- Messages
- 86
- Reaction score
- 0
- Points
- 6
கோபம் 20
இப்போது தான் நம் வீடு நிம்மதியாக இருக்கிறது என்று மரியம் ரஹீமிடம் கூற. ம்ம்ம் ஆமாம் அந்த சுரையா போனவுடன் தான் வீடு வீடு மாதிரி இருக்கிறது. எப்போதும் ஏதாவது பிரச்சினை செய்து கொண்டு இருப்பாள். ஆனால் இப்போது அது இல்லை. நம் பேச்சை கேட்க மாட்டாள் என அவளை பற்றி இருவரும் வசை பாடி கொண்டு இருந்தனர். இதை கேட்ட ரஸியாவிற்கு கோபம் வந்துவிட்டது. அதை அடக்கி விட்டு படிக்க தொடங்கினாள்.
காலையில் காயப்போட்ட துணியை எடுக்க மறந்துவிட்டேன். மழை வருவது போல் இருக்கிறது நான் போய் எடுத்து கொண்டு வருகிறேன் என்று மக்மூதாவிடம் கூறிவிட்டு மாடிக்கு சென்றாள் சுரையா.
அவள் மாடிக்கு செல்வதற்கும் மழை வருவதற்கும் சரியாக இருந்தது. அவள் துணிகளை சீக்கிரம் எடுத்துக்கொண்டு இருந்தாள்.
காலை நடந்ததை நினைத்து வருந்தி கொண்டு இருந்தான் சாகித். மழை வந்ததால் கீழே செல்வோம் என்று திரும்பிய போது சுரையாவை பார்த்தவுடன் அவன் கவலைகளை மறந்து அவளை ரசிக்க தொடங்கினான். அவன் மெதுவாக அவளை நோக்கி நடந்து அவளை தன் பக்கம் திருப்பினான்.
இவள் இவன் தான் உணர்ந்து அவனின் இழுப்பிற்கு அசைந்தாள். மழை அதிகமாக பொழிய தொடங்கியது அதனுடன் இவர்களும் காதலை பொழிய தொடங்கினர்.
உன்னோடு பேசிக்கொள்ள
வார்த்தைகள்
சேர்த்து வைத்து
முள்ளுக்குள்
திக்கி தவித்தேனே
உன் பேரை
மட்டும் தினம்
நெஞ்சுக்குள் சொல்லி சொல்லி
என் பேரை
இன்று மறந்தேனே
மஞ்சள் நிலவே
கொஞ்சல் மொழியே
வெட்கத்திமிரே சாய்க்காதே
ஆசைக்கனவே
மீசை புயலே
நித்தம் இசையில்
நீ கொல்லாதே
என் நெஞ்சு
சின்ன இலை
நீதான் என்
காதல் மழை
உன்னாலே நான்
நனைய வேண்டும்
என் நெஞ்சு
சின்னக் கொடி
நீதான் என்
காதல் செடி
உன்மீது
சுற்றிக்கொள்ள வேண்டும்
உன் மூச்சுக்காற்று பட்டு
பூக்கின்ற பூக்கள் எல்லாம்
உன்போலே வாசனைகள் வீசும்
உன்னோடு நான் இருக்கும்
நேரங்கள் அத்தனையும்
போதாது என்று மனம் ஏங்கும்
மின்னல் விழியே கன்னக்குழியே
குட்டிக்கவிதை நீதானே
முத்தத்தடமே சுட்டித்தனமே
மொத்த சுகமும் நீ என்பேனே
சுரையா அவன் மார்பில் சாய்ந்து கொண்டு ஐ லவ் யூ சாகித் என்றாள். அவனும் அவள் நெற்றியில் முத்தமிட்டு ஐ லவ் யூ ராட்சஷி என்று இறுக்கி அணைத்து கொண்டான்.
சுரையா பேச தொடங்கினாள். என்னை விட்டு போக மாட்டீர்கள் தானே சாகித்.
"ஹேய் அம்மு நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். நீ ஏன் இப்படி பேசுகிறாய்?"
" சின்ன வயதில் இருந்தே நான் எதுக்கும் ஆசை பட்டது கிடையாது. அப்படியே ஆசை பட்டாலும் நிலைத்தது இல்லை. நான் ஆசைபட்ட ஒரே விஷயம் நீ மட்டும் தான். எனக்கு நீ வேண்டும் கடைசி வரைக்கும். என் கூட இருப்பியா...."
இவள் இப்படி கேட்டவுடன் அவள் கன்னத்தை தன் இரு கைகளால் ஏந்தி," உன் கூட நான் இருப்பேன். நீ மட்டுமே என் உலகம் புரிந்துகொள் செல்லம்..." என்று அவள் கண்களில் முத்தமிட்டு தன் மீது சாய்த்து கொண்டான்.
பிறகு அவள் விலகி கீழே இறங்க சென்றாள். அவன் , அவளை போக விடாமல் அவள் கைபிடித்து இழுத்து சுவற்றில் சாய வைத்து அவளின் இடுப்பை பிடித்து தன் மீது இறுக்கினான். அவள் ஹே மக்மூதா நீ எப்போது வந்தாய்? என்றவுடன் அவன் அவசரமாக விலகினான்.
இவள் வவ்வ இப்போது என்ன பண்ணுவாய்? என்று கூறி விட்டு தன் அறைக்கு விரைந்தாள். அடிப்பாவி என்னை ஏமாற்றி விட்டாளே ராட்சஷி உன்னை..... என்று நினைத்தவாறு அறைக்கு சென்றான்.
தன் உடையை மாற்றி விட்டு தலையை துவட்டி கொண்டு இருந்தாள் சுரையா. சாகித் ஈரத்துடன் வந்தவனை இழுத்து உட்கார வைத்து டவலால் அவன் தலையை துவட்டி விட்டாள். அவள் துவட்டி விடுவதை ரசித்து கொண்டு இருந்தான். பிறகு அவளை தன் மடியில் உட்கார வைத்து இந்த காதல் தேவதையை அடைய ஏழு மாதங்கள் ஆகிவிட்டது என்றான். அவன் தோல்களில் கைபோட்ட வண்ணம் ஓஹோ அப்படியா? ம்ம்ம் ஆமாம் டி என் பொண்டாட்டி....
அவள் ஏதர்ச்சையாக நேரத்தை பார்த்து தொழுகைக்கு டைம் ஆகுது துணியை மாற்றிக்கொண்டு கிளம்பு என்றவுடன் ம்ம்ம் சரி என்று உடையை மாற்றிக்கொண்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டு நான் இஷா முடிந்து தான் வருவேன் யார் என்ன சொன்னாலும் கண்டுக்காமல் இருந்து கொள் புரிகிறதா? என கண்டித்து விட்டு சென்றான். இவளும் சரி என்றாள்.
இவளும் வூழு செய்து விட்டு தொழுதாள். பிறகு குர்ஆன் ஓதிக் கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. "அல்லாஹீ அக்பர்...." என்ற பாங்கு கேட்டு இஷா தொழுகைக்கு ஆயுத்தம்மானாள். தொழுகை முடித்துவிட்டு சாகித்தின் வருகைக்காக காத்திருந்தாள் சுரையா.
சிறிது நேரத்தில் அவன் வந்தான். இருவரும் சேர்ந்து சாப்பிட்டு தன்னறைக்கு வந்தனர்.
சுரையா, " சாகித்...." என்று இழுத்தாள்.
"சொல்லு..."
" உங்களிடம் கொஞ்சம் பேசனும்.... பேசலாமா??..." என்று அவன் தோலில் சாய்ந்த படி கேட்டாள்.
"பேசலாம் தாராளமாக பேசலாம்...."
சின்ன வயதில் நான் தான் எங்கள் வீட்டில் ராணி. என்னை எல்லாருக்கும் அவ்வளவு பிடிக்கும் . அவ்வளவு செல்லம் எனக்கு மட்டும். நான் எப்போதும் என் தாத்தா பாட்டி கூட தான் எப்போதும் இருப்பேன். என் சித்தப்பா சித்தி ரெண்டு பேரும் என்னை அவங்க பொண்ணு மாதிரி பார்த்துக்கொள்வார்கள்.
எங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்கு போய்டுவாங்க நான் தாத்தா பாட்டி கூட தான் இருப்பேன். என்னை ஸ்கூலுக்கு கொண்டு போய் விடுவது அழைத்து வருவது என் தாத்தா இல்லை என் சித்தப்பா.
நான் பர்ஸ்ட் படிக்கும் போது என் ரஸியா புது ஆளா எங்க வீட்டில் சேர்ந்தா. எங்க சித்தப்பாக்கு ஒரு பொண்ணு ஒரு பையன். எங்க அத்தை மாமாக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. எல்லாம் வீட்டுக்கு வந்தா ரொம்ப ஜாலியாக இருக்கும். ஆனால் என் அம்மா அப்பா மட்டும் பணம் பணம் அது பின்னாடி போய்ட்டு இருப்பாங்க.
இத்தனைக்கும் சொத்து நிறைய இருக்கு. இப்படியே நாட்கள் நல்லா போச்சு. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது 20.5 அன்னிக்கி நாகூர் போய்ட்டு வரேம் போனவங்க தான் எல்லாரும் என்று அமைதியி பின் அக்ஸிடட் ஆயிடுச்சி. மவுத் ஆகிட்டாங்க வீட்டுக்கு வந்தது என்று கூறிவிட்டு அழுதாள்.
அவளை ஆறுதலாக அணைத்து கொண்டான் சாகித். சிறிது நேரத்திற்கு பிறகு அப்படியே நாட்கள் நகர்ந்தது. ஐந்து வருஷத்துக்கு அப்புறம் அதாவது நான் டேன்த் படிக்கும் போது என் அப்பா அம்மா கிட்ட இந்த சொத்துக்காக தான் என் அம்மா அப்பா எல்லாரையும் கொன்றேன் என்று சொன்னார் அதை நான் கேட்டு விட்டேன்.
அப்புறம் ரொம்ப நாள் கழித்து தாத்தா ரூம்க்கு போனேன். அங்கே ஒரு டைரி இருந்தது. அதை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
உன் அப்பாவை மாற்றுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. அவனை திருத்தும் பொருட்டு உன்கிட்டையும் ரஸியா கிட்டயும் ஒப்படைக்கிறேன். அல்லாஹ் துணையோடு நீங்கள் இருவரும் தான் அவனை திருத்தனும். அப்புறம் உன் பெயரில் இது போல் இரண்டு வீடுகள் இருக்கு என்று எழுதி இருந்துச்சு.....
இப்போது தான் நம் வீடு நிம்மதியாக இருக்கிறது என்று மரியம் ரஹீமிடம் கூற. ம்ம்ம் ஆமாம் அந்த சுரையா போனவுடன் தான் வீடு வீடு மாதிரி இருக்கிறது. எப்போதும் ஏதாவது பிரச்சினை செய்து கொண்டு இருப்பாள். ஆனால் இப்போது அது இல்லை. நம் பேச்சை கேட்க மாட்டாள் என அவளை பற்றி இருவரும் வசை பாடி கொண்டு இருந்தனர். இதை கேட்ட ரஸியாவிற்கு கோபம் வந்துவிட்டது. அதை அடக்கி விட்டு படிக்க தொடங்கினாள்.
காலையில் காயப்போட்ட துணியை எடுக்க மறந்துவிட்டேன். மழை வருவது போல் இருக்கிறது நான் போய் எடுத்து கொண்டு வருகிறேன் என்று மக்மூதாவிடம் கூறிவிட்டு மாடிக்கு சென்றாள் சுரையா.
அவள் மாடிக்கு செல்வதற்கும் மழை வருவதற்கும் சரியாக இருந்தது. அவள் துணிகளை சீக்கிரம் எடுத்துக்கொண்டு இருந்தாள்.
காலை நடந்ததை நினைத்து வருந்தி கொண்டு இருந்தான் சாகித். மழை வந்ததால் கீழே செல்வோம் என்று திரும்பிய போது சுரையாவை பார்த்தவுடன் அவன் கவலைகளை மறந்து அவளை ரசிக்க தொடங்கினான். அவன் மெதுவாக அவளை நோக்கி நடந்து அவளை தன் பக்கம் திருப்பினான்.
இவள் இவன் தான் உணர்ந்து அவனின் இழுப்பிற்கு அசைந்தாள். மழை அதிகமாக பொழிய தொடங்கியது அதனுடன் இவர்களும் காதலை பொழிய தொடங்கினர்.
உன்னோடு பேசிக்கொள்ள
வார்த்தைகள்
சேர்த்து வைத்து
முள்ளுக்குள்
திக்கி தவித்தேனே
உன் பேரை
மட்டும் தினம்
நெஞ்சுக்குள் சொல்லி சொல்லி
என் பேரை
இன்று மறந்தேனே
மஞ்சள் நிலவே
கொஞ்சல் மொழியே
வெட்கத்திமிரே சாய்க்காதே
ஆசைக்கனவே
மீசை புயலே
நித்தம் இசையில்
நீ கொல்லாதே
என் நெஞ்சு
சின்ன இலை
நீதான் என்
காதல் மழை
உன்னாலே நான்
நனைய வேண்டும்
என் நெஞ்சு
சின்னக் கொடி
நீதான் என்
காதல் செடி
உன்மீது
சுற்றிக்கொள்ள வேண்டும்
உன் மூச்சுக்காற்று பட்டு
பூக்கின்ற பூக்கள் எல்லாம்
உன்போலே வாசனைகள் வீசும்
உன்னோடு நான் இருக்கும்
நேரங்கள் அத்தனையும்
போதாது என்று மனம் ஏங்கும்
மின்னல் விழியே கன்னக்குழியே
குட்டிக்கவிதை நீதானே
முத்தத்தடமே சுட்டித்தனமே
மொத்த சுகமும் நீ என்பேனே
சுரையா அவன் மார்பில் சாய்ந்து கொண்டு ஐ லவ் யூ சாகித் என்றாள். அவனும் அவள் நெற்றியில் முத்தமிட்டு ஐ லவ் யூ ராட்சஷி என்று இறுக்கி அணைத்து கொண்டான்.
சுரையா பேச தொடங்கினாள். என்னை விட்டு போக மாட்டீர்கள் தானே சாகித்.
"ஹேய் அம்மு நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். நீ ஏன் இப்படி பேசுகிறாய்?"
" சின்ன வயதில் இருந்தே நான் எதுக்கும் ஆசை பட்டது கிடையாது. அப்படியே ஆசை பட்டாலும் நிலைத்தது இல்லை. நான் ஆசைபட்ட ஒரே விஷயம் நீ மட்டும் தான். எனக்கு நீ வேண்டும் கடைசி வரைக்கும். என் கூட இருப்பியா...."
இவள் இப்படி கேட்டவுடன் அவள் கன்னத்தை தன் இரு கைகளால் ஏந்தி," உன் கூட நான் இருப்பேன். நீ மட்டுமே என் உலகம் புரிந்துகொள் செல்லம்..." என்று அவள் கண்களில் முத்தமிட்டு தன் மீது சாய்த்து கொண்டான்.
பிறகு அவள் விலகி கீழே இறங்க சென்றாள். அவன் , அவளை போக விடாமல் அவள் கைபிடித்து இழுத்து சுவற்றில் சாய வைத்து அவளின் இடுப்பை பிடித்து தன் மீது இறுக்கினான். அவள் ஹே மக்மூதா நீ எப்போது வந்தாய்? என்றவுடன் அவன் அவசரமாக விலகினான்.
இவள் வவ்வ இப்போது என்ன பண்ணுவாய்? என்று கூறி விட்டு தன் அறைக்கு விரைந்தாள். அடிப்பாவி என்னை ஏமாற்றி விட்டாளே ராட்சஷி உன்னை..... என்று நினைத்தவாறு அறைக்கு சென்றான்.
தன் உடையை மாற்றி விட்டு தலையை துவட்டி கொண்டு இருந்தாள் சுரையா. சாகித் ஈரத்துடன் வந்தவனை இழுத்து உட்கார வைத்து டவலால் அவன் தலையை துவட்டி விட்டாள். அவள் துவட்டி விடுவதை ரசித்து கொண்டு இருந்தான். பிறகு அவளை தன் மடியில் உட்கார வைத்து இந்த காதல் தேவதையை அடைய ஏழு மாதங்கள் ஆகிவிட்டது என்றான். அவன் தோல்களில் கைபோட்ட வண்ணம் ஓஹோ அப்படியா? ம்ம்ம் ஆமாம் டி என் பொண்டாட்டி....
அவள் ஏதர்ச்சையாக நேரத்தை பார்த்து தொழுகைக்கு டைம் ஆகுது துணியை மாற்றிக்கொண்டு கிளம்பு என்றவுடன் ம்ம்ம் சரி என்று உடையை மாற்றிக்கொண்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டு நான் இஷா முடிந்து தான் வருவேன் யார் என்ன சொன்னாலும் கண்டுக்காமல் இருந்து கொள் புரிகிறதா? என கண்டித்து விட்டு சென்றான். இவளும் சரி என்றாள்.
இவளும் வூழு செய்து விட்டு தொழுதாள். பிறகு குர்ஆன் ஓதிக் கொண்டு இருந்ததில் நேரம் போனது தெரியவில்லை. "அல்லாஹீ அக்பர்...." என்ற பாங்கு கேட்டு இஷா தொழுகைக்கு ஆயுத்தம்மானாள். தொழுகை முடித்துவிட்டு சாகித்தின் வருகைக்காக காத்திருந்தாள் சுரையா.
சிறிது நேரத்தில் அவன் வந்தான். இருவரும் சேர்ந்து சாப்பிட்டு தன்னறைக்கு வந்தனர்.
சுரையா, " சாகித்...." என்று இழுத்தாள்.
"சொல்லு..."
" உங்களிடம் கொஞ்சம் பேசனும்.... பேசலாமா??..." என்று அவன் தோலில் சாய்ந்த படி கேட்டாள்.
"பேசலாம் தாராளமாக பேசலாம்...."
சின்ன வயதில் நான் தான் எங்கள் வீட்டில் ராணி. என்னை எல்லாருக்கும் அவ்வளவு பிடிக்கும் . அவ்வளவு செல்லம் எனக்கு மட்டும். நான் எப்போதும் என் தாத்தா பாட்டி கூட தான் எப்போதும் இருப்பேன். என் சித்தப்பா சித்தி ரெண்டு பேரும் என்னை அவங்க பொண்ணு மாதிரி பார்த்துக்கொள்வார்கள்.
எங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்கு போய்டுவாங்க நான் தாத்தா பாட்டி கூட தான் இருப்பேன். என்னை ஸ்கூலுக்கு கொண்டு போய் விடுவது அழைத்து வருவது என் தாத்தா இல்லை என் சித்தப்பா.
நான் பர்ஸ்ட் படிக்கும் போது என் ரஸியா புது ஆளா எங்க வீட்டில் சேர்ந்தா. எங்க சித்தப்பாக்கு ஒரு பொண்ணு ஒரு பையன். எங்க அத்தை மாமாக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. எல்லாம் வீட்டுக்கு வந்தா ரொம்ப ஜாலியாக இருக்கும். ஆனால் என் அம்மா அப்பா மட்டும் பணம் பணம் அது பின்னாடி போய்ட்டு இருப்பாங்க.
இத்தனைக்கும் சொத்து நிறைய இருக்கு. இப்படியே நாட்கள் நல்லா போச்சு. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது 20.5 அன்னிக்கி நாகூர் போய்ட்டு வரேம் போனவங்க தான் எல்லாரும் என்று அமைதியி பின் அக்ஸிடட் ஆயிடுச்சி. மவுத் ஆகிட்டாங்க வீட்டுக்கு வந்தது என்று கூறிவிட்டு அழுதாள்.
அவளை ஆறுதலாக அணைத்து கொண்டான் சாகித். சிறிது நேரத்திற்கு பிறகு அப்படியே நாட்கள் நகர்ந்தது. ஐந்து வருஷத்துக்கு அப்புறம் அதாவது நான் டேன்த் படிக்கும் போது என் அப்பா அம்மா கிட்ட இந்த சொத்துக்காக தான் என் அம்மா அப்பா எல்லாரையும் கொன்றேன் என்று சொன்னார் அதை நான் கேட்டு விட்டேன்.
அப்புறம் ரொம்ப நாள் கழித்து தாத்தா ரூம்க்கு போனேன். அங்கே ஒரு டைரி இருந்தது. அதை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
உன் அப்பாவை மாற்றுவது உங்கள் கையில் தான் இருக்கிறது. அவனை திருத்தும் பொருட்டு உன்கிட்டையும் ரஸியா கிட்டயும் ஒப்படைக்கிறேன். அல்லாஹ் துணையோடு நீங்கள் இருவரும் தான் அவனை திருத்தனும். அப்புறம் உன் பெயரில் இது போல் இரண்டு வீடுகள் இருக்கு என்று எழுதி இருந்துச்சு.....