- Messages
- 87
- Reaction score
- 13
- Points
- 6
அத்தியாயம் 52 :
ஆதித்யனின் காரில் அமர்ந்திருந்த நித்திலாவின் மனம் முழுக்க...ரணம்..ரணம்..ரணம் மட்டுமே....!பெற்றவர்களின் பாசத்தில் மூழ்கி முடிவெடுத்து விட்டாளே தவிர...தன்னவனின் முகம் பார்த்து...'நீ வேண்டாம்....!உன் காதல் வேண்டாம்....!',என்று அவளால் மட்டும் எப்படி சொல்ல முடியும்.....?
அவள் உயிரில் கலந்தவன் அல்லவா அவன்....?அவள் இதயத்துடிப்பில் உறைந்திருப்பவன் அல்லவா அவன்....?
மனதிற்குள் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும் காதலை....கசக்கி எறிவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்லவே....?
காரில் ஏறியதிலிருந்து அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் ஆதித்யன்.அவள் மனதிற்குள் ஏதோ போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தாலும்....அவன் வாயைத் திறந்து எதையும் கேட்கவில்லை.'அவளே கூறட்டும்....!' என்று அமைதி காத்தான்.
பிரம்மை பிடித்தவள் போல் சாலையையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நித்திலா.விழிகளில் இருந்த கண்ணீரை இமை சிமிட்டி அடக்கினாள்.பயணம் நீண்டு கொண்டிருந்ததே தவிர...அவள் வாயைத் திறந்த பாடாக இல்லை.
போக்குவரத்து நெரிசல்கள் அடங்கி....கார் ஆரறவமற்ற நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது.ஒரு பெருமூச்செடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டவள்....ஒரு முடிவோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ஆ....!", 'ஆது...!' என்று அவனை அழைக்க வந்தவள்....முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மொட்டையாக கூறினாள்.
ஒன்றும் பேசாமல் சாலையோரமாக இருந்த மரத்தடியில் காரை நிறுத்தியவன்....அவள் புறமாகத் திரும்பி அமர்ந்தபடி,"ம்....சொல்லு....!",என்று வினவினான்.
"அ...அது வந்து...",தன் கையில் அகப்பட்ட துப்பட்டாவின் நுனியைப் பிடித்துத் திருகியபடி மென்று விழுங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
அவளது வலது கையைப் பற்றி தனது இரு கைகளுக்கும் இடையில் வைத்து பொத்திக் கொண்டவன்,"என்ன தயக்கம் பேபி....?எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்....!சொல்லு....!",காதலுடன் வினவியவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல்....தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டவள்...அவன் பிடியிலிருந்த தனது கரத்தை மெதுவாக விலக்கிக் கொண்டாள்.
அவன் முகத்தை சந்திக்காமல்...வேறு எங்கோ தன் பார்வையை செலுத்தியவள்,"எல்லாத்தையும் இன்றோடு மு...முடிச்சுக்கலாம்....!",அவ்வளவுதான்....!அவள் கூறி முடித்த அடுத்த நொடி....அவன் கரம் இடியாய் அவள் கன்னத்தில் இறங்கியது.
அவன் அடித்த அடியில்....அவள் விழிகளில் இருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்தது.கன்னம் தீயாய் எரிய....அவளது வலது கை அவளையும் அறியாமல் உயர்ந்து சென்று அவள் கன்னத்தைப் பற்றிக் கொண்டது.
ஆக்ரோஷத்தின் மொத்த உருவமாய் ரௌத்திரத்துடன் அவளை முறைத்துக் கொன்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.
அவன் கழுத்து நரம்புகள் புடைத்த விதத்திலிருந்தும்.....கை முஷ்டி இறுகியதிலிருந்தும் அவனது கோபத்தை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.
"என்னடி சொன்ன....?",அவனுடைய உறுமலில் மேனி நடுங்க அவள் கார்க்கதவோடு சென்று ஒன்றிக் கொண்டாள்.விழிகளில் கண்ணீரோடு....கன்னத்தை ஒரு கையால் தாங்கியபடி அதிர்ச்சியுடன் தன்னை நோக்கியவளைக் கண்டு அவன் சிறிதும் இளகவில்லை.
"என்ன சொன்னேன்னு கேட்டேன்.....?",அவன் கத்திய கத்தலில் உடல் தூக்கி வாரிப் போட நிமிர்ந்தவள்..
ஒருவாறாகத் தைரியத்தைத் திரட்டிக் கொண்டு,"இ...இத்தோட எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வை....வைச்சிடலாம்....!",திக்கித் திணறி கூறி முடித்தவள்....அவனிடம் இருந்து மீண்டும் ஒரு அறையை வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
அவனுடைய இரும்புக்கரம் அவளுடைய மென்மையான கன்னங்களை முரட்டுத்தனமாக பதம் பார்த்ததில்....அவளுக்கு இருட்டிக் கொண்டு வந்தது.கண்களில் பூச்சி பறக்க....எதிரில் அமர்ந்திருந்தவனின் உருவம் மங்கலாகத் தெரிய ஆரம்பிக்க....தாள முடியாமல் கார் சீட்டில் சாய்ந்து கொண்டாள்.
அவளது நிலையை உணர்ந்தவனாய்...காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் மடியில் விட்டெறிந்தவன்,"குடி....!",என்றான் உறுமலாக.
அவனுடைய அரட்டலில்....அவசர அவசரமாக பாட்டிலை எடுத்து தன் வாயில் சரித்துக் கொண்டாள்.அதன் பிறகுதான் கொஞ்சம் தெளிவே வந்தது.
'கோபப்படத்தான் செய்வார்....!ஆத்திரப்பட்டு அடிக்கத்தான் செய்வார்....!இன்னைக்கு என்ன ஆனாலும் சரி....!என் முடிவை தெளிவா இவர்கிட்ட சொல்லாம விடப்போவதில்லை....!',மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டவள்....ஒரு முடிவோடு நிமிர்ந்தாள்.
அவளுடைய நிமிர்வில் அவன் புருவம் சுருங்கியது.கண்கள் இடுங்க அவளை வெறித்தவன்,"ஸோ....ஒரு முடிவோடுதான் வந்திருக்க....!அப்படித்தானே....?",அவன் பார்வை அவளைக் குத்திக் கிழித்தது.
அவனது பார்வையில் வெலவெலத்த மனதை வெகு சிரமப்பட்டு தைரியப்படுத்தியவள்,"ஆமாம்....!",என்றாள் அழுத்தமாக.
"என்ன முடிவு....?",அவன் பார்வை அவள் கண்களை விட்டு இம்மியளவும் அகலவில்லை.
"நாம....நாம...பிரிஞ்சுடலாம்....!",இதைக் கூறும் போதே....கூர்மையான கத்தியை வைத்து தன் இதயத்தை யாரோ குத்திக் கிழித்து ரணமாக்கும் வலியை அனுபவித்தாள் நித்திலா.
வந்த ஆத்திரத்தில் அவளை அறைவதற்காக கையை ஓங்கியவன்....அவளது கன்னத்தில் செக்கச் செவேலென்று பதிந்திருந்த தனது விரல் தடத்தைப் பார்த்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
'இன்னும் ஒரு அடி அடிச்சாலும் தாங்க மாட்டாள்....!',அவ்வளவு கோபத்திலும் காதல் மனம் அவளுக்காய் பரிதாபப்பட....இயலாமையில்,"ச்சே.....!",என்று கத்தியபடி ஸ்டியரிங்கை ஓங்கி குத்தினான்.
இருகைகளாலும் ஸ்டியரிங்கை இறுகப் பற்றியபடி அவன் கோபத்தைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்க....அவளோ மேலும் பேச ஆரம்பித்தாள்.
"போதும்....!நம்மளுடைய காதல்...உறவு எல்லாமே போதும்....!எல்லாத்துக்கும் இன்றோடு முற்றுப்புள்ளி வைச்சிடலாம்....!",மேலும் என்ன கூறியிருப்பாளோ....அதற்குள் கோபத்தைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தவனின் பார்வையில் அவளது மொபைல் வந்து விழ...ஆங்காரமாய் அதை எடுத்து சாலையில் தூக்கியெறிந்தான் ஆதித்யன்.
அவள் மீது காட்ட முடியாத கோபத்தை.....அவளது மொபைலின் மீது அவன் காட்டியிருக்க...அதைத் தாங்க முடியாமல் அந்த மொபைல் சுக்கு நூறாய் உடைந்து போனது.
"எப்படி டி....?எப்படி உன்னால இந்த வார்த்தையை சொல்ல முடிஞ்சுது....?உன் மனசு உறுத்தலையா....?உன் மனசுல இருக்கிற என் மீதான காதல் உன்னைக் கேள்வி கேட்கலையா....?",வலியுடன் வினவினான் அவன்.
"ச்சே....!நீ இப்படி இருப்பேன்னு நான் நினைச்சுப் பார்க்கவே இல்லை டி....!இவ்வளவு நாள்...என்னைக் காதலிச்சியே....?அந்தக் காதல் பொய்யா....?எப்படி...ஒரு நிமிஷத்துல நான் வேண்டாம்...என்னுடைய காதல் வேண்டாம்ன்னு உன்னால முடிவெடுக்க முடிஞ்சுது....?",கோபம் இருந்த இடத்தை காதலின் ரணம் ஆக்ரமித்துக் கொள்ள....அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் வலியில் தோய்ந்து வந்தது.
அவன் குரலில் இருந்த வலி....அவன் கண்களில் தெரிந்த ரணம்...நித்திலாவின் காதல் இதயத்தை சுக்கு நூறாய் உடைத்துப் போட்டது.தன்னவனைப் பார்க்க முடியாமல்...விழிகளை அழுந்த மூடிக் கொண்டவளின் கண்ணோரங்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
'என்னை மன்னிச்சிடுங்க ஆது....!எனக்கு வேற வழி தெரியல...!என் அம்மா அப்பாவை என்னால உயிரோட சாகடிக்க முடியாது....!',மனதிற்குள் மருகியவள்...தன்னவனை உயிரோடு கொல்ல விழைந்தாள்.
ஒரு பெருமூச்சோடு விழிகளைத் திறந்தவள்,"என் அப்பாவுடைய நம்பிக்கையை என்னால கொல்ல முடியாது.....!வேண்டாம்....!ப்ளீஸ்....!என்னைப் புரிஞ்சுக்கோங்க....!அவங்க...அவங்க ரெண்டு பேரும் என் மேல எவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்காங்க தெரியுமா....?என் பெரியம்மா வந்து என்னைப் பத்தி தப்பு தப்பாய் சொல்லியும் கூட....என் அம்மா அப்பா...அவங்களை நம்பலை....!",அன்று வீட்டில் நடந்த அனைத்தையும் கூறியவள்..
"என் பொண்ணு மேல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குன்னு ஆணித்தரமா சொன்னாரு....!அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு என்னால துரோகம் பண்ண முடியாது....!அதுக்குத்தான் சொல்றேன்...!நாம விலகிக்கலாம்....!",மனம் வலிக்க வலிக்க அந்த வார்த்தைகளைக் கூறினாள் நித்திலா.
அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன்,"என் அப்பாவுடைய நம்பிக்கை...என் அப்பாவுடைய நம்பிக்கை அப்படின்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றியே டி....?அப்போ...என்னுடைய காதல்....?என்னுடைய காதலை எங்கே...குப்பையில தூக்கிப் போடப் போறியா....?நம்மளுடைய காதல் டி...!நம்மளுடைய காதல்....!அதை எப்படி அநாதை மாதிரி தூக்கிப் போட உனக்கு மனசு வந்தது.....?
என்னால முடியலையே டி....!நான் உன்னைக் காதலிக்கிறேன் டி....!காதல்...!காதல்ங்கிற வார்த்தைக்கான அர்த்தம் தெரியுமா டி உனக்கு....?உனக்கு எங்கே தெரியப் போகுது....?தெரிஞ்சிருந்தா...இப்படி என் காதலை அவமதிச்சிருக்க மாட்ட....!",அவன் முகத்தில் இதுவரை அவள் பார்த்திராத உணர்ச்சிகள் வந்து போயின.
இதழ்களை அழுந்தக் கடித்து...தன் மனதின் ரணத்தை மறைத்தவள்...'இளகிடாதே நித்தி....!இந்த யுத்தத்துல நீ...உன் பெத்தவங்க பக்கம் நிற்கிற....!அவங்களுக்காக நீ போராடித்தான் ஆகணும்....!',மனதிற்குள் உரு போட்டுக் கொண்டவள் ஒன்றை மறந்து விட்டாள்....!பெற்றவர்களுக்காக....அவர்களது நம்பிக்கைக்காக....தன்னுடைய உயிர்க்காதலை துடிக்கத் துடிக்க கொல்லப் போகிறாள் என்பதை மறந்து விட்டாள்....!
வாழ்க்கையில்....இரண்டையும் சரிசமமாக ஏற்று நடந்து பழக வேண்டும் என்பதை அந்த பேதைக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது....?
"இருபத்தியிரண்டு வருஷ சொந்தத்துக்காக....ஒரு வருட பந்தத்தை விடறது தப்பு இல்லை...!என் அப்பா கண்கள்ல தெரிஞ்ச நம்பிக்கையை என்னால சிதைக்க முடியாது....!",இதழ்கள்தான் கூறியதே தவிர..
அவளது விழிகள் அருவியாய் மாறி கண்ணீரைப் பொழிந்தன.அவளுடைய உயிர்க் காதல்....அவளுடைய இருதயத்தில் அமர்ந்து கதறி ஓலமிட்டுக் கொண்டிருந்தது.
"ஒரு வருடக் காதலா....?",கோபத்துடன் உதடுகளை மடித்து...இகழ்ச்சியாக ஒரு சிரிப்பை உதிர்த்தவன்..
"வெறும் ஒரு வருடக் காதல்....!என்னுடைய காதல்....உனக்கு வெறும் ஒரு வருடக் காதலா....?இருந்துட்டுப் போகட்டும்...!என்னுடைய இந்த வெறும் ஒரு வருடக் காதலுடைய ஆழத்தையும்...தீவிரத்தையும் நான் உனக்கு காட்டறேன்....!".அழுத்தமாக உரைத்தவன்...வேகமாகக் காரை கிளப்பினான்.
அவனுடைய அழுத்தமான வார்த்தைகளும்....அவனுடைய தீவிரமான பார்வையும்....அவளது முதுகுத் தண்டை ஜில்லிட வைத்தன.
'காதலுடைய ஆழத்தை எனக்கு காட்டறாரா....?இதுக்கு என்ன அர்த்தம்....?',யோசித்தவளுக்கு சத்தியமாய் விடை பிடிபடவில்லை.
அமைதியாய் விழிகளை அழுந்த மூடி சீட்டில் சாய்ந்தவளின் மனம் முழுவதும்....காதல் தன் ரணத்தை அழுத்தமாய் பதித்திருந்தது.அவளுடைய தந்தையின் நம்பிக்கை....அதை விட அழுத்தமாய் அவளது மூளையில் பதிந்திருந்தது.
'இல்லை....!அப்பாவுடைய நம்பிக்கைக்குத் துரோகம் பண்ண மாட்டேன்....!',திரும்பத் திரும்ப மந்திரம் போல் தனக்குள் சொல்லிக் கொண்டவள்....மெதுவாக கண்களைத் திறந்தாள்.கார் சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.
"நான் வேலையை ரிசைன் பண்ணிடலாம்ன்னு இருக்கேன்....!",அமைதியாய் அவள் கூற...அதை விட அமைதியாய் அவளைத் திரும்பிப் பார்த்தவன்..
"உன் இஷ்டம்....!",என்றான்.
அவனது பதிலில் அவள் ஆராய்ச்சியாய் அவன் முகம் பார்த்தாள்.அவன் முகத்தில் இருந்து அவளால் எதையும் அறிய முடியவில்லை.
'இவ்வளவு ஈஸியா...இந்த விஷயத்தை விடற ஆள் இல்லையே இவன்...?',அவள் மனதிற்குள் யோசனை ஓடிக் கொண்டிருந்தது.
"ரிசைன் பண்ணிட்டு....ஹாஸ்டலையும் காலி பண்ணிட்டு...நான் எங்க ஊருக்குக் கிளம்பறேன்....!",தட்டுத் தடுமாறி அவள் கூற..
அவனோ,"ம்....!",என்றான் அமைதியாக.
"என்னை மன்னிச்சிடுங்க ஆ.....",ஆது என்று கூற வந்தவள்...நாக்கை கடித்து அந்தப் பெயரை கூறாமல் தவிர்த்தாள்.அதை அவன் கண்டுகொண்டான்.அவன் இதழ்களில் மீண்டும் ஒரு இகழ்ச்சிப் புன்னகை இளக்காரமாய் வந்தமர்ந்தது....!
"அமைதியா யோசிச்சுப் பாருங்க....!என் நிலைமை புரியும்....!",என்றவள் சிறிது நேரம் அமைதியாகி விட்டாள்.
காதலுக்காக ஒரு மனம் போராட...பாசத்துக்காக ஒரு மனம் வாதாட...அந்தப் பாவை மிகவும் ஓய்ந்துதான் போனாள்.
"உங்களுக்கு என் மேல கோ..கோபம் இல்லையே....?",சொல்லக் கூடாததையெல்லாம் சொல்லி விட்டு....அபத்தமாய் வினவி வைத்தாள் அவள்.
இன்னதென்று விளங்காத ஒரு பார்வையை அவளை நோக்கி வீசியவன்,"உன் முடிவு...!நீ எடுத்திருக்கிற....!",அசால்ட்டாகத் தோளைக் குலுக்கியபடி கூறியவன்....சாலையில் தனது கவனத்தைத் திருப்பினான்.
மேற்கொண்டு இருவருக்கும் இடையில் எந்தவொரு பேச்சு வார்த்தையும் இல்லை.
ஆதித்யனின் மஹாபலிபுர பீச் கெஸ்ட் ஹவுஸின் முன் சென்று நின்றது கார்.
"இங்கே எதுக்கு வந்திருக்கிறோம்....?",மாலை கவிழ்ந்து இருட்ட ஆரம்பித்த நேரத்தில் அந்த பங்களாவின் முன் கார் நின்றது அவளுக்குப் பயத்தைக் கிளப்ப...சற்று பதட்டத்துடன் கேட்டாள் நித்திலா.
காவலாளி இல்லாமல்....ரிமோட் இயக்கத்தின் மூலம் திறக்கப்பட்ட அந்த மாளிகையின் பெரிய கதவுகளின் வழி ஓடிய நடைபாதையில் காரை செலுத்திய ஆதித்யன்,"அஜய் க்ரூப்ஸ் ஃபைல் வேணும்....!எடுத்துட்டுப் போகலாம்....!",என்றபடி அந்த போர்ட்டிக்கோவின் முன் காரை நிறுத்தினான்.
மிக முக்கியமான பைல்கள் அந்த வீட்டில்தான் இருக்கும்.அத்தோடு மிக முக்கியமான வேலைகளையும் அவன் அந்த வீட்டின் அலுவலக அறையில் அமர்ந்துதான் பார்ப்பான்.வேலை விஷயமாக அவளையும் பலமுறை அவன் அந்த வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான்.
எனவே...தைரியமாகவே இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள்.
ஒரு வெற்றிப் புன்னகையுடன் அவள் முதுகை வெறித்தவனின் கண்கள்...வேட்டையைக் குறி வைத்த சிங்கத்தின் விழிகளைப் போல் ஜொலித்தன.
காரின் டாஷ்போர்டில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்தவன்...கதவைத் திறந்து விட்டான்.உள்ளே நுழைந்தவள்...."அஜய் க்ரூப்ஸ் ஃபைல்தானே...?நான் போய் எடுத்துட்டு வர்றேன்....!",அவனிடம் உரைத்தபடி அலுவலக அறையை நோக்கி நடந்தாள்..
ஃபைலை எடுத்துக் கொண்டு அவள் வரும் போது....அவன்....இரு கைகளையும் விரித்து வைத்தபடி..தலையைப் பின்னால் சாய்த்து சோபாவில் அமர்ந்திருந்தான்.
அவன் அருகில் வந்தவள்,"கிளம்பலாமா....?",என வினா எழுப்ப..
மெதுவாக தலையை உயர்த்தி அவளைப் பார்த்தவன்...பார்த்துக் கொண்டே இருந்தான்.
இமைக்காத அவனுடைய வேட்டைப் பார்வையில்....அவளுக்குள் குளிரெடுத்தது.
"எ...என்ன....?கிள....ம்க்கும்...கிளம்பலாமா....!",தொண்டைக் குழியிலேயே சிக்கிக் கொண்ட வார்த்தைகளை வெகு சிரமப்பட்டு....வெளியில் கொண்டு வந்தாள்.
அப்பொழுதும் அசராமல் அவளை நோக்கி அதே பார்வையை செலுத்தியவன்....மெல்ல அந்த வார்த்தைகளை உச்சரித்தான்.
"ம்....போகலாம்....!நீ என் பொண்டாட்டியானதுக்குப் பிறகு....!",அழுத்தந் திருத்தமாய் வெறியோடு வந்து விழுந்த வார்த்தைகள் அவளை உலுக்கியது.அதைவிட அவனுடைய பார்வை....சிறு புள்ளிமானைக் குறி வைத்த புலியின் பார்வை....அவளுடைய தளிர் மேனியை நடுங்கச் செய்தது.
அதிர்ச்சியில் விழிகளை விரித்தவள்....அவசர அவசரமாகத் திரும்பி கதவைப் பார்த்தாள்.அது மூடப்பட்டிருந்தது....!வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போல வேகமாக கதவை நோக்கி ஓடியவள்....அதை திறக்க முயற்சிக்க...ம்ஹீம்....இம்மியளவு கூட அவளால் அதை அசைக்க முடியவில்லை.
"உன்னால அதை திறக்க முடியாது பேபி....!சாவி...இங்கே இருக்கு....!",தனக்குப் பின்னால் ஒலித்த குரலில் சடக்கென்று திரும்பிப் பார்த்தாள்.உதட்டை வளைத்து சிரித்தபடி சாவியை எடுத்து ஆட்டியவன்...அதை தனக்கு முன்னால் இருந்த டீபாயின் மீது வீசியெறிந்தான்.
புயல் போல் டீபாயை நோக்கி ஓடியவள்....அந்த சாவியை எடுக்க முயல,"அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு விடுவேனா பேபி...?",சிரிப்புடன் கூறியபடி அந்த சாவியை கைப்பற்றிக் கொண்டான்.
"அய்யோ....!எதுக்கு இப்படியெல்லாம் பண்றீங்க....?உங்களுக்கு என்னதான் வேணும்....?",பயத்தில் அழுதபடி அவள் கேட்க..
அவள் விழிகளுக்குள் தீர்க்கமாகப் பார்த்தவன்,"பதில்....!என்னுடைய காதலுக்கான பதில்....!",ஆங்காரமாய் கத்தினான் அவன்.
அரண்டு போய் நின்றிருந்தாள் நித்திலா.வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கியவன்,"என்னுடைய காதலுக்கான பதில் வேணும் டி....!கொஞ்சம் கூட யோசிக்காம....குப்பை மாதிரி என் காதலை தூக்கி எறிஞ்சியே....?அந்த காதலுக்கான பதில் வேணும்....!உன் அப்பாவுடைய நம்பிக்கைக்காக நம்மளுடைய காதலை அநாதையாக்கினாயே....?அதுக்கான பதில் வேணும்....!ஆனால் ஒண்ணு டி.....!நான் உயிரோட இருக்கிற வரைக்கும்....நம்மளுடைய காதலை சாக விட மாட்டேன்.....!",ஆத்திரமாய் கர்ஜித்தவன்...
"ச்சே....!",என்றபடி வெறுப்புடன் அவளைப் பிடித்துத் தள்ளிவிட....பக்கத்தில் கிடந்த சோபாவில் சென்று விழுந்தாள் அவள்.
அவனது கோபத்தைக் கண்டு நடுங்கிப் போனவள்....அந்த சோபாவிலேயே இரு கால்களையும் கட்டிக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.'உண்மைதானே....!எங்க காதலை நான் அநாதையாக்கிட்டேன்....!',அவள் மனம் கதறித் துடித்தது.
சிறிது நேரம்....கூண்டுப் புலி போல் உலாவியவன்....பிறகு ஒரு முடிவு எடுத்தவனாய்....அவளுக்கு எதிரில் போடப்பட்டிருந்த சோபாவில் வந்து அமர்ந்தான்.
அநாதரவாய் காலை கட்டிக் கொண்டு...சோபாவோடு ஒன்றியிருந்தவளைப் பார்த்தவனின் காதல் மனம் ஊமையாய் அழுதது.அச்சத்தில் மலங்க மலங்க....மருண்டு விழித்தவளின் பார்வையில் அவனது இறுக்கம் சற்றுக் குறைந்தது.அவள் கன்னத்தில் பதிந்திருந்த விரல் தடங்களைப் பார்த்தவனிடம் மீண்டும் கடினத்தன்மை வந்து குடியேறியது.
"இங்கே பாரு டி....!நாளைக்கு மறுநாள் நமக்கு கல்யாணம்....!",அவன் கூறி முடிப்பதற்குள்ளேயே அதிர்ச்சியுடன் எழுந்தவள்..
"நோ....!இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்....!",என்று கத்தினாள்.
"ஒகே....!நோ ப்ராப்ளம்....!வீணா ரெண்டு நாளை வேஸ்ட் பண்ண வேண்டியதில்லை....!",அசால்ட்டாய் தோளைக் குலுக்கினான் அவன்.
"என்...என்ன....?என்ன ரெண்டு நாள்...?",
"அதுதான் பேபி....!உனக்கு முன்னாடி நான் ரெண்டு ஆப்ஷனை வைக்கிறேன்....!ஒண்ணு...என் கையால தாலி வாங்கிட்டு என்னோட குடும்பம் நடத்து....!இல்ல...இப்பவே...இந்த நிமிஷமே என்கூட வாழ ஆரம்பி....!",எளிதாகக் கூறினான் அவன்.
அவள்தான்...அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டாள்.அவளது விழிகள் இரண்டும் அவன் மீதுதான் நிலைகுத்தி நின்றன.
"எதுக்கு பேபி இப்படி அதிர்ச்சியாகற....?நீ சொன்ன வார்த்தையைக் கேட்டும்...கோபப்பட்டு உன்னைத் தூக்கிட்டுப் போய் அப்பொழுதே தாலி கட்டாம....பொறுமையா யோசிச்சு...எவ்வளவு தாராள மனசோட உனக்கு ரெண்டு ஆப்ஷனை கொடுத்திருக்கிறேன்....?இந்த இரண்டு ஆப்ஷன்ல....நீ எதை வேணும்னாலும் சூஸ் பண்ணிக்கலாம் பேபி....!நோ ப்ராப்ளம்....!",அவன் தோளைக் குலுக்க..
அவளையும் அறியாமல்,"நோ....!",என்று கத்தியிருந்தாள் நித்திலா.
தலையை ஒரு புறமாக சரித்து அவளை ஏறிட்டவன்,"நோ சொல்றதுக்கான உரிமையை நீ எப்பவோ இழந்துட்ட பேபி....!வேணும்ன்னா உனக்காக ஒண்ணு பண்ணலாம்....!நாளைக்கு ஈவ்னிங் வரைக்கும் டைம் எடுத்துக்கோ....!நல்லா யோசி....!ஆனால்...நாளைக்கு நைட் எட்டு மணிக்கு...உன்னுடைய முடிவை நீ என்கிட்ட சொல்லியாகணும்....!
கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நீ சொன்னா...ஒகே...!நோ ப்ராப்ளம்....!நாளைக்கு மறுநாள் காலையில கோவில்ல கல்யாணம் பண்ணிக்கலாம்....!இல்லை...அம்மா அப்பா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நீ முரண்டு பிடிச்சா...நாளைய இரவு நமக்கான முதல் இரவா இருக்கும்....!",அவன் குரலில் அப்படியொரு உறுதி.
நித்திலா வியர்த்து விறுவிறுத்துப் போனாள்.'ஆதித்யனின் வலையில் வசமாக மாட்டியிருக்கிறோம்....!அவனிடம் இருந்து தப்பிக்க முடியாது....!',என்பது மட்டும் நன்கு புரிந்தது.ஆதித்யனின் பிடிவாதத்தைப் பற்றி அறிந்தவள் அல்லவா அவள்....?
"இல்ல....!ஆது....!இது தப்பு....!நீங்க தப்பான வழியில போறீங்க....!",
"'ஆது....!' என் பெயரை சொல்றதுக்கு உனக்கு இப்போதான் மனசு வந்துச்சா....?இவ்வளவு நேரம்...என் பெயரை உச்சரிச்சிடக் கூடாதுன்னு கவனமா இருந்தவள்தானே நீ....?",
அவனது கேள்வியில் அவள் உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டாள்.
"நீங்க பண்றது சரியில்லை ஆது....!என் அப்பாவுடைய நம்பிக்கைக்கு விரோதமா நான் எதையும் பண்ண மாட்டேன்....!தயவு செய்து இங்கே இருந்து கிளம்பிடலாம்...!வாங்க....!",கண்ணீர் வழியக் கெஞ்சியவளின் கெஞ்சலை அவன் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
"ஒகே பேபி....!அதோ...அந்த ரூமை நீ யூஸ் பண்ணிக்கோ....!அங்கே போய்...ஆசை தீர அழுது புலம்பி....நாளைக்கு ஒரு நல்ல முடிவா சொல்லு....!லாங் ட்ரைவ் பண்ணினதுல உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கு....!நான் போய் ஒரு குளியலைப் போட்டுட்டு வந்திடறேன்....!",அங்கிருந்த ஒரு அறையை அவளுக்குச் சுட்டிக்காட்டியவன்....அந்த அறைக்கு எதிரில் இருந்த அறைக்குள் நுழையப் போனான்.
ஒரு நிமிடம் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தவன்,"அப்புறம் பேபி....!உன்னுடைய ரூம் கதவுல லாக் இல்ல....!ஸோ...லாக் பண்ணிக்கிட்டு உள்ளேயே இருந்துக்கலாம்ன்னு முட்டாள்தனமா எதையும் யோசிக்காதே....!ஒகே....?",கேலிச் சிரிப்புடன் கூறியபடியே அறைக்குள் சென்று விட்டான்.
அகம் தொட வருவான்...!!!
ஆதித்யனின் காரில் அமர்ந்திருந்த நித்திலாவின் மனம் முழுக்க...ரணம்..ரணம்..ரணம் மட்டுமே....!பெற்றவர்களின் பாசத்தில் மூழ்கி முடிவெடுத்து விட்டாளே தவிர...தன்னவனின் முகம் பார்த்து...'நீ வேண்டாம்....!உன் காதல் வேண்டாம்....!',என்று அவளால் மட்டும் எப்படி சொல்ல முடியும்.....?
அவள் உயிரில் கலந்தவன் அல்லவா அவன்....?அவள் இதயத்துடிப்பில் உறைந்திருப்பவன் அல்லவா அவன்....?
மனதிற்குள் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருக்கும் காதலை....கசக்கி எறிவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்லவே....?
காரில் ஏறியதிலிருந்து அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் ஆதித்யன்.அவள் மனதிற்குள் ஏதோ போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தாலும்....அவன் வாயைத் திறந்து எதையும் கேட்கவில்லை.'அவளே கூறட்டும்....!' என்று அமைதி காத்தான்.
பிரம்மை பிடித்தவள் போல் சாலையையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் நித்திலா.விழிகளில் இருந்த கண்ணீரை இமை சிமிட்டி அடக்கினாள்.பயணம் நீண்டு கொண்டிருந்ததே தவிர...அவள் வாயைத் திறந்த பாடாக இல்லை.
போக்குவரத்து நெரிசல்கள் அடங்கி....கார் ஆரறவமற்ற நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தது.ஒரு பெருமூச்செடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டவள்....ஒரு முடிவோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ஆ....!", 'ஆது...!' என்று அவனை அழைக்க வந்தவள்....முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மொட்டையாக கூறினாள்.
ஒன்றும் பேசாமல் சாலையோரமாக இருந்த மரத்தடியில் காரை நிறுத்தியவன்....அவள் புறமாகத் திரும்பி அமர்ந்தபடி,"ம்....சொல்லு....!",என்று வினவினான்.
"அ...அது வந்து...",தன் கையில் அகப்பட்ட துப்பட்டாவின் நுனியைப் பிடித்துத் திருகியபடி மென்று விழுங்கிக் கொண்டிருந்தாள் அவள்.
அவளது வலது கையைப் பற்றி தனது இரு கைகளுக்கும் இடையில் வைத்து பொத்திக் கொண்டவன்,"என்ன தயக்கம் பேபி....?எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன்....!சொல்லு....!",காதலுடன் வினவியவனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல்....தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டவள்...அவன் பிடியிலிருந்த தனது கரத்தை மெதுவாக விலக்கிக் கொண்டாள்.
அவன் முகத்தை சந்திக்காமல்...வேறு எங்கோ தன் பார்வையை செலுத்தியவள்,"எல்லாத்தையும் இன்றோடு மு...முடிச்சுக்கலாம்....!",அவ்வளவுதான்....!அவள் கூறி முடித்த அடுத்த நொடி....அவன் கரம் இடியாய் அவள் கன்னத்தில் இறங்கியது.
அவன் அடித்த அடியில்....அவள் விழிகளில் இருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்தது.கன்னம் தீயாய் எரிய....அவளது வலது கை அவளையும் அறியாமல் உயர்ந்து சென்று அவள் கன்னத்தைப் பற்றிக் கொண்டது.
ஆக்ரோஷத்தின் மொத்த உருவமாய் ரௌத்திரத்துடன் அவளை முறைத்துக் கொன்டு அமர்ந்திருந்தான் ஆதித்யன்.
அவன் கழுத்து நரம்புகள் புடைத்த விதத்திலிருந்தும்.....கை முஷ்டி இறுகியதிலிருந்தும் அவனது கோபத்தை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.
"என்னடி சொன்ன....?",அவனுடைய உறுமலில் மேனி நடுங்க அவள் கார்க்கதவோடு சென்று ஒன்றிக் கொண்டாள்.விழிகளில் கண்ணீரோடு....கன்னத்தை ஒரு கையால் தாங்கியபடி அதிர்ச்சியுடன் தன்னை நோக்கியவளைக் கண்டு அவன் சிறிதும் இளகவில்லை.
"என்ன சொன்னேன்னு கேட்டேன்.....?",அவன் கத்திய கத்தலில் உடல் தூக்கி வாரிப் போட நிமிர்ந்தவள்..
ஒருவாறாகத் தைரியத்தைத் திரட்டிக் கொண்டு,"இ...இத்தோட எல்லாத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வை....வைச்சிடலாம்....!",திக்கித் திணறி கூறி முடித்தவள்....அவனிடம் இருந்து மீண்டும் ஒரு அறையை வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
அவனுடைய இரும்புக்கரம் அவளுடைய மென்மையான கன்னங்களை முரட்டுத்தனமாக பதம் பார்த்ததில்....அவளுக்கு இருட்டிக் கொண்டு வந்தது.கண்களில் பூச்சி பறக்க....எதிரில் அமர்ந்திருந்தவனின் உருவம் மங்கலாகத் தெரிய ஆரம்பிக்க....தாள முடியாமல் கார் சீட்டில் சாய்ந்து கொண்டாள்.
அவளது நிலையை உணர்ந்தவனாய்...காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் மடியில் விட்டெறிந்தவன்,"குடி....!",என்றான் உறுமலாக.
அவனுடைய அரட்டலில்....அவசர அவசரமாக பாட்டிலை எடுத்து தன் வாயில் சரித்துக் கொண்டாள்.அதன் பிறகுதான் கொஞ்சம் தெளிவே வந்தது.
'கோபப்படத்தான் செய்வார்....!ஆத்திரப்பட்டு அடிக்கத்தான் செய்வார்....!இன்னைக்கு என்ன ஆனாலும் சரி....!என் முடிவை தெளிவா இவர்கிட்ட சொல்லாம விடப்போவதில்லை....!',மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டவள்....ஒரு முடிவோடு நிமிர்ந்தாள்.
அவளுடைய நிமிர்வில் அவன் புருவம் சுருங்கியது.கண்கள் இடுங்க அவளை வெறித்தவன்,"ஸோ....ஒரு முடிவோடுதான் வந்திருக்க....!அப்படித்தானே....?",அவன் பார்வை அவளைக் குத்திக் கிழித்தது.
அவனது பார்வையில் வெலவெலத்த மனதை வெகு சிரமப்பட்டு தைரியப்படுத்தியவள்,"ஆமாம்....!",என்றாள் அழுத்தமாக.
"என்ன முடிவு....?",அவன் பார்வை அவள் கண்களை விட்டு இம்மியளவும் அகலவில்லை.
"நாம....நாம...பிரிஞ்சுடலாம்....!",இதைக் கூறும் போதே....கூர்மையான கத்தியை வைத்து தன் இதயத்தை யாரோ குத்திக் கிழித்து ரணமாக்கும் வலியை அனுபவித்தாள் நித்திலா.
வந்த ஆத்திரத்தில் அவளை அறைவதற்காக கையை ஓங்கியவன்....அவளது கன்னத்தில் செக்கச் செவேலென்று பதிந்திருந்த தனது விரல் தடத்தைப் பார்த்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
'இன்னும் ஒரு அடி அடிச்சாலும் தாங்க மாட்டாள்....!',அவ்வளவு கோபத்திலும் காதல் மனம் அவளுக்காய் பரிதாபப்பட....இயலாமையில்,"ச்சே.....!",என்று கத்தியபடி ஸ்டியரிங்கை ஓங்கி குத்தினான்.
இருகைகளாலும் ஸ்டியரிங்கை இறுகப் பற்றியபடி அவன் கோபத்தைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்க....அவளோ மேலும் பேச ஆரம்பித்தாள்.
"போதும்....!நம்மளுடைய காதல்...உறவு எல்லாமே போதும்....!எல்லாத்துக்கும் இன்றோடு முற்றுப்புள்ளி வைச்சிடலாம்....!",மேலும் என்ன கூறியிருப்பாளோ....அதற்குள் கோபத்தைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்தவனின் பார்வையில் அவளது மொபைல் வந்து விழ...ஆங்காரமாய் அதை எடுத்து சாலையில் தூக்கியெறிந்தான் ஆதித்யன்.
அவள் மீது காட்ட முடியாத கோபத்தை.....அவளது மொபைலின் மீது அவன் காட்டியிருக்க...அதைத் தாங்க முடியாமல் அந்த மொபைல் சுக்கு நூறாய் உடைந்து போனது.
"எப்படி டி....?எப்படி உன்னால இந்த வார்த்தையை சொல்ல முடிஞ்சுது....?உன் மனசு உறுத்தலையா....?உன் மனசுல இருக்கிற என் மீதான காதல் உன்னைக் கேள்வி கேட்கலையா....?",வலியுடன் வினவினான் அவன்.
"ச்சே....!நீ இப்படி இருப்பேன்னு நான் நினைச்சுப் பார்க்கவே இல்லை டி....!இவ்வளவு நாள்...என்னைக் காதலிச்சியே....?அந்தக் காதல் பொய்யா....?எப்படி...ஒரு நிமிஷத்துல நான் வேண்டாம்...என்னுடைய காதல் வேண்டாம்ன்னு உன்னால முடிவெடுக்க முடிஞ்சுது....?",கோபம் இருந்த இடத்தை காதலின் ரணம் ஆக்ரமித்துக் கொள்ள....அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் வலியில் தோய்ந்து வந்தது.
அவன் குரலில் இருந்த வலி....அவன் கண்களில் தெரிந்த ரணம்...நித்திலாவின் காதல் இதயத்தை சுக்கு நூறாய் உடைத்துப் போட்டது.தன்னவனைப் பார்க்க முடியாமல்...விழிகளை அழுந்த மூடிக் கொண்டவளின் கண்ணோரங்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
'என்னை மன்னிச்சிடுங்க ஆது....!எனக்கு வேற வழி தெரியல...!என் அம்மா அப்பாவை என்னால உயிரோட சாகடிக்க முடியாது....!',மனதிற்குள் மருகியவள்...தன்னவனை உயிரோடு கொல்ல விழைந்தாள்.
ஒரு பெருமூச்சோடு விழிகளைத் திறந்தவள்,"என் அப்பாவுடைய நம்பிக்கையை என்னால கொல்ல முடியாது.....!வேண்டாம்....!ப்ளீஸ்....!என்னைப் புரிஞ்சுக்கோங்க....!அவங்க...அவங்க ரெண்டு பேரும் என் மேல எவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்காங்க தெரியுமா....?என் பெரியம்மா வந்து என்னைப் பத்தி தப்பு தப்பாய் சொல்லியும் கூட....என் அம்மா அப்பா...அவங்களை நம்பலை....!",அன்று வீட்டில் நடந்த அனைத்தையும் கூறியவள்..
"என் பொண்ணு மேல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குன்னு ஆணித்தரமா சொன்னாரு....!அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு என்னால துரோகம் பண்ண முடியாது....!அதுக்குத்தான் சொல்றேன்...!நாம விலகிக்கலாம்....!",மனம் வலிக்க வலிக்க அந்த வார்த்தைகளைக் கூறினாள் நித்திலா.
அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன்,"என் அப்பாவுடைய நம்பிக்கை...என் அப்பாவுடைய நம்பிக்கை அப்படின்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றியே டி....?அப்போ...என்னுடைய காதல்....?என்னுடைய காதலை எங்கே...குப்பையில தூக்கிப் போடப் போறியா....?நம்மளுடைய காதல் டி...!நம்மளுடைய காதல்....!அதை எப்படி அநாதை மாதிரி தூக்கிப் போட உனக்கு மனசு வந்தது.....?
என்னால முடியலையே டி....!நான் உன்னைக் காதலிக்கிறேன் டி....!காதல்...!காதல்ங்கிற வார்த்தைக்கான அர்த்தம் தெரியுமா டி உனக்கு....?உனக்கு எங்கே தெரியப் போகுது....?தெரிஞ்சிருந்தா...இப்படி என் காதலை அவமதிச்சிருக்க மாட்ட....!",அவன் முகத்தில் இதுவரை அவள் பார்த்திராத உணர்ச்சிகள் வந்து போயின.
இதழ்களை அழுந்தக் கடித்து...தன் மனதின் ரணத்தை மறைத்தவள்...'இளகிடாதே நித்தி....!இந்த யுத்தத்துல நீ...உன் பெத்தவங்க பக்கம் நிற்கிற....!அவங்களுக்காக நீ போராடித்தான் ஆகணும்....!',மனதிற்குள் உரு போட்டுக் கொண்டவள் ஒன்றை மறந்து விட்டாள்....!பெற்றவர்களுக்காக....அவர்களது நம்பிக்கைக்காக....தன்னுடைய உயிர்க்காதலை துடிக்கத் துடிக்க கொல்லப் போகிறாள் என்பதை மறந்து விட்டாள்....!
வாழ்க்கையில்....இரண்டையும் சரிசமமாக ஏற்று நடந்து பழக வேண்டும் என்பதை அந்த பேதைக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது....?
"இருபத்தியிரண்டு வருஷ சொந்தத்துக்காக....ஒரு வருட பந்தத்தை விடறது தப்பு இல்லை...!என் அப்பா கண்கள்ல தெரிஞ்ச நம்பிக்கையை என்னால சிதைக்க முடியாது....!",இதழ்கள்தான் கூறியதே தவிர..
அவளது விழிகள் அருவியாய் மாறி கண்ணீரைப் பொழிந்தன.அவளுடைய உயிர்க் காதல்....அவளுடைய இருதயத்தில் அமர்ந்து கதறி ஓலமிட்டுக் கொண்டிருந்தது.
"ஒரு வருடக் காதலா....?",கோபத்துடன் உதடுகளை மடித்து...இகழ்ச்சியாக ஒரு சிரிப்பை உதிர்த்தவன்..
"வெறும் ஒரு வருடக் காதல்....!என்னுடைய காதல்....உனக்கு வெறும் ஒரு வருடக் காதலா....?இருந்துட்டுப் போகட்டும்...!என்னுடைய இந்த வெறும் ஒரு வருடக் காதலுடைய ஆழத்தையும்...தீவிரத்தையும் நான் உனக்கு காட்டறேன்....!".அழுத்தமாக உரைத்தவன்...வேகமாகக் காரை கிளப்பினான்.
அவனுடைய அழுத்தமான வார்த்தைகளும்....அவனுடைய தீவிரமான பார்வையும்....அவளது முதுகுத் தண்டை ஜில்லிட வைத்தன.
'காதலுடைய ஆழத்தை எனக்கு காட்டறாரா....?இதுக்கு என்ன அர்த்தம்....?',யோசித்தவளுக்கு சத்தியமாய் விடை பிடிபடவில்லை.
அமைதியாய் விழிகளை அழுந்த மூடி சீட்டில் சாய்ந்தவளின் மனம் முழுவதும்....காதல் தன் ரணத்தை அழுத்தமாய் பதித்திருந்தது.அவளுடைய தந்தையின் நம்பிக்கை....அதை விட அழுத்தமாய் அவளது மூளையில் பதிந்திருந்தது.
'இல்லை....!அப்பாவுடைய நம்பிக்கைக்குத் துரோகம் பண்ண மாட்டேன்....!',திரும்பத் திரும்ப மந்திரம் போல் தனக்குள் சொல்லிக் கொண்டவள்....மெதுவாக கண்களைத் திறந்தாள்.கார் சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.
"நான் வேலையை ரிசைன் பண்ணிடலாம்ன்னு இருக்கேன்....!",அமைதியாய் அவள் கூற...அதை விட அமைதியாய் அவளைத் திரும்பிப் பார்த்தவன்..
"உன் இஷ்டம்....!",என்றான்.
அவனது பதிலில் அவள் ஆராய்ச்சியாய் அவன் முகம் பார்த்தாள்.அவன் முகத்தில் இருந்து அவளால் எதையும் அறிய முடியவில்லை.
'இவ்வளவு ஈஸியா...இந்த விஷயத்தை விடற ஆள் இல்லையே இவன்...?',அவள் மனதிற்குள் யோசனை ஓடிக் கொண்டிருந்தது.
"ரிசைன் பண்ணிட்டு....ஹாஸ்டலையும் காலி பண்ணிட்டு...நான் எங்க ஊருக்குக் கிளம்பறேன்....!",தட்டுத் தடுமாறி அவள் கூற..
அவனோ,"ம்....!",என்றான் அமைதியாக.
"என்னை மன்னிச்சிடுங்க ஆ.....",ஆது என்று கூற வந்தவள்...நாக்கை கடித்து அந்தப் பெயரை கூறாமல் தவிர்த்தாள்.அதை அவன் கண்டுகொண்டான்.அவன் இதழ்களில் மீண்டும் ஒரு இகழ்ச்சிப் புன்னகை இளக்காரமாய் வந்தமர்ந்தது....!
"அமைதியா யோசிச்சுப் பாருங்க....!என் நிலைமை புரியும்....!",என்றவள் சிறிது நேரம் அமைதியாகி விட்டாள்.
காதலுக்காக ஒரு மனம் போராட...பாசத்துக்காக ஒரு மனம் வாதாட...அந்தப் பாவை மிகவும் ஓய்ந்துதான் போனாள்.
"உங்களுக்கு என் மேல கோ..கோபம் இல்லையே....?",சொல்லக் கூடாததையெல்லாம் சொல்லி விட்டு....அபத்தமாய் வினவி வைத்தாள் அவள்.
இன்னதென்று விளங்காத ஒரு பார்வையை அவளை நோக்கி வீசியவன்,"உன் முடிவு...!நீ எடுத்திருக்கிற....!",அசால்ட்டாகத் தோளைக் குலுக்கியபடி கூறியவன்....சாலையில் தனது கவனத்தைத் திருப்பினான்.
மேற்கொண்டு இருவருக்கும் இடையில் எந்தவொரு பேச்சு வார்த்தையும் இல்லை.
ஆதித்யனின் மஹாபலிபுர பீச் கெஸ்ட் ஹவுஸின் முன் சென்று நின்றது கார்.
"இங்கே எதுக்கு வந்திருக்கிறோம்....?",மாலை கவிழ்ந்து இருட்ட ஆரம்பித்த நேரத்தில் அந்த பங்களாவின் முன் கார் நின்றது அவளுக்குப் பயத்தைக் கிளப்ப...சற்று பதட்டத்துடன் கேட்டாள் நித்திலா.
காவலாளி இல்லாமல்....ரிமோட் இயக்கத்தின் மூலம் திறக்கப்பட்ட அந்த மாளிகையின் பெரிய கதவுகளின் வழி ஓடிய நடைபாதையில் காரை செலுத்திய ஆதித்யன்,"அஜய் க்ரூப்ஸ் ஃபைல் வேணும்....!எடுத்துட்டுப் போகலாம்....!",என்றபடி அந்த போர்ட்டிக்கோவின் முன் காரை நிறுத்தினான்.
மிக முக்கியமான பைல்கள் அந்த வீட்டில்தான் இருக்கும்.அத்தோடு மிக முக்கியமான வேலைகளையும் அவன் அந்த வீட்டின் அலுவலக அறையில் அமர்ந்துதான் பார்ப்பான்.வேலை விஷயமாக அவளையும் பலமுறை அவன் அந்த வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான்.
எனவே...தைரியமாகவே இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள்.
ஒரு வெற்றிப் புன்னகையுடன் அவள் முதுகை வெறித்தவனின் கண்கள்...வேட்டையைக் குறி வைத்த சிங்கத்தின் விழிகளைப் போல் ஜொலித்தன.
காரின் டாஷ்போர்டில் இருந்த சாவியை எடுத்துக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்தவன்...கதவைத் திறந்து விட்டான்.உள்ளே நுழைந்தவள்...."அஜய் க்ரூப்ஸ் ஃபைல்தானே...?நான் போய் எடுத்துட்டு வர்றேன்....!",அவனிடம் உரைத்தபடி அலுவலக அறையை நோக்கி நடந்தாள்..
ஃபைலை எடுத்துக் கொண்டு அவள் வரும் போது....அவன்....இரு கைகளையும் விரித்து வைத்தபடி..தலையைப் பின்னால் சாய்த்து சோபாவில் அமர்ந்திருந்தான்.
அவன் அருகில் வந்தவள்,"கிளம்பலாமா....?",என வினா எழுப்ப..
மெதுவாக தலையை உயர்த்தி அவளைப் பார்த்தவன்...பார்த்துக் கொண்டே இருந்தான்.
இமைக்காத அவனுடைய வேட்டைப் பார்வையில்....அவளுக்குள் குளிரெடுத்தது.
"எ...என்ன....?கிள....ம்க்கும்...கிளம்பலாமா....!",தொண்டைக் குழியிலேயே சிக்கிக் கொண்ட வார்த்தைகளை வெகு சிரமப்பட்டு....வெளியில் கொண்டு வந்தாள்.
அப்பொழுதும் அசராமல் அவளை நோக்கி அதே பார்வையை செலுத்தியவன்....மெல்ல அந்த வார்த்தைகளை உச்சரித்தான்.
"ம்....போகலாம்....!நீ என் பொண்டாட்டியானதுக்குப் பிறகு....!",அழுத்தந் திருத்தமாய் வெறியோடு வந்து விழுந்த வார்த்தைகள் அவளை உலுக்கியது.அதைவிட அவனுடைய பார்வை....சிறு புள்ளிமானைக் குறி வைத்த புலியின் பார்வை....அவளுடைய தளிர் மேனியை நடுங்கச் செய்தது.
அதிர்ச்சியில் விழிகளை விரித்தவள்....அவசர அவசரமாகத் திரும்பி கதவைப் பார்த்தாள்.அது மூடப்பட்டிருந்தது....!வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப் போல வேகமாக கதவை நோக்கி ஓடியவள்....அதை திறக்க முயற்சிக்க...ம்ஹீம்....இம்மியளவு கூட அவளால் அதை அசைக்க முடியவில்லை.
"உன்னால அதை திறக்க முடியாது பேபி....!சாவி...இங்கே இருக்கு....!",தனக்குப் பின்னால் ஒலித்த குரலில் சடக்கென்று திரும்பிப் பார்த்தாள்.உதட்டை வளைத்து சிரித்தபடி சாவியை எடுத்து ஆட்டியவன்...அதை தனக்கு முன்னால் இருந்த டீபாயின் மீது வீசியெறிந்தான்.
புயல் போல் டீபாயை நோக்கி ஓடியவள்....அந்த சாவியை எடுக்க முயல,"அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு விடுவேனா பேபி...?",சிரிப்புடன் கூறியபடி அந்த சாவியை கைப்பற்றிக் கொண்டான்.
"அய்யோ....!எதுக்கு இப்படியெல்லாம் பண்றீங்க....?உங்களுக்கு என்னதான் வேணும்....?",பயத்தில் அழுதபடி அவள் கேட்க..
அவள் விழிகளுக்குள் தீர்க்கமாகப் பார்த்தவன்,"பதில்....!என்னுடைய காதலுக்கான பதில்....!",ஆங்காரமாய் கத்தினான் அவன்.
அரண்டு போய் நின்றிருந்தாள் நித்திலா.வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கியவன்,"என்னுடைய காதலுக்கான பதில் வேணும் டி....!கொஞ்சம் கூட யோசிக்காம....குப்பை மாதிரி என் காதலை தூக்கி எறிஞ்சியே....?அந்த காதலுக்கான பதில் வேணும்....!உன் அப்பாவுடைய நம்பிக்கைக்காக நம்மளுடைய காதலை அநாதையாக்கினாயே....?அதுக்கான பதில் வேணும்....!ஆனால் ஒண்ணு டி.....!நான் உயிரோட இருக்கிற வரைக்கும்....நம்மளுடைய காதலை சாக விட மாட்டேன்.....!",ஆத்திரமாய் கர்ஜித்தவன்...
"ச்சே....!",என்றபடி வெறுப்புடன் அவளைப் பிடித்துத் தள்ளிவிட....பக்கத்தில் கிடந்த சோபாவில் சென்று விழுந்தாள் அவள்.
அவனது கோபத்தைக் கண்டு நடுங்கிப் போனவள்....அந்த சோபாவிலேயே இரு கால்களையும் கட்டிக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.'உண்மைதானே....!எங்க காதலை நான் அநாதையாக்கிட்டேன்....!',அவள் மனம் கதறித் துடித்தது.
சிறிது நேரம்....கூண்டுப் புலி போல் உலாவியவன்....பிறகு ஒரு முடிவு எடுத்தவனாய்....அவளுக்கு எதிரில் போடப்பட்டிருந்த சோபாவில் வந்து அமர்ந்தான்.
அநாதரவாய் காலை கட்டிக் கொண்டு...சோபாவோடு ஒன்றியிருந்தவளைப் பார்த்தவனின் காதல் மனம் ஊமையாய் அழுதது.அச்சத்தில் மலங்க மலங்க....மருண்டு விழித்தவளின் பார்வையில் அவனது இறுக்கம் சற்றுக் குறைந்தது.அவள் கன்னத்தில் பதிந்திருந்த விரல் தடங்களைப் பார்த்தவனிடம் மீண்டும் கடினத்தன்மை வந்து குடியேறியது.
"இங்கே பாரு டி....!நாளைக்கு மறுநாள் நமக்கு கல்யாணம்....!",அவன் கூறி முடிப்பதற்குள்ளேயே அதிர்ச்சியுடன் எழுந்தவள்..
"நோ....!இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்....!",என்று கத்தினாள்.
"ஒகே....!நோ ப்ராப்ளம்....!வீணா ரெண்டு நாளை வேஸ்ட் பண்ண வேண்டியதில்லை....!",அசால்ட்டாய் தோளைக் குலுக்கினான் அவன்.
"என்...என்ன....?என்ன ரெண்டு நாள்...?",
"அதுதான் பேபி....!உனக்கு முன்னாடி நான் ரெண்டு ஆப்ஷனை வைக்கிறேன்....!ஒண்ணு...என் கையால தாலி வாங்கிட்டு என்னோட குடும்பம் நடத்து....!இல்ல...இப்பவே...இந்த நிமிஷமே என்கூட வாழ ஆரம்பி....!",எளிதாகக் கூறினான் அவன்.
அவள்தான்...அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டாள்.அவளது விழிகள் இரண்டும் அவன் மீதுதான் நிலைகுத்தி நின்றன.
"எதுக்கு பேபி இப்படி அதிர்ச்சியாகற....?நீ சொன்ன வார்த்தையைக் கேட்டும்...கோபப்பட்டு உன்னைத் தூக்கிட்டுப் போய் அப்பொழுதே தாலி கட்டாம....பொறுமையா யோசிச்சு...எவ்வளவு தாராள மனசோட உனக்கு ரெண்டு ஆப்ஷனை கொடுத்திருக்கிறேன்....?இந்த இரண்டு ஆப்ஷன்ல....நீ எதை வேணும்னாலும் சூஸ் பண்ணிக்கலாம் பேபி....!நோ ப்ராப்ளம்....!",அவன் தோளைக் குலுக்க..
அவளையும் அறியாமல்,"நோ....!",என்று கத்தியிருந்தாள் நித்திலா.
தலையை ஒரு புறமாக சரித்து அவளை ஏறிட்டவன்,"நோ சொல்றதுக்கான உரிமையை நீ எப்பவோ இழந்துட்ட பேபி....!வேணும்ன்னா உனக்காக ஒண்ணு பண்ணலாம்....!நாளைக்கு ஈவ்னிங் வரைக்கும் டைம் எடுத்துக்கோ....!நல்லா யோசி....!ஆனால்...நாளைக்கு நைட் எட்டு மணிக்கு...உன்னுடைய முடிவை நீ என்கிட்ட சொல்லியாகணும்....!
கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நீ சொன்னா...ஒகே...!நோ ப்ராப்ளம்....!நாளைக்கு மறுநாள் காலையில கோவில்ல கல்யாணம் பண்ணிக்கலாம்....!இல்லை...அம்மா அப்பா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நீ முரண்டு பிடிச்சா...நாளைய இரவு நமக்கான முதல் இரவா இருக்கும்....!",அவன் குரலில் அப்படியொரு உறுதி.
நித்திலா வியர்த்து விறுவிறுத்துப் போனாள்.'ஆதித்யனின் வலையில் வசமாக மாட்டியிருக்கிறோம்....!அவனிடம் இருந்து தப்பிக்க முடியாது....!',என்பது மட்டும் நன்கு புரிந்தது.ஆதித்யனின் பிடிவாதத்தைப் பற்றி அறிந்தவள் அல்லவா அவள்....?
"இல்ல....!ஆது....!இது தப்பு....!நீங்க தப்பான வழியில போறீங்க....!",
"'ஆது....!' என் பெயரை சொல்றதுக்கு உனக்கு இப்போதான் மனசு வந்துச்சா....?இவ்வளவு நேரம்...என் பெயரை உச்சரிச்சிடக் கூடாதுன்னு கவனமா இருந்தவள்தானே நீ....?",
அவனது கேள்வியில் அவள் உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டாள்.
"நீங்க பண்றது சரியில்லை ஆது....!என் அப்பாவுடைய நம்பிக்கைக்கு விரோதமா நான் எதையும் பண்ண மாட்டேன்....!தயவு செய்து இங்கே இருந்து கிளம்பிடலாம்...!வாங்க....!",கண்ணீர் வழியக் கெஞ்சியவளின் கெஞ்சலை அவன் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
"ஒகே பேபி....!அதோ...அந்த ரூமை நீ யூஸ் பண்ணிக்கோ....!அங்கே போய்...ஆசை தீர அழுது புலம்பி....நாளைக்கு ஒரு நல்ல முடிவா சொல்லு....!லாங் ட்ரைவ் பண்ணினதுல உடம்பெல்லாம் ஒரே வலியா இருக்கு....!நான் போய் ஒரு குளியலைப் போட்டுட்டு வந்திடறேன்....!",அங்கிருந்த ஒரு அறையை அவளுக்குச் சுட்டிக்காட்டியவன்....அந்த அறைக்கு எதிரில் இருந்த அறைக்குள் நுழையப் போனான்.
ஒரு நிமிடம் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தவன்,"அப்புறம் பேபி....!உன்னுடைய ரூம் கதவுல லாக் இல்ல....!ஸோ...லாக் பண்ணிக்கிட்டு உள்ளேயே இருந்துக்கலாம்ன்னு முட்டாள்தனமா எதையும் யோசிக்காதே....!ஒகே....?",கேலிச் சிரிப்புடன் கூறியபடியே அறைக்குள் சென்று விட்டான்.
அகம் தொட வருவான்...!!!