மெளனம்6
இத்தகைய கேள்வி தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை ' கிடுக்குபிடி கேள்விகளை இன்ஸ்பெக்டர் கேட்கிறார்? என்ன சொல்வாள்? ' உபேதாவிற்கு மண்டை குடைச்சல் கொடுத்தது ஆனால் துவாரகாவோ தெளிந்த நீரோடையை போல மனதை வைத்திருந்தாள். எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்க்கலாம் என்ற நம்பிக்கை அவளுக்குள் மேலோங்கி இருந்தது. இந்த நாள் போல் அவள் எந்த நாளும் இருந்ததில்லை துணிவு என்பது அவள் அகராதியிலேயே கிடையாது.
பிரித்வி கூட அடிக்கடி கிண்டல் செய்வான் 'அட! தொடை நடுங்கி உன்னை போய் பத்திரிகை துறையில் எடுத்தார்களே' அப்போதெல்லாம் அவளுக்கு அது அவனின் மேம்போக்கான காமெடி கருத்திகவே தோன்றும். ஏனோ அதே கருத்தை பல்வேறு கோணங்களில் பலதரப்பட்ட மனிதர்களிடம் இருந்து பெறும்போது சலித்து போனது ஏனோ துவாரகா கேட்ட அவமதிப்பான வார்த்தைகள் அவளுக்கு பயம் என்பதை மரக்க செய்து தெளிவான நம்பிக்கையை பாய்ச்சியது. 'பரசு போன்ற குள்ளநரிகளை சமாளிக்க இன்னும் துணிச்சலான மங்கையாக அல்லவா மாறவேண்டும்.' என்பதையும் சில நேரங்களில் நினைத்து கொள்வாள்.
அந்த நிமிடம் அவள் பெரிதும் தாமதிக்கவில்லை அவளிடம் ராக்கெட் வேகத்தில் பதில் இருந்தது. "சார், இந்த பொருள் இவர் தான் வைத்திருக்க வேண்டும். இதோ இந்த பொருள் பணக்காரர்களுக்கு மட்டும் தான் உரித்தானது? ஏதும் நிபந்தனைகள் இருக்கிறதா சார். லேப்டாப் ஒரு கொடி ரூபாய் இல்லை சார் ஒரு லட்சம் ரூபாய் தான் குரோம்பேட்டை, சைதாப்பேட்டை பக்கம் போய் பாருங்கள் மலிவான விலையை கேட்டு அசந்து விடுவீர்கள். இது நான் சிறிது சிறிதாக சேமித்து என் உழைப்பில் வாங்கியது" துவாரகாவின் பதில் இன்ஸ்பெக்டரை உறுத்த தான் செய்தது. மீண்டும் சூழல் நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்த படி"சரியம்மா, உனக்கு தான் இது விலை பொருட்டு இல்லையே. அப்பறம் ஏன் அது அத்தனை அவசியம்? " நக்கல் பார்வையும், ஏளன சிரிப்பும் எட்டி பார்த்தது அதில் என்னையா கேள்வி கேட்கிறாய் இரு! என்பதை போல் இருந்தது.
'யாரடா இவன் இத்தனை லூசு தனமான கேள்விகளை கேட்கிறான்' உபேதா மனம் உள்ளார திட்டிக் கொண்டே இருந்தது. துவாரகா எதுக்கும் அசரவில்லை "சார், நான் அவசியத்திற்கு தை தேடவில்லை? அவசரத்தில் தேடுகிறேன், என் எதிர்காலமே அதில் தான் இருக்கிறது நான் பிஹச்டி செய்து கொண்டு இருக்கிறேன் என்னுடைய முழு திசிசூம் அதில் தான் வைத்து இருக்கிறேன். இன்னும் இரண்டு நாட்களில் அதை சமீட் செய்ய வேண்டும் இல்லையெனில் என் வாழவே கேள்விகுறி ஆகிவிடும். எந்த காபியும் இல்லை மொத்தமும் அதில் தான் வைத்து தொலைத்து விட்டேன்"
பச்சை பிள்ளை போல அவள் முகத்தை வைத்து தளதளத்து பேசும் போது எதிரே இருப்பவர்கள் சற்று உடைந்து தான் போவார்கள். 'இது என்ன புது கதையாக விடுக்கிறாள். சாவித்திரி போலே நடிக்கிறாளே' உபேதா எண்ணிக் கொண்டாள்.
"தணிகாச்சலம் அந்த ஏட்டு இராவணன வர சொல்லுங்க" பெண் கண்ணீருக்கு பேயும் இறங்கும் என்று சும்மாவா சொன்னார்கள். 'சாதித்து விட்டாய்டி'தன்னை தானே மெட்சி கொண்டாள் துவாரகா. சற்று நேரம் பொருத்து "சார்.. " என்ற பரப்பரப்புடன் சல்யூட் அடித்தபடி வந்து நின்றான் அந்த தூண் உயர வாலிபன். போலிஸ்கே உரித்தான உடல்வாகு அளந்த மீசை , படிந்த கேசம் 'ஹாண்ட் சம் ஆளு நீ! சூப்பர் குளு நீ! ' உபேதா மனம் ஒரு நிமிடம் பாடி முடித்தேவிட்டது.
"யப்பா..இராவணா இதோ இவங்க லேப்டாப் மிஸ்ஸிங் கூட போ. டீட்டைல் கேட்டுக்கோ? எங்க ஏறுனாங்க எங்க இறங்குனாங்க? எந்த பஸ்?அப்பறம் அந்த பஸ் டிப்போல போய் விசாரிச்சிட்டு வந்துடு. சரிதான! "நெஞ்சில் விரைப்பு குறையாமல் " யேஸ் சார்.. " நிமிர்ந்து நேராக நின்று கம்பீரமாக சல்யூடோடு சொன்னான்.
'ஆர்வகோளாரு!!' சப்இன்ஸ்பெக்டர் வாய்விட்டே உளரிவிட்டார்.
"வாங்க மேடம்" இரண்டு பெண்களும் எழுந்து இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் இருவருக்கும் சேர்ந்தார் போல் பணிவு கலந்த நன்றியை வைத்து விட்டு கிளம்பினார்கள்.
மூன்று பேரும் வெளியில் வந்தனர் "இரண்டு பேர்ல யாரு மிஸ் பண்ணுனது" அவன் கேட்டதும் போதும். அத்தனை வேகம் உபேதா துவாரகாவை கையைகாட்டி விட்டாள்.
"சரி.. நீங்க வாங்க மேடம்" எதோ சொந்தகார பெண்ணை வீட்டுக்கு அழைப்பது போல அழைத்தான். "எங்க? " துவாரகா விழித்தாள்.
"ஆங்.. சினிமாவுக்கு. மேடம் மிஸ்ஸிங் ஸ்பாட்ட வந்து காட்டுங்க, ஸ்டேட்மெண்ட் எழுதனும். "சற்று தள்ளி நின்ற பைக்கை ஸ்டார்ட் பண்ணினான் பின் அவள் அருகே வந்து உர்உர்.. என்று அதைவேற உறும செய்து கொண்டே இருந்தான். உஷ்ணம் தலைகேறியது துவாரகாவிற்கு. " சேத்த போறப்பா" கடுப்பாக தான் சொன்னாள். அவன் செய்வதையெல்லாம் ரசித்த படி நின்றாள் உபேதா.
"உபேதா நீ இதே ஸ்டிரீட்ல இருந்ததுல காபி ஷாப்ல அதுல வெயிட் பண்ணு நான் போயிட்டு உடனே வந்திடுறேன்" அவனுடன் போக அவளுக்கு ஏனோ பெரும் தயக்கமாக இருந்தது. தயங்கி தயங்கி நின்று கொண்டிருந்தாள் "ஏம்மா.. ஏறுமா எனக்கு வேலையிருக்கு" என்று சலித்து கொண்டான். 'ஏம்மா.. ஏறுமா.. கிழவியை அழைப்பது போல அழைக்கிறானே' துவாரகா சங்கடபட்டாள்.
எப்படியோ ஒரு வழியாக இருவரும் அவ்விடத்தில் இருந்து கிளம்பினார்கள்.
சாலையில் சத்தமே இல்லாமல் போய் கொண்டிருந்த பைக்கில் துவாரகா மனம் அலைகடல் போல குமுறி கொண்டு இருந்தது. 'காலையில் இருந்து நேரம் சரியில்லை! அந்த பரசுவிடம் தப்பித்து இந்த பத்து தலைகாரனிடம் அகபட்டு கொண்டேனே. '
"மேடம்.. பஸ்ல யாராவது உங்கள நோட்பண்ற மாதிரி ஏதும்??" காற்றின் சத்தத்தில் அவன் கேட்டது இவள் காதில் ஏறவில்லை. "என்ன? " காட்டுகத்தலாக கத்தினாள். அவன் காதுக்குள் உஊ.. உஊ.. என்று சத்தம் கேட்டது. காதை ஒற்றை கையால் போத்தியபடி"ஏம்மா மெதுவா தான் சொல்லேன். "மீண்டும் ஒருமுறை அவன் அப்படி அழைத்ததை துவாரகாவினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை" கொஞ்சம் நிறுத்துங்க! " பைக்கை ஓரம் கட்டினான்.
"என்ன சார் சும்மா ஏம்மா ஏம்மான்னு சந்தையில கூவுற மாதிரி" மூஞ்சிக்கு நேராக பேசி விட்டாள்.
"ஓஓ..உங்க லேப்டாப் வேணுமா இல்ல பேச்சுல மரியாதை வேணுமா! "அவன் அப்படி கேட்டபோது துவாரகா மனம் நினைத்தது'திமிர் பிடித்தவன், எல்லாம் அந்த பரசு பரதேசியால் வந்தது. ' நெளிந்து கொண்டு மீண்டும் பைக்கில் ஏறி அமர்ந்தாள். சகஜமாக பேசுவோம் "சார் அந்த ஸ்டேஷன்லயே நீங்க தான் யங்கா இருக்கிங்க? ஆர்வமாவும், ஸ்பீடாவும் இருக்கிங்க அதனால தானே இந்த கேஸ உங்ககிட்ட ஒப்படைச்சிட்டாங்க" அப்படி என்னத்தை சொன்னாள் இத்தகைய சிரிப்பு சிரிக்கிறான். துவாரகாவிற்கு ஒரு நிமிடம் சந்தேகம் வந்தது 'என்ன சொன்னேன்? காக்கா பிடிப்பதை கண்டுபிடித்துவிட்டானா ஸ்டாபெர்ரி மூக்கன்' தனக்குள்ளேயே கேள்வி எழுப்பி கொண்டாள்.
"மேடம்.. மேடம்.. மேடம்.. போலிஸ் ஸ்டேஷனுக்கு ஒருநாளைக்கு இருநூற்றுக்கும் மேல கேஸ்வருது. பெரும்பாலானது காணமல் போன கேஸ் தான். அந்த கேஸ்ல இருந்து சிலத தேர்ந்தெடுத்து என்கிட்ட கொடுப்பாங்க! ஏன் தெரியுமா? "
'எனக்கு எப்படி தெரியும் லூசு போல கேட்கிறான். ' மெளனமாக பேசி கொண்டு உதட்டை மட்டும் தெரியாது என்பது போல பிதுக்கி காட்டினாள். சைடு மிரரில் பார்த்தவனுக்கு மீண்டும் சிரிப்பு போத்து கொண்டு வந்தது.
"கொஞ்சம் சிரிக்காம சீரியசா சொல்லுங்க" கோபத்தோடு கேட்டாள்.
"சீரியசா இருக்காதுங்கிறதுனால தான்"
"புரியல.. " என்றவள் சற்று அவனின் வார்த்தைகளை ரிவைன்ட் செய்திள் எத்தனை பெரிய அதிர்ச்சி 'அய்யோ!! ' தலையில் அடித்து கொண்டாள். மனம் பயத்தில் படபடத்தது அதே நேரத்தில் ஹாண்ட் பேக்கில் இருந்த மொபைல் போன் ஒலி எழுப்பியது.