20
மது இன்னும் எவ்வளவு நேரம் குளிச்சுகிட்டு இருப்ப எனக்கு டைம் ஆச்சு என்று கூற ஷர்மாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது...பயந்தபடி எதிர்ப்பட்ட அறைக்குள் புகுந்து கொண்டார்.
ரவி கவனித்து விட்டாரா என்று அறைக்குள் ஆராய...நல்லவேளை ஷர்மா உள்ளே வந்ததை கவனிக்க வில்லை.
படபடக்கும் இதயத்தோடு பக்கத்து அறையில் காத்திருக்க ஆரம்பித்தார்.
சற்று நேரத்தில் மதுவின் குரல் சற்று குழைந்த படி கேட்டது என்னங்க பிரச்சினை உங்களுக்கு நான் தான் உங்களை அப்பவே வேலைக்கு கிளம்பி போக சொல்லிட்டேனே அப்புறம் ஏன் போகாம கத்திகிட்டு இருக்கீங்க…
நீ எனக்குத் தர வேண்டியதை குடுத்துட்டா நான் ஏன் இப்படி கத்திகிட்டு இருக்க போறேன்…
போதும் போதும் இதையே இன்னும் எத்தனை நாள் சொல்லுவீங்க... இப்ப கொடுக்க வேண்டியதுக்கும் சேர்த்து தான் நேத்து ராத்திரியே வசூல் பண்ணிட்டீங்களே அதனால இப்போ எல்லாம் ஒன்னும் கிடையாது என்று பொய்க் கோபத்தோடு பேசினாள் மதுமதி.
சரி நீ ராத்திரி கொடுத்ததை அசலா வச்சிக்கோ...வட்டியை நான் இப்போ கொடுத்துட்டு போறேன்…
நீங்க எந்த வட்டியும் தர வேணாம்... இப்போ வட்டி கொடுக்கறேனு சொல்லுவீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அசலை கொடுக்கறேனு ஆரம்பிப்பீங்க இந்த விளையாட்டுக்கு நான் வரல…
இதோட ரெண்டாவது தடவை நான் குளிச்சாச்சி... இனி என்னால குளிக்க முடியாது…முதல்ல கிளம்புங்க…
என்ன மது புருஷன் கொடுக்கிறேன்னு சொல்றத கூட வேணாம்னு சொல்லறியே என்று அவளை இழுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.
கொடுத்ததெல்லாம் வேணான்னு சொன்னதால தான் என் வயித்துல உங்க குழந்தை கருவா வளர்ந்து நிக்குது அதனால கொடுத்தவரை போதும் தயவுசெஞ்சு ஆபீஸ் கிளம்புங்க வண்டி வேற சர்வீஸ்ல இருக்குனு சொல்லி இருக்கீங்க இந்த டெல்லி டிராபிக்ல அவதிப்பட்டு சீக்கிரமா ஆபிஸ் போய் சேருங்க இல்லனா உங்கள காணோம்னு தேடிட்டு வீட்டுக்கு வந்துட்டு போறாங்க என்று அவனின் அணைப்பில் இருந்தவாறு கூறினாள்.
இன்னைக்கு ஆபீஸ் கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா மது கார் வேற இல்ல நடந்து மெயின் ரோட்டுக்கு போய் அங்கிருந்து ஆட்டோ புடிச்சி... ஓ மை காட் ப்ளீஸ் மது இன்னைக்கு ஒரு நாள் வீட்டில் இருக்கறனே… என்று மதுவின் மணிவயிற்றை தடவியபடியே கெஞ்சினார்.
ம்ம் ..இருக்கலாமே…ரொம்ப நாளா என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்னு டிமிக்கி கொடுத்துகிட்டே இருக்கீங்க இன்னைக்கு மாட்டினீங்களா...கிளம்புங்க என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்க என்று கூற
உன் கூட கோயிலுக்கு வர்றதுக்கு ஆட்டோல போற கொடுமை எவ்வளவோ பெட்டர் நான் கிளம்புறேன் மது என்று அவளை இழுத்து அணைத்து அவசர இதழ் முத்தம் ஒன்றைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.
செல்லும் ரவியை வாசல்வரை சென்று வழியனுப்பி விட்டு கேட்டையும் சாத்திவிட்டு முன்னறையின் கதவின் தாழ்ப்பாளை போட்டு விட்டு
உள்ளே வந்த மது தலையில் கட்டியிருந்த துவாலையை கழட்டி முடியை நன்றாக விரித்து விட்டாள்.
பிறகு டிரெஸ்ஸிங் டேபிளில் முன்பு வந்து நின்றவள் அங்கிருந்த கண் மையை எடுத்து கண்களுக்கு திக்காக திட்டிக்கொண்டு நெற்றியில் கலைந்திருந்த குங்குமத்தை சரி செய்து அதை நல்ல பெரியதாக வைத்துக்கொண்டாள்.
பிறகு புடவை கொசுவத்தை அவிழ்த்து மீண்டும் மடிப்பு எடுக்க ஆரம்பித்தாள்.
அப்பொழுது அவளின் பின்னால் இருந்த மது என்ற ஷர்மாவின் வசீகரக் குரல் அவளின் காதுகளில் கேட்க அவசரமாக புடவையை சொருகியவள் பயந்து திரும்பிப்பார்க்க கதவில் நன்கு சாய்ந்தபடி ஷர்மா அந்தக் காந்தக் கண்களை கொண்டு மதுவை மயக்கும் தோரணையில் நின்று கொண்டிருந்தார்.
ஹேய் நீ எப்படி உள்ள அதான் கதவை லாக் பண்ணினேனே என்று குழம்பித்தவிக்க…
நோ டென்ஷன் மது கதவு பூட்டி தான் இருக்கு நீ கதவ பூட்டிட்டு தான் உள்ள வந்த ஆனா நான் அதுக்கு முன்னாடியே உள்ள வந்துட்டேன் என்று கூற நெஞ்சினில் கைவைத்தவள் அப்படியே சுவற்றுடன் சாய்ந்தாள்.
அப்படினா நானும் ரவியும் பேசிட்டு இருந்தது….என்று பாதியில் நிறுத்த
பேசிட்டு இருந்தது முத்தம் கொடுத்தது எல்லாத்தையுமே பார்த்துட்டுதான் இருந்தேன் மது என்று கூறியபடி அவளின் அருகில் வர
ச்சீ...தள்ளிப்போ தள்ளி விட்டாள்.
ஆனால் அவரோ துளி அளவு கூட நகராமல் பார்வை மட்டும் மதுவின் மணி வயிற்றில் இருந்தது...
புடவையை அவசரமாக சரி செய்தவள் அவரை விட்டு சற்று தள்ளி கொண்டாள்.
வீட்டில் ஒரு லேண்ட் லைன் ஃபோன் இருக்கிறது அதில் வேண்டுமானால் ரவிக்கு அழைக்கலாம் ஆனால் அவர் கண்டிப்பாக இப்பொழுது அலுவலகம் சென்றிருக்க வாய்ப்பில்லை இவனிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று அங்கும் இங்கும் தேட
ஏன் மது என்ன பார்த்து பயப்படுற உனக்கு பேபி ஃபாம் ஆகியிருக்குனு ரவி சொன்னான் உனக்கு உடம்பு முடியலன்னும் சொன்னான் அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் ஆனா உன்ன பாத்தா அப்படி தெரியலையே என்றார்.
நான் நல்லாத்தான் இருக்கேன் என்னை பாத்துட்ட இல்ல முதல வெளியே போ என்று படபடப்பாக கூறினாள்
நான் போறேன் மது அதுக்கு முன்னாடி மதுவோட வயித்துல இருக்கற பேபியை பாத்துட்டு போறேனே…
லூசு மாதிரி உளறாத அது எப்படி உன்னால பார்க்க முடியும்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரவி தொட்டுப் பார்த்தான்ல அதே மாதிரி நானும் தொட்டு பாத்துட்டு கிளம்பி போயிட்டறேன்…
பைத்தியமா டா நீ நான் உன் பிரண்டோட வொய்ப் என்கிட்ட போய் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க இந்த விஷயம் மட்டும் ரவிக்கு தெரிஞ்சது... முதல்ல வெளியே போடா என்று அவனை தள்ளி விட்டபடி முன் அறைக்குள் வந்தாள்.
அதுவரை பொறுமையாகவும் சாந்தமாகவும் பேசிக் கொண்டிருந்த ஷர்மாவின் முகம் உக்கிரமாக மாறியது கண்களை உருட்டியபடி நேராக மதுவின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு சுவற்றோடு வைத்து அழுத்தியவர்
இந்த விசயம் ரவிக்குத் தெரிஞ்சா அடுத்த நிமிஷம் ரவி செத்துப் போய்டுவான் மது...நான் அவனை கொன்னுடுவேன் என்று கூலாக கூறினார்.
அவரின் கண்களில் இருக்கும் கோபத்திற்கும் பேசும் வார்த்தைகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருந்தது அவர் மதுவிற்க்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என்னும் பயத்தை மதுவிற்கு உடனடியாக கொடுத்தது .
முச்சுவிட திணறிய படி ஷர்மாவிடம் இருந்து தன்னை விடுவிக்க போராட மீண்டும் அவளின் கழுத்தை அழுத்திப் பிடித்தவர் அவள் திமிறாதவாறு அவரின் உடல் பாரத்தையும் அவளின் மீது வைத்தார்.
இப்போ மதுவோட வயித்துல இருக்கிற பாப்பாவை நான் தொட்டுப் பார்க்க கூடாதுன்னா நான் இப்போ சொல்றதை அப்படியே நீ சொல்லணும் …
நான் சொல்றதை நீ சொல்றியா இல்லனா பாப்பாவை மட்டும் தொட்டு பார்த்துட்டு கிளம்பவா என்று மதுவின் முகத்தை பார்த்தபடியே கேட்க
இவன் பைத்தியக்காரன் முதலில் இவனை இங்கிருந்து அனுப்ப வேண்டும் இல்லை என்றால் சேதாரம் தனக்கு தான் என்று நன்கு புரிந்துகொண்ட மது புத்திசாலித்தனமாக சொல்லறேன் என்று தலையசைத்தாள் .
குட் இப்படித்தான் இருக்கணும் என்றவர் மற்றொரு கையால் மதுவின் கன்னத்தை தொட அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவரின் தொடுதலை விரும்பாதவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
கோபத்தில் மதுவின் முகத்தை அவரின் பக்கம் திருப்பி அழுத்திப் பிடித்தவர் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்லு மது என்றார்.
முடியாது என்பதுபோல் கண்களை மூடிக்கொண்டு சைடாக மது திரும்ப
மீண்டும் கழுத்திலிருந்த அவரது கைக்கு ஷர்மா அழுத்தம் கொடுக்க இப்பொழுது மூச்சு விட மிகவும் சிரமப்பட்ட மது சரி என்பது போல் தலை அசைத்தாள்.
குட் சொல்லு….உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…
திணறியபடி கூறி முடித்தாள்…
ஸ்மார்ட் கேர்ள்... உன் கலர் இந்த கண்ணு இதெல்லாம் என்ன ரொம்ப கவருது…
ப்ளீஸ் என்ன விட்டுடு நான் என் புருஷனை கூட்டிட்டு ஊருக்கே போயிடறேன் என்னை இப்படி சித்திரவதை படுத்தாத…
நான் சொன்னது இது இல்ல பேபி உன் கலரு இந்த கண்ணு இதெல்லாம் என்ன ரொம்ப கவருது…
அய்யோ கடவுளே என்று கூறியபடியே கூறிமுடித்தாள்.
இப்ப கடைசியா ஷர்மா ஐ லவ் யூ சொல்லு..
முடியாது போடா உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ ரவியைத் தவிர இந்த வார்த்தையை யாரை பார்த்தும் நான் சொல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக மறுக்க…
அவளின் முகத்தருகே சிரித்தபடி வந்த ஷர்மா திடீரென்று அவளின் மீது இருந்த கைகளை எடுத்தார் இந்த ரெண்டு வார்த்தையே போதும் என் கண்ணை தானே பிளாக் கோப்ரா மாதிரி இருக்குன்னு சொன்ன இப்போ உன் வாயாலேயே இந்த கண்ணு உன்னைக் கவருதுன்னு சொல்ல வச்சுட்டேன் பாத்தியா அதே மாதிரி கூடிய சீக்கிரம் என்னை பார்த்து நீ ஐ லவ் யூ ன்னு சொல்லுவ என்று கூறினார்.
ஷர்மாவிடம் இருந்து தப்பித்த மது அறையின் மற்றொரு மூலையில் சென்று நின்று கொண்டாள் ஷர்மா இப்பொழுது சாவகாசமாக அறையின் நடுவில் இருந்த சோபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்தபோது
சின்ன வயசிலிருந்தே எனக்கு ஒரு பழக்கம் நான் ஆசைப்பட்டது கிடைக்கலன்னா கடைசி வரை அது கிடைக்க போராடுவேன் .
அது எந்த நிலைமையில் கிடைச்சாலும் நான் பத்திரமா பார்த்துக்குவேன் ஏன்னா நான் ஆசைப்படும் போது அது நல்லா தான் இருந்தது அந்த மாதிரியான குணம் எனக்கு.
அதனாலதான் இதுவரை நான் ஆசைப்பட்டது கிடைக்காம இருந்ததா சரித்திரமே இல்ல .
அதனால நீயும் எனக்கு கிடைப்ப அதுவும் கூடிய சீக்கிரமே...
ஒருவேளை இப்போ இங்கு நடந்த விஷயத்தை நீ ரவி கிட்ட கூட சொல்லலாம் ரவி உடனே கோபமா நியாயம் கேட்க என் ஆஃபிஸ் வரலாம்
அந்த ஆபீஸ்ல வைச்சே அவனை நான் முடிச்சிடலாம் யாருக்கும் தெரியாம என்னோட ஃபார்ம் ஹவுஸ்ல புதைக்கலாம்.
பாஷை தெரியாத இந்த ஊர்ல மது தனியா இருப்பாள்ல அப்போ உரிமையா வந்து நான் தூக்கிட்டு போய் என் ஃபார்ம் ஹவுஸ்ல ஒரு இருட்டு அறையில் அடைத்து வைத்து ஆசை தீர காலம்பூரா கூட வெச்சிக்கலாம் என்று அவர் கூற கூற மதுவின் இதயம் துடிப்பதை நிறுத்தி விடவா என்று கேட்டது .
நெஞ்சில் ஒரு கையையும் வயிற்றில் ஒரு கையையும் வைத்துக் கொண்டு அப்படி ஏதும் பண்ணிடாத நான் என் புருஷன் கிட்ட உன்னை பத்தி வாய் திறக்க மாட்டேன் ...
குட் மது எது சொன்னாலும் உடனே புரிஞ்சிக்கற…
மது நீ என்னோட இப்போவே வந்துடேன் ...பூ மாதிரி பாத்துக்கறேன்…இல்லையா கொஞ்ச நாள் கழிச்சி கூட வா...தப்பில்லை அதை விட்டுட்டு புத்திசாலித்தனமா நடந்துக்கிறதா நெனச்சு ரவி கிட்டயோ இல்ல வேற யார்கிட்டயும் சொல்லிட்டு இங்கிருந்து தப்பிச்சு போகலாம்னு நினைச்சேனு வை
நீ இந்த உலகத்தோட எந்த மூலைக்குப் போனாலும் உன் புருஷனோட உயிர் என் கையில இருக்கு .
உன் புருஷனை நீ உண்மையா நேசித்தா என்னைக்குமே இந்த விஷயத்தை வெளியே சொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன் ..
என்று பொறுமையாகவும் நிதானமாகவும் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் அவளுக்கு கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் திக்பிரமை பிடித்தது போல் நின்றவள் ஷர்மா சென்றதும் அங்கேயே அமர்ந்து கொண்டு தலையில் அடித்தபடி கதறி அழ ஆரம்பித்தாள்.
அதன்பிறகு எப்போது டெல்லியை விட்டு செல்லலாம் என்று ரவியிடம் கெஞ்சத் தொடங்கினாள். சரியான உணவு இல்லை,உறக்கம் இல்லை...காரணம் கேட்கும் ரவியிடம் ஊருக்கு வாருங்கள் இல்லையென்றால் என்னை மட்டுமாவது அனுப்புங்கள் என்று பாடிய பாட்டையே பாடினாள்.
ஷர்மாவின் மற்றொரு முகத்தை அறியாத ரவி எப்பொழுதுமே ஷர்மா உடனே சுற்றிக் கொண்டிருந்தார். ஒவ்வொருமுறையும் ஷர்மா அழைக்கிறார் ஷர்மாவுடன் செல்கிறேன் என்று ரவி கூறிக் கொண்டு வெளியில் செல்லும் பொழுதெல்லாம் அவர் திரும்பி வரும்வரை நெஞ்சில் நெருப்பை வைத்துக் கட்டியது போல காத்திருப்பாள் மது.
எக்காரணம் கொண்டும் நண்பர்கள் யாரும் வீட்டுப் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று உறுதியாக கூறியதால் ஷர்மாவால் எளிதாக மதுவின் வீட்டிற்குள் வர முடியவில்லை .
மதுவுக்கு இப்போது மன நோய் போலவே ஆகிவிட்டது அவ்வப்போது வீட்டிற்க்குள் யாரேனும் இருக்கிறார்களா என்று ஆராய்வாள்... இது ரவிக்கு சிலநேரம் பயத்தைக் கொடுத்தாலும் கருவுற்ற பெண்களுக்கு சில நேரம் இது போலெல்லாம் ஆகும் என்று மருத்துவர் கூறியிருந்ததால் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்.
எப்படியோ ஒருவழியாக ஏழு மாதம் தொடங்கவும் அவளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என்று வீட்டுப் பெரியவர்கள் கூற இது தான் சாக்கு என்று நினைத்த மது உடனடியாக தனது பெட்டி படுக்கைகள் அனைத்தையும் கட்டிக்கொண்டு தமிழ்நாடு கிளம்பிவிட்டாள்.
ஷர்மாவிற்கு இது மிகப்பெரிய பேரதிர்ச்சி தான்... அவள் டெல்லியை விட்டு செல்ல மாட்டாள் சீக்கிரமாக அவளின் மனதை மாற்றி தன் வசம் இழுத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு முதல் அடி அவள் தமிழ்நாட்டிற்கு கிளம்பிச் சென்றது.
உடனே புத்திசாலித்தனமாக ரவியை அழைத்த ஷர்மா கம்பெனியின் மிக முக்கிய பொறுப்பை சில நாட்கள் மட்டும் பார்த்துக் கொள் என்று அவரின் கையில் திணித்தார். இப்போது ரவியே நினைத்தாலும் கூட இதை விட்டுவிட்டு தமிழ்நாடு செல்ல முடியாது என்பது போல் இருந்தது அந்த கம்பெனியின் நிலவரம் அவ்வளவு குளறுபடிகள்.
மது ஊருக்கு சென்றதுமே மெதுவாக ரவியை ஊருக்கு வரும்படி அழைப்பு விடுப்பாள்.
ஆனால் மதுவிற்கு இப்பொழுது நன்றாக தெரியும் ஒரு வேளை ரவியை ஷர்மா ஏதாவது ஒன்று செய்து விட்டால் கூட மதுவிடம் அவனால் நெருங்க முடியாது ஏனென்றால் மதுவை சுற்றி ரவியின் மொத்த குடும்பமும் அரண் போல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது அதனால் முடிந்த அளவு மதுவை தான் டெல்லி வர வைப்பான் ஒழிய ரவியை எதுவும் செய்துவிடமாட்டான் என்று நம்பியதால் ஷர்மா பற்றிய பயத்தை சற்று மறந்திருந்தாள்.
ஒவ்வொரு முறை ரவி எஸ்டிடி செய்து பேசும் பொழுதெல்லாம் மதுவின் பேச்சி எப்பொழுது ஊருக்கு வருகிறீர்கள் என்பதாகத்தான் இருக்கும் இப்படியாக நாட்கள் செல்ல,செல்ல மதுவிற்கு ஒரு நல்ல நாளில் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது…
அதை குடும்பத்தார் உடனடியாக ரவிக்கு தெரியபடுத்த அவர் பொறுப்பேற்றிருக்கும் பணியில் இருந்த குளறுபடிகள் காரணமாக உடனே அவரால் ஊருக்கு வர முடியவில்லை அதனால் தனது உயிர் நண்பனாக எண்ணிக்கொண்டிருக்கும் ஷர்மாவிடம் நீ முதலில் சென்று மதுவிடம் கூறு பின்னாலே நான் வருகிறேன் என அனுப்பி வைத்தார் .
ஷர்மாவிற்கு இப்பொழுது மிகப்பெரிய சந்தோஷம் ஆகிவிட்டது மூன்று மாதங்களாக மதுவை காணாமல் தவித்து கொண்டிருந்தவருக்கு இப்பொழுது மதுவை காண்பதற்கு ஒரு சாக்குக் கிடைத்து விட்டது ஒருவேளை மது தமிழ்நாட்டை விட்டு வரவில்லை என்றால் கூட ரவியை தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டால் அவரை காரணம் காட்டி அவ்வப்போது மதுவை சென்று சந்தித்துக் கொள்ளலாம் என்று புதியதொரு திட்டத்தையும் தீட்டினார்.உடனடியாக அடுத்த விமானத்திலேயே தமிழ்நாட்டை நோக்கி பயணித்தார்.
கணவர் தன்னையும் குழந்தையையும் பார்க்க வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மது மருத்துவமனையில் தனது மகளை அருகில் படுக்க வைத்தபடி குழந்தையுடன் தன்னை மறந்து பேசிக்கொண்டிருக்க…
அப்பொழுதுதான் மது….மதுப்பொண்ணே...என்ற அந்த வசீகர குரல் மதுவின் காதில் கேட்க தூக்கிவாரிப் போட்டது பயந்து உடனடியாக மகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சுற்றுமுற்றும் பார்க்க இப்பொழுது அறைக்கு வெளியே இருந்து புற்றிலிருந்து வெளிவரும் பாம்பு தலையை மட்டும் தூக்கியபடி வரும் அல்லவா அதேபோல் அறைக்குள் அவரின் தலையில் மட்டும் அனுப்பி யாரேனும் இருக்கிறார்களா என்று அறையை சுற்றிப் பார்த்தபடி உள்ளே வந்தார்.
பயந்து படுக்கையின் ஒரத்திற்கு சென்றவள்…ஷர்மாவின் பின்னால் ரவி வருகிறானா என்று பார்த்தாள்.
யாரை தேடற உன் புருஷனையா...அவன் வரமாட்டான் என்று கூற…
அதிர்ச்சியில் கண்களை விரித்தவள் வரமாட்டான்னா...என்ன அர்த்தம்…
கொன்னுட்டேன்னு அர்த்தம்...என்று வெடிச்சிரிப்பு சிர்க்க
ஏய்...உன்ன என்று கட்டிலை விட்டு இறங்கி அவர் மீது பாய
என்கிட்ட சொல்லாம இங்க ஓடி வந்துட்டல்ல பேபி அதனால எனக்கு உன் மேல பயங்கரமான கோபம் அதான் கோபத்தை அவன்கிட்ட காமிச்சிட்டேன் என்று கூறியபடி கைகளை விரித்து அவளை எதிர்கொள்ள தயாரான ஷர்மாவை பார்த்து பயந்தபடி மகளோடு ஒன்றிளாள்.
ஏன் பேபி என்னைபாத்து பயப்படற..அதும் இந்த மாதிரி நேரத்துல...தப்பு முதல்ல மதுப் பொண்ணை என் கிட்ட காட்டு... என்று உரிமையாக அவளின் கையிலிருந்த நேத்ராவை வாங்கப்போக…
எங்களைத்தொடாத என்று மகளை நெஞ்சோடு அணைத்தபடி சுவற்றோடு ஒட்டினாள் …
பிறகு தயவு செஞ்சி உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன் என் ரவியை என்ன செஞ்ச அவர் பாவம் என்மேல தான கோபம் எதுக்காக அவரை பலி வாங்கற என்றாள்.
ம்ச்...என்ன செய்ய என் மதுமேல கோபத்தைக் காட்ட முடியலையே அதனாலதான் உன் மேல இருக்குற கோபத்தை அவன்கிட்ட காமிச்சு தீர்த்துக்கிட்டேன் என்றார் கூலாக…
பொய் சொல்லாத...நீ என்னை பைத்தியமாக்க முயற்சி பண்ணற...நா பலகீனமானவ இல்ல...உன்னோட சதில நா மாட்ட மாட்டேன் முதல்ல இங்கிருந்து போ...இல்லனா கத்தி எல்லாரையும் வர வச்சிருவேன்..இது உன் ஊரு இல்ல என் ஊரு... உண்மையிலேயே ரவிக்கு ஏதாவது ஒன்னு ஆகியிருந்தா இந்த இடத்தை விட்டு உயிரோடு போக மாட்ட என்று அங்கு ஆப்பிள் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை சற்றென்று எடுத்து ஷர்மாவை நோக்கி நீட்டினாள்.
சட்டென்று அவளின் கைகளை அழுத்தி பிடிக்க ஒரு கையில் குழந்தை ஒரு கை அவனிடத்தில்
குழந்தை பிறந்த இரண்டாம் நாள் என்பதால் அவளின் மனம் ஒத்துழைத்ல அளவுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை.
கைகள் தோய குழந்தையும் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
அவள் அமரவுமே அவள் கையில் இருந்த கத்தியை வாங்கி டேபிளில் வைத்த சர்மா மிருதுவாக அவளின் கைகளை விட்டு விட்டு இப்ப கூட ஒன்னும் இல்ல நீ என்னோட வந்திடு மது என்றார.
கண்கள் கலங்க இயலாமையுடன் அவரைப் பார்த்த மது என்னை ஏன் இப்படி கொல்லாம கொல்லற பேசாம அந்த கத்தியை வைச்சி என்னையும் என் பொண்ணையும் கொன்னுடு ப்ளீஸ் என்று அழ ஆரம்பித்தாள்.
நோ பேபி நீ அழாத.. நீ அழுதா என் மனசு தாங்காது என்று அவளின் தலையை நீவி விட கையை எடுத்து செல்லவும் வாசலில் மது என்னமா சத்தம் என்று கேட்டபடியே ரவியின் பெரிய அண்ணி உள்ளே வந்தார்
நிம்மதிப் பெருமூச்சுடன் மது கட்டிலில் நன்றாக சாய்ந்தபடி அமர்ந்தாள்.
ரவியின் பெரிய அண்ணி ஷர்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தபடி நீங்க எப்போ வந்தீங்க நாங்க எல்லாரும் கீழே தானே இருந்தோம் எப்போ எங்களுக்கு தெரியாம மேல வந்தீங்க.. என்று கேட்டார்.
ஓ... நீங்கள்லாம் கீழேதான் இருந்தீர்களா நான் உங்களை கவனிக்கவே இல்லையே ரிசப்ஷனுக்கு போய் விசாரிச்சேன் ரூம் நம்பர் சொன்னாங்க நேரே ரூமுக்கு வந்துட்டேன் இங்க மது தனியா இருந்தாங்க பேசிட்டு இருந்தேன் என்று எதுவும் நடக்காதது போல பேசினார் .
உடனே ரவியின் அண்ணி மதுவின் கையிலிருந்த குழந்தையை வாங்கியபடி குழந்தையை ஏன் இப்பிடி போட்டு கசக்கிருக்க பாரு எப்படி உடம்பெல்லாம் சிவந்து போய் கிடைக்குதுன்னு..சரி நல்ல பால் குடுத்துட்டியா என்று கேட்டபடி குழந்தையை அருகில் இருந்த தொட்டிலில் கிடத்தினார்.
பிறகு ஷர்மாவை பார்த்து அதான் மதுவையும் குழந்தையையும் பாத்துட்டீங்கல்ல நாங்க இங்க இருக்கோம் நீங்க கீழே வீட்டு ஆம்பளைங்க இருக்காங்க அவங்களோட போய் பேசுங்க என்று பட்டென்று பேசி அவனை வெளியே அனுப்பினார்.
ஷர்மா வெளியே செல்லவும் என்ன இது கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் குழந்தை பிறந்த வார்டுல வந்து உட்கார்ந்துகிட்டு முதல் இந்தக் ஆஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணனும்
ஏன் ஆம்பளைகள எல்லாம் ரூம்க்குள்ள விடறீங்கனு என்று மதுவை பார்த்தபடியே வாய்க்குள் முணுமுணுத்தார் .
மதுவிற்கு ஏனோ ரவியின் அண்ணியின் அந்த செயல் அச்சமயத்தில் மிகப்பெரிய நிம்மதியைக் கொடுத்தது இருந்தாலும் ஷர்மா சொன்னதுபோல் ரவியை ஏதாவது செய்திருப்பானோ என்ற பயத்தில் அக்கா என்று அழைத்தாள்.
என்ன மது என்று கேட்டார்.
இல்ல இன்னும் உங்க கொழுந்தனார் ஏன் வரல...அவர்ட பேசுனீங்களா என்று கேட்டாள்.
அய்யோ சொல்ல மறந்துட்டேன் பாத்தியா அதை சொல்லதான் மேல வந்ததே அந்த பாம்பு கண்ணனைப் பார்த்ததும் அப்படியே மறந்துட்டேன்.
இப்பதான் ஹாஸ்பிடல் இருந்து ஃபோன் பண்ணி பேசினோம். ரவி கிளம்பிட்டானாம் ஃப்ளைட் கிடைச்சா எப்படியும் இன்னைக்கு நைட்டு இல்லனா நாளைக்கு வந்திடுவானாம் உன்கிட்ட மொதல்ல இத சொல்ல சொன்னான் சொல்லிட்டேன் சரி குழந்தை தூங்கறா நீயும் கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ அவ முடிச்சிட்டா அதுக்கு அப்புறம் உன்னை தூங்க விட மாட்டா நான் வெளிய இருக்கேன் என்று கூறியபடி சென்றார்.
எப்படி இருந்தாலும் இனி கணவனை கண்முன் காணும் வரை மதுமதியால் கண்டிப்பாக கண்ணயர முடியாது கணவன் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் .
சுகப் பிரசவம் என்பதால் மறுநாளே அவளை வீட்டிற்கு அனுப்பிவிட அதன்பின் ஷர்மாவால் ரவியின் வீட்டில் இருக்க முடியவில்லை எல்லோர் முன்பும் குழந்தையை தூக்கி மதுப்பொண்ணு என்று கொஞ்சி விட்டு குழந்தையை கொடுத்துவிட்டு அங்கிருந்து டெல்லி திரும்பினார் .
அவர் டெல்லிக்கு செல்லவும் இங்கே ரவி வரவும் சரியாக இருந்தது .
மதுவுக்கு அவரைக் கண்டதுமே சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை . கூட்டுக் குடும்பம் என்பதால் இருவரின் உணர்ச்சியையும் எல்லோர் முன்பும் காட்டமுடியவில்லை தனிமை என்பது மிக அரிதாகவே கிடைத்தது குழந்தையை பார்க்க ஒருவர் மாற்றி ஒருவர் வந்து கொண்டே இருந்ததால் இருவராலும் நேரடியாக எதுவுமே பேசிக் கொள்ள முடியவில்லை.
கிடைத்த நேரத்தில் ஷர்மாவை பற்றி கூறலாம் என்று நினைத்தால் எங்கே அவனைத்தேடி டெல்லி சென்று தனியாக மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று வாயை மூடிக்கொண்டு எதுவும் கூறவில்லை.
ஒரு வாரம் வரை உடன் இருந்தவர் குழந்தைக்கு நேத்ரா என பெயர் சூட்டி விட்டு மீண்டும் டெல்லி சென்று விட்டார் மனமே இல்லாமல் அவரை அனுப்பி வைத்த மது அடுத்த முறை அவர் வரும் நாளுக்காக மனதில் சிறு பயத்துடன் காத்திருந்தாள்.
அடுத்த முறை வந்தால் கண்டிப்பாக ரவியை டெல்லி அனுப்பக்கூடாது என்று காத்திருக்க வந்தவர் பிடிவாதமாக மதுவை டெல்லி வரச்சொல்லி சண்டையிட்டார்.
இருவரின் வாக்குவாதங்களும் முற்ற ஆரம்பிக்கவும் வீட்டின் பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுலபமான ஒரு முடிவை எடுத்தனர்.
ரவிக்கு வருமானம் கொடுக்ககூடிய தொழில்கள் அனைத்தும் டெல்லியில் இருப்பதால் அவரால் அதை எல்லாம் விட்டு விட்டு இங்கு நிரந்தரமாக தங்க முடியாது.
மதுவிற்கு இந்த ஊரை தவிர வேறு எந்த ஊரும் பிடிக்கவில்லை முக்கியமாக டெல்லியின் சீதோசனம் மதுவிற்கு சுத்தமாக ஒத்துக் கொள்ளாத காரணத்தினால் மதுவையும் அங்கு அனுப்ப முடியாது
அதனால் ரவி மாதம் ஒரு முறையோ இல்லை என்றால் இரு வாரத்திற்கு ஒருமுறையோ வந்து பார்த்து விட்டுச் செல்லட்டும் என்று கூறினார்கள்.
பெரியவர்கள் கூறியது ஒருவழியாக சிறியவர்கள் இருவருக்கும் ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்ததால் சரி என தலையசைத்தனர்.
மதுவை அவரின் வீட்டில் குடும்பத்தினரின் பொறுப்பில் விட்டுவிட்டு டெல்லி பயணித்தார் அங்கே விமானம் ஏறினால் மூன்று மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் இங்கே வந்துவிடலாம் அதனால் மது இங்கே இருப்பது பெரிய விஷயமாக ரவிக்கு தெரியவில்லை. அவரின் வருமானமும் லட்சக்கணக்கில் இருப்பதால் சில ஆயிரங்கள் கொடுத்து விமான பயணம் மேற்கொள்வதும் அவருக்கு பெரியதொரு இழப்பாகும் தோன்றவில்லை.
ஆனால் மதுவில் மனதில் மட்டும் எப்பொழுதுமே ஒரு சிறு நெருடல் இருக்கும் ஷர்மா தன் மீது இருக்கும் சபலத்தில் தனது கணவரை ஏதேனும் செய்து விடுவானோ என்று அவ்வப்போது ஜாடைமாடையாக ஷர்மா ரவியிடம் எப்படிப் பழகுகிறார் என்று கணவனிடம் மறைமுகமாக விசாரிப்பாள்.
அவரும் ஷர்மாவைப் பற்றி மிக உயர்வாக கூறுவாறே தவிர என்றுமே கீழிறக்கி பேசியதே இல்லை அவர் கூறியதை வைத்து பார்க்கும் பொழுது ஒரு விஷயம் மதுவிற்கு உறுதியாக தெரிந்தது.
ஷர்மா எந்த அளவிற்கு தன்மீது சபலப்பட்டு இருக்கிறானோ அதே அளவிற்கு ரவியின் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறான்…அவனால் ரவிக்கு என்றுமே ஆபத்து வரப்போவதில்லை... மற்றவர்களாலும் ரவிக்கு ஆபத்து வர விடமாட்டான்
ரவியை வைத்து தன்னை மிரட்டி அவனின் காரியத்தை சாதிக்க நினைக்கிறான் என்பதை புரிந்து கொண்டவளுக்கு சற்று பயம் தெளிந்தது.
ரவியின் குடும்பம் மதுவை சுற்றி இருக்கும் வரை ரவியை தவிர வேறு யாராலும் தன்னை நெருங்க முடியாது என்பதும் தெளிவாகத் தெரிந்ததால் தைரியமாக உலா வர ஆரம்பித்தாள்.
தொடரும்...
மது இன்னும் எவ்வளவு நேரம் குளிச்சுகிட்டு இருப்ப எனக்கு டைம் ஆச்சு என்று கூற ஷர்மாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது...பயந்தபடி எதிர்ப்பட்ட அறைக்குள் புகுந்து கொண்டார்.
ரவி கவனித்து விட்டாரா என்று அறைக்குள் ஆராய...நல்லவேளை ஷர்மா உள்ளே வந்ததை கவனிக்க வில்லை.
படபடக்கும் இதயத்தோடு பக்கத்து அறையில் காத்திருக்க ஆரம்பித்தார்.
சற்று நேரத்தில் மதுவின் குரல் சற்று குழைந்த படி கேட்டது என்னங்க பிரச்சினை உங்களுக்கு நான் தான் உங்களை அப்பவே வேலைக்கு கிளம்பி போக சொல்லிட்டேனே அப்புறம் ஏன் போகாம கத்திகிட்டு இருக்கீங்க…
நீ எனக்குத் தர வேண்டியதை குடுத்துட்டா நான் ஏன் இப்படி கத்திகிட்டு இருக்க போறேன்…
போதும் போதும் இதையே இன்னும் எத்தனை நாள் சொல்லுவீங்க... இப்ப கொடுக்க வேண்டியதுக்கும் சேர்த்து தான் நேத்து ராத்திரியே வசூல் பண்ணிட்டீங்களே அதனால இப்போ எல்லாம் ஒன்னும் கிடையாது என்று பொய்க் கோபத்தோடு பேசினாள் மதுமதி.
சரி நீ ராத்திரி கொடுத்ததை அசலா வச்சிக்கோ...வட்டியை நான் இப்போ கொடுத்துட்டு போறேன்…
நீங்க எந்த வட்டியும் தர வேணாம்... இப்போ வட்டி கொடுக்கறேனு சொல்லுவீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அசலை கொடுக்கறேனு ஆரம்பிப்பீங்க இந்த விளையாட்டுக்கு நான் வரல…
இதோட ரெண்டாவது தடவை நான் குளிச்சாச்சி... இனி என்னால குளிக்க முடியாது…முதல்ல கிளம்புங்க…
என்ன மது புருஷன் கொடுக்கிறேன்னு சொல்றத கூட வேணாம்னு சொல்லறியே என்று அவளை இழுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.
கொடுத்ததெல்லாம் வேணான்னு சொன்னதால தான் என் வயித்துல உங்க குழந்தை கருவா வளர்ந்து நிக்குது அதனால கொடுத்தவரை போதும் தயவுசெஞ்சு ஆபீஸ் கிளம்புங்க வண்டி வேற சர்வீஸ்ல இருக்குனு சொல்லி இருக்கீங்க இந்த டெல்லி டிராபிக்ல அவதிப்பட்டு சீக்கிரமா ஆபிஸ் போய் சேருங்க இல்லனா உங்கள காணோம்னு தேடிட்டு வீட்டுக்கு வந்துட்டு போறாங்க என்று அவனின் அணைப்பில் இருந்தவாறு கூறினாள்.
இன்னைக்கு ஆபீஸ் கண்டிப்பா போய்த்தான் ஆகணுமா மது கார் வேற இல்ல நடந்து மெயின் ரோட்டுக்கு போய் அங்கிருந்து ஆட்டோ புடிச்சி... ஓ மை காட் ப்ளீஸ் மது இன்னைக்கு ஒரு நாள் வீட்டில் இருக்கறனே… என்று மதுவின் மணிவயிற்றை தடவியபடியே கெஞ்சினார்.
ம்ம் ..இருக்கலாமே…ரொம்ப நாளா என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறேன்னு டிமிக்கி கொடுத்துகிட்டே இருக்கீங்க இன்னைக்கு மாட்டினீங்களா...கிளம்புங்க என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்க என்று கூற
உன் கூட கோயிலுக்கு வர்றதுக்கு ஆட்டோல போற கொடுமை எவ்வளவோ பெட்டர் நான் கிளம்புறேன் மது என்று அவளை இழுத்து அணைத்து அவசர இதழ் முத்தம் ஒன்றைக் கொடுத்துவிட்டு வெளியேறினார்.
செல்லும் ரவியை வாசல்வரை சென்று வழியனுப்பி விட்டு கேட்டையும் சாத்திவிட்டு முன்னறையின் கதவின் தாழ்ப்பாளை போட்டு விட்டு
உள்ளே வந்த மது தலையில் கட்டியிருந்த துவாலையை கழட்டி முடியை நன்றாக விரித்து விட்டாள்.
பிறகு டிரெஸ்ஸிங் டேபிளில் முன்பு வந்து நின்றவள் அங்கிருந்த கண் மையை எடுத்து கண்களுக்கு திக்காக திட்டிக்கொண்டு நெற்றியில் கலைந்திருந்த குங்குமத்தை சரி செய்து அதை நல்ல பெரியதாக வைத்துக்கொண்டாள்.
பிறகு புடவை கொசுவத்தை அவிழ்த்து மீண்டும் மடிப்பு எடுக்க ஆரம்பித்தாள்.
அப்பொழுது அவளின் பின்னால் இருந்த மது என்ற ஷர்மாவின் வசீகரக் குரல் அவளின் காதுகளில் கேட்க அவசரமாக புடவையை சொருகியவள் பயந்து திரும்பிப்பார்க்க கதவில் நன்கு சாய்ந்தபடி ஷர்மா அந்தக் காந்தக் கண்களை கொண்டு மதுவை மயக்கும் தோரணையில் நின்று கொண்டிருந்தார்.
ஹேய் நீ எப்படி உள்ள அதான் கதவை லாக் பண்ணினேனே என்று குழம்பித்தவிக்க…
நோ டென்ஷன் மது கதவு பூட்டி தான் இருக்கு நீ கதவ பூட்டிட்டு தான் உள்ள வந்த ஆனா நான் அதுக்கு முன்னாடியே உள்ள வந்துட்டேன் என்று கூற நெஞ்சினில் கைவைத்தவள் அப்படியே சுவற்றுடன் சாய்ந்தாள்.
அப்படினா நானும் ரவியும் பேசிட்டு இருந்தது….என்று பாதியில் நிறுத்த
பேசிட்டு இருந்தது முத்தம் கொடுத்தது எல்லாத்தையுமே பார்த்துட்டுதான் இருந்தேன் மது என்று கூறியபடி அவளின் அருகில் வர
ச்சீ...தள்ளிப்போ தள்ளி விட்டாள்.
ஆனால் அவரோ துளி அளவு கூட நகராமல் பார்வை மட்டும் மதுவின் மணி வயிற்றில் இருந்தது...
புடவையை அவசரமாக சரி செய்தவள் அவரை விட்டு சற்று தள்ளி கொண்டாள்.
வீட்டில் ஒரு லேண்ட் லைன் ஃபோன் இருக்கிறது அதில் வேண்டுமானால் ரவிக்கு அழைக்கலாம் ஆனால் அவர் கண்டிப்பாக இப்பொழுது அலுவலகம் சென்றிருக்க வாய்ப்பில்லை இவனிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று அங்கும் இங்கும் தேட
ஏன் மது என்ன பார்த்து பயப்படுற உனக்கு பேபி ஃபாம் ஆகியிருக்குனு ரவி சொன்னான் உனக்கு உடம்பு முடியலன்னும் சொன்னான் அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன் ஆனா உன்ன பாத்தா அப்படி தெரியலையே என்றார்.
நான் நல்லாத்தான் இருக்கேன் என்னை பாத்துட்ட இல்ல முதல வெளியே போ என்று படபடப்பாக கூறினாள்
நான் போறேன் மது அதுக்கு முன்னாடி மதுவோட வயித்துல இருக்கற பேபியை பாத்துட்டு போறேனே…
லூசு மாதிரி உளறாத அது எப்படி உன்னால பார்க்க முடியும்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரவி தொட்டுப் பார்த்தான்ல அதே மாதிரி நானும் தொட்டு பாத்துட்டு கிளம்பி போயிட்டறேன்…
பைத்தியமா டா நீ நான் உன் பிரண்டோட வொய்ப் என்கிட்ட போய் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க இந்த விஷயம் மட்டும் ரவிக்கு தெரிஞ்சது... முதல்ல வெளியே போடா என்று அவனை தள்ளி விட்டபடி முன் அறைக்குள் வந்தாள்.
அதுவரை பொறுமையாகவும் சாந்தமாகவும் பேசிக் கொண்டிருந்த ஷர்மாவின் முகம் உக்கிரமாக மாறியது கண்களை உருட்டியபடி நேராக மதுவின் கழுத்தைப் பிடித்துக்கொண்டு சுவற்றோடு வைத்து அழுத்தியவர்
இந்த விசயம் ரவிக்குத் தெரிஞ்சா அடுத்த நிமிஷம் ரவி செத்துப் போய்டுவான் மது...நான் அவனை கொன்னுடுவேன் என்று கூலாக கூறினார்.
அவரின் கண்களில் இருக்கும் கோபத்திற்கும் பேசும் வார்த்தைகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருந்தது அவர் மதுவிற்க்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என்னும் பயத்தை மதுவிற்கு உடனடியாக கொடுத்தது .
முச்சுவிட திணறிய படி ஷர்மாவிடம் இருந்து தன்னை விடுவிக்க போராட மீண்டும் அவளின் கழுத்தை அழுத்திப் பிடித்தவர் அவள் திமிறாதவாறு அவரின் உடல் பாரத்தையும் அவளின் மீது வைத்தார்.
இப்போ மதுவோட வயித்துல இருக்கிற பாப்பாவை நான் தொட்டுப் பார்க்க கூடாதுன்னா நான் இப்போ சொல்றதை அப்படியே நீ சொல்லணும் …
நான் சொல்றதை நீ சொல்றியா இல்லனா பாப்பாவை மட்டும் தொட்டு பார்த்துட்டு கிளம்பவா என்று மதுவின் முகத்தை பார்த்தபடியே கேட்க
இவன் பைத்தியக்காரன் முதலில் இவனை இங்கிருந்து அனுப்ப வேண்டும் இல்லை என்றால் சேதாரம் தனக்கு தான் என்று நன்கு புரிந்துகொண்ட மது புத்திசாலித்தனமாக சொல்லறேன் என்று தலையசைத்தாள் .
குட் இப்படித்தான் இருக்கணும் என்றவர் மற்றொரு கையால் மதுவின் கன்னத்தை தொட அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அவரின் தொடுதலை விரும்பாதவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
கோபத்தில் மதுவின் முகத்தை அவரின் பக்கம் திருப்பி அழுத்திப் பிடித்தவர் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குனு சொல்லு மது என்றார்.
முடியாது என்பதுபோல் கண்களை மூடிக்கொண்டு சைடாக மது திரும்ப
மீண்டும் கழுத்திலிருந்த அவரது கைக்கு ஷர்மா அழுத்தம் கொடுக்க இப்பொழுது மூச்சு விட மிகவும் சிரமப்பட்ட மது சரி என்பது போல் தலை அசைத்தாள்.
குட் சொல்லு….உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…
திணறியபடி கூறி முடித்தாள்…
ஸ்மார்ட் கேர்ள்... உன் கலர் இந்த கண்ணு இதெல்லாம் என்ன ரொம்ப கவருது…
ப்ளீஸ் என்ன விட்டுடு நான் என் புருஷனை கூட்டிட்டு ஊருக்கே போயிடறேன் என்னை இப்படி சித்திரவதை படுத்தாத…
நான் சொன்னது இது இல்ல பேபி உன் கலரு இந்த கண்ணு இதெல்லாம் என்ன ரொம்ப கவருது…
அய்யோ கடவுளே என்று கூறியபடியே கூறிமுடித்தாள்.
இப்ப கடைசியா ஷர்மா ஐ லவ் யூ சொல்லு..
முடியாது போடா உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ ரவியைத் தவிர இந்த வார்த்தையை யாரை பார்த்தும் நான் சொல்ல மாட்டேன் என்று பிடிவாதமாக மறுக்க…
அவளின் முகத்தருகே சிரித்தபடி வந்த ஷர்மா திடீரென்று அவளின் மீது இருந்த கைகளை எடுத்தார் இந்த ரெண்டு வார்த்தையே போதும் என் கண்ணை தானே பிளாக் கோப்ரா மாதிரி இருக்குன்னு சொன்ன இப்போ உன் வாயாலேயே இந்த கண்ணு உன்னைக் கவருதுன்னு சொல்ல வச்சுட்டேன் பாத்தியா அதே மாதிரி கூடிய சீக்கிரம் என்னை பார்த்து நீ ஐ லவ் யூ ன்னு சொல்லுவ என்று கூறினார்.
ஷர்மாவிடம் இருந்து தப்பித்த மது அறையின் மற்றொரு மூலையில் சென்று நின்று கொண்டாள் ஷர்மா இப்பொழுது சாவகாசமாக அறையின் நடுவில் இருந்த சோபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்தபோது
சின்ன வயசிலிருந்தே எனக்கு ஒரு பழக்கம் நான் ஆசைப்பட்டது கிடைக்கலன்னா கடைசி வரை அது கிடைக்க போராடுவேன் .
அது எந்த நிலைமையில் கிடைச்சாலும் நான் பத்திரமா பார்த்துக்குவேன் ஏன்னா நான் ஆசைப்படும் போது அது நல்லா தான் இருந்தது அந்த மாதிரியான குணம் எனக்கு.
அதனாலதான் இதுவரை நான் ஆசைப்பட்டது கிடைக்காம இருந்ததா சரித்திரமே இல்ல .
அதனால நீயும் எனக்கு கிடைப்ப அதுவும் கூடிய சீக்கிரமே...
ஒருவேளை இப்போ இங்கு நடந்த விஷயத்தை நீ ரவி கிட்ட கூட சொல்லலாம் ரவி உடனே கோபமா நியாயம் கேட்க என் ஆஃபிஸ் வரலாம்
அந்த ஆபீஸ்ல வைச்சே அவனை நான் முடிச்சிடலாம் யாருக்கும் தெரியாம என்னோட ஃபார்ம் ஹவுஸ்ல புதைக்கலாம்.
பாஷை தெரியாத இந்த ஊர்ல மது தனியா இருப்பாள்ல அப்போ உரிமையா வந்து நான் தூக்கிட்டு போய் என் ஃபார்ம் ஹவுஸ்ல ஒரு இருட்டு அறையில் அடைத்து வைத்து ஆசை தீர காலம்பூரா கூட வெச்சிக்கலாம் என்று அவர் கூற கூற மதுவின் இதயம் துடிப்பதை நிறுத்தி விடவா என்று கேட்டது .
நெஞ்சில் ஒரு கையையும் வயிற்றில் ஒரு கையையும் வைத்துக் கொண்டு அப்படி ஏதும் பண்ணிடாத நான் என் புருஷன் கிட்ட உன்னை பத்தி வாய் திறக்க மாட்டேன் ...
குட் மது எது சொன்னாலும் உடனே புரிஞ்சிக்கற…
மது நீ என்னோட இப்போவே வந்துடேன் ...பூ மாதிரி பாத்துக்கறேன்…இல்லையா கொஞ்ச நாள் கழிச்சி கூட வா...தப்பில்லை அதை விட்டுட்டு புத்திசாலித்தனமா நடந்துக்கிறதா நெனச்சு ரவி கிட்டயோ இல்ல வேற யார்கிட்டயும் சொல்லிட்டு இங்கிருந்து தப்பிச்சு போகலாம்னு நினைச்சேனு வை
நீ இந்த உலகத்தோட எந்த மூலைக்குப் போனாலும் உன் புருஷனோட உயிர் என் கையில இருக்கு .
உன் புருஷனை நீ உண்மையா நேசித்தா என்னைக்குமே இந்த விஷயத்தை வெளியே சொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன் ..
என்று பொறுமையாகவும் நிதானமாகவும் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் அவளுக்கு கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் திக்பிரமை பிடித்தது போல் நின்றவள் ஷர்மா சென்றதும் அங்கேயே அமர்ந்து கொண்டு தலையில் அடித்தபடி கதறி அழ ஆரம்பித்தாள்.
அதன்பிறகு எப்போது டெல்லியை விட்டு செல்லலாம் என்று ரவியிடம் கெஞ்சத் தொடங்கினாள். சரியான உணவு இல்லை,உறக்கம் இல்லை...காரணம் கேட்கும் ரவியிடம் ஊருக்கு வாருங்கள் இல்லையென்றால் என்னை மட்டுமாவது அனுப்புங்கள் என்று பாடிய பாட்டையே பாடினாள்.
ஷர்மாவின் மற்றொரு முகத்தை அறியாத ரவி எப்பொழுதுமே ஷர்மா உடனே சுற்றிக் கொண்டிருந்தார். ஒவ்வொருமுறையும் ஷர்மா அழைக்கிறார் ஷர்மாவுடன் செல்கிறேன் என்று ரவி கூறிக் கொண்டு வெளியில் செல்லும் பொழுதெல்லாம் அவர் திரும்பி வரும்வரை நெஞ்சில் நெருப்பை வைத்துக் கட்டியது போல காத்திருப்பாள் மது.
எக்காரணம் கொண்டும் நண்பர்கள் யாரும் வீட்டுப் பக்கமே தலை வைத்து படுக்க கூடாது என்று உறுதியாக கூறியதால் ஷர்மாவால் எளிதாக மதுவின் வீட்டிற்குள் வர முடியவில்லை .
மதுவுக்கு இப்போது மன நோய் போலவே ஆகிவிட்டது அவ்வப்போது வீட்டிற்க்குள் யாரேனும் இருக்கிறார்களா என்று ஆராய்வாள்... இது ரவிக்கு சிலநேரம் பயத்தைக் கொடுத்தாலும் கருவுற்ற பெண்களுக்கு சில நேரம் இது போலெல்லாம் ஆகும் என்று மருத்துவர் கூறியிருந்ததால் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார்.
எப்படியோ ஒருவழியாக ஏழு மாதம் தொடங்கவும் அவளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என்று வீட்டுப் பெரியவர்கள் கூற இது தான் சாக்கு என்று நினைத்த மது உடனடியாக தனது பெட்டி படுக்கைகள் அனைத்தையும் கட்டிக்கொண்டு தமிழ்நாடு கிளம்பிவிட்டாள்.
ஷர்மாவிற்கு இது மிகப்பெரிய பேரதிர்ச்சி தான்... அவள் டெல்லியை விட்டு செல்ல மாட்டாள் சீக்கிரமாக அவளின் மனதை மாற்றி தன் வசம் இழுத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு முதல் அடி அவள் தமிழ்நாட்டிற்கு கிளம்பிச் சென்றது.
உடனே புத்திசாலித்தனமாக ரவியை அழைத்த ஷர்மா கம்பெனியின் மிக முக்கிய பொறுப்பை சில நாட்கள் மட்டும் பார்த்துக் கொள் என்று அவரின் கையில் திணித்தார். இப்போது ரவியே நினைத்தாலும் கூட இதை விட்டுவிட்டு தமிழ்நாடு செல்ல முடியாது என்பது போல் இருந்தது அந்த கம்பெனியின் நிலவரம் அவ்வளவு குளறுபடிகள்.
மது ஊருக்கு சென்றதுமே மெதுவாக ரவியை ஊருக்கு வரும்படி அழைப்பு விடுப்பாள்.
ஆனால் மதுவிற்கு இப்பொழுது நன்றாக தெரியும் ஒரு வேளை ரவியை ஷர்மா ஏதாவது ஒன்று செய்து விட்டால் கூட மதுவிடம் அவனால் நெருங்க முடியாது ஏனென்றால் மதுவை சுற்றி ரவியின் மொத்த குடும்பமும் அரண் போல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது அதனால் முடிந்த அளவு மதுவை தான் டெல்லி வர வைப்பான் ஒழிய ரவியை எதுவும் செய்துவிடமாட்டான் என்று நம்பியதால் ஷர்மா பற்றிய பயத்தை சற்று மறந்திருந்தாள்.
ஒவ்வொரு முறை ரவி எஸ்டிடி செய்து பேசும் பொழுதெல்லாம் மதுவின் பேச்சி எப்பொழுது ஊருக்கு வருகிறீர்கள் என்பதாகத்தான் இருக்கும் இப்படியாக நாட்கள் செல்ல,செல்ல மதுவிற்கு ஒரு நல்ல நாளில் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது…
அதை குடும்பத்தார் உடனடியாக ரவிக்கு தெரியபடுத்த அவர் பொறுப்பேற்றிருக்கும் பணியில் இருந்த குளறுபடிகள் காரணமாக உடனே அவரால் ஊருக்கு வர முடியவில்லை அதனால் தனது உயிர் நண்பனாக எண்ணிக்கொண்டிருக்கும் ஷர்மாவிடம் நீ முதலில் சென்று மதுவிடம் கூறு பின்னாலே நான் வருகிறேன் என அனுப்பி வைத்தார் .
ஷர்மாவிற்கு இப்பொழுது மிகப்பெரிய சந்தோஷம் ஆகிவிட்டது மூன்று மாதங்களாக மதுவை காணாமல் தவித்து கொண்டிருந்தவருக்கு இப்பொழுது மதுவை காண்பதற்கு ஒரு சாக்குக் கிடைத்து விட்டது ஒருவேளை மது தமிழ்நாட்டை விட்டு வரவில்லை என்றால் கூட ரவியை தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டால் அவரை காரணம் காட்டி அவ்வப்போது மதுவை சென்று சந்தித்துக் கொள்ளலாம் என்று புதியதொரு திட்டத்தையும் தீட்டினார்.உடனடியாக அடுத்த விமானத்திலேயே தமிழ்நாட்டை நோக்கி பயணித்தார்.
கணவர் தன்னையும் குழந்தையையும் பார்க்க வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த மது மருத்துவமனையில் தனது மகளை அருகில் படுக்க வைத்தபடி குழந்தையுடன் தன்னை மறந்து பேசிக்கொண்டிருக்க…
அப்பொழுதுதான் மது….மதுப்பொண்ணே...என்ற அந்த வசீகர குரல் மதுவின் காதில் கேட்க தூக்கிவாரிப் போட்டது பயந்து உடனடியாக மகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சுற்றுமுற்றும் பார்க்க இப்பொழுது அறைக்கு வெளியே இருந்து புற்றிலிருந்து வெளிவரும் பாம்பு தலையை மட்டும் தூக்கியபடி வரும் அல்லவா அதேபோல் அறைக்குள் அவரின் தலையில் மட்டும் அனுப்பி யாரேனும் இருக்கிறார்களா என்று அறையை சுற்றிப் பார்த்தபடி உள்ளே வந்தார்.
பயந்து படுக்கையின் ஒரத்திற்கு சென்றவள்…ஷர்மாவின் பின்னால் ரவி வருகிறானா என்று பார்த்தாள்.
யாரை தேடற உன் புருஷனையா...அவன் வரமாட்டான் என்று கூற…
அதிர்ச்சியில் கண்களை விரித்தவள் வரமாட்டான்னா...என்ன அர்த்தம்…
கொன்னுட்டேன்னு அர்த்தம்...என்று வெடிச்சிரிப்பு சிர்க்க
ஏய்...உன்ன என்று கட்டிலை விட்டு இறங்கி அவர் மீது பாய
என்கிட்ட சொல்லாம இங்க ஓடி வந்துட்டல்ல பேபி அதனால எனக்கு உன் மேல பயங்கரமான கோபம் அதான் கோபத்தை அவன்கிட்ட காமிச்சிட்டேன் என்று கூறியபடி கைகளை விரித்து அவளை எதிர்கொள்ள தயாரான ஷர்மாவை பார்த்து பயந்தபடி மகளோடு ஒன்றிளாள்.
ஏன் பேபி என்னைபாத்து பயப்படற..அதும் இந்த மாதிரி நேரத்துல...தப்பு முதல்ல மதுப் பொண்ணை என் கிட்ட காட்டு... என்று உரிமையாக அவளின் கையிலிருந்த நேத்ராவை வாங்கப்போக…
எங்களைத்தொடாத என்று மகளை நெஞ்சோடு அணைத்தபடி சுவற்றோடு ஒட்டினாள் …
பிறகு தயவு செஞ்சி உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன் என் ரவியை என்ன செஞ்ச அவர் பாவம் என்மேல தான கோபம் எதுக்காக அவரை பலி வாங்கற என்றாள்.
ம்ச்...என்ன செய்ய என் மதுமேல கோபத்தைக் காட்ட முடியலையே அதனாலதான் உன் மேல இருக்குற கோபத்தை அவன்கிட்ட காமிச்சு தீர்த்துக்கிட்டேன் என்றார் கூலாக…
பொய் சொல்லாத...நீ என்னை பைத்தியமாக்க முயற்சி பண்ணற...நா பலகீனமானவ இல்ல...உன்னோட சதில நா மாட்ட மாட்டேன் முதல்ல இங்கிருந்து போ...இல்லனா கத்தி எல்லாரையும் வர வச்சிருவேன்..இது உன் ஊரு இல்ல என் ஊரு... உண்மையிலேயே ரவிக்கு ஏதாவது ஒன்னு ஆகியிருந்தா இந்த இடத்தை விட்டு உயிரோடு போக மாட்ட என்று அங்கு ஆப்பிள் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை சற்றென்று எடுத்து ஷர்மாவை நோக்கி நீட்டினாள்.
சட்டென்று அவளின் கைகளை அழுத்தி பிடிக்க ஒரு கையில் குழந்தை ஒரு கை அவனிடத்தில்
குழந்தை பிறந்த இரண்டாம் நாள் என்பதால் அவளின் மனம் ஒத்துழைத்ல அளவுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை.
கைகள் தோய குழந்தையும் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
அவள் அமரவுமே அவள் கையில் இருந்த கத்தியை வாங்கி டேபிளில் வைத்த சர்மா மிருதுவாக அவளின் கைகளை விட்டு விட்டு இப்ப கூட ஒன்னும் இல்ல நீ என்னோட வந்திடு மது என்றார.
கண்கள் கலங்க இயலாமையுடன் அவரைப் பார்த்த மது என்னை ஏன் இப்படி கொல்லாம கொல்லற பேசாம அந்த கத்தியை வைச்சி என்னையும் என் பொண்ணையும் கொன்னுடு ப்ளீஸ் என்று அழ ஆரம்பித்தாள்.
நோ பேபி நீ அழாத.. நீ அழுதா என் மனசு தாங்காது என்று அவளின் தலையை நீவி விட கையை எடுத்து செல்லவும் வாசலில் மது என்னமா சத்தம் என்று கேட்டபடியே ரவியின் பெரிய அண்ணி உள்ளே வந்தார்
நிம்மதிப் பெருமூச்சுடன் மது கட்டிலில் நன்றாக சாய்ந்தபடி அமர்ந்தாள்.
ரவியின் பெரிய அண்ணி ஷர்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தபடி நீங்க எப்போ வந்தீங்க நாங்க எல்லாரும் கீழே தானே இருந்தோம் எப்போ எங்களுக்கு தெரியாம மேல வந்தீங்க.. என்று கேட்டார்.
ஓ... நீங்கள்லாம் கீழேதான் இருந்தீர்களா நான் உங்களை கவனிக்கவே இல்லையே ரிசப்ஷனுக்கு போய் விசாரிச்சேன் ரூம் நம்பர் சொன்னாங்க நேரே ரூமுக்கு வந்துட்டேன் இங்க மது தனியா இருந்தாங்க பேசிட்டு இருந்தேன் என்று எதுவும் நடக்காதது போல பேசினார் .
உடனே ரவியின் அண்ணி மதுவின் கையிலிருந்த குழந்தையை வாங்கியபடி குழந்தையை ஏன் இப்பிடி போட்டு கசக்கிருக்க பாரு எப்படி உடம்பெல்லாம் சிவந்து போய் கிடைக்குதுன்னு..சரி நல்ல பால் குடுத்துட்டியா என்று கேட்டபடி குழந்தையை அருகில் இருந்த தொட்டிலில் கிடத்தினார்.
பிறகு ஷர்மாவை பார்த்து அதான் மதுவையும் குழந்தையையும் பாத்துட்டீங்கல்ல நாங்க இங்க இருக்கோம் நீங்க கீழே வீட்டு ஆம்பளைங்க இருக்காங்க அவங்களோட போய் பேசுங்க என்று பட்டென்று பேசி அவனை வெளியே அனுப்பினார்.
ஷர்மா வெளியே செல்லவும் என்ன இது கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாமல் குழந்தை பிறந்த வார்டுல வந்து உட்கார்ந்துகிட்டு முதல் இந்தக் ஆஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணனும்
ஏன் ஆம்பளைகள எல்லாம் ரூம்க்குள்ள விடறீங்கனு என்று மதுவை பார்த்தபடியே வாய்க்குள் முணுமுணுத்தார் .
மதுவிற்கு ஏனோ ரவியின் அண்ணியின் அந்த செயல் அச்சமயத்தில் மிகப்பெரிய நிம்மதியைக் கொடுத்தது இருந்தாலும் ஷர்மா சொன்னதுபோல் ரவியை ஏதாவது செய்திருப்பானோ என்ற பயத்தில் அக்கா என்று அழைத்தாள்.
என்ன மது என்று கேட்டார்.
இல்ல இன்னும் உங்க கொழுந்தனார் ஏன் வரல...அவர்ட பேசுனீங்களா என்று கேட்டாள்.
அய்யோ சொல்ல மறந்துட்டேன் பாத்தியா அதை சொல்லதான் மேல வந்ததே அந்த பாம்பு கண்ணனைப் பார்த்ததும் அப்படியே மறந்துட்டேன்.
இப்பதான் ஹாஸ்பிடல் இருந்து ஃபோன் பண்ணி பேசினோம். ரவி கிளம்பிட்டானாம் ஃப்ளைட் கிடைச்சா எப்படியும் இன்னைக்கு நைட்டு இல்லனா நாளைக்கு வந்திடுவானாம் உன்கிட்ட மொதல்ல இத சொல்ல சொன்னான் சொல்லிட்டேன் சரி குழந்தை தூங்கறா நீயும் கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ அவ முடிச்சிட்டா அதுக்கு அப்புறம் உன்னை தூங்க விட மாட்டா நான் வெளிய இருக்கேன் என்று கூறியபடி சென்றார்.
எப்படி இருந்தாலும் இனி கணவனை கண்முன் காணும் வரை மதுமதியால் கண்டிப்பாக கண்ணயர முடியாது கணவன் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் .
சுகப் பிரசவம் என்பதால் மறுநாளே அவளை வீட்டிற்கு அனுப்பிவிட அதன்பின் ஷர்மாவால் ரவியின் வீட்டில் இருக்க முடியவில்லை எல்லோர் முன்பும் குழந்தையை தூக்கி மதுப்பொண்ணு என்று கொஞ்சி விட்டு குழந்தையை கொடுத்துவிட்டு அங்கிருந்து டெல்லி திரும்பினார் .
அவர் டெல்லிக்கு செல்லவும் இங்கே ரவி வரவும் சரியாக இருந்தது .
மதுவுக்கு அவரைக் கண்டதுமே சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை . கூட்டுக் குடும்பம் என்பதால் இருவரின் உணர்ச்சியையும் எல்லோர் முன்பும் காட்டமுடியவில்லை தனிமை என்பது மிக அரிதாகவே கிடைத்தது குழந்தையை பார்க்க ஒருவர் மாற்றி ஒருவர் வந்து கொண்டே இருந்ததால் இருவராலும் நேரடியாக எதுவுமே பேசிக் கொள்ள முடியவில்லை.
கிடைத்த நேரத்தில் ஷர்மாவை பற்றி கூறலாம் என்று நினைத்தால் எங்கே அவனைத்தேடி டெல்லி சென்று தனியாக மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்று வாயை மூடிக்கொண்டு எதுவும் கூறவில்லை.
ஒரு வாரம் வரை உடன் இருந்தவர் குழந்தைக்கு நேத்ரா என பெயர் சூட்டி விட்டு மீண்டும் டெல்லி சென்று விட்டார் மனமே இல்லாமல் அவரை அனுப்பி வைத்த மது அடுத்த முறை அவர் வரும் நாளுக்காக மனதில் சிறு பயத்துடன் காத்திருந்தாள்.
அடுத்த முறை வந்தால் கண்டிப்பாக ரவியை டெல்லி அனுப்பக்கூடாது என்று காத்திருக்க வந்தவர் பிடிவாதமாக மதுவை டெல்லி வரச்சொல்லி சண்டையிட்டார்.
இருவரின் வாக்குவாதங்களும் முற்ற ஆரம்பிக்கவும் வீட்டின் பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுலபமான ஒரு முடிவை எடுத்தனர்.
ரவிக்கு வருமானம் கொடுக்ககூடிய தொழில்கள் அனைத்தும் டெல்லியில் இருப்பதால் அவரால் அதை எல்லாம் விட்டு விட்டு இங்கு நிரந்தரமாக தங்க முடியாது.
மதுவிற்கு இந்த ஊரை தவிர வேறு எந்த ஊரும் பிடிக்கவில்லை முக்கியமாக டெல்லியின் சீதோசனம் மதுவிற்கு சுத்தமாக ஒத்துக் கொள்ளாத காரணத்தினால் மதுவையும் அங்கு அனுப்ப முடியாது
அதனால் ரவி மாதம் ஒரு முறையோ இல்லை என்றால் இரு வாரத்திற்கு ஒருமுறையோ வந்து பார்த்து விட்டுச் செல்லட்டும் என்று கூறினார்கள்.
பெரியவர்கள் கூறியது ஒருவழியாக சிறியவர்கள் இருவருக்கும் ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்ததால் சரி என தலையசைத்தனர்.
மதுவை அவரின் வீட்டில் குடும்பத்தினரின் பொறுப்பில் விட்டுவிட்டு டெல்லி பயணித்தார் அங்கே விமானம் ஏறினால் மூன்று மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் இங்கே வந்துவிடலாம் அதனால் மது இங்கே இருப்பது பெரிய விஷயமாக ரவிக்கு தெரியவில்லை. அவரின் வருமானமும் லட்சக்கணக்கில் இருப்பதால் சில ஆயிரங்கள் கொடுத்து விமான பயணம் மேற்கொள்வதும் அவருக்கு பெரியதொரு இழப்பாகும் தோன்றவில்லை.
ஆனால் மதுவில் மனதில் மட்டும் எப்பொழுதுமே ஒரு சிறு நெருடல் இருக்கும் ஷர்மா தன் மீது இருக்கும் சபலத்தில் தனது கணவரை ஏதேனும் செய்து விடுவானோ என்று அவ்வப்போது ஜாடைமாடையாக ஷர்மா ரவியிடம் எப்படிப் பழகுகிறார் என்று கணவனிடம் மறைமுகமாக விசாரிப்பாள்.
அவரும் ஷர்மாவைப் பற்றி மிக உயர்வாக கூறுவாறே தவிர என்றுமே கீழிறக்கி பேசியதே இல்லை அவர் கூறியதை வைத்து பார்க்கும் பொழுது ஒரு விஷயம் மதுவிற்கு உறுதியாக தெரிந்தது.
ஷர்மா எந்த அளவிற்கு தன்மீது சபலப்பட்டு இருக்கிறானோ அதே அளவிற்கு ரவியின் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறான்…அவனால் ரவிக்கு என்றுமே ஆபத்து வரப்போவதில்லை... மற்றவர்களாலும் ரவிக்கு ஆபத்து வர விடமாட்டான்
ரவியை வைத்து தன்னை மிரட்டி அவனின் காரியத்தை சாதிக்க நினைக்கிறான் என்பதை புரிந்து கொண்டவளுக்கு சற்று பயம் தெளிந்தது.
ரவியின் குடும்பம் மதுவை சுற்றி இருக்கும் வரை ரவியை தவிர வேறு யாராலும் தன்னை நெருங்க முடியாது என்பதும் தெளிவாகத் தெரிந்ததால் தைரியமாக உலா வர ஆரம்பித்தாள்.
தொடரும்...
Last edited: