கிராமத்து மொழியில் வெகு அழகாக கதைச் சொல்வது ரசிக்கும்படியாக இருக்கிறது. சமூக நீதிக்கு போராடும் ஆசிரியரின் போராட்ட குணம் கதையில் வெளிபபடுகிறது! ".... பெரியப் பதவியில் இருக்குற பொம்பளய்ங்க காலுல ஒங்க ஆம்பளங்க போயி விழுறியளே, அப்ப எங்க போவுது ஒங்க ஆம்பள பொம்பள வித்தியாசம்?" என்று நச்சு என்று கேள்வியை சமூகத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது மனதுக்கு மகிழச்சி தருகிறது. திருப்தியாகவும் இருக்கிறது!
மேலும், "ஆண் என்ற அடையாளம் மட்டுமே, பொதுவில் பேசிட, இந்த மூடர் சமுதாயத்தில் தகுதி என்றால், அறிவு ஆற்றல் இருந்தும் பேசாது ஊமையாகி போன பெண்கள்தான் எத்தனையோ?' என்று மிகுந்த கோபத்துடன் ஆசிரியர் முடிக்கிறார்!
போராட்ட குணமும் வீரமும் நிறைந்த பெண் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி அடுத்தடுத்து கதை எழுதுங்கள்.
கதையில் ஒவ்வொரு பாத்திரத்தையும் அளவாகவும் சிறப்பாகவும் வடித்துள்ளார் ஆசிரியர். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...