத்தினாள்.

தான் பிடித்துக்கொண்டு ஓடுவது அகோரியின் கையை என்று உணர்ந்தவள், தன் கையை எடுத்துவிட்டு அரண்டு பின்வாங்கினாள்.

"இத்தனை வருடங்களாக காவு வாங்கக் காத்திருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் காதல் கேட்குதோ?" என்று அலறியபடி,அனுவின் கூந்தலைப் பற்றித் தூக்கினாள்.

அகோரியின் மறுகையில், வான்வெளியில் ரெக்கைகட்டிப் பறப்பது போன்ற இன்பக் கற்பனையுடன், இமைகளைமூடி விக்ரம் பறந்து கொண்டிருந்தான்.

கோயிலுக்குள் சென்றதும் மூச்சு வாங்க அப்படியே கோயில் திண்டில் சாய்ந்தனர் மகேஷும், அமிர்தாவும்.

நெஞ்சே வெடித்துவிடும் அளவு, நுரையீரலில் காற்று இருப்பதுபோல் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி நின்றவர்கள், 'விக்ரமும் அனுவும் வருகிறார்களா?: என்று தெரு முனைவரை பார்வையை ஓட்ட,

கோயில் மட்டுமே வெளிச்சமாகவும், கோயிலுக்கு அப்பால் இருந்த வீதிகள் கரிய ஆடை உடுத்தினார்போல் இருந்தது.

மிக வேகமாக ஓடிவந்ததில் இரு கால்களும் வெடவெடவென நடுங்கியதால் கோயில் திண்டில் ஏறி அமர்ந்து தன் கால்களை நீவி விட்டுக்கொண்டிருந்த அமிர்தாவை,

வியர்வையால் குளித்த தனது முகம், கழுத்துப் பகுதிகளை தனது சட்டையைக் கொண்டே துடைத்தபடி பார்த்த மகேஷுக்கு,

அமிர்தாவின் அழகிய வதனமும், பிறை நெற்றியிலிருத்த கடுகு போன்ற பொட்டும்,

கண்சிமிட்டும் போது, அடர்ந்த மயிர்களை உடைய இமைகளின் அசைவு, தோகை விரித்து ஆடும் மயிலையும்,

வியர்வையால் நனைந்திருந்த சங்குக் கழுத்தோ, எலுமிச்சைத் தோளால் துலக்கிய வெண்கல செம்புபோலவும், அதற்குக் கீழே…

"டேய் ஆந்தக்கண்ணா! கண்ணு எங்க போகுது? பணியாரத்த திருப்புற மாதிரி திருப்பிடுவேன் ஆமா… மூஞ்சிய பாரு மூஞ்சிய… விக்ரமையும் அனுவையும் காணோன்னு பதறிக்கிட்டிருக்கேன். இப்பதான் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடைய பார்த்த மாதிரி, ஈஈஈ னு இளிச்சுக்கிட்டு பார்க்கிறான்."

"ஏய் என்ன ரொம்ப ஓவரா பேசுற?"

"பின்ன? இன்னும் கால்வாசி கிணறுகூட தாண்டாத நிலைல இருக்கோம்ங்கிறத மறந்துட்டு, பத்துநாளா பட்டினி கிடந்தவன் வெடக்கோழிய வெறிச்சுப் பார்க்கிற மாதிரி முழிபிதுங்கி நின்னா, எப்படி பேசுவாங்களாம்?"

"ரொம்ப அலட்டிக்காத, நான் வெறிச்சுப் பார்க்குற அளவு நீ ஒன்னும்…" என்று மகேஷ் பேசும்போதே,

"அவங்க ரெண்டு பேரையும் இன்னும் காணோம்… நீ என்னோட வழக்காடிட்டிருக்க." என்று அமிர்தா கத்தினாள்.

தன்னிலை அடைந்த மகேஷ் கோயிலின் நிலை வாசலை நெருங்கிச் சென்று வீதியை உற்று நோக்கினான்…

வீதியில் இருந்த எதுவுமே கண்களுக்குப் புலப்படாததால், அப்பொழுதுதான் அசுவாசமான இதயம், ரயில் எஞ்சினைப் போல் வேகமெடுத்தது.

"விக்ரமுக்கு வழி தெரியலைனாலும் அனுவுக்குத் தெரிஞ்சிருக்குமே?... ச்சே என்ன மடத்தனம் பண்ணிட்டேன்… அவங்கள முன்னாடி போகச்சொல்லிட்டு, நான்ல பின்னால வந்து இருக்கணும்." என்று தன்மீதெழுந்த கோபத்தில் தலையில் அடித்துக்கொண்டவனுக்கு, 'அவர்களுக்கு எதுவும் ஆகிவிட்டதோ?' என்ற நினைவில் வயிறு கலங்கியது.

பயத்தில் தன் அருகில் வந்து கையைப்பற்றிக் கொண்ட அமிர்தாவைப் பார்த்தான்.

அவள் மகேஷின் கையைப் பற்றிய உணர்வே இல்லாமல், 'விக்ரமும் அனுவும் வரவில்லையே' என்று பரிதவித்து நின்றிருந்தாள்.

"என்னாச்சுன்னு தெரியலையே மகி! எனக்கு ரொம்ம்ப பயமாயிருக்கு… இங்க நின்னு காத்திருக்கிறத விட வந்த வழியில் திரும்பிப் போய் பார்த்து டலாமா?" என்று பதட்டத்தில் அமிர்தா கேட்டாள்.

அவள் தன் பெயரை சுருக்கி 'மகி' என்றழைத்ததில் மகேஷ் உச்சி குளிர்ந்து போனான்.

"பயத்தில் ஒறைஞ்சு போய் நிற்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா நீ என்ன இப்படி சிலையாக நின்னுட்டு இருக்க?... சீக்கிரம் வா! அவங்களத் தேடிப் போகலாம்." என்று அவனை பிடித்து விளையாட்டாக, அமிர்தா வாசலை நோக்கித் தள்ளிவிட,

மகேஷும் சிரித்துக்கொண்டே கோயிலின் நிலை வாசலைத் தாண்டி போய் தடுமாறி நின்றான்.

அதைக் கண்டு சிரித்தபடியே கோயில் வாசல் நிலைப்படியைத் தாண்டுவதற்காக அமிர்தா காலை எடுத்த நேரத்தில்,

மகேஷ் அப்படியே அந்தரத்தில் பறந்தான்.

என்ன ஆயிற்று என்று புரியாமல் அமிர்தாவிற்கு பயமும் அதிர்ச்சியும் ஒருசேரத் தாக்க, வேகமாக நிலைப் படியைத் தாண்ட எத்தனித்தவள் தடுமாறி கோயிலுக்குள்ளேயே விழுந்து எழ முயற்சிக்கையில்,

தோள் சுருங்கிய முதிய கரங்கள் அவளைத் தொட்டு தூக்கியது.

நிமிர்ந்த அமிர்தா தன்னைப் பிடித்திருந்த கையைப்பார்த்து, பயந்து உதறி, பின்னோக்கிச் சென்றவள், மீண்டும் நிலைப்படியில் தட்டித் தடுமாறி கோயிலுக்கு வெளியே விழப் போனவளை, ஓடிவந்து பிடித்தார் மகேஷின் தாயார்.

"அவளை நிலைவாசலைத் தாண்ட விடாதம்மா!" என்று முதிய பெண்மணி பதற,

மகேஷின் அம்மா அமிர்தாவை உள்ளிழுத்து நிற்க வைத்தார்.

"அம்மா மகேஷ் ஆபத்தில் இருக்கான். வாங்க போய்க் காப்பாத்துவோம்…" என்று பதறிய அமிர்தாவிடம்,

"நீ வெளியே போகாதே அமிர்தா… நீ போகாதவரை மகேஷுக்கு எதுவும் ஆகாது…" என்றார் அம்முதிய பெண்மணி.

"இங்கே என்ன நடக்குதுன்னு தெரியாம எதாவது சொல்லாதீங்க. யார்ங்க நீங்க? நீங்க ஏன் என்னைத் தடுக்கிறீங்க?" என்று முதியவளிடம் வெடுவெடுத்த அமிர்தா, மகேஷ் அம்மாவிடம்,

"அம்மா... அங்கே மகேஷ் மட்டுமில்ல… விக்ரமையும், அனுவையும் கூட காணோம்…" என்று கூறியபடி மகேஷின் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு கோயில் வாசலை நோக்கிச் சென்றாள்.

"உனக்குத்தான் நடந்தது, நடப்பது எதுவுமே தெரியாது… நான் சொல்றதக் கேளு" என்று கூறிய முதியவளுக்கு புரையேறி, தொடர்ந்து இருமவும்,

அமிர்தாவைக் கையில் பிடித்தபடியே முதியவரை நோக்கிச் சென்றார் மகேஷின் அம்மா…

"அங்க மூனு உயிர் துடிச்சிட்டிருக்கு… இந்த பாட்டி இருமுதுன்னு ஓடுறீங்களே!" என்று மகேஷின் அம்மாவைத் தடுத்தாள் அமிர்தா.

"இந்த அம்மா இருந்தாதான் உங்களுக்கு விமோசனம் கிடைக்கும்." என்று கூறிவிட்டு, அந்த முதியவளின் அருகில் சென்று தலையை மிருதுவாகத் தட்டி, முதுகைத் தடவிக் கொடுத்தார்.

அமிர்தாவின் நிலைதான் நெருப்பில் நின்றதைப் போலிருந்தது…

'தன் மகனைக் காப்பாத்த‌ அவங்களும் போகம , என்னையும் போகவிடாம' என்று நொந்து புலம்பிக்கொண்டிருந்தாள் அமிர்தா…

அந்த நிமிடத்தில்தான், அவள் மகேஷ் மீது கொண்டிருந்த பிரியம் அவளுக்கே புரிந்தது…

'மகேஷ் இல்லாத வாழ்வு, தனக்கு நிம்மதியைத் தரப்போவதில்லை' என்று திண்ணமாக புரிந்தவளின் கண்கள் உருகி அருவியாய்க் கொட்டியது.

"நமக்கு நேரமில்லை… ரெண்டு பேரும் ஓடிப்போய் அந்தப் பெட்டியை எடுத்துட்டு வாங்க!" என்று முதியவள் ஆணையிட,

மகேஷின் அம்மா அமிர்தாவின் விருப்பத்தை அறியக்கூட முயலாமல் அமிர்தாவைத் தரதரவென இழுத்துக்கொண்டு கோயில் குளத்தை போக ஓட,

"அம்மா! உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?" என்று வேதனை மேலிடக் கேட்டாள்.

"என் மகனைக் காப்பாற்ற, என் உயிரையும் கொடுக்கத் தயங்காத நான், என் முழங்கால் வலியையும் பொருட்படுத்தாம இப்படி ஓடுறேன்னா, அதுக்கு ஒரு காரணமிருக்குன்னு கூடவா புரிஞ்சுக்க மாட்ட? உன்னோட போராடிக்கிட்டு இருக்க எனக்கு இப்ப நேரமில்ல... தயவுசெஞ்சு என்னோட வேகமா வா." என்று கூறியபடி மூச்சிரைக்க ஓடினார்.

அவரின் அந்தக்கூற்றில் இருந்த உண்மை அமிர்தாவைத் தாக்க, எண்ணமெல்லாம் அவர்கள் மூவரிடமிருந்தாலும் மகேஷின் அம்மாவோடு ஓடியவள்,

"சரிம்மா… எங்க போறோம்னாவது சொல்லுங்க…" என்று கேட்டாள்.

"அதோ… அங்க"

"அங்க ஏன்" என்று கேட்குமுன்பே,

"அங்கே ஒரு பெட்டி இருக்கு… அத உங்க நாலுபேர்ல ஒருத்தராலதான் எடுக்க முடியும்…"

"அம்மா… அந்தப் பெட்டிய காட்டிலிருந்து எடுத்து வந்துட்டோம்…"

"இது வேற, சின்னதா வெத்தலை பெட்டி மாதிரி இருக்கும்." என்று கூறியவர், பதட்டத்துடன், 'நீங்க கொண்டு வந்த அந்தப் பெட்டி எங்க?" என்று கேட்டார் ‌

"கோயில் வாசலுக்குப் பக்கத்துல நான் இருந்தேனே, அந்தத் திண்டுலதான் இருக்குது."

"ஷ்ஷ் அப்பா… நல்லவேளை!..." என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி, ஓடியவருக்கு முழங்கால் எலும்பு விலகி வலியெடுக்கவே, அதற்குமேல் நிற்கக்கூட இயலாமல் விழுந்தார்.

அவரைத் தூக்கச் சென்ற அமிர்தாவிடம், "வேகமா ஓடிப்போய் அங்க இருக்கிற சின்ன பெட்டியையும் எடுத்துட்டு வா!" என்று பெட்டி இருக்குமிடத்தைக் கூறி கிட்டத்தட்ட அமிர்தாவை விரட்டினார்.

அவர் குரலிலிருந்த வேதனையும், அவசரமுமே, தன் மகனைக் காக்க போராடும் தாயின் மனதை எடுத்துக் காட்டியது…

பிறகு எந்த கேள்வியும் கேட்காமல் மகேஷ் அம்மா காட்டிய திசையில் ஓடினாள்…

மீதி கீழே👉👇
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
"எதற்காக ஓடுகிறோம்? அந்த வெத்தலை பெட்டியில் என்ன இருக்கிறது? அதை எடுத்து மகேஷ் அம்மாட்ட கொடுத்துட்டு, அவங்க மூனுபேரையும் போய் பார்க்கனுமே…' என்று எண்ணிய அமிர்தா,

"இந்நேரம் அவர்களுக்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது தாயே!" என்று ஆலயத்தில் இருந்த அம்மனிடமும் கோரிக்கை வைத்தபடி ஓடினாள்…

மகேஷுக்கு ஏதேனும் ஆகியிருந்தால் அதற்கு மேல் தானும்உயிரோடு இருக்கக் கூடாதென்று முடிவெடுத்தபடி எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ எத்தனை வேகமாக காற்றைக்கிழித்துக்கொண்டு ஓடினாள்.

மகேஷின் அம்மா காட்டிய இடத்தில், கோயிலுக்குச் சொந்தமான குளம் இருந்தது.

குளக்கரையிலிருந்து இறங்கிய படியில் வேகமாக இறங்க எத்தனித்த அமிர்தாவிற்கு வழுக்கி விட, அருகில் இருந்த சுவரைப் பிடித்துக் கொண்டாள்.

பிறகு நிதானமாக படியில் இறங்கி, இடதுபுற சுவரை உற்று நோக்க, அதில் ஒரு கல்லில் மட்டும் சிவப்பு கலரில் சூலம் வரையப்பட்டிருந்தது.

மெல்ல அதனருகில் சென்று, அந்தக்கல்லை அசைக்க முற்பட்டாள். ஆனால் அந்தக் கல் கொஞ்சம்கூட அசையவில்லை…

அப்பொழுது யாருமில்லா அக் குளத்தில் திடீரென்று "குளத்து தண்ணிய எடுத்து அதுமேல ஊத்து" என்று எதிரொலித்ததும் பயந்து பின் வாங்கியவள்,

'குளத்துக்குள் கேட்கும் குரல் யாருடையது? யாரும் தண்ணிக்குள்ள இருக்கிறாரகளோ?' என்று பயந்து, குளத்திலிருந்த தண்ணீரையே உற்று நோக்க,

"அங்க என்னத்த வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்க? நமக்கு நேரமில்ல. மூனு உசுர காப்பாத்தப் போறதில்லையா?" என்று மீண்டும் அதே குரல் வரவும்,

'ஐய்யோ அவங்களக் காப்பாத்தனுமே?' என்ற நினைவே புது உத்வேகத்தைக் கொடுத்தது.

வேகமாக மறுபடியும் சூலம் வரைந்த கல்லின் அருகில் சென்று, குளத்து தண்ணீரைக் கையிலெடுத்து, அந்தக் கல்லின் மீது மீண்டும் மீண்டும் ஊற்றினாள்.

அப்பொழுதும் கல் அசையவில்லை.

"அதோ... பக்கத்துல ஒரு இரும்புக்கம்பி இருக்கு பாரு. அத வச்சு அந்தக்கல்லைச் சுத்தி இருக்கிற மண்ணை சுரண்டி எடு… சீக்கிரம்… வேகமா…" என்று மீண்டும் குளத்திலிருந்து அந்த குரல் எதிரொலித்தது.

'இது யாரோட குரல்? திடீர் திடீர்னு கத்தி, என்னை பயமுறுத்திக்கிட்டிருக்கே' என்று நினைத்தாலும்,

அங்கே இருந்த ஒரு கூரான இரும்புக் கம்பியை எடுத்து, சூலம் வரைந்திருந்த கல்லைச் சுற்றி இருந்த மண்ணைச் சுரண்டி விட்டு, மீண்டும் தண்ணீர் ஊற்றிவிடவும் கல் அசைந்து கொடுத்தது.

"யப்பா…" என்றபடி வேகமாக அந்தக் கல்லை உருவினாள்.

ஒரு அடி நீளத்துடனிருந்த கல் வெளியே வந்ததும், கல் இருந்த துவாரத்தைப் பார்த்தவளுக்கு, பயத்தில் தொண்டை அடைத்தது.

காய்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டே மீண்டும் கல் இருந்த துவாரத்தைப் பார்த்தாள்.

"எவ்வளவு நேரந்தான் இப்படியே பார்த்துட்டிருப்ப? அதுக்குள்ள தேள், பாம்பு, பூரான் எதுவுமே இருக்காது. கையை உள்ள விட்டு சீக்கிரமா பெட்டிய எடு." என்று மீண்டும் குளத்தில் குரல் எதிரொலித்தது.

'இந்தக் குரல் யாருடையது? ஒருவேளை அந்த அகோரியின் குரலாக இருக்குமோ? இந்தப் பொந்துக்குள்ள, பாம்பு ஏதுவும் இருந்து, அது என்னைக் கொத்தி சாகடிக்கட்டும்னு நினைக்கிறாளோ?' என்ற சந்தேகம் வர,

அமிர்தா மீண்டும் குளத்தைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

"நீ அந்தப் பெட்டியை எடுக்காட்டாலும் செத்து தான் போவாய்! அதுக்கு பதிலா, துணிஞ்சு கையை உள்ள விட்டு பெட்டியையாவது எடு!" என்று மீண்டும் கடுமையாகக் குரல் எதிரொலிக்கவே,

'என்ன நடந்தாலும் சரி!' என்ற முடிவுக்கு வந்த அமிர்தா, சட்டென்று உள்ளே கையைவிட்டு, அதிலிருந்த பெட்டியை வெளியே எடுத்தாள்.

பித்தளையால் செய்த அழகான வேலைப்பாடுகளுடன் இருந்தது அந்த வெத்தலைப் பெட்டி.

ஆனால் பெட்டி முழுதும் பாசி பிடித்து பச்சை கலரில் இருந்தது.

அந்தப் பெட்டியை அமிர்தா தொட்டதுமே, அமிர்தாவிற்கு மட்டுமல்லாமல், அகோரியின் பிடியிலிருந்த மகேஷ், அனு, விக்ரமிற்கும், மயில்விழி அகோரியான கதையிலிருந்து,

தாங்கள் நால்வரில், அமிர்தா, அன்னம்மாளின் மகள் மாதவிக்குப் பிறந்தவள் என்பதும்,

விக்ரம் அன்னம்மாளின் மகன் ஸ்ரீதரின் மகன் என்பதும்,

மகேஷும், அனுவும் பொன்னுத்தாய்க்குப் பிறந்த அமராவதியின் குழந்தைகள் என்பதும்,

நால்வரும், குடும்பத்தை இழந்து அனாதைகளாக ஆஸ்ரமத்தில் வளர்ந்தது முதல், அகோரி தங்களை விரட்டுவது வரை

நால்வரின் கண்முன் மூன்றே நிமித்தில் விரிந்தது.

அனைத்தும் அறிந்ததில் மனம் சுமையாக, அசையாமல் நின்ற அமிர்தாவிற்கு அம்மூவரும் அகோரியின் வசம் இருப்பது நினைவு வந்து,

பெட்டியை எடுத்துக்கொண்டு அமிர்தா வேகமாக படிகளில் ஏறி, படிகளின் முடிவில் இருந்த எதோ ஒரு உருவத்தின் மீது மோதி, "ஆ….ஆ…" என்ற அலறியவள், மோதிய வேகத்தில் எழுந்த பயத்தாலும், அதிர்ச்சியாலும் கண்கள் இருட்ட, குளத்தின் படிகளில் உருண்டாள்.

"ஏய் என்ன பொண்ணு நீ? இப்படியா பயந்து போயி விழுவ? சீக்கிரம் எந்திரிச்சு வந்து தொலை!" என்று குளத்தின் படி முடிவிலிருந்த உருவம் குரல் கொடுத்தது.

அந்தக்குரலே குளத்திலும் எதிரொலிப்பதை உணர்ந்த அமிர்தா,

படிகளில் உருண்டதால் ஏற்பட்ட வலியைப் பொறுக்கமுடியாமல், தானாக வழிந்த கண்ணீருடன் குளத்தின் மேலே நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கே அந்த முதிய பெண்மணி இருப்பதைக் கண்டாள்.

'இந்தக் கிழவி யாரு?.... இவங்களுக்கு எப்படி இங்க பெட்டி இருக்குன்னங தெரியும்?... கடவுளே எங்கள சுததி என்ன...என்னவோ நடக்குது, எங்க முன்னோர் சொஞ்ச தப்புக்கு நாங்க அனுபவிக்குறோம்! '' என்று தன் நெற்றியில் கை வைத்து அழுத்தியவளுக்கு, அகோரியிடம் மாட்டிக்கொண்ட மூவரின் ஞாபகம் வரவும், வேகமாக படிகளில் ஏறி குளக்கரையை அடைந்தாள்.

கையிலிருந்த பெட்டியை முதியவளான மாதவிடம் கொடுத்துவிட்டு,

வந்த வழியே மீண்டும் ஓடியவளை,

"நீ அங்கே போய் என்ன செய்யப் போற? நீங்க நாலுபேரும் உசுருபிழைக்கிறதுக்கு, என் கையில இருக்குற இந்தப் பெட்டிதான் வேணும்." என்று மீண்டும் மாதவி கூற,

சட்டென்று நின்றவள். மாதவியைப் பார்த்து, "என்ன சொல்றீங்க? நாங்க நாலு பேரும் உயிரோடு இருக்க, இந்தப் பெட்டி தான் முக்கியமா? அப்ப நாங்க ரொம்ப கஷ்டப்பட்டுக் காட்டுலருந்து ஒரு பெட்டி எடுத்து வந்தமே அந்தப் பெட்டி?" என்ற அமிர்தாவைப் பார்த்தபடியே அவள் அருகில் வந்த முதியவள்,

மொதல்ல நாம அந்தப் பெட்டிக்கிட்ட போவோமா? என்று தள்ளாத வயதிலும் வேகமாக நடந்தாள் முதியவள்.

'இந்தப் பாட்டியும், எதுவும் சொல்லாம சஸ்பென்ஸ்சாவே என்னை வேலை வாங்குது…" என்று நினைத்த அமிர்தா வேறு வழியில்லாமல் அந்த முதியவளைப் பின்தொடர்ந்து சென்றாள்.

மகேஷின் அம்மா கோயில் வாசலில் வெளியே பார்த்தபடி கைகளைப் பிசைந்தவாறு நின்றிருந்தார்.

அமிர்தாவும் ஓடிச்சென்று பார்க்க, அங்கே யாருமே இல்லை… இருளைத்தவிர,

"நீ இங்க வாம்மா… இந்தப் பெட்டியத்திற…" என்று முதியவள் அழைத்ததும்,

ஓடிச்சென்று வெத்தலை பெட்டியைத் திறந்தாள் அமிர்தா. அதில் ஒரு தகடு சிவப்பு நூலால் சுற்றப்பட்டிருந்தது.

அது, ஒருமாதிரியாக எதிர்மறையான உணர்வைத் தர சட்டென்று அந்தப் பெட்டியைக் கீழே வைக்கப்போனவளை,

"என்ன செய்கிறாய்? இதைவைத்துத்தானே அந்த மூனு உசிர காப்பாத்தனும்? இது தரையில வைக்கலாமா?" என்று அதட்டிவர், மீண்டும் அந்தப் பெட்டியை அமிர்தாவின் கையில் வைத்தார்.

"இதுல ஏதோ தகடு மாதிரி இருக்கு பாட்டி!" என்று பதறியவளை,

"பாட்டியா?" என்று அதிர்ச்சியானவரின் காதில், "சீக்கிரம் நேரமில்லை" என்ற குரல் கேட்டது.

உடனே பெட்டியிலிருக்கும் தகடை எடுத்து, "நீங்கள் கொண்டு வந்த பெட்டிக்குள் இன்னொரு பெட்டி இருக்கும், அதில் இந்த தகடை வைக்கிற மாதிரி அச்சு இருக்கும். அந்த அச்சுல இந்தத் தகட்டை வச்சா உள்ளே இருக்குற பெட்டி திறந்துடும்… முதல்ல அந்தப் பெட்டியத் திற. அப்புறம் என்ன செய்யலாம்னு சொல்றேன்." என்ற முதியவளுக்கு அதற்கு மேல் பேசமுடியாமல் மூச்சு வாங்கியது.

முதியவள் மாதவி கூறியதுபோலவே, அமிர்தா மந்திரித்த தகடை, அவர்கள் கானகத்திலிருந்து எடுத்து வந்த பெரிய பெட்டிக்குள் இருந்த பெட்டியின் அச்சில் வைத்தும் உள்பெட்டி திறக்கவில்லை…

அனைவருக்குமே டென்சன் ஆகி 'ஏன்?' என்று பதைபதைக்க,

"முதல் பெட்டியைத் திறந்தது வழியில் திறப்பாய்!" என்று முதியவளின் காதில் குரல் ஒலிக்க,,

முதியவள், அமிர்தாவிடம், "முதல் பெட்டியை எப்படித் திறந்தீர்கள்?" என்று கேட்டார்.

"இதோ இதுல, கன்னிப்பையனின் ரெத்தம் வேல்ல பட்டு, அவனோட கன்னிகழியாத மனைவியின் நெற்றிமீது வைத்தபிறகுதான் திறக்கமுடியும்னு போட்டிருந்ததால, நானும் மகேஷும் அந்த இடத்துலயே காந்தர்வ முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து திறந்தோம்." என்று அமிர்தா கூறியதும்,

விரக்தியில் சக்தியெல்லாம் வடிய அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள் முதியவள்,

அதைப்பார்த்து மகேஷின் அம்மா, "என்னம்மா இப்படி இடிஞ்சுபோய் உக்காந்துட்டீங்க? பிள்ளைகள் அங்கே என்னமாதிரியான அவஸ்தில் இருக்காங்களோ? எந்திரிங்க… முடியலைன்னா என்ன செய்றதுன்னாவது சொல்லுங்க" என்று கதற,

"முதல் பெட்டியைத் திறந்ததுபோலத்தான் இந்தப் பெட்டியையும் திறக்கனும்… மகேஷ் இல்லாம இந்தப் பெட்டியை…" என்று மாதவி கூறி முடிக்கும்முன்,

"விசயம் முதல்லயே உங்களுக்குத் தெரிஞ்சும் ஏன் அமிர்தாவால திறக்கமுடியும்னு சொன்னீங்க?" என்று பதறினார் மகேஷ் அம்மா.

"எனக்கும் இப்பதான்மா தெரியும்."

"என்ன சொல்றீங்க?"

என் பிள்ளையும் அண்ணன் பிள்ளையும் அக்கா பிள்ளையும் எப்படி மயில்விழியிடமிருந்து காப்பாத்தச் சொல்லி இத்தனை வருசமா இந்த கோயிலே கதின்னு கிடந்ததால, பிள்ளைகளை காப்பாத்துற வழிய இந்தக் கோயில்ல குடி கொண்டுள்ள அம்மனே என் காதுல சொன்னா."

அமிர்தா அதிர்ச்சியில் உறைந்து விடடாள் "அப்படின்னா நீங்க எனக்கு யார்" என்று நடுக்கத்துடன் கேட்டாள்

"அம்மனா? ஆனா மகேஷ் நம்மோட இல்லையே பின்ன எப்படி பிள்ளைகள…" என்று கண்ணீரோடு மகேஷின் அம்மா கேட்கும் போதே

"ஹாஹ்ஹஹ்ஹஹ்ஹா…. இனி வழியே இல்லை... மீதி இருக்கும் அமிர்தாவையும் என்கிட்ட கொடுத்துடு மாதவி…" என்று ஊரே நடுங்கும் அளவு பெருங்குரல் எடுத்து அகோரி அலற,

"மாதவியா! அப்படின்னா நீங்க என் அம்மாவா" என்று கண்களில் கண்ணீரோடு கேட்டாள் அமிர்தா... "இத பத்தி அப்பறம் பேசலாங அமிர்தா" என்று மாதவி கூறி மிருதனிடம் பேச ஆரம்பித்தாள்...

"உன் வாழ்க்கைய அழிச்ச பாவத்திற்கான தண்டனையை எங்க குடும்பம் அனுபவிச்சுடுச்சே… குடும்பமே சின்னாபின்னமாகி இதோ குழந்தைகள் நாலுபேரும், அவங்க யாருன்னு அவங்களுக்கேத் தெரியாம அனாதையாக நிக்கிறாங்களே… இன்னுமா உன் பழி வெறி அடங்கல?..."

"இல்ல… அன்னைக்கே சொன்னேனே உன் அம்மா கிட்ட உன் பசங்கள எதுவும் பண்ண மாட்டேன் ஆனா அவங்களுக்கு பிறக்க போற பசங்கள வாழவும் விடமாட்டேன் சாகவும் விடம சாகடிப்பேன்னு அனுனுவா" என்று மிருதன் கூறினாள்,

"என்ன நடந்துச்சுன்னு கூடத் தெரியாத அப்பாவிகளை வதைக்கிறது பாவமில்லையா? நீயும் ஒரு பொண்ணுதானே? இரக்கம் காட்ட மாட்டியா?" என்று கேட்டாள் மாதவி..

"இரக்கம் காட்டவா இத்தனை வருசமா காத்திருந்தேன்?… அகோரியாவது அவ்வளவு எளிதானகாரியமா? மனசாலயும், உடலாலயும் எந்த அளவிற்கு வலி இருந்திருந்தா, இப்படி ஆயிருப்பேன்…ம்ஹும்... உனக்கு இது தேவையில்லாதது... எனக்கு ரெத்தப்பசி எடுக்குது… இது தீராப்பசி… ரெத்தத்தைப் புசிக்காம அடங்காது…"

"உனக்கு ரெத்தம்தானே வேணும்? இதோ என் உடலை எடுத்துக்கோ. குழந்தைகள் மூனுபேரையும் விட்டுடு." என்று மாதவி கண்ணீர் விட்டுக்கதறி அழ,

" உன்னைத் தியாகம் செய்கிறாயா? ஆனா உன் ஒருத்திக்காக மூனுபேரையும் கேட்கிறது அநியாயமா இல்ல?" என்று அகோரி சிரிக்க,

'மகேஷ் மட்டும் வந்துவிட்டால் கூட பெட்டியைத்திறந்து விடலாம்' என்று யோசித்த மாதவி, "மகேஷை மட்டுமாவது கொடுத்து விடு!"

"அது ஏன் மகேஷ் மட்டும்?"

"இந்தத் தாய்க்கு மகன் வேண்டும்… அவனின் மனைவியான அமிர்தாவுக்கு அவளுடைய கணவன் வேண்டும்…" என்று மகேஷை கேட்பதற்கான காரணத்தை மாற்றி, அன்னம்மாள் கூறவும்,

"சரி வா!" என்று அகோரி அழைத்தாள்.

"நில்லுங்கம்மா… ஏற்கனவே மூனுபேரோட நிலை என்னன்னு தெரியாம தவிக்கிறோம். இதுல நீங்களும் போயிடாதீங்க" என்று மகேஷின் தாய் தடுத்தார்.

அதைக் காதில் வாங்காமல் அகோரியிடம், "நான் உன்கிட்ட வரனும்னா நீ கொண்டு போன மூனு பிள்ளைகளையும் நாங்க பார்க்கனும்." என்று அன்னம்மாள் கேட்டார்.

"இதோ!" என்று அகோரி கை காட்டவும்,

அந்தப் பகுதியில் சூழ்ந்த இருள் குறைந்து, விக்ரம், அனு, மகேஷ் மூவரும் தலைகீழாக அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது புலப்பட்டது.

அதைக் கண்டு அங்கமெல்லாம் பதறியபோதும், அதை வெளிக்காட்டாமல்,

"மகேஷை அனுப்பு, நான் அங்க வர்றேன்." என்றாள் மாதவி.

"இங்கு நான் தான் கட்டளை இடும் இடத்தில் இருக்கிறேன்… நீ கேட்கும் நிலையில் நிற்கிறாய்" என்று அகோரி கூறினாள்.

'இனி வாதாடுவது வேஸ்ட்' என்று உணர்ந்த மாதவி கோயிலை விட்டு வெளியேறியதும்,

மாதவியின் கூந்தலைப் பற்றி அந்தரத்தில் எழுந்த அகோரி,

"முட்டாளே! என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டாயே… ஹஹ்ஹஹ்ஹாஹா… இதோ உன்னை வைத்தே உன் மகளையும் வெளியே வரவழைக்கிறேன் பார்!" என்று ஆக்ரோஷமாக கத்தினாள்.

"கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டாயா?" என்று மாதவி கேட்க,

"நான் அகோரி. மனித ரெத்தம் புசிப்பவள். என்னிடம் வாக்கு, நியாயம்னு பேசுறது உனக்கே கிண்டலா இல்ல?" என்று சிரித்த அகோரி,

அமிர்தாவிடம், "உன் அம்மாவை விட்டுடுறேன் நீ வெளிய வா!" என்று அலறினாள்.

உடனே பதறி, அமிர்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு,

"இப்ப மட்டும் சொன்னபடியா நீ நடந்துக்கிற?" என்ற மகேஷின் அம்மா கேட்டார்.

"அமிர்தாவ என்னோட அனுப்பிட்டா நான் போய்விடுவேன்… நாலுபேரையும் அணுஅணுவாய் ரசிச்சு உண்பேன்…" என்று கூறியவளிடம்,

மகிழன், "போதும்! அவங்கள விட்டுடு! அன்னம்மா பொன்னுத்தாயின் தியாகத்தை உதாசீனம் செய்யாத… பல வருசங்களா இந்த கோயில்ல நிஷ்டையில் இருந்த மாதவி கிட்ட கடவுளோட விஷேச சக்தி, துணை இருக்கும்… மாதவிய கொன்னா அந்தப் பாவம் உன்னை சும்மா விடாது…" என்ற மகிழன்,

"இதுவரை உனக்காகவே உன் நிழலா வாழ்றேன். எனக்காகன்னு இதுவர நான் உன்கிட்ட, எதுவுமே கேட்டதில்ல… இன்னைக்கு இந்த மாதவிக்காக கேட்குறேன். நீயும் ஒரு பொண்ணு. ஒரு தாயோட பரிதவிப்பு உனக்குப் புரியவில்லையா? அவங்கள விட்டுடு..."

"எனக்காக என்னோட இருக்கிறேன்ற. ஆனா என் வலி உனக்குப் புரியலையா?" என்று ஆங்காரமாய் மகிழனிடம் அகோரி கேட்க,

"அது புரியாமலா இருக்கேன்… எனக்கு உன் மனநலமும் முக்கியந்தான் விழி… ஒரு நிமிசம் எங்கூட பழகின மயில்விழியா இருந்து யோசி… இவங்கள கொல்றதால உனக்கு சந்தோசம் கிடைச்சுடுமா?... அப்பாவிகள அழிக்கிறதுல சந்தோசப்படுறவளா நீ?"

"அப்பாவிகளா?"

" பின்ன? உன் வாழ்க்கைய அழிச்சவன்களும், அவனுங்க குடும்பமும்தான் அழிஞ்சுடுச்சே… இவங்க உனக்கு என்ன பண்ணாங்க?"

"இத்தன வருசமா இவங்களப் பழிவாங்கத்தான இப்படி அலையிறேன்." என்று தன் உருவத்தைக் காட்டிக் கூறியவளைப் பரிதாபமாக பார்த்தவன்,

"அந்த மிருகங்கள் அழிஞ்சதுமே உன் பழி உணர்வு போயிடுச்சு விழி… அத நீதான் புரிஞ்சுக்கல… அன்னைக்கு இருந்த கோபத்துல, நீ சொன்ன வார்த்தையத்தான் இப்பவர நீ புடிச்சுக்கிட்டிருக்க... ஒரு தாயா அன்னம்மாவும் பொண்ணுதாயும் தியாகம் பண்ணும்போதே நிச்சயமா உன் மனசு இளகிடுச்சு... இல்லையா?"

"இல்ல… இல்லவேயில்லை...,நீ எனக்கு ஆதரவா பேசமாட்டியா மகிளா?" என்று ஏக்கத்தோடு கேட்டாள் மிருதன்...

"உனக்காகத்தான் பேசுறேன் விழி! உனக்குள்ள இருக்கிற என் விழிய எழுப்புறேன். என் விழி, நான் பார்த்து வளர்ந்த விழி, ரொம்ப நல்லவ, விலங்குகளுக்குக் கூட இரங்குறவ, கண்ணுல கருணையோட இருந்தவ"

"அவளத்தான் துடிக்கத்துடிக்க உயிரோட கொன்னுட்டாங்களே?"

"அவங்க மிருகம். மிருகத்துட்ட நல்லத எப்படி எதிர்பாக்க முடியும்? ஆனா நீ?"

"அப்புறம் ஏன் இதுவர எங்கூட இருந்த?"

"உன்னோட வலி தீரட்டும்னு காத்திருந்தேன்… என் விழிய மறுபடியும் பார்க்கத்தான் தவங்கிடக்கேன்…" என்று மகிழன் கூறவும் சற்று இரங்கியவள்,

மீண்டும் உக்கிரமாக கத்தினாள். "என்னைய பைத்தியக்காரின்னு நினச்சியா? இதோ இப்பவே எனக்கு இருக்குற பழிவெறிய இந்த மாதவியை வச்சே தீர்த்துக்கிறேன்." என்று மகிழனிடம் அலறிவிட்டு,

அந்தரத்தில் இருந்தபடி மாதவியை தன் மடியில் கிடத்தி மாதவியின் வயிற்றைக்கிழிக்க முயன்றவளை மகிழன் தடுப்பதற்காக நெருங்க,

அவளுகிருந்த ஆத்திரத்தில் மகிழனைப் பிடித்து முரட்டுத்தனமாக தள்ளிவிட்டாள் மிருதன்.

பிறகு மீண்டும் மாதவியின் வயிற்றை நோக்கி கையைக் கொண்டு போனவள் மீது ஏதோ ஒரு பொருள் பட மிருதனின உடல் ஷாக் அடித்தது போல் ஆகோரோசமாக கத்தி கொண்டே மாதவியை தன் மடியிலிருந்து கீழே தள்ளி விட்டவள்.

அங்கே அமிர்தா, அனு, விக்ரம் மகேஷின் கையில், கபீர்தாசால் கொடுக்கப்பட்ட கயிறை மொத்தமாக இணைத்து கட்டி அதை மிருதனின் கழுத்தில் வசினாள் அமீர்தா...

மிருதன் தன் சக்கி அனைத்தையும் ஒன்று திரட்டி தன் கழுத்தில் இருந்த கயிறை அறுத்து எரிந்தாள்.... கோலத்துடன் கோவில் வாசலை பார்த்த மிருதன் அதிர்ச்சியாகி மகிழனை கண்டாள்..

அமிர்தா அருகில் மகேஷ், அனு, விக்ரம் நிற்பதைக் கண்டு, அதற்குக் காரணமான மகிழனை எரித்துவிடுவதைப் போல் பார்த்தாள்.

மீண்டும் மாதவியை பிடிக்க எண்ணித் தேட, மகேஷின் அம்மா, மாதவியை இழுத்துக்கொண்டு கோயிலை நோக்கி ஓடுவதைப் பார்த்து விட்டு, கோயில் வாசல்படியில் காலை வைத்த மாதவியின் மறுகாலை பிடித்துவிட்டாள் அகோரி.

அகோரியின் கூரான நகங்கள் முதிய சருமத்தை எளிதில் கிழிக்க, கால்களில் ரெத்தம் வடிந்து கோயில் வாசலில் விழுந்த வினாடியில் அதே நேரம், மகேஷ் அந்த பெட்டியின் மேல் மறுபடியும் இரத்தத்தை பட வைத்து அமிர்தா நெற்றியில் வைத்தான் மகேஷ்....

அப்போது பெட்டி திறந்து பொண்ணுத்தாய் அன்னம்மாள் இரத்தம் வெளியில் வந்து மாதவியின் உடலிலிருந்து மறுபடியும் விழ இருந்த இரத்தத்தை அன்னாம்மாள் பொண்ணுத்தாயீன் இரத்த உருண்டையோடு சேர்ந்து பெரிய இரத்த துளியாய் உருவெடுத்தது... அதோடு நிற்காமல் வெத்தலை பெட்டியிலிருந்து எடுத்த தகரத்தின் மையத்தில் சக்கரம் போல் சுற்றி பூமியை சுற்றுவதை நிருத்த செய்தது...

அனைத்து ஜீவராசிகளும் அப்படியே உறைந்தது போல் நின்று விட்டது.. மிருதன்னும் மகிழன்னும் தவிர...

"என்ன காரியம் செய்ய இருந்தாய் மிருதா" என்று கோவமாக கேட்டது தக'டின் உள்ளே இருந்த இரத்தமாய் தவமிருந்து இறைவனிடம் அருள் வாங்கி கடவுளையே தன் வம்சத்தை பாதுக்காக்க அழைத்து வந்த அம்பாளின் குரல் கேட்டது...

"எனக்கு நடந்த அநியாயத்திற்கு நானே நீதி எழுதுகிறேன் தாயே" என்று காட்டமா கூறினாள் மிருதன்...

”அப்படி என்றால் ஒரு தவறும் செய்யாத அப்பாவி குழந்தைகளுக்கு நீதி வழங்க நான் வந்து இருக்கிறேன்”
என்று அம்பாள் கூறினாள்...

"இவர்கள் முன்னோர் செய்த பாவத்திற்கு தான் இவர்கள் தண்டனை அழிக்குறேன்" என்று அகங்காரமாய் அம்பாளிடமே கோவமாக பேசினாள் மிருதன்...

"அதான் நீயே கூறி விட்டாயே, இது அவர்கள் முன்னோர் செய்த பாவமென்று..., அதன் பிறகு ஏன் தண்டிக்க நினைக்குறாய்"

முன்னோரின் சொத்து அவர்கள் வழி வந்தவர்களு தான் சேரும்.... அது போலத்தான் அவர்கள் செய்த பாவம் அவர்கள் வழி வந்த பிள்ளைகளை சாரும்...... ஆகையால் இவர்களை கொன்று என் வன்மத்தை துறப்பேன்" என்று ஆக்ரோஷமாய் காத்துக்கொண்டு அவர்களிடம் சென்றாள்...

"நில்! மிருதா நீ கூறுவது நியாயம் தான்..... ஆனால் அதற்கு தான் நீ அவர்கள் முன்னோருகளை கொன்று பழிதீர்த்து விட்டாயே.... அதன் பிறகு ஏன் அவர்கள் கொல்ல நினைக்கிறாய்.. நீ அவர்கள் நால்வரையும் தண்டிக்க உரிமையும் இல்லை நியாயமும் இல்லை" என்று அம்பாளின் குரல் பொருமையாக எடுத்து கூறியது...

ஆனால் அவ்வார்த்தைகளை கேட்கும் பொறுமையும் இல்லை அவள் பழிவாங்கும் எண்ணமும் அதை கேட்ட விடாமல் அவர்களை கொல்ல முன்னேரி சென்றாள் மிருதன்...

கோவம் கொண்ட அம்பாள் அந்த இரத்த துளியில் ஒரு பகுதியை மிருதனின் மேல் செலுத்தி துடிக்க வைத்தாள்..... மகிழன் "தாயே அவளை விட்டு விடுங்கள் அவளுக்கு நடந்த அநியாயத்தின் வெளிப்பாட்டால் அவள் அப்படி நடந்து கொள்கிறாள்.... அவளிடத்தில் இருந்து யோசித்தால் அது நியாயமா தெரியலாம்.... ஆனால் அவள் தன் இடத்தில் மட்டுமிருந்து ம தான் யோசிக்குறாளே தவிர அவர்கள் நால்வரின் இடத்திலிருந்து யோசிக்க தடுக்கிறது அவளின் பழி உணர்வு" என்று கூறினான்..

மறுபடியும் அந்த இரத்த துளிகளை அந்த தகரத்தில் எடுத்து கொண்டாள் அம்பாள்.... மிருதன் அந்த இரத்த துளிகள் முன் மண்டியிட்டு அமர்ந்து " என்னை மன்னித்து அருள்க! தாயே ஆனால் நான் என் வாழ்க்கை இழந்து இப்படி ஒரு நிலைமையில் நிற்பதற்கு காரணம் அவர்கள் நால்வரின் தாத்தா தானே" என்று ஆதங்கத்துடன் கேட்டாள்...

அம்பாளின் குரல் " ஆம்! உன் வாழ்க்கை ஆழிய காரணம் இவர்கள் முன்னோர்களாக இருக்கலாம் அதற்கு நீ பழியும் தீர்த்தும் விட்டாய்.... ஆனால் இப்பிரச்சினைக்கு சம்மந்தம் இல்லா இப்பிள்ளை தண்டிக்க நினைப்பது எவ்வகையில் நியாயம் ? கூறு மிருதா"

மிருதன் ஒரு நிமிடம் மௌனத்திற்கு பின் "நான் வாழ நினைத்த வாழ்கை என் கண்முன்னாடியே அழிந்து விட்டதே தாயே மறுபடியும் நான நினைத்தால் வாழ முடியுமா" என்று கோபமாகவும் ஆதங்கத்துடனும் " அதற்கு காரணம் இவர்கள் முன்னோர்கள் தானே" என்று கேட்டாள்..

” நீ இழந்த வாழ்க்கையை மறுபடியும் வாழ்வாய் ஆனால்; அடுத்த பிறவியில்... இப் பிறவியில் இருந்து உனக்கு முக்தி அழித்துறேன்" என்று அம்பாள் கூற, "தாயே! எனக்காக, என்னை மட்டுமே நினைத்து, என்னுடனே இருந்த என் மகிழனுக்கு நான் என்ன கைமாறு செய்ய.... நான் மட்டும் முக்தி அடைந்தால், என்னை நினைத்து..... எனக்கு அனைத்துமாய் இருந்த மகிழனை விட்டு நான் மட்டும் முக்கி
பெறுவாதா என்று அதிர்ச்சியாக கேட்டாள் மிருதன் என்னும் மயில்விழி...

அம்பாளின் குரல்" உனக்கு மட்டும் இல்லை மிருதனுக்கும் தான் முத்தி அளித்துறேன், உன்னை மட்டும் நினைத்து உனக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த உன் மகிழன் இப்பிறவியில் உன்னுடன் வாழ நினைத்த வாழ்வே அடுத்த பிறவியில் வாழ்வான்..... வாழ்வீர்கள்" என்று ஆசி வழங்கி....

அவர்கள் இருவரின் மீது ஒளி விழ அவர்கள் காற்றோடு காற்றாய் கலந்து வானத்தில் சென்று மறைந்தனர்..

உறைந்து போய் நின்றவர்களில் அவர்கள் நால்வரின் காதில் மட்டும் அவ்ஒளி கேட்டத்து "விக்ரமிற்கு மயில்விழியே மகளாகப் பிறப்பாள். அவளுக்கு மயில்விழி என்றே பெயரிடுங்கள். மகேஷுக்கு மகிழனே மகனாகப் பிறப்பான். அவனுக்கும் அதே பெயரிடுங்கள்‌ எக்காரணம் கொண்டும் அவர்கள் இருவரையும் பிரிக்காதீர்கள்." என்று கூறிய தாய்,

"யாரும் எக்காரணத்தினாலும் ஒரு பெண்ணிற்கு தீங்கு விளைவிக்காதீர்கள்… பெண்பாவமானது வம்சத்தையே ஆட்டிப்படைத்து விடும் என்பதை உணர்ந்து, நடந்துகொள்ளுங்கள்." என்று கூறி தகடும் அதிலிருந்து இரத்த துளிகளும் மறைத்தது. அதன் பிறகு அனைத்து ஜீவராசிகளும் உறைந்த நிலையில் இருந்து மீண்டு வந்தனர்...

அவர்கள் ஆறு பேருக்கு அங்கு நடந்தது எதுவும் தெரியவில்லை என்றாலும் கார் சூழ்ந்து இருந்த வானம் தெளிவு வந்ததிலும் அவர்கள் நால்வரின் காதில் கேட்ட வார்த்தையும் அவர்கள் பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று உணர்ந்து கொண்டனர்....

மகேஷ் - அமிர்தா, விக்ரம் - அனு இரு ஜோடியும் நில மணிநேரத்தில் நடந்த விபரிதத்தின் மூலம் அவர்கள் துணை மீது அவர்கள் கொண்ட காதலை புரிந்து இனி வாழ்வில் ஒரு நாள் பிரிய மாட்டேன் என்று கூறும் அளவிற்கு இருகி கட்டியணைத்து கொண்டார்கள்...

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மிருதனின் அசுரம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் தான் வேறு விதமாக இருக்கிறது...

மறுபிறவியில் இவர்களின் காதல் கைகூட இறைவனை வேண்டி விடைபெறுவோம்.

🙏🏼வணக்கம்🙏🏼
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
எபி லாக்...



ஐந்து வருடங்கள் கழித்து

காபியை அருந்தியப்படி ஏதோ யோசனையில் இருந்தான் மகேஷ். சிறிது தூரம் தள்ளி வீட்டின் பூங்காவில் மகேஷ் அமிர்தா மகனும் விக்ரம் அனுவின் மகளும் விளையாடிக் கொண்டு இருப்பதை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்து காபியை பருகினான்.

தன் அருகில் இருக்கும் கணவன் பலத்த யோசனையில் இருப்பதை பார்த்த அமிர்தா " என்ன பலத்த யோசனையில் இருக்கிங்க போல " என கேட்டபடி அவளும் மாலை சிற்றுண்டியை பொறித்துக் கொண்டு இருந்தாள்.

" ம்ம்ம் ஆமா, " என மகேஷ் வார்த்தையில் உணர்ச்சியே இல்லாமல் கூற. அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள்,

"அப்படி என்ன யோசனை? " என்று கேட்டாள்.

அப்போது தான் அருகில் இருந்த விக்ரம் அனு மாதவி மகேஷின் வளர்ப்பு அம்மா என அனைவரும் இருவரின் பேச்சி சத்தம் கேட்டு மகேஷை திரும்பி பார்த்தனர்.

மகேஷிம் ஒரு பெருமூச்சி விட்டு திரும்பி இவர்களை பார்த்தவன் " என்னால இன்னும் நடந்ததை முழுசா மறக்க முடில. " என்றான்.

" அதான் ஐந்து வருஷமாகிடுச்சே இன்னுமும் அதையே நினைச்சிட்டு இருக்க போறீயா? "என விக்ரம் கேட்டான்.

" உனக்கு புரியாது விக்ரம், அப்போ நான் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும். "

"டேய் இது என்ன டா புது கதையா இருக்கு. நாங்களும் தான டா உன் கூட கஷ்டத்தை அனுபவிச்சோம். என்னவோ நீ மட்டும் தான் தனியா கஷ்டப்பட்ட மாதிரி பேசுற?"

விக்ரம் சொன்னதை கேட்ட மற்றவரும் அதனா என ஒன்றாக கூற. மகேஷ் மெல்ல எழுந்து இரண்டு அடி எடுத்து வைத்து விளையாடிக் கொண்டு இருக்கும் பிள்ளைகளை பார்த்து பெருமூச்சுடன்,

"அந்த மிருதன் என் மூலமா தான் டா உங்களை அழிக்க நினைச்சது. என் மூலமா தான் உங்களை இங்க கொண்டு வந்து சேர்த்து நம்மளை ஒன்னாக்கியது. " என்று கூற. அனைவரும் அதிர்ந்தனர்.

அனுவோ " என்ன மகேஷ் சொல்ற? "என்று அதிர்ச்சியோடு கேட்க.

மகேஷோ " ம்ம் ஆமா, இதை இத்தனை வருஷமா சொல்ல முடியாம ரொம்ப கஷ்டப்பட்டேன் மனசுக்குள்ள நினைச்சி நினைச்சி ரொம்ப துடிச்சிட்டேன். முதல் முதல அந்த மிருதன் என்னை மிரட்ட ஆரம்பிச்சிது. என் அம்மாவை வச்சி என்னை பயம் காட்டிச்சி. அது சொல்றபடி நடக்கலனா என் அம்மாவை கொன்னுடும்னு மிரட்டல். என்ன தான் அது சொல்ற மாதிரி நான் நடந்தாலும். நீங்க மூன்னு பேரும் வந்ததும் கதையே அப்படியே மாற ஆரம்பிச்சிது. நம்ம ஒன்னா இருக்கும் போது நம்மளையே அறியாம ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருந்தோம். அப்புறம் தான் மாதவி அம்மா வந்து எல்லாமே நல்லப்படியா முடிஞ்சிது. ரொம்ப நாளா சொல்லனும் மனசை போட்டு அரிச்சிட்டே இருந்த விசியம் அதான் இதுக்கு மேலயும் மறைக்க வேணாம் சொல்லிட்டேன்ன் " என்று நடந்ததை கூறியவனை பார்த்த விக்ரம் அனு அமிர்தா மூவரும் முறைத்துக் கொண்டடு இருக்க. மகேஷின் அம்மாவோ கண்கலங்கி விட்டார்.

மாதவியோ " விடுங்கப்பா அதான் எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சிடுச்சில. " என்று பேச்சை மாற்றினார்.

அப்போது தான் விக்ரம் மாதவியை பார்த்தவன் கேள்வியாக " ஆமா ம்மா உங்களுக்கு எப்படி எங்களை தெரிஞ்சது. எப்படி இந்த விசியம்ல தெரியும். சரியா எப்படி அங்கே வந்திங்க. " என்று கேட்டான்.

மாதவியோ அவர்களை பார்த்து மென்மையாக புன்னகைத்து " உங்களை தொலைச்சிட்டு பைத்தியக்காரி மாதிரி ரோடுல திரிஞ்சிட்டு இருந்தேன் ப்பா. எங்கே எங்கேயோ உங்களை தேடிக்கிட்டு இருந்தேன். அப்போ தான் ஒரு ஊருல பாயை பார்த்தேன், அவர் என்னை உற்று பார்த்து யோசித்தவர் அன்னம்மா பொன்னுதாயி சன்னதினு தெரிஞ்சிக்கிட்டாரு. அப்புறம் என்னை அழைச்சிட்டு போய் நடந்ததை எல்லாத்தையும் சொன்னாரு. கண்டிப்பா ஒரு நாள் அந்த மிருதா தன்னோட பசியை தீர்த்துக்க வரும் அப்போ என் உதவி உங்களுக்கு கண்டிப்ப தேவைப்படனும். அந்த உதவியை எப்படி செய்யனும் வழியையும் சொன்னாரு. அதையெல்லாம் கேட்டு நான் ரொம்ப பயந்துட்டேன். அப்புறம் உங்களை தேடி ஊர், ஊர் அலைந்தேன். அப்படியே காலமும் உருண்டோடிச்சி. கடைசியா உங்களையும் அந்த கோவில பார்த்தேன். " என அவர் தனக்கு தெரிந்ததை கூற. மற்றவர்களுக்கோ மனம் பாரமாகி போனது.

ஒருவருக்கு ஒருவர் எதுவும் பேசிக் கொள்ளாமல் மௌனமாக இருக்க. அனுவோ தீவிர யோசனையாக மகேஷின் அம்மாவை பார்த்தவள் " அம்மா அன்னிக்கு நீங்க ஒன்னு சொன்னீக ஞாபகம் இருக்கா? "என்று கேட்டாள்.

அவரோ யோசனையோடு " என்ன சொன்னேன்? எப்போ சொன்னேன்? "என்றார் கேள்வியோடு.

" அதான் ம்மா, அன்னிக்கு கதையை சொன்னிங்கல அப்போ, நேரில் பார்த்த நானே பயப்புடல கதையை கேட்ட நீ ஏன் அப்படி பயப்புறனு? அப்போ நீங்க அன்னமா பாட்டிக்கு நடந்த சம்பவத்தை நேரில் பார்த்திங்களா? "என்று கேட்க. அனுவின் கேள்வியில் மற்றவர்கள் அதிர்ச்சியோடு அவரை காண,

அவரோ " ம்ம் ஆமா " என்று கூறியவர் நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்.

"அப்போ நான் சின்ன பொண்ணு எங்க வீடும் அன்னமா வீடும் எதிர் எதிர் காம்பவுண்ட் தான். நாலுமாடி குடியிருப்பு அது, அன்னிக்கு இரவு எனக்கு தண்ணீ தாகம் எடுத்துச்சி, எழுந்து போய் சமையல் ரூம்ல தண்ணீ குடிச்சிட்டு திரும்பி வந்து படுக்கலாம் பார்த்தப்ப கீழே யாரோ கத்துர சத்தம். என்னனு மேல இருந்த எங்க வீட்ல இருந்து பார்த்தேன் அப்போ தான் அந்த மிருதா அன்னமாவை துரத்திட்டு வந்து கோவிலுள்ள போக விடாம தடுத்து சித்திரவதை செய்ய ஆரம்பிச்சது. எனக்கு ரொம்ப பயம் எடுத்துக்கிச்சு. உடனே சாமி ரூமுக்கு போய் விபூதி பூசிக்கிட்டு வந்து எங்க அம்மா பக்கத்துல படுத்துக்கிட்டேன். அப்புறம் விடிஞ்சதும் அன்னம்மா வீட்டுக்கு பயத்தோடு போய் பார்த்தா அன்னம்மா தலைவெறி கோலமா இருந்தாங்க. நான் அப்படியே பயந்து ஓடிவந்துட்டேன். " என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.

இதையெல்லாம் கேட்ட அனைவருக்கும் மனம் திரும்ப சலனம்ப்பட. மாதவி தான்,

"இனி முடிஞ்சதை பத்தி எதுவும் பேச வேணாம் " என்று உறுதியாக சொல்லியவர் எழுந்து வீட்டிற்குள் சென்று விட்டார். அவரை தொடர்ந்து மகேஷின் வளர்ப்பு அம்மாவும் சென்று விட. மற்ற இரு ஜோடிகளும் தங்கள் பிள்ளைகளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

ஆம் மகிழனும் மயில்விழியும் இப்பிறவிலும் ஒற்றுமையாக மிகுந்த அன்போடு ஒருத்தருக்கு ஒருத்தர் துணையோடு விளையாடிக் கொண்டு இருந்தனர்.

இனி இவர்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும்...

முற்றும்..

நன்றிகள் பல.



Thread 'மிருதனின் அசுரம் - Comments' https://www.sahaptham.com/community/threads/மிருதனின்-அசுரம்-comments.998/
 
Status
Not open for further replies.
Top Bottom