Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 21
"பத்மாவதி “
"சொல்லுங்கள்.”
"அதோ மேற்கில் மறைகிறானே பகலவன். அவன் மறையும் போது வானத்திற்கு சிவப்பு வண்ணத்தை பூசி செவ்வானமாக்கிவிட்டு மறைகிறான். அதைப் பார்க்கும் போது எனக்கு உன்னுடைய சிவந்த கன்னம் தான் நினைவுக் கு வருகிறது.இனி நான் எப்போது இந்த செவ் வானத்தை கண்டாலும் என் மனம் உன்னைத்தான் நினைக்கும் “
"காதல் பேச்சில் நீங்கள் வல்லவர்தான். இல்லையென்றால் பன்றி வேட்டையாட வந்த நீங்கள் குறுகிய காலத்தில் கன்னி வேட்டையில் இறங்குவீர்களா?”
"அந்த வேட்டையில் நான் வென்று விட்டேன். இந்த கன்னி வேட்டையில் தான் நான் வென்றேனா இல்லையா என்று தெரியவில்லை.”
"கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு வரும் நான் சாமியை சந்திக்க செல்லாமல் இந்த ஆசாமியை சந்திக்க வரும் போதே தெரியவில்லையா? நீங்கள் கன்னி வேட்டையில் வெற்றி ஈட்டியது. “
"பூடகமாக பேசி என் பொறுமையை சோதிக்காதே பத்மாவதி .உன் பவள வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்.அத்தான் என்ற சத்தான சொல்லில் செத்தான் இந்த அபயவர்மன்.”
" நீங்கள் நாளைய கடம்பத்தின் அரசர். நானோ மலை சாதிப்பெண் .? நாம் இருவரும் எப்படி?”
"வாழ்க்கையில் ஒன்று சேர முடியும் என்று தானே கேட்க வருகிறாய்? என் விருப்பத்திற்கு என் தந்தை எப்போதும் தடை போட மாட்டார். உன் விசயத்தில் அப்படி ஏதாவது தடை வந்தாலும் அதை தகர்த்து உன் கையை பிடிப்பான் கடம்பத்தின் இளவரசன்”
"உங்களின் அந்தஸ்திற்கு நீங்கள் முல்லைவனத்தின் இளவரசியைத் தான் மணம் முடிக்க வேண்டும்”
“உன்னை விடவும் பேரழகியா அவள்?”
"என்னை விடவும் அவள் அழகாக இருந்தால் என்னை விட்டு சென்று விடுவீர்களா?”
' என் கண்களுக்கு எப்போதும் நீ பேரழகி தான். உன்னை விட வா அந்த ரத்ன மாலா பெரிய அழகியாக இருந்து விடப் போகிறாள்?”
"அவள் என்னை விடவும் அழகு மட்டும் தான். அவளது எத்துப் பற்களை வைத்து ஒரு விருந்திற்கே தேங்காய்களை சுரண்டி விடலாம்”
"அவ்வளவு கோரமாகவா அவள் இருக்கிறாள்?”
"இன்னமும் சொல்லவா? அவளைப் பற்றி.”
"இந்த இன்பகரமான நேரத்தில் அவளைப் பற்றி பேசி நம் நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும். எங்கே என் அருகில் வா”
பத்மாவதி அபயவர்மனை கட்டி அணைத்த போது அவனை யாரோ தட்டி எழுப்பினார்கள்.
கொட்டடியில் இருந்த கைதிகள் அபயவர்மனை சுற்றி வட்ட வடிவமாக நின்றிருந்தனர்.
"இளவரசே! நம் கொட்டடியில் 5 பேர் எதிரிகளின் சித்ரவதை தாங்காமல் இறந்து விட்டனர். மக்களை காப்பாற்ற வேண்டிய நீங்கள் இறந்து போன ஓரு பெண்ணின் நினைவில் மூழ்கி உங்கள் கடமையை மறந்து விட்டீர்கள். நாளை நம்மில் எத்தனை பேர் சாகப்போகிறோம் என்று தெரியவில்லை." என்றான் அவர்களில் ஓருவன்.
" நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.? நான் சாகத் துணிந்து விட்டேன். உங்கள் அனைவரையும் தப்பிக்க வைத்துவிட்டு மரண தேவியை அணைத்து கொள்கிறேன்." என்றான் அபயவர்மன் வேதனையுடன் .
"மகேந்திரனின் வேண்டுகோளை நீங்கள் ஏற்காவிட்டால் நாம் யாரும் இங்கிருந்து உயிருடன் ேபாக முடியாது. குறைந்த பட்சம் நீங்கள் இங்கே அடைபட்டு கிடப்பது கடம்பத்திற்கு தெரிந்தாலாவது நமக்கு விடிவு காலம் பிறக்கும்." என்றான் இன்னொருவன்.
" அதற்கு இங்கிருந்து யாராவது உயிரோடு வெளியேற வேண்டுமே? இங்கிருந்து வெளியேற மரணத்தை தவிர வேறு வழியில்லை.”
"ஓரு கள்வனெல்லாம் சவால் விட்டு சிறையிலிருந்து தப்பி செல்லுமளவிற்கு கடம்பத்தின் நிலமை தாழ்ந்து போய்விட்டது”
"தாயகத்தின் பெருமையை கட்டி காப்பாற்ற வேண்டிய இளவரசரோ காதலில் மூழ்கி குடி மக்களை காக்கும் கடமையிலிருந்து தவறி பிதற்றி கொண்டிருக்கிறார்”
"போதும் நிறுத்துங்கள்.உங்களை காப்பாற்ற வேண்டியது என்னுடைய பொறுப்பு. அதற்கு நம்மில் யாராவது இங்கிருந்து தப்பித்து எல்லையோர மலை கிராமத்திற்கு செல்ல வேண்டும்.” என்றான் அபயவர்மன் கோபத்துடன் .
"எங்களில் ஓருவர் தப்பித்தாலும் நீங்கள் இங்கே பணயக் கைதியாக அடைபட்டு கிடப்பீர்கள். அது அனைத்து முயற்சிகளையும் முனை மழங்க செய்து விடும். நீங்கள் இங்கிருந்து தப்பி செல்வதே சரியானது.”
"காதல் எண்ணத்தில் மூழ்கி கிடந்த எனக்கு என் கடமையை நினைவுட்டி விட்டீர்கள். அதற்காக உங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் நண்பர்களே.! இனி நாம் இங்கிருந்து தப்பி செல்வதைப் பற்றி யோசிப்போம்." என்றான் அபயவர்மன்.
மற்றவர்களின் முகத்தில் மலர்ச்சி பரவியது.
" ஆனால் ஓரு விசயத்தை நான் நினைவு படுத்துகிறேன். இங்கிருந்து உங்களை நான் மீட்ட பின்பு என்னுடைய முடிவில் யாரும் தலையிடக் கூடாது" என்றான் அபயவர்மன்.
அனைவரும் ஓருவரையொருவர் பார்த்து கொண்டு தலையசைத்தனர்.
"இந்த வேலையை முடித்துவிட்டு உன்னிடம் வருகிறேன் பத்மாவதி " என்றான் கலக்கத்துடன் அபயவர்மன்
"பத்மாவதி “
"சொல்லுங்கள்.”
"அதோ மேற்கில் மறைகிறானே பகலவன். அவன் மறையும் போது வானத்திற்கு சிவப்பு வண்ணத்தை பூசி செவ்வானமாக்கிவிட்டு மறைகிறான். அதைப் பார்க்கும் போது எனக்கு உன்னுடைய சிவந்த கன்னம் தான் நினைவுக் கு வருகிறது.இனி நான் எப்போது இந்த செவ் வானத்தை கண்டாலும் என் மனம் உன்னைத்தான் நினைக்கும் “
"காதல் பேச்சில் நீங்கள் வல்லவர்தான். இல்லையென்றால் பன்றி வேட்டையாட வந்த நீங்கள் குறுகிய காலத்தில் கன்னி வேட்டையில் இறங்குவீர்களா?”
"அந்த வேட்டையில் நான் வென்று விட்டேன். இந்த கன்னி வேட்டையில் தான் நான் வென்றேனா இல்லையா என்று தெரியவில்லை.”
"கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு வரும் நான் சாமியை சந்திக்க செல்லாமல் இந்த ஆசாமியை சந்திக்க வரும் போதே தெரியவில்லையா? நீங்கள் கன்னி வேட்டையில் வெற்றி ஈட்டியது. “
"பூடகமாக பேசி என் பொறுமையை சோதிக்காதே பத்மாவதி .உன் பவள வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்.அத்தான் என்ற சத்தான சொல்லில் செத்தான் இந்த அபயவர்மன்.”
" நீங்கள் நாளைய கடம்பத்தின் அரசர். நானோ மலை சாதிப்பெண் .? நாம் இருவரும் எப்படி?”
"வாழ்க்கையில் ஒன்று சேர முடியும் என்று தானே கேட்க வருகிறாய்? என் விருப்பத்திற்கு என் தந்தை எப்போதும் தடை போட மாட்டார். உன் விசயத்தில் அப்படி ஏதாவது தடை வந்தாலும் அதை தகர்த்து உன் கையை பிடிப்பான் கடம்பத்தின் இளவரசன்”
"உங்களின் அந்தஸ்திற்கு நீங்கள் முல்லைவனத்தின் இளவரசியைத் தான் மணம் முடிக்க வேண்டும்”
“உன்னை விடவும் பேரழகியா அவள்?”
"என்னை விடவும் அவள் அழகாக இருந்தால் என்னை விட்டு சென்று விடுவீர்களா?”
' என் கண்களுக்கு எப்போதும் நீ பேரழகி தான். உன்னை விட வா அந்த ரத்ன மாலா பெரிய அழகியாக இருந்து விடப் போகிறாள்?”
"அவள் என்னை விடவும் அழகு மட்டும் தான். அவளது எத்துப் பற்களை வைத்து ஒரு விருந்திற்கே தேங்காய்களை சுரண்டி விடலாம்”
"அவ்வளவு கோரமாகவா அவள் இருக்கிறாள்?”
"இன்னமும் சொல்லவா? அவளைப் பற்றி.”
"இந்த இன்பகரமான நேரத்தில் அவளைப் பற்றி பேசி நம் நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும். எங்கே என் அருகில் வா”
பத்மாவதி அபயவர்மனை கட்டி அணைத்த போது அவனை யாரோ தட்டி எழுப்பினார்கள்.
கொட்டடியில் இருந்த கைதிகள் அபயவர்மனை சுற்றி வட்ட வடிவமாக நின்றிருந்தனர்.
"இளவரசே! நம் கொட்டடியில் 5 பேர் எதிரிகளின் சித்ரவதை தாங்காமல் இறந்து விட்டனர். மக்களை காப்பாற்ற வேண்டிய நீங்கள் இறந்து போன ஓரு பெண்ணின் நினைவில் மூழ்கி உங்கள் கடமையை மறந்து விட்டீர்கள். நாளை நம்மில் எத்தனை பேர் சாகப்போகிறோம் என்று தெரியவில்லை." என்றான் அவர்களில் ஓருவன்.
" நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.? நான் சாகத் துணிந்து விட்டேன். உங்கள் அனைவரையும் தப்பிக்க வைத்துவிட்டு மரண தேவியை அணைத்து கொள்கிறேன்." என்றான் அபயவர்மன் வேதனையுடன் .
"மகேந்திரனின் வேண்டுகோளை நீங்கள் ஏற்காவிட்டால் நாம் யாரும் இங்கிருந்து உயிருடன் ேபாக முடியாது. குறைந்த பட்சம் நீங்கள் இங்கே அடைபட்டு கிடப்பது கடம்பத்திற்கு தெரிந்தாலாவது நமக்கு விடிவு காலம் பிறக்கும்." என்றான் இன்னொருவன்.
" அதற்கு இங்கிருந்து யாராவது உயிரோடு வெளியேற வேண்டுமே? இங்கிருந்து வெளியேற மரணத்தை தவிர வேறு வழியில்லை.”
"ஓரு கள்வனெல்லாம் சவால் விட்டு சிறையிலிருந்து தப்பி செல்லுமளவிற்கு கடம்பத்தின் நிலமை தாழ்ந்து போய்விட்டது”
"தாயகத்தின் பெருமையை கட்டி காப்பாற்ற வேண்டிய இளவரசரோ காதலில் மூழ்கி குடி மக்களை காக்கும் கடமையிலிருந்து தவறி பிதற்றி கொண்டிருக்கிறார்”
"போதும் நிறுத்துங்கள்.உங்களை காப்பாற்ற வேண்டியது என்னுடைய பொறுப்பு. அதற்கு நம்மில் யாராவது இங்கிருந்து தப்பித்து எல்லையோர மலை கிராமத்திற்கு செல்ல வேண்டும்.” என்றான் அபயவர்மன் கோபத்துடன் .
"எங்களில் ஓருவர் தப்பித்தாலும் நீங்கள் இங்கே பணயக் கைதியாக அடைபட்டு கிடப்பீர்கள். அது அனைத்து முயற்சிகளையும் முனை மழங்க செய்து விடும். நீங்கள் இங்கிருந்து தப்பி செல்வதே சரியானது.”
"காதல் எண்ணத்தில் மூழ்கி கிடந்த எனக்கு என் கடமையை நினைவுட்டி விட்டீர்கள். அதற்காக உங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் நண்பர்களே.! இனி நாம் இங்கிருந்து தப்பி செல்வதைப் பற்றி யோசிப்போம்." என்றான் அபயவர்மன்.
மற்றவர்களின் முகத்தில் மலர்ச்சி பரவியது.
" ஆனால் ஓரு விசயத்தை நான் நினைவு படுத்துகிறேன். இங்கிருந்து உங்களை நான் மீட்ட பின்பு என்னுடைய முடிவில் யாரும் தலையிடக் கூடாது" என்றான் அபயவர்மன்.
அனைவரும் ஓருவரையொருவர் பார்த்து கொண்டு தலையசைத்தனர்.
"இந்த வேலையை முடித்துவிட்டு உன்னிடம் வருகிறேன் பத்மாவதி " என்றான் கலக்கத்துடன் அபயவர்மன்