Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என் உயிராய் நீ

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
10.நினைவுகள்:

"சரி வருண்! நீங்க பார்த்துக்கோங்க! நாங்க காலைல வரோம்! உங்களுக்கு சாப்பிட ஏதாவது வேணுமா? " என்றான்.

"என்னங்க! என்ன பேசறிங்க? அவர் நம்ம வீட்டுக்கு வர போற மாப்ள" என்றாள் மோஹனா.

"இப்ப என்ன பண்ண சொல்ற? நீங்க இங்க இருக்க கூடாதுனு சொல்ல சொல்றியா?" என்றான் எரிச்சலாக.

எல்லோரும் கிளம்பி விட்டார்கள்.

மதுவின் அருகில் அமர்ந்து அவள் தூங்கும் அழகையே பார்த்து கொண்டிருந்தான்.

"மதுநிலா! எவ்வளவு அழகான பெயர். பெயரை போல நீயும் எவ்வளவு அழகாக இருக்கிறாய்."

"மது ஐ லவ் யூ!"

"மது உன்ன பொறு்தவரைக்கும் தான் எனக்கு உன்ன 15 நாளா தெரியும், ஆனா எனக்கு ..." மனதிற்குள்ளேயே மென்று முழுங்கினான்.

"நீ என் அஞ்சு வருஷ தவம்! என் கனவு நீ! உனக்கு தெரியாமலே உன் கூட அஞ்சு வருஷமா வாழ்ந்துட்டு இருக்கேன்! என் வாழ்க்கைக்கு ஒரு நம்பிக்கையை தருகின்ற தேவதை நீ!"

ஐந்து வருடம் பின்னோக்கி நினைவுகள் சென்றது.

"அ.,...ம்.......மா...." என்று அலறியபடி ஒரு பெண் தன் காரில் அடிபட்டு கிழே விழுந்ததை அதிர்ச்சியோடு பார்த்தான்.

சுற்றும் முற்றும் யாருமே இல்லை.

கீழே மின்னல் வேகத்தில் இறங்கியவன், அந்த பெண்ணை தூக்கி காரில் போட்டுகொண்டு, நேராக தன நண்பன் பிரபு டாக்டராக பணிபுரியும் ஹாஸ்பிடலுக்கு ஒட்டி சென்றான்.

ஹாஸ்பிடலில் இறங்கி அந்த பெண்ணை கையில் ஏந்தி கொண்டு "ந ர் ஸ் ! ஸ்ட்ரக்சர் ப்ளீஸ்" என்று கத்தினான்.

பிரபுவிற்கு போனில் ஏற்கனவே சொல்லிவிட்டான். பிரபுவின் மனைவி கீதா தான் ஷிப்டில் இருப்பதால் அவளே அந்த பெண்ணுக்கு எல்லா முதலுதவியும் செய்தாள்.

"அண்ணா! உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்." கீதா.

"சொல்லுங்க! அந்த பொண்ணு இப்ப எப்படி இருக்கா? நல்லா இருக்காளா?" என்றான் பதற்றமாக.,.

"அண்ணா ஷி இஸ் ஆல்ரைட்! பட் ஒரே ஒரு ப்ரோப்ளம் " கீதா.

என்ன என்பது போல் பார்த்தான்.

"அவங்க மேரேஜ் அப்புறம் அவங்க நார்மலா குடும்ப வாழ்க்கைல ஈடுபடலாம். ஆனா, வயித்துல பலமா ஆடிபட்டதால கர்பப்பை டேமேஜ் ஆகியிருக்கு." என்று அவனை பார்த்தவள் சிறிது நேர அமைதிக்கு பின்,

"அவங்களுக்கு குழந்தை பொறக்கறதுக்கு 30% தான் சான்ஸ் இருக்கு" என்றாள்.

"என்ன ..?" என்றான் அதிர்ச்சியாக.

"அவங்க போன்ல இருந்த நம்பர்க்கு கால் பண்ணி சொல்லி இருக்கோம். நீங்க கிளம்புங்கண்ணா" என்றாள் கீதா.

"இந்த விஷயத்த பத்தி எதுவும் அவங்க வீட்ல சொல்ல வேணாம்" என்று மட்டும் கேட்டு கொண்டான்.

அந்த பெண் இருந்த அறைக்கு சென்று அவளை பார்த்தான்.

'குழந்தையின் முகம் கொண்டு குழந்தை போலவே தூங்கும் இவளுக்கா இந்த நிலைமை அதுவும் தன்னால்?' மிகவும் வருத்தப்பட்டான்.

"இல்ல.. இவள் யாராக இருந்தாலும், இனி இவள் என்னோட பாதி..." என்று உறுதியோடு வீட்டிற்கு சென்றான்.

மறுநாள் ஹாஸ்பிடல் வந்தபொழுது அவளை காணவில்லை அவள் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக சொன்னார்கள்.

அவள் பெயரை மட்டும் கூறிவிட்டு போய் இருந்தாள்.

"மதுநிலா. அவங்க எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படிக்கிறாங்க அண்ணா அவங்கள பத்தி இந்த டீடெயில்ஸ் தான் எனக்கு தெரியும்" என்று கூறினாள் கீதா.

"எது எப்படி ஆனாலும் நீ தான் என் வாழ்க்கை.... ம....து..." என்று மனதில் நினைத்துக்கொண்டு கிளம்பினான்.

அன்றில் இருந்து ஐந்து வருடமாக மனதில் மனைவியாக நினைத்து வாழ்ந்து கொண்டு நிஜத்தில் தேடி கொண்டு இருந்தான்.

எத்தனையோ தடவை வீட்டில் திருமண பேச்சு எடுக்கும் போதெல்லாம் தடுத்திருக்கிறான்.

அன்று அவளை எதிர்பாராமல் இடித்தபின்பு அவனுக்கு இன்பஅதிர்த்தியாக இருந்தது.

தான்தேடி கொண்டிருந்த தேவதை தன் கண் முன்னே நிற்பதையும், அதுவும் தன் கை வளையத்தில் இருப்பதை எண்ணி மெய் மறந்தான்.

தான் மனைவியாக நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தவளை அருகில் பார்த்தவுடன் அவனை கட்டுப்புடுத்த முடியாமல் அவளை முத்தமிட்டான்.

"வருண்! வருண்!" குரல் கேட்கவே கண் திறந்து பார்த்தான், அங்கே மது கூப்பிட்டு கொண்டிருந்தாள்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
11.நாட்கள்
"என்ன வருண்! நீங்க எப்ப வந்திங்க?" என்றாள் மது.

"அண்ணி எங்க?" என்று கேட்டவளின் கரம் பற்றி மென்மையாய் ஒரு முத்தமிட்டான்.

"ரிலாக்ஸ் மது! இப்ப எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற? நா தான் எல்லாரையும் வீட்டுககு அனுப்பிட்டேன்." என்றான் வருண்.

"இங்க பாரு காலைல தான சொன்னேன். நம்மளுக்கு நிச்சயம் முடிஞ்சிடிச்சு இனிமே நீ என்னோட மனைவின்னு. சோ ஐ ஹவ் டு டேக் கேர் ஆப் யூ" கன்னத்தில் குழிவிழ சிரிக்கும அவனை ஒரு நிமிட்ம் கண்களால் அளவெடுத்தாள்.

"என்ன பார்த்தது போதும் அப்புறம் நான் எதுக்கும் பொறுப்பில்லை!" என்று கண்ணடித்துவிட்டு அவள் முகத்தருகின் மிக அருகில் சென்று கலகலவென சிரித்தான்.

வெட்கத்தில் தலை குனியும் தன்னவள் முகம் நிமிர்த்தி, "ஏன் நா உன்ன பார்த்துக்க கூடாதா?"

எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் மதுவின் முகம் நிமிர்த்தி அவள் கண்களை தன் கண்களோடு இணைத்து பின் கிறங்குகிற குரலில்,

"இங்க பாரு என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியலடி இதுதான் உண்மை. நீ என் பக்கத்துல இருந்தாலும் இல்லனாலும் மனசுக்குள்ள உக்காந்துட்டு எனக்கு கிறுக்கு பிடிக்க வைக்கறடி" என்றான்.

"எப்பவும் நா இப்படி இருந்தது இல்லடி! உன்ன பார்த்ததுலேர்ந்து பைத்தியம் புடிச்சு அலையுறேன். ப்ளீஸ் சிக்கரம் என்கிட்ட வந்துரு" என்றவனின் கண்களில் இருந்த காதலும் தனக்காக ஏங்கி துடிப்பதை கண்டு ஒரு நிமிடம் மிரண்டு தான் போனாள்.

"சாப்பிடு" என்று தான் வாங்கி வந்த தோசையை தானே ஊட்டிவிட்டான்.

அவள் சாப்பிட்டு முடித்ததும் அதே தட்டில் தானும் போட்டு சாப்பிட்டான்.

"வெளியே நர்ஸ் இருந்தா கூப்பிடுங்க" என்றாள் மது.

"எதுக்கு?"

"ஐயோ! ரெஸ்ட்ரூம் போகணும் கூப்பிடுங்க" என்றவளை பார்த்து சிரித்து கொண்டே தன் இரு கைகளால் அவளை தூக்கினான்.

"என்ன பண்றிங்க? ப்ளீஸ இறக்கிவிடுங்க. நர்ஸ் வரச்சொல்லுங்க" என்றவளை பார்த்து ஒரு முறை முறைத்தான்.

"ஒருவேளை நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு கால் அடிபட்டிருந்தா இப்படி தான் சொல்வியா?" கோவமாக கேட்க அமைதியானாள்.

ரெஸ்ட்ரூமின் வெளியே வெயிட் செய்து பின் மறுபடி தூக்கி வந்து பெடில் படுக்க வைத்தான்

அவளுக்கு எது தேவை என்று அவள் கண்களில் குறிப்பறிந்து செய்யும் அவனை பிரம்மிப்புடன் பார்த்தாள்.

"நா கொடுத்த கிபிட் பார்த்தியா?எப்படி இருந்தது? உனக்கு பிடிச்சிரு்ததா?" எனறான் ஆர்வமாய்.

"இல்ல.. நா பாக்கறதுக்குள்ள தான் இப்படி ஆகிடிச்சு".

பேசினார்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

ஒரு கட்டதில் மது தூங்கி போனாள். அவள் போர்வையை சரி செய்து அவளையே பார்த்தவன் நெற்றியில் சுருண்டு விழும் கற்றை முடியின் அழகில் சொக்கி நின்றான்.

"உன் முடியின் மீது

எனக்கிருக்கிறது கோபம்

நான் இருக்கவேண்டிய இடத்தில

அதுசுருண்டு கிடப்பதால்.... "

அவனும் அவள் அருகில் அமர்ந்து உறங்கிப்போனான்.

திடீரென்று கண் விழித்தவள், தன் கைபிடித்து தூங்குபவனின் தலையை கோதிவிட்டவள்,

"ஐ லவ் யூ வருண்! எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு. சின்ன வயசுலேர்ந்து அம்மா பாசத்துக்காக ஏங்கிருக்கேன். இன்னைக்கு உன் ரூபத்துல எங்கம்மாவை பார்த்துட்டேன். தாங்க் யூ சோ மச்" என்று கண்மூடி அழும் தன்னவளின் கண்களை துடைத்து விட்டான் வருண்.

இரவு மணி ரெண்டை காட்டியது.

தன் கண்ணீரை துடைக்கும் அவனை கட்டிப்பிடித்து இதழோடு இதழ் பதித்ததாள்.

"வா.....வ்! " என்று கத்தியவன் வாயை கை கொண்டு மூடினாள்.

"அப்ப உனக்கும் என்ன பிடிச்சிருக்கு இது போதும் உனக்காக எத்தனை நாள் வேணா காத்திருப்பேன்" என்றான்.

நாட்கள் வேகமாக ஓடியது. மது மறுபடியும் ஹாஸ்ப்பிட்டல் செல்ல ஆரம்பித்திருந்தாள். வருணும் தான் பெங்களூரில் ஆரம்பிக்கப்போகும் மூன்றாவது கார்மெணட்ஸ் கிளையின் வேலையில் மும்முரமாய் இருந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் மனதால் நினைத்து கொண்டும் போனில் பேசிக்கொண்டும் காலம் கடந்தன.

கல்யாண பத்திரிக்கையை இருவீட்டாரும் தங்கள் சொந்தங்கள் நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்து கொண்டிருந்தனர் .

"உங்க கார்மெண்ட்ஸ் ஓபன் பண்ற வேலை எப்படி போயிட்டு இருக்கு?" மது.

"ஆல்மோஸ்ட் முடிஞ்சிருச்சி. நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாள் உன் கையால குத்துவிளக்கேத்தி வைக்க வேண்டியது தான் பாக்கி" என்றான் வருண் உற்சாகமாய்.

"எதுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்கிறிங்க? அத முன்னாடியே ஓபன் பண்ணிடலாம்ல" மது.

"நோ வே!" வருண்.

"ஓகே. நா ஹாஸ்பிடல்க்கு வந்துருக்கேன். இன்விடேடின் குடுக்க அப்புறம் பேசறேன் பை!" என்று போனை வைத்தாள்.

"எல்லாரும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துருங்க!" ஹாஸ்பிடலில் எல்லோருக்கும் பத்திரிக்கை வைத்து அழைத்தாள்.

ஒரு மாதம் கல்யாணத்திற்காக விடுப்பு எடுத்திருந்தாள்.

இருவர் வீட்டிலும் கல்யாண வேலைகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

கல்யாண வேலையில் இருந்தாலும் வரூணுக்கு மட்டும் உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது.

கல்யாணம் முடிந்த பின் மதுவிற்கு உண்மை தெரிந்தால் எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ என்ற பயம்...?
 

New Threads

Top Bottom