Aara dilfar
Member
- Messages
- 46
- Reaction score
- 85
- Points
- 18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு - 30
மெல்லிய வெளிச்சம் தரணியெங்கும் பரவ அப்பொழுது தான் புலர்ந்து கொண்டிருந்தது காலைப் பொழுது கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப்பசேல் என்ற புல்வெளி மலை மகளைப் போர்த்தியிருக்க வெண்பஞ்சு போல் பனி்மூட்டங்கள் அந்த மலை மகளை தொட்டுத் தழுவதும் சற்று விலகுவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தன. தன் செங்கதிர்களைப் பரப்பி கீழ் வானை சிவக்க வைத்தவனாய் சூரிய நாயகன் மெல்ல மேலெழத் தொடங்க பனிமூட்டங்களோ மலை மகளை விட்டு விலக முடியாமல் அதனுடன் ஒட்டிக் கொள்ள துடித்திருக்க அப்போது அந்த மேகமூட்டங்களுக்கு இடையே வானிலிருந்து இறங்கிய தேவதையாய் வெண்ணிற ஆடை உடுத்தி வெண்மலர்களை மகுடமாய் தலைக்குச் சூடியவளின் கார்கூந்தல் காற்றிலாட மெல்லிய வெண்ணிற கையுறை அணிந்த நுனி விரலால் நதிபோல் நீண்ட தன் ஆடையை தூக்கிப் பிடித்தவாறு அணங்கவளோ அவனை நோக்கி மெல்ல அடிவைத்து வர அவள் அழகில் மயங்கி தங்களின் விளையாட்டை மறந்து அவளையே ரசித்தவாறு அந்த அழகுப் பதுமைக்காக வழி விட்டு விலகி நின்றன அந்த வெண்பஞ்சு மேகங்கள். கருநிற சூட்டில் ஆணழகனாய் கைகள் சிவப்பு ரோஜாக்களை ஏந்தியிருக்க வாய் கொள்ளாச் சிரிப்போடு முகம் முழுக்க சந்தோசம் பரவியிருக்க நாயகன் விழிகளோ அந்த அணங்கின் மேலிருக்க அவனிடம் நெருங்கிய அந்த அழகியின் வதனமோ மகிழ்ச்சியை முழுதாய் தொலைத்து வாடிய மலராயிருந்தது. பெண்ணவளின் களையிழந்த முகத்தினைக் கண்ட அந்த நொடி காளையின் மனமும் மகிழ்ச்சியைத் தொலைத்தது. அவளை நெருங்கி தன் மார்போடு அணைத்து அவள் பிறைநுதலில் தன் இதழ்களை பதித்தவனின் ஸ்பரிஷத்தை தனக்குள் நிறைத்துக் கொண்டாள் பாவை. தன் கைகள் ஏந்தியிருந்த அந்த அழகிய ரோஜாக்களை கொண்ட மலர்கொத்தை அவள் கைகளில் கொடுக்க அதனை வாங்காது பெண்ணவளோ சட்டென்று அவனை விட்டு விலக நாயகனும் புரியாமல் கேள்வியாய் நோக்கினான். அவன் விழிக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவள் லேசாக நீர் திரையிட்ட கண்களுடன் அவ்விடத்திலிருந்து திரும்பி நடக்க அவளை அழைத்துக் கொண்டே அவனும் பெண்ணவளை பின் தொடர்ந்தான் சென்றவளோ அங்கே மணக் கோலத்திலிருந்த பாவையின் வளைகரத்தைப் பற்றியவளாய் தன்னைத் தொடர்ந்தவன் முன் வந்தாள். நாயகனோ தன் தேவதையையும் அவள் கைப்பற்றி வந்த அந்த வளைகரத்தவளையும் கண்டு தடுமாறி நிற்க சட்டென்று நாயகனின் கைகளிலிலிருந்த மலர்கொத்தை பிடுங்கி வளைகரத்தவளுக்குப் பரிசாய் கொடுத்தவள் காளையின் வலிய கரத்தை தன் மென்கரங்களில் ஏந்தி வளைகரத்தாளின் கைகளை தன் மறுகரத்தால் எடுத்தவள் உதட்டில் புன்னகையிருக்க கண்களில் நீர் நிறைந்திருக்க உள்ளம் முழுக்க ரணமாய் வலிக்க இருகரங்களையும் இணைத்தவள் மனதார வாழ்த்திய மறுநொடி அவர்களை விட்டு விலகிச் செல்ல தாங்க முடியாத காளையவனோ தன் கரங்களோடு இணைந்திருந்த வளைகரத்தவளின் கரங்களை உதறிவிட்டு
"என்னை விட்டுப் போகாதே உன்கூட என்னையும் கூட்டிட்டுப் போயிடு நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுப் பார்க்கவும் முடியாது போகாதே வேண்டாம்மா என்னை விட்டுப் போகாதே" அவள் பின்னோடே கெஞ்சிக் கொண்டு அவனும் நடக்க ஆனால் பாவையவளோ நடையை நிறுத்தாது வேகமாக நடந்து கொண்டே
"போயிடுங்க உங்க வாழ்க்கை நான் இல்லை உங்களுக்காக உங்களையே நினச்சிட்டிருக்க உங்க வாழ்க்கை அதோ அங்க இருக்கு" கைகளை நீட்டி வளைகரத்தவளைக் காட்டியவள் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிறிது நேரத்தில் காற்றோடு காற்றாக கரைந்து அவளுக்காய் வழிவிட்ட அந்த வெண்பஞ்சு மேகங்களுக்குள்ளே மறைந்தவள் அவனை விட்டு தொலைதூரமாய் சென்றுவிட்டாள். தாங்க முடியாதவன் தன்னை மறந்து
"என்னை விட்டுப் போகாதே திரும்பி வந்துவிடு" எனக் கத்திக் கொண்டே மண்ணில் மண்டியிட்டவன் தன் முகத்தில் அடித்துக் கொண்டு கதறித்துடித்தான்.
"ஆ... ஐயோ டேய் மச்சான் என்னடா ஆச்சு ஏன்டா இப்படிக் கத்திட்டிருக்கே." பக்கத்தில் படுத்திருந்த சங்கர் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தான்.
"நீ இல்லாம நானில்ல என்னை விட்டுப் போகாதே......." ஆதித்யன் தூக்கத்தில் ஏதோ பிதற்றிக் கொண்டிருக்க அவனை தட்டி எழுப்பினான் அவன் நண்பன்.
"தாரா வந்துடும்மா தாரா....." கத்திக் கொண்டே எழுந்தமர
"தாராவா அவ எங்கடா இங்க வந்தா நாம இப்போ கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கம் மச்சான் அவ வீட்ட இருக்கிறாடா அதுவும் நல்ல தூக்கத்துல இருப்பா ஆனால் நீதான் என் தூக்கத்தை கலச்சுட்ட போடா" சங்கரின் பதிலில் எதுவும் புரியாதவனாய் சுற்றுமுற்றும் தன் தாராவைத் தேட அவன் கண்களில் அவன் மனையாள் சிக்கவில்லை. 'அப்போ உண்மையிலே என் தாரா என்னை விட்டுப் போயிட்டாளா ஐயோ' அவனின் முகத்தில் ஆயிரம் உணர்ச்சிகள் பிரதிபலிக்க அதனைப் பார்த்திருந்த சங்கரோ அவன் தோளை தட்டியவனாய்
"டேய் மச்சி ரிலெக்ஸ்டா ஏதாவது கனவு கண்டாயா?"
"ஆ.... ஆ..." ஆதித்யன் அப்போதும் தடுமாற
"டேய் ஆதி ஏதாவது கனவு கண்டாயா?'' சங்கரும் சற்று உரக்கக் கேட்க தன்னிலை அடைந்தவன்
"ஓ... ஓம் மச்சான் ஒரு கெட்ட கனவு" யோசனையுடனே கூற
"என்னடா என்னாச்சு?"
"என் தாரா என்னை விட்டுப் போற மாதிரி அதுவும் இன்னொருத்தியோட கையில என்கைய சேர்த்து வச்சுட்டு இதுதான் உன் வாழ்க்கை நான் இல்லை என்று சொல்லிட்டு காற்றோட காற்றாய் கரைஞ்சு அந்த மேகத்தோட மறஞ்சு போயிட்டாடா. கெட்ட கனவுடா அதான் மனசுக்கு ஒருமாதிரி இருக்கு."
"டேய் மச்சி கெட்ட கனவேதான்டா"
"ஏன்டா எனக்கு இப்படி ஒரு கனவு வந்துச்சு?
"இதுக்கு என்ன பதில் சொல்லுறதென்றே தெரியல்லடா ஆனால் டைம் பார்த்தியா ஐஞ்சு மணி. விடியக் காலை கனவு பலிக்கும் என்று சொல்லுவாங்களேடா"
"டேய் நானே டென்ஸன்ல இருக்கேன் இதுல நீ வேற பொம்பள மாதிரி இந்த மூடத்தனமான கதைகள நம்பிக்கிட்டு இங்கப்பாருடா மச்சான் இது வெறும் கனவு அவ்வளவுதான் அதெல்லாம் பலிக்காது"
"நான் சொன்ன மாதிரி அவ உன்னை விட்டுப் போக முடிவெடுத்துட்டாளோ என்னவோ."
"என்னடா சங்கர் இப்படி சொல்லுற அப்போ என் தாரா என்னை விட்டுப் போயிடுவாள் என்று சொல்லுறாயா? அதனாலதான் எனக்கு இந்த கனவு வந்துச்சுன்னு சொல்லுறாயா?"
"அப்படித்தான் என்று உறுதியா சொல்லல்ல ஆனால் அப்படியும் இருக்கலாம்தானே மச்சான். அதுக்கான வாய்ப்பு அதிகம்டா ஏன்னா விடியக்காலயில வேற கண்டிருக்க அதுமட்டுமில்லடா உன்னோட ஏற்கனவே சொன்னேனில்ல அவ அந்த முடிவை எப்பவோ எடுத்துட்டான்னு அதனாலதான் அப்படிச் சொல்றேன்"
"அவ அந்த முடிவை ஏற்கனவே எடுத்திருந்தாதான் மச்சி ஆனால் என்னோட எக்ஸிடென்ட் அவளோட எண்ணத்தை மாத்திடுச்சு. என்னை விட்டுப் போகனும் என்று நினச்சிருந்தால் அவ்வளவு அக்கறையா பார்த்துக்க வேண்டிய அவசியமும் இல்லையேடா அதுமட்டுமில்ல எத்தனை நேர்ச்சை எத்தனை விரதமென்று கோயில் கோயிலா போகவும் தேவல்லையேடா. என்னை எப்படியெல்லாம் பார்த்துக்கிட்டா என்று உனக்கும் தெரியும்தானே அதுக்குப் பிறகு என்னை விட்டுப் போக அவ நினைக்கவே இல்லையே. இது சும்மா ஏதோ கெட்ட கனவு அவ்வளவுதான் அப்படி என் தாரா என்னை விட்டுப் போக மாட்டா"
"ஆதி உனக்கே நல்லாத் தெரியும் நயனி உன்னை விரும்புறா நீ் அவளை அவ்வளவு வெறுத்தப்போவும் சிரிச்சுக்கிட்டே உனக்கான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செஞ்சா அதுவும் நீ நல்லாயிருக்கும் போதே, அப்படிப்பட்டவ உனக்கு அவ்வளவு பெரிய எக்ஸிடென்ட் ஆகி நீ கஷ்டப்படுறப்போ உன்னைப் பார்த்துட்டு அவ சும்மா இருந்திருப்பாளா? இல்லை உன்னை விட்டுப் போகனுமென்று நினச்சிருப்பாளா? நீயே சொல்லு அவ உன்னை உண்மையா காதலிக்குறா. நீ எப்படியோ போ என்று அவளால எப்படி விட்டுட்டுப் போக முடியும் அதனாலதான் நீ் பூரணமா குணமானதும் போக நினச்சிருப்பா. அதுக்காகத்தான் அதையெல்லாம் அவ செஞ்சிருக்கா. இப்படி யோசிச்சுப்பாரு உனக்கே உண்மை விளங்கும்."
"இல்லடா அவ அதுக்காக அப்படி செஞ்சிருக்க மாட்டா அவளுக்கு என்னை விட்டுப் போற ஐடியா எல்லாம் இல்லை நான் அவளை கடுமையா ஹேர்ட் பண்ணிருக்கேனில்ல அதனால சும்மா என்னை பயம் காட்டுறதுக்கு அவ விளையாடிருப்பா."
"விளையாடிருப்பாளா? இந்த விசயத்துல என்ன மச்சான் விளையாட்டு நீ என்ன லூசா? நீதான் எல்லாத்தையும் விளையாட்டா எடுத்துக்கிறாய் விளையாட்டு வினையானாத்தான் உனக்குத் தெரியும். மொறைக்காத நான் உண்மையத்தான் சொல்லுறன். சரி நீ சொல்லுற மாதிரியே இருக்கட்டும் இப்போ திடீரென்று உனக்கு ஏன் இந்தக் கனவு, மச்சான் நமக்கு வார கனவுக்கெல்லாம் கட்டாயம் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும் அதுவும் விடியக் காலையில கண்டிருக்க அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு? மூடத்தனம் அது இதென்று சொல்லுற ஆனாலும் எனக்கு மனசுல ஏதோ தப்பா படுகுதுடா ஒன்றுமில்லாட்டி சந்தோசம்தான் ஆனால் இருந்துட்டா ஒருவேளை நீ கண்ட மாதிரியே நடந்துட்டா என்ன பண்ணுவ?"
"என்னடா பயமுறுத்துற அப்போ இந்த கனவு பலிச்சிடுமா அவ என்னை விட்டுப் போயிடுவாளா? சேச்சே நிச்சயமா என் தாரா என்னை விட்டுப் போக மாட்டாடா. அவளால என்னை விட்டுப் போக முடியாது."
"கடும் நம்பிக்கைதான் உன் தாரா..... போகமாட்டா ஓகே, அதுசரி அவ உன் தாராவாகுறதுக்கு உன் விருப்பத்தை முதல்ல நயனிக்கிட்ட சொல்லிட்டாயாடா?"
"அது வந்து......"
"என்னடா இழுத்துக்கிட்டு இருக்குற விசயத்துக்கு வாடா"
"இல்ல மச்சான், அன்றைக்கு சொல்லப் போனப்போதான் அவ மழையில நனஞ்சு காய்ச்சல் வருத்தமென்று அதுல சொல்ல முடியாம போச்சு அதுக்குப் பிறகு அவ என்னை விட்டு லேசா விலக தொடங்கின மாதிரி இருந்துச்சுடா. எப்படி அவளுக்கு என்னை, என் விருப்பத்தை விளங்கப்படுத்துற என்று குழம்பியே சொல்லாம விட்டுட்டேன். அதுக்குப் பிறகு எனக்கு எக்ஸிடென்ட் ஆனப்போ என்னை கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துக்கிட்டா அப்பப்போ என் லவ்வ அவகிட்ட சொல்லத் தோனும் ஆனால் எதுவோ ஒன்று என்னைத் தடுத்துடும் அந்த விபத்துலயிருந்து வெளிய வந்த பிறகு சொன்னா கடமைக்கு சொல்லுறதா நினைச்சுக்குவாளோ என்றுதான்டா இவ்வளவு நாளும் சொல்லாம இருக்கேன்."
"இங்கப்பார்டா சில விசயத்தை அப்பவே சொல்லிடனும் ஆறப் போட்டு நேரம் பார்த்து சொல்ல நினச்சா காலம் கடந்து போயிடும் ஏன் சொல்ல முடியாம கூட போயிடும்டா. இப்ப பாரு இந்தமாதிரி ஒரு கனவும் கண்டிருக்க அதான் கொஞ்சம் பயமாயிருக்குடா இனியும் நேரத்தை கடத்தாம இன்றைக்கே சொல்லிடு அதுவும் வீட்டுக்குப் போன உடனே என்ன ஓகேவா?"
"வீட்டுக்குப் போனதுமா?"
"ஏன் நல்ல நேரம் பார்க்கனுமா? வீட்டுக்குப் போனதும் நேரா உங்க ரூமுக்குப் போற நயனிக்கிட்ட உன்னோட மொத்த காதலையும் கொட்டுற என்ன?"
"இல்லடா அவ என்ன மூட்ல இருக்காளோ?"
"இப்படியே பார்த்துட்டிரு பிறகு கிழவனாயிடுவ அதுக்குப் பிறகு என்னத்தைச் சொல்லிகிட்டு. டேய் ஆதி நீ இன்றைக்கு சொல்லாமவிட்ட நீ கண்டது நடக்கவும் வாய்ப்பிருக்கு. ஏன்னா நயனிப்புள்ள ஏற்கனவே இந்த முடிவ எடுத்தவதானே. அந்த கனவுல வந்த கல்யாணப் பொண்ணு நித்திலாவாக் கூட இருக்க வாய்ப்பிருக்கு மச்சான். உண்மையச் சொல்லு அந்த இன்னொருத்தி நித்திதானே ம்..... உனக்கென்ன..."
"திரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று சொல்லப்போறயா?"
"எவ்வளவு சீரியஸா கதச்சிட்டிருக்கும் போது ஜோக்கடிச்சிட்டிருக்க, டேய் மச்சி அத அப்படி சொல்லக்கூடாது நயனதாரா இல்லாட்டி நித்திலா இதுதான் கரெக்டா இருக்கும் ஹ்ம்..... நீ குடுத்து வச்சவன்டா"
"என்னடா லூசு மாதிரி கதைச்சிட்டிருக்க என் தாரா என்னை விட்டுப் போக மாட்டா ஆனால் சும்மா இருக்குறவள நீயே போக வச்சிடுவ போல இருக்கே. இங்கப்பாரு இந்த அவ இல்லாட்டி இவ என்ற கேஷெல்லாம் கிடையாது நானுள்ளவரை நயனதாரா மட்டுமே.
"நானுள்ளவரை நயனதாரா யப்பா படத்தோட டைட்டில விட உன்னோட டைட்டில் சூப்பரா இருக்குடா சும்மா பின்னுற மச்சான் பலே பலே" கைகளை தட்டிய சங்கரை முறைத்தவன்,
"நான் ஜோக்கடிக்குறதா சொல்லி இப்போ நீதான் ஜோக்கடிச்சிட்டிருக்க பீ சீரியஸ்டா மச்சான் நீயெல்லாம் என்ன ப்ரண்ட்டு போடா"
"ஓகே ஓகே நோ ஜோக்ஸ் பீ சீரியஸ் இங்கப்பாரு இப்போ நான் ரொம்ப சீரியஸாவே சொல்லுறேன் அன்றைக்கு உன்கிட்ட சொன்னதுதான். நீ விளையாட்டுத் தனமா இருக்குறடா தலைக்கு மேல வெள்ளம் போனதுக்குப் பிறகு சாணென்ன முழமென்ன மூழ்க வேண்டியதுதான். இதுதான் நான் உன் நண்பனா நலன்விரும்பியா உனக்கு வழங்கக்கூடிய ஒரே ஆலோசனை. அதனால நீ வீட்டுக்குப் போனதும் உன் தாராகிட்ட உன்னோட லவ்வ சொல்லுற அவ தரப்பொற இன்பத்தையும் சேர்த்து அள்ளுற ஓகே"
"ஓகே ஓகே ஆனால் எனக்கு இந்த இன்...பத்துல மட்டும்தான் ஒரு டவுட் நீ என்னத்தையோ மறைக்குற அது மட்டும் கன்போர்ம். என் டவுட் கிளியராகி உண்மை மட்டும் வெளிய வரட்டும் அந்த இன்பத்தை நானும் பார்த்துடுறேன் பிறகு உனக்கு துன்பம் ஸ்டார் மச்சி" ஆதித்யன் சீரியசாகச் சொல்ல
"அந்த இன்பத்துக்குப் பிறகு என்னையெல்லாம் நினைக்க மாட்ட ஏன்னா உன்னையே நீ மறந்துடுவ" ஆதித்யன் கண்ட கனவு அப்போதே நடந்தேறிக் கொண்டிருப்பதை அறியாத நண்பர்கள் இருவரும் சற்று நேரம் கேலியும் கிண்டலுமாக கதைத்துக் கொண்டிருந்தவர்கள் தங்களுடன் தங்கியிருந்த டீலர்ஸின் தேவைகளை கவனிக்கச் சென்றனர்.
வளரும்.....
கருத்துக்களுக்கு👇👇👇💙
www.sahaptham.com
நிலவு - 30
மெல்லிய வெளிச்சம் தரணியெங்கும் பரவ அப்பொழுது தான் புலர்ந்து கொண்டிருந்தது காலைப் பொழுது கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப்பசேல் என்ற புல்வெளி மலை மகளைப் போர்த்தியிருக்க வெண்பஞ்சு போல் பனி்மூட்டங்கள் அந்த மலை மகளை தொட்டுத் தழுவதும் சற்று விலகுவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தன. தன் செங்கதிர்களைப் பரப்பி கீழ் வானை சிவக்க வைத்தவனாய் சூரிய நாயகன் மெல்ல மேலெழத் தொடங்க பனிமூட்டங்களோ மலை மகளை விட்டு விலக முடியாமல் அதனுடன் ஒட்டிக் கொள்ள துடித்திருக்க அப்போது அந்த மேகமூட்டங்களுக்கு இடையே வானிலிருந்து இறங்கிய தேவதையாய் வெண்ணிற ஆடை உடுத்தி வெண்மலர்களை மகுடமாய் தலைக்குச் சூடியவளின் கார்கூந்தல் காற்றிலாட மெல்லிய வெண்ணிற கையுறை அணிந்த நுனி விரலால் நதிபோல் நீண்ட தன் ஆடையை தூக்கிப் பிடித்தவாறு அணங்கவளோ அவனை நோக்கி மெல்ல அடிவைத்து வர அவள் அழகில் மயங்கி தங்களின் விளையாட்டை மறந்து அவளையே ரசித்தவாறு அந்த அழகுப் பதுமைக்காக வழி விட்டு விலகி நின்றன அந்த வெண்பஞ்சு மேகங்கள். கருநிற சூட்டில் ஆணழகனாய் கைகள் சிவப்பு ரோஜாக்களை ஏந்தியிருக்க வாய் கொள்ளாச் சிரிப்போடு முகம் முழுக்க சந்தோசம் பரவியிருக்க நாயகன் விழிகளோ அந்த அணங்கின் மேலிருக்க அவனிடம் நெருங்கிய அந்த அழகியின் வதனமோ மகிழ்ச்சியை முழுதாய் தொலைத்து வாடிய மலராயிருந்தது. பெண்ணவளின் களையிழந்த முகத்தினைக் கண்ட அந்த நொடி காளையின் மனமும் மகிழ்ச்சியைத் தொலைத்தது. அவளை நெருங்கி தன் மார்போடு அணைத்து அவள் பிறைநுதலில் தன் இதழ்களை பதித்தவனின் ஸ்பரிஷத்தை தனக்குள் நிறைத்துக் கொண்டாள் பாவை. தன் கைகள் ஏந்தியிருந்த அந்த அழகிய ரோஜாக்களை கொண்ட மலர்கொத்தை அவள் கைகளில் கொடுக்க அதனை வாங்காது பெண்ணவளோ சட்டென்று அவனை விட்டு விலக நாயகனும் புரியாமல் கேள்வியாய் நோக்கினான். அவன் விழிக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவள் லேசாக நீர் திரையிட்ட கண்களுடன் அவ்விடத்திலிருந்து திரும்பி நடக்க அவளை அழைத்துக் கொண்டே அவனும் பெண்ணவளை பின் தொடர்ந்தான் சென்றவளோ அங்கே மணக் கோலத்திலிருந்த பாவையின் வளைகரத்தைப் பற்றியவளாய் தன்னைத் தொடர்ந்தவன் முன் வந்தாள். நாயகனோ தன் தேவதையையும் அவள் கைப்பற்றி வந்த அந்த வளைகரத்தவளையும் கண்டு தடுமாறி நிற்க சட்டென்று நாயகனின் கைகளிலிலிருந்த மலர்கொத்தை பிடுங்கி வளைகரத்தவளுக்குப் பரிசாய் கொடுத்தவள் காளையின் வலிய கரத்தை தன் மென்கரங்களில் ஏந்தி வளைகரத்தாளின் கைகளை தன் மறுகரத்தால் எடுத்தவள் உதட்டில் புன்னகையிருக்க கண்களில் நீர் நிறைந்திருக்க உள்ளம் முழுக்க ரணமாய் வலிக்க இருகரங்களையும் இணைத்தவள் மனதார வாழ்த்திய மறுநொடி அவர்களை விட்டு விலகிச் செல்ல தாங்க முடியாத காளையவனோ தன் கரங்களோடு இணைந்திருந்த வளைகரத்தவளின் கரங்களை உதறிவிட்டு
"என்னை விட்டுப் போகாதே உன்கூட என்னையும் கூட்டிட்டுப் போயிடு நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுப் பார்க்கவும் முடியாது போகாதே வேண்டாம்மா என்னை விட்டுப் போகாதே" அவள் பின்னோடே கெஞ்சிக் கொண்டு அவனும் நடக்க ஆனால் பாவையவளோ நடையை நிறுத்தாது வேகமாக நடந்து கொண்டே
"போயிடுங்க உங்க வாழ்க்கை நான் இல்லை உங்களுக்காக உங்களையே நினச்சிட்டிருக்க உங்க வாழ்க்கை அதோ அங்க இருக்கு" கைகளை நீட்டி வளைகரத்தவளைக் காட்டியவள் அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிறிது நேரத்தில் காற்றோடு காற்றாக கரைந்து அவளுக்காய் வழிவிட்ட அந்த வெண்பஞ்சு மேகங்களுக்குள்ளே மறைந்தவள் அவனை விட்டு தொலைதூரமாய் சென்றுவிட்டாள். தாங்க முடியாதவன் தன்னை மறந்து
"என்னை விட்டுப் போகாதே திரும்பி வந்துவிடு" எனக் கத்திக் கொண்டே மண்ணில் மண்டியிட்டவன் தன் முகத்தில் அடித்துக் கொண்டு கதறித்துடித்தான்.
"ஆ... ஐயோ டேய் மச்சான் என்னடா ஆச்சு ஏன்டா இப்படிக் கத்திட்டிருக்கே." பக்கத்தில் படுத்திருந்த சங்கர் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தான்.
"நீ இல்லாம நானில்ல என்னை விட்டுப் போகாதே......." ஆதித்யன் தூக்கத்தில் ஏதோ பிதற்றிக் கொண்டிருக்க அவனை தட்டி எழுப்பினான் அவன் நண்பன்.
"தாரா வந்துடும்மா தாரா....." கத்திக் கொண்டே எழுந்தமர
"தாராவா அவ எங்கடா இங்க வந்தா நாம இப்போ கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கம் மச்சான் அவ வீட்ட இருக்கிறாடா அதுவும் நல்ல தூக்கத்துல இருப்பா ஆனால் நீதான் என் தூக்கத்தை கலச்சுட்ட போடா" சங்கரின் பதிலில் எதுவும் புரியாதவனாய் சுற்றுமுற்றும் தன் தாராவைத் தேட அவன் கண்களில் அவன் மனையாள் சிக்கவில்லை. 'அப்போ உண்மையிலே என் தாரா என்னை விட்டுப் போயிட்டாளா ஐயோ' அவனின் முகத்தில் ஆயிரம் உணர்ச்சிகள் பிரதிபலிக்க அதனைப் பார்த்திருந்த சங்கரோ அவன் தோளை தட்டியவனாய்
"டேய் மச்சி ரிலெக்ஸ்டா ஏதாவது கனவு கண்டாயா?"
"ஆ.... ஆ..." ஆதித்யன் அப்போதும் தடுமாற
"டேய் ஆதி ஏதாவது கனவு கண்டாயா?'' சங்கரும் சற்று உரக்கக் கேட்க தன்னிலை அடைந்தவன்
"ஓ... ஓம் மச்சான் ஒரு கெட்ட கனவு" யோசனையுடனே கூற
"என்னடா என்னாச்சு?"
"என் தாரா என்னை விட்டுப் போற மாதிரி அதுவும் இன்னொருத்தியோட கையில என்கைய சேர்த்து வச்சுட்டு இதுதான் உன் வாழ்க்கை நான் இல்லை என்று சொல்லிட்டு காற்றோட காற்றாய் கரைஞ்சு அந்த மேகத்தோட மறஞ்சு போயிட்டாடா. கெட்ட கனவுடா அதான் மனசுக்கு ஒருமாதிரி இருக்கு."
"டேய் மச்சி கெட்ட கனவேதான்டா"
"ஏன்டா எனக்கு இப்படி ஒரு கனவு வந்துச்சு?
"இதுக்கு என்ன பதில் சொல்லுறதென்றே தெரியல்லடா ஆனால் டைம் பார்த்தியா ஐஞ்சு மணி. விடியக் காலை கனவு பலிக்கும் என்று சொல்லுவாங்களேடா"
"டேய் நானே டென்ஸன்ல இருக்கேன் இதுல நீ வேற பொம்பள மாதிரி இந்த மூடத்தனமான கதைகள நம்பிக்கிட்டு இங்கப்பாருடா மச்சான் இது வெறும் கனவு அவ்வளவுதான் அதெல்லாம் பலிக்காது"
"நான் சொன்ன மாதிரி அவ உன்னை விட்டுப் போக முடிவெடுத்துட்டாளோ என்னவோ."
"என்னடா சங்கர் இப்படி சொல்லுற அப்போ என் தாரா என்னை விட்டுப் போயிடுவாள் என்று சொல்லுறாயா? அதனாலதான் எனக்கு இந்த கனவு வந்துச்சுன்னு சொல்லுறாயா?"
"அப்படித்தான் என்று உறுதியா சொல்லல்ல ஆனால் அப்படியும் இருக்கலாம்தானே மச்சான். அதுக்கான வாய்ப்பு அதிகம்டா ஏன்னா விடியக்காலயில வேற கண்டிருக்க அதுமட்டுமில்லடா உன்னோட ஏற்கனவே சொன்னேனில்ல அவ அந்த முடிவை எப்பவோ எடுத்துட்டான்னு அதனாலதான் அப்படிச் சொல்றேன்"
"அவ அந்த முடிவை ஏற்கனவே எடுத்திருந்தாதான் மச்சி ஆனால் என்னோட எக்ஸிடென்ட் அவளோட எண்ணத்தை மாத்திடுச்சு. என்னை விட்டுப் போகனும் என்று நினச்சிருந்தால் அவ்வளவு அக்கறையா பார்த்துக்க வேண்டிய அவசியமும் இல்லையேடா அதுமட்டுமில்ல எத்தனை நேர்ச்சை எத்தனை விரதமென்று கோயில் கோயிலா போகவும் தேவல்லையேடா. என்னை எப்படியெல்லாம் பார்த்துக்கிட்டா என்று உனக்கும் தெரியும்தானே அதுக்குப் பிறகு என்னை விட்டுப் போக அவ நினைக்கவே இல்லையே. இது சும்மா ஏதோ கெட்ட கனவு அவ்வளவுதான் அப்படி என் தாரா என்னை விட்டுப் போக மாட்டா"
"ஆதி உனக்கே நல்லாத் தெரியும் நயனி உன்னை விரும்புறா நீ் அவளை அவ்வளவு வெறுத்தப்போவும் சிரிச்சுக்கிட்டே உனக்கான ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செஞ்சா அதுவும் நீ நல்லாயிருக்கும் போதே, அப்படிப்பட்டவ உனக்கு அவ்வளவு பெரிய எக்ஸிடென்ட் ஆகி நீ கஷ்டப்படுறப்போ உன்னைப் பார்த்துட்டு அவ சும்மா இருந்திருப்பாளா? இல்லை உன்னை விட்டுப் போகனுமென்று நினச்சிருப்பாளா? நீயே சொல்லு அவ உன்னை உண்மையா காதலிக்குறா. நீ எப்படியோ போ என்று அவளால எப்படி விட்டுட்டுப் போக முடியும் அதனாலதான் நீ் பூரணமா குணமானதும் போக நினச்சிருப்பா. அதுக்காகத்தான் அதையெல்லாம் அவ செஞ்சிருக்கா. இப்படி யோசிச்சுப்பாரு உனக்கே உண்மை விளங்கும்."
"இல்லடா அவ அதுக்காக அப்படி செஞ்சிருக்க மாட்டா அவளுக்கு என்னை விட்டுப் போற ஐடியா எல்லாம் இல்லை நான் அவளை கடுமையா ஹேர்ட் பண்ணிருக்கேனில்ல அதனால சும்மா என்னை பயம் காட்டுறதுக்கு அவ விளையாடிருப்பா."
"விளையாடிருப்பாளா? இந்த விசயத்துல என்ன மச்சான் விளையாட்டு நீ என்ன லூசா? நீதான் எல்லாத்தையும் விளையாட்டா எடுத்துக்கிறாய் விளையாட்டு வினையானாத்தான் உனக்குத் தெரியும். மொறைக்காத நான் உண்மையத்தான் சொல்லுறன். சரி நீ சொல்லுற மாதிரியே இருக்கட்டும் இப்போ திடீரென்று உனக்கு ஏன் இந்தக் கனவு, மச்சான் நமக்கு வார கனவுக்கெல்லாம் கட்டாயம் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும் அதுவும் விடியக் காலையில கண்டிருக்க அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு? மூடத்தனம் அது இதென்று சொல்லுற ஆனாலும் எனக்கு மனசுல ஏதோ தப்பா படுகுதுடா ஒன்றுமில்லாட்டி சந்தோசம்தான் ஆனால் இருந்துட்டா ஒருவேளை நீ கண்ட மாதிரியே நடந்துட்டா என்ன பண்ணுவ?"
"என்னடா பயமுறுத்துற அப்போ இந்த கனவு பலிச்சிடுமா அவ என்னை விட்டுப் போயிடுவாளா? சேச்சே நிச்சயமா என் தாரா என்னை விட்டுப் போக மாட்டாடா. அவளால என்னை விட்டுப் போக முடியாது."
"கடும் நம்பிக்கைதான் உன் தாரா..... போகமாட்டா ஓகே, அதுசரி அவ உன் தாராவாகுறதுக்கு உன் விருப்பத்தை முதல்ல நயனிக்கிட்ட சொல்லிட்டாயாடா?"
"அது வந்து......"
"என்னடா இழுத்துக்கிட்டு இருக்குற விசயத்துக்கு வாடா"
"இல்ல மச்சான், அன்றைக்கு சொல்லப் போனப்போதான் அவ மழையில நனஞ்சு காய்ச்சல் வருத்தமென்று அதுல சொல்ல முடியாம போச்சு அதுக்குப் பிறகு அவ என்னை விட்டு லேசா விலக தொடங்கின மாதிரி இருந்துச்சுடா. எப்படி அவளுக்கு என்னை, என் விருப்பத்தை விளங்கப்படுத்துற என்று குழம்பியே சொல்லாம விட்டுட்டேன். அதுக்குப் பிறகு எனக்கு எக்ஸிடென்ட் ஆனப்போ என்னை கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துக்கிட்டா அப்பப்போ என் லவ்வ அவகிட்ட சொல்லத் தோனும் ஆனால் எதுவோ ஒன்று என்னைத் தடுத்துடும் அந்த விபத்துலயிருந்து வெளிய வந்த பிறகு சொன்னா கடமைக்கு சொல்லுறதா நினைச்சுக்குவாளோ என்றுதான்டா இவ்வளவு நாளும் சொல்லாம இருக்கேன்."
"இங்கப்பார்டா சில விசயத்தை அப்பவே சொல்லிடனும் ஆறப் போட்டு நேரம் பார்த்து சொல்ல நினச்சா காலம் கடந்து போயிடும் ஏன் சொல்ல முடியாம கூட போயிடும்டா. இப்ப பாரு இந்தமாதிரி ஒரு கனவும் கண்டிருக்க அதான் கொஞ்சம் பயமாயிருக்குடா இனியும் நேரத்தை கடத்தாம இன்றைக்கே சொல்லிடு அதுவும் வீட்டுக்குப் போன உடனே என்ன ஓகேவா?"
"வீட்டுக்குப் போனதுமா?"
"ஏன் நல்ல நேரம் பார்க்கனுமா? வீட்டுக்குப் போனதும் நேரா உங்க ரூமுக்குப் போற நயனிக்கிட்ட உன்னோட மொத்த காதலையும் கொட்டுற என்ன?"
"இல்லடா அவ என்ன மூட்ல இருக்காளோ?"
"இப்படியே பார்த்துட்டிரு பிறகு கிழவனாயிடுவ அதுக்குப் பிறகு என்னத்தைச் சொல்லிகிட்டு. டேய் ஆதி நீ இன்றைக்கு சொல்லாமவிட்ட நீ கண்டது நடக்கவும் வாய்ப்பிருக்கு. ஏன்னா நயனிப்புள்ள ஏற்கனவே இந்த முடிவ எடுத்தவதானே. அந்த கனவுல வந்த கல்யாணப் பொண்ணு நித்திலாவாக் கூட இருக்க வாய்ப்பிருக்கு மச்சான். உண்மையச் சொல்லு அந்த இன்னொருத்தி நித்திதானே ம்..... உனக்கென்ன..."
"திரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று சொல்லப்போறயா?"
"எவ்வளவு சீரியஸா கதச்சிட்டிருக்கும் போது ஜோக்கடிச்சிட்டிருக்க, டேய் மச்சி அத அப்படி சொல்லக்கூடாது நயனதாரா இல்லாட்டி நித்திலா இதுதான் கரெக்டா இருக்கும் ஹ்ம்..... நீ குடுத்து வச்சவன்டா"
"என்னடா லூசு மாதிரி கதைச்சிட்டிருக்க என் தாரா என்னை விட்டுப் போக மாட்டா ஆனால் சும்மா இருக்குறவள நீயே போக வச்சிடுவ போல இருக்கே. இங்கப்பாரு இந்த அவ இல்லாட்டி இவ என்ற கேஷெல்லாம் கிடையாது நானுள்ளவரை நயனதாரா மட்டுமே.
"நானுள்ளவரை நயனதாரா யப்பா படத்தோட டைட்டில விட உன்னோட டைட்டில் சூப்பரா இருக்குடா சும்மா பின்னுற மச்சான் பலே பலே" கைகளை தட்டிய சங்கரை முறைத்தவன்,
"நான் ஜோக்கடிக்குறதா சொல்லி இப்போ நீதான் ஜோக்கடிச்சிட்டிருக்க பீ சீரியஸ்டா மச்சான் நீயெல்லாம் என்ன ப்ரண்ட்டு போடா"
"ஓகே ஓகே நோ ஜோக்ஸ் பீ சீரியஸ் இங்கப்பாரு இப்போ நான் ரொம்ப சீரியஸாவே சொல்லுறேன் அன்றைக்கு உன்கிட்ட சொன்னதுதான். நீ விளையாட்டுத் தனமா இருக்குறடா தலைக்கு மேல வெள்ளம் போனதுக்குப் பிறகு சாணென்ன முழமென்ன மூழ்க வேண்டியதுதான். இதுதான் நான் உன் நண்பனா நலன்விரும்பியா உனக்கு வழங்கக்கூடிய ஒரே ஆலோசனை. அதனால நீ வீட்டுக்குப் போனதும் உன் தாராகிட்ட உன்னோட லவ்வ சொல்லுற அவ தரப்பொற இன்பத்தையும் சேர்த்து அள்ளுற ஓகே"
"ஓகே ஓகே ஆனால் எனக்கு இந்த இன்...பத்துல மட்டும்தான் ஒரு டவுட் நீ என்னத்தையோ மறைக்குற அது மட்டும் கன்போர்ம். என் டவுட் கிளியராகி உண்மை மட்டும் வெளிய வரட்டும் அந்த இன்பத்தை நானும் பார்த்துடுறேன் பிறகு உனக்கு துன்பம் ஸ்டார் மச்சி" ஆதித்யன் சீரியசாகச் சொல்ல
"அந்த இன்பத்துக்குப் பிறகு என்னையெல்லாம் நினைக்க மாட்ட ஏன்னா உன்னையே நீ மறந்துடுவ" ஆதித்யன் கண்ட கனவு அப்போதே நடந்தேறிக் கொண்டிருப்பதை அறியாத நண்பர்கள் இருவரும் சற்று நேரம் கேலியும் கிண்டலுமாக கதைத்துக் கொண்டிருந்தவர்கள் தங்களுடன் தங்கியிருந்த டீலர்ஸின் தேவைகளை கவனிக்கச் சென்றனர்.
வளரும்.....
கருத்துக்களுக்கு👇👇👇💙
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
