அற்புதம் -9
பகலவன் அவன் தன் பணியை செவ்வனே முடித்துக் கொண்டு மலைமுகடுகளில் சென்று சற்று இளைப்பாறிய நேரம் வான்முகிலவள் தன் பணியை துவங்கியிருக்கும் ஏகாந்த வேளை அது.. விழிகள் யாவும் மெல்ல மெல்ல இருட்டுக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள தொடங்கிய நேரம் வானில் பிரகாசித்து ஒளிவீசிக் கொண்டிருந்தாள் பௌர்ணமி பெண்ணவள்...
அதேநேரம் ஆந்தைகளும், கோட்டான்களும் அலறிட, நெஞ்சை அச்சத்தில் உருள வைக்கும் இருள் படர்ந்திருந்த அந்திஜாம நேரம்...
மிகிரனைச் சுற்றி போடப்பட்டிருந்த மரத்துண்டுகளின் மீது தீச்சுவாலையை ஏற்ற வைத்திட தயாராக நின்றிருந்தார் தலைவன் போன்ற தோரணையில் இருந்த ஒருவர்.. அவரைச் சுற்றிலும் நின்றிருந்த ஆண்கள் அனைவரும் இடுப்பிற்கு மேலே மேலாடைகள் இன்றி வெற்றுடலோடு நின்றிருக்க, இடுப்பிலிருந்து முட்டி வரை விலங்குகளின் தோலை ஆடையாக அணிந்திருந்தனர். திரும்பும் திசை எங்கும் பெண்கள் கூட்டத்தினரின் ஒரு தலையைக்கூட காணவில்லை. ஆனால் பிறந்து சில தினங்களே ஆனாலும் ஆண் பிள்ளை எனில் அவர்கள் நிச்சயம் இந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டுமென்பது அவர்களது எழுதப்படாத விதியாகும் அதனால் பிறந்து 15 நாட்களே ஆன இளம் சிசு ஒன்றும் ஒரு ஓரமாக அதன் தந்தையின் மடியில் படுத்திருந்தது..
விசித்திரமான முறையில் கால் கைகளை மேலே தூக்கியும் கீழே இறக்கியும், உட்கார்ந்து எழுந்தும், தலைகீழாக நின்றும் மிகமிக வித்தியாசன முறையில் நடனமாடினார்கள் அவர்கள் அனைவரும்.
அனைவரும் ஒருசேர மிக ரசித்து, மஙிழ்வுடனே சீரான இடைவெளி விட்டு ஒரே போல் நடனம் ஆடிட. தள்ளி நின்றின்ற தலைவன் போன்றவரும் தன் பங்கிற்கு ஆடி முடித்துக் களைத்தவராய்,
“போதும் ஆடுவதை நிறுத்துங்கள்! தக்க சமயம் வந்துவிட்டது என்பதை உச்சி வானில் பிரகாசித்து ஒளிவீசிக் கொண்டிருக்கும் நிலவு உணர்த்துகிறது, வழிவிட்டு நில்லுங்கள்” என்று சத்தமாகக் கூறிட.அனைவரும் வழிபட்டு நின்றார்கள்.
பின்பு அடிமேல் அடி வைத்து மிகிரன் இருந்த இடத்தை நெருங்கியவர் கண்கள் மூடிய நிலையில் தன் கையில் இருக்கும் தீப்பந்தத்தை கீழே விட அது அந்தரத்தில் அப்படியே நின்றது. கால்களிரண்டையும் சம்மணம் இடுவது போல் இட்டு தரையில் அமர்வது போல், அந்தரத்தில் அமர்ந்தார் அவர். இதழ் குவித்து ஏதோதோ உச்சாடனங்கள் செய்த மறுநிமிடம் அந்தரத்தில் மிதந்தவாறு மிகிரனை சுற்றி மும்முறை வலம் வந்தார். பின்பு கால்களை விரித்து கீழே இறங்கி நின்றவர் அந்தரத்தில் மிதந்த தீப்பந்தத்தைக் கையில் எடுத்து,
“எங்கள் பூஜையை ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!” என்று மொழிந்து விட்டு மரக்கட்டைகளின் மீது தீப்பந்தத்தை போட அடுத்த கணம் சடசடவென்று நெருப்பு பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்தது.. கிட்டத்தட்ட அந்த நெருப்பு அந்தக் காட்டையே அழிப்பதற்கு போதுமானது. ஆனால் அவ்வளவு வேகமாக கொளுந்துவிட்டு நெருப்பு எரிந்தாலும் அதன் அருகிலே நின்றிருந்த எவருக்கும் அனல் என்பது தெரியவே இல்லை. ஏதோ அதை சுற்றி மாயவலை இருப்பதுபோல் அனைவரும் சர்வசாதாரணமாக கொழுந்து விட்டு எரியும் தீ ஜூவாலையையே விழி மூடாது பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்..
மரக்கட்டைகளும், இலை தழை சருகுகளும் முழுவதுமாக எரிந்து சாம்பலாகி, நெருப்பு அணைந்து தீக்கங்குகளாக மாறி விட்ட போதும் மிகிரனை ஒரு பொட்டு தீ தீண்டவில்லை.. படுக்க வைக்கப்பட்ட நிலையிலேயே சலனமற்று, சுயநினைவற்றுக் கிடந்தான்...
அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு, முகத்தில் மகிழ்ச்சி ரேகைகளைப் படர விட்டவாறு சந்தோஷ கூக்குரலிட்டனர். அந்த தலைவனாகப்பட்டவரும்,
“பார்த்தீர்களா? என் சந்தேகம் ஊர்ஜிதமாகி விட்டது. இவர் யாரென்று உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? தரையில் சாதாரண மனிதனைப் போல் நடந்து சென்று கடல் நீரில் பாதம் பதிக்கையில் எவனொருவனின் விழிகள் நீல நிறத்தில் மாறுகின்றதோ? அவனைச் சுற்றி அவ்வேளையில் செங்கதிரோனின் செந்நிறக்கதிர்களைப் போல் ஒளி பிம்பம் தோன்றுகிறதோ? அவனொருவனால் தான் நமக்கு மோட்சமும் கிட்டும், நம் சந்ததியும் அழியாமல் இருக்கும் என்பதை அப்பொழுதே நம் முன்னோர்கள் செப்பேட்டில் குறித்து வைத்து விட்டு சென்றிருந்தனர். இப்பொழுது அத்தகவல் உண்மையென்பது உறுதியாகி விட்டது. இதோ அதன்படி ஒருவன் வந்து விட்டான், அவனை அடையாளம் காண்பதற்காக சோதனைகளையும் நிகழ்த்தி விட்டோம். அதில் அவன் பரிபூரணமாக வென்றும் விட்டான். இவனை எவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டும். நமக்கு உகந்தவனாய் எப்படி மாற்ற வேண்டும், இவனால் என்னென்ன நன்மைகள் நிகழும் என்பனவற்றை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எவரும் இதில் தலையிட வேண்டாம். ம்ம்ம்.. தூக்குங்கள் இவனை” என்று கட்டளையாய் சொல்லி விட்டு நெருப்புக் கங்குகளின் மீது தன் பாதங்கள் இரண்டையும் அழுந்த பதித்து விட்டு அவர் விலகி நிற்க சட்டென்று கங்குகள் அனைத்தும் குளிர்ந்து கரிக்கட்டைகளாக மாறிப்போயின..
அதைக் காண்போருக்கு உள்ளம் உறைந்து போகும் தான். ஆனால் மற்றவர்களோ ஆரவாரத்தோடு அவரை வாழ்த்தி வணங்கி விட்டு அவர் கூறியதை செயலாற்ற தொடங்கினார்கள். ஆறு பேர் தூக்கி மிகிரனை மீண்டும் சிவிகையில் கிடத்தி தூக்கிக்கொள்ள. அந்த தலைவனாகப்பட்டவர் காட்டுக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்த சில கணங்களில் மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். ஒரு குறிப்பிட்ட இடம் சென்றதும் மீண்டும் அவர் சங்கேத ஒலிகளை எழுப்ப புதர் போல் மண்டிக் கிடந்த ஒரு இடத்தில் இருந்து இருவர் வெளியே வந்து நின்றனர். தம் இனத்தவர்களை அடையாளம் கண்டு கொண்டவர்களாய் இலை தழைகளைக் கொண்டு திரைபோல் அமைக்கப்பட்டிருந்த பாதையை விலக்கிவிட, அனைவரும் உள்ளே நுழைந்தனர். அவர் உள்ளே சென்றது உறுதி செய்து கொண்டு மீண்டும் இலை தழைகளை மூடி அப்பாதையை மறைத்துவிட்டு அவர்களிருவரும் அந்த இடத்திலேயே காவலுக்கு நின்று கொண்டனர். உள்ளே ஒரு சிறு கிராமமே அழகுற வாழ்ந்து கொண்டிருந்தது. அத்தனை அழகாக அங்கு வசிப்போரின் குடில்கள் நேர்த்தியாக, வரிசையாக, அழகாக மரங்களின் மீது அமைக்கப்பட்டிருந்தன. ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தின் மீது இருந்த ஒரு குடிலில் மிகிரனை படுக்கவைத்து விட்டு வெளியே வந்தவர்கள்,
“இங்கே காவலுக்கு எவரேனும் நிற்க வேண்டுமா? தோன்றலே..” என்று கேட்டு விட்டு பதில் மொழிக்கு காத்திருந்தார்கள் அந்த அறுவரும்.
(பொதுவாக காடும் காடு சார்ந்த பகுதிகளும் முல்லைத்திணை வகைகளில் வரும். முல்லை திணை தலைவர்களை குறிப்பிட்ட சில பெயரிட்டு அழைப்பார்கள் அதில் தோன்றலும் ஒன்று..)
“தேவையில்லை. இங்க எவரும் காவலுக்கு நிற்க வேண்டிய அவசியமில்லை. அனைவரும் அவரவர் பரணுக்குச் செல்லுங்கள்.. இவரை இங்கிருந்து பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு, ம்ம்ம் கிளம்புங்கள். அதே சமயம் இங்கு என்ன நிகழ்ந்தாலும் அது அனைத்தும் இறையருள் தான் என்பதை மறவாதீர்கள்” என்று மர்மமாகக் கூறிட. குழப்பமான நிலையிலேயே அனைவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
அவர்களது தலை மறையும் வரை நின்று விட்டு மெல்ல பரணின் மீது ஏறிச் செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த தொங்கல் படிக்கட்டுகளின் மீது ஏறி மிகிரனை படுக்க வைக்கப்பட்டிருந்த குடிலுக்குள் நுழைந்தார். அவ்வளவு நேரம் சாதாரணமாக இருந்தவருக்கு திடீரென்று ஏதேதோ எண்ணங்கள் தோன்ற, அவரது முகபாவனைகள் மாற்றம் பெற்றன. முகத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாய் செந்நிறத்தில் தடுப்புகள் தோன்றிட, அவரது தேகமானது தணலைத் தாக்கியது போல் தகித்தெரிந்தது. சலனமற்றுக் கிடந்த மிகிரனை விழியகலாது ஓரிரு நாழிகைகள் குறுகுறுவென்று பார்த்தவர் பின்பு மெதுவாக அவன் அருகில் சென்று அவன் வயிற்றாப் பகுதியில் ஏறி அமர்ந்து தன் இரு கால்களையும் அவன் தலையின் பின்புறம் வளைத்த நிலையில் வைத்துக்கொண்டார். பின்பு தன் இடையில் செருகியிருந்த கற்களாலான கூரிய ஆயுதத்தை எடுத்து உயர்த்திப் பிடித்தவர் எதை எதையோ முணுமுணுத்தவாறு முதலில் தன் நெஞ்சில் குத்திக்கொண்டார். அவர் உடலில் இருந்து குருதி கொப்பளித்து வெளி வந்த பிறகு மீண்டும் அவ்வாயிதத்தை உருவியெடுத்து, குருதியில் தோய்ந்திருந்த அதை சிவப்பேறிய விழிகளால் வெறித்திருந்து விட்டு மிகிரனில் இதயப் பகுதி இருந்த இடத்தில் ஆழமாக சொருகிட. அடுத்த நொடி சலனமற்றுக் கிடந்த மிகிரனின் உடல் தூக்கி வாரிப்போட்டது. அவர் குத்திய பகுதியிலிருந்து செங்குருதி வெளியேறி ஆறாக ஓடியது.. முதலில் செந்நிறக்குருதி வெளிவந்தது.ஓரிரு நாழிகை கடந்த பிறகு செந்நிறம் மெல்ல மங்கி சாம்பல் வண்ணமும், நீல வண்ணமும், பச்சை வண்ணமும் கலந்ததொரு வண்ணமும் ஓர் திரவம் வெளியேறிட.. அதை விழிகளால் கண்டு சென்னையை ஏந்தியவாறே அவன் மீதிருந்து சரிந்து விழுந்தார் தோன்றலென விளிக்கப்பட்ட அவர்.. தனக்கு என்ன நிகழ்ந்தது? என்ன நிகழ்கிறது என்பதையெல்லாம் உணராமலேயே மெல்ல மெல்ல மிகிரனின் துடிப்பு அடங்கத் துவங்கியது.
இங்கே அதிசாந்திரனோ எப்படியோ தன்னிடம் இருக்கும் மிச்ச சொச்ச சக்திகளை வைத்து தட்டுத்தடுமாறி நீரின் மேற்பரப்பிற்கு வந்திருந்தான்.
நீரின் மேற்பரப்பில் இருந்து நிலப்பரப்பை நோட்டம் விட்டான் அங்கு எவராவது விழிகளுக்கு புலப்படுகிறார்களாவென்று.. அப்படி எவரும் தென்படவில்லை என்றதும் அடுத்து என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. இவ்வளவு தூரம் தைரியத்துடன் தன் ஒட்டுமொத்த இனத்தையே எதிர்த்துக் கொண்டு வந்துவிட்டான். ஆனால் அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்கு தெரியவில்லை. தயக்கத்தோடு தான் இதுவரை எடுத்துக்கொண்டிருந்த பயிற்சி எல்லாம் கை கொடுக்குமா? என்பதை பரிசோதிக்க முயன்றான். தட்டுத்தடுமாறி தடதடக்கும் இதயத்தோடு நிலப்பரப்பில் கால்களை எடுத்து வைத்தான். அடுத்த கணம் அவன் வால் போன்ற பாகம் மறைந்து பாதங்கள் இரண்டு வெளிவந்தன. பிறகு மணலில் கால் புதைய சிறிது தூரம் நடந்து சென்றான். நன்றாக ஆழ மூச்சிழுத்துப் பார்த்தான் அனைத்தும் சாதாரணமாகத்தான் இருந்தது, அவனால் நன்றாக சுவாசிக்கவும் முடிந்தது..
அதன் பிறகு அவனுக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. நெடுந்தூரம் ஓடியாடி அவளைத் தேடி களைத்தவன், அன்று தன் தங்கைக்காக குடில் அமைத்திருந்த அதே இடத்தில் வந்து பொத்தென்று அமைந்தான். அதே நேரம் அந்த கடற்கரையோர பகுதியை ஒட்டி ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள குடிலை கண்டவனுக்கு ஒருவேளை அங்கே இருந்து எவரேனும் தன்னைப் பார்க்கக் கூடுமோ? என்ற எண்ணம் தோன்றியதும் வேகமாக அந்த குடிலை நோக்கி ஓடியவன் மேலே ஏறி உள்ளே சென்று ஆராய்ந்து பார்த்தான். யாரோ அங்கு தங்கியதற்கான அடையாளமாக ஆங்காங்கே சில பொருட்கள் இருப்பதை கண்டவன் பொறுமையாக உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பித்தான்...
அன்று ஆலோன் தன்னிடம் பெண்ணொருத்தியைக் கண்டேன் என சென்றதற்கு பிறகு இங்கே தான் வந்ததையும், இங்கு கண்ட காட்சிகளையும் நினைவடுக்குகளில் இருந்து தட்டி மீட்டு மீண்டும் நினைத்துப் நினைத்து பார்த்தான்.
அன்று நிலப்பகுதிக்கு வராமல் கடலில் சற்று தொலைவில் இருந்தவாறே இப்பகுதியை அதிசாந்திரன் கண்காணித்த வேளையில் இங்கே ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தது அவன் கண்ணில் தென்பட்டது. அப்போது ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள் மட்டுமே அவனால் தரையில் இருக்க முடியும் என்ற சூழ்நிலை..
ஆகையால் கடலுக்குள் நன்றாக மூழ்கி எழுந்து ஆழ மூச்செறிந்தவன் தடதடவென்று அவர்கள் இருந்த இடத்தை நோக்கி ஓடினான். அவர்கள் பேசுவதை கேட்கும் தொலைவில் மணலில் படுத்துக் கொண்டவனுக்கு அவர்கள் பேசுவதைத் துல்லியமாகக் கேட்க முடிந்தது. அப்பெண் சொன்னவற்றை கேட்டவனுக்கு ஒரு நிமிடம் உலகமே நின்று விட்டது போலிருந்தது. அவர்களது முகங்கள் அவனுக்கு தெரியவில்லை. இருவருமே இவனுக்கு முதுகு காண்பித்தவாறு ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்திருந்தனர்.
அந்த ஆணின் தோளில் சாய்ந்திருந்த பெண்ணோ,
“என்ற ஒரு நாள் எவனோ ஒருவன் என் உயிரைக் காப்பாற்றியதற்காக அவனையே நினைத்துக் கொண்டிருப்பேன் என்று மற்றவர்கள் நினைப்பது போலவே தாங்களும் எண்ணாதீர்கள். உங்களது பாசமும்,அக்கறையும், அன்பும் எப்போதும் எனக்கு வேண்டும். எனக்கு மணமென்று நிகழ்ந்தால் அது உங்களோடு மட்டும்தான்.. இல்லையேல் என்னுயிரைத் துறந்திடவும் தயங்க மாட்டேன்” என்று சொன்னவாறு அவன் தோளில் சாய்ந்து கொள்ள.
அதைக்கேட்ட அதிசாந்திரனுக்கு ஏனோ இதயத்தை யாரோ கூர் வாள் கொண்டு துண்டம் துண்டமாக வெட்டி வீசுவதுபோல இருந்தது. அதற்கு மேல் அவனாலும் அங்கு நின்று அவர்கள் பேசுவதை மேலும் கேட்க முடியவில்லை. சுவாசத்திற்கு ஏங்க ஆரம்பித்தவன் நொடியில் ஓடி வந்து கடலில் விழுந்திருந்தான் அதே சோகமான மன நிலையோடு தான் தன் அறைக்கு வந்து சேர்ந்தவன் அதன்பிறகு உண்ணாமல் உறங்காமல் எப்போதும் இதைப்பற்றியே சிந்தித்து அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டான்..
பாவம் அவன் ஒன்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அன்று ஆலோன் கண்டது அவனவளான அந்தரியைத் தான். ஆனால் மறுநாளே தன் தாயின் சந்தேக செய்கையால் அவள் வெளிப்புறத்திற்கு வருவதை நிறுத்தி விட்டாள். அதன் பிறகு ஒரு வார இடைவெளிக்குப் பிறகு தான் மிகிரனும் தங்கைக்காக இவனது வரவை எதிர்பார்த்து காத்திருந்த தொடங்கினான். கூடவே அந்த பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களில் ஒருவரை ஒருவர் நேசிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் தான் அங்கு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார்கள் என்பது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்றோ ஒருநாள் அப்பெண்ணுக்கு முறைப் பையனானவன் கொடிய விலங்குகளில் இருந்து அவளைக் காப்பாற்றியதால் அவனைத் தான் அப்பெண் மணம் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவளது உற்றார் உறவினர் வற்புறுத்த. அதற்காகத்தான் அப்பெண் அந்த மண் நிகழ்வை மறுத்து தன் காதலனிடம் அதுபற்றி பற்றி உரையாடிக் கொண்டிருந்தாள். இதைக் கேட்டுவிட்டு தான் அதிசாந்திரன் தவறாக புரிந்து கொண்டு தன்னையே வறுத்திக்கொண்டு அறைக்குள்ளேயே மறுகிக்கொண்டு கிடந்திருக்கிறான்.
இதோ அதையெல்லாம் நினைத்தவாறு கடற்கரை மணலில் தன் மீது ஆக்ரோஷத்துடன் வந்து மோதும் அலை நீரில் தன் தேகம் நனைவதைக் கூட பொருட்படுத்தாமல் மல்லாந்து படுத்துக் கிடக்கிறான்..
அதே சமயம் தன் தமயனைக் காணவில்லை என்றதும் அந்தரியால் அமைதியாக பொறுமையாக அங்கே இருக்க முடியவில்லை. எப்போதும் போல அனைவரும் உறங்கும் நேரம் வரை காத்திருக்க முடியாமல் சத்தமில்லாமல் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த மயக்கமூட்டும் மூலிகைகளை தன் பெற்றோர்களுக்கு மட்டுமின்றி காவல் காக்கும் ஆடவர்கள், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சுவாசிக்கும் வகையில் அந்த மூலிகைகளை எரித்து காற்றில் பரவ விட்டாள்.
மூலிகைகளை பறிக்கும் அவசரத்தில் நஞ்சு படந்திருக்கும் மூலிகைகளையும் தவறுதலாகப் பறித்திருந்தவள் தன்னையறியாமலேயே அதை அனைவரும் சுவாசிக்கும் படி செய்திருந்தாள். ஈதை சுவாசித்த அனைவரும் முதலில் மயங்கி பின்பு சிறிது நேரத்திலே உயிரைத் துறந்திருந்தனர். எவரேனும் விழித்திருந்தால் எங்கே தன்னை தடுக்கக் கூடுமோ?என்ற எண்ணத்தில் தான் அந்தரி இதை செய்தாள். ஆனால் அவளது கவனக்குறைவு ஒரு இனத்தையே அடியோடு அழித்திருந்தது. இதை எதையும் அறியாமல் சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறினாள் அந்தரி. எப்படி பாதாள லோகத்திலிருந்து வெளியுலகிற்கு செல்ல வேண்டும் என்பதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்ததை நினைவில் கொண்டு அதன்படியே வெளியுலகிற்கு வந்து சேர்ந்தாள்.. அந்த காரிருளில் கடற்கரை மணலில் கால் புதைய நடந்தவாறே தன் தமயனை தேடிக்கொண்டிருந்த அந்தரியின் விழிகளில் கடற்கரை மணலில் வானைப் பார்த்து படுத்துக் கிடந்த ஒருவன் தென்பட்டான். இவன் யாரா இருக்கும்? என்ற சிந்தனையோடு, ஒருவேளை தன் தமயனாக இருக்குமோ! என்ற உற்சாக எண்ணமும் அவளுள் ஊற்று நீரைப் போல் பிரவாகமெடுக்க அவனை நோக்கி ஓடினாள்.
ஆழ்கடல் ராஜ்ஜியம்..
அதி சந்திரன் இங்கிருந்து தப்பிச்சென்றதோடு மட்டுமின்றி இன்னும் என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறானோ? என்ற அச்சமும், அவனது செயலால் வரவிருக்கும் போர் பற்றியும், அதில் பங்கெடுக்கும் வீரர்கள் பற்றியும் சிந்தித்தவாறே அமர்ந்திருந்த அரிச்சிகன் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே எதிரிகள் அனைவரும் அவர்களது ராஜ்ஜியத்தை சுற்றிவளைத்து விட்டனர். அவரோ தன்னிடம் இருக்கும் சொற்ப வீரர்களைத் தயார்படுத்தி போரிட துவங்கும் முன்பே அவர்கள் எய்த நஞ்சு தடவிய கூர் முனை கொண்ட ஆயுதங்கள் அனைவரது தேகத்தையும் துளைத்திருந்தது..இவரும் தன்னால் முயன்றவரை தாக்கினாலும், வயோதிகம் அவரை களைப்படையச் செய்தது. அதன் விளைவு, அவரது தேகமெங்கும் நஞ்சு கலக்க ஆரம்பித்தது. அதை உணர்ந்தவரது கோபம் அனைத்தும் தான் பெற்ற மைந்தனின் மீது திரும்பியது. சத்தமில்லாமல் தன்னிடம் இருந்த சக்தியைக் கொண்டு அங்கிருந்து மாயமானார். தன்னுடன் பிறந்தோனையும் அழைத்துக் கொண்டு நீரின் மேற்பரப்புக்கு தப்பித்துயோடி வந்தவரது விழிகள் தன் மைந்தனைத் தேடியது.
அவரது ராஜ்ஜியத்தில் சந்திரமதியின் உயிரானது இக்கணமோ? அக்கணமோவென்று ஊசலாடிக் கொண்டிருக்க, தன்னை நோக்கி வந்த ஆயுதங்களை தடுக்க முயன்று தோற்றுப் போனாள் பாவை.. எதிர்வந்த சூழலை சமாளிக்க முடியாமல் தேகமெல்லாம் அடிபட்ட காயங்களோடு எதிர் படைகளால் சிதைக்கப்பட்டு உயிரற்ற நிலையில், அங்கு இருந்து மிதந்து, நகர்ந்து கரையோரம் ஒதுங்கி இருந்தாள் முளரிப்பாவை.
“தமயா அது நீங்கள் தானா?” என்று கூச்சலிட்டவாறே அதிசாந்திரன் இருந்த இடத்தை நோக்கி ஓடி வந்தாள் அந்தரி.
யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு படாரென்று எழுந்து அமர்ந்தவன் தூரத்தில் ஒரு பெண்ணொருத்தி தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டு துணுக்குற்றவனாய், ஏதேனும் உதவி தேவைப்படுமோ? என்ற எண்ணுத்துடன் தானும் அவளை நோக்கி ஓடினான்.
கிட்டத்தட்ட அவளை நெருங்கிய ஏதோ பேச முற்பட்டான் அதிசாந்திரன். ஆனால் அதற்குள் ஏதேதோ சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன. உடன் பிறந்தோனுடன் நீரின் மேற்பரப்பை அடைந்திருந்த அரிச்சிகன் தன் தலை மகன் ஏதோ ஒரு பெண்ணொருத்தியிடம் உரையாடுவது போன்றதொரு காட்சி அமைப்பை விழிகளால் கண்டவர், ‘,இவளுக்காக தானே அனைத்தையும் துறந்துவிட்டு இப்பொழுது அனைவரது உயிரையும் எதிரி படைகளிடம் ஒப்படைத்து விட்டு வந்திருக்கிறான். இவர்கள் இருவரும் இனி உயிருடனே இருக்கக்கூடாது’ என்று நினைத்தவராய் தன்னுடைய செங்கோலை அவர்கள் இருவரையும் நோக்கி வீசினார்
சரியாக அவர்கள் இருவரும் நேர்கோட்டில் நின்றிருக்க! முதலில் அதிசாந்திரனின் உடலைத் துளைத்துக் கொண்டு வெளியேறிய அந்த செங்கோல், அவனை அடுத்து அவனுக்கு எதிரில் நின்ற அந்தரியின் தேகத்தையும் துளைத்துக் கொண்டு அவளது முதுகுபுறம் வந்து நின்றது.. அவர்கள் இருவர் நின்ற இடமும் செங்குருதியால் நிரம்பி வழிந்தோடியது. அவள் உடலில் இருந்து வெளியேறிய செங்குருதியானது சிறிது நேரத்தில் செந்நிறத்தில் இருந்து மாறி பச்சை நிறத்திற்கு மாறியது. அதேபோல் அதிசாந்திரனின் உடலிலும் பச்சை நிற திரவம் தான் வெளியேறியது..
சரியாக உயிர் துறப்பதற்கு சிறிது நொடிகளே மீதமிருந்த நேரத்தில் அவள் உடலில் இருந்து வெளியேறும் பச்சைத் திரவத்தைக் கண்டு கொண்ட அதிசாந்திரனின் இதழ்கள் புன்னகையைச் சூடிக்கொள்ள..
“நீ... நீ... நீ... நீதான் என் சரிபாதியாய் மாறிய உயிரானவளா?” என்று திக்கித் திணறி கூறிட.
அவன் உதிர்த்த வார்த்தைகளை வைத்து, அவளும் அப்போதுதான் அவன் யாரென்று புரிந்து கொண்டவளாய், “நீ... நீங்க..ள்...நீங்கள் தான் என் உயிரைக் காப்பாற்றி, தங்கள் சரிபாதி உயிரை எனக்கு தானம் கொடுத்த என் உயிரானவரா?” என்று கேட்டவளின் இதழ்கள் அதோடு வார்த்தைகளை உச்சரிப்பதை நிறுத்தியது. அவளது கயல் விழிகள் இரண்டும் அவன் முகத்திலே நிலைத்திருக்க, அவன் முகத்தைப் பார்த்தவாறே தன் இன்னுயிரை நீத்திருந்தாள் அந்தி. அவனும் அவள் வார்த்தைகளை நன்றாக உள்வாங்கிக் கொண்டவனாய், “உயிர் பிரியும் வேளையில் தான்
என் உயிரானவளை சந்திக்க வேண்டுமென்பது விதியோ? உன் கரம் பற்றி பல்லாண்டு காலம் வாழ்ந்திட எண்ணியவனின் எண்ணத்தை அடியோடு புதைத்திட்டதேனோ இறைவா? இந்த ஜென்மத்தில் என்னவளின் கரம் பற்ற இயலாமல் போனது? ஆனால் மீண்டுமொரு ஜென்மம் எடுத்தேனும் என்னவளைச் சேர்வேன், இது நான் வணங்கும் தெய்வத்தின் மீதும், எந்தன் இனத்தின் மீதும் ஆணை....” என்று சங்கல்பமாய் உரைத்தவனின் கரங்கள் அந்தரியின் மென்தேகத்தை தன்னுடன் அணைத்துப் பிடித்திருக்க, அவனது வலிய கரங்கள் அவளது மென்கரத்தை அழுத்தமாகப் பிடித்திருந்தது. அவன் விழிகள் அவளது மதி வதனத்தையே பார்த்திருக்க, அந்நிலையிலேயே இன்னுயிர் நீத்திருந்தான் அந்தரியின் நேசத்திற்கு பாத்திரமான அதிசாந்திரன்...
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அத்தனையிலும் என்னவளாய் நீ வேண்டுமடி..!
எத்தனை இன்னல்கள்
வந்தாலும் அத்தனையையும் கடந்து வர உறுதுணையாய்
நீ வேண்டுமடி.!!
எத்தனை சோதனைகள்
அலை அலையாய் சுழன்று வந்தாலும் அதிலிருந்து
மீண்டு வர வழித்துணையாய்
நீ வேண்டுமடி..!
- அற்புதமது பிறக்கும்..
www.sahaptham.com
பகலவன் அவன் தன் பணியை செவ்வனே முடித்துக் கொண்டு மலைமுகடுகளில் சென்று சற்று இளைப்பாறிய நேரம் வான்முகிலவள் தன் பணியை துவங்கியிருக்கும் ஏகாந்த வேளை அது.. விழிகள் யாவும் மெல்ல மெல்ல இருட்டுக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்ள தொடங்கிய நேரம் வானில் பிரகாசித்து ஒளிவீசிக் கொண்டிருந்தாள் பௌர்ணமி பெண்ணவள்...
அதேநேரம் ஆந்தைகளும், கோட்டான்களும் அலறிட, நெஞ்சை அச்சத்தில் உருள வைக்கும் இருள் படர்ந்திருந்த அந்திஜாம நேரம்...
மிகிரனைச் சுற்றி போடப்பட்டிருந்த மரத்துண்டுகளின் மீது தீச்சுவாலையை ஏற்ற வைத்திட தயாராக நின்றிருந்தார் தலைவன் போன்ற தோரணையில் இருந்த ஒருவர்.. அவரைச் சுற்றிலும் நின்றிருந்த ஆண்கள் அனைவரும் இடுப்பிற்கு மேலே மேலாடைகள் இன்றி வெற்றுடலோடு நின்றிருக்க, இடுப்பிலிருந்து முட்டி வரை விலங்குகளின் தோலை ஆடையாக அணிந்திருந்தனர். திரும்பும் திசை எங்கும் பெண்கள் கூட்டத்தினரின் ஒரு தலையைக்கூட காணவில்லை. ஆனால் பிறந்து சில தினங்களே ஆனாலும் ஆண் பிள்ளை எனில் அவர்கள் நிச்சயம் இந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டுமென்பது அவர்களது எழுதப்படாத விதியாகும் அதனால் பிறந்து 15 நாட்களே ஆன இளம் சிசு ஒன்றும் ஒரு ஓரமாக அதன் தந்தையின் மடியில் படுத்திருந்தது..
விசித்திரமான முறையில் கால் கைகளை மேலே தூக்கியும் கீழே இறக்கியும், உட்கார்ந்து எழுந்தும், தலைகீழாக நின்றும் மிகமிக வித்தியாசன முறையில் நடனமாடினார்கள் அவர்கள் அனைவரும்.
அனைவரும் ஒருசேர மிக ரசித்து, மஙிழ்வுடனே சீரான இடைவெளி விட்டு ஒரே போல் நடனம் ஆடிட. தள்ளி நின்றின்ற தலைவன் போன்றவரும் தன் பங்கிற்கு ஆடி முடித்துக் களைத்தவராய்,
“போதும் ஆடுவதை நிறுத்துங்கள்! தக்க சமயம் வந்துவிட்டது என்பதை உச்சி வானில் பிரகாசித்து ஒளிவீசிக் கொண்டிருக்கும் நிலவு உணர்த்துகிறது, வழிவிட்டு நில்லுங்கள்” என்று சத்தமாகக் கூறிட.அனைவரும் வழிபட்டு நின்றார்கள்.
பின்பு அடிமேல் அடி வைத்து மிகிரன் இருந்த இடத்தை நெருங்கியவர் கண்கள் மூடிய நிலையில் தன் கையில் இருக்கும் தீப்பந்தத்தை கீழே விட அது அந்தரத்தில் அப்படியே நின்றது. கால்களிரண்டையும் சம்மணம் இடுவது போல் இட்டு தரையில் அமர்வது போல், அந்தரத்தில் அமர்ந்தார் அவர். இதழ் குவித்து ஏதோதோ உச்சாடனங்கள் செய்த மறுநிமிடம் அந்தரத்தில் மிதந்தவாறு மிகிரனை சுற்றி மும்முறை வலம் வந்தார். பின்பு கால்களை விரித்து கீழே இறங்கி நின்றவர் அந்தரத்தில் மிதந்த தீப்பந்தத்தைக் கையில் எடுத்து,
“எங்கள் பூஜையை ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!” என்று மொழிந்து விட்டு மரக்கட்டைகளின் மீது தீப்பந்தத்தை போட அடுத்த கணம் சடசடவென்று நெருப்பு பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்தது.. கிட்டத்தட்ட அந்த நெருப்பு அந்தக் காட்டையே அழிப்பதற்கு போதுமானது. ஆனால் அவ்வளவு வேகமாக கொளுந்துவிட்டு நெருப்பு எரிந்தாலும் அதன் அருகிலே நின்றிருந்த எவருக்கும் அனல் என்பது தெரியவே இல்லை. ஏதோ அதை சுற்றி மாயவலை இருப்பதுபோல் அனைவரும் சர்வசாதாரணமாக கொழுந்து விட்டு எரியும் தீ ஜூவாலையையே விழி மூடாது பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்..
மரக்கட்டைகளும், இலை தழை சருகுகளும் முழுவதுமாக எரிந்து சாம்பலாகி, நெருப்பு அணைந்து தீக்கங்குகளாக மாறி விட்ட போதும் மிகிரனை ஒரு பொட்டு தீ தீண்டவில்லை.. படுக்க வைக்கப்பட்ட நிலையிலேயே சலனமற்று, சுயநினைவற்றுக் கிடந்தான்...
அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு, முகத்தில் மகிழ்ச்சி ரேகைகளைப் படர விட்டவாறு சந்தோஷ கூக்குரலிட்டனர். அந்த தலைவனாகப்பட்டவரும்,
“பார்த்தீர்களா? என் சந்தேகம் ஊர்ஜிதமாகி விட்டது. இவர் யாரென்று உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? தரையில் சாதாரண மனிதனைப் போல் நடந்து சென்று கடல் நீரில் பாதம் பதிக்கையில் எவனொருவனின் விழிகள் நீல நிறத்தில் மாறுகின்றதோ? அவனைச் சுற்றி அவ்வேளையில் செங்கதிரோனின் செந்நிறக்கதிர்களைப் போல் ஒளி பிம்பம் தோன்றுகிறதோ? அவனொருவனால் தான் நமக்கு மோட்சமும் கிட்டும், நம் சந்ததியும் அழியாமல் இருக்கும் என்பதை அப்பொழுதே நம் முன்னோர்கள் செப்பேட்டில் குறித்து வைத்து விட்டு சென்றிருந்தனர். இப்பொழுது அத்தகவல் உண்மையென்பது உறுதியாகி விட்டது. இதோ அதன்படி ஒருவன் வந்து விட்டான், அவனை அடையாளம் காண்பதற்காக சோதனைகளையும் நிகழ்த்தி விட்டோம். அதில் அவன் பரிபூரணமாக வென்றும் விட்டான். இவனை எவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டும். நமக்கு உகந்தவனாய் எப்படி மாற்ற வேண்டும், இவனால் என்னென்ன நன்மைகள் நிகழும் என்பனவற்றை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எவரும் இதில் தலையிட வேண்டாம். ம்ம்ம்.. தூக்குங்கள் இவனை” என்று கட்டளையாய் சொல்லி விட்டு நெருப்புக் கங்குகளின் மீது தன் பாதங்கள் இரண்டையும் அழுந்த பதித்து விட்டு அவர் விலகி நிற்க சட்டென்று கங்குகள் அனைத்தும் குளிர்ந்து கரிக்கட்டைகளாக மாறிப்போயின..
அதைக் காண்போருக்கு உள்ளம் உறைந்து போகும் தான். ஆனால் மற்றவர்களோ ஆரவாரத்தோடு அவரை வாழ்த்தி வணங்கி விட்டு அவர் கூறியதை செயலாற்ற தொடங்கினார்கள். ஆறு பேர் தூக்கி மிகிரனை மீண்டும் சிவிகையில் கிடத்தி தூக்கிக்கொள்ள. அந்த தலைவனாகப்பட்டவர் காட்டுக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்த சில கணங்களில் மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். ஒரு குறிப்பிட்ட இடம் சென்றதும் மீண்டும் அவர் சங்கேத ஒலிகளை எழுப்ப புதர் போல் மண்டிக் கிடந்த ஒரு இடத்தில் இருந்து இருவர் வெளியே வந்து நின்றனர். தம் இனத்தவர்களை அடையாளம் கண்டு கொண்டவர்களாய் இலை தழைகளைக் கொண்டு திரைபோல் அமைக்கப்பட்டிருந்த பாதையை விலக்கிவிட, அனைவரும் உள்ளே நுழைந்தனர். அவர் உள்ளே சென்றது உறுதி செய்து கொண்டு மீண்டும் இலை தழைகளை மூடி அப்பாதையை மறைத்துவிட்டு அவர்களிருவரும் அந்த இடத்திலேயே காவலுக்கு நின்று கொண்டனர். உள்ளே ஒரு சிறு கிராமமே அழகுற வாழ்ந்து கொண்டிருந்தது. அத்தனை அழகாக அங்கு வசிப்போரின் குடில்கள் நேர்த்தியாக, வரிசையாக, அழகாக மரங்களின் மீது அமைக்கப்பட்டிருந்தன. ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தின் மீது இருந்த ஒரு குடிலில் மிகிரனை படுக்கவைத்து விட்டு வெளியே வந்தவர்கள்,
“இங்கே காவலுக்கு எவரேனும் நிற்க வேண்டுமா? தோன்றலே..” என்று கேட்டு விட்டு பதில் மொழிக்கு காத்திருந்தார்கள் அந்த அறுவரும்.
(பொதுவாக காடும் காடு சார்ந்த பகுதிகளும் முல்லைத்திணை வகைகளில் வரும். முல்லை திணை தலைவர்களை குறிப்பிட்ட சில பெயரிட்டு அழைப்பார்கள் அதில் தோன்றலும் ஒன்று..)
“தேவையில்லை. இங்க எவரும் காவலுக்கு நிற்க வேண்டிய அவசியமில்லை. அனைவரும் அவரவர் பரணுக்குச் செல்லுங்கள்.. இவரை இங்கிருந்து பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு, ம்ம்ம் கிளம்புங்கள். அதே சமயம் இங்கு என்ன நிகழ்ந்தாலும் அது அனைத்தும் இறையருள் தான் என்பதை மறவாதீர்கள்” என்று மர்மமாகக் கூறிட. குழப்பமான நிலையிலேயே அனைவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
அவர்களது தலை மறையும் வரை நின்று விட்டு மெல்ல பரணின் மீது ஏறிச் செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த தொங்கல் படிக்கட்டுகளின் மீது ஏறி மிகிரனை படுக்க வைக்கப்பட்டிருந்த குடிலுக்குள் நுழைந்தார். அவ்வளவு நேரம் சாதாரணமாக இருந்தவருக்கு திடீரென்று ஏதேதோ எண்ணங்கள் தோன்ற, அவரது முகபாவனைகள் மாற்றம் பெற்றன. முகத்தில் ஆங்காங்கே திட்டு திட்டாய் செந்நிறத்தில் தடுப்புகள் தோன்றிட, அவரது தேகமானது தணலைத் தாக்கியது போல் தகித்தெரிந்தது. சலனமற்றுக் கிடந்த மிகிரனை விழியகலாது ஓரிரு நாழிகைகள் குறுகுறுவென்று பார்த்தவர் பின்பு மெதுவாக அவன் அருகில் சென்று அவன் வயிற்றாப் பகுதியில் ஏறி அமர்ந்து தன் இரு கால்களையும் அவன் தலையின் பின்புறம் வளைத்த நிலையில் வைத்துக்கொண்டார். பின்பு தன் இடையில் செருகியிருந்த கற்களாலான கூரிய ஆயுதத்தை எடுத்து உயர்த்திப் பிடித்தவர் எதை எதையோ முணுமுணுத்தவாறு முதலில் தன் நெஞ்சில் குத்திக்கொண்டார். அவர் உடலில் இருந்து குருதி கொப்பளித்து வெளி வந்த பிறகு மீண்டும் அவ்வாயிதத்தை உருவியெடுத்து, குருதியில் தோய்ந்திருந்த அதை சிவப்பேறிய விழிகளால் வெறித்திருந்து விட்டு மிகிரனில் இதயப் பகுதி இருந்த இடத்தில் ஆழமாக சொருகிட. அடுத்த நொடி சலனமற்றுக் கிடந்த மிகிரனின் உடல் தூக்கி வாரிப்போட்டது. அவர் குத்திய பகுதியிலிருந்து செங்குருதி வெளியேறி ஆறாக ஓடியது.. முதலில் செந்நிறக்குருதி வெளிவந்தது.ஓரிரு நாழிகை கடந்த பிறகு செந்நிறம் மெல்ல மங்கி சாம்பல் வண்ணமும், நீல வண்ணமும், பச்சை வண்ணமும் கலந்ததொரு வண்ணமும் ஓர் திரவம் வெளியேறிட.. அதை விழிகளால் கண்டு சென்னையை ஏந்தியவாறே அவன் மீதிருந்து சரிந்து விழுந்தார் தோன்றலென விளிக்கப்பட்ட அவர்.. தனக்கு என்ன நிகழ்ந்தது? என்ன நிகழ்கிறது என்பதையெல்லாம் உணராமலேயே மெல்ல மெல்ல மிகிரனின் துடிப்பு அடங்கத் துவங்கியது.
இங்கே அதிசாந்திரனோ எப்படியோ தன்னிடம் இருக்கும் மிச்ச சொச்ச சக்திகளை வைத்து தட்டுத்தடுமாறி நீரின் மேற்பரப்பிற்கு வந்திருந்தான்.
நீரின் மேற்பரப்பில் இருந்து நிலப்பரப்பை நோட்டம் விட்டான் அங்கு எவராவது விழிகளுக்கு புலப்படுகிறார்களாவென்று.. அப்படி எவரும் தென்படவில்லை என்றதும் அடுத்து என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. இவ்வளவு தூரம் தைரியத்துடன் தன் ஒட்டுமொத்த இனத்தையே எதிர்த்துக் கொண்டு வந்துவிட்டான். ஆனால் அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்கு தெரியவில்லை. தயக்கத்தோடு தான் இதுவரை எடுத்துக்கொண்டிருந்த பயிற்சி எல்லாம் கை கொடுக்குமா? என்பதை பரிசோதிக்க முயன்றான். தட்டுத்தடுமாறி தடதடக்கும் இதயத்தோடு நிலப்பரப்பில் கால்களை எடுத்து வைத்தான். அடுத்த கணம் அவன் வால் போன்ற பாகம் மறைந்து பாதங்கள் இரண்டு வெளிவந்தன. பிறகு மணலில் கால் புதைய சிறிது தூரம் நடந்து சென்றான். நன்றாக ஆழ மூச்சிழுத்துப் பார்த்தான் அனைத்தும் சாதாரணமாகத்தான் இருந்தது, அவனால் நன்றாக சுவாசிக்கவும் முடிந்தது..
அதன் பிறகு அவனுக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. நெடுந்தூரம் ஓடியாடி அவளைத் தேடி களைத்தவன், அன்று தன் தங்கைக்காக குடில் அமைத்திருந்த அதே இடத்தில் வந்து பொத்தென்று அமைந்தான். அதே நேரம் அந்த கடற்கரையோர பகுதியை ஒட்டி ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள குடிலை கண்டவனுக்கு ஒருவேளை அங்கே இருந்து எவரேனும் தன்னைப் பார்க்கக் கூடுமோ? என்ற எண்ணம் தோன்றியதும் வேகமாக அந்த குடிலை நோக்கி ஓடியவன் மேலே ஏறி உள்ளே சென்று ஆராய்ந்து பார்த்தான். யாரோ அங்கு தங்கியதற்கான அடையாளமாக ஆங்காங்கே சில பொருட்கள் இருப்பதை கண்டவன் பொறுமையாக உட்கார்ந்து சிந்திக்க ஆரம்பித்தான்...
அன்று ஆலோன் தன்னிடம் பெண்ணொருத்தியைக் கண்டேன் என சென்றதற்கு பிறகு இங்கே தான் வந்ததையும், இங்கு கண்ட காட்சிகளையும் நினைவடுக்குகளில் இருந்து தட்டி மீட்டு மீண்டும் நினைத்துப் நினைத்து பார்த்தான்.
அன்று நிலப்பகுதிக்கு வராமல் கடலில் சற்று தொலைவில் இருந்தவாறே இப்பகுதியை அதிசாந்திரன் கண்காணித்த வேளையில் இங்கே ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தது அவன் கண்ணில் தென்பட்டது. அப்போது ஒரு குறிப்பிட்ட நிமிடங்கள் மட்டுமே அவனால் தரையில் இருக்க முடியும் என்ற சூழ்நிலை..
ஆகையால் கடலுக்குள் நன்றாக மூழ்கி எழுந்து ஆழ மூச்செறிந்தவன் தடதடவென்று அவர்கள் இருந்த இடத்தை நோக்கி ஓடினான். அவர்கள் பேசுவதை கேட்கும் தொலைவில் மணலில் படுத்துக் கொண்டவனுக்கு அவர்கள் பேசுவதைத் துல்லியமாகக் கேட்க முடிந்தது. அப்பெண் சொன்னவற்றை கேட்டவனுக்கு ஒரு நிமிடம் உலகமே நின்று விட்டது போலிருந்தது. அவர்களது முகங்கள் அவனுக்கு தெரியவில்லை. இருவருமே இவனுக்கு முதுகு காண்பித்தவாறு ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து அமர்ந்திருந்தனர்.
அந்த ஆணின் தோளில் சாய்ந்திருந்த பெண்ணோ,
“என்ற ஒரு நாள் எவனோ ஒருவன் என் உயிரைக் காப்பாற்றியதற்காக அவனையே நினைத்துக் கொண்டிருப்பேன் என்று மற்றவர்கள் நினைப்பது போலவே தாங்களும் எண்ணாதீர்கள். உங்களது பாசமும்,அக்கறையும், அன்பும் எப்போதும் எனக்கு வேண்டும். எனக்கு மணமென்று நிகழ்ந்தால் அது உங்களோடு மட்டும்தான்.. இல்லையேல் என்னுயிரைத் துறந்திடவும் தயங்க மாட்டேன்” என்று சொன்னவாறு அவன் தோளில் சாய்ந்து கொள்ள.
அதைக்கேட்ட அதிசாந்திரனுக்கு ஏனோ இதயத்தை யாரோ கூர் வாள் கொண்டு துண்டம் துண்டமாக வெட்டி வீசுவதுபோல இருந்தது. அதற்கு மேல் அவனாலும் அங்கு நின்று அவர்கள் பேசுவதை மேலும் கேட்க முடியவில்லை. சுவாசத்திற்கு ஏங்க ஆரம்பித்தவன் நொடியில் ஓடி வந்து கடலில் விழுந்திருந்தான் அதே சோகமான மன நிலையோடு தான் தன் அறைக்கு வந்து சேர்ந்தவன் அதன்பிறகு உண்ணாமல் உறங்காமல் எப்போதும் இதைப்பற்றியே சிந்தித்து அறைக்குள்ளேயே முடங்கிக் கொண்டான்..
பாவம் அவன் ஒன்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அன்று ஆலோன் கண்டது அவனவளான அந்தரியைத் தான். ஆனால் மறுநாளே தன் தாயின் சந்தேக செய்கையால் அவள் வெளிப்புறத்திற்கு வருவதை நிறுத்தி விட்டாள். அதன் பிறகு ஒரு வார இடைவெளிக்குப் பிறகு தான் மிகிரனும் தங்கைக்காக இவனது வரவை எதிர்பார்த்து காத்திருந்த தொடங்கினான். கூடவே அந்த பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களில் ஒருவரை ஒருவர் நேசிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் தான் அங்கு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார்கள் என்பது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்றோ ஒருநாள் அப்பெண்ணுக்கு முறைப் பையனானவன் கொடிய விலங்குகளில் இருந்து அவளைக் காப்பாற்றியதால் அவனைத் தான் அப்பெண் மணம் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவளது உற்றார் உறவினர் வற்புறுத்த. அதற்காகத்தான் அப்பெண் அந்த மண் நிகழ்வை மறுத்து தன் காதலனிடம் அதுபற்றி பற்றி உரையாடிக் கொண்டிருந்தாள். இதைக் கேட்டுவிட்டு தான் அதிசாந்திரன் தவறாக புரிந்து கொண்டு தன்னையே வறுத்திக்கொண்டு அறைக்குள்ளேயே மறுகிக்கொண்டு கிடந்திருக்கிறான்.
இதோ அதையெல்லாம் நினைத்தவாறு கடற்கரை மணலில் தன் மீது ஆக்ரோஷத்துடன் வந்து மோதும் அலை நீரில் தன் தேகம் நனைவதைக் கூட பொருட்படுத்தாமல் மல்லாந்து படுத்துக் கிடக்கிறான்..
அதே சமயம் தன் தமயனைக் காணவில்லை என்றதும் அந்தரியால் அமைதியாக பொறுமையாக அங்கே இருக்க முடியவில்லை. எப்போதும் போல அனைவரும் உறங்கும் நேரம் வரை காத்திருக்க முடியாமல் சத்தமில்லாமல் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த மயக்கமூட்டும் மூலிகைகளை தன் பெற்றோர்களுக்கு மட்டுமின்றி காவல் காக்கும் ஆடவர்கள், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சுவாசிக்கும் வகையில் அந்த மூலிகைகளை எரித்து காற்றில் பரவ விட்டாள்.
மூலிகைகளை பறிக்கும் அவசரத்தில் நஞ்சு படந்திருக்கும் மூலிகைகளையும் தவறுதலாகப் பறித்திருந்தவள் தன்னையறியாமலேயே அதை அனைவரும் சுவாசிக்கும் படி செய்திருந்தாள். ஈதை சுவாசித்த அனைவரும் முதலில் மயங்கி பின்பு சிறிது நேரத்திலே உயிரைத் துறந்திருந்தனர். எவரேனும் விழித்திருந்தால் எங்கே தன்னை தடுக்கக் கூடுமோ?என்ற எண்ணத்தில் தான் அந்தரி இதை செய்தாள். ஆனால் அவளது கவனக்குறைவு ஒரு இனத்தையே அடியோடு அழித்திருந்தது. இதை எதையும் அறியாமல் சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறினாள் அந்தரி. எப்படி பாதாள லோகத்திலிருந்து வெளியுலகிற்கு செல்ல வேண்டும் என்பதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்ததை நினைவில் கொண்டு அதன்படியே வெளியுலகிற்கு வந்து சேர்ந்தாள்.. அந்த காரிருளில் கடற்கரை மணலில் கால் புதைய நடந்தவாறே தன் தமயனை தேடிக்கொண்டிருந்த அந்தரியின் விழிகளில் கடற்கரை மணலில் வானைப் பார்த்து படுத்துக் கிடந்த ஒருவன் தென்பட்டான். இவன் யாரா இருக்கும்? என்ற சிந்தனையோடு, ஒருவேளை தன் தமயனாக இருக்குமோ! என்ற உற்சாக எண்ணமும் அவளுள் ஊற்று நீரைப் போல் பிரவாகமெடுக்க அவனை நோக்கி ஓடினாள்.
ஆழ்கடல் ராஜ்ஜியம்..
அதி சந்திரன் இங்கிருந்து தப்பிச்சென்றதோடு மட்டுமின்றி இன்னும் என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறானோ? என்ற அச்சமும், அவனது செயலால் வரவிருக்கும் போர் பற்றியும், அதில் பங்கெடுக்கும் வீரர்கள் பற்றியும் சிந்தித்தவாறே அமர்ந்திருந்த அரிச்சிகன் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே எதிரிகள் அனைவரும் அவர்களது ராஜ்ஜியத்தை சுற்றிவளைத்து விட்டனர். அவரோ தன்னிடம் இருக்கும் சொற்ப வீரர்களைத் தயார்படுத்தி போரிட துவங்கும் முன்பே அவர்கள் எய்த நஞ்சு தடவிய கூர் முனை கொண்ட ஆயுதங்கள் அனைவரது தேகத்தையும் துளைத்திருந்தது..இவரும் தன்னால் முயன்றவரை தாக்கினாலும், வயோதிகம் அவரை களைப்படையச் செய்தது. அதன் விளைவு, அவரது தேகமெங்கும் நஞ்சு கலக்க ஆரம்பித்தது. அதை உணர்ந்தவரது கோபம் அனைத்தும் தான் பெற்ற மைந்தனின் மீது திரும்பியது. சத்தமில்லாமல் தன்னிடம் இருந்த சக்தியைக் கொண்டு அங்கிருந்து மாயமானார். தன்னுடன் பிறந்தோனையும் அழைத்துக் கொண்டு நீரின் மேற்பரப்புக்கு தப்பித்துயோடி வந்தவரது விழிகள் தன் மைந்தனைத் தேடியது.
அவரது ராஜ்ஜியத்தில் சந்திரமதியின் உயிரானது இக்கணமோ? அக்கணமோவென்று ஊசலாடிக் கொண்டிருக்க, தன்னை நோக்கி வந்த ஆயுதங்களை தடுக்க முயன்று தோற்றுப் போனாள் பாவை.. எதிர்வந்த சூழலை சமாளிக்க முடியாமல் தேகமெல்லாம் அடிபட்ட காயங்களோடு எதிர் படைகளால் சிதைக்கப்பட்டு உயிரற்ற நிலையில், அங்கு இருந்து மிதந்து, நகர்ந்து கரையோரம் ஒதுங்கி இருந்தாள் முளரிப்பாவை.
“தமயா அது நீங்கள் தானா?” என்று கூச்சலிட்டவாறே அதிசாந்திரன் இருந்த இடத்தை நோக்கி ஓடி வந்தாள் அந்தரி.
யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு படாரென்று எழுந்து அமர்ந்தவன் தூரத்தில் ஒரு பெண்ணொருத்தி தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டு துணுக்குற்றவனாய், ஏதேனும் உதவி தேவைப்படுமோ? என்ற எண்ணுத்துடன் தானும் அவளை நோக்கி ஓடினான்.
கிட்டத்தட்ட அவளை நெருங்கிய ஏதோ பேச முற்பட்டான் அதிசாந்திரன். ஆனால் அதற்குள் ஏதேதோ சம்பவங்கள் நிகழ்ந்து விட்டன. உடன் பிறந்தோனுடன் நீரின் மேற்பரப்பை அடைந்திருந்த அரிச்சிகன் தன் தலை மகன் ஏதோ ஒரு பெண்ணொருத்தியிடம் உரையாடுவது போன்றதொரு காட்சி அமைப்பை விழிகளால் கண்டவர், ‘,இவளுக்காக தானே அனைத்தையும் துறந்துவிட்டு இப்பொழுது அனைவரது உயிரையும் எதிரி படைகளிடம் ஒப்படைத்து விட்டு வந்திருக்கிறான். இவர்கள் இருவரும் இனி உயிருடனே இருக்கக்கூடாது’ என்று நினைத்தவராய் தன்னுடைய செங்கோலை அவர்கள் இருவரையும் நோக்கி வீசினார்
சரியாக அவர்கள் இருவரும் நேர்கோட்டில் நின்றிருக்க! முதலில் அதிசாந்திரனின் உடலைத் துளைத்துக் கொண்டு வெளியேறிய அந்த செங்கோல், அவனை அடுத்து அவனுக்கு எதிரில் நின்ற அந்தரியின் தேகத்தையும் துளைத்துக் கொண்டு அவளது முதுகுபுறம் வந்து நின்றது.. அவர்கள் இருவர் நின்ற இடமும் செங்குருதியால் நிரம்பி வழிந்தோடியது. அவள் உடலில் இருந்து வெளியேறிய செங்குருதியானது சிறிது நேரத்தில் செந்நிறத்தில் இருந்து மாறி பச்சை நிறத்திற்கு மாறியது. அதேபோல் அதிசாந்திரனின் உடலிலும் பச்சை நிற திரவம் தான் வெளியேறியது..
சரியாக உயிர் துறப்பதற்கு சிறிது நொடிகளே மீதமிருந்த நேரத்தில் அவள் உடலில் இருந்து வெளியேறும் பச்சைத் திரவத்தைக் கண்டு கொண்ட அதிசாந்திரனின் இதழ்கள் புன்னகையைச் சூடிக்கொள்ள..
“நீ... நீ... நீ... நீதான் என் சரிபாதியாய் மாறிய உயிரானவளா?” என்று திக்கித் திணறி கூறிட.
அவன் உதிர்த்த வார்த்தைகளை வைத்து, அவளும் அப்போதுதான் அவன் யாரென்று புரிந்து கொண்டவளாய், “நீ... நீங்க..ள்...நீங்கள் தான் என் உயிரைக் காப்பாற்றி, தங்கள் சரிபாதி உயிரை எனக்கு தானம் கொடுத்த என் உயிரானவரா?” என்று கேட்டவளின் இதழ்கள் அதோடு வார்த்தைகளை உச்சரிப்பதை நிறுத்தியது. அவளது கயல் விழிகள் இரண்டும் அவன் முகத்திலே நிலைத்திருக்க, அவன் முகத்தைப் பார்த்தவாறே தன் இன்னுயிரை நீத்திருந்தாள் அந்தி. அவனும் அவள் வார்த்தைகளை நன்றாக உள்வாங்கிக் கொண்டவனாய், “உயிர் பிரியும் வேளையில் தான்
என் உயிரானவளை சந்திக்க வேண்டுமென்பது விதியோ? உன் கரம் பற்றி பல்லாண்டு காலம் வாழ்ந்திட எண்ணியவனின் எண்ணத்தை அடியோடு புதைத்திட்டதேனோ இறைவா? இந்த ஜென்மத்தில் என்னவளின் கரம் பற்ற இயலாமல் போனது? ஆனால் மீண்டுமொரு ஜென்மம் எடுத்தேனும் என்னவளைச் சேர்வேன், இது நான் வணங்கும் தெய்வத்தின் மீதும், எந்தன் இனத்தின் மீதும் ஆணை....” என்று சங்கல்பமாய் உரைத்தவனின் கரங்கள் அந்தரியின் மென்தேகத்தை தன்னுடன் அணைத்துப் பிடித்திருக்க, அவனது வலிய கரங்கள் அவளது மென்கரத்தை அழுத்தமாகப் பிடித்திருந்தது. அவன் விழிகள் அவளது மதி வதனத்தையே பார்த்திருக்க, அந்நிலையிலேயே இன்னுயிர் நீத்திருந்தான் அந்தரியின் நேசத்திற்கு பாத்திரமான அதிசாந்திரன்...
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அத்தனையிலும் என்னவளாய் நீ வேண்டுமடி..!
எத்தனை இன்னல்கள்
வந்தாலும் அத்தனையையும் கடந்து வர உறுதுணையாய்
நீ வேண்டுமடி.!!
எத்தனை சோதனைகள்
அலை அலையாய் சுழன்று வந்தாலும் அதிலிருந்து
மீண்டு வர வழித்துணையாய்
நீ வேண்டுமடி..!
- அற்புதமது பிறக்கும்..
ஆர்கலி ஈன்ற அற்புதமே..! - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
