Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

Messages
70
Reaction score
36
Points
33
செல்வி,ராஜபாக்கியம் காட்சியெல்லாம் அப்படியே உணர்ச்சிகரமா கண்முன்னாலே வந்த பீல்..செம ரைட்டிங் சிஸ்..மனைவிக்கு ஒண்ணுனு கேள்வி பட்டதும் இவ்ளோ நாள் சம்பாதித்த பணத்தை பொருட்படுத்தாமல் வந்தது க்ரேட்..தேனு அவ தவறை உணர்ந்துட்டா..சுகுமார் ஜோதிட பேசுனது ரசிக்கும்படி இருந்தது..ஜோதி இனி படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்திருவா..நம்பிக்கை கொள்ளடி பெண்ணே!!நாளை உன் கட்டளைக்கு கீழ்படிய ஆயிரம் பேரடி கண்ணே!!👌👌 👏👏👏
மிக்க நன்றிகள் sis.. உங்களின் ஒவ்வொரு விமர்சனமும் என்னை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது.. நன்றி 😍😍😍😍
 
Messages
70
Reaction score
36
Points
33
"சமுதாயத்தில் புரையோடி கிடக்கும் கௌரவ சிக்கல்களில் பலியான பல உயிர்களில் அவரது உயிரும் சேர்ந்துக் கொண்டது" என்ற இந்த வார்த்தைகள் மூலம் ஆசிரியர் சமூக சிக்கல்களை பிரதிபலிப்பது, சமூகம் பற்றிய ஒரு கால கண்ணாடியாக எதிர்காலத்தில் இலக்கிய தகுதிப் பெற்று நிலைத்து நிற்கும்!

அடுத்து, தன் மரணத்தின் போது தன் மகளை பார்த்ததும், "ஆவலாய் கண்களுக்குள் அவளின் பிம்பத்தை நிரப்பிக் கொண்டவர்.." என்று அவரது மன உணர்ச்சிகளை இலக்கிய நயமாக எத்துனை ஆழமாக ஆசிரியர் நமக்கு சொல்கிறார்!!

அடுத்து இன்னொரு இடத்தில், "காயங்களுக்கு மருந்தை காலம்தான் கையில் வைத்திருக்கிறது" என்று அற்புதமான கருத்தை சரியான இடத்தில் கூறியிருப்பது நன்கு ரசிக்கும்படியாக இருக்கிறது!

மொத்தத்தில் கதை நன்றாக வந்திருக்கிறது! பாராட்டுகளும் வாழ்த்துகளும் -அன்புடன் கரம்பயம் இரா.சந்திரசேகர்
மிக்க மிக்க நன்றிகள்.. படித்து நீங்கள் கூறும் கருத்து என்னை மென் மேலும் எழுத தூண்டுகிறது...நன்றி 😍😍
 
Messages
70
Reaction score
36
Points
33
"சமுதாயத்தில் புரையோடி கிடக்கும் கௌரவ சிக்கல்களில் பலியான பல உயிர்களில் அவரது உயிரும் சேர்ந்துக் கொண்டது" என்ற இந்த வார்த்தைகள் மூலம் ஆசிரியர் சமூக சிக்கல்களை பிரதிபலிப்பது, சமூகம் பற்றிய ஒரு கால கண்ணாடியாக எதிர்காலத்தில் இலக்கிய தகுதிப் பெற்று நிலைத்து நிற்கும்!

அடுத்து, தன் மரணத்தின் போது தன் மகளை பார்த்ததும், "ஆவலாய் கண்களுக்குள் அவளின் பிம்பத்தை நிரப்பிக் கொண்டவர்.." என்று அவரது மன உணர்ச்சிகளை இலக்கிய நயமாக எத்துனை ஆழமாக ஆசிரியர் நமக்கு சொல்கிறார்!!

அடுத்து இன்னொரு இடத்தில், "காயங்களுக்கு மருந்தை காலம்தான் கையில் வைத்திருக்கிறது" என்று அற்புதமான கருத்தை சரியான இடத்தில் கூறியிருப்பது நன்கு ரசிக்கும்படியாக இருக்கிறது!

மொத்தத்தில் கதை நன்றாக வந்திருக்கிறது! பாராட்டுகளும் வாழ்த்துகளும் -அன்புடன் கரம்பயம் இரா.சந்திரசேகர்
மிக்க மிக்க நன்றிகள்.. படித்து நீங்கள் கூறும் கருத்து என்னை மென் மேலும் எழுத தூண்டுகிறது...நன்றி
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
சிஸ் இந்த எபி வேற லெவல்..செம🔥🔥🔥🔥💥..ராஜம் பேசுனது அதைவிட மருதைய்யாவோட கோவம் எல்லாம் நல்லா சொல்லிருக்கீங்க..கிராமத்து வார்த்தையாடலை அழகா வெளிப்படுத்தியது சூப்பர்..பெண்களோட அறிவை வெளிப்படுத்த முடியறதில்லை என்பது உண்மை தான் சிஸ்..மாணிக்கம் நண்பனை மிஸ் செய்யறதும்,உத்தமன் கோவத்தை கண்ட்ரோல் பண்றதயும் வெளிப்படுத்தியவிதம் 👌👌
 
Messages
70
Reaction score
36
Points
33
சிஸ் இந்த எபி வேற லெவல்..செம🔥🔥🔥🔥💥..ராஜம் பேசுனது அதைவிட மருதைய்யாவோட கோவம் எல்லாம் நல்லா சொல்லிருக்கீங்க..கிராமத்து வார்த்தையாடலை அழகா வெளிப்படுத்தியது சூப்பர்..பெண்களோட அறிவை வெளிப்படுத்த முடியறதில்லை என்பது உண்மை தான் சிஸ்..மாணிக்கம் நண்பனை மிஸ் செய்யறதும்,உத்தமன் கோவத்தை கண்ட்ரோல் பண்றதயும் வெளிப்படுத்தியவிதம் 👌👌
ரொம்ப ரொம்ப நன்றி sis..🥰🥰🥰🥰🥰🥰
 
Messages
24
Reaction score
26
Points
13
கிராமத்து மொழியில் வெகு அழகாக கதைச் சொல்வது ரசிக்கும்படியாக இருக்கிறது. சமூக நீதிக்கு போராடும் ஆசிரியரின் போராட்ட குணம் கதையில் வெளிபபடுகிறது! ".... பெரியப் பதவியில் இருக்குற பொம்பளய்ங்க காலுல ஒங்க ஆம்பளங்க போயி விழுறியளே, அப்ப எங்க போவுது ஒங்க ஆம்பள பொம்பள வித்தியாசம்?" என்று நச்சு என்று கேள்வியை சமூகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது மனதுக்கு மகிழச்சி தருகிறது. திருப்தியாகவும் இருக்கிறது!

மேலும், "ஆண் என்ற அடையாளம் மட்டுமே, பொதுவில் பேசிட, இந்த மூடர் சமுதாயத்தில் தகுதி என்றால், அறிவு ஆற்றல் இருந்தும் பேசாது ஊமையாகி போன பெண்கள்தான் எத்தனையோ?' என்று மிகுந்த கோபத்துடன் ஆசிரியர் முடிக்கிறார்!

போராட்ட குணமும் வீரமும் நிறைந்த பெண் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி அடுத்தடுத்து கதை எழுதுங்கள்.

கதையில் ஒவ்வொரு பாத்திரத்தையும் அளவாகவும் சிறப்பாகவும் வடித்துள்ளார் ஆசிரியர். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
 
Last edited:
Messages
70
Reaction score
36
Points
33
கிராமத்து மொழியில் வெகு அழகாக கதைச் சொல்வது ரசிக்கும்படியாக இருக்கிறது. சமூக நீதிக்கு போராடும் ஆசிரியரின் போராட்ட குணம் கதையில் வெளிபபடுகிறது! ".... பெரியப் பதவியில் இருக்குற பொம்பளய்ங்க காலுல ஒங்க ஆம்பளங்க போயி விழுறியளே, அப்ப எங்க போவுது ஒங்க ஆம்பள பொம்பள வித்தியாசம்?" என்று நச்சு என்று கேள்வியை சமூகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது மனதுக்கு மகிழச்சி தருகிறது. திருப்தியாகவும் இருக்கிறது!

மேலும், "ஆண் என்ற அடையாளம் மட்டுமே, பொதுவில் பேசிட, இந்த மூடர் சமுதாயத்தில் தகுதி என்றால், அறிவு ஆற்றல் இருந்தும் பேசாது ஊமையாகி போன பெண்கள்தான் எத்தனையோ?' என்று மிகுந்த கோபத்துடன் ஆசிரியர் முடிக்கிறார்!

போராட்ட குணமும் வீரமும் நிறைந்த பெண் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி அடுத்தடுத்து கதை எழுதுங்கள்.

கதையில் ஒவ்வொரு பாத்திரத்தையும் அளவாகவும் சிறப்பாகவும் வடித்துள்ளார் ஆசிரியர். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
மிக்க மிக்க நன்றி..😍😍😍😍...உங்களது மதிப்புமிக்க விமர்சனத்திற்கு
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
மாணிக்கத்தோட ஆவேசத்தை என்ன சொல்ல..ரிது,மாணிக்கத்தோட கண்ணீர்😰😰..மனதின் கட்டளையை ஏற்று வந்த சுடரின் நிமிர்வு👌👌👌...சுடரு கலக்கல்ஸ் அண்ட் மாஸ் பெர்பான்மன்ஸ்..சுகுமாரன் விட்ருக்கனும் சுந்தர் அண்ட் கோவ நல்லா நக்கல் அடிச்சி வெளுத்துருப்பான்..சுடரு உத்தமனும் இப்படி சிரிச்சிட்டே இருக்கணும்.. Awesome akka
 
Messages
70
Reaction score
36
Points
33
மாணிக்கத்தோட ஆவேசத்தை என்ன சொல்ல..ரிது,மாணிக்கத்தோட கண்ணீர்😰😰..மனதின் கட்டளையை ஏற்று வந்த சுடரின் நிமிர்வு👌👌👌...சுடரு கலக்கல்ஸ் அண்ட் மாஸ் பெர்பான்மன்ஸ்..சுகுமாரன் விட்ருக்கனும் சுந்தர் அண்ட் கோவ நல்லா நக்கல் அடிச்சி வெளுத்துருப்பான்..சுடரு உத்தமனும் இப்படி சிரிச்சிட்டே இருக்கணும்.. Awesome akka
மிக்க நன்றிடா மா...😍😍😍
 
Messages
24
Reaction score
26
Points
13
கதை பரபரப்பின் உச்சத்தை தொட்டுள்ளது. சுடரழகியை அவளது பேச்சு மூலம் பாரதி கணவு கண்ட புதுமை பெண்ணாக்கி விட்டார் கதாசிரியர். "..நான் மரியாதை கொடுத்தாத்தான் இது தாலி கயிறு மஞ்சள் கயிறு மகிமை எல்லாம். இல்லன்னா இது வெறும் கயிறு..." என்று பேச வைத்து சமூகத்துக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளார்.

ஆமாம்.. உண்மைதான் அது. பெண்ணவளின் உணர்வின் அடையாளம்தான் மஞ்சள் கயிறு என்பது. உணர்வு சிதைக்கப்படும் பொழுது அந்த அடையாளத்துக்கு என்ன மரியாதை இருக்க முடியும்?

"நீ என் கரம் பற்ற விழைகிறாய்!
நானோ,
உன் கரம் பற்ற இயலாதவளாய்..."
என்று முடிக்கிறார் கதாசிரியர்..
ஆனால்,
அவளை, அவன் கரம் பற்ற முடிந்தவளாக, அத்தகைய மனோபாவத்துக்கு அவளை மாற்றுங்கள் என்ற வேண்டுகோள் விடுக்கும்..
உங்கள் எழுத்தை ரசிக்கும் அன்பன்
இரா. சந்திரசேகர்
 

Latest posts

New Threads

Top Bottom