Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்னடி மாயாவி நீ - Exclusive Tamil New Novel

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 22

இத்தனை வருடத்தில் வசந்தா வர்ஷித்திடம் பாராமுகம் காட்டியதே இல்லை. இன்று காட்டியவுடன் அவன் மிகவும் வருத்தப்பட்டு போனான். அதனால் அம்மாவிற்கு பிடிக்காத மதுவையும் அவன் அருந்தாமல் வீட்டிற்கு வந்தான். மனதளவில் அவனுக்கு ஆறுதல் தேவைப்படும் நேரத்தில் ஆதிகா கைநீட்ட அவளுக்குள் சென்று தஞ்சம் அடைந்துகொண்டான். பிணியும் அவளே மருந்தும் அவளே என்பது போல.

இருவரிடமும் காதல் இருக்கிறது. அவன் அதனை ஒதுக்க நினைக்கிறான், அவளோ அதற்கு ஏங்கி நினைக்கிறாள்.

அவளிடம் சென்றவனை பெட்டில் உட்கார்ந்து மடியில் தாங்கிக்கொண்டாள். இருவரும் மாறி மாறி முகத்திலே முத்தமிட்டு கொண்டனர். இது எதற்கு என இருவருக்குமே தெரியவில்லை. நேற்றைய ஒரு நாளின் பிரிவாக கூட இருக்கலாம் என இருவருக்கும் தோன்றியது.

இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கவ்வி நின்றது. இம்மோன நிலையை ஆதிகாவே கலைத்தாள். "நீங்க குடிக்காம வரணும்னு தான் நேத்து என் பிரண்ட் வீட்டுக்கு போனேன் அவளும் கூப்பிட்டா, அத்தையும் போக சொன்னாங்க, எல்லாமே உங்களோட நலனுக்கு தான் என்னோட மனசை கல்லாக்கிகிட்டு இதை செய்தேன். இப்போ நானே வருந்தும்படி ஆகிட்டு, சாரி நான் பண்ணது தப்புனா என்ன மனிச்சிடுங்க" என்றாள் ஆதிகா. "பரவால நானே எவ்ளோ பெரிய தப்பு பன்னேனு நேத்துதான் புரிஞ்சது, அம்மா பேசல, அப்பா செம்ம திட்டு அட்வைஸ்ல இனிமேல் அந்த கருமத்தை எடுக்கவே கூடாதுனு இருக்கேன்" என உறுதியுடன் வர்ஷித் கூற, "பரவால கடைசியில உங்க வாயாலே அதை கருமம்னு சொல்ல வச்சிட்டேன்" என மின்னலாய் சிரிப்பை உதிர்த்தாள். அக்கணம் தோன்றியது, இவளில்லாமல் தான் இல்லையென்று வர்ஷித்திற்கு.சில நிமிடம் அவளது மடியிலே கண்மூடி படுத்திருந்தான்.

சில நிமிடம் கழித்து வர்ஷித் கண்மூடி இருக்க ஆதிகாவின் விரல் அவனது முகத்தில் கோலமிடும்போது அவனது நெற்றி சுருங்குவதை பார்த்து, "வருமாமா வருமாமா" என எழுப்ப அவனும் விழித்தான்.

"உங்களுக்கு என்ன பிரச்சனை எதையோ ரொம்ப யோசிக்கிறீங்க சொல்லுங்க மாமா அப்போதானே தெளிவு பிறக்கும்" என ஆதிகா அவனது பிரச்னையை ஆராய, வர்ஷித், "முதலில் நீ ஏன் என்னைய வருமாமானு கூப்பிடுற சொல்லு?" என கேட்டவுடன், அவள் "ஈஸியாக நீங்க எதுக்கு ஆதிமானு கூப்பிடுறிங்களோ அதுக்கு தான்" என கூறி அவனது வாயை அடைத்துவிட்டு, "இப்போ இதுதான் உங்களுக்கு குழப்பமா?"என கேட்க அவனோ இல்ல இன்னும் இருக்கு என சொல்ல ஆரம்பித்தான். "ஆதிமா நம்ம எதுக்கு ஊருக்கு போனோம்னு இருக்கு, அதிலிருந்து ஒரு கோபம் வெறுப்பு எல்லாமே என்னை பாடாய் படுத்துது" என வர்ஷித் கூற அவன் சொல்ல வருவதை புரிந்துகொண்டவள், "தெரியும் மாமா, நீங்க அம்மா பாசம் இல்லனு ஏங்குறீங்க, அப்பா பேசலானு வருத்தப்படுறீங்க, இதுலேயே இருந்துட்டு உங்களுக்குனு இருக்குற அம்மா அப்பாவை மறந்துட்டீங்க. அப்படி நினைக்காதீங்க அவுங்ககிட்ட கிடைக்காத பாசம் தான் இங்க உங்களுக்கு ரெண்டு மடங்காக கிடைக்குது. அத்தை மாமாவை நினைச்சு பாருங்க முன்னாடி நீயும் விஷ்ணுவும் இருந்திங்க இப்போ நீங்க மட்டும்தான் இருக்கீங்க நீங்கதான் அவுங்கள பாத்துக்கணும். நீங்க இத போட்டு வருத்திக்கிறிங்கனு தெரிஞ்சா அத்தை மாமா கஷ்ட படுவாங்க நம்ம நல்லா பாசம் வைக்கலையோன்னு வருத்தப்படுவாங்க பாத்து நடந்துகோங்க உங்க மேல அவ்ளோ உசுரா இருகாங்க" என அவள் உரைத்தபின்னே தான் அப்பா அம்மாவை யோசிக்காம விட்டுட்டோமே இல்லாத ரெண்டு பேருக்காக அப்பா அம்மாவை இழக்க பாத்தோமே என மனதில் ஆதிகாவை மெச்சிக்கொண்டான். ஒரு நொடியில் என் இந்த துயரத்தை தீர்த்துவிட்டாளே என.

அவளிடமே, "ஆமாமா இத நான் நினைச்சி பாக்கவே இல்ல இது அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா உடைஞ்சு போய்டுவாங்க, அவுங்க ரெண்டு பேரும் காட்டுன அன்பு பாசம் என்னோட சொந்த அப்பா அம்மா கூட காமிச்சு இருக்க மாட்டாங்க" என கூறினான். இருந்தும் அவனது முகத்தில் குழப்ப ரேகை மறையாததால், "அப்புறம் என்ன பிரச்சனை மாமா" என்றவளிடம் அவளின் முகம் பார்க்காமல் திரும்பி சுவரை வெறித்துக்கொண்டு ஆரம்பித்தான். "எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கு, விஷ்ணு இருக்குற இடத்துல நான் இருக்கேனு தோணுது அவனோட இடத்த நான் அபகரிச்சிக்கிட்டது போல தோணுது"என அன்று தந்தையின் அலுவலகத்தில் நடந்ததை கூறிவிட்டு, "இதற்கு தான் உன்னையையும் என்ன விட்டு போக சொல்றேன் தன் காதல் அவளுக்கு தெரியாது என நினைத்துக்கொண்டு கூறினான். எங்கே அவள் கண்களை பார்த்தால் தன்னை மீறி காதல் வந்துவிடுமோ என்ற பயத்தில் பார்வையை சுவற்றிலே பதித்திருந்தான்.

இந்த சொல்லை கேட்டு அவனின் கேசத்தை அளந்துகொண்டிருக்கும் விரலை தடை செய்துகொண்டாள், அவளின் கண்ணீர் வர்ஷித்தின் கன்னத்தில் பட்டு தெறித்தது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் நினைத்ததை சொல்லி முடிக்க வேணும் எனும் உறுதியில் தொடர்ந்தான் "நீ எதுக்கு எனக்காக உன்ன மாத்திக்கிற நீ நீயா இரு, எனக்காக உன்னைய நீயே வருத்திக்காத, அது எனக்கு கஷ்டமா இருக்கு" என கூறியவனின் வாயை அடுத்து பேச முடியாமல் தடுத்தவளின் கண்கள் குளம் கட்டின.

ஆதிகா கண்ணில் ஏமாற்றம், வலி, ஏக்கம் மட்டுமே தெரிந்தது. கண்ணை அழுந்த துடைத்து அவனிடம் "சரிமாமா, நீங்க எனக்காக கஷ்டப்படவேணாம், நீங்க இப்படி இருக்குறத பார்க்க கஷ்டமா இருக்கு அதனால நான் டிவோர்ஸ்க்கு சம்மதிக்கிறேன்.பத்திரத்துல சைன் போட்டு தரேன். நீங்க மேல ஏற்பாடு செய்ங்க நீங்க நிம்மதியா இருக்கணும்" என உணர்ச்சிவசப்பட்டு கூறி பின் ஆற்றாமை கலந்த கோபத்துடன், "நானும் உங்கள விரும்புறேன் அத நீங்க எப்படி வேணா எடுத்துக்கோங்க பரிதாபம் எக்ஸ்ஸட்றா அதான் உங்க அதிகாரத்துல நெறய பேரு வச்சி இருக்கீங்களே. எனக்கு உங்க சந்தோசம்தான் முக்கியம், நீங்க எந்த கஷ்டமும் பட கூடாது" என முழு மூச்சாக கூறி விட்டு அதே வேகத்துடன் கையெழுத்தை இட்டு பத்திரத்தை வர்ஷித்திடம் கொடுத்து விட்டு அவனை மேலும் பேசவிடாமல் படுத்துக்கொண்டு காலிலிருந்து தலை வரை போர்வையை போத்தி கொண்டு அழுதாள். அழுவது தெரிந்தும் அவளை சமாதானம் செய்ய அவன் முற்படவில்லை. இந்த சிறுவலியை ஏற்றுக்கொண்டால், பெரிய மகிழ்வை அவள் அனுபவிக்கலாம் என நினைத்து மேலும் அவளுக்கு துன்பத்தையே கொடுத்தான். எல்லா விஷயத்திலும் அவள் படும் வேதனையை அறிந்தவன் இதில் அவள் படும் வேதனையை அவன் உணரவே
இல்லை. அவள் சொன்ன வார்த்தையில் உதிர்ந்த காதலின் அர்த்தத்தை தேட மறந்தான், அவனது காதலே பெரிது என எண்ணி அவளது காதலை கண்கொண்டு பார்க்காமல் போனான்.

காலையில் வழக்கம் போல் தன் கை அவனிடம் சிக்கிருப்பதை உணர்ந்தவள் வெடுக்கென உதறிவிட்டு எழுந்தாள். இவள் கோபமாக இருப்பதை உணர்ந்தவன் சரி ஆகிடும் என விட்டு விட்டான்.

அன்று ஏதோ எல்லாவற்றிகும் ஆதிகாவையே தேடி போனான். மாமியாரும் மருமகளும் சேர்ந்தே ஒதுக்கம் காட்டினர். இதில் கூடவா ஒற்றுமை என நினைக்க அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

இருவரும் சாப்பிட அமரும்போது வசந்தாவே பரிமாறினார். ஆதிகாவிற்கு இரவு இருந்த கோபம் கூட இப்போ இல்லை லேசாக வருத்தம் தான் இருந்தது. வர்ஷித்தின் முகம் சுருங்கி இருந்ததால், 'அய்யோ ரொம்ப பண்ணிட்டோமோ' என யோசித்து சரி கொஞ்சம் வம்பிழுப்போம் என முடிவெடுத்தவளாய் அத்தை, " ஒரு கதை சொல்லவா"என ஆரம்பித்தாள். "சொல்லுமா" என வசந்தா கூற வர்ஷித், "ஆமா வேணாம்னா சொல்லபோறிங்க" என முணுமுணுத்தவனுக்கு தெரியவில்லை தனது கதையை தான் அங்கு ஆதிகா ஓட்டப்போகிறாள் என்று.

"என்னோட பிரண்ட் ஒருத்தன் அத்தை, அவன் ஒரு நல்ல அக்மார்க் நல்ல பையன், அவன் ஒரு பொண்ண சின்ன வயசுல உருகி உருகி லவ் பண்ணிருக்கான் அந்த பெண்ணுக்கே தெரியாமல்" என்றவள் நிறுத்தி ஓரக்கண்ணால் அவனை ஒரு பார்வை பார்த்தபோது அவனும் அவளை தான் பார்த்திருந்தான். மேல தொடர்ந்தாள், "அப்பறம் சேர முடியாதுனு நிலைமை வந்து கடைசியில ஏதோ கடவுளா பாத்து அவன் லவ் பண்ண பொண்ணையே புடிச்சி அவன் கைல கொடுக்குறாரு" என நிறுத்த வசந்தாவோ ஆர்வத்துடன் கவனித்து, "இது நல்ல விஷயம் தனே" என்றார். அதற்கு ஆதிகா, "அத்தை இனிமேல் தான் கதையே இருக்கு. அந்த பொண்ண அந்த பையன் ஏதோ குற்ற உணர்வாய் இருக்கு நம்ம பிரிஞ்சுரலாம்னு சொல்லிருக்கான்" என சொல்லி முடித்தவள் குற்றவுணர்வு அந்த சொல்லிற்கு மட்டும் அழுத்தத்தை கூட்டினாள். அத்தையிடம், " இது நியாயமா? " என கேட்டாள் வர்ஷித்தை பார்த்துக்கொண்டே. "அந்த புள்ளைக்கு புத்தி ஏதும் பேதலிச்சிட்டா, வாழ தெரியாத புள்ளையா இருக்கும் போல, கிடைச்சத விடணும்னு நெனைக்கிது" என கூற வர்ஷித்திற்கு புரை ஏறியது.இவ பார்வையே சரி இல்லையே ஒரு வேளை நம்மளாதான் சொல்லுவாளோ என சந்தேகம் வர, தன் காதல் எப்படி இவளுக்கு என அவன் யோசிக்கும்போதே அவனது தலையை தட்டி தண்ணீர் கொடுத்தாள்.

அன்று அவன் காரை சர்வீஸ்க்கு விட்டதால், அலுவலகம் செல்ல பைக்கினை ஸ்டார்ட் செய்தவனை தடுத்தாள் ஆதிகா. "என் ஸ்கூட்டில பெட்ரோல் இல்ல, இன்னைக்கு மட்டும் என்ன ஆபீஸ்ல விட்டுட்டு போறிங்களா? " என கேட்டவளிடம் சரி என கூறி பைக்கில் அமரவைத்து அழைத்து சென்றான். அவளும் பற்றுக்கோளுக்காக அவனின் தோள்களை கையால் பற்றிக்கொண்டாள். அது அவனுக்கு இன்பமாக இருந்தாலும் வெளி காட்டிக்கொள்ளவில்லை. 'இதுக்கு ஏதாவுது சொல்ல போக அப்புறம் சாமி ஆட்டம் ஆடுவா தேவையா நமக்கு' என பயணத்தில் கவனத்தை செலுத்தினான். அவளுக்குமே இந்த பயணம் மகிழ்ச்சியை தந்தது. இது தொடராதா என பேதை மனம் ஏங்கியது.

அவனின் சந்தேகம் மனதை அரித்துக்கொண்டிருந்தது. அதை தெளிவுபடுத்தும் வகையில் இறங்கும்போது அவளே, "நீ லவ் பண்ண அம்முவும் இல்ல விஷ்ணு லவ் பண்ண ஆதிகாவும் நான் இல்ல, உன்ன மட்டுமே நினைச்சுகிட்டு இருக்கும் உன்னோட ஆதிமா தான் நான் இப்போவும் இனிமேலும் ரொம்ப போட்டு குழப்பிக்காத" என அவன் பதில் பேசும் முன்னே ஆபிஸ்க்குள் சென்றுவிட்டாள்.

அலுவலகம் சென்றும் உறுத்தும் கேள்வியை கேட்க முதல் முதலாக போனில் மெசேஜ் போட்டான், "ஆதிமா என்னோட டைரியை படிச்சியாடி?" என அதற்கு அவளோ அவனின் அழைப்பில் இருந்த டி அழைப்பை ரசித்து, "படித்தேன்" என பதில் அனுப்பினாள்.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 23

தன் காதல் தனக்குரியவளிடம் சேர்ந்து விட்டது எனும் நிம்மதியும் இவள் எப்படி டைரியை படித்தாள் எனும் அதிர்ச்சியும் ஒருங்கே இருந்தது வர்ஷித்திற்கு.

இருவரும் வெவ்வேறு எண்ண ஓட்டங்கள் பின்னால் ஓட, வர்ஷித் அலுவலக வேளையில் ஈடுபடும் போது தான் கவனித்தான், தன்னோடு வேலை செய்யும் ஒருவர் சில நாட்களாக வரவில்லையென, இதை அறிந்துகொள்ளும் பொருட்டு, நண்பனிடம் கேட்க, "அவன் கதையா கேக்காதடா கஷ்டமா இருக்கு" என வேதனை குரலுடன் கூற ஆரம்பித்தான். "அவருக்கு லவ் மேரேஜ்டா, ரெண்டு பெரும் நல்லா தான் இருந்தாங்க, ஏதோ கருத்து வேறுபாடு போல இதுல நான் சொல்றதுதான் கேக்கணும்னு சொல்லி அவன் அந்த பொண்ணுகிட்ட டிவோர்ஸ் பேப்பர நீட்டிருக்கான் மிரட்டி, நான் சொல்றத கேக்க வைக்குற நோக்கத்துல தான் டிவோர்ஸ் வரையும் போனான். ஆனால் அந்த பொண்ணு, எனக்குன்னு யாருமே இல்ல, டிவோர்ஸ் கிடைச்சிட்ட அநாதை ஆகிருவேன் அதனால தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு செய்து இறந்துட்டாங்கடா. ரொம்ப கஷ்டமா இருக்கு, மனுஷன் இப்போ துடிக்கிறாரு அத டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணும்போதே யோசிச்சுருக்கணும். ஒரு பொருள் பக்கத்துல இருந்தா அதோட அருமை புரியாதுடா , அது இல்லனா தான் புரியும்" என வருத்தம் கொண்டு அவன் முடித்தான். வர்ஷித் அந்த கதையை கேட்டு உருக்குலைந்து போய் விட்டான். அவனது நண்பன் சொல்லிய கடைசி வரிகள் அவனுக்காகவே சொல்லியது போல இருந்தது. அவனாலும் டிவோர்ஸ் கிடைத்துவிட்டால் ஆதிகாவை விட்டு பிரிய முடியாது என தோன்றியது. அவளுக்கு பிறகு எனது வாழ்க்கையில் என்ன இருக்கப்போகுது என யோசிக்க அவனுக்கு சொல்ல அளவில்லாத துயரம் தான் மிஞ்சும். அப்போதுதான் அவனது முட்டாள் தனத்தை உணர்ந்தான். 'கையில் கிடைச்சும் விட பாத்துருக்கேனே' என அவனே அவனை சாடிக்கொண்டான். 'டிவோர்ஸ் வேணும்னு துடிக்கிறேன் அவ இல்லாம நான் இருப்பேனா, அவ சந்தோசம்னு சொல்லி சொல்லி நம்ம சந்தோசத்தை மறச்சிட்டு செய்றேனே' என முதல் முறை அவன் அவனுக்காக யோசித்தான். ஆனால் 'அவளே இது வேணாம்னு தானே கொடி புடிச்சா, அவளுக்குள்ள என் மேல இருக்குறது அக்கறை தாண்டி உண்மையான லவ் போல நாம தான் தெரியாமல் அதை அழித்து விட துணிந்து விட்டோமே. நேத்து கூட டிவோர்ஸ்ல பேப்பர்ல சைன் போடும்போது அழுதாளே, அந்த கண்ணீர்ல அவ்ளோ வலி தெரிஞ்சதே ரொம்ப தப்பு பண்ணிட்டோம். அவளுக்கும் பேச ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கணும். அவ சந்தோசத்திற்குத்தான் எல்லாம் என சொல்லி இத்தனை நாளா அவள கூறு போட்டு கொன்னுருக்கோமே, நான் டிவோர்ஸ்னு சொல்லும்போது எவ்ளோ துடிச்சிருப்பா. உனக்கு பெரிய தியாகினு நெனப்புடா. அதான் நீ தியாகம் பன்றேன்னு அவளை பண்ணவச்சிட்ட, இதுல பரிதாப காதல் வேறன்னு சொல்லி அவளை காயப்படுத்தியாச்சி சரியான அவசர புத்திக்காரன்டா நீ' என தான் தவறுகளை உணர்ந்து தன்னையே திட்டிக்கொண்டு அவளிடம் இப்பவே மன்னிப்பு கேட்க வேணும் என நினைத்தவன் இல்லை சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும் என இரவில் சீக்கிரமாக வீட்டிற்கு சென்று அவளிடம் மனசு விட்டு பேசணும் என உறுதி கொண்டு காதல் கைகூடும் எனும் ஆனந்தத்தில் இருந்தான் வர்ஷித். அவனது காதல் என்று வரும்போது குற்ற உணர்வை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டது. அவனது மனதில் ஆதிகா ஆதிகா ஆதிகா மட்டுமே ஆக்கிரமித்திருந்தாள்.

அங்கு ஆதிகாவிற்கு உதறல் எடுத்தது, புரிஞ்சிப்பான் என்று தானே சைன் போட்டோம். இப்போ அதுவே எவ்ளோ பெரிய தப்பா போச்சு என பயம் பற்றி கொண்டு எரிந்தது அவளுக்குள். இந்த முறையும் என் வாழ்க்கை தோற்கப்போகிறது என எண்ணம் தொடங்கி அவளை அழ வைத்தது. சோகத்தை மறைக்க கஷ்டப்பட்டு தோற்று அரைநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு போனாள். அத்தையின் மடியில் தலைவைத்து படுத்து கதறி அழுதாள். வாழ்க்கை பற்றின பயத்தில் உணர்வற்று கிடந்தாள். வசந்தா அவளிடம், என்னமா ஆச்சு சொல்லுடா என அவளை ஆசுவாச படுத்தி கேட்டார். இதற்கு மேல் இதை சுமந்தால் எங்கு மூச்சு முட்டி விடுமோ என்ற பயத்தில் "அத்தை என்ன மன்னிச்சிருங்க" என ஆரம்பித்து எல்லாமே கூறினாள் விஷ்ணுவின் காதல், பிறகு இந்த கல்யாணம், அவன் கூறிய பரிதாப காதல், விவாகரத்து, அவனின் குற்ற உணர்வுகள் என அவள் தீர்த்து வைத்த ஊருக்கு போன குழப்பத்தை தவிர்த்து எல்லாவற்றையும் கூறினாள். கூறிய பின்னே சீராக மூச்சு விடுவது போல் இருந்தது ஆதிகாவிற்கு.

"நான் அவன்கிட்ட பேசுறேன்மா நீ கவலைப்படாத" என அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு மடியிலே படுக்க வைத்து உறங்க வைத்தார். "போனது போகட்டும் இருக்கிற வாழ்க்கையை வாழாம இந்த பையன் ஏன் இப்படி செய்கிறான்? " என அவரும் வருந்திக்கொண்டார். எவ்வளவு பயம் இவளுக்கு இந்த பையனை நினைத்து இன்னைக்கு வரட்டும் பேசிக்கிறேன் என தீர்மானித்துக்கொண்டார்.

காலையில் தான் சீக்கிரமாகவே போக வேண்டும் என நினைத்தாலும் வேலை கொஞ்சம் அதிகமாவே இருந்தது அவனுக்கு. செய்வதறியாது வேலையை முடித்த பின்பே வீட்டிற்கு சென்றான்.

வீட்டிற்குள் நுழைந்து அறைக்கு போகும்போது ஒரு கோப குரல் அவனை தடுத்தது. இரண்டு மூன்று நாள் பேசாமல் போனதால் அவனும் அம்மாவின் குரலுக்கு பயம் கொண்டு அவரை நோக்கி நடந்தான். "என்னடா ஓடி ஒளியிறியா? எங்க கத்துகிட்ட இந்த பழக்கத்தை இது மட்டுமா ஏதோ குற்றஉணர்வாமே குற்ற உணர்வு எங்கிருந்து வந்தது அந்த குற்ற உணர்வு பாவம் அந்த குழந்தை உன்னால ஆபிசில் பாதி நேரம் லீவ் போட்டு வந்து ஒரே அழுகை" என கோபத்தில் திட்டினார். வர்ஷித்தும் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு கண்களாலே மன்னிப்பு கேட்டான்.

அதை பார்த்து நிதானமாக அவனை கை நீட்டி அழைத்து உட்காரவைத்து அவனிடம் "அந்த பொண்ணு நம்மல முக்கியமா உன்ன மட்டும் நம்பி வந்த பொண்ணு. ஏதாவுதுன்னா பேசி சரி செய்" என பேசும்போதே அம்மா "உங்களுக்கு எல்லாமே தெரியுமாம்மா" என இழுத்தவனிடம் "ஒன்னு விடாம அவ சொல்லிட்டா. அவளாவுது எங்கிட்ட சொன்ன ஆனால் நீங்க ரெண்டு பெரும் ஒரு வார்த்தை என்கிட்டே சொன்னிங்களா" என கோபித்து மேலும் "உனக்கு இந்த குற்ற உணர்வு வருவதற்கு விஷ்ணுவே காரணமா இருக்குறப்போ எனக்கு கஷ்டமா இருக்குப்பா" என கூறி அவனது முகத்தை வருடினார்.

"என்னமா நீங்க, நான் நீனு பிரிச்சு பேசுறீங்க அவன் இதுக்கு காரணம்னு நீங்க என்கிட்ட வருத்தப்படலாமா மா அவன் யாரு மா என்னோட உயிர் நண்பன் நீங்க என்னோட அம்மா. இந்த சமூகத்துல நல்ல நிலைமைல நான் இருக்க காரணம் நீங்க தான்மா. நான் உங்க புள்ளமா ஏதோ சில பேர் ஏதேதோ பேசுனத காதுல ஏத்திக்கிட்டு நான்தானே தப்பு பண்ணிட்டேன்மா" என அவரின் கையை பிடித்துக்கொண்டு மன்னிப்பு வேண்ட அவர் அழுது விட்டார்.

"அம்மா அழுகாதீங்க நீங்க அப்படியெல்லாம் மனச போட்டு குழப்பிக்காதீங்க. விஷ்ணு இறப்பு, ஆபீஸ்ல பேசுனதுனு எல்லாத்தையும் போட்டு நானே குழப்பிக்கிட்டேன். நானே குழம்பி இருந்தபோது எனக்கு சிலதை புரிய வச்சதே ஆதிகாதான். நானே அவகிட்ட பேசணும்னு தான் வந்தேன் நான் பாத்துக்கிறேன் நீங்க கவலபடாதிங்கமா" என எழ போனவனை தடுத்து 'அவ்ளோ அவசரமா பொண்டாட்டிய பார்க்க' என நினைத்தவர் "அவ இப்போதான் நார்மலா மேல போனா உன்னைய விரும்பாமலா அவ்ளோ வேதனை படுறா எல்லாத்தையும் யோசி மறுபடியும் அவகிட்ட போயிட்டு லூசுத்தனமா பேசாம ரெண்டு பெரும் பேசி புரிஞ்சி வாழ ஆரம்பிங்க. சீக்கிரமா ஒரு பேர குழந்தையை பெத்து கொடுத்து எங்களுக்கு போர் அடிக்காம பாத்துக்கோங்க" என கூறி மகனை அருகில் அழைத்து நெற்றியில் முத்தமிட்டார். "நீ எனக்கு எப்பவுமே பிள்ளைதான், யார் என்ன சொன்னாலும் இதை மட்டும் நியாபகத்துல வச்சிக்கோ அப்படி பேசுறவன்கிட்ட இருந்து தான வெளில வந்துருவ" என கூற அவனும் சரிம்மா என்றான்.
மேலும் நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும் என கேட்டான் உங்களுக்கு ஆதிகாவை மருமகளா புடிச்சிருக்கா என. ஏனென்றால், சிறு வயதில் உங்களுக்கு பிடித்த பெண் தான் எனக்கு மனைவி என கூறியிருந்தான். அவரும் அதை புரிந்துகொண்டு, "உனக்கு தெரியாதுல என் மருமகள நான் தான் தேர்வு செய்தேன் உங்க மாமா உன்னிடம் காட்டும் முன்னே என்னிடம் காட்டி என் சம்மதம் கேட்டார். அதனால், நான் தான் மருமகளை தேர்வு செய்தேன்" என சொல்ல பலநாள் மனதில் அரித்த கேள்விக்கு பதில் சொன்ன தாய்க்கு கன்னத்தில் முத்தம் கொடுக்க, அவனது அம்மாவோ "முதலில் உன் பொண்டாட்டிக்கு இத கொடுத்து அவளை சமாதானம் படுத்துடா" என கூற வெட்க சிரிப்பை உதிர்த்து விடைபெற்றான்.

அறைக்கு சென்றவன் கட்டிலில் தனக்கு முதுகு காட்டி அமர்ந்து போனை நோண்டிக்கொண்டிருந்த ஆதிகாவை பார்த்தான். அவன் வருகையை உணர்ந்து "வாங்க மாமா" என்றாள். தலையை மட்டும் அசைத்து புன்னகை தவழும் முகத்துடன் "இரு வரேன்" என கூறி மாற்றுடைக்கு மாறி வந்தான்.அவளின் முகம் கொஞ்சம் நம்பிக்கையும் நிம்மதியையும் கொண்டிருந்தது. 'என்ன பேசுவது எங்கிருந்து ஆரம்பிப்பது' என்பது தெரியாமல் அவளிடம் "சாப்பிட்டாயா" என கேட்டான். அக்கேள்வியில் காதலையும் அன்பையும் தேக்கி வைத்து மென்மையாக கேட்டான். அதில் ஆச்சரியம் அடைந்தவள், "இல்ல அத்தை சீக்கிரமா சாப்பிட்டாங்க எனக்கு அப்போ பசிக்கல இப்போ சாப்பிடலாம்" என முன்னே நடந்தாள்.இன்று புதிதாகவும் தெளிவாகவும் இருந்த ஆதிகா புடவையில் அழகாக இருந்தாள். அவளை பார்த்து பார்வையை அடக்க முடியாமல் தவித்து போனான் வர்ஷித். அவனது பேச்சு, பார்வை என எல்லாவற்றிலும் மாற்றத்தை உணர்ந்த ஆதிகா வர்ஷித்திற்கு பரிமாறிவிட்டு அவளும் அமர்ந்து உண்டாள்.

அம்மா கீழே சொன்ன பேரப்பிள்ளை என்ற சொல்லுக்கும் இங்கு ஆதிகா சேலை, பூ என காணப்படுவதற்கும் அம்மாவின் எண்ண ஓட்டங்களை படித்தான். அவர்களின் ஆசையை நிறைவேற்ற இவனுக்கு ஆசை பிறந்தது. ஆதிகாவும் இதற்கு தயார் என்பது போல இருந்தது அவளது நடவடிக்கையும் சாதாரணமாக புடவை அணிவதே அவளுக்கு அபூர்வம் பிறகு என்ன ஆனாலும் அப்பா அம்மா கூடவே சேர்ந்து உண்பவள் இன்று என்னோடு சாப்பிடுகிறாள் இது எல்லாமே தனக்காக அவள் செய்வது போலிருந்தது அவனுக்கு.

வர்ஷித் ஆதிகாவை பார்வையால் அளவிட்டுக்கொண்டே சாப்பிட்டு முடித்தான். அவனின் பார்வையில் அவஸ்தையாக நெளிந்தாள் அவள். அவளை மேலும் வதைக்காமல் "நான் மேல போறேன் நீயும் சீக்கிரமா வேலை எல்லாம் முடிச்சிட்டு வா" என்றான். அவளும் வெறும் தலையை மட்டும் ஆட்டிவைத்தாள். அவளுக்கும் முதலில் "நீ வர்ஷித் கூட அமர்ந்து சாப்பிடு, இந்த புடவையை உடுத்திக்கோ" என கூறும் போது புரியாமல் தான் இருந்தது. பிறகு இவனது பார்வையை வைத்தே புரிந்துகொண்டாள் அத்தை எதுக்கு அடி போட்டிருக்கார் என்பதை.

இவனோ வந்தவன் மெத்தையில் அமர்ந்து எப்படி பேசுவது என்ன பேசுவது என யோசித்து கொண்டிருக்கையில் மின்சாரம் நின்றவுடன் அறை வெளிச்சத்தை தொலைத்து கருமையை சூடிக்கொண்டு இன்னும் அவனுக்கு வசதி செய்தது. 'இந்த கரண்ட்க்கு என வாழ்வில் விளையாடுவதே பொழப்பா போச்சு' என திட்டிக்கொண்டு அவ வேற தனியா இருப்பாளே என கீழே இறங்க எத்தனித்தவன் அவள் மெழுகுவர்த்தியின் வெளிச்ச துணையுடன் வருவதை பார்த்தவன் தன் உணர்வுகளை கட்டு படுத்திக்கொள்ள மறுபடியும் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டான். அவளும் மெழுகு வர்த்தியை அறையில் வைத்து ஒளி பரவ செய்து விட்டு, பால்கனிக்கு சென்று கம்பியின் மீது கை வைத்து கொண்டு இரவின் அழகை ரசித்து கொண்டிருக்க அங்கு அவனோ 'இவகூட எப்படி பேசுறதுனு நான் இங்க ஒத்திகை பாத்துட்டு இருக்கேன் இவ பாட்டுக்கும் அங்க நின்னு வேடிக்கை பாத்துட்டு இருக்கா' என அவளை சீண்டும் நோக்கில் அவளருகில் போனவன் இரவின் அழகை ரசிப்பவளின் அழகை இவன் ரசிக்க தொடங்கினான். தொலைத்த பொம்மை மீண்டும் கிடைத்தால் ஒரு குழந்தைக்கு எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவனுக்கு. பௌணர்மி ஒளியில் வான ஊதா நிறத்தில் புடவை அணிந்த ஆதிகா தேவதை போல் காட்சி தந்து அவன் கண்களுக்கு விருந்து படைத்தாள். அவளின் கழுத்திலும் புடவைக்கு வெளியிலும் மார்பிலும் ஊசல் ஆடும் பொன்னும் மஞ்சளும் கலந்து மின்னும் தாலியும்,வகிட்டில் தங்கியிருக்கும் அவன் கையால் இட்ட குங்குமமும் அவளை மேலும் அழகுற செய்து அவனுக்குள் இவை எல்லாம் தனக்கானவை, இவள் தனக்கானவள் என ஏதோ ஒன்று கூறி கொண்டே இருந்தது அவனுக்குள்.

அவனின் பார்வை வீச்சுகள் தன்னை தாக்குவதை உணர்ந்தவள் அவனை பார்க்க இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று ஒட்டி கொண்டது. நிலமையை இளகுவாக்க "என்ன எல்லாமே புதுசா இருக்கு" என அவன் கேட்க ஆதிகாவும் "நான் மட்டுமா நீங்களுந்தான்" என அவனை கீழிருந்து மேல் வரை பார்த்தாள். அவன் வெற்று உடம்போடு கீழே ஷாக்ஸ் மட்டுமே போட்டிருந்தான். அவனின் விரிந்த மார்பும் திரண்டாலும் தோள்களும் முறுக்கேறிய புஜமும் கண்ணில் புதிதாக குடியேறிய காதல் மொழியுடன் ரசனை பார்வையும் கலந்து அவளை திக்கு முக்காட வைக்க அவளின் பார்வையை உணர்ந்து அதனால் ஏற்படும் அவஸ்தைகளை தாங்கமாட்டாமல் "அது...இதுதான் என்னோட இயல்பு. இப்படித்தான் எப்பவுமே இருப்பேன் இப்போ கொஞ்ச நாள்தான் வீட்ல இருக்கும்போது ட்ஷிர்ட்லாம் போடுறேன் இனிமேலும் இப்படி தான் இருப்பேன்" என தடுமாற்றத்துடன் கூறி "சரி இப்போ நீ சொல்லு" என்றான் "அத்தைதான் கட்ட சொன்னாங்க" என வெளியில் சொல்லிவிட்டு மனதினுள் 'உனக்கு தெரியாமலா இருக்கும் சரியான ஆளுடா நீ நடிச்சாலும் நடிப்ப கேடி அதான் பார்வையே சரி இல்லையே' என செல்லமாக திட்டினாள்.

மின்சாரமும் தனிமை வழங்க, அவளை நெருங்கி தன் பக்கம் திருப்பி வர்ஷித் அவளின் முகத்தில் ஒரு விரல் நுனியால் கோலமிட அவளின் கண்கள் அந்த சுகத்தில் தானாக மூடி கொண்டன. காதருகில் போனவன், "அன்னைக்கு கரண்ட் போன போது விட்டுட்டு போனத இப்போ தொடரவா" என மெதுவாக அவன் குரல் தென்றலோடு கலந்து அவளது காதுக்குள் நுழைய அவளுக்கு வெட்கம் படர ஆரம்பித்தது. அந்நேரம் அவனது ஆராய்ச்சி முகத்தை தாண்டி கழுத்துக்கு கீழ போகும்போது அவளின் பெண்மை விழித்து கையை தடுத்து நிறுத்தினாள். "அப்போ பதில் சொல்லு தொடரவா" என காதில் கிசுகிசுக்க அவளின் வெட்கத்தையே பதில் என எடுத்துக்கொண்டு அவளை மேலும் நெருங்கி கையில் அவள் மதி முகத்தை ஏந்தி மென்மையாக இதழ் போர் நடத்தினான் அவள் இதழுக்குள். மெல்ல மெல்ல தன் வாசம் இழந்தவள் அவனின் செய்கையின் சுகம் அறிந்து அதற்கு தானும் ஈடு கொடுக்க அவனின் பின்னந்தலைக்குள் கையை விட்டு அலைபாய விட்டிருந்தாள்.

இவர்களின் செயலை கண்டு நாணி நிலாமகளும் தன் காதலன் நினைவில் தன்னை தொலைத்து மேகங்களை அள்ளி தன்னை மூடி வெட்க பட்டுகொண்டாள்.

காற்றே இவர்களுக்கு மூச்சு வழங்க வரிசை கட்டி நிற்க, தன்னவள் மூச்சுக்கு சிரம படுவதை உணர்ந்தவன் மனமில்லாமல் விடுவிக்க அவளது முகமோ செம்பருத்தி பூவென சிவந்து இருந்தது. அன்று குறைபாடு கூறிய அவளது இதழ்கள் இன்று நிறைவானது போல ஒரு எண்ணம் அவனுக்கு. மேலும் அவனை பார்க்க முடியாமல் தன்னவனின் மார்புக்கூட்டுக்குள் தன்னை பொதித்துக்கொண்டாள். அவனும் இறுக்கி அணைத்திருந்தான். இந்த ஏகாந்த நிலையை இருவரும் கலைக்க விரும்பவில்லை. இருவருக்குள்ளும் பேச வேண்டியது நிறைய இருந்தாலும் இதை இப்போது மனமார ஏற்றுக்கொண்டனர்.

அவளது பிரத்யேக நறுமணத்தை மூச்சால் சுவைத்த படியே அவனது விரல்கள் அவளது வெற்றிடையில் விளையாட, அவள் தடுக்க நினைத்தும் அவளால் தடுக்க முடியாமல் அவனது தொடுகையை விரும்பி ஏற்றது அவளின் அகமும் புறமும். அவன் குனிந்து தன்னவளின் கழுத்து வளைவில் முகம் பதித்து முத்தம் வைத்து காதில் "மேல தொடரட்டுமா? " என அவனது வசீகரம் பொழியும் வார்த்தைகளால் கிசுகிசுக்க அவள் பதற்றத்தில் என்ன சொல்வது என தெரியாமல் "கரண்ட் வரட்டும்"என்றாள். தேவையே இல்லாத கரண்ட்க்கு இருவரும் காத்திருந்தனர்.

இதுவும் சில நொடிகளே என்பது போல இந்த காத்திருப்பும் சில நொடிகள் தான் நடைபெற்றது. தன்னவளை கையில் ஏந்தினான். பதறியவளை கண்டு, "நாம ரெடியா இருப்போம் வந்தவுடனே ஆரம்பிக்கலாம்" என கண்ணடித்து சிரிப்போடு கூற அவள் அவனின் சிரிப்பில் மதி மயங்கி போனாள். அவளை பூ போல் தூக்கியவன் உள்ளே சென்று பெட்டில் கிடத்திய நேரம் அவர்கள் எதிர்பாத்து காத்திருந்த மின்சாரமும் வந்தது. அவளின் பொன்னிறம் கலந்த மேனியை பார்வையால் மீண்டும் ஒரு முறை அளந்துவிட்டு விளக்கை அணைத்தான். அருகில் சென்று படுத்தவன் படபடப்புடன் படுத்திருந்தவளின் நெற்றியில் முத்த அத்தியாயத்தை ஆரம்பித்தான். அப்போது "சிறிது நேரம் பேசலாமே" என அவளும் கொஞ்ச நேரத்திலிருந்து முயற்சித்து இப்போதான் அந்த குரல் அவனின் செவி அறையை எட்டியது. சரி என விலகி, அவளை தன் வெற்று மார்பின் மேல் போட்டுகொண்டு அவனே கேட்டான். "நீ உனக்கு என்ன புடிக்கும்னு சொல்லு" என கூற அவள் சகஜம் நிலைக்கு சென்று கூற ஆரம்பித்தாள். கொஞ்சம் நிறுத்தி மீண்டும் தொடர போனவள் அவனை பார்த்து அதிர்ந்தாள். அவனோ அவளது சொல்லை கேக்காமல் அவளின் கண்கள் பேசும் மொழியையும் அவள் பேசுவதற்கு ஏற்றார் போல நடனமாடும் ஜிமிக்கியையும் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க, கடைசியில் இதழுக்கு வந்தான். அதரமோ பேசி பேசி வறண்டு கோடுகாள் தெரிய அதை ஈரப்படுத்தி குளிர்விக்கும் எண்ணத்திற்கு உயிர் கொடுத்து இதழை சிறை செய்தான். அவள் எதிர்பாக்காததால் விழி விரிய இருந்தாள். அவன் எல்லைகளை மீற அவளோ கண்களாலே "வேண்டாம் வேண்டாம்" என இறைஞ்ச, அதை படித்தவன் அவளிடம் கேட்க அவளும் "இப்போ வேணாமே" என கூற அவளை விட்டு விலகி அவளுக்கு முதுகு காட்டி படுத்துகொண்டான்.

இனி தொடர்வது ஊடலா அல்ல கூடலா என்பதை அடுத்த பகுதியில் பாப்போம்.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 24

ராகேஷ் அந்த இரவில், 'நாம் பழி தீர்க்க வேண்டிய கடமை இன்னும் முடியல' என நெஞ்சில் வஞ்சகம் புதைத்து கொண்டிருந்தான். அவனது அப்பா, "என்னடா என்ன ஆச்சு ஏன் இவ்ளோ கோபமாக இருக்க?" என கேட்க அவனோ, "எல்லாம் உங்க தம்பிதான் டாட்" என கூற அவரோ அவன் 'என்ன செய்தான் அவன் நம்ம டீலுக்கு ஒத்துக்கலயா?" என வன்மத்துடன் கேட்டார். நான் அவரிடம் சென்று, 'உங்க சொத்துக்கு வாரிசு நானாக இருக்க ஆசைப்படுகிறேன்" என கூறியபோது அவர் "நான் இருக்கும் வரையில் இந்த சொத்து உனக்கும் இல்லை உங்கப்பனுக்கும் இல்லை. விஷ்ணு இல்லனா என்ன என்னோட வாரிசா நான் வளர்த்த புள்ள என்னோட புள்ள வர்ஷித் இருக்குறவரைக்கும் உனக்கு அந்த கவலை வேணாம் நாங்களே பாத்துக்குறோம் எனக்கு அப்பறம் என்னோட வர்ஷித் பாத்துக்குவான் கூடிய சீக்கிரமா என்னோட சொத்துக்கு அவன்தான் வாரிசுன்னு அறிவிப்பேன்" என திமிராகவே பதிலளித்தார்.

ஏற்கனவே சுப்பிரமணியனிடம் ராகேஷ் வந்து துக்கம் விசாரித்து சென்றான். எந்த ஒரு நல்ல கெட்ட விஷயத்திலும் பங்கெடுக்காதவன் எதற்கு இப்போ வந்தான் என குழப்பமாய் இருந்தவருக்கு வர்ஷித் வந்து விஷ்ணுவின் இறப்புக்கு ராகேஷ் தான் காரணம் என சொன்னபிறகுதான் புரிந்துகொண்டார் அவன் இப்படி நடிக்கிறான் என. என்ன ஆனாலும் சொத்து மட்டும் அவனிடம் போகவே கூடாது வர்ஷித்தை வாரிசாக அறிவிக்க வேண்டும் அவன் சம்மதிக்கவில்லை என்றாலும் ஒத்துக்கொள்ள வைக்கணும் என முடிவு கொண்டார். இதனால் வர்ஷித்தை பழி வாங்க அடி போட்டான் ராகேஷ். அவனையும் அவன் குடும்பத்தையும் அழிக்கவேண்டும் என திட்டம் தீட்டினர் ராகேஷும் அவனது அப்பாவும் அந்த அடர்ந்த இரவில்.

அங்கு ஊடலில் முடிந்த அவர்களது ஆரம்பமே இல்லாத கூடலை நினைத்து இருவரும் விலகி படுத்தனர். ஆதிகா அவளுக்கு முதுகுகாட்டி படுத்திருக்கும் வர்ஷித்தின் முதுகை பார்த்துக்கொண்டிருந்தாள். 'ஐயோ சற்று நேரத்திற்கு முன் எப்படி எல்லாம் நடந்து கொண்டான், சாமியார் என்ற எனது கணிப்பை பொய்யாக்கி விட்டானே. ரொமான்டிக்கா பேசுறான், ஆசையா முத்தம் எல்லாம் கொடுத்தானே' என அவனின் செயலை நினைத்துக்கொண்டே அவன் முத்தமிட்ட தனது இதழை வருடி பாத்தாள், வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது. 'புள்ள ரொம்ப ஏமாந்து போயிட்டே, அத்தை இதுக்குத்தான் புடவை கட்ட சொன்னாங்க போல' என நினைத்து சிரித்துக்கொண்டாள். 'ரொம்ப ஆசையா வந்தானே சொன்ன ஒரே வார்த்தையிலே இப்படி திரும்பி படுத்துட்டான்' என அவனுக்கு வருத்தம் கொண்டாள். 'நான் ஏதோ ஒரு பதட்டத்துல, அடுத்து எப்படி எதிர்கொள்ள போகிறோம்னு ஒரு பயத்துல தானே இப்படி சொன்னேன், அதுக்கு பொசுக்குன்னு திரும்பி படுத்துக்குவானா ஐயோ இது என்ன, இப்போ நாமளே அவதி படுகிறோமே'. இவன் முன்னாடியே சொல்லிருந்தா அதுக்கு தயார் ஆகியிருப்போமோ... என ஒரு பக்கம் நினைக்க ச்ச இது என்ன பரிச்சையா தயார் ஆக என மறு பக்கம் தன் நிலையை எண்ணி மானசீகமா தலையில் அடித்து இதுக்குமே அவனை குற்றம் சாட்டினாள்.

முடிவுக்கு வந்தவளாக சரி அவன்கிட்ட பேசுவோம் கோபப்பட்டா என ஒரு கணம் யோசித்தவள் பரவாயில்லை பேசி சமாளிப்போம் என உறுதியாக வரு மாமா என கூப்பிட அவளின் பரிதாபம் வார்த்தை வெளி வாராமல் சதி செய்தது. மீண்டும் அவள் அழைக்க அவனுக்கு அவள் ஏதோ முணுமுணுப்பது போல் தோன்றியது. அவளை தீண்டி அவனுக்குள் இருந்த உணர்வுகள் எழும்பி பாதி நேரத்தில் அது கிடைக்காமல் போக உணர்வுகள் எல்லாம் பேயாட்டம் போட அதை அடக்க முடியாமல் அவன் திணறவே அவளுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டான்.

அவள் கூப்பிடும் அவன் திரும்பவில்லை என்றதும் செய்வதறியாமல் திகைத்து கடைசியில் அவனை சமாதானம் செய்து தன்னை கொடுக்க முடிவு செய்தவள் அவனின் வெற்று முதுகை கட்டிக்கொண்டு நடுமுதுகில் முகம் புதைத்து முத்தம் கொடுத்தாள். அவளின் தளிர் விரல் அவனது மார்பில் விளையாட அவனுக்கு பெரும் சோதனையாக இருந்தது. "என்ன" என்றான் மொட்டையாக, "என்ன என்னனு கேட்டா நான் என்ன சொல்றது" என அவளும் பதிலுக்கு கேட்டாள். தீடிரென்று ஆதிகாவை தனக்கு முன் பக்கம் கொண்டு வந்து அவளை கைவளைவுக்குள் வைத்துக்கொண்டு காதில் மீசை முடி உரச "என்ன" என்று மெதுவாக கேட்டான். பெண்ணவளோ மெல்ல மெல்ல சுயத்தை தொலைக்க ஆரம்பித்தாள். "சாரி" என்றாள் இருவரது முகமும் உரசும் அளவில் அருகில் இருந்தது. இருவருக்கும் எதிர்திசையில் உள்ளவரின் வெப்பம் சுமந்த மூச்சு காற்றும் இருவரையும் தொல்லை செய்தது.

எதற்கு என அவன் கேட்க "நீங்க கோச்சிக்கிட்டிங்கள அதுக்கு தான்" என கூறும்போதுதான் தெரிந்தது தான் கோபித்துக்கொண்டுள்ளதாக நினைத்துள்ளாள் என்று அவனுக்கு. 'சரி இதையே மைண்டைன் பண்ணுவோம்' என எண்ணி "இது சாரியெல்லாம் பத்தாது" என்றான் ஒரு கள்ள சிரிப்புடன் அவளோ, 'என்ன செய்ய' என முழிக்க, "நீ ஏன் நான் சொன்னவுடனே விட்டுட்டு தள்ளி போன? " என கேட்க வர்ஷிதோ, "இது என்னடி வம்பாக இருக்கு நீதான வேணானு சொன்ன" என அவன் மறு கேள்வி கேட்டான். "ஆமா நான் சொல்வதை அப்படியே கேட்பது போல் சொல்கிறாய். ஏற்கனவே என்கிட்ட கேக்காமதான டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ண இதுல மட்டும் என்ன நான் சொல்றத கேட்டேனு சொல்ற" என அவனையே குற்றம் சொல்லி பேசினாள். வர்ஷித் "இப்படி மாறி மாறி பேசும் உனக்கு தண்டனை கொடுக்கணும்" என வேற அர்த்தத்தில் சிரிப்புடன் கூற அவளோ "குடு குடு" என அதே அர்த்தத்தில் பதில் தந்தாள் அவனை பார்த்த படியே. காதல் காமத்தை தூண்டும் காமம் காதலுக்கு வழி வகுக்கும் என்பதை மனதில் வைத்து அவனுக்கு தன்னை கொடுக்க முடிவு செய்துவிட்டாள் வருவின் ஆதிமா.

என்ன தண்டனை கொடுக்கலாம் என யோசிப்பது போல பாவனை வர்ஷித் பாவனை செய்ய, அவள் சட்டென்று எம்பி உதட்டில் முத்தம் பதித்துவிட்டு அவனது மார்பில் அப்பிக்கொண்டாள். அவள் விட்ட குறையை அவன் தொடர்ந்தான்.

இதழை சிறையில் எடுத்து அவளின் உயிரை அவன் உயிரினும் விலங்கில் பூட்டி காதலே தீர்ப்பு சொல்லி காமத்தை தண்டனையாய் வழங்கியது.

அவன் வலிய கரம் கொண்டு மென்மையே உருவான பூவை பதம் பார்த்தான். அந்நேரத்தில் அவள் இவ்வுலகிலே இல்லை என்பதை புரிந்து கொண்டான். தென்றல் தீண்டுவது போலவும் காற்று மெல்ல அறைவதை போலவும் அவனின் சித்தம் பித்து புடிக்க காரணமானவளை தீண்டினான். ஈருடல் ஒர் உயிர் என்ற இலக்கிய வரிக்கு சான்றாக மாறினார் இருவரும். ஒவ்வொரு அசைவிலும் ஆதிமா என்ற பெயரையே வேதம் போல ஜெபித்து கொண்டிருந்தான். இருவரும் இருளில் அதிசயத்தை தேடி ஒருவர் தன் இணைக்குள் மாயமென மறைந்து தங்களை தொலைத்து இரவை இனிதாக்கினர்.

பிறகு அவளுக்கு தன்னால் வந்த சோர்வை எண்ணி உணர்வுகளையும் அவள் வேண்டுமென்ற அணுக்களின் கூச்சல்களையும் அடக்கி நெற்றியில் இதழ் பதித்து அவள் சிகையினை கோதி அதன் வழி வரும் நறுமணத்தை தன்னுள் பரப்பிகொண்டிருந்தான். கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தங்களை வாரி இறைத்து, அவளை தன் மார்பு மேல போட்டுகொண்டு தூங்க வைத்தான். அவள் தூங்கவில்லை என்பதை அவளின் தளிர் விரல்கள் தன் மார்பில் சுரண்டிக்கொண்டிருப்பதை மூலம் அறிந்து கொண்டான்.

"ஆதிமா எனக்கு ஒரு கேள்வி" என சொல்ல அவளோ, "சொல்லுங்க மாமா" என கூறியவள் மறந்தும் அவனது முகத்தையும் கண்களையும் பார்க்கவில்லை வெட்கத்தால். "என்ன ஏன் வருமாமானு கூப்பிடுற? குறிப்பா மாமான்னு ஏன் கூப்பிடுற உங்க வீட்ல அத்தை அப்டி மாமாவை கூப்பிடுவாங்களா?"என கேட்டான். ஏனால் வசந்தாவின் பழக்கமும் இல்லை, 'இவளை யாராவுது மாமா எனதான் அழைக்க சொன்னார்களா?' என கேள்வி வரவே இதை கேட்டான். "உங்க ஊருக்கு போனபோது உங்க அக்கா அப்படித்தானே அண்ணாவை கூப்பிட்டாங்க எனக்கும் ஆசையா இருந்துச்சு சரி நீங்க ஆசைப்பட்டாலும் சொல்ல மாட்டீங்க அதான் நானே கூப்பிட்டேன் என்றாள்". அவனோ நெற்றியில் முத்தம் பதித்தான் தன் ஆசையை சொல்லாமலே செய்த அவனது ஆதிமாவிற்கு "இனிமேல் இப்படியே கூப்பிடு எனக்கும் புடிச்சிருக்கு" என கூறினான். "எப்போ மனசு மாறினீங்க மாமா? "என கேட்க அவளிடம் இன்று நடந்ததை கூறினான். "ஓஹ் அப்போ என்ன எவ்ளோ லவ் பண்றீங்க மாமா? " என சிறுபிள்ளை கணக்கில் கேட்க முழிப்பது அவன் செயலாகிப்போனது. 'எப்படி சொல்வது இதை அளக்க கருவியா உள்ளது? 'என யோசிக்கும் வேளையில் சொல்லுங்க என நச்சரித்தாள்.

முடிவுக்கு வந்தவனாய் 'உனக்கு படிக்கிறதுல தியரி புடிக்குமா இல்ல பிராக்டிக்கல் புடிக்குமா? "என கேட்க அவளோ, "என்ன மாமா நான் என்ன கேக்குறேன் நீங்க சம்மந்தமே இல்லாம இப்படி கேக்குறீங்க? " என பதில் வினாவை வைத்தவளிடம் "நீ சொல்லு நான் சம்பந்தம் இருக்கானு சொல்றேன்" என கள்ள சிரிப்புடன் கூற அவளிடமிருந்து பிராக்டிகல் என பதில் வந்தவுடன் "அப்போ என்னோட காதல ப்ராக்டிக்கலா உன்கிட்ட காட்டுறேன்டி" என மறுபடியும் அவளிடம் காதல் விளையாட்டை ஆரம்பித்தான். மீண்டும் மீண்டும் அவளை நாடி விடியும் தருவாயில் அவளை தூங்காவிட்டான். அவனின் காதல் செயல் முறையில் தன்னை முழுதும் தொலைத்திருந்தாள் பெண்ணவள்.

விடிந்து இருவரும் அப்பா அம்மாவிடம் ஆசி வாங்கிக்கொண்டு இருவரின் கூற்று படி கோவிலுக்கு சென்றனர் இந்த நாளை செலவழிக்க பல திட்டங்களை தீட்டிய படி. ஆனால் இவை யாவும் நடக்காமல் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்தவுடன் ஆதிகாவை வீட்டில் விட்டு கோபமாக ஆதிகாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றான்.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 25

கூடலும் காதலுமாய் இனிதே ஆரம்பித்தது அவர்களின் வாழக்கை. விடிந்தும் சில பல செல்ல தொந்தரவு வர்ஷித் செய்ய ஆதிகா தான் செய்வதறியாமல் போனாள். அந்த அழகான நாளின் தொடக்கத்தில் ஆதிகாவும் வர்ஷித்தும் பெற்றோரிடம் ஆசி வாங்கி கொண்டு, இன்று ஊர் சுற்றலாம் எனும் திட்டம் தீட்டி முதலில் கோவிலுக்கு சென்றனர். கோவில் என்றதால் வர்ஷித்தின் சிலுமிச வேலைகள் கொஞ்சம் மட்டு பட்டிருந்தது. சாமி தரிசனம் முடித்துவிட்டு இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அங்கு இருவர் ஆதிகா வர்ஷித்தை பார்த்து பதுங்கி ஒளிந்து மறைந்து செல்வது போல இருந்தது வர்ஷித்திற்கு. இதனால் யோசனையில் சிக்கினான். ஏன் இவர்கள் தங்களை பார்த்து ஒதுங்கி சென்றனர். அவர்கள் யாரென்று வர்ஷித் அறிந்துகொண்டான். மேலும் அவர்களின் தோற்றமே மாறி உள்ளதே என அவன் யோசிக்கும்போது ஆதிகாவின் பேச்சு இவனை யோசிக்க தடுத்தது.

சரி இவளை வைத்துக்கொண்டு எதுவும் யோசிக்க இயலாது. அதனால், அவசர வேலை என இவளை வீட்டில் விட்டு நாம் அவர்களை கவனிப்போம் என எண்ணி அவளை வீட்டிற்கு கூட்டி சென்றான். அவள் கோபப்பட்டாலும் சரி என ஒத்துக்கொண்டாள். வீட்டிற்கு போகும்போது அவளிடம் ஒரு கேள்வி கேட்டான், "நீ அத்தை மாமாகிட்ட டெய்லி பேசுறியா? " என அதற்கு ஆதிகா, "பேசுவேன். ஆனால், ஒருவாரமா நல்லா பேசல என்ன ஆச்சுன்னு தெரியல ஒருநாள் அவுங்க வீட்ல போய் பாத்துட்டு வரலாம்" என ஆதிகா சொல்ல அவன் வெறும் ம்ம் மட்டுமே பதிலை தந்தான்.

அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நினைத்துக்கொண்டான். வண்டியை வேகமாக செலுத்தி ஆதிகாவை வீட்டில் விட்டு அவர்களை சந்திக்க சென்றான். அவர்களின் வீடு பூட்டி கிடந்தது. அதுவுமில்லாமல் வாடகைக்கு விடப்படும் என பலகை இருக்க அதை பார்த்ததும் அவனுக்கு ரத்தம் கொதித்தது. அக்கம் பக்கம் வீட்டினரிடம் விசாரித்து, அவர்களின் தற்போதைக்கு இருக்கும் விசாலம் கேட்டு வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

அங்கு சென்று ஆதிகாவின் பெற்றோர் இருக்கும் வீட்டை பார்த்தவன் மனமுடைந்து போனான். கஷ்டப்படுகிறார்களே என வேதனை கொண்டான். "மாமா அத்தை" என கோபத்தோடு கத்தினான். அவர்கள் பயந்தது போலவே வர்ஷித் வந்து நின்றான். வெளியே சென்று இருவரும் வர்ஷித்தை அழைத்து வந்தனர். உள்ளே கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு "என்ன மாமா நடந்துச்சு? " என கேட்க அவரும் நடந்த அனைத்தையும் சொன்னார். "இத என்கிட்ட கூட சொல்ல வேணாம் ஆதிகாகிட்டயாவது சொல்லிருக்கலாம்ல மாமா" என ஆதங்கத்தோடு கேட்க "இல்ல மாப்பிள்ளை அது முறை இல்ல" என சொல்ல அவனோ, "அப்போ நாங்க எதுக்கு இருக்கோம் இதுக்குகூட வந்து நிக்கலனா" என பேசி உதவி வேண்டாம் என மறுத்தவர்களிடம் பேசி உதவி செய்தான்.

நடந்த எல்லாவற்றையும் கேட்ட வர்ஷித் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தான் ஏனென்றால் அதற்கு முழு காரணம் ராகேஷ் தான். ராகேஷ் அப்பாவிடம் ஆதிகாவின் பெற்றோர் திருமணத்திற்காக பணம் கடனாக வாங்கியிருந்தனர். அதற்கு வட்டி அதிகமாகவே போட்டு தேதி கேடு வேறு கொடுத்து இதற்குள் தர வேண்டும் என விதிமுறைகள் வேறு. இவருக்கு மட்டுமில்லை அவரிடம் பணம் தேவை என போய் நின்றாலே இது தான். ஆதிகாவின் பெற்றோரால் தேதி கடந்தும் பணம் தர முடியாமல் போக வீட்டை எழுதி வாங்கிக்கொண்டனர்.

இதற்கு வர்ஷித் பண உதவி செய்தான் வீட்டையும் மீட்டனர். "கொஞ்ச நாள் கழித்து திருப்பி தருகிறோம் மாப்பிள்ளை" என கூறிய மாமாவிடம் "உங்க வீட்டுப்பிள்ளை இதற்கு உதவி செஞ்சா நீங்க கணக்கு பாப்பிங்களா மாமா" என கேட்டான். அவர்களும் அவனது குணத்தை எண்ணி மகிழ்ந்தனர். "சரிங்க மாப்பிள்ளை திருப்பி தரல" என அவர்களையும் இவனது வழிக்கு கொண்டு வந்து விட்டான்.

அன்றே வீட்டையும் மாற்றினர். எல்லா பொருளையும் வீட்டிற்கு கொண்டு வர வர்ஷிதே அவர்களுக்கு பக்க பலமாக இருந்து உதவி செய்தான். மாறனும் அவரது தாரமும் முன்பு இருந்த வர்ஷித்திற்கும் இப்போது உள்ள வர்ஷித்திற்கும் உள்ள மாற்றத்தை உணர்ந்து மகிழ்ந்தனர். வர்ஷித் ஆதிகாவின் அறைக்கு வந்தபோது அவர்களின் முதல் விழிகள் சந்திப்பை நினைவு கூர்ந்து நேத்து நிகழ்ந்த கூடலை எண்ணி வெட்க பட்டுப்போனான்.

அவனின் உரிமையான அத்தை மாமா என்ற அழைப்பும் அவன் செய்த உதவி மூலம் நீங்கள் எனது அப்பா அம்மா போல என கூறிய மருமகனை பார்த்து பூரிப்பு அடைந்தனர்.

"அத்தை மாமா நான் போய்ட்டு ஆதிகாவ இங்க அழைச்சிட்டு வரேன், அவ உங்கள பார்க்கணும்னு சொன்னா, அவ வரதுக்குள்ள வீட்ட பழைய மாதிரி மாத்திடுங்க, அவளுக்கு இங்க நடந்தது எதுவும் தெரிய வேணாம் தெரிஞ்சா வேதனை படுவா" என கூற மகளை மருமகன் தாங்குவதை பார்த்த பெற்றோரின் மனசு குளுந்து போனது.

வர்ஷித் வீட்டுக்கு வந்தபோது ஆதிகா கோபத்தின் உச்சியில் இருக்க "முக்கியமான இடத்துக்கு போகணும்" என அவளை கிளப்பி அவளுக்கு மட்டும் தெரியாமல் அம்மா அப்பாவிடம் ஆதிகா வீட்டில் நடந்ததை கூறி அங்கு தங்கி வருவதாக கூறி ஆதிகாவை அழைத்து சென்றான். கோபத்தில் இருந்தவளை கார் ஓட்டுவதை ஒரு இடத்தில் நிறுத்தி அவசரமாக இதழ் முற்றுகை இட்டு சமாதானம் படுத்தினான். மாமியார் வீட்டில் முத்தம் தர முடியாது என்பதால் இங்கயே கொடுத்தான் அந்த கள்வன். அங்கு சென்றவளுக்கு ஆச்சரியம் தான். வர்ஷித் தன்னை இங்கு அழைத்து வருவான் என அவள் எதிர்பாக்கவே இல்லை. அங்கு அவளுக்கு கிடைத்த கவனிப்பை விட வர்ஷித்திற்கே அதிகம்.

அன்று இரவு சாப்பாட்டை முடித்த பிறகே வர்ஷித்தை பார்க்க சென்றாள் ஆதிகா. நாள் முழுதும் வர்ஷித் மாமனார் கூடவே பேசி பொழுது கழித்தான். ஆதிகா அம்மாவிடம் ஒட்டிக்கொண்டிருந்தாள். அவள் சந்தோசமாக வாழ்வதாக சொன்னபோது ஆதிகாவின் அம்மாவிற்கு எல்லையில்லா ஆனந்தம். யாருமே ஆதிகாவிடம் அங்கு நடந்ததை பற்றி கூறவில்லை. அறைக்கு வந்தவள் அவனிடம் சென்று அமர்ந்து, "என்ன பண்ண மாமா? " என கேட்க அவன் முழித்தான். "முழிச்சி ஏமாத்ததே, அப்பாவும் அம்மாவும் உன்னைய நன்றியா பாக்குறாங்க என்ன நடக்குது அப்பா அம்மாவை பத்தி எனக்கு தெரியாதா" என துருவி துருவி ஆதிகா கேட்டும் அவனிடத்தில் பதில் இல்லை. "என்கிட்டே எல்லாரும் எதையோ மறைக்கிறீங்க" என அழ தொடங்கும் மனையாளை சமாளிக்க வழி தெரியாமால் அவன் இந்த வீட்டை பற்றி மட்டும் நடந்ததை கூறினான். கூறி முடித்தபின் அவனுக்கு எந்த வகையில் நன்றி கூறுவது என தெரியாமல் போனாள் ஆதிகா அவனின் பாசத்தில் மூழ்கினாள். அவன் சொன்னவுடனே அமைதியாய் அவனது மார்பு மேல படுத்துக்கொண்டு அவன் கண்களையே நன்றியோடு பார்த்துக்கொண்டிருந்தாள். சட்டென அவனது கன்னத்தில் முத்தமிட்டு கழுத்தை கட்டிக்கொண்டாள். "என்ன வேணும்னு சொல்லு மாமா நான் செய்றேன்" என காதலுடன் மொழிந்தவளின் புடவையை விளக்கி அவளது வெற்று வயிற்றில் கை பதிக்க அவனுக்குள் கரைய தொடங்கினாள் பெண்ணவள். வர்ஷித், "ஆதிமா இந்த வயித்துல என்னோட உயிரு வளரனும். எனக்கு என்னோட அம்மா மாதிரி குழந்தை வேணும். என்னோட குழந்தைனு நான் உரிமை கொண்டாடணும். ஒரு அப்பாவா என்னோட குழந்தையை உள்ளங்கையில தாங்கணும்" என காதலுடன் உணர்ச்சி பெருக்கில் கூறியவன் மறந்தான் அது இருவரின் உரிமை இருவருக்கும் சொந்தம் என்பதை.

அவள் வெட்கத்தோடு சம்மதம் என கூறி அதற்கான வேலை பாடுகளில் இருவரும் இறங்கினர்.

நடுராத்திரியில் தன் மேல் தூங்குபவளை எழுப்பி, "ஆதிமா எப்போடி என்ன காதலிக்க ஆரம்பிச்ச?" என கண்களில் ஆர்வம் மின்ன கேட்டான். அந்த கேள்வியில் தூக்கமெல்லாம் தொலைந்து போக அவளும் தன் காதல் பூத்த கதையை கூற ஆரம்பித்தாள். "விஷ்ணு இறந்ததிற்கு அப்பறம் எனக்கு வாழவே புடிக்கல, வாழ்க்கையே வெறுத்து போச்சு. அத மறக்குறதுக்குள்ளே நம்ம கல்யாணம் ஏற்பாடு நடந்து எல்லாமே நடந்துருச்சு. எனக்கு பியூச்சர் நெனச்சி ரொம்பவே பயமா இருந்துச்சு. அப்போதான் உன்கிட்ட என்னோட பாஸ்ட் பத்தி சொல்ல வரப்போ நீயே தெரியும்னு சொன்ன, எனக்கு அப்பவும் பயமா இருந்துச்சு மத்தவங்க போல அதையே சொல்லி காட்டுவியோன்னு நீ அத பத்தி ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேக்கல, எனக்கு அது ரொம்ப பெரிய சந்தோசமா இருந்துச்சு, கொஞ்சம் நிம்மதியாவும் இருந்துச்சு. அப்பவே உன்மேல ஒரு நல்ல அபிப்ராயம் வந்துச்சு. என்னோட சம்மதம் இல்லனா கூட எனக்காக என்னோட சந்தோசத்திற்காகணு செஞ்சது என் மனசுக்கு இதமா இருந்துச்சு இப்படி உன்ன மாதிரி நான் யாரையும் பாத்ததும் இல்ல. ஆனால், நீ டிவோர்ஸ் தரேன்னு சொன்னப்போ மறுபடியும் என் சந்தோசத்திற்கு யோசிக்கும் ஒருத்தரை இழக்க போறோம்னு அவளது நெஞ்சை காட்டி இங்க வலிச்சது மாமா. சரி என்ன புடிக்கமாத்தான் டிவோர்ஸ் தர போறான்னு நெனச்சப்போ தான் தோணுச்சு நீ யாரையாவது லவ் பன்னிருப்பியோனு. அப்பறம் அதுக்கு ஒரு ஆதாரம் போல டைரி என் கைக்கு வந்தப்போ என்னோட உயிரே என்கிட்ட இல்லடா நாளைக்கு என்ன விட்டு நீ போய்ட்டா என்னோட வாழ்க்கையை நெனச்சி பயத்தோட தா அத படிச்சேன்.அப்போதான் நீ எனக்குள்ள வந்துட்டன்னு எனக்கு தெரிஞ்சது. உன்னோட காதலுக்கும் நான்தான் சொந்தக்காரிணு தெரிஞ்ச உடனே எனக்கு சொல்ல முடியாத சந்தோசம்டா வாழ்க்கையில ஒரு பிடித்தமும் வந்துச்சு உன்னைய விட கூடாதுனு முடிவு பண்ணேன் உன்கூட இருக்கும்போது பாதுகாப்பா நான் உணர்வேன்டா. நீதான் இனிமேல் என்னோட நிகழ்காலம் எதிர்காலம், எல்லாமே உன்னோடதான்டா என உணர்ச்சிபெருக்கில் கூறி முடித்தவளின் நெற்றியில் முத்தமிட்டு "லவ் யூ ஆதிமா" என்றான் வர்ஷித். அவனது இரு கன்னத்திலும் முத்தமிட்டாள் அவன் காதல் கூறியதற்கு பரிசாக.

"ஆனால், அத்தை மட்டும் இல்லனா நாம இந்தளவுக்கு சேர்ந்துருப்போமான்னு தெரியல" எனும் ஆதிகா கூற்றை வர்ஷித்தும் ஆமோதித்து "உண்மை தான் அம்மா யோசிச்சு தான் நம்மகிட்ட பேசிருக்காங்க சாதாரணமாவே அம்மா ரொம்ப ஜாலியான டைப், விஷ்ணு இருக்கும்போது காமெடியா இருக்கும் அப்பாவும் அம்மாவும் எங்ககூட பிரண்ட்ஸ் மாதிரி பழகுவாங்க" என அந்த நினைவுகளில் சிரித்தவன் சட்டென கண்ணீர் சிந்தி "அந்த கிரதாக போனதிலிருந்து பழைய அம்மாவ பாக்கவே முடில இப்போதான் நார்மலா இருக்காங்க" என அழ ஆரம்பித்தான். அவனுக்கு ஆறுதல் சொல்ல மொழியற்று நின்றாள் அவள். ஏனெனில், வர்ஷித் வாழ்க்கையில் இதுபோல ஒரு நல்ல பெற்றோர் குடும்பம் என எல்லாமே அமைந்தது விஷ்ணுவால் மட்டுமே. இன்று அவன் இல்லாத வாழ்க்கையை வர்ஷித் எப்படி எதிர்கொள்வான். அவனுடைய வலியை எந்த மருந்தாலும் சரி செய்ய இயலாது என்பதை அறிந்து கொண்டாள். வாழ காத்துக்கொடுத்தவனின் வாழ்வே இல்லாமல் போக இதனை வர்ஷித்தால் ஏற்கவே முடியவில்லை. இதற்கு காலம் தான் மருந்து தர வேண்டும். அவளே அவனுக்கு ஆறுதலாக மாறினாள். தாயாய் மாறி சேயாக அவனை தாங்கி கொண்டாள். இருவரும் கண்மூடி படுத்திருக்க வர்ஷித் சகஜ நிலைக்கு மாறி அவளது கையை இறுக்கமாக பற்றி கழுத்தடியில் வைத்திருந்தான். "நானே உன்னோட கைக்குள்ள இருக்கேன் இதுல ஏன் மாமா என்னோட கையை புடிச்சி வச்சிருக்க? " என கேட்க "நீ எங்க இருந்தாலும் உன்னோட கை இருக்க வேண்டிய இடம் இதுதான்" என அவளிடம் பதில் தந்து, "நான் சொன்ன மாதிரி எப்போ என்கிட்டே உன்னோட லவ்வ உன் வாயால சொல்ல போற? " என கேள்வி கேட்டான். அவளோ, "இன்னும் உன்ன நிறைய லவ் பண்ணனும் மாமா, அதுனால நேரம் வரும்போது சொல்றேன்" என புதிர் போட்டாள்.

இருவரும் நெறய மனம் விட்டு பேசினார். விடியற்காலையில் எழ போனவளை தடுத்து, "இப்போதானடி தூங்கவே ஆரம்பித்தோம் அதுக்குள்ள எந்திரிக்கிற? " என தூக்க கலக்கத்தோடு கேட்க, "பொதுவா பொண்ணுங்க அம்மா வீட்டுல தான் பிரீயா இருப்பாங்க. ஆனால், எனக்கு அப்டியே வேற மாதிரி மாமியார் வீட்ல தான் நான் சுதந்திரமா இருக்கலாம். இங்க அப்படி இல்ல, இங்க கொஞ்சம் சீக்கிரமா எழும்பனும்" என கூற சிரித்து விடுவித்தான். இருவரும் தங்கள் வீட்டுக்கு போகும்போது வர்ஷித் ஆதிகாவிடம், " நீ எத்தனை நாளைக்கு லீவு எடுத்திருக்கடி?" என கேட்டான். அவளோ, "நான் வேலைய விட போறேன் மாமா" என சொல்ல வர்ஷித், "ஏன்டி விடுற? " என கேட்டான். "இனிமேல் என்னோட முழு வேலை உன்ன பாத்துக்குறது தான் மாமா"என கூறி கண்ணடித்து அவன் மனதில் என்றும் அழியா காதல் மனைவி ஆனாள் வர்ஷித்தின் ஆதிமா.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 26

நாட்கள் வேகமாகவும் காதலாகவும் கரைந்து ஓடின வர்ஷித் ஆதிகாவிற்கு. சுப்பிரமணியன் எவ்வளவோ யோசித்து பார்த்தார் 'சொத்துக்கு உன்னை வாரிசாக அறிவிக்கப்போகிறேன்' என வர்ஷித்திடம் எப்படி சொல்வது என. ஏனென்றால், பள்ளி படிக்கும்போதே கொஞ்சம் விவரம் அறிந்த வயதிலேயே வர்ஷித் சொல்லிவிட்டான் நான் வளர்ந்து வரும்போது என்கையில் சொத்து எதுவும் நீங்க கொடுக்கக்கூடாது என. அன்றைக்கு விஷ்ணுக்கும் வர்ஷித்திற்கும் பெரிய வாக்கு வாதமே நடந்தது.

அன்று இரவு அனைவரும் சாப்பிடும்போது சுப்பிரமணியன், "சாப்பிட்டு எல்லாரும் இங்கயே கொஞ்ச நேரம் இருங்க பேசணும்" என்றார். எல்லாரும் சாப்பிட்டு முடித்து நடுக்கூடத்திற்கு வந்தனர். வர்ஷித்தை அழைத்து அருகில் அமரவைத்துக்கொண்டார் அவனது தந்தை. "என்னப்பா?" என அவன் கேட்க அவனின் கரம் பிடித்து "உனக்கு இது புடிக்காதுனு எனக்கு தெரியும்பா ஆனால் எனக்கு வேற வழி தெரில" என அவர் கூறும்போதே கொஞ்சம் யூகித்திருந்தான். "இனிமேல் என்னோட பொறுப்பெல்லாம் நீங்க ஏத்துக்கப்பா கம்பெனியை இனிய நீ பாத்துக்கோப்பா சொத்துக்கும் இனி நீ தான் வாரிசு" என அவர் கூற அவன் கையை அவரிடமிருந்து வெடுக்கென பிடுங்கி கொண்டு எழுந்தான். அவனின் வேகத்தை கண்டனர் திகைத்து போனர். "முடியவே முடியாதுப்பா" என கோபத்தில் கூறி பின் ஒரு நொடி எடுத்தவன் "இந்த ஊருல உள்ளவங்க உங்க பிரண்ட்ஸ் ஆபீஸ்ல உள்ளவங்க எல்லாருமே இதான் சொல்றாங்கப்பா நான் பணத்துக்காகத்தான் உங்ககிட்ட பழகுறேன்னு, இதுல நீங்க வேற இப்படி செய்தா எல்லாரும் சொன்னது உண்மைன்னு ஆகிரும்ப்பா இது எனக்கு வேணாம்ப்பா ப்ளீஸ்" என வேதனை நிறைந்த குரலில் கூறினான். "நீ கண்டவர்களுக்கு யோசிக்கிறத விட்டுட்டு உன்னோட அப்பாவுக்காக யோசி, எனக்கும் வயசாகிட்டே போகுது என்னால பிசினஸ்லாம் பாக்க முடியல இனிமேல் நீதான் இதெல்லாம் பாக்குற. என்னோட பிள்ளைக்கிட்ட தான இப்படியெல்லாம் சொல்ல முடியும் நீ எங்கள அப்பா அம்மாவா நினைச்சா இதுக்கு ஓத்துக்கோ" என சுப்பிரமணியும் கோபத்துடன் தீர்க்கமான முடிவாய் சொன்னார். அவனுக்கோ கோபம் தலைக்கேற, மடமடவென மாடி படியேறி சென்றான். அறைக்கு சென்று பால்காணியில் இரவு காற்றின் இனிமையை ரசிக்க முடியாமல் கோபம் முகத்தில் கொப்பளிக்க நின்றான். ஆதிகா இவற்றை பார்த்தவள் அத்தை மாமாவிடம் சென்று "அவர்கிட்ட நான் பேசி புரிய வைக்கிறேன் நீங்க கவலைப்படாம தூங்குங்க" என அவர்களை அனுப்பிவிட்டு மேல அறைக்கு வந்தாள். வர்ஷித் அருகில் சென்று நின்றுகொண்டாள். அவனோ, "நீ போய் படுமா நான் வரேன்" என கூறியும் அவள் நகராமல் நிற்க வேதனை நிறைந்த குரலில் "நீயாவது நான் சொல்றத கேளு ஆதிமா" என்றான்.

அவனை சமாதானப்படுத்த தண்ணீர் கொடுத்து அறைக்குள் உட்காரவைத்து வர்ஷித் கைகளை எடுத்து தன் கரங்களுக்குள் பொதித்து வைத்து, "உன் பேச்சை கேட்காமல் வேறு யாரு பேச்சை கேட்பேன், நான் சொல்றதையும் சிறிது பொறுமையாக கேளு மாமா" என கூற அவன் ஆதிமாவின் முகத்தை பார்த்து அமர்ந்திருந்தான். "அத்தை மாமா சொன்னதுபோல நானும் சொல்ல வரல. ஆனா, அவுங்க சொல்றதையும் கொஞ்சம் யோசிச்சு பாரு மாமா. உன்னோட முடிவுல யாரையும் கஷ்டப்படுத்திடாத" என அவள் கூற அவனோ "அப்படி நான் பார்த்தா அது எனக்கே கஷ்டம்டி எத்தனை பேரு என் காதுபட பேசிருக்காங்க தெரியுமா பணத்துக்காகதான் இந்த வீட்ல இவன் இருக்கான்ணு இதுனாலயே விஷ்ணுவோட சொந்தகாரங்ககூடெல்லாம் சண்டை, அப்பவே சொன்னேன் என்ன மறுபடியும் ஹாஸ்டல்ல விட்டுருங்கனு, அதுக்கு இங்க யாருமே ஒத்துக்கல அப்பவே சொல்லிட்டேன் சொத்துல எனக்கு பங்கு கொடுக்கக்கூடாதுனு ஆனால் இப்போ மறுபடியும் இப்படி பேசினா" என அவன் கூற ஆதிகா "இங்க யாருக்கும் நீ நல்லவன்னு நிரூபிக்க தேவை இல்லை மாமா. இப்போ மத்தவங்கள பத்தி யோசிச்சு அத்தை மாமாவ கஷ்டப்படுத்திடாத மாமா. சரி நீ முதல இந்த பிரச்சனையை பக்கத்துல வச்சி பாக்காம
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு அப்பறம் பாரு மாமா இதற்கான பதில் கண்டிப்பா கிடைக்கும்" என கூறி அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். அவனது நெஞ்சில் பலபேரின் பேச்சு வேதனையாய் உருமாறி அவனை வருத்த அவன் நிம்மதியை தேடி "எனக்கு நிம்மதி தரனும்னா அது உன்னால மட்டும்தான் முடியும் ஆதிமா" என கூறினான். அதன் அர்த்தத்தை புரிந்துகொண்டவளுக்கு முகம் சட்டென சிவந்து அவளின் வெட்கத்தை வெளியே காட்டி சம்மதத்தை தானாக வர்ஷித்திடம் கூறியது.

மஞ்சத்தில் சரிந்தவள் மீது தானும் சரிந்து பெண்ணவளை வேறு உலகிற்கு கொண்டு செல்ல தயாராகினான். இங்கு காதலும் காமமும் தாண்டி ஒரு வித ஆறுதல் இருந்தது. தனது மன காயத்திற்கு தன் காதலை மருந்தாக்கி கொண்டிருந்தான். காதலில் இன்பம் மட்டுமில்லை தன் இணைக்கு ஒரு துன்பம் என்றால் அதை குணப்படுத்தும் ஆற்றல் காதலுக்கே உடையது. அதுவே இங்கு நிகழ்ந்தது.

அவளிடம் கொஞ்சம் முரட்டு தனமாகவே நடந்துகொண்டான். அவனால் வலி ஏற்பட்டாலும் அதை பொருட்கொள்ளாமல் அவனது காயத்திற்கு மருந்தாகவே இருந்தாள். நடு இரவில் விடுவித்து தன்னவள் தன்னை விட்டு அகலாதவாறு தன் மீது போட்டுக்கொண்டு மன்னிப்புக்கோரி தூங்கவைத்தான்

விடிந்தும் தூங்குபவளை எழுப்ப மனம் வராமல் மெத்தையில் சீராக படுக்கவைத்து போர்வையை போர்த்திவிட்டு நெற்றியில் இதழ் பதித்து குளிக்க சென்றான். குளித்து வந்து பார்க்கும்போது விழித்திருந்தும் எழாமல் இருந்தாள். இரவு முழுவதும் தனக்கு ஆடையாக இருந்தவனை காணும் என்ற தவிப்பிலும் தனது ஆடை ஏதும் அருகில் இல்லை எனும் கோபத்திலும் போர்வைக்குள் படுத்திருந்தாள். அவன் வெளியே வந்தவுடன் "டேய் கடன்காரா! என்னைய எழுப்பிவிடாம எங்கடா போன ட்ரெஸ்ஸ கூட பக்கத்துல எடுத்து போடல" என கோபத்தில் கத்தியவளின் நிலைமையை பார்த்து விஷம சிரிப்புடன் நின்றான். 'பார்வைய நொண்டிப்புடுவேன்' என செய்கை செய்து முறைத்தாள். "சரியான ராட்சசி" என முணுமுணுத்து விட்டு அவசரத்தில் ஏதும் கிடைக்காததால் அவன் நேற்று அணிந்திருந்த ஆடையையே எடுத்து கொடுக்க அதில் வெட்கமடைந்தவள் அவனை தவிர்த்து செல்ல எத்தனித்தவளை இழுத்து நன்றி என கிசுகிசுத்து இதழில் மென்முத்தமிட்டு அவளை விடுவித்தான். அவள் முகமெங்கும் குங்குமம் போல ஆனது வெட்கத்தில்.

வர்ஷித் அம்மா அப்பா ஆதிகா என எல்லோரின் கூற்றை கொண்டு எல்லோரின் ஆசை படி நானே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன் என முடிவெடுத்து எல்லோரிடமும் கூறினான். இதில் அனைவர்க்கும் மகிழ்ச்சியே. சுப்பிரமணியன் நிம்மதியாக உணர்ந்தார். ஆதிகா தன்னவனை காதலுடன் பார்க்க, வர்ஷித் அப்பா அம்மாவிடம் ஆசி பெற்று பொறுப்பை ஏற்றுக்கொண்டான். இதனால் ராகேஷ் தன்னிடம் கண்டிப்பாக மோதுவான் என யூகித்து வைத்திருந்தான்.

நாட்களும் செல்ல இருவருக்கும் காதல் வாழ்க்கை அழகோவியமாய் இருந்தது.அன்று, ஒரு பிசினஸ் பார்ட்டி நடக்கவிருந்தது. அதற்கு, சுப்பிரமணியன் வர்ஷித்தை போக சொன்னார்.அவனது மறுப்பு அவரிடம் எடுபடவில்லை. ஆதிகாவையும் அழைத்து சென்றிருந்தான். அங்கு எல்லாம் சுமூகமா செல்ல, ராகேஷ் உருவத்தில் சோதனை ஒன்று வந்தது. ராகேஷ் அங்கு மது அருந்தி, அது போடும் தாளத்திற்கேற்ப தள்ளாடி வர்ஷித் அருகில் வந்தான். வர்ஷித்தும் ஆதிகாவும் ஜோடியாக நிற்க இதனை கண்ட ராகேஷ் அதிர்ச்சி அடைந்தான். "ஏன்டா நண்பனு சொல்லி உள்ள வந்து அப்பா அம்மாவ உரிமை கொண்டாடின, விஷ்ணு போனதுக்கு பிறகு சொத்துக்கு பொறுப்பெடுத்து கடைசியில அவனோட காதலியை கூட நீ விட்டுவைக்கலயா என்ன ஜென்மம்டா நீ உனக்கு அசிங்கமா இல்ல", "ஏன்மா உன் காதலன் தான் இவன்கிட்ட ஏமாந்தான் நீயும் ஏமாந்துட்டியா சரியான ஏமாத்துக்காரன்டா நீ"1 என கேவலமான பார்வையோடு இருவரிடமும் கூற வர்ஷித்திற்கு கோபம் தலைக்கேறியது. ஆதிகாவிற்கு அழுகையும் பயமும் முட்டிக்கொண்டது. வர்ஷித் கோபமாக ராகேஷின் சட்டையை பற்ற அவனும் தள்ளாடிக்கொண்டே வர்ஷித்திடம் சண்டைக்கு வந்தான். சண்டையிட்ட இருவரையும் பிரித்து கோபத்தில் கர்ஜிக்கும் வர்ஷித்தை கூட்டி போனாள் ஆதிகா.

காரில் வரும்போதும் கோபமாகவே காணப்பட்டான். ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ள வில்லை. ஆதிகா ராகேஷை சந்தித்த நாளுக்கு சென்றாள். அன்றுதான் ஆதிகாவும் விஷ்ணுவும் கடைசியாக சந்தித்தது. விஷ்ணு சென்னை போவதற்கும் முதல் நாள் இருவரும் சந்தித்து பேசி கொண்டிருக்கும்போது அங்கு ராகேஷ் வந்தான். அப்போ விஷ்ணு ஆதிகாவிடமிருந்து விலகி ராகேஷை கொஞ்சம் தூரம் கூட்டி சென்று பேசினான். என்ன பேசினார்கள் என ஆதிகாவிற்கு தெரியவில்லை. ஆனால் ராகேஷின் மிரட்டல் பாவனை செய்ய விஷ்ணு கோபத்துடன் அவனிடம் கத்திவிட்டு வந்தான். கடைசியாக ராகேஷ் ஆதிகாவை பார்த்து ஏளன பார்வையை வீச அவள் கூனிக்குறுகி நின்றாள். அவளுக்கு அர்த்தமறியா பயம் தொற்றிக்கொண்டது. விஷ்ணுவிடம் அவன் யாரென கேட்டாள் அவன் அதற்கு "ராகேஷ்" என்றான். அப்பதிலே இனிமேல் அவனை பற்றி கேக்காதே என எச்சரிக்க அவள் மேல எதுவும் கேட்க வில்லை. நினைவிலிருந்து மீண்டவள் வீடு வர அறைக்குள் செல்ல அவளை தொடர்ந்து வந்த வர்ஷித், "ஏண்டி என்ன தடுத்த ஏன் என்ன தடுத்த இன்னைக்கு அவன கொன்னு போட்டுருப்பேன்டி" என கோப உச்சியில் கத்த "ஆமா மாமா விட்டுருந்தா நீ கொன்னுருப்ப, அப்பறம் ஜெயிலுக்கு போவ நான் மட்டும் இங்க தனியா கிடக்கணும்" என புலம்ப வர்ஷித் சற்று அமைதியாக இருந்தான். "உனக்கும் ராகேஷிற்கும் என்ன பிரச்சனை? " என ஆதிகா கேட்க அவனோ அதிர்ச்சியில், "அவன உனக்கு தெரியுமா?" என பதில் கேள்வி கேட்டான். அதற்கு அன்று நடந்ததை கூறினாள். அவளே "இருவருக்கும் என்ன பிரச்சனை?" என கேட்க வர்ஷித் "ஒன்றுமில்லை" என சமாளித்தான். "ஒண்ணுமே இல்லாமதான் இவ்ளோ சண்டை போட்டிங்களா எனக்கு இப்பவே உண்மை தெரியணும்" என விடாப்பிடியாக கேட்க, வர்ஷித் பலமுறை இல்லை என சொல்லி ஓய்ந்து போன பிறகு சொன்னான் எல்லாவற்றையும் விஷ்ணு இறப்பு, சொத்து பிரச்சனை, ஆதிகாவின் பெற்றோர் கடன் பிரச்சனை என எல்லாமே கூறினான். அவளோ அதிர்ச்சியிலும் கோபத்திலும் அவனின் சட்டையை பிடித்து உலுக்க ஆரம்பித்தாள். "ஏன்டா இத என்கிட்டே மறச்ச, இவ்ளோ நடந்திருக்கு என்கிட்ட சொல்ல தோணாலய உனக்கு, ஏன் விஷ்ணு மேல மறுபடியும் பீலிங் வரும்னு நெனச்சி சொல்லலையா, என்ன சந்தேக படுறியா, என்னோட காதல சந்தேக படுறியா" என ஆக்ரோஷத்திலும் ராகேஷ் ஏதும் வர்ஷித்தையும் செய்திடுவானோ என்ற பயத்திலும், இத்தனை நடந்தும் என்கிட்டே சொல்லலையே என ஆற்றாமையிலும் நிதானமில்லாமல் தான் என்ன பேசுகிறோம் என்பதுகூட தெரியாமல் பேச, இதுக்கு மேல் விட்டால் பெரிய பிரச்சனை வந்துவிடும் என ஆதிகாவை இழுத்து அனைத்து இதழால் சிறையிட்டான் அவளது கோபத்தையும் இதழையும். முதலில் திமிறினாலும் பிறகு அவனுள் அடங்கி போனாள். சில நொடிகளில் விடுவித்தவன் ரத்தம் கசியும் வாயோடு நின்றவளை மெத்தையில் பிடித்து தள்ளிவிட்டு அங்கையே தலையை கையால் தாங்கிக்கொண்டு அமர்ந்துவிட்டான். அடுத்தடுத்து எல்லாம் உணர்வதற்குள் நடந்து முடிய அப்போதே ஆதிகா தான் பேசியதை உணர்ந்து தான் இப்படி தவறாக பேசிவிட்டோமே என வர்ஷித்திடம் மன்னிப்பு கூற நகர்ந்து வருபவளின் இரு தோள்களையும் அழுத்தி பிடித்து "நான் உன்ன சந்தேக படுறேனாடி சொல்லு சந்தேக படுறேனா" என அழுத்தமாக கேட்டு உலுக்க தான் விட்ட வார்த்தையின் வீரியம் அறிந்து அவனின் கேள்வியில் குற்றம் உணர்ந்து அழுக, "உனக்கு தெரிஞ்சா வேதனை படுவ, கஷ்டப்படுவ, அதுமட்டுமில்லாம பயப்புடுவ அதான்டி நான் உன்கிட்ட சொல்லல" என கூற அவளோ அவனை அணைத்தபடி "என்னைய மன்னிச்சிருங்க மாமா ஏதோ ஒரு பயத்துலயும், நீ என்கிட்டே சொல்லாம இத்தன நாளா உள்ள கஷ்டப்பட்டிருப்பியே அந்த ஆற்றாமை தான்டா இப்படி இந்த மாதிரி வார்த்தையா வெளில வந்துருச்சு என்னைய அறியாமலே சொல்லிட்டேன் மாமா என்ன மன்னிச்சிரு மாமா" என அழுதபடியே சொன்னாள்.

"எனக்கு தெரியாதாடி உன்ன பத்தி, அழுகாத நீ என்ன தப்பு பண்ண சாரி கேக்குறதுக்கு, நான்தானே உன்கிட்ட மறச்சி தப்பு பண்ணிட்டேன் நீ தான் என்ன மன்னிக்கணும்" என கூறியவனின் மனதில் நிம்மதி பரவியது, இத்தனை நாள் இதனை ஆதிகாவிடம் மறைக்கிறோமே என உள்ளுக்குள் வேதனை அடைந்தான் இப்போது அது இல்லை. "நீ பத்திரமா இரு மாமா, உனக்கேதும் ஆக கூடாது அவன் ஒரு கொடிய விஷம் ஜாக்கிரதையா இரு மாமா" என அவனின் முகத்தை வருடி சொன்னாள். இதுபோல் ஒரு துணை இருக்கும் துணைவி அமைந்தால் வாழ்வில் இது போல் எத்தனை விஷம் வந்தாலும் முறிக்கலாம் என நம்பிக்கை பிறந்தது வர்ஷித்திற்கு ஆதிமாவின் காதல் மீது.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 27

நாட்கள் மெல்ல நகர, கம்பெனியை நல்ல முறையில் வர்ஷித் நடத்தி கொண்டிருக்க ராகேஷ் இவன் மீது கொலை வெறியில் இருந்தான், 'என்ன செய்தாலும் எழுந்து கொள்கிறானே' என. அவனை வீழ்த்த பெரிய திட்டம் ஒன்று தீட்டி கொண்டிருந்தான். வர்ஷித்தும் எதற்கும் தாயாராக உள்ளேன் என்பதுபோல இருந்தான். ஏனெனில், ராகேஷ் ஏதாவுது இடையூறு செய்வான் என அவன் அறிந்தது தானே. அவனுக்கும் பாதுகாப்பு போட்டுகொண்டு வீட்டிலும் அனைவர்க்கும் பலத்த பாதுகாப்பை பல படுத்தி கொண்டான்.

அன்று காலை எழுந்ததும் முதல் ஆதிகா கொஞ்சம் சோர்வாக உணர்ந்தாள். அவன் கேட்டதிற்கு, "எல்லாம் உன்னால தான்டா, என்னைய எங்க நைட் முழுக்க தூங்க விடுற" என இல்லாத கோபத்தை பிடித்து வைத்து பொரிந்து தள்ளினாள். அவனோ அதை கண்டுபிடித்து போதும், "ஆதிமா இதுக்கு மேல கோப படுற மாதிரி நடிக்காத ரொம்ப கஷ்டப்டுற" என குறும்புடன் கூறி அவளிடமிருந்து அடி வாங்கி தப்பித்துக்கொண்டு குளியறைக்குள் புகுந்துகொண்டான்.

குளித்து முடித்து ஈர துவாலையுடனும் சொட்டும் நீரோடும் வந்தவன் படுக்கையை சரி செய்த ஆதிகாவை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டான். பயந்து நிமிர்ந்தவள் தன்னவன் என தெரிந்தும் வாயால் திட்ட ஆரம்பிக்கும்போது அவள் கழுத்தில் முகம் புதைத்து வளைவில் முத்தங்களை கொட்டி அவள் வாயை அடைத்தான். "ராட்சசி மோசமான அழகா இருந்து என்ன படுத்துறியே" என அவளை வசை பாட அவனது சொல்லிலும் செயலிலும் வெட்கப்பட்டு சிகப்பை அப்பிக்கொண்டாள். கடினப்பட்டு தன்னிலை அடைந்தவன், "இப்படி வெட்கப்பட்டா நான் என்னடி பண்ணுவேன் இன்னைக்கு வேற முக்கியமான வேலை இருக்கு" என கூற ஆதிகா வெட்கத்தை மறைத்துக்கொள்ள படுக்கையை சரி செய்ய ஆரம்பித்தாள். "ஏய் இதெல்லாம் வேண்டாத வேலை உனக்கு, எப்படியும் நாளைக்கு இது கசங்கி தான போகும்" என சிரிப்புடன் கூற வெகுண்டெழுந்து "சீ... காலையிலே பொறுக்கி மாதிரி தப்பா பேசுற மாமா நீ' என கூறி அவனை அடிக்க, அவளது கையை ஈஸியா பிடித்தபடி "அப்போ விடிய விடிய ரொம்ப நல்லது பண்றமோ" என யோசிக்கும் தொனியில் கூற இதற்குமேல் இருந்தால் நமக்குத்தான் கஷ்டம் என குளியறைக்குள் தன்னை புகுத்திக்கொண்டாள்.

கிளம்பி கீழே வந்த வர்ஷித் ஆதிகாவை தேடி சமயலறைக்குள் சென்றான். அங்கும் பின்னாலிருந்து அணைத்த படி "இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமா, உன்ன பாக்கவே ஏதோ புதுசா தெரியுது, உன்கிட்ட சிரிப்பு, வெட்கம் எல்லாமே அழகா இருக்கு ஆதிமா" என கன்னத்தில் முத்தமிட்டு நகர்ந்தான். அந்த மகிழ்ச்சியிலே அவனும் வெளியில் சென்றுவிட, அவளும் முக்கிய நிகழ்வு ஒன்றிற்காக சில பொருட்களை வாங்க சென்றாள்.

மாலை நேரத்தில் ஆதிகா மிகவும் ஆனந்தமாக காணப்பட்டடாள். இன்று இரவு நடக்கப்போகும் நிகழ்வை பற்றி அத்தை மாமாவிடம் கூற "அவனுக்கு தெரிந்தால் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான், கோப பாடுவான்" என அவளுக்கு உதவ தயங்க ஆதிகா, " ப்ளீஸ் எனக்காக நீங்க இத செய்யணும், என் ஆசைக்காக, கோபப்பட்டா திட்டு நான் வாங்கிக்கிறேன்" என கூற அவர்களும் குழந்தை போல ஆசைப்படும் மருமகளுக்காக சரி என உதவி செய்தனர்.

இரவும் வர்ஷித் வர அவன் களைப்பாக இருப்பதால் சீக்கிரமாக சாப்பிட்டு ஆதிகாவிடம் "நான் அறைக்கு போறேன் நீ சீக்கிரமாக வா" என கூறிவிட்டு சென்றான். அறைக்கு சென்றவன் 'என்ன ஆதிகாக்கூட பேசவே முடில இப்போ பேசலாம்' என காத்திருந்தவனை கொஞ்ச நேரத்திலே தூங்கவைத்து அவர்களுக்கு விதியே உதவி செய்தது.

வர்ஷித் உறங்க அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது போனில். யாரென்று பார்க்க அது ஆதிகாவாக இருக்க அதனை உயிர்ப்பித்து "என்னமா என்ன ஆச்சு இன்னும் என்ன பண்ற?" என தூக்க கலக்கத்தோடு கேட்க "ஆமா மாமா கொஞ்சம் வேலை இருந்துச்சு இப்போதான் முடிச்சேன் கரண்ட் வேற இல்ல. அதனால கீழ வந்து கூட்டி போ மாமா" என பயத்துடன் கூற அவனோ அவளை திட்டிக்கொண்டே போனில் வெளிச்சத்தை மூட்டி மாடிப்படிகளில் இறங்கி நடுக்கூடத்தில் நின்று "ஆதிமா எங்க இருக்க" என அவனது குரல் கேட்டவுடன், அவள் வீட்டில் உள்ள மெயின் பாக்ஸில் சுவிட்ச் ஆன் செய்து வெளிச்சத்தை வர வைத்தாள்.

வெளிச்சம் பரவ பரவ அவனது கண்ணில் தென்பட்டது எல்லாம் வண்ண வண்ண பலூன்கள்தான். கண்களை சுழல விட, வண்ண அட்டைகளில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் வரு மாமா" என எழுத்துக்களால் அவனுக்கு வாழ்த்துக்கள் இருந்தது.

இத்தனை வருடம் அவன் வெறுத்த நாள் இது, அம்மாவை நானே பிறப்பால் கொன்றுவிட்டேனே என அவனது பிறந்த நாளை கொண்டாடாமல் அன்று முழுதும் வருத்தத்தை
சுமந்தே திரிவான்.

கொண்டாட ஏற்பாடு செய்தாலும் பங்குகொள்ள மாட்டான். கோபப்படுவான் திட்டுவான் என பல அவதாரம் அன்று அவனுக்குள்ளிருந்து வெளி வரும். ஆனால் இன்று அந்த வெறுப்பெல்லாம் மறைந்து இருந்தது. அதன் காரணத்தை யோசித்துக்கொண்டிருக்கையில் மகிழ்ச்சி பாதி, மனக்கசப்பு பாதி, தன்னவள் தன்னை மகிழ்ச்சி படுத்தும் திட்டம் என எல்லாமே உருமாறி கண்ணீரை கன்னத்தில் தடம் பதித்தது.

வர்ஷித்தை ஆதிகா அணைத்து கண்ணீரை துடைத்து முதல் வாழ்த்து தெரிவித்து, நெற்றியில் இதழ் பதித்து, அழைத்து சென்று கேக்கை வெட்ட வைத்தாள்.
அவனது செயல் அவனுக்கே புதுசாக இருந்தது, அவனது பெற்றோருக்கு சொல்லவே வேண்டாம் அவ்வளவு மகிழ்ச்சி அவர்களுக்கு, அவனுடைய இந்த மாற்றத்திற்கு ஆதிகாவே காரணம் என நினைத்தனர். ஆனால், அவனுடைய மாற்றத்திற்கு இன்னொரு காரணம் உண்டு அதுவே அவனை மாற்றியது. அந்த காரணத்தை தான் அவனும் தேடிக்கொண்டிருந்தான்.

கேக்கை வெட்டி முதல் துண்டை எடுத்து "டேய் விஷ்ணு வாய திறடா" என கேக் துண்டோடு திரும்பியவனின் அருகில் இல்லாமல் அங்குள்ள போட்டோவில் அவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான் அவனது ஆருயிர் தோழன். ஏக்கமாக போட்டோவை பார்த்தவனை ஆதிகாவே நடப்புக்கு கொண்டு வந்தாள். விஷ்ணு உலகிற்கு தான் இறந்து மடிந்துவிட்டானே தவிர வர்ஷித்தின் மனதில் நட்பெனும் இடத்தில் எப்பவுமே அவனுக்கு அழிவு என்பதே கிடையாது, அவனது சுகதுக்கங்களில் எப்போதும் வர்ஷித்திற்கு விஷ்ணு துணை இருப்பான் என அவன் நம்பினான். இவற்றை பார்த்த பெற்றோருக்கு வருத்தம் ஏற்பட்டாலும் அதை மறைத்துக்கொண்டனர்.

பிறகு எல்லாரும் அவனுக்கு கேக்கை ஊட்டிவிட்டு அவனும் எல்லாரும் ஊட்டிவிட பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கினர் ஆதிகாவும் வர்ஷித்தும். அப்பா அம்மா அறைக்குள் சென்றவுடன் ஆதிகாவின் அனுமதி இல்லாமலே அவளை அள்ளிக்கொண்டு அறைக்கு சென்றான்.

உள்ளே சென்று உட்கார வைத்தவன், " ரொம்ப பிளான் பண்ணிங்களோ? " என சாதாரணமாக கேட்க அவளும் ஆமென்று பதில் தந்தாள் எங்கே திட்டுவானோ பயத்துடன். வர்சஷித் அவளின் எண்ணங்களுக்கு மாறாக சிரித்துக்கொண்டு "தேங்க்ஸ்டி பொண்டாட்டி" என அவள் கன்னத்தில் முத்தமிட அவனது செய்கை அவளுக்கு புதிதாகவும் திருப்தியாகவும் இருந்தது. "சரி சரி என் பரிச கொடு" என சிறுபிள்ளை போல அடம்பிடிக்காத குறையாய் கேட்க "நீங்க கொண்டாட மாட்டீங்க, திட்டுவீங்கன்னு மாமா அத்தை சொன்னாங்க அதான் நான் எதுவுமே வாங்கல" என இன்ஸ்டண்டாக ஒரு பொய்யை உண்மை போல முகத்தில் கோடி அப்பாவி தனத்தை கொட்டி கொண்டு கூறினாள். "அவனும் சரி விடு, எனக்கான பரிசை நானே எடுத்துக்குறேன்" என கண்ணடித்து இரு பொருள் பட பேச, மங்கையவள் மன்னவனின் மன ஓட்டங்களை படித்து வெட்கத்தை சூடி கொண்டாள். அவன் மறுநொடி தீவிரமான முக பாவத்தோடு அவளின் கரத்தை பற்றி "இவ்ளோ வருஷம் இந்த நாள்ல எங்க அம்மாவ நானே கொன்னுடேன்னு ரொம்ப வருத்தப்படுவேன் காரணமே இல்லாம எல்லார் மேலயும் கோப படுவேன். ஆனால் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, அதுக்கு காரணம் என்னன்னுதான் புடிப்படவே இல்ல" என அவன் உணர்ச்சியின் பிடியில் கூற ஆதிகா "ஏன்னா உங்க அம்மாதான் வந்துட்டாங்களே" என மொழிந்த மறுநொடி அவனின் கரத்தை தன் வயிற்றில் புதைத்து "இதுதான் நான் உனக்கு கொடுக்குற பரிசு, நீ கேட்ட பரிசு, உங்க அம்மா, மலர்மா உன்னோட உயிர் மூலமா என்னோட வயித்துல வளர ஆரம்பிச்சிட்டாங்க, அதான் நீ சந்தோசமா இருக்க" என தன் மணிவயிற்றில் தன்னவனின் வாரிசு உதித்ததை கண்ணில் காதலுடனும் வெட்கத்துடனும் கூற அவனது உயிரே உறைந்ததுபோல ஆனது மகிழ்ச்சியில் அவனுக்கு. கண்ணில் ஆனந்த கண்ணீர் வடிய தனது மாற்றத்தின் காரணமும் தெரிய வந்தது. தன் உயிர் சுமப்பவளின் மதி முகத்தை ஏந்தி மென்மையாக முத்தமிட்டான். அவளோ வெட்கத்திலிருந்து தப்பிக்க அவனது மார்பில் மறைந்துகொண்டாள். ஆனந்த மிகுதியில் பேச கூட சொல் தெரியாமல் அவளை கை வளைவுக்குள் வைத்து மௌனத்தாலே காதலை ஆண்டனர். சிறிது நேரம் செல்ல அவன் சிறைக்குள் இருந்தவாரே "பரிசு புடிச்சிருக்கா மாமா" என கேட்க வர்ஷித், " பரிசை பிடிச்சிருக்கு அத விட பரிசு கொடுத்தவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப தேங்க்ஸ்டி" என கூறி அவள் முறைப்பதை கண்டுகொள்ளாமல் இதழ் நோக்கி குனிய அவள் பதறியடித்து "ஐயோ வேணாம் அம்மா இருக்காங்க" என தீவிரமாக சொல்ல அவனோ திடுக்கிட்டு திரு திருவென வாயிலை பார்த்து சுற்றி பார்த்துவிட்டு எங்கே யாருமே இல்லையே என வினாவி பார்க்க அவள் தன் வயிற்றை நோக்கி கைக்காட்டி "இங்கேயிருந்து பாப்பாங்கள" என கூறி வர்ஷித்தின் முக போக்கினை கண்டு சிரிப்பை அடக்க வழியின்றி உதட்டை கடித்தும் அடக்க அக்கள்வனோ அவள் செய்த வேலையை தனக்கு இடம் மாற்றி கொண்டான். சில நொடி கழித்து விடுவித்து அவளது வயிற்றில் முதல் முத்தத்தை பதித்து பேச ஆரம்பித்தான். அப்போது உடம்பு சிலிர்த்து அடங்கிப்போனது அவனுக்கு."மலர்மா அம்மாடி" என கூறும்போதே அவன் கண்ணிலிருந்து நீர் அருவியாய் கொட்ட, அவனது கண்ணீரை துடைத்து, "மாமா அம்மாவோ பொண்ணோ யாரா இருந்தாலும் தன்னோட பையன் அப்பா அழுதா தாங்க மாட்டாங்க. அதுனால அழுகாம பேசு" என கூற அவளை பார்த்து புன்னகைத்தவன் "நான் அழலடி, ஆனந்த கண்ணீர் சரி அழல" என கண்ணீரை அழுந்த துடைத்து பேச ஆரம்பித்தான்.

"அம்மாடி என்ன பார்க்க 27வருஷம் கழிச்சு வந்துருக்கீங்க, ரொம்ப சந்தோசமா இருக்கு, சீக்கிரமா வெளில வாங்க உங்கள பார்க்க அப்பாவும் ஆதிகா அம்மாவும் காத்துகிட்டு இருக்கோம், இப்போது அம்மா எப்படி உங்கள பாத்துக்குறாங்களோ அதுபோல நீங்களும் அம்மாவுக்கு வலி தராம பாத்துக்கணும் சரியா, அம்மாவுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்க கூடாது சரியாமா" என கூறி முத்தமிட்டு தாயையும் குழந்தையையும் அணைத்துக்கொண்டு படுத்தான்.

"என்ன மன்னிச்சிருடி அன்னைக்கு உன்கிட்ட என்னோட குழந்தை வேணும்ணு சொன்னேன்ல அது தப்புனு அப்பறம் தான்டி புரிஞ்சது" என மன்னிப்பு கேட்க, "லூசு மாமா நீயும் நானும் வேறு வேறா இருந்தாதான் இது தப்பு, நீயும் நானும் ஒண்ணுதான மாமா இதுல உன் குழந்தை என் குழந்தை எல்லாமே ஒண்ணுதான் மாமா இனிமேல் இத பத்தி பேசாத சரியா" என கூறியவளிடம் பேசாமல் தன்னை புரிந்துகொள்ளும் இப்படியொரு அற்புதமான காதலும் அதற்கான பரிசும் படைத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தான்.

ஆதிகா "மாமா மலர் அத்தை போட்டோ இருக்கா? " என கேட்க அவனோ "இல்லையேமா" என கூற விடாமல் "அத்தை எப்படி இருப்பாங்கணு சொல்லு கண்டுபிடிக்கிற மாதிரி அடையாளம் சொல்லு அப்பதான குழந்தை பிறக்கும்போது அடையாளம் காண முடியும்" என ஆர்வமாக சொல்ல அவனோ வருத்தமாக "இல்ல ஆதிமா நான் நேர்லயும் பாக்கல, போட்டோல பாத்ததும் இல்ல, ஒரே ஒரு போட்டோதான் அதுவும் அப்பா வீட்ல இருக்கறதுனால நான் பாத்ததில்லை, நானும் அப்பா ஜாடை அம்மா எப்படி இருப்பாங்கன்னு தெரிலமா" என வருத்தம் கொண்டு கூற அவளோ தன்னவனின் சோகத்தை மாற்ற "சரி விடுமாமா பத்து மாசத்துல கண்டிப்பா உங்க அம்மாவ பாக்கலாம்" என நம்பிக்கையை கண்ணில் மின்ன விட்ட படி கூறியவளிடம் காதல் சிரிப்பை உதிர்த்து அணைத்து படி உறங்கினான்.

மறுநாள் விடிந்ததும் வர்ஷித் ஆதிகா சுப்பிரமணியன் வசந்தாவிடம் தாங்கள் பெற்றோர் ஆகப்போவதை கூறி ஆசி வாங்கினர். வசந்தா இருவரது நெற்றியிலும் முத்தமிட்டு வர்ஷித்திடம் "சொன்ன மாதிரியே செஞ்சு அம்மா பிள்ளைன்னு காமிச்சிட்ட கண்ணா" என கூற வெட்கப்படுவது அவன் முறையாற்று. ஆதிகாவிடம் "உன்ன நான் என் மகளாத்தான் பாத்திருக்கேன், ஆனால் இப்போ நீயே அம்மாவாகிட்டான்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்குமா" என கூறிய அத்தையை கட்டிக்கொண்டாள்.

இருவரும் கோவிலுக்கு சென்று கடவுளை தரிசித்து புது வரவிற்காக நன்றி கூறினர் படைத்தவனிடம். பிறகு, மருத்துவமனைக்கு சென்று ஆதிகா கருத்தரித்து இருப்பதை உறுதி செய்து கொண்டனர்.

வீட்டிற்கு வந்த ஆதிகா பெற்றோருக்கு அழைத்து தகவல் கூறினாள். வர்ஷித்தும் ஊருக்கு போன் செய்து மாமா வனிதா அக்கா, அருண் மற்றும் ஆகாஷிடம் இதனை பகிர்ந்து கொண்டு வாழ்த்துக்களை வாங்கி மகிழ்ந்தான்.

இரு இல்லங்களிலும் ஆதிகாவை கையில் வைத்து தாங்கினார். வர்ஷித்தை சொல்லவே வேணாம், தன் இதய அரசியை உயிரில் வைத்து பார்த்துக்கொண்டான். குழந்தையுடன் பேசுவது தினமும் வர்ஷித்திற்கு வாடிக்கை ஆகிப்போனது. அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்தான். அவனே மாதம் மாதம் மருத்துவரை காண அழைத்துப்போவான். தெரியாததையும் தெரிந்துகொண்டு அவளுக்காக பார்த்து பார்த்து செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டான் ஆதிகாவின் மனம் வென்ற மன்னவன்.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 28

ஆதிகா கருவுற்று சில மாதங்கள் கடந்திருந்தது. ஆதிகா, வீட்டில் உள்ளோரின் கவனிப்பிலும் அன்பிலும் தன்னவன் தன் மீது கொண்ட காதலிலும் அவள் பூரிப்பு அடைந்திருந்தாள். நடுராத்திரியில் எழுந்து பசிக்கிது என்றாலும் முகம் சுழிக்காமல் சமைத்து தருவான்.

அன்றும் அதுபோல தான் வர்ஷித் அலுவலகம் கிளம்பி கொண்டிருந்தான். ஆதிகா அவன் தேவையை எல்லாம் மெதுவாக பூர்த்தி செய்துகொண்டிருந்தாள். கடைசியில் அலுவலகத்திற்கு கிளம்பும்போது ஆதிகாவிடம் சொல்லிவிட்டு கீழே குனிந்து மேடிட்ட வயிறே தன் உலகம் என உயிர்வாழும் தன் சிசுவிடம் "மலர்மா அப்பா ஆபீஸ் கிளம்பிட்டேன் அம்மாவ பாத்துக்கோங்கடா, போயிட்டு வரட்டா எங்க பாய் சொல்லுங்க" என வயிற்றில் கை வைத்து சொன்னவன் எழ போகையில் சிசுக்கு முத்தமிட தான் வளர்ந்துவிட்டேன் என்பதை தெரிவிக்க வர்ஷித்தின் உயிர் ஆதிகாவின் வயிற்றுக்குள்ளிருந்து எங்கே அம்மாவுக்கு வலிக்குமோ என்ற பயத்தில் மெல்ல கை கால்களை அசைத்தது. அதனை உணர்ந்த இருவருக்கும் எல்லையில்லா ஆனந்தம். அந்த தருணத்தை மூளையில் பதியவைத்துக்கொண்டனர்.

அதன் பிறகு, வர்ஷித் மலர்மா என ஆரம்பித்தாலே குழந்தை தன் அசைவை காட்டும். இதை பார்வையாளராக பார்க்கும் ஆதிகா, "கண்டிப்பா உள்ள இருக்குறது மலர்மா தான்டா, உங்க அம்மாவே உன்ன பார்க்க திரும்பி வர போறாங்க' என சொல்லி அவனை அணைத்துக்கொள்வாள்.

ஒருநாள் அவசரமாக ஒரு மீட்டிங் காரணமாக வர்ஷிதே சென்னை போகும் நிலைமை வந்தது. ஆதிகா எவ்வளவு தடுத்தும் வர்ஷித் கிளம்பினான். அவளும் வர்ஷித்தை அரை மனதோடு அனுப்பி வைத்தாள். ஆதிகாவிற்கு ராகேஷை நினைத்து பயம் தொற்றிக்கொண்டது. வர்ஷித்தும் ஆதிகாவை பிரிய மனமில்லாமல் பிரிந்து பெற்றோர்களிடம் பத்திரமாக பார்த்து கொள்ளும்படி கூறி சென்றான்.

வர்ஷித்தின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க ஒரு வேலை செய்ய வேண்டும் என திட்டம் ஒன்று போட்டிருந்தாள். அதை அவன் இல்லாத மூன்று நாட்களில் செய்தாள். அவனும் அவளுடன் இல்லாத குறை ஒன்றுதான் குறையே தவிர மணிக்கொருமுறை இவனை நியாபகப்படுத்தும்படி ஒரு போன் கால் வர்ஷித்திடமிருந்து ஆதிகாவிற்கு வரும். இருவரும் தனது துணை இல்லாமல் தவித்து தான் போனார்கள்.

மூன்று நாள் கழித்து திரும்பி வரும்போது இரவாகியிருக்க, அவன் வந்து பார்த்தபோது அவளது நிலையை பார்த்தவனுக்கு கண்ணீர்தான் வந்தது. கண்ணை அழுந்த துடைத்துகொண்டு உள்ளே சென்றான். அங்கு அவன் சென்னை கிளம்பும்போது கழற்றி போட்ட வியர்வை பூத்த சட்டையை அவள் அணிந்து கொண்டு தூங்கி கொண்டிருந்தாள். சென்று அவளை அணைத்தவாறு படுத்துகொண்டான். ஆதிகா அவனின் அருகாமையை உணர்ந்து அவனது வருகையை அறிந்து கொண்டாள். "மாமா சாப்பிட்டீங்களா? " என கேட்க "நான் சாப்பிட்டேன்மா, நீ எப்படி முழிச்ச" என ஆச்சரியமாய் கேட்க அவளோ இதழில் புன்னகையை உதிர்த்து "உன்ன தெரியாத மாமா, உன்னோட வாசனையை வச்சித்தான் கண்டுபிடிச்சேன், சரி தூங்கு மலர்மா முழிச்சிடுவாங்க" என கூறி அவனது நெற்றியில் முத்தமிட்டு அணைத்து கொண்டு உறங்க முயல, வர்ஷித் அவளது இதழில் மென்முத்தமிட்டு சற்று மேடிட்ட இருந்த மணிவயிற்றை தடவி குழந்தையோடு மூன்று நாளை ஈடுகட்டும் விதமாக பேசி முத்தமிட்டு அவளை அணைத்துக்கொண்டு உறங்கினான்.

சில மாதங்கள் கரைய, அவளது வயிறு கொஞ்சம் மேடிட்டும் அவளின் அழகு தாய்மையின் பூரிப்பால் அதிகமாயிருந்தது. அவனும் அருகிலிருந்தே அவளை பார்த்து ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்ய அவள் தன்னவனை நினைத்து மேலும் மகிழ்ச்சியாக இருந்தாள். குழந்தையின் அசைவை இருவருமே கொண்டாடினர். இருவருமே குழந்தையிடம் பேசுவதை வழக்கமாக கொண்டனர். குழந்தைப்பேறு பற்றின அவளது பயத்தை பேசி பேசியே குறைத்திருந்தான். ஒன்பதாம் திங்களும் நெருங்க, ஆதிகாவின் வளைகாப்பிற்கு நாள் குறித்து எல்லா வேலையும் நடந்து கொண்டிருந்தது.

வளைகாப்பிற்கு எல்லாரையும் அழைத்திருந்தான். ஊரில் உள்ள மாமா, அக்கா தம்பி என அனைவரையும் வர சொல்லிருந்தான். வளைகாப்பு நாளும் நெருங்கி நாளை என வந்திருந்தது. வர்ஷிதே எல்லா வேலைகளையும் பார்த்து பார்த்து செய்தான். இடையில் ஆதிகாவை கவனிப்பதையும் தவறவில்லை. ஆதிகாவிடம் "ஏன்டி நாளைக்கு போற நீயும் பாப்பாவும் போய்ட்டா என்னால இருக்கமுடியாதுடி" என கூற "மாமா உன்னாலதான் நான் ஏழு மாசத்துல வளைகாப்பு போடா எங்கப்பா கேட்டபோது வேணான்னு சொன்னேன். இப்பவும் இப்படி சொன்னா என்ன செய்றதுமாமா எனக்கும் ஆசையா இருக்குமாமா அம்மா வீட்டுக்கு போகணும்னு ப்ளீஸ் மாமா எப்போ எந்த நேரத்துல உனக்கு தோணாலும் அங்க வந்து என்ன பாத்துட்டுப்போ, இப்படி இருக்காத வருமாமா என்ன சந்தோசமா அனுப்பிவைமாமா" என பலவாறு கொஞ்சி சரி என ஒத்துக்க வைத்தாள். இது இன்று மட்டுமில்ல கிட்ட தட்ட கருவுற்ற நாளிலிருந்து நடக்கும் வழக்கம் தான் இது.

மாலைநேரத்தில் ஊரிலிருந்து வர்ஷித்தின் மாமா, அக்கா வனிதா, அருண், பிருந்தா குட்டி என அனைவரும் வருகை தந்தனர். அவர்கள் கூட வர்ஷித் சிறிதும் எதிர்பாக்காத வர்ஷித்தின் அப்பாவும் வந்திருந்தார். வர்ஷித்திற்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. அவரது வருகை வர்ஷித்தை தவிர ஆதிகா சுப்பிரமணியன் வசந்தா என அனைவரும் அறிந்ததாகும். வர்ஷித் பெயருக்கு கூட அவனது அப்பாவை அழைக்கவில்லை. ஆனால் ஆதிகா வசந்தா சுப்பிரமணியன் மூவரும் இன்முகத்தோடு வரவேற்த்து உபசரித்தனர். ஆதிகா ஏதோ பழக்க பட்டவர் போல நன்றாக பேசினாள். அதை பார்த்து வர்ஷித் ஆச்சரியப்படுவதா அல்ல கோபம் கொள்வதா என அவனுக்கே குழப்பமாயிருந்தது. மேலும் சிறு பொறாமை உணர்வு கூட எழுந்தது.

அறைக்குள்ளே கோபமாக அமர்ந்திருந்தான். யார் இவரை அழைத்தது என பெரும் கேள்வி ஒன்று இருந்தது.ஆனால் அதுக்கு யார் என்று மட்டும் தெரிந்தால் கண்டிப்பாக வர்ஷித்தின் கோபம் அந்நபர் மீது பாயும் அதில் சந்தேகமில்லை.

அப்போது ஆதிகா மெதுவாக வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அரணாக ஒரு கையால் மென்மையாக வயிற்றை தழுவியபடி நடந்து அறைக்குள் நுழைந்தாள்.

மாமா என்றழைப்போடு உள்ளே வந்தவளை "பரவாலயே என்னையெல்லாம் உனக்கு நியாபகம் இருக்கா?" எனும் சிடுசிடுவென ஏறும் வர்ஷித்தின் கோப வார்த்தையே வரவேற்த்தது.

அவனருகில் அமர்ந்து "என்ன மாமா சின்ன பிள்ளை மாதிரி நடந்துக்குற, நம்ம பாப்பாவோட சுபகாரியத்துக்கு வந்திருக்காங்க நாமதானே உபசரிக்கணும்" என கூறி சமாதானம் செய்தாள். "சரிடி ஏதோ பண்ணு என்னைய விட்டுடு" என கீழே செல்ல எழுந்தவனை கரம் பிடித்து தடுத்து "கொஞ்சம் நேரம் உட்காரு மாமா பிறகு போகலாம்" என கூறியும் கேட்க மறுத்தவனை அவளது கெஞ்சல் மொழி கேட்க வைத்தது.

அவனின் கரம் கோர்த்து தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தவள், "மாமா ஒன்னு கேப்பேன் செய்வியா நீ?" என கேட்க அவனும் மெதுவாக தலை அசைத்தான். "மாமா உங்க அப்பாகிட்ட பேசி பாரேன்" என மெதுவாய் கூறியவளின் தலையை தன் தோளிலிருந்து விலக்கி சந்தேகமாய் ஓர் பார்வை பார்த்து "நீ தான் அவரை இங்க அழச்சியா? " என அடிக்குறல் சீற்றத்துடன் கேட்க "ஆமா மாமா" என்றாள் அவன் முகம் பார்க்க பயம் கொண்டு தலை கவிழ்த்து. யோசித்தவன் "அவர் நம்பர் கூட இங்க யாருகிட்டயும் இல்ல அப்பறம் எப்படி அழைச்ச? " என கேட்டான். அவள் பதில் சொல்ல பயந்து நின்றாள். சொல்லுடி எப்படி அழைச்ச என கேக்கும்போது வனிதாவும் அருணும் அவ்வறைக்குள் நுழைந்தனர். "அதுக்கு நான் பதில் சொல்றேன்" என வனிதா கூற வர்ஷித் சிலையாகி போனான். "நீ சென்னைக்கு போன மூணு நாளுல ஆதிகா நம்ம ஊருக்கு வந்தா,"என சொல்லிக்கொண்டிருக்கும்போதே இடையில் அக்காவை மறித்து "நான் உன்னை தடுத்திருக்கமாட்டேன், ஜஸ்ட் என்கிட்ட ஒரு வார்த்தையாவது சொல்லிருக்கலாம்ல, நான்தான் பைத்தியக்காரன் மாதிரி ஒரு மணி நேரத்துக்கு ஒருக்க உனக்கு போன் பண்ணேன், ஆனால் நீ "என வெறுமையோடு நிறுத்தியவன் யாருடைய முகத்தையும் பார்க்காமல் அறையை விட்டு வெளியேறினான்.

ஆதிகா அழுகையுடன் மெத்தையில் அமர, வனிதா அவளுக்கு ஆறுதலாக பேசினாள். "விடுமா அவனுக்கு இந்த உறவு புதுசா இருக்கவும் என்ன பண்றதுனு தெரியாம பண்றான் அதான் கோபப்படுறான் சரியாகிடும்" என தோளோடு அணைத்து கொண்டாள். அவளுக்கும் தெரியுமே அவன் தன்மீது கொள்ளும் கோபம் கானல் நீர் போன்றதாகும் என்பது. ஆனால், கவலை எல்லாமே வர்ஷித்தையும் அவனது அப்பாவையும் எப்படி சேர்த்து வைப்பது என்பதே.

வர்ஷித் பின்னாடியே சென்ற அருண், அண்ணா என கூப்பாடு போட்டு கொண்டு ஓடி சில எட்டுக்களில் வர்ஷித்திடம் நெருங்கினான். அவனும் நின்றானே தவிர எதுவும் பேசவில்லை, ஒரே ஒரு பார்வையை வீசினான் அருண் மீது. அப்பார்வையில் உள்ள மொழியை அருண் படித்தான் 'என்னைய விட்டுட்டு எல்லாரும் அவர்கூட சேந்துட்டீங்களே' எனும் ஏக்கத்தை. "அண்ணா நான் சொல்றத மட்டும் கேளுங்க அண்ணா முடிவு உங்க கையில அண்ணா ஏன்னா... உங்க வாழ்க்கையில நீங்க நிறைய வலிய பாத்துருக்கீங்க" என கூற வர்ஷித் இயல்பாய் மாறினான். "அண்ணா உங்க மேல அப்பா நிறைய பாசம் வச்சிருக்காருண்ணா, நீ பாட்டி கேததுக்கு (இறந்ததுக்கு) ஊருக்கு வந்துட்டு போன அன்னைக்கு நைட் அவர் ரூம் வழியா நான் போனப்போ அவர் பேசிகிட்டு இருந்தார். ஜன்னல் வழியா பார்த்தேன் அப்போ அப்பா மலரம்மா போட்டோவை கையில வச்சிக்கிட்டு பேசிட்டு இருந்தார். கடைசி இரண்டு வாக்கியம் சொல்லும்போது அவரு அழுத்திட்டார் அண்ணா, என்ன சொன்னார்ணா என்ன மாதிரியே பையன் வேணும்னு சொல்லுவ அதே மாதிரி பெத்து கொடுத்துட்டு நீ போய் சேந்துட்ட, அவன் இப்போ என்ன மாதிரியே அதுவும் ஜோடியா வந்து நிக்கும்போது சந்தோசமா இருந்துச்சு, நீயும் இருந்திருந்தா அவளோ சந்தோச பட்டிருப்ப என சொல்லி அழுதாரு அப்பறம் அந்த போட்டோக்கு முத்தம் கொடுத்துட்டு உள்ளே வச்சிட்டு சாதாரணமா இருந்தார்" என அருண் கூறி முடிக்க வர்ஷித்தின் ஒரு மனம் தந்தையின் பாசத்திற்கு ஏங்கினாலும் இன்னொரு மனது 'ஆடு பகை, குட்டி உறவா. பாசம் இருந்தா முன்னாடியே வர வேண்டியதுதானே' என அவனை உசுப்பேத்தி விட்டது. அவனுக்கு எப்படி தெரியும் ஆதிகாவின் பிடிவாதத்தால் அவர் வந்திருக்கார் என்பது.

ஆம், ஆதிகா ஊருக்கு போனது முதல் அவரை வற்புறுத்தியாதே வேலை.வீட்டிற்கு வந்தது முதல் தினமும் போனில் அழைத்து பேசியே அவரை வரவைத்திருந்தாள். பாட்டி இறந்தபோது, ஊருக்கு போயிருந்த அன்று யாரும் அறியாமல் நடராஜனின் பாச பார்வை வர்ஷித் மீது வாஞ்சையை படிந்ததை ஆதிகா கவனித்திருந்தாள். வர்ஷித் ஆதிகாவிடம் அப்பா பாசம் வேண்டும் என கூறும்போதே முடிவுசெய்துவிட்டாள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என. தக்க சமயம் பார்த்து காத்திருந்தவள் இச்சமயத்தை பயன்படுத்தி பாதி முடிந்துவிட்டாள். மீதி விதியையே சார்ந்தது. அருணும் அவன் கண்ட காட்சியை வனிதாவிடம் கூறிய பிறகு இருவரும் அவர் மீது வெறுப்பை விட்டு நல்ல அபிப்ராயத்தை அவர்மீது வளர்த்துக்கொண்டனர்.

ஒரு மணி நேரம் அங்கும் இங்கும் அலைந்து பார்த்த வர்ஷித்தால் ஆதிகா மீதுள்ள கோபத்தை தாக்கு பிடிக்க இயலவில்லை. 'நாளை வரை மட்டும் நம்மிடம் இருப்பவளை கோபமாக ஏறிடுவதா? முடியவே முடியாது இப்பவே செல்கிறேன்' என ஆதிகாவை காண அறைக்கு விஜயம் ஆனான்.

ஆதிகாவின் அருகில் அமர்ந்துகொள்ள அவள் வேறு புறம் முகம் திருப்பி கொள்ள வர்ஷித் ஆதிகாவிடம் மன்னிக்க வேண்டினான். "உனக்கு என்மேல பாசமே இல்லடா போ இங்கிருந்து அதான் கோவிச்சுக்கிட்டுதான் உனக்கு போக தெரியுமே? போக வேண்டியதுதானே ஏன் இப்போது வந்த "என திட்டியவாறே தலையணையால் வர்ஷித்தை அடிக்க ஆரம்பித்தாள். போனாலும் தப்பு வந்தாலும் தப்பு என உள்ளுக்குள் புலம்பினான். ஏன் வெளியில் சொல்லி அடி வாங்குவதற்கா. "இதுல அம்மா வீட்டுக்கு போறேன்னு ஐயாவுக்கு சோககீதம் வேற என்ன ஏன்டா இப்படி கஷ்டப்படுத்துற" என கண்ணீர் சிந்தியவளை வழியற்று நின்றவன் அவள் இதழில் முத்தமிட்டு சமாதானம் செய்தான். இதற்கு மேலும் பெண்ணவள் வீம்பை பிடித்து வைத்திருக்க முடியுமா? அதற்கான வழி தான் உண்டா?

வர்ஷித்தின் மனம் அப்பாவை பற்றி இரு தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்த ஒரு முடிவுக்கு வராமல் இருந்தான். இதற்கிடையில் இரவு வந்தது.

அனைவரும் இரவுணவை முடித்து கொண்டு அறைக்குள் முடங்கினர். வர்ஷித் ஆதிகாவை அறைக்கு சென்றால் புழுக்கமாக இருக்கும் என மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான். அங்கு சென்று சிறிது நேரம் இருவரும் கை கோர்த்து பேசி சிரித்த படி நடந்தனர். ஆதிகாவிற்கு 'இன்று இரவுக்குள் ஏதும் நடந்தால் தான்.இல்லை என்றால் இருவரும் பேசிக்கொள்ளமாட்டனர்' என வருத்தமும் தவிப்பும் இருந்தது. கொஞ்ச நேரத்தில் ஆதிகாவிற்கு கால் வலிக்க அங்குள்ள நாற்காலியில் அமர போனவளை தடுத்து வர்ஷித் தான் நாற்காலியில் அமர்ந்து அவளை மடியில் உட்கார வைத்துக்கொண்டான்.

ஒளி வீசும் நிலவு, கதை பேசும் தென்றல், காதல் கொஞ்சும் அவளது விழிகள் வேற என்ன வேண்டும் இவ்வுலகில் அவனுக்கு. ஒன்பது மாதம் ஆகிவிட்டது ஒரு சிசுவுக்கு அவள் தாய் ஆகி, ஆனால் அவனுக்கோ பல கோடி முறை தாய்மை அன்பை கொடுத்திருக்கிறாளே.

அவளின் மயில் கழுத்தில் முகம் புதைத்த படி, "உங்க ரெண்டு பேருகிட்டயும் பேசணும்டி" என முணுமுணுத்தான் அவளது காதில். "பேசுடா" என்றவுடன் அவள் வெற்று வயிற்றில் முகம் வைத்து குழந்தையுடன் பேச தொடர்ந்தான். அவளோ அவனது கேசத்தை கோதி கொண்டிருந்தாள். "மலர்மா" அதே அசைவு ஏற்பட்டது. அதை உணர்ந்து முத்தமிட்டபடி "தங்கம் பட்டுக்குடி என்ன பண்றீங்க, உங்கள எப்போடா பாப்போம் என இருக்கு, நாளைக்கு அம்மாச்சி வீட்டுக்கு போக போறிங்களா நீங்களும் அம்மாவும். அங்க போய்ட்டு நீங்கதான் அம்மாவ பாத்துக்கணும் சரியாடா" என ஆசையுடன் கைவைத்து தனது உயிரின் அசைவை மகிழ்ந்தபடி நிமிர்ந்தான். அவனையே காதலுடன் நோக்கிய ஆதிகாவிற்கு முத்தம் கொடுக்க, "போடா குழந்தையே பிறக்க போகுது இன்னும் இப்படி பண்ணிக்கிட்டு இருக்க" என உள்ளுக்குள் இச்செயலை ரசித்தாலும் வெளியில் கோபமாக இருப்பது போல இப்படி கேட்டாள். வர்ஷித், "நமக்கு குழந்தை என்ன, நமக்கு பேரன் பேத்தியே வந்தாக்கூட நான் இப்படித்தான் பண்ணுவேன் என் ஆதிமாவ கொஞ்சுறதுக்கு யார் தடை சொல்லுவா நான் அதையும் பாக்குறேன்" என வம்படியாக காதல் செய்பவனை என்ன சொல்வது என தெரியாமல் போனது ஆதிகாவிற்கு. ஆனால் வருங்கலத்தில் இதற்கு ஒரு ஜீவன் வரும் என்பதை அவன் எப்படி அறிவான்.

தீடிரென்று வர்ஷித் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு ஆதிகாவை நோக்கி, "ஆதிமா எனக்கு நீ முக்கியம், ரொம்ப முக்கியம் குழந்தையும் முக்கியம்தான் ஆனால் குழந்தையை விட நீ ரொம்ப முக்கியமடி, இந்த குழந்தை இல்லனா வேற குழந்தைணு நாம மனச தேத்திக்கலாம். ஆனால் நீ இல்லாத ஒரு நொடிகூட என்னால யோசிக்க முடியாதுடி, என்னோட உலகமே நீதான், எந்த ஒரு முடிவா இருந்தாலும் என்னைய யோசிச்சு எடு, எங்க அம்மா மாதிரி எந்த முடிவையும் எடுத்துறாதடி" என அவளது கையில் அழுத்தம் கொடுத்தவனின் கண்ணில் விழும் துளிகளை துடைத்து "நீ இப்படியெல்லாம் யோசிக்காத மாமா, நானும் மலர்மாவும் பத்திரமா உன்கைக்கு வந்திருவோம். சரியா என்ன வேலையா இருந்தாலும் நீ பிரசவத்திற்கு வரணும், உன் கையாலதான் நான் முதல் முறையா நம்ம குழந்தைய வாங்கணும், நீதான் என்ன குழந்தைணு என்கிட்டே சொல்லணும் சரியா" இதை கூறும்போது தானாவே ஆதிகாவின் விரல் வயிற்றை வருடியது.

"நான் இல்லாமலா? இல்லவே இல்ல கண்டிப்பா உன் ஆசையை நிறைவேத்துவேன்டி" என நம்பிக்கை கொடுத்தவனுக்கு யார் சொல்வது அந்நம்பிக்கை தூள் தூளாக நொறுங்க போகிறதென்று.

இவர்கள் பேசிக்கொண்டிருக்க ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்க, வனிதாவின் சமாதான பேச்சும் காதில் விழ இருவரும் எழுந்தனர். குழந்தையை வாங்கிய வர்ஷித் கொஞ்சி கொண்டிருக்க, ஆதிகாவை உட்கார வைத்து வனிதா பேசிக்கொண்டிருந்தாள். அங்கு நடராஜன் மாடிக்கு வந்தார். ஆதிகா, " வாங்க மாமா" என அழைக்க அவரும் அருகில் கிடந்த பெஞ்சில் அமர்ந்தார். வனிதா ஆதிகா அருகிலே நின்றாள்.

வர்ஷித்திற்கு நடராஜன் வந்தது தெரியாததால் அவன் குழந்தையை கொஞ்சுவதில் கவனமாக இருந்தான். அங்குள்ள மூவரும் வர்ஷித்தையே பார்த்து கொண்டிருந்தனர். நடராஜன் வர்ஷித்தை முதன்முறையாக கையில் சுமந்த நாளை நினைத்து முறுவலித்து 'இப்ப இவனே அப்பா ஆக போறான் அவ்ளோ வளர்ந்துட்டியாடா நீ' என ஆயாசமாக பார்த்தார்.

ஏதோ உறுத்தலில் திரும்பி பார்க்க அங்கு அவர் இருக்க, விறுவிறுவென சென்று வனிதாவிடம் குழந்தையை கொடுத்துவிட்டு, அவ்விடம் விட்டு நகர போனவனை கைபிடித்து தடுத்து, "நான் இங்க இருக்குற வரை நீயும் இங்கதான் இருக்கனும் இது என்மேல ப்ரோமிஸ்" என கூறி பேசவந்தவனையும் தடுத்துவிட்டாள் ஆதிகா.

அவனை கீழே குமிய சொல்லி அவனின் காதுக்குள் "வருமாமா மாமாவ பாரேன் இந்த வயசுலயும் எப்படி இருக்காருனு" என சொல்ல வர்ஷித் வெறுப்புடன் திரும்பி அவரின் உடலை பார்த்தவன் ஆச்சரியமா பட்டான். 'இந்த வயதிலும் இவ்வளவு கட்டுக்கோப்பான உடலா? ' என வியந்தான். இதனை கண்டவள் அவன் காதில் இதற்கு காரணம் கூற இப்போது ஆர்வமாய் கேட்டான் "மலர் அத்தைக்கு மாமாகிட்ட பிடிச்சதே இதுதானாம் அதான் இந்த வயதுவரையும் இப்படி உடம்பு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்" என ஆதிகா கூற தன் தந்தையின் காதலை கண்டு மனதினுள் மெச்சிக்கொண்டான்.

நடராஜனுக்கும் தயக்கமாக இருக்க வர்ஷித்தோ பிடிவாதமாக நின்றான். ஆதிகா வனிதா இருவரும் மாறிமாறி வர்ஷித்திடம் பேச சொல்லி கெஞ்ச அவன் கோப குழம்பாக நடராஜனிடம் திரும்பினான்.

"இப்ப போதுமா உங்களுக்கு, நான் உங்களுக்கும் என்ன பண்ணேன், எல்லாரையும் எனக்கெதிரா திருப்பிவிட்டு வேடிக்கை பாக்குறீங்க, இப்போ சந்தோசமா இப்போ திருப்தியா ஏதோ என்மேல பாசமாமே பாசம் பொல்லாத பாசம், பாசம் இருக்குறவங்க சின்ன பிள்ளையிலிருந்து பாத்து இருக்கணும் இப்போ பேர பிள்ளை வந்த உடனே என்ன என்மேல கரிசனம். எனக்கு எதுமே தேவை இல்லை. பேர பிள்ளையை பாக்கணும்னா பாருங்க ஆனால் என்கிட்டே ஒட்டுற வேலை வச்சிக்காதிங்க" என அவன் கத்தி சற்று அடங்க 'இதுவரை தன் மகன் தன்னை திட்டவாவுது தன்னிடம் பேசுகிறானே' என பொறுமை பிடித்தவர் பேச ஆரம்பித்தார் "இல்லடா உன்ன அந்த வீட்டல சேக்காம இருந்ததுக்கு உனக்கு காரணம் தெரியாது, உன் நல்லதுக்குதான்" என தன்மையை பேசியவரிடம் "என்ன மண்ணாங்கட்டி காரணம், நீங்கதான் அம்மாவையே உங்க கூட சேத்துக்களையே அப்பறம் எப்படி என்ன சேத்துப்பிங்க உங்களுக்கு பொண்டாட்டி புள்ளைய வச்சி காப்பாத்துற துப்பு இல்ல" என தன் மன குமுறலை வார்த்தையால் உதிக்க எல்லாரும் அவன் கூறிய வார்த்தையில் உறைந்திருக்க அவன் முன் ருத்ர மூர்த்தியாக நின்ற குமாரசாமி பளார் என ஒரு அறை விட்டார்.

அவன் அதிர்ந்து நிற்க "இனிமேல் என் நண்பன பத்தி ஒரு வார்த்தை பேசின கொன்னேபுடுவேன் உன்ன. என்னடா வேணும் உனக்கு கேளு எல்லாத்துக்கும் நான் பதில் தரேன். போனா போகுதுனு பார்த்த ரொம்ப பேசுற" என கர்ஜித்தவர் "உங்க அப்பாவை பத்தி உனக்கு என்னடா தெரியும் உன்ன வளர்த்தது வேணா நானா இருக்கலாம் ஆனால் வளர்க்கவச்சவரு அவன் தான்டா, நீ சின்ன பிள்ளையா இருக்கும்போது உன்னைய கீழ விடமாட்டான்டா, என்ன விட நீதான் அவன் மேல பாசமா இருப்ப, ஆனால் உனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்ச உடனே அவனே உன்ன விட்டு ஒதுங்கிட்டான். ஒதுங்கி போனாலும் உன்னோட நிழலா அவன்தான் இருந்தான்டா, உன்னோட ஒவ்வொரு தேவையையும் என் மூலமா அவன் தாண்டா உனக்கு செஞ்சான், உன்ன சார்ந்த ஒரு சின்ன பொருள் கூட என்ன அவன் வாங்க விட்டதே இல்ல. உன்மேல உசுரா இருந்ததுனாலதான் உன்ன விட்டு விலகி இருந்தான். உன்ன ஹாஸ்டல சேர்க்க சொன்னதும் அவன்தான், அன்னைக்கு எப்படி கலங்கிபோனானு எனக்குதான்டா தெரியும். உனக்கு தெரியாம உன்ன பார்க்க இங்க எத்தனை முறை வந்திருப்பான் தெரியுமா? அப்பறம் விஷ்ணு வீட்ல நீ இருக்கிறேன்னு சொன்னப்போ கூட உனக்கு தெரியாம இங்க வந்து பேசிதான் சம்மதம் சொன்னான்". உடனே வர்ஷித் மாமாவை பார்க்க, "என்ன பார்க்குற இந்த விஷயம் வசந்தா சுப்பிரமணிக்கு தெரியும்" என கூறி அவனை மேலும் அதிர்ச்சியாக்கி தொடர்ந்தார். "ஏன் உனக்கு ஆதிகாவ பொண்ணு பாத்ததுகூட அவன்தான், கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு மனசுல அவ்ளோ ஆசை வச்சிக்கிட்டு, இங்க வந்தா உனக்கு புடிக்காதுனு வரமறுத்துட்டான்" என தனது மாமா பேச பேச தன் தந்தையையே பார்த்தான் கண்ணில் நீர் விழுவது கூட அறியாமல். "உன்ன ஜோடியா பாக்கணும்னு ரொம்பா ஆசைப்பட்டான். பாட்டி இறந்ததுக்கு எங்க நீ வராம போய்டுவியோன்னுதான் தான் உன்கிட்ட போன்ல நீ வரக்கூடாதுன்னு சொன்னான், அவனோட யூகிப்பு போல அவன் சொல்ல எதிர்த்து நீயும் அங்க வந்த. அன்னைக்கு அவ்ளோ சந்தோசமா இருந்தான், நீ அப்பா ஆகிட்டான்னு அவன்கிட்ட சொன்னப்போ ரொம்ப நாளுக்கு அப்பறம் ரொம்ப நிறைவா உணர்ந்தான். அப்பறம் ஆதிகா கூப்பிடப்ப கூட உனக்கு புடிக்காதுனு வரலனு சொன்னான் நாங்கதான் வற்புறுத்தி இங்க அழைச்சிட்டு வந்தோம், அம்மாவ பாத்துகாலனு சொன்னியே உன்னையும் மலரையும் ஏத்துக்காத அந்த வீட்ட இவன் ஒதுக்கி வச்சு, இத்தனை வருஷம் தனியாத்தான் இருந்தான்" என அவர் ஒரு வேகத்தில் கூறி முடிக்க வர்ஷித் ஓடிச்சென்று நடராஜன் முன் மண்டியிட்டு அவரது மடியில் முகம் புதைத்து கதறினான்.

முதல்முறையாக "அப்பா" என வர்ஷித் அழைக்க அவரது உயிரில் ஒரு மின்சாரம் பாய்ந்தது. அவனை நிமிர்த்தி முகம் முழுதும் முத்தமிட்டார்.'இந்த வார்த்தைய என் காலம் முடியிறதுக்குள்ள ஒரு தடவ கேக்க மாட்டோமான்னு எத்தனை முறை ஏங்கிருப்பேன்' என நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தார். "என்ன மன்னிச்சிருங்கப்பா, இவ்வளவு தெரியாம உங்ககிட்ட வரம்பு மீறி பேசிட்டேன்ப்பா" என மன்னிப்பு கூற "இல்லையா நீ மன்னிப்பு கேக்காத உனக்கு தெரியாம இல்லை, நாங்கதான் தெரிய படுத்தாம பாத்துக்கிட்டோம்" என வருத்தம் நிறைந்த குரலில் கூறினார். அவனது முகத்தையே பார்த்தவர்கள் மேலும் பேசினார் "வருப்பா என்ன மனிச்சிருவில, என்னைய வெறுக்க மாட்டிலப்பா? " என குழந்தையாய் மாறி அவனிடத்தில் கெஞ்ச அவன் மறுப்பாக தலை அசைத்தான். "அப்பா உன்ன வெறுக்கல, உன்ன எப்படி வெறுப்பேன் நீ என்னோட காதலுக்கு கிடைத்த பரிசுடா, உங்க அம்மா ஆசை மாதிரியே என்ன போலவே உன்ன பெத்துட்டா, அவ பிடிவாதம் பிடிச்சா நீ என்ன மாதிரியே பிறக்கணும்னு அது மாதிரியே உன் அம்மா ஆசை போல அவளோட பிடிவாதத்தை அப்படியே உறிச்சி வச்சி எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் மலர நியாபகப்படுத்துற உன்ன எப்படிடா நான் வெறுப்பேன்" என உச்சி முகர்ந்தார். "உன் மேல உள்ள பாசம்தான் என்ன இப்படி செய்ய வச்சது. எந்த அப்பாவும் தான் பிள்ளைங்க சந்தோசமா இருக்க என்ன வேணாலும் செய்வாங்க. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் தாங்குவாங்க புள்ளைங்க சிரிப்ப பார்க்க, நானும் அப்டிதான்ப்பா செய்தேன்" என அவர்கூற வர்ஷித் "அப்பா நான் உங்கமேல வெறுப்பு காமிக்கிற மாதிரி பண்ணிட்டீங்களே ஏன்ப்பா? " என மகனாய் கேள்வி கேக்க "நீ என்கூட இருந்தா என்னோட வீட்டுக்கு வரணும்னு கேப்ப, அங்க உன்ன வளர்ந்திருந்த உனக்குத்தான் கஷ்டம்ப்பா, அங்க யாரும் உன்ன பாசமா பாத்துக்கமாட்டாங்க, உன்ன தேவை இல்லாம திட்டுவாங்க, தேவை இல்லாமல் பேசுவாங்க ஏன் உன்ன கொல்ல கூட தயங்க மாட்டாங்க. எனக்குன்னு இருக்குற ஆறுதல் நீதான், அதான் நீ வளர நல்ல சூழல் வேணும்னுதான் உன்ன மாமா வீட்ல விட்டேன்.

ஒரு பிள்ளை வளர பாசமான, பாதுகாப்பான சூழல் கண்டிப்பா தேவை, நீ இப்போது நல்லா வளந்துருக்க, இவ்ளோ பொறுப்பா உன்ன சுத்தி உள்ளவங்கள அன்பா பாத்துக்குற இத விட எனக்கு என்ன வேணும், அப்போ இருந்த வாழ்க்கையில் என்னால இதுபோல ஒரு சூழல உனக்கு தர முடியல அதான் இப்படி செய்தேன். நீ ராஜாப்பா, ராஜா மாதிரி வளரத்தான் என் மனச நானே கல்லாக்கி அப்படி செய்தேன் உன்கிட்ட கடுமையாக பேசினேன்' என அவர்கூற அவரை கட்டிபிடுத்துக்கொண்டு அழ ஆரம்பித்து "அப்பா சாரிப்பா" என பிதற்ற தொடங்கினான். "

'நம்ம நிம்மதிக்காக கஷ்டப்படுற மனைவி எல்லாருக்கும் அமையாது உனக்கு அமைஞ்சிருக்கு ஆதிகாவ பத்திரமா பாத்துக்க" என அறிவுரை கூறினார். அதுவும் உண்மைதானே அவள் செய்யவில்லை என்றாள் இருவரும் சேர்ந்திருக்க்க மாட்டார்களே.

கொஞ்சம் நேரம் கழித்து வர்ஷித் இத்தனை வருடம் ஏங்கின தந்தையின் மடியில் படுத்துகொண்டான். அவரும் அவனது சிகையை கோதிவிட்டார். இங்கு ஆதிகா வனிதா இருவரும் கண்ணில் ஆனந்த பெருக்கை கண்ணீராய் தேக்கி வைத்துக்கொண்டு நின்றிருந்தனர். குமரசாமி திருப்தியாக பார்த்தார்.

மறு நாள் காலை பரபரப்பாக இருந்தது. சுப்பிரமணியனும் வசந்தாவும் வர்ஷித் தந்தை கூட சேர்ந்துவிட்டதை நினைத்து மகிழ்ந்தனர்.

வர்ஷித் தன்மீது துயில் கொள்ளும் ஆதிகாவை பார்த்து ஒரு பக்கம் நிகழவிருக்கும் நிகழ்வின் மகிழ்ச்சி இருந்தாலும் தன்னை விட்டு பிரிய போவதை எண்ணி வருத்தம் கொண்டான். எழுந்தவன் ஆதிமாவிற்கும் மலர்மாவிற்கும் முத்தத்தை கொடுத்து காலை வணக்கத்தை தெரிவித்து குயிலறைக்குள் புகுந்து கொண்டான்.

சிறிது நேரம் கழித்து கிளம்பினாள் ஆதிகா. சிரித்த முகமாய் காலை வணக்கத்தை தெரிவிக்க, குழந்தை தன் அசைவை காட்ட இருவரும் அதனை உணர்ந்து மகிழ்ந்தனர். அவளை பல் துலக்க வைத்து டீ எடுத்து வந்து அவளை குடிக்க வைத்த பின்பே குளிக்க செல்ல சொன்னபோது, "அவள் சிறிது நேரம் பேசலாம்" என சொன்னவுடன் அவளின் ஆசையை நிறைவேற்றி குளிக்க அனுப்பினான். குளிக்க போகும்போதே வர்ஷித் வளைகாப்பிற்காக வாங்கின புடவையை கொண்டு வந்து கொடுத்தான். பிறகு கீழே சென்று அங்குள்ள வேலைகளை கவனித்தான்.

அப்போது ஆதிகாவின் அப்பா அம்மா வர, அவர்களை வரவேற்த்து உபசரிக்கும்போது அறையிலிருந்து ஆதிகாவிடமிருந்து "மாமா மாமா" என அழைப்பு ஓசை கேட்க வர்ஷித்தும் மேல போக எத்தனிக்கும்போது "மாப்பிள்ளை அவ நாளைக்கு ஒரு குழந்தைக்கு அம்மா ஆகப்போறா அவளுக்கு தேவையானத அவதான் செஞ்சுக்கணும் இன்னும் சின்னப்புள்ள மாதிரி உங்களையே கூப்பிடுறா" என கூறி அவனை தடுத்து ஆதிகாவின் அம்மாவே மேல செல்லும்போது வர்ஷித் செய்வதறியாது நிற்க, அவனின் பெற்றோரும் சிரிக்க, ஆதிகாவின் அப்பாவும் சிரித்தார். சிறிது நேரத்தில் மேல சண்டையிடும் சத்தம் வர "நான் மாமாவ தானே வர சொன்னேன் நீ ஏன் வந்த? " என ஆதிகாவின் குரல் பலமாக இருக்க ஆதிகாவின் அப்பா "மாப்பிள்ளை நீங்க போங்க அவளை அனுப்பிவச்சிட்டு ஆதிகாவ பாருங்க, ரெண்டும் ஒரே பிடிவாதம் அதே குணம் நாளைக்கு குழந்தைக்கும் வந்துர போகுது" என புலம்பினார்.

அவளது பிடிவாதம் தானே அவனுக்கு பிடித்த ஒன்று என நினைத்து சிரித்துக்கொண்டே மேல சென்று சண்டையை சரி செய்து அத்தையை அனுப்பிவைத்துவிட்டு, குழந்தை போல சண்டையிட்டு களையிழந்து கோபமாக அமர்ந்திருக்கும் மனைவியின் பின்னாலிருந்து அணைத்து சாரி கூறினான். அவள் மன்னிக்காததால், தங்கத்தில் ஜொலிக்கும் அட்டிகையையும் செயினையும் பின்னாலிருந்த வாறே போட்டுவிட்டான் அதை பார்த்து விழிவிரித்து "இது எப்போ வாங்குன மாமா? "என கேட்க, அவனோ "சென்னை போனபோது அங்க உன் நியாபகமாவே இருந்தது அதான் ஒன்று உனக்காக வாங்கி வைத்தேன்" என கூறி நெற்றியில் முத்தமிட்டு "இன்னைக்கு அழகா இருக்கடி" என கூறவும் அவளும் "நீ எப்போதுமே அழகுதானே மாமா" என கூறி அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து "வா கீழ போகலாம்" என அவளை கை தாங்கலக அழைத்து வந்தான்.

அங்கு நாற்காலியில் பட்டு போல மென்மையானவளுக்கு மஞ்சள் நிற பட்டுடுத்தி சில ஒப்பனை மட்டுமே செய்து தாய்மை தந்த களிப்பில் வயிற்றில் ஒரு கை வைத்தவாறு அழகின் பதுமையாக அமர்ந்தவளின் விரித்து விரித்து கதை பேசும் விழிகளும் அவளின் அழகையும் ஆதி முதல் அந்தம் வரை ரசித்து கொண்டிருந்தான். வளைகாப்பு விழாவும் ஆரம்பித்தது. எல்லாரும் அவளது கையில் வளையல் பூட்டி முகத்தில் மஞ்சள் சந்தனம் பூசி குங்குமம் இட்டு பூக்கள் தூவி ஆசிர்வதித்து சென்றனர். இதில் அனைவருக்கும் முதலில் அவளுக்கு இந்த சடங்கை செய்தது அவள் மனதை கொள்ளை கொண்ட வர்ஷித்தே. இவன் பூச அவள் சிவந்து போனதுதான் மிச்சம். பிறகு அவளுக்கு அருகிலே கொஞ்சம் தள்ளி நின்று அவளை பார்வையால் அளவெடுக்கும் வேலையை குறை இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் தம்பி வர்ஷித்தின் இச்செயலை பார்த்து ஓட்டி எடுத்துவிட்டான். எல்லாரும் செய்து முடித்தபின் அனைவரிடமும் ஆசி வாங்கினர். நாள் முழுதும் வர்ஷித் நடராஜனை விட்டு நகரவே இல்லை. ஆதிகாவிற்கு மனம் நிறைவாக இருந்தது.

வளைகாப்பு முடிந்து ஆதிகா பிறந்த வீட்டுக்கு கிளம்பும் போது வர்ஷித் உம்மென்று இருக்க காரணம் கேட்டாள் ஆதிகா. "உன்னையையும் மலர்மாவையும் மிஸ் பண்ணுவேன்டி"என சோகமாக கூற "எப்ப வேணா வீட்டுக்கு வா மாமா, அப்படி வர முடியலனா என்ன வீடியோ கால்ல பாரு" என தீர்வு கூற "அப்போ பாப்பாவ எப்படி பாக்குறது? "என கேட்டவனிடம் ஒரு போட்டோவை திணித்தாள். அதை பிரித்து பார்க்க, ஒரு சாந்தமான சிரிப்புடன் அழகு ஓவியமாய் கருப்பு வெள்ளை நிறத்தில் ஒரு உருவமிருக்க அதை பார்த்தவனது உடலில் மின்னல் தாக்கியது. உள்ளுணர்வு உந்த "மலர்மா" என அதனை வருடினான். முதன்முறை பார்த்தாலும் கண்டுபிடுத்துவிட்டான் தனது அம்மாவை. "பாப்பாவ பாக்கணும்னா இத பாத்துக்கோ மாமா" என்றாள் புன்னகையுடன். 'இது எப்படி உன்கிட்ட' என கேள்வியோடு பார்க்க அதை அறிந்து "ஊருக்கு போனபோது மாமாகிட்ட கெஞ்சி வாங்கிட்டு வந்தேன், அவரு கொடுக்கவே இல்லை, நீ பாக்கணும்னு சொன்ன உடனே கொடுத்துட்டாரு அவ்ளோ பாசம் உன்மேல" என கூறினாள். தன் மகிழ்ச்சிக்காக இத்தனை தூரம் செய்யும் ஆதிகாவை நினைத்து இவ்வன்பு எனக்கு கிடைத்த வரம் என்றே நினைத்தான் அவளின் காதல் அடிமை.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 29

ஆதிகா தன் தாய் வீட்டில் சந்தோசமாக இருந்தாள். அவளின் மகிழ்ச்சியை பார்த்து வர்ஷித்தும் நிறைவாக இருந்தான். அடிக்கடி அங்கு சென்று ஆதிகாவை பார்த்து விட்டு வருவான். அங்கு செல்லும்போது ஆயிரம் முறையாவது தன் மாமியாரிடம் ஆதிகாவை பார்த்து கொள்ளும்படி சொல்வான். அவரது நிலையை பார்த்து ஆதிகா சிரித்துக்கொள்வாள் தாய்க்கு தெரியாத என்று.

அங்கு ராகேஷ் கொலை வெறியில் இருந்தான். 'தனியா சிக்க மாற்றானே?' என வர்ஷித் மீது அவனுக்கு கோபம் ஏறி போயிருந்தது. அவனிடமிருந்து சொத்தை வாங்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் வர்ஷித்தை கொல்ல முடிவு செய்திருந்தான். இம்முடிவிற்கு ராகேஷின் தந்தையும் உடந்தை. தக்க சமயம் பார்த்து விடாப்பிடியாக காத்திருந்தான். அந்நாளும் அழகாக மலர்ந்தது.

அன்றிரவு, வர்ஷித் அறைக்குள் நுழையும்போது ஆதிகா போன் மூலமாக சிணுங்கி அழைப்பை தெரிவித்தாள். எடுத்தவன், "என்னடி இப்பதானே உன்கூட உங்க வீட்ல உக்காந்து சாப்பிட்டு வந்தேன். பத்து நிமிஷம் கூட இல்லையேடி?" என கூறி மெத்தையில் படுத்துக் கொண்டே கேட்க, "ஆமா மாமா இப்பதானே போன. ஆனால், எனக்கு உன் கிட்ட பேசிகிட்டே இருக்கணும் போல இருக்கு மாமா. உன் பக்கத்துல இருக்கணும் போல இருக்கு மாமா. கொஞ்ச நேரம் பேசு" என்றவுடன் அவனது சோர்வையும் முடக்கி வைத்து பேசினான்.

இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு வர்ஷித், "ஆதிமா நமக்கு எந்த குழந்தையாக வேணா இருக்கலாம் அதனால் பையன் பிறந்த மனசு கஷ்டப்பட கூடாது. சரியா, கண்டிப்பா பொண்ணு பிறகும் இல்ல பையன் பிறந்தாலும் மனதார ஏத்துக்கணும் சரியாமா" எனக்கூற அதனைக் கேட்ட ஆதிகா, " மாமா எனக்கு நல்லாவே தெரியும் நமக்கு பொண்ணு தான் பிறக்கும். ஏன்னா எங்க வீட்ல ஒரு வழக்கம் இருக்கு. பொண்ணு வீட்ல மாசமா இருந்தா அந்த வீட்டில் குளவிக் கூடு கட்டுமாம். அதுல செங்கமண் கூடு இருந்தால் ஆண்பிள்ள மண் கூடு கட்டினால் அது பெண்பிள்ளை இருக்கும்னு சொல்வாங்க மாமா (இது கிராமப்புறத்தில் சில பேரு நம்புவாங்க இந்த காணிப்பு சில சமயம் உண்மையாகவும் நடந்து இருக்கு) இங்கே மண் கூடு தான் இருக்கு மாமா நீ கேட்டபடி நமக்கு பொண்ணுதான் பிறக்கும் உன் அம்மாதான் எனக்கு பிறப்பாங்க. அதனால, நீ மனசை போட்டு குழப்பிக்காத மாமா" என கூறினாள். இவள் பேசுவதை கேட்டு 'உனக்கு சொன்னா திருப்பி என்கிட்டயே சொல்றியாடி' என நினைத்துக்கொண்டு மனதினுள் 'உன் மனசு போலவே எல்லாம் நடக்கனும்டி' என கடவுளிடம் வேண்டிக் கொண்டான். அவளுடன் பேசும்போது சிவா அவனுக்கு (போலீஸ் நண்பன்) போன் செய்ய ஆதிமாவிடம், "சிவா அழைக்கிறான் நான் உன்னிடம் நாளைக்கு பேசுறேன் நீ எதையும் யோசிக்காமல் தூங்குமா" என கூறி காலை கட் செய்தான். ஆனால், அவளது மனதில் ஏதோ தவறு நடக்கப்போகிறது என உள்மனம் கூறிக்கொண்டிருக்க, எல்லாவற்றையும் கடவுள் மீது சுமத்தி விட்டு பாரம் குறைந்த மனதோடு படுத்தாள்.

அங்கு சிவா வர்ஷித்திடம் பேசிக் கொண்டிருந்தான். "மச்சான் பத்திரமா இரு டா ராகேஷ் விடாக்கண்டணா உன்ன துரத்திட்டு வரான். ராகேஷிற்கு எதிரா சாட்சி கிடைச்சா போதும் அதுவுமில்லை" என புலம்பினான். பிறகு சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கையில் சிவா, "டேய் உனக்கு அந்த மோதிரம் புடிச்சிருக்காடா? " எனக் கேட்டான். அக்கேள்வியில் வர்ஷித் அந்நினைவுக்கு சென்று வந்தான்.

அன்று வளைகாப்பில் இருவர் கையிலும் ஒரே மாதிரியான தங்க மோதிரங்கள் கொடுத்து மோதிரம் மாற்றிக் கொள்ளுமாறு சிவா ஆதிகா வர்ஷித்திடம் கேட்க அவர்களும் மாற்றிக்கொண்டனர். அதைப்பற்றி சிவா கேட்க வர்ஷித்திடம் பதில் இல்லாமல் போனது. அந்நினைவிலிருந்து சிவாவை மீட்டு வந்தான் "என்னடா பதிலே இல்லை "என கேட்க, " இல்ல டா ரொம்ப பொருத்தமா நல்லா இருக்கு அது எப்பவும் நான் கழட்ட மாட்டேன்" என கூறினான் வர்ஷித் தோழமையோடு. வெகுநேரமாக இருவரும் பொதுவாக பேசிக் கொண்டிருக்க நேரம் நள்ளிரவை தொட்டது. அப்போது ஆதிகாவின் தந்தையிடமிருந்து வர்ஷித்திற்கு அழைப்பு வர சிவாவிடம் இதனை கூறிவிட்டு காலை கட் செய்தான். ஆதிகாவின் தந்தை அழைப்பை ஏற்றவுடன், "மாப்பிள்ளை ஆதிகாவிற்கு வலி வந்துவிட்டது. அதனால நாங்க சீக்கிரமா ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போறோம் நீங்க சம்மந்தி ரெண்டு பேரையும் அழைச்சிட்டு வாங்க" என அவர் முழுமூச்சாக கூறி முடிக்க கொஞ்சம் பயந்தவன் நேரத்தை கடத்த விரும்பாமல் விரைவாக தந்தை தாயிடம் விடயத்தை கூறி இருவரையும் அழைத்துக்கொண்டு காரில் ஏறினான். எல்லாருக்கும் அதிர்ச்சி பயம் எதிர்பார்ப்பு என கலவையான உணர்வுகள் தோன்றியது.

வர்ஷித், ஆதிகா கூறியதையே நினைவுகூர்ந்து அவளின் ஆசைப்படி இந்தநேரத்தில் கூட இருக்க வேண்டும் எனும் எண்ணத்தில் பயணித்தவன் சுற்றத்தை மறந்து போனான்.

அங்கு வலியில் துடித்தவளை மருத்துவமனையில் சேர்த்தனர் அவளது பெற்றோர். ஆனால் அவளது மனமும் விழியும் வர்ஷித்தையே தேடியது. அவளைப் பரிசோதித்த மருத்துவர் "சுகப் பிரசவம் ஆகும். ஆனால் இன்னும் கொஞ்சம் வலி வரட்டும்" என கூறி விடைபெற்றார்.

வர்ஷித்தும் அவனின் பெற்றோரும் பயணித்த காரோ மருத்துவமனை வழியில்லாமல் வேறு வழியில் சென்றது அவர்கள் அறியாமல். வெகுநேரம் கழித்து , "இன்னுமா மருத்துவமனை வரவில்லை? " என்ற சந்தேகத்துடன் வெளியே பார்த்தவன் இருளால் எவ்விடம் என அறிய முடியாமல் போனது. ஆனால், விளக்கின் ஒளி வழியால் இப்பாதை சரியானது அல்ல எனத் தீர்மானித்தான். அப்போது அவனுக்கு யோசனை வந்தது அவசரத்தால் தங்களின் பாதுகாப்பிற்கும் ஆட்கள் யாரும் வரவில்லை என்பதை அறிந்து நொந்துகொண்டு ஏதோ பொறி தட்ட ஓட்டுநரை பார்த்தான். அவன் சந்தேகப்படி ஓட்டுனரும் மாறியிருக்க, கார் செல்லும்போதே அவனின் சட்டையை பிடித்து, "யாருடா நீ? " என்ன வர்ஷித் உலுக்க வசந்தாவும் சுப்பிரமணியனும் பதறினர். சாதாரணமாக ஓட்டுநர் மூவரின் முகத்திலும் மயக்க மருந்து அரும்பிய துணியை முகத்தில் வைக்க மூவரும் மயக்கம் அடைந்தனர்.

ஆதிகா பெருவலி எடுத்து அம்மா என்று கதறினாள். அப்போதும் அவளது கண்கள் வர்ஷித்தையே தேடியது "வருமாமா வருமாமா" எனப் புலம்ப பெற்றோரும், "அவர் வந்து விடுவார்"என தேற்றினர். அப்போது ஆதிகாவை வேற அறைக்கு மாற்ற சொல்ல, அவளோ, "இல்ல நான் வரமாட்டேன் மாமாவ பாக்கணும். என்னைய கண்டிப்பா மாமா பாக்க வருவாங்க. நான் உள்ள போகமாட்டேன் மாமா மாமா" என பிதற்ற மன வலியும் உடல்வலியும் தாக்க கத்தி மயக்கமானாள். பெற்றோரை தவிர்த்து அவளை மட்டும் உள்ளே கொண்டு சென்றனர் பெற்றோரும் வெளியே பதட்டத்தோடு மகளை சமாதானம் செய்ய முடியவில்லையே என்ற கவலையோடு வெளியே நின்றனர். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து நொடிக்கொருமுறை அம்மா அம்மா என்று கத்திக்கொண்டு தன் குழந்தையை வெளி கொண்டுவர முயற்சித்து உடலாலும் மனதாலும் வலி தாங்கினாள்.

அங்கு ராகேஷும் அவனது தந்தையான ராமநாதனும் வர்ஷித், சுப்பிரமணியன், வசந்தாவை நாற்காலியில் உட்கார வைத்து கட்டிப் போட்டிருந்தனர். கொஞ்சம் மயக்கம் தெளிந்து மூவரும் முழித்தனர். இருக்கும் இடத்தையும், தான் இருக்கும் நிலையையும், பார்த்தவுடன் இது கண்டிப்பாக ராகேஷின் வேலை என அறிந்து கொண்டனர். மறுநொடியே வர்ஷித்துக்கு ஆதிகா நினைவில் வர "அவளது விருப்பத்தை தாமே உடைத்து விட்டோம். இந்நேரம் எப்படி இருப்பாளோ?, வலித்திருக்குமே எப்படி தாங்கிக் கொள்வாள்? அய்யோ ஆதிமா ஆதிமா" என்ற பயத்தில் மனதினுள் பிதற்றினான். அங்கு அவனின் பெற்றோருக்குமே இதே நினைப்புதான்.

இதற்குக் காரணமான ராகேஷின் மீது கோபம் கொண்டான் வர்ஷித்.
'விட்டால் அடித்தே கொன்று விடுவான்' என்ற அளவுக்கு ஆத்திரம் தலைக்கேற தனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் ராகேஷை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். "என்னடா பிச்சைக்கார பயலே! எந்த தைரியத்தில எனக்கு சேர வேண்டிய சொத்து எல்லாம் நீ ஆட்சி பண்ணிக்கிட்டு இருக்க? உன்னையும் அப்பவே விஷ்ணு மாதிரி போட்டு இருக்கணும் உன்னை விட்டு வச்சி தப்பு பண்ணிட்டேன். எல்லாருக்கும்தான் இந்த விஷயம் தெரியும் போலவே" எனக்கூறி தன் சித்தி சித்தப்பா தன்னை முறைப்பதை கண்டவன், "என்ன சித்தப்பா இப்படி பார்க்கிறீங்க" என நல்ல பிள்ளை போல் கூறியவனிடம் "சீ... அப்படி கூப்பிடாதடா உன்னையும் என் புள்ளை மாதிரிதான நினைத்து வளர்த்தேன் உனக்கு இப்படி பண்ண எப்படிடா மனசு வந்துச்சு" என தன் மன ஆதங்கத்தை வசந்தா அவனை வேதனையோடு திட்ட, அவனோ, " உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை. என்னோட டார்கெட் இவந்தான், தெரியாம நீங்க வந்து மாட்டிகிட்டீங்க" என வர்ஷித்திடம் திரும்பியவனை கண்டு கடவுளிடம் "இவனை தண்டிக்கவே கூடாதுனு முடிவுல இருக்கியா?" என கடவுளிடம் முற்றுகையிட்டார் வசந்தா.

"கொஞ்ச நேரம் தரேன் அதுக்குள்ள சொத்து எல்லாம் என் பெயருக்கு எழுதிக் கொடுத்துட்டனா உன்ன விட்டறேன். இல்லன்னா உன்ன அடிக்க மாட்டேன் என் கை உன் மேல படாது ஆனா என்னோட துப்பாக்கி உன் உயிரோட விளையாடும் உன்னை மட்டும் இல்ல உங்க மூணு பேரையும் கொன்னுடுவேன்" என கூறி இல்லை இல்லை மிரட்டி சில பாத்திரங்களை அவன் முன் எடுத்துப்போட்டவனை எதிர்த்து வர்ஷித் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக அவனது கண்களில் இருக்கும் கோபமும் ஆத்திரமும் போட்டி போட்டுக்கொண்டு வெளியே வந்தது. இதையெல்லாம் அவ்வறையின் மூளையில் அமர்ந்தவாறு ராகேஷின் தந்தை ரசித்துக் கொண்டிருந்தார்.

சுப்பிரமணியன், "சண்டாளா உனக்கு சொத்து வேணும்னு என்னோட பையனைக் கொன்னுட்ட, இப்போ குடும்பத்தோட கடத்தி வந்து இப்படி பண்றீங்களே அப்பனும் மகனும். உனக்கு என்ன வேணும் சொத்து தான, வர்ஷித் இதுல கையெழுத்துப் போடுப்பா இவன் மூஞ்சுல தூக்கி எறிப்பா. எனக்கு இருக்கிற பெரிய சொத்தே நீ தான். உன்னோட பார்க்கையில் இந்த சொத்தெல்லாம் கால் தூசுக்கு கூட வராது. இனிமேல் எங்களை விட்டுரு, இனிமேலும் உன்னோட அலுப்ப புத்தியினால யாரையும் இழக்க நான் விரும்பவில்லை "என கோபமாக ஆரம்பித்தவர் கெஞ்சலுடன் முடிக்க, "என்ன அப்பா இவன்கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கீங்க, இவன் ஒரு மனசாட்சி இல்லாத ஜென்மம். இப்போதைக்கு இவன் ஒரு பணம் மேல் ஆசை கொண்ட மிருகம்" என கூறிய வர்ஷித் தந்தையின் முகத்தை பார்த்தான். அவரின் முகத்தில் வேதனையின் ரேகை ஏகபோகமாக இருக்க, " அப்பா நம்மள காப்பாத்த கடவுள் கண்டிப்பாக யாரையாவது அனுப்பி வைப்பார் கவல படாதீங்க "என கூறியதை கேட்டு ராகேஷ், "என்னடா அப்பனும் மகனும் கதை பேசிக்கிட்டு இருக்கீங்களா. ஒழுங்கா சைன் போடு இல்லனா" என வர்ஷித் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்த அவனது அப்பா, ' கொஞ்சம் பொறு யாரோ கடவுள் அனுப்புவாருனு சொன்னாங்களே அவுங்க யாரென்று பார்த்துட்டு இவங்கள கொல்லலாம். கொஞ்சம் டைம் கொடுப்போம்" என கேலியாய் சொல்ல அதனை மதித்து கேட்டான் ராகேஷ். வர்ஷித் தனது மனையாளை நினைத்து மனதினுள் கதறினான்.

அங்கு மருத்துவமனையில், "அம்மாமா மாமாமாமா " என அந்த கட்டிடமே அதிரும் படி கத்தி தனது கருவில் பூத்த உயிர் பூவை இப்பூலோகத்திற்கு தனது கணவனின் ஆசைபடி கொண்டு வந்து சேர்த்து விட்டோம் என்ற நிம்மதியிலும் இத்தருணத்தை ரசிக்கவேண்டியவானோ அருகில் இல்லையே என்ற கவலையிலும், "மாமா மலர்மா" என முனங்கிய படியே மயக்க நிலைக்குச் சென்றாள் ஆதிகா.

"அம்மா" என்ன சத்தம் கேட்ட மறு நொடியே ஒரு மொழியில்லா அழுகுரல் "வீல்" என தன்னால் தன் தாய் கஷ்டப்பட்டு விட்டாளே என கவலையோ அல்ல இது வரை தாயின் உயிரிலும் சூட்டிலும் வாழ்ந்துவிட்டு புதிதாய் புதுமுகம், புது சூழல் என காணாததை கண்ட பயமோ தெரியவில்லை அப்பிஞ்சு உயிர் தாயிற்கு ஈடாக அழுதது.

இதைக்கேட்டு ஆதிகாவின் பெற்றோருக்கு கோடி மகிழ்ச்சி. செவிலியர் குழந்தையை
வெளியே கொண்டுவர, தனது பேர பிள்ளையை வாங்கிக் கொஞ்சி மகிழ்ந்தாலும் வர்ஷித் இன்னும் வரவில்லையே என்ற கவலை கொண்டனர்.ஆதிகாவின் தந்தையும், வர்ஷித் சுப்பிரமணியனுக்கு அழைப்பை ஏற்படுத்த இருவருக்குமே ரீச் ஆகவில்லை.

அரை மணி நேர அளவில் ஆதிகா கண்ணை விழித்தாள். கண்விழித்ததும் அவள் எதிரில் தன் அம்மாவும் அப்பாவும் அவர்களின் கையில் தான் பெற்ற செல்வமும் இருக்க, தெரியுமே அவர்கள் தான் இருப்பார்கள் என்று ஆனால் தன் கண்ணும் மனமும் தேடுவது வர்ஷித்தின் அருகாமையை தானே.
'நான் சொன்ன நேரத்தில் என்னுடன் இல்லாமல் போய் விட்டானே? எவ்வளவு பொன்னான நேரமிது என்னுடன் இருக்காமல் எங்கிருக்கிறான்?" என கேள்வியோடு கண்ணீரும் எழுந்தது. ஒரு முறை அவனது காட்சி கிடைக்காதா என ஏங்கினாள். ஆதிகாவின் தாய் "இங்கே பாருடி என்ன குழந்தை தெரியுமா? " எனக் கூறும் போது இடைமறித்து தன் குழந்தை ஆணா? பெண்ணா? யார் சாயல்? மலர் அத்தை சாயலா? என பார்க்கும் ஆர்வமும், அப்பிஞ்சு பூவின் இதழ் கொண்டு சுவைக்க வேண்டிய தாய்ப்பாலும் மார்பில் ஊறி தந்த வலியும் மீறி அவள் "யாரும் வேணாம் மாமா தான் வேணும், அவர்கையால்தான் முதலில் குழந்தை வாங்குவேன், அவர் வாயால் தான் என்ன குழந்தை என கேட்பேன் என அவரிடம் வாக்கு கொடுத்திருக்கேன் அதை மீற மாட்டேன்" என பிடிவாதம் பிடித்தவளை அவளின் தாய் கடிந்துகொள்ள அவளது தந்தையே இருவரையும் சமாதானம் செய்து வர்ஷித்திற்கு கால் செய்ய அதில் ஒரு பயனும் இல்லை. அவளும் மனதளர்வு இல்லாமல் தைரியமாகவும், "அவன் வரும் வரை காத்திருப்பேன் அவன்னில்லா இவ்வுலகமே வேண்டாம்" என கல் போல அமர்ந்திருந்தவளின் மூளை ஏதோ சட்டென கூற தனது மொபைலை கேட்டு வாங்கி அதில் ஒரு நம்பரை டயல் செய்தாள். மறுமுனை அழைப்பை ஏற்றதும், "சிவா அண்ணா" என கூப்பிட்டு "அண்ணா அண்ணா "என்று அழைக்க அடுத்த வார்த்தை வரமறுக்க, "அங்கு என்ன? வர்ஷித் ஆதிகாவிற்கு வலி என கூறினான். இப்போது இவள் அழுகிறாள் என்ன ஆனது என குழம்பி என்னம்மா ஆனது என சிவா பரிவோடு கேட்க அவளோ, "அண்ணா அவர் இன்னும் இங்க வரல உங்க கிட்ட தான் பேசுறேன்னு என் கிட்ட சொல்லி கால் கட் பண்ணாரு அதான் உங்ககிட்ட கேட்டேன்" எனக் கேட்க, "ஆமாமா, என்னிடம் பேசும்போது தான் உனக்கு வலினு சொன்னான். இன்னும் அங்க வரலையா? நாங்க கடைசியா ராகேஷ் பத்தி பேசினோம் " என கூற அந்த ராகேஷ் எனும் பெயரைக் கேட்டவள் மனதை விட்டு போன் கீழே நழுவ, மயங்கி பெட்டில் சரிந்தாள்.
அங்கு சிவா, " ஹலோ ஹலோ" என கத்த அவளது தந்தையை ஆதிகாவை ஒரு கையால் தாங்கி மறுகையால் போனை எடுத்து நடந்ததை கூறி, "ஆதிகா இப்போ மயக்கத்திலிருந்து தெளிய வில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர் கூறியதையும் கூறி" தயவுசெய்து வர்ஷித்தை தேடி அழைத்து வரச்சொல்லி சொன்னார்.

ஒரு மணி நேரம் கழித்து சிவா வர்ஷித்தையும் அவனது பெற்றோரையும் அழைத்து வந்தான். அவர்கள் கண்ட கோலம் அனைவரையும் உலுக்கியது. அங்கு காற்றுப் போல் பாய்ந்து வந்தவன் அங்கு யார் இருக்கிறார்கள்? குழந்தை எங்கே? என எவற்றையும் கண்டுகொள்ளாமல் நேராக ஆதிகாவிடம் சென்று அவள் அருகில் அவள் கையை பிடித்து கண்ணில் ஒத்திக்கொண்டு "ஆதிமா ஆதிமா" சொல்லியவாறே அழ ஆரம்பித்தான் வர்ஷித்.

"அழாதீங்க மாப்பிள்ளைப் பேசுங்க" ஆதிகாவின் பெற்றோர் கூறினர். வர்ஷித்தின் பெற்றோர் பேர பிள்ளையை பார்த்த ஆனந்தமும் மருமகளை கண்டு வருத்தமும் கொண்டனர். மனமுடைந்து பேச ஆரம்பித்தான், "ஆதிமா நீ வேணும்டி. நான் வராதது தப்புதான். அதற்கு மன்னிச்சிருடி இல்லன்னா கோபம் போற வரை என்ன எவ்ளோ வேணாலும் அடி. ஆனால், இப்படி பயமுறுத்தாதடி . ப்ளீஸ் நீ கண்ண திறடி, என்ன பாரு உன்னோட வருமாமா வந்து இருக்கேன் பாரு "என அவளது தலையையும் முகத்தையும் தடவினான். அதனை பார்க்கவே அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது. எல்லோரது கண்ணிலும் நீர் துளி வந்தது. "ஏதோ பிடிவாதம் பிடிச்சியாமே நான் வந்தா தான் குழந்தையை பார்ப்பேன்னு. இப்ப நான் சொல்றேன் நீ என்ன கண்ண தொறந்து பாத்தாதான் நானும் குழந்தையை பார்ப்பேன். நானும் பிடிவாதமா இருப்பேன். நீ என்னை ஏமாத்திட்ட ஆதிமா நான் எத்தனை தடவை உன்கிட்ட ஐ லவ் யூ சொல்லி இருப்பேன் பதிலுக்கு நீ சொன்னதே இல்ல சீக்கிரமா என்கிட்ட வந்து சொல்லுடி என் ஆதிமால என் செல்லம்ல கண்ண திறடி "என கண்ணிலிருந்து விழும் நீரை பொருட்படுத்தாமல் புலம்பியவனின் கையிலிருந்த அவளது கையில் லேசாக அசைவு தெரிந்தது அவளது காதல் கக்கும் கண்ணிலும் நீர்த்துளி பூத்தது. முன்ன இருந்ததை விட பாதி உடம்பாக, குழந்தையை பெற்று சோர்ந்து பச்சை உடம்பு காரியாக இருந்தவள் கண்விழித்ததும் அவளை அள்ளி அணைத்துக் கொண்டான் வர்ஷித். அவனை விலக்கி, " மாமா மாமா உனக்கு... ஏதும்.... இல்லையே.." என வார்த்தைகள் கோர்க்க முடியாமல் திணறி அவனது முகம் தலை உடம்பு என எங்கும் தடவி பார்த்து அவனது நெற்றியில் முத்தமிட்டாள் ஆதிகா. அப்போது அவளது கையில் அவனது இடது புஜத்தில் காயம் ஒன்று அகப்பட்டது. அதனை பார்த்து வர்ஷித்திடம் தீர்க்கமான பார்வையுடன், " என்ன இது? எப்படி ஆனது? "என கேட்டவளிடம், 'ஏதும் மறைக்காமல் பதில் கூறு 'என விடயம் இருக்க வர்ஷித் அங்கு, முதலிலிருந்து நேரம் கொடுத்தவரை சொல்லி முடிக்க, சிவா தொடர்ந்தான் "அன்னைக்கு உங்க கிட்ட கொடுத்த ரெண்டு மோதிரத்திலும் நான் ஜிபிஎஸ் செட் பண்ணியிருந்தேன். அதை வச்சுதான் நீங்க சொன்ன பிறகு வர்ஷித் இருக்கும் இடத்தை கண்டுபிடிச்சேன். அங்க என் டீம்மோட போனேன். அப்போ..." என சிவாவும் வர்ஷித்தும் அந்நினைவிற்கே சென்று சொல்ல ஆரம்பித்தனர் இருவரும்.

அங்கு ராகேஷ் அவனது தந்தை வர்ஷித்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் சென்றது. கோபத்தில் இருவரையும் தரக்குறைவாக பேச ஆரம்பித்தான் வர்ஷித் அவனது கட்டுப்பாட்டினை மீறி. அதனைக் கேட்ட ராகேஷ் கோபத்தில் சீறி துப்பாக்கியை எடுத்து வர்ஷித்தை நோக்கி குறி வைத்து துப்பாக்கியை அழுத்தினான். தோட்டாவும் சரியாக நியாயம் பக்கம் நின்று தன் வேலையான உயிரைப் பறித்தது.

அந்நேரம் வர்ஷித் தன்னை நோக்கி வரும் தோட்டாவை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத நிலையை எண்ணி வருந்தி நாற்காலியோடும் கட்டப்பட்ட கைகால் கட்டோடும் குப்புற விழுந்தான்.

அவனை நோக்கிய தோட்டா வர்ஷித் விழவும் நேராக ராகேஷின் அப்பாவான ராமநாதனின் தலையை பிளந்து உயிரை பறித்தது.

ஆம். சற்று நேரம் முன் ஏதோ முக்கியமான கால், டவர் இல்லை என வெளியே சென்றவர் அப்போதே உள்ளே வர, எமனும் அவர் பின்னாலேயே வந்தான் போல உயிரை கவ்விக் கொண்டு சென்றுவிட்டான். இதனை கவனிக்காமல் ராகேஷ் துப்பாக்கி கொண்டு தந்தை உயிரை அறியாமலே பறித்துவிட்டான்.

ஒரு நொடி நிதானித்த ராகேஷ் துடிதுடித்து ரத்தம் பீறிட்டு சாகும் தன் தந்தையைப் பார்த்த பிறகும் கீழே விழுந்த வர்ஷித்தையும் பார்த்தே நடந்ததை யூகித்தவன் ஸ்தம்பித்து நின்று விட்டான்.

தனது அப்பா, உயிர், குரு, உலகம் என எல்லாமே அவனுக்கு அவர்தானே அவரின் இழப்பு என் கையாலேவா என தன் நிலையை எண்ணி வேதனை கொண்டு முதன்முறையாக ஒரு உயிரின் மதிப்பு அறிந்து மரணித்து நின்றான். சுப்பிரமணியன் வசந்தா வர்ஷித், "அப்பனுக்கும் மகனுக்கும் நல்ல கூலி ஆண்டவன் கொடுத்து விட்டான்" என எண்ணினர். வர்ஷித் கீழே விழுந்து பேலன்ஸ் இல்லாமல் அந்த நாற்காலி சேர்ந்து புரண்டதால்தான் அவனுக்கு கையில் அடிபட்டது.

ராகேஷ் துப்பாக்கி அழுத்தும்போது வர்ஷித் இருக்கும் இடமறிந்து சிவா வந்து அங்கு நடந்ததை நேராகப் பார்த்தான். இதற்குமேல் சாட்சியாக வர்ஷித்தின் கைகடிகாரத்தில் அவன் அறியாமலேயே சிவா வைத்திருந்த கேமரா மூலமாக ராகேஷ்தான் விஷ்ணுவை கொன்றதாக கூறிய வாக்கு மூலமும், ராகேஷ் தனது அப்பாவை கொன்ற காட்சியும் இடம் பெற்றிருந்த இத்தனை நாள் போலீஸ்க்கு தண்ணீர் காட்டிய ராகேஷை பிடித்துவிட்டான். அவனும் உயிரற்ற ஜடமாக , 'என்னை என்ன வேணா செய்து கொள்ளுங்கள் 'என அமைதியா மாட்டி கொண்டான்.

இவை அனைத்தையும் கூறிய சிவாவிடம் வர்ஷித், "இன்னும் என் உடம்புல எனக்கு தெரியாம என்னடா வச்சிருக்கே? " என்று கேட்க அவன் "ஹிஹி அவ்ளோதான் மச்சான் கோச்சிக்காத மச்சான் எல்லாம் உங்க உங்க பாதுகாப்புக்கு தாண்டா" எனக்கூறி இருவரிடமிருந்து மோதிரமும் வர்ஷித்திடமிருந்து வாட்சையும் வாங்கிக்கொண்டான். பதிலுக்கு இரு மோதிரம் கொடுத்து மாத்திக்க சொன்னான். "என்னடா நடமாடும் நகைக்கடை போல" என கிண்டலடித்து வர்ஷித் அதனை வாங்கி ஆதிகா கையில் மாட்ட திரும்பும்போது ஆதிகா கோபமாக பார்த்தாள். அவளது கை தன்னவனின் காயத்தை வருடியது. அவனை முறைத்தவள், " டேய் இப்பவாவுது என்னோட குழந்தைய காட்டுடா" என கூறினாள். அவனுக்கும் சட்டென நியாபகம் வர தன் உயிரில் மலர்ந்த ரோஜா குவியலென பஞ்சு பொதிந்த வெண்மேகமென, நட்சத்திரம் போல் மின்னும் கண்களும், கூர் நாசியும், கள்ள கபடமற்ற பொக்கை வாய் சிரிப்பு என இருந்த தன் பெண் குழந்தை அதுவும் வர்ஷித்தின் தாயாரின் முக ஜாடை அப்படியே உறித்து வைத்து தன் மனைவியின் ஆசை பிடிவாதபடி என்னை பார்க்கவே மறு பிறவி எடுத்து வந்திருக்கும் மலர்மாவை கையால் பிடித்தா நோகுமோ என மென்மையாய் முதன்முறை கையில் ஏந்தினான். அத்தனை மகிழ்ச்சி அவனுக்குள்.
மகள் தனக்கு தந்தை ஸ்தானம் கொடுத்ததால் ஏற்பட்ட கர்வத்தோடு கண்ணீர் ஆனந்தக் பெரு வெள்ளம் சேர்ந்து கொண்டது வர்ஷித்திற்கு.

பெற்றோரிடமிருந்து குழந்தையை வாங்கி ஆதிகாவிடம் போக, அங்கு அவளோ வர்ஷித்தின் முகத்தையே ஆர்வமாய் நோக்கினாள். அவளின் நெற்றியில் முத்தமிட்டு, "உன் ஆசைப்படி என்னைப்பார்க்க மலர்மாவே வந்துட்டாங்க டி" என்று கூறி அவளிடம் குழந்தையை நீட்டியவனின் விரலையும் சேர்த்து பிடித்துக் கொண்டே தாயிடம் சரணடைந்துக்கொண்டாள் இருவரின் ஆசை தேவதை.

அவள் கண்ணிலும் ஆனந்த ஊற்று. விவரிக்க முடியாத ஒன்று, பத்து மாதம் இருவரும் கற்பனையாக அவளது வயிற்றோடு உறவாடிய உறவு இப்போது தங்கள் கையில் தங்களின் ஆசைப்படி. ஆதிகா வர்ஷித் இருவரும் பேசவே இல்லை.
ஆனந்தம், நிம்மதி, நிறைவு என எல்லா உணர்வுகளும் ஒன்றாகியது. எல்லாரும் இருவருக்கும் தனிமை வழங்கி நிம்மதியாக வெளியே செல்ல, கிளம்பிய வர்ஷித்தை மகள் விடவே இல்லை. ஆதிகாவும் வர்ஷித் இருப்பதை கண்டு குழந்தைக்கு பால் புகட்ட நாணம் கொள்ள, "என்கிட்ட என்னடி இன்னும் வெட்கம் உனக்கு "என அவன் சீண்ட அவள் சிவந்து குனிந்த தலை நிமிராமல் பால் புகட்டினாள்.

தனது மகளின் மென்மையான இதழ் மார்பை கவ்வ அவளது பெண்மையும் தாய்மையும் சிலிர்த்து அடங்கியது ஆதிகாவிற்கு. வர்ஷித்தும் தன் மகள் விரலுக்குள் அடங்கி எங்கே குழந்தைக்கு வலிக்குமோ என தாய் மகளின் அருகில் நெருங்கி அமர்ந்துகொண்டான். பால் புகட்டி முடித்து அவள் நிமிர்ந்தவுடன் அவள் கரத்தை பிடித்து மோதிரம் மாற்றி விட அவளும் வெட்கத்தோடு அவன் செய்ததை செய்தாள். வர்ஷித் ஒரு கையால் குழந்தையை ஏந்தி மறு கையால் அவளை அணைக்க, தன் மார்பினுள் ஒன்றியவளிடம், "பயந்திட்டியாடி? "என கேட்டான் வர்ஷித். அவள் பதிலேதும் சொல்லாமல் கண்ணீர் வடிக்க, அவளது முகத்தை ஏந்தினான். இருவரது விழிகளும் கலக்க, "நான் எப்போதும் உன்ன ஏமாத்த மாட்டேன் மாமா ஐ லவ் யூ வரு மாமா" என அவன் பல நாள் கேட்ட வாக்கியத்தை கூறி அவனது இதழில் தன் இதழை பொருத்தி கொண்டாள். வர்ஷித் பெண்ணவளின் எல்லையற்ற காதலிலும் முரட்டு முத்தத்திலும் திக்கு முக்கு ஆடினான். அவளது செய்கை எந்த சூழ்நிலை வந்தாலும் என்னை விட்டு பிரிந்து போக உன்னை விட மாட்டேன் என சொல்லாமல் சொல்லியது.
 

Aarthi murugesan

Saha Writer
Team
Messages
29
Reaction score
0
Points
1
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 30

ஐந்து வருடம் கழித்து,

"அம்மா அம்மா எப்படி நீ அப்பா பக்கத்தில் தூங்குற? அம்மா அம்மா எந்திரி நானும் அக்காவும் தான் அப்பா பக்கத்தில் தூங்குவோம் நீ தூங்கக்கூடாது" என தன் தளிர் விரல்களால் வர்ஷித்தின் கை அணைப்பிற்குள் தூங்கும் ஆதிகாவை அடித்து எழுப்பினாள் வர்ஷித் ஆதிகா இணையின் இரண்டாவது ஆசை மகள் தமிழினி.

வர்ஷித்தே அரும்பாடு பட்டு தன் மகளை கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்து, "இல்லமா அம்மா தெரியாம என்மேல படுத்துருப்பாங்க நம்ம அம்மாதானே தூங்கட்டும்டா" என வர்ஷித் சமாதானம் செய்த பிறகே தமிழ் வெள்ளை கொடியை பறக்க விடுவாள். ஆனால் ஆதிகா அப்போதுதான் அவளை வெறுப்பேற்ற வர்ஷித்தின் மார்பு மேல ஏறி படுத்து இன்னும் இறுக்கியாக கட்டிக்கொண்டு தூங்குவாள். இது இன்று மட்டுமில்ல கிட்டத்தட்ட மூன்று வயது தமிழினிக்கு விவரம் அறிந்த நாள் முதல் நடக்கும் ஒன்று. தமிழ் கட்டுப்படுவது அவளது அக்காவான மலருக்கு மட்டுமே.

ஆதிகாவின் செய்கையை பார்த்து வர்ஷித், 'இந்த வாண்ட கூட சமாளிச்சிறலாம்.ஆனால், இவ்வளவு வயசாகியும் சின்ன பிள்ள கூட சண்டை போடும் இவளை என்ன செய்வது? 'என ஆதிகாவை பார்த்து புலம்புவான். இதுவும் அவனுக்கு வழக்கமாகி போன ஒன்றுதான்.

இக்காதல் ஜோடியின் ஆசை புதல்விகளை பற்றி கொஞ்சம் பார்க்கலாம். முதலில் மலர்மொழி, வீட்டில் எல்லாரும் மலர்மா எனவே அழைப்பர். அப்படியே வர்ஷித்தின் தாய் மலர்வேணியை உரித்து கொண்டு பிறந்தவள். வர்ஷித்தின் குணம் பழக்க வழக்கங்களை அவள் தன்னுடையதாக்கி கொண்டாள். சாந்தமான குணம் உடையவள். அப்பா என்றால் உயிர் அவளுக்கு. அம்மாவை விட்டு பிரியவே மாட்டாள். தாத்தா பாட்டி என்றால் அவளுக்கு கொள்ளை பிரியம். நடராஜன் இருவாரத்துக்கு ஒருமுறை வந்து போகும்போது அவரது மடியைவிட்டு இறங்கவே மாட்டாள். அவரும் வர்ஷித்திற்கு கொடுக்க முடியாத பாசத்தையெல்லாம் பேத்திக்கே கொடுத்தார். வர்ஷித்தும் ஆதிகாவும் எவ்வளவோ முறை "இங்கையே இருங்க" என நடராஜனிடம் கூறுவர். ஆனால் அவர் கேட்கவில்லை. "எனக்கு என்னுடைய ஊர்தான் வசதியாக இருக்கும்" என்று சொல்லிவிடுவார். பிருந்தாவும் மலரும் உற்ற தோழிகள் ஆகினர். விடுமுறை கிடைக்கும்போது வர்ஷித் குடும்பம் ஊருக்கு செல்வதும், ஊரிலிருந்து இங்கு வந்து செல்வதும் வழக்கமானது.

ஆதிகா மறுமுறை கருத்தரித்தபோது வர்ஷித் கைகளிலும் மனதிலும் தாங்கினான். இப்பொழுதும் வர்ஷித் பெண்பிள்ளையே கேட்க, மலரும் எனக்கு தங்கச்சி பாப்பாதான் வேணும் என கூறினர். அந்த நாட்களில் மலரும் ஆதிகாவை நன்றாக பார்த்து கொண்டு வர்ஷித் அருகில் இல்லாத குறையை தீர்த்து வைத்தாள். இவ்வாறு பல அன்புகளை கருவிலே பெற்று பிறந்தவள் தான் தமிழினி.

அவள் அப்படியே ஆதிகா போல முகஜாடை, குணம் பிடிவாதம் என எல்லாவற்றையும் அம்மாவிடமிருந்தே எடுத்து கொண்டாள். ஆதிகாவிற்கு தான் இதில் கொஞ்சம் ஏமாற்றம். அவள் இந்த குழந்தை வர்ஷித் போல பிறக்கணும் என ஆசை கொண்டாள். அக்குழந்தை ஆதிகா மாதிரி பிறந்து அவளது ஆசையை பொய்த்துப்போக வைக்க, 'வர்ஷித் போல ஒரு குழந்தையை பெற்றே ஆகவேண்டும்' என ஒரே முடிவாக இருந்தாள். ஆனால் இதற்கு வர்ஷித்தே தடையாக இருந்தான். அவள் அடம்பிடிக்கும்போது, "இனிமேல் நீ கஷ்டப்படுத்த பாக்க முடியாதுடி வேணடாம்" என மறுத்து விடுவான்.

தமிழினியும் மலர்போலவே தந்தை மீது அவ்வளவு பாசம் வைத்திருப்பாள். மலர் இயல்பாகவே மெச்சூர்டாக யோசிப்பாள். இதில் தங்கை வந்ததும் ஒரு தாயாகவே மாறினாள். தமிழ் பிறந்ததிலிருந்து இன்றுவரை மலரே அனைத்தையும் ஆதிகாவிடம் கேட்டு கேட்டு அவளுக்கு செய்வாள். இதை பார்க்கும்போது மலரின் குணத்தை நினைத்து ஆதிகா சந்தோச படுவாள்.

தமிழும் வளர வளர ஆதிகாவிடமும் நல்ல அன்பாகவே இருப்பாள். ஆனால் வர்ஷித் என வரும்போது இருவருமே அடித்துக்கொள்வர் அப்படியே ஆதிகா போல. ஆதிகா "வருமாமா" என கூப்பிடுவதால் தமிழும் "வருப்பா வருப்பா" என அழைப்பாள். அதுமட்டுமின்றி ஆதிகாவிடம், "நீ வெறும் மாமா" என தான் கூப்பிட வேண்டும் என சொல்ல இருவரும் சண்டை பிடித்து கொள்வர். மலர் வர்ஷித் பாடுதான் இதில் திண்டாட்டம். இருவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என ஆகும். இதுமட்டுமில்லாமல் "நீ வருப்பா கூட சாப்பிடக்கூடாது, தூங்கக்கூடாது" என தமிழ் பிடிவாதம் புடிக்கும்போது தான் ஆதிகாவும் வேணும் என்றே அவள் செய்யக்கூடாது என சொல்லும் விஷயத்தை அப்படியே செய்து வம்பிழுப்பாள். இவ்விருவரை சமாளிக்க வர்ஷித் மலரின் ஜீவன் வற்றி விடும்.

வர்ஷித் மலரிடம் முதலில், "நாள் முழுக்க அப்பாவால அம்மா கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலல. அம்மா நமக்காக தானே எல்லாம் செய்றங்க நாமதானே அவுங்கள பாத்துக்கணும். அதனால நீங்க தாத்தா பாட்டி கூட தூங்கினால் நான் அம்மாகூட டைம் ஸ்பென்ட் பண்ணுவேன்" என கூற மலரும் ஒத்துக்கொண்டு இருவருக்கும் தனிமை கொடுப்பாள். ஆனால் தமிழ் வந்த பிறகு, மலர் தமிழை தாத்தாகூட தூங்க கூப்பிட்டால், தமிழ் தானும் போகாமல் மலரையும் போகவிடாமல் பிடித்து வைத்துக்கொண்டு, "அக்கா நாம அங்க போனால், அப்பாவை யார் பார்த்துக்கொள்வார்கள்? " என போக மாட்டாள். சில சமயம் ஆதிகா பக்கம் பேசாமல் வர்ஷித் தமிழ் பக்கம் பேசிட்டால் ஆதிகா கோபித்துக்கொள்வாள். தமிழை கடினப்பட்டு தூங்கவைத்து விட்டு ஆதிகாவிடம் படுத்துகொள்ளவான். அவளை சமாதானம் செய்வதா வர்ஷித்திற்கு கடினம். அவன் வழியில் அதை சரி செய்து விடுவான். ஒருபக்கம் இப்படியிருந்தால் மறுபக்கம் வர்ஷித் மகள்களின் அன்பை நினைத்து சந்தோசம் கொள்வான். அவனது சந்தோஷம்தானே ஆதிகாவிற்கு பேரானந்தம்.

வர்ஷித் வீட்டில் இல்லை என்றால் தமிழ் ஆதிகா ஒற்றுமையை பார்த்தால் யாரும் நம்ப மாட்டார்கள் இவ்விருவர்தான் அப்போது அப்படி சண்டை பிடிப்பார்கள் என்று. தமிழ் வர்ஷித் பக்கம் நின்றால் மலர் ஆதிகா மடியில் உட்கார்ந்து "நான் அம்மா பிள்ளை" என அம்மா பக்கம் நிற்பாள்.

இவ்விரு பேத்தி தான் உலகம் என வாழ்ந்தனர் சுப்பிரமணியம் வசந்தாவும். ஆதிகா வசந்தா இருவரிடமும் பிணைப்பு அதிகமாயிருந்தது. ஆதிகா வர்ஷித்தின் காதல் சொல்லவே வேணாம் நாளொரு மேனியாக பொழுதொரு வண்ணமாக இம்மியளவும் குறையாமல் வளர்ந்தது. வர்ஷித்திற்கு அலுவல் வேலை நிறைய இருந்தாலும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை எப்போதும் குறைக்க மாட்டான். குடும்பம் தானே அவனுக்கு பலம்.

அன்று வர்ஷித்தும் மலர்மாவும் சேர்ந்து தமிழினியிடம் பேசி சமாளித்து வர்ஷித் ஆதிகாவை மட்டும் வெளியே அழைத்து சென்றான்.

ஆதிகா என்னன்னவோ சொல்லி கேட்டுவிட்டாள் "எங்கே போகிறோம்" என. அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தையை கூட ஆதிகாவால் வாங்க முடியவில்லை. அவள் சோர்ந்து போனதுதான் மிச்சம். கடைசியில் போகும்போது கேட்டு கொள்வோம் என விட்டுவிட்டாள்.

இருவரும் கிளம்பும்போது தமிழினி அம்மா அருகில் வந்து, "அம்மா இங்க பாரு உன்னைய நம்பித்தான் அப்பாவ அனுப்பிவைக்கிறேன். அப்பா என்ன கேட்டாலும் செய்யணும் சரியா நானும் வரலாம்தான் இருந்தேன் அப்பா ரொம்ப கெஞ்சி கேட்டாங்க அதுனாலதான் உன்னைய மட்டும் அப்பாகூட அனுப்பிறேன்" என பெரிய மனுசி போல பேசியவளை கண்கள் இடுங்கள் பொய் கோபத்துடன் முறைத்து பார்த்த ஆதிகாவை வர்ஷித், "வேணாம்டி நான் பாவம் கிளம்பும்போது உன் பொண்ணுகூட பிரச்சனை பண்ணாதடி" எனும் கெஞ்சல் மொழி தனிய வைத்தது.

குடும்பத்தாரிடம் விடைபெற்று இருவரும் காரில் பயணம் மேற்கொண்டனர். ஆதிகா, " மாமா கை கால மட்டும் கட்டிப்போட்டா பத்து பொருத்தமும் பக்காவ இருக்கும்" என தீவிரமாக சம்மந்தமே இல்லாமல் கூற வர்ஷித், "எதுக்குடி? என்ன சொல்ற? தெளிவா சொல்லேன்" என சொல்ல "ஆமா நீதான் எங்க அழைச்சிட்டு போறேன்னு சொல்லாம அழைச்சிட்டு போறியே, அதான் இப்போ என்ன கடத்திட்டு போற மாதிரி தான்டா இருக்கு" என வருத்தமாக கூறினாள். அதை கேட்டு பெரியதாய் சிரித்தவன், "ஏன்டி நான் ஏன் என்னோட சொந்த பொண்டாட்டிய கடந்த போறேன்? " என கேட்டான். அவள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு "மாமா ப்ளீஸ் சொல்லு மாமா எங்க போறோம்? எங்க அழைச்சிட்டு போற?" என வினாவ வர்ஷித்தும், சரி போனா போகுது என நினைத்து, "ஆதிமா நாம ஹனி மூன் போறோம்டி"என ஆசையாக சொல்ல அவனை பார்த்து புரியாமல் விழித்தவளிடம் "அதான்மா தேன்நிலவு தேன்நிலவு" என வெட்கத்தோடு விளக்கம் அளித்த வர்ஷித் திரும்பி ஆதிகாவை பார்த்தான். அவளின் முகபாவனை அவனின் பதிலை கேட்டு அஷ்டகோணலாக மாறி பிரதிலிப்பதை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தான். அவனது சிரிப்பை பார்த்து ஆசையாக அவனது முகத்தை தன் விரல் கொண்டு தடவினாள். "ஏன் மாமா ரெண்டு பிள்ளைக்கு அப்பா ஆகியாச்சு இப்போ இந்த தேன் நிலவு ரொம்ப முக்கியமா மாமா? " என அமைதியாக கேட்டாலும் வர்ஷித்தின் வெட்கம் தொற்றிக்கொண்டது. "இப்படி நீ வெட்க படும்போது ரெண்டு பிள்ளைக்கு அப்பா ஆகிட்டேனு நான் மறந்தறேன்டி" என அவன் முகத்தில் உள்ள அவளது கரத்தினை தன் கரத்தினுள் அடக்கி சொல்லி மேலும் அவளை வெட்கபடவைத்தான். "உன்கூட கொஞ்சம் அதிகமா நேரம் செலவிடணும்னு தோணுச்சுடி, எத்தனை பொண்ணுங்க நமக்கு பிறந்தாலும் என்னோட முழுநிம்மதி உன்கிட்டதான் இருக்குடி" என கூறியவனிடம் காதல் பார்வை வீசி அவனது தோள் மீது சாய்ந்து கொண்டாள். மறுநொடியே நிமிர்ந்து அமர்ந்து ஆதிகா, "மாமா ஹனி மூன்னா பிலைட்லல அழைச்சிட்டு போகணும் நீ என்ன கார்ல அழச்சிட்டு போற" என கண்களில் குறும்பு மின்ன கேட்க, "ஏன்டி நம்ம ஊருக்குள்ள போனா ஆகாதா, ஹனி மூன்னா வெளிநாடுதான் போகணுமா? " என அவளது கேள்வியில் நொந்தவனாய் கேட்க, அவள், "சரி பொழச்சுப்போ. ஆனால், நீ ரொம்ப கஞ்சன்டா" என முறுக்கிக்கொண்டு வம்பிழுக்க, "சரி நான் மத்ததுல கஞ்சனா இருந்தாலும் காதல்ல வாரி வழங்குற வள்ளல்டி உனக்கு அது தெரியாத என்ன "என அவளை பேச்சில் மடக்க அவள் தோல்வியை தழுவினாலும் அவனது காதலில் என்றும் ஜெயம் காணும் பட்டத்துராணி அவள் தானே.

பயணத்தில் இரவு தீர்ந்து காலை புலர்ந்தது. வர்ஷித்தும் ஆதிகாவும் வந்தடைய வேண்டிய இடத்தை அடைந்தனர். தூங்குன ஆதிகாவை எழுப்பி அவள் காரிலிருந்து இறங்கும்போதே அவளது கண்களை தன் கரம் கொண்டு மூடினான். அவள் ஏதும் புரியாமல், "என்ன மாமா?" என கேட்க அவள் காதுக்குள் "சும்மா வாடி கேள்வி கேட்காம" என கூறி அவ்விடத்திற்கு அழைத்து சென்றான்.

அங்கு நிற்க வைத்து கண்களிலிருந்து கைகளை எடுத்து அவளருகிலே நின்று கொண்டான். அவள் சுற்றி சுற்றி பார்க்க ஒரே கூட்டமாக இருந்தது. பார்க்கும் போதே சுற்றுலா தலம் என கண்டுபிடித்து தூக்க கலக்கத்தோடு, " இது என்ன இடம் மாமா? " என வர்ஷித்திடம் கேட்டவளின் முகத்தை நேராக திருப்பி பார்க்க வைத்து அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தான்.

அவள் அங்கு பல செங்கதிர்களை பரப்பி ஆழியின் மடியிலிருந்து துயில் எழுந்து மஞ்சள் நிறத்தை அப்பிக்கொண்டு காட்சி அளித்த சூரியன் தந்த விடியலை பார்த்து விழிவிரித்து ஆச்சரியத்தில் பலநாள் கனவில் மட்டும் கண்டதை இன்று நேரில் பார்த்து நிஜமா இங்குதான் வந்திருக்கிறோமா? எனும் சந்தோஷத்தில் இருந்தவளின் காதில் மேலும் மகிழ்ச்சி ஊற்றெடுக்க "என் வாழ்வில் விடியல் தந்த மனைவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டி" என வாழ்த்து கூறினான் வர்ஷித்.

அவ்விடம் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும் திருவள்ளுவர் சிலையும் ஒருங்கே இடம்பெற்றிருக்கும் கடல் தான். அங்கு சூரிய உதயம் பார்க்கவே ஆதிகா ஆசைப்பட்டாள். அதுக்கு இன்று நிகழ்ந்துவிட்டது, நிகழ்த்திவிட்டான் அவளது மணாளன், அதுமட்டுமின்றி தன் பிறந்தநாளை நானே மறந்தபோதிலும் அவன் நினைவு வைத்து தன் மனதிற்கு பிடித்த இடத்திற்கு கூட்டி வந்து வாழ்த்தியுள்ளானே, தன்னை மகிழ்ச்சிகொள்ள வைக்கும் அவனது காதல் கண்டு அதிசயித்து ஆனந்த மிகுதியில் தன்னை வாழ்த்தியவனிடம் திரும்பி சுற்றம் பார்க்காமல் ஒரு நொடிக்குள் அவன் உதட்டில் சிறு முத்தம் இட்டாள்.

அவன் உணர்வதற்குள் ஆதிகா விலகினாள் வெட்கத்துடன். ஆதிகாவிற்கு அந்த இடத்திற்கு வந்ததை விட தன்னவன் தனக்காக இதனை செய்ததை நினைத்து மகிழ்ச்சிகொண்டு அவனது காதல் தனக்கு கிடைத்த பாக்கியம் என நினைத்தாள்.

அவள் அதனை ரசித்து பார்த்துக்கொண்டே, "நான் எதிர்பாக்கவே இல்ல மாமா" என வர்ஷித்திடம் கூற வர்ஷித்தும், " நானும் இத எதிர்பாக்கவே இல்லடி" என தன் உதட்டினை வருடிய படியே கூற அவள்" போடா" என செல்லமாக அவனது தோள்களை இடித்தாள்.

அந்த நாள் முழுதும் ஆதிகா வர்ஷித்தை விட்டு நகரவே இல்லை. அவனும் அவளை கைவலைக்குள்ளே வைத்திருந்தான். மகிழ்ச்சியாக அந்நாளை கழித்தனர். அங்கே தங்கி ஊர் சுற்றினர்.

அன்றிரவு உணவு முடித்து பால்கனியில் இருவரும் நின்று காற்று வாங்கிகொண்டிருக்க, "ஆதிகாவிடம் சந்தோசமா இருக்கியாடி? " என வர்ஷித் கேட்டான். ஆதிகா நொடியில் "இல்ல" என்றாள் வெறுமையோடு. "ஏன்? " என வர்ஷித் கேட்க "எனக்கு பர்த்டேக்கு கிப்ட் வேணும்" என கேட்டாள். அவன் முழித்து, "என்ன கிப்ட்டி வேணும்? "என கேட்க "பேபி வேணும்" என்றாள் சாதாரணமாக. "ஒரு தடவ சொன்னா நீ கேட்க மாட்டியாடி வேணாம்னா வேணாம் இது பத்தி இனிமேல் பேசாத" என அவன் கோபமாக கூற, "பேசுவேன் எனக்கு பேபி வேணும்" என பிடிவாதமாக கூறியவளின் கையை உதறிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தான். அவள் அவ்விடத்தை விட்டு நகராமல் அங்கே நின்றாள். "பிடிவாதம் பிடிவாதம்" என முணுமுணுத்துவிட்டு அவளிடம் பேசவில்லை. அங்கே மௌனமொழி ஆட்சி செய்ய வர்ஷித்தே பேசினான். ஏனென்றால், ஆதிகாவை பற்றி தான் தெரியுமே அவள் பிடிவாதத்தில் எவ்ளோ நேரம் என்றாலும் அப்படியே இருப்பாள் என்பது.

"ஏன்மா அடம்பிடிக்கிற? " என அவனே இறங்கி வந்து கேட்க, "உன்னைய கொஞ்சுறதுக்கு உனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. அதுபோல என்னையும் கொஞ்ச கெஞ்ச ஒரு பையன் வேணும்" என கூற அவன் சமளிக்கும்பொருட்டு "அது எல்லாம் முடியாதுடி உன்னைய கெஞ்சுறது கொஞ்சுறது நானாதான் இருக்கனும்" என கூறியவனிடம் "இதெல்லாம் நான் ஒத்துக்க முடியாது"என பிடிவாதமாக கூறினாள். சிறிது நேரம் கழித்து, "இது மட்டும்தான் காரணமா நீ பேபி வேணும்னு கேக்குறதுக்கு? " என வினாவியவனின் அருகில் சென்று அமர்ந்து "எனக்கு உன்ன மாதிரி ஒரு குழந்தை வேணும்டா, உன்னோட இந்த கண்ணு, இந்த மூக்கு, உன்னோட அழகான சிரிப்பு இதெல்லாம் அப்படியே உள்ள மாதிரி பேபி வேணும் அதுவும் பையன் தன் வேணும்" என கற்பனையில் வடிவம் தந்த குழந்தையை ரசித்து கூற அவளின் கற்பனையை கலைக்க முடியாமல், "என்ன ஆதிமா அதான் மலரும் தமிழும் இருக்காங்களேடி" என கேட்க "போடா மலர்தான் என்னோட பொண்ணு, தமிழ் அப்படியே என்ன போலவே பிடிவாதம் அதுவும் உன் விசயத்துல. ரெண்டுபேருக்கும் உன் சொல்தான் வேதவாக்கு அதனால பையன்தான் வேணும்" என அவள் கூற்றிலே விடாமல் கொடிபிடிக்க அவன் கல் போல அமர்ந்திருந்தான். "போடா, எப்போதான் என் பேச்ச நீ கேட்டிருக்க" என அவனை அடித்து எழ போனவளை கரம் பற்றி தடுத்து தன் மீது சரித்து, "இப்படி கோவிச்சிக்கிட்டு போன நீ கேட்ட பேபி வந்துருமாடி? " என கேட்டவனை விழிவிரித்து நம்பாமல் பார்த்தளை, "நீ கேட்ட பர்த்டே கிப்ட் வேணாமா? " என கேட்டு அவளை மார்போடு ஒன்றவைத்து ஆதிகா கேட்டதை செய்கிற வேளையில் மூழ்க ஆரம்பித்தான்.

நினைத்ததை சாதித்துவிட்ட களைப்பில் படுத்திருந்தவளிடம், "ஏன் ஆதிமா உனக்கும் தமிழுக்கும் ஒத்து போகமாட்டிக்குது? " என வர்ஷித் கேட்க, "அவ கிடக்குற மாமா நான் மட்டும் இப்போ உன்மேல தூங்குறேன்னு அவளுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் சாமியாடுவா" என கூறி சிரித்தாள் ஆதிகா. சிறியதாய் சிரித்தவன் "உண்மையிலே அவமேல உனக்கு கோபம் வராதாடி? "என கேட்டவனை விசித்திரமாய் பார்த்து "நீர் அடிச்சு நீர் விலகுமா மாமா, சும்மா அப்போப்போ அவளை வெறுப்பேத்துவேனே தவிர அவ மேல நான் கோபப்படுவேனா மாமா அவ இப்படி இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப புடிக்கும் மாமா உன்மேல பாசமா இருக்குறப்போ நீ சந்தோசமா இருப்ப உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம், நீ எப்பவும் இப்படித்தான் சிரிச்சிகிட்டே இருக்கனும் என கூறியவளின் நெற்றியில் முத்தமிட்டு அவனை மாற்றி காலம் முழுக்க காக்கும் அவனது மாயாவியின் காதலுக்குள் மாயமானான்.

நிம்மதிபூவை பறித்து வெறும்
பொட்டலை கொடுத்த உலகத்தில்
சோகமே சூறாவளியாய் தாக்க
விதியால் தனித்துவிடப்பட்டு
சோதனையின் வழிப்போக்கில்
பயணித்த என் வாழ்வை
உன் காதலால் மீட்டெடுத்து
இனிமையான பக்கங்களை புரட்டி
அதில் ஆனந்த பத்திகளை ஊற்றி
அழகுற தீபங்களை ஏற்றி
மலரவைத்துவிட்டாயேடி
என்னடி மாயாவி நீ...

என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 30

ஐந்து வருடம் கழித்து,

"அம்மா அம்மா எப்படி நீ அப்பா பக்கத்தில் தூங்குற? அம்மா அம்மா எந்திரி நானும் அக்காவும் தான் அப்பா பக்கத்தில் தூங்குவோம் நீ தூங்கக்கூடாது" என தன் தளிர் விரல்களால் வர்ஷித்தின் கை அணைப்பிற்குள் தூங்கும் ஆதிகாவை அடித்து எழுப்பினாள் வர்ஷித் ஆதிகா இணையின் இரண்டாவது ஆசை மகள் தமிழினி.

வர்ஷித்தே அரும்பாடு பட்டு தன் மகளை கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்து, "இல்லமா அம்மா தெரியாம என்மேல படுத்துருப்பாங்க நம்ம அம்மாதானே தூங்கட்டும்டா" என வர்ஷித் சமாதானம் செய்த பிறகே தமிழ் வெள்ளை கொடியை பறக்க விடுவாள். ஆனால் ஆதிகா அப்போதுதான் அவளை வெறுப்பேற்ற வர்ஷித்தின் மார்பு மேல ஏறி படுத்து இன்னும் இறுக்கியாக கட்டிக்கொண்டு தூங்குவாள். இது இன்று மட்டுமில்ல கிட்டத்தட்ட மூன்று வயது தமிழினிக்கு விவரம் அறிந்த நாள் முதல் நடக்கும் ஒன்று. தமிழ் கட்டுப்படுவது அவளது அக்காவான மலருக்கு மட்டுமே.

ஆதிகாவின் செய்கையை பார்த்து வர்ஷித், 'இந்த வாண்ட கூட சமாளிச்சிறலாம்.ஆனால், இவ்வளவு வயசாகியும் சின்ன பிள்ள கூட சண்டை போடும் இவளை என்ன செய்வது? 'என ஆதிகாவை பார்த்து புலம்புவான். இதுவும் அவனுக்கு வழக்கமாகி போன ஒன்றுதான்.

இக்காதல் ஜோடியின் ஆசை புதல்விகளை பற்றி கொஞ்சம் பார்க்கலாம். முதலில் மலர்மொழி, வீட்டில் எல்லாரும் மலர்மா எனவே அழைப்பர். அப்படியே வர்ஷித்தின் தாய் மலர்வேணியை உரித்து கொண்டு பிறந்தவள். வர்ஷித்தின் குணம் பழக்க வழக்கங்களை அவள் தன்னுடையதாக்கி கொண்டாள். சாந்தமான குணம் உடையவள். அப்பா என்றால் உயிர் அவளுக்கு. அம்மாவை விட்டு பிரியவே மாட்டாள். தாத்தா பாட்டி என்றால் அவளுக்கு கொள்ளை பிரியம். நடராஜன் இருவாரத்துக்கு ஒருமுறை வந்து போகும்போது அவரது மடியைவிட்டு இறங்கவே மாட்டாள். அவரும் வர்ஷித்திற்கு கொடுக்க முடியாத பாசத்தையெல்லாம் பேத்திக்கே கொடுத்தார். வர்ஷித்தும் ஆதிகாவும் எவ்வளவோ முறை "இங்கையே இருங்க" என நடராஜனிடம் கூறுவர். ஆனால் அவர் கேட்கவில்லை. "எனக்கு என்னுடைய ஊர்தான் வசதியாக இருக்கும்" என்று சொல்லிவிடுவார். பிருந்தாவும் மலரும் உற்ற தோழிகள் ஆகினர். விடுமுறை கிடைக்கும்போது வர்ஷித் குடும்பம் ஊருக்கு செல்வதும், ஊரிலிருந்து இங்கு வந்து செல்வதும் வழக்கமானது.

ஆதிகா மறுமுறை கருத்தரித்தபோது வர்ஷித் கைகளிலும் மனதிலும் தாங்கினான். இப்பொழுதும் வர்ஷித் பெண்பிள்ளையே கேட்க, மலரும் எனக்கு தங்கச்சி பாப்பாதான் வேணும் என கூறினர். அந்த நாட்களில் மலரும் ஆதிகாவை நன்றாக பார்த்து கொண்டு வர்ஷித் அருகில் இல்லாத குறையை தீர்த்து வைத்தாள். இவ்வாறு பல அன்புகளை கருவிலே பெற்று பிறந்தவள் தான் தமிழினி.

அவள் அப்படியே ஆதிகா போல முகஜாடை, குணம் பிடிவாதம் என எல்லாவற்றையும் அம்மாவிடமிருந்தே எடுத்து கொண்டாள். ஆதிகாவிற்கு தான் இதில் கொஞ்சம் ஏமாற்றம். அவள் இந்த குழந்தை வர்ஷித் போல பிறக்கணும் என ஆசை கொண்டாள். அக்குழந்தை ஆதிகா மாதிரி பிறந்து அவளது ஆசையை பொய்த்துப்போக வைக்க, 'வர்ஷித் போல ஒரு குழந்தையை பெற்றே ஆகவேண்டும்' என ஒரே முடிவாக இருந்தாள். ஆனால் இதற்கு வர்ஷித்தே தடையாக இருந்தான். அவள் அடம்பிடிக்கும்போது, "இனிமேல் நீ கஷ்டப்படுத்த பாக்க முடியாதுடி வேணடாம்" என மறுத்து விடுவான்.

தமிழினியும் மலர்போலவே தந்தை மீது அவ்வளவு பாசம் வைத்திருப்பாள். மலர் இயல்பாகவே மெச்சூர்டாக யோசிப்பாள். இதில் தங்கை வந்ததும் ஒரு தாயாகவே மாறினாள். தமிழ் பிறந்ததிலிருந்து இன்றுவரை மலரே அனைத்தையும் ஆதிகாவிடம் கேட்டு கேட்டு அவளுக்கு செய்வாள். இதை பார்க்கும்போது மலரின் குணத்தை நினைத்து ஆதிகா சந்தோச படுவாள்.

தமிழும் வளர வளர ஆதிகாவிடமும் நல்ல அன்பாகவே இருப்பாள். ஆனால் வர்ஷித் என வரும்போது இருவருமே அடித்துக்கொள்வர் அப்படியே ஆதிகா போல. ஆதிகா "வருமாமா" என கூப்பிடுவதால் தமிழும் "வருப்பா வருப்பா" என அழைப்பாள். அதுமட்டுமின்றி ஆதிகாவிடம், "நீ வெறும் மாமா" என தான் கூப்பிட வேண்டும் என சொல்ல இருவரும் சண்டை பிடித்து கொள்வர். மலர் வர்ஷித் பாடுதான் இதில் திண்டாட்டம். இருவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என ஆகும். இதுமட்டுமில்லாமல் "நீ வருப்பா கூட சாப்பிடக்கூடாது, தூங்கக்கூடாது" என தமிழ் பிடிவாதம் புடிக்கும்போது தான் ஆதிகாவும் வேணும் என்றே அவள் செய்யக்கூடாது என சொல்லும் விஷயத்தை அப்படியே செய்து வம்பிழுப்பாள். இவ்விருவரை சமாளிக்க வர்ஷித் மலரின் ஜீவன் வற்றி விடும்.

வர்ஷித் மலரிடம் முதலில், "நாள் முழுக்க அப்பாவால அம்மா கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியலல. அம்மா நமக்காக தானே எல்லாம் செய்றங்க நாமதானே அவுங்கள பாத்துக்கணும். அதனால நீங்க தாத்தா பாட்டி கூட தூங்கினால் நான் அம்மாகூட டைம் ஸ்பென்ட் பண்ணுவேன்" என கூற மலரும் ஒத்துக்கொண்டு இருவருக்கும் தனிமை கொடுப்பாள். ஆனால் தமிழ் வந்த பிறகு, மலர் தமிழை தாத்தாகூட தூங்க கூப்பிட்டால், தமிழ் தானும் போகாமல் மலரையும் போகவிடாமல் பிடித்து வைத்துக்கொண்டு, "அக்கா நாம அங்க போனால், அப்பாவை யார் பார்த்துக்கொள்வார்கள்? " என போக மாட்டாள். சில சமயம் ஆதிகா பக்கம் பேசாமல் வர்ஷித் தமிழ் பக்கம் பேசிட்டால் ஆதிகா கோபித்துக்கொள்வாள். தமிழை கடினப்பட்டு தூங்கவைத்து விட்டு ஆதிகாவிடம் படுத்துகொள்ளவான். அவளை சமாதானம் செய்வதா வர்ஷித்திற்கு கடினம். அவன் வழியில் அதை சரி செய்து விடுவான். ஒருபக்கம் இப்படியிருந்தால் மறுபக்கம் வர்ஷித் மகள்களின் அன்பை நினைத்து சந்தோசம் கொள்வான். அவனது சந்தோஷம்தானே ஆதிகாவிற்கு பேரானந்தம்.

வர்ஷித் வீட்டில் இல்லை என்றால் தமிழ் ஆதிகா ஒற்றுமையை பார்த்தால் யாரும் நம்ப மாட்டார்கள் இவ்விருவர்தான் அப்போது அப்படி சண்டை பிடிப்பார்கள் என்று. தமிழ் வர்ஷித் பக்கம் நின்றால் மலர் ஆதிகா மடியில் உட்கார்ந்து "நான் அம்மா பிள்ளை" என அம்மா பக்கம் நிற்பாள்.

இவ்விரு பேத்தி தான் உலகம் என வாழ்ந்தனர் சுப்பிரமணியம் வசந்தாவும். ஆதிகா வசந்தா இருவரிடமும் பிணைப்பு அதிகமாயிருந்தது. ஆதிகா வர்ஷித்தின் காதல் சொல்லவே வேணாம் நாளொரு மேனியாக பொழுதொரு வண்ணமாக இம்மியளவும் குறையாமல் வளர்ந்தது. வர்ஷித்திற்கு அலுவல் வேலை நிறைய இருந்தாலும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதை எப்போதும் குறைக்க மாட்டான். குடும்பம் தானே அவனுக்கு பலம்.

அன்று வர்ஷித்தும் மலர்மாவும் சேர்ந்து தமிழினியிடம் பேசி சமாளித்து வர்ஷித் ஆதிகாவை மட்டும் வெளியே அழைத்து சென்றான்.

ஆதிகா என்னன்னவோ சொல்லி கேட்டுவிட்டாள் "எங்கே போகிறோம்" என. அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தையை கூட ஆதிகாவால் வாங்க முடியவில்லை. அவள் சோர்ந்து போனதுதான் மிச்சம். கடைசியில் போகும்போது கேட்டு கொள்வோம் என விட்டுவிட்டாள்.

இருவரும் கிளம்பும்போது தமிழினி அம்மா அருகில் வந்து, "அம்மா இங்க பாரு உன்னைய நம்பித்தான் அப்பாவ அனுப்பிவைக்கிறேன். அப்பா என்ன கேட்டாலும் செய்யணும் சரியா நானும் வரலாம்தான் இருந்தேன் அப்பா ரொம்ப கெஞ்சி கேட்டாங்க அதுனாலதான் உன்னைய மட்டும் அப்பாகூட அனுப்பிறேன்" என பெரிய மனுசி போல பேசியவளை கண்கள் இடுங்கள் பொய் கோபத்துடன் முறைத்து பார்த்த ஆதிகாவை வர்ஷித், "வேணாம்டி நான் பாவம் கிளம்பும்போது உன் பொண்ணுகூட பிரச்சனை பண்ணாதடி" எனும் கெஞ்சல் மொழி தனிய வைத்தது.

குடும்பத்தாரிடம் விடைபெற்று இருவரும் காரில் பயணம் மேற்கொண்டனர். ஆதிகா, " மாமா கை கால மட்டும் கட்டிப்போட்டா பத்து பொருத்தமும் பக்காவ இருக்கும்" என தீவிரமாக சம்மந்தமே இல்லாமல் கூற வர்ஷித், "எதுக்குடி? என்ன சொல்ற? தெளிவா சொல்லேன்" என சொல்ல "ஆமா நீதான் எங்க அழைச்சிட்டு போறேன்னு சொல்லாம அழைச்சிட்டு போறியே, அதான் இப்போ என்ன கடத்திட்டு போற மாதிரி தான்டா இருக்கு" என வருத்தமாக கூறினாள். அதை கேட்டு பெரியதாய் சிரித்தவன், "ஏன்டி நான் ஏன் என்னோட சொந்த பொண்டாட்டிய கடந்த போறேன்? " என கேட்டான். அவள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு "மாமா ப்ளீஸ் சொல்லு மாமா எங்க போறோம்? எங்க அழைச்சிட்டு போற?" என வினாவ வர்ஷித்தும், சரி போனா போகுது என நினைத்து, "ஆதிமா நாம ஹனி மூன் போறோம்டி"என ஆசையாக சொல்ல அவனை பார்த்து புரியாமல் விழித்தவளிடம் "அதான்மா தேன்நிலவு தேன்நிலவு" என வெட்கத்தோடு விளக்கம் அளித்த வர்ஷித் திரும்பி ஆதிகாவை பார்த்தான். அவளின் முகபாவனை அவனின் பதிலை கேட்டு அஷ்டகோணலாக மாறி பிரதிலிப்பதை பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தான். அவனது சிரிப்பை பார்த்து ஆசையாக அவனது முகத்தை தன் விரல் கொண்டு தடவினாள். "ஏன் மாமா ரெண்டு பிள்ளைக்கு அப்பா ஆகியாச்சு இப்போ இந்த தேன் நிலவு ரொம்ப முக்கியமா மாமா? " என அமைதியாக கேட்டாலும் வர்ஷித்தின் வெட்கம் தொற்றிக்கொண்டது. "இப்படி நீ வெட்க படும்போது ரெண்டு பிள்ளைக்கு அப்பா ஆகிட்டேனு நான் மறந்தறேன்டி" என அவன் முகத்தில் உள்ள அவளது கரத்தினை தன் கரத்தினுள் அடக்கி சொல்லி மேலும் அவளை வெட்கபடவைத்தான். "உன்கூட கொஞ்சம் அதிகமா நேரம் செலவிடணும்னு தோணுச்சுடி, எத்தனை பொண்ணுங்க நமக்கு பிறந்தாலும் என்னோட முழுநிம்மதி உன்கிட்டதான் இருக்குடி" என கூறியவனிடம் காதல் பார்வை வீசி அவனது தோள் மீது சாய்ந்து கொண்டாள். மறுநொடியே நிமிர்ந்து அமர்ந்து ஆதிகா, "மாமா ஹனி மூன்னா பிலைட்லல அழைச்சிட்டு போகணும் நீ என்ன கார்ல அழச்சிட்டு போற" என கண்களில் குறும்பு மின்ன கேட்க, "ஏன்டி நம்ம ஊருக்குள்ள போனா ஆகாதா, ஹனி மூன்னா வெளிநாடுதான் போகணுமா? " என அவளது கேள்வியில் நொந்தவனாய் கேட்க, அவள், "சரி பொழச்சுப்போ. ஆனால், நீ ரொம்ப கஞ்சன்டா" என முறுக்கிக்கொண்டு வம்பிழுக்க, "சரி நான் மத்ததுல கஞ்சனா இருந்தாலும் காதல்ல வாரி வழங்குற வள்ளல்டி உனக்கு அது தெரியாத என்ன "என அவளை பேச்சில் மடக்க அவள் தோல்வியை தழுவினாலும் அவனது காதலில் என்றும் ஜெயம் காணும் பட்டத்துராணி அவள் தானே.

பயணத்தில் இரவு தீர்ந்து காலை புலர்ந்தது. வர்ஷித்தும் ஆதிகாவும் வந்தடைய வேண்டிய இடத்தை அடைந்தனர். தூங்குன ஆதிகாவை எழுப்பி அவள் காரிலிருந்து இறங்கும்போதே அவளது கண்களை தன் கரம் கொண்டு மூடினான். அவள் ஏதும் புரியாமல், "என்ன மாமா?" என கேட்க அவள் காதுக்குள் "சும்மா வாடி கேள்வி கேட்காம" என கூறி அவ்விடத்திற்கு அழைத்து சென்றான்.

அங்கு நிற்க வைத்து கண்களிலிருந்து கைகளை எடுத்து அவளருகிலே நின்று கொண்டான். அவள் சுற்றி சுற்றி பார்க்க ஒரே கூட்டமாக இருந்தது. பார்க்கும் போதே சுற்றுலா தலம் என கண்டுபிடித்து தூக்க கலக்கத்தோடு, " இது என்ன இடம் மாமா? " என வர்ஷித்திடம் கேட்டவளின் முகத்தை நேராக திருப்பி பார்க்க வைத்து அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தான்.

அவள் அங்கு பல செங்கதிர்களை பரப்பி ஆழியின் மடியிலிருந்து துயில் எழுந்து மஞ்சள் நிறத்தை அப்பிக்கொண்டு காட்சி அளித்த சூரியன் தந்த விடியலை பார்த்து விழிவிரித்து ஆச்சரியத்தில் பலநாள் கனவில் மட்டும் கண்டதை இன்று நேரில் பார்த்து நிஜமா இங்குதான் வந்திருக்கிறோமா? எனும் சந்தோஷத்தில் இருந்தவளின் காதில் மேலும் மகிழ்ச்சி ஊற்றெடுக்க "என் வாழ்வில் விடியல் தந்த மனைவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்டி" என வாழ்த்து கூறினான் வர்ஷித்.

அவ்விடம் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபமும் திருவள்ளுவர் சிலையும் ஒருங்கே இடம்பெற்றிருக்கும் கடல் தான். அங்கு சூரிய உதயம் பார்க்கவே ஆதிகா ஆசைப்பட்டாள். அதுக்கு இன்று நிகழ்ந்துவிட்டது, நிகழ்த்திவிட்டான் அவளது மணாளன், அதுமட்டுமின்றி தன் பிறந்தநாளை நானே மறந்தபோதிலும் அவன் நினைவு வைத்து தன் மனதிற்கு பிடித்த இடத்திற்கு கூட்டி வந்து வாழ்த்தியுள்ளானே, தன்னை மகிழ்ச்சிகொள்ள வைக்கும் அவனது காதல் கண்டு அதிசயித்து ஆனந்த மிகுதியில் தன்னை வாழ்த்தியவனிடம் திரும்பி சுற்றம் பார்க்காமல் ஒரு நொடிக்குள் அவன் உதட்டில் சிறு முத்தம் இட்டாள்.

அவன் உணர்வதற்குள் ஆதிகா விலகினாள் வெட்கத்துடன். ஆதிகாவிற்கு அந்த இடத்திற்கு வந்ததை விட தன்னவன் தனக்காக இதனை செய்ததை நினைத்து மகிழ்ச்சிகொண்டு அவனது காதல் தனக்கு கிடைத்த பாக்கியம் என நினைத்தாள்.

அவள் அதனை ரசித்து பார்த்துக்கொண்டே, "நான் எதிர்பாக்கவே இல்ல மாமா" என வர்ஷித்திடம் கூற வர்ஷித்தும், " நானும் இத எதிர்பாக்கவே இல்லடி" என தன் உதட்டினை வருடிய படியே கூற அவள்" போடா" என செல்லமாக அவனது தோள்களை இடித்தாள்.

அந்த நாள் முழுதும் ஆதிகா வர்ஷித்தை விட்டு நகரவே இல்லை. அவனும் அவளை கைவலைக்குள்ளே வைத்திருந்தான். மகிழ்ச்சியாக அந்நாளை கழித்தனர். அங்கே தங்கி ஊர் சுற்றினர்.

அன்றிரவு உணவு முடித்து பால்கனியில் இருவரும் நின்று காற்று வாங்கிகொண்டிருக்க, "ஆதிகாவிடம் சந்தோசமா இருக்கியாடி? " என வர்ஷித் கேட்டான். ஆதிகா நொடியில் "இல்ல" என்றாள் வெறுமையோடு. "ஏன்? " என வர்ஷித் கேட்க "எனக்கு பர்த்டேக்கு கிப்ட் வேணும்" என கேட்டாள். அவன் முழித்து, "என்ன கிப்ட்டி வேணும்? "என கேட்க "பேபி வேணும்" என்றாள் சாதாரணமாக. "ஒரு தடவ சொன்னா நீ கேட்க மாட்டியாடி வேணாம்னா வேணாம் இது பத்தி இனிமேல் பேசாத" என அவன் கோபமாக கூற, "பேசுவேன் எனக்கு பேபி வேணும்" என பிடிவாதமாக கூறியவளின் கையை உதறிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தான். அவள் அவ்விடத்தை விட்டு நகராமல் அங்கே நின்றாள். "பிடிவாதம் பிடிவாதம்" என முணுமுணுத்துவிட்டு அவளிடம் பேசவில்லை. அங்கே மௌனமொழி ஆட்சி செய்ய வர்ஷித்தே பேசினான். ஏனென்றால், ஆதிகாவை பற்றி தான் தெரியுமே அவள் பிடிவாதத்தில் எவ்ளோ நேரம் என்றாலும் அப்படியே இருப்பாள் என்பது.

"ஏன்மா அடம்பிடிக்கிற? " என அவனே இறங்கி வந்து கேட்க, "உன்னைய கொஞ்சுறதுக்கு உனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. அதுபோல என்னையும் கொஞ்ச கெஞ்ச ஒரு பையன் வேணும்" என கூற அவன் சமளிக்கும்பொருட்டு "அது எல்லாம் முடியாதுடி உன்னைய கெஞ்சுறது கொஞ்சுறது நானாதான் இருக்கனும்" என கூறியவனிடம் "இதெல்லாம் நான் ஒத்துக்க முடியாது"என பிடிவாதமாக கூறினாள். சிறிது நேரம் கழித்து, "இது மட்டும்தான் காரணமா நீ பேபி வேணும்னு கேக்குறதுக்கு? " என வினாவியவனின் அருகில் சென்று அமர்ந்து "எனக்கு உன்ன மாதிரி ஒரு குழந்தை வேணும்டா, உன்னோட இந்த கண்ணு, இந்த மூக்கு, உன்னோட அழகான சிரிப்பு இதெல்லாம் அப்படியே உள்ள மாதிரி பேபி வேணும் அதுவும் பையன் தன் வேணும்" என கற்பனையில் வடிவம் தந்த குழந்தையை ரசித்து கூற அவளின் கற்பனையை கலைக்க முடியாமல், "என்ன ஆதிமா அதான் மலரும் தமிழும் இருக்காங்களேடி" என கேட்க "போடா மலர்தான் என்னோட பொண்ணு, தமிழ் அப்படியே என்ன போலவே பிடிவாதம் அதுவும் உன் விசயத்துல. ரெண்டுபேருக்கும் உன் சொல்தான் வேதவாக்கு அதனால பையன்தான் வேணும்" என அவள் கூற்றிலே விடாமல் கொடிபிடிக்க அவன் கல் போல அமர்ந்திருந்தான். "போடா, எப்போதான் என் பேச்ச நீ கேட்டிருக்க" என அவனை அடித்து எழ போனவளை கரம் பற்றி தடுத்து தன் மீது சரித்து, "இப்படி கோவிச்சிக்கிட்டு போன நீ கேட்ட பேபி வந்துருமாடி? " என கேட்டவனை விழிவிரித்து நம்பாமல் பார்த்தளை, "நீ கேட்ட பர்த்டே கிப்ட் வேணாமா? " என கேட்டு அவளை மார்போடு ஒன்றவைத்து ஆதிகா கேட்டதை செய்கிற வேளையில் மூழ்க ஆரம்பித்தான்.

நினைத்ததை சாதித்துவிட்ட களைப்பில் படுத்திருந்தவளிடம், "ஏன் ஆதிமா உனக்கும் தமிழுக்கும் ஒத்து போகமாட்டிக்குது? " என வர்ஷித் கேட்க, "அவ கிடக்குற மாமா நான் மட்டும் இப்போ உன்மேல தூங்குறேன்னு அவளுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் சாமியாடுவா" என கூறி சிரித்தாள் ஆதிகா. சிறியதாய் சிரித்தவன் "உண்மையிலே அவமேல உனக்கு கோபம் வராதாடி? "என கேட்டவனை விசித்திரமாய் பார்த்து "நீர் அடிச்சு நீர் விலகுமா மாமா, சும்மா அப்போப்போ அவளை வெறுப்பேத்துவேனே தவிர அவ மேல நான் கோபப்படுவேனா மாமா அவ இப்படி இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப புடிக்கும் மாமா உன்மேல பாசமா இருக்குறப்போ நீ சந்தோசமா இருப்ப உன்னோட சந்தோசம் தான் எனக்கு முக்கியம், நீ எப்பவும் இப்படித்தான் சிரிச்சிகிட்டே இருக்கனும் என கூறியவளின் நெற்றியில் முத்தமிட்டு அவனை மாற்றி காலம் முழுக்க காக்கும் அவனது மாயாவியின் காதலுக்குள் மாயமானான்.

நிம்மதிபூவை பறித்து வெறும்
பொட்டலை கொடுத்த உலகத்தில்
சோகமே சூறாவளியாய் தாக்க
விதியால் தனித்துவிடப்பட்டு
சோதனையின் வழிப்போக்கில்
பயணித்த என் வாழ்வை
உன் காதலால் மீட்டெடுத்து
இனிமையான பக்கங்களை புரட்டி
அதில் ஆனந்த பத்திகளை ஊற்றி
அழகுற தீபங்களை ஏற்றி
மலரவைத்துவிட்டாயேடி
என்னடி மாயாவி நீ...
 
Top Bottom