உயிர் துடிப்பாய் நீ !
அத்தியாயம் 37
திகழொளிக்கு கணவனின் செய்கை படபடப்பைக் கொடுத்தாலும்,அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடமிருந்து விலகிச் சென்றாள்..
மிகனுக்கு மனைவியின் ஒட்டாத தன்மை மிகுந்த வலியைக் கொடுத்தாலும், எப்படி அவளை சமாதானப் படுத்துவது என்று புரியவில்லை..
வேலை செய்யும் இடத்திலும், அவள் தேவை இல்லாமல் அவனிடம் பேசுவதும் இல்லை..மிகன் அவளை நெருங்கும் போது எல்லாம் அவள் விலகிச் சென்றாள்.
அவனும் தன்னால் முடிந்தவரை அவளிடம் நெருங்கிப் பழக முயற்சி செய்தான்.
ஆனால், மனைவியிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.. பெரியவர்களும் அவர்கள் பிரச்சினையை அவர்களே சரி செய்யட்டும் என்று ஒதுங்கியே இருந்தனர்.
இப்படியே இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் மிகன் ஒரு முடிவுடன் அமுதனைக் காணச் சென்றான்.
மிகனைக் கண்டதும் "வாங்க மாமா எப்படி இருக்கீங்க.." என்று அக்கறையாக கேட்ட அமுதனிடம்..
" இருக்கேன் ..!"என்று சலிப்புடன் கூறினான்.
"ஏன் என்னாச்சு மாமா
..? டல்லா பேசறீங்க.."
"அமுதா என்னால் முடிந்தளவு உங்க அக்காவை சமாதானப்படுத்திப் பார்த்துட்டேன். ஆனால் அவள் என்னை மன்னிப்பதாகவே இல்லை..வாழ்க்கையே வெறுத்துப் போச்சுடா.." என்று புலம்பியவனிடம்.
"மாமா ஏன் இப்படி விரக்த்தியா பேசறீங்க..?கொஞ்சம் பொறுமையா இருங்க..!"
" என் பொறுமையே போய்விட்டது! திகழி என்னை மன்னிப்பான்னு எனக்கு நம்பிக்கையே இல்லை .."
"மாமா எல்லாமே உடனே நடக்குமா? அக்கா காயம் ஆறும் வரை காத்து தான் இருக்கனும்."
"திகழியின் மனம் மாறும்ன்னு தோணலை.."
"எல்லாத்துக்கும் காலம் தான் மருந்து..அக்கா மனக்காயம் கொஞ்சம் கொஞ்சமாக தான் ஆறும் மாமா! நீங்க அதுவரை பொறுமையாக தான் இருந்தாகனும்..!"
"முடியலே அமுதா ! என் மனமே என்னைக் கொள்ளாமல் கொள்ளுது..நரக வேதனையா இருக்கு! அமுதா, நீ சின்னப் பையன் தான். ஆனாலும் உங்கிட்ட கேட்கிறேன் திகழியை கரெக்ட் பண்ண ஏதாவது ஐடியா கொடு ..!"
"மாமா என்ன இந்தளவுக்கு இறங்கீட்டீங்க..!
"வேற வழி தெரியலை அமுதா..எனக்கு உங்க அக்கா கூட சந்தோஷமா வாழனும்.இத்தனை நாள் அவளை கஷடப்படுத்தியதற்கும் சேர்த்து அவளை சந்தோஷமா வச்சுக்கனும்.. அதுக்கு ஏதாவது வழி தெரிந்தா சொல்லு..!"
"மாமா உண்மையாளுமே அக்கா உங்க மீது அளவு கடந்த அன்பு வச்சு இருக்கா..அது தான் உங்க மேலே இவ்வளவு கோவத்துக்கும் காரணம்..! கண்டிப்பா பொறுமையா இருங்க! உங்களே அக்கா புரிஞ்சுப்பா.."
" போடா அவ எப்ப புரிஞ்சு? எப்ப எங்கூட சேர்ந்து வாழப்போறா..! அதுக்குள்ள நான் கிழவன் ஆகிடுவேன்.."
"மாமா எல்லாமே உங்களுக்கு அவசரம்..முதல்லே உங்க அன்பை புரிய வைங்க..அக்கா புரிஞ்சுப்பா.."
"அமுதா இனி நான் அமைதியா உங்க அக்கா மாறுவான்னு காத்திருந்தா, வேலைக்கு ஆகாது..இனி நான் என் வழியில் போனால் தான் சரியா இருக்கும். உங்கிட்ட போய் ஐடியா கேட்டேன் பாரு! உங்க அக்கா மாதிரி தானே நீயும் இருப்பே! இனி நானே பார்த்துக்கிறேன்..!
"அச்சோ மாமா! என்ன செய்யப் போறீங்க..ஏதாவது ஏடாகூடாமா செய்து உள்ளதையும் கெடுத்துக்காதீங்க.."
"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்! நீ கவலைப்படாதே.."என்றவன் யோசனையுடன் அங்கிருந்து சென்றான்.
'இவர் ஏதாவது செய்து மேலும் பிரச்சினையை இழுக்ககப் போகிறாரோ !' என்று அமுதன் மனதிற்குள் பயந்தான்.
அதன் பின் வந்த நாட்களில் 'மிகன்' திகழியிடம் இன்னும் நெருங்க ஆரம்பித்தான்.
அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி திகழிக்கு உதவி செய்கிறேன் என்று அவள் பின்னாலேயே சுத்த ஆரம்பித்தான்.அவளுக்கு கணவன் செய்வது எல்லாம் வியப்பைக் கொடுத்தது.
எப்போதும் இல்லாமல் இப்போது அவளிடம் அவனின் அக்கறையும், நெருக்கமும் அவளுள் அவன் மீது நேசத்தைக் கூட்டியது..
ஆனாலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாகவே இருந்தாள்.
ஆனால், அவளின் கணவனோ அவளின் பொறுமையை வெகுவாக சோதித்தான். கணவனின் செயல்கள் அவளின் அமைதியைக் கேள்விக் குறியாக்கியது..
தன் பொறுமையை கைவிட்டு கணவனிடம் "மிகன் உங்களுக்கு என்ன தான் பிரிச்சினை ?ஏன் என்னை இப்படி படுத்தி எடுக்குறீங்க?"
"நான் என்ன செய்தேன்.?"
ம்..! எதுக்கு என் "பின்னாலேயே சுத்தறீங்க..?"
"என் பொண்டாட்டி பின்னதானே சுத்தறேன்..வேறு யாராவது பின்னாலாய சுத்தறேன்.."
"மிகன் என்னை சோதீக்காதீங்க.."
இங்க பாரு திகழி! நான் தப்பு செய்துட்டேன் தான்! அதுக்காக காலம் பூராவும் நீ இப்படி என்னை விட்டு விலகி இருக்கவா நாம் கல்யாணம் செய்துட்டோம்..! எனக்கு உங்கூட சந்தோஷமா வாழனும்.."
"என் மீது நம்பிக்கை இல்லாதவங்க கூட நான் எந்த நம்பிக்கையில் சேர்ந்து வாழ முடியும்.."
"திகழி முடிந்ததைப் பற்றி பேசி பயனில்லை..நான் தான் செய்த தப்பை ஒத்துக்கிறேன்..இனி அதுபோல் நடக்காது என்று வாக்கு கொடுக்கிறேன்..என்னை நம்பு டீ.."
"எனக்கு குழப்பமாகவே இருக்கு என்னை விட்டுடுங்க..நான் இப்படியே இருந்துட்டு போறேன்.."
"திகழி என்னை மன்னிக்கவே மாட்டீயா..? புரிஞ்சுக்கா டீ.."என்றவனிடம் பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தவளிடம்.." சரி அப்ப நாம விவாகரத்து செய்துக்கலாம்.."
"என்னது!" என்று அதிர்ந்த பார்த்த மனைவியிடம்..
"அப்புறம் என்ன செய்ய முடியும்..உனக்கு தான் எங்கூட சேர்ந்து வாழ விருப்பமில்லை..நீயாவது வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா வாழு.."
"என்ன பைத்தியமாட்ட உளறீங்க.."
"உளறல் இல்லை. உண்மை தான்! எதுக்கு உன் வாழ்க்கையும் சேர்த்து கெடுக்கனும்! நீயாவது சந்தோஷமா வாழு!நான் எங்காவது சன்னியாசம் போறேன்.."
"மிகன்..!"
"இங்க பாரு திகழி உனக்கு இரண்டே ஆப்சன்..ஒண்ணு என் கூட சேர்ந்து வாழனும்..இல்லை டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணலாம்.."
"ஓ! அப்ப என்ன டைவர்ஸ் பண்ண ரெடியா இருக்கீங்க.."
"வேறு வழி இல்லை.."என்று அவன் கூறியதும் திகழிக்கு கண்களில் நீர் கோர்த்து.. சில நொடிகள் பற்களை கடித்து கண்ணீரை அடக்கினாள்.தன் துக்கத்தை விழுங்கிக் கொண்டு "சரி உங்கள் விருப்பம் அதுதான் என்றால் எனக்கு சம்மதம்..! நீங்க அப்ளே பண்ணுங்க.." என்றாள் நிமிர்வாக..
மிகனோ அதைக் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்தவன்.."என்ன விளையாடுறீயா? ஓஹோ..! அந்த அளவுக்கு ஆயிடுச்சா!" என்று கோவமாக கேட்டான்.
"நீங்க தானே கேட்டீங்க..!"
"நான் கேட்டா? நீ சரின்னு சொல்லுவீயா..! என்னை விட்டுப் போவதில் உனக்கு அவ்வளவு ஆனந்தமா?"
"நீங்க கேட்ட தப்பில்லை .நான் சரின்னு சொன்னா தப்பா..?"
"ஆமாம்! அப்பாவது நீ மனசு மாறுவேன்னு சொன்னா நீ சரின்னு சொல்லுவீயா.." என்றவன் அவளை சட்டென்று தன் அருகில் இழுத்து அவளின் முகவாயைப் பற்றி..
"என்னை விட்டுட்டு போலாம்ன்னு கனவுலே கூட நீ நினைக்க கூடாது!கொன்னுடுவேன்! இங்க பாரு இதுக்கு மேலே எனக்கு பொறுமை இல்லை.. தயவு செய்து என்னை புரிஞ்சுக்கோடீ.. "என்று சிறு கெஞ்சலுடன் அவளை இழுத்து இறுக்கி அணைத்து, அவள் நெற்றியில் மென்மையாக இதழ்பதித்தவன் விலக மனம் இல்லாமல் விலகிச் சென்றான்.
கணவனின் செய்கை அவளுள் ஏதோ செய்தது..
நெற்றியில் அவன் இதழ் தந்த ஈரத்தை மென்மையாக வருடியவளுக்கு மனம் முழுக்க பாரமாக இருந்தது.
ஏன் இந்த அவஸ்த்தை! அழகாக வாழ வேண்டிய வாழ்க்கையை யாரோ ஒருவனால் இப்படி திசை மாறச் செய்து விட்டதே! என்று நொந்து கொண்டாள்.
விவகாரத்து என்று சொன்னாலாவது தன் மனைவி மனம் மாறுவாள்! என்று எதிர்பார்த்தவனிடம் அவள் மனைவி அதற்கும் சரி என்று சொன்னது மிகனுக்கும் மனதிற்குள் பயத்தைக் கொடுத்தது.
அடுத்த வந்த நாள்களில் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான். தன் மனதை அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்தான்.
இனி மயிலே !மயிலே! இறகு போடு என்று சொல்வது வேலைக்காகது என்று புரிந்து கொண்டான்.
கணவனின் செய்கையில் திகைத்து நின்றிருந்தவளைப் பார்க்க பாவமாகத் தான் இருந்தது..ஆனால் அவளிடம் இனி மென்மையான அணுகுமுறை வேலைக்காகது என்று எண்ணினான்.
கணவனின் நடவடிக்கைகள் திகழொளிக்கு மனதிற்குள் சிறு பயத்தைக் கொடுத்தது.எங்கே தன் சம்மதம் இல்லாமல் தன்னிடம் அத்துமீறுவானோ? என்று பயந்தாள்.
ஆனால் ,அவளின் கணவனோ !அப்படி எல்லாம் எதையும் செய்யவில்லை..அவளின் அருகாமையை எவ்வளவு அவன் விரும்புகிறான் என்று செயல்களிலும் பேச்சிலும் உணர வைத்தான்.
அவள் எதிர்பார்த்தற்கு நேர் மாறாக நடந்து கொண்டான்.தன் விருப்பத்தையும் நேசத்தையும் ஒவ்வொரு செயலிலும் உணர வைத்தான். நீ என்னை மன்னித்து என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஏற்கும் வரை காத்திருப்பேன் என்று சொல்லாமல் சொன்னான்.
இரவின் தனிமையில் கூட அவளை மென்மையாக அணைத்தபடி மட்டுமே உறங்கினான்.
அவளின் அருகாமையை விரும்புவதை மட்டும் உணர்த்திக் கொண்டே இருந்தான்.
அவளிடம் அதிரடியாக பேசினாலும் நடத்தையில் மிகுந்த கன்னியத்துடன் நடந்து கொண்டான்.
திகழொளியும் மெல்ல மெல்ல கணவனின் அருகாமையை விரும்ப ஆரம்பித்தாள்.ஆனால் அதை அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை..
இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கும் காலம் ஒரு முடிவு கட்டியது..
எப்போதும் கணவன் மனைவி இருவரும் ஒன்றாகவே வேலைக்கு சென்று வருவார்கள்.ஆனால் ,அன்று மிகனுக்கு ஒரு மீட்டீங் இருந்தது.அதனால் திகழொளியை வீட்டிற்கு அமுதனுடன் அனுப்பி வைத்தான்.
திகழொளியும் வீட்டிற்கு வந்து வழக்கமான தன் வேலைகளை செய்து முடித்துவிட்டு மகிழினியுடன் கணவனுக்காக காத்திருந்தாள்.
நேரம் தான் சென்று கொண்டிருந்தது.ஆனால், கணவன் மட்டும் வந்தபாடில்லை.. நேரம் போகப்போக திகழொளியின் மனதிற்குள் மெல்ல மெல்ல பயம் கல்விக் கொண்டது.
தன் மாமனாரிடம் புலம்பத் தொடங்கினாள்.உலகமாறனும் மகனின் அலைபேசிக்கு அழைத்துப் பார்க்க அதுவும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று செய்தியை சுமந்து வந்தது.
அதன் பிறகு பெரியவர்களுக்கும் லேசான பயம் வரத் தொடங்கியது..திகழொளி நிலையில்லாமல் தவித்தாள்..மூச்சு விடுவது கூட அவளுக்கு சிரமமாக இருந்தது..
உலகில் உள்ள அத்தனை தெய்வத்தையும் கணவனுக்காக சரணடைந்தாள்..விழிகளோ வாசலையே பார்த்து தவம் கிடந்தது..மனமோ விடாமல் அவன் நல்லபடியாக வீடு வரவேண்டும் என்று அர்ச்சித்தது..
உறங்கிய மகிழினியை தன் நெஞ்சோடு அணைத்தபடி அமர்ந்திருந்த திகழொளியிடம் இருந்து மகிழினியை தூக்கிக் கொண்ட மணியரசி! அவளின் முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்டு ! அவளுக்கு ஆறுதலாக "திகழி உன் நல்ல மனசுக்கு அவனுக்கு எதுவும் ஆகாது டா..வந்துடுவான் நீ பயப்படாதே!" என்று அவளை தட்டிக் கொடுத்துச் சென்றார்.
உலகமாறனுக்கும் மருமகளின் நிலையைக் காண முடியாமல் "திகழி நீ பயப்படாதே! நான் ஆபிஸ் வரை போய் ஓர் எட்டு பார்த்துட்டே வரேன்.."என்றார்.
"மாமா நானும் வரேன் .."என்றவளிடம்..
"இந்த நேரத்தில் நீ எதற்கு மா..நாம் அங்கே போய்யிருக்கும் போது மிகன் இங்கே வந்துவிட்டால்..?அதனால் நீ இங்கேயே இரு !நான் போறேன்.." என்றவரிடம்
காஞ்சித்துரை "நானும் வரேன் இருப்பா..!" என்று சட்டையை போட்ட படி கிளம்பி வந்தார்.
சரியாக அந்த நேரம் அவளின் ஆருயிர் நாயகனின் வண்டிச் சத்தம் கேட்டது..மூவரும் ஆவலாக வாசலைப் பார்த்தனர்..
ஓய்ந்து போய் வந்த கணவனைக் கண்டதும்..தன்னை மறந்து ஓடிய திகழொளி கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்..
தொடரும்..
Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 37 போட்டு விட்டேன்...படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
அடுத்த யூடி முடிந்தவரை சனிக்கிழமை போடுகிறேன்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்