அற்புதம் -17.1
வீட்டில் என்ன பிரச்சனை காத்திருக்கிறதோ? என்று யோசித்தவாறு வீடு வந்து சேர்ந்தார் சுமேந்திரன். காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த போது அவரைக் கோபமான முகத்துடன் வரவேற்றார் சுவர்ணலதா.
மனைவியின் முகத்தைப் பார்த்து மிரண்டவர், ‘ஏதோ போட்டு கொடுத்துட்டான் போலையே’ என்று நினைத்தவாறு பயத்துடன் உள்ளே நுழைந்த அவரைத் தடுத்து நிறுத்தினார் சுவர்ணலதா.
“உங்க மனசுல என்ன தாங்க நெனைச்சுக்கிட்டு இருக்கீங்க? அவனை எவ்வளவு கஷ்டப்பட்டு டிராமாயெல்லாம் போட்டு அமெரிக்காவுல இருந்து இங்க வர வச்சேன். ஆனா அவன் வந்து ரெண்டு நாள் முழுசா முடியறதுக்குள்ள மறுபடியும் அவன் அங்க போக முடிவெடுக்குற மாதிரிபண்ணி வச்சுருருக்கீங்க. யாரைக் கேட்டு நீங்க அவனை அடிச்சீங்க? சொல்லுங்க யாரை கேட்டு என் மகனை நீங்க அடிச்சீங்க? உங்களுக்கே தெரியும் எந்த மாதிரி சூழ்நிலையில உதய் நமக்குக் கெடச்சான்னு. அப்படி இருக்கும் போது அவனை எதுக்கு நீங்க அடிச்சீங்க? இதே நீங்க பெத்த பையனா இருந்தா இப்படி அடிச்சுருப்பீங்களா? அநாமத்தா தண்ணியில கெடந்து எடுத்தவன் தானேன்னு நம்ம இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம், நம்ம இஸ்டத்துக்குக் கஷ்டப்படுத்தலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்களா?” என்று காட்டுக் கத்தலாகக் கத்த.
வேகமாகத் தன் மனைவியின் வாயைத் தன் கைக்கொண்டு அடைத்தவர்,“எதுக்கு லதா இப்படி டென்ஷன் ஆகுற. நான் என்னைக்கு உதய் நம்ம பையன் இல்லன்னு சொல்லி இருக்கேன். நீ ஞாபகப் படுத்தவும் தான் எனக்கு அதுவே ஞாபகம் வருது. அவன் நம்ம பையன் இல்ல, தண்ணியில இருந்து கண்டெடுத்த பையன்னு ஏன்மா சொல்ற, அதுதான் உண்மைன்னாலும் கேட்க கஷ்டமா இருக்கு. ஏன்மா இப்படி இருக்க, இந்த விடயம் அவனுக்குத் தெரிஞ்சா அவனோட மனசு எவ்வளவு கஷ்டப்படும். கொஞ்சங்கூட இதை யோசிக்க மாட்டியா? உதய்யை வீட்டுல வச்சுக்கிட்டு இந்தப் பேச்சை உன்னை யாரு எடுக்கச் சொன்னது? ஹாஸ்பிடல்ல என்ன நடந்துச்சுன்னு கேட்டா நான் சொல்ல போறேன். அதை விட்டுட்டு நீயா ஒன்னு யோசிச்சு, நீயா ஒன்னை முடிவு பண்ணுவியா?” என்று கடிந்துக் கொண்டவர் அவசரமாக மாடி அறையை எட்டிப்பார்த்தார். மகனின் அறைக் கதவு சாத்தியிருந்ததை உறுதி செய்து கொண்டவர், கண்களில் கண்ணீரோடு உதட்டைக் கடித்து அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு நின்றிருக்கும் தன் மனைவியை இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டார்.
பின்னர், “சரி விடுமா இதுக்கு மேல இது மாதிரி பேசிடாத. தெரியாத்தனமா கூட இதுபோல இன்னொரு தடவை நீ பேசி அது உதய்கு தெரிய வந்தா ரொம்ப மனசு உடைஞ்சு போயிடுவான். அதுக்கப்புறம் நாமளே நெனச்சாலும் அவன் இங்கிருந்து போறதை தடுக்க முடியாது..”
“இல்லங்க, எங்க நீங்க மறுபடியும் உதய்யை ஏதாவது சொல்லப் போயி, அவன் நம்மள விட்டு பிரிஞ்சு அமெரிக்கா போயிடுவானோங்குற பதட்டத்துலையும், பயத்துலையும் தான் இப்படிச் சொல்லிட்டேன். இனிமே இது மாதிரி சொல்ல மாட்டேன் மன்னிச்சிடுங்க. அதே மாதிரி நீங்களும் இனிமே அவனை அடிக்காதீங்க, திட்டாதீங்க. ஏன்னா நம்ம பையன் தோளுக்கு மேல வளர்ந்துட்டான், அவனுக்கும் கல்யாணம் பண்ற வயசாச்சு”
“என்ன லதா நான் என்னமோ வேணும்னே அவனை அடிச்ச மாதிரி லூசுத்தனமா பேசுறத? ஹாஸ்பிடல்ல என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?” என்று கேட்டவர் மருத்துவமனையில் நடந்ததைச் சொன்னவர்,
“சப்போஸ் இந்தப் பிரச்சனை பெருசாகியிருந்தா என்ன பண்றது. ஹாஸ்பிடலோட ரெபிடேஷன் கெட்டுப்போறதை விட அவனுக்குக் கெட்ட பேர் வர்றதை தான் நான் விரும்பல. எனக்கப்புறம் இந்த ஹாஸ்பிடலை எடுத்து நடத்துறது, செய்யறது எல்லாம் இவன் தான் பண்ணணும் அப்படி இருக்கும் போது அவனுக்கு ஒரு கெட்ட பேரு வந்தா நல்லா இருக்குமா? அதனால தான் கொஞ்சம் கோவமா நடந்துக்கிட்டனே தவிர என் புள்ளை மேல எனக்குப் பாசம் இல்லாம இருக்குமா.?”
“உங்களுக்கு நம்ம பையன் மேல பாசம் இல்லன்னு நான் சொல்ல வரல. ஆனா கோபத்துல நாலு பேர் முன்னால அவனைக் காயப்படுத்தாதீங்கன்னு தான் சொல்ல வர்றேன். நமக்கு இருக்குறது ஒரே பிள்ளை, அவனும் நம்மளை விட்டுட்டு தூரதேசம போயிட்டான்னா என்ன பண்றது? நாம யாருக்காகச் சம்பாதிச்சு இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரி கட்டி வச்சுருக்கோம், பெரிய வீடு கட்டி வச்சுருக்கோம். பத்தாதுக்கு அவனுக்குத் தனி ஐலேண்ட் வேற வாங்கி வச்சுருக்கோம். நம்ம பையனுக்குத் தானே இதெல்லாம் பாத்து பாத்து வாங்குனோம், அப்புறம் ஏங்க அவன் மேல கோவப்பட்டு இப்படி முரட்டு தனமா நடந்துக்குறீகீங்க?”
“நான் வேணும்னே எதையும் பண்ணைமா. நீ சொல்றதெல்லாம் எனக்கும் புரியுதுமா இனிமே இந்த மாதிரி அவங்கிட்ட நடந்துக்க மாட்டேன். அந்தப் பிரச்சினையை அவனே சால்வ் பண்ணிட்டேன்னு சொல்றான், பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு” என்று சொன்னார்.
“ஏங்க அந்தப் பொண்ணு எப்படி?”
“எப்படீன்னா? புரியலமா”
“இல்லைங்க அந்தப் பொண்ணு எப்படிபட்ட குணம்? நல்லவளா? பேமிலியெல்லாம் எப்படி?”
“ஆமா இப்ப எதுக்கு அந்தப் பொண்ணைப்பத்தி விசாரிக்கிற? நீ நெனைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்ல. அந்தப் பொண்ணு ஐஸ்ட் டிரைனியா வந்துருக்கு அவ்வளவு தான். உதய்கும் இன்ட்ரஸ்ட் இருக்க மாதிரி தெரியலை. நீயா எதையாவது கற்பனை பண்ணி வைக்காத. அவனுக்கு ஒருத்தி எங்கையாவது பிறந்திருப்பா, அவ வர வேண்டிய நேரத்துல சரியாவந்து சேருவா. சரி போ நைட் டிபன் செய்யற வேலையைப் பாரு. எப்படியும் உதய் இந்த நேரத்துல வீடியோ கால் பேசிட்டு இருப்பான் கொஞ்ச நேரத்துல வந்து அம்மா பசிக்குதுன்னு கேட்பான். நீ எல்லாத்தையும் எடுத்து வை நானும் பிரஸ் ஆகிட்டு வந்துடுறேன். அப்படியே ஸ்ட்ராங்கா காஃபி ஒன்னு போட்டு வை ” என்று சொல்லிவிட்டு தங்களது அறைக்குச் சென்றவர் அடுத்த 15 நிமிடத்தில் குளித்து முடித்து இரவு உடையை அணிந்து கொண்டு கீழே வரும்போது ஹாலில் அமர்ந்து நிதானமாக டிவி பார்த்துக் கொண்டிருந்தான் உதய்.
மகனின் அருகில் வந்து அமர்ந்தவர் அவன் தோள்மீது கை போட்டவாறு,“அப்பா மேல கோவமா இருக்கியா உதய்?” என்று கேட்க.
அவனோ அவருக்குப் பதில் சொல்லாமல் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆங்கிலப் பாடல் ஒன்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவனது கோபம் புரிந்தது சுமேந்திரனுக்கு. 'தன் மகனிடம் தானே இறங்கி போகிறோம். அதில் ஒன்றும் தான் குறைந்து விடமாட்டோம்' என்று நினைத்தவர், “சாரிடா கண்ணா. அப்பா வேணும்னே எதையும் பண்ணலடா. நீ உங்க அம்மாக்கிட்ட என்னத்தைச் சொன்னியோ? வந்ததும் வராததுமா உங்க அம்மா என்னைத் திட்டிட்டா தெரியுமா?” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல.
இவனோ கழுத்தை சாய்த்து தன் தந்தையை நம்பாத பார்வை பார்த்தவன், “எது அம்மா உங்களைத் திட்டுனாங்க.இதை நான் நம்பணும் அப்படித்தானே?” என்றிட.
“உண்மையாலுமே உங்க அம்மா என்னைத் திட்டுனா தான். நம்பிக்கை இல்லைன்னா உங்க அம்மாவ நீயே கூப்பிட்டு கேளு” என்று சொல்லிவிட்டு தனக்கு வந்த அலைபேசி அழைப்புப் பேசுவதற்கு அவர் அங்கிருந்து நகர. இரவு உணவை சமைத்து முடித்து வைத்துவிட்டு மகனுக்கும், கணவருக்கும் சூடான குழம்பியைக் கலந்து கொண்டு வந்த சுவர்ணலதா மகனுக்குண்டானதை அவன் கையில் கொடுத்தவர், கணவனுக்கு உண்டானதை டேபிளில் வைத்தார்.
அதைக் கையில் வாங்கிக் கொண்ட உதய், “ம்மா அப்பாவை திட்டினீங்களா? இதுவரைக்கும் நீங்க சண்டை போட்டு நான் பார்த்ததில்லையா அதான் சட்டுன்னு நம்ப முடியல. உண்மையாலுமே உங்க புருஷனை நீங்க திட்டுனீங்களா? அவர் ஏதோ சொல்றாரு நானும் அதைக் கேனயன் மாதிரி நம்பிக்கிட்டு, ஆமா ஆமா, அம்மா நமக்காக அப்பாவை திட்டியிருப்பாங்கன்னு நெனச்சு தலை தலையை ஆட்டணும் அப்படித்தானே?” என்று அநியாயத்துக்கு நக்கலாகக் கேட்டான்.
“எம்புள்ளைய அவர் அடிச்சா நான் பார்த்துக்கிட்டு சும்மா இருப்பனா என்ன? நான் உங்க அப்பாகிட்ட சண்டை போட்டேன் தான். நம்புனா நம்பு, நம்பலைன்னா போ. அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம் வரைக்கும் பிள்ளைக்கும் புருஷனுக்கு இடையில் மாட்டிக்கிட்டு முழிக்கிறதே என்ன மாதிரி பொம்பளைங்களுக்குப் பொழப்பா போச்சு.காஃபியை குடிச்சிட்டு வேலை இருந்தா போய்ப் பாரு இல்லையா சமைச்சு வெச்சதை எடுத்து போட்டு சாப்பிட்டுப் போய்த் தூங்கு, என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க எனக்கு வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்து டிவி ரிமோட்டை வாங்கியவர் சீரியலை வைத்துப் பார்க்க ஆரம்பித்தார்.
தன் தாய் சொன்னதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் குழம்பினான் உதய்.
‘கடவுளே! நான் மட்டும் அமெரிக்காவுல இருந்திருந்திருந்தா ஜாலியா ஃப்ரெண்ட்ஸோட பப்புக்குப் போயிருப்பேன். ஹேப்பியா சுத்தியிருப்பேன். அதையும், இதையும் சொல்லி இங்க என்னை வர வெச்சு ரொம்ப டார்ச்சர் பண்றாங்க. கைதிகளை ஜெயில்ல அடைச்ச மாதிரி வீட்லையே அடைச்சு வெச்சிருக்காங்க. இங்கேயும் அந்த மாதிரி பப் எல்லாம் இருக்குமான்னு தெரியலையே. மொதல்ல அதைப்பத்தி விசாரிக்கணும். அதுக்கு முன்னாடி என்னோட பிரெண்ட் நிகிலை இங்கே வர வைக்கணும், அவன் இங்க வந்தா தான் எல்லாமே சரிப்பட்டு வரும்’ என்று நினைத்தவாறு காஃபியைக் குடித்துவிட்டு, நிகிலை இங்கு வரவைப்பதற்கு அலைபேசி வாயிலாகத் தூது அனுப்ப சென்றான் உதய்.
வெளியே வராண்டாவில் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் சுமேந்திரன். முக்கியமான அறுவை சிகிச்சை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்ததும் தான், மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்த பைல்கள் அனைத்தையும் உள்ளே எடுத்துச் செல்லாமல் காரிலேயே வைத்து விட்டது நினைவுக்கு வந்தது. கார் கதவை திறந்து பைல்களை ஒரு கையில் எடுத்துக் கொண்டு மறுகையால் மகனை சமாதானப்படுத்துவதற்காக வாங்கி வந்திருந்த பார்சலை எடுத்துக் கொண்டார்.
உதய்கு மிகவும் பிடித்த ஹாட் சாக்லேட் மணத்தை நுகர்ந்தவாறு உள்ளே நுழைந்தவர் தன் மனைவி மட்டும் டிவி பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு,' ஒஒ சார் அவரோட ரூமுக்கு போயாச்சா’ என்று நினைத்தவாறே வேகவேகமாகப் படி ஏறினார். பாதித் தொலைவு சென்றிருந்தவரை தடுத்து நிறுத்தியது சுவர்ணலதாவின் குரல்.
“ஏங்க காஃபி ஆறிப்போகுதுங்க?”
என்றவருக்குப் பதிலாக.
“நீயே அதைக் குடிச்சிடும்மா. நான் என் பையனோட ஹாட் சாக்லேட் சாப்பிட போறேன்” என்று சொல்லிவிட்டு மகனின் அறைக் கதவை நாகரிகமாகத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவர், கையில் இருந்த ஃபைல்லை அங்கு இருந்த டேபிளில் வைத்துவிட்டுச் சாக்லேட் இருந்த பாக்சை மகனிடம் நீட்டினார்.
அதை வெறித்துப் பார்த்தவன் வேணாம் என்று சொல்ல தான் நினைத்தான். ஆனால் தந்தையின் முகத்தில் இருந்த தவிப்பு அவனை என்னவோ செய்ய அதைப் புன்னகையுடன் வாங்கிக் கொண்டவன், “இதுக்கு மேல எதுவா இருந்தாலும் வாயில சொல்லுங்க அடிக்காதீங்க. ஏன்னா நானும் பெரிய பையனாகிட்டேன்” என்றான்.
“சாரிடா கண்ணா இதுக்கு மேல உன்னை அடிக்க மாட்டேன் சரியா! இந்த ஒருட தடவ என்னை மன்னிச்சுரு கண்ணா...” என்றவுடன் முழுவதுமாகச் சமாதானம் ஆனவன் சாக்லேட்டை பிரித்துத் தான் ஒரு வாய் சாப்பிட்டவன் தன் தந்தைக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டான்.
அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவர், “முதல்லையே வாங்கிட்டு வந்துட்டேன் கண்ணா கொடுக்க லேட்டாயிடுச்சு. லைட்டா ஹீட் இருக்குன்னு நினைக்கிறேன் நீ சாப்பிடு நான் கீழ போறேன். ஆல்ரெடி உங்க அம்மா கொடுத்த காஃபியை குடிக்கலைன்னு என் மேல கோவமா இருக்கா, நான் போய் என்னன்னு பாக்குறேன்” என்று சொன்னவர் பைல்களை எடுக்கும் போது அவர் கையில் இருந்து ஒரு பைல் தவறி கீழே விழுந்தது.
அதைத் தான் எடுத்துக் கொடுக்கிறேன் என்று எழுந்த உதய் கீழே விழுந்த பைஃலில் இருந்து சிதறிய பேப்பர்களை எடுத்து வைத்து ஒன்றிணைத்து தன் தந்தையின் கொடுக்க, அதே நேரம் கீழே விழுந்த மேப்போ அந்த மேஜையின் அருகில் சென்று விழுந்தது. அதைக் கவனிக்காமல் பைல்களை வாங்கிக் கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேறினார் சுமேந்திரன்.
வீட்டில் என்ன பிரச்சனை காத்திருக்கிறதோ? என்று யோசித்தவாறு வீடு வந்து சேர்ந்தார் சுமேந்திரன். காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த போது அவரைக் கோபமான முகத்துடன் வரவேற்றார் சுவர்ணலதா.
மனைவியின் முகத்தைப் பார்த்து மிரண்டவர், ‘ஏதோ போட்டு கொடுத்துட்டான் போலையே’ என்று நினைத்தவாறு பயத்துடன் உள்ளே நுழைந்த அவரைத் தடுத்து நிறுத்தினார் சுவர்ணலதா.
“உங்க மனசுல என்ன தாங்க நெனைச்சுக்கிட்டு இருக்கீங்க? அவனை எவ்வளவு கஷ்டப்பட்டு டிராமாயெல்லாம் போட்டு அமெரிக்காவுல இருந்து இங்க வர வச்சேன். ஆனா அவன் வந்து ரெண்டு நாள் முழுசா முடியறதுக்குள்ள மறுபடியும் அவன் அங்க போக முடிவெடுக்குற மாதிரிபண்ணி வச்சுருருக்கீங்க. யாரைக் கேட்டு நீங்க அவனை அடிச்சீங்க? சொல்லுங்க யாரை கேட்டு என் மகனை நீங்க அடிச்சீங்க? உங்களுக்கே தெரியும் எந்த மாதிரி சூழ்நிலையில உதய் நமக்குக் கெடச்சான்னு. அப்படி இருக்கும் போது அவனை எதுக்கு நீங்க அடிச்சீங்க? இதே நீங்க பெத்த பையனா இருந்தா இப்படி அடிச்சுருப்பீங்களா? அநாமத்தா தண்ணியில கெடந்து எடுத்தவன் தானேன்னு நம்ம இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கலாம், நம்ம இஸ்டத்துக்குக் கஷ்டப்படுத்தலாம்னு முடிவு பண்ணியிருக்கீங்களா?” என்று காட்டுக் கத்தலாகக் கத்த.
வேகமாகத் தன் மனைவியின் வாயைத் தன் கைக்கொண்டு அடைத்தவர்,“எதுக்கு லதா இப்படி டென்ஷன் ஆகுற. நான் என்னைக்கு உதய் நம்ம பையன் இல்லன்னு சொல்லி இருக்கேன். நீ ஞாபகப் படுத்தவும் தான் எனக்கு அதுவே ஞாபகம் வருது. அவன் நம்ம பையன் இல்ல, தண்ணியில இருந்து கண்டெடுத்த பையன்னு ஏன்மா சொல்ற, அதுதான் உண்மைன்னாலும் கேட்க கஷ்டமா இருக்கு. ஏன்மா இப்படி இருக்க, இந்த விடயம் அவனுக்குத் தெரிஞ்சா அவனோட மனசு எவ்வளவு கஷ்டப்படும். கொஞ்சங்கூட இதை யோசிக்க மாட்டியா? உதய்யை வீட்டுல வச்சுக்கிட்டு இந்தப் பேச்சை உன்னை யாரு எடுக்கச் சொன்னது? ஹாஸ்பிடல்ல என்ன நடந்துச்சுன்னு கேட்டா நான் சொல்ல போறேன். அதை விட்டுட்டு நீயா ஒன்னு யோசிச்சு, நீயா ஒன்னை முடிவு பண்ணுவியா?” என்று கடிந்துக் கொண்டவர் அவசரமாக மாடி அறையை எட்டிப்பார்த்தார். மகனின் அறைக் கதவு சாத்தியிருந்ததை உறுதி செய்து கொண்டவர், கண்களில் கண்ணீரோடு உதட்டைக் கடித்து அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு நின்றிருக்கும் தன் மனைவியை இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டார்.
பின்னர், “சரி விடுமா இதுக்கு மேல இது மாதிரி பேசிடாத. தெரியாத்தனமா கூட இதுபோல இன்னொரு தடவை நீ பேசி அது உதய்கு தெரிய வந்தா ரொம்ப மனசு உடைஞ்சு போயிடுவான். அதுக்கப்புறம் நாமளே நெனச்சாலும் அவன் இங்கிருந்து போறதை தடுக்க முடியாது..”
“இல்லங்க, எங்க நீங்க மறுபடியும் உதய்யை ஏதாவது சொல்லப் போயி, அவன் நம்மள விட்டு பிரிஞ்சு அமெரிக்கா போயிடுவானோங்குற பதட்டத்துலையும், பயத்துலையும் தான் இப்படிச் சொல்லிட்டேன். இனிமே இது மாதிரி சொல்ல மாட்டேன் மன்னிச்சிடுங்க. அதே மாதிரி நீங்களும் இனிமே அவனை அடிக்காதீங்க, திட்டாதீங்க. ஏன்னா நம்ம பையன் தோளுக்கு மேல வளர்ந்துட்டான், அவனுக்கும் கல்யாணம் பண்ற வயசாச்சு”
“என்ன லதா நான் என்னமோ வேணும்னே அவனை அடிச்ச மாதிரி லூசுத்தனமா பேசுறத? ஹாஸ்பிடல்ல என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?” என்று கேட்டவர் மருத்துவமனையில் நடந்ததைச் சொன்னவர்,
“சப்போஸ் இந்தப் பிரச்சனை பெருசாகியிருந்தா என்ன பண்றது. ஹாஸ்பிடலோட ரெபிடேஷன் கெட்டுப்போறதை விட அவனுக்குக் கெட்ட பேர் வர்றதை தான் நான் விரும்பல. எனக்கப்புறம் இந்த ஹாஸ்பிடலை எடுத்து நடத்துறது, செய்யறது எல்லாம் இவன் தான் பண்ணணும் அப்படி இருக்கும் போது அவனுக்கு ஒரு கெட்ட பேரு வந்தா நல்லா இருக்குமா? அதனால தான் கொஞ்சம் கோவமா நடந்துக்கிட்டனே தவிர என் புள்ளை மேல எனக்குப் பாசம் இல்லாம இருக்குமா.?”
“உங்களுக்கு நம்ம பையன் மேல பாசம் இல்லன்னு நான் சொல்ல வரல. ஆனா கோபத்துல நாலு பேர் முன்னால அவனைக் காயப்படுத்தாதீங்கன்னு தான் சொல்ல வர்றேன். நமக்கு இருக்குறது ஒரே பிள்ளை, அவனும் நம்மளை விட்டுட்டு தூரதேசம போயிட்டான்னா என்ன பண்றது? நாம யாருக்காகச் சம்பாதிச்சு இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரி கட்டி வச்சுருக்கோம், பெரிய வீடு கட்டி வச்சுருக்கோம். பத்தாதுக்கு அவனுக்குத் தனி ஐலேண்ட் வேற வாங்கி வச்சுருக்கோம். நம்ம பையனுக்குத் தானே இதெல்லாம் பாத்து பாத்து வாங்குனோம், அப்புறம் ஏங்க அவன் மேல கோவப்பட்டு இப்படி முரட்டு தனமா நடந்துக்குறீகீங்க?”
“நான் வேணும்னே எதையும் பண்ணைமா. நீ சொல்றதெல்லாம் எனக்கும் புரியுதுமா இனிமே இந்த மாதிரி அவங்கிட்ட நடந்துக்க மாட்டேன். அந்தப் பிரச்சினையை அவனே சால்வ் பண்ணிட்டேன்னு சொல்றான், பார்க்கலாம் என்ன ஆகுதுன்னு” என்று சொன்னார்.
“ஏங்க அந்தப் பொண்ணு எப்படி?”
“எப்படீன்னா? புரியலமா”
“இல்லைங்க அந்தப் பொண்ணு எப்படிபட்ட குணம்? நல்லவளா? பேமிலியெல்லாம் எப்படி?”
“ஆமா இப்ப எதுக்கு அந்தப் பொண்ணைப்பத்தி விசாரிக்கிற? நீ நெனைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னும் இல்ல. அந்தப் பொண்ணு ஐஸ்ட் டிரைனியா வந்துருக்கு அவ்வளவு தான். உதய்கும் இன்ட்ரஸ்ட் இருக்க மாதிரி தெரியலை. நீயா எதையாவது கற்பனை பண்ணி வைக்காத. அவனுக்கு ஒருத்தி எங்கையாவது பிறந்திருப்பா, அவ வர வேண்டிய நேரத்துல சரியாவந்து சேருவா. சரி போ நைட் டிபன் செய்யற வேலையைப் பாரு. எப்படியும் உதய் இந்த நேரத்துல வீடியோ கால் பேசிட்டு இருப்பான் கொஞ்ச நேரத்துல வந்து அம்மா பசிக்குதுன்னு கேட்பான். நீ எல்லாத்தையும் எடுத்து வை நானும் பிரஸ் ஆகிட்டு வந்துடுறேன். அப்படியே ஸ்ட்ராங்கா காஃபி ஒன்னு போட்டு வை ” என்று சொல்லிவிட்டு தங்களது அறைக்குச் சென்றவர் அடுத்த 15 நிமிடத்தில் குளித்து முடித்து இரவு உடையை அணிந்து கொண்டு கீழே வரும்போது ஹாலில் அமர்ந்து நிதானமாக டிவி பார்த்துக் கொண்டிருந்தான் உதய்.
மகனின் அருகில் வந்து அமர்ந்தவர் அவன் தோள்மீது கை போட்டவாறு,“அப்பா மேல கோவமா இருக்கியா உதய்?” என்று கேட்க.
அவனோ அவருக்குப் பதில் சொல்லாமல் டிவியில் ஓடிக் கொண்டிருக்கும் ஆங்கிலப் பாடல் ஒன்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவனது கோபம் புரிந்தது சுமேந்திரனுக்கு. 'தன் மகனிடம் தானே இறங்கி போகிறோம். அதில் ஒன்றும் தான் குறைந்து விடமாட்டோம்' என்று நினைத்தவர், “சாரிடா கண்ணா. அப்பா வேணும்னே எதையும் பண்ணலடா. நீ உங்க அம்மாக்கிட்ட என்னத்தைச் சொன்னியோ? வந்ததும் வராததுமா உங்க அம்மா என்னைத் திட்டிட்டா தெரியுமா?” என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல.
இவனோ கழுத்தை சாய்த்து தன் தந்தையை நம்பாத பார்வை பார்த்தவன், “எது அம்மா உங்களைத் திட்டுனாங்க.இதை நான் நம்பணும் அப்படித்தானே?” என்றிட.
“உண்மையாலுமே உங்க அம்மா என்னைத் திட்டுனா தான். நம்பிக்கை இல்லைன்னா உங்க அம்மாவ நீயே கூப்பிட்டு கேளு” என்று சொல்லிவிட்டு தனக்கு வந்த அலைபேசி அழைப்புப் பேசுவதற்கு அவர் அங்கிருந்து நகர. இரவு உணவை சமைத்து முடித்து வைத்துவிட்டு மகனுக்கும், கணவருக்கும் சூடான குழம்பியைக் கலந்து கொண்டு வந்த சுவர்ணலதா மகனுக்குண்டானதை அவன் கையில் கொடுத்தவர், கணவனுக்கு உண்டானதை டேபிளில் வைத்தார்.
அதைக் கையில் வாங்கிக் கொண்ட உதய், “ம்மா அப்பாவை திட்டினீங்களா? இதுவரைக்கும் நீங்க சண்டை போட்டு நான் பார்த்ததில்லையா அதான் சட்டுன்னு நம்ப முடியல. உண்மையாலுமே உங்க புருஷனை நீங்க திட்டுனீங்களா? அவர் ஏதோ சொல்றாரு நானும் அதைக் கேனயன் மாதிரி நம்பிக்கிட்டு, ஆமா ஆமா, அம்மா நமக்காக அப்பாவை திட்டியிருப்பாங்கன்னு நெனச்சு தலை தலையை ஆட்டணும் அப்படித்தானே?” என்று அநியாயத்துக்கு நக்கலாகக் கேட்டான்.
“எம்புள்ளைய அவர் அடிச்சா நான் பார்த்துக்கிட்டு சும்மா இருப்பனா என்ன? நான் உங்க அப்பாகிட்ட சண்டை போட்டேன் தான். நம்புனா நம்பு, நம்பலைன்னா போ. அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம் வரைக்கும் பிள்ளைக்கும் புருஷனுக்கு இடையில் மாட்டிக்கிட்டு முழிக்கிறதே என்ன மாதிரி பொம்பளைங்களுக்குப் பொழப்பா போச்சு.காஃபியை குடிச்சிட்டு வேலை இருந்தா போய்ப் பாரு இல்லையா சமைச்சு வெச்சதை எடுத்து போட்டு சாப்பிட்டுப் போய்த் தூங்கு, என்னை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க எனக்கு வேலை இருக்கு” என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்து டிவி ரிமோட்டை வாங்கியவர் சீரியலை வைத்துப் பார்க்க ஆரம்பித்தார்.
தன் தாய் சொன்னதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் குழம்பினான் உதய்.
‘கடவுளே! நான் மட்டும் அமெரிக்காவுல இருந்திருந்திருந்தா ஜாலியா ஃப்ரெண்ட்ஸோட பப்புக்குப் போயிருப்பேன். ஹேப்பியா சுத்தியிருப்பேன். அதையும், இதையும் சொல்லி இங்க என்னை வர வெச்சு ரொம்ப டார்ச்சர் பண்றாங்க. கைதிகளை ஜெயில்ல அடைச்ச மாதிரி வீட்லையே அடைச்சு வெச்சிருக்காங்க. இங்கேயும் அந்த மாதிரி பப் எல்லாம் இருக்குமான்னு தெரியலையே. மொதல்ல அதைப்பத்தி விசாரிக்கணும். அதுக்கு முன்னாடி என்னோட பிரெண்ட் நிகிலை இங்கே வர வைக்கணும், அவன் இங்க வந்தா தான் எல்லாமே சரிப்பட்டு வரும்’ என்று நினைத்தவாறு காஃபியைக் குடித்துவிட்டு, நிகிலை இங்கு வரவைப்பதற்கு அலைபேசி வாயிலாகத் தூது அனுப்ப சென்றான் உதய்.
வெளியே வராண்டாவில் நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் சுமேந்திரன். முக்கியமான அறுவை சிகிச்சை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்ததும் தான், மருத்துவமனையில் இருந்து கொண்டு வந்த பைல்கள் அனைத்தையும் உள்ளே எடுத்துச் செல்லாமல் காரிலேயே வைத்து விட்டது நினைவுக்கு வந்தது. கார் கதவை திறந்து பைல்களை ஒரு கையில் எடுத்துக் கொண்டு மறுகையால் மகனை சமாதானப்படுத்துவதற்காக வாங்கி வந்திருந்த பார்சலை எடுத்துக் கொண்டார்.
உதய்கு மிகவும் பிடித்த ஹாட் சாக்லேட் மணத்தை நுகர்ந்தவாறு உள்ளே நுழைந்தவர் தன் மனைவி மட்டும் டிவி பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு,' ஒஒ சார் அவரோட ரூமுக்கு போயாச்சா’ என்று நினைத்தவாறே வேகவேகமாகப் படி ஏறினார். பாதித் தொலைவு சென்றிருந்தவரை தடுத்து நிறுத்தியது சுவர்ணலதாவின் குரல்.
“ஏங்க காஃபி ஆறிப்போகுதுங்க?”
என்றவருக்குப் பதிலாக.
“நீயே அதைக் குடிச்சிடும்மா. நான் என் பையனோட ஹாட் சாக்லேட் சாப்பிட போறேன்” என்று சொல்லிவிட்டு மகனின் அறைக் கதவை நாகரிகமாகத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவர், கையில் இருந்த ஃபைல்லை அங்கு இருந்த டேபிளில் வைத்துவிட்டுச் சாக்லேட் இருந்த பாக்சை மகனிடம் நீட்டினார்.
அதை வெறித்துப் பார்த்தவன் வேணாம் என்று சொல்ல தான் நினைத்தான். ஆனால் தந்தையின் முகத்தில் இருந்த தவிப்பு அவனை என்னவோ செய்ய அதைப் புன்னகையுடன் வாங்கிக் கொண்டவன், “இதுக்கு மேல எதுவா இருந்தாலும் வாயில சொல்லுங்க அடிக்காதீங்க. ஏன்னா நானும் பெரிய பையனாகிட்டேன்” என்றான்.
“சாரிடா கண்ணா இதுக்கு மேல உன்னை அடிக்க மாட்டேன் சரியா! இந்த ஒருட தடவ என்னை மன்னிச்சுரு கண்ணா...” என்றவுடன் முழுவதுமாகச் சமாதானம் ஆனவன் சாக்லேட்டை பிரித்துத் தான் ஒரு வாய் சாப்பிட்டவன் தன் தந்தைக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டான்.
அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவர், “முதல்லையே வாங்கிட்டு வந்துட்டேன் கண்ணா கொடுக்க லேட்டாயிடுச்சு. லைட்டா ஹீட் இருக்குன்னு நினைக்கிறேன் நீ சாப்பிடு நான் கீழ போறேன். ஆல்ரெடி உங்க அம்மா கொடுத்த காஃபியை குடிக்கலைன்னு என் மேல கோவமா இருக்கா, நான் போய் என்னன்னு பாக்குறேன்” என்று சொன்னவர் பைல்களை எடுக்கும் போது அவர் கையில் இருந்து ஒரு பைல் தவறி கீழே விழுந்தது.
அதைத் தான் எடுத்துக் கொடுக்கிறேன் என்று எழுந்த உதய் கீழே விழுந்த பைஃலில் இருந்து சிதறிய பேப்பர்களை எடுத்து வைத்து ஒன்றிணைத்து தன் தந்தையின் கொடுக்க, அதே நேரம் கீழே விழுந்த மேப்போ அந்த மேஜையின் அருகில் சென்று விழுந்தது. அதைக் கவனிக்காமல் பைல்களை வாங்கிக் கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேறினார் சுமேந்திரன்.