Barani Usha
Saha Writer
- Messages
- 67
- Reaction score
- 37
- Points
- 18
NYD-99
தந்தை உள்ளே வருவதற்குள் அவசரமாக தன்னை சரி செய்து கொண்டாள் .
உள்ளே வந்தவர்,என்னம்மா என்னாச்சு என்று கேட்டார்.
அது ஒண்ணுமில்லங்க கால் வழுக்கி விழுந்துட்டாங்க. கால்ல சுளுக்கு இருந்துச்சு. அத எடுத்தாச்சு. முட்டிலதான் கொஞ்சம் சின்னதா அடி . பர்ஸ்ட் எய்ட் பெட்டியை உங்க வண்டில விட்டுட்டாங்களாம். அதான் மஞ்சளும் தேங்கா எண்ணையும் வச்சுருக்கேன்.
என்னம்மா இது! குழந்தை மாதிரி? விட்டுட்டு கொஞ்ச நேரம் வெளில போயிட்டு வரதுக்குள்ள அப்பா அப்பா கீழ விழுந்துட்டேன்னு ? பார்த்து நடந்துக்க வேணாம்?
இரு, நான் போய் மருந்து கொண்டு வரேன்.
இல்லப்பா நான் வீட்டுல போய் பார்த்துக்கறேன்.
சரி!உனக்கு வேணுன்னா ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்.
இல்ல பரவல்லப்பா.
அதற்குள் அவர் போன் அடித்தது பேசிக் கொண்டே வெளியில் சென்றார் , இதோ பேசிட்டு வந்துடறேன் அஞ்சு நிமிஷம் என்ற கோரிக்கையுடன்.
அந்த ஐந்து நிமிடங்களை அவர்கள் வீணாக்க விரும்பவில்லை.
டாக்டர் என்ன அப்பா வந்துட்டாங்க. இனிமே நானெல்லாம் கண்ணுலையே தெரிய மாட்டேன். குத்தலாக இல்லாமல், வேடிக்கையாக சொன்னான்.
ம்ம்., ஆமா ! வர்ற 20ம் தேதி என்னோட பிறந்தநாள் வருது. அதுக்கு பொண்டாட்டிக்கு புடிச்ச மாதிரி கிப்ட் வாங்கிட்டு வா. உன்ன நினைவு வச்சுக்கறேன். இது என்ன ஆர்டரா ? இல்ல அழைப்பா ?
நீ எப்படி வேண்ணாலும் வச்சுக்கோ .இப்போ நான் கிளம்பனும்.
மெதுவாக காலை ஊன்றி வலியுடன் நடந்தவளை பட்டென்று கைகளில் ஏந்திக் கொண்டான் மீண்டும் அதே போல தன்னுடைய அழுத்தத்தினால் அவள் இடுப்பில் அடையாளத்தை வைத்தான். ,அவன் இதை செய்ய வேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள். அது நடந்தது.
அவன் கழுத்தில் போட்டிருந்த துண்டை இறுக்கிப் பிடித்து கொண்டவள் சட்டென எம்பி கன்னத்தில் முத்தம் ஒன்றை பரிசளித்தாள் .
இது எதுக்கு ?
ம்ம். பொண்டாட்டி முத்தம் குடுத்தா அனுபவிக்கனும். ஆராய கூடாது.
ஏற்கனவே இதழில் கள் குடித்தவனுக்கு இன்னும் மயக்கம் தீரவில்லை போலும்.
உங்களை நான்தான் ஆராயனும் டாக்டர்! அதுவும் முழுசா !
இவனுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா ?ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் அவன் கைகளில் ஏந்தி சொன்ன விதம், அவளை என்னவோ செய்தது.
மகளின் முக மாறுதலையும், மாறாத புன்னகையையும் பார்த்த தியாகு அவளை எதுவும் கேட்கவில்லை.
மகளும் தந்தை எங்கு சென்றார்? என்னவாயிற்று? எதை பற்றியும் கேட்க நினைவில்லாமல் இருந்தாள் . வீட்டிற்கு சென்று மருந்திட்டுக் கொண்டவள் முத்துவுக்கு அழைக்க போனை கையில் எடுத்தாள் . இவளை முந்தியவன், என்ன டாக்டர் வீட்டுக்கு போய்ட்டிங்களா ?
ம்ம், வந்தாச்சு.
மருந்து போடீங்களா?
ம்ம்.,
அவனிடம் பேசவே கூச்சமாக இருந்தது.
என்ன டாக்டர்? பேசவே மாட்டேங்கறீங்க ?
ம்ம் ஒன்னும் இல்ல. குரல் கொஞ்சியது.
மாமாகிட்ட என்ன வெட்கம் டாக்டர்?
அவளிடம் இப்படி வழிவது அவனுக்கே ஆச்சர்யம்!
இதுக்கு மேல புருஷன் பொண்டாட்டி பேசறது ஒட்டு கேட்கக் கூடாது., அதனால நான் பாம்பேக்கு போகிறேன்.....நீங்களும் வாங்க ...........
-----------------------------------------------------------------------------------------
இங்கு பம்பாய்க்கு போது வசந்தியிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தான் கௌசிக் . முதலில் சாதாரணமாக வந்திருந்த இருமல் கடந்த இரு நாட்களாக அதிகமாக வரத் தொடங்கியது.
ஒன்றும் இல்லை, என்று அவ்வபோது தண்ணீர் குடித்துக் கொள்வாள். ஆனால் அதுவே அதிகரிக்கத் தொடங்கவும்,
ச! நான் எவ்ளோ பெரிய முட்டாள் என்று தன்னை தானே திட்டிக் கொண்டவன், உடனே தனது மருத்துவனையில் இருந்து பல்மனோலோஜிஸ்ட் எனப்படும் நுரையீரல் நிபுணரை வரவழைத்தான்.
சாரி கௌசிக். இப்போ என்னால எதுவும் சொல்ல முடியாது. சில டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கு. என்னோட சந்தேகங்கள் தீர்ந்தாதான் .....வார்த்தைகளை அவன் முடிக்காதது இவனுக்கு பயத்தை தந்தது.
மதன் இஸ் இட் சீரியஸ் ?
எஸ்! கண்ணை பார்த்து அவன் சொன்ன பதிலில் இவன் ஆடித்தான் போனான்.
கயல் வர போவதை அவனால் சந்தோசமாக அன்னையிடம் சொல்லக் கூட முடியவில்லை. மறுநாள் விருது விழா என்பதால் அவசரஅவசரமாக அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டிருக்கும்போதுதான் இது நடந்தது.
வசந்திக்கு ஏதேதோ சிகிச்சைகள், டெஸ்டுகள் என்று போய்க் கொண்டிருந்தது. தவறான நேரங்களில் தவறான சிந்தனைகளை கொடுப்பதுதானே மனம். குறிப்பாக நம்முடைய இறந்த காலம். எந்த விந்தையும் இல்லாமல் அதுவே வசந்திக்கும் நடந்தது. விதி அவள் உயிரை எடுப்பதற்கு முன், அவளின் மனசாட்சி அவளை துளித்துளியாக கொல்ல ஆரம்பித்தது. மருத்துவர்களின் அறிவுரைகளை ஏற்ப அவள் ஒத்துழைப்புகக் கொடுத்தாள் . உடல் அவர்கள் சொன்னதை கேட்டாலும் மனம் சொன்னதை கேட்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு அதுதானே பிரச்சனை.
அவர்கள் இவள் முகத்தை திருப்பி, கழுத்தை தொட்டு தொண்டையில் கை வைத்து பார்க்கும்போதும் , ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று சோதித்துக் கொண்டிருக்கும் போதும் .எத்தனை பெரு பாய் பிரண்ட்ஸ், தெரிஞ்சவங்க, தெரியாதவங்க ஏன் மேல கை வச்சுருப்பாங்க? எத்தனை விதமான கெட்ட பழக்கங்கள்!, குடி போதைல எத்தனை பேரோட இருந்திருக்கேன்? கழுத்துல மட்டுமா கை வச்சுருக்காங்க ? அதுக்கு கீழே , அதுக்கு கீழே, அதுக்கு, சீ நான் ஆடின ஆட்டம் கொஞ்சமா? தன்னை தானே அருவருப்பாக என்ன தொடங்கினாள். அது மட்டுமா ? ஏழை, ஏழை என்று தாலி கட்டியவரை எத்தனை முறை அவமான படுத்தி இருப்பேன். தன் குழந்தையே இல்லை என்றாலும் அவர் தன்னையும் தன் குழந்தையையும் எதற்காக ஏற்றுக் கொண்டார்? தந்தைக்காக இருக்கலாம் . நிச்சயம் தனக்காக இல்லை. ஒரு நொடி கூட அவருக்கு நான் கணவன் என்ற மரியாதையையும் மதிப்பையும் ஸ்தானத்தையும் கொடுத்தது இல்லையே ? நான் பண்ண தப்ப சரி படுத்தனும். எப்படியாவது! கௌசிக் இவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். நாளை விருது வாங்க போகும் தன் மகன், பாவம் சந்தோசத்தை கூட அனுபவிக்கடவன் தந்தையை போலே .
அவள் தந்தை நல்லவர்தான். ஏதோ அவரின் ரத்தம் இவளுக்கு இப்போது வேலை செய்கிறது போலும்.பார்க்கலாம் ...........
மாம்! ஆர் யூ ஆல் ரைட் ?
எஸ் கௌசிக். மெதுவாக அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தார்கள். வரும்போது சோர்ந்த தன் உருவத்தையே கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள். கௌசிகால் அவ மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை.
மாம், ஜூஸ் குடிங்க.
மெதுவாக ஊட்டினான்.
சிறிது குடித்தவள் மிகவும் அயற்சியாக இருந்தாள் .
மாம், நீங்க எதுக்கும் பயப்படாதீங்க. சும்மா இதெல்லாம் நார்மல் டெஸ்டுதான் . நீங்களே பெரிய ஆளு. உங்களுக்கு சொல்லனுமா?
ம்ம், நிச்சயம் அந்த சிரிப்பில் மகிழ்ச்சி இல்லை.
கௌசிக் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.
எஸ் மாம். அவள் அவனிடம் சில முக்கியமான விஷயங்களை அறிவுறுத்தினாள் . அதன்படியே கயலுக்கும் அவனுக்கும் அடுத்த சில நாட்களில்.
மீண்டும் வருவாள் தேவதை............
தந்தை உள்ளே வருவதற்குள் அவசரமாக தன்னை சரி செய்து கொண்டாள் .
உள்ளே வந்தவர்,என்னம்மா என்னாச்சு என்று கேட்டார்.
அது ஒண்ணுமில்லங்க கால் வழுக்கி விழுந்துட்டாங்க. கால்ல சுளுக்கு இருந்துச்சு. அத எடுத்தாச்சு. முட்டிலதான் கொஞ்சம் சின்னதா அடி . பர்ஸ்ட் எய்ட் பெட்டியை உங்க வண்டில விட்டுட்டாங்களாம். அதான் மஞ்சளும் தேங்கா எண்ணையும் வச்சுருக்கேன்.
என்னம்மா இது! குழந்தை மாதிரி? விட்டுட்டு கொஞ்ச நேரம் வெளில போயிட்டு வரதுக்குள்ள அப்பா அப்பா கீழ விழுந்துட்டேன்னு ? பார்த்து நடந்துக்க வேணாம்?
இரு, நான் போய் மருந்து கொண்டு வரேன்.
இல்லப்பா நான் வீட்டுல போய் பார்த்துக்கறேன்.
சரி!உனக்கு வேணுன்னா ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்.
இல்ல பரவல்லப்பா.
அதற்குள் அவர் போன் அடித்தது பேசிக் கொண்டே வெளியில் சென்றார் , இதோ பேசிட்டு வந்துடறேன் அஞ்சு நிமிஷம் என்ற கோரிக்கையுடன்.
அந்த ஐந்து நிமிடங்களை அவர்கள் வீணாக்க விரும்பவில்லை.
டாக்டர் என்ன அப்பா வந்துட்டாங்க. இனிமே நானெல்லாம் கண்ணுலையே தெரிய மாட்டேன். குத்தலாக இல்லாமல், வேடிக்கையாக சொன்னான்.
ம்ம்., ஆமா ! வர்ற 20ம் தேதி என்னோட பிறந்தநாள் வருது. அதுக்கு பொண்டாட்டிக்கு புடிச்ச மாதிரி கிப்ட் வாங்கிட்டு வா. உன்ன நினைவு வச்சுக்கறேன். இது என்ன ஆர்டரா ? இல்ல அழைப்பா ?
நீ எப்படி வேண்ணாலும் வச்சுக்கோ .இப்போ நான் கிளம்பனும்.
மெதுவாக காலை ஊன்றி வலியுடன் நடந்தவளை பட்டென்று கைகளில் ஏந்திக் கொண்டான் மீண்டும் அதே போல தன்னுடைய அழுத்தத்தினால் அவள் இடுப்பில் அடையாளத்தை வைத்தான். ,அவன் இதை செய்ய வேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள். அது நடந்தது.
அவன் கழுத்தில் போட்டிருந்த துண்டை இறுக்கிப் பிடித்து கொண்டவள் சட்டென எம்பி கன்னத்தில் முத்தம் ஒன்றை பரிசளித்தாள் .
இது எதுக்கு ?
ம்ம். பொண்டாட்டி முத்தம் குடுத்தா அனுபவிக்கனும். ஆராய கூடாது.
ஏற்கனவே இதழில் கள் குடித்தவனுக்கு இன்னும் மயக்கம் தீரவில்லை போலும்.
உங்களை நான்தான் ஆராயனும் டாக்டர்! அதுவும் முழுசா !
இவனுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா ?ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் அவன் கைகளில் ஏந்தி சொன்ன விதம், அவளை என்னவோ செய்தது.
மகளின் முக மாறுதலையும், மாறாத புன்னகையையும் பார்த்த தியாகு அவளை எதுவும் கேட்கவில்லை.
மகளும் தந்தை எங்கு சென்றார்? என்னவாயிற்று? எதை பற்றியும் கேட்க நினைவில்லாமல் இருந்தாள் . வீட்டிற்கு சென்று மருந்திட்டுக் கொண்டவள் முத்துவுக்கு அழைக்க போனை கையில் எடுத்தாள் . இவளை முந்தியவன், என்ன டாக்டர் வீட்டுக்கு போய்ட்டிங்களா ?
ம்ம், வந்தாச்சு.
மருந்து போடீங்களா?
ம்ம்.,
அவனிடம் பேசவே கூச்சமாக இருந்தது.
என்ன டாக்டர்? பேசவே மாட்டேங்கறீங்க ?
ம்ம் ஒன்னும் இல்ல. குரல் கொஞ்சியது.
மாமாகிட்ட என்ன வெட்கம் டாக்டர்?
அவளிடம் இப்படி வழிவது அவனுக்கே ஆச்சர்யம்!
இதுக்கு மேல புருஷன் பொண்டாட்டி பேசறது ஒட்டு கேட்கக் கூடாது., அதனால நான் பாம்பேக்கு போகிறேன்.....நீங்களும் வாங்க ...........
-----------------------------------------------------------------------------------------
இங்கு பம்பாய்க்கு போது வசந்தியிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தான் கௌசிக் . முதலில் சாதாரணமாக வந்திருந்த இருமல் கடந்த இரு நாட்களாக அதிகமாக வரத் தொடங்கியது.
ஒன்றும் இல்லை, என்று அவ்வபோது தண்ணீர் குடித்துக் கொள்வாள். ஆனால் அதுவே அதிகரிக்கத் தொடங்கவும்,
ச! நான் எவ்ளோ பெரிய முட்டாள் என்று தன்னை தானே திட்டிக் கொண்டவன், உடனே தனது மருத்துவனையில் இருந்து பல்மனோலோஜிஸ்ட் எனப்படும் நுரையீரல் நிபுணரை வரவழைத்தான்.
சாரி கௌசிக். இப்போ என்னால எதுவும் சொல்ல முடியாது. சில டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கு. என்னோட சந்தேகங்கள் தீர்ந்தாதான் .....வார்த்தைகளை அவன் முடிக்காதது இவனுக்கு பயத்தை தந்தது.
மதன் இஸ் இட் சீரியஸ் ?
எஸ்! கண்ணை பார்த்து அவன் சொன்ன பதிலில் இவன் ஆடித்தான் போனான்.
கயல் வர போவதை அவனால் சந்தோசமாக அன்னையிடம் சொல்லக் கூட முடியவில்லை. மறுநாள் விருது விழா என்பதால் அவசரஅவசரமாக அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டிருக்கும்போதுதான் இது நடந்தது.
வசந்திக்கு ஏதேதோ சிகிச்சைகள், டெஸ்டுகள் என்று போய்க் கொண்டிருந்தது. தவறான நேரங்களில் தவறான சிந்தனைகளை கொடுப்பதுதானே மனம். குறிப்பாக நம்முடைய இறந்த காலம். எந்த விந்தையும் இல்லாமல் அதுவே வசந்திக்கும் நடந்தது. விதி அவள் உயிரை எடுப்பதற்கு முன், அவளின் மனசாட்சி அவளை துளித்துளியாக கொல்ல ஆரம்பித்தது. மருத்துவர்களின் அறிவுரைகளை ஏற்ப அவள் ஒத்துழைப்புகக் கொடுத்தாள் . உடல் அவர்கள் சொன்னதை கேட்டாலும் மனம் சொன்னதை கேட்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு அதுதானே பிரச்சனை.
அவர்கள் இவள் முகத்தை திருப்பி, கழுத்தை தொட்டு தொண்டையில் கை வைத்து பார்க்கும்போதும் , ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று சோதித்துக் கொண்டிருக்கும் போதும் .எத்தனை பெரு பாய் பிரண்ட்ஸ், தெரிஞ்சவங்க, தெரியாதவங்க ஏன் மேல கை வச்சுருப்பாங்க? எத்தனை விதமான கெட்ட பழக்கங்கள்!, குடி போதைல எத்தனை பேரோட இருந்திருக்கேன்? கழுத்துல மட்டுமா கை வச்சுருக்காங்க ? அதுக்கு கீழே , அதுக்கு கீழே, அதுக்கு, சீ நான் ஆடின ஆட்டம் கொஞ்சமா? தன்னை தானே அருவருப்பாக என்ன தொடங்கினாள். அது மட்டுமா ? ஏழை, ஏழை என்று தாலி கட்டியவரை எத்தனை முறை அவமான படுத்தி இருப்பேன். தன் குழந்தையே இல்லை என்றாலும் அவர் தன்னையும் தன் குழந்தையையும் எதற்காக ஏற்றுக் கொண்டார்? தந்தைக்காக இருக்கலாம் . நிச்சயம் தனக்காக இல்லை. ஒரு நொடி கூட அவருக்கு நான் கணவன் என்ற மரியாதையையும் மதிப்பையும் ஸ்தானத்தையும் கொடுத்தது இல்லையே ? நான் பண்ண தப்ப சரி படுத்தனும். எப்படியாவது! கௌசிக் இவளுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். நாளை விருது வாங்க போகும் தன் மகன், பாவம் சந்தோசத்தை கூட அனுபவிக்கடவன் தந்தையை போலே .
அவள் தந்தை நல்லவர்தான். ஏதோ அவரின் ரத்தம் இவளுக்கு இப்போது வேலை செய்கிறது போலும்.பார்க்கலாம் ...........
மாம்! ஆர் யூ ஆல் ரைட் ?
எஸ் கௌசிக். மெதுவாக அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தார்கள். வரும்போது சோர்ந்த தன் உருவத்தையே கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள். கௌசிகால் அவ மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை.
மாம், ஜூஸ் குடிங்க.
மெதுவாக ஊட்டினான்.
சிறிது குடித்தவள் மிகவும் அயற்சியாக இருந்தாள் .
மாம், நீங்க எதுக்கும் பயப்படாதீங்க. சும்மா இதெல்லாம் நார்மல் டெஸ்டுதான் . நீங்களே பெரிய ஆளு. உங்களுக்கு சொல்லனுமா?
ம்ம், நிச்சயம் அந்த சிரிப்பில் மகிழ்ச்சி இல்லை.
கௌசிக் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.
எஸ் மாம். அவள் அவனிடம் சில முக்கியமான விஷயங்களை அறிவுறுத்தினாள் . அதன்படியே கயலுக்கும் அவனுக்கும் அடுத்த சில நாட்களில்.
மீண்டும் வருவாள் தேவதை............