Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL பகை தீர்க்கவா - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:
அழகான அன்பர்களே!
சகாப்தம் வண்ணங்கள் போட்டியில் நான் எழுதும் கதை பகை தீர்க்கவா?
வண்ணம் : கருப்பு
அதில் இருந்து சிறு டீசர்.
படிச்சுட்டு கமெண்டுங்கய்யா



ரூமின் உள்ளே நுழைந்தவன் மின் விளக்குகளை உயிர்பித்து தான் கையில் கொண்டு வந்திருந்த உருளை போன்ற வடிவமைப்பினை பெற்ற கண்ணாடி குடுவையை அருகிலுள்ள செல்பில் வைத்தான்.

குடுவையை அதனுள் வைத்தவன் அதை எண்ணத் தொடங்கினான் .


1, 2 … என்று எண்ணத் தொடங்கியவன் முகம் மலர்ந்தது. அங்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட குடுவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அதை எண்ணி முடித்தவனின் முகம் திருப்தியுற்றது. அவன் மடிகணிணியை உயிர்பித்ததும் அதன் திரையில் ஒரு பெண்ணிண் கண்கள் மட்டும் தெரிந்தது


அந்த பெண்ணிண் கண்களை ரசனையோடு சில மணித்துளிகள் பார்த்துக் கொண்டிருந்தவன், அந்த கண்களோடு பேச ஆரம்பித்தான்


" மைவிழி! ஆஹா ! எவ்வளவு அழகான கண்கள்.!" என்று ரசனையோடு பேச ஆரம்பித்தவன் சட்டென்று முகம் மாற

"நீ அப்டி பண்ணியிருக்கக் கூடாதுடி. ஏன்டி அப்டி செஞ்ச? " என்று அங்கிருந்த குடுவையை உடைத்தபடியே கத்தியவன் சட்டென்று அமர்ந்தான்.


அனைத்து குடுவையையும் அவன் உடைத்திருக்க, அதன் உள்ளிருந்த திரவங்களோடு அதுவும் கீழே விழுந்தது.


கீழே அமரந்தவன் வேகமாக சில மாத்திரைகளை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டான். அதை அப்படியே முழுங்கியவன் சற்று நேரத்தில் கண் அயர்ந்தான்.

கண் அயர்ந்தவனை சுற்றி கண்ணாடிகளாக நொறுங்கி இருக்க, பல திரவங்கள் சூழ, அவனை சுற்றி பரவி கிடந்தது பெண்ணின் கண்கள்.

#####$$$$$$$

"போதும் நிறுத்து! சுப்பு. இன்னும் எல்லாரையும் ஏமாத்தி முட்டாளாக்கி ரசிக்குற உன் பழக்கம் இன்னும் உன்னைவிட்டு போகலயாடி? " - நேகா


நேகா! நான் பொய் சொல்லி எல்லாத்தையும் ஏமாத்தி இருக்கேன்தான். ஆனால் இப்ப சுமார் ஒரு மாத காலமா நான் கனவா பார்க்குற எல்லா விசயமும் உண்மையா நடந்துட்டு வருது. -சுப்ரதா


நேகா! இன்னைக்கு கனவுல நம்ம வார்டன் செத்து போற மாதிரி கனவு கண்டேன்டி என்று அவள் சொல்ல நேகா தூக்கக் கலக்கத்திலேயே தலையாட்டினாள்.

ஏய்? என்னாச்சு ரீமா? ஏன் விடுதியே பரபரப்பாக இருக்கு. - நேகா

நேகா! உனக்கு விசயம் தெரியாதா? நம்ம வார்டன் காலையில் இறந்து போயிட்டாங்க. அதான் எல்லாரும் போய் பார்த்துட்டு வறோம் .அதுவும் சூசைட் என்று அவள் சொல்லிவிட்டுச் செல்ல நேகா திகைத்தாள்.
 
அழகான அன்பர்களே பகை தீர்க்கவா ? கதையிலிருந்து அடுத்த டீசர் படிச்சுட்டு கருத்து திரியில் கமெண்ட் பண்ணுங்கய்யா.

இளைஞன் ஒருவனை கத்திக் கொண்டிருந்தார் தபசு.

"உனக்கு அறிவு ஏதும் இருக்காடா? குறை பிரசவத்தில் பிறந்தவனே!யாராவது இப்படி செய்வாங்களா?" - தபசு

நான் செய்வேன்மா? என்று அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் பிரேம், தபசுவின் பையன்

அடி செருப்பால? எதுத்தா பேசுற? உன்னை? என்று அவனை அடிக்க அவர் வர ,இருவரின் இடையில் புகுந்தாள் பெண்ணவள். அவளைப் பார்த்ததும் தபசு கோபத்தில் கத்தினார் .

" குஞ்சாரம்மா! நீ இதில் தலையிடாத. போ அந்தப் பக்கம் " - தபசு

" அம்மா! விடு அவனை! ஏதோ தெரியாம பண்ணிட்டான். " என்று அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் குஞ்சாரம்மா என்று அவரால் அழைக்கப்பட்ட கனகா.

" டேய்! நில்லுடா? எதுக்குடா அப்டி பண்ண? " - தபசு

அய்யோ!அம்மா ஒரு விஞ்ஞானியை போய் ஏன் செய்யுற? எதுக்கு செய்றனு கேட்டா நான் என்னத்த சொல்றது? - பிரேம்

யாராவது ரத்தத்தை பரிசோதித்து விளையாடுவாங்களா? உன் கைல நீ செஞ்சு பார்க்க வேண்டியது தானடா . நீ விளையாட என் கைதானா கிடைச்சுச்சு? - தபசு

ஆமாம்மா! நீதான் நல்லா பல்க்கா இருக்கே. ரத்தம் லிட்டர் லிட்டரா வச்சிருப்ப? அதான் உன் ரத்தத்தை எடுத்து செக் பண்ணேன். சும்மா சொல்லக் கூடாதுமா நிறைய லிட்டர் தேரும் போலயே.நாளை மிச்சத்தை எடுத்து நான் ரிசர்ச் பண்ண யூஸ் பண்ணிக்குறேன் என்று பிரேம் சொன்னதும்

அடி செருப்பால என்று தபசு விளக்குமாற்றை தூக்கிக் கொண்டு அவனை அடிக்க வர, பிரேம் வேகமாக வெளியே ஓடிவிட்டான்.

கனகாவை பார்த்ததும் பிரேமிற்கு ஞாபகம் வர," அக்கா! நில்லு! போகாத.வண்டில பிரேக்க்க்க்க் … " என்று கத்திக் கொண்டே அவன் வர அதற்குள் அவள் அவனை தாண்டிச் சென்றுவிட்டாள்.

#############
வண்டி பிரேக் பிடிக்காததை அப்போது தான் உணர்ந்த கனகா என்ன செய்வதென்று தெரியாமல் கண்களை மூடிக் கொண்டே எதிரில் இருந்த ஜீப்பின் மேல் மோதி கீழே விழந்தாள் .எழுந்துவள் தன் கைகளைப் பார்த்துக் கொண்டிருக்க அப்போது அவள் எதிரில் கோபத்தின் உருவாக வந்து நின்றான் அவன்.
 
பகை 1

இருள் சூழ்ந்திருந்த அந்த ரூமின் உள்ளே தன் கைகளில் எதையோ சுமந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அவன்.

ரூமின் உள்ளே நுழைந்தவன் மின் விளக்குகளை உயிர்பித்துவிட்டு தான் கையில் கொண்டு வந்திருந்த உருளை போன்ற வடிவமைப்பினை உடைய கண்ணாடி குடுவையை அருகிலுள்ள செல்பில் வைத்தான்.

அங்கு ஏற்கனவே அதே அமைப்பினைக் கொண்ட பல குடுவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க ,அதனுள் இந்த குடுவையும் சேர்த்து வைக்கப்பட்டது. தான் கையில் வைத்திருந்த குடுவையை குடுவைகளோடு வைத்தவன் குடுவைகளை எண்ணத் தொடங்கினான் .

1, 2 … என்று குடுவைகளை எண்ணத் தொடங்கினான். அங்கு சுமார் 100 க்கும் மேற்பட்ட குடுவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அதை எண்ணி முடித்தவனின் முகம் திருப்தியுற்றது.

குடுவைகளை எண்ணி முடித்தவன் அருகில் இருந்த மேஜை நோக்கிச் சென்று , அங்கிருந்த மடிகணிணியை உயிர்பித்தான். அவன் மடிகணிணியை உயிர்பித்ததும் அதன் திரையில் ஒரு பெண்ணின் கண்கள் மட்டும் தெரிந்தது.

அந்த பெண்ணின் கண்களோ காடு போன்று அடர்த்தியாக வளர்ந்து இருந்த புருவங்களுடனும், ,அந்த புருவங்களை இணைக்கும் பாலமாக இரு புருவமத்தியின் நடுவே சில கற்றை முடிகள் வளர்ந்து , கண்களின் இமைகளோ வளைந்து பார்ப்பவரை கவர்ந்திழுக்கும் அழகோவியமாக காட்சி அளித்தது அந்த கண்கள்.

அத்தனை அம்சங்களோடு கூடிய அந்த பெண்ணின் கண்களை ரசனையோடு சில மணித்துளிகள் பார்த்துக் கொண்டிருந்தவன், அந்த கண்களோடு பேச ஆரம்பித்தான்

" மைவிழி! ஆஹா ! எவ்வளவு அழகான கண்கள். இந்த கண்களை பார்த்த நொடியிலிருந்து நான் நானாக இல்லையடி " . என்று தனக்குத் தானே மேலும் பிதற்ற ஆரம்பித்தான் .

"உன் கண்களின் முக்கிய அம்சம் என்ன தெரியுமா , மைவிழி?

உன் இரு கண்களையும் இணைக்கும் அந்த கற்றை முடிகள் தான்டி "

என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டே பதில் சொல்லிக் கொண்டிருந்தவனின் முகம் சட்டென்று மாறியது.

அவன் முகம் கடினமுற, அந்த கண்களை வேகமாக தன் கை கொண்டு குத்த ஆரம்பித்தான் .பின்பு கீழே அமர்ந்து, தன் மடியில் மடிகணிணியை வைத்துக் கொண்டு, அந்த பெண்ணின் கண்களை பார்த்துக் கொண்டே, சுவற்றில் சாய்ந்தான். சுவற்றில் சாய்ந்தவன் தன் பின்னந்தலையை சுவற்றில் மோதியபடியே பேச ஆரம்பித்தான்.

" நீ அப்டி பண்ணியிருக்கக் கூடாதுடி.என்னை அப்டி உதாசினப்படுத்திட்டு போயியிருக்கக்கூடாதுடி "என்று தனக்குள் சொன்னவன் அந்த கண்களையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்பு , " என்னை அப்படி பார்க்காத மைவிழி! நீ என் கிட்ட என்ன கேட்குறேனு எனக்குத் தெரியும்" என்று சற்று நேரம் இடைவெளிவிட்டவன், தன்னை சரி செய்து கொண்டு பேச ஆரம்பித்தான்.

'உனக்கு நான் செஞ்ச பாவத்துக்கு பிராயசித்தமா நான் உனக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இவைகளை பரிசா தந்திருக்கிறேன். இதோ பார்!' என்று கூறிக்கொண்டே அவன் அங்கிருந்த குடுவைகள் ஒவ்வொன்றையும் திறந்து காட்டினான் .

இப்படியாக அந்த கண்களோடு பேசிக் கொண்டிருந்தவன் தீடீரென்று கோபம் அதிகரிக்க " மைவிழி " என்று கத்திக் கொண்டே அங்கிருந்த குடுவைகள் ஒவ்வொன்றையும் போட்டு உடைத்தான்

" நீ அப்டி பண்ணியிருக்கக் கூடாதுடி. ஏன்டி அப்டி செஞ்ச? " என்று குடுவையை உடைத்தபடியே கத்தியவன் சட்டென்று அமர்ந்தான். அனைத்து குடுவைகளையும் அவன் உடைத்திருக்க, அதன் உள்ளிருந்த திரவங்களோடு அதுவும் கீழே விழுந்தது.

கீழே அமரந்தவன் வேகமாக தன் பேண்ட் பாக்கெட்டின் உள்ளே கையை விட்டு சிறு டப்பா ஒன்றை வெளியே எடுத்தான். அதை திறந்து வேகமாக அதிலிருந்து சில மாத்திரைகளை தன் கைகளில் தட்டி தன் வாயில் போட்டுக் கொண்டான். மாத்திரைகளை வாயில் போட்டவன் அதன் அப்படியே முழுங்கிவிட்டு சற்று நேரத்தில் கண் அயர்ந்தான்.

கண் அயர்ந்தவனை சுற்றி கண்ணாடிகளாக நொறுங்கி இருக்க, அவனை சுற்றி பரவி கிடந்தது பல கண்கள்.

*****

தீப்பெட்டி கட்டிடம் போல ஒன்றன் மேல் ஒன்றாக கட்டப்பட்டிருந்த அந்த மாணவியர் தங்கும் விடுதியின் உள்ளே இருந்த ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெண் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

அவள் எழுந்து அமர்ந்ததும் அருகில் இருந்த பெண்ணும் வேகமாக எழுந்தாள்.

" இப்ப என்னடி? நீ இன்னும் தூங்கலையா? நீ எழுந்தா எனக்கும் டிஸ்டர்ப் ஆகுதுடி. பேசாம படு சுப்பு " என்று எழுந்த நேகாவோ தன் வாயை மூடிக் கொண்டே ஒரு கொட்டாவியை விட்டபடி அருகில் இருந்த சுப்பு என்று அழைக்கப்பட்ட சுப்ரதாவைப் பார்த்து கத்தினாள்.

நேகா தூக்கம் கலைந்த எரிச்சலை சுப்ரதாவிடம் காட்டிக் கொண்டிருந்தாள் நேகா, சுப்ரதாவின் ரூம் மேட்.

அதை கேட்ட சுப்ரதா நேகாவிடம் திரும்பி,

"நேகா! இன்னைக்கு திரும்பவும் அந்த பொண்ணு கனவுல வந்தா . அவ கனவுல வந்து .. "என்று சுப்ரதா அவள் சொல்வதற்குள் நேகா இடையில் பேசினாள்.

"வந்து … உனக்கு தெரிஞ்ச ஒருத்தவங்க இன்றைக்கு இறக்கப் போறாங்கனு சொல்லியிருந்திருப்பாளே? " – நேகா.

"அட ஆமாம்டி!நான் கனவுல பார்த்ததை அப்படியே சொல்றியே எப்படி டி ? " - என்று சுப்ரதா ஆச்சரியமாக கேட்க, நேகா அவளை பார்த்து முறைத்தாள்.

"ஏன்டி முறைக்குற? " -சுப்ரதா.

"என் தூக்கத்தை கெடுத்தவும் இல்லாம கேள்வியா கேட்குற? " – நேகா.

"அதில்லைடி…." – சுப்ரதா.

"நிறுத்து சுப்பு! இப்டி எல்லா இரவும் பேய் மாதிரி எந்திரிச்சு என்னையும் தூங்கவிடாம டிஸ்டர்ப் பண்றடி. இன்னும் நீ பொய் சொல்லி எல்லாத்தையும் ஏமாத்துற பழக்கத்தை விடலையா? "- நேகா.

"அய்யோ! நேகா! நீ நினைக்குற மாதிரி இல்லை . சத்தியமா நான் அவங்க சாகுற மாதிரி கனவு கண்டேன்டி" – சுப்ரதா.

ஆமா யாரு சாகுற மாதிரி கனவு கண்ட? உன் செத்துப் போன தாத்தா சாகுற மாதிரியா ? - நேகா

இல்லைடி. நம்ம … என்று சுப்ரதா ஏதோ சொல்வதற்குள் அவளை சொல்லவிடாமல் இடையில் பேசினாள் நேகா.

" போதும் சுப்பு. இன்னும் பொய் சொல்லி எல்லாரையும் முட்டாளாக்கி ரசிக்கும் உன் பழக்கம் இன்னுமா உன்னைவிட்டு போகலடி? " – நேகா.

"அப்படியில்லை நேகா! நான் பொய் சொல்லி எல்லாத்தையும் ஏமாத்தி இருக்கேன்தான் ஒத்துக்குறேன். ஆனால் சுமார் ஒரு மாத காலமா நான் கனவா பார்க்குற எல்லா விசயங்களும் நிஜங்களா என் கண் முன்னே நடந்துட்டு வருது. அதனால் இன்றைக்கு நான் பார்த்த விசயமும் கண்டிப்பா நடக்கும்டி -சுப்ரதா.

"ம்ம்ம்... இதை எவளாச்சும் கேனச்சி ஒருத்தி இருப்பா அவகிட்ட போய் சொல்லு,அவ வேணா நம்புவா உன் கதையை நம்புவா . இப்ப நீ பேசாமபடுக்குறீயா இல்ல நான் வெளியே போய் தனியா படுத்தூக்கட்டுமா? என்று நேகா சொல்ல சுப்ரதா பதறினாள்.

"அய்யோ … வேண்டாம் நேகா. என்னை தனியே விட்டு போயிராதடி. எனக்கு தனியா படுக்க பயமாயிருக்கு" – சுப்ரதா.

அப்ப வாயை மூடிட்டு பேசாமபடுடி -என்று சுப்ரதாவை திட்டிவிட்டு நேகா படுத்துக் கொள்ள, சுப்ரதாவும் அவள் அருகில் படுத்துக் கொண்டாள்.

ஆனால் சற்று நேரத்திற்குள் திரும்பவும் ஆரம்பித்தாள் சுப்ரதா.

"நேகா! இன்னைக்கு நான் கனவுல பார்த்தது, என்னனு கேட்க மாட்டியா?" - சுப்ரதா.

"திரும்ப ஆரம்பிச்சுட்டியா? நான் கேட்க மாட்டேன்னு சொன்னா விடவா போற. சொல்லித் தொலை!" - நேகா.

இன்னைக்கு கனவுல நம்ம வார்டன் இறந்து போற மாதிரி கனவு வந்துச்சுடி என்று அவள் சொல்ல நேகா தூக்கக் கலக்கத்திலேயே "அப்படியா? ரொம்ப சந்தோசம். அந்த லேடி ஹிட்லர் போய்ட்டா நம்ம ஜாலியா இருக்கலாம்.நாளை அதுக்கு ஒரு மாலையை வாங்கி போட்டுருவோம் .கவலைபடாத என்று முணங்கியபடியே அவள் தூங்கிவிட " எரும! உன்கிட்ட போய் சொன்னேன் பாரு! " என்று சுப்ரதா தன் தலையில் அடித்துக் கொண்டே தானும் படுத்து தூங்கிவிட்டாள்.

காலையில் இருவரும் தாமதமாக எழுந்து வெளியே வர, அங்கிருந்த மாணவியர்கள் அனைவரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

அதை பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வேகமாக தன்னை கடந்து சென்ற ஒரு மாணவியை நிறுத்திக் கேட்டாள் நேகா.

"ஏய்? ரீமா! நில்லு . என்னாச்சு ரீமா? ஏன் விடுதியே பரபரப்பாக இருக்கு." – நேகா.

"நேகா! உனக்கு விசயம் தெரியாதா? நம்ம வார்டன் காலையில் இறந்து போயிட்டாங்க. அதான் எல்லாரும் போய் அவங்களைப் பார்த்துட்டு வறோம் .நேகா அவங்க சூசைட் பண்ணிகிட்டாங்க தெரியூமா" என்று அவள் சொல்லிவிட்டுச் செல்ல நேகாவும் சுப்ரதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

*****

அந்த போலிஸ் குவாடர்ஸில் பல குடியிருப்புகள் இருக்க, அதில் இருந்த ஒரு வீடு மட்டும் அந்த காலை வேளையில் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.

அங்கு இளைஞன் ஒருவனை கத்திக் கொண்டிருந்தார் ஒரு வயதான பெண்மணி தபசு.

"உனக்கு அறிவு ஏதும் இருக்காடா? குறை பிரசவத்தில் பிறந்தவனே. யாராவது இப்படி செய்வாங்களாடா?" - தபசு

"நான் செய்வேன்மா…" என்று அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் 21 வயசான பிரேம், தபசுவின் பையன்

"அடி செருப்பால!. எதுத்தா பேசுற? உன்னை…" என்று அவனை அடிக்க அவர் கை ஓங்கிக் கொண்டு வர, இருவரின் இடையில் புகுந்தாள் பெண்ணவள். அவளைப் பார்த்ததும் தபசு கோபத்தில் கத்தினார் .

" குஞ்சாரம்மா! நீ இதில் தலையிடாத. போ அந்தப் பக்கம் " - தபசு

" அம்மா! விடு அவனை! ஏதோ தெரியாம பண்ணிட்டான். " என்று அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் குஞ்சாரம்மா என்று அவரால் அழைக்கப்பட்ட கனகா.

இன்னைக்கு நான் அவனை விடுறதா இல்லை குஞ்சாரம்மா - தபசு.

அம்மா பிளிஸ் … என்று கனகா இங்கு அவரை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, பிரேமோ அவர்களின் இடையில் புகுந்தான்.

" ஏய்! குஞ்சாரம்மா! தெரிஞ்சுதான் நான் அப்டி பண்ணேன். தெரியாமலா பண்ணல. " என்று அவன் சொன்னது தான் தாமதம் கனகாவைப் பார்த்து முறைத்தார் தபசு.

அவளைப் பார்த்தீயா… என்ற ரீதியில் தபசு பார்த்துக் கொண்டிருக்க, கனகா வேகமாக

நான் கிளம்புறேன்மா... என்று அவரிடம் சொல்லிக் கொண்டு அவரிடம் தப்பித்து வேகமாக கீழே செல்ல, அவளை பின்பற்றி பிரேமும் செல்ல முயன்றான்.

ஆனால் தபசு அவனை போக விடாமல் நிறுத்தினார்.

" டேய்! நில்லுடா? எதுக்குடா அப்டி பண்ண? " - தபசு

"அய்யோ!அம்மா ஒரு விஞ்ஞானியை போய் ஏன் செய்யுற? எதுக்கு செய்றனு கேட்டா நான் என்னத்த சொல்றது?" - பிரேம்

"இல்ல நீ சொல்லியே ஆகனும் . ஏன்டா அப்டி பண்ண. யாராவது ரத்தத்தை பரிசோதித்து விளையாடுவாங்களாடா . அந்த பரிசோதனையை உன் கைல நீ செஞ்சு பார்த்து விளையாட வேண்டியது தானடா . ஏன்டா என் கைல விளையாண்ட ?" - தபசு

"அது வேற ஒன்றுமில்லைமா . என்னோட உனக்கு தான் ரத்தம் ஜாஸ்தியா இருக்கும். ஏனா நீதான் நல்லா பல்க்கா இருக்கே. அதனால் ரத்தம் லிட்டர் லிட்டரா வச்சிருப்ப. அதான் உன் ரத்தத்தை எடுத்து செக் பண்ணேன்.

சும்மா சொல்லக் கூடாதுமா நிறைய லிட்டர் தேரும் போலமா.. நாளைக்கு மிச்சத்தை எடுத்து நான் ரிசர்ச் பண்ண யூஸ் பண்ணிக்குறேன்" என்று பிரேம் சொன்னதும், "நாயே!..." என்று தபசு விளக்குமாற்றை தூக்கிக் கொண்டு அவனை அடிக்க வர, பிரேம் வேகமாக வெளியே ஓடிவிட்டான்.

"இரு! வீட்டுக்குள்ளே வா உன்னை வச்சிக்குறேன்" என்று தபசு அவனை திட்டிவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்.

அவரிடம் தப்பித்து வெளியே ஒடிவந்தவன் தன் தலையை தானாக தட்டிக் கொண்டு யோசித்தபடியே நடந்து வந்தான்.

"சயின்டிஸ்ட் பிரேம்! நீங்க எதையோ மறந்துட்டிங்க?" என்று அவன் யோசித்துக் கொண்டே வர, அவனை கடந்து சென்றாள் கனகா .

கனகாவை பார்த்ததும் பிரேமிற்கு ஏதோ ஞாபகம் வர, " அக்கா! நில்லு! போகாத.வண்டில பிரேக்க்க்க்க் …" என்று கத்திக் கொண்டே அவன் வர அதற்குள் அவள் அவனை தாண்டிச் சென்றுவிட்டாள்.

கனகா தன்னை பார்க்கவில்லை என்றதும் பிரேம் கத்தினான்

" அக்கா! வண்டி பிரேக் வயர் இங்க இருக்கு " என்று அவன் தன் கையில் இருந்த பிரேக் வயரைக் காட்டி கத்த ஆனால் அவளோ அவன் பேச்சு காதில் கேட்காத தூரத்தில் சென்று கொண்டிருந்தாள் கனகா.

*****

அந்த டிவிஎஸ் எக்சல்லை வேகமாக ஓட்டி சென்று கொண்டிருந்த கனகா தான் வேலை பார்க்கும் இடம் வந்ததும் வண்டியை நிறுத்த முயல, வண்டி பிரேக் பிடிக்கவில்லை.

வண்டி பிரேக் பிடிக்காததை அப்போது தான் உணர்ந்த கனகா என்ன செய்வதென்று தெரியாமல் கண்களை மூடிக் கொண்டே எதிரில் இருந்த ஜீப்பின் மேல் மோதி கீழே விழந்தாள்.

மோதி கீழே விழுந்தவளுக்கு கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டிருக்க, அதை பார்த்தபடியே கஷ்டப்பட்டு எழுந்து நின்றவள், எதிரே பார்க்க அங்கு கோபத்தின் உருவாக நின்றிருந்தான் அவன். அவனைக் கண்ட கனகா திகைத்தாள்.

தீர்ப்பாள் …
 
பகை 2

சிவப்பு நிற உடையை உடுத்திக் கொண்டு, அதன் மேலே கருப்பு நிறத்திலான பெரிய அங்கி ஒன்றை அணிந்து கொண்டு, முகத்தில் கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் மற்ற பாகங்கள் துணி கொண்டு மறைக்கப்பட்டு, தன் கைககளில் கத்தி ஒன்றை ஏந்திக் கொண்டு அந்த விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது உருவம் ஒன்று.

அந்த உருவத்தின் கண்களோ வேட்டை நாயின் வெறியை பிரதிபலித்தது . அந்த கண்களை சற்று உற்று நோக்கினால், அவை ஒரு பெண்ணின் கண்களை போன்றிருந்தது.

இருளில் சென்று கொண்டிருந்தவள் அந்த விடுதியின் முன் சென்று நிற்க, அந்த விடுதியை காவல் காத்துக் கொண்டிருந்தவனோ உட்கார்ந்தபடியே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

அவனை எழுப்பாமல் மெதுவாக அவனை தாண்டிச் சென்றவள், விடுதிக்குள் சென்று ஒரு அறையின் முன் நின்று கதவைத் தட்டியவள், அவர்கள் கதவை திறப்பதற்குள் தன் கை விரல்கள் ஒவ்வொன்றையும் மடக்கி மடக்கி விரித்தாள். அவளது பொறுமையை சற்று நேரம் சோதித்துவிட்டு கதவை திறந்தார் ஒரு பெண்மணி.

அந்த பெண்மணி கதவை திறந்து 'யார்?' என்று அங்கு நின்றவளைப் பார்த்து கேட்டது தான் தாமதம், பெண்ணவள் அவரது வாயை பொத்திக் கொண்டு அவரை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டாள்.

உள்ளிருந்து சற்று நேரத்தில் திரும்பி வெளியில் வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன் கைகளில் வழிந்த ரத்தத்தை அது கீழே வழிவதற்குள் வேகமாக தன் கையில் இருந்த துணி கொண்டு தன் கைகளை வேகமாக சுற்றிக் கொண்டு யாரும் பார்ப்பதற்குள் அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.

*****

தன் அறையில் குளித்துவிட்டு பேண்ட் மற்றும் சட்டை அணிந்து கொண்டு கண்ணாடியில் தலையை வாரிக் கொண்டிருந்தான் அமுதன்.

கண்ணாடியில் தன் தலையை வாரி முடித்தவன் அருகில் இருந்த மேஜையில் இருந்த அந்த கோட்டை அணியாமல் தன் கையில் எடுத்துக் கொண்டு வெளியில் வந்து அங்கிருந்த உயர்ந்த ரக காரில் ஏறினான்.

காரில் ஏறி அமர்ந்தவன் அதனை உயிர்பித்து தன் கைகளை ஸ்டீரிங்கில் தட்டியபடியே மிதமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தான். அரை மணி நேர பயணத்தின் பின் கார் அந்த உயர்ந்த கட்டிடத்தின் முன் சென்று நின்றது.

காரை நிறுத்திவிட்டு கட்டிடத்தின் உள்ளே நுழைந்தவன் தன் அறையை நோக்கி சென்று கொண்டிருக்க, அவனை வழியில் பார்த்த அனைவரும் அவனுக்கு வணக்கம் வைத்தனர். அனைவரின் வணக்கத்தையும் தன் ஒற்றை தலையசைப்பால் ஏற்று கொண்டவன், அவன் அறையின் முன் நின்று, தன் முன் இருந்த அமுதன் MBBS., பெயர் பலகையை தன் கைகளால் ஆசையோடு வருடினான்.

பின் ஊள்ளே சென்று தன் இருக்கையில் அமர்ந்ததும் அவள் அருகில் வந்து நின்றாள் செவிலி. அவளைப் பார்த்த அமுதன் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தான்.

"மிஸ் ஷீலா! அந்த பத்தாம் நம்பர் பேசண்ட்டிற்கு டிரிப்ஸ் போட்டாச்சா?" -அமுதன்.

" எஸ் டாக்டர்!" - ஷீலா.

" அந்த பெரியவர்க்கு பிபி, பிரஷர் செக் பண்ணியாச்சா?" - அமுதன்.

" எஸ் டாக்டர்! எவிரிதிங் நார்மல்" - ஷீலா.

"ஓ.பி ல எத்தனை பேசண்ட்ஸ் வெயிட் பண்றாங்க?" - அமுதன்.

"30 பேர் சார்..." - ஷீலா.

"ஓ! ஏன்? முதலலேயே எனக்கு போன் பண்ணி இன்டிமேட் பண்ணல?" என்று நர்சை பார்த்து கத்தினான்.

"உங்களுக்கு போன் பல தடவை பண்ணேன் சார். ஆனால் உங்க போன் நம்பர் அவுட் ஆஃப் கவரேஜ்னு சொல்லுச்சு சார்.." என்றதும்,

சற்று நேரம் எதையோ யோசித்த அமுதன் "ஓ.. சரி.. ஷீலா 5 மினிட்ஸ் கழிச்சு பேசண்ட்ஸை வரச் சொல்லுங்க" என்று அவன் சொல்லிவிட்டு அங்கிருந்த மீன் தொட்டியின் அருகே சென்று நின்றதும்,

"ஓகே சார்..." என்று ஷீலா தலையசைத்துவிட்டு வெளியே சென்றாள்.

அவள் சென்றதும் சற்று நேரம் அந்த மீன்களைப் பார்த்தபடியே தன் தலையை முன்பக்கம், பின்பக்கம் அசைத்தவன் அதன்பின் தன் கண்களை மூடியபடியே நெற்றியை தன் கை கொண்டு குத்தினான்.

இப்படியாக ஐந்து நிமிடங்கள் அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே கழிய, கதவை தட்டிக் கொண்டு நோயாளிகள் ஒருவரின் பின் ஒருவர் உள்ளே வர ஆரம்பித்தனர்.

அவர்களை பார்த்ததும் தன்னை மறந்தவன், அவர்களிடம் அன்போடும் சிரித்த முகமாகவும் பேசியபடியே அவர்களது நோயினை ஆராய்ந்தான். அவனது சிகிச்சையில் குணமடைந்த நோயாளிகள் பலர் .

-----

இப்ப அமுதன் பத்தி சின்ன இண்ட்ரோ பார்த்துடலாம். வாங்க அன்பர்களே!

அமுதன், இறுகிய கட்டமைப்பு கொண்ட உடல்வாகு, மீசை, தாடி என ஏதுமின்றி முகம் சவரம் செய்யப்பட்டு, தாடியின்றி சாக்லேட் பாய் என்று கூறும் அளவிற்கு அழகன். ஒரு தலைசிறந்த மருத்துவன். ஆரம்பத்தில் சிறிய அளவிலான கிளினிக் ஒன்றை வைத்து நடத்திக் கொண்டு வந்தவன் இப்பொழுது பெரிய அளவில் மருத்துவமனை ஒன்றினை வைத்து அனைவருக்கும் சிறந்த முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டு வருகிறான்.

இப்ப இங்க வாங்கய்யா.

-----

அன்று வந்த நோயாளிகளை பார்த்து முடித்த அமுதன் அருகிலிருந்த தன் பர்ச்சை எடுக்க முயல,அப்போது அதிலிருந்து வளையல் துண்டுகள் கீழே விழுந்தன. அதை எடுத்து பார்த்தவனின் முகம் வருத்தமடைந்தது.

அவனையும் மீறி அவளது உதடுகள் சாரு… என்று முணுமுணுத்தது.

*****

தன் எதிரில் நின்று தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பவனை கண்ட கனகா வேகமாக எழுந்து, சலூயூட் அடித்தபடியே "குட்மார்னிங் சார்!" என்று அவனுக்கு வணக்கம் வைக்க, அதை கண்டவனுக்கோ கோபம் தலைக்கு ஏறியது.

"கான்ஸ்டபிள் கனகா, வணக்கம் வைக்குற நேரமா இது. யூ ஆர் 5 மினிட்ஸ் லேட். நீ டெய்லி லேட்டா தான் வருவியா? இன்னைக்கு ஒரு படி மேல போய் வீர சாகசம்லா பண்ற? என்ன இதெல்லாம்? என்று தன் ஜீப்பின் முன் உடைந்து தொங்கிக் கொண்டிருந்த பம்ப்பரை காட்டி அவன் அவளை திட்ட , கனகாவோ என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள். அவள் விழிப்பதை பார்த்தவன் மேலும் கத்தினான்.

" அப்பா செத்துட்டாங்கனு அவர் வேலையை வாங்கிட்டா மட்டும் பத்தாது. அதற்குண்டான வேலையையும் செய்யணும். வேலையில் சேர்ந்து என் கழுத்தை அறுக்கனே வந்திருக்குதுங்க" என்று கனகாவை திட்ட, அதை கேட்ட கனகாவோ வருத்தமடைந்தாள்.

அவள் வருத்தத்தை பார்த்தவன் அருகில் இருந்த ஏட்டைப் பார்த்து " ஏட்டு! அந்த ***மாணவியர் விடுதிக்கு அவங்களை வரச் சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு அவன் தன் ஜீப்பில் ஏற. கனகாவும் வேகமாக ஜீப்பின் பின்னால் ஏறி அமர்ந்தாள். திரும்பவும் தாமதமாக சென்று அவனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள அவள் தயாராக இல்லை.

கனகாவையும், ஏட்டு பெருமாளையும் ஏற்றிக் கொண்டு அந்த மாணவியர் விடுதியை நோக்கி தன் வண்டியை செலுத்தினான் அவன், நந்தவர்மன்., அசிஸ்டண்ட் கமிஷ்னர் ஆப் போலீஸ் .

-----

இப்ப நந்தவர்மன்,கனகா பத்தி சின்ன இண்ட்ரோ பார்த்துடலாம். வாங்க அன்பர்களே!

நந்தவர்மன் காவல் அதிகாரிக்கு ஏற்ற உடலமைப்போடும், நடை பாவனைகளில் கண்டிப்போடும் நேர்மை தவறாத ஒரு சிறந்த கமிஷ்னராக விளங்கினான்.

அவனுக்கு கீழ் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் கனகா. கனகாவின் தந்தை கேஸ் ஒன்றில் தீவிரவாத அமைப்பினால் சுட்டுக் கொல்லப்பட அந்த வேலை வீட்டில் மூத்த வாரிசான கனகாவிற்கு கொடுக்கப்பட்டது.

மென்மையின் இலக்கணமாக, பயத்தின் முழு உருவமாக இருந்த கனகா குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாலும் நந்தவர்மன் அவளை திட்டிக் கொண்டே இருந்தான்.

சரி.. சரி.. கனகாவையும், நந்தவர்மனை பற்றிய அறிமுகம் பார்த்தாச்சு. கதைக்குள்ள போகலாம் அன்பர்களே.

-----

கனகாவை அழைத்துக் கொண்டு அந்த விடுதியை நோக்கி பயணப்பட்டவன் சற்று நேரத்தில் அந்த மாணவியர் தங்கும் விடுதியின் முன் வண்டியை நிறுத்தினான்.

வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவன் கனகாவைப் பார்க்க, அவனது பார்வையின் பொருளை படித்த கனகா வேகமாக விடுதியின் உள்ளே சென்றாள். உள்ளே சென்றவள் சற்று நேரத்தில் வெளியே வர, அங்கு ஆம்புலன்ஸும் வந்து நின்றது.

அதை தொடர்ந்து அந்த விடுதியின் வார்டன் வண்டியில் ஏற்றப்பட, கனகா நந்தவர்மன் அருகில் வந்தாள்.

"சார்!தூக்கு போட்டு தொங்கி இருக்காங்க. ஆனால் இது தற்கொலை மாதிரியும் தெரியுது. கொலை மாதிரியும் தெரியுது என்று அவள் சொல்ல, நந்தவர்மன் சற்று நேரம் யோசித்தான்.

"இதே மாதிரி தான போன வாரம் அந்த ****காலேஜ் வார்டன் இறந்து போனாங்க" நந்தவர்மன்

"எஸ் சார்" - கனகா.

"சோ! இது தற்கொலையல்ல! கொலை. விரைவில் இதை பூருவ் பண்றேன் என்று அவன் சொல்ல கனகா தலையசைத்தாள்.

*****

அந்த அறையில் கண் மூடி கிடந்தவனோ எழுந்து தன் கையில் இருந்த மாத்திரை டப்பாவை தூக்கி எறிந்து

"மை விழி! மைவிழி!" என்று பிதற்ற சற்று நேரத்திற்குள் அவன் கையில் நடுக்கம் ஏற்பட, வேகமாக தன் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

வெளியே சென்றவன் காரை இலக்கற்று ஒட்டிக் கொண்டிருக்க, அவன் கண்களில் விழுந்தாள் ஒரு பெண். அந்த பெண்ணை பார்த்ததும் அவனின் கைகளின் நடுக்கம் குறைய. "மைவிழி" என்று அழைத்துக் கொண்டே அந்த பெண்ணின் அருகில் வண்டியை நிறுத்தினான் அவன்.

தீர்ப்பாள்.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom