Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93

உயிராதுடிப்பாய் நீ !


அத்தியாயம் 22


திகழொளி கணவனின் செயலில் உறைந்து போய் நின்றாள். அவளின் நிலையைக் கண்டு மிகனோ அவளின் தோள்களைப் பற்றி "திகழி.. திகழி.. ஆர் யூ ஓகே.." என்று கேட்டான்.



மனதிற்குள் ரொம்ப நாளாக இருந்த ஆசையை குழந்தை கேட்டதும், இது தான் சமயம் ! என்று மிகன் திகழொளியின் கன்னத்தில் முதன் முதலாக தன் இதழ் பதித்தான்.



ஆனால் ,திகழொளி அதிர்ந்த நின்றதை கண்டவனுக்கு தன் செயல் அவளுக்கு பிடிக்கவில்லையோ? என்ற பயம் லேசாக தொற்றிக் கொண்டது.



திகழொளி மீது என்ன தான் கோவம் இருந்தாலும், அவள் அவனின் உயிர்! பல முறை அவளை வார்த்தைகளால் காயப்படுத்தினாலும், அவளுக்கும் சேர்த்து அவன் மனதிற்குள் அழுது இருக்கிறான்.



அவளின் துரோகத்தைத் தான் அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. இந்த நான்கு வருடங்களில் 'ஏன் டீ இப்படி செய்தே..? என்று அவன் மனதிற்குள் கேட்காத நாளில்லை..



அவனின் நேசம் என்றாவது அவளைத் தன்னுடன் சேர்த்து வைக்காதா? என்று ஒவ்வொரு நாளும் தவித்து இருக்கிறான்.



அப்படி உயிரையே வைத்திருந்தவளை அருகில் வைத்துக் கொண்டு, தள்ளி இருப்பது அவனுக்கு அனுதினமும் நரக வேதனையைத் தான் கொடுத்தது.



அவளை ஏற்கவும் முடியாமல் ! விலக்கவும் முடியாமல் ! நெருப்பின் மீது நிற்பது போல் ஒவ்வொரு நொடியும் துடிக்கிறான்.



அவள் என்ன தான் சொன்னாலும் அவளை நம்பவும் முடியாமல் ! நம்பாமல் இருக்கவும் முடியாமல் ! தவித்தான்.



காதல் கொண்ட மனம் நம்பத் தான் துடித்தது. ஆனால் ,சாட்சியும் ! சூழ்நிலையும் ! அவளுக்கு எதிராக அவனை நினைக்க வைத்தது.



யாருக்கும் தன் நிலைமை வரக்கூடாது ! என்று ஒவ்வொரு நாளும் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தவனின் நேசம் ! அவனையும் அறியாமல் இன்று கிடைத்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ளச் செய்தது.



ஆனால், மனைவி நின்ற கோலம் கொஞ்சம் அவனுக்குள் பயத்தையும் வரவழைத்தது.




அவள் முன்னே தன் மனதை காட்டிக் கொள்ள விரும்பாமல், தன்னை நிமிர்ந்து பார்த்தவளிடம் " முத்தம் குழந்தைக்காகத் தான்..!" என்றவன் சட்டென்று அறையை விட்டு வெளியே சென்றான்.



ஆனால், அவன் சொன்ன வார்த்தையே அவள் மனைவியைக் காயப்படுத்த போதுமானதாக இருந்தது.



தன் கையிலிருந்த குழந்தையைக் கூட மறந்தவள் கணவன் இதழ் பதித்த இடத்தை மென்மையாக வருடினாள்.


முதல் காதல் ! முதல் முத்தம் ! வாழ்க்கையில் எல்லோருக்கும் என்றுமே மறக்க முடியாத நிகழ்வு . ஆனால், அதை கணவன் விரும்பி கொடுக்காமல் குழந்தைக்காக என்று சொன்னது அவள் ஆசை கொண்ட மனதை வாள் கொண்டு அறுத்தது.



அதன் வலி தாங்காமல் சுற்றுப் புறம் மறந்து அவளையும் மீறி கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக வடிந்தது.



குழந்தையோ, தாய் அழுவதைக் கண்டு பயந்துவிட்டது. "அம்மா ..அழாதே !அழாதே ..!"என்று கண்களை துடைத்து விட்டது.




சரியாக அந்த சமயம் உள்ளே வந்த மிகனின் கண்களில் அந்த காட்சிப் பட்டு தொலைத்தது.



ஏற்கனவே குழம்பி இருந்தவனுக்கு, திகழொளி அதே இடத்தில் நின்று அழுதது ! தான் முத்தம் கொடுத்தது பிடிக்காமல் தான் அழுகிறாள் என்று எப்போதும் போல் தவறாகவே நினைத்தான்.



திகழொளியின் அருகில் வந்து, சட்டென்று அவள் கையிலிருந்த குழந்தையைப் பிடுங்கியவன், எதுவும் சொல்லாமல் குழந்தையை தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியில் சென்றான்.



மகிழினியை மணியரசியிடம் கொடுத்து விட்டு, "நான் கொஞ்சம் வெளியில் போய்ட்டு வரேன் அத்தே .."என்று கூறிவிட்டு, தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான். அவனுக்கு வீட்டுக்குள் இருப்பது மூச்சடைப்பது போல் இருந்தது.



மிகன் குழந்தையைப் பிடிங்கியதும் தான் திகழொளி நிகழ்வுக்கே வந்தாள். அவன் சென்றதும் அப்படியே படுக்கையில் படுத்து தேற்றுவாறற்று அழுது கரைந்தாள்.



தன் கணவனுக்கு சுத்தமாக தன்னை பிடிக்கவில்லையோ? என்று அவளும் தன் பங்குக்கு தவறாகவே நினைத்தாள்.



இருவரும் மனம் விட்டு பேசி இருந்தால் இருவருக்கும் தெளிவு கிடைத்து இருக்கும். பிரச்சினையும் ஒரு முடிவுக்கு வந்து இருக்கும்.ஆனால், இருவருமே அதற்கு முயலவில்லை..



காரணமே இல்லாமல் ஒருவரை ஒருவரை காயப்படுத்திக் கொண்டார்கள்.



திகழொளி அழுதபடியே படுத்து இருந்தவள் அப்படியே உறங்கியும் விட்டாள்.



இரவு உணவுக்கான நேரம் ஆனதும், திகழொளி சாப்பிட கீழே வராமல் இருக்கவும், அவளைச் சாப்பிட அழைக்க சென்ற மணியரசி உறங்கிக் கொண்டு இருந்தவளை மெல்ல தட்டி எழுப்பினார்.



அவளோ, மணியரசி எழுப்பியதும் தூக்க கலக்கத்துடன் எழுந்து அமர்ந்தாள்.



மணியரசியோ, அவளின் அருகில் அமர்ந்து " என்னாச்சும்மா இந்த நேரத்தில் தூங்கிறே..? டைமாச்சு சாப்பிட வாம்மா..!" என்றார்.



"எனக்கு சாப்பாடு வேண்டாம் மணியம்மா .. எனக்கு பசிக்கலே ! ரொம்ப தலைவலிக்குது.."என்றாள்.




"கொஞ்சமாவது சாப்பிட்டுப் படும்மா ! நைட் வெறும் வயிற்றோடு படுத்தால் சரியா தூக்கமும் வராது.தலைவலியும் போகாது.." என்று அவளை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார்.




புண்பட்ட மனதுக்கு அவரின் அன்பான பேச்சு ஆறுதலாக இருந்தது. அவரின் செயல் அவளுக்கு அவளின் தாயை ஞாபகப்படுத்தியது.உடனே அவளின் கண்கள் கலங்கியது.



மணியரசியோ, அவள் கண் கலங்குவதைப் பார்த்து "அச்சோ ! என்னாச்சுமா..?" என்று பதறியபடி கேட்டார்.




அவளோ, "ஒண்ணுமில்லமா ! அம்மா ஞாபகம் வந்துடுச்சு.." என்றவளிடம்..



"ஓ.. நாளைக்கு போய் பார்த்ததுட்டு வா.. குழந்தையாட்டா அதுக்கா கண்ணு கலங்குவாங்க ? "என்றபடி அவள் கண்ணீரை துடைத்து விட்டார்.



அவளோ, மென்புன்னகையுடன் "பாப்பா எங்கே மா..அவ சாப்பிட்டாளா..?"என்று கேட்டவளிடம்..



"இன்னைக்கு நேரமாவே சாப்பிட்டு தூங்கிட்டா மா.."



"ஓ ! அவர் சாப்பிட்டாரா மா..?"என்று கணவனைப் பற்றி அப்போதும் அக்கறையாக கேட்டாள்.



மணியரசியோ, அவளின் கேள்விக்கு , "மிகன் சாயங்கலாம் வெளியில் போனவன் இன்னும் வரலேம்மா.." என்றார்.



ஓ... ! அம்மா அப்போ நீங்க போய் சாப்பிடுங்க..எனக்கு பசிக்கும் போது நான் வந்து சாப்பிட்டுக்கிறேன்.."



"சரி சாப்பிடாமல் படுக்காதே..!" என்றவர் ஒரு பெருமூச்சுடன் சென்றார்.



மணியரசியின் மனசுக்குள் கணவன், மனைவிக்குள் ஏதோ சண்டை போல் என்று சிறு சந்தேகம் உண்டானது ! அவர் வயதுக்கு உரிய அனுபவமும், திகழொளியின் அழுது வீங்கி இருந்த முகமும் அவரைச் சரியாக கணிக்கச் செய்தது.



மிகனோ ,வெளியில் மனம் போன போக்கில் சுற்றிவிட்டு இருட்டிய பின்பு தான் வீட்டுக்கு வந்தான்.



மணியரசியோ, உள்ளே வந்தவனை பார்த்தவுடன் சாப்பிட அழைத்தார்.



அவனோ, எனக்கு பசிக்கலே அத்தே..பாப்பா சாப்பிட்டாளா? என்ன செய்யறா ..?என்றான்.



"அவ சாப்பிட்டு அப்பவே தூங்கிட்டா.. ஆமாம் அது என்னப்பா ? புருசன், பொண்டாட்டி இரண்டு பேரும் ஒரே போல் பசிக்கலேங்கிறீங்க.."என்றபடி அவனைப் கேள்வியாகப் பார்த்தார்.



"ஏன் திகழி சாப்பிடலையா..?"



"ஆமாம் . சாப்பிடக் கூப்பிட்டதற்கு பசிக்கலே மா வேண்டாம்ங்கிற.."



"ஓ..! "என்றவன் எதுவும் பேசாமல் யோசனையுடன் நின்றான்.



பேசாமல் நின்றவனிடம் மணியரசியோ, "மிகன் நான் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ.. ! திகழி உன்னை நம்பி வந்தவ.. நீதான் அவளை அனுசரித்து நடந்துக்கனும் ! அவளுக்கு சிலது தெரிஞ்சும், தெரியாமலும் இருக்கும். நீ தான் பா பொறுத்து போகனும். உன்னையே நம்பி வந்தவளே அழுக வைக்காதேப்பா..போகப் போக எல்லாம் சரியாய்டும்.." என்றவரிடம்..




"அத்தே நான் எதுவும் செய்யலே.."



அவன் சொன்னதைப் பொருட்படுத்தாமல் , "மிகன் எங்க மூன்று பேரின் நம்பிக்கையே நீ தான் பா ! நீ நல்லா வாழ்ந்தா தான் நாங்க நிம்மதியா இருக்க முடியும். இந்த குடும்பம் பட்டது எல்லாம் போதும். பழசை மறந்துட்டு புதுசா உன் வாழ்க்கையை தொடங்குப் பா ! அது தான் எல்லாருக்கும் நல்லது.." என்றார் வருத்தத்துடன்.



அவனோ, எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றான்.



மணியரசியோ, "நான் சொல்வதைச் சொல்லீட்டேன் .அப்புறம் உங்க இஷ்டம்.." என்றவர்.. இரண்டு பேருக்கும் உணவை ஹாட் பேக்கில் வைத்து அவனிடம் கொடுத்து.. "எத்தனை நேரமானாலும் , இரண்டு பேரும் ஒழுங்கா சாப்பிட்டு தூங்குங்க..!" என்றபடி உணவை அவன் கையில் திணித்தார்.



மிகனோ, தலையை மட்டும் ஆட்டிவிட்டு அவர் கொடுத்த உணவை எடுத்துக் கொண்டு அவர்கள் அறைக்குச் சென்றான்.




மணியரசி பேசியதில் யோசனையுடன் வந்தவனின் கண்களில் அழுது வீங்கிய முகத்துடன் படுத்திருந்த மனைவி தான் தென்பட்டாள்.



ஏற்கனவே சிறு கோவத்தில் இருந்தவனுக்கு இந்த காட்சி மேலும் கோவத்தைக் கூட்ட உணவை மேஜை மீது வைத்து விட்டு அவள் அருகில் சென்று "திகழி எழுந்திரு !" என்றான் கட்டுக்கடங்காத கோவத்துடன்.




கணவனின் குரலில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவளிடம்.."ஏன் டீ அப்படி நான் உன்னே என்ன செய்துட்டேன்.இப்படி மூஞ்சி வீங்கிற அளவு அழுது வச்சு இருக்கே..இந்தளவு வெறுப்பு இருந்தா எதுக்கு டீ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டே..?" என்றான் வழக்கம் போல் தவறாகவே புரிந்து கொண்டு..




அவளோ, மிகன் என்னாச்சு "ஏன் இப்படி பேசறீங்க..?நான் தலைவலின்னு தான் படுத்து இருந்தேன்.."



"பொய் சொல்லாதே ! அத்தைக்கு தெரியும் அளவு அழுது இருக்கே.."



"இல்லே மிகன்.."



"பேசாதே ! நீ எதுவும் சொல்லாதே ! உன்னைப் பத்தி தான் எனக்கு நல்லாத் தெரியுமே ! ஏன் டீ என் வாழ்க்கையில் திரும்பவும் வந்தே..?என்னை உயிரோடு கொள்ளவா? நான் நிம்மதியாகவே இருக்க கூடாதா..?" என்று அவளைப் பற்றி உலுக்கி எடுத்தான்.



அவளோ, செய்வது அறியாமல் கல்லாக நின்றாள்.



"நான் என்ன டீ பாவம் செய்தேன்.உன்னை மனதார நேசித்ததை தவிர வேறு எதுவும் செய்யலையே..நான் தொட்டது பிடிக்கலைன்னா அப்பவே சொல்லி இருக்க வேண்டியது தானே.? உன் பக்கமே வந்து இருக்க மாட்டேனே..வலிக்குது டீ இங்கே உயிர் போற மாதிரி வலிக்குது டீ .."என்று தன் நெஞ்சை தொட்டு காட்டீனான்.



அவன் முகமோ ! சொல்ல முடியாத வேதனையை சுமந்திருந்தது.




அவளோ, எதுவும் பேசாமல் அவனை கண்களில் நீர் தேங்கிய விழியுடன் பார்த்தாள்..



அவள் பார்வையை எதிர் கொண்டபடி "என் உயிருக்கு மேல் உன்னை நேசித்தேனே..!" என்றவனிடம்..


"நானும் தான் என் உயிரை விட உங்களை நேசித்தேன். ஆனால், இதுவரை என்னை நீங்க நம்புனீங்ளா?ஒரே ஒரு முறை என்ன நடந்தது என்று இன்றுவரை என்னிடம் கேட்டீங்களா? நீங்களாகவே எதையோ நம்பிட்டு என்னை குற்றவாளி ஆக்கி தீர்ப்பும் வழங்கிட்டீங்க..குற்றவாளிக்கு கூட தன் பக்க நியாயத்தைச் சொல்ல ஒரு வாய்ப்பு கொடுப்பாங்க.ஆனால் நீங்க இன்று வரை என்னையே குற்றவாளி ஆக்கிட்டீங்க .."என்றவளிடம்..

"உன்னை நம்பத்தான் என் மனம் ஆசைப்படுகிறது! ஆனால், உன்னால் ஒரு உயிர் போச்சே அதுக்கு என்ன டீ சொல்லறே..?"




"நீங்க எத்தனை முறை பொய்யை உண்மையாக சொன்னாலும், அதற்கும் எனக்கும் ஒரு துளி கூட சம்பந்தமில்லை..என்னைக்கு என்ன நம்புவீங்களோ! அப்போ நம்புங்கோ..! அப்புறம் நீங்க கிஸ் பண்ணியதற்கு நான் அழுகலே ..குழந்தைக்காக பண்ணுனேன்னு சொன்னீங்களே ? அதுக்குத் தான் அழுதேன். உங்களுக்கு அவ்வளவு என்ன பிடிக்காமல் போச்சான்னு.."என்றவளை வியப்பாக பார்த்தான் அவளின் நாயகன்.




அவளோ ,தன்னை வியந்து பார்த்தவனிடம் "என் மனசில் நேசத்தை முதன் முதலாக விதைத்தவர் நீங்க தான்.அன்றும் சரி இன்றும் சரி என் மனசில் நீங்க மட்டும் தான் இருக்கிறீங்க..என் உயிர் உள்ளவரை நீங்க மட்டும் தான் இருப்பீங்க..உங்களுக்கு எப்போ என் மேல் நம்பிக்கை வருதோ ! அப்போ வரட்டும்.."என்றவள் சட்டென்று அவன் எதிர்பாராத நேர்ததில் அவன் உயரத்திற்கு எம்பி அவன் கன்னங்களில் தன் பட்டு இதழ்களை முதன் முதலாக பதித்தாள்.



அவனோ, அவளின் செயலில் உறைந்து போய் நின்றான். அப்படியே அசையாமல் கிரேக்கச் சிலையாக நின்றவனிடம் "குழந்தைக்காக கொடுத்த முத்ததத்தை நீங்களே வச்சுக்கோங்க.உங்களுக்கு புடிச்சு எப்போ எனக்காக கொடுக்குறீங்களோ! அப்போ இந்த முத்தத்தை நான் பொக்கிஷமா எனக்குள் வச்சுக்குறேன்..முதல் முத்தமும்! முதல் காதலும்! என்றுமே பொக்கிஷம் தான் ..! "என்றவள் அவனின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் படுக்கையில் படுத்து கண்களை இறுக மூடிக் கொண்டாள்.



அவனோ, மனைவியின் வார்த்தையிலும் செயலிலும் அளவிடமுடியாத ஆனந்தத்தில் இறக்கை இல்லாமல் பறந்தான்.மனம் முழுவதும் சொல்ல முடியாத நிம்மதியோ மகிழ்ச்சியோ அவனை

ஆட்கொண்டது.அதை அனுபவித்த படி அவனும் விளக்கை அணைத்து விட்டு படுக்கையில் அவளின் மறு புறம் படுத்தான்.




இருவரும் கண்களை மூடி படுத்திருந்தாலும் இருவரின் நினைவிலும் ஒருவரை ஒருவர் முதல் முதலாக பார்த்துக் கொண்ட நிகழ்வு தான் நிழலாடியது.அவர்களின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.



மணியரசி கொடுத்த உணவு உண்ணாமலேயே வீணானது.

படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. அடுத்த யூடி சனிக்கிழமை.

அன்புடன்
இனிதா மோகன்
















 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
Thigazhi Pidikama thirupi kodutha kiss mathiri theriyalaiye....pidichadhala thaan kiss panninala😜😜🎂next ud fb start aaguma 🤔 nice intresting ud sis ❤️
Yes dear💗 Thank you dear 😘..
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93

உயிர் துடிப்பாய் நீ!


அத்தியாயம் 23


மாலை மயங்கும் நேரத்தில்! இளமஞ்சள் நிறக் கதிர்களை ஆதவன் அள்ளி இறைக்கும் வேளையில் ! திகழொளி தனது பட்டுப் பாவடையை மடித்து அமர்ந்து ,தங்கள் வீட்டு வாசலில் அழகான ரங்கோலிப் போட்டுக் கொண்டு இருந்தாள்.




அருகில் அவளின் ஆரூயிர் தம்பி அமுதன் அவள் வரைந்து முடித்த வளைவு, நெளிவுகளுக்கு வண்ணப் பொடிகளைத் தூவிக் கொண்டு இருந்தான்.




அன்று கார்த்திகை தீபம்! மாலையில் தீபம் வைப்பதற்காக கடந்த ஒரு மணி நேரமாக வாசலில் கால் வலிக்க தன் திறமை எல்லாம் கோலத்தில் காட்டிக் கொண்டிருந்தாள் திகழொளி !



திகழொளிக்கு கோலம் போடுவது என்பது மிகவும் பிடித்த விஷயம்! அழகழகாய் போடுவாள்.அதுவும் மிகவும் ரசித்துப் போடுவாள்.




இன்றும் அது போல் தன்னை மறந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தவளை, அவளின் தாய் பொன்னி அழைத்தார்.




"திகழி கோலம் போட்டது போதும் வா..இந்த விளக்குகளுக்கு எல்லாம் திரி போட்டு எண்ணெய் ஊற்று..அக்காளும், தம்பியும் கோலத்துக்கிட்டேயே உட்கார்ந்துட்டா ! மத்த வேலை எல்லாம் யார் செய்வா ?போதும் வாங்க.."




"அம்மா கொஞ்சம் இருங்கம்மா ..முடிக்கப்போறேன்! முடிச்சுட்டு வந்தறோம் .."




"எத்தனை நேரம் தான் கோலம் போடுவே? போதும் வா திகழி..!" என்றபடி வீட்டுக்குள் இருந்தபடியே சத்தம் போட்டார்.




எதிர் வீட்டுப் பேச்சு சத்தத்தைக் கேட்டு மிகன் தன் அறையின் சாளரத்தின் வழியாக எதிர் வீட்டைப் பார்த்தான்.




நேற்றுத் தான் புது வீட்டிற்கு குடி வந்தார்கள்..அவனுக்கு சாமானங்களை ஒழுங்கு படுத்தவே நேரம் சரியாக இருந்தது.




மிகனின் அத்தை மகன் நீரன் மதியம் வேலை இருக்கிறது என்று வெளியில் போனவன் இன்னும் வரவில்லை..



காலையிலிருந்து வேலை செய்து களைத்துப் போயிருந்தவனுக்கு,எதிர்வீட்டு வாசலில் கேட்ட சின்ன பெண்ணின் குரல் வெளியில் சென்று பார்க்க அவனைத் தூண்டியது.



எழுந்து சென்று சாளரத்தின் வழியில் பார்த்தவனுக்கு,

அங்கு பச்சைக் கலர் பட்டுப் பாவாடை சட்டையில், இரண்டு ஜடை பின்னி தலை நிறைய மல்லிகைப் பூவுடன் தங்கள் வீட்டைப் பார்த்தபடி குனிந்து கோலம் வரைந்து கொண்டிருந்த சின்னப் பெண்ணைக் கண்டான்.




குனிந்து கோலம் போடுவதற்கு இடைஞ்சலாக தன் முன்னால் விழுந்த பின்னலையும் ,தொங்கிக் கொண்டிருந்த பூவையும் சிறு எரிச்சலுடன் நிமிர்ந்து பின்னால் தூக்கிப் போட்டாள்.



ஏனோ, மிகனுக்கு அந்த சிறு பெண்ணைப் பார்த்தவுடன் மிகவும் பிடித்து விட்டது.பார்க்கப் போனால் ஒன்பதாவதோ, பத்தாவதோ படிக்கும் பெண் போல தான் தெரிந்தாள்.



அவள் அருகில் அமர்ந்து கோலத்திற்கு வண்ணம் கொடுத்துக் கொண்டிருந்த சிறுவனிடம் இந்த கலர் கொடு! அந்த கலர் கொடு! என்று சொல்லிக் கொண்டே தன் வேலையிலும் கவனமாக இருந்தாள்.




அவள் வரைந்திருந்த கோலம் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல் அத்தனை அழகாக இருந்தது.



கோலத்தை முடித்தவுடன் அக்கா, தம்பி இருவரும் வீட்டீற்குள் சென்று விட்டனர்.




ஆனால், மிகனுக்கோ அவளைப் பார்த்த பின் அந்த சாளரத்தை விட்டு நகர முடியவில்லை..



கல்லூரியில் படிக்கும் அவன் எத்தனையோ பெண்களை கடந்து வந்து இருக்கிறான்.ஆனால் ஏனோ இந்தப் பெண் அவனைப் பெரிதும் ஈர்த்தாள்.




அவள் மீண்டும் எப்போது வெளியில் வருவாள் ? என்று எதிர்பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தான்.




மாலை லேசாக இருட்டத் தொடங்கியதும்.அவனை அதிகம் காத்திருக்க வைக்காமல் அவள் கார்த்திகை தீபங்களுடன் வெளியில் வந்தாள்.



தீபங்களுடன் அவளைப் பார்க்கும் போது அவள் அவனுக்காகவே வந்த அழகு தேவதையாக தெரிந்தாள்.



வீட்டின் சுற்றுச் சுவர் மீதும், வீட்டின் படி ,மாடிப்படி என்று அவள் தம்பியுடன் அவள் தீபம் வைக்கும் அழகை அவளுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.




கடைசியாக கோலத்தில் தீபம் வைத்து முடித்தவளிடம் ‌ அவளுடைய தாய் பொன்னி தட்டு நிறைய பலகாரங்களைக் கொடுத்து "திகழி இதை எதிர்வீட்டு ஆண்டியிடம் கொடுத்துட்டு வாம்மா.." என்றார்.




எதிர் வீட்டில் புதிதாக குடி வந்திருந்த அந்த வீட்டம்மா மணியரசி பொன்னியை பால் காய்ச்ச அழைத்திருந்தார்.



பொன்னியும் அழைப்பை ஏற்றுச் சென்றார்.


வீட்டிற்கு வந்தவரை மணியரசி அன்பாக உபசரித்து, இனிமையாகவே பேசிப் பழகினார்.



பொன்னிக்கும் அவரை மிகவும் பிடித்து விட நேற்றிலிருந்து அவருக்கு தேவையான சின்ன சின்ன உதவிகளை செய்து கொடுத்தார்..



இப்போது கார்த்திகை தீபத்திற்கு செய்த பலகாரத்தை அவர்களுக்கு கொடுத்து வரும் படி மகளை ஏவினார்.




திகழொளியும் "சரிம்மா.." என்றவள், தட்டை வாங்கிக் கொண்டு எதிர் வீட்டை நோக்கி நடந்தாள்.




மிகனோ, சாளரத்தின் வழியாக அதை பார்த்தவன், அவள் தங்கள் வீட்டிற்குள் வருவதற்கு முன் இரண்டு, இரண்டு படிகளாக தாவி மாடிப்படிகளில் இறங்கியவன், வாசலிலேயே அவர்களை எதிர் கொண்டான்.




வீட்டிற்குள் வந்த அக்காவும், தம்பியும், நெடுநெடுவென எதிரில் நின்ற ஆடவனைப் பார்த்ததும், அப்படியே தயங்கி நின்றனர்.



மிகனோ, அவர்களின் தயக்கத்தைப் பொருட்படுத்தாமல் "வாங்க என்ன விஷயம் சொல்லுங்க .."என்றான் பெரிய மனுஷன் தோரணையில்..




அவளோ, தயங்கியபடி .."அம்மா பலகாரம் கொடுத்துட்டு வரச்சொன்னாங்க..அது தான் உங்க அம்மா கிட்ட இதை கொடுக்க வந்தோம்.." என்று பலகாரத் தட்டை நீட்டீனாள்.




மிகனோ ,அதை வாங்காமல் பேச்சு கொடுக்கும் பொருட்டு "ஆமாம் உங்க பேர் என்ன..?என்றவனிடம்..



தயங்கியபடியே "என் பேர் திகழொளி! இது என் தம்பி அமுதன்..!"



'திகழொளி' என்று மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.அழகான தமிழ் பெயர் என்று எண்ணினான்.


"ம்..என்ன படிக்கிறீங்க..?"என்று தொடர்ந்து பேச்சை வளர்த்தான்.



"நான் டென்த்! இவன் சிக்ஸ்த் ..!"



"ஓகே.. என்றவன் 'நாம் நினைத்தபடி இவள்‌ டென்த்து தான் படிக்கிறாள்' என்று சிந்தித்தவன்.



அவளிடம்"அத்தை உள்ளே தான் இருக்காங்க.. போய் நீங்களே கொடுத்துடுங்க.." என்றபடி வீட்டிற்குள் போக வழி விட்டான்.



"ம்..!" என்று தலையாட்டியபடி இருவரும் உள்ளே சென்றார்கள்..




மணியரசியோ, அவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக வரவேற்று அன்போடு பேசினார்.



இவர்கள் கொடுத்த பலகாரத்தை வாங்கிக் கொண்டு அவர் செய்த இனிப்புகளையும் கொடுத்தார்.



திகழொளியோ, அதைப் பெற்றுக் கொண்டு "ஏன் ஆண்டி நீங்க தீபம் வைக்கலையா..?" என்று கேட்டாள்.



அவர்கள் வீட்டில் இன்னும் தீபம் வைக்காததைக் கண்டு..



"இதோ, இனிமேல் தான் வைக்கனும் மா.. நான் ஒருத்தியே எல்லா வேலையும் செய்துட்டு இருந்தேனா.. கூடவே இந்த சாமானங்களையும் ஒதுக்கி வச்சுட்டு இருந்தேன். அது தான் நேரம் ஆகிடுச்சு.."




"ஓ..!ஏன் ஆண்டி உங்க வீட்டில் அக்கா எல்லாம் இல்லையா..?"



அவரோ, சிரித்தபடி "எங்க வீட்டில் இரண்டு பெரிய பசங்க தான் இருக்காங்க..அவங்க எங்க இந்த வேலை எல்லாம் செய்யப் போறாங்க."



"ஓ..! நான் வேணா தீபம் வைக்கட்டுமா? நீங்க ஏத்தி கொடுக்குறீங்களா.."



"ஓ...வைம்மா ! எனக்கும் ரொம்ப உதவியாக இருக்கும்.."என்றவர்..

தீபங்களை அவளிடம் எடுத்து கொடுத்தார்.



அவர் கொடுத்த பலகாரத்தட்டை மேஜை மீது வைத்து வீட்டு தீபங்களை வாங்கிக் கொண்டாள்.



அக்காளும் ,தம்பியும் மறுபடியும் தீபம் வைக்கும் வேலையில் இறங்கினார்கள்..



மிகனோ ,என்றுமில்லாமல் அன்று அவர்களோடு அவனும் சேர்ந்து கொண்டான். அவர்களுடன் அவன் பேசியபடியே அவர்களுக்கு உதவினான்.




"உங்க பேர் என்ன அண்ணா ..?என்று அமுதன் கேட்கவும் "மிகன்..!" என்று கம்பீரமாக சொன்னான்.




திகழொளியோ, 'மிகன்' அழகான பெயர் என்று தன் மனசுக்குள் நினைத்துக் கொண்டாள்.




மிகனுடன் அக்காவும், தம்பியும் அண்ணா !அண்ணா !என்று நன்றாகவே ஒட்டிக் கொண்டார்கள்.




அவர்கள் தீபம் எல்லாம் வைத்து முடித்ததும்

மணியரிசியிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்கள்.



மணியரசியோ, "இருவருக்கும் ரொம்ப நன்றிம்மா.. இன்னைக்கு உங்க கூட சேர்ந்து மிகனும் தீபம் வச்சுருக்கான்..இந்தாம்மா இந்த பலகாரத்தை அம்மாவிடம் கொடுத்துடுங்க..!" என்றபடி பலகாரத்தை கொடுத்து விட்டார்.



இருவரும் அதைப் பெற்றுக் கொண்டு அவனைப் பாரத்து சிரித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.




மிகன் அவர்களுடன் வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தான்.



திகழொளி போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.



அவர்களுடன் நேரம் செலவழித்தது மிகனுக்கு மிகவும் பிடித்து இருந்தது.



அவன் மனசுக்குள் உற்சாகம்‌ பீறீட்டது.

திகழொளி மீது அவனையும் அறியாமல் பெரும் ஈர்ப்பு உண்டானது.



மனதிற்குள் சொல்ல முடியாத ! இனம் புரியாத! புது உணர்வு அவனை தொற்றிக் கொண்டது. மனம் முழுவதும் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.




ஆனால் அவள் 'அண்ணா' என்று அழைத்தது மட்டும்‌ ஏனோ‌ அவனுக்கு நெருடலாகவே இருந்தது.'இனிப் பேசினால், அண்ணான்னு சொல்லாதேன்னு அவ கிட்ட சொல்லனும்' என்று‌ கமனதிற்குள் நினைத்துக் கொண்டான்.




இருவரும் தங்கள் வீட்டிற்குள் வந்ததும் மணியரசி கொடுத்தனுப்பியிருந்த பலகாரத்தை தாயிடம் கொடுத்துவிட்டு ,

மணியரசி பாசமாக தங்களிடம் பேசியதை தன் தாயிடம் கூறினார்கள்.




அப்போது தான் வேலையிலிருந்து வந்திருந்த அறவாணன் தன் பசங்களைப் பார்த்ததும் "இத்தனை நேரம் எங்கே டா போய் இருந்தீங்க..?"என்று கேட்டார்..



பிள்ளைகள் இருவரும் எதிர்வீட்டுக்கு போன கதையை தந்தையிடம் சொன்னார்கள். "அங்கே இரண்டு அண்ணாக்கள் தான் இருக்காங்க அப்பா

." என்று மகள் கூறியதை ஆமோதிப்பது போல் ..



கணவரிடம் பொன்னி "ஆமாங்க அந்த அம்மாக்கு ஒரு பையன் தான்.இன்னொரு பையன் அவங்க அண்ணன் பையன் . அந்த பையனின் அம்மா சிறுவயதிலேயே இறந்துட்டாங்களாம்.."



"ஓ..அப்படியா !' என்ற கணவரிடம்.



"ஆமாங்க, அதனால் தான் அவங்க அண்ணன் பையன் தாய் இல்லாமல் கஷ்டப்படக்‌ கூடாதுன்னு இவங்களும் அண்ணன் கூடவே வந்துட்டாங்க.. இரண்டு பசங்களையும் தன் மகனாட்டமே பார்த்துக்கிறாங்க.."



"ஓ..!அப்ப அந்த உயரமான அண்ணாக்கு அம்மா இல்லையா மா.. ?பாவம்!" என்ற மகளிடம்..



"ஆமாம் பாவம் தான்..! அம்மா இல்லைன்னாத் தான் அம்மா அருமை தெரியும். உங்களுக்கு எப்பவாவது என்‌அருமை தெரியுதா.

?"என்று குழந்தைகளிடம் குறை பேசிய மனைவியிடம்..




"பொன்னி குழந்தைங்ககிட்ட‌ இது என்ன பேச்சு! அவர்கள் எப்போ உன் பேச்சை கேட்காமல் நடந்து இருக்காங்க..!"



"ஹப்பா மகளை ஏதாவது சொன்னா உங்களுக்கு கோவம் பொத்துட்டு வந்துடுமே ..'



"ஆமாம் ,அவ என் பிள்ளை! என் பிள்ளை எப்போதும் எந்த தப்பும் செய்ய மாட்டா. அவளை ஏதாவது குறை சொன்னே! எனக்கு கெட்ட கோவம் வரும்.."



"ம்ஹூம்! உங்க மகளை நான் ஒண்ணும் சொல்லலே சாமி..சரி வாங்க டிபன் எடுத்து வைக்கிறேன்..சாப்பிடலாம்.."என்றபடி பொன்னி சமயலறைக்குள் சென்றாள்.




திகழொளியோ, மிகனை நினைத்து யோசனையாகவே இருந்தாள்.



மகளின் முகத்தைப் பார்த்து "என்ன டா தங்கம்? இந்த குட்டி மண்டைக்குள்ளே பயங்கர யோசனை.." என்று அவளின் தலையை தடவியபடி கேட்ட தந்தையிடம்.



"ஏம்பா அந்த அண்ணா பாவம் தானே! அம்மா இல்லைன்னா ரொம்ப கஷ்டம் இல்லை யாப்பா..?"



"ம்..கஷ்டம் தான்..!நீ அதை எல்லாம் போட்டு குழப்பிக்காமல் அம்மா சாப்பிடக் கூப்பிட்டாங்களே போய் சாப்பிடலாம் வா.!இல்லைன்னா அம்மா சாமி ஆடிடுவா.." என்று மகளைச் சாப்பிட அழைத்தார்.



அவருக்கு மகளைப் பற்றி நன்கு தெரியும்..! அவளிடம் அதைப்பற்றி ரொம்ப பேசினால் , மனசுலே அதையே நினைத்து குழப்பிக்குவான்னு , பட்டும் படாமல் பதில் சொன்னார்.




திகளொழிக்கோ , மனதிற்குள் ஏனோ மிகனின் மீது ஒரு பரிதாபம் உண்டானது. மிகனைப்பற்றியே நினைவே அவள் மனதை நிரப்பி இருந்தது.






அதன் பிறகு வந்த நாளில் மிகன் திகழொளியைப் பார்க்கும் போது எல்லாம் மென்புன்னகை புரிவான்.



திகழொளியின் ஒவ்வொரு செயலையும் அவன் மிகவும் ரசிக்க ஆரம்பித்தான்.

சாளரம் தான் அவனின் உற்ற தோழன் ஆனது..கல்லூரி முடிந்து வந்தாலே சாளரத்தின் அருகில் தஞ்சம் கொள்வான்.



அவள் பெரும்பாலும் அவர்கள் வீட்டு வராண்டாவில் அமர்ந்து தான் படிப்பாள்.

தன் தம்பிக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு அவளும் படிப்பாள்.



விளையாடினாலும் அங்கே அமர்ந்து தான் விளையாடுவார்கள்.



மிகன் வீட்டு சாளரத்தில் இருந்து பார்த்தால் அவர்கள் வீட்டு வராண்டா நன்றாகத் தெரியும்..




அவனையும் அறியாமல் அவன் மனதிற்குள் திகழொளி ஆழமாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தாள்.




திகழொளிக்கு மிகனின் மீது இருந்த பரிதாபம் பாசமாக மாறியது .. அவனின் புன்னகை அவளுக்கு நாள்தோறும் புது உற்சாகத்தைக் கொடுத்தது.




அதுமட்டுமின்றி அவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவள் மனம் விரும்பியது. மற்றபடி அவளுக்கு வேறு எந்த எண்ணமும் அப்போது தோன்றவில்லை..



இருவருக்கும் நாட்கள் தொய்வில்லாமல் அழகாக நகர்ந்தது.



இருவரும் அதிகம் பேசிக் கொள்ளாவிட்டாலும் பார்த்துக் கொண்டால் ஒரு சின்ன புன்னகையைப் பரிமாறிக் கொண்டார்கள்.

மிகனுக்கு அதுவே அப்போது போதுமானதாக இருந்தது.



மிகனின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை அவனுடைய அத்தை மகன் நீரன் மட்டும் கண்டு கொண்டான்.



அதைப்பற்றி நீரன் விசாரித்த பொழுது மிகன் எதையும் சொல்லாமல் மழுப்பி விட்டான்.



தன் அத்தையுடன் நீரன் இவர்கள் வீட்டிற்கு வந்ததில் இருந்து மிகன் நீரனை தன் உடன்பிறந்தவனாகவே எண்ணினான்..



நல்ல நண்பர்களாகவே இருவரும் இருந்தனர்.



ஆனால், அது எல்லாம் கல்லூரி படிப்புக்குள் நுழைந்த பின் இருவரிடமும் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி அதிகரித்தது.



மிகன் பொறியாளர் படிப்பைத் தேர்ந்தெடுத்தான். அவனின் மதிப்பெண்ணுக்கு எளிதாகவே அவனுக்கு நல்ல பொறியாளர் கல்லூரியில் இடம் கிடைத்தது.



நீரன் கலைக் கல்லூரியில் (பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி) இளங்கலை வேதியியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தான்.




அதனால் இருவரும் வேறுவேறு கல்லூரிக்குச் சென்றனர்.



கல்லூரிக்கு சென்ற பின் நீரனின் நடவடிக்கைகள் மெல்ல மெல்ல மாறியது..மிகனுக்கே தெரியாமல் பல கெட்ட பழக்கங்களையும் கற்றுக் கொண்டான்..அவன் பழக்க வழக்கங்கள் , குணம் எல்லாமே மாறியது.



ஆனால் இது எதுவுமே மிகனுக்கு அப்போது தெரியவில்லை..அவன் அவனை நல்ல தோழனாகவே எண்ணினான்.



ஏன் இன்றுவரையுமே அவனை நம்புகிறான்.



மிகன் மட்டும் நீரனை சரியாக அப்போதே கண்டு கொண்டிருந்தால் ,பின்னால் வருப் போகும் பல பிரச்சினைகளைத் தடுத்து இருக்கலாம்.



எதுவுமே நம் கையில் இல்லையே..


தொடரும்



அடுத்த யூடி புதன்கிழமை.. படித்து விட்டு உங்கள் கருத்துகளை கீழே உள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

அன்புடன்
இனிதா மோகன்


















 

Girija priya

Member
Messages
31
Reaction score
31
Points
18
Neeran yedho Kuzhappam pannitu poyi sernthutans 🤔neeran sonnadha vachi thigazhi mela kovama irrukan migan🤔 Nice interesting ud sis ❤️
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
Neeran yedho Kuzhappam pannitu poyi sernthutans 🤔neeran sonnadha vachi thigazhi mela kovama irrukan migan🤔 Nice interesting ud sis ❤️
Thank you dear ❤️❤️❤️
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93

உயிர் துடிப்பாய் நீ!


அத்தியாயம் 24



காலமும் ,நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதற்கு ஏற்ப.. திகழொளி எதிர்பார்த்திருந்த அவளுடைய பொதுத்தேர்வும் வந்தது.




இரண்டு தேர்வு முடிந்த நிலையில் அடுத்த தேர்வான கணக்கு பாடத்தில் அவளுக்கு ஒரு சந்தேகம் வந்தது. இதுவரை அவள் எந்த பயிற்சி வகுப்புகளுக்கும் போகாமல் அவளே தான் படித்து வந்தாள்.



அதனால் , இப்போது என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு ஆபத்பாந்தவனாக மிகன் தான் நினைவுக்கு வந்தான்.



உடனே தன் தம்பியிடம் தனக்கு சந்தேகம் வந்த கணக்குப் பாடத்தை, குறித்துக் கொடுத்து மிகனிடம் அனுப்பி கேட்டு வரச் சொன்னாள்.




மிகனோ, அதை வாங்கிப் பார்த்தவன், பாடத்தை அமுதனிடம் சொன்னால் அவனுக்கு புரியாது என்று நினைத்து, அவனே திகழொளி வீட்டிற்கு வந்தான்.



திகழொளி ,எப்போதும் போல் வரண்டாவில் அமர்ந்து இருந்தாள்.



மிகனோ, அவள் அருகில் வந்து அமர்ந்து "உனக்கு இதில் என்ன சந்தேகம் ..?அமுதன் கிட்ட கொடுத்து அனுப்பி இருக்கே? உன் பாடம் அவனுக்கு எப்படி புரியும் ?நீயே வந்திருக்கலாம் தானே !" என்றான்.



அவளோ, "நீங்க போட்டுக் கொடுத்தா ! அதைப் பார்த்து புரிந்து கொள்ளலாம் எனறு நினைத்தேன்.." என்றாள்.



"கணக்குப் பாடம் போட்டு கொடுத்தால் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் புரியாது..சொல்லிக் கொடுக்கனும்.." என்றபடி அவள் சந்தேகமாக கேட்ட கணிதப் பாடத்தை, அவளுக்கு புரியும் படி எளிமையாகவும், பொறுமையாகவும் சொல்லிக் கொடுத்தான்.



திகழொளிக்கு மிகன் பாடம் சொல்லிக் கொடுத்தது ரொம்பவே பிடித்து இருந்தது. அத்தனை அழகாக ! எளிதில் புரியும் படி சொல்லிக் கொடுத்தான்.



அதன் பிறகு வந்த மற்ற தேர்வுகளுக்கும் மிகனே, திகழொளிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தான்.



பெரியவர்களும் எந்த தடையும் சொல்லாததால் திகழொளிக்கு மிகனே தொடர்ந்து பாடம் சொல்லிக் கொடுத்தான்.



இருவரும் நெருங்கிப் பழகினாலும் அதில் நட்பைத் தாண்டி வேறு எதுவும் இருக்கவில்லை..



மிகன் மிகுந்த கண்ணியதுடன் தான் நடந்து கொண்டான். அவளுடன் செலவிடும் நேரங்கள் அவனுக்கு இனிமையான உணர்வை கொடுத்தது..



அவன் மனதில் அவள் ஆழமான நேசத்தை அவளையும் அறியாமல் விதைத்தாள்.



தன் ஆசையை மிகன் அவளிடம் சிறு துளி அளவு கூட காட்டிக்கொள்ளாமல் தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டான்.படிக்கும் பெண்ணின் மனதில் நாம் எந்த வித சின்ன சலனத்தைக் கூட ஏற்படுத்தக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் நடந்து கொண்டான்.



திகழொளிக்கோ ,மிகனின் பார்வை ! பேச்சு ! எல்லாமே அவளுள் அவன் மீது அளவு கடந்த மரியாதையைக் கொடுத்தது.




ஆனால் ,எல்லாரும் மிகனைப் போலவே இருந்து விடமாட்டார்களே..!




மிகனை எந்த அளவு பிடித்து இருந்ததோ! அதற்கு எதிர்பதமாக நீரனைக் கண்டாலே அவளுக்கு சுத்தமாக பிடிக்காமல் போனது.



நீரனின் பார்வை ,நடத்தை, செயல் எதுவுமே அவளுக்கு பிடிக்கவில்லை..அவன் இருந்தாலே அந்த இடத்திற்கு திகழொளி வரமாட்டாள்.



மிகனிடம் ஆசையாக பேசுபவள் ! நீரனைக் கண்டால் பேயைக் கண்டதைப் போல் ஒதுங்குவது யாருக்கு புரிந்ததோ? இல்லையோ? நீரனுக்கு அது நன்றாகவே புரிந்தது. அவன் மனதிற்குள் பொறாமை தீ பற்றி எரிந்தது.




இது எதுவும் தெரியாமல் மிகனும், திகழொளியும் பழகி வந்தனர்.



திகழொளியின் பொதுத்தேர்வு முடிவும் வந்தது..திகழொளி நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தாள்.



திகழொளியின் பெற்றவர்கள் அளவு மிகனுமே அதிகமாக மகிழ்ந்தான்.



மிகனின் ஆலோசனைப் படி பதினொன்றாம் வகுப்பு பாடத்தை திகழொளி தேர்வு செய்து, அதே பாடப்பிரிவிலும் சேர்ந்து படித்தாள்.



பாடத்தில் எந்த சந்தேகம் வந்தாலும் ,மிகனே அவளுக்கு தீர்த்து வைப்பான்..அவர்களின் நட்பு நாளுக்கு நாள் வளர்பிறை போல் வளர்ந்தது.




மிகன் மனதில் திகழொளி மீது இனம் புரியாத உணர்வு இருந்தாலும், அவன் அதை அவளிடம் காட்டிக் கொண்டதே இல்லை.. மிகுந்த பக்குவத்துடன் நடந்து கொண்டான்.



எதுவாக இருந்தாலும் அவள் படிப்பு முடியும் வரை அவளிடம் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.




திகழொளிக்கோ, மிகன் மீது நட்பைத் தாண்டி வேறு எந்த உணர்வும் அப்போதைக்கு தோன்றவில்லை..அவனை ரொம்ப பிடிக்கும்! ஆனால் ,அது நேசம் என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை..



மிகனுடன் இருக்கும் போது பாதுகாப்பையும் ,மகிழ்ச்சியையும் உணர்ந்து இருக்கிறாள். அது அவளுக்கு அவன் மீது மரியாதையைத் தான் கொடுத்தது.




ஆனால், இருவரும் தங்களை அறியாமலேயே ஒருவர் மீது ஒருவர் நேசம் கொண்டனர். அவர்களின் நேசத்தை உணரும் தருணமும் ஒரு நாள் வந்தது.




திகழொளி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் அடி எடுத்து வைத்த தருணம்..



அன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டில் திகழொளியும், அமுதனும் மட்டுமே இருந்தார்கள்.



பொன்னியும், அறவானனும் உறவினர் யாரோ இறந்து விட்டார்கள் என்று இறப்பை விசாரிக்கச் சென்று இருந்தார்கள்.




திகழொளியோ, அடுத்த வாரம் கல்லூரிக்கு உடுத்தி செல்ல வேண்டிய உடைகளை இஸ்திரிப் பெட்டி கொண்டு தேய்த்துக் கொண்டிருந்தாள்.



எதிர்பாராத விதமாக தேய்த்துக் கொண்டிருந்த இஸ்திரிப் பெட்டி அவள் காலில் விழுந்து சூடு பட்டு விட்டது.




அவளோ, சூட்டின் எரிச்சலிலும்,வலியிலும் துடித்துப் போனாள்.



தமக்கையின் நிலை கண்ட அமுதன் ,ஒரு நொடி செய்வது அறியாமல் திகைத்தவன், உடனே மிகனிடம் ஓடினான்.




அமுதனுக்கும் மிகன் என்றால் அத்தனை பிரியம் !


அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மிகன் வீட்டில் தான் இருப்பான் என்று நினைத்து அவனிடம் வந்தான்.



மிகனைப் பார்த்ததும் அவனுக்கு போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது . " அண்ணா ! அக்கா கால்லே அயர்ன் பாக்ஸ் விழுந்து சூடு பட்டுடுச்சு . அக்கா வலியில் துடிக்கிறாள்! எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலே? நீங்க வந்து பாருங்க அண்ணா ! அம்மா, அப்பா வேறு வீட்டில் இல்லை.." என்று சொன்னதும் மிகனும் பதறியடித்து அவர்கள் வீட்டிற்கு ஓடினான்.



அன்று மிகன் மட்டும் தான் வீட்டில் இருந்தான். மணியரசியும், காஞ்சித்துரையும் நீரனை அழைத்துக் கொண்டு தங்கள் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிச் சென்று இருந்தார்கள்.



உலகமாறனும் வெளியில் சென்று இருந்தார்.


அமுதனுடன், அவர்கள் வீட்டிற்கு வந்த மிகன் , காலைப்பிடித்துக் கொண்டு வலியில் அலறிக்கொண்டிருந்த திகழொளியைப் பார்த்ததும் "ஒளி .."என்று‌ அவனையும் அறியாமல் அழைத்தவன் , ஓடிச்செனறு அவள் கால்களைப் பற்றி பரிசோதித்தான்.



இஸ்திரி பெட்டியின் சூடு பட்டதில் அவளின் கால்கள் சிவந்து போய் இருந்தது.

அதைக் கண்டவன் உடனே அவளை குளியலறை தூக்கிச் சென்று அவளின் கால்களை சில நிமிடங்கள் குளிர்ந்த நீர் படும்படி வைத்தான்.




சூடு பட்ட காயத்தின் மீது குளிர்ந்த நீர் படும் பொழுது எரிச்சல் கொஞ்சம் குறையும்.புண்ணும் பெரிதாகமல் தடுக்கும்‌ என்பதால் அவ்வாறு செய்தான்.



அதன் பிறகு அவளை நாற்காலியில் அமர வைத்துவிட்டு தன் வீட்டிற்கு ஓடிச் சென்று ,முதல் உதவிப் பெட்டியை எடுத்து வந்தான். அதிலிருந்த தீப்புண்ணுக்கு போடும் களிம்பை எடுத்து அவள் பாதங்களில் மென்மையாக தடவி விட்டான்.




அவளோ, சூடு பட்ட பாதத்தை இறுக்கி பிடித்தபடி, எரிச்சலையும், வலியையும்ம் தாங்க முடியாமல் பற்களை கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டிருந்தாள்.



மிகனோ, அவளிடம் "எப்படி ஒளி காலில் அயர்ன் பாக்ஸ் பட்டுச்சு.." என்று வருத்தமாக கேட்டான்.



'டிரஸ் அயர்ன் பண்ணிட்டு இருந்தேன்.அயர்ன் செய்த டிரஸ்ஸை அந்தப்பக்கம் மடித்து வைக்க திரும்பினேன். அப்போ நிமிர்த்தி வைத்திருந்த அயர்ன் பாக்ஸ் சட்டுன்னு என் கால்ல விழுந்துடுச்சு .." என்றாள் கண்களில் நீர் தேங்க..



"ஓ..!என்றவன், அவளின் தலையை மென்மையாக தடவி "சரியாகிடும் ஒளி , எனக்கு தெரிந்து ஃபர்ஸ்ட் லேயர்லே தான் சூடு பட்டு இருக்கு..இந்த களிம்பை தொடர்ந்து போட்டாலே போதும் சரியாகிடும்! பயப்படாதே ..!"என்றவன் ..



அவளை அப்படியே தூக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைத்தவன்..



"ஒளி! நல்லா காலை நீட்டி கொஞ்ச நேரம் படுத்துககோ.. ! கால்லே நல்லா காத்து படனும். அப்ப தான் எரிச்சல் அடங்கும். காலில் டிரஸ் படாமல் கொஞ்சம் பார்த்துக்கோ ,சீக்கிரம் சரியாகிடும். இப்ப எரிச்சல் பரவாயில்லையா ? நான் போகட்டுமா ..?"என்று அவளை விட்டு பிரிய மனமில்லாமல் கேட்டான்.



அவளோ, பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டியவளின் கண்களில் ,நீர் ஆறாக பெரிகியது. ஏனோ அவன் பக்கத்திலேயே இருக்கனும்ன்னு அவள் மனதிற்கு தோன்றியது.



அவள் மனதை புரிந்து கொண்டவன் போல் ,அவள் கண்களில் கண்ணீரைக் கண்டதும் அவள் அருகில் அமர்ந்து, "ஹோய் ! இதுக்கு போய் அழுவாங்களா? நீ எவ்வளவு தைரியமான பொண்ணு! இரண்டு நாள்லே சரியாகிடும் சரியா டா .." என்று ஆறுதலாக பேசியவன் அவளின் கைகளை முதன் முதலாக தொட்டு அழுத்திக் கொடுத்தான்.



அருகில் இருந்த அமுதனிடம் "அக்காவை நல்லாப் பார்த்துக்கோ அமுதா..!" என்றான்.



அவனின் அந்த செயல் திகழொளிக்கு இதமாகவும், ஆறுதலாகவும் இருந்தது.



ஏனோ ,அவனின் தோள்களில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றிய எண்ணத்தை பெரும்பாடு பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள்.. அவனின் பேச்சும், தொடுகையும் அவளின் வலிக்கும், மனதுக்கும் இதமாக இருந்தது.




மிகனுக்கோ, அவளை தன் நெஞ்சோடு அணைத்து ஆறுதல் படுத்த வேண்டும் போல் தோன்றியது. தன் எண்ணத்தை அவனுமே பெரும் பாடுபட்டே கட்டுப்படுத்திக் கொண்டான்.



இருவரும் தங்களை அறியாமலேயே ஒருவருக்கு ஒருவர் தங்களின் நேசத்தைக் கடத்திக் கொண்டார்கள்.




திகழொளியின் பெற்றவர்கள் அவனுக்கு வீடுதேடி வந்து நன்றி சொன்னார்கள். வீட்டு பெரியவர்களும் அவன் தக்க சமயத்தில் செய்த உதவியைப் பாராட்டினார்கள்.



காஞ்சித்துரை மருந்துக் கடை வைத்து இருப்பதால், எப்போதும் அவர்கள் வீட்டில் அத்தியாவிசயமான மருந்துகள் இருக்கும்.அது இன்று திகழொளிக்கு உதவியது.



அதன் பிறகு வந்த நாட்களில் இருவரின் நேசமும் இருவருக்கும் தெரியாமலேயே அழகாகவும் ,ஆழமாகவும் வளர்ந்தது.




திகழொளி அதன் பிறகு மிகனை அண்ணா ! என்று அழைப்பதைச் சுத்தமாக நிறுத்திக் கொண்டாள். மிகனின் பார்க்கும் போது எல்லாம் அவன் மீது அவள் கொண்ட நேசம் அவளையும் அறியாமல் கண்களில் பொங்கி வழிந்தது.



மிகனுமே அந்த நிகழ்வுக்கு பின் திகழொளியிடம் தன் செயல்கள் மூலம் அன்பை உணர்த்திக் கொண்டே இருந்தான்.



அவளைப் பார்க்கும் பொழுது எல்லாம் அவனின் விழிகளிலும் நேசம் வழிந்தது.



அமுதன் வந்து திகழொளிக்கு சூடு பட்டு விட்டது என்று கூறிய பொழுது அவன் மனம் பதறி துடித்தது அவனுக்கு மட்டுமே தெரியும்.



தன் காதலை உணர்ந்த நொடி அவனுள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறந்தது.சொல்ல முடியாத மகிழ்ச்சி அவனை ஆட்கொண்டது.



இந்த நேசம் கை சேருமா ? என்றெல்லாம் அவன் அப்போது நினைக்கவில்லை..ஆனால், அவள் தான் 'தன்னவள்' என்று உறுதியாக எண்ணினான்.





திகழொளியிடம் மிகன் சொன்னது போல் இரண்டு மூன்று நாட்களில் சூட்டுக் காயம் மெல்ல மெல்ல சரியாகி வந்தது.



திகழொளிக்கோ, அதன் பிறகு வந்த ஒவ்வொரு நாளும் மனதிற்குள் மிகனின் மீது அன்பு கூடிக் கொண்டே இருந்தது.



அதுவும் அன்று அவன் அவளை 'ஒளி' என்று அழைத்தது இன்னும் அவளின் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது.அப்படி யாருமே அவளை அழைத்தது இல்லை..



மிகனும் தன் செயலால் அவனுடைய நேசத்தையும்,காதலையும்சொல்லாமல் உணர்த்திக் கொண்டே இருந்தான்.



நேசத்தை சொல்வதை விட உணர வைப்பது தானே பேரழகு!



சூழ்நிலையும் அவர்களின் நேசம் வளர்வதற்கான சூழலை உருவாக்கியது. அன்றும் அப்படித்தான் இருவருக்கும் எதிர்பாராத ஒரு அழகான வாய்ப்பு அமைந்தது.



எப்போதும் திகழொளியை கல்லூரிக்கு அறவாணன் தான் கூட்டிச் செல்வார்.மகளை கல்லூரியில் இறக்கி விட்டு விட்டு, தன் அலுவலகத்திற்கு செல்வார்.



ஆனால், அன்று அவருக்கு அலுவலகம் காலையில் நேரமாக செல்ல வேண்டி இருந்ததால், மகளை ஆட்டோவில் போகச் சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.




தெரிந்த ஆட்டோ டிரைவர் என்பதால் அவருக்கு அவசர வேலை இருக்கும் போது எல்லாம் மகளை தைரியமாக அந்த ஆட்டோவில் பெற்றவர்கள் அனுப்பி வைப்பார்கள்.



ஆனால், இன்று அந்த ஆட்டோ டிரைவருக்கும் வேறு முக்கியமான வேலை இருப்பதால் வர முடியாது என்று சொல்லவும், பொன்னிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை..



சரியாக அப்போது தன் இருசக்கர வாகனத்துடன் வேலைக்கு கிளம்பி வீட்டில் இருந்து வெளியில் வந்த மிகனைப் பார்த்ததும் அவருக்கு கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் இருந்தது.





சட்டென்று மிகனிடம் சென்று "தம்பி இன்னைக்கு மட்டும் கொஞ்சம் திகழொளியை காலேஜ்லே இறக்கி விட முடியுமாப்பா? அவங்க அப்பா இன்னைக்கு ஏதோ மீட்டீங் இருக்குன்னு சீக்கிரம் போய்ட்டார். எப்போதும் வரும் ஆட்டோக்காரரும் ஏதோ வேறு வேலை இருக்குன்னு வர முடியாதுனு சொல்லிட்டார் . அவளுக்கு இன்னைக்கு பரீட்சை வேறு! இல்லைன்னா கூட லீவு போடச் சொல்லிடுவேன்.." என்றவரிடம்..



"அதற்கு என்ன ஆண்டி வரச் சொல்லுங்க ! நான் கூட்டிப் போய் விட்டுடறேன்.." என்றான் மகிழ்ச்சியாக..கரும்பு தின்ன கூலியா என்று அவன் மனம் நினைத்தது.



திகழொளியுமே மிகுந்த மகிழ்ச்சியுடனேயே வந்து வண்டியில் மிகன் பின்னாடி ஏறி அமர்ந்தாள்.



அதை ஒரு ஜோடி விழிகள் மிகுந்த பொறாமையுடன் கண்டது.


தொடரும்.


Hi friends,
படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..அடுத்த யூடி சனிக்கிழமை .

அன்புடன்
இனிதா மோகன்














 

New Threads

Top Bottom