- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 31
மகேந்திரன் அபயவர்மனை அழைத்து வர ஆளை அனுப்பிய பின்புமல்லன் பேச ஆரம்பித்தான்.
" மகேந்திரா!சொன்னாலும் புரியாது மண்ணாளும் கலை. நீ அரசியல் விவகாரங்களில் ஓருகத்து குட்டி. வாலிப முறுக்கிலும், இளமை துடிதுடிப்பிலும் நீ உன் மனம் போனபடி செயல்பட்டு கொண்டிருக்கிறாய். அது யாருக்கும் தெரியாது என்று வேறு நினைத்து கொண்டிருக்கிறாய். இளம் கன்று பயமறியாது என்பதை போல் நீ அபயவர்மனை சிறை செய்து வைத்திருக்கிறாய். உன் செயலால் இரு நாடுகளிடையே ஏற்படப் போகும் விளைவுகளை நீ அறியமாட்டாய். உன் தந்தைக்கு தேவையற்ற மன உளைச்சலை நீ ஏற்படுத்தி விட்டாய்”
"இதே அறிவுரைகள் அபயவர்மனுக்கும் வழக்கப்பட்டிருக்கலாமே?" என்றான் மகேந்திரன் கிண்டலாக .
" அவனுக்கும் அறிவுறைகள் வழங்கப்பட்டிருக்கும். அதை கேட்டு நடக்க அவனது மது பழக்கம் தடையாக இருந்திருக்கும் " என்றான் மல்லன்.
"இங்கே என்னால் அவன் சிறைபட்ட நாட்களிலிருந்து அந்த பழக்கத்தை அவன் மறந்து விட்டான்.”
" உன் காரியத்தால் நிகழ்ந்த ஓரே நன்மை அதுவாகத்தான் இருக்க முடியும்." என்றான் மல்லன்.
அதே நேரம் சீழ்க்கை ஒலி ஒன்று எழுந்தது.
"என்ன அது? வினோதமான சத்தம்?" என்றான் மல்லன்.
"கோட்டை கதவை திறப்பதற்கான சமிக்ஞை . பிணங்களை எடுத்து செல்லும் வண்டி கிளம்பி விட்டதென்று நினைக்கிறேன். பலம் வாய்ந்த அந்த கதவுகள் திறப்பதற்கும் வண்டி வெளியேறுவதற்கும் நேரம் சரியாக இருக்கும். அதை கணக்கீடு செய்து தான் இந்த சீழ்க்கை ஓலி முறையை ஏற்பாடு செய்திருக்கிறேன். “என்றான் மகேந்திரன்.
சில நொடிகளில் அதே சீழ்க்கை ஒலி இரண்டு முறை விட்டு விட்டு ஓலித்ததும் மகேந்திரன் பரபரப்படைந்தான்.
"ஏதோ வில்லங்கமாக நடைபெறுகிறது. இங்கேயே இருங்கள். விரைவில் வருகிறேன். என்ற மகேந்திரன் அறையை விட்டு அவசரமாக வெளியேறினான். அவனை மல்லன் பின் தொடர்ந்து வெளியே வந்தான்.
அதே நேரம் வண்டியில் உட்கார்ந்திருந்த ஆதித்தன் சீழ்க்கை ஓலியை கேட்டு எச்சரிக்கையடைந்தான். திறந்து கொண்டிருந்த கோட்டை கதவுகள் நேர் மாறாக மூட ஆயத்தமாவதை கண்டான். நடந்த சதி வேலை வெளியாகி விட்டதோ என்று நினைத்தவன் தன் பார்வையை கைதிகள் இருந்த கொட்டடியின் பக்கம் திருப்பினான். அங்கே வீரர்கள் பரபரப்புடன் உலாவுவதையும் வண்டியை கை நீட்டி பேசுவதையும் கவனித்தவன் தன் குட்டு வெளிப்பட்டு விட்டதென்ற முடிவுக்கு உடணடியாக வந்தான்.
தன் எதிர்புறம் வேல் கம்புடன் நின்று கொண்டிருந்த வீரன் குழப்பத்துடன் "இங்கே என்ன நடக்கிறது?ஏன் நம்மை தடுக்க நினைக்கிறார்கள்?" என்றான்.
"அது ஏனென்று எனக்குத் தெரியும் " என்ற ஆதித்தன் அவன் முகத்தில் இடி போன்ற குத்து ஒன்றை விட்டான். அவனது குத்தை எதிர்பாராத அந்த வீரன் வண்டியிலிருந்து சரிந்து விழுந்தான்." போதும் இளவரசே! நடித்தது. எழுந்திருங்கள். நம் வேலையை அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்." என்றான். அபயவர்மன் பிணக்குவியல்களை தள்ளி விட்டு விட்டு எழுந்தான். அதே நேரம் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனை பின்னால் இருந்து எட்டி உதைத்த ஆதித்தன் " நீ வண்டியை ஓட்டும் வேகம் போதவில்லை நண்பனே! நீ நிலத்தில் சற்று நேரம் இளைப்பாறு. நான் வண்டியை ஓட்டுகிறேன்." என்றபடி அவனை கீழே தள்ளி விட்டான். அதே வேகத்தில் அவனது இடத்தில் உட்கார்ந்த ஆதித்தன் குதிரைகளை அடித்து விரட்ட துவங்கினான்.
கண் எதிரே கோட்டையின் கதவுகள் மூடப்படுவதையும் இரு கதவுகளுக்கு இடையிலான இடைவெளி குறுகலாவதையும் பார்த்த ஆதித்தன் "இளவரசே! ஈட்டியை குறி தவறாமல் வீசுவீர்களா?" என்றான்.
"அதில் நான் வித்தகன் " என்றான் அபயவர்மன்
"உங்கள் வித்தையை காட்ட அருமையான வாய்ப்பு .அதோ வண்டியில் உள்ள இரண்டு ஈட்டிகளை எடுத்து கொள்ளுங்கள். கோட்டை கதவுகள் இரண்டும் இணையும் நெற்றி பகுதி நமக்கு எதிராக உள்ளது. கதவுகளின் மேல் நெற்றியை நோக்கி இந்த இரண்டு ஈட்டிகளை எரியுங்கள். கதவுகளை மூட அதன் நெற்றியில் உள்ள இந்த ஈட்டிகள் தடையாக இருக்க வேண்டும். நான் சொல்வது புரிகிறதா?" என்றான் ஆதித்தன்
"நன்றாகவே புரிந்தது. இப்போது பார் என் வித்தையை " என்ற அபயவர்மன் ஆதித்தன் கூறியது போலவே இரண்டு ஈட்டிகளை இரு கதவின் நெற்றி பகுதிகளில் எய்து நிறுத்தினான்.
"அட்டகாசம்! நான் நினைத்தது போலவே செய்து விட்டீர்கள்”
வண்டி கோட்டை கதவை நெருங்கிய போது கதவுகளின் இடைவெளி குறுகலாகி கதவின் மேலிருந்த ஈட்டிகள் தடையாக நின்றன. கிடைத்த குறுகிய இடைவெளியில் குதிரைகள் வெளியேறி விட வண்டி இருகதவுகளிலும் முட்டிக்கொண்டு வெளியேற வழியின்றி நின்றது.
நடப்பதை பார்த்து கொண்டிருந்த மகேந்திரன் " எதிரிகள் வசமாக சிக்கி கொண்டு விட்டார்கள்" என்றான்.
அபயவர்மன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.
மகேந்திரன் அபயவர்மனை அழைத்து வர ஆளை அனுப்பிய பின்புமல்லன் பேச ஆரம்பித்தான்.
" மகேந்திரா!சொன்னாலும் புரியாது மண்ணாளும் கலை. நீ அரசியல் விவகாரங்களில் ஓருகத்து குட்டி. வாலிப முறுக்கிலும், இளமை துடிதுடிப்பிலும் நீ உன் மனம் போனபடி செயல்பட்டு கொண்டிருக்கிறாய். அது யாருக்கும் தெரியாது என்று வேறு நினைத்து கொண்டிருக்கிறாய். இளம் கன்று பயமறியாது என்பதை போல் நீ அபயவர்மனை சிறை செய்து வைத்திருக்கிறாய். உன் செயலால் இரு நாடுகளிடையே ஏற்படப் போகும் விளைவுகளை நீ அறியமாட்டாய். உன் தந்தைக்கு தேவையற்ற மன உளைச்சலை நீ ஏற்படுத்தி விட்டாய்”
"இதே அறிவுரைகள் அபயவர்மனுக்கும் வழக்கப்பட்டிருக்கலாமே?" என்றான் மகேந்திரன் கிண்டலாக .
" அவனுக்கும் அறிவுறைகள் வழங்கப்பட்டிருக்கும். அதை கேட்டு நடக்க அவனது மது பழக்கம் தடையாக இருந்திருக்கும் " என்றான் மல்லன்.
"இங்கே என்னால் அவன் சிறைபட்ட நாட்களிலிருந்து அந்த பழக்கத்தை அவன் மறந்து விட்டான்.”
" உன் காரியத்தால் நிகழ்ந்த ஓரே நன்மை அதுவாகத்தான் இருக்க முடியும்." என்றான் மல்லன்.
அதே நேரம் சீழ்க்கை ஒலி ஒன்று எழுந்தது.
"என்ன அது? வினோதமான சத்தம்?" என்றான் மல்லன்.
"கோட்டை கதவை திறப்பதற்கான சமிக்ஞை . பிணங்களை எடுத்து செல்லும் வண்டி கிளம்பி விட்டதென்று நினைக்கிறேன். பலம் வாய்ந்த அந்த கதவுகள் திறப்பதற்கும் வண்டி வெளியேறுவதற்கும் நேரம் சரியாக இருக்கும். அதை கணக்கீடு செய்து தான் இந்த சீழ்க்கை ஓலி முறையை ஏற்பாடு செய்திருக்கிறேன். “என்றான் மகேந்திரன்.
சில நொடிகளில் அதே சீழ்க்கை ஒலி இரண்டு முறை விட்டு விட்டு ஓலித்ததும் மகேந்திரன் பரபரப்படைந்தான்.
"ஏதோ வில்லங்கமாக நடைபெறுகிறது. இங்கேயே இருங்கள். விரைவில் வருகிறேன். என்ற மகேந்திரன் அறையை விட்டு அவசரமாக வெளியேறினான். அவனை மல்லன் பின் தொடர்ந்து வெளியே வந்தான்.
அதே நேரம் வண்டியில் உட்கார்ந்திருந்த ஆதித்தன் சீழ்க்கை ஓலியை கேட்டு எச்சரிக்கையடைந்தான். திறந்து கொண்டிருந்த கோட்டை கதவுகள் நேர் மாறாக மூட ஆயத்தமாவதை கண்டான். நடந்த சதி வேலை வெளியாகி விட்டதோ என்று நினைத்தவன் தன் பார்வையை கைதிகள் இருந்த கொட்டடியின் பக்கம் திருப்பினான். அங்கே வீரர்கள் பரபரப்புடன் உலாவுவதையும் வண்டியை கை நீட்டி பேசுவதையும் கவனித்தவன் தன் குட்டு வெளிப்பட்டு விட்டதென்ற முடிவுக்கு உடணடியாக வந்தான்.
தன் எதிர்புறம் வேல் கம்புடன் நின்று கொண்டிருந்த வீரன் குழப்பத்துடன் "இங்கே என்ன நடக்கிறது?ஏன் நம்மை தடுக்க நினைக்கிறார்கள்?" என்றான்.
"அது ஏனென்று எனக்குத் தெரியும் " என்ற ஆதித்தன் அவன் முகத்தில் இடி போன்ற குத்து ஒன்றை விட்டான். அவனது குத்தை எதிர்பாராத அந்த வீரன் வண்டியிலிருந்து சரிந்து விழுந்தான்." போதும் இளவரசே! நடித்தது. எழுந்திருங்கள். நம் வேலையை அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்." என்றான். அபயவர்மன் பிணக்குவியல்களை தள்ளி விட்டு விட்டு எழுந்தான். அதே நேரம் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனை பின்னால் இருந்து எட்டி உதைத்த ஆதித்தன் " நீ வண்டியை ஓட்டும் வேகம் போதவில்லை நண்பனே! நீ நிலத்தில் சற்று நேரம் இளைப்பாறு. நான் வண்டியை ஓட்டுகிறேன்." என்றபடி அவனை கீழே தள்ளி விட்டான். அதே வேகத்தில் அவனது இடத்தில் உட்கார்ந்த ஆதித்தன் குதிரைகளை அடித்து விரட்ட துவங்கினான்.
கண் எதிரே கோட்டையின் கதவுகள் மூடப்படுவதையும் இரு கதவுகளுக்கு இடையிலான இடைவெளி குறுகலாவதையும் பார்த்த ஆதித்தன் "இளவரசே! ஈட்டியை குறி தவறாமல் வீசுவீர்களா?" என்றான்.
"அதில் நான் வித்தகன் " என்றான் அபயவர்மன்
"உங்கள் வித்தையை காட்ட அருமையான வாய்ப்பு .அதோ வண்டியில் உள்ள இரண்டு ஈட்டிகளை எடுத்து கொள்ளுங்கள். கோட்டை கதவுகள் இரண்டும் இணையும் நெற்றி பகுதி நமக்கு எதிராக உள்ளது. கதவுகளின் மேல் நெற்றியை நோக்கி இந்த இரண்டு ஈட்டிகளை எரியுங்கள். கதவுகளை மூட அதன் நெற்றியில் உள்ள இந்த ஈட்டிகள் தடையாக இருக்க வேண்டும். நான் சொல்வது புரிகிறதா?" என்றான் ஆதித்தன்
"நன்றாகவே புரிந்தது. இப்போது பார் என் வித்தையை " என்ற அபயவர்மன் ஆதித்தன் கூறியது போலவே இரண்டு ஈட்டிகளை இரு கதவின் நெற்றி பகுதிகளில் எய்து நிறுத்தினான்.
"அட்டகாசம்! நான் நினைத்தது போலவே செய்து விட்டீர்கள்”
வண்டி கோட்டை கதவை நெருங்கிய போது கதவுகளின் இடைவெளி குறுகலாகி கதவின் மேலிருந்த ஈட்டிகள் தடையாக நின்றன. கிடைத்த குறுகிய இடைவெளியில் குதிரைகள் வெளியேறி விட வண்டி இருகதவுகளிலும் முட்டிக்கொண்டு வெளியேற வழியின்றி நின்றது.
நடப்பதை பார்த்து கொண்டிருந்த மகேந்திரன் " எதிரிகள் வசமாக சிக்கி கொண்டு விட்டார்கள்" என்றான்.
அபயவர்மன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான்.