Nirmala Krishnan
Saha Writer
- Messages
- 76
- Reaction score
- 13
- Points
- 6
ஹாய் பிரெண்ட்ஸ்......
என்னுடைய கதை.....காதல் என்ற ஒன்றை மட்டும்தான் சுற்றி வரும்.....!இந்தக் கதையும் காதல் கதைதான்.....!ஒரு அழுத்தமான கதைக்கரு.....அழகான காதல் என்னும் மை கொண்டு வரையப்பட்டுருக்கிறது.....!படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்....!அப்படியே லைக் போடவும் மறந்துடாதீங்க.....!!
கலியுக கல்கி....!!
சூரியனின் செங்கிரணங்கள் பூமியைத் தழுவி பொன்மயமாக அடித்துக் கொண்டிருந்தன....!அவ்வளவு நேரம் கவிழ்ந்திருந்த இருளை....தன் ஒளியைப் பாய்ச்சி மெல்ல....மெல்ல விலக்கிக் கொண்டிருந்தான் அந்த செங்கதிரவன்.இருள் விலகி அன்றைய நாள் விடிந்து கொண்டிருக்கும் அதே வேளையில்.....அந்த நெடுஞ்சாலையின் அருகே ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை....தன் பிரகாசத்தை இழந்து மங்கிக் கொண்டிருந்தது.
"விர்....விர்.....சர்.....சர்.....!"
அந்த நெடுஞ்சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகனங்கள் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த வேளையில்....அந்த கருப்பு நிற வெளிநாட்டுக் கார் மட்டும் சாலையோரமாக ஓரங்கட்டி நின்றது.இன்னும் இருள் முழுமையாக விலகாத நிலையில்.....ஓரங்கட்டப்பட்ட அந்தக் காரிலிருந்து ஒரு இளம்பெண் தூக்கி எரியப்பட்டாள்.அவ்வளவுதான்....!அடுத்த நொடி அந்த கார் நிற்காமல் விரைந்து விட்டது.
"ம்மா.....!",என்ற முனகலுடன்.....அவளைத் தழுயிருந்த ஆடைகள் அலங்கோலமாய் கிழிந்து கிடக்க....அவளது உடலில் பதிந்திருந்த நகக் காயங்களும்....பல் தடங்களும்.....சற்று முன்
அவளுக்கு நடந்திருந்த வன் கொடுமையை பறைசாற்ற....அந்த சாலையோரமாய் துடித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
"ம்மா....!வ...வலிக்குது.....!",தவித்துக் கொண்டிருந்த அந்த பெண்மையை காப்பதற்கு அங்கு யாரும் இல்லை.
ஆதவன் தன் முழுமையான ஆதிக்கத்தை பூமியில் செலுத்திய வேளையில்....அந்த வழியாக சென்ற காரில் இருந்த இரு நல்ல மனங்களின் கண்களில் அலங்கோலமாய் கிடந்த அந்தப் பெண் வந்து விழுந்தாள்.பதறியடித்துக் கொண்டு தங்கள் கையிலிருந்த துணியால் அந்த பெண்ணின் அங்கங்களை மூடி மறைத்தவர்கள்....அவளை காரில்ஏற்றிக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
"ம்மா....!தண்ணி.....!",அரை மயக்க நிலையில் புலம்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் வாயில் சிறிது சிறிதாக நீரை புகட்டியபடி....அவள் தலையை நீவி கொடுத்து ஆறுதல் மொழிகளை பேசிக் கொண்டே வந்தார் அந்த மூத்த பெண்மணி.
"ஒண்ணுமில்லை ம்மா....!அவ்ளோதான்....!",அந்தப் பெண்மணியின் வார்த்தைகள் அந்த இளம் பெண்ணின் கண்களில் நீரை வார்த்தது.
'அவ்வளவுதான்....!இனி என்னிடம் ஒன்றுமில்லைதான்.....!',அவள் மனம் பெருந்துயரத்துடன் கதறி ஓலமிட்டது.
அவள் பவித்ரா.....!ராமன்...ஜானகி தம்பதியின் ஒரே செல்லப் செல்வப் புதல்வி....!சமீபத்தில் தான் திருமணம் நிச்சயமாகி.....நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கலர் கலர் கனவுகளை விழிகளில் தேக்கியபடி.....இன்னும் இரண்டு மாதத்தில் நடக்கவிருக்கும் தனது திருமணத்தை எதிர்நோக்கி..... உற்சாகத்துடன் வளைய வந்து கொண்டிருக்கும் 21 வயது நிரம்பிய இளஞ்சிட்டு....!
எப்பொழுதும் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தவள் அன்று கடத்தப்பட்டாள்.சதை தின்னும் பிணந்தின்னிக் கழுகுகளான மூன்று கயவர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டு அந்த நெடுஞ்சாலையில் வீசப்பட்டாள்.
தனக்கு உடமையில்லாத வேறொரு ஆணின் சிறு தவறான பார்வையையே ஒரு பெண்மையால் தாங்கிக் கொள்ள முடியாது எனும் போது....அந்த பெண்மையையே கதற கதற நாசம் செய்தால்..... அந்தப் பெண்மையின் நிலை என்னவாக இருக்கும்.....?
"உங்கள் மகள் ரொம்ப மோசமான முறையில கற்பழிக்கப்பட்டிருக்காங்க.....!நாங்க முடிஞ்சளவுக்கு அவங்களோட உயிரை காப்பாத்த போராடிட்டு இருக்கோம்....!கடவுளை வேண்டிக்கோங்க....!",எந்தப் பெற்றவர்களும் கேட்க கூடாத வார்த்தையை அந்த பெற்றவர்களிடம் கூறி விட்டு சென்றார் மருத்துவர்.
"ஐயோ.....கடவுளே....!என் பொண்ணுக்கா இந்த நிலைமை....!உனக்கு கண் இருக்கா....?இல்லையா....?அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத என் மகளுக்கு இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணியிருக்கிறாயே......?",அந்த தாய் கதறி துடித்துக் கொண்டிருந்தார்.
தன் மகளை நினைத்து அழுவதா....?இல்லை....தன் மனைவியை சமாதானப்படுத்துவதா....?என்று தெரியாமல் இடிந்து போய் அமர்ந்திருந்தார் ராமன்.
அந்த பெற்றவர்களைக் கதறி துடிக்க வைத்துவிட்டு.....அந்த மருத்துவர்களுக்கும் பெரும் சவாலை விட்டு விட்டு.....ஒருவழியாக.....ஐந்து நாட்கள் கழித்து கண் விழித்தாள் பவித்ரா.அவள் கண்களில் முன்பிருந்த சிரிப்பு இல்லை....குதூகலம் இல்லை.....!மாறாக ஒரு அமைதி.....!நிச்சலனமாக ஒரு பெரு அமைதி குடிகொண்டிருந்தது.....!அந்த பார்வையில் இருந்ததை என்னவென்று சொல்வது....?
விரக்தி.....வெறி.....வெறுமை.....ஆக்ரோஷம்.....அதே சமயம் வெகு அழுத்தமான அமைதி....!
அந்தப் பெண்மையின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் விழவில்லை.தான் உயிராய் போற்றி பாதுகாத்துக் கொண்டு வந்த கற்பு பறிபோனதை எண்ணி அவள் விழிகளில் துயரம் தென்படவில்லை.
அவள் அம்மா கூட,"அழுது விடு பவி.....!உன் துக்கத்தை அழுகையில் கரைத்து விடு.....!இப்படி இருக்காதே.....!",என்று கதறி அழுதார்.
அப்பொழுதும் ஒரு வெற்றுப் பார்வையை தன் தாயை நோக்கி வீசினாலே தவிர.....அவள் கண்களில் இருந்து மருந்துக்கும் கண்ணீர் வரவில்லை.
ஆயிற்று.....!இன்றோடு அவள் மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டிற்கு வந்து பதினைந்து நாட்கள் ஓடிவிட்டிருந்தது.இந்த பதினைந்து நாட்களில் அவள் பேசிய வார்த்தைகளை எண்ணி சொல்லிவிடலாம்....!தனது அன்றாட கடமைகளையும்.....தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டவள்.....முக்கால் வாசி நேரம் அடைந்து கிடந்தது என்னவோ அவளது அறையில்தான்....!
அவள் தாயின் அன்பான வார்த்தைகளுக்கோ.....அவள் தந்தையின் பாசமான பேச்சுகளுக்கோ அவளிடம் இருந்து கிடைத்த பதில் என்னவோ....அமைதிதான்....!
படுக்கையில் படுத்தபடி விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த பவித்ராவின் காதில்.....ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தன் தாய் தந்தையரின் பேச்சு வந்து விழுந்தது.
"மாப்பிள்ளை வீட்டில் இருந்து போன் பண்ணினாங்க ஜானகி.....!பவித்ராவை வந்து பார்க்கறேன்னு சொன்னாங்க.....!நான்தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்....!அவங்களை பார்த்தா.....அவ ஒரு மாதிரி ஃபீல் பண்ணுவான்னு நான் மறுத்துட்டேன்.....!",ராமன் கூற,
தன் கண்களில் பெருகிய நீரை தன் சேலைத் தலைப்பால் துடைத்த ஜானகி,"கல்யாணத்தைப் பத்தி ஏதாவது பேசினாங்களா....?",மெல்லிய குரலில் வினவ,
"அவங்க எதுவும் பேசலை ஜானகி.....!மாப்பிள்ளை வெளிநாடு போயிருக்கிறாராம்.....!அவருக்கு இன்னும் விஷயம் தெரியாதாம்.....!அவரு வரட்டும் பேசிக்கலாம்ன்னு சொன்னாங்க....!",
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பவித்ராவின் இதழ்களில் ஒரு விரக்திப் புன்னகை தோன்றியது.அவளது விழிகள் அவளது அலைபேசியை வெறித்தன.'கர்ணன் 'என்ற பெயரில் இருந்து கிட்டத்தட்ட நூறு மிஸ்ட் காலுக்கு மேல் வந்திருந்தது.
கர்ணன்.....!பவித்ராவிற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை....!நிச்சியமான நாளில் இருந்து இன்று வரை.....அவள் மீது காதலை மட்டுமே பொழிந்து கொண்டிருப்பவன்.அவனது அபரிதமான காதலால்.....அவளை ஒரு மகாராணியாய் உணர வைத்தவன்....!அவனது காதலில் சுகமாய் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தவள் வாழ்வில்.....விதி என்னும் கோர அரக்கன் கொடூரமாய் விளையாடி விட்டான்.
ஒரு முடிவோடு எழுந்து வெளியே வந்த பவித்ரா....தன் தந்தையை பார்த்து,"அப்பா.....!இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லிடுங்க.....!இப்பவே போன் பண்ணி சொல்லுங்க....!",என்றாள்.அப்பொழுதும் அவள் அழவில்லை.
"பவி ம்மா....!கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் டா....!இன்னும் ரெண்டு நாள்ல மாப்பிள்ளை பாரின்ல இருந்து வந்திடுவாராம்....!அப்புறம் பேசிக்கலாமே....!",ராமன் மென்மையாக எடுத்துக் கூற,
தீர்க்கமாக அவரைப் பார்த்தவள்,"அப்பா....!நான் உங்க பொண்ணா உயிரோட இந்த வீட்ல இருக்கணும்ன்னு நினைச்சீங்கன்னா.....இந்த கல்யாணத்தை இப்பவே நிறுத்துங்க....!",அழுத்தமாக உரைத்தவள் எழுந்து உள்ளே சென்று விட்டாள்.
மகளின் வார்த்தைகளில் பதைபதைத்துப் போனவர்கள் மகள் சொன்னதை செய்தனர்.முகத்தில் அடித்தது போல் எப்படி சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை வீட்டினருக்கு....இவர்களது இந்தப் பதில் சற்று நிம்மதியை தந்தது....!என்னதான் இருந்தாலும்....அவர்களும் உணர்ச்சிகள் நிறைந்த சாதாரண மனிதர்கள்தானே....!
பவித்ராவின் வீட்டின் முன் வெகு வேகமாக சீறிக் கொண்டு வந்து நின்றது ஒரு கார்.அதிலிருந்து ஆறடிக்கு சற்று உயரமாய்.....ஆண்மைக்கு இலக்கணமாய்....வெகு கம்பீரமாக இறங்கினான் கர்ணன்.அவன் முகம் கோபத்தில் கடும் பாறையாய் இறுகியிருந்தது.
சீற்றம் கொண்ட வேங்கையாய் உள்ளே நுழைந்தவனைப் பார்த்த ராமனும் ஜானகியும் குழம்பிய முகத்துடன் எழுந்து நின்றனர்.அவர்களது முகத்தில் குழப்பத்தையும் மீறி ஒரு மகிழ்ச்சி தெரிந்தது.
"வாங்க மாப்.....தம்பி....!",'மாப்பிள்ளை' என்று எப்படி அழைப்பது என்று தயங்கியபடி....'தம்பி' என்று அழைத்து வைத்தார்.
"என்னங்க மாமா....!முறையை மாற்றி கூப்பிடறீங்க.....?நான் தான் உங்க மாப்பிள்ளை....!சொல்லப் போனா....நான் மட்டும்தான் உங்க மாப்பிள்ளை...!",அழுத்தமான அவனது ஒற்றை வார்த்தையில் பெரியவர்களின் முகம் இரண்டும் மலர்ந்து போனது.
"எங்கே உங்க பொண்ணு.....?",அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே....அறையிலிருந்து வெளியே வந்தாள் பவித்ரா.கண்கள் இரண்டும் உள்ளே போய்....கருவளையம் விழுந்து.....வெற்றுப் பார்வையுடன் வந்து நின்றவளைப் பார்த்தவனின் காதல் கொண்ட மனம் கதறி அழுதது.அந்த நிமிடமே....அவளது இந்த நிலைமைக்கு காரணமான பாவிகளை....கொன்று போட்டு விட வேண்டும் என்பது போல் வெறி எழுந்தது.
முயன்று தன்னை அடக்கியவன்....அவளை நெருங்கி,"நம்ம கல்யாணத்தை நிறுத்த சொல்லி சொன்னியா....?",அவன் பார்வை அவளை துளைத்தது.
அவனைக் கண்டவுடன் ஓடிச் சென்று அவன் மார்பில் விழச் சொன்ன மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள்,"ஆமா....!",என்றாள் ஒற்றை வார்த்தையாய்.
"ஏன்....?",
"இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது.....!",
"அதுதான் ஏன்னு கேட்கிறேன்....?",
வெறுமையாக அவனைப் பார்த்தவள்,"காரணம் என்னன்னு உங்களுக்குத் தெரியாதா....?",மறைக்க முயன்றாலும் அவள் குரலில் தென்பட்ட வேதனையை அவன் கண்டுகொண்டான்.
"என்னைப் பத்தி நீ என்னன்னு நினைச்சே டி.....?நான் உன்னை காதலிக்கிறேன்.....!உன்னை அப்படின்னா உன் மனசை.....உன் உணர்வுகளை....உன் கனவுகளைக் காதலிக்கிறேன்....!உன் உடம்பை இல்ல....!என்னுடைய காதல் என்ன....?வெறும் சதை தின்னும் மயக்கம்ன்னு நினைச்சியா....?இது காதல் டி....!என் உயிரா....உன் உயிரை மாத்தற காதல் டி.....!",
அவனது காதலில் இளக ஆரம்பித்த மனதை சிறையிட்டுத் தடுத்தவள்,"வேண்டாம்.....!இந்த கல்யாணம் நடக்க கூடாது....!நான் உங்களுக்கு வேண்டாம்....!",என்று கத்தினாள்.
"எனக்கு யாரு வேணும்ன்னு நான்தான் முடிவு பண்ணனும்.....நீ இல்ல....!இன்னும் நாலு நாள்ல நமக்கு கல்யாணம்....!ஒழுங்கா கல்யாணப் பொண்ணா....லட்சணமா இருக்கிற வழியைப் பாரு.....!இப்படி அழுது வடிஞ்சுக்கிட்டு.....பொட்டு வைக்காம.....பூ வைக்காம இருக்காதே.....!",சற்று அதிரடியாய் இறங்கித்தான் அவள் மனதை மாற்ற வேண்டும் என்று அவன் கண்டிப்பை கடைபிடித்தான்.
"இல்ல....இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.....!இந்த கல்யாணம் நடக்காது.....!",அவள் மனது புலம்பித் தவித்தது.'நான் உனக்கு வேண்டாம்....!' என்று காதல் கொண்ட மனம் தன்னவனுக்காக தன் காதலையே இழக்கத் துணிந்தது.
அவள் கண்களில் தெறித்த காதலை அவன் கண்டு கொண்டான்.அவளிடம் மென்மை செல்லுபடியாகாது என்பதை உணர்ந்தவனாய்....உடல் விறைக்க நிமிர்ந்தவன்,"ஒத்துக்கணும்.....!ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்.....!இந்த கல்யாணம் மட்டும் நடக்கலை.....நீ என்னுடைய இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டி இருக்கும்.....!",சிங்கமாய் கர்ஜித்தவன்....அவளது பெற்றோர்களிடம் சென்று,
"இன்னும் நாலு நாள்ல இந்த கல்யாணம் நடந்தாகணும்.....!முக்கியமான சொந்தக்காரங்களுக்கு மட்டும் சொல்லுங்க.....!சிம்பிளா கோவில்ல வைச்சுக்கலாம்.....!நான் வர்றேன் மாமா....வர்றேன் அத்தை.....!",என்றபடி வெளியேறப் போனவனை.....நக்கலான பவித்ராவின் குரல் கலைத்தது.
"நாலு பேரை கூட்டி கல்யாணம் பண்ண அவமானமா இருக்கோ....?",அவளது கேலியில் சட்டென்று திரும்பியவன்,
"உலகத்தையே கூட்டி விருந்து போட நான் ரெடி.....!உன் மனசுக்கு அது கஷ்டமா இருக்குமேன்னுதான் அமைதியா இருக்கேன்....!",என்றவன் விடுவிடுவென்று வெளியேறி விட்டான்.
அதன் பிறகு அவள் சம்மதத்தை யாரும் கேட்கவில்லை.பரபரவென்று திருமண ஏற்பாடுகள் நடந்தேறின.
முதலில் சற்றுத் தயங்கிய கர்ணனின் தாய் வைதேகியும்.....பிறகு மனமுவந்து பவித்ராவை தங்கள் மருமகளாக ஏற்றுக் கொண்டார்.அவருடைய கணவர் லிங்கமும்....மகனது முடிவுக்கு உறுதுணையாய் இருந்தார்.
"தேங்க்ஸ் ம்மா.....!",நெகிழ்ந்து போய் நன்றி கூறிய தன் மகனின் தலை முடியை பாசத்தோடு கோதி விட்டவர்,
"நான் உனக்கு அம்மாவா இந்த முடிவை எடுக்கலை டா.....!ஒரு பொண்ணா....சக மனுஷியாய் உன்னோட இந்த முடிவுக்கு நான் மனப்பூர்வமா சம்மதிக்கிறேன்.....!",என்று புன்னகைத்தார்.
மங்கள வாத்தியங்கள் முழங்க.....சுற்றி நின்றிருக்கும் உறவுகள் அட்சதை தூவ....பொன் தாலியை பவித்ராவின் கழுத்தில் கட்டப் போன.....கர்ணனின் கைகள் ஒரு நொடி தாமதித்து....அவள் விழிகளை சந்தித்தது காதலோடு.....!அப்பொழுது அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.'இனி வாழ்நாள் முழுவதும் உன்னுடன் நான் இருப்பேன்.....!' என்ற உறுதி மொழியோடும்.....கண்களில் வழிந்த காதலோடும்.....அவள் தந்த கழுத்தில்....தங்கத் தாலியை அணிவித்தான் கர்ணன்.
அவள் மனதில் இன்னதென்று விளங்காத ஒரு நிம்மதியும்.....பயமும் ஒரு சேர எழுந்தது.'தன்னவனுடைய இத்தனை காதலுக்கும்....தான் தகுதியானவள் அல்ல.....!',என்று அவள் மனம் மறுகியது.காதலில் தகுதி என்பது காதல் தான் என்பதை அந்தப் பேதை அறிந்திருக்கவில்லை.
முதல் இரவு......!திருமணமான அனைத்து தம்பதிகளுமே ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு அற்புதமான இரவு....!காதலோடு இரு மனங்களும் சங்கமிக்கும் ஒரு இரவு.....!அதுநாள் வரை....தங்களது மனங்களை மட்டுமே பரிமாறிக் கொண்டவர்கள்.....அச்சத்தோடும்.....நாணத்தோடும்....சிறு தயக்கங்களோடும்....தங்களது உடல்களையும் பரிமாறிக் கொள்ளும் ஒரு சுப உற்சவம் இந்த முதல் இரவு....!
எதிர்பார்ப்புகள் இல்லையென்றாலும்.....ஒரு வித குறுகுறுக்கும் மனத்துடன் அறைக்குள் நுழைந்த கர்ணனை வரவேற்றது என்னவோ....'நங்'கென்று உருண்டு வந்து அவன் காலடியில் விழுந்த பால் சொம்புதான்.....!அதை வீசியெறிந்த அவனது மனையாட்டியோ.....ஆங்காரமாய் கட்டிலருகே நின்றிருந்தாள்.
தனக்குள் புன்னகைத்தபடியே.....அந்த சொம்பை எடுத்துக் கொண்டு அவளருகே வந்தவன்,"இதை நீ வெட்கபட்டுக்கிட்டே என் கையில கொடுக்கணும் பவி.....!இப்படி தூக்கி எறியக் கூடாது....!",என்றபடி அதை மேசை மேல் வைக்க,
"ச்சே....!நீயும் மத்த ஆம்பளைங்க மாதிரி தானே.....?உனக்குத் தேவை என் உடம்பு தானே....?அதுக்காகத்தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.....?இந்தா....உன்னுடைய தேவையை தீர்த்துக்கோ.....!",ரௌத்திரமாய் கத்தியபடி....தனது புடவையை உருவி வீசினாள்.
வெகு நிதானமாக அவளை நெருங்கியவன்....அப்படியே அவளை அலேக்காகத் தூக்கி.....மெத்தையில் கிடத்தினான்.'திக் திக்'என்ற மனதுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகே சரிந்து படுத்தவன்,"உண்மைதான் பேபி.....!நானும் மத்த ஆம்பிளைங்க மாதிரிதான்....!இந்த முதலிரவை ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்தவன்தான்....!உன்னை உணர்ந்துக்கணும்ன்னு எனக்குள்ள கொள்ளை ஆசை இருக்கு.....!நான் ஒண்ணும் முற்றும் துறந்த முனிவன் இல்லையே....!ஆனால்....அதுக்கு இன்னும் நேரமும் காலமும் இருக்கு....!உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுலதான் அவசரம் காட்டினேனே தவிர....உன்னை எடுத்துக்கறதுல அவசரம் காட்ட மாட்டேன்....!",மென்மையாய் உரைத்தவன்.....அதை விட மென்மையாய் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
இமைக்க மறந்து தன்னவனைப் பார்த்திருந்தாள் அந்தப் பேதை.அவளை அணைத்தபடியே படுத்தவன் சுகமாய் தூங்கியும் போனான்.வெகு நாட்களுக்குப் பிறகு.....அவனது அருகாமையில் தன்னை மறந்து நிம்மதியாய் உறங்கினாள் பவித்ரா.
......................................................................................................................
தங்கள் அறையிலிருந்த ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.இன்றோடு அவர்களுக்கு கல்யாணம் முடிந்து மூன்று மாதங்கள் ஓடியிருந்தது.இவ்வளவு நாட்களில் அவன் ஒருநாள் கூட கணவனாய் அவளை நெருங்கவில்லை.ஆனால்.....காதலோடு தனது உரிமையை நிலைநிறுத்தவும் அவன் மறக்கவில்லை.சிறு சிறு அணைப்புகளின் மூலமும்.....நெற்றியில் பதிக்கும் முத்தங்களின் மூலமும் அவனது காதலை உணர்த்திக்கொண்டே தான் இருந்தான்.
ஆனால் என்ன....?நெற்றியில் பதிக்கும் முத்தம் ஒருநாள் கூட ஆசையாய் அவளது இதழ்களை நாடியது இல்லை....!அவன் நெருங்கும் போது பயப்படுவதும்.....விலகும் போது கோபப்படுவதுமாக மாறி மாறி தன் உணர்வுகளுடன் போராடிக்கொண்டிருந்தாள் அவள்.
இந்த மூன்று மாதங்களில்.....அவளுடைய மாமியார் ஒருமுறை கூட அவளிடம் முகம் திருப்பியதில்லை....!'இப்படிப்பட்டவள் தங்கள் வீட்டு மருமகளா....?' என்னும் விதமாக ஒரு சின்ன முகசுணக்கத்தைக் கூட காட்டியதில்லை....!பெற்ற மகளை விட அருமையாகப் பார்த்துக்கொண்டார்.
அவளை ஒரு கணம் கூட தனியாய் இருக்க அனுமதித்ததில்லை.அவள் கண்டதையும் நினைத்து மனதுக்குள் தவித்துக் கொண்டிருக்கும் போது,"உன் புருஷனுக்கு இந்த காரக்குழம்புன்னா ரொம்ப பிடிக்கும்.....!வா....!நீயும் செஞ்சு பழகிக்கோ.....!",என்று மிக அழகாக அவளது கவனத்தை திசை திருப்பிவிடுவார்.
அவளது மாமனாரும் சளைத்தவரல்ல.....!நடந்த கொடுமையை எண்ணி அவள் சில சமயங்களில் சோர்ந்து போகும் போது.....அவர் கண்டுகொண்டு,"அம்மா.....பவி.....!எங்க ரூமை கொஞ்சம் சுத்தம் பண்ணித் தருகிறாயா....?உன் அத்தை ரொம்பவும் குப்பையா வைச்சிருக்கிறா....!",ஏதாவது ஒரு வேலையை ஏவி அவளது நினைப்பை மாற்றிவிடுவார்.
இவர்களது கவனிப்பில் அவள் உடலில் இருந்த காயங்களோடு சேர்ந்து.....மனமும் ஆறி வந்தது.ஓரளவிற்கு அந்தக் கொடுமையிலிருந்து வெளிவர பழகிக்கொண்டாள்.அதற்கு அவன் கணவன் உறுதுணையாய் இருந்தான் என்று கூறினால் அது மிகையில்லை....!ஆனால்....என்னதான் குடும்பமே சுற்றியிருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க கூடிய நிகழ்வு இல்லையே அது....?
ஜன்னலின் அருகே அழகிய சிலையாய் நின்றிருந்த மனைவியை ரசித்தபடியே அவளை நெருங்கியவன்,"என்ன பவி.....பார்த்துட்டு இருக்க.....?",அவளது அழகில் சற்று தடுமாறி வந்தன அவனது வார்த்தைகள்.
என்னதான் இருந்தாலும்.....அவனும் ஆசைகளும்.....உணர்ச்சிகளும் நிறைந்த சராசரி ஆண்மகன்தானே.....!பக்கத்தில் அழகிய மனைவியை வைத்துக்கொண்டு பிரம்மச்சரியம் காப்பது என்பது அவனுக்கு மிகப் பெரிய ஒரு கொடுமையாகத்தான் இருந்தது....!அவளை ஆசை தீர ஆண்டு விட முடியாத தவிப்பில் பொங்கிப் பெருகும் தாபத்தில் வெந்து.....பல இரவுகளை அவன் தூங்காமல்.....பால்கனியில் நடை பயின்று தவித்திருக்கிறான்.
அவள் மீது பொங்கிப் பெருகும் வேட்கையையும்.....காமத்தையும்.....காதல் என்ற ஒன்று கட்டுப்படுத்தியது.
கணவன் கேட்ட கேள்வியில் நிமிர்ந்து அவன் முகத்தைக் கண்டவள்,"அதோ.....அந்த குருவியை போலத்தான் நானும் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்......!அந்த ஒருநாள் மட்டும் என் வாழ்க்கையில வரலைன்னா......",என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் குமுறி அழுதாள்.
அவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தத்தையும்.....அன்று அவன் தோளில் சாய்ந்து அழுது தீர்த்தாள் பவித்ரா.அவனும் அழட்டும் என்று தன் தோளை மட்டும் கொடுத்து அமைதியாய் இருந்துவிட்டான்.
வெகுநேரம் அழுது முடித்தவள்.....பிறகு ஒருவாறாக தன்னை சமாளித்துக் கொண்டு அவனை விட்டு விலகினாள்.
"பவி.....!உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.....!இப்படி உட்காரு.....!",அவளை அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தியவன் அவளது காலடியில் அமர்ந்து....அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.அவளும் ஒன்றும் பேசாமல் அவனது தலைமுடியை இதமாக கோதி விட ஆரம்பித்தாள்.சிறிது நேரம் இருவருக்குள்ளும் அமைதியே நிலவியது.
ஒருவாறாக தைரியத்தை திரட்டிக் கொண்டு நிமிர்ந்தவனின் முகம் உணர்ச்சிகளைத் தொலைத்து இறுகியிருந்தது.
"பவிம்மா.....!நான் கேட்கறதை நீ தப்பா எடுத்துக்காதே.....?நான் உன்னை ரொம்பவும் லவ் பண்றேன் டா....!உனக்கு எப்பவும் நான் துணையா இருப்பேன்....!இதை நீ எப்பவும் ஞாபகம் வைச்சுக்கணும்.....!சரியா.....?",அவன் குரலில் இருந்த மென்மை அவன் முகத்தில் இல்லை.அவனது கண்கள் கோபத்தில் தீக்கங்குகளாய் ஜொலித்துக் கொண்டிருந்தன.
அவள் விழிகள் கேள்வியோடு அவனை ஏறிட்டன.
"உனக்கு அ....அன்னைக்கு என்ன ந...நடந்துச்சு.....?அவனுக.....அவனுக.....",அதற்கு மேல் கேட்க முடியாமல் அவன் இறுக,
அவளோ.....உடல் விறைக்க நிமிர்ந்தாள்.
"இல்லை டா.....!நான் தப்பான அர்த்தத்துல கேட்கல.....!அந்த நாய்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டாமா.....?அவனுகளை சட்டத்துக்கு முன்னாடி நிற்க வைச்சு கேள்வி கேட்க வேண்டாமா.....?அதுக்காகத்தான் நான் கேட்கிறேன்.....!",அவள் தவறாக எடுத்துக் கொள்வாளோ என்ற நினைப்பில் அவசர அவசரமாகக் கூறினான்.
வெறுமையான சிரிப்பை தனது இதழ்களில் தவழ விட்டவள்,"தண்டனையா.....?சட்டம் அவங்களை கேள்வி கேட்குமா.....?எப்படி கர்ணன்.....?மிஞ்சிப் போனா.....ஒரு பத்து வருஷம் ஜெயில்ல போட்டு கேள்வி கேட்குமா.......?நான் இழந்ததுனுடைய விலை.....பத்து வருஷமா.....?",அவள் குரலில் அப்படி ஒரு நக்கல்.
"இல்லை ம்மா.....!நம்ம கையில அதிகாரம் இல்ல.....!சட்டத்தின் மூலமாதான் நாம அவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்.....!",தன் மனைவியின் முகத்தில் தெரிந்த வேதனை அந்த காதல் கணவனின் இதயத்தில் இரத்தத்தை வரவழைத்தது.
அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவள்,"தண்டனையா.....?எது தண்டனை.....?செஞ்ச தப்பை உணராம.....ஜெயில்ல போய் உட்கார்ந்துக்கிட்டு.....நேரா நேரத்துக்கு சாப்பிட்டுக்கிட்டு.....சொகுசா தூங்கி எழுந்து வர்றதுக்கு பேர் தண்டனையா.....?ஆனால்.....இந்த தண்டனையும் என்னை நாசமாக்கின அந்தப் பாவிகளுக்கு கிடைக்குமான்னு எனக்குத் தெரியல......?அந்த மூணு பாவிகளும் அரசியல்ல இருக்கிற பெரும்புள்ளிகளோட வாரிசுகள்.....!நாம வழக்கு போட்டோம்ன்னா அதை நமக்கு எதிராவே திருப்பி விடக் கூடிய அயோக்கியக்காரனுங்க.....!இவ்வளவு ஏன்....?நானா விரும்பித்தான்....அ....அவங்க கூட போனேன்னு சொன்னாலும்.....சொல்லிடுவானுங்க......!",அவள் குரலில் கண்ணீர்த் தடங்கல்.
அவள் கூறுவதும் உண்மைதானே.....!தண்டனை என்ற பெயரில் இவர்கள் தண்டனையையா தருகிறார்கள்.....!
தன்னிடம் கேள்வி கேட்கும் மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அந்தக் கணவன்.எதைப் பற்றியும் கவலைப்படாமல்.....அந்த கயவர்களை பிய்த்து எறிந்து விட வேண்டும் என்பது போல் வேகம் தோன்றியது.
"எது தண்டனைன்னு நான் சொல்றேன் கர்ணன்.....!எது தண்டனை தெரியுமா.....?இதுவரை.....என்னைப் பெத்த அம்மாகிட்ட கூட காண்பிக்காம மூடி வைச்சிருந்த என் உடலை.....கூசாம வெறிச்சுப் பார்த்த அந்த கண்களை....தீயில் காட்டி பொசுக்கணும்.....! விவரம் தெரிஞ்ச வயசில இருந்து.....வருங்காலக் கணவனுக்காக மட்டும்தான்னு பொத்தி பொத்தி பாதுகாத்து வைச்சிருந்த என் கற்பை.....கால்ல போட்டு மிதிச்சு நாசமாக்கின.....அந்த பாவிகளை நாசமாக்கணும்......!என் பெண்மையை இழக்க காரணமா இருந்த.....அவனுங்களுடைய உயிர் நிலையை துடிக்க துடிக்க அறுத்து எறியணும்.....!இன்னொருத்தனுடைய தப்பான பார்வை கூட....என் மேல படக் கூடாதுன்னு கவனமா இருந்த என்னை.....அசிங்க அசிங்கமா தொட்ட அந்த கைகளை.....குத்தி குத்தி புண்ணாக்கணும்.....!
இது எல்லாத்துக்கும் மேல....அந்த சண்டாளனுங்க துடிக்கிற துடிப்பை.....சந்தோஷமா நான் பார்த்து ரசிக்கணும்.....!இந்த உலகத்துலேயே மிகக் கொடூரமான முறையில.....அந்தப் பாவிகளை சாகடிக்கணும்.....! அன்னைக்கு.....பாஞ்சாலியுடைய சேலையை பிடித்து இழுத்தான்னு.....ஒரு மிகப் பெரிய பாரத யுத்தத்தையே நடந்தினானே அந்தக் கண்ணன்.....!அவன் கண்ணுக்கு இப்போ சீறழிஞ்சுக்கிட்டு இருக்கிற பெண்களோட கூக்குரல் கேட்கலையா.....?இல்லை.....கேட்டும் அமைதியா இருக்கானான்னு எனக்குத் தெரியலை.....!கடவுள் வருவாரு.....!அவதாரம் எடுப்பாரு....!அப்படிங்கறது எல்லாம் சுத்தப் பொய்.....!நமக்கு நடந்த அநீதிக்கு எதிரா நாமதான் அவதாரம் எடுக்கணும்.....!",
ஒட்டு மொத்த பெண் குலத்திற்கும் ஆதரவாக நீதி கேட்பவள் போல்.....ஆங்காரமாய் நின்றிருந்தாள் பவித்ரா.அவளது முகத்தில்.....அப்படியொரு ரௌத்திரம்......!பெண் குலத்தை காக்க வந்த காளி போல்......அவள் முகத்தில் கோபம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
"பவிம்மா......!",அவன் மெதுவாக அவள் தோளைத் தொட.....அவ்வளவுதான்.....!அடுத்த நொடி.....கதறி அழ ஆரம்பித்தாள்.
"ஏன்....?எனக்கு மட்டும் இப்படி நடக்கணும்......?அப்போ.....நான் எந்தளவுக்கு துடிச்சு போனேன் தெரியுமா கர்ணன்.....?உங்களுக்கு ஞாபகம் இருக்கா.....?நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி....ஒருமுறை....நீங்க என்கிட்ட ஆசையா முத்தம் கேட்டீங்க.....?உங்களுக்கு எல்லா உரிமையும் இருந்தும்.....நான் கொடுக்க மாட்டேன்னு விலகிப் போனேன்.....!எல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்தான்னு.....உரிமையான உங்களையே விலக்கி வைச்சேன்.....!அப்படிப்பட்ட என்னை.....என் உடம்பை.....அவன்....அவன்.....எங்கெங்கே தொட்டான் தெரியுமா கர்ணன்.....?என்னால முடியல.....!அவனுங்க....என்....என்....",
அதற்கு மேல் பேச விடாமல்.....அவளை இழுத்து அணைத்தவன்,"வேண்டாம் ம்மா.....!வேண்டாம்.....!நீ எதுவும் சொல்ல வேண்டாம்.....!எல்லாத்தையும் மறந்திடு கண்ணா.....!",அவளை அணைத்துக் கொண்டு அவன் கதற ஆரம்பித்துவிட்டான்.
"என்னால முடியல.....!எனக்கு எப்படி வலிச்சுது தெரியுமா.....?அதிலேயும் ஒருத்தன்....என்....என்....மா....",அதற்கு மேல் பேச விடாமல்....அவளது இதழ்களை தன் உதடுகளால் மூடியவன்.....அவள் அனுபவித்த வலிகளுக்கு எல்லாம் மருந்தாய்.....தனது உதடுகளால் ஆறுதல் தர ஆரம்பித்தான்.
அவளுக்கும் அந்த மருந்து தேவையாய் இருந்தது போலும்.....!விழிகளை மூடி....அவன் முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தாள்.தான் பட்ட வேதனை அனைத்தும்.....தன்னவனது காதலான இதழொற்றலில்.....மறைந்து மாயமாகியதை உணர்ந்தாள் அவள்.
அவளுக்கு ஆறுதல் அளித்தானோ......?இல்லை.....அவள் இதழ்களில் தனக்கான ஆறுதலை உணர்ந்தானோ......?தெரியவில்லை......!வெகுநேரம்.....அவளது இதழ்களை விட்டு அவன் விலகவில்லை.....!விலகிய போது.....அவன் கண்டது என்னவோ.....?தன்னவளுடைய தெளிவான முகத்தைத்தான்.....!
அவள் கன்னங்களைத் தன் இரு கைகளாலும் ஏந்தியவன்,"வேண்டாம் டி.....!அப்படியொரு சம்பவம் உன் வாழ்க்கையில நடக்கவே இல்லைன்னு நினைச்சுக்கோ.....!அதையும் மீறி.....உனக்கு அந்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தால்.....இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் கொடுத்த முத்தத்தை நினைச்சுக்கோ.....!நான்....நாம்....நம்ம குடும்பம்.....இதுதான் உன்னுடைய நிகழ்கால வாழ்க்கை.....!கடந்த காலத்துல எது நடந்திருந்தாலும் சரி.....!அதை மறந்திடு.....!நான்....நான் மட்டும்தான் உன் நிகழ்காலம்....!புரிஞ்சுதா.....?",மென்மையாய் அவன் கூறக் கூற.....அவள் மெல்ல.....மெல்ல தன் கூட்டிலிருந்து வெளிவர ஆரம்பித்தாள்.
காதல் என்ற ஒன்று அனைத்தையும் மாற்றும் வல்லமை கொண்டது....!அந்த ஆண்மகனின் காதல்....அந்தப் பெண்ணவளின் மனதை கரைக்க ஆரம்பித்தது.தனக்கு நடந்த வன்கொடுமையிலிருந்து....காதல் என்னும் ஊன்றுகோலின் துணை கொண்டு....மெல்ல....மெல்ல உயிர்த்தெழ ஆரம்பித்தது அந்தப் பெண்மை.....!
தலையை தன் இருகைகளாலும் தாங்கியபடி குனிந்து அமர்ந்திருந்தான் கர்ணன்.அது அவன் G.M ஆக வேலை செய்யும் அலுவலகத்தின் கேன்டீன்.
"என்னாச்சு மச்சான்.....?எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க.....?",கேட்டபடியே அவனுடைய மூன்று நண்பர்களும் வந்தமர்ந்தனர்.
அவர்கள் விஜய்....பிரபு மற்றும் அகில்.நால்வரும் சிறுவயதிலிருந்தே நெருக்கமான நண்பர்கள்.ஒன்றாக கை கோர்த்து விளையாட ஆரம்பித்த நாட்களில் தொடங்கிய அவர்களின் நட்பு.....பள்ளிப்பருவத்தில் இறுகி....பதின்ம வயதில் வலுப்பெற்று.....இன்று முழு ஆண்மகன்களாக உருப்பெற்று நிமிர்ந்து நிற்கும் காலங்களில் உடைக்க முடியாத சக்தியாக பரிணாமம் அடைந்து....நட்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
"எனி ப்ராப்ளம் மச்சான்.....?ஏன் முகம் டல்லா இருக்கு.....?",அக்கறையுடன் வினவினான் பிரபு.
மூன்று நண்பர்களையும் நிமிர்ந்து பார்த்தவன் ஒரு பெருமூச்சோடு.....நேற்று தனக்கும் தன் மனைவிக்கும் நடந்த உரையாடலைப் பற்றிக் கூற ஆரம்பித்தான்.சிவந்த கண்களுடன்....கலங்கிய முகத்துடன்....உணர்ச்சிகளைத் தொலைத்தவனாய் கூறி முடித்தான் கர்ணன்.அவன் முடித்தவனுடன் நண்பர்களுக்கு இடையே அழுத்தமான அமைதி நிலவியது.
என்னுடைய கதை.....காதல் என்ற ஒன்றை மட்டும்தான் சுற்றி வரும்.....!இந்தக் கதையும் காதல் கதைதான்.....!ஒரு அழுத்தமான கதைக்கரு.....அழகான காதல் என்னும் மை கொண்டு வரையப்பட்டுருக்கிறது.....!படித்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்....!அப்படியே லைக் போடவும் மறந்துடாதீங்க.....!!
கலியுக கல்கி....!!
சூரியனின் செங்கிரணங்கள் பூமியைத் தழுவி பொன்மயமாக அடித்துக் கொண்டிருந்தன....!அவ்வளவு நேரம் கவிழ்ந்திருந்த இருளை....தன் ஒளியைப் பாய்ச்சி மெல்ல....மெல்ல விலக்கிக் கொண்டிருந்தான் அந்த செங்கதிரவன்.இருள் விலகி அன்றைய நாள் விடிந்து கொண்டிருக்கும் அதே வேளையில்.....அந்த நெடுஞ்சாலையின் அருகே ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கை....தன் பிரகாசத்தை இழந்து மங்கிக் கொண்டிருந்தது.
"விர்....விர்.....சர்.....சர்.....!"
அந்த நெடுஞ்சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகனங்கள் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த வேளையில்....அந்த கருப்பு நிற வெளிநாட்டுக் கார் மட்டும் சாலையோரமாக ஓரங்கட்டி நின்றது.இன்னும் இருள் முழுமையாக விலகாத நிலையில்.....ஓரங்கட்டப்பட்ட அந்தக் காரிலிருந்து ஒரு இளம்பெண் தூக்கி எரியப்பட்டாள்.அவ்வளவுதான்....!அடுத்த நொடி அந்த கார் நிற்காமல் விரைந்து விட்டது.
"ம்மா.....!",என்ற முனகலுடன்.....அவளைத் தழுயிருந்த ஆடைகள் அலங்கோலமாய் கிழிந்து கிடக்க....அவளது உடலில் பதிந்திருந்த நகக் காயங்களும்....பல் தடங்களும்.....சற்று முன்
அவளுக்கு நடந்திருந்த வன் கொடுமையை பறைசாற்ற....அந்த சாலையோரமாய் துடித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
"ம்மா....!வ...வலிக்குது.....!",தவித்துக் கொண்டிருந்த அந்த பெண்மையை காப்பதற்கு அங்கு யாரும் இல்லை.
ஆதவன் தன் முழுமையான ஆதிக்கத்தை பூமியில் செலுத்திய வேளையில்....அந்த வழியாக சென்ற காரில் இருந்த இரு நல்ல மனங்களின் கண்களில் அலங்கோலமாய் கிடந்த அந்தப் பெண் வந்து விழுந்தாள்.பதறியடித்துக் கொண்டு தங்கள் கையிலிருந்த துணியால் அந்த பெண்ணின் அங்கங்களை மூடி மறைத்தவர்கள்....அவளை காரில்ஏற்றிக் கொண்டு அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
"ம்மா....!தண்ணி.....!",அரை மயக்க நிலையில் புலம்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் வாயில் சிறிது சிறிதாக நீரை புகட்டியபடி....அவள் தலையை நீவி கொடுத்து ஆறுதல் மொழிகளை பேசிக் கொண்டே வந்தார் அந்த மூத்த பெண்மணி.
"ஒண்ணுமில்லை ம்மா....!அவ்ளோதான்....!",அந்தப் பெண்மணியின் வார்த்தைகள் அந்த இளம் பெண்ணின் கண்களில் நீரை வார்த்தது.
'அவ்வளவுதான்....!இனி என்னிடம் ஒன்றுமில்லைதான்.....!',அவள் மனம் பெருந்துயரத்துடன் கதறி ஓலமிட்டது.
அவள் பவித்ரா.....!ராமன்...ஜானகி தம்பதியின் ஒரே செல்லப் செல்வப் புதல்வி....!சமீபத்தில் தான் திருமணம் நிச்சயமாகி.....நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கலர் கலர் கனவுகளை விழிகளில் தேக்கியபடி.....இன்னும் இரண்டு மாதத்தில் நடக்கவிருக்கும் தனது திருமணத்தை எதிர்நோக்கி..... உற்சாகத்துடன் வளைய வந்து கொண்டிருக்கும் 21 வயது நிரம்பிய இளஞ்சிட்டு....!
எப்பொழுதும் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தவள் அன்று கடத்தப்பட்டாள்.சதை தின்னும் பிணந்தின்னிக் கழுகுகளான மூன்று கயவர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்டு அந்த நெடுஞ்சாலையில் வீசப்பட்டாள்.
தனக்கு உடமையில்லாத வேறொரு ஆணின் சிறு தவறான பார்வையையே ஒரு பெண்மையால் தாங்கிக் கொள்ள முடியாது எனும் போது....அந்த பெண்மையையே கதற கதற நாசம் செய்தால்..... அந்தப் பெண்மையின் நிலை என்னவாக இருக்கும்.....?
"உங்கள் மகள் ரொம்ப மோசமான முறையில கற்பழிக்கப்பட்டிருக்காங்க.....!நாங்க முடிஞ்சளவுக்கு அவங்களோட உயிரை காப்பாத்த போராடிட்டு இருக்கோம்....!கடவுளை வேண்டிக்கோங்க....!",எந்தப் பெற்றவர்களும் கேட்க கூடாத வார்த்தையை அந்த பெற்றவர்களிடம் கூறி விட்டு சென்றார் மருத்துவர்.
"ஐயோ.....கடவுளே....!என் பொண்ணுக்கா இந்த நிலைமை....!உனக்கு கண் இருக்கா....?இல்லையா....?அதிர்ந்து கூடப் பேசத் தெரியாத என் மகளுக்கு இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணியிருக்கிறாயே......?",அந்த தாய் கதறி துடித்துக் கொண்டிருந்தார்.
தன் மகளை நினைத்து அழுவதா....?இல்லை....தன் மனைவியை சமாதானப்படுத்துவதா....?என்று தெரியாமல் இடிந்து போய் அமர்ந்திருந்தார் ராமன்.
அந்த பெற்றவர்களைக் கதறி துடிக்க வைத்துவிட்டு.....அந்த மருத்துவர்களுக்கும் பெரும் சவாலை விட்டு விட்டு.....ஒருவழியாக.....ஐந்து நாட்கள் கழித்து கண் விழித்தாள் பவித்ரா.அவள் கண்களில் முன்பிருந்த சிரிப்பு இல்லை....குதூகலம் இல்லை.....!மாறாக ஒரு அமைதி.....!நிச்சலனமாக ஒரு பெரு அமைதி குடிகொண்டிருந்தது.....!அந்த பார்வையில் இருந்ததை என்னவென்று சொல்வது....?
விரக்தி.....வெறி.....வெறுமை.....ஆக்ரோஷம்.....அதே சமயம் வெகு அழுத்தமான அமைதி....!
அந்தப் பெண்மையின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் விழவில்லை.தான் உயிராய் போற்றி பாதுகாத்துக் கொண்டு வந்த கற்பு பறிபோனதை எண்ணி அவள் விழிகளில் துயரம் தென்படவில்லை.
அவள் அம்மா கூட,"அழுது விடு பவி.....!உன் துக்கத்தை அழுகையில் கரைத்து விடு.....!இப்படி இருக்காதே.....!",என்று கதறி அழுதார்.
அப்பொழுதும் ஒரு வெற்றுப் பார்வையை தன் தாயை நோக்கி வீசினாலே தவிர.....அவள் கண்களில் இருந்து மருந்துக்கும் கண்ணீர் வரவில்லை.
ஆயிற்று.....!இன்றோடு அவள் மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டிற்கு வந்து பதினைந்து நாட்கள் ஓடிவிட்டிருந்தது.இந்த பதினைந்து நாட்களில் அவள் பேசிய வார்த்தைகளை எண்ணி சொல்லிவிடலாம்....!தனது அன்றாட கடமைகளையும்.....தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டவள்.....முக்கால் வாசி நேரம் அடைந்து கிடந்தது என்னவோ அவளது அறையில்தான்....!
அவள் தாயின் அன்பான வார்த்தைகளுக்கோ.....அவள் தந்தையின் பாசமான பேச்சுகளுக்கோ அவளிடம் இருந்து கிடைத்த பதில் என்னவோ....அமைதிதான்....!
படுக்கையில் படுத்தபடி விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்த பவித்ராவின் காதில்.....ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தன் தாய் தந்தையரின் பேச்சு வந்து விழுந்தது.
"மாப்பிள்ளை வீட்டில் இருந்து போன் பண்ணினாங்க ஜானகி.....!பவித்ராவை வந்து பார்க்கறேன்னு சொன்னாங்க.....!நான்தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்....!அவங்களை பார்த்தா.....அவ ஒரு மாதிரி ஃபீல் பண்ணுவான்னு நான் மறுத்துட்டேன்.....!",ராமன் கூற,
தன் கண்களில் பெருகிய நீரை தன் சேலைத் தலைப்பால் துடைத்த ஜானகி,"கல்யாணத்தைப் பத்தி ஏதாவது பேசினாங்களா....?",மெல்லிய குரலில் வினவ,
"அவங்க எதுவும் பேசலை ஜானகி.....!மாப்பிள்ளை வெளிநாடு போயிருக்கிறாராம்.....!அவருக்கு இன்னும் விஷயம் தெரியாதாம்.....!அவரு வரட்டும் பேசிக்கலாம்ன்னு சொன்னாங்க....!",
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பவித்ராவின் இதழ்களில் ஒரு விரக்திப் புன்னகை தோன்றியது.அவளது விழிகள் அவளது அலைபேசியை வெறித்தன.'கர்ணன் 'என்ற பெயரில் இருந்து கிட்டத்தட்ட நூறு மிஸ்ட் காலுக்கு மேல் வந்திருந்தது.
கர்ணன்.....!பவித்ராவிற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை....!நிச்சியமான நாளில் இருந்து இன்று வரை.....அவள் மீது காதலை மட்டுமே பொழிந்து கொண்டிருப்பவன்.அவனது அபரிதமான காதலால்.....அவளை ஒரு மகாராணியாய் உணர வைத்தவன்....!அவனது காதலில் சுகமாய் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தவள் வாழ்வில்.....விதி என்னும் கோர அரக்கன் கொடூரமாய் விளையாடி விட்டான்.
ஒரு முடிவோடு எழுந்து வெளியே வந்த பவித்ரா....தன் தந்தையை பார்த்து,"அப்பா.....!இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லிடுங்க.....!இப்பவே போன் பண்ணி சொல்லுங்க....!",என்றாள்.அப்பொழுதும் அவள் அழவில்லை.
"பவி ம்மா....!கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் டா....!இன்னும் ரெண்டு நாள்ல மாப்பிள்ளை பாரின்ல இருந்து வந்திடுவாராம்....!அப்புறம் பேசிக்கலாமே....!",ராமன் மென்மையாக எடுத்துக் கூற,
தீர்க்கமாக அவரைப் பார்த்தவள்,"அப்பா....!நான் உங்க பொண்ணா உயிரோட இந்த வீட்ல இருக்கணும்ன்னு நினைச்சீங்கன்னா.....இந்த கல்யாணத்தை இப்பவே நிறுத்துங்க....!",அழுத்தமாக உரைத்தவள் எழுந்து உள்ளே சென்று விட்டாள்.
மகளின் வார்த்தைகளில் பதைபதைத்துப் போனவர்கள் மகள் சொன்னதை செய்தனர்.முகத்தில் அடித்தது போல் எப்படி சொல்வது என்று தவித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை வீட்டினருக்கு....இவர்களது இந்தப் பதில் சற்று நிம்மதியை தந்தது....!என்னதான் இருந்தாலும்....அவர்களும் உணர்ச்சிகள் நிறைந்த சாதாரண மனிதர்கள்தானே....!
பவித்ராவின் வீட்டின் முன் வெகு வேகமாக சீறிக் கொண்டு வந்து நின்றது ஒரு கார்.அதிலிருந்து ஆறடிக்கு சற்று உயரமாய்.....ஆண்மைக்கு இலக்கணமாய்....வெகு கம்பீரமாக இறங்கினான் கர்ணன்.அவன் முகம் கோபத்தில் கடும் பாறையாய் இறுகியிருந்தது.
சீற்றம் கொண்ட வேங்கையாய் உள்ளே நுழைந்தவனைப் பார்த்த ராமனும் ஜானகியும் குழம்பிய முகத்துடன் எழுந்து நின்றனர்.அவர்களது முகத்தில் குழப்பத்தையும் மீறி ஒரு மகிழ்ச்சி தெரிந்தது.
"வாங்க மாப்.....தம்பி....!",'மாப்பிள்ளை' என்று எப்படி அழைப்பது என்று தயங்கியபடி....'தம்பி' என்று அழைத்து வைத்தார்.
"என்னங்க மாமா....!முறையை மாற்றி கூப்பிடறீங்க.....?நான் தான் உங்க மாப்பிள்ளை....!சொல்லப் போனா....நான் மட்டும்தான் உங்க மாப்பிள்ளை...!",அழுத்தமான அவனது ஒற்றை வார்த்தையில் பெரியவர்களின் முகம் இரண்டும் மலர்ந்து போனது.
"எங்கே உங்க பொண்ணு.....?",அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே....அறையிலிருந்து வெளியே வந்தாள் பவித்ரா.கண்கள் இரண்டும் உள்ளே போய்....கருவளையம் விழுந்து.....வெற்றுப் பார்வையுடன் வந்து நின்றவளைப் பார்த்தவனின் காதல் கொண்ட மனம் கதறி அழுதது.அந்த நிமிடமே....அவளது இந்த நிலைமைக்கு காரணமான பாவிகளை....கொன்று போட்டு விட வேண்டும் என்பது போல் வெறி எழுந்தது.
முயன்று தன்னை அடக்கியவன்....அவளை நெருங்கி,"நம்ம கல்யாணத்தை நிறுத்த சொல்லி சொன்னியா....?",அவன் பார்வை அவளை துளைத்தது.
அவனைக் கண்டவுடன் ஓடிச் சென்று அவன் மார்பில் விழச் சொன்ன மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள்,"ஆமா....!",என்றாள் ஒற்றை வார்த்தையாய்.
"ஏன்....?",
"இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது.....!",
"அதுதான் ஏன்னு கேட்கிறேன்....?",
வெறுமையாக அவனைப் பார்த்தவள்,"காரணம் என்னன்னு உங்களுக்குத் தெரியாதா....?",மறைக்க முயன்றாலும் அவள் குரலில் தென்பட்ட வேதனையை அவன் கண்டுகொண்டான்.
"என்னைப் பத்தி நீ என்னன்னு நினைச்சே டி.....?நான் உன்னை காதலிக்கிறேன்.....!உன்னை அப்படின்னா உன் மனசை.....உன் உணர்வுகளை....உன் கனவுகளைக் காதலிக்கிறேன்....!உன் உடம்பை இல்ல....!என்னுடைய காதல் என்ன....?வெறும் சதை தின்னும் மயக்கம்ன்னு நினைச்சியா....?இது காதல் டி....!என் உயிரா....உன் உயிரை மாத்தற காதல் டி.....!",
அவனது காதலில் இளக ஆரம்பித்த மனதை சிறையிட்டுத் தடுத்தவள்,"வேண்டாம்.....!இந்த கல்யாணம் நடக்க கூடாது....!நான் உங்களுக்கு வேண்டாம்....!",என்று கத்தினாள்.
"எனக்கு யாரு வேணும்ன்னு நான்தான் முடிவு பண்ணனும்.....நீ இல்ல....!இன்னும் நாலு நாள்ல நமக்கு கல்யாணம்....!ஒழுங்கா கல்யாணப் பொண்ணா....லட்சணமா இருக்கிற வழியைப் பாரு.....!இப்படி அழுது வடிஞ்சுக்கிட்டு.....பொட்டு வைக்காம.....பூ வைக்காம இருக்காதே.....!",சற்று அதிரடியாய் இறங்கித்தான் அவள் மனதை மாற்ற வேண்டும் என்று அவன் கண்டிப்பை கடைபிடித்தான்.
"இல்ல....இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.....!இந்த கல்யாணம் நடக்காது.....!",அவள் மனது புலம்பித் தவித்தது.'நான் உனக்கு வேண்டாம்....!' என்று காதல் கொண்ட மனம் தன்னவனுக்காக தன் காதலையே இழக்கத் துணிந்தது.
அவள் கண்களில் தெறித்த காதலை அவன் கண்டு கொண்டான்.அவளிடம் மென்மை செல்லுபடியாகாது என்பதை உணர்ந்தவனாய்....உடல் விறைக்க நிமிர்ந்தவன்,"ஒத்துக்கணும்.....!ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்.....!இந்த கல்யாணம் மட்டும் நடக்கலை.....நீ என்னுடைய இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டி இருக்கும்.....!",சிங்கமாய் கர்ஜித்தவன்....அவளது பெற்றோர்களிடம் சென்று,
"இன்னும் நாலு நாள்ல இந்த கல்யாணம் நடந்தாகணும்.....!முக்கியமான சொந்தக்காரங்களுக்கு மட்டும் சொல்லுங்க.....!சிம்பிளா கோவில்ல வைச்சுக்கலாம்.....!நான் வர்றேன் மாமா....வர்றேன் அத்தை.....!",என்றபடி வெளியேறப் போனவனை.....நக்கலான பவித்ராவின் குரல் கலைத்தது.
"நாலு பேரை கூட்டி கல்யாணம் பண்ண அவமானமா இருக்கோ....?",அவளது கேலியில் சட்டென்று திரும்பியவன்,
"உலகத்தையே கூட்டி விருந்து போட நான் ரெடி.....!உன் மனசுக்கு அது கஷ்டமா இருக்குமேன்னுதான் அமைதியா இருக்கேன்....!",என்றவன் விடுவிடுவென்று வெளியேறி விட்டான்.
அதன் பிறகு அவள் சம்மதத்தை யாரும் கேட்கவில்லை.பரபரவென்று திருமண ஏற்பாடுகள் நடந்தேறின.
முதலில் சற்றுத் தயங்கிய கர்ணனின் தாய் வைதேகியும்.....பிறகு மனமுவந்து பவித்ராவை தங்கள் மருமகளாக ஏற்றுக் கொண்டார்.அவருடைய கணவர் லிங்கமும்....மகனது முடிவுக்கு உறுதுணையாய் இருந்தார்.
"தேங்க்ஸ் ம்மா.....!",நெகிழ்ந்து போய் நன்றி கூறிய தன் மகனின் தலை முடியை பாசத்தோடு கோதி விட்டவர்,
"நான் உனக்கு அம்மாவா இந்த முடிவை எடுக்கலை டா.....!ஒரு பொண்ணா....சக மனுஷியாய் உன்னோட இந்த முடிவுக்கு நான் மனப்பூர்வமா சம்மதிக்கிறேன்.....!",என்று புன்னகைத்தார்.
மங்கள வாத்தியங்கள் முழங்க.....சுற்றி நின்றிருக்கும் உறவுகள் அட்சதை தூவ....பொன் தாலியை பவித்ராவின் கழுத்தில் கட்டப் போன.....கர்ணனின் கைகள் ஒரு நொடி தாமதித்து....அவள் விழிகளை சந்தித்தது காதலோடு.....!அப்பொழுது அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.'இனி வாழ்நாள் முழுவதும் உன்னுடன் நான் இருப்பேன்.....!' என்ற உறுதி மொழியோடும்.....கண்களில் வழிந்த காதலோடும்.....அவள் தந்த கழுத்தில்....தங்கத் தாலியை அணிவித்தான் கர்ணன்.
அவள் மனதில் இன்னதென்று விளங்காத ஒரு நிம்மதியும்.....பயமும் ஒரு சேர எழுந்தது.'தன்னவனுடைய இத்தனை காதலுக்கும்....தான் தகுதியானவள் அல்ல.....!',என்று அவள் மனம் மறுகியது.காதலில் தகுதி என்பது காதல் தான் என்பதை அந்தப் பேதை அறிந்திருக்கவில்லை.
முதல் இரவு......!திருமணமான அனைத்து தம்பதிகளுமே ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு அற்புதமான இரவு....!காதலோடு இரு மனங்களும் சங்கமிக்கும் ஒரு இரவு.....!அதுநாள் வரை....தங்களது மனங்களை மட்டுமே பரிமாறிக் கொண்டவர்கள்.....அச்சத்தோடும்.....நாணத்தோடும்....சிறு தயக்கங்களோடும்....தங்களது உடல்களையும் பரிமாறிக் கொள்ளும் ஒரு சுப உற்சவம் இந்த முதல் இரவு....!
எதிர்பார்ப்புகள் இல்லையென்றாலும்.....ஒரு வித குறுகுறுக்கும் மனத்துடன் அறைக்குள் நுழைந்த கர்ணனை வரவேற்றது என்னவோ....'நங்'கென்று உருண்டு வந்து அவன் காலடியில் விழுந்த பால் சொம்புதான்.....!அதை வீசியெறிந்த அவனது மனையாட்டியோ.....ஆங்காரமாய் கட்டிலருகே நின்றிருந்தாள்.
தனக்குள் புன்னகைத்தபடியே.....அந்த சொம்பை எடுத்துக் கொண்டு அவளருகே வந்தவன்,"இதை நீ வெட்கபட்டுக்கிட்டே என் கையில கொடுக்கணும் பவி.....!இப்படி தூக்கி எறியக் கூடாது....!",என்றபடி அதை மேசை மேல் வைக்க,
"ச்சே....!நீயும் மத்த ஆம்பளைங்க மாதிரி தானே.....?உனக்குத் தேவை என் உடம்பு தானே....?அதுக்காகத்தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட.....?இந்தா....உன்னுடைய தேவையை தீர்த்துக்கோ.....!",ரௌத்திரமாய் கத்தியபடி....தனது புடவையை உருவி வீசினாள்.
வெகு நிதானமாக அவளை நெருங்கியவன்....அப்படியே அவளை அலேக்காகத் தூக்கி.....மெத்தையில் கிடத்தினான்.'திக் திக்'என்ற மனதுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகே சரிந்து படுத்தவன்,"உண்மைதான் பேபி.....!நானும் மத்த ஆம்பிளைங்க மாதிரிதான்....!இந்த முதலிரவை ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்தவன்தான்....!உன்னை உணர்ந்துக்கணும்ன்னு எனக்குள்ள கொள்ளை ஆசை இருக்கு.....!நான் ஒண்ணும் முற்றும் துறந்த முனிவன் இல்லையே....!ஆனால்....அதுக்கு இன்னும் நேரமும் காலமும் இருக்கு....!உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதுலதான் அவசரம் காட்டினேனே தவிர....உன்னை எடுத்துக்கறதுல அவசரம் காட்ட மாட்டேன்....!",மென்மையாய் உரைத்தவன்.....அதை விட மென்மையாய் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
இமைக்க மறந்து தன்னவனைப் பார்த்திருந்தாள் அந்தப் பேதை.அவளை அணைத்தபடியே படுத்தவன் சுகமாய் தூங்கியும் போனான்.வெகு நாட்களுக்குப் பிறகு.....அவனது அருகாமையில் தன்னை மறந்து நிம்மதியாய் உறங்கினாள் பவித்ரா.
......................................................................................................................
தங்கள் அறையிலிருந்த ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.இன்றோடு அவர்களுக்கு கல்யாணம் முடிந்து மூன்று மாதங்கள் ஓடியிருந்தது.இவ்வளவு நாட்களில் அவன் ஒருநாள் கூட கணவனாய் அவளை நெருங்கவில்லை.ஆனால்.....காதலோடு தனது உரிமையை நிலைநிறுத்தவும் அவன் மறக்கவில்லை.சிறு சிறு அணைப்புகளின் மூலமும்.....நெற்றியில் பதிக்கும் முத்தங்களின் மூலமும் அவனது காதலை உணர்த்திக்கொண்டே தான் இருந்தான்.
ஆனால் என்ன....?நெற்றியில் பதிக்கும் முத்தம் ஒருநாள் கூட ஆசையாய் அவளது இதழ்களை நாடியது இல்லை....!அவன் நெருங்கும் போது பயப்படுவதும்.....விலகும் போது கோபப்படுவதுமாக மாறி மாறி தன் உணர்வுகளுடன் போராடிக்கொண்டிருந்தாள் அவள்.
இந்த மூன்று மாதங்களில்.....அவளுடைய மாமியார் ஒருமுறை கூட அவளிடம் முகம் திருப்பியதில்லை....!'இப்படிப்பட்டவள் தங்கள் வீட்டு மருமகளா....?' என்னும் விதமாக ஒரு சின்ன முகசுணக்கத்தைக் கூட காட்டியதில்லை....!பெற்ற மகளை விட அருமையாகப் பார்த்துக்கொண்டார்.
அவளை ஒரு கணம் கூட தனியாய் இருக்க அனுமதித்ததில்லை.அவள் கண்டதையும் நினைத்து மனதுக்குள் தவித்துக் கொண்டிருக்கும் போது,"உன் புருஷனுக்கு இந்த காரக்குழம்புன்னா ரொம்ப பிடிக்கும்.....!வா....!நீயும் செஞ்சு பழகிக்கோ.....!",என்று மிக அழகாக அவளது கவனத்தை திசை திருப்பிவிடுவார்.
அவளது மாமனாரும் சளைத்தவரல்ல.....!நடந்த கொடுமையை எண்ணி அவள் சில சமயங்களில் சோர்ந்து போகும் போது.....அவர் கண்டுகொண்டு,"அம்மா.....பவி.....!எங்க ரூமை கொஞ்சம் சுத்தம் பண்ணித் தருகிறாயா....?உன் அத்தை ரொம்பவும் குப்பையா வைச்சிருக்கிறா....!",ஏதாவது ஒரு வேலையை ஏவி அவளது நினைப்பை மாற்றிவிடுவார்.
இவர்களது கவனிப்பில் அவள் உடலில் இருந்த காயங்களோடு சேர்ந்து.....மனமும் ஆறி வந்தது.ஓரளவிற்கு அந்தக் கொடுமையிலிருந்து வெளிவர பழகிக்கொண்டாள்.அதற்கு அவன் கணவன் உறுதுணையாய் இருந்தான் என்று கூறினால் அது மிகையில்லை....!ஆனால்....என்னதான் குடும்பமே சுற்றியிருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க கூடிய நிகழ்வு இல்லையே அது....?
ஜன்னலின் அருகே அழகிய சிலையாய் நின்றிருந்த மனைவியை ரசித்தபடியே அவளை நெருங்கியவன்,"என்ன பவி.....பார்த்துட்டு இருக்க.....?",அவளது அழகில் சற்று தடுமாறி வந்தன அவனது வார்த்தைகள்.
என்னதான் இருந்தாலும்.....அவனும் ஆசைகளும்.....உணர்ச்சிகளும் நிறைந்த சராசரி ஆண்மகன்தானே.....!பக்கத்தில் அழகிய மனைவியை வைத்துக்கொண்டு பிரம்மச்சரியம் காப்பது என்பது அவனுக்கு மிகப் பெரிய ஒரு கொடுமையாகத்தான் இருந்தது....!அவளை ஆசை தீர ஆண்டு விட முடியாத தவிப்பில் பொங்கிப் பெருகும் தாபத்தில் வெந்து.....பல இரவுகளை அவன் தூங்காமல்.....பால்கனியில் நடை பயின்று தவித்திருக்கிறான்.
அவள் மீது பொங்கிப் பெருகும் வேட்கையையும்.....காமத்தையும்.....காதல் என்ற ஒன்று கட்டுப்படுத்தியது.
கணவன் கேட்ட கேள்வியில் நிமிர்ந்து அவன் முகத்தைக் கண்டவள்,"அதோ.....அந்த குருவியை போலத்தான் நானும் ரொம்ப சந்தோஷமா இருந்தேன்......!அந்த ஒருநாள் மட்டும் என் வாழ்க்கையில வரலைன்னா......",என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் குமுறி அழுதாள்.
அவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தத்தையும்.....அன்று அவன் தோளில் சாய்ந்து அழுது தீர்த்தாள் பவித்ரா.அவனும் அழட்டும் என்று தன் தோளை மட்டும் கொடுத்து அமைதியாய் இருந்துவிட்டான்.
வெகுநேரம் அழுது முடித்தவள்.....பிறகு ஒருவாறாக தன்னை சமாளித்துக் கொண்டு அவனை விட்டு விலகினாள்.
"பவி.....!உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.....!இப்படி உட்காரு.....!",அவளை அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தியவன் அவளது காலடியில் அமர்ந்து....அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டான்.அவளும் ஒன்றும் பேசாமல் அவனது தலைமுடியை இதமாக கோதி விட ஆரம்பித்தாள்.சிறிது நேரம் இருவருக்குள்ளும் அமைதியே நிலவியது.
ஒருவாறாக தைரியத்தை திரட்டிக் கொண்டு நிமிர்ந்தவனின் முகம் உணர்ச்சிகளைத் தொலைத்து இறுகியிருந்தது.
"பவிம்மா.....!நான் கேட்கறதை நீ தப்பா எடுத்துக்காதே.....?நான் உன்னை ரொம்பவும் லவ் பண்றேன் டா....!உனக்கு எப்பவும் நான் துணையா இருப்பேன்....!இதை நீ எப்பவும் ஞாபகம் வைச்சுக்கணும்.....!சரியா.....?",அவன் குரலில் இருந்த மென்மை அவன் முகத்தில் இல்லை.அவனது கண்கள் கோபத்தில் தீக்கங்குகளாய் ஜொலித்துக் கொண்டிருந்தன.
அவள் விழிகள் கேள்வியோடு அவனை ஏறிட்டன.
"உனக்கு அ....அன்னைக்கு என்ன ந...நடந்துச்சு.....?அவனுக.....அவனுக.....",அதற்கு மேல் கேட்க முடியாமல் அவன் இறுக,
அவளோ.....உடல் விறைக்க நிமிர்ந்தாள்.
"இல்லை டா.....!நான் தப்பான அர்த்தத்துல கேட்கல.....!அந்த நாய்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டாமா.....?அவனுகளை சட்டத்துக்கு முன்னாடி நிற்க வைச்சு கேள்வி கேட்க வேண்டாமா.....?அதுக்காகத்தான் நான் கேட்கிறேன்.....!",அவள் தவறாக எடுத்துக் கொள்வாளோ என்ற நினைப்பில் அவசர அவசரமாகக் கூறினான்.
வெறுமையான சிரிப்பை தனது இதழ்களில் தவழ விட்டவள்,"தண்டனையா.....?சட்டம் அவங்களை கேள்வி கேட்குமா.....?எப்படி கர்ணன்.....?மிஞ்சிப் போனா.....ஒரு பத்து வருஷம் ஜெயில்ல போட்டு கேள்வி கேட்குமா.......?நான் இழந்ததுனுடைய விலை.....பத்து வருஷமா.....?",அவள் குரலில் அப்படி ஒரு நக்கல்.
"இல்லை ம்மா.....!நம்ம கையில அதிகாரம் இல்ல.....!சட்டத்தின் மூலமாதான் நாம அவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்.....!",தன் மனைவியின் முகத்தில் தெரிந்த வேதனை அந்த காதல் கணவனின் இதயத்தில் இரத்தத்தை வரவழைத்தது.
அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவள்,"தண்டனையா.....?எது தண்டனை.....?செஞ்ச தப்பை உணராம.....ஜெயில்ல போய் உட்கார்ந்துக்கிட்டு.....நேரா நேரத்துக்கு சாப்பிட்டுக்கிட்டு.....சொகுசா தூங்கி எழுந்து வர்றதுக்கு பேர் தண்டனையா.....?ஆனால்.....இந்த தண்டனையும் என்னை நாசமாக்கின அந்தப் பாவிகளுக்கு கிடைக்குமான்னு எனக்குத் தெரியல......?அந்த மூணு பாவிகளும் அரசியல்ல இருக்கிற பெரும்புள்ளிகளோட வாரிசுகள்.....!நாம வழக்கு போட்டோம்ன்னா அதை நமக்கு எதிராவே திருப்பி விடக் கூடிய அயோக்கியக்காரனுங்க.....!இவ்வளவு ஏன்....?நானா விரும்பித்தான்....அ....அவங்க கூட போனேன்னு சொன்னாலும்.....சொல்லிடுவானுங்க......!",அவள் குரலில் கண்ணீர்த் தடங்கல்.
அவள் கூறுவதும் உண்மைதானே.....!தண்டனை என்ற பெயரில் இவர்கள் தண்டனையையா தருகிறார்கள்.....!
தன்னிடம் கேள்வி கேட்கும் மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் அந்தக் கணவன்.எதைப் பற்றியும் கவலைப்படாமல்.....அந்த கயவர்களை பிய்த்து எறிந்து விட வேண்டும் என்பது போல் வேகம் தோன்றியது.
"எது தண்டனைன்னு நான் சொல்றேன் கர்ணன்.....!எது தண்டனை தெரியுமா.....?இதுவரை.....என்னைப் பெத்த அம்மாகிட்ட கூட காண்பிக்காம மூடி வைச்சிருந்த என் உடலை.....கூசாம வெறிச்சுப் பார்த்த அந்த கண்களை....தீயில் காட்டி பொசுக்கணும்.....! விவரம் தெரிஞ்ச வயசில இருந்து.....வருங்காலக் கணவனுக்காக மட்டும்தான்னு பொத்தி பொத்தி பாதுகாத்து வைச்சிருந்த என் கற்பை.....கால்ல போட்டு மிதிச்சு நாசமாக்கின.....அந்த பாவிகளை நாசமாக்கணும்......!என் பெண்மையை இழக்க காரணமா இருந்த.....அவனுங்களுடைய உயிர் நிலையை துடிக்க துடிக்க அறுத்து எறியணும்.....!இன்னொருத்தனுடைய தப்பான பார்வை கூட....என் மேல படக் கூடாதுன்னு கவனமா இருந்த என்னை.....அசிங்க அசிங்கமா தொட்ட அந்த கைகளை.....குத்தி குத்தி புண்ணாக்கணும்.....!
இது எல்லாத்துக்கும் மேல....அந்த சண்டாளனுங்க துடிக்கிற துடிப்பை.....சந்தோஷமா நான் பார்த்து ரசிக்கணும்.....!இந்த உலகத்துலேயே மிகக் கொடூரமான முறையில.....அந்தப் பாவிகளை சாகடிக்கணும்.....! அன்னைக்கு.....பாஞ்சாலியுடைய சேலையை பிடித்து இழுத்தான்னு.....ஒரு மிகப் பெரிய பாரத யுத்தத்தையே நடந்தினானே அந்தக் கண்ணன்.....!அவன் கண்ணுக்கு இப்போ சீறழிஞ்சுக்கிட்டு இருக்கிற பெண்களோட கூக்குரல் கேட்கலையா.....?இல்லை.....கேட்டும் அமைதியா இருக்கானான்னு எனக்குத் தெரியலை.....!கடவுள் வருவாரு.....!அவதாரம் எடுப்பாரு....!அப்படிங்கறது எல்லாம் சுத்தப் பொய்.....!நமக்கு நடந்த அநீதிக்கு எதிரா நாமதான் அவதாரம் எடுக்கணும்.....!",
ஒட்டு மொத்த பெண் குலத்திற்கும் ஆதரவாக நீதி கேட்பவள் போல்.....ஆங்காரமாய் நின்றிருந்தாள் பவித்ரா.அவளது முகத்தில்.....அப்படியொரு ரௌத்திரம்......!பெண் குலத்தை காக்க வந்த காளி போல்......அவள் முகத்தில் கோபம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
"பவிம்மா......!",அவன் மெதுவாக அவள் தோளைத் தொட.....அவ்வளவுதான்.....!அடுத்த நொடி.....கதறி அழ ஆரம்பித்தாள்.
"ஏன்....?எனக்கு மட்டும் இப்படி நடக்கணும்......?அப்போ.....நான் எந்தளவுக்கு துடிச்சு போனேன் தெரியுமா கர்ணன்.....?உங்களுக்கு ஞாபகம் இருக்கா.....?நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி....ஒருமுறை....நீங்க என்கிட்ட ஆசையா முத்தம் கேட்டீங்க.....?உங்களுக்கு எல்லா உரிமையும் இருந்தும்.....நான் கொடுக்க மாட்டேன்னு விலகிப் போனேன்.....!எல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்தான்னு.....உரிமையான உங்களையே விலக்கி வைச்சேன்.....!அப்படிப்பட்ட என்னை.....என் உடம்பை.....அவன்....அவன்.....எங்கெங்கே தொட்டான் தெரியுமா கர்ணன்.....?என்னால முடியல.....!அவனுங்க....என்....என்....",
அதற்கு மேல் பேச விடாமல்.....அவளை இழுத்து அணைத்தவன்,"வேண்டாம் ம்மா.....!வேண்டாம்.....!நீ எதுவும் சொல்ல வேண்டாம்.....!எல்லாத்தையும் மறந்திடு கண்ணா.....!",அவளை அணைத்துக் கொண்டு அவன் கதற ஆரம்பித்துவிட்டான்.
"என்னால முடியல.....!எனக்கு எப்படி வலிச்சுது தெரியுமா.....?அதிலேயும் ஒருத்தன்....என்....என்....மா....",அதற்கு மேல் பேச விடாமல்....அவளது இதழ்களை தன் உதடுகளால் மூடியவன்.....அவள் அனுபவித்த வலிகளுக்கு எல்லாம் மருந்தாய்.....தனது உதடுகளால் ஆறுதல் தர ஆரம்பித்தான்.
அவளுக்கும் அந்த மருந்து தேவையாய் இருந்தது போலும்.....!விழிகளை மூடி....அவன் முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தாள்.தான் பட்ட வேதனை அனைத்தும்.....தன்னவனது காதலான இதழொற்றலில்.....மறைந்து மாயமாகியதை உணர்ந்தாள் அவள்.
அவளுக்கு ஆறுதல் அளித்தானோ......?இல்லை.....அவள் இதழ்களில் தனக்கான ஆறுதலை உணர்ந்தானோ......?தெரியவில்லை......!வெகுநேரம்.....அவளது இதழ்களை விட்டு அவன் விலகவில்லை.....!விலகிய போது.....அவன் கண்டது என்னவோ.....?தன்னவளுடைய தெளிவான முகத்தைத்தான்.....!
அவள் கன்னங்களைத் தன் இரு கைகளாலும் ஏந்தியவன்,"வேண்டாம் டி.....!அப்படியொரு சம்பவம் உன் வாழ்க்கையில நடக்கவே இல்லைன்னு நினைச்சுக்கோ.....!அதையும் மீறி.....உனக்கு அந்த நிகழ்ச்சி ஞாபகம் வந்தால்.....இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் கொடுத்த முத்தத்தை நினைச்சுக்கோ.....!நான்....நாம்....நம்ம குடும்பம்.....இதுதான் உன்னுடைய நிகழ்கால வாழ்க்கை.....!கடந்த காலத்துல எது நடந்திருந்தாலும் சரி.....!அதை மறந்திடு.....!நான்....நான் மட்டும்தான் உன் நிகழ்காலம்....!புரிஞ்சுதா.....?",மென்மையாய் அவன் கூறக் கூற.....அவள் மெல்ல.....மெல்ல தன் கூட்டிலிருந்து வெளிவர ஆரம்பித்தாள்.
காதல் என்ற ஒன்று அனைத்தையும் மாற்றும் வல்லமை கொண்டது....!அந்த ஆண்மகனின் காதல்....அந்தப் பெண்ணவளின் மனதை கரைக்க ஆரம்பித்தது.தனக்கு நடந்த வன்கொடுமையிலிருந்து....காதல் என்னும் ஊன்றுகோலின் துணை கொண்டு....மெல்ல....மெல்ல உயிர்த்தெழ ஆரம்பித்தது அந்தப் பெண்மை.....!
தலையை தன் இருகைகளாலும் தாங்கியபடி குனிந்து அமர்ந்திருந்தான் கர்ணன்.அது அவன் G.M ஆக வேலை செய்யும் அலுவலகத்தின் கேன்டீன்.
"என்னாச்சு மச்சான்.....?எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க.....?",கேட்டபடியே அவனுடைய மூன்று நண்பர்களும் வந்தமர்ந்தனர்.
அவர்கள் விஜய்....பிரபு மற்றும் அகில்.நால்வரும் சிறுவயதிலிருந்தே நெருக்கமான நண்பர்கள்.ஒன்றாக கை கோர்த்து விளையாட ஆரம்பித்த நாட்களில் தொடங்கிய அவர்களின் நட்பு.....பள்ளிப்பருவத்தில் இறுகி....பதின்ம வயதில் வலுப்பெற்று.....இன்று முழு ஆண்மகன்களாக உருப்பெற்று நிமிர்ந்து நிற்கும் காலங்களில் உடைக்க முடியாத சக்தியாக பரிணாமம் அடைந்து....நட்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
"எனி ப்ராப்ளம் மச்சான்.....?ஏன் முகம் டல்லா இருக்கு.....?",அக்கறையுடன் வினவினான் பிரபு.
மூன்று நண்பர்களையும் நிமிர்ந்து பார்த்தவன் ஒரு பெருமூச்சோடு.....நேற்று தனக்கும் தன் மனைவிக்கும் நடந்த உரையாடலைப் பற்றிக் கூற ஆரம்பித்தான்.சிவந்த கண்களுடன்....கலங்கிய முகத்துடன்....உணர்ச்சிகளைத் தொலைத்தவனாய் கூறி முடித்தான் கர்ணன்.அவன் முடித்தவனுடன் நண்பர்களுக்கு இடையே அழுத்தமான அமைதி நிலவியது.