Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

Girija priya

Member
Messages
43
Reaction score
37
Points
18
Oru vazhiya Amudhan pesi pesi akkava migan kitta anupitan👌👌👌migan oliya parthavudan romance ketkudha.... Oli oda reaction....etti nillu echcharikiren😜😜😜nice intresting ud sis ❤️
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
438
Reaction score
663
Points
93
Oru vazhiya Amudhan pesi pesi akkava migan kitta anupitan👌👌👌migan oliya parthavudan romance ketkudha.... Oli oda reaction....etti nillu echcharikiren😜😜😜nice intresting ud sis ❤️
Thank you dear
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
438
Reaction score
663
Points
93

உயிர் துடிப்பாய் நீ!


அத்தியாயம் 36


திகழொளி கணவனின் அணைப்பில் சில நொடிகள் அமைதியாக நின்றிருந்தாள். அவள் மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல் மெளனமாகவே அசையாமல் நின்றாள்.


மனைவியின் தோள்களில் அழுத்தமாக முகம் புதைத்திருந்த மிகனுக்கு அவள் எந்த வித எதிர்வினையும் காட்டமல் நிற்பது சிறு சந்தேகத்தை கொடுத்தது.


சில நிமிடங்கள் கழித்து மெல்ல அவளை தன் அணைப்பில் இருந்து விடுவித்தவன், "ஒளி என் மீது இன்னும் கோவமா.." என்றான் தயங்கிய படியே..


"உங்க மீது கோபப்பட நான் யாரு..?"


"ஏன் இப்படி பேசறே..என்னை மன்னிக்கவே மாட்டீயா..?"


"உங்களை மன்னிக்கும் அளவு நான் பெரிய மனுசி இல்லே.."


"ஒளி ப்ளீஸ் இப்படி ஒட்டாமல் பேசாதே..உண்மையாளுமே நான் என் தப்பை உண்ரந்துட்டேன்..உங்கூட காலம் பூராவும் சேர்ந்து வாழனும்ன்னு ஆசைப்படறேன் டா..உன்னை பிரிந்த இந்த ஒன்றரை மாதத்தில் நான் நானாக இல்லை.."



"ஓ..அவ்வளவு அன்பா..!"


"அன்பு இல்லாமல் வேறென்ன ..?"


"அன்பு ஜாஸ்தியானதால் தான் ஊரை விட்டு போக முடிவு பண்ணீட்டீங்களா..?"


"ஒளி..!"


"பதில் சொல்லுங்க..?"


"நீ இல்லாமல் என்னால் இங்கே இருக்க முடியலே..தினம் தினம் உன்னை அருகில் பார்த்துக் கொண்டு யாரோ போல் தள்ளி இருக்க என்னால் முடியலே..வேறு என்ன தான் நான் செய்ய முடியும்..?"


"அவ்வளவு அன்பு இருக்கிறவர் திரும்ப என்னிடம் பேசுனீங்களா? எந்த பிரச்சனையையும் நேரா எதிர்கொள்ளவே மாட்டீங்களா? எப்போதும் பிரச்சினைகளிலிருந்து ஓடத் தான் பார்ப்பீங்களா..?"



"அப்படி இல்லை ஒளி! உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு தான் உன் கோவம் குறைய காத்திருந்தேன்."


"அப்படியா ! அப்போ ,எதுக்கு புனே போக முடிவெடுத்தீங்க..?"


"ஒளி என்னால் முடிந்தவரை உன்னே கஷ்டப்படுத்திட்டேன்..அந்த குற்றவுணர்வே என்னை கொல்லாமல் கொள்ளுது டா.."


"ம்..!ரொம்ப சீக்கிரம் ரியலைஸ் பண்ணிட்டீங்க.."


"ஒளி..!"


"எப்போதுமே தப்பாத் தானே முடிவெடுக்கிறீங்க.. உங்களை நம்பி மூன்று பெரியவங்க இருக்காங்க..குழந்தை இருக்கா..வயசனாவங்களை தனியா தவிக்க விட்டுட்டு உங்க நிம்மதி தான் பெரிசுன்னு யாரைப் பற்றியும் கவலைப்படாமல் போறீங்க அப்படித் தானே..!"



"ஒளி அப்படி இல்லை.. கொஞ்சம் என் நிலையில் இருந்து பாருடா.."



எல்லாரும் உங்க நிலையில் இருந்து தான் எப்போதும் பார்க்கனும்! ஆனால் நீங்க மத்தவங்களைப் பற்றி ஒரு நொடி கூட நினைக்க மாட்டீங்க.."



"அப்படி இல்லை டா.. எனக்கு உண்மை தெரிந்த பின் என்னால் நிம்மதியா இருக்க முடியலே..யாருடனும் பேச கூட முடியலே..என் நிலையை நான் எப்பிடி உனக்கு புரிய வைப்பேன்.."



"மிகன் இப்ப கூட நான்‌இங்கே வந்தது மாமாவுக்காகத் தான்..நீங்க திரும்பவும் புனே போறேன்னு சொன்னவுடன் மாமா உடைந்து போய்விட்டார்.. ரொம்பவே வருத்தப்பட்டு என்னிடம் பேசினார் . அவர் சொல்லித் தான் எனக்கே விஷயம் தெரியும்.."


"ஓ..!"


உங்களுக்கு தான் யாரைப் பற்றியும் கவலை இல்லை..ஆனால் எனக்கு அப்படி இல்லை மாமாவுக்காகத் தான் நான் திரும்ப வந்தேன்.."


"ஓ!அப்ப எனக்காக வரலையா உங்க மாமனாருக்காக தான் வந்தீயா ..?"


"ஆமாம்..என்னால் அவரின் சொல்லைத் தட்டமுடியலே.."


"என்னை மன்னிக்கவே மாட்டீயா..?"


"தெரியலே.."


"ம்ம்..ஆனால் நீ மன்னிக்கும் வரை நான் காத்திருப்பேன்..நான் நினைத்திருந்தால் அன்றே உன்னை இழுத்துட்டு வந்திருப்பேன்! ஆனால் உன் மனநிம்மதிக்காகத் தான் அமைதியா இத்தனை நாள் இருந்தேன்.


"ஓ.. ! அவ்வளவு தைரியமா..நீங்க இழுத்துட்டு வர வரைக்கும் நான் அமைதியா இருப்பேன்னு நினைச்சீங்களா..!"



"நீ என்ன செய்திருந்தாலும் நான் நினைச்சு இருந்தா! உன்னை விட்டு இருக்க மாட்டேன்..ஆனால் என் தப்புக்கு தண்டனையாக தான் நான் அமைதியா இருந்தேன்.உன் இஷ்டப்படி விட்டேன்.."



"கொஞ்சம் கூட நீங்க மாறவே இல்லை ..இப்ப கூட எவ்வளவு தெனாவெட்டா பேசறீங்க.."



"ஹோய் ! நான் சொல்ல வந்ததை நீ சரியா புரிஞ்சுக்கலே.நான் நினைச்சு இருந்தா.அப்பவே அப்படி செய்திருக்க முடியும் ! ஆனால் நான் அப்படி செய்யாமல் நீயே என்னை மன்னித்து ஏற்கனும்ன்னு காத்திருந்தேன்னு சொன்னேன்.."



"ஓ..!நான்இங்கே வந்தது மாமாவுக்காகத் தான்..! உங்களுக்குத் தான் உங்க அப்பா மேலே அக்கறை இல்லை.ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது.அவருக்காகத் தான் திரும்ப வந்தேன்.உங்க மேலே இப்பவும் நான் அதே கோவத்துடன் தான் இருக்கேன்.."என்றவள் அதற்கு மேல் அவன் அருகில் நிற்காமல் தன் உடமைகளை உரிய இடத்தில் வைக்கச் சென்றாள்.



மனைவியின் பதிலைக் கேட்ட மிகன் சில நிமிடங்கள் கண்களில் சொல்ல முடியாத வலியுடன் நின்றான்.


மனைவி வந்த மகிழ்ச்சி எல்லாம் அவனுள் மழை நீராய் வடிந்து போனது..கைகள் இறுக மடக்கியபடி கண்களை முடித் திறந்தவன் தன் துக்கத்தை முழுங்கிக் கொண்டான்.



யானைப் பசிக்கு கிடைத்த சோளப்பொறி போல் அவள் இங்கே தன் அருகில் இருப்பதே போதும் என்ற மனநிலைக்கு வந்தவன் அமைதியாய் மனைவியின் செயல்களை பார்த்தவாறு படுக்கையில் சென்று அமர்ந்தான்.



கணவனிடம் தன் மனநிலையை சொன்ன திகழொளி அதன் பிறகு மிகனை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் வேலையை முடித்துக் கொண்டு மணியரசிக்கு சமையலில் உதவச் சென்றாள்.



மகிழினி அவளைக் கண்டதும் மகிழிச்சியுடன் அவளிடம் "அம்மா.. அம்மா.." என்று ஒட்டிக் கொண்டாள்.



இரவு உணவை அனைவரும் உண்டு முடித்த பின் அடுக்களையை ஒதுக்கி சுத்தம் செய்து விட்டு மணியரசி சொல்லச் சொல்ல கேட்காமல் மகிழினியை தன்னுடனே தூங்கட்டும் என்று கூறிவிட்டு தங்கள் அறைக்குத் தூக்கி வந்தாள்.




மிகனும் எதுவும் பேசாமல் மனைவி பின்னோடு தங்கள் அறைக்கு வந்தான்.


மகிழினியுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு அவளுக்கு இரவு உடை மாற்றிவிட்டு தன்னுடனே படுக்க வைத்துக் கொண்டாள்.



கணவன் மனைவி இருவருக்கும் நடுவில் மகிழினியை படுக்க வைத்தவள், குழந்தையின் புறம் திரும்பி படுத்து அவளுக்கு தட்டிக் கொடுத்தபடியே படுத்திருந்தாள்.




மிகனும் மனைவியை பார்த்தபடியே திரும்பி படுத்துக் கொண்டான்.அவனின் பார்வை மனைவியின் மதி முகத்தை விட்டு நகரவில்லை.




கணவனின் பார்வை தன்னையே வட்டமிடுவதை அறிந்தாலும் திகழொளி எதையும் கண்டு கொள்ளாமல் தன் வேலயிலேயே கவனமாக இருந்தாள்.



சிறிது நேரத்தில் அசதியா? இல்லை தன் இருப்பிடம் சேர்ந்து விட்ட நிம்மதியா? ஏதோ ஒன்று அவளை விரைவில் உறக்கத்திற்கு அழைத்து சென்றது.குழந்தை உறங்கும் முன்பே அவள் உறங்கி விட்டாள்.



மனைவி உறங்கும் வரை அமைதியாக இருந்தவன் அவள் நன்கு உறங்கி விட்டாள் என்று உறுதிப்படுத்திக் கொண்டு, மகிழினியை தூக்கி தன் நெஞ்சோடு படுக்க வைத்தவன் மனைவி அருகில் நெருங்கி படுத்து அவளின் தூக்கம் கலையாமல் அவளின் உறக்கம் கலையாமல் தன் தோளோடு அணைத்துக் கொண்டு படுத்தான்.



மகிழினியும் உறங்கிய பின் தன் மனைவியின் பிறை நெற்றியில் பட்டும் படாமல் தன் இதழ்களை பதித்தவன்! தன் நெஞ்சோடு அவளை இறுக அணைத்தபடி நிம்மதியாக அவனும் உறங்கிப் போனான்.




விடியும் வரை இருவரும் அசையவே இல்லை..உரிய இடத்தில் சேர்ந்து விட்ட மனநிலை இருவரையும் அடித்துப் போட்டது போல் உறக்கத்தை கொடுத்தது.



பறவைகளின் இன்னிசை முதலில் திகழொளியின் உறக்கத்தை மெல்ல கலைத்தது.



தலையைனை என்று நினைத்து கணவனின் நெஞ்சில் முகத்தை மேலும் அழுத்தியவளுக்கு ஏதோ வித்தியாசமாக தெரியவும் சட்டென்று விழிகளை திறுந்து பார்த்தவள் தூக்கி வாரிப் போட எழுந்து அமர்ந்தாள்.



'அச்சோ! என்ன வேலை செய்திருக்கோம்.உனக்காக வரவில்லை என்று வீரவசனம் பேசிட்டு இப்படி அவன்‌நெஞ்சில் படுத்து தூங்கி இருக்கோமே !அவன் பார்த்தால் என்ன நினைப்பான் ..!'என்று தன்னையே கடிந்து கொண்டு அவசர அவசரமாக எழுந்து சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.



மிகனும் மனைவி குளித்து விட்டு கிளம்பி வரும் வரை அசந்து உறங்கிக் கொண்டு தான் இருந்தான்.



திகழொளி குளித்து முடித்து தயாராகி மணியரசிக்கு சமையலுக்கு உதவச் சென்றாள்.



மிகனும் உறக்கம் கலைந்ததும் மனைவியைத் தான் தேடினான்.மனைவி அருகில் இல்லை என்றதும் ஒரு பெருமூச்சுடன் தன் மேல் உறங்கிய மகிழினியை எடுத்து அருகில் படுக்க வைத்துவிட்டு அவனும் குளியலறைக்குச் சென்றான்.



மணியரசியின் வற்புறுத்தலில் கணவனுக்கு காஃபி கலந்து எடுத்துக் கொண்டு வேண்டா ..வெறுப்பாக தங்கள் அறைக்குச் சென்ற திகழொளி கண்டது! குளித்துக் கிளம்பி அலுவலகத்திற்கு தயாராக நின்ற மிகனைத் தான்.




மனைவியை கண்டதும் இன்முகத்துடன் "குட் மார்னிங் ஒளி.." என்றான் சிரித்த முகத்துடன்..



கணவனின் புன்னகை திகழொளியை ஒரு நொடி அதிரச் செய்தது.அதுவும் எத்தனை வருடங்கள் கழித்து அவன் விழிகளும் சிரித்தது. பழைய மிகன் அவள் கண்ணுக்குள் வந்துச் சென்றான்.




கூட சேர்ந்து சிரிக்கத் தூண்டும் சத்தம் இல்லாத மென் புன்னகை..கண்களில் தெரிந்த மகிழ்ச்சி அவளை என்னமோ செய்தது.



ஆனாலும், தறிகெட்டு ஓடிய தன் எண்ணத்துக்கு தடை போட்டுவிட்டு எந்த உணர்வையும் காட்டாமல் பதிலுக்கு "குட் மார்னிங்" என்றவள் அவனுக்கு எடுத்து வந்த காஃபியை கொடுத்தாள்..



மனைவி கொடுத்ததை வாங்கி அவளையே விழி எடுக்காது பார்த்தபடி காஃபியை குடித்து முடித்தான்.



கணவனின் பார்வை அவளுக்கு பெரும் சங்கடத்தைக் கொடுத்தாலும், கண்டு கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருந்த மகிழினியை மெல்ல உறக்கம் கலையாமல் தூக்கினாள்.கீழே மணியரசியின் அறையில் படுக்க வைக்க..



மனைவியின் செயலைக் கண்டதும் அவசர அவசரமாக காஃபியை குடித்து முடித்துவிட்டு கப்பை மேஜை மீது வைத்து விட்டு "ஒளி விடு! பாப்பாவே நான் தூக்கி வரேன்.." என்று குழந்தையை வாங்க அருகில் சென்றான்.




"இல்லை வேண்டாம்! நானே பார்த்துக் கொள்கிறேன்.." என்று சொன்னதைக் கேட்காமல் குழந்தையை பிடுங்கவும், மகிழினி விழித்துக் கொண்டாள்.



குழந்தை விழித்துக் கொண்டு அரைத் தூக்கத்தில் சினுங்கியதும் திகழொளிக்கு கணவன் மீது அளவு கடந்த கோபம் வந்தது."ஏங்க நானே கஷ்டப் பட்டு அவள் தூக்கம் கலையாமல் தூக்குனா! இப்படி வந்து எழுப்பி விட்டுட்டீங்களே? இனி அவள் எப்படி என்னை வேலைக்கு போக விடுவா..உதவி செய்யாட்டியும் உபத்திரம் செய்யாமல் இருக்க மாட்டீங்களா.." என்று கடிந்து கொண்டவளிடம்..



"சாரி.. சாரி கொடு நான் அவளை தட்டிக் கொடுத்து தூங்க வைக்கிறேன்.."



"ஒண்ணும் வேண்டாம் நீங்க கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாலே போதும்.." என்றவள் குழந்தையை தன் தோள்களில் சாய்ந்து தட்டிக் கொடுத்தாள்.



"ஒளி ! இனி பாப்பா நேரமா விழித்துப் பழகட்டும் இனி அவளை ஸ்கூல்லே சேர்த்தனும்.."



"ஸ்கூல்லேயா! இப்பவே என்ன அவசரம்.."


"ம் ! அவளுக்கு வயசு நாலு முடியப் போகுது..இதுவே லேட்.."


"ஓ..! ஃப்ரீ கேஜியா..?"


"இல்லை 4 முடியப் போகுதே! டேரக்ட்டா எல் கேஜியே சேர்க்கலாம்.."


"ம்ம்.."என்று மட்டும் யோசனையுடன் கூறியவளிடம் "என்ன அமைதியாகிட்டே..?"


"இல்லே பாப்பா வளர்ந்துட்டாளான்னு தோணுது.."


"வளர்ந்தா நல்லது தானே..!"


"ம்! நல்லது தான் ! ஆனால், குழந்தை தனம்..மழலை மொழி எல்லாமே மாறுமே..இனி படிப்பை நோக்கி ஓடனுமே..அவளை நான் மிஸ் பண்ணுவேன்.."



"அதனால் என்ன.. ? நான் வேணா அதுக்கு ஒரு சூப்பர் ஐடியா தரட்டுமா..?"


என்ன? என்று புரியாமல் கணவனின் முகத்தை ஏறிட்டு பார்த்துவளிடம்..



"பாப்பாவுக்கு ஒரு குட்டி தம்பியோ! குட்டி பாப்பாவோ! நீ பெற்றுக் கொடுத்துட்டா அவளும் சந்தோஷமாக விளையாடுவா..நீயும் குழந்தைகளுடனே இருக்கலாம்.." என்று விழிகள் மின்ன புன்னகைத்தவனை கண்டு கண்கள் சிவக்க முறைத்தாள்.


என்னமோ சொல்றான் என்று ஆர்வமாக கேட்டவளிடம் அவன் கூறிய பதில் அவளுக்கு சினத்தைக் கொடுத்தது.



அவனோ அவளின் கோபத்தை பொருட் படுத்தாமல் அவளின் அருகில் வந்து "உன் ஜாடையில் எனக்கு ஒரு குழந்தை வேண்டும் ஒளி! பெற்றுக் கொடுப்பாயா..?" என்று அவளின் முகவாயை தன் விரல்களால் பட்டும் படாமல் தொட்டபடி அவளின் விழிகளைப் பார்த்து கேட்டான்..



அவளோ, பேச்சற்ற சிலையாக விக்கித்துப் போய் நின்றாள்.


தொடரும்..

Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 36 பதிந்து விட்டேன். இத்தனை நாள் தாமதத்திற்கு மன்னிக்கவும்..
படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. அடுத்த அத்தியாயம் நாளை..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
















 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
438
Reaction score
663
Points
93

உயிர் துடிப்பாய் நீ !


அத்தியாயம் 37


திகழொளிக்கு கணவனின் செய்கை படபடப்பைக் கொடுத்தாலும்,அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடமிருந்து விலகிச் சென்றாள்..



மிகனுக்கு மனைவியின் ஒட்டாத தன்மை மிகுந்த வலியைக் கொடுத்தாலும், எப்படி அவளை சமாதானப் படுத்துவது என்று புரியவில்லை..



வேலை செய்யும் இடத்திலும், அவள் தேவை இல்லாமல் அவனிடம் பேசுவதும் இல்லை..மிகன் அவளை நெருங்கும் போது எல்லாம் அவள் விலகிச் சென்றாள்.



அவனும் தன்னால் முடிந்தவரை அவளிடம் நெருங்கிப் பழக முயற்சி செய்தான்.



ஆனால், மனைவியிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.. பெரியவர்களும் அவர்கள் பிரச்சினையை அவர்களே சரி செய்யட்டும் என்று ஒதுங்கியே இருந்தனர்.



இப்படியே இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் மிகன் ஒரு முடிவுடன் அமுதனைக் காணச் சென்றான்.



மிகனைக் கண்டதும் "வாங்க மாமா எப்படி இருக்கீங்க.." என்று அக்கறையாக கேட்ட அமுதனிடம்..



" இருக்கேன் ..!"என்று சலிப்புடன் கூறினான்.



"ஏன் என்னாச்சு மாமா

..? டல்லா பேசறீங்க.."


"அமுதா என்னால் முடிந்தளவு உங்க அக்காவை சமாதானப்படுத்திப் பார்த்துட்டேன். ஆனால் அவள் என்னை மன்னிப்பதாகவே இல்லை..வாழ்க்கையே வெறுத்துப் போச்சுடா.." என்று புலம்பியவனிடம்.



"மாமா ஏன் இப்படி விரக்த்தியா பேசறீங்க..?கொஞ்சம் பொறுமையா இருங்க..!"




" என் பொறுமையே போய்விட்டது! திகழி என்னை மன்னிப்பான்னு எனக்கு நம்பிக்கையே இல்லை .."



"மாமா எல்லாமே உடனே நடக்குமா? அக்கா காயம் ஆறும் வரை காத்து தான் இருக்கனும்."



"திகழியின் மனம் மாறும்ன்னு தோணலை.."



"எல்லாத்துக்கும் காலம் தான் மருந்து..அக்கா மனக்காயம் கொஞ்சம் கொஞ்சமாக தான் ஆறும் மாமா! நீங்க அதுவரை பொறுமையாக தான் இருந்தாகனும்..!"




"முடியலே அமுதா ! என் மனமே என்னைக் கொள்ளாமல் கொள்ளுது..நரக வேதனையா இருக்கு! அமுதா, நீ சின்னப் பையன் தான். ஆனாலும் உங்கிட்ட கேட்கிறேன்‌ திகழியை கரெக்ட் பண்ண ஏதாவது ஐடியா கொடு ..!"



"மாமா என்ன இந்தளவுக்கு இறங்கீட்டீங்க..!



"வேற வழி தெரியலை அமுதா..எனக்கு உங்க அக்கா கூட சந்தோஷமா வாழனும்.இத்தனை நாள் அவளை கஷடப்படுத்தியதற்கும் சேர்த்து அவளை சந்தோஷமா வச்சுக்கனும்.. அதுக்கு ஏதாவது வழி தெரிந்தா சொல்லு..!"



"மாமா உண்மையாளுமே அக்கா உங்க மீது அளவு கடந்த அன்பு வச்சு இருக்கா..அது தான் உங்க மேலே இவ்வளவு கோவத்துக்கும் காரணம்..! கண்டிப்பா பொறுமையா இருங்க! உங்களே அக்கா புரிஞ்சுப்பா.."



" போடா அவ எப்ப புரிஞ்சு? எப்ப எங்கூட சேர்ந்து வாழப்போறா..! அதுக்குள்ள நான் கிழவன் ஆகிடுவேன்.."



"மாமா எல்லாமே உங்களுக்கு அவசரம்..முதல்லே உங்க அன்பை புரிய வைங்க..அக்கா புரிஞ்சுப்பா.."



"அமுதா இனி நான் அமைதியா உங்க அக்கா மாறுவான்னு காத்திருந்தா, வேலைக்கு ஆகாது..இனி நான் என் வழியில் போனால் தான் சரியா இருக்கும். உங்கிட்ட போய் ஐடியா கேட்டேன் பாரு! உங்க அக்கா மாதிரி தானே நீயும் இருப்பே! இனி நானே பார்த்துக்கிறேன்..!



"அச்சோ மாமா! என்ன செய்யப் போறீங்க..ஏதாவது ஏடாகூடாமா செய்து உள்ளதையும் கெடுத்துக்காதீங்க.."



"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்! நீ கவலைப்படாதே.."என்றவன் யோசனையுடன் அங்கிருந்து சென்றான்.



'இவர் ஏதாவது செய்து மேலும் பிரச்சினையை இழுக்ககப் போகிறாரோ !' என்று அமுதன் மனதிற்குள் பயந்தான்.



அதன் பின் வந்த நாட்களில் 'மிகன்' திகழியிடம் இன்னும் நெருங்க ஆரம்பித்தான்.


அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி திகழிக்கு உதவி செய்கிறேன் என்று அவள் பின்னாலேயே சுத்த ஆரம்பித்தான்.அவளுக்கு கணவன் செய்வது எல்லாம் வியப்பைக் கொடுத்தது.

எப்போதும் இல்லாமல் இப்போது அவளிடம் அவனின் அக்கறையும், நெருக்கமும் அவளுள் அவன் மீது நேசத்தைக் கூட்டியது..



ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாகவே இருந்தாள்.



ஆனால், அவளின் கணவனோ அவளின் பொறுமையை வெகுவாக சோதித்தான். கணவனின் செயல்கள் அவளின் அமைதியைக் கேள்விக் குறியாக்கியது..



தன் பொறுமையை கைவிட்டு கணவனிடம் "மிகன் உங்களுக்கு என்ன தான் பிரிச்சினை ?ஏன் என்னை இப்படி படுத்தி எடுக்குறீங்க?"



"நான் என்ன செய்தேன்.?"


ம்..! எதுக்கு என் "பின்னாலேயே சுத்தறீங்க..?"



"என் பொண்டாட்டி பின்னதானே சுத்தறேன்..வேறு யாராவது பின்னாலாய சுத்தறேன்.."



"மிகன் என்னை சோதீக்காதீங்க.."



இங்க பாரு திகழி! நான் தப்பு செய்துட்டேன் தான்! அதுக்காக காலம் பூராவும் நீ இப்படி என்னை விட்டு விலகி இருக்கவா நாம் கல்யாணம் செய்துட்டோம்..! எனக்கு உங்கூட சந்தோஷமா வாழனும்.."



"என் மீது நம்பிக்கை இல்லாதவங்க கூட நான் எந்த நம்பிக்கையில் சேர்ந்து வாழ முடியும்.."



"திகழி முடிந்ததைப் பற்றி பேசி பயனில்லை..நான் தான் செய்த தப்பை ஒத்துக்கிறேன்..இனி அதுபோல் நடக்காது என்று வாக்கு கொடுக்கிறேன்..என்னை நம்பு டீ.."



"எனக்கு குழப்பமாகவே இருக்கு என்னை விட்டுடுங்க..நான் இப்படியே இருந்துட்டு போறேன்.."



"திகழி என்னை மன்னிக்கவே மாட்டீயா..? புரிஞ்சுக்கா டீ.."என்றவனிடம் பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தவளிடம்.." சரி அப்ப நாம விவாகரத்து செய்துக்கலாம்.."



"என்னது!" என்று அதிர்ந்த பார்த்த மனைவியிடம்..



"அப்புறம் என்ன செய்ய முடியும்..உனக்கு தான் எங்கூட சேர்ந்து வாழ விருப்பமில்லை..நீயாவது வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா வாழு.."


"என்ன பைத்தியமாட்ட உளறீங்க.."



"உளறல் இல்லை. உண்மை தான்! எதுக்கு உன் வாழ்க்கையும் சேர்த்து கெடுக்கனும்! நீயாவது சந்தோஷமா வாழு!நான் எங்காவது சன்னியாசம் போறேன்.."



"மிகன்..!"


"இங்க பாரு திகழி உனக்கு இரண்டே ஆப்சன்..ஒண்ணு என் கூட சேர்ந்து வாழனும்..இல்லை டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணலாம்.."



"ஓ! அப்ப என்ன டைவர்ஸ் பண்ண ரெடியா இருக்கீங்க.."



"வேறு வழி இல்லை.."என்று அவன் கூறியதும் திகழிக்கு கண்களில் நீர் கோர்த்து.. சில நொடிகள் பற்களை கடித்து கண்ணீரை அடக்கினாள்.தன் துக்கத்தை விழுங்கிக் கொண்டு "சரி உங்கள் விருப்பம் அதுதான் என்றால் எனக்கு சம்மதம்..! நீங்க அப்ளே பண்ணுங்க.." என்றாள் நிமிர்வாக..



மிகனோ அதைக் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்தவன்.."என்ன விளையாடுறீயா? ஓஹோ..! அந்த அளவுக்கு ஆயிடுச்சா!" என்று கோவமாக கேட்டான்.



"நீங்க தானே கேட்டீங்க..!"



"நான் கேட்டா? நீ சரின்னு சொல்லுவீயா..! என்னை விட்டுப் போவதில் உனக்கு அவ்வளவு ஆனந்தமா?"



"நீங்க கேட்ட தப்பில்லை .நான் சரின்னு சொன்னா தப்பா..?"



"ஆமாம்! அப்பாவது நீ மனசு மாறுவேன்னு சொன்னா நீ சரின்னு சொல்லுவீயா.." என்றவன் அவளை சட்டென்று தன்‌ அருகில் இழுத்து அவளின் முகவாயைப் பற்றி..



"என்னை விட்டுட்டு போலாம்ன்னு கனவுலே கூட நீ நினைக்க கூடாது!கொன்னுடுவேன்! இங்க பாரு இதுக்கு மேலே எனக்கு பொறுமை இல்லை.. தயவு செய்து என்னை புரிஞ்சுக்கோடீ.. "என்று சிறு கெஞ்சலுடன் அவளை இழுத்து இறுக்கி அணைத்து, அவள் நெற்றியில் மென்மையாக இதழ்பதித்தவன் விலக மனம் இல்லாமல் விலகிச் சென்றான்.



கணவனின் செய்கை அவளுள் ஏதோ செய்தது..



நெற்றியில் அவன் இதழ் தந்த ஈரத்தை மென்மையாக வருடியவளுக்கு மனம் முழுக்க பாரமாக இருந்தது.



ஏன் இந்த அவஸ்த்தை! அழகாக வாழ வேண்டிய வாழ்க்கையை யாரோ ஒருவனால் இப்படி திசை மாறச் செய்து விட்டதே! என்று நொந்து கொண்டாள்.



விவகாரத்து என்று சொன்னாலாவது தன் மனைவி மனம் மாறுவாள்‌! என்று எதிர்பார்த்தவனிடம் அவள் மனைவி அதற்கும் சரி என்று சொன்னது மிகனுக்கும் மனதிற்குள் பயத்தைக் கொடுத்தது.



அடுத்த வந்த நாள்களில் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான். தன் மனதை அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்தான்.



இனி மயிலே !மயிலே! இறகு போடு என்று சொல்வது வேலைக்காகது என்று புரிந்து கொண்டான்.



கணவனின் செய்கையில் திகைத்து நின்றிருந்தவளைப் பார்க்க பாவமாகத் தான் இருந்தது..ஆனால் அவளிடம் இனி மென்மையான அணுகுமுறை வேலைக்காகது என்று எண்ணினான்.



கணவனின் நடவடிக்கைகள் திகழொளிக்கு மனதிற்குள் சிறு பயத்தைக் கொடுத்தது.எங்கே தன் சம்மதம் இல்லாமல் தன்னிடம் அத்துமீறுவானோ? என்று பயந்தாள்.



ஆனால் ,அவளின் கணவனோ !அப்படி எல்லாம் எதையும் செய்யவில்லை..அவளின் அருகாமையை எவ்வளவு அவன் விரும்புகிறான் என்று செயல்களிலும் பேச்சிலும் உணர வைத்தான்.



அவள் எதிர்பார்த்தற்கு நேர் மாறாக நடந்து கொண்டான்.தன் விருப்பத்தையும் நேசத்தையும் ஒவ்வொரு செயலிலும் உணர வைத்தான். நீ என்னை மன்னித்து என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஏற்கும் வரை காத்திருப்பேன் என்று சொல்லாமல் சொன்னான்.



இரவின் தனிமையில் கூட அவளை மென்மையாக அணைத்தபடி மட்டுமே உறங்கினான்.



அவளின் அருகாமையை விரும்புவதை மட்டும் உணர்த்திக் கொண்டே இருந்தான்.



அவளிடம் அதிரடியாக பேசினாலும் நடத்தையில் மிகுந்த கன்னியத்துடன் நடந்து கொண்டான்.



திகழொளியும் மெல்ல மெல்ல கணவனின் அருகாமையை விரும்ப ஆரம்பித்தாள்.ஆனால் அதை அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை..



இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கும் காலம் ஒரு முடிவு கட்டியது..


எப்போதும் கணவன் மனைவி இருவரும் ஒன்றாகவே வேலைக்கு சென்று வருவார்கள்.ஆனால் ,அன்று மிகனுக்கு ஒரு மீட்டீங் இருந்தது.அதனால் திகழொளியை வீட்டிற்கு அமுதனுடன் அனுப்பி வைத்தான்.



திகழொளியும் வீட்டிற்கு வந்து வழக்கமான தன் வேலைகளை செய்து முடித்துவிட்டு மகிழினியுடன் கணவனுக்காக காத்திருந்தாள்.



நேரம் தான் சென்று கொண்டிருந்தது.ஆனால், கணவன் மட்டும் வந்தபாடில்லை.. நேரம் போகப்போக திகழொளியின் மனதிற்குள் மெல்ல மெல்ல பயம் கல்விக் கொண்டது.



தன் மாமனாரிடம் புலம்பத் தொடங்கினாள்.உலகமாறனும் மகனின் அலைபேசிக்கு அழைத்துப் பார்க்க அதுவும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று செய்தியை சுமந்து வந்தது.



அதன் பிறகு பெரியவர்களுக்கும் லேசான பயம் வரத் தொடங்கியது..திகழொளி நிலையில்லாமல் தவித்தாள்..மூச்சு விடுவது கூட அவளுக்கு சிரமமாக இருந்தது..



உலகில் உள்ள அத்தனை தெய்வத்தையும் கணவனுக்காக சரணடைந்தாள்..விழிகளோ வாசலையே பார்த்து தவம் கிடந்தது..மனமோ விடாமல் அவன் நல்லபடியாக வீடு வரவேண்டும் என்று அர்ச்சித்தது..



உறங்கிய மகிழினியை தன் நெஞ்சோடு அணைத்தபடி அமர்ந்திருந்த திகழொளியிடம் இருந்து மகிழினியை தூக்கிக் கொண்ட மணியரசி! அவளின் முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்டு ! அவளுக்கு ஆறுதலாக "திகழி உன் நல்ல மனசுக்கு அவனுக்கு எதுவும் ஆகாது டா..வந்துடுவான் நீ பயப்படாதே!" என்று அவளை தட்டிக் கொடுத்துச் சென்றார்.



உலகமாறனுக்கும் மருமகளின் நிலையைக் காண முடியாமல் "திகழி நீ பயப்படாதே! நான் ஆபிஸ் வரை போய் ஓர் எட்டு பார்த்துட்டே வரேன்.."என்றார்.



"மாமா நானும் வரேன் .."என்றவளிடம்..


"இந்த நேரத்தில் நீ எதற்கு மா..நாம் அங்கே போய்யிருக்கும் போது மிகன் இங்கே வந்துவிட்டால்..?அதனால் நீ இங்கேயே இரு !நான் போறேன்.." என்றவரிடம்


காஞ்சித்துரை "நானும் வரேன் இருப்பா..!" என்று சட்டையை போட்ட படி கிளம்பி வந்தார்.



சரியாக அந்த நேரம் அவளின் ஆருயிர் நாயகனின் வண்டிச் சத்தம் கேட்டது..மூவரும் ஆவலாக வாசலைப் பார்த்தனர்..



ஓய்ந்து போய் வந்த கணவனைக் கண்டதும்..தன்னை மறந்து ஓடிய திகழொளி கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்..



தொடரும்..
Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 37 போட்டு விட்டேன்...படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
அடுத்த யூடி‌ முடிந்தவரை சனிக்கிழமை போடுகிறேன்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்

























 

Latest posts

New Threads

Top Bottom