Nirmala Krishnan
Saha Writer
- Messages
- 76
- Reaction score
- 13
- Points
- 6
அத்தியாயம் 46 :
ஒருவழியாக...பார்ட்டி நடக்கும் நாளும் அழகாக விடிந்தது.அன்று....'ஆதித்யன் க்ரூப் ஆப் கம்பெனீஸின்' வேலையாட்கள் அனைவருக்கும் அரைநாள் மட்டுமே அலுவலகம்.மதியத்திற்கு மேல் அனைவரும் வீட்டிற்குச் சென்று விட்டு....மாலை நேராக பார்ட்டி நடக்கும் ஹோட்டலுக்கு வந்து விடுமாறு கூறப்பட்டிருந்தது.
மதியமானதும்....நித்திலாவை அவளது ஹாஸ்ட்டலின் முன் இறக்கி விட்ட ஆதித்யன்,"பேபி....!நீ ஈவ்னிங் ரெடியாகிட்டு வெயிட் பண்ணு.....!நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.....!",அவன் கூறியதுதான் தாமதம்....இவள் அவசர அவசரமாக மறுத்தாள்.
"இல்ல....!வேண்டாம்....!யாராவது பார்த்தால் தப்பா நினைப்பாங்க.....!நானே வந்திடறேன்.....!",
பொறுமையற்ற பெருமூச்சுடன் அவளைப் பார்த்தவன்,"கமான் நித்திலா.....!யாரவது பார்த்தாதான் என்ன.....?ஈவ்னிங் வர்றேன்.....!ரெடியா இரு......!",என்றவன் அதற்கு மேல் தமாதியாமல் காரைக் கிளப்பி சென்று விட்டான்.
'ஹ்ம்ம்....!எதையும் மறுக்க முடியாது....!பிடிச்சா...முரட்டு பிடிதான்....!',செல்லமாக ஆதித்யனை திட்டியபடியே உள்ளே நுழைத்தாள் நித்திலா.
அன்று மாலை.....
ஆங்காங்கு வெள்ளை நிற கற்களும்....முத்துக்களும் பதிக்கப்பட்ட மிக அழகிய வெள்ளை நிற பேன்சி புடவையில்.....தேவதையை விட அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.அந்தப் புடவைக்குத் தோதாக வடிவமைக்கப்பட்டிருந்த அழகிய முத்துமாலை ஒன்று அவள் கழுத்தை அலங்கரித்திருந்தது.சிறிதாக ஒற்றை முத்து தொங்கும் காதணியை காதில் அணிந்தவள்....அதே போல் முத்துக்கள் பதித்த வளையல்களை தன் இரு கைகளிலும் அணிந்து கொண்டாள்.
இடுப்பு வரை நீண்டிருந்த கருங் கூந்தலை கர்லிங் செய்து அதன் உயரத்தைக் குறைத்தவள்....வகிடு எடுக்காமல் மேலே மட்டும் தலை வாரி.....மீதிக் கூந்தலை முன் பக்கமாக தோளில் வழியுமாறு தொங்க விட்டாள்.
இயற்கையாய் வளைந்திருந்த புருவங்களுக்கு மத்தியில்....சிறு வெள்ளைக் கல் பொட்டை ஒட்ட வைத்தவள்....திருப்தியாய் தன்னைப் பார்த்துக் கண்ணாடியில் புன்னகைத்துக் கொண்டாள்.
'ம்....நாம ரெடி.....!ஆது வந்தால் கிளம்ப வேண்டியதுதான்.....!',அவள் மனதிற்குள் கூறி முடிக்கவும்....அவளது மொபைல் அடிக்கவும் சரியாய் இருந்தது.ஆதித்யன்தான் கீழே வருமாறு அழைத்திருந்தான்.வர்ஷினியிடம் சொல்லிக் கொண்டு கீழே இறங்கியவள்....அங்கு வாசலில்....காரின் மேல் சாய்ந்தபடி நின்றிருந்த ஆதித்யனைப் பார்த்து இமைக்கவும் மறந்தாள்.
பாலாடை நிறத்திலான கோட் சூட்டில்....முன்னுச்சி முடி கலைய....வசீகரமான புன்னகையுடன்....இரு கைகளையும் கட்டிக் கொண்டு....ஒற்றைக் காலை மடித்து காரின் மேல் சாய்ந்தபடி நின்றிருந்தவனைப் பார்த்தவளுக்கு ஆசை ஆசையாய் வந்தது.
அப்படியே ஓடிச் சென்று அவனது கலைந்த தலைமுடியை இன்னும் அதிகமாக கலைத்து விட்டு....அவன் கூர்மையான மூக்கைப் பிடித்துத் தன் உயரத்திற்கு இழுத்து....இழுத்த வேகத்தில் அவன் நெற்றியில் இதழ் பதிக்க வேண்டும் என்பது போல் தாபம் எழுந்தது.
அவனைப் பார்த்து அவள் இமைக்க மறந்தாள் என்றால்.....வெள்ளை நிற தேவதையாய் தன் முன்னால் நின்றிருந்தவளைப் பார்த்து....அவன்....மூச்சு விடவும் மறந்தான்.அதிலும்....அவள் பார்த்த அந்த ஆளை விழுங்கும் பார்வை....அவனை கிறங்கடிக்கச் செய்தது.
"என்ன டி.....?அப்படியே கடிச்சு திங்கற மாதிரி பார்க்கிற......?",தன் முன்னால் நின்றிருந்தவளைப் பார்வையால் அள்ளிப் பருகியபடி அவன் கேட்க..
"ம்....!கடிச்சு திங்கணும் போலத்தான் இருக்கு.....!",அவனைப் பார்வையால் விழுங்கியபடியே கூறினாள் அவள்.இதுநாள் வரை....அவள்....அவனை இப்படியொரு பார்வை பார்த்ததில்லை.அவன்தான்....அவளை கண்டபடி மேய்வான்....!இன்று....அந்தப் பார்வையை அவள் பார்த்து வைத்ததில்....அவன்....மது அருந்திய வண்டானான்....!அதிலும்....அவள் பேசிய பேச்சு அவனை கிறங்கடிக்கச் செய்ய,
"ஏய்ய்.....!",என்றபடி அவளை நெருங்கியிருந்தான்.பிறகு....தாங்கள் இருக்கும் இடத்தை உணர்ந்தவனாய்....சிறு பெரு மூச்சுடன் காரில் ஏறி அமர்ந்தான்.
மெலிதான புன்னகையுடன் அவனுக்கு அருகில் முன்பக்கமாய் ஏறி அமர்ந்தவள்....அப்பொழுதும் அவனைப் பார்த்து....அதே பார்வையை வீசி வைக்க...அவன்....காரை கிளப்ப மறந்தவனாய்...அவள் பக்கம் நகர்ந்து அமர்ந்தான்.
"கொல்றேடி.....!",அவன் முணுமுணுக்க..
"நீதான் டா மயக்கற.....!வசீகரா......!அழகான ராட்சஸா.....!",,அவள் குரலில் அப்படியொரு மயக்கம்.
"ஏய்....!இப்படியெல்லாம் பேசாதே டி.....!அப்புறம்....ஐ லூஸ் மை கண்ட்ரோல்......!",வேக மூச்சுகளை எடுத்து விட்டபடி ஒரு மாதிரிக் குரலில் அவன் கூறவும்தான்....அவனை மிகவும் தூண்டி விட்டு விட்டோம் என்பதே அவளுக்கு உரைத்தது.
சட்டென்று அவனை விட்டு விலகி அமர்ந்தவள்,"ஹலோ பாஸ்.....!முதல்ல வண்டியை எடுங்க.....!நாம இன்னும் ஹாஸ்டல் வாசலிலேயேதான் நிற்கிறோம்.....!போற வர்றவங்க எல்லாம் நம்மளைத்தான் ஒரு மாதிரி பார்த்துட்டு போறாங்க....!",அவள் கேலியாய் கூறவும்....தன்னை சுதாரித்துக் கொண்டவன்.....மெலிதாக விசிலடித்தபடி காரைக் கிளப்பினான்.
கைகள் அதன் பாட்டிற்கு காரை ஓட்டினாலும்...அவன் உதடுகள் ஒரு பாடலை விசிலடித்துக் கொண்டே வந்தன....!கூடவே....அவனது விஷமக் கண்கள் அவளை ஒரு மார்க்கமாய் வேறு பார்த்து வைத்தன.....!
'என்ன பாட்டு பாடறான்.....?',நித்திலாவின் கவனம் முழுவதும்.....அவன் விசிலடிக்கும் பாடலின் மேல்தான் இருந்தது.என்னதான் யோசித்துப் பார்த்தும்....அவளால் அந்தப் பாடலைக் கண்டுபிடிக்க முடியாமல் போகவும்,
"என்ன பாட்டு பாடறீங்க....?",என்று அவனிடமே கேட்டு விட்டாள்.
அப்பொழுதும் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து வைத்தவன்....சிறு சிரிப்போடு....அதே பாடல் வரிகளை சீழ்க்கை ஒலியால் முணுமுணுக்க....
"ம்ப்ச்.....!என்ன பாட்டுன்னு சொல்லுங்க.....!",மெல்ல சிணுங்கினாள் அவள்.
"பாடிக் காட்டட்டுமா.....?",அவன் கண்ணடிக்க,
"ம்....!பாடுங்க.....!பாடுங்க.....!",அந்தக் கள்வனின் கள்ளத்தனத்தை அறியாதவளாய்....ஆசை ஆசையாய் தலையாட்டினாள் அந்தப் பாவை.
வசீகரப் புன்னகையுடன் அந்த வசீகரனும் பாட ஆரம்பித்தான்.
"இருளைப் பின்னிய குழலோ....?
இரு விழிகள் நிலவின் நிழலோ....?
பொன் உதடுகள் சிறு வரியில்
என் உயிரைப் புதைப்பாளோ.....?",
என்று பாடியவனின் விழிகள்....அவளது இதழ்களையே வண்டாய் மாறி மொய்த்தது.அவனது பார்வையில்....அவள் தனது கீழுதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டாள்.
அவன் மேலும் பாட ஆரம்பித்தான்.
"ரவிவர்மன் தூரிகை எழுத்தோ....?இல்லை....
சங்கில் ஊறிய கழுத்தோ.....?
அதில் ஒற்றை வியர்வைத் துளியாய்
நான் உருண்டிட மாட்டேனோ....?",
காருக்குள் நிலவிய அந்த ஏ.சி குளிரையும் தாண்டி அவள் முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன...!அதிலும்....அவள் நெற்றியில் உதித்த ஒற்றை வியர்வைத் துளி ஒன்று....கடகடவென்று ஓடி வந்து....அவளது கழுத்துச் சரிவில் உருண்டோடி மறைய....அவனது பார்வையும் அந்த வியர்வைத் துளியில் பின்னாலேயே பயணித்தது.அவனது பார்வையின் வேகத்தைத் தாங்காமல்...அவளது இதழ்கள்....அவளது பற்களுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது....!
"பூமி கொண்ட பூவையெல்லாம்
இரு பந்தாய் செய்தது யார் செயலோ....?
சின்ன ஓவியச் சிற்றிடையோ....
அவள் சேலை கட்டிய சிறு புயலோ....?",
இப்பொழுது....அவன் பார்வை....சிறிதும் வெட்கமில்லாமல்...அவன் பாடிய பாடல் வரிகள் உணர்த்திய இடங்களை மேய....அவள் தாள மாட்டாதவளாய்,"போ....போதும்.....!",என்று முணுமுணுத்தாள்.
"ஏன்.....?",அவன்தான் வெட்கங் கெட்டுப் போய்....அவளைப் பார்வையால் மேய்ந்தபடி....சிறிதும் கூச்சமில்லாமல் 'ஏன்....?' என்ற கேள்வியைக் கேட்டு வைக்கிறான் என்றால்....பாவையவளாலும் வெட்கங் கெட்டுப் போய் 'ஏன்....?' என்ற கேள்விக்கான காரணத்தை கூற முடியுமா.....?அவள் மௌனம் சாதித்தாள்.
"அடுத்த வரி பாடறேன்.....கேளு.....!",என்றவன்,
"என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள்....அவை....
மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்....!",
அவன் பாடிக் கொண்டே போக,"ஹைய்யோ.....!போதும்....!உங்க பாட்டை நிறுத்தறீங்களா....?",அவள் முகம் செம்பருத்தி பூவாய் சிவந்திருந்தது.முகம் சிவக்க....தடுமாற்றத்துடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனின் இதழ்களில் ரசனையான புன்னகை ஒன்று வந்தமர்ந்தது....!
"எப்படி.....?என்னுடைய பாட்டு....?",அவன் புருவம் உயர்த்த..
"பாட்டை மட்டுமா டா நீ பாடின.....?ரௌடி.....!காதல் ரௌடி.....!அங்கே இங்கேன்னு அலைபாயற இந்தக் கண்ணை அப்படியே நோண்டனும்....!",செல்லமாக அவள்....அவனைத் திட்ட...
"ஹா...ஹா....!என் கண்ணு என்ன பேபி பண்ணுது.....?அது பாட்டுக்கு....அதுக்குப் பிடிச்சதை பார்க்குது....!"உல்லாசமாய் அவன் கூற...
"ச்சீய்....!பொறுக்கி....!வாயை மூடு டா....!",விளையாட்டாய் அவன் காதைப் பிடித்துத் திருகினாள் அவள்.இப்படியாக....சீண்டலுமாய்....மோகமுமாய் அவர்கள் பார்ட்டி நடக்கும் ஹாலிற்கு வந்து சேர்ந்தனர்.இவர்கள் சற்று நேரமே வந்திருந்ததால்....அவ்வளவாக யாரும் வந்திருக்கவில்லை.இவர்கள் இருவரும் ஒரே காரில் வந்து இறங்கியதை...அங்கிருந்த சில நபர்கள் கவனித்தாலும்....M.D - செக்ரெட்டரி என்ற எண்ணத்தில்தான் ஆதித்யனையும் நித்திலாவையும் கவனித்தனர்.
நேரமாக ஆக....எம்ப்ளாயிஸ் அனைவரும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.அந்தப் பெரிய ஹாலை...வெள்ளையும் இள ரோஜா வண்ண பலூன்களும்....திரைச்சீலைகளும் அலங்கரித்திருக்க....ஆங்காங்கு அனைவரும் குழுவாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
நேர்த்தியாக சீருடை அணிந்திருந்த சர்வர்கள்....கையில் பழச்சாறும்....உயர் ரக மது வகைகளும் அடங்கிய தட்டை ஏந்திக் கொண்டு....வந்திருப்பவர்களின் விருப்பத்திற்கு தகுந்தவாறு வழங்கிக் கொண்டிருந்தனர்.மெல்லிய சிரிப்பொலிகளும்...மனதை மயக்கும் மென்மையான இசையும் அந்த ஹாலை நிறைத்திருந்தன.
நித்திலாவும் சுமித்ராவுடன் நின்றபடி....தங்களுடன் வேலை செய்யும் சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.ஆதித்யன்....அவனுக்கான நண்பர்களின் வட்டாரத்தோடு ஐக்கியமாகியிருந்தான்.
தங்க நிறத்திலான ஷிபான் சில்க்கில்....தங்கத் தாமரையாய் ஜொலித்துக் கொண்டிருந்த சுமித்ராவை....ஆதித்யன் அருகில் தங்களது நண்பர்களுடன் நின்றிருந்த கௌதமின் விழிகள் அவ்வப்போது ரசனையுடன் வருடிக் கொண்டிருந்தன....!சுமித்ராவின் விழிகளும்...தன்னவனின் பார்வைக் கணைகளை சந்தித்து...அவ்வப்போது அதை நாணத்துடன் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தாள்....!
"ஹலோ லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்.....!",துறுதுறுப்பான ஒரு இளைஞனின் கலகலப்பான பேச்சில் அனைவரும் தங்களது பேச்சை நிறுத்தி ஆர்வத்துடன் அவனை நோக்கினர்.
"பார்ட்டின்னு இருந்தால் டான்ஸ்...மியூசிக் இருக்க வேண்டாமா....?அப்போத்தானே இடம் களைகட்டும்....!கமான் கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ்....!திஸ் ஃப்ளோர் இஸ் யுவர்ஸ்....!கமான்....!உங்க அழகான நடனத் திறமைகளை காட்டுங்க.....!",அவன் கூறி முடிக்கவும்....ஆரவாரமான கரகோஷம் ஒன்று எழுந்து அடங்கியது.
"பூக்களே சற்று ஓய்வெடுங்கள்....!
அவள் வந்து விட்டாள்....!",
பிண்ணனியில் இரைச்சலில்லாத மென்மையான பாடல் ஒலிக்க....பெண்கள் குழு ஒன்று ஆர்வத்துடன் முன்னால் வந்து....அட்டகாசமாய் நடனமாட ஆரம்பித்தனர்.அந்த மெல்லிய இசைக்குத் தகுந்தவாறு....அந்தப் பெண்கள் ஆடிய நடனம் அங்கிருந்த அனைவரையும் ரசிக்க வைத்தது.
அவர்கள் நடனமாடிக் கொண்டிருக்கும் போது...நித்திலா....ஓரக் கண்ணால் ஆதித்யனைப் பார்க்க....அவளது பார்வையை விடாமல் தாங்கிப் பிடித்தவன்....ஒற்றை புருவத்தை மட்டும் 'என்ன....?' என்பது போல் உயர்த்தி....உதட்டைக் குவித்து ஒரு முத்தத்தை அவளை நோக்கி பறக்க விட....அவனது செய்கையில் விதிர்த்துப் போனவள்....'யாரேனும் பார்த்து விட்டார்களா...?',என்று அவசர அவசரமாக சுற்றும் முற்றும் பார்க்க....அனைவரும் அந்தப் பெண்களின் நடனத்தில் மூழ்கியிருந்தனர்.
"ஹப்பாடா......!",என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி...போலியான கண்டிப்புடன் அவள்....அவனைப் பார்க்க....அந்த மாயக் கண்ணனோ...தன் நண்பர்களுடன் எதையோ சிரித்துப் பேசிக் கொண்டே....இவளைப் பார்த்து வசீகரமாய் கண்ணடித்து வைத்தான்.
'ஹைய்யோ.....!',என்ற பதட்டத்துடன் மீண்டும் சுற்றும் முற்றும் தன் பார்வையை சுழல விட்டாள் நித்திலா.
'யாரும் பார்க்கலை.....!',என்றபடி ஆதித்யன் அவளைப் பார்த்து உதட்டசைக்க,'ராட்சஸா....!அழகிய ராட்சஸா.....!',என்று முணுமுணுத்தவள்....தன் அருகில் நின்றிருந்த தோழி எதையோ கேட்கவும்....அவனைப் பார்த்து உதட்டை சுழித்தபடி திரும்பிக் கொண்டாள்.
அவளது உதட்டு சுழிப்பில் சிக்கி சிதறிக் கொண்டிருந்த மனதை....ஒருவழியாக மீட்டு...நடனத்தில் பார்வையை பதித்தான் ஆதித்யன்.அந்தப் பாடல் முடிந்து....அடுத்த பாடல் ஒலிபரப்பாகியது.
"லைஃப்புல ஃவைப் வந்துட்டா
டைட்டாதான் இருக்கணும்.....!
வெயிட்டான பொண்ணை பார்த்தாலும்
ரைட்டாத்தான் நடக்கணும்....!",
இந்தப் பாடலுக்கு...கல்யாணமான கணவன்மார்கள் குழு ஒன்று ஆர்வத்துடன் முன்னே வந்து நடனமாடி....தங்களது மனைவிமார்களின் ஆசைப் பார்வையை வாங்கிக் கட்டிக் கொண்டது.
பேரர் ஒருவர்...மது வகைகள் அடங்கிய தட்டை...ஆதித்யனின் நண்பர்கள் வட்டாரத்தில் வந்து நீட்ட....ஆசையுடன் அதை எடுக்கப் போன ஆதித்யனின் விழிகள் ஒரு கணம் தயங்கி நித்திலாவை நோக்கியது.அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'வேண்டாம்....!',அவள் தலையசைக்க...அவன் முகம் காற்று போன பலூனாய் கூம்பிப் போனது.அவனது நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு கிளாஸை கையில் எடுத்துக் கொண்டு..."உனக்கு வேண்டாமா....?",என்றபடி ஆதித்யனைப் பார்க்க....அவனோ...."ம்....வேண்டாம்....!ஆமாம்....!",என்று தடுமாறிக் கொண்டிருந்தான்.அவனது பார்வை நித்திலாவிடம்தான் இருந்தது.
அவள் என்ன நினைத்தாளோ....தெரியவில்லை....!அவள் தன் கண்ணசைவிலேயே,'எடுத்துகோங்க....!பட்....லிமிட் தான்.....!',என்று கூற...அவன் முகம் மலர்ந்து ஒரு கிளாஸை எடுத்துக் கொண்டான்.
இவர்கள் நடத்தும் நாடகத்தை சுமித்ரா....ஒரு கள்ளச் சிரிப்புடன் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.அவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயத்தை....கெளதம் அவளிடம் கூறியிருந்தாள்.அன்றே...."ஏன் டி என்கிட்ட சொல்லல....?",என்று சண்டைக்கு வந்த சுமித்ராவை....பல காரணங்கள் கூறி....சில பல 'சாரி...' கேட்டு அவளை அமைதியாகியிருந்தாள் நித்திலா.
இவர்களது விளையாட்டில்....சுமித்ராவின் பார்வை தன்னிச்சையாய் உயர்ந்து தன்னவனை நோக்க....அவள் பார்வையை கண்டு கொண்டவனின் முகம் காதலால் மலர்ந்தது.
'உங்களுக்கு வேண்டாமா....?',சுமித்ரா மது வகைகளை சுட்டிக் காட்டி வினவ..
ஒரு கணம் அவளையே இமைக்காது பார்த்தவன்...'எனக்கு இந்த மது வேண்டாம்....!வேற ஒண்ணுதான் வேணும்....!',என்றவனின் பார்வை அவளது சிவந்த இதழ்களில் நிலைத்து....பிறகு....தன் ஆள்காட்டி விரலால் தனது உதடுகளைத் தொட்டுக் காண்பிக்க..
இப்பொழுது,'அடியாத்தி....!',என்ற பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்ப்பது சுமித்ராவின் முறையாயிற்று.
'இங்கே வா....!',கெளதம் உதட்டசைவில் அவளை அழைக்க...
'ம்ஹீம்....!',தலையை ஆட்டி மறுத்தாள் அவள்.
'வா டி....!',அவன் மீண்டும் பிடிவாதமாய் அழைக்க..
'ம்ஹீம்....!',இப்பொழுது அவளது தலையாட்டலின் வேகம் குறைந்திருந்தது.
'ப்ச்...!வாடின்னா.....!' இம்முறை அவனது முகம் சற்று கோபத்தைக் காட்டியது.
'எல்லாரும் இருக்காங்க....!',அவள் சுற்றும் முற்றும் பார்க்க..
'அப்ப....வெளியில இருக்கிற கார்டனுக்கு வா.....!',அவன் கண்ணசைவிலேயே கட்டளையிட்டு விட்டு வெளியேறினான்.
'இப்போத்தான் நம்ம மேல இருக்கிற கோபம் குறைஞ்சிருக்கு....!போகலைன்னா....மறுபடியும் மூக்குக்கு மேல கோபம் வந்திடும்.....!',மனதிற்குள் எண்ணியவள்...நித்திலாவிடம் 'ரெஸ்ட் ரூம்...' என்று கூறிவிட்டு வெளியேறினாள்.
பசுமைப் புல்வெளி போர்த்தியிருந்த தோட்டத்தில் யாரும் இல்லை.சுற்றும் முற்றும் பார்த்தபடி வந்து கொண்டிருந்த சுமித்ராவின் பின்னால் பூனை போல் பதுங்கி பதுங்கி வந்தவன்....பின்னாலிருந்தபடியே தன் இரு கைகளாலும் அவள் இடையைப் பற்றி உயரத் தூக்க..
"ஹைய்யோ....!",கால் கொலுசு சப்தமிட மெலிதாக கூச்சலிட்டாள் அவள்.அவளுக்குத் தெரியும்....அவன் தான் என்று....!
"என்ன இது....?கீழே இறக்கி விடுங்க.....!யாராவது பார்த்திட போறாங்க....!",கால்களை ஆட்டியபடி மறுத்தவளை அலேக்காக தூக்கிச் சென்றவன்....இருளின் நிழல் படிந்திருந்த ஒரு மரமல்லி மரத்தின் கீழ் சென்றுதான் இறக்கி விட்டான்.
"இப்படியா பண்ணுவீங்க.....?",அவன் தன்னை தூக்கியதால் இடைப்பகுதியில் நெகிழ்ந்திருந்த புடவையை சரி செய்தபடியே அவள் சிணுங்க...
புடவையை சரி செய்ய விடாமல் அவளைத் தடுத்தவன்....அவளது வெற்று இடையில் தன் கரங்களை அழுத்தமாகப் பதித்து....அவளைத் தன்னை நோக்கி இழுத்தான்.
அவள் கழுத்தில் முகம் புதைத்து...அவளை வாசம் பிடித்தவன்,"ம்ஹா....!எவ்வளவு நாள் ஆச்சு டி....!இந்த கொஞ்ச நாளா கோபம்...பிரச்சனை....டென்க்ஷன்னே ஓடிடுச்சு....!",கழுத்தில் முகம் புதைத்தபடியே அவன் பேச....
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த அவனுடைய நெருக்கத்தில் தன்னை மறந்தாள் அவள்.
"இந்தப் புடவையில ரொம்ப அழகா இருக்க டி ராட்சசி....!",என்றவனின் கரங்கள்...அவளது வெற்று இடையில் ஊர்ந்தன.
"ஊஹீம்.....!",என்றபடி புடவையை இழுத்து இடையை மறைக்க முயன்றாள் அவள்.
"ப்ச்....!",சலித்தபடி அவள் கையைத் தட்டி விட்டவன்,"ஹனி....!எனக்கு இப்பவே ஹனி வேணும்.....!",அவனது வார்த்தைகள் பிதற்றலுடன் வெளி வந்தன.அவனது உதடுகளோ....அவளது இதழ்களை நோக்கி ஊர்ந்தன.
"யாராவது பார்த்திட போறாங்க.....!",அவள் வாய் அப்படிக் கூறினாலும்....அவளது கைகள் அவனது கழுத்தைச் சுற்றி வளைத்தன.
"இங்கே யாரு டி வர போறாங்க.....?",என்றவனின் உதடுகள்....அவளது தேன் சுரக்கும் இதழ்களை கவ்விக் கொள்ளும் நேரம்..
"அதோ....நம்ம கெளதம் அங்கே இருக்கான் பாருங்க.....!",என்ற ஆதித்யனின் குரலில் அவன்....அடித்துப் பிடித்துக் கொண்டு சுமித்ராவிடம் இருந்து விலகினான்.'என்ன செய்வது....?',என்று தெரியாமல் சுமித்ராவும் அவசர அவசரமாக விலகி நின்று கொண்டாள்.
அங்கிருந்து பார்த்தவர்களுக்கு கௌதமின் முதுகு மட்டும்தான் தெரிந்தது.சுமித்ரா நின்றிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை.அருகில் நெருங்கவும்தான் அங்கு....சுமித்ரா இருப்பது தெரிந்தது....ஆதித்யனின் நண்பர்கள் பட்டாளத்திற்கு....!
'ஆஹா....!தப்பான நேரத்துல வந்துட்டோம் போலவே.....?',ஆதித்யன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போதே....கெளதம் அவனைப் பார்த்து கொலைப்பார்வை ஒன்றை வீசி வைத்தான்.அதைப் பார்த்த ஆதித்யனுக்கு சிரிப்புதான் வந்தது.
அதற்குள் அவர்களை நெருங்கியிருந்த அந்த நண்பர்கள் பட்டாளம்,"டேய் மச்சான்.....!இங்கே என்னடா பண்ணற....?இந்தப் பொண்ணு யாரு....?",என்று கேள்வி கேட்கத் தொடங்க..
'மவனே....!உன்னை அப்புறம் வைச்சுக்கிறேன் டா....!',ஆதித்யனைப் பார்த்துக் கறுவியவன்....நண்பர்களைப் பார்த்து,"இவள்தான் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு டா....!சுமித்ரா.....!",என்று நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவன்....சுமித்ராவிடமும் அனைவரையும் அறிமுகப்படுத்தினான்.
"ஓ...ஹோ....!",ஆர்பாட்டமாய் கூச்சலிட்ட நண்பர்கள் பட்டாளம்,"சிஸ்டர் கூட ரொமான்ஸ் பண்ணும் போது கரடிகள் மாதிரி வந்து கெடுத்திட்டோமா....?",கௌதமை கலாய்த்தவர்கள்....இருவருக்கும் வாழ்த்து கூறவும் மறக்கவில்லை.ஒரு வெட்கப் புன்னகையுடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமித்ரா.
ஒருவழியாக...பார்ட்டி நடக்கும் நாளும் அழகாக விடிந்தது.அன்று....'ஆதித்யன் க்ரூப் ஆப் கம்பெனீஸின்' வேலையாட்கள் அனைவருக்கும் அரைநாள் மட்டுமே அலுவலகம்.மதியத்திற்கு மேல் அனைவரும் வீட்டிற்குச் சென்று விட்டு....மாலை நேராக பார்ட்டி நடக்கும் ஹோட்டலுக்கு வந்து விடுமாறு கூறப்பட்டிருந்தது.
மதியமானதும்....நித்திலாவை அவளது ஹாஸ்ட்டலின் முன் இறக்கி விட்ட ஆதித்யன்,"பேபி....!நீ ஈவ்னிங் ரெடியாகிட்டு வெயிட் பண்ணு.....!நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.....!",அவன் கூறியதுதான் தாமதம்....இவள் அவசர அவசரமாக மறுத்தாள்.
"இல்ல....!வேண்டாம்....!யாராவது பார்த்தால் தப்பா நினைப்பாங்க.....!நானே வந்திடறேன்.....!",
பொறுமையற்ற பெருமூச்சுடன் அவளைப் பார்த்தவன்,"கமான் நித்திலா.....!யாரவது பார்த்தாதான் என்ன.....?ஈவ்னிங் வர்றேன்.....!ரெடியா இரு......!",என்றவன் அதற்கு மேல் தமாதியாமல் காரைக் கிளப்பி சென்று விட்டான்.
'ஹ்ம்ம்....!எதையும் மறுக்க முடியாது....!பிடிச்சா...முரட்டு பிடிதான்....!',செல்லமாக ஆதித்யனை திட்டியபடியே உள்ளே நுழைத்தாள் நித்திலா.
அன்று மாலை.....
ஆங்காங்கு வெள்ளை நிற கற்களும்....முத்துக்களும் பதிக்கப்பட்ட மிக அழகிய வெள்ளை நிற பேன்சி புடவையில்.....தேவதையை விட அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.அந்தப் புடவைக்குத் தோதாக வடிவமைக்கப்பட்டிருந்த அழகிய முத்துமாலை ஒன்று அவள் கழுத்தை அலங்கரித்திருந்தது.சிறிதாக ஒற்றை முத்து தொங்கும் காதணியை காதில் அணிந்தவள்....அதே போல் முத்துக்கள் பதித்த வளையல்களை தன் இரு கைகளிலும் அணிந்து கொண்டாள்.
இடுப்பு வரை நீண்டிருந்த கருங் கூந்தலை கர்லிங் செய்து அதன் உயரத்தைக் குறைத்தவள்....வகிடு எடுக்காமல் மேலே மட்டும் தலை வாரி.....மீதிக் கூந்தலை முன் பக்கமாக தோளில் வழியுமாறு தொங்க விட்டாள்.
இயற்கையாய் வளைந்திருந்த புருவங்களுக்கு மத்தியில்....சிறு வெள்ளைக் கல் பொட்டை ஒட்ட வைத்தவள்....திருப்தியாய் தன்னைப் பார்த்துக் கண்ணாடியில் புன்னகைத்துக் கொண்டாள்.
'ம்....நாம ரெடி.....!ஆது வந்தால் கிளம்ப வேண்டியதுதான்.....!',அவள் மனதிற்குள் கூறி முடிக்கவும்....அவளது மொபைல் அடிக்கவும் சரியாய் இருந்தது.ஆதித்யன்தான் கீழே வருமாறு அழைத்திருந்தான்.வர்ஷினியிடம் சொல்லிக் கொண்டு கீழே இறங்கியவள்....அங்கு வாசலில்....காரின் மேல் சாய்ந்தபடி நின்றிருந்த ஆதித்யனைப் பார்த்து இமைக்கவும் மறந்தாள்.
பாலாடை நிறத்திலான கோட் சூட்டில்....முன்னுச்சி முடி கலைய....வசீகரமான புன்னகையுடன்....இரு கைகளையும் கட்டிக் கொண்டு....ஒற்றைக் காலை மடித்து காரின் மேல் சாய்ந்தபடி நின்றிருந்தவனைப் பார்த்தவளுக்கு ஆசை ஆசையாய் வந்தது.
அப்படியே ஓடிச் சென்று அவனது கலைந்த தலைமுடியை இன்னும் அதிகமாக கலைத்து விட்டு....அவன் கூர்மையான மூக்கைப் பிடித்துத் தன் உயரத்திற்கு இழுத்து....இழுத்த வேகத்தில் அவன் நெற்றியில் இதழ் பதிக்க வேண்டும் என்பது போல் தாபம் எழுந்தது.
அவனைப் பார்த்து அவள் இமைக்க மறந்தாள் என்றால்.....வெள்ளை நிற தேவதையாய் தன் முன்னால் நின்றிருந்தவளைப் பார்த்து....அவன்....மூச்சு விடவும் மறந்தான்.அதிலும்....அவள் பார்த்த அந்த ஆளை விழுங்கும் பார்வை....அவனை கிறங்கடிக்கச் செய்தது.
"என்ன டி.....?அப்படியே கடிச்சு திங்கற மாதிரி பார்க்கிற......?",தன் முன்னால் நின்றிருந்தவளைப் பார்வையால் அள்ளிப் பருகியபடி அவன் கேட்க..
"ம்....!கடிச்சு திங்கணும் போலத்தான் இருக்கு.....!",அவனைப் பார்வையால் விழுங்கியபடியே கூறினாள் அவள்.இதுநாள் வரை....அவள்....அவனை இப்படியொரு பார்வை பார்த்ததில்லை.அவன்தான்....அவளை கண்டபடி மேய்வான்....!இன்று....அந்தப் பார்வையை அவள் பார்த்து வைத்ததில்....அவன்....மது அருந்திய வண்டானான்....!அதிலும்....அவள் பேசிய பேச்சு அவனை கிறங்கடிக்கச் செய்ய,
"ஏய்ய்.....!",என்றபடி அவளை நெருங்கியிருந்தான்.பிறகு....தாங்கள் இருக்கும் இடத்தை உணர்ந்தவனாய்....சிறு பெரு மூச்சுடன் காரில் ஏறி அமர்ந்தான்.
மெலிதான புன்னகையுடன் அவனுக்கு அருகில் முன்பக்கமாய் ஏறி அமர்ந்தவள்....அப்பொழுதும் அவனைப் பார்த்து....அதே பார்வையை வீசி வைக்க...அவன்....காரை கிளப்ப மறந்தவனாய்...அவள் பக்கம் நகர்ந்து அமர்ந்தான்.
"கொல்றேடி.....!",அவன் முணுமுணுக்க..
"நீதான் டா மயக்கற.....!வசீகரா......!அழகான ராட்சஸா.....!",,அவள் குரலில் அப்படியொரு மயக்கம்.
"ஏய்....!இப்படியெல்லாம் பேசாதே டி.....!அப்புறம்....ஐ லூஸ் மை கண்ட்ரோல்......!",வேக மூச்சுகளை எடுத்து விட்டபடி ஒரு மாதிரிக் குரலில் அவன் கூறவும்தான்....அவனை மிகவும் தூண்டி விட்டு விட்டோம் என்பதே அவளுக்கு உரைத்தது.
சட்டென்று அவனை விட்டு விலகி அமர்ந்தவள்,"ஹலோ பாஸ்.....!முதல்ல வண்டியை எடுங்க.....!நாம இன்னும் ஹாஸ்டல் வாசலிலேயேதான் நிற்கிறோம்.....!போற வர்றவங்க எல்லாம் நம்மளைத்தான் ஒரு மாதிரி பார்த்துட்டு போறாங்க....!",அவள் கேலியாய் கூறவும்....தன்னை சுதாரித்துக் கொண்டவன்.....மெலிதாக விசிலடித்தபடி காரைக் கிளப்பினான்.
கைகள் அதன் பாட்டிற்கு காரை ஓட்டினாலும்...அவன் உதடுகள் ஒரு பாடலை விசிலடித்துக் கொண்டே வந்தன....!கூடவே....அவனது விஷமக் கண்கள் அவளை ஒரு மார்க்கமாய் வேறு பார்த்து வைத்தன.....!
'என்ன பாட்டு பாடறான்.....?',நித்திலாவின் கவனம் முழுவதும்.....அவன் விசிலடிக்கும் பாடலின் மேல்தான் இருந்தது.என்னதான் யோசித்துப் பார்த்தும்....அவளால் அந்தப் பாடலைக் கண்டுபிடிக்க முடியாமல் போகவும்,
"என்ன பாட்டு பாடறீங்க....?",என்று அவனிடமே கேட்டு விட்டாள்.
அப்பொழுதும் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து வைத்தவன்....சிறு சிரிப்போடு....அதே பாடல் வரிகளை சீழ்க்கை ஒலியால் முணுமுணுக்க....
"ம்ப்ச்.....!என்ன பாட்டுன்னு சொல்லுங்க.....!",மெல்ல சிணுங்கினாள் அவள்.
"பாடிக் காட்டட்டுமா.....?",அவன் கண்ணடிக்க,
"ம்....!பாடுங்க.....!பாடுங்க.....!",அந்தக் கள்வனின் கள்ளத்தனத்தை அறியாதவளாய்....ஆசை ஆசையாய் தலையாட்டினாள் அந்தப் பாவை.
வசீகரப் புன்னகையுடன் அந்த வசீகரனும் பாட ஆரம்பித்தான்.
"இருளைப் பின்னிய குழலோ....?
இரு விழிகள் நிலவின் நிழலோ....?
பொன் உதடுகள் சிறு வரியில்
என் உயிரைப் புதைப்பாளோ.....?",
என்று பாடியவனின் விழிகள்....அவளது இதழ்களையே வண்டாய் மாறி மொய்த்தது.அவனது பார்வையில்....அவள் தனது கீழுதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டாள்.
அவன் மேலும் பாட ஆரம்பித்தான்.
"ரவிவர்மன் தூரிகை எழுத்தோ....?இல்லை....
சங்கில் ஊறிய கழுத்தோ.....?
அதில் ஒற்றை வியர்வைத் துளியாய்
நான் உருண்டிட மாட்டேனோ....?",
காருக்குள் நிலவிய அந்த ஏ.சி குளிரையும் தாண்டி அவள் முகத்தில் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன...!அதிலும்....அவள் நெற்றியில் உதித்த ஒற்றை வியர்வைத் துளி ஒன்று....கடகடவென்று ஓடி வந்து....அவளது கழுத்துச் சரிவில் உருண்டோடி மறைய....அவனது பார்வையும் அந்த வியர்வைத் துளியில் பின்னாலேயே பயணித்தது.அவனது பார்வையின் வேகத்தைத் தாங்காமல்...அவளது இதழ்கள்....அவளது பற்களுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது....!
"பூமி கொண்ட பூவையெல்லாம்
இரு பந்தாய் செய்தது யார் செயலோ....?
சின்ன ஓவியச் சிற்றிடையோ....
அவள் சேலை கட்டிய சிறு புயலோ....?",
இப்பொழுது....அவன் பார்வை....சிறிதும் வெட்கமில்லாமல்...அவன் பாடிய பாடல் வரிகள் உணர்த்திய இடங்களை மேய....அவள் தாள மாட்டாதவளாய்,"போ....போதும்.....!",என்று முணுமுணுத்தாள்.
"ஏன்.....?",அவன்தான் வெட்கங் கெட்டுப் போய்....அவளைப் பார்வையால் மேய்ந்தபடி....சிறிதும் கூச்சமில்லாமல் 'ஏன்....?' என்ற கேள்வியைக் கேட்டு வைக்கிறான் என்றால்....பாவையவளாலும் வெட்கங் கெட்டுப் போய் 'ஏன்....?' என்ற கேள்விக்கான காரணத்தை கூற முடியுமா.....?அவள் மௌனம் சாதித்தாள்.
"அடுத்த வரி பாடறேன்.....கேளு.....!",என்றவன்,
"என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள்....அவை....
மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்....!",
அவன் பாடிக் கொண்டே போக,"ஹைய்யோ.....!போதும்....!உங்க பாட்டை நிறுத்தறீங்களா....?",அவள் முகம் செம்பருத்தி பூவாய் சிவந்திருந்தது.முகம் சிவக்க....தடுமாற்றத்துடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனின் இதழ்களில் ரசனையான புன்னகை ஒன்று வந்தமர்ந்தது....!
"எப்படி.....?என்னுடைய பாட்டு....?",அவன் புருவம் உயர்த்த..
"பாட்டை மட்டுமா டா நீ பாடின.....?ரௌடி.....!காதல் ரௌடி.....!அங்கே இங்கேன்னு அலைபாயற இந்தக் கண்ணை அப்படியே நோண்டனும்....!",செல்லமாக அவள்....அவனைத் திட்ட...
"ஹா...ஹா....!என் கண்ணு என்ன பேபி பண்ணுது.....?அது பாட்டுக்கு....அதுக்குப் பிடிச்சதை பார்க்குது....!"உல்லாசமாய் அவன் கூற...
"ச்சீய்....!பொறுக்கி....!வாயை மூடு டா....!",விளையாட்டாய் அவன் காதைப் பிடித்துத் திருகினாள் அவள்.இப்படியாக....சீண்டலுமாய்....மோகமுமாய் அவர்கள் பார்ட்டி நடக்கும் ஹாலிற்கு வந்து சேர்ந்தனர்.இவர்கள் சற்று நேரமே வந்திருந்ததால்....அவ்வளவாக யாரும் வந்திருக்கவில்லை.இவர்கள் இருவரும் ஒரே காரில் வந்து இறங்கியதை...அங்கிருந்த சில நபர்கள் கவனித்தாலும்....M.D - செக்ரெட்டரி என்ற எண்ணத்தில்தான் ஆதித்யனையும் நித்திலாவையும் கவனித்தனர்.
நேரமாக ஆக....எம்ப்ளாயிஸ் அனைவரும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.அந்தப் பெரிய ஹாலை...வெள்ளையும் இள ரோஜா வண்ண பலூன்களும்....திரைச்சீலைகளும் அலங்கரித்திருக்க....ஆங்காங்கு அனைவரும் குழுவாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
நேர்த்தியாக சீருடை அணிந்திருந்த சர்வர்கள்....கையில் பழச்சாறும்....உயர் ரக மது வகைகளும் அடங்கிய தட்டை ஏந்திக் கொண்டு....வந்திருப்பவர்களின் விருப்பத்திற்கு தகுந்தவாறு வழங்கிக் கொண்டிருந்தனர்.மெல்லிய சிரிப்பொலிகளும்...மனதை மயக்கும் மென்மையான இசையும் அந்த ஹாலை நிறைத்திருந்தன.
நித்திலாவும் சுமித்ராவுடன் நின்றபடி....தங்களுடன் வேலை செய்யும் சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.ஆதித்யன்....அவனுக்கான நண்பர்களின் வட்டாரத்தோடு ஐக்கியமாகியிருந்தான்.
தங்க நிறத்திலான ஷிபான் சில்க்கில்....தங்கத் தாமரையாய் ஜொலித்துக் கொண்டிருந்த சுமித்ராவை....ஆதித்யன் அருகில் தங்களது நண்பர்களுடன் நின்றிருந்த கௌதமின் விழிகள் அவ்வப்போது ரசனையுடன் வருடிக் கொண்டிருந்தன....!சுமித்ராவின் விழிகளும்...தன்னவனின் பார்வைக் கணைகளை சந்தித்து...அவ்வப்போது அதை நாணத்துடன் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தாள்....!
"ஹலோ லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்.....!",துறுதுறுப்பான ஒரு இளைஞனின் கலகலப்பான பேச்சில் அனைவரும் தங்களது பேச்சை நிறுத்தி ஆர்வத்துடன் அவனை நோக்கினர்.
"பார்ட்டின்னு இருந்தால் டான்ஸ்...மியூசிக் இருக்க வேண்டாமா....?அப்போத்தானே இடம் களைகட்டும்....!கமான் கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ்....!திஸ் ஃப்ளோர் இஸ் யுவர்ஸ்....!கமான்....!உங்க அழகான நடனத் திறமைகளை காட்டுங்க.....!",அவன் கூறி முடிக்கவும்....ஆரவாரமான கரகோஷம் ஒன்று எழுந்து அடங்கியது.
"பூக்களே சற்று ஓய்வெடுங்கள்....!
அவள் வந்து விட்டாள்....!",
பிண்ணனியில் இரைச்சலில்லாத மென்மையான பாடல் ஒலிக்க....பெண்கள் குழு ஒன்று ஆர்வத்துடன் முன்னால் வந்து....அட்டகாசமாய் நடனமாட ஆரம்பித்தனர்.அந்த மெல்லிய இசைக்குத் தகுந்தவாறு....அந்தப் பெண்கள் ஆடிய நடனம் அங்கிருந்த அனைவரையும் ரசிக்க வைத்தது.
அவர்கள் நடனமாடிக் கொண்டிருக்கும் போது...நித்திலா....ஓரக் கண்ணால் ஆதித்யனைப் பார்க்க....அவளது பார்வையை விடாமல் தாங்கிப் பிடித்தவன்....ஒற்றை புருவத்தை மட்டும் 'என்ன....?' என்பது போல் உயர்த்தி....உதட்டைக் குவித்து ஒரு முத்தத்தை அவளை நோக்கி பறக்க விட....அவனது செய்கையில் விதிர்த்துப் போனவள்....'யாரேனும் பார்த்து விட்டார்களா...?',என்று அவசர அவசரமாக சுற்றும் முற்றும் பார்க்க....அனைவரும் அந்தப் பெண்களின் நடனத்தில் மூழ்கியிருந்தனர்.
"ஹப்பாடா......!",என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி...போலியான கண்டிப்புடன் அவள்....அவனைப் பார்க்க....அந்த மாயக் கண்ணனோ...தன் நண்பர்களுடன் எதையோ சிரித்துப் பேசிக் கொண்டே....இவளைப் பார்த்து வசீகரமாய் கண்ணடித்து வைத்தான்.
'ஹைய்யோ.....!',என்ற பதட்டத்துடன் மீண்டும் சுற்றும் முற்றும் தன் பார்வையை சுழல விட்டாள் நித்திலா.
'யாரும் பார்க்கலை.....!',என்றபடி ஆதித்யன் அவளைப் பார்த்து உதட்டசைக்க,'ராட்சஸா....!அழகிய ராட்சஸா.....!',என்று முணுமுணுத்தவள்....தன் அருகில் நின்றிருந்த தோழி எதையோ கேட்கவும்....அவனைப் பார்த்து உதட்டை சுழித்தபடி திரும்பிக் கொண்டாள்.
அவளது உதட்டு சுழிப்பில் சிக்கி சிதறிக் கொண்டிருந்த மனதை....ஒருவழியாக மீட்டு...நடனத்தில் பார்வையை பதித்தான் ஆதித்யன்.அந்தப் பாடல் முடிந்து....அடுத்த பாடல் ஒலிபரப்பாகியது.
"லைஃப்புல ஃவைப் வந்துட்டா
டைட்டாதான் இருக்கணும்.....!
வெயிட்டான பொண்ணை பார்த்தாலும்
ரைட்டாத்தான் நடக்கணும்....!",
இந்தப் பாடலுக்கு...கல்யாணமான கணவன்மார்கள் குழு ஒன்று ஆர்வத்துடன் முன்னே வந்து நடனமாடி....தங்களது மனைவிமார்களின் ஆசைப் பார்வையை வாங்கிக் கட்டிக் கொண்டது.
பேரர் ஒருவர்...மது வகைகள் அடங்கிய தட்டை...ஆதித்யனின் நண்பர்கள் வட்டாரத்தில் வந்து நீட்ட....ஆசையுடன் அதை எடுக்கப் போன ஆதித்யனின் விழிகள் ஒரு கணம் தயங்கி நித்திலாவை நோக்கியது.அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'வேண்டாம்....!',அவள் தலையசைக்க...அவன் முகம் காற்று போன பலூனாய் கூம்பிப் போனது.அவனது நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு கிளாஸை கையில் எடுத்துக் கொண்டு..."உனக்கு வேண்டாமா....?",என்றபடி ஆதித்யனைப் பார்க்க....அவனோ...."ம்....வேண்டாம்....!ஆமாம்....!",என்று தடுமாறிக் கொண்டிருந்தான்.அவனது பார்வை நித்திலாவிடம்தான் இருந்தது.
அவள் என்ன நினைத்தாளோ....தெரியவில்லை....!அவள் தன் கண்ணசைவிலேயே,'எடுத்துகோங்க....!பட்....லிமிட் தான்.....!',என்று கூற...அவன் முகம் மலர்ந்து ஒரு கிளாஸை எடுத்துக் கொண்டான்.
இவர்கள் நடத்தும் நாடகத்தை சுமித்ரா....ஒரு கள்ளச் சிரிப்புடன் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.அவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயத்தை....கெளதம் அவளிடம் கூறியிருந்தாள்.அன்றே...."ஏன் டி என்கிட்ட சொல்லல....?",என்று சண்டைக்கு வந்த சுமித்ராவை....பல காரணங்கள் கூறி....சில பல 'சாரி...' கேட்டு அவளை அமைதியாகியிருந்தாள் நித்திலா.
இவர்களது விளையாட்டில்....சுமித்ராவின் பார்வை தன்னிச்சையாய் உயர்ந்து தன்னவனை நோக்க....அவள் பார்வையை கண்டு கொண்டவனின் முகம் காதலால் மலர்ந்தது.
'உங்களுக்கு வேண்டாமா....?',சுமித்ரா மது வகைகளை சுட்டிக் காட்டி வினவ..
ஒரு கணம் அவளையே இமைக்காது பார்த்தவன்...'எனக்கு இந்த மது வேண்டாம்....!வேற ஒண்ணுதான் வேணும்....!',என்றவனின் பார்வை அவளது சிவந்த இதழ்களில் நிலைத்து....பிறகு....தன் ஆள்காட்டி விரலால் தனது உதடுகளைத் தொட்டுக் காண்பிக்க..
இப்பொழுது,'அடியாத்தி....!',என்ற பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்ப்பது சுமித்ராவின் முறையாயிற்று.
'இங்கே வா....!',கெளதம் உதட்டசைவில் அவளை அழைக்க...
'ம்ஹீம்....!',தலையை ஆட்டி மறுத்தாள் அவள்.
'வா டி....!',அவன் மீண்டும் பிடிவாதமாய் அழைக்க..
'ம்ஹீம்....!',இப்பொழுது அவளது தலையாட்டலின் வேகம் குறைந்திருந்தது.
'ப்ச்...!வாடின்னா.....!' இம்முறை அவனது முகம் சற்று கோபத்தைக் காட்டியது.
'எல்லாரும் இருக்காங்க....!',அவள் சுற்றும் முற்றும் பார்க்க..
'அப்ப....வெளியில இருக்கிற கார்டனுக்கு வா.....!',அவன் கண்ணசைவிலேயே கட்டளையிட்டு விட்டு வெளியேறினான்.
'இப்போத்தான் நம்ம மேல இருக்கிற கோபம் குறைஞ்சிருக்கு....!போகலைன்னா....மறுபடியும் மூக்குக்கு மேல கோபம் வந்திடும்.....!',மனதிற்குள் எண்ணியவள்...நித்திலாவிடம் 'ரெஸ்ட் ரூம்...' என்று கூறிவிட்டு வெளியேறினாள்.
பசுமைப் புல்வெளி போர்த்தியிருந்த தோட்டத்தில் யாரும் இல்லை.சுற்றும் முற்றும் பார்த்தபடி வந்து கொண்டிருந்த சுமித்ராவின் பின்னால் பூனை போல் பதுங்கி பதுங்கி வந்தவன்....பின்னாலிருந்தபடியே தன் இரு கைகளாலும் அவள் இடையைப் பற்றி உயரத் தூக்க..
"ஹைய்யோ....!",கால் கொலுசு சப்தமிட மெலிதாக கூச்சலிட்டாள் அவள்.அவளுக்குத் தெரியும்....அவன் தான் என்று....!
"என்ன இது....?கீழே இறக்கி விடுங்க.....!யாராவது பார்த்திட போறாங்க....!",கால்களை ஆட்டியபடி மறுத்தவளை அலேக்காக தூக்கிச் சென்றவன்....இருளின் நிழல் படிந்திருந்த ஒரு மரமல்லி மரத்தின் கீழ் சென்றுதான் இறக்கி விட்டான்.
"இப்படியா பண்ணுவீங்க.....?",அவன் தன்னை தூக்கியதால் இடைப்பகுதியில் நெகிழ்ந்திருந்த புடவையை சரி செய்தபடியே அவள் சிணுங்க...
புடவையை சரி செய்ய விடாமல் அவளைத் தடுத்தவன்....அவளது வெற்று இடையில் தன் கரங்களை அழுத்தமாகப் பதித்து....அவளைத் தன்னை நோக்கி இழுத்தான்.
அவள் கழுத்தில் முகம் புதைத்து...அவளை வாசம் பிடித்தவன்,"ம்ஹா....!எவ்வளவு நாள் ஆச்சு டி....!இந்த கொஞ்ச நாளா கோபம்...பிரச்சனை....டென்க்ஷன்னே ஓடிடுச்சு....!",கழுத்தில் முகம் புதைத்தபடியே அவன் பேச....
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த அவனுடைய நெருக்கத்தில் தன்னை மறந்தாள் அவள்.
"இந்தப் புடவையில ரொம்ப அழகா இருக்க டி ராட்சசி....!",என்றவனின் கரங்கள்...அவளது வெற்று இடையில் ஊர்ந்தன.
"ஊஹீம்.....!",என்றபடி புடவையை இழுத்து இடையை மறைக்க முயன்றாள் அவள்.
"ப்ச்....!",சலித்தபடி அவள் கையைத் தட்டி விட்டவன்,"ஹனி....!எனக்கு இப்பவே ஹனி வேணும்.....!",அவனது வார்த்தைகள் பிதற்றலுடன் வெளி வந்தன.அவனது உதடுகளோ....அவளது இதழ்களை நோக்கி ஊர்ந்தன.
"யாராவது பார்த்திட போறாங்க.....!",அவள் வாய் அப்படிக் கூறினாலும்....அவளது கைகள் அவனது கழுத்தைச் சுற்றி வளைத்தன.
"இங்கே யாரு டி வர போறாங்க.....?",என்றவனின் உதடுகள்....அவளது தேன் சுரக்கும் இதழ்களை கவ்விக் கொள்ளும் நேரம்..
"அதோ....நம்ம கெளதம் அங்கே இருக்கான் பாருங்க.....!",என்ற ஆதித்யனின் குரலில் அவன்....அடித்துப் பிடித்துக் கொண்டு சுமித்ராவிடம் இருந்து விலகினான்.'என்ன செய்வது....?',என்று தெரியாமல் சுமித்ராவும் அவசர அவசரமாக விலகி நின்று கொண்டாள்.
அங்கிருந்து பார்த்தவர்களுக்கு கௌதமின் முதுகு மட்டும்தான் தெரிந்தது.சுமித்ரா நின்றிருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை.அருகில் நெருங்கவும்தான் அங்கு....சுமித்ரா இருப்பது தெரிந்தது....ஆதித்யனின் நண்பர்கள் பட்டாளத்திற்கு....!
'ஆஹா....!தப்பான நேரத்துல வந்துட்டோம் போலவே.....?',ஆதித்யன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போதே....கெளதம் அவனைப் பார்த்து கொலைப்பார்வை ஒன்றை வீசி வைத்தான்.அதைப் பார்த்த ஆதித்யனுக்கு சிரிப்புதான் வந்தது.
அதற்குள் அவர்களை நெருங்கியிருந்த அந்த நண்பர்கள் பட்டாளம்,"டேய் மச்சான்.....!இங்கே என்னடா பண்ணற....?இந்தப் பொண்ணு யாரு....?",என்று கேள்வி கேட்கத் தொடங்க..
'மவனே....!உன்னை அப்புறம் வைச்சுக்கிறேன் டா....!',ஆதித்யனைப் பார்த்துக் கறுவியவன்....நண்பர்களைப் பார்த்து,"இவள்தான் நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு டா....!சுமித்ரா.....!",என்று நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவன்....சுமித்ராவிடமும் அனைவரையும் அறிமுகப்படுத்தினான்.
"ஓ...ஹோ....!",ஆர்பாட்டமாய் கூச்சலிட்ட நண்பர்கள் பட்டாளம்,"சிஸ்டர் கூட ரொமான்ஸ் பண்ணும் போது கரடிகள் மாதிரி வந்து கெடுத்திட்டோமா....?",கௌதமை கலாய்த்தவர்கள்....இருவருக்கும் வாழ்த்து கூறவும் மறக்கவில்லை.ஒரு வெட்கப் புன்னகையுடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமித்ரா.