Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என் வாழ்க்கையின் வசந்தமலரே!

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
"அப்பா! இப்போ என்ன அவசரம்? எனக்கு கல்யாணம் வேண்டாம்" என்றாள் செந்தனலழகி.

"அம்மாடி அப்படி சொல்லக்கூடாது டா. மாப்பிள்ளையை பத்தி நல்லா விசாரிச்சாச்சி டா." என்றார் விநாயகம்.


"முடியாதுப்பா. என்னால உங்களை விட்டு போக முடியாது. எனக்கு நீங்க உங்களுக்கு நான் அவ்ளோ தான்." என்றாள் செந்தனலழகி.

"தனல்! அப்பாக்கு அப்புறம் உனக்கு ஒரு துணை வேணும்டா." என்றார்.

"எனக்கு யாரும் வேணாம்பா. அம்மாவை நீங்க எவ்ளோ விரும்புனிங்க? அம்மா இறந்தப்புறம் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லி எவ்ளோ பேர் சொன்னாங்க. எனக்கு என் பொண்ணு போதும்னு நீங்க தான சொன்னிங்க?" என்றாள் சிறுகுழந்தை போல்.

"அம்மாடி" என்றார்.

"என்னை அம்மா போனதுக்கு அப்புறம் கண்ணுக்குள்ள வச்சி தாங்குறிங்க. உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடாம என்னையே உங்க வாழ்க்கையா மாத்திக்கிட்டிங்க. உங்களை போல ஒரு அப்பா யாருக்கு கிடைப்பாங்க? இல்ல உங்களை போல ஒருத்தன் எனக்கு கிடைக்கமாட்டான் பா." என்றாள்.

"டேய்! இப்பவும் என் வாழ்க்கை நீ தான்டா. நீ சந்தோஷமா வாழறதுல தான் என் சந்தோஷமே இருக்கு." என்றார்.


"நீங்க எவ்ளோ சொன்னாலும் நான் உங்கக்கூட தான் இருப்பேன்" என்றாள் தீர்மானமாக.

"அப்போ சரி. உங்க அத்தை வரா. நீயே உன் முடிவை அவகிட்ட சொல்லிடு" என்றார்.

"அத்தையா? எதுக்கு வராங்க? நான் எதுக்கு அவங்ககிட்ட சொல்லணும்?" என்றாள் ஒன்றும் புரியாமல்.

"பின்ன இந்த வரனை பார்த்ததே அவ தான?" என்று சிரித்தார்.

"அவங்களா?" என்றாள் திகைப்பாய்.

"வேற யாரு என் குட்டிமாக்கு வரன் பார்க்க முடியும்? நானே தான். எனக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு" என்றாள் அவளின் அத்தை ஜானு வீட்டினுள் நுழைந்தபடி.

"அத்தை!" என்று துள்ளி குதித்து ஓடியவள் அவரின் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.

"எப்படிடா இருக்க?" என்றார் ஜானகி சிரித்து கொண்டு.

"நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? ஆமா. இது எல்லாம் உங்க வேலை தானா?" என்று இடையில் கரம் வைத்து முறைத்தாள்.

"ஆமா! பின்ன, எங்க அண்ணி உன்னை என்கிட்ட பார்த்துக்க சொல்லி கொடுத்து போய்ட்டாங்க. எங்க அண்ணனும் வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டார். என்ன பண்றது? எனக்கு ஒரு பையன் இருந்தா உன்னை கிளியாட்டம் கொத்திட்டு போய்டுவேன். எனக்கு தான் ரெண்டும் பொண்ணாச்சே. ஆனா, இப்போ பார்த்திருக்க வரணும் என் பையன் மாதிரி தான்" என்றார்.


ஒன்றும் புரியாமல் அவரை பார்த்து முழித்தாள் செந்தனலழகி.


"என்ன அப்படி முழிக்கிற? உனக்கு வரன் பார்க்கிறோம்னு என் ஓரகத்தி கிட்ட சொன்னேன். அவங்க பையன் கார்த்திகை செல்வன் தெரியுமா உனக்கு?" என்றார் ஜானு.

"ஹ்ம்ம்! தெரியும் இப்போ அதுக்கு என்ன?" என்றாள் எதிர் கேள்வியாய்.

"அவனே அவங்க அம்மாகிட்ட உன்னை பெண் கேட்க சொல்லிருக்கான். அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்குமாம். ரொம்ப நல்ல பையன் டா. எனக்கு அவனை நல்லா தெரியும். உனக்கும் நல்ல வாழ்க்கை அமையும். எனக்கும் அப்பாக்கும் நிம்மதியா இருக்கும். நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க" என்றார் ஜானு.

"என்ன?" என்றாள் அதிர்ச்சியாக.

"டேய் என் செல்லம்ல நீ? அவங்க வரும்போது சிம்பிளா ரெடியா இரு. பையன்கிட்ட பேசு. அப்புறம் உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு. நான் வேணாம்னு சொல்லிடறேன். உன் குறும்புத்தனத்தை இதுல காட்ட கூடாது. சரியா?" என்றார் ஜானு.

சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தவள் உள்ளுக்குள் புயல் அடித்தாலும் அன்னையில்லாத தன்னை அன்னையின் இடத்தில் இருந்து இத்தனை வருடங்கள் பார்த்து கொண்ட அத்தைக்காக சம்மதிக்க முடிவு செய்தாள்.

"சரி. வேற யாருக்காகவும் இல்லை. உனக்காக தான் அத்தை" என்றாள் அவர் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு.

"சரிடா. இதுவரைக்கும் நீ சம்மதிச்சதே போதும். என் ராஜாத்தி" என்று அவளின் நெத்தியில் முத்தமிட்டு தலைகோத அதில் உறங்கி போனாள்.


"நல்ல வேலை நீ வந்த ஜானு. என்னால சமாளிக்க முடியலை" என்று மகளை வாஞ்சையோடு பார்த்தார்.

"விடுண்ணா. பையனை இவளுக்கு கண்டிப்பா பிடிக்கும். இந்த வரன் கண்டிப்பா அமையும். நீ பாரேன்" என்று அண்ணனை சாந்தப்படுத்தினார்.

மறுநாள் லேசான அலங்காரத்துடன் ஆயிரம் திட்டுகளை திட்டி கொண்டே தயாரானாள்.

'அத்தை எல்லாம் உன்னால தான்.. இவ்ளோ வெய்ட் புடவை, நிறைய நகை எல்லாம் போட வேண்டியதா ஆகிடுச்சு. இரு இவங்க வந்து போகட்டும். அப்புறம் நான் ஓட்ட போற பேய்ல இனி எப்பவுமே எனக்கு நீ வரன் பார்க்க கூடாது." என்று புகைந்து கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்தது வெளியிருந்து வந்த குரல்.

"எம்மாடி ரெடி ஆகிட்டியாடா? அத்தை அவங்களை கூட்டிட்டு வந்துட்டு இருக்காங்களாம்" என்ற அப்பாவிற்கு, "இதோ வந்துட்டேன்ப்பா" என்று வெளியே வந்தாள்.

சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருக்கும் அப்பாவை பார்த்தவள்.

"என்னப்பா செஞ்சுட்டு இருக்கீங்க?" என்றாள்.

"ஒண்ணுமில்லைடா. அவங்களுக்கு கொடுக்கிறதுக்கு எல்லாம் கடைல வாங்கிட்டு வந்துட்டேன். காபி மட்டும் போடணும். அதான் போட்டுட்டு இருக்கேன்" என்றார் புன்னகைத்து பால் பாகிட்டில் இருந்த பாலை பாத்திரத்தில் ஊற்றியபடி.

"அப்பா. நீங்க போங்க. நான் பார்த்துக்குறேன்" என்று அவரை வெளியே அனுப்பியவள் பால் காய்ந்தவுடன் காபி போடவும் அவரகள் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"ம்மா.. அவங்க வந்துட்டாங்க." என்றார் பரபரப்பாக.

"சரிப்பா. காபி போட்டுட்டேன்" என்றாள் தனலழகி.

"சரிடா. நீ வெளிய வரவேண்டாம். இங்கயே இரு" என்று வெளியேறினார்.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை. வேகமாக காபியை கிளாசில் வரிசையாக ஊற்றினாள்.


"எல்லோருக்கும் கொடும்மா" என்று அத்தை நீட்டிய டிரேயை வாங்கியவள் அனைவருக்கும் கொடுத்தாள்.

அவளை விழிகளால் பருகிக்கொண்டே காபி டம்ப்லரை எடுத்து கொண்டவன், இருந்தும் அவளிடம் இருந்து விழிகளை பிரிக்க முடியாமல் நோக்கி கொண்டே இருந்தான்.

மெல்ல அவளின் அழகை ரசித்தபடியே காபியை உருஞ்சியவன் மறுநொடி வேகமாக இரும தொடங்கினான்.

"என்னப்பா என்ன ஆச்சு?" என்று கேட்டுக்கொண்டே அவனின் தாய் தலையை லேசாக தட்டி முதுகை வருடிவிட்டார்.

"இல்ல ஒண்ணுமில்லைம்மா." என்று மீண்டும் எல்லோரிடமும் விழிகளை சுழட்டிவிட்டு அவளை பார்த்தான்.

தலை கவிழ்ந்திருந்தாலும் லேசாக புன்னகை பூக்கும் அவளின் முகம் தெரிந்ததும் அவனின் முகத்திலும் குறும்பு புன்னகை பூக்க காபியை முழுவதுமாக அவளை பார்த்துக்கொண்டே குடித்து முடித்தான்.

"காபி நல்லா இருந்ததும்மா" என்று வந்திருந்தவர்களில் ஒருவர் கூற அனைவரும் ஆமோதித்தனர்.

"ஆமா ஆமா. காபி ரொம்ப நல்லா இருந்தது" என்று கார்த்திகை செல்வன் கூற மறுநொடி அவனை நிமிர்ந்து பார்க்க, அவனின் குறும்பு புன்னகையில் உடனே தலைக்கவிழ்ந்தாள்.

தன் அம்மாவிடம் ஏதோ செல்வன் கூறியவுடன்.

"ஒண்ணுமில்லை பொண்ணுகிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் மட்டும் பேசணும்னு சொல்றான் பையன். என்ன இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் தான வாழபோறவங்க" என்றார் அவனின் சித்தி.

"ஓஹ்! பேசட்டுமே.." என்றார் அவளின் அத்தை உடனே, தனலழகி முறைப்பதை பொருட்படுத்தாமல்.

"அம்மாடி. போடா" என்ற தந்தையிடம் தயக்கமாய் விழிகளால் கெஞ்ச, ஆறுதலாய் 'ஒன்றுமில்லை போம்மா' என்று விழிமூடி கூறினார் தந்தை.

தன் அறைக்கு அழைத்து சென்றவள், கதவை திறந்தபடி விட்டு அமைதியாய் ஜன்னலின் அருகே சென்று நின்று கொண்டாள்.

இரண்டு நிமிடங்கள் அறையில் மௌனமே பேசிக்கொண்டிருக்க, மங்கையின் அறையையும் அவளின் கைவண்ணங்களையும் மிகவும் ரசித்து அவளையும் சேர்த்து விழிகளால் அளந்து கொண்டிருந்தான் காளையவன்.


"சோ! உங்களுக்கு என் மேல எந்த கோபமும் இல்ல." என்றவனை ஒன்றும் புரியாமல் புருவம் உயர்த்தி பார்த்தாள் தனல்.

"இல்ல. எல்லோருக்கும் ஏலக்காவோட சேர்த்து சர்க்கரையையும் ஒழுங்கா போட்டு பாலை கொடுத்த நீங்க. எனக்கு மட்டும் உப்பை கொட்டி கொடுத்துட்டீங்களே? நான் பாவம் இல்லையா?" என்றான் குறும்பாய்.

அவனின் கேள்வியில் ஒரு நொடி தடுமாறினாலும், "அதனாலென்ன? உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய்டுங்க" என்றாள் பட்டென்று.

"ஓஹ்! உங்களுக்கு நான் பிரச்சனையில்லை. இந்த கல்யாணம் தான் பிர‌ச்சனை. ஹ்ம் நீங்க சொல்ற மாதிரியே வச்சுக்குவோம். காபில உப்பை போட்டா வர்ற மாப்பிள்ளை திட்டிட்டு வேணாம்னு போய்டுவான்னு இப்படி செஞ்சிட்டீங்க. சரியா?" என்று கூறவும் நாம் மாட்டிக்கொண்டோம் என்று முழித்தாள் தனல்.

அவளின் அதிர்ச்சியை குறும்பாய் ரசித்தவன்.

"நான் போய்ட்றேன்னு வைங்க. இன்னொரு மாப்பிள்ளை அவனும் போனான்னா அடுத்து அடுத்துன்னு போய்ட்டே தானே இருக்கும் அப்போ வர எல்லோரையுமே இப்படி உப்பை போட்டு தான் துரத்துவிங்களா?" என்று சிரித்தபடி கேட்டான்.

"அதெல்லாம் உங்களுக்கு ஏன்? நான் பண்ண வேலைக்கு உங்களுக்கு என்னை பிடிக்காது. சோ, என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போங்க" என்றாள் வெடுக்கென்று.

"நான் சொல்லவே இல்லையே உங்களை பிடிக்காதுன்னு. இப்போ தான் உங்களை எனக்கு பிடிச்சிருக்கு." என்று அவளிடம் நெருகியவன்.

தனலழகியோ அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.

"உன்னை ரொம்ப வருஷமாவே என் மனசுல நினைச்சிட்டு இருக்கேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அப்புறம் ஏன் உன்கிட்ட வந்து சொல்லலைன்னு பார்க்கறீயா? மாமா.. அத்தை இறந்தப்புறம் உனக்காகவே வாழறார். அதை கண் முன்னாடி நான் பார்த்துக்கிட்டே தான் இருக்கேன். அவர் அவ்வளவு கஷ்டபட்டு படிக்க வைக்கும் போது நான் குறுக்க வந்து உன்னை டிஸ்டர்ப் பண்ண எனக்கு மனசு வரலை. உன் படிப்பை நல்லபடியா முடிக்கனும்னு தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். இந்த விஷயம் இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கும் இதுக்கப்புறம் உனக்கும் மட்டும் தான் தெரியும். யோசிச்சு சொல்லு. ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் அப்பாவை யார் பார்த்துப்பாங்கன்னு பயம் இருந்தா, உங்க அப்பாவை நம்மகூட கூட்டிட்டு போயிடலாம். இல்லையா ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வந்து பார்த்துட்டு போகலாம். நீ வேணாம்னு சொன்னாலும் அதுக்கப்புறம் நிச்சயமா உன்னை தொந்தரவு செய்யமாட்டேன்." என்றான் கார்த்திகை செல்வன்.

அவனின் சொற்களில் சற்று ஆட்டம் கண்டாலும் மௌனமாய் நின்றாள் பெண்ணவள்.


"என்னோட பதில் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க எனக்கு மனைவியா அமைஞ்சா கடவுள் கொடுத்த வரமா நினைப்பேன். இல்லன்னா என்னோட பேட் லக்ன்னு நினைச்சுக்குறேன்" என்றவனின் மேல் அவள் அறியாமலே ஒரு பந்தம் உருவாகியிருந்தது.

அடுத்து எதுவும் பேசாமல் மௌனமாய் வெளியேறினர் இருவரும்.

"என்னப்பா பேசிட்டியா?" என்று அருகில் வந்தமர்ந்த மகனிடம் கேட்டார் அவனின் தாய்.

"ஹ்ம். பேசிட்டேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மா. அவங்களுக்கு ஓகேன்னா பேசிடுங்க" என்றான் மிக மெதுவான குரலில் புன்னகையுடன்.

மகன் சம்மதித்ததில் மனம் குளிர்ந்து போனது அவருக்கு.

"எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்குண்ணா. பொண்ணுக்கு சம்மதமா கேட்டு சொல்லுங்க. நல்ல நாள் பார்த்து தட்டு மாத்திகலாம். ஏற்கனவே ஜாதகம் பார்த்தாச்சு பொருத்தம் ரொம்ப அருமையா இருக்கு." என்று சிரித்தார்.

"சரிம்மா" என்றார் அழகியின் தந்தை.

"அப்போ நாங்க கிளம்புறோம்" என்று அனைவரும் விடைபெற செல்வனின் விழிகள் மட்டும் செந்தனலழகியை தேடியது.

செந்தனலோ அவனின் வெளிப்படையான பேச்சில் தன் மனதை ஏற்கனவே பறி கொடுத்திருந்தாள்.

தன்னறை சன்னல் திரைசீலையின் பின் இருந்துகொண்டு செல்வனை பார்த்துக்கொண்டிருக்க, வெளிய வந்த செல்வனின் விழிகளும் ஒன்றாய் சங்கமித்தது.

அந்த ஒரு நொடி சந்திப்பில் இருவரின் விழிகள் மூலம் இதயங்கள் பேசுவது போல் இருந்தது.

"போலாம்பா" என்ற அன்னையின் குரலில் திரும்பியவன் அன்று சென்று, பின் இருவீட்டாரின் சம்மதத்தோடு ஒரு நல்ல நாளில் நிச்சயம் முடிந்தது.

முதலில் பேசாமல் தயங்கினாலும் பின் கார்த்திகை செல்வனின் இயல்பான குணத்தை புரிந்துகொண்டு அவ்வப்பொழுது பேசிக்கொண்டனர்.

திருமணத்தின் ஒரு வாரத்திற்கு முன், "தனு! பிளீஸ் எனக்கு உன்னை பார்க்கணும் இன்னைக்கு." என்ற செல்வனின் குறுஞ்செய்தியை கண்டதும் இதழ்கள் சுழித்து சிரித்து, "இன்னும் ஏழு நாள் தான் இருக்கு கல்யாணத்துக்கு. என்னை எப்படி வெளிய விடுவாங்க?" என்று அனுப்ப.

"எனக்கு அதெல்லாம் தெரியாது உன்னை பார்க்கணும். ஈவ்னிங் நாலு மணிக்கு பக்கத்துல இருக்க கோவிலுக்கு வரனும். நான் வெய்ட் பண்ணுவேன்" என்று பதில் வந்தது.

"அயோ கார்த்தி!
😯
" என்று அனுப்பினாள்.

"பிளீஸ்! பிளீஸ்!... " என்று பதில் வர தன் வருங்கால கணவனின் கோரிக்கையை மறுக்க முடியாமல், "சரி. ஆனா, இவங்ககிட்ட எப்படி பேசறது ன்னு தான் தெரியலை." என்று அனுப்பினாள்.

"லெட் மீ சீ ஹவ் யூ ஆர் கோயிங் டூ சீ மீ" என்று பதில் வந்தது.

"சொல்லட்டா? எப்படி உனக்கு உப்பு போட்டு காபி கொடுத்தேனோ அப்படி...
😉
" என்று சிரித்து கொண்டே பதில் அனுப்பினாள்.

தன் தந்தையிடம் சில மணி நேரங்கள் போராடி அனுமதி வாங்கி கோவிலில் அமர்ந்திருக்கிறாள்.

"வந்து பத்து நிமிஷம் ஆகுது. இந்த கார்த்தி பாரு இன்னும் காணமே" என்று தனக்குள் புலம்பி கொண்டிருந்தாள்.

"என் பொண்டாட்டி என்னை ரொம்ப மிஸ் பண்றா போல" என்று அவனின் குரல் கேட்க, முகம் மலர்ந்து திரும்பினாள்.

"நான் வந்து பத்து நிமிஷம் ஆகுது. நீங்க தான் லேட்" என்றாள் முகம் சுருக்கி பொய் கோபத்துடன்.

"யார் சொன்னா நான் லேட்டுனு? நான் நீ வரதுக்கு முன்னாடியே வந்துட்டேன். அதோ அந்த மரத்துக்கடியில உட்கார்ந்திருந்தேன்." என்று குறும்பாய் கூறியதும் இடையில் கரம் வைத்து அவனை முறைத்தவள்.

"அப்போ ஏற்கனவே வந்துட்டு என்னை காக்க வச்சிங்களா?" என்றாள் கோபமாய்.

"உடனே வரலாம்னு தான் பார்த்தேன். ஆனா, தூரத்துல இருந்து உன்னை பார்க்க ரொம்ப அழகா இருந்தியா அதான் அங்கயே இருந்து உன்னை கொஞ்ச நேரம் ரசிச்சிட்டு இருந்தேன்" என்று இதழை மெல்ல கடித்தபடி தனலழகியை ஆசையாய் பார்த்தான் கார்த்திகை செல்வன்.

அவனின் பார்வையில் பெண்மை மலர்ந்தாலும் வெளிக்காட்டாது வெட்கம் தடுத்திட, "இது கோவில். சாமிகும்பிட உள்ள போகலாமா?" என்றாள்.

"ஓஹ் போலாமே" என்று இருவரும் உள்ளே சென்று சாமியை தரிசித்து பின் கோவிலை சுற்றி வந்தனர்.

"என்னை எதுக்கு வரசொன்னீங்க?" என்றாள் தனலழகி.

"வெளிய போய் பேசலாம்" என்று அவளை அழைத்து கொண்டு காருக்கு வந்தான்.

"நான் கிளம்புறேன்" என்றாள் அழகி.

"வண்டில ஏறு" என்று காரை திறந்துவிட, "பத்தடில வீடு இருக்கு. அதுக்கு எதுக்கு காரு? நான் நடந்தே போய்கிறேன்" என்றாள்.

"உன்னை வண்டில தான ஏற சொன்னேன். ஏன் நான் வீட்டுக்கு வரக்கூடாதா?" லேசான கோபத்தோடு.

ஒரு நொடி அதிர்ச்சியில் எதுவும் பேச முடியாமல் அமைதியானாள்.

"ஏறு" என்றதும் எதுவும் பேசாமல் உடனே ஏறிக்கொள்ள, அவனும் எதுவும் பேசாமல் வண்டியை செலுத்தினான்.

பத்து நிமிட பயணத்திற்கு பின் கார் நிற்க, அப்பொழுது தான் தாங்கள் வேறு இடத்திற்கு வந்திருப்பதை உணர்ந்தாள்.

"எங்க வந்திருக்கோம்?" என்றாள் இறங்காமல்.

"நான் உன் புருஷன் தைரியமா இறங்கலாம்" என்றான் முகத்தில் மெல்லிய புன்னகை காட்டி.

புன்முறுவல் பூத்தாலும் உள்ளுக்குள் உதறலெடுக்க தான் செய்தது.

"என் உயிரை கொடுத்தாவது உன்னை காப்பாத்துவேனே தவிர என்னால உனக்கு எதுவும் தவறா நடக்காது" என்றான் அதே சாந்தமான முகத்துடன்.

"சாரி" என்றாள் தனலழகி.

"எதுக்கு?" என்றான் மென்மையாய்.

"இல்ல .. நீங்க கூப்பிட்டும் இறங்காம.." என்று முடிக்காமல் இழுக்க.

"எனக்கு புரியுது. இந்த காலகட்டம் அப்படி இருக்கு. ரொம்ப நம்பினவங்களே நம்மளை ஏமாத்துற காலக்கட்டம். பெண்கள் உஷாரா இருக்கிறது நல்லது தான்." என்று கீழே இறங்கினான்.

"எந்த இடம் இது?" என்று கீழே இறங்கினாள்.

"வா" என்று நடக்க, அவளும் பின் தொடர்ந்தாள்.

"இந்த இடம் எனக்கு பிடிச்ச இடம். எப்போ மனசுக்கு நிம்மதி வேணும்னாலும் இங்க வந்துடுவேன்" என்றான் அழகாய் ஒரு சிறிய வீட்டினுள் நுழைந்து.

 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
"இது எங்க தாத்தா பாட்டி வாழந்த வீடு. வீடு கட்டினப்புறம் பெரிய வீட்டுக்கு போய்ட்டோம். எனக்கு இங்க இருக்கிறது ரொம்ப பிடிக்கும்" என்றான் வீட்டை சுற்றி காட்டியபடி.

வீட்டில் எல்லா பொருட்களும் அப்படியே இருந்ததால், "எனக்கு இங்க இருக்கிறது பிடிக்கும் இல்லையா அதனால பாதி நாள் இங்க தான் இருப்பேன். இங்க எல்லா பொருட்களுமே வச்சிருப்பேன்" என்றான் கார்த்திகை செல்வன்.

"ஓஹ்" என்றாள் அழகி.

"தனு" என்று மிக மெல்லிய குரல் கேட்க திரும்பினாள்.

"ஐ லவ் யூ" என்று அவள் விரல் பிடித்து மோதிரத்தை நுழைத்தான்.

என்ன நடக்கிறது என்று அவள் உணரும் முன் முடிந்திருந்தது.

அதிர்ச்சி, ஆனந்தம் என்று மாறி மாறி உணர்ந்தாள் அழகி.

"நம்ம கல்யாணதுக்கு முன்னாடியே சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்தேன். எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். உன்னை ரொம்ப விரும்புறேன். என் உயிர் உள்ள வரைக்கும் நீ மட்டும் தான் என் மனைவி" என்று அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

இதுவரை இருந்த தயக்கம் விலகி அவனை இறுக அணைத்து கொண்டாள் அழகி.

முதலில் வியந்தவன் பின் தன் கரங்களில் அவளை அடக்கினான்.

சிறிது நேரம் இருவரும் அப்படியே நிற்க.

"தனு" என்றான் மெல்லிய குரலில்.

"இதோட கல்யாணத்தப்ப தான் பார்க்க முடியும். ஆனா, ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது என்கிட்ட வீடியோல பேசிடனும். சரியா ?" என்றான்.

"ஹிம்" என்று மெல்லிய முனகல் மட்டுமே வெளி வர சிரித்தவன்.

"எனக்கு எவ்ளோ நேரம் ஆனாலும் இப்படி இருக்கிறதுல எந்த தயக்கமும் இல்ல. ஆனா, உன்னை வீட்டுல தேடுவாங்க இல்ல? வீட்டுக்கு போக வேணாமா? இன்னும் கொஞ்ச நேரத்துல உன் அப்பா அதான் என் மாமனார் உன்னை காணோம்னு எனக்கு போன் அடிச்சுருவாரே?" என்றான் குறும்பாய்.

வெடுக்கென அவனை தள்ளிவிட்டவள்.

"ஆமாமா, போலாம்" என்று திரும்பியவளின் கரம் பற்றி தடுத்தவன்.

"எனக்காக ஒரே ஒரு தடவை மட்டும் கார்த்தின்னு கூப்பிடு கேட்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு." என்றான் கெஞ்சலாய்.

"இல்ல.. முடியாது" என்று கீழே தலை கவிழ்ந்தாள் வெட்கத்தில்.

சொல்லமுடியா உணர்வுகளில் இருவரும் மூழ்கியிருக்க, இதற்கு மேல் இருவரும் ஒன்றாய் இருப்பது வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தவன்.

"போலாம்" என்று மெல்லிய முத்தத்தை நெற்றியில் பதித்து வெளியே நடந்தான்.

இருவரின் பேச்சுகளிலும் கிண்டல்களிலும் சீண்டல்களிலும் நாட்கள் நகர்ந்தது.

இதோ இன்று திருமண நாளும் வந்துவிட, மணமகளாய் அலங்கரித்து தேவதையென அறையில் அமர்த்திருந்தவளின் மொபைல் அடித்தது.

எல்லோரும் வெளியேறி இருக்க அவள் மட்டுமே இருந்தாள்.

"ஹலோ!" என்றாள் மனம் குதூகலிக்க.

"ஹேய்! பொண்டாட்டி. ரெடி ஆகிட்டியா?" என்ற குரலில் முகம் சிவந்தவள்.

"ஹிம்" என்று இவள் முனக.

"நான் பார்க்கணும். இப்போ உடனே எனக்கு ஒரு போட்டோ அனுப்பு இல்ல அடுத்த அஞ்சு நிமிஷத்துல உன் ரூம் முன்னாடி இருப்பேன்" என்றதும் செய்வதறியாது "சரி" என்றாள்.

"குட் கேர்ள். லவ் யூ. " என்று போனை வைத்தான்.

தன் புகைப்படத்தை அனுப்பிய கொஞ்ச நேரத்தில் அவளையும் அழைத்து சென்றனர்.

இதுவரை இடைவெளி விட்டு நின்று அமர்ந்து பேசி சிரித்தவர்கள் இன்று வெகு அருகில் அமர்ந்திருக்க மனம் குதூகலித்தாலும் உள்ளத்துக்குள் ஒரு இனம் புரியா பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.

ஐயர் மங்திரங்கள் ஓத அனைவரின் சாட்சியாக இருவரின் வாழ்க்கையும் சங்கமிக்க மாங்கல்யம் எனும் மதிப்புமிக்க மஞ்சள் கயிற்றை தணலழகியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

"நான் உன் கழுத்துல தாலி கட்றப்ப கண்டிப்பா நீ என்னை மட்டும் தான் பார்க்கணும். உன் கண்ல தெரியற அந்த நிமிஷ சந்தோஷத்தை நான் மனசுக்குள்ள படம் பிடிக்கணும்" என்று அடிக்கடி கார்த்திக் கூறியிருக்கையில் அவனின் தனு எப்படி மீறுவாள். இதோ அவள் கணவனின் விழியிலே கரைந்து அவளின் இதயத்தை தொலைத்து கொண்டிருந்தாள்.

திருமணம் ஒரு வழியாக முடிந்திருக்க, கார்த்திக்கின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

பெரியவர்களின் ஆசியோடு இருவரும் தங்களின் வாழ்க்கையை இனிமையாய் தொடங்கினர்.

நாட்கள் சுகமாய் நகர தொடங்கியது.

"என்னை எப்போ கார்த்தின்னு கூப்பிடுவ?" என்றான் கார்த்திகை செல்வன் தனுவை கட்டி பிடித்து.

"நீங்க கேட்டுட்டே இருங்க. கூப்பிடுவேன் உங்க கனவிலே" என்று அவனை தள்ளிவிட்டு உள்ளே ஓடினாள்.

"அடிப்பாவி. ஒரு செகண்ட்ல ஏமாத்திட்டு ஓடிட்டா. உன்னை என் பேரை கூப்பிட வைக்கலை" என்று உள்ளே சென்றான்.

கார்த்திக் கூறியது போல் அவளின் தந்தை அவ்வபொழுது வந்து இவர்களுடன் தங்குவதும் இவர்கள் அங்கே சென்று தங்குவதும் வழக்கமானது.

"அண்ணா. தனல் தான் சொல்றா இல்ல. இங்கயே இருங்கண்ணா. இதே ஜானு சொல்லிருந்தா தங்கிருப்பிங்க." என்று கார்த்திக்கின் அம்மா கூறினார்.

"அம்மாடி அப்படி எல்லாம் இல்லம்மா. எனக்கும் ஜானுவும் நீயும் ஒண்ணு தான்மா. கூடபிறக்களைன்னாலும் நீயும் என் தங்கச்சி தான். நான் தான் அப்பப்போ வரேனே. அதுவும் இல்லாம அங்க இருந்தா உங்க அண்ணிகூட இருக்க மாதிரி இருக்கும் அதான்." என்று கூறி கிளம்பி விடுவார்.

ஆதவன் விழித்திருக்க, கண்கள் திறவாமல் பக்கத்தில் கரம் கொண்டு துழாவினான் தன் செல்ல ராட்ஷசசியை.

'எங்க போயிட்டா?' என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டே எழுந்து அமர்ந்தவன்.

'குட் மார்னிங் மை டியர் ஹப்பி தூங்குமூஞ்சி. விடிஞ்சிருச்சு. ரெடி ஆகிட்டு கீழ வாங்க' என்ற சின்ன காகிதத்தை கண்டதும் இதழ்கள் புன்முறுவல் பூத்தது.

'யாரு நான் தூங்குமூஞ்சியா? வரேண்டி' என்று எழுந்து குளிக்க சென்றான்.

சமையலறையின் வாசலில் நின்று தன் காதல் மனைவி சமைக்கும் அழகை நெஞ்சிற்கு குறுக்கே கரங்களை கட்டி கொண்டு நோக்கி கொண்டிருந்தவனின் மனதுக்குள் ஏகப்பட்ட குறும்பு தனங்கள் தோன்ற மெல்ல அறையினுள் நுழைந்து அவளின் பின்புறத்தில் நின்றான்.

இவனின் வரவு பற்றி அறியாமல் தன் வேலையில் மும்முரமாய் இருந்தவள் சாம்பாருக்கு காய்கறி நறுக்கி கொண்டிருக்க, இவன் பின்னாலிருந்து அணைக்க பயத்தில் அலறினாள் தனு.

"அய்யோ கத்தாதடி பொண்டாட்டி. என்னை மீறி இந்த வீட்ல யாரு வருவாங்க." என்று தன் கரம் கொண்டு அவளின் இதழ்களை மூட நறுக்கென்று கடித்து வைத்தாள்.

"ஆஹா!" என்று அவன் கத்த, "கத்தாதடா புருஷா." என்று அருகில் இருந்த தக்காளியை வாயினில் அடைத்தாள்.

"உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா என் கையை கடிச்சிருப்ப உன்னை" என்று விரட்ட, "வேணாம்ங்க. அத்தை வெளில இருக்காங்க. கத்தினேன்னு வைங்க. நீங்க தான் திட்டு வாங்குவீங்க. சமைக்கிற இடத்துல என்ன வேலை உங்களுக்கு?" என்று கூறியவளின் இடையில் கரம் இட்டு தன்னோடு அணைத்தவன்.

"சமைக்கிற இடத்துல எனக்கு வேலை இல்லாம இருக்கலாம். என் பொண்டாட்டி இருக்க இடத்துல எனக்கு வேலை இருக்கே" என்று அவளின் காதுமடல்களை விரல்களால் உரச, விழிகள் மூடி அதை ரசித்தாலும் அவளின் குறும்பு தனம் மேலோங்க.

"என்ன வேணும் அத்தை?" என்றதும் வெடுக்கென உதறி தள்ளி நின்றான்.

எதிரில் இருந்து எந்த பதிலும் வராததால் திரும்பி பார்க்க அங்கே அன்னை இல்லாமல் இருந்ததால், அவளை முறைத்தான்.

"உனக்கு கொழுப்பு அதிகமாகிடுச்சுடி" என்று அவளை நெருங்கினான்.

"ஆமா. எங்க அப்பா நிறைய சாப்பாடு போட்டு கொழுப்பை வளர்த்து வைச்சிருக்கார்." என்று கலகலவென சிரித்தாள்.

"ஏண்டி பேசமாட்ட? பொண்ணு பார்க்க வந்தப்பவே உப்பை போட்டு காபி கொடுத்தவ தானே நீ? " என்று குறும்பாய் கேட்டான்.

"நல்ல வேலை உப்பை போட்டேன். எங்க அத்தை மேல இருந்த காண்டுல மிளகாய் தூளை கலக்கல. அதுவரைக்கும் நீங்க அதிர்ஷ்டசாலி தெரியுமா?" என்று பாவமாய் கேட்டாள்.

"உனக்கு குறும்பு ரொம்ப அதிகமாடிச்சு" என்று அவளை எட்டி பிடிக்க முயல அவன் கைக்கு சிக்காமல் ஓட்டம் பிடித்தாள் தனலழகி.

"தனு செல்லம். ஒழுங்கா நீயே வந்துட்டா கம்மியா தான்டி இம்சை பண்ணுவேன். நான் கண்டுபுடிச்சேன் நீ தொலைஞ்சடி." என்று வீட்டில் எல்லா இடத்திலும் தேடினான்.

தங்களின் அறையில் ஒளிந்திருந்தவளை வசமாய் அணைத்தவன்.

"ஒழுங்கா ஒரே ஒரு முறை என்னை கார்த்தின்னு கூப்பிட்டா உன்னை விட்டுடுவேன். இல்லை நீ இன்னைக்கு முழுக்க இங்க இருந்து வெளியே போக முடியாது" என்று கண்ணடித்தான்.

"ஹ்ம்.. தள்ளுங்க. அத்தைக்கு சாப்பாடு தரணும்" என்று சிணுங்கிவளை ஒரு அடிகூட நகர முடியாமல் தடுத்தான்.

"நான் தான் சொன்னேன்ல?" என்று குறும்பாக சிரித்தான்.

"தனல்" என்ற தன் அன்னையின் குரல் கேட்டதும் சற்றும் தளரவிட்டவன் விடாமல் பிடித்திருந்தான்.

"அத்தை கூப்பிடறாங்க" என்றாள் தவிப்பாய்.

"கூப்பிடட்டுமே? என் பேரை சொல்லு உடனே விட்டுடறேன்" என்றான் கூலாக.

"ஹுஹும்" என்றாள் தயக்கமாய்.

"அப்போ போக முடியாது" என்றான் அவனும் விடாமல்.

"பிலீஸ்" என்றாள் தனு.

"நானும் அதே தான கேக்குறேன். ப்ளீஸ்" என்றான் அவனும் கெஞ்சலாய்.

தயங்கி தயங்கி "கார்த்தி" என்றாள் மிக மெதுவாய்.

"ஹ்ம்.. எனக்கு ஒன்னுமே கேட்கலையே" என்றான் வேண்டுமென்று.

"கார்த்தி" என்றாள் இம்முறை சத்தமாய்.

"ஹ்ம் இப்போ கேட்டது. உன் வாய்லர்ந்து எப்போ கேப்போம்னு எவ்ளோ நாள் ஆசையா இருந்தேன் தெரியுமா?" என்றான் காதலாய்.

"சரி. நான் போறேன்" என்றாள் தனு.

"ஹ்ம்ம். இனி இங்க நம்ம ரூம்ல என்னை கார்த்தினு கூப்பிடுவேன்னு சொல்லு. விடறேன்" என்றான் கார்த்திக்.

சிறிது நேரம் தயங்கியவள்.

"சரி" என்று அவனை தள்ளிவிட்டு ஓடினாள் தனு.

"ஓடு. எப்படியும் என்கிட்ட தான வரணும் பார்த்துக்குறேன்" என்று சிரித்தான் கார்த்திகை செல்வன்.

இருவரின் இல்லற வாழ்க்கையும் இனிமையான மெல்லிசை போல் நகர்ந்து கொண்டிருந்தது.

ஒரு வருடமும் கடந்திருந்தது.

திடீரென்று மாரடைப்பால் அவனின் தாய் காலமாக சில காலம் இருவரும் துடித்து போயினர்.

திருமண வாழ்வில் குழந்தை என்பது இறைவன் தரும் வரம் என்பது போல், பிள்ளை வரம் தள்ளி சென்றது.

இருந்தும் தன் மனைவி மீதான அன்பு மட்டும் என்றும் குறையவில்லை அவனுக்கு.

'என்னங்க டாக்டர்கிட்ட வேணா போலாமா?" என்று கேட்டாள் லேசாக கலங்கியபடி தனலழகி.

"எதுக்குடா? உடம்பு எதுவும் முடியலையா?' என்றான் தன் நெஞ்சோடு சாய்ந்திருந்த தனுவின் தலைகோதி.

"இல்ல இல்ல .. உங்களுக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும். ஆனா, நமக்கு குழந்தை பிறக்குறது தள்ளி போகுது. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனா என்னை செக் பண்ணிட்டு குறை இருந்தா சொல்வாங்கள்ல?" என்றாள் அவன் வெற்று மார்பில் தன் முகத்தை மேலும் அழுத்தி.

என்ன யோசித்தானோ, ஒரு நிமிட இடைவெளிக்கு பின் நீண்ட பெருமூச்சி விட்டவன்.

"டேய்! தனு என்னடா பேசுற? குழந்தை பிறக்கலைன்னா உனக்கு மட்டும் தான் குறை இருக்குமா? உனக்கு மட்டும் தான் செக் பண்ணனுமா? நானும் இதுல சம்மந்த பட்ருக்கேன். அப்போ எனக்கும் தான் செக் பண்ணணும். ஒரு வேளை எனக்கு ஏதாவது குறை இருந்தா?" என்றான் அவளின் உச்சியில் முத்தமிட்டு.

"எதுக்கு இப்படியெல்லாம் பேசுறிங்க?" என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்து.

"எல்லாம் சரியாகிடும்டா. இன்னும் வயசிருக்கு வாழ்க்கையும் இருக்கு. நமக்கு குழந்தை பிறக்கும் அதையே நினைச்சு யோசிச்சி ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத" என்று தன்னோடு இறுகி அணைத்துக்கொள்ள, தன்னவனின் கைபிடிக்குள் பாதுகாப்பான பிடியில் உறக்கத்தை தழுவினாள்.

அவர்களின் இந்த அழகான வாழ்வில் யார் கண் பட்டதோ? வாழ்க்கை புரட்டி போட்டு துவங்கியது.

தனலழகிக்கு திடீரென்று ஒரு நாள்,

"என்னன்னு தெரியலை காலைலர்ந்தே தொண்டை வலிக்குது, உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது. ஜூரம் வரபோற மாதிரி இருக்கு." என்று சோர்ந்து படுத்து கொண்டாள்.

"ஏன்டா திடீர்னு? டாக்டர்கிட்ட போலாம் வா" என்று அவளை கூப்பிட, "இல்லைங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்" என்று மறுத்து விட்டாள்.

"சரி. இரு வரேன். ஒரு நிமிஷம்" என்று வெளியே சென்றவன் கையில் மாத்திரை தண்ணீர் பாட்டிலோடு வந்தான்.

"இந்தாம்மா இந்த மாத்திரைய போடு முதல்ல சரியாகிடும்" என்று மாத்திரைய போட வைத்தான்.

தலையில் தைலம் தேய்த்து போர்த்தி விட்டான்.

"கொஞ்ச நேரம் தூங்கு சரியாகிடும்" என்று விளக்கணைத்து தானும் அருகில் அமர்ந்து அவள் தலைகோதி தட்டிக்கொடுத்தான். அவனின் கரம் கொடுத்த அரவணைப்பில் உடல்வலி மறந்து உறங்கி போனாள்.

அன்று உடல் நிலை சற்று சரியானது போல் ஆனதும் நிம்மதியானது செல்வனுக்கு.

ஆனால், அதன்பிறகு அடிக்கடி தனுவிற்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது.

"நீ முதல்ல ஹாஸ்பிட்டல் கிளம்பு" என்று அவளை வற்புறுத்தி மருத்துவமனை கூட்டி சென்றான்.

முதலில் ஒன்றுமில்லை இது வெறும் சத்து குறைபாடு தான் என்று கூறிய மருத்துவர் சத்து மாத்திரைகள் தந்தார்.

கொஞ்ச நாள் சரியானது போல் இருந்தது. ஆனாலும், விடாமல் வேறு நல்ல டாக்டர்களிடம் கூட்டி சென்றான்.

பல சிகிச்கைகள் செய்த பின்னும் சரியாகவில்லை.

"எனக்கு உடம்புல ஏதோ சக்தி ரொம்ப குறைஞ்ச மாதிரி இருக்குங்க ரொம்ப பலகீனமா இருக்க மாதிரி இருக்கு" என்றாள் வேதனையாய்.

"இன்னைக்கு வேற டாக்டர்கிட்ட அப்பாய்ன்மெண்ட் வாங்கிருக்கேன்டா போலாம். எல்லாம் சரியாகிடும்" என்றான் பயத்தை உள்ளுக்குள் மறைத்து.

டாக்டரிடம் சென்று வந்த பின்னரும், "எனக்கு உடம்பு டையர்டா இருக்க மாதிரி இருக்கு" என்று அடிக்கடி இதையே கூற ஆரம்பித்தாள்.

"எல்லாம் சரியாகிடும். நீ அதையே எப்போ பாரு நினைக்காம ரெஸ்ட் எடு. ரெஸ்ட் எடுத்தா கண்டிப்பா சரியாகிடும்" என்று அதட்டினான் கணவன்.

"அப்படியா? இதையே தான் இந்த ஒரு மாசம் முழுக்க சொல்றீங்க?" என்றாள் வெறுமையாய் சிரித்து.

"டேய்! இப்போ தான சொன்னேன்" என்று முறைத்தான்.

"சரி. நான் எதுவுமே பேசலை" என்றாள் தனலழகி.

"எல்லாம் சரியாகிடும்" என்று எப்பொழுதும் போல் ஆறுதல் கூறுவான்.

அவளின் நம்பிக்கை குறைய தொடங்கியது.

"எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை" என்றாள் தனு.

"அபப்டி எல்லாம் சொல்ல கூடாது" என்று கார்த்திக் அதட்டுவான்.

"சரி. தெரியாம சொல்லிட்டேன். சாரி" என்று எழுந்து சமையலறை செல்ல முயன்றவள் நடக்க தடுமாறினாள்.

"தனு என்னடா?" என்று தாங்கி பிடித்தான் பின்னால் வந்தவன்.

"என்னன்னு தெரியலைங்க நடக்கும் போது ஸ்லிப் ஆகுது" என்றாள் தனு.

இதுவே வாடிக்கையானது அடிக்கடி தனு தடுமாறுவதும் இவன் தாங்கி பிடிப்பதுமாக தொடர்ந்தது.

பல டாக்டர்களிடம் கூட்டி சென்றான் கார்த்திக், ஆனால், அவளின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

என்ன நோய் என்று கண்டுபிடிக்கவும் முடியவில்லை.

திடீரென்று, ஒரு நாள் காலை எழ முயன்று முடியாமல் போக திடுக்கிட்டாள். மீண்டும் முயற்சி செய்தாள் முடியாமல் போனதும்

"என்னங்க?" என்றாள் தனல் பதட்டமாக.

"ஹ்ம்" என்றான் கார்த்திக் உறக்கத்தில்.

"என்னங்க?" என்றாள் சற்று சத்தமாக.

"என்னடா?" என்றான் கார்த்திக் தூக்க கலக்கத்தில்.

"என்னால எந்திரிக்க முடியலைங்க" என்று பயத்தில் கண்ணீர்விட தொடங்கினாள்.

அவளின் அழுகையை கண்டு திடுக்கிட்டவன் பதட்டமாய் எழுந்து உட்கார்ந்தான்.

"என்னமா சொல்ற? அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காது. கொஞ்சம் டையர்டா இருக்கும். எழுந்து நடக்க முடியும் உன்னால " என்று அவள் எழ உதவி செய்தான்.

எழ முயற்சி செய்து முடியாமல் போக ஆழ ஆரம்பித்தாள்.

"என்னால எந்திரிக்க முடியலை முயற்சி செஞ்சு பார்த்துட்டேன்" என்றாள் உடனே டாக்டரை வரவழைத்து பார்த்தான்.

கொஞ்ச நாளில் முழுவதுமாக தனுவாள் எழுந்து நடக்க முடியாமல் போனது.

பல டாக்டர்களிடம் கூட்டி சென்று பார்த்து பல டெஸ்ட்டுகள் பல பரிசோதனைகள் செய்து பார்த்த பின் தான் கண்டுபிடிக்க முடிந்தது.

"கார்த்திக் உங்க மனைவிக்கு வந்திருக்கிறது லட்சத்துல ஒருத்தருக்கு வரக்கூடிய நோய். அந்த நோய்க்கு பேரு "மையோபதி" இது ஒரு தசை வீக்க வியாதி" என்று விளக்கினார் மருத்துவர்.

உலகமே இடிந்து தலை மேல் விழுந்தது போல் இருந்தது கார்த்திக்கு.

"டாக்டர் இதை குணபடுத்த முடியாதா? இதுக்கு ட்ரீட் மென்ட இருக்குல்ல" என்றான் கண்களில் ஒரு நம்பிக்கையோடு.

"இல்ல! கார்த்திக் இதுக்கு டிரீட்மெண்ட் இருக்கு. ஆனாலும் முழுசா குணமாகாது. இனி அவங்க மீதி வாழ்க்கையை படுக்கையில தான் கழிக்கனும்" என்றார் மருத்துவர்.

தளர்ந்து போய் அருகில் இருந்த சேரில் அமர, "கார்த்திக் மனசை தேத்திக்கோங்க. நீங்களே இப்படி உடைஞ்சு போயிட்டா உங்க மனைவிக்கு யாரு ஆறுதல் சொல்றது? அவங்களுக்காகவாவது நீங்க தைரியமா இருக்கணும்" என்றார் டாக்டர்.

சிறிது நாள் ஏதோ சாக்கு சொல்லி சமாளித்தவன் அதற்கு மேல் சமாளிக்க முடியாது என்று முடிவு செய்து பொறுமையாக தன் மனைவிக்கு இதை பற்றி கூறினான் கார்த்திக்.

முதலில் அழுது புரண்டு துடித்தவள் பின் யாரிடமும் பேசுவதை கூட நிறுத்திவிட்டாள் தனலழகி.

அவள் பேசுவதை நிறுத்தி விட்டிருந்தாலும் கார்த்திகை செல்வனுக்கு அவள் ஒரு குழந்தையாய் தான் தெரிந்தாள்.

கை கால்கள் மட்டும் அசைக்க தெரிந்த ஆறு மாத வளரந்த குழந்தையாகவே தனு தெரிந்தாள். தாயும் தகப்பனும் கூட செய்ய முடியாத சேவை. அவள் மேல் பித்தாயிருந்தவன் அளவு கடந்த காதலால், படுத்த படுக்கையில் அவள் விடிந்து கண் விழித்த நொடி முதல் காலைக்கடன் முதல் இரவு உறங்க போகும் முன் அவளுக்கான அனைத்து வேலைகளையுமே தாயுமானவனாய் இருந்து அவளுக்காக பிடித்து செய்தான்.

அவ்வப்பொழுது அவளின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து கணவனாகவும் அன்பை கொடுக்க தவறவில்லை.

அவளின் குரல் கேட்காதா குறும்புடன் துடிக்கும் அவள் விழிகளை காணவே முடியாதா என்ற ஏக்கத்தோடு நடந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள், கார்த்திகை செல்வனிடம் "என்னங்க" என்றாள் தனு.

பேசுவதை நிறுத்திவிட்டிருந்த அவளின் குரல் கேட்காதா என்று ஏங்கி கொண்டிருந்தவன் ஓடோடி வந்தான் ஆசையாய்.

"என்னம்மா?" என்றான் கார்த்திக்.

"இப்படி உட்காருங்க. உங்கக் கிட்ட கொஞ்ச பேசனும்" என்றாள் தனழலகி.

"சொல்லும்மா? ஏதாவது வேணுமா? என்ன பேசணும்?" என்று அமர்ந்தான் கார்த்திக்.

"என்கூட சந்தோஷமா வாழணும்னு தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க" என்று அவனை பார்த்தாள்.

"ஆமாடா. அதுக்கென்ன இப்போ? ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன்" என்று சிரித்தான்.

"கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் நாம சந்தோஷமா தான் இருந்தோம். ஆனா, இப்போ இல்ல. அது தான் உண்மை. அதனால.." என்று முடிக்காமல் அவனை பார்க்காமல் நிறுத்தினாள்.

எதையோ கிறுக்கு தனமாக யோசித்திருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு.

"அதனால.." என்று அவனும் அவளை பார்த்தான்.

"நமக்கு எப்பவுமே அதுவும் உங்களுக்கு எப்பவுமே குழந்தைன்னா உயிர். ஆனா, என்னோட துரதிஷ்டம் ஒரு குழந்தைய கூட உங்களுக்கு என்னால தரமுடியலை. அதனால, யோசிக்காம நான் சொல்றபடி செய்ங்க." என்றாள் தனலழகி.

"என்ன பண்ணனும்?' என்றான் அவளை கூர்ந்து பார்த்து.

"எனக்கு டைவோர்ஸ் கொடுத்திருங்க. என்னை வேற ஏதாவது இல்லத்துல சேர்த்துடுங்க. நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க" என்றாள் தனலழகி துக்கம் நெஞ்சை அடக்கி முகத்தில் எந்த சலனமும் காட்டாமல்.

இதுவரை கார்த்திக்கை இப்படி பார்ததே இல்லை அவள். முகத்தில் அவ்வளவு ஒரு கடுமை. அவனின் விழிகளை தாங்க முடியாமல் தலை குனிந்தாள்.

"ஓங்கி அரைஞ்சேன்னு வை அவ்ளோ தான்" என்றான் மிகவும் கோவமாக.

"உனக்கு எங்க இருந்து இந்த மாதிரி எண்ணமெல்லாம் வருது?" என்றான் கார்த்திக்.

"என்னால உங்களுக்கு எந்த வேலையும் செஞ்சு தரமுடியலை. அதைவிட நீங்க எனக்கு எல்லா வேலையும் செஞ்சு கொடுக்குறிங்க. ஒரு பெத்த குழந்தைக்கு செய்ய வேண்டியதெல்லாம் நீங்க செய்றது என்னால பார்க்க முடியலை. எல்லாத்துக்கும் மேல ஒரு மனைவியா உங்களோட தேவைகளை என்னால பூர்த்தி செய்ய முடியலை. இதெல்லாம் நினைச்சா..." என்று முடிக்க முடியாமல் அழத்துவங்கினாள்.

"இப்போ எதுக்கு அழற? நீ எனக்கு வேலை செஞ்சு தரலைன்னா என்ன? நான் நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து செய்றேன். ஆமா குழந்தைக்கு செய்ற மாதிரி தான் எல்லா வேலையும் உனக்கு செய்றேன். அதனால என்ன நான் பெத்த குழந்தையா உன்னை நினைச்சுக்குறேன். ஹ்ம்.. யாரு சொன்னா நீ மனைவியா இருக்க முடியாதுன்னு? இப்போகூட உன்னால எனக்கு குழந்தை பெத்து தர முடியும்டா... ஆனா எனக்கு நீ போதும்
நீ என்னோட மனைவிடா. ஒரு வேளை எனக்கு இதே மாதிரி ஆகியிருந்தா என்னை இல்லத்துல சேர்த்துட்டு வேற ஒரு துணையை உன்னால தேடிக்க முடியுமா?" என்றான் அன்பாய் கடிந்து.

"முடியாது" என்று உடனே தனு தலையாட்டினாள்.

"அப்போ என்னை மட்டும் உன்னை விட்டு விலக சொல்ற? கணவன் மனைவி உறவு வெறும் உடல் சார்ந்தது மட்டும் இல்ல. அதையும் தாண்டி நிறைய இருக்கு" என்று மென்மையாய் அவள் தலை கோதி முத்தமிட்டான்.

"உனக்கு எப்போ இப்படி ஆச்சோ அப்பவே முடிவு பண்ணிட்டேன். என்னை மட்டுமே நம்பி வந்த உனக்காக தான் வாழறதுன்னு" என்று புன்னகைத்தான் கார்த்திகை செல்வன்.

சிறிது நாள் செல்ல செல்ல, எல்லா கணவன் மனைவிக்கும் வருவது போல் குழந்தை வேண்டும் என்ற ஆசை தனுவுக்கு முளைத்தது.

மருத்துவர்களோ, "மிஸ்டர். கார்த்திக் குழந்தை பிறப்புக்கும் உங்க மனைவியின் உடல்நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" என்று கூறினாலும்.

"எனக்கு என் தனு போதும் குழந்தை வேண்டாம்" என்று கார்த்திக் கூறிவிட்டான்.

ஆனால் அதற்கான காரணம் என்று அவன் தனுவிடம் கூறியது என்ன தெரியுமா?,, "நல்ல உடல்நிலையில் இருக்கிற பெண்களுக்கே பிரசவம் மறுஜென்மம் மாதிரின்னு சொல்வாங்க. என்னோட தனுவால எழுந்து நடக்கவே முடியாத சூழ்நிலையில் அப்புறம் எப்படி குழந்தையை சுமக்க முடியும்?" என்று தன் மனைவியின் கஷ்டத்தை உணர்ந்து நெகிழ்ந்து கூறினான்.

"உங்களை மாதிரி கணவன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்" என்று அவள் கண்ணீர் வடிக்கும் பொழுதெல்லாம், "அழக்கூடாது இனி எனக்கு நீ உனக்கு நான்" என்று நெற்றியில் முத்தமிடுவான்.

அன்றில் இருந்து தனுவுடன் வீட்டிலேயே இருந்தான். வேலையையும் வீட்டிலேயே இருந்து கவனித்து கொண்டான்.

இதோ வருடங்கள் இருபது ஓடிவிட்டது.

'எல்லாம் கொஞ்ச காலம் தான் அப்புறம் பாரு அவளை துரத்தி விட்டுட்டு வேற ஒருத்தியை கூட்டிட்டு வரானா இல்லையான்னு?' என்று ஏளனம் பேசியவர்கள் மூக்கில் விரல்வைத்து வியக்கும்படி இன்றும் தனுவை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்கிறான் கார்த்திகை செல்வன். அவர்களின் உலகத்தில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

தனுவை பொறுத்தவரை கார்த்திகை செல்வன் தான் அவள் வாழ்க்கையில் வீசிய வசந்தமலர்.

உண்மையை தழுவி எழுதிய இக்கதையை எழுதும் பொழுது இரு சொட்டு கண்ணீர் வர தான் செய்தது.
 
Top Bottom